> அண்மையில் சிங்கப்பூர் சென்று ஆய்வரங்கில் கலந்துகொண்டு உரையாற்றி
> மீண்டுள்ளார்.எதிர்பாராமல் நடந்த சாலை விபத்தில் இயற்கை எய்திய
> ச.அகத்தியலிங் கனாரின் பிரிவு அறிந்து தமிழ் அறிஞர் உலகமும் மொழியியல்
> துறையினரும் கலங்கிநிற்கின்றனர்.
>
> --
சாலை விபத்துக்கள் நிகழக்கூடியவைதான் என்றாலும், அவை தவிற்கக்கூடியவையே.
சிங்கப்பூர், டென்மார்க் போன்ற நாடுகளின் சாலை விதிகள் இந்தியாவில் கடை
பிடிக்கப்படவேண்டும். மிகக்குறுகிய சாலைகள், மிக அதிக ஜன நடமாட்டம் உள்ள
இந்தியாவில் வேகம் 40 கிமீ மேல் இருக்கக்கூடாது. ஜெர்மனியில் இந்த அளவு
30. உண்மையில் 25 கிமீ வேகத்தில் வரும் ஒரு சைக்கிளே ஆளைக் கொல்லும்
சக்தி வாய்ந்தது. ஒவ்வொருமுறை இந்தியா வரும் போதும் என் கவலை இதுதான்.
மாயவரத்திலிருந்து வேளாங்கன்னி செல்லும் பாதையில் பேருந்து பாய்ந்த வேகம்
கிலி பரப்பியது. அந்தச் சின்னச் சாலையில் இத்தனை வேகமா? பேரூர்
கலைக்கல்லூரிக்கு ஈரோடிலிருந்து போகும் போது கார் சீறிப்பாய்ந்தது உண்மை.
வெளியே பார்க்கவே பயமாக உள்ளது. பண்டரிபாய், மகாராஜபுரம் சந்தானம்,
இப்போது வைத்தியலிங்கனார்! மதுரைப் பல்கலைக் கழகத்தில் மட்டும்
படிக்கின்ற காலத்தில் மூன்று சக ஆய்வாளர்களை இழந்துள்ளேன். இம்முறை
போனபோது சொன்னார்கள் பேரா. ஜெகன்னாதன் (கணிதம்) சாலை விபத்தில் இறந்தார்
என்று.
என்று தணியும் இந்த பேரூந்தின் உயிர்த்தாகம்?
கண்ணன்