அகழ்நானூறு 22

4 views
Skip to first unread message

ருத்ரா (இ.பரமசிவன்)

unread,
Feb 15, 2023, 6:03:29 AM2/15/23
to " கல் தோன்றி....."

அகழ்நானூறு 22

___________________________________________________

சொற்கீரன்


வங்கூழ் ஆட்டத் திரைஆடு பொய்யின்

கொய்சுவற் கலிமா அன்ன கால்போழ்

வங்கம் மீமிசை செங்கடற் குருகின் 

அகன்சிறை ஆர்த்த அசைநிழல் போலும்

மண்ணிழை மழைக்கண் மணிச்சிறை ஓச்சி

விழியிடை இழையிடை விரிகவின் நோக்க‌

நின் திசைபாய இறையள் வளைகுலுங்கும்.

நீள்கடல் வரியில் கல்லாடன் எழுதும்

கல்லா சொல்லும் கழறாஅ மொழியும்

அவளின் நெஞ்சத்து துடிதனை முரலும்.

பாழ்மணல் விரிந்தன்ன கட்ற்பாலை ஆங்கு

பொய்யில் தைத்து மெய்யெனக்காட்டும்

பொறிகிளர் மஞ்சின் முகம் முகம் காட்டி

நினை திரை அகலம் நீள ஓட்டி

அடைகரை தோறும் நாகர்தமிழர்

நாவாய் பல்திணை பல் ஒலி கூட்டித்

தந்ததை ஒற்றி நுண்திறம் ஓர்ந்து

செவ்விய தமிழின் செஞ்சுவடு பிலிற்ற

செழும்பொருள் கொண்மார் 

நான் மறைக்கு முன்னும் நாவலன் ஆகி

நாவலந்தீவின் நற்றமிழ் வழங்கி

மன்னார் மருங்கின் மன்னுதன் காட்டி

எல்லா மொழியும் நுவலத் தந்து

எல் என்றொரு முதன் முதற் கிளவி

உயிர ஈந்தவன் உயிர்த்தமிழோனே.

அற்றை அண்ணல் நின் வாணுதல் வருட‌

வந்திடும் ஆறும் நீள்தல் அன்று.

கள்ளிஅம் காட்ட கடமடுத்தாண்டு

உழிஞ்சிலும் வரிசை வல்லிய வரூஉம்

சுரன் போன்றொரு தோற்றம் செத்து

சுழிநீர் நனந்தலை அலைகள் படர்க்கும்.

அயர்ந்தாய் வேர்த்தாய் ஒள்ளிழையோயே.

நித்திலம் பூத்ததை கைத்தலம் கொள்வாய்.

படுமணி இரட்டும் பளிங்கொலி ஓர்வாய்.


____________________________________________________





Reply all
Reply to author
Forward
0 new messages