வரகு

339 views
Skip to first unread message

கி.காளைராசன்

unread,
Apr 4, 2012, 10:13:41 AM4/4/12
to mintamil, thiruppuvanam, rajam, செல்வன்
வணக்கம்.

அக்கா ராசம் அவர்கள்,  
கருப்பட்டியுடன் பாயாசம் செய்து சாப்பிடலாம் என்றெல்லாம் கூறி 
வரகரிசி பற்றி அதிகமாக எழுதியிருக்கிறார்கள்.  இந்த இழையில் கூடுதல் செய்தி.

மேலும், ஐயா செல்வன் அவர்கள்
செவ்வாய் கிரகத்திற்குச் சென்று வரக் குறைந்தது ஐந்து அல்லது ஆறு ஆண்டுகள் ஆகும்.  அதுவரை விட்டமின் பாதுகாப்பாக உள்ள தானியங்களைக் கண்டறியும் முயற்சி பற்றி எழுதியிருந்தார்கள்.  
செவ்வாய் கிரகத்திற்குச் சென்று வர வரகு இருந்தால் போதும்போல்தெரிகிறது.  இந்த இழையில் கூடுதல் செய்தி.

கடந்த திங்கள் கிழமை பங்குனி 20ஆம் நாள் (02/ஏப்ரல்/2012) அன்று கும்பகோணம் ஸ்தபதியார் அவர்களுடன் சுமார் 30 நிமிடங்கள் பயணிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.

அவர் வரகு பற்றிக் கூறிய செய்திகள் இதோ .....
1) கோபுரத்தில் உள்ள கும்பங்களில் வரகு நிரப்பி வைக்கப்பட்டிருக்கும்
2) ஒரு கும்பத்தில் உள்ள வரகை எடுத்துப் பயிர் செய்தால் ஒரு ஊரே சாப்பிடும் அளவிற்கு விளைச்சல் இருக்கும்.
3) மனிதர்களுக்கு உள்ளது போல், வரகின் தோலும் ஏழு (seven layers)படலங்களால் ஆனது.
4) மற்றபிற தானியங்களைக் கட்டித் தண்ணீரில் நனைத்து வைத்தால் முளைத்துவிடும்.
5) வரகு மண்ணில் மட்டுமே முளைக்கும். 
6) 12 ஆண்டுகளுக்கும் மேலாக வரகு கெட்டுப் போகாமல் இருக்கும்.
7) சிறந்த மின்னல் தாங்கியாகும்

இன்னும் பல அருமையான செய்திகள் ........
ஸ்தபதியாரின் பேட்டியை உங்களுக்காக இணைத்துள்ளேன். 

--
அன்பன்
கி.காளைராசன்
வரகு சிறப்பு.amr

Geetha Sambasivam

unread,
Apr 4, 2012, 10:33:10 AM4/4/12
to mint...@googlegroups.com
அருமையான செய்தி.  எங்க ஊர்க் கோயிலில் கும்பாபிஷேஹம் நடக்கையில் கோபுரக் கலசத்தில் வரகு நிரப்பினோம்.  அந்த பாக்கியம் எனக்கும் கிடைத்தது.  இந்தச் செய்தியை பட்டாசாரியாரும் எங்களிடம் கூறினார்.  கும்பாபிஷேஹம் குறித்த தகவல்களை மரபு விக்கியில் பதிந்து வருகிறேன்.  அதிலே இதையும் சேர்த்துக் கொள்கிறேன்.  படங்கள் தான் கொஞ்ச நாட்களாகப் போட முடியாமல் இருக்கிறது. :(((((

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

N. Ganesan

unread,
Apr 4, 2012, 10:33:45 AM4/4/12
to மின்தமிழ்

முனைவர் ஐயா,

வரகு தமிழர் வாழ்வில் முக்கியப் பயிர். வரகூர் என்று சில ஊர்கள் உள்ளன.

நா. கணேசன்

> --
> அன்பன்
> கி.காளைராசன்http://thiruppuvanam1.**blogspot.com<http://thiruppuvanam1.blogspot.com/2012/01/5.html>http://sakkudi.blogspot.comhttp://kalairajan26.blogspot.comhttp://www.freewebs.com/thirupoovanam/
>
>  வரகு சிறப்பு.amr
> 746KViewDownload

DEV RAJ

unread,
Apr 4, 2012, 11:42:18 AM4/4/12
to மின்தமிழ்

rajam

unread,
Apr 4, 2012, 12:36:53 PM4/4/12
to கி.காளைராசன், mintamil, செல்வன்
அன்பின் தம்பி காளை,
வணக்கம்! வரகு பற்றிய, கோபுரக் கலசம் பற்றிய, இதே செய்தியை அன்புமீனாவும் எனக்குச் சொன்னார்கள். எங்கே வைத்துத் தெரியுமா? ஒங்க திருப்பூவணத்துக் கோயிலில்!
இந்தச் செய்திக்கு ரொம்பக் கொஞ்சம் மட்டும் தொடர்புள்ள இரண்டு செய்திகள்:

1. சங்க காலத்துப் பாரியின் பறம்பு மலையைப் பகை வேந்தர் முற்றுகையிட்டபோது, பறவைகளை (குருவி) அனுப்பித் தானியங்களைக் கொண்டுவரச் செய்தார்கள்.

2. வீடு கட்டும்போது, அஸ்திவாரம் எல்லாம் போட்டு முடித்தபின், நுழைவாயிலில் நிலை வைக்கும்போது, நவரத்தினங்களை மண்ணில் போட்டு அதற்குமேலேதான் அந்த நிலையை வைப்பார்கள். இதை நானே செய்திருக்கிறேன்! இப்போது அந்த மாதிரி வழக்கம் இருக்கிறதா என்று தெரியவில்லை. 


செல்வன்

unread,
Apr 4, 2012, 12:56:52 PM4/4/12
to mintamil, kalairajan krishnan


2012/4/4 கி.காளைராசன் <kalair...@gmail.com>

மேலும், ஐயா செல்வன் அவர்கள்
செவ்வாய் கிரகத்திற்குச் சென்று வரக் குறைந்தது ஐந்து அல்லது ஆறு ஆண்டுகள் ஆகும்.  அதுவரை விட்டமின் பாதுகாப்பாக உள்ள தானியங்களைக் கண்டறியும் முயற்சி பற்றி எழுதியிருந்தார்கள்.  
செவ்வாய் கிரகத்திற்குச் சென்று வர வரகு இருந்தால் போதும்போல்தெரிகிறது.  


நன்றி ஐயா... வரகு பற்றி நல்ல தகவல்களை அளித்தீர்கள்.

வரகு என்பது சமைத்து உண்னவேண்டிய தானியம் அல்லவா?பச்சையாக உண்ன இயலாது. விண்வெளியில் சமைப்பது இயலாத காரியம். இங்கே சமைத்த உணவுகளை பேஸ்ட் மாதிரி டியூபில் அடைத்து எடுத்து செல்வார்கள். அப்படி சமைக்கபடும் உணவுகளில் வைடமின்கள் செவ்வாய் சென்று திரும்பி வர ஆகும் ஏழு வருட காலத்துக்குள் அழிந்துவிடுகின்றன என்பது தான் பிரச்சனை. 
--
செல்வன்


Innamburan Innamburan

unread,
Apr 4, 2012, 2:49:36 PM4/4/12
to mint...@googlegroups.com
நவரத்னங்களையும், நவதான்யங்களையும், தலைவாசல் கீழ் புதைக்கும் வழக்கும் இருக்கிறது.


2012/4/4 செல்வன் <hol...@gmail.com>

கி.காளைராசன்

unread,
Apr 5, 2012, 3:39:28 AM4/5/12
to mint...@googlegroups.com
அம்மையார் அவர்களுக்கு வணக்கம்.

On 4/4/12, Geetha Sambasivam <geetha...@gmail.com> wrote:
> அருமையான செய்தி. எங்க ஊர்க் கோயிலில் கும்பாபிஷேஹம் நடக்கையில் கோபுரக் > கலசத்தில் வரகு நிரப்பினோம். அந்த பாக்கியம் எனக்கும் கிடைத்தது.

கிடைத்தற்கரிய பேறு பெற்றுள்ளீர்கள்.
இதுஒரு கொடுப்பினையே.
தங்களுக்கு எனது பணிவான வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

> தகவல்களை மரபு விக்கியில் பதிந்து வருகிறேன். அதிலே இதையும் சேர்த்துக்
> கொள்கிறேன்.

மிக்க நன்றி.


--
அன்பன்
கி.காளைராசன்

http://thiruppuvanam1.**blogspot.com<http://thiruppuvanam1.blogspot.com/2012/01/5.html>

sharadha subramanian

unread,
Apr 5, 2012, 3:56:50 AM4/5/12
to mint...@googlegroups.com
ஐயா வணக்கம்,எனக்கு ஒரு ஸ்ந்தேகம்,விளக்கம் தேவை
வரகரிசி சிவப்பு அரிசி,புட்டரிசி,கம்பினியரிசி,இவை எல்லாம் ஒரே வகையானதா? விளக்கவும் நன்றி

Geetha Sambasivam

unread,
Apr 5, 2012, 9:02:32 AM4/5/12
to mint...@googlegroups.com
//வீடு கட்டும்போது, அஸ்திவாரம் எல்லாம் போட்டு முடித்தபின், நுழைவாயிலில் நிலை வைக்கும்போது, நவரத்தினங்களை மண்ணில் போட்டு அதற்குமேலேதான் அந்த நிலையை வைப்பார்கள். இதை நானே செய்திருக்கிறேன்! இப்போது அந்த மாதிரி வழக்கம் இருக்கிறதா என்று தெரியவில்லை. //


இருக்கிறது அம்மா.  இப்போவும் தனி வீடுகள் கட்டினால் இந்த வழக்கம் உண்டு.  அடுக்குமாடிக் குடியிருப்புகளில் கிடையாது. கூரையை மூடும் போதும் ஈசானிய மூலையைக் கடைசியில் மூடி அதற்கு நேரே விளக்கு ஏற்றி வைத்து மேலிருந்து காசும், பணமுமாகக் கொட்டுவார்கள்.

On Wed, Apr 4, 2012 at 10:06 PM, rajam <ra...@earthlink.net> wrote:
அன்பின் தம்பி காளை,
வணக்கம்! வரகு பற்றிய, கோபுரக் கலசம் பற்றிய, இதே செய்தியை அன்புமீனாவும் எனக்குச் சொன்னார்கள். எங்கே வைத்துத் தெரியுமா? ஒங்க திருப்பூவணத்துக் கோயிலில்!
இந்தச் செய்திக்கு ரொம்பக் கொஞ்சம் மட்டும் தொடர்புள்ள இரண்டு செய்திகள்:

1. சங்க காலத்துப் பாரியின் பறம்பு மலையைப் பகை வேந்தர் முற்றுகையிட்டபோது, பறவைகளை (குருவி) அனுப்பித் தானியங்களைக் கொண்டுவரச் செய்தார்கள்.

2. வீடு கட்டும்போது, அஸ்திவாரம் எல்லாம் போட்டு முடித்தபின், நுழைவாயிலில் நிலை வைக்கும்போது, நவரத்தினங்களை மண்ணில் போட்டு அதற்குமேலேதான் அந்த நிலையை வைப்பார்கள். இதை நானே செய்திருக்கிறேன்! இப்போது அந்த மாதிரி வழக்கம் இருக்கிறதா என்று தெரியவில்லை. 


Subashini Tremmel

unread,
Apr 5, 2012, 1:28:28 PM4/5/12
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
முனைவர் காளைராசன்,

கொஞ்சம் கேட்டேன். நாளை கொஞ்சம் நேரம் எடுத்துக் கொண்டு கேட்டு நமது மண்ணின் குரல் ஒலிப்பதிவில் இணைத்து வைக்கின்றேன். இப்படி அவ்வப்போது மண்ணின் மணம் கமழும் தகவல்களை ஒலிப்பதிவுசெய்து அனுப்பி வையுங்கள். நமது தகவல் வளம் பெருகும்.

நன்றி
சுபா

2012/4/4 கி.காளைராசன் <kalair...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com - சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com -  ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
 
 

Swarna Lakshmi

unread,
Apr 5, 2012, 2:24:40 PM4/5/12
to mint...@googlegroups.com
அற்புதமான தகவல்கள் - மின்னல் தாங்கி என்பதால் தான் கோபுரக்கலசங்களில் இடம் பெறுகின்றன போல் இருக்கிறது. நம் முன்னோர்களைப் போல எளிமையாக அறிவியலை வாழ்வியலோடு இணைத்தவர்கள் வேறெங்கு??!!
 
ஆனால், வரகு என்றால் என்ன? நான் இதுவரை பார்த்ததில்லை. அதை என்ன விதமான உணவாக உட்கொள்ள முடியும்.
 
 நன்றி
ஸ்வர்ணா

rajam

unread,
Apr 5, 2012, 4:26:44 PM4/5/12
to mint...@googlegroups.com
On Apr 5, 2012, at 12:56 AM, sharadha subramanian wrote:
ஐயா வணக்கம்,எனக்கு ஒரு ஸ்ந்தேகம்,விளக்கம் தேவை
வரகரிசி சிவப்பு அரிசி,புட்டரிசி,கம்பினியரிசி,இவை எல்லாம் ஒரே வகையானதா? விளக்கவும் நன்றி

--
"கம்பினியரிசி" எனக்குத் தெரியாது.  

மத்தபடி, எல்லாமே "அரிசி" வகை, ஆனால் தனித் தனிக் குணமும் சத்தும் கொண்டவை. நீங்கள் திரு. காளைராசனைக் கேட்டதால் அவர் என்ன சொல்கிறார் என்று பார்த்து, பிறகு எனக்குத் தெரிந்ததைச் சொல்கிறேன்.

rajam

unread,
Apr 5, 2012, 5:29:13 PM4/5/12
to mint...@googlegroups.com, Swarna Lakshmi
 
ஆனால், வரகு என்றால் என்ன? நான் இதுவரை பார்த்ததில்லை. 
 
"வரகு" என்பது ஒரு தானியத்தின் முழுப்பெயர்தானே. வகைகளில் அதன் பெயர் வேறுபடும். எனக்குத் தெரிந்து நான் சுவைத்துச் சாப்பிட்ட அளவில்  ... வரகு என்பதில் இரண்டு வகை உண்டு -- சிவப்பு வகை "கேழ்வரகு", வெள்ளை வகை "வரகு."    
சிவப்புக் கேழ்வரகு பற்றிய படம் இங்கே பார்க்கலாம்: (http://viruntu.blogspot.com/2011/08/grains.html). சுய விளம்பரத்துக்காக இல்லை! சும்மா கருத்துப் பரிமாறலுக்காக. வெள்ளை வரகரிசி கிடைத்த பொட்டல்ப் படத்தைக் கீழே இணைத்திருக்கிறேன். பாண்டிச்சேரியில் கிடைத்தது. 

பொதுவாக ... தோல்/உமி உள்ள ஒரு தானியத்தை உடைத்துக் கிடைப்பது "அரிசி." (சிலம்பில் உள்ள "அரி" போல!). 

இந்தக் காலத்தில், இந்த மாதிரிப் பொருள் எல்லாம் பெரும்பாலும் பதப்படுத்திய நிலையில் மட்டுமே கடைகளுக்கு வரும். அதனால் பலருக்கும் அதன் முதல் வடிவம் தெரிவதில்லை. 

எனவே "வரகரிசி" என்று கேட்டுப் பாருங்கள். பாண்டிச்சேரியிலும் மதுரையிலும் கிடைக்கும்

அதை என்ன விதமான உணவாக உட்கொள்ள முடியும்.
 

பொங்கல் செய்யலாம்; பாயசம் செய்யலாம்; கூழ் காய்ச்சிச் சாப்பிடலாம். மிகவும் "இலேசாக" இருக்கும். வயித்தை அடைக்காது. சுவையும் நன்றாக இருக்கும்! 

rajam

unread,
Apr 5, 2012, 5:40:41 PM4/5/12
to mint...@googlegroups.com, Swarna Lakshmi
ஒரு படம் இணைக்கத் தவறிவிட்டேன்.
இதோ வரகு அரிசி பற்றி:

 
ஆனால், வரகு என்றால் என்ன? நான் இதுவரை பார்த்ததில்லை. 
 
"வரகு" என்பது ஒரு தானியத்தின் முழுப்பெயர்தானே. வகைகளில் அதன் பெயர் வேறுபடும். எனக்குத் தெரிந்து நான் சுவைத்துச் சாப்பிட்ட அளவில்  ... வரகு என்பதில் இரண்டு வகை உண்டு -- சிவப்பு வகை "கேழ்வரகு", வெள்ளை வகை "வரகு."    
சிவப்புக் கேழ்வரகு பற்றிய படம் இங்கே பார்க்கலாம்: (http://viruntu.blogspot.com/2011/08/grains.html). சுய விளம்பரத்துக்காக இல்லை! சும்மா கருத்துப் பரிமாறலுக்காக. வெள்ளை வரகரிசி கிடைத்த பொட்டல்ப் படத்தைக் கீழே இணைத்திருக்கிறேன். பாண்டிச்சேரியில் கிடைத்தது. 

பொதுவாக ... தோல்/உமி உள்ள ஒரு தானியத்தை உடைத்துக் கிடைப்பது "அரிசி." (சிலம்பில் உள்ள "அரி" போல!). 

இந்தக் காலத்தில், இந்த மாதிரிப் பொருள் எல்லாம் பெரும்பாலும் பதப்படுத்திய நிலையில் மட்டுமே கடைகளுக்கு வரும். அதனால் பலருக்கும் அதன் முதல் வடிவம் தெரிவதில்லை. 

எனவே "வரகரிசி" என்று கேட்டுப் பாருங்கள். பாண்டிச்சேரியிலும் மதுரையிலும் கிடைக்கும்

அதை என்ன விதமான உணவாக உட்கொள்ள முடியும்.
 

பொங்கல் செய்யலாம்; பாயசம் செய்யலாம்; கூழ் காய்ச்சிச் சாப்பிடலாம். மிகவும் "இலேசாக" இருக்கும். வயித்தை அடைக்காது. சுவையும் நன்றாக இருக்கும்! 

On Apr 5, 2012, at 11:24 AM, Swarna Lakshmi wrote:

Innamburan Innamburan

unread,
Apr 5, 2012, 5:53:30 PM4/5/12
to mint...@googlegroups.com
இரண்டாம் உலகப்போர் ஐரோப்பாவில் நடந்தாலும், உசிலம்பட்டியில் ஐயோப்பா! அரிசி கிடைக்காது. கைக்குத்தல் அரசி, வரகரிசியை ஏந்திரத்தில் உடைத்தெடுத்து உப்புமா, தினைப்பாயசம், கம்பங்கூழு, கேப்பைக்கஞ்சி, கருப்பட்டி-மல்லி காப்பி எம்மை போற்றி வளர்த்தன.
அம்மா சொல்படி ராஜு

2012/4/5 rajam <ra...@earthlink.net>

Innamburan Innamburan

unread,
Apr 5, 2012, 5:55:07 PM4/5/12
to mint...@googlegroups.com
ஆமாம். எனக்கும் இந்த கம்பெனியரிசி வரலாறு வேண்டும்.


2012/4/5 rajam <ra...@earthlink.net>

Geetha Sambasivam

unread,
Apr 5, 2012, 8:18:03 PM4/5/12
to mint...@googlegroups.com
அதே, அதே, வரகரிசிப் பாயாசம் நானும் சாப்பிட்டிருக்கேன். அம்மா கை இயந்திரத்தில் உடைத்துப் பண்ணுவார்.

On Fri, Apr 6, 2012 at 3:23 AM, Innamburan Innamburan <innam...@gmail.com> wrote:
, வரகரிசியை ஏந்திரத்தில் உடைத்தெடுத்து உப்புமா, தினைப்பாயசம், கம்பங்கூழு, கேப்பைக்கஞ்சி, கருப்பட்டி-மல்லி காப்பி எம்மை போற்றி வளர்த்தன.
அம்மா சொல்படி ராஜு


2012/4/5 rajam <ra...@earthlink.net>
ஒரு படம் இணைக்கத் தவறிவிட்டேன்.
இதோ வரகு அரிசி பற்றி
 

Swarna Lakshmi

unread,
Apr 5, 2012, 11:37:32 PM4/5/12
to mint...@googlegroups.com
 நன்றி அம்மா, அடுத்த முறை தமிழ் நாட்டுப்பக்கம் போனால், கேட்டுப் பார்க்கிறேன். இங்கேயும் கிடைக்கலாம். என் குழந்தைக்கு ராகி கொடுத்து பழக்கப்படுத்தி வருகிறேன்.. கூடவே கம்பு, வரகரிசி எல்லாம் கொடுக்க வேண்டும்.
 
ஸ்வர்ணா
 
அம்மா, உங்கள் மடல்கள் எல்லாம் இரண்டிரண்டு காபி வருகின்றன....

Swarna Lakshmi

unread,
Apr 5, 2012, 11:40:19 PM4/5/12
to mint...@googlegroups.com
எப்படி இருக்கிறீர்கள் இன்னம்பூரான் சார்... இப்போது கைக்குத்தல் அரிசி அதுவும் ஆர்கானிக் வகைக்கு இங்கே படு டிமாண்ட். நான் பக்கத்தில் உள்ள மாலில் சொல்லி வைத்து வாங்க வேண்டியிருக்கிறது. இந்த மாற்றம் மகிழ்ச்சியளிக்கிறது. ஆர்கானிக் வகை உணவுகளுக்கு உள்ள வரவேற்பு நிச்சயம் நல்ல மாற்றம்.
 
அப்படியே நீங்கள் சொல்லியிருக்கும் உணவுகளுக்கான ரெசிப்பி அனுப்புங்களேன். எனக்கு இந்த தானியங்களை பதப்படுத்தத் தெரியாது இன்னும்.,,
 
நன்றி
ஸ்வர்ணா

From: Innamburan Innamburan <innam...@gmail.com>
To: mint...@googlegroups.com
Sent: Friday, 6 April 2012 3:23 AM
Subject: Re: [MinTamil] வரகு

Geetha Sambasivam

unread,
Apr 5, 2012, 11:49:49 PM4/5/12
to mint...@googlegroups.com
கேழ்வரகைச் சுத்தம் செய்து நன்கு கழுவிக் களைந்து வடிகட்டி முளைகட்டி வைத்துவிட்டுப் பின்னர் மெஷினில் அல்லது மிக்சி ஜாரில் போட்டு ஓமம் சேர்த்து அரைத்து வைத்துக் கொண்டு கூழ் மாதிரிக் காய்ச்சிக் கொடுக்கலாம் ஸ்வர்ணா.  உங்கள் குழந்தைக்கு முதலில் ஒரு சின்னக் கிண்ணம் கேழ்வரகில் முயன்று பாருங்கள்.

Swarna Lakshmi

unread,
Apr 6, 2012, 12:27:13 AM4/6/12
to mint...@googlegroups.com
குழந்தைக்கான ராகி உணவு ரெடிமேடாகக் கிடைக்கிறது கீதா, அது தான் உபயோகப்படுத்திக்கொண்டிருக்கிறேன். ஒரு 100 கிராம் ராகி வாங்கி வைத்திருக்கிறேன் - கைவைக்க பயமாக இருக்கிறது. இன்று முயன்று பார்த்து விடுகிறேன் :))

Innamburan Innamburan

unread,
Apr 6, 2012, 8:47:06 AM4/6/12
to mint...@googlegroups.com
ஸ்வர்ணாவுக்கு 'கொழு கொழு' குழந்தைக்கான 'கொழ கொழ' கேப்பைக்கஞ்சி பற்றி எழுத நினைத்த மாத்திரம், கீதா அதை பற்றி இருமுறை அறிவிக்கிறார். ஸ்வர்ணாவும் நம்மை நினைவு கூர்கிறாள். ரெடிமேட் வேண்டாம். கீதா பக்குவம் பெஸ்ட்டு. முதல்லே ருசி ஜாஸ்தி. வெரி குட்! நான் நலமே. இப்போது ஆனானப்பட்ட அமேரிக்காவில். எனக்கு ஒரு 'நல்லுணவு படைக்கும் வாத்தியரம்மா' வரப்போறாஙக. நிறைய எழுதுகிறென்.
அன்புடன்,
இன்னம்பூரான்

2012/4/5 Swarna Lakshmi <lakshm...@yahoo.com>

annamalai sugumaran

unread,
Apr 6, 2012, 1:39:54 PM4/6/12
to mint...@googlegroups.com
வரகுக்கும் ,தமிழர்க்கும்   குறைந்தது ஆயிரம் ஆண்டு வரலாறு  உள்ளது .என கல்வெட்டு ஆதாரம் இருக்கிறது  

முதலாம் ராஜேந்திர சோழன் ஆறாவது ஆட்சியாண்டில் திருபுவனை ( புதுவை )
வரதராஜ பெருமாள் கோயிலில் ஊராளும் பேரவை கூடியது வீரநாராயண விண்ணகர ஆழ்வார் கோயில் முற்றத்தில் அவர்கள் கூடினர் .
இக்கூட்டத்தில் ஏரி நீர் பாயும் அனைத்து நிலங்களுக்கும் வரி விதிப்பது என முடிவு 
எடுக்கப்பட்டது .
இது கி பி 1018  ஆண்டு நிகழ்ந்தது 
ஆதாரம் ARE 192 OF 1919
கல்வெட்டு இதோ 
".............வரகு விளைந்த நிலத்தால் அருமாவாற்      கலவரகு ஏரி ஆயமாவதாகவும்  , அருமாவாற் கலநெல்லு கொண்டு மதுராந்தகப பேரேரிக்கே ஏரி ஆயமாகக் கொள்வதாகவும்    "

என்று வரகு விளையும் நிலங்களுக்கும் நெல்லுக்கு போலவே' நாலாயிரவன்' என்னும் மரக்காலால் ஒரு கலம் ஏரி ஆயம் வசூலிப்பது எனத தீர்மானித்ததை தெரிவிக்கிறது .
இது வரகின் ஆயிரம் ஆண்டு வரலாற்றுத் தொடர்பை கல்வெட்டு மூலம் தெரிவிக்கும் ஒரு சான்றாகும் 

முனைவர் கணேசன் குறிப்பிட்டதைப் போல அனைத்து பெரிய நகரங்களுக்குப் பக்கத்தில் வரகூர் ,வரகூர் பேட்டை போன்ற பெயரில் கிராமங்கள் தஞ்சை ,திருநெல்வேலி போன்ற வளமான பகுதியில் இருக்கிறது .ஆனால் நெல்லின் பெயரில் அத்தகைய கிராமங்கள் அதிகம் இருக்கிறதா என்று தெரியவில்லை .
அன்புடன் 
அண்ணாமலை சுகுமரரன் 


2012/4/6 Innamburan Innamburan <innam...@gmail.com>



--
A.Sugumaran ,
PONDICHERRY INDIA
MOBILE 09345419948

My goal is simple.
 It is complete understanding of the universe, why it as it is     and why it exists as all !

DEV RAJ

unread,
Apr 6, 2012, 2:17:09 PM4/6/12
to மின்தமிழ்
On Apr 6, 10:39 am, annamalai sugumaran <amirthami...@gmail.com>
wrote:

>> ஆனால் நெல்லின் பெயரில் அத்தகைய கிராமங்கள்
அதிகம் இருக்கிறதா என்று தெரியவில்லை <<


சுகுமாரன் சாரை வரவழைத்த வரகுக்கு
நன்றி.

நெல்லூர், திருநெல்வேலி முக்கியமான
பெயர்கள்; களத்தூர் என்று பல சிற்றூர்கள்.
வடமொழியில் நெல்லின் பெயர் கொண்டு
ஒரு தொகை உண்டு; ’ஆசு வ்ரீஹி’
விரைவில் பயன்தரும் நெல் ரகம்;
எம் பகுதியில் ‘இள வித்து’ என்பர்.
கருநெல்லைக் கீறித் தம் மறைப் புலமையை
வெளிப்படுத்தினார் ஓர் ஆழ்வார்;
செந்நெல் இலக்கியத்தில் மிகுதியாகக்
காணப்படும் பெயர்.

”அருவிப் பரப்பின் *ஐவனம் வித்திப்
பரு இலைக் குளவியொடு .......”
கபிலர் சொல்லும் மலை நெல் ரகம்.
சிலம்பிலும் இதைக் காண முடிகிறது.

வரகு முக்கியத்துவம் வாய்ந்ததுதான்;
ஆனால் நெல்லுக்குள்ள பிராபல்யம்
அதற்கில்லை


தேவ்

On Apr 6, 10:39 am, annamalai sugumaran <amirthami...@gmail.com>
wrote:


> வரகுக்கும் ,தமிழர்க்கும்   குறைந்தது ஆயிரம் ஆண்டு வரலாறு  உள்ளது .என
> கல்வெட்டு ஆதாரம் இருக்கிறது
>
> முதலாம் ராஜேந்திர சோழன் ஆறாவது ஆட்சியாண்டில் திருபுவனை ( புதுவை )
> வரதராஜ பெருமாள் கோயிலில் ஊராளும் பேரவை கூடியது வீரநாராயண விண்ணகர ஆழ்வார்
> கோயில் முற்றத்தில் அவர்கள் கூடினர் .
> இக்கூட்டத்தில் ஏரி நீர் பாயும் அனைத்து நிலங்களுக்கும் வரி விதிப்பது என
> முடிவு
> எடுக்கப்பட்டது .
> இது கி பி 1018  ஆண்டு நிகழ்ந்தது
> ஆதாரம் ARE 192 OF 1919
> கல்வெட்டு இதோ
> ".............வரகு விளைந்த நிலத்தால் அருமாவாற்      கலவரகு ஏரி
> ஆயமாவதாகவும்  , அருமாவாற் கலநெல்லு கொண்டு மதுராந்தகப பேரேரிக்கே ஏரி
> ஆயமாகக் கொள்வதாகவும்    "
>
> என்று வரகு விளையும் நிலங்களுக்கும் நெல்லுக்கு போலவே' நாலாயிரவன்' என்னும்
> மரக்காலால் ஒரு கலம் ஏரி ஆயம் வசூலிப்பது எனத தீர்மானித்ததை தெரிவிக்கிறது .
> இது வரகின் ஆயிரம் ஆண்டு வரலாற்றுத் தொடர்பை கல்வெட்டு மூலம் தெரிவிக்கும் ஒரு
> சான்றாகும்
>
> முனைவர் கணேசன் குறிப்பிட்டதைப் போல அனைத்து பெரிய நகரங்களுக்குப் பக்கத்தில்
> வரகூர் ,வரகூர் பேட்டை போன்ற பெயரில் கிராமங்கள் தஞ்சை ,திருநெல்வேலி போன்ற
> வளமான பகுதியில் இருக்கிறது .ஆனால் நெல்லின் பெயரில் அத்தகைய கிராமங்கள்
> அதிகம் இருக்கிறதா என்று தெரியவில்லை .
> அன்புடன்
> அண்ணாமலை சுகுமரரன்
>

> 2012/4/6 Innamburan Innamburan <innambu...@gmail.com>


>
>
>
>
>
>
>
> > ஸ்வர்ணாவுக்கு 'கொழு கொழு' குழந்தைக்கான 'கொழ கொழ' கேப்பைக்கஞ்சி பற்றி எழுத
> > நினைத்த மாத்திரம், கீதா அதை பற்றி இருமுறை அறிவிக்கிறார். ஸ்வர்ணாவும் நம்மை
> > நினைவு கூர்கிறாள். ரெடிமேட் வேண்டாம். கீதா பக்குவம் பெஸ்ட்டு. முதல்லே ருசி
> > ஜாஸ்தி. வெரி குட்! நான் நலமே. இப்போது ஆனானப்பட்ட அமேரிக்காவில். எனக்கு ஒரு
> > 'நல்லுணவு படைக்கும் வாத்தியரம்மா' வரப்போறாஙக. நிறைய எழுதுகிறென்.
> > அன்புடன்,
> > இன்னம்பூரான்
>

> > 2012/4/5 Swarna Lakshmi <lakshmi_s...@yahoo.com>


>
> >> குழந்தைக்கான ராகி உணவு ரெடிமேடாகக் கிடைக்கிறது கீதா, அது தான்
> >> உபயோகப்படுத்திக்கொண்டிருக்கிறேன். ஒரு 100 கிராம் ராகி வாங்கி
> >> வைத்திருக்கிறேன் - கைவைக்க பயமாக இருக்கிறது. இன்று முயன்று பார்த்து
> >> விடுகிறேன் :))
>

> >>   *From:* Geetha Sambasivam <geethasmbs...@gmail.com>
> >> *To:* mint...@googlegroups.com
> >> *Sent:* Friday, 6 April 2012 9:19 AM
> >> *Subject:* Re: [MinTamil] வரகு்


> >>  கேழ்வரகைச் சுத்தம் செய்து நன்கு கழுவிக் களைந்து வடிகட்டி முளைகட்டி
> >> வைத்துவிட்டுப் பின்னர் மெஷினில் அல்லது மிக்சி ஜாரில் போட்டு ஓமம் சேர்த்து
> >> அரைத்து வைத்துக் கொண்டு கூழ் மாதிரிக் காய்ச்சிக் கொடுக்கலாம் ஸ்வர்ணா.
> >> உங்கள் குழந்தைக்கு முதலில் ஒரு சின்னக் கிண்ணம் கேழ்வரகில் முயன்று பாருங்கள்.
>

> >> On Fri, Apr 6, 2012 at 9:10 AM, Swarna Lakshmi <lakshmi_s...@yahoo.com>wrote:
>
> >>  எப்படி இருக்கிறீர்கள் இன்னம்பூரான் சார்... இப்போது கைக்குத்தல் அரிசி
> >> அதுவும் ஆர்கானிக் வகைக்கு இங்கே படு டிமாண்ட். நான் பக்கத்தில் உள்ள மாலில்
> >> சொல்லி வைத்து வாங்க வேண்டியிருக்கிறது. இந்த மாற்றம் மகிழ்ச்சியளிக்கிறது.
> >> ஆர்கானிக் வகை உணவுகளுக்கு உள்ள வரவேற்பு நிச்சயம் நல்ல மாற்றம்.
>
> >> அப்படியே நீங்கள் சொல்லியிருக்கும் உணவுகளுக்கான ரெசிப்பி அனுப்புங்களேன்.
> >> எனக்கு இந்த தானியங்களை பதப்படுத்தத் தெரியாது இன்னும்.,,
>
> >> நன்றி
> >> ஸ்வர்ணா
>

> >>   *From:* Innamburan Innamburan <innambu...@gmail.com>
> >> *To:* mint...@googlegroups.com
> >> *Sent:* Friday, 6 April 2012 3:23 AM
> >> *Subject:* Re: [MinTamil] வரகு


>
> >> இரண்டாம் உலகப்போர் ஐரோப்பாவில் நடந்தாலும், உசிலம்பட்டியில் ஐயோப்பா! அரிசி
> >> கிடைக்காது. கைக்குத்தல் அரசி, வரகரிசியை ஏந்திரத்தில் உடைத்தெடுத்து உப்புமா,
> >> தினைப்பாயசம், கம்பங்கூழு, கேப்பைக்கஞ்சி, கருப்பட்டி-மல்லி காப்பி எம்மை
> >> போற்றி வளர்த்தன.
> >> அம்மா சொல்படி ராஜு
>
> >> 2012/4/5 rajam <ra...@earthlink.net>
>
> >> ஒரு படம் இணைக்கத் தவறிவிட்டேன்.
> >>  இதோ வரகு அரிசி பற்றி
>
> >> --
> >> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> >> Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may
> >> like to visit our Muthusom Blogs at:

> >>http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,


> >> send email to minT...@googlegroups.com
> >> To unsubscribe from this group, send email to
> >> minTamil-u...@googlegroups.com
> >> For more options, visit this group at
> >>http://groups.google.com/group/minTamil
>
> >>  --
> >> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> >> Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may
> >> like to visit our Muthusom Blogs at:

> >>http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,


> >> send email to minT...@googlegroups.com
> >> To unsubscribe from this group, send email to
> >> minTamil-u...@googlegroups.com
> >> For more options, visit this group at
> >>http://groups.google.com/group/minTamil
>
> >> --
> >> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> >> Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may
> >> like to visit our Muthusom Blogs at:

> >>http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,


> >> send email to minT...@googlegroups.com
> >> To unsubscribe from this group, send email to
> >> minTamil-u...@googlegroups.com
> >> For more options, visit this group at
> >>http://groups.google.com/group/minTamil
>
> >>  --
> >> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> >> Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may
> >> like to visit our Muthusom Blogs at:

> >>http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,


> >> send email to minT...@googlegroups.com
> >> To unsubscribe from this group, send email to
> >> minTamil-u...@googlegroups.com
> >> For more options, visit this group at
> >>http://groups.google.com/group/minTamil
>
> >  --
> > "Tamil in Digital Media"
>

> ...
>
> read more »

N. Kannan

unread,
Apr 6, 2012, 4:20:02 PM4/6/12
to mint...@googlegroups.com
மிக்க நன்றி சுகு!

த.ம.அ தோற்றுவிக்கப்பட்டதின் முக்கிய குறிக்கோள்களில் ஒன்றிற்கு உங்கள் மடல் பதில் அளிக்கிறது.

அதாவது வரகு எனும் தானியத்தின் நீண்ட நாளையத் தமிழ்ப் பயன்பாடு பற்றி உலகிற்குச் சொல்லும் ஒரு சேதி. இதை இங்கு யாராவது ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தால் தேவலை. வரகு என்பது ஆங்கிலத்தில் எப்படி அழைக்கப்படுகிறது. முடிந்தால் ஒரு படம். அதன் அறிவியல் பெயர். பின் தமிழ் ஆவணம்.

ஏன் இது முக்கியம் என்றால், நாளைக்கு ஒரு அமெரிக்க நிருவனம் இதற்கு காப்புரிமை கோரும்! (பேடண்ட் ரைட்). நாம் இத்தானியத்தை வளர்த்தவர் எனும் உரிமையை நிலைநாட்டுதல் இங்கு முக்கியம்.

நா.கண்ணன்




2012/4/6 annamalai sugumaran <amirth...@gmail.com>



--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
 
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

N. Kannan

unread,
Apr 6, 2012, 4:22:20 PM4/6/12
to mint...@googlegroups.com
2012/4/6 DEV RAJ <rde...@gmail.com>

> கருநெல்லைக் கீறித் தம் மறைப் புலமையை
> வெளிப்படுத்தினார்  ஓர் ஆழ்வார்;


அடடா! திருமழிசைப் பிரான் அடிகள் வாழி!

நா.கண்ணன்

கி.காளைராசன்

unread,
Apr 7, 2012, 2:04:05 AM4/7/12
to mint...@googlegroups.com
அம்மையார் அவர்களுக்கு வணக்கம்.

////On 4/5/12, Subashini Tremmel <ksuba...@gmail.com> wrote:
நமது மண்ணின்> குரல் ஒலிப்பதிவில் இணைத்து வைக்கின்றேன். ////

மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.
ஒலிப்பதிவு எவ்வாறு செய்வது என்பதைத் தங்களிடமிருந்துதான் கற்றுக்
கொண்டேன். எனக்குத் தாங்கள்தான் குரு.

////இப்படி அவ்வப்போது மண்ணின் மணம்> கமழும் தகவல்களை ஒலிப்பதிவுசெய்து
அனுப்பி வையுங்கள். நமது தகவல் வளம்> பெருகும்.////

நன்றாகச் செய்கிறேன். அன்றைய தினம் ஸ்பதியாருடன் பேட்டிகாணும்போது உலோகச்
சிற்பங்களை எப்படிச் செய்கின்றனர் என்பது பற்றியும் விளக்கமாகச்
சொன்னார். அதையும் விரைவில் பதிப்பிக்கிறேன்.

Innamburan Innamburan

unread,
Apr 7, 2012, 2:21:15 AM4/7/12
to mint...@googlegroups.com
அதை பதிவு செய்யங்கள். நானும் ஒரு முறை ஸ்வாமி மலை போய், அது எல்லாம் கண்டு, சிற்பிகளை ஹைதராபத்துக்கு அழைத்து சென்று சாலர் ஜ்ங்க் ம்யூசியத்தில் ஒரு ஒர்க்ஷாப் நடத்திய ஞ்பாகம் வருது. அதை சொல்கிறேன்.


2012/4/7 கி.காளைராசன் <kalair...@gmail.com>

கி.காளைராசன்

unread,
Apr 7, 2012, 2:21:51 AM4/7/12
to mint...@googlegroups.com
வணக்கம்.

வரகூர் பற்றி செய்தி வழங்கிய ஐயா கணேசன் அவர்களுக்கும்,
கல்வெட்டு ஆதாரம் வழங்கிய ஐயா சுகுமாரன் அவர்களுக்கும்,
பாசுரங்களை ஆதாரமாக் கொடுத்த பண்டிட்ஜி தேவ் அவர்களுக்கும்
நன்றி.

ஐயா கண்ணன் அவர்கள் குறிப்பிட்டுள்ளதுபோல், இச் செய்திகளை ஆங்கிலத்தில்
தொகுத்து (முன்பெல்லாம் வடமொழியில் தொகுப்பர்) வைத்தால் நமது பழமைக்கு
நாமே உரியோர் ஆவோம்.

annamalai sugumaran

unread,
Apr 7, 2012, 6:01:28 AM4/7/12
to minT...@googlegroups.com
நன்றி திரு தேவ் ,முனைவர் கண்ணன் அவர்களே ,
நெல்லூர் ,திருநெல் வேலிமுதலியவை பெரிய ஊராக உள்ளவை .வரகூர் வரகூர் பேட்டை என்ற பெயரிலே நிறைய சிறிய கிராமங்கள் இருக்கின்றன .அதேப்போல் கிராமப்பெயர் இருக்குமா எனக்கேட்டேன் .
ஒருவேளை வரகுஎன்பது  ஏழைகள் சாப்பிடும் தான்யமாக இருந்திருக்கலாம் ஆனால் 
ஆயிரம் ஆண்டுக்கு முன் நெல்லுக்கும் வரகுக்கும் ஒரேமாதிரி வரி விதித்திருக்கிறார்கள் ஏழை உணவு என வரி விலக்கு.இல்லை போலும் .
நெல்கட்டு போன்ற பெயரில் கூட ஊர்கள் இருந்திருக்கின்றன .

சிதம்பரம் அருகே நஞ்சமுகத்து வாழ்க்கை ,புஞ்சமுகத்து வாழ்க்கை என்றெல்லாம் சிறிய கிராமங்கள் இருக்கின்றனன .வயலூர் என்ற பெயரில் நிறைய கிராமங்கள் இருக்கும் .
வயலுடன் இணைந்த வாழ்க்கை போலும் .!

வரகு குறித்த இன்னும் ஒரு முக்கியத்தகவல் பழம் பாடல் வடிவில் இருக்கிறது அதுவும் வரகு ஏழைகளின் உணவு என்கிறது .
பாடலைப்பார்ப்போம் 

எறிகபத்தோடே பல நோய் எய்தும் வறட்சி ,
சொறிசிரங்கு பித்தம் தொடரும் -நிறையும் 
கரகரன்ப பூரித்தக் கச்சு முலைமாதே 
வரகரிசி சோற்றால் வழுத்து .

பொருள் வரகரிசி சோற்றால் மூச்சி எரிகின்ற  சுவாசம் ,அதை சேர்ந்த பல நோய்கள் ,புடை ,தினவு கிரந்தி ,பித்தம் 
இவை உண்டாகும் என்கிறது பதார்த்த குணவிளக்கம்எனும் பழைய வைத்திய நூல் . 
வரகு உபயோகிக்கும் முறை 
இந்த அரிசியை சில ஏழை மக்கள் நன்றாக க்  குத்தி  புடைத்து , சாதமாகவும் பலகாரமாகவும் செய்து உபயோகிப்பர் என்கிறது அந்த நூல் .
இன்னமும் எல்லாவகை அறிசியைப்பற்றியும் தனித்தனி பாடல் உள்ளது .அதே நூலில் இருக்கிறது 

இன்னும் கூட சிலபழைய  நூல்கள்உணவுபதார்த்தம் பற்றி கூறுகிறது .  

ஆகாரகுதுகலம் என்று நினைக்கிறேன் 
தஞ்சை சரபோஜி காலத்தில் தொகுக்கப்பட்டது .நிறைய பழங்கால சமையல் குறிப்பு அதில் உண்டு .
தேடிப்பார்க்கிறேன் .

அன்னத்தின் வகைகள் ,உண்கலங்களின் தன்மை முதலிவைகளைப்பற்றிக் கூறும்
பதார்த்த குண சிந்தாமணி என்ற நூலில் வரகரிசிபற்றி தகவல் ஒன்றும் இல்லை இதில் 
 1500     மேற்ப்பட்ட பதார்த்தங்களைப்பற்றிக்கூறுகிறது . 
விரால் மீன் மாடப்புறா பற்றியெல்லாம் இருக்கிறது ஆனால் வரகு பற்றி இல்லை .
கேழ்வரகு புஞ்சை தான்யம் .வரகு எனும் தான்யத்திற்கு ஏரிப்பாசனம் தேவைப்படுவதால் நஞ்சைப்பயிர் என நினைக்கிறேன் .
அன்புடன் 
அண்ணாமலை சுகுமாரன் 
---------- Forwarded message ----------
From: கி.காளைராசன் <kalair...@gmail.com>
Date: 2012/4/7
Subject: Re: [MinTamil] வரகு
To: mint...@googlegroups.com


,

Hari Krishnan

unread,
Apr 7, 2012, 7:58:17 AM4/7/12
to mint...@googlegroups.com


2012/4/6 annamalai sugumaran <amirth...@gmail.com>

அனைத்து பெரிய நகரங்களுக்குப் பக்கத்தில் வரகூர் ,வரகூர் பேட்டை போன்ற பெயரில் கிராமங்கள் தஞ்சை ,திருநெல்வேலி போன்ற வளமான பகுதியில் இருக்கிறது .ஆனால் நெல்லின் பெயரில் அத்தகைய கிராமங்கள் அதிகம் இருக்கிறதா என்று தெரியவில்லை .

தஞ்சையில் திருக்காட்டுப்பள்ளிக்கு அருகில் இருக்கும் வரகூரைச் சேர்ந்தவன் என்ற முறையில் இதைச் சொல்கிறேன்.  அது வராகபுரி.  நாராயண தீர்த்தர் என்றொருவர் இருந்தார்.  கிருஷ்ணலீலா தரங்கிணியை இயற்றியவர்.  (கிருஷ்ணா தரங்காலு சாரங்க ராகாலு, கிருஷ்ண லீலா தரங்கிணீ பக்தி கீதாலு--என்று சங்கராபரணம் படத்தில் ‘ராகம் தானம் பல்லவி’ பாடலில் இடம் பெறும் அதே கிருஷ்ண லீலா தரங்கிணி).  அவர் ஒருமுறை வயிற்று நோயால் அவதிப்பட்டபோது நாராயணன் கனவில் தோன்றி, ‘நாளைக் காலையில் உனக்கு ஒரு பன்றி வழிகாட்டும்.  அதைப் பின்பற்றிக் கொண்டு வந்தால், என் ஆலயத்தை அடையலாம்.  உன் நோயும் தீரும்’ என்று சொல்லி மறைந்தாராம்.  நாராயண தீர்த்தருக்கு ஒரு பன்றி வழிகாட்டியது.  வேங்கடரமணன், ஸ்ரீநிவாஸன் என்றெல்லாம் அறியப்படும் ஸ்ரீ வேங்கடேச பெருமாள் ஆலயத்துக்கு அப்படித்தான் வந்தடைந்தார் நாரண தீர்த்தர்.

அதற்கு முன்னால் பூபதிராஜபுரம் என்ற பெயரோடு விளங்கிய ஊர், பன்றி வழிகாட்டி வந்ததால், வராக ஊர்=வரகூர் ஆனது.  

என் ஊர் என்ற தலைப்பில் சந்தவசந்தக் கவியரங்கில் நான் இட்ட கவிதையிலிருந்து ஒரு பகுதி: 

================
மன்னும் காவிரி பாய்வதனால்
வளமாய் விரிந்த தஞ்சையிலே
மின்னிசை பொலிந்து செழித்ததிரு
வையா றதனின் அருகினிலே
கன்னல் செழிக்கும் கழனிதிருக்
காட்டுப் பள்ளி பக்கத்தில்
பொன்னிக் கரைக்குப் பக்கத்தில்
பூபதி ராஜ புரமென்பார். (5)

(திருவையாறுக்குப் பக்கத்தில், திருக்காட்டுப்பள்ளி அருகில்)

காரண காரியம் கடந்தவனின்
காலை மனத்தில் வைத்தவராம்
நாரண தீர்த்தர் என்றபெரு
நல்லிசைக் கவிஞர்; துறவியுமாம். 
பாரதம் பாக வதம்மற்றும்
பரதக் கலையின்; நாடகத்தின்
சாரம் அனைத்தும் அகத்துள்ளே
தங்கித் தழைத்த பெருஞானி. (6)

திடுமென ஒருநாள் வயிற்றினிலே
தீரா நோவு தோன்றிடவும்
கொடுமை பொறுக்க முடியாமல்
கூவி அழைத்தார் வேங்கடனை.
நடுநிசி யதனில் கனவினிலே
நாரணன் வந்தான் இதைச்சொன்னான்.
படுதுயர் மாறும்; காலையிலே
பன்றி ஒன்று வழிகாட்டும். (7)

காட்டும் வழியில் நீ வருவாய்.
காத்தே நிற்பேன் நானுனக்காய்.
வாட்டும் நோவினைத் தீர்த்திடுவேன்;
வாநீ அங்கே எனமறைந்தான்.
பாட்டை அதனில் மறுநாளில் 
பன்றி காட்டிய வழியினிலே
நாட்டிய நூல்முழு தறிந்தவராம்
நாரண தீர்த்தர் நடந்திட்டார். (8)

அருகே கோவில் வந்திடவும்,
அக்கணம் பன்றி மறைந்திடவும்,
உருகிப் போனார் கோவிலதன்
உள்ளே போன தீர்த்தரவர்.
பொருவில் காவிரி பொழில்சோலைப் 
பூபதி ராஜ புரமதுவோ
வரகூர் என்றே மாறியது
வழியைக் காட்டிய பன்றியினால். (9)

(வராக ஊர் என்ற பெயர், வரகூர் என்று மாறியது எனச் சொல்வார்கள்)

கீத மிசைத்தார் தீர்த்தரவர்
கிருஷ்ண லீலா தரங்கிணியும்
நாதம் துள்ள, சந்தத்தில்
நயமும் நடமும் துள்ளிடவே
பாதம் துள்ளச் செய்யுமொரு
பாரி ஜாதா பஹரணமாம்
ஓதும் வடமொழி யில்வல்லார்
உள்ளம் குளிரக் கவிசொன்னார். (10)

(நாராயண தீர்த்தர் வரகூரில் நெடு நாள் தங்கியிருந்தார்.  17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.  'கிருஷ்ண லீலா தரங்கிணி' என்ற பெரும்புகழ் கொண்ட நூலையும், பாரிஜாத அபஹரணம் என்ற நாடகத்தையும் வடமொழியில் செய்திருக்கிறார்.  வரகூர் வேங்கடரமணனுடைய புகழ்பாடும் நூல், இரண்டும். பாகவதத்தின் சாரம் என்பார்கள்.)
=====================

பன்றி வழிகாட்டுவதா, அதுவும் ஆலயத்துக்கு என்று தோன்றலாம்.  அண்மையில் ஹைதராபதில் இதைப் போன்று நடந்திருக்கிறது.  ஹைதராபாதிலும் வெங்கடேஸ்வரர் ஆலயத்துக்குள் வந்து கொடிக்கம்பத்தை வலம் வந்திருக்கிறது.  இது பற்றிய செய்தி:


படம் இணைப்பில்.

பன்றி ஊரை, அரிசி ஊராக்கிவிடாதீர்கள்.  அரிசியை ஊறத்தான் போடலாம்; இந்த ஊருக்குப் பெயர்க் காரணத்தில் அரிசி இல்லை.
--
அன்புடன்,
ஹரிகி.
pig.jpg

Hari Krishnan

unread,
Apr 7, 2012, 8:04:55 AM4/7/12
to mint...@googlegroups.com


2012/4/7 annamalai sugumaran <amirth...@gmail.com>

வரகு குறித்த இன்னும் ஒரு முக்கியத்தகவல் பழம் பாடல் வடிவில் இருக்கிறது அதுவும் வரகு ஏழைகளின் உணவு என்கிறது .
பாடலைப்பார்ப்போம் 

எறிகபத்தோடே பல நோய் எய்தும் வறட்சி ,
சொறிசிரங்கு பித்தம் தொடரும் -நிறையும் 
கரகரன்ப பூரித்தக் கச்சு முலைமாதே 
வரகரிசி சோற்றால் வழுத்து .

இன்னொரு பாடல்.

வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும்
முரமுரென வேபுளித்த மோரும் - திரமுடனே
புல்வேளூர்ப் பூதன் புரிந்துவிருந் திட்டசோறு
எல்லா உலகும் பெறும்.

ஔவையார் பாடல்.

Hari Krishnan

unread,
Apr 7, 2012, 8:07:15 AM4/7/12
to mint...@googlegroups.com


2012/4/7 Hari Krishnan <hari.har...@gmail.com>

(நாராயண தீர்த்தர் வரகூரில் நெடு நாள் தங்கியிருந்தார்.  17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.  'கிருஷ்ண லீலா தரங்கிணி' என்ற பெரும்புகழ் கொண்ட நூலையும், பாரிஜாத அபஹரணம் என்ற நாடகத்தையும் வடமொழியில் செய்திருக்கிறார்.  வரகூர் வேங்கடரமணனுடைய புகழ்பாடும் நூல், இரண்டும். பாகவதத்தின் சாரம் என்பார்கள்.)

வரகூர் வேங்கடரமணன் ஆலயத்தின் தளம்:

shylaja

unread,
Apr 7, 2012, 8:21:33 AM4/7/12
to mint...@googlegroups.com


2012/4/7 Hari Krishnan <hari.har...@gmail.com>



2012/4/7 annamalai sugumaran <amirth...@gmail.com>
வரகு குறித்த இன்னும் ஒரு முக்கியத்தகவல் பழம் பாடல் வடிவில் இருக்கிறது அதுவும் வரகு ஏழைகளின் உணவு என்கிறது .
பாடலைப்பார்ப்போம் 

எறிகபத்தோடே பல நோய் எய்தும் வறட்சி ,
சொறிசிரங்கு பித்தம் தொடரும் -நிறையும் 
கரகரன்ப பூரித்தக் கச்சு முலைமாதே 
வரகரிசி சோற்றால் வழுத்து .
 
 
 
<<<<கரகரன்? ஹரிஹரனா?

இன்னொரு பாடல்.

வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும்
முரமுரென வேபுளித்த மோரும் - திரமுடனே
புல்வேளூர்ப் பூதன் புரிந்துவிருந் திட்டசோறு
எல்லா உலகும் பெறும்.

ஔவையார் பாடல்.<<<<
\வழுதுணங்காய் வாட்டும் ...என்ன அர்த்தம்  ஹரிண்ணா?



--
அன்புடன்,
ஹரிகி.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
பணிவினால் மனம் அதொன்றிப் பவள வாய் அரங்கனார்க்குத்
துணிவினால் வாழ மாட்டாய்த் தொல்லை நெஞ்சே! நீ சொல்லாய் !
அணியனார் செம்பொனாய அருவரை யனைய கோயில்
மணியனார் கிடந்தவாற்றை மனத்தினால் நினைக்கலாமே?
(தொண்டரடிப்பொடி ஆழ்வார், திருமாலை, 21)

annamalai sugumaran

unread,
Apr 7, 2012, 8:24:13 AM4/7/12
to mint...@googlegroups.com
வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும்,---- கேட்க்கும் போதே பசி தூண்டுகிறது ,நல்ல combination தான்  
தனிப்பாடல் திரட்டுப்பாடலா ?

சிதம்பரம் பக்கத்தில் வரகூர் ,வரகூர் பேட்டை இருக்கிறது .
வேறு பல இடங்களிலும் இருக்கிறது .
வரகூர் என்றபெயரில் ஒரு சட்டமன்ற தொகுதியே முன்னே இருந்தது .

வரகுப்பற்றி விக்கி கூறும் தகவல் இதோ 
அதில் Ripe proso millet

Ripe proso மில்லெட் என்று உள்ளது 
வரகு அரிசி சாதத்திற்கு 
PASPALUM FRUMENTACEUM  என்றும் ஒரு பொத்தகத்தில் இருக்கிறது 
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன் 


2012/4/7 Hari Krishnan 


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Hari Krishnan

unread,
Apr 7, 2012, 8:27:19 AM4/7/12
to mint...@googlegroups.com


2012/4/7 shylaja <shyl...@gmail.com>
வழுதுணங்காய் வாட்டும் .

வழுதுணங்காய் = கத்தரிக்காய்.  வாட்டு=சுட்ட கத்திரிக்காய்ல என்ன பண்ணுவாங்களோ அது.

Hari Krishnan

unread,
Apr 7, 2012, 8:27:48 AM4/7/12
to mint...@googlegroups.com


2012/4/7 annamalai sugumaran <amirth...@gmail.com>

தனிப்பாடல் திரட்டுப்பாடலா ?


ஆமாம்.

shylaja

unread,
Apr 7, 2012, 8:29:30 AM4/7/12
to mint...@googlegroups.com
கொத்சு? 

2012/4/7 Hari Krishnan <hari.har...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

shylaja

unread,
Apr 7, 2012, 8:31:05 AM4/7/12
to mint...@googlegroups.com
்2012/4/7 Hari Krishnan <hari.har...@gmail.com>
 
ங்க ஊர் மேல் எழுதிய பாடல்கள்  அசத்தல்!

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--

Hari Krishnan

unread,
Apr 7, 2012, 8:32:34 AM4/7/12
to mint...@googlegroups.com


2012/4/7 shylaja <shyl...@gmail.com>
கொத்சு?

அய்யிய்யே.... எங்கம்மா கத்திரிக்காய சுட்டு தொகையல் பண்ணுவார்கள்.  கொத்சு எல்லாம் ‘வாட்டு’ல வராது.  நான் whatனு சொன்னா wattக்கு விளக்கம் சொல்றீங்களே!

Geetha Sambasivam

unread,
Apr 8, 2012, 10:05:22 AM4/8/12
to mint...@googlegroups.com
புட்டரிசி தான் சிவப்பாக இருக்கும். கம்பினியரிசி எனக் கேட்டதில்லை.  வரகரிசி வேறே புட்டரிசி வேறே.

On Fri, Apr 6, 2012 at 1:56 AM, rajam <ra...@earthlink.net> wrote:
On Apr 5, 2012, at 12:56 AM, sharadha subramanian wrote:

ஐயா வணக்கம்,எனக்கு ஒரு ஸ்ந்தேகம்,விளக்கம் தேவை
வரகரிசி சிவப்பு அரிசி,புட்டரிசி,கம்பினியரிசி,இவை எல்லாம் ஒரே வகையானதா? விளக்கவும் நன்றி

--
"கம்பினியரிசி" எனக்குத் தெரியாது.  

மத்தபடி, எல்லாமே "அரிசி" வகை, ஆனால் தனித் தனிக் குணமும் சத்தும் கொண்டவை. நீங்கள் திரு. காளைராசனைக் கேட்டதால் அவர் என்ன சொல்கிறார் என்று பார்த்து, பிறகு எனக்குத் தெரிந்ததைச் சொல்கிறேன்.

Geetha Sambasivam

unread,
Apr 8, 2012, 10:09:09 AM4/8/12
to mint...@googlegroups.com

சித்திரக் காலி, வாலான், சிறை மீட்டான், மணல் வாரி

…..செஞ்சம்பா, கருஞ்சூரை, சீரகச் சம்பா,

முத்து விளங்கி, மலை முண்டன், பொற் பாளை, நெடு

…..மூக்கன், அரிக்கிராவி, மூங்கில் சம்பா,

கத்தூரி வாணன், காடைக் கழுத்தன், இரங்கல் மீட்டான்

…..கல்லுண்டை, பூம்பாளை, பாற்கடுக்கன், வெள்ளை,

புத்தன், கருங்குறுவை, புனுகுச் சம்பாவும் இரு

…..பூவுக்கும் விதை சேரில் போட்டேன் ஆண்டே!

நூல்: முக்கூடற்பள்ளு (#108)

எழுதியவர்: தெரியவில்லை


நெல் வகைகள் குறித்த என். சொக்கன் அவர்களின் வலைப்பதிவில் இருந்து

Geetha Sambasivam

unread,
Apr 8, 2012, 10:09:31 AM4/8/12
to mint...@googlegroups.com

Santhanam Swaminathan

unread,
Apr 8, 2012, 10:36:03 AM4/8/12
to mint...@googlegroups.com
A.V Subramania Aiyar has written an article in The Mail fifty years ago about this Pallu.

I am reproducing only a few points from the lengthy article:

The greatest poem of this class (pallu) is the Mukkudal Pallu of an unknown poet of 
Tirunelveli District of the latter half of the 17th century.

Full details of paddy cultivation are found in the work
There is information in it about over thirty varieties of paddy,
 twenty five kinds of bulls and an equal number of varieties of fish.

He is saying at the end " This brilliant poem deserves to be studied by all lovers of Tamil.

ஆங்கிலக் கட்டுரையைப் படித்துவிட்டு 30 வகை நெல், 25 வகை காளை, 25 வகை மீன் வகைகளைத் தேடிக்கொண்டிருந்தேன். இதை வெளியிட்டமைக்கு நன்றி. முடிந்தால் 25 வகை மீன், 25 வகை காளை, நெல் வகையில் மிச்சம் ஏதேனும் விட்டுப் போயிருந்தால் அதையும் தாருங்கள் or Please give us the link.
 
Swami
020 8904 2879
07951 370 697



From: Geetha Sambasivam <geetha...@gmail.com>
To: mint...@googlegroups.com
Sent: Sunday, April 8, 2012 3:09 PM
Subject: Re: [MinTamil] வரகு

--

கி.காளைராசன்

unread,
Apr 8, 2012, 11:02:50 AM4/8/12
to mint...@googlegroups.com
அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய அக்கா அவர்களுக்கு வணக்கம்.
2012/4/6 rajam <ra...@earthlink.net>
 எல்லாமே "அரிசி" வகை, ஆனால் தனித் தனிக் குணமும் சத்தும் கொண்டவை. நீங்கள் திரு. காளைராசனைக் கேட்டதால் அவர் என்ன சொல்கிறார் என்று பார்த்து, பிறகு எனக்குத் தெரிந்ததைச் சொல்கிறேன்.

அக்கா, சின்னப்பையனாக இருந்தபோது, கும்பாவில் வரகுச் சோறு சாப்பிட்டுள்ளேன்.  மற்றபடி ஏதும் அறியேன். அன்புள்ளம் கொண்டு தாங்கள் அறிந்தவற்றை எங்களுக்கு விளக்கிச் சொல்லுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்
தம்பி
காளை

Geetha Sambasivam

unread,
Apr 8, 2012, 11:03:45 AM4/8/12
to mint...@googlegroups.com
என்.சொக்கன் அவர்களின் லிங்க் மேலே கொடுத்திருக்கேன்;  பாருங்கள்.
360.gif

Geetha Sambasivam

unread,
Apr 8, 2012, 11:14:26 AM4/8/12
to mint...@googlegroups.com
நிலங்கள் குறித்த தகவல்கள்

http://www.tamilvu.org/courses/degree/c031/c0314/html/c0314662.htm

இங்கே காணலாம்.


On Sun, Apr 8, 2012 at 8:33 PM, Geetha Sambasivam <geetha...@gmail.com> wrote:
என்.சொக்கன் அவர்களின் லிங்க் மேலே கொடுத்திருக்கேன்;  பாருங்கள்.
On Sun, Apr 8, 2012 at 8:06 PM, Santhanam Swaminathan <swam...@yahoo.com> wrote:
A.V Subramania Aiyar has written an article in The Mail fifty years ago about this Pallu.



360.gif

N. Kannan

unread,
Apr 8, 2012, 11:23:41 AM4/8/12
to mint...@googlegroups.com
கீதா:

இது வந்தனா சிவா ஆர்வமுடன் ஈடுபடும் Gene Pool திட்டத்தில் இருக்க
வேண்டிய சேதி. இவ்வகை நெல்களின் படங்கள், அறிவியல் பெயர்கள் கிடைத்தால்
இன்னும் சிறப்பு.

க.>

2012/4/8 Geetha Sambasivam <geetha...@gmail.com>:

rajam

unread,
Apr 8, 2012, 11:54:39 AM4/8/12
to mint...@googlegroups.com
நாங்கள் முதுகலைத் தமிழ் படித்த காலத்தில் (1961-1963) முக்கூடற்பள்ளூ, திருக்குற்றாலக் குறவஞ்சி, இறையனார் களவியல் உரை, ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்பு, பாரதியார் பாடல்கள், தொல்காப்பியம், நன்னூல், சங்க இலக்கியம் ... இன்ன பிற நூல்களை எல்லாம் முழுவதுமாகப்  படித்துத் தெரிந்துகொள்ளவேண்டியிருந்தது.
இப்போது ... பாடத் திட்டம் எப்படியோ, தெரியவில்லை.

உண்மை வேண்டுமென்றால் ... இணையத்தை விட்டுவிட்டு ... நேரடியாகப் போய், இளங்கலை/முதுகலை மாணவர்களின் பாடத்திட்டத்தைப் பாருங்கள். அந்த மாணவர்களை நேரில் பாருங்கள். உங்கள் கேள்விகளுக்குப் பல விளக்கங்கள் கிடைக்கும்.
இணையத்தை மட்டும் நம்பி எவரும் தம் நம்பிக்கையை/ஆராய்ச்சியைத் தொடரவேண்டாம்! இது என் வேண்டுகோள். 
நன்றி! 

rajam

unread,
Apr 8, 2012, 12:26:24 PM4/8/12
to mint...@googlegroups.com, "கி.காளைராசன் krishnan"
அன்பின் தம்பி காளை,
முடிந்தவுடன் மதுரைக்குப் போங்கள். அங்கே கே.கே.நகருக்குப் பக்கத்தில், Institute of Social Sciences என்ற இடத்துக்கு அருகே ஒரு கணவன் + மனைவி நடத்திவரும், ஆடம்பரமில்லாத, ஒரு சின்னஞ்சிறிய உணவகத்தில் வரகரிசிப் பொங்கல் கிடைக்கும்! கருப்பட்டிப் பணியாரம் கிடைக்கும். இன்ன பிற.
ஏனப்பா, காரைக்குடியில் இருந்துகொண்டு "புட்டரிசி" தெரியாமல் இருக்கிறீர்! அங்கே கிடைக்கும் "புட்டரிசி" எப்படியோ தெரியவில்லை, இங்கே ஆனானப்பட்ட அமேரிக்காவில் பலவகை அரிசிகள் கிடைக்கும். அதில் ஒன்று வித்தியாசமான சிவப்பரிசி. முடிந்தபோது எல்லாத்தெயும் படம் எடுத்துப் போடுகிறேன்.
அன்புடன்,
அக்கா ராசம் 


DEV RAJ

unread,
Apr 10, 2012, 1:49:37 AM4/10/12
to மின்தமிழ்
வரகு - Kodo millet

வரகு முக்கியமான உணவுப் பயிராக இருந்திருக்க
வேண்டும்; தொல் இலக்கியத்திலிருந்து
சில காட்டுகள் -

ஒக்கல் ஒற்கம் சொலியத் தன்னூர்ச்
சிறுபுல் லாளர் முகத்தவை கூறி,
*வரகுடன் இரக்கும் நெடுந்தகை
அரசுவரின் தாங்கும் வல்லா ளன்னே.
(புறநானூறு)

மா புதல் சேர *வரகு இணர் சிறப்ப
மா மலை புலம்ப கார் கலித்து அலைப்ப
பேர் அமர் கண்ணி நின் பிரிந்து உறைநர்
(ஐங்குறுநூறு - 496)


மேதி அன்ன கல் பிறங்கு இயவின்
வாதி கை அன்ன கவை கதிர் இறைஞ்சி
இரும்பு கவர்வுற்றன பெரு புனம் வரகே*
பால் வார்பு கெழீஇ பல் கவர் வளி போழ்பு
வாலிதின் விளைந்தன ஐவனம் வெண்ணெல்
(மலைபடுகடாம்)

’பனி வரகு’ என்றும் ஒரு கூலவகை
இருப்பதாகத் தெரிகிறது. தமிழகத்தில்
தேனி மாவட்டத்திலும், நாமக்கல் பகுதியிலும்
வரகு பயிராகிறது என்கிறது இப்பதிவு -
http://millets.wordpress.com/millets/


இந்த இழை வரகு பற்றிய நல்ல தகவல்களைத்
தந்துள்ளது; அன்பர்கள் மேலும் வரகு குறித்த அரிய
தகவல்களைத் தொகுத்து மரபு விகியில் இணைக்கலாம்.

தமிழர் பண்பாடு, தொன்மை இவை குறித்து மிகுந்த கவலை
கொள்ளும் அன்பர்கள் குறைகண்டு அவதூறு கூறும் செயல்களை
விடுத்து இதுபோன்ற ஆக்கபூர்வமான முயற்சிகளுக்கு
உதவலாம்.


‘நெல்’ பற்றிய செய்திகள் காண -
http://www.heritagewiki.org/index.php?title=%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D

தேவ்

ranganathan venkatachariar

unread,
Apr 10, 2012, 3:43:27 AM4/10/12
to mint...@googlegroups.com

வரகு முக்கியமான உணவு 

aranganathan///uthiramerur
2012/4/10 DEV RAJ <rde...@gmail.com>
Reply all
Reply to author
Forward
0 new messages