தினம் ஒரு பாடல்

7 views
Skip to first unread message

AKR Consultants

unread,
Sep 4, 2010, 4:38:07 PM9/4/10
to clap...@googlegroups.com
உலகில் பிறந்த நாம் ஒவ்வொருவரும் வாழ்வை இன்பமாகவே வாழ விரும்புகிறோம். நம்முள் ஏதேனும் ஒரு சிலர் வாழ்வின் இன்பங்களைத் துறந்து ஞான மார்க்கத்தில் செல்ல நேர்ந்தாலும் அவர்களும் வாழ்வின் நிலையாமையை உணர்ந்ததால் ஏற்பட்ட மன மாற்றத்தால் ஆசையழிந்து இவ்வுலக வாழ்வெனும் மாயையிலிருந்து விடுபட வழி தேடியே அலைகின்றனர். அத்தகையதொரு வழியைக் கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர் என்பது பிரசித்தம். அதாவது, மாயையை வென்று முக்தியடையும் வழியை உண்மையில் கண்டவர் அதனைப் பிறருக்குச் சொன்னதில்லை, அவ்வாறு முக்தியடையும் வழியைப் பிறருக்குச் சொன்னவர்கள் தாம் அவ்வழியைக் கண்டதில்லை என்பதே இக்கூற்றின் பொருள்.

வாழ்விலே ஒரு பிடிப்பு ஏற்பட்டாலொழிய வாழ்வு சுவைக்காது. அத்தகைய பிடிப்பு ஏற்பட ஆசைகள் மிகவும் அவசியம். ஆசைகளிலே முக்கியமானவை மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை ஆகியவையே. இம்மூன்றிலும் முதல் இரண்டு வித ஆசைகள் நிறைவேறுவதால் விளையும் இன்பத்தை விடவும் அதிக இன்பத்தைத் தருவது பெண்ணாசை நிறைவேறுவதால் விளையும் இன்பமே. இப்பெண்ணாசை முறையாக ஒருவனுக்கு ஒருத்தியெனும் மனித சமுதாய நியதிக்குட்பட்டிருப்பின் அதில் துன்பம் கலவாத இன்பமே விளையும். இந்நியதியை மீறிய முறை தவறிய பெண்ணாசை துன்பத்தையே தருவது நிச்சயம்.

காதலனின் வருகைக்காகக் காத்திருக்கும் காதலிக்கும் காதலியின் வருகைக்காகக் காத்திருக்கும் காதலனுக்கும் தம் உள்ளத்தில் பொங்கிப் பெருகும் ஆசை வெள்ளம் காத்திருந்த பின்னர் தம் காதலரைக் கண்டதும் அடங்குவதுண்டோ?

http://www.thamizhisai.com/tamil-cinema/tamil-cinema-003/motor-sundaram-pillai/kaaththirundha-kangale.php

மோட்டார் சுந்தரம் பிள்ளை
இயற்றியவர்: வாலி
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியோர்: பி.சுசீலா, பி.பி. ஸ்ரீநிவாஸ்

காத்திருந்த கண்களே கதையளந்த நெஞ்சமே
ஆசையென்னும் வெள்ளமே பொங்கிப் பெருகும் உள்ளமே
காத்திருந்த கண்களே கதையளந்த நெஞ்சமே
ஆசையென்னும் வெள்ளமே பொங்கிப் பெருகும் உள்ளமே

கண்ணிரண்டில் வெண்ணிலா கதைகள் சொல்லும் பெண்ணிலா
நானிருந்தும் நீயில்லா வாழ்வில் ஏது தேன்நிலா?
கண்ணிரண்டில் வெண்ணிலா கதைகள் சொல்லும் பெண்ணிலா
நானிருந்தும் நீயில்லா வாழ்வில் ஏது தேன்நிலா?

மைவிழி வாசல் திறந்ததிலே ஒரு மன்னவன் நுழைந்ததென்ன - அவன்
வருகையினால் இந்த இதழ்களின் மீது புன்னகை விளைந்ததென்ன?
பொழுதொரு கனவை விழிகளிலே கொண்டு வருகின்ற வயதல்லவோ? - ஒரு
தலைவனை அழைத்துத் தனியிடம் பார்த்து தருகின்ற மனதல்லவோ?
தருகின்ற மனதல்லவோ?

காத்திருந்த கண்களே கதையளந்த நெஞ்சமே
ஆசையென்னும் வெள்ளமே பொங்கிப் பெருகும் உள்ளமே

கைவிரலாலே தொடுவதிலே இந்தப் பூமுகம் சிவந்ததென்ன? இரு
கைகளினால் நீ முகம் மறைத்தாலே வையகம் இருண்டதென்ன
செவ்விதழோரம் தேனெடுக்க இந்த நாடகம் நடிப்பதென்ன - என்னை
அருகினில் அழைத்து இருகரம் அணைத்து மய்க்கத்தைக் கொடுப்பதென்ன?
மயக்கத்தைக் கொடுப்பதென்ன?

காத்திருந்த கண்களே கதையளந்த நெஞ்சமே
ஆசையென்னும் வெள்ளமே பொங்கிப் பெருகும் உள்ளமே
லாலலாலா லல்லல்லா லாலலல்லா லல்லல்லா
லாலலாலா லாலாலா லாலலாலா லாலல்லா

--
AKR
http://www.mazhalaigal.com



AKR Consultants

unread,
Sep 5, 2010, 3:33:12 PM9/5/10
to clap...@googlegroups.com
மனிதனை மற்ற உயிரினங்களை விட மேன்மையான நிலையில் வைத்திருப்பது பகுத்தறிவு. அவ்வறிவை வளர்க்க இன்றியமையாதது கல்வி. கல்வி கற்க ஆசான் இன்றி இயலாது என்பது அனைவரும் ஒப்புக்கொண்ட கருத்தாகும். ஒவ்வொருவரும் பிறந்து வளர்கையில் ஒரு குறிப்பிட்ட காலம் வரையில் தாயும் தந்தையும் ஆசானாக விளங்குகின்றனர். அதன் பின்னர் கல்வி பயில அதற்கென்றே பிரத்யேகமானதொரு குருவின் துணையை நாடுவது மிகவும் அவசியமாகிறது. மனித வாழ்வில் மிகவும இன்றியமையாதது இறையுணர்வு. இறையுணர்வில்லாதவர் துன்பங்களைத் தாங்கும் வலிமையடைவதில்லை. இறைத்தத்துவத்தில் நிறைய வேறுபாடுகள் இருப்பினும் இவ்வுலகையும் நம்மையும் இயக்கும் ஒரு மஹாசக்தி இருப்பதை யாரும் மறுக்க முடியாது. அத்தகைய சக்தியைத் துணையாகக் கொண்டு வாழ்வில் முக்தி பெறுவதே வாழ்வின் நோக்கமாக அமைகிறது. இத்தகைய முக்திக்கு வழியமைத்துத் தருவது கல்வியே ஆகும். இதனாலேயே மாதா, பிதா, குரு, தெய்வம் என்று வாழ்வின் முதல் ஆசானாக அன்னையையும் அடுத்துத் தந்தையையும் அதன் பின்னர் குருவையும் இறுதியில் தெய்வத்தையும் வைத்தனர் நம் முன்னோர்.

கல்வியினால் அறிவு வளர்கிறது. அவ்வறிவு முதிர்ச்சியடைந்து ஞானமாக மலர்கிறது. அந்த ஞானம் இறுதியில் பக்தியாகப் பரிணமிக்கிறது. அவ்வாறு பக்தி நிலையை அடையாத அறிவு முழுமையான அறிவு ஆகாது. அன்னையும் தந்தையும் தமது பிள்ளைகளிடமிருந்து எதிர்பார்ப்பது மெய்யான அன்பையே தவிர சம்பிரதாயமான மரியாதையை அல்ல. இதற்கு மாறாக ஒரு ஆசிரியர் தன் மாணவரிடமிருந்து பெரிதும் எதிர்பார்ப்பது மரியாதையையே. ஏனெனில் மரியாதை கீழ்ப்படிதலுக்கு முதல் படி. கீழ்ப்படிதலில்லாது ஒரு மாணவர் ஆசான் போதிக்கும் கல்வியை முறையாகப் பயிலும் சக்தியை அடைவதில்லை. இறைவனுக்கு செலுத்தும் மரியாதையை விடவும் அதிகமான மரியாதையையும் பக்தியையும் குருவுக்கு அளிக்கும் ஒரு மாணவனுக்குக் கல்வி எளிதில் வசமாகிறது.

கல்வி கற்பதற்கு ஏற்ற காலம் இளமைப் பருவம். குழந்தைகளாக இருக்கையிலேயே கல்வி பயிலத் துவங்கி தொடர்ந்து கல்வி பயில்வதே சிறப்பு. இத்தகைய, வாழ்க்கைக்கு இன்றியமையாத கல்வி வியாபாரமாக்கப் பட்டதால் கல்வி ஞானமாக முதிர்ந்து பக்தியாகப் பரிணமிப்பது இயலாததாகிறது. ஆசிரியர்கள் வெறும் சம்பளத்துக்கு வேலை செய்யும் பணியாளர்களாக மதிக்கப் படும் நிலை ஏற்படுவதால் குரு பக்தி என்பதே இல்லாத நிலைமை உலகில் இன்று பெரிதும் நிலவுகிறது. 

இனி வரும் காலத்திலாவது கல்வி வியாபாரமாவது தடுக்கப்பட்டு ஆசிரியர்களுக்கு உரிய மரியாதையை அனைவரும் அளித்து கல்வி அதன் உண்மையான தரத்தை நிலைநிறுத்திக் கொள்ளும் ஆரோக்கியமான சூழல் நம் நாட்டிலும் உலகெங்கிலும உருவாக வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொண்டு இன்றைய பாடலை வழங்குகிறேன்.


திரைப்படம்: சாந்தி நிலையம்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: பி. சுசீலா

செல்வங்களே தெய்வங்கள் வாழும் நெஞ்சங்களே
சிறிய வயதில் அறிவை வளர்த்து உலகை வெல்லுங்களே
சிறிய வயதில் அறிவை வளர்த்து உலகை வெல்லுங்களே
ரம்பம்மம் ராரம்பம் சம்சம்சம் ராரம்பம் ஓ ஓ ஓ வெண்ணிலவே
ரம்பம்மம் ராரம்பம் சம்சம்சம் ராரம்பம் வா வா வா வெண்ணிலவே

உள்ளங்கள் பேசட்டும் பிள்ளைகள் தூங்கட்டும்
வா வா வா வெண்ணிலவே
மஞ்சத்தில் மான் குட்டி கொஞ்சட்டும் கண் பொத்தி
ஆராரோ ஆரிராரோ

செல்வங்களே தெய்வங்கள் வாழும் நெஞ்சங்களே
சிறிய வயதில் அறிவை வளர்த்து உலகை வெல்லுங்களே
சிறிய வயதில் அறிவை வளர்த்து உலகை வெல்லுங்களே

காலம் என்பது உன் வரவுக்காகக் காத்திருக்கும்
கனியைப் போன்றது நல் கனியைப் போன்றது
காலம் என்பது உன் வரவுக்காகக் காத்திருக்கும்
கனியைப் போன்றது நல் கனியைப் போன்றது
நாளை என்பது உன் நன்மைக்காகப் பூத்து நிற்கும்
மலரைப் போன்றது மலரைப் போன்றது

கண்மையின் வண்ணத்தில் உண்மைகள் மின்னட்டும்
ஓ ஹோ ஹோ ஹோ உள்ளங்களே
தெய்வங்கள் கூடட்டும் தாலாட்டுப் பாடட்டும்
ஆராரோ ஆரிராரோ

செல்வங்களே தெய்வங்கள் வாழும் நெஞ்சங்களே
சிறிய வயதில் அறிவை வளர்த்து உலகை வெல்லுங்களே
சிறிய வயதில் அறிவை வளர்த்து உலகை வெல்லுங்களே
செல்வங்களே 

--
AKR
http://www.mazhalaigal.com


AKR Consultants

unread,
Sep 6, 2010, 5:32:46 PM9/6/10
to clap...@googlegroups.com

தம் இரு பையன்களுக்கும் ஒரே சமயம் திருமணம் செய்ய முடிவு செய்யும் பெற்றோர்கள் ஒரு கல்யாணத் தரகர் தரும் விவரங்களின் அடிப்படையில் இரு பெண்களைத் தேர்வு செய்கின்றனர். பெண்பார்க்கும் படலம் துவங்குகிறது. சம்பிராதயமான முறையிலிருந்து மாறுபட்டு அண்ணனுக்கென்று கருதப்படும் பெண்ணைத் தம்பியும் தம்பிக்கெனக் கருதப்படும் பெண்ணை அண்ணனும் சென்று பெண் பார்க்கின்றனர். இவர்களுள் அண்ணன் பட்டப்படிப்பு பயின்றவன். தம்பி படிக்காதவன் முரடன். இக்காரணத்தால் இரு பெண்களுக்குள் பட்டப் படிப்பு படித்தவளை அண்ணனுக்கும் படிக்காத குடும்பப் பாங்கான பெண்ணைத் தம்பிக்கும் மணம் முடிப்பதெனும் பெற்றோர் முடிவின் படியே பெண்பார்க்கும் படலம் துவங்குகிறது. தம்பிக்கெனப் பார்க்கும் பெண்ணின் அழகாலும், அடக்கதாலும் அறிவாலும் கவரப்பட்ட அண்ணன் தம்பிக்கு பதிலாக அவளைத் தானே திருமணம் செய்து கொள்ள விரும்புகிறான். அண்ணனுக்காகப் பெண்பார்க்கச் சென்ற தம்பி அதன் முன்பாக அண்ணனிடமிருந்து சில ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொண்டு அண்ணனுக்காகப் பெண் பார்க்கையில் தன்னை அவர்கள் தரக்குறைவாக எண்ணிவிடக் கூடாது எனும் சுயகௌரவம் கருதித் தன்னைப் படித்தவன் போலக் காட்டிக் கொள்கிறான். இதனால் அவனை அவர்கள் படித்தவனென்றே கருத நேர்கிறது. 

இதனிடையில் தம்பிக்காகப் பார்த்த பெண்ணைத் தானே மணம் முடிக்கும் தனது சுயநல எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ள எண்ணும் அண்ணன், தம்பி தனக்காகப் பார்த்த பெண்ணின் வீட்டுக்கு அனாமதேயக் கடிதம் அதாவது மொட்டைக் கடிதம் ஒன்றை அனுப்புகிறான். அக்கடிதத்தில் இருவரில் அண்ணன் கல்வி அறிவில்லாதவனென்று குறிப்பிடுவதால் அப்பெண்ணின் பெற்றோர்கள் தமது பெண்ணைத் தம்பிக்கே மண முடித்துத் தர விரும்பிகின்றனர். இதனால் திருமணம் முடிந்த பின்னர் படித்தவன் என்று தான் கருதிய தன் கணவன் படிக்காதவன் என்னும் உண்மை வெளிப்படுவதால் கணவன் மனைவியரிடையே பல குழப்பங்களும் மனஸ்தாபத்தால் பல துன்பங்களும் விளைகின்றன. இவ்வாறு அமைந்தது படித்தால் மட்டும் போதுமா திரைக்கதை. இப்படத்தில் தம்பியாக சிவாஜி கணேசனும் அண்ணனாக பாலாஜியும், அண்ணன் மனைவியாக சாவித்திரியும், தம்பியின் மனைவியாக ராஜசுலோசனாவும் நடித்துள்ளனர்.

அண்ணன் தம்பி இருவரும் பெண்பார்த்து விட்டுத் திரும்பியதும் ஒன்றாக நீச்சல் குளத்தில் குளிக்கையில் தாங்கள் பார்த்த பெண்களைப் பற்றிய கருத்துக்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்வதாக அமைந்த இன்றைய பாடலில் கவிஞர் கண்ணதாசனின் ஆழ்ந்த புலமையும் கதையின் சூழ்நிலையைக் கதையின் தன்மையை ஒட்டியே மிகவும் அழகாக வர்ணிக்கும் சமயோசிதமும் விளங்குகின்றன. கேட்டவர் அனைவராலும் மிகவும் வியந்து பாராட்டப் பட்டது இப்பாடல்.

http://www.thamizhisai.com/tamil-cinema/tamil-cinema-003/padiththaal-mattum-pothuma/pon-ondru-kanden.php

திரைப்படம்: படித்தால் மட்டும் போதுமா?
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், பி.பி. ஸ்ரீனிவாஸ்

பொன்னொன்று கண்டேன் பெண்ணங்கு இல்லை
என்னென்று நான் சொல்லலாகுமா?
என்னென்று நான் சொல்ல வேண்டுமா?
பூ ஒன்று கண்டேன் முகம் காணவில்லை
ஏனென்று நான் சொல்லலாகுமா?
ஏனென்று நான் சொல்ல வேண்டுமா?

நடமாடும் மேகம் நவநாகரீகம்
அலங்காரச் சின்னம் அலைபோல மின்னும்
நடமாடும் செல்வம் பணிவான தெய்வம்
பழங்காலச் சின்னம் உயிராக மின்னும்
துள்ளி வரும் வெள்ளி நிலா
துள்ளி வரும் வெள்ளி நிலா
துவண்டு விழும் கொடியிடையாள்
துவண்டு விழும் கொடியிடையாள்
விண்ணோடு விளையாடும் 
பெண்ணந்தப் பெண்ணல்லவோ?

சென்றேன் ம்ம் கண்டேன் ம்ம் வந்தேன்

பொன்னொன்று கண்டேன் பெண்ணங்கு இல்லை
என்னென்று நான் சொல்லலாகுமா?
என்னென்று நான் சொல்ல வேண்டுமா?

நான் பார்த்த பெண்ணை நீ பார்க்கவில்லை
நீ பார்த்த பெண்ணை நான் பார்க்கவில்லை
நீ பார்த்த பெண்ணை நான் பார்க்கவில்லை
உன் பார்வை போலே என் பார்வை இல்லை
நான் கண்ட காட்சி நீ காணவில்லை
நான் கண்ட காட்சி நீ காணவில்லை
என் விழியில் நீ இருந்தாய்
என் விழியில் நீ இருந்தாய்
உன் வடிவில் நானிருந்தேன்
உன் வடிவில் நானிருந்தேன்
நீயின்றி நானில்லை நானின்றி நீயில்லையே

பொன்னொன்று கண்டேன் பெண்ணங்கு இல்லை
என்னென்று நான் சொல்லலாகுமா?
என்னென்று நான் சொல்ல வேண்டுமா?
பூ ஒன்று கண்டேன் முகம் காணவில்லை
ஏனென்று நான் சொல்லலாகுமா?
ஏனென்று நான் சொல்ல வேண்டுமா?

--
AKR
http://www.mazhalaigal.com



Reply all
Reply to author
Forward
0 new messages