On Apr 19, 8:54 am, Ponnaiah Thirunavukkarasu <ponnth...@gmail.com>
wrote:
> மக்கள் சொர்க்கம் செல்ல நரகத்தை ஏற்க முன் வந்த தாமான திருமேனியர்!
> ஸ்ரீராமானுஜர் ஜெயந்தி 29-4-2009
> பொன்மலை பரிமளம்
>
http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=1706
> Arnold Schwarzenegger<http://www.brainyquote.com/quotes/authors/a/arnold_schwarzenegger.html>
இது தவறு. திருக்கோட்டியூர் நம்பி அப்படிச் செய்யவில்லை. இராமானுஜரின்
தயாள குணத்தை அறிந்த பின் மெச்சி அவரைக் கண்டு, இவர் என்
“எம்பெருமானாரோ?” (அதாவது, என் இறைவனே இராமனுசன் வடிவில் வந்து எனக்குப்
பாடம் சொல்லித்தந்தானோ? எனும் பொருளில்)என்று களித்து, ஆரத்தழுவ, அது
இராமானுசரை பின்னால் எல்லோரும் “எம்பெருமானார்” என்று அழைப்பதற்கு
வழிகோலியது.
இராமானுசரை காசிக்கு அழைத்து அவரைக் கொல்லத்திட்டமிட்டது, அவரது அத்வைத
குருவாகிய `யாதவப்பிரகாசர்` என்பவர். ஆனால், அவரும் பின்னால் திருந்தி
இராமானுசரின் சீடராகி விடுகிறார். இராமானுசருக்கு இவன் தோழன், இவன்
பகைவன் என்ற உணர்வு கிடையாது. இவன் உயர் சாதி, இவன் தாழ்ந்தவன் என்ற
வேறுபாடு கிடையாது.
இரானுஜ வைபவம் வெறும் புராணிகர் எட்டுக்கட்டிய கதையல்ல. அவரது Temple
Management இப்போது 5 பாகங்களாக 3000 பக்கங்களுக்கும் மேலாக
வெளிவந்திருக்கிறது. ஆழ்வார்களின் மதிநலம் முழுக்க அறிந்த ஒருவர்,
இறைவனின் அருளுக்குப் பாத்திரமான ஒருவர் இராமானுஜர் போல் வந்து உதிப்பது
அதிசயமல்ல. ஸ்ரீவைஷ்ணவத்தை ஆழக் கற்றோருக்கு இராமானுஜர் என்றொருவர்
இரத்தமும், சதையுமாக கதையில் உள்ளபடியே உலாவினார் என்று நம்புவதில்
எச்சங்கடமில்லை. வைணவத்தை அறியாதோரே அவர் மீது, அவர் புகழ் மீது
பொறாமைப்படுவர். காந்தி இறந்த போது ஐன்ஸ்டைன் இப்படித்தான் சொன்னார்,
‘நாளை வரும் உலகம், காந்தி என்ற ஒருவர் எலும்பும், சதையுமாக உலகில்
உலாவினார் என்று சொல்வதை நம்பத்தயங்கும்’ என்று. அத்துணை கல்யாண குணங்கள்
காந்தியிடம் இருந்தன என்று இதற்குப்பொருள். ஒரு அரசியல் தலைவருக்கே
இப்புகழ் என்றால் உலகை இரட்சிக்க வந்த ஜகத்குரு எவ்வளவு கல்யாண குணங்கள்
கொண்டவராக இருந்திருப்பார் என்று யூகித்துக் கொள்ளலாம்.
கடைசியாக, சொல்லப்படும் `தாமாகிய திருமேனி` அவரது உண்மையான பூத உடல். அது
அப்படியே பதப்படுத்தப்பட்டு இன்றும் கோயிலில் உள்ளது. பொதுவாக நம்
கோயில்களில் சமாதியோ, இறந்தோரின் அஸ்தியோ வைப்பதில்லை. அது பௌத்தம்,
இஸ்லாம் போன்ற மதங்களிலுண்டு. இங்கு இராமனுஜர் உடல் திருவரங்கம் கோயிலில்
உள்ளது என்றால், அவர் ஜீவசமாதியாக இன்றும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்
என்று பொருள். எனவேதான், திருவரங்கம் பெருமாளைச் சேவிப்பதற்கு முன்
எம்பெருமானார் சந்நிதிக்குப் போய் குரு ஆசி பெற்று பின் இறைவனை வழிபடுவது
வழக்கம்.(இதுவும் அவரது தயாள குணத்தைக் காட்டுவதாகவே அமைகிறது. இன்றும்
நம்மைப் போன்றோர் போய் தஞ்சமடைய தன் திருமேனியைத் தக்க வைத்த தகைமையை
எப்படிப் புகழ்வது?)
க.>
பிகு: இராமானுஜர் காலம்வரை யோக வழியிலேயே இறைவனைக் காண்பது தமிழ் மண்ணில்
வழக்கில் இருந்தது என்பதை இது காட்டுகிறது. இராமானுஜர் தமிழக வழிபாட்டு
முறைமையையே மாற்றி அமைத்திருந்தாலும், அவர் தன்னளவில் மிக சக்தி பெற்ற
யோகியாக இருந்திருக்கிறார் என்பது கண்கூடு
//அவர் ஜீவசமாதியாக இன்றும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்
என்று பொருள். எனவேதான், திருவரங்கம் பெருமாளைச் சேவிப்பதற்கு முன்
எம்பெருமானார் சந்நிதிக்குப் போய் குரு ஆசி பெற்று பின் இறைவனை வழிபடுவது
வழக்கம்.//
On Apr 19, 10:54 pm, Ponnaiah Thirunavukkarasu <ponnth...@gmail.com>
wrote:
> இவரது புரட்சியான கருத்துகள் நாளடைவில் குருவிற்குக் கோபத்தையும்
> ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது. அதனால் ராமா னுஜரைக் கொல்லும் எண்ணத் தில்
> திருக்கோஷ்டியூர் நம்பிகள், சீடர்களுடன் காசிக்கு நடைப் பயணம் மேற்கொண்டார்.
உள்ளது என்றால், அவர் ஜீவசமாதியாக இன்றும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்
என்று பொருள். எனவேதான், திருவரங்கம் பெருமாளைச் சேவிப்பதற்கு முன்
எம்பெருமானார் சந்நிதிக்குப் போய் குரு ஆசி பெற்று பின் இறைவனை வழிபடுவது
வழக்கம்.(இதுவும் அவரது தயாள குணத்தைக் காட்டுவதாகவே அமைகிறது. இன்றும்
நம்மைப் போன்றோர் போய் தஞ்சமடைய தன் திருமேனியைத் தக்க வைத்த தகைமையை
எப்படிப் புகழ்வது?)
-~----------~----~----~----~------~----~------~--~---
நக்கீரன் மாதிரி பரபரப்புச் செய்திகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கிற
தளத்தில் இருந்து எடுக்கப் பட்ட செய்தி, இது இப்படித் தான் இருக்கும்
என்பதால், இதைப் பெரிது படுத்த வேண்டாமே!
உடையவர் தாமான திருமேனி விஷயத்தில் உண்மை என்ன என்பதை வேளுக்குடி ஸ்ரீ
கிருஷ்ணன் அவர்களது உபன்யாசத்திலும் கேட்டிருக்கிறேன். இது அவருடைய
கிஞ்சித்காரம் டிரஸ்ட் இணையதளத்திலும், கேள்வி-பதில் பகுதியிலுள்ள
சொல்லப் பட்டிருக்கிறது.
அன்புடன்
கிருஷ்ணமூர்த்தி.
On Apr 20, 8:52 am, Thirumalai Vinjamoor Venkatesh
//உண்மையை விட, கற்பனை, கட்டுக் கதைகளுக்குச் சிறகின் வேகம் அதிகம்.
நக்கீரன் மாதிரி பரபரப்புச் செய்திகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கிற
தளத்தில் இருந்து எடுக்கப் பட்ட செய்தி, இது //
இதே செய்தி சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்கள்ளல் நடத்தப் பெறும் ஓம் சக்தி இதழில் திரு பகிரதன் ஆசிரியராக இருந்த போது
ஒரு பெரிய கட்டுரையாக வெளி வந்தது . நானும் இதை நம்பி இருமுறை சென்று தரிசித்து வந்தேன் .
குறுகிய காலத்திலேயே சரித்திரத்தில் உண்மைகளில் பல மாறுதல்கள் வந்து விடுகின்றன .
ஆனால் உடையவர் திருத்தோற்றம் உண்மை போலவே இருப்பது என்னவோ உண்மை .மிக தத்ரூபமாக இருக்கிறது .
உண்மை வெளிபடுதியதற்கு நன்றி !~
அன்புடன் ,
ஏ சுகுமாரன்
உண்மையை விட, கற்பனை, கட்டுக் கதைகளுக்குச் சிறகின் வேகம் அதிகம்.
எங்கள் வீட்டுப்பெரியவர்கள் கூட அப்படிச் சொல்லக் கேட்டதன் விளைவு.
தவறான தகவலைத் தந்தமைக்கு வருந்துகிறேன். உடையவரும் சேர்த்து மன்னிக்க
வேண்டும் :-(
ஆனால் அச்சந்நிதியில் சாநித்யம் உள்ளது சத்தியமான சேதி.
க.>
On Apr 20, 3:04 pm, annamalai sugumaran <amirthami...@gmail.com>
wrote:
> //உண்மையை விட, கற்பனை, கட்டுக் கதைகளுக்குச் சிறகின் வேகம் அதிகம்.
> ஆனால் உடையவர் திருத்தோற்றம் உண்மை போலவே இருப்பது என்னவோ உண்மை .மிக தத்ரூபமாக
This is popular legend but not true. Sri Ramanuja's body
was interred in the temple temple premises and the sannidhi
was constructed over it. The image in Srirangam known as
'tAn Ana tirumEni' is therefore placed *over* the remains
of Ramanuja and is *not* the very body of Ramanuja.
The late vidvAn Sri Sathabhishekam Govinda Narasimhachariar,
Sri V.V. Ramanujam and others are authorities who have expressed
their views on this subject. The story that the image is
that of Ramanuja itself is a recent concoction that has been
espoused and promoted by the temple priests and management.
This particular image of Ramanuja is regularly covered with
some unknown treatment to give it the look that it has today.
Rest assured that it is not the very body of Sri Ramanuja.
> Additionally adiyEn heard that bhakthAs who go
> to this sannidhi at Srirangam will wash their feet after coming out.
I had sEvai of Sri Ramanuja here with a Srirangam regular
and also sat in the goshTi and to my knowledge no one
washed their feet after leaving the sannidhi.
An addendum to my previous note on the 'tAn Ana tirumEni',
the image of Sri Ramanuja that is in the Srirangam temple
complex.
Sri Koyil Tirumanjanam S. Sundararajan, a longtime resident
of Srirangam and an informal Vaishnava historian, had this
to say about this image and its unusual appearance:
SrI rAmAnuja was the only personage whose remains were
interred inside the Great Temple precincts. The mUla image of
the AchArya was fashioned over his relics and hence it is known
as the Image per se, tAm Ana tirumEni. (This image receives,
twice a year, a coat of camphor mixed with saffron, and this
special observance had continued for the last eight centuries
and a half.)
(see http://www.best.com/~mani/sv/bhakti/...un97/0056.html)
adiyEn rAmAnuja dAsan
Mani
இங்கே பார்க்கலாம்!
http://www.indiadivine.org/audarya/bhakti-list/128770-udayavar-sannidhi.html
அன்புடன்
கிருஷ்ணமூர்த்தி
முடும்பை வம்சத்தில் பிறந்தும், பெரியவர்கள் தேடிவைத்த மாநிதியைக் கண்டு
கொள்வதற்குக் காடு மேடெல்லாம் சுற்றித் திரிந்து, எனக்கு இப்போது தான்
அருளிச் செயல்களின் அருமை புரிய ஆரம்பித்திருக்கிறது. இதில்
குறைப்படுவதற்கு ஒன்றுமில்லை. 360 டிகிரியில், விஷயங்களைப் பார்ப்பதற்கு,
நேற்றைய முரான்பாடுகள் எனக்கு உதவியிருக்கின்றன, அவ்வளவு தான்.
தாமஸ் ஆல்வா எடிசன் சொன்னது போல, ஒரு விஷயத்தைச் சரியாகச் செய்வதற்கு,
பத்தாயிரம் தடவை எப்படியெல்லாம் செய்யக் கூடாதென்பதை வைத்து தெரிந்து
கொண்டேன், என்று வைத்துக் கொள்ள வேண்டியது தான்!
அன்புடன்
கிருஷ்ணமூர்த்தி
On Apr 20, 12:27 pm, Thirumalai Vinjamoor Venkatesh
On Apr 19 2009, 6:54 pm, Ponnaiah Thirunavukkarasu
> Arnold Schwarzenegger<http://www.brainyquote.com/quotes/authors/a/arnold_schwarzenegger.html>