தணிக்கைத் துறையை அரசு எப்போதும் ‘முட்டுக்கட்டை’ என்று மக்களிடையே
பிரசாரம் செய்வதால், இந்தத் தொடருக்குத் ‘தணிக்கை என்ற முட்டுக்கட்டை’
என்பதையே தலைப்பாகக் கொண்டுள்ளார். இந்தத் துறை சார்ந்து தமிழில்
வெளிவரும் முதல் தொடர், இதுவாகவே இருக்கக்கூடும்.
இந்தத் தொடரின் முதல் பகுதியை இந்தச் சுட்டியில் நீங்கள் படிக்கலாம்
http://www.vallamai.com/?p=2474
அன்புடன் என்றும்,
அண்ணாகண்ணன்.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
அதுதான் 2G யில் சரியாகக் கட்டையைக் கொடுத்துள்ளார்களே
> அப்படிப்பட்ட முட்டுக்கட்டைகள் நம் நாட்டுக்கு மிகவும் அவசியம்
> இதைத்தான் வெகுநாட்களாக எதிர்பார்த்தேன்
அன்பன்
கி.காளைராசன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
தணிக்கை என்ற முட்டுக்கட்டை – 1
ஒரு முகாந்திரம்:
அரசு இயந்திரத்தை பூரி ஜெகன்னாத் தேருடன் ஒப்பிடுவார்கள். அத்தனை மெள்ள மெள்ள நகருமாம். ஆங்கில மொழியிலேயே அந்த சொல், ‘ஆடாமல் அசையாமல் வரும்’ ஆமை வேகத்திற்கு உவமை ஆகிவிட்டது. உவமை மேலும் பலவிதங்களில் பொருத்தம். ஊர் ஜனங்கள் ஆயிரக்கணக்கில் வடம் பிடிக்கவேண்டும்; தேர்த்தட்டில், அமர்ந்தும், நின்றும், ஆடியும்,பாடியும், கூவியும் ‘பண்டா’ எனப்படும் பூசாரி இனத்தவர் படுத்தும் பாடு சொல்லி மாளாது. நம்மூர் பக்கம் வருவோம். நமக்குத் தெரிந்தது திருவாரூர் தேர். பெரிது. பல வருடங்கள் நிலை பெயரவில்லை, திருவெறும்பூர் பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல் நிறுவனம், நவீன சக்கிரங்கள் பொருத்தும் வரை. இது நடந்து நாற்பது ஆண்டுகளுக்கு மேல் இருக்கும். அப்போது எழுந்த வினா: முட்டுக்கட்டை எப்படி இருக்கிறது?; முட்டுக்கட்டையை தலைமுறை, தலைமுறையாக போடும் வம்சாவளி எங்கே? எங்கே?
ஐயன்மீர்! விழாக்கோலம் கொண்ட தேர் வலமும் வந்து, பெருமான் தரிசனமும் அளித்து , மக்கள் ஒருமைப்பாட்டையும் நிலை நாட்டிய பிறகு, சொகுசாக நிலையில் வந்து, வருடம் முழுதும் அமரிக்கையாக இருக்க வேண்டும் என்றால், முட்டுக்கட்டையாருக்கு வந்தனமும், நன்றியும் சொல்லியாக வேண்டும். சிறியவனாக இருந்த போது, அரியக்குடியில் தேர் வடம் பிடித்திருக்கிறேன். பதவியில் இருந்த போது, பூரி ஜெகன்னாத் தேரையும் இழுத்திருக்கிறேன். இரு தடவையும், முட்டுக்கட்டையாரின் திறனையும், துணிவையும், வலிமையையும், உடனடி செயலையும் கண்டு வியந்திருக்கிறேன். அவர்களுக்குக் கொடுக்கப்படும் மாலை மரியாதை, தாம்பூலம், திரவிய தானம், பரிசிலாகத் தேறல் எல்லாம் உகந்தது தான் என்பதில் ஐயமில்லை. உவமித்து கூறுவது யாதெனில், அரசு இயந்திரம் தேர் போல; வடம் பிடிப்போர் மக்கள் என்க. அரசு ஊழியம் செய்வோர் பண்டாக்கள் மாதிரி. இங்கு மட்டும் உவமை அரைகுறை பொருத்தம் தான். பிறகு விளக்குகிறேன்.
இத்தனை பீடிகை எதற்கென்றால், தணிக்கைத்துறை என்றதொரு ‘நிர்வாக முட்டுக்கட்டை’க்கு இந்தியாவில் மதிப்பு குறைவு. அரசு புறக்கணிக்கும்; ஊடகங்கள் ‘ஏனோ தானோ’; மக்கள் இருளில். இந்த குறைகள் தீர்ந்தால் தான், அரசு சுதாரித்துக்கொள்ளும். ஊடகங்கள் கவனைத்தை திருப்பும். மக்களும், ‘நாக்கைப் பிடுங்கிக்கறாப்போல, நாலு கேள்வி’ கேட்க முடியும். அன்று தான் ஜனநாயகம் வலு பெறும். சுருங்கச்சொல்லின், தணிக்கைதுறை மக்கள் தொண்டு செய்ய இயலும், நல்லவை நடந்தால்.
ஆங்கில அரசின் படைப்பாக 150 வருடங்களாக பணி புரியும், அரசியல் சாஸனத்தில் நிர்வாக ஆணிவேராக சொல்லப்பட்ட, இந்த இலாக்காவின் செயல் பாடுகளின் பயன் மக்களை அடைவதில்லை. அமெரிக்காவில் ‘ஜெனெரல் ஆடிட் ஆஃபீஸ்’ என்ற பெயரை கேட்டாலே, அழுத குழந்தையும் வாயை மூடும். அத்தனை அச்சம்! இங்கிலாந்தில் ஆடிட்டர் ஜெனரலை தேர்ந்தெடுக்கும் விதம் பாரபக்ஷம் அற்றது; எவராலும் மறுக்க இயலாதது; வீசும் வலையும் நாலாப்பக்கமும் அலையும். ஏனென்றால், அந்த வேலை ஆயுசு பரியந்தம் உறுதி. ஒரு உபகதை இருக்கிறது. பிறகு சொல்கிறேன். இந்தியாவில், ஆடிட்டர் ஜெனரலை நியமிப்பது பிரதமர், நடை முறையில். அது பற்றியும் பிறகு தான் அலச வேண்டும். இப்போதைக்கு பீடிகை போதும்.
ஒரு தற்கால விவகாரத்தை அவதானிப்போம். இந்த 2ஜி சமாச்சாரம் எங்கும் நிறைந்துள்ளது - உச்ச நீதி மன்றம், பிரதமரின் ஜவாபுகள், நாடாளுமன்றத்தில் கலாட்டா, அந்த மன்றத்துக் குழுக்களின் இழுபறி, தொலைக்காட்சிகளில் தொல்லை, இதழ்களில் முணுமுணுப்பு, உலகெங்கும் இந்தியாவை பற்றி இழிச்சொல், எள்ளல். இதற்கெல்லாம் மூலம் ஒரு சிறிய ஆடிட் ரிப்போர்ட் - 57 பக்கங்கள்; பேசும் ஆவணங்கள் 77 பக்கங்கள்; சிறிய முன்னுரை. அதன் சாராம்சம் ஒரு வரியில்! சும்மா சொல்லக்கூடாது. குடை சாயும் தேரை, இந்த முட்டுக்கட்டை நிமிர்த்தும் போது, அந்த தேர் நடுநடுங்கித்தான் நின்றது. இத்தனைக்கும், அந்த ரிப்போர்ட், கண்ட கண்ட இடங்களில் சேதி கேட்கவில்லை;ஒற்று கேட்கவில்லை; வதந்திகளை நம்பவில்லை. டெலிகாம் துறையின் ஆவணங்களும், அத்துறை அருளிய விளக்கங்களே ஆதாரம், இந்த ரிப்போர்ட்டுக்கு. ஆடிட் மரபுகள் மீறப்படவில்லை. வழக்கம் போல், தணிக்கை செய்யப்போகிறோம் என்று நோட்டீசும் கொடுத்து, (தீவட்டிக் கொள்ளைக்காரன் கூட இப்படி முன்னறிவிப்பு செய்வதில்லை!). அதை எப்படி செய்வோம் என்று முன் கூட்டி அத்துறையின் அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி, தணிக்கை முடிவுகளையும் அவர்களுடன் விவாதித்து, அவர்களின் விளக்கங்களை பெற்றபின் தான் அது ஃபைசல் செய்யப்பட்டது. இத்தனை முஸ்தீப்புகள் செய்த பின், ‘ஐயகோ! மண்ணில் வீழ்த்தினானே! இவன் உருப்படுவானா!’ என்றெல்லாம் அலறி விட்டு, ‘மீசைலே மண் ஒட்டலே’ என்று நொண்டி சமாதானம் கூறினால், நடந்தது, நடக்கவில்லை என்று ஆகி விடுமா என்ன?
இந்த 2ஜி ஆடிட் ரிப்போர்ட் பல வகைகளில் வரலாறு படைத்தது.
இது கூட, தணிக்கைத்துறையின் இலக்கணத்தை பற்றிய விளக்கம் மட்டுமே. 2ஜி விவகாரம் என்ற கந்தல் புராணம் பற்றி பேசும் தருணம் இது அல்ல. பிறகு வருவோம்.
ஒரு சூடான செய்தி: “ஒரே முகவரியில் பல நிறுவனங்கள்: கண்காணிக்க மத்திய அரசு தீவிரம்.” பத்து தலை ராவணனையும் தோற்கடிக்கும் மயில் ராவணன்கள் நிறைந்த நன்னாடு இது. ஒரே முகவரியில் பல பெயர்களில் இயங்கும் நிறுவனங்கள்/ பல நிறுவனங்களின் இயக்குநர் குழுவில் சிலரே இயக்குநர்கள்/ பல வருமான வரி ‘பான் கார்டுகள்’ வைத்துள்ள ஏய்ப்போர் என்றெல்லாம், அரசு கவனத்திற்கு வந்திருக்கிறதாம். ஒரு சான்று: அசத்யம் செய்த சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனம்.
எனக்கு சிரிப்பு வந்து விட்டது. இந்த கூத்தெல்லாம் நான் போன நூற்றாண்டின் அறுபதுகளிலேயே கண்டு கொண்டவன். தடுத்தாட்கொண்டதால், எனக்கு பேரும், புகழும் வந்து சேர்ந்தன. அந்தக் காலத்து கான்ட்ராக்ட் ஒன்று, கோடிக்கணக்கில். மூன்று அரையணா ஆசாமிகள் போட்டி! போடாத போட்டி! அதாவது, மூன்று பேரும் உள்கை. விதிமுறைகள், ஆணைகள், வரை முறைகள் எல்லாமே அப்பழுக்கு இல்லாமல், பரிசுத்தம். நான் திட்டவட்டமாக, அந்த ‘பரிசுத்த’ டெண்டர்களை நிராகரித்தவுடன், அம்மாநிலத்து பொதுப்பணித்துறையின் மேலதிகாரிகள் ‘புலு புலு’ என்று சண்டைக்கு வந்து விட்டார்கள். என்னை விட ரொம்ப சீனியர். ராஜாஜி அன்றொரு நாள் சொன்னார்,’ என் முதல் எதிரி கம்யூனிஸ்ட்கள் அல்ல; பொதுப்பணித்துறை் தான் என் முதல் எதிரி’ என்று. அது நினைவுக்கு வர, எங்கள் முதல்வரிடம் ஓடினேன்..,
(தொடரும்)
இன்னம்பூரான்
தணிக்கைத்துறை இன்று பெரிதும் பேசப்படுகிறது, 2ஜி ஆடிட் ரிப்போர்ட்டே, ஸீ.பீ.ஐ தொடர்ந்த வழக்கின் மூலாதாரம் என்பதால். மக்களுக்கு, அந்தத்துறையின் செயல்முறைகள் தெரியவேண்டும் ஏன்ற கருத்தால் உந்தப்பட்டு, நான் 'வல்லமை' மின்னிதழில் (ஏப்ரல் முதல் தேதி) எழுதிய தொடரின் முதல் பகுதியை, இங்கு பதிவு செய்கிறேன்.
இன்னம்பூரான்
05 04 2001-----------------------------------------------------------------------------------தணிக்கை என்ற முட்டுக்கட்டை – 1
ஒரு முகாந்திரம்:
அரசு இயந்திரத்தை பூரி ஜெகன்னாத் தேருடன் ஒப்பிடுவார்கள். அத்தனை மெள்ள மெள்ள நகருமாம். ஆங்கில மொழியிலேயே அந்த சொல், ‘ஆடாமல் அசையாமல் வரும்’ ஆமை வேகத்திற்கு உவமை ஆகிவிட்டது. உவமை மேலும் பலவிதங்களில் பொருத்தம். ஊர் ஜனங்கள் ஆயிரக்கணக்கில் வடம் பிடிக்கவேண்டும்; தேர்த்தட்டில், அமர்ந்தும், நின்றும், ஆடியும்,பாடியும், கூவியும் ‘பண்டா’ எனப்படும் பூசாரி இனத்தவர் படுத்தும் பாடு சொல்லி மாளாது. நம்மூர் பக்கம் வருவோம். நமக்குத் தெரிந்தது திருவாரூர் தேர். பெரிது. பல வருடங்கள் நிலை பெயரவில்லை, திருவெறும்பூர் பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல் நிறுவனம், நவீன சக்கிரங்கள் பொருத்தும் வரை. இது நடந்து நாற்பது ஆண்டுகளுக்கு மேல் இருக்கும். அப்போது எழுந்த வினா: முட்டுக்கட்டை எப்படி இருக்கிறது?; முட்டுக்கட்டையை தலைமுறை, தலைமுறையாக போடும் வம்சாவளி எங்கே? எங்கே?
ஐயன்மீர்! விழாக்கோலம் கொண்ட தேர் வலமும் வந்து, பெருமான் தரிசனமும் அளித்து , மக்கள் ஒருமைப்பாட்டையும் நிலை நாட்டிய பிறகு, சொகுசாக நிலையில் வந்து, வருடம் முழுதும் அமரிக்கையாக இருக்க வேண்டும் என்றால், முட்டுக்கட்டையாருக்கு வந்தனமும், நன்றியும் சொல்லியாக வேண்டும். சிறியவனாக இருந்த போது, அரியக்குடியில் தேர் வடம் பிடித்திருக்கிறேன். பதவியில் இருந்த போது, பூரி ஜெகன்னாத் தேரையும் இழுத்திருக்கிறேன். இரு தடவையும், முட்டுக்கட்டையாரின் திறனையும், துணிவையும், வலிமையையும், உடனடி செயலையும் கண்டு வியந்திருக்கிறேன். அவர்களுக்குக் கொடுக்கப்படும் மாலை மரியாதை, தாம்பூலம், திரவிய தானம், பரிசிலாகத் தேறல் எல்லாம் உகந்தது தான் என்பதில் ஐயமில்லை. உவமித்து கூறுவது யாதெனில், அரசு இயந்திரம் தேர் போல; வடம் பிடிப்போர் மக்கள் என்க. அரசு ஊழியம் செய்வோர் பண்டாக்கள் மாதிரி. இங்கு மட்டும் உவமை அரைகுறை பொருத்தம் தான். பிறகு விளக்குகிறேன்.
இத்தனை பீடிகை எதற்கென்றால், தணிக்கைத்துறை என்றதொரு ‘நிர்வாக முட்டுக்கட்டை’க்கு இந்தியாவில் மதிப்பு குறைவு. அரசு புறக்கணிக்கும்; ஊடகங்கள் ‘ஏனோ தானோ’; மக்கள் இருளில். இந்த குறைகள் தீர்ந்தால் தான், அரசு சுதாரித்துக்கொள்ளும். ஊடகங்கள் கவனைத்தை திருப்பும். மக்களும், ‘நாக்கைப் பிடுங்கிக்கறாப்போல, நாலு கேள்வி’ கேட்க முடியும். அன்று தான் ஜனநாயகம் வலு பெறும். சுருங்கச்சொல்லின், தணிக்கைதுறை மக்கள் தொண்டு செய்ய இயலும், நல்லவை நடந்தால்.
ஆங்கில அரசின் படைப்பாக 150 வருடங்களாக பணி புரியும், அரசியல் சாஸனத்தில் நிர்வாக ஆணிவேராக சொல்லப்பட்ட, இந்த இலாக்காவின் செயல் பாடுகளின் பயன் மக்களை அடைவதில்லை. அமெரிக்காவில் ‘ஜெனெரல் ஆடிட் ஆஃபீஸ்’ என்ற பெயரை கேட்டாலே, அழுத குழந்தையும் வாயை மூடும். அத்தனை அச்சம்! இங்கிலாந்தில் ஆடிட்டர் ஜெனரலை தேர்ந்தெடுக்கும் விதம் பாரபக்ஷம் அற்றது; எவராலும் மறுக்க இயலாதது; வீசும் வலையும் நாலாப்பக்கமும் அலையும். ஏனென்றால், அந்த வேலை ஆயுசு பரியந்தம் உறுதி. ஒரு உபகதை இருக்கிறது. பிறகு சொல்கிறேன். இந்தியாவில், ஆடிட்டர் ஜெனரலை நியமிப்பது பிரதமர், நடை முறையில். அது பற்றியும் பிறகு தான் அலச வேண்டும். இப்போதைக்கு பீடிகை போதும்.
ஒரு தற்கால விவகாரத்தை அவதானிப்போம். இந்த 2ஜி சமாச்சாரம் எங்கும் நிறைந்துள்ளது - உச்ச நீதி மன்றம், பிரதமரின் ஜவாபுகள், நாடாளுமன்றத்தில் கலாட்டா, அந்த மன்றத்துக் குழுக்களின் இழுபறி, தொலைக்காட்சிகளில் தொல்லை, இதழ்களில் முணுமுணுப்பு, உலகெங்கும் இந்தியாவை பற்றி இழிச்சொல், எள்ளல். இதற்கெல்லாம் மூலம் ஒரு சிறிய ஆடிட் ரிப்போர்ட் - 57 பக்கங்கள்; பேசும் ஆவணங்கள் 77 பக்கங்கள்; சிறிய முன்னுரை. அதன் சாராம்சம் ஒரு வரியில்! சும்மா சொல்லக்கூடாது. குடை சாயும் தேரை, இந்த முட்டுக்கட்டை நிமிர்த்தும் போது, அந்த தேர் நடுநடுங்கித்தான் நின்றது. இத்தனைக்கும், அந்த ரிப்போர்ட், கண்ட கண்ட இடங்களில் சேதி கேட்கவில்லை;ஒற்று கேட்கவில்லை; வதந்திகளை நம்பவில்லை. டெலிகாம் துறையின் ஆவணங்களும், அத்துறை அருளிய விளக்கங்களே ஆதாரம், இந்த ரிப்போர்ட்டுக்கு. ஆடிட் மரபுகள் மீறப்படவில்லை. வழக்கம் போல், தணிக்கை செய்யப்போகிறோம் என்று நோட்டீசும் கொடுத்து, (தீவட்டிக் கொள்ளைக்காரன் கூட இப்படி முன்னறிவிப்பு செய்வதில்லை!). அதை எப்படி செய்வோம் என்று முன் கூட்டி அத்துறையின் அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி, தணிக்கை முடிவுகளையும் அவர்களுடன் விவாதித்து, அவர்களின் விளக்கங்களை பெற்றபின் தான் அது ஃபைசல் செய்யப்பட்டது. இத்தனை முஸ்தீப்புகள் செய்த பின், ‘ஐயகோ! மண்ணில் வீழ்த்தினானே! இவன் உருப்படுவானா!’ என்றெல்லாம் அலறி விட்டு, ‘மீசைலே மண் ஒட்டலே’ என்று நொண்டி சமாதானம் கூறினால், நடந்தது, நடக்கவில்லை என்று ஆகி விடுமா என்ன?
இந்த 2ஜி ஆடிட் ரிப்போர்ட் பல வகைகளில் வரலாறு படைத்தது.
- விக்கி லீக் மாதிரி, இந்த ரிப்போர்ட்டின் கசிவுகளை, ஆவணங்கள் ஆர்வத்துடன் அணைத்து ‘குய்யோ முறையோ’ என்று கூவின. அன்றாடம் எதிர் கூவல்கள். ஆடிட்டர் ஜெனரல் காஷ்ட மெளனம். எங்கள் துறையில் காபந்துகள் அதிகம், தொடக்கக் காலத்திலிருந்து. ஒரு மூச்சு! ஹூம்! கசிவுகள் எல்லாம் வேறிடங்களிலிருந்து.
- ஆடிட் என்றால் வேம்பு, அரசு ஆளுமைக்கு. அரசியல் சாஸனத்தின் அடிப்படை விதிகளுக்கு முரணாக, எல்லா கட்சி அரசுகளும் தணிக்கை அறிக்கையை நாடாளும் மன்றம் ஒத்தி வைக்கப்படும் தினம், மூடு விழாவை போல, வைப்பார்கள், யாரும் படித்து வினா எழுப்பக்கூடாது என்ற குற்ற உணர்வோடு. வரலாறு காணாத முறையில், இந்த ரிப்போர்ட் முதல் முறையாக, உடனுக்குடன் நாடாளும் மன்றத்தில் வைக்கப்பட்டது. அந்த அளவுக்கு, அரசுக்கு நெருக்கடி.
- ஆடிட் இங்க்லீஷ் அரசு இங்க்லீஷ். புரியாது, மற்றவர்களுக்கு. இந்த ரிப்போர்ட் பரவாயில்லை. படிக்க முடிகிறது. நீங்களும் நானும் அலசலாம். படியுங்களேன்.
- 77 பக்கங்கள் கொண்ட ஆவணத்தொகுப்பு, ஒரு நல்வரவு. மத்திய அரசை ஒரு கை பார்த்து விட்டது.
இது கூட, தணிக்கைத்துறையின் இலக்கணத்தை பற்றிய விளக்கம் மட்டுமே. 2ஜி விவகாரம் என்ற கந்தல் புராணம் பற்றி பேசும் தருணம் இது அல்ல. பிறகு வருவோம்.
ஒரு சூடான செய்தி: “ஒரே முகவரியில் பல நிறுவனங்கள்: கண்காணிக்க மத்திய அரசு தீவிரம்.” பத்து தலை ராவணனையும் தோற்கடிக்கும் மயில் ராவணன்கள் நிறைந்த நன்னாடு இது. ஒரே முகவரியில் பல பெயர்களில் இயங்கும் நிறுவனங்கள்/ பல நிறுவனங்களின் இயக்குநர் குழுவில் சிலரே இயக்குநர்கள்/ பல வருமான வரி ‘பான் கார்டுகள்’ வைத்துள்ள ஏய்ப்போர் என்றெல்லாம், அரசு கவனத்திற்கு வந்திருக்கிறதாம். ஒரு சான்று: அசத்யம் செய்த சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனம்.
எனக்கு சிரிப்பு வந்து விட்டது. இந்த கூத்தெல்லாம் நான் போன நூற்றாண்டின் அறுபதுகளிலேயே கண்டு கொண்டவன். தடுத்தாட்கொண்டதால், எனக்கு பேரும், புகழும் வந்து சேர்ந்தன. அந்தக் காலத்து கான்ட்ராக்ட் ஒன்று, கோடிக்கணக்கில். மூன்று அரையணா ஆசாமிகள் போட்டி! போடாத போட்டி! அதாவது, மூன்று பேரும் உள்கை. விதிமுறைகள், ஆணைகள், வரை முறைகள் எல்லாமே அப்பழுக்கு இல்லாமல், பரிசுத்தம். நான் திட்டவட்டமாக, அந்த ‘பரிசுத்த’ டெண்டர்களை நிராகரித்தவுடன், அம்மாநிலத்து பொதுப்பணித்துறையின் மேலதிகாரிகள் ‘புலு புலு’ என்று சண்டைக்கு வந்து விட்டார்கள். என்னை விட ரொம்ப சீனியர். ராஜாஜி அன்றொரு நாள் சொன்னார்,’ என் முதல் எதிரி கம்யூனிஸ்ட்கள் அல்ல; பொதுப்பணித்துறை் தான் என் முதல் எதிரி’ என்று. அது நினைவுக்கு வர, எங்கள் முதல்வரிடம் ஓடினேன்..,
(தொடரும்)
இன்னம்பூரான்
2011/4/1 Innamburan Innamburan <innam...@gmail.com>
'தணிக்கைத்துறையின் தணியா வேகம்', 'அரசை உருப்படியாக செயல்பட...',
'தணிக்கை என்றதொரு முட்டுக்கட்டை' என்ற இழைகளை எல்லாரும் படிக்கவேண்டும்,
கருத்துத் தெரிவிக்கவேண்டும், கேள்விகள் கேட்கவேண்டும் என்ற தாகத்துடன்
எழுதி வருகிறேன். நான் எழுதுவது முக்யம் அல்ல. இழைகளின் நோக்கம், பகிர்வு
எல்லாம் முக்யம். நான் எழுதுவது, சொந்த அனுபவத்தின் அடிப்படையில்
என்பதால், படிப்பினைகள், விளக்கங்கள், ஆக்கங்கள் இருக்கலாம். நான் இதை
மக்கள் தொண்டு என்று கருதுகிறேன். மற்ற தளங்களிலும், இதை பற்றி
விவாதியுங்கள்.
மற்ற ஆக்கங்களையும் பார்க்க வாய்ப்பு கிடைக்க வேண்டும். அதற்காக, தொடர்
சுட்டியையும் இணைத்து
விடுகிறேன். நான் இந்த பணியின் எவாஞ்சலிஸ்ட்.
அன்புடன்,
இன்னம்பூரான்
06 04 2011
அந்த அளவுக்கு நல்லதொரு அரசு, நல்லாசிரியர் ஒருவர் பிரதமராக இருந்து
ஆட்சி நடத்திவருகிறார்.
மேலும், படித்துக் கொண்டிருக்கிறேன்,
அன்பன்
கி.காளைராசன்
--
திருப்பூவணப் புராணம் மற்றும் திருப்பூவணக்காசி படியுங்கள்,
http://www.freewebs.com/thirupoovanam/
அன்னதானம் செய்வோம், கண்தானம் செய்வோம். இவ்விருதானங்களையும் சிவபெருமான்
ஏற்றுக் கொள்கிறார்,
|
|
|
கல்லணை கட்டுவதற்கும், தஞ்சை பெரிய கோயில் எழுப்புவதற்கும், வண்டியூர் தெப்பக் குளம் வெட்டவும், திருமலை நாயக்கர் மஹால் கட்டவும், அக்காலத்து மன்னர்கள் மொத்த காண்ட்ராக்ட் விட்டார்களா அல்லது லேபர்-காண்ட்ராக்ட் கொடுத்து, கையில் சவுக்குடன், மேற்பார்வை செய்தார்களா என்று, மெய்கீர்த்திகள் கூறவில்லை.
டெண்டர், காண்ட்ராக்ட், ஏலம் போன்ற வழிமுறைகளை வகுத்து, கண்டிப்பான ஷரத்துகளையும், திட்டவட்டமான நடைமுறை இலக்கணத்தையும், நடுநிலை பிறழாத தணிக்கையையும் ஆங்கிலேய கலோனிய ஆட்சியின் நல்வரவுகள் என்றால் மிகையாகாது. ஆனால், காலபோக்கில், அவற்றில் ஓட்டைகள் விழுந்தன....
மேலும் படிக்க...
தணிக்கை என்ற முட்டுக்கட்டை – 2
தசாவதாரம்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
பாட்டி மலையேறியது பற்றி வருத்தமே இல்லை
மீண்டும் எப்போது வேண்டுமானாலும் இறங்கி வருவாள் இரக்க மனசுக்காரி பாட்டி.
ஆனால் பேரன் சரியான தளமேறியிருக்கிறார் அதுதான் மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
இந்த தளத்தில் வல்லமையுடன் திடமாக நிற்கட்டும் பேரன்
இரக்கமுள்ள பல பாட்டிகள்,தாத்தாக்கள் எங்களுக்கு வேண்டும்
அன்புடன்
தமிழ்த்தேனீ
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
http://www.vallamai.com/?p=3008
இன்னம்பூரான்
28 04 2011
2011/4/28 coral shree <cor...@gmail.com>:
பகுதி 1:
நான் இந்த பணியின் எவாஞ்சலிஸ்ட். எனவே, முழுக்கட்டுரையும் இங்கு பதிவு செய்கிறேன், பசலையில் வாடும் தலைவியை போல.
இன்னம்பூரான்
05 05 2011
+++++++++++++++பூசணிக்காயைச் சோற்றில் மறைத்த மர்மம்!
வாசிப்பவரோ, கணக்குப் புலியாகிய டிவிஷனல் அக்கவுண்டண்ட். ‘மலை முழுங்கி’யின் டெண்டரை எடுக்கும் வரை, மற்றவர்களின் மொத்தத் தொகையை மனத்தில் கொண்டு, கிடுகிடு வேகத்தில் கணக்குப் போட்டு, இவரின் டெண்டர் காலணா குறைவாக இருப்பதைப் போல [+%] அல்லது [-%] வாசித்து விடுவார்.]’ எனவே, அன்பர்களே! வேண்டப்பட்டவனுக்கு அடிக்கலாம் லக்கி ப்ரைஸ்…//
தொடருங்கள், காத்திருக்கோம். இவை எல்லாம் இத்தனை விலாவாரியாச் சொல்ல யார் இருக்காங்க?
2011/5/6 Innamburan Innamburan <innam...@gmail.com>
நான் இந்த பணியின் எவாஞ்சலிஸ்ட். எனவே, முழுக்கட்டுரையும் இங்கு பதிவு செய்கிறேன், பசலையில் வாடும் தலைவியை போல.
இன்னம்பூரான்
05 05 2011
+++++++++++++++பூசணிக்காயைச் சோற்றில் மறைத்த மர்மம்!
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil