பிறப்பும் இளமையும்
திருநெல்வேலிப் பெருநகரின் வடகீழ்த் திசையில் 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள சிற்றூர் இராசவல்லிபுரம். இவ்வூரில் பிறவிப்பெருமாள் பிள்ளை - சொர்ணத்தம்மாள் தம்பதியருக்கு 1896 மார்ச் திங்கள் 2ம் நாள் கார்காத்த வேளாளர் குலத்தில் சேது பிறந்தார். சேதுக்கடலாடி இராமேசுவரத்திலுள்ள இறைவனைப் பூசித்ததனால் பிறந்த தம் மகனுக்கு சேது என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர்.
போன்ற சமய நூல்களைக் கற்று சேது செந்தமிழ் அறிவும் சிவஞானமும் பெற்று வளர்ந்து வரலானார்.
பள்ளி - கல்லூரிக்கல்வி
சேது தம் பள்ளிப்படிப்பைப் பாளையங்கோட்டை தூய சேவியர் பள்ளியில் பயின்றார். இடைநிலை வகுப்பின் (இண்டர் மீடியட்) இரண்டாண்டுகளை திருநெல்வேலி இந்துக் கல்லூரியிலும், இளங்கலை வகுப்பின் இரண்டாண்டுகளைச் சென்னை பச்சையப்பன் கல்லூரியிலும் பயின்று தேர்ச்சி பெற்றார். உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராக விளங்கிய சுப்பிரமணியப் பிள்ளையும், இந்துக் கல்லூரித் தமிழாசிரியர் சிவராமப் பிள்ளையும் சேதுவின் தமிழார்வம் என்ற பயிரினை நீர்பாய்ச்சி உரமிட்டு வளர்த்த பெருந்தகையராவர்.
சட்டப்படிப்பும் நகர்மன்றப் பணியும்
பச்சையப்பன் கல்லூரியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்து கொண்டே சட்டக் கல்லூரியில் மாணவராகச் சேர்ந்து படித்தார். சட்டப்படிப்பை முடித்து நெல்லை திரும்பிய சேது, நெல்லையப்ப பிள்ளையின் மகள் ஆழ்வார்ஜானகியை வாழ்க்கைத் துணைவியாக ஏற்றார். நெல்லையில் வழக்கறிஞர் தொழிலை மேற்கொண்ட சேதுப்பிள்ளை, நகர்மன்ற உறுப்பினராகவும், நகர்மன்றத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். நெல்லை நகரில் தெருக்களின் பெயர்கள் தவறாக வழங்கி வந்ததை மாற்றி அத்தெருக்களின் உண்மையான பெயர்கள் நிலை பெறுமாறு செய்தார்.
பல்கலைக்கழகப் பணி
அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையைத் தமிழ்ப் பேரறிஞர் கா.சு.பிள்ளை அணி செய்தபோது, சேதுப்பிள்ளை தமிழ்த் துறையில் விரிவுரையாளராகச் சேர்ந்தார். விபுலானந்தர், சோமசுந்தர பாரதியார் ஆகிய இருபெரும் புலவர்களின் தலைமையில் தொடர்ந்து ஆறாண்டுகள் அருந்தமிழ்ப் பணி புரிந்தார். தம் மிடுக்கான செந்தமிழ்ப் பேச்சால் மாணவர்களைப் பெரிதும் கவர்ந்தார். மொழி நூலை பி.ஏ. வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கிலத்திலேயே கற்பித்துத் தமிழுக்கு இணையான தம் ஆங்கிலப் புலமையை வெளிப்படுத்தினார்.
ஆகிய இரு நூல்களைப் பல்கலைக்கழகம் வெளியிட்டது.
தொடர் சொற்பொழிவுகள்
பல்கலைக்கழகப் பணிகளைப் பாங்குறப் பேணிய சேதுப்பிள்ளை, சிந்தை கவரும் தம் செந்தமிழ்ப் பேச்சால் சென்னை மாநகர் மக்களை ஈர்த்தார். தமிழ் மக்கள் அனைவரும் மகிழும் வகையில் தமிழ்மழை பொழிந்துவந்தார். சென்னை ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றத்தில் அவரது கம்பராமாயணச் சொற்பொழிவு மூன்றாண்டுகள் நடைபெற்றது. அச்சொற்பொழிவின் தாக்கத்தால் அன்பர்கள் சென்னை மாநகரில் கம்பர் கழகத்தை நிறுவினர். சென்னையிலுள்ள கோகலே மன்றத்தில் சிலப்பதிகார வகுப்பைத் தொடர்ந்து மூன்றாண்டுகள் நடத்தினார். தங்கச்சாலை தமிழ்மன்றத்தில் ஐந்தாண்டுகள் (வாரம் ஒருநாள்) திருக்குறள் விளக்கம் செய்தார். கந்தகோட்டத்து மண்டபத்தில் ஐந்தாண்டுகள் கந்தபுராண விரிவுரை நிகழ்த்தினார்.
எழுதிய நூல்களும் கட்டுரைகளும்
போன்ற நூல்கள் இவரின் படைப்புகளாகும்.
பாராட்டுகள்
1950ம் ஆண்டு தருமை ஆதீனம் "சொல்லின் செல்வர்" என்ற பட்டம் வழங்கி சிறப்பித்தது. சென்னைப் பல்கலைக்கழகத்தில் கால் நூற்றாண்டு காலம் பணியாற்றியதைப் பாராட்டி "வெள்ளிவிழா" எடுத்தும், "இலக்கியப் பேரறிஞர்" என்ற பட்டம் அளித்தும் சிறப்பித்தது அப்பல்கலைக்கழகம்.
இரா.பி.சேதுப்பிள்ளையின் அரும்பெரும் கொடை நம்மாழ்வாரின்
திருவாய்மொழிக்கு "பகவத் விஷயம்" என்றும் "ஈடு" என்றும் அழைக்கப்படும்
மணிப்பிரவாள வியாக்கியானத்தை புருஷோத்தம நாயுடுவை வைத்து தமிழாக்கம்
செய்ததுதான். இல்லையெனில் என்னைப் போன்ற திசைமாறிப்போன தமிழர்களுக்கு
நற்கதி ஏது? பாசுரமடல்கள்தான் ஏது?
உங்கள் கட்டுரை படித்த பின்தான் இரா.பியின் ஆர்வத்தின் பின்புலம்
புரிகிறது. நம்மாழ்வாரும், இரா.பியும் நெல்லை மக்கள். மேலும் இவர் இராமன்
அருளால் பிறந்தவர். மனைவி பெயர் ஆழ்வார்ஜானகி!! இறைவன் எப்படி
முடிச்சுப்போடுகிறான் பாருங்கள்!!
கண்ணன்
2008/10/12 Kannan Natarajan <thar...@gmail.com>:
>. இவ்வூரில் பிறவிப்பெருமாள் பிள்ளை - சொர்ணத்தம்மாள்
> தம்பதியருக்கு 1896 மார்ச் திங்கள் 2ம் நாள் கார்காத்த வேளாளர் குலத்தில் சேது
> பிறந்தார். சேதுக்கடலாடி இராமேசுவரத்திலுள்ள இறைவனைப் பூசித்ததனால் பிறந்த தம்
> மகனுக்கு சேது என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர்.
>