ஆகியன மனிதனை பயமுறுத்தின. அதே வேளை மரங்கள் நிழலையும் கனிகளையும் தந்தன. இப்படித்தான் இறைபக்தி ஏற்பட்டது. அப்பக்தி பரிணமித்து வழிபாட்டு முறைகளாய் எழுந்தது. மரங்கள் மனிதனின் குலக்குறி நம்பிக்கையின் (Totemism)அடையாளமாக விளங்கின. இறைவனென்று கொண்டவற்றுக்குப் படையல்கள், பலிகள் இட்டு வழிபட்டனர். இயற்கை வழிபாடு உருவ வழிபாடாக வளர்ச்சியடைந்து நிலைத்தது. எனினும் நடுகல் வழிபாடு மற்றும் சதிகல் வழிபாடு போன்றவையும் பெரும்பாலான மக்களால் பின்பற்றப்பட்டு வந்தன.
நடுகல் வழிபாட்டின் தோற்றம்:
கற்களை அடையாளமாக நடுவதால் "நடுகல்" எனப்பட்டது. இம்முறை ஒரு வகையில் சிவநெறியில் லிங்கத்தை நடுவது போன்றதாகும். நடுகல் நாட்டுப்புற முறையாகவும், பள்ளிப்படைகோயில் (மன்னர்கள் இறந்த இடத்தில் கல்நட்டு கோயில் எழுப்புதல்) அரசபாணியாகவும் கருதப்பட்டது. சங்க காலத்தில் தன்னால் இயன்றவரையில் போர்புரிந்து உயிர்விட்ட வீரனது உடலைப் புதைத்த இடத்தில் (அ) எரித்த இடத்தில் ஒரு கல்லை நடுவர். அக்கல்லில் அவனது உருவத்தையும், பெயரையும் இன்னபோரில், இவ்வாறு போர்புரிந்து மாண்டான் என்ற விவரத்தையும் பொறிப்பர். இக்கல்லே நடுகல் எனப்படும்.
கற்குவைகளால் மூடப்பட்ட நடுகல், "கற்பதுக்கை" என்னும் பெயரில் அழைக்கப்பட்டது. போரில் ஈடுபடும் வீரர்கள் வெற்றிவாகை சூடி வரவேண்டுமென்று அவர்தம் மனைவிமார்கள் தம் குடி முன்னோரின் நடுகல் முன் அமர்ந்து வழிபட்டனர். நன்னனுடைய மலைகள் மீது இத்தகைய நடுகற்கள் அதிகளவில் இருந்தன. அவ்வழியாகச் சென்ற கூத்தர், பாணர் போன்றோர் யாழ் வாசித்து அத்தகைய நடுகல் வீரர்களை வழிபட்டுச் சென்றனர்.
நடுகல் எடுப்பு விழா:
செங்குட்டுவன் கண்ணகிக்குக் கோயில் எடுத்தமை இதே மரபினதாகும்.
நடுகல் வணக்கத்தின் பொருள்:
"தாய்நாட்டின் பொருட்டு போரிட்டு உயிர்நீத்த வீரத்தமிழனுக்கு நினைவுக்கல்லை நட்டு அவ்வீரனை போற்றுதல்," அவனை சான்றாகக்கொண்டு மற்ற தமிழர் நடக்கமுயலல், அவனது புகழ் உலகம் உள்ளளவும் நிலவுக! என்பனவேயாகும். வீரர்கள் மட்டுமல்லாது, விலங்குகளின் நினைவாகக்கூட நடுகற்கள் நடப்பட்டன. காளைகளின் நினைவாக நடப்பட்ட நடுகற்கள் தும்கூர் (கர்நாடக மாநிலம்) மாவட்டத்தில் அதிகளவில் காணப்படுகின்றன. தமிழகத்தில் நெல்லை மாவட்டம் கங்கை கொண்டானுக்கு அருகிலுள்ள குப்புக்குறிச்சி என்னுமிடத்தில் "பசுக்கூட்டம்" என்றழைக்கப்படும் இத்தகைய நடுகற்கள் காணப்படுகின்றன.
தமிழகத்தின் முதல் நடுகல் கண்டுபிடிப்பு:
எகிப்து நாட்டில் பிரமிடுகள் எவ்வாறு வரலாற்றுச் சின்னங்களாகத் திகழ்கின்றனவோ, அதே போன்று தமிழகத்தில் "நடுகல்" திகழ்கிறது. இவ்வாறு எழுப்பப்பட்ட நடுகல்லை முதலில் கண்டெடுத்தவர் பேரா.சுந்தரம் பிள்ளை. ஆரல்வாய்மொழியை (கன்னியாகுமாரி மாவட்டம்) அடுத்துள்ள கோட்டைக்கரையில் பாண்டிய மன்னன் மாறன்சடையனின் (கி.பி 765-790) காலத்தில் வட்டெழுத்தில் செதுக்கப்பட்ட ஒரு நடுகல்லை பேராசிரியர் கண்டறிந்தார். இரணகீர்த்தி (மாறன் சடையனின் படையைச் சேர்ந்தவன்) என்ற வீரனது நினைவாக நடுகல் நடப்பட்டிருப்பதை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து பல நடுகற்கள் தமிழகம் முழுவதும் வரலாற்றாளர்களால் கண்டறியப்பட்டன.
நடுகல் முறையின் சிறப்புகள்:
போரில் இறந்தவர் அல்லாமல், அறிவிலும் ஒழுக்கத்திலும் மிக்கார் நினைவின் பொருட்டு "கல் எடுத்தலும்" உண்டு. சங்கச் செய்யுள் ஒன்றில் மங்கையின் வீரம் பற்றிக் கூறும் போது, "எந்தை, முன் நடந்த போரில் இறந்துபட்டு கல் ஆனான்" என மங்கையின் கூற்றாகப் புலவர் குறிக்கிறார். "பன்றிகுத்திப்பட்டான் கல்" என்பது கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு நடுகல்லாகும்.
சதிகல் வழிபாடு:
ரிக்வேதத்திலும், அதர்வண வேதத்திலும் "சதி" பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. உடன்கட்டை ஏறும்போது சொல்ல வேண்டிய மந்திரங்களும் இதில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. (ரிக். 10.18.8: அத.28,3.1) இதன் வாயிலாக உடன்கட்டை ஏறுதல் வழக்கத்தின் பழைமையை உணரலாம்.
மன்னர்தம் ஆதரவு:
எனக் குறிக்கப்பட்டன.
பத்தினித் தெய்வ வழிபாடு:
உடன்கட்டை ஏறிய பெண்கள் பத்தினித் தெய்வமாகவும் வணங்கப்பட்டனர். கோவலனை இழந்த கண்ணகி மதுரையை விட்டுப் புறப்பட்டு வைகைக்கரை வழியே ஆவேசமாகச் சென்றாள், பின்னர் வருஷநாடு மலைவழியாக சுருளிமலையின் மேற்குத் தொடர்ச்சியான மங்கலதேவி மலைக்கு வருகிறாள், கண்ணகி, தெய்வமான இடம் இதுவேயாகும். சேரன் செங்குட்டுவன் கண்ணகியின் நினைவாக இவ்விடத்தில் கோயிலை உருவாக்கினான்.
பத்தினித் தெய்வ வழிபாட்டின் பரவல்:
இக்கட்டுரையை வாசித்துவிட்டு இன்று காலை Korean Folk Village சென்ற போது
நடுகல் வழிபாடு கொரியாவில் இருப்பதைக் கண்ணுற்றேன். அதன் முழுப்பின்னணி
என்னவென்று தெரியவில்லை. பலர் தங்கள் வேண்டுதலைச் சின்னக் காகிதத்தில்
எழுதி தோரணமாக நடுகல்லில் கட்டுவதைக் கண்டேன். சோழர் காலத்திற்கு முன்பே,
அதாவது கிபி 4ம் நூற்றாண்டிலேயே இங்கு புத்தமதத் தொடர்பு (இந்தியத்
தொடர்பு) வந்துவிடுகிறது. சோழர்களின் outpost போல் இங்கு 'சொல்லா' என்ற
பகுதி உள்ளது. சோழர் தொடர்பு பற்றி சமீபத்தில் கிம் என்பவர் சென்னையில்
நடந்த ஒரு கருத்தரங்கில் கட்டுரை வாசித்தார். நடுகல் வழிபாட்டுமுறை
இந்தியாவிலிருந்து, குறிப்பாக தமிழகத்திலிருந்து இங்கு வந்திருக்கலாம்.
முதுமக்கள் தாழி எனும் முறையும் இங்கு காணக்கிடைக்கிறது.
கொரிய - இந்தியத் தொடர்பு பற்றி இன்னும் ஆராய நிறைய உள்ளது!
படங்களைக் காணுங்கள்.
கண்ணன்
2008/7/13 Kannan Natarajan <thar...@gmail.com>:
--
"Be the change you wish to see in the world." -Gandhi
மிகவும் சுவாரசியமான கட்டுரை!
இக்கட்டுரையை வாசித்துவிட்டு இன்று காலை Korean Folk Village சென்ற போது
நடுகல் வழிபாடு கொரியாவில் இருப்பதைக் கண்ணுற்றேன். அதன் முழுப்பின்னணில்
மனிதமும்,உலகமும் காப்போம்
வேதங்களில் என்ன இருக்கிறது என்ன இருக்கிறது என்று கூச்சலிடுவோர் இவற்றில் எல்லாம் என்ன மகத்துவம் காண்கிறார்களோ?
நீங்கள் எங்கு இருக்கிறீர்கள்? அமெரிக்காவிலா? அதுதான் இப்படிப் போட்டு
உலுப்புகிறீர்கள்! ஒன்று புரிந்து கொள்ளுங்கள் தமிழகம், மூன்றாம் உலக
நாடான இந்தியாவில் உள்ளது. சமகால தமிழ் அறிஞர்கள் இன்னும் அறிவியல்
பூர்வமாக சிந்திக்கும் பழக்கத்திற்கு வரவில்லை. அவர்களுக்கு நவீன
அறிவியல் இன்னும் புரிபடவில்லை. அதனால்தான் இப்படி கிணற்றுத் தவளைகளாக
உள்நாட்டுக் குழப்பம் செய்து கொண்டு இருக்கிறார்கள். நீங்கள் சொல்வது
சரி, சதிகல் என்பது பெண்வதையின் சின்னம்தான். அது பிற்போக்கானதுதான்.
ஆனால் அந்த வழக்கம் இருந்த காலமென்ன? இப்போதுள்ள காலமென்ன? சதிகல்
தமிழரின் மாட்சி என்றெல்லாம் பேசும் ஒரு தமிழ்ப் பேராசிரியரிடம் போய்
உங்கள் பெண்ணின் கணவர் இறந்துவிட்டால் உங்கள் பெண்ணை உடன்கட்டை ஏறச்
சம்மதிப்பீர்களா? என்று கேட்டுப்பாருங்கள்!! :-) சங்கம் என்பது மிகப்
பழங்காலம். வேதகாலம் என்பது மிக, மிகப் பழம் காலம். அந்தந்த காலத்து
நாகரீகத்தை அந்தந்த கால அளவோடு பார்த்துப் புரிந்து கொள்ள வேண்டும்.
வள்ளுவரை பெண்ணியல்வாதிகள் போட்டு புடைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
பாவம் கிழவர்!
கண்ணன்
2008/7/14 Srivatsan R <vaid...@gmail.com>:
சங்கப்பாடல்கள் வேதமில்லை. அவை காலப்படக்காட்சிகள்.
சங்கத்தமிழ் மாலை என்று பாடும் ஆண்டாளின் திருப்பாவை 'வேதம்
அனைத்திற்கும் வித்தாகி விடுகிறது' !!
அது எப்படி? ;-)
கண்ணன்
சங்கத்தமிழ் மாலை என்று பாடும் ஆண்டாளின் திருப்பாவை 'வேதம்
அனைத்திற்கும் வித்தாகி விடுகிறது' !!
அது எப்படி? ;-)
சதிகல்
தமிழரின் மாட்சி என்றெல்லாம் பேசும் ஒரு தமிழ்ப் பேராசிரியரிடம் போய்
உங்கள் பெண்ணின் கணவர் இறந்துவிட்டால் உங்கள் பெண்ணை உடன்கட்டை ஏறச்
சம்மதிப்பீர்களா? என்று கேட்டுப்பாருங்கள்!! :-)
இதற்கு சான்றுகள் இருந்தால் தழை செய்து இங்கு இடுங்கள் ... இந்த சிங்கள
நாச்சியார் கோயில் பற்றி பொன்னியின் செல்வனில் அமரர் கல்கி, மிகவும்
சுவையான முறையில், ஊமை நாச்சியார் அல்லது மந்தாகினி தேவி என்ற ஒரு
அற்புதமான கற்பனை பாத்திரத்தை உருவாக்கினார்.
னண்பர்களே எப்பிடி 'ந' டைப் பண்ணனும்?ந - நான் காபி பேஸ்ட் பண்ணினேன்.நன்றி
திருமணத்தில் புரோகிதர்கள் அர்த்தம் தெரியாமல் ஓதும் மந்த்ரங்களுக்கு ஒரு உதாரணம் சொல்கிறேன்
அத்தகைய ஒரு மந்த்ரத்தைப் பாருங்கள்.
"தாம்பூஷன் சிவதமாம் ஏவயஸ்வ
யஸ்யாம் பீஜம் மனுஷ்யா பவந்த்தீ
யான ஊரு உஷதி விஸ்ரயாதை
யஸ்யா முஷந்தஹா ப்ஷரே பஷேபம்..."
...இது வேதத்தில் சொல்லப்பட்ட மந்த்ரம். இதை கல்யாண மேடையிலே பெண்ணையும், மாப்பிள்ளையையும் உட்கார்த்தி வைத்து சத்தமாக சொல்கிறார் புரோகிதர். இந்த மந்த்ரத்தின் அர்த்தம் புரிந்தால்... அந்த புரோகிதரை நீங்கள் வாத்சாயணர் என்று தான் அழைப்பீர்கள்.
அப்படி என்ன சொல்கிறது இந்த மந்த்ரம்? நான் அவளை கட்டிப்பிடிப்பேன். அப்போது எங்களது அந்தரங்க பாகங்களை சரியாக பொருந்தச் செய்யுமாறு... தேவதைகளே நீங்கள் உதவ வேண்டும்.
இந்த மந்த்ரத்தின் அர்த்தத்தை இதைவிட நாகரீகமாக சொல்ல முடியாது. விளக்கமாக நான் சொல்லியிருப்பேன் என்றால்... என் மீதும் என் வயதின் மீதும் உங்களுக்கு இருக்கும் மரியாதை போய்விடும். அப்படிப்பட்ட மந்த்ரம் அது.
என் இஷ்டமித்ரர் ஒருவருடைய மகளின் கல்யாணம் சமீபத்தில் நடந்தது. அந்த பெண் மகாபுத்திசாலி. சமஸ்கிருதம் பயின்றவள் அவள் மணமேடையிலே உட்கார்ந்திருக்கும் போது...
புரோகிதர் இந்த மந்த்ரத்தை உரக்கச் சொல்ல...
"ஸ்வாமீ... நிறுத்துங்கோ" என்றாள் அவள். புரோகிதர் வாயடைத்து விட்டார்.
"இதுக்கு என்ன அர்த்தம் தெரியுமோ?... பொண்ணும் மாப்ளையும் துணியில்லாம செய்யுற காரியத்தை... நீங்க பல பேர் முன்னாடி சொல்றேளே..."
" புரோகிதர் அதன்பிறகு அந்த மந்த்ரத்தை சொல்லவில்லை. இதை ஏன் சொல்கிறேன் என்றால், புரோகிதர்கள் சடங்குகள் என்ற பெயரில் இன்ன அர்த்தம் என்றே தெரியாமல்... பல மந்த்ரங்களை உச்சரித்து வருகிறார்கள் என்பதை சுட்டிக் காட்டத்தான்.
இதுபோல் இன்னொரு மந்த்ரம்
"விஷ்ணுர் யோனி கர்ப்பயது
தொஷ்டா ரூபானி பீமிசது
ஆசிஞ்சது ப்ரஜாபதி
தாதா கர்ப்பந்தாது..."
இதன் அர்த்தம் இன்னும் ஆபாசம்!
`விஷ்ணுர் யோனி கர்ப்பயது...' எனத் தொடங்கும் இந்த மந்த்ரத்தின் அர்த்தம்தான் என்ன?
பெண்ணானவளின் அந்தரங்க பாகம் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது.
யோனி, மத்யமம், உபஸ்தம் என மூன்றாகப் பிரிக்கப்பட்டிருக்கும். இதன் ஒவ்வொரு பகுதியிலும் ஒரு தேவதை உட்கார்ந்திருக்கிறது.
அதாவது, விஷ்ணு, தொஷ்டா, தாதா ஆகிய தேவதைகள் இம்மூன்று பாகங்களிலும் உட்கார்ந்திருக்கிறார்கள். இவர்கள்தான்... ஆணும், பெண்ணும் தேக ஸம்பந்தம் கொள்ளும்போது எல்லாம் சரியாக நடக்கிறதா என்பதை கண்காணிக்கிறார்கள். அதாவது... நாம் தேக ஸம்பந்தம் கொள்வதை கூட விஷ்ணு உள்ளிட்ட தேவதைகள் அருகில் இருந்து, இன்னும் சொல்லப்போனால் அந்த இடத்திலேயே இருந்து கவனிக்கிறார்கள்.
இவ்வாறு கவனிக்கும் தேவதைகள் விஷ்ணு, தொஷ்டா, தாதா ஆகிய சக்திகள் அவளுக்கு கர்ப்பத்தை உண்டாக்க அருள்புரிய வேண்டும்... என்கிறது இந்த மந்த்ரம். நாம் பெண் என்றால் தெய்வம் என்கிறோம். ஆனால், பெண்ணின் ஓர் உறுப்பிலேயே மூன்று தெய்வங்கள் எல்லை பிரித்து உட்கார்ந்து கொண்டிருக்கின்றன என்கிறது இந்த மந்த்ரம்.
இதை நீங்கள் பெண்மையின் உயர்வாகவே எடுத்துக் கொள்ளலாம். `அந்தரங்கம்' எல்லாம் `அந்த ரங்கன் அறிவான்' எனச் சொல்லி வைத்ததற்கு முதல் முதன் முன்னோடியாக விளங்கியிருக்கிறது என்றும் வைத்துக் கொள்ளலாம்.
இங்கே முக்கியமானதொன்று... வேத திருமணங்கள் பெரும்பாலும் கர்ப்பாதானம் என்றே அழைக்கப்பட்டிருக்கின்றன. விவாஹம் என்றால் தூக்கிக் கொண்டு ஓடுதல் என்றும், பாணிக்ரஹணம் என்றால் கைப்பிடித்தல்என்றும் பார்த்திருக்கிறோம்.
இவையெல்லாம் எதற்காக? கர்ப்பாதானம் செய்து... குழந்தைகள் பெற்று மகிழ்ந்து வாழத்தானே. அதனால்தான் திருமணத்தை கர்ப்பாதானம் என்றே குறிப்பிட்டது வேதம். இதற்காகவே கணவனுக்கும், மனைவிக்கும் மணமேடையில் நிகழும் உரையாடலாக வேதம் இப்படி பதிவு செய்திருக்கிறது.
அவள் கேட்கிறாள்.
``மணாளா... நீங்கள் எனக்கு புருஷனாக கிடைத்தது எனது அதிர்ஷ்டம். இந்த கன்னி செய்த புண்ணியத்தால் உன்னை கைப்பிடித்தேன். நீ சம்பாதிக்கும் செல்வத்தையெல்லாம் வீட்டுக்கே கொண்டு வரவேண்டும்.
அதுபோல உனது இந்த்ரிய சந்தோஷத்தையும் நீ என்னிடம் மட்டுமே பகிர்ந்துகொள்ள வேண்டும். வேறு வேறு பெண்களை நாடி நீ போகக்கூடாது... என்ன சரியா?'' என்கிறாள்.
அவன் இதற்கு பதில் சொல்கிறான்.
``நீ பெண் என்பதால் தெளிவாகவே இருக்கிறாய். நான் ஈட்டும் பொருள் அனைத்தையும் உன்னிடம்தான் ஒப்படைப்பேன்.
அதேநேரம்...
இந்த்ரிய சந்தோஷத்தை உன்னுடன்தான் அனுபவிக்கவேண்டும் என்று நீ என்னை கட்டளையிடக் கூடாது. நீ வேண்டுமானால் அதற்கான அழகோடு எப்போதும் இரு. உன் அழகை நீ காப்பாற்றி வைத்திருந்தால் நான் உன்னை விட்டு விலகிச் செல்லவேண்டிய சந்தர்ப்பம் நேராது...'' என்கிறான் அவன்.
இதை தான்...
``உதுத்தரம் மாரோஹந்தி
முர்த்தானம் பத்யு ராரோஹ''
கல்யாணம் செய்து போன பெண்... கணவனது தலையில் ஏறி உட்கார்ந்து கொள்ளவேண்டும். அதாவது... அவனது சிந்தனைகளில் எல்லாம் இவளே நிரம்பி இருக்கவேண்டும். அவனது மூளையில் இவளே முழுதும் இருக்கவேண்டும். அப்போது அவன் பிற பெண்ணை நாடிச் செல்லமாட்டான் அல்லவா? என்கிறது வேதம்.
கணவன் மூளைக்குள் தன்னை நிரப்பவேண்டும் என்றால் இவள் எப்படி குடும்பம் நடத்தவேண்டும்?
``ஸ்த்ரீனாஞ்ச பதிதேவானாம்
தஷ்ஸ்ருஹா அனுகூலதா தத்பந்துஹீ
அனுமிருத்யஸ்ஸ நித்யம் தத்வத தாரணம்
சம்மார்ஜன அனுரே பாப்யாம்
க்ரஹ மண்டல வர்த்தனாஹி ஆத்மானும்
பூஷ்ஹேஸ்யதா''
கைப்பிடித்த நொடியிலிருந்து அவன்தான் உனக்கு தெய்வம். அவனை விட்டுவிட்டு வெளியே நீ எங்கேயும் போகக்கூடாது. வென்னீர் போடு, கால் பிடி, கைபிடி, தூங்கினால் விசிறி விடு... இப்படி செய்வதால்தான் அவன் மூளையில் நீ குடியேற முடியும்.
சரியப்பா... அவள் இப்படித்தான் வாழ்கிறாள்... கணவனின் தலையில் ஏறி உட்கார்ந்திருக்கிறாள். சந்தோஷமாக வாழ்க்கை போகிறது.
ஒருநாள்... வயதானதாலோ, தேகப் பிரச்சினைகளாலோ கணவன் தலை சாய்ந்து விடுகிறான். அதாவது மரணம் சம்பவிக்கிறது. குடும்பமே அழுகிறது. குழந்தைகள் ஒன்றும் தெரியாமல் தன் பிதாவின்மீது விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
தன்மேல் பிரேமம் வைத்தவன், இப்படி பிரேதமாகக் கிடக்கிறானே என அந்த இளம்பெண் கண்களிலிருந்து நதிகளை பிரசவித்துக் கொண்டிருக்கிற நேரத்தில்... அவளுக்கு என்ன தேவை?
ஆறுதல் மொழிகள்தானே... ``கவலைப்படாதேம்மா... அவன் விதி அவனை கொண்டு போய்விட்டது. உன்னை நம்பி குழந்தைகள் இருக்கிறார்கள். பாவம், அவர்களை நீ தான் நல்லபடியாக வளர்க்கவேண்டும்... அழு... அழுதுவிட்டு உன் குழந்தைகளோடு சந்தோஷமாக இரு...''
- இப்படித்தானே சொல்லவேண்டும்?
அவளுக்கு வேதம் ஒரு மொழியை வழங்குகிறது பாருங்கள்.
`பத்யுர் ஜனித்வம் அபி சம்ப பூவ...'
இப்படி தொடங்கும் மந்த்ரத்துக்கு என்ன அர்த்தம்?
``உன் ஆம்படையான் இறந்துவிட்டான். பாவம்... இனி உன்னை யார் காப்பாற்றுவது? இனி நீ அவன் வீட்டிலேயே இருந்தால் பாரம்தானே? சுமைதானே? உன்னை ஆம்படையான் குடும்பத்தினர் எப்படி தாங்குவார்கள்?
அதனால்...
அதனால்...?
ஆமாம்மா புகுந்த வீட்டுக்கு பாரமாக கண்ணெல்லாம் ஈரமாக இனிமேலும் நீ வாழவேண்டுமா? அதனால் உன் கணவனோட நீயும் போய்விடேன்.
அவன் சிதையிலேயே உன்னையும் வைத்து எரித்துவிடுகிறோம் சரியா? அவளாக பற்றவைத்துக் கொள்வதை தீக்குளித்தல் என்கிறோம்.
வேதம் அவளை தீக்குளிப்பாட்டியது.
கணவனை இழந்த கைம்பெண்ணுக்கு இதுதான் கடைசி வழியானது. இந்த சதிச் செயல்தான் சுருக்கமாக 'சதி' என அழைக்கப்பட்டது. இதை எதிர்த்துதான் ராஜா ராம்மோகன்ராய் போன்றவர்கள் பிற்காலங்களில் போராடினார்கள். ஏன்... சில வருடங்கள் முன்புகூட ராஜஸ்தான் மாநிலத்தில் ரூப்கன்வர் என்ற ஸ்த்ரீயை கணவனை இழந்தவுடன் தீவைத்து தீர்த்துக் கட்டியிருக்கிறார்கள்.
வேதத்தீயின் வெளிச்சம் காலங்காலமாக கனலடித்துக் கொண்டிருப்பதற்கு இது ஓர் உதாரணம்.
அவர்தான் நான் அக்னி ஆதானம் செய்து கொள்ளும்போது முன்னிலை வகித்தார்.
சுமார் 12 ஆண்டுகள் ஆகிவிட்டன. அப்போதே நடத்திக்கொண்டு இருந்தவரிடம் அவர்
சில விஷயங்களை மாற்றி சொல்ல சிறு உரசல்கள் ஏற்பட்டன. இதைப்பற்றி
விசாரித்தபோது அவர் பல விஷயங்க்ள் கற்று இருந்தாலும் இப்போது நான்கு
வருஷங்களாக தப்பு தப்பாக சொல்கிறார். வயதில் பெரியவர்; ஆழமாக பல
விஷயங்களை ஆராய்ந்தவர்; இவர் முன்னே சொன்னதையே இப்போது மாற்றி
சொல்கிறார். என்ன செய்வது என்று புரியவில்லை என்றார்கள்.
அதற்குப்பின் சுமார் ஒரு வருடம் கழிந்து சென்னை சென்ற போது அவரை பார்க்க
போய் இருந்தேன். அவர் மனைவி தவறிப்போயிருந்தார். அதற்காக
விசாரிக்கப்போனோம். குப்பையா தெருவில் தொகுப்பு வீடுகளில் கீழ் தளத்தில்
ஒரு சிறு வீடு. அவருடன் பேசிக்கொண்டு இருந்தபோது சில விஷயங்கள் தெளிவாக
தெரிந்தன. புருஷ ஸூக்தத்தை மேற்கோள் காட்ட ஆரம்பித்தவர் சில
வரிகளுக்குப்பின் தொடர முடியாமல் கஷ்டப்பட்டார். வேதம் கற்றவர்களுக்கு
தெரியும் அது எவ்வளவு முக்கியமானதாக போற்றப்படுகிறது என்று - குறிப்பாக
வைணவர்கள்.
மருத்துவ துறையில் இருக்கும் எனக்கு தெளிவாகவே புரிந்தது இது வயதானதின்
கோளாறு என்று. (senile dementia)
சில ஆண்டுகளுக்கு முன் அவர் அரசு பணியில் அமர்த்தப்பட்டதாக செய்தி
படித்தேன். அதற்குப்பின் நக்கீரனில் தொடர் எழுதுவதாகவும் அறிந்தேன். இதை
குறித்து பலர் வருத்தப்பட்டு என்னிடம் பேசினார்கள்.
ஒரே விஷயத்தை சொல்லும் விதத்தில் அதை உயர்த்தவும் உயர்த்தலாம்
தாழ்த்தவும் தாழ்த்தலாம். தாத்தாச்சாரியார் எழுதுவதாக சொல்லப்படுகிற
விஷயங்களை அவரேதான் எழுதுகிறாரா இல்லை வேறு யாருமா என்று சந்தேகம்
இப்போது தீர்ந்தது. (பல ஆண்டுகளாகவே அவர் சொல்ல சொல்ல மற்றவர் -
உதவியாளர் - எழுதும் நிலைதான்.) பொருளை அவரை சொல்லச்சொல்லி வேறு யாரோ
எழுதுவதாகவே நினைக்கிறேன். பதிவை படித்தபோது திருமண சமாசாரத்தில்
தென்படுகிற பிழைகளே இதை காட்டிக்கொடுத்துவிட்டன.
வேத மந்திர பொருளில் பிழைகள் இருக்கின்றனவா என்பதை மற்றவர்கள்தான் சொல்ல
வேண்டும். இருப்பதாக நான் நினைக்கவில்லை.
ஆனால் இதில் என்ன ஆட்சேபிக்க இருக்கிறது?
//திருமணத்தில் புரோகிதர்கள் அர்த்தம் தெரியாமல் ஓதும் மந்த்ரங்களுக்கு
ஒரு உதாரணம் சொல்கிறேன்//
திருமணம் என்ன பல நிகழச்சிகளில் தெரியாமல்தான் சொல்கிறார்கள். அதற்காக
அவற்றுக்கு சக்தி இல்லாமல் போகாது. சந்தேகம் இருந்தால் தெரியாத மொழி
ஒன்றில் சில கெட்ட வார்த்தைகளை பேசக்கற்றுக்கொண்டு அந்த மொழி
தெரிந்தவரிடம் சொல்லிப்பாருங்கள்!
//இவ்வாறு கவனிக்கும் தேவதைகள் விஷ்ணு, தொஷ்டா, தாதா ஆகிய சக்திகள்
அவளுக்கு கர்ப்பத்தை உண்டாக்க அருள்புரிய வேண்டும்...//
இதில் என்ன பிரச்சினை? தேவதைகள் மட்டுமா அங்கு இருக்கின்றன?
கோடிக்கணக்கான பாக்டீரியாக்கள் கூடத்தான் இருக்கின்றன. இது அறிவியல்
தெரிந்த அனைவருக்குமே தெரிய வேண்டியது. அதைப்பத்தி யாராவது கவலை
கொள்கிறார்களா? தேவதை என்கிற இயற்கை சக்தி அங்கு இருப்பதில் என்ன
ஆட்சேபனை?
//இங்கே முக்கியமானதொன்று... வேத திருமணங்கள் பெரும்பாலும் கர்ப்பாதானம்
என்றே அழைக்கப்பட்டிருக்கின்றன. .... பாணிக்ரஹணம் என்றால்
கைப்பிடித்தல்என்றும் பார்த்திருக்கிறோம்.//
இங்கேதான் எனக்கு யார் எழுதினார்கள் என்று சற்று புரிந்துபோயிற்று.
திருமணத்தில் சப்தபதிதான் முக்கியம். கர்பாதானம் என்பது வீட்டுக்கு
சென்று 4 நாட்கள் ஹோமங்கள் செய்து பின்னால் நாள் குறித்து செய்வது.
http://anmikam4dumbme.blogspot.com/2008/07/blog-post_21.html
தாத்தாச்சாரியார் சுய நினைவில் இருந்தால் இதை தப்பாக சொல்ல வாய்ப்பே இல்லை.
//"ஸ்வாமீ... நிறுத்துங்கோ" என்றாள் அவள். //
இந்த பெண் இதைப்பற்றி கவலை கொள்வதாக இருந்தால் வீட்டில் நடை பெறும் இந்த
கர்மாவை வீட்டில் வைத்துக்கொண்டு இருக்க வேண்டும்.
-தொடர்ந்தாலும் தொடரலாம்
2008/7/28 இரவா <vasude...@gmail.com>:
> அக்னிகோத்ரம் தத்தாச்சாரி நக்கீரனில் எழுதிய கட்டுரையிலிருந்து....
இரவா தொடர்ந்து அனுப்பிக்கொண்டு இருக்கிறார். அவையெல்லாம்
பிரச்சனைக்குரிய விஷயங்கள். பேசினால் பேசிக்கொண்டே இருக்கலாம்.
அவரது தமிழ் பற்றின் மீது எள்ளவு சந்தேகமும் இல்லை. பாரதியின் மீது
உயிரையே வைத்திருந்த பாரதிதாசன்தான் பார்ப்பன எதிர்ப்பிலும் தீவிரமாக
இருந்தார். ஆனால், பாரதியைப் பார்ப்பான் என்று யாரும் திட்டுவதை அவர்
என்றும் பொருத்ததில்லை. இரவாவின் மடல்கள் தமிழ் அக்கறை கொண்டவையாக
இருந்தாலும் சமூக அக்கறை கொண்டவையாக இருக்கவில்லை. எந்தவொரு தனிமனிதனின்
செயல்களையும் வைத்து ஒரு சமூகத்தை இழிவு செய்தல் கூடாது. காஞ்சி
ஆச்சார்யரை வைத்து அச்சமூகத்தை எடை போட முயலும் அவர் விஷ்ணு சித்தரை
வைத்தோ விப்ரநாராயணரை வைத்தோ எடை போடுவதில்லை. பெரியாருக்கு பல நூறு
வருஷங்களுக்கு முன்பே, தலித் இயக்கம் தோற்றமுற பல நூறு ஆண்டுகளுக்கு
முன்பே சமூகத்தில் தாழ்த்தப்பட்டோருக்காகக் குரல் கொடுத்த அந்தத்
தொண்டரடிப்பொடி ஆழ்வார் (விப்ரநாராயணன்) ஒரு அக்னிஹோத்ரிதானே! ஏன் அவரை
முன் உதாரணம் காட்டுவதில்லை. இவ்வளவு பேசும் பகுத்தறிவாதிகள் ஆண்டாளின்
ஒரு பாசுரத்திற்கு முன் நிற்கமுடியுமா? ஒரு பெண் பேசும் பேச்சா அது?
அதுவும் பிராமணப்பெண் பேசும் பேச்சா அது? முடியாது..ஏனெனில், இவர்களுக்கு
நோக்கில் தெளிவில்லை.
உள்ளது ஒளி உண்டாகில் வாக்கினில் ஒளி உண்டாகும்.
உள்ளத்து ஒளி பெருக மின்தமிழ் உதவட்டும்.
கண்ணன்
If the entire body is viewed as a seat of Divine Being, genital parts
are also a part of it.. The meaning of the Mantra is NOT what the
article claims - "Gods supervising the sexual union".. but it
indicates that the Yoni endowed with its Creative Power is indeed is
the seat of the Devatas. It is such a lofty poetic vision, that is
to be appreciated, not to be scorned upon..
> அதே மந்திரங்களை தமிழ்ப்படுத்தி திருமணத்தின் போது உரக்க சொல்ல இயலுமானால்
> நீங்கள் சொல்வது ஏற்கலாம்.
>
பொங்கிய பாற்கடல் பள்ளிகொள் வானைப்
புணர்வதோ ராசயி னால்,என்
கொங்கை கிளர்ந்து குமைத்துக் குதுகலித்
தாவியை யாகுலஞ் செய்யும்,
அங்குயி லே.உனக் கென்ன மறைந்துறைவு
ஆழியும் சங்குமொண் தண்டும்,
தங்கிய கையவ னைவரக் கூவில்நீ,
சாலத் தருமம் பெறுதி.
இது கல்யாண வீட்டிலல்ல, கோயிலில் ஓதப்படுகிறது. (ஆண்டாள் - நாச்சியார் திருமொழி)
சமகாலத்தமிழர்கள் ஏனிப்படி விக்டோரியன் விழுமியங்களைத் தாங்கிக் கொண்டு
அல்லாடுகிறார்கள்?
கண்ணன்
2008/7/30 Narayanan Kannan <nka...@gmail.com>:
>
> சமகாலத்தமிழர்கள் ஏனிப்படி விக்டோரியன் விழுமியங்களைத் தாங்கிக் கொண்டு
> அல்லாடுகிறார்கள்?
--
நாங்க ஆண்டாளையும் குறை சொல்லவில்லை, வேத மந்திரங்களையும் குறை சொல்லவில்லை.
ஆண்டாள் என்றவுடன் "பெண்" என்றுதான் உடலை வைத்துப் பார்க்கிறோம். அவளோர்
அதி உன்னத ஆத்மா என்று பார்க்கத்தெரியவில்லை.
எல்லா ஆத்மாக்களுக்கும் பரம புருஷன் ஸ்ரீமன் நாராயணனே. அவனுடன் கூடுவதே
நமது லட்சியம். அவள் புணர்ச்சி, கூடல் என்று சொல்வதெல்லாம் இதையே.
இந்தப் பயணத்தின் முதல் புரிதல் "நாம்" யார் என்று அறிவதே. நாம் ஆன்மா
என்று உணர்ந்துவிட்டால் ஆண்டாளின் அத்தனை பாடலும் வெறும்
"சங்கத்தமிழிலிருந்து" வேதமாக மாறுவது புரியும்!
புணர்ச்சி என்பதன் நேரடி அர்த்தம் கூட புனிதம் கெட்ட விஷயமல்ல.
விக்டோரியன், செமித்திய விழுமியங்களின் உள்வாங்கலால் வரும் மயக்கமது.
14ம் நூற்றாண்டிற்கு முன்வரை தமிழக விழுமியங்கள் வேறானவை. மீனாட்சி
கோயில் சிற்பங்களை அரைநிர்வாணமென்றான் வெள்ளையன், நான் சொன்னேன் அது
இந்தியாவின் (உஷ்ணப்பிரதேசத்து) இயற்கை என்று. காந்தி வெறும் வேஷ்டியுடன்
இங்கிலாந்து போனார், அவரை அரைநிர்வாணப் பக்கிரி என்றான் சர்ச்சில்.
அப்படியெனில் இந்தியா எப்போதும் அரைநிர்வாணத்திலேயே நிற்கிறது என்று
பொருள்!
கண்ணன்
இதை ஆன்மீகம், அறிவியல் என இரண்டும் கொண்டு விளக்கவியலும்.
பரிணாமக் கோட்பாட்டின் அடிப்படையே உயிர் இனப்பெருக்கத்தில்தான் உள்ளது.
உயிர்கள் "வாழத்தான்" இருக்கின்றன. Selfish Gene கோட்பாடும் இந்த சுய
விரிவாக்கலை அடிப்படையாகக் கொண்டே அமைகிறது. எல்லா உயிர்களும்
'இச்சை'யினால் உந்தப்பட்டே வாழ்கின்றன. இது மறுதலிக்க முடியாத ஆதார விதி.
ஆன்மீகத்தின் படி பிரளயகளேபரத்தில் ரூபமற்று, குணமற்றுக் கிடக்கும்
ஜீவன்களை உத்தாரணம் பண்ணத் திருவுள்ளம் கொண்டு இறைவன் சிருஷ்டி, ஸ்திதி,
சம்காரங்களை ஆரம்பிக்கிறான். நீங்கள் முன்பு சுட்டியது போல் இதுவொரு
விளையாட்டு. இந்த விளையாட்டில் ஜீவன் வென்றுவிட்டால் முக்தி. தோற்றால்
மீண்டுமொரு பிறவி. இங்கும் 'இச்சை' அடிப்படையாக அமைகிறது.
கருத்தரிப்பதின் மூலமே ஜீவனுக்கு கர்மவினைகள் களைய ஓர் ஆதாரம்
கிடைக்கிறது. பிறவிப் பெருங்கடல் இனவிருத்தி எனும் சிறுதுளிகளால் ஆனதே.
எனவே கர்பாதாந மந்த்ரமென்று அதைச் சொல்வது சாலப்பொருந்தும்.
//இக் குழுமத்தில் இணைந்து கொச்சைப் படுத்தும் கலையை நன்கு அறிந்து கொண்டேன்.//
மற்றபடி இதைத் தவறாகக் கொள்ள வேண்டாம். எறியும் கல் வீடு கட்ட உதவும்.
எல்லாமே மேலும் முன்னேற ஓர் வாய்ப்பு. கற்றது கைமண் அளவுதானே. பாருங்கள்
இதனால் எத்தனை பேர் ஞான ஒளி ஏற்றி இருக்கிறீர்கள். இரவாவின் நோவு
என்னவென்று தெரியவில்லை. அவர் இந்த தாத்தாசார்யாரை மின்னாக்கம்
செய்வதற்குப் பதில் வேறு உபயோகமான நூல்களை மின்னாக்கம் செய்திருக்கலாம்.
டாக்டர் சார் சொன்னபடி ஏதோ வயசான பெரியவர். முதுமையில் உளறுகிறார் என்று
எடுத்துக் கொள்ளாமல்...ம்ம்ம்
கண்ணன்
>But so is the Sangam literature,
இது மெய்பிக்க முடியாதது.அல்குல் என்பதற்கு பொது இலக்கியத்தில் ஒரு பொருள். மருத்துவ இலக்கியத்தில் ஒரு பொருள் என்பது ஏற்கனவே மின்தமிழில் வாதிடப்பட்டது
வாங்க, வாங்க ஹரிகிருஷ்ணன்! முதல் கிளப்பலே தூள் :-)
2008/7/30 Hari Krishnan <hari.har...@gmail.com>:
>
> சரி போகட்டும். "பூந்துகில்சேர் அல்குல் காமர்எழில் விழலுடுத்து" அப்படின்னு
> திவ்யப் பிரபந்தம் பேசுகிறது. (கண்ணரே.. இடம் மறந்து பூட்ச்சி.. யார்
> வாய்மொழி இது) அல்குலைச் சுற்றிலும் பூந்துகில் உடுத்தப்பட்டிருக்கிறது என்று
> இந்த வரி சொல்லுகிறது. என்னாங்க, மென்மையான துணியை எந்த அல்குலைச் சுற்றி
> உடுத்துவாங்க?
இரண்டு ஆழ்வார்களுக்குத்தான் இந்த தைர்யமுண்டு. ஒன்று முதல்தாய் சடகோபன்.
இரண்டு பரகால நாயகி திருமங்கை ஆழ்வார். இதில் முதலில் சொன்னது சாது.
இரண்டாவது வம்புக்காரி ;-)
முதல் நாயகி பெருமாளின் அல்குலைப் பார்ப்பதாகச் சொல்கிறது (இங்கு
நிச்சயம் இடை என்பது உறுதியாகிறது) இரண்டாவது பெருமாள் தன் அல்குலைப்
பார்ப்பதாகச் சொல்கிறது. இந்தக் காலத்துப் பெண்கள் போல் கொஞ்சம் ஸ்டைலாக
உடை உடுத்தியிருப்பாள் போலிருக்கிறது, இடை தெரிய! ;-)
பீடுடை நான்முக னைப்படைத் தானுக்கு,
மாடுடை வையம் அளந்த மணாளற்கு,
நாடுடை மன்னர்க்குத் தூதுசெல் நம்பிக்கு,
என் பாடுடை அல்குல் இழந்தது பண்பே.
இதுவும் திருவாய்மொழியே!
சபை களை கட்டத் தொடங்கிவிட்டது!
கண்ணன்
கலக்கப் போவது யாரு!! நீதான் :-)
வாங்க, வாங்க ஹரிகிருஷ்ணன்! முதல் கிளப்பலே தூள் :-)
இரண்டு ஆழ்வார்களுக்குத்தான் இந்த தைர்யமுண்டு. ஒன்று முதல்தாய் சடகோபன்.
இரண்டு பரகால நாயகி திருமங்கை ஆழ்வார். இதில் முதலில் சொன்னது சாது.
இரண்டாவது வம்புக்காரி ;-)
முதல் நாயகி பெருமாளின் அல்குலைப் பார்ப்பதாகச் சொல்கிறது (இங்கு
நிச்சயம் இடை என்பது உறுதியாகிறது)
சபை களை கட்டத் தொடங்கிவிட்டது!
என் முதல் கேள்வி-
சதி கல்லுக்கும் தாதாசார்யருக்கும் என்ன தொடர்பு?
மந்த்ரத்தின் இரண்டாம் அடியில் 'தொஷ்டா' என்றிருப்பது தவறு; 'த்வஷ்டா'
என்பதே சரி.
கையுள்நன் முகம்வைக்கும் நையுமென்று
அன்னைய ரும்முனிதிர்,
மைகொள் மாடத் திருக்குறுங்குடி
நம்பியை நான்கண்டபின்,
செய்யதாமரைக் கண்ணு மல்குலும்
சிற்றிடை யும்வடிவும்,
மொய்யநீள்குழல் தாழ்ந்த தோள்களும்
பாவியேன் முன்னிற்குமே. 5.5.8
நீங்க்ள் இந்த நம்பியைச் சேவித்துண்டோ? மகா அழகு!
இந்தத் திருவாய்மொழிக்கு உரை சொல்லும் புருஷோத்தம நாயுடு:
அல்குல்-அரையின் கீழுள்ள உறுப்பு. இருபாலர்க்கும் பொதுவானது என்று
எழுதுகிறார்.
ஆனால், ஆச்சார்ய உரையில் அல்குல் என்பதை 'இடை' என்றே பயன்படுத்துகின்றனர்.
அல்குல் neutral என்பது எனக்குப் புதிது. இடையெனும் போது பொருந்துவது
ஆண்குறிக்குப் பொருந்துமா?
இதுபோலுள்ள வேறு பாடல்கள் உண்டா?
கண்ணன்
On 7/30/08, Hari Krishnan <hari.har...@gmail.com> wrote:கையுள்நன் முகம்வைக்கும் நையுமென்று
> > முதல் நாயகி பெருமாளின் அல்குலைப் பார்ப்பதாகச் சொல்கிறது (இங்கு
> > நிச்சயம் இடை என்பது உறுதியாகிறது)
>
> இந்தப் பாடல் எது? கொஞ்சம் சுட்டி உதவறது. மிக முக்கியமான clinching
> evidence.
அன்னைய ரும்முனிதிர்,
மைகொள் மாடத் திருக்குறுங்குடி
நம்பியை நான்கண்டபின்,
செய்யதாமரைக் கண்ணு மல்குலும்
சிற்றிடை யும்வடிவும்,
மொய்யநீள்குழல் தாழ்ந்த தோள்களும்
பாவியேன் முன்னிற்குமே. 5.5.8
நீங்க்ள் இந்த நம்பியைச் சேவித்துண்டோ? மகா அழகு!
இந்தத் திருவாய்மொழிக்கு உரை சொல்லும் புருஷோத்தம நாயுடு:
அல்குல்-அரையின் கீழுள்ள உறுப்பு. இருபாலர்க்கும் பொதுவானது என்று
எழுதுகிறார்.
ஆனால், ஆச்சார்ய உரையில் அல்குல் என்பதை 'இடை' என்றே பயன்படுத்துகின்றனர்.
அல்குல் neutral என்பது எனக்குப் புதிது. இடையெனும் போது பொருந்துவது
ஆண்குறிக்குப் பொருந்துமா?
இதுபோலுள்ள வேறு பாடல்கள் உண்டா?
இடையெனும் போது பொருந்துவது
ஆண்குறிக்குப் பொருந்துமா?
இந்தப் பயணத்தின் முதல் புரிதல் "நாம்" யார் என்று அறிவதே. நாம் ஆன்மா
என்று உணர்ந்துவிட்டால் ஆண்டாளின் அத்தனை பாடலும் வெறும்
"சங்கத்தமிழிலிருந்து" வேதமாக மாறுவது புரியும்!
மேலும் அந்த மந்திரங்களின் மீது அடிப்படையில்
சிரத்தையும், பக்தியும் இல்லாமல் "தமிழில் சொன்னால் ஏற்பேன்" என்பது
என்ன வாதம்? என்ன நிலைப்பாடு? குருட்டி மொழிவெறி மட்டுமே அதில்
தெரிகிறது.
அதே போன்று "யோனி" என்ற சம்ஸ்கிருத பதத்திற்கும் பல பொருள்கள், சொல்லப்
On Jul 30, 4:16 am, "வேந்தன் அரசு" <raju.rajend...@gmail.com> wrote:
> >But so is the Sangam literature,
>
> இது மெய்பிக்க முடியாதது.
>
> அல்குல் என்பதற்கு பொது இலக்கியத்தில் ஒரு பொருள். மருத்துவ இலக்கியத்தில் ஒரு
> பொருள் என்பது ஏற்கனவே மின்தமிழில் வாதிடப்பட்டது
>
>
போனால் மிக ஆழ்ந்த பொருள்கள் இருக்கலாம் என்று உங்கள் மூடிய மனம் ஏன்
சிந்தித்துப் பார்ப்பதில்லை?
என்னதான் சொன்னாலும் எல்ல குழுக்களிலும் இது நடக்கவே செய்கிறது!
குறைந்தது சண்டையாக இல்லாமல் தமிழ் ஆராய்ச்சியாக இருக்கிறதே,
ப்ரவாயில்லை.
> (அடடா நமக்கேன் வம்பு என்று இதை டெலீட் அழுத்த நினைத்தேன்,
> தவறிப்போய் என்டர் கீயை அழுத்திவிட்டேன்)
:-)))))
நம்ம முடியவில்லை ரங்கரே!
அப்படி நடந்து இருந்தால் இந்த வாக்கியம் மடலில் வந்து இருக்க முடியாதல்லவா?
திவா
அப்படி வாங்க வழிக்கு!
புணர்ச்சி என்பதன் நேரடி அர்த்தம் கூட புனிதம் கெட்ட விஷயமல்ல.
ஹா!ஹா!!
அதிலே ஒரு அழகான துருப்பு கிடக்கு. அதை விட்டுவிட்டு வேறு கோணத்தில்
தாவிவிட்டீர்கள்!!
நாயகி பாவத்தின் அழகான விளக்கமாக பாகவதம் இருக்கிறதே. அது வேதவியாசர்
பிள்ளை சுக முனிவர் செய்வித்ததுதானே? வேதத்திலும் பக்தி பற்றிய
குறிப்புகள் நிறைய உண்டு.
ஆயினும் பொதுவாக நாயக-நாயகி பாவம் தமிழ் அகவழியில் பிறந்தது என்பதே
பெரும்பாலோர் கருத்து.
கண்ணன்
obsolete term for vulva. - medilexicon
pudendum muliebre:
Latin term for the vulva . See vagina for synonyms. - Sex-Lexis.com
எனவே பெருமாளின் அரை பற்றிப் பேசும் இப்பாடலிலிருந்து பண்டைய தமிழ்
பயன்பாட்டில் அல்குல் என்பது சிற்றிடைக்குப் பின் விரியும் hip அல்லது
அரை என்பதைக் குறிக்கவே பெரும்பாலும் பயன்பட்டு இருக்கிறது என்பது
புரிகிறது.
திருக்குறுங்குடி நம்பி வாழ்க.
கண்ணன்
பின் நவீனத்துவம் ஏறுகொண்ட பின் பழைய கோட்பாடுகள் எல்லாமே
கேள்விக்குறியாகின்றன. உண்மையில் பயத்தினால்தான் இறை பக்தி வந்ததா? இல்லை
என்று தோன்றுகிறது.
பிரபஞ்சம் பற்றிய மிக ஆழமான தேடலே பக்திக்கு வித்து. [ அதுவே
அறிவியலுக்கும் வித்து என்று காண்க! ] பக்தியின் எல்லைக்கோடாய் நிற்கும்
ஆழ்வார்கள் பாசுரம், அதற்கு ஆழங்காட்பட்டு அர்த்தம் சொன்ன உரைவளம் இவை
மிகத்தெளிவாக செப்புகின்றன இறைவனிடம் வரம் கேட்டுக் கோயிலுக்குப் போகாதே
என்று. இறைவனிடம் நாம் பிச்சை எடுக்கும் போது அவன் உள்ளம் புண் படுகிறது
என்கின்றனர் ஆச்சார்யர்கள். கோயிலுக்குப் போனால் இறைவனின் அழகில் மயங்க
வேண்டும், அவன் குண நலன்களை எண்ணி பெருமிதம் கொள்ள வேண்டும், அவன் கருணை
கண்டு கண்ணீர் சிந்த வேண்டும். வேத சாகரமாக திருவாய்மொழி இருந்தும்,
ஆழ்வார்களில் "பெரிய ஆழ்வார்" என்று பட்டம் வாங்கியவர் எல்லோருக்கும்
பின்னால் வந்த விட்டுசித்தர். காரணம் அவரின் அபரிதமான பரிவு. காட்சி
தரும் இறைவனுக்கே காப்பு சொன்ன வள்ளல். கோயிலுக்குப் போனால் இறைவன்
வாழ்க! வாழ்க!! என்று கூவ வேண்டும். பிச்சைக்காரன் போல் அது கொடு, இது
கொடு என்று மன்றாடக்கூடாது.
இதுதான் தமிழ் நெறி. இதுவே நம் சமய நெறி.
கண்ணன்
n-, will give you ந் . n-a will give you ந
or try the alphabet w for ந் in e kalappai
அன்புடன்
சுப்பு
எல்லாம் ஒரு எவலூஷன்தான்.
ஆரம்பத்திலே பய பக்தி, அப்புறமா கொஞ்சம் கொஞ்சமா முன்னேறி அனன்ய பக்தி,
ஏகாந்த பக்தி..
மேல எழுத நேரம் இல்லை. இங்கே பாருங்க:
http://anmikam4dumbme.blogspot.com/2008/04/2.html
Hariji
This is true for Murasu Anjal as well. I have used Murasu since I
started typing Tamil in internet. It works exactly the way you said.
No problem.
Kannan
அருமையான விளக்கம்....எங்கே அந்த பாண்டிய மன்னன் ..... கொண்டு வாருங்கள்
ஆயிரம் .......
சுவாரசியமாக இருக்கிறது!
பயம் என்பதைப் பற்றி நான் அதிகம் சிந்திப்பதுண்டு. எல்லா உயிர்களும்
பயப்படுகின்றன. பயம் என்பது ஒரு "தற்காப்பு" செயல்பாடு. அவ்வளவுதான்.
ஆனால் மனமுடைய மனிதனுக்கு அது அடுத்த நிலைக்குப் போகிறது. எல்லாவற்றையும்
நினைத்துப் பயம். அடிக்கின்ற வாத்தியாருக்குப் பயம், திட்டுகிற
அப்பாவிற்குப் பயம், கிள்ளுகிற சக மாணவனிடம் பயம்..இப்படி வாழ்நாளில்
பாதி பயத்தில் போய்விடுகிறது. பயம் என்பது வன்முறையிலிருந்து அப்பால்
போகும் உத்தியாகப் படுகிறது.
பயம் பக்திக்கு வித்தா? யோசிக்க வேண்டும்!
கண்ணன்
2008/7/31 Narayanan Kannan <nka...@gmail.com>:
>
> பயம் பக்திக்கு வித்தா? யோசிக்க வேண்டும்!
>
உண்மைதான். அவன் இன்னருள் அல்லது இன்னருள் அல்ல.
கண்ணன்
சபாஷ்! very convincing!
ஆனாலும்..இதைத் தாண்டிய நிலைகளுண்டு :-)
போட்டி போடவில்லை..ஆழமாக சிந்திக்கச் சொல்கிறேன்..அவ்வளவுதான்.
கண்ணன்
சும்மாப் புரிதலுக்குத்தான் பேசிக்கொண்டிருக்கிறேன்..
விஜயனுக்குக் காட்டிய விஸ்வரூபம் வேறு துரியோதனனுக்குக் காட்டியது வேறு.
கவுரவர்களுக்குக் காட்ட முற்பட்டது, "தானே சூத்திரதாரி" [ மாம் ஏகம்,
சரணம் விரஜ: ] எனவே அடக்கம் கொள்ளுங்கள் என்பதைச் சுட்ட. ஆனால், ஈசனை
மல்யுத்ததில் வென்ற விஜயனுக்குக் காட்ட முற்பட்டது தனது சர்வ வல்லமையை.
விஜயன் பயந்தான். அவன் உண்மையான வீரன். துரியோதனின் பயப்படவில்லை ஏனெனில்
அவன் அகங்காரம் அப்படி. கடவுள் கண்ணுக்கே நேரே வந்தாலும்
காணத்தகுதியற்றவர்தானே நாம்.
கொஞ்சம் ஸ்ரீரங்கத்து ஆசாமிகளிடம் சகவாசம் வைத்து, நம்பெருமாள்
அவர்களுக்கு உற்சவ மூர்த்தியா? குலபதியா? என்று கேட்டுப்பாருங்கள்.
அர்ச்சாவதாரத்தின் பொருள் புரியும் :-)
கண்ணன்
உங்க ஊர் குட்டி, வில்லிபுத்தூரை பிருந்தாவனமாக்கியவள்....
வடபத்ரசாயியை இடையனாக்கியவள்.
அங்கேதானே இருக்கிறான் கிருஷ்ணன் இன்னும்? சௌக்கியமா? என்று கேட்டுச்
சொல்லுங்கள் :-)
கண்ணன்
2008/7/31 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:
ஆனால், ஈசனை
மல்யுத்ததில் வென்ற விஜயனுக்குக்
2008/7/31 Hari Krishnan <hari.har...@gmail.com>:
Hariji
This is true for Murasu Anjal as well. I have used Murasu since I
started typing Tamil in internet. It works exactly the way you said.
No problem.
Kannan
அட! அவன் வேறு யாருமல்ல..சுப்பு...நம்ம பார்த்தன்தான். அதான் அர்ஜுனன்..அவந்தான்!
அவனுக்குப் படம் காட்டியே சோந்து போயிட்டாரு நம்மாளு. காட்டிபுட்டு
கடைசியிலே இதை விவரம்கெட்ட ஆளுகிட்ட சொல்லாதே, ஒரு இழவும் புரிஞ்சுக்க
மாட்டான். அதிகாரி பாத்து சொல்லுன்னு வேறு சொல்லிட்டுப் போயிட்டுது. நம்ம
கிறுக்குக..இராமானுஜன்னு நினைச்சிக்கிட்டு..இங்கே போட்டு உலுப்புதிக.
யாருக்கு என்ன புரியும்?
கிட்டினன்
oh oh , kannanu per vachale intha advise / arivurai ellam koodave
varum pola...athe pola vijaynu per vecha vithaila expertanaalum
mandyittu puriyaatha class attend pannaum pola
:-)))))))))))))))))))))))))))))))))))
சிரிச்சு தாளலைப்பா!
திவா
On Jul 30, 6:34 pm, "வேந்தன் அரசு" <raju.rajend...@gmail.com> wrote:அவர் எழுதியதை இன்னொரு முறை படித்துப் பாருங்கள். அந்தச் சொல்லுக்கு உள்ள
>
> ஜடாயுசார்
>
> அல்குல் என்பது மேகலை அணியும் இடம் என்று ஹரிகிருஷ்ணன் அழகாக சொல்லி
> நிறுவிவிட்டார்
மூன்று பொருள்களையும் தந்திருக்கிறார், மூன்றாவது பொருள் பெண்குறி.
* þí§¸§ó¾¡ý ¦ºÇ츢ÂÁ¡ þÕ츢§Èý.*
ஆயினும் பொதுவாக நாயக-நாயகி பாவம் தமிழ் அகவழியில் பிறந்தது என்பதே
பெரும்பாலோர் கருத்து.
கண்ணன்
கோதை என்றவுடன் ஆஜரா? ;_))
கண்ணன்
நன்றி வேந்தரே!
அங்கொரு paradigm shift நடக்கிறது!
சரித்திரத்தில் முக்கியமான திருப்பம்!
கண்ணன்
>
அருணகிரியார் என்ன வழி ? ஆண்டான் அடிமை வழியோ ?
அன்புடன்
சுப்பு
தம்பீ! பாடத்திலே கோட்டை விட்டுடீகளே! ராதை ஜீவாத்மான்னு சொல்லிட்டு வயசு
கேக்கறீகளே? ஆத்மாவுக்கு ஏது வயது தம்பீ?
கி.
ராமனை விட சீதையும் வயதில் மூத்தவள்தானேஅன்புடன்தமிழ்த்தேனீ
// சங்க பாடல்கள் யாவும் தன்மையில்தான் பாடப்பட்டுள்ளன. அது வறுமையை
பாடுவதாயினும்....
வீரத்தை பாடுவதாயினும் , காதலை பாடுவதாயினும் பொருந்தும்
இந்த மரபே கடவுளை பரவுவதிலும் தொடர்ந்து இருக்க வேண்டும்வேந்தன் அரசு //
வேந்தன், அடேயப்பா, ஆதாரங்கள், ஆய்வுகள் எதுவும் இல்லாமல் ஒரு சாதாரண
ஊகத்தை எப்படி இவ்வளவு ஆணித்தரமாக உங்களால் கூறமுடிகிறது? ஆச்சரியம்!
On Jul 14, 7:04 am, "வேந்தன் அரசு" <raju.rajend...@gmail.com> wrote:
//அக்கால சான்றோர்கள் அந்த வழக்கத்தை ஆதரிக்கவில்லை //
எரியிடை மூழ்குதல்
கடல் கடந்து வணிகம் செய்யச் சென்ற தன் கணவன் கலமுடைந்து உயிர் துறந்தான்
என்ற தவறான செய்தியைக் கேட்ட ஆதிரை என்பவள் உற்றார் உறவினரை விளித்து
நெருப்பு மூட்டச் செய்து எரியிடை மூழ்க முயன்ற செய்தியைச் சிலப்பதிகாரம்
சொல்கிறது. இது ஆதிரை தானாகவே எடுத்த முடிவு. உறவினர் சிதை
மூட்டிவிட்டனர்; யாரும் தடுக்கவில்லை.
சான்றோர் யாரும் ஆதரிக்காத வழக்கம் என்று எப்படிச் சொல்ல முடிகிறது?
புகார்ப் பெரு நகரில் சான்றோர் யாருமே இல்லையா?
ஜடாயு கொஞ்சம் காலம் கொடுங்கள். நாளை ஒரு உபன்யாச பிட் வலையேறுகிறேன்.
அதில் ஒரு ஸ்லோகம் எப்படி பக்தி என்பது தென்னகத்தில் பிறந்து இந்தியா
முழுவதும் பரவுகிறது என்பதைச் சொல்லும்.
வலைத்தளங்களில் உள்ள பாகவதக் கட்டுரைகளே (சுட்டி தேட வேண்டும்)
பாகவதத்தின் கால நிர்ணயத்தைக் கேள்விக் குறியாக்குகின்றன.
ஒரு சாரார் அது வியாசகர் காலமென்றும். மற்றொரு சாரார் அது 10
நூற்றாண்டில் எழுதப்பட்டது என்றும் கூறுகின்றனர்.
நான் கூறும் ஸ்லோகம் (உங்களுக்குப் பரிட்சயமாக இருக்கலாம்), மிகத்தெளிவாக
ஆழ்வார் பிறப்பைச் சுட்டுவதாக உள்ளது. எல்லா ஆழ்வர்களும்!!
விரைவில் மீண்டும்.
கண்ணன்
ஜடாயு அய்யா நானும் ஊகமாகத்தான் சொன்னேன்.ஆணடாளின் காலம் பாகவதத்தின் காலத்துக்கு முன்னர் இல்லையோ?பின்னர் தோன்றியது முன்னர் தோன்றியதற்கு வழிகாட்டியாக இருக்குமா?
பாகவதம், ஆண்டாளுக்குப் பிறகே வந்தது என்ற உங்கள் அனுமானம் சரியாக இருக்கவேண்டுமானால், ஆண்டாள், சங்ககாலத்துக்கு முற்பட்டவள். இது சரியான அனுமானம்தானா? நீங்கள்தான் சொல்லவேண்டும்.
விக்கிபிடியாவில் பார்த்தேன்.
Historical scholarship suggests that the text was written in the 9th or 10th century CE as part of the development of the bhakti movement.[5] However, Hindu religious tradition holds it to be one of the works of Vyasa written at the beginning of Kali Yuga (about c.3100 BCE).[6]
பக்தி இயக்கமே தென்னாட்டில்தான் தொடங்கியது என்று சொல்லப்படுகிறது