Fwd: [Tamil_Araichchi] தமிழக உறவுகளே கொடுத்த விலை போதும் [1 Attachment]

0 views
Skip to first unread message

iTamil Organization

unread,
Mar 5, 2013, 7:59:04 PM3/5/13
to itamilorg...@googlegroups.com
---------- Forwarded message ----------
From: Shan Rathees <shanrat...@gmail.com>
Date: 2013/3/6

 
[Attachment(s) from Shan Rathees included below]

அன்பார்ந்த தமிழக உறவுகளே!

முப்பது வருடங்கள் இடம் பெற்ற கொடிய போரின் விளைவுகளை ஈழத் தமிழ் மக்கள்
இப்போதும் கூட அனுபவித்துக் கொண்டிருக்கும் வேளையில் எமது உணர்வோடும்
உதிரத்தோடும் கலந்து நிற்கும் உங்கள் ஆதரவு எமக்கு மிகப் பெரிய ஆன்ம
பலத்தைக் கொடுக்கின்றது.

தமிழ் மக்களாகிய நாங்கள் எல்லோரும் ஒருமித்த குரலில் நீதி கேட்டு
நடாத்தும் போராட்டங்கள் உலகின் மனச் சாட்சியை உலுக்கியெடுக்கும் காலம்
வந்தே தீரும். வெவ்வேறு அணிகளாக செயல்பட்டாலும் ஒரே திசையில் பயணிக்கும்
எம் எல்லோரினதும் நீதிக்கான பயணத்தில் இன்று ஒரு முக்கியமான கால
கட்டத்தில் இருக்கிறோம்

துப்பாக்கி குண்டுகள் துளைத்தும் பீரங்கித் தாக்குதலாலும் கடல் மற்றும்
வான் தாக்குதலாலும் மட்டுமல்லாது எறிகுண்டுகள், நச்சுக் குண்டுகள்
கொத்துக் குண்டுகள் போடப்பட்டு வதைபட்டு மாண்ட குழந்தைகள், முதியோர்
மற்றும் அப்பாவித் தமிழ் மக்கள் அனுபவித்த கொடுமைகள் வார்த்தைகளில்
வடிக்க முடியாதது. 21ஆம் நூற்றாண்டில் இப்படியொரு கொடுமை உலகின் கண்
முன்னாள் நடந்ததில்லை.

தமிழகத்தின் இன்றைய எழுச்சி இந்தியா முழுவதும் விழிப்புணர்வைக் கொண்டு
வரும். இந்தியா விழித்துக் கொள்ளும் போது உலகின் ஆதரவு எம் பக்கம்
திரளும் என்பது நிச்சயம். இதற்காக தினந்தோறும் நீங்கள் நடத்தும் பல்வேறு
கவனயீர்ப்பு போராட்டங்கள் இந்தியாவில் மட்டுமல்ல உலகெங்கிலும்
அதிர்வலைகளைத் தோற்றுவிக்கத் தொடங்கியுள்ளது.

ஆனாலும் எம் இரத்த உறவுகளே! வதையுண்ட இனத்தின் பிரதிநிதிகளாக எமது
தாழ்மையான விண்ணப்பம் ஒன்றை உங்களிடம் விடுக்கின்றோம். ஒவ்வொரு உயிரும்
பெறுமதி மிக்கது. விடுதலை நோக்கிய எமது பயணத்தில் விலை மதிப்பில்லாத
நிறைய உயிர்களை இழந்திருக்கிறோம். உலகின் கண் திறக்க வேண்டுமென்று
எங்களுக்காக உயிரை ஆகுதியாக்கியவர்களின் தியாகத்தை மதிக்கின்றோம் நேற்று
தனது உடலை வருத்தி உயிரை நீத்த உணர்வாளர் சகோதரர் மணி அவர்களுக்காய் எம்
இதயம் துடிக்கிறது.

ஆனால் இவ்வளவு உணர்வோடும் துடிப்போடும் உள்ள உங்களின் உயிர் பெறுமதி
மிக்கது. உணர்வுள்ளவர்களால்தான் ஏனையவர்களைத் தட்டியெழுப்ப முடியும்,
உங்கள் உணர்வுகளை மற்றவர்களுடன் பகிர முடியும், அவர்களை நீதிக்கான
பயணத்தில் அணி திரட்ட முடியும். இன்று போராட பல வழிகள் உண்டு.
உணர்வாளர்கள் உயிர் வாழ்ந்தால்தான் நாளைய போராட்டம் வலிமை பெறும்.

எம் மக்களின் இழப்புக்களை இனியாவது முடிவுக்கு கொண்டு வர வேண்டும்
என்பதற்காகவே போராடுகின்றோம். இரக்கமற்ற கொடியவர்களிடம் சிக்கி
உயிரழந்தவர்களுக்கு நீதி வேண்டியும், இன்றும் இருட்டுச் சிறைகளுக்குள்
வதைபடும் பல்லாயிரம் இளைஞர்களின் உயிரைக் காப்பதற்காகவும் நாங்கள்
எல்லோரும் ஆரம்பித்துள்ள புனித வேள்வியில் உணர்வாளர்களின் பணி
அளப்பரியது.

இன்று வடிவமெடுத்திருக்கும் மக்கள் போராட்டங்கள், வல்லமையுள்ள அரசியல்
மற்றும் ராஜதந்திர சக்திகள் தட்டிக் கழிக்க முடியாத நிர்ப்பந்த நிலையை
ஏற்ப்படுத்தத் தொடங்கியுள்ளது. நம்பிக்கையுடன் ஒரே திசையில் பயணிப்போம்.
விடுதலையின் பாதை திறக்கட்டும்.

நீதி கிடைக்கும் வரை ஓய மாட்டோம்.






Kind Regards
shan sutha

***********************
Follow me on - twitter.com/shansutha1
Email: shanrat...@gmail.com

__._,_.___

Attachment(s) from Shan Rathees

1 of 1 File(s)

Reply all
Reply to author
Forward
0 new messages