இன்று கர்நாடக சங்கீதம் என்று அறியப்படும் தமிழ் இசை சங்ககாலத்திலேயே
வளர்ச்சியுற்று சிறப்புற்றிருந்ததை சிலம்பு செப்பும். கால ஓட்டத்தில்
இவ்விசை பல்வேறு கூறுகளை இந்திய இசைப் பாரம்பரியங்களிலிருந்து எடுத்து
வளர்ந்திருக்கிறது. இனிமேல் இதைத் திராவிட இசை என்றுதான் சொல்ல வேண்டும்,
ஏனெனில் இதன் சாகித்யங்கள் தெலுங்கிலும், கன்னடாவிலும், மலையாளத்திலும்,
தமிழிலும் அமைந்துள்ளன. வடமொழி பயிற்சியுள்ள பல சாகித்ய கர்த்தாக்கள்
சமிஸ்கிருதத்தில் எழுதி இதை வளப்படுத்தியுள்ளனர். இதன் சமகாலப் பரிமாணம்
இன்னுமொரு இந்திய ஒற்றுமை படிநிலையில் (pan Indian) நிற்கிறது. ஹிந்தி
பஜன், மராட்டிய அபங், ஹிந்துஸ்தானி கzhaல் போன்றவை சமகாலப் பாடர்களால்
நிறைய பாடப்படுகின்றன. இதையும் ஒருபடி தாண்டி அது சர்வ தேச முகமொன்றும்
கொண்டுள்ளது. அதுதான் Fusion music என்பது. வெளிநாடு செல்வதென்பது
பக்கத்து ஊருக்குச் செல்வது போல் ஆகிவிட்ட நிலையில் இவ்விசைக் கலைஞர்கள்
வெளிநாட்டுக் குழுக்களுடன் சேர்ந்து பல கலப்பு சங்கீதத்தைத் தருகின்றனர்.
பக்தி இயக்கம் போல் தமிழ் மண்ணில் பிறந்த இந்த இசை ஒரு முழு
உலகப்பரிமாணம் கொண்ட இசையாக மாறிவிட்டது. சினிமாவின் தாக்கமும் இதில்
இப்போது சேர்ந்துள்ளது.
சமகால கச்சேரி பந்தா என்பதை அரியக்குடி இராமானுஜ அய்யங்கார் ஆரம்பித்து
வைக்கிறார். அதைத்தொடர்ந்து பல பிரபல இசைக்கலைஞர்கள் இதை
வளர்த்தெடுத்துள்ளனர். அரியக்குடியின் சிஷ்யர்களுல் ஒருவரான நாராயணசாமி
ஐயர் போன்ரோரின் சமகாலத்தவர் செம்மங்குடி. இப்போது வாழும் கலைஞர்களில்
மூத்த இசைஞர். இவர் தந்திருக்கும் ஒரு நேர்காணல் இன்று இடம் பெறுகிறது.
முக்கியமாக இசையைக் காசுக்கு சொல்லிக்கொடுக்கக்கூடாது என்று ஒரு கருத்தை
இவர் முன்வைக்கிறார். இது கல்வி பற்றி டாக்டர் இராதாகிருஷ்ணன் சொன்ன
கருத்தோடு ஒத்துப்போகிறது!
http://video-thf.blogspot.com/
கண்ணன்
செவி வழிப்புகுந்து, சிந்தையில் உறைந்த பாடகர் அமரர் மகாவித்வான் டாக்டர் செம்மங்குடி சீனிவாசய்யர். இன்று(25/07/2008) அவரது 100வது பிறந்தநாள்.
2003 ஆம் ஆண்டு அக்டோபர் 3 ஆம் தேதி மறைந்த அந்த மேதை, இன்னும் 5 ஆண்டுகள் மட்டும் வாழ்ந்திருப்பாரானால் "வேத நூற்பிராயம் நூறு" என்ற தொண்டரடிப்பொடியாழ்வார் அருளிய பாசுர வரியின்படி 100 வது வயதைத் தொட்டுச் சாதனை படைத்திருப்பார்.
எட்டாம் வயதிலேயே வாய்ப்பாட்டில் நாட்டம் கொண்ட அவர், 9 வது வயதில் தனது தமையனார் வயலின் மேதை செம்மங்குடி நாராயணஸ்வாமி ஐயரிடம் முதலில் பயிற்சி பெற்றார்.
பின்னர் திருவிடைமருதூர் கோட்டு வாத்திய வல்லுநர் சகாராம் ராவிடம் பயிற்சி பெற்றார். 1920 ஆம் ஆண்டு மகாவித்வான் உமையாள்புரம் சாமிநாதய்யரிடம் குருகுலவாசம் செய்தார்.
திருவிடைமருதூரில் பயின்றுவந்த காலத்தில் பிரபல நாகஸ்வர அறிஞர்களின் வாசிப்பைக் கேட்டும், மதுரை புஷ்பவனம், பிடில் கோவிந்தசாமி பிள்ளை போன்ற பெரும் கலைஞர்களின் சங்கீத ஆளுகைகளைக் கேட்டும் அப்படியே அவர்கள் வழங்கிய நுட்பங்களை தம்குரல் வழியில் பாடும் இலாகவத்தைப் பெறலானார்.
கும்பகோணம் வந்தபோது, தம் தமயனாரான வயலின் மேதை செம்மங்குடி நாராயணஸ்வாமி ஐயரிடமே தொடர்ந்து கற்கலானார். இந்தக் காலகட்டத்தில் அன்றாடம் எட்டுமணி நேரம் சாதகம் செய்த வித்வான் அவர்.
நாராயணஸ்வாமி ஐயரிடம் பயில்வதற்குத் தடைகள் ஏற்படவே மனோதர்ம மன்னர் மகாராஜபுரம் விஸ்வநாதய்யரிடம் பயிற்சிபெற ஏற்பாடானது. அந்த நேரத்தில் தான் இவருக்குக் குரலில் குளறுபடி தலைதூக்கி, தொல்லையும், இடைஞ்சலும் தந்தது. இதைத் தமது அபாரமான சாதக பலத்தால் சமாளித்து. சாரீரத்தைப் பொங்கிப்பாயும் பிரவாகம் போல் மாற்றிக் கொண்டு விட்டார்.
நாகஸ்வர பாணியில் அதிதீவிர ஆர்வம் கொண்டவர். அமரர் திருவாவடுதுறை நாகஸ்வர சக்கரவர்த்தி இராஜரத்தினம் பிள்ளையை "இராக ரத்தினம்" என்று சொல்லி, ஏற்றிப் புகழ்ந்து போற்றியவர். இந்த வாத்தியத்திலிருந்து எழுந்துவரும் அனைத்து அழகு வடிவங்களையும் அப்படியே கவர்ந்து தமது சாரீரத்தின் வழியாக வெளியிட்ட சாதகி அவர்.
போன்ற இராகங்களை நாகஸ்வர மேதைகள் எப்படி எப்படி எல்லாம் கற்பனைகள் பொழிந்து, மணிக்கணக்கில் ஜோடிப்பார்களோ அதை விடவும் மேலாக அந்த இராகங்களை ஈடற்ற கற்பனைகளோடும், இணையற்ற ஜோடனைகளோடும் ஆலாபித்து இரசிகர்களை மெய்மறக்கச் செய்த கலைஞர் அவர்.
நீராடும் நேரமாயிருந்தாலும் சரி, உணவு கொள்ளும் வேளையானாலும் சரி ஏதாவது ஒரு இராகத்தைத் துவக்கி ஆலாபிக்க ஆரம்பிப்பார். கையில் எடுத்த உணவுக்கவளம் அப்படியே இருக்கும்! இதைக் கண்ணாரக் கண்டவன் நான். சாப்பிடும்போதும் இவருக்கு ஒரு சிறு "சதஸ்" வேண்டும்!
ஆகியோரிடம் எல்லாம் குருகுலவாசம் செய்திருந்த போதிலும் காயக சிகாமணி "அரியக்குடி" இராமானுஜ ஐயங்காரையே தமது மானசீக குருவாகப் போற்றி வந்தவர்.
என்று மூன்று கட்டங்களாக வகுத்து, ஜோடித்துப்பாடி, மேடைக் கச்சேரிகளுக்கே ஒரு மோஸ்தரை அமைத்து அளித்த ஒரு அபூர்வப்பிறவி இவர் என்று கூறி நெகிழ்ந்து மகிழ்ந்தவர்.
"நான் மறுபிறவி எடுத்தால் அப்போதாவது "அரியக்குடி" ஐயங்கார் மாதிரி பாட வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். நீயும் எனக்காகப் பகவானை நேர்ந்துகொள்!" என என்னிடம் ஒரு தடவை கூறி, தமது உள்ளக்கிடக்கையை வெளியிட்டவர்.
மூன்றும் இடம் பெற்றிருந்தன.
திருவாங்கூர் மன்னர் குடும்பத் தொடர்பு பெற்றிருந்த அவர், ஆஸ்தான வித்வானாகி, பின்னர் ஸ்வாதித்திருநாள் இசைக்கல்லூரி முதல்வராகப் பணியாற்றிய காலத்தில் தமிழகத்தின் பிரபல இசைக்கலைஞர்களை எல்லாம் வரவழைத்து அவர்களை மன்னர் குடும்பத்தாருக்கு அறிமுகப்படுத்தி, தக்க சன்மானங்களையும், மரியாதையும் அளிக்கச் செய்து கெளரவித்தார்.
மகாகவி பாரதியார் பாடல்களைக் கச்சேரிகளில் பெருமெடுப்பில் கணிசமாக வழங்கி, களைபெறச் செய்தவர்களில் "செம்மங்குடி"க்கே முதலிடம் தரவேண்டும்.
ஆகிய படைப்புகளுக்கு நவநவமான மெட்டுகள் அமைத்து, ஸ்வரப்படுத்தி, "சுதேசமித்திரன்" செய்தி ஆசிரியராக இருந்த அடியேனிடம் பிரசுரத்துக்குத் தந்து உதவிய பெருந்தகை இவர்.
நிரம்பப் பெருமையாக உள்ளது.
அரியக்குடி எமக்கு தந்தை, தந்தை, தந்தை தன் மூத்தப்பன் என்று உறவு.
அவரது பாடல்களை முழுமையாய் திரட்ட முடிந்தால் சிறப்பாக இருக்கும்.
இக்கட்டுரை நம் 'என்ன சேதியில்' இடம் பெறுகிறது!
http://news-thf.blogspot.com/2008/07/blog-post_25.html
கண்ணன்