--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
www.dinamani.com/Images/article/2010/11/7/sand.jpg
உடன் இலக்கியப் பீடம் ஆசிரியர் விக்கிரமன், சாண்டில்யனின் மூத்த மகன்
பேராசிரியர் சடகோபன், டாக்டர் இராஜலட்சுமி, ஜோதிடர் காழியூர் நாராயணன்,
டாக்டர் பால.இரமணி, கீதாசார்யன் எம்.ஏ. வெங்கடகிருஷ்ணன், வானதி பதிப்பகம்
இராமு, பாரதி பதிப்பகம் சித.இராஜேந்திரன், சாண்டில்யனின் இளைய மகன்
கிருஷ்ணன், மிசோரம் மாநில முன்னாள் ஆளுநர் ஆ.பத்மநாபன்.
> அமரர் சாண்டில்யன் (எஸ்.பாஷ்யம்) நினைவு அறக்கட்டளையும், இலக்கியப் பீடம்
> மாத இதழும் இணைந்து சென்னையில் சனிக்கிழமை (06/11/2010) நடத்திய "அமரர்
> சாண்டில்யனின் நூற்றாண்டு விழா"வில் அவரது உருவப்படத்தை திறந்து
> வைக்கிறார் சென்னை தொலைக்காட்சி நிலைய முன்னாள் இயக்குநர் ஏ.நடராஜன்.
>
ஆனால் கலந்துகொள்ள இயலவில்லை
அன்புடன்
தமிழ்த்தேனீ
2010/11/7 தாரகை <thar...@gmail.com>:
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
மனிதமும்,உலகமும் காப்போம், மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது
அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net
ஆறு சமூக நாவல்கள் உள்பட சுமார் 55 நாவல்களைப் படைத்த எஸ்.பாஷ்யம் என்கிற
சாண்டில்யனின் பெயரைக்கேட்டுப் பலருக்கும் "கடல்புறா"வும்,
"யவனராணி"யும்தான் நினைவுக்கு வரும்.
"ஒரு திரைப்படத்துக்கு மக்கள் மத்தியில் ஐந்து வருடங்கள் மட்டுமே மவுசு
இருக்கும். ஆனால், நான் எழுதிய புத்தகங்களுக்கு 500 வருஷங்கள் மக்கள்
மத்தியில் மவுசு இருக்கும். அதனால்தான் எழுத்துத்துறையைத்
தேர்ந்தெடுத்தேன்''
என்று துணிந்து பேட்டியளித்த சாண்டில்யன், ஆரம்ப காலம் முதலே சினிமா
விமர்சகராகப் பல திரைப்படங்களில் பணியாற்றியவர்.
சினிமாவின் அத்தனை பரிமாணங்களையும் அனுபவ ரீதியாக அறிந்தவர்.
"பொம்மை" சினிமா இதழில் சாண்டில்யன் தொடராக எழுதிய "சினிமா வளர்ந்த கதை"
இப்போது புத்தக வடிவம் பெற்றிருக்கிறது.
விஜயா வாஹினி திரைப்பட நிறுவனத்தின் சார்பு நிறுவனமான விஜயா
பப்ளிகேஷன்ஸ்தான் அந்தத் தொடரைப் புத்தகமாக்கி தமிழ் சினிமாவுக்கு ஓர்
ஆக்கபூர்வமான பதிவைச் செய்திருக்கிறது.
"தமிழ்நாடு டாக்கீசின் "இலவகுசா" திரைப்படத்தில் மொத்தம் 18 பாட்டுகள்.
சங்கீத டைரக்ஷன் செய்தவருக்கு சினிமாவைப் பற்றி எதுவுமே தெரியாது.
அவர்தான் ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர். அவர் சினிமாவில் காலடி எடுத்து
வைத்ததற்கு, அவரது சகோதரி மகன் "இலவகுசா"வுக்குப் பணம் போட்டதுதான்
காரணம்.
இந்தப் படம் 1932இல் பம்பாய் ரஞ்சித் ஸ்டூடியோவில் படம் பிடிக்கப்பட்டது.
அதற்கு மொத்தம் செலவான ரூபாய் 32,000.
முதலில், "இலவகுசா"க்களுக்குத் தாயாக நடிக்க யாரும் கிடைக்கவில்லை. ஆகவே,
இலட்சுமி என்கிற ஸ்கூல் டீச்சரை அழைத்து வந்து சீதையாக்கினார்கள்
தமிழ்நாடு டாக்கீசார். படம் முழுவதும் அந்த டீச்சர் இராமனுடன் நெருங்கி
உட்கார மறுத்து, விலகி தூரவே உட்கார்ந்தார். அப்படியும் அந்தப் படம்
ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதரின் சங்கீதத்துக்கும் பெயருக்குமே
ஓடியது''.
இதுபோல பல தகவல்களை சுவாரஸ்யமாக அளிக்கிறது சாண்டில்யனின் "சினிமா
வளர்ந்த கதை".
தமிழ் சினிமா ஏன் சர்வதேச அங்கீகாரம் பெறவில்லை என்பதன் காரணத்தைக்
கூறித் தனது கட்டுரைத் தொடரை அதாவது, புத்தகத்தை முடித்திருக்கிறார்
சாண்டில்யன்.
சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்னால் அவர் சொன்ன காரணம் இப்போதும் பொருத்தமாக
இருக்கிறதே!
"மனித நட்சத்திரங்களை விடக் கதைக்கருத்து சிறந்தது என்ற படிப்பினையைத்
தமிழ்ப்பட உலகம் ஏற்றால் அதன் பிற்காலம் பொற்காலமாவதற்கு
வசதியிருக்கிறதென்று சொல்லி, அதற்கும் ஆண்டவனைப் பிரார்த்தித்து
முடித்துக் கொள்கிறேன்''.
கலாரசிகன்
http://www.dinamani.com/Images/article/2011/2/19/tmani3.jpg
எழுத்தாளர் சாண்டில்யனை ஒரு சரித்திரக் கதைகளை எழுதும்
நாவலாசிரியராகத்தான் பலருக்கும் தெரியும். அவரது ஆரம்ப காலம்
பத்திரிகையாளராக, அதிலும் குறிப்பாக சினிமா நிருபராகவும், விமர்சகராகவும்
தொடங்கியது என்பது பலருக்கும் தெரியாத கதை.
நன்றி:- தினமணி