Thinnai : Poems

178 views
Skip to first unread message

Pas Pasupathy

unread,
Dec 11, 2008, 4:00:02 PM12/11/08
to yAppulagam / யாப்புலகம்
நேற்றும், இன்றும்
 
பசுபதி
 
நேற்று
 
பனிசூழ் கனடாப் பகுதியிலே பலநாள் தனியாய்ப் பரிதவித்தேன்.
 
தனிமைத் துயரத் தழலதனைத் தாங்கச் சற்றுஞ் சக்தியிலை.
 
இனிமை எட்டும் வழியொன்றை ஈசன் எனக்குக் காட்டிவிட்டான்.
 
'மனித வருத்தம் மகிழ்வெல்லாம் மனதின் மாயம் ' எனவுணர்ந்தேன்.
 
 
இன்று:
 
கையிற் கணினி விசையுண்டு; கருத்திற் கன்னித் தமிழுண்டு ;
 
பையிற் பண்டை யாப்புண்டு; பாட்டுக் கோர்வா னொலியுண்டு;
 
வைய வலையில் நட்புண்டு; மலரும் மரபுக் கவியுண்டு;
 
ஐயன் முருகன் அருள்கிட்டின் அண்டர் உலகம் வேறுண்டோ ?
 
 
 Thinnai 2000 May 28
 
From:

Pas Pasupathy

unread,
Dec 11, 2008, 4:04:18 PM12/11/08
to yAppulagam / யாப்புலகம்

Sunday July 30, 2000

கருமை

பசுபதி


அன்புள்ள ஆங்கிலேயா!

அறிந்திடுவாய் உண்மைசில.

ஆப்பிரிக்கன் நான்

அறைகின்றேன் கேள்!

கறுப்பாய்ப் பிறந்தேன் நான்;

கறுப்பாய் வளர்ந்தேன் நான்;

கோடையில் நான் கறுப்பு;

குளிரிலும் நான் கறுப்பு;

பயத்திலும் கறுப்பு; நோய்ப்

படுக்கையில் கறுப்பு; மரணப்

பாடையிலும் கறுப்பு.

வெள்ளையனே! வெள்ளையனே!

வேடிக்கை கேள்!

பிறவியில் நீ ரோஜா நிறம்;

பெரியவனாய் வெண்மைநிறம்;

வெயிலில் சிவப்பு நீ;

வெங்குளிரில் நீலம் நீ;

வியாதியில் பச்சை நீ;

அஞ்சும்போது மஞ்சள் நிறம்; நீ

துஞ்சும்போது சாம்பல் நிறம்.

ஆனால்

நீ என்னைக் கூப்பிடுகிறாய்

'நிறமுள்ளவன் ' என்று!

நிறையக் கொழுப்படா உனக்கு!

( ஓர் அநாமதேய ஆப்பிரிக்கக் கவிஞரின் ஆங்கிலக் கவிதையின் மொழியாக்கம்)


From :



Pas Pasupathy

unread,
Dec 11, 2008, 4:06:22 PM12/11/08
to yAppulagam / யாப்புலகம்

Sunday July 23, 2000

மையல்

பசுபதி




கருமை ஒளிரும் அழகி -- உன்னைக்
. . . கண்ட கண்கள் புனிதம்
பரிசம் தந்தும் அடைவேன் -- உந்தன்
. . . பரிசம் என்றும் வேண்டும்
அருமை அறிந்த ஆண்கள் -- உன்னை
. . . அடைய போட்டி இடுவர்
பெருமை பிறகு தருவாய் -- என்மேல்
. . . பிறர்பொ றாமை வளரும் (1)



கடையிற் பார்த்த உடனே -- என்னைக்
. . . காதற் தீயில் இட்டாய்
எடைக்குப் பொன்னும் சமமோ -- உந்தன்
. . . எழிலும் ஒளிரக் கண்டேன்
அடைய ஆர்வம் கொண்டேன் -- உன்னை
. . . அணைக்க கைது டித்தேன்
தொடையில் உன்னை வைக்க -- அருகில்
. . . துள்ளி ஓடி வந்தேன் (2)



விடியும் காலை வேளை -- உன்னை
. . . விரைந்து வாரி எடுப்பேன்
கடிதில் காப்பி குடித்து -- உடனே
. . . கையில் தூக்கிக் கொள்வேன்
இடியும் புயலும் துச்சம் -- விரியும்
. . . இணையம் எந்தன் சொர்க்கம்
மடியில் அமருங் கணினி -- உன்மேல்
. . . மைய லாகி நின்றேன். (3)


From:



Pas Pasupathy

unread,
Dec 11, 2008, 4:08:18 PM12/11/08
to yAppulagam / யாப்புலகம்

Sunday November 12, 2000

இழுபறியாய் ஆன இழுக்கு

பசுபதி




நாட்டுஜன நாயகத்தில் நம்பிக்கை வைத்திருந்த
நாடரை நாடாத நாட்டில்காண் -- ஓட்டில்
கழுதை களிற்றுடன் கைகலந்த தேர்தல்
இழுபறியாய் ஆன இழுக்கு .

நாடர்=Ralph Nader ;
Donkey and elephant are the election symbols of Democratic and Republican Parties.

 
 
From:


Pas Pasupathy

unread,
Dec 12, 2008, 4:20:10 PM12/12/08
to yAppulagam / யாப்புலகம்

Sunday November 26, 2000

பூவா ? தலையா ?

பசுபதி


நன்றி நவிலுகின்ற நாளில் அமெரிக்கர்

குன்றிக் குமுறிக் குழம்புவதேன் ? -- மன்றத்தில்

தர்க்கமிட்டும் 'பூவா தலையா ' வழக்கதனில்

 
வெற்றி விளிம்புக்கே என்று.
 
 

மன்றம்= ( நீதி ) மன்றம்

விளிம்பு = (coin) edge

From :



Pas Pasupathy

unread,
Dec 12, 2008, 4:23:03 PM12/12/08
to yAppulagam / யாப்புலகம்

Sunday February 11, 2001

காதல்

பசுபதி




பாரிலே பழசான நோவு -- பாட்டில்
. . பாரதி ராதையைத் தேடிய தீவு.

அகமென்னும் திணையினை ஆய்ந்து -- காமன்
. . . அத்திரப் புண்களின் அவலங்கள் வேய்ந்து
அகவற்பா செய்ததும் அழகே -- வருடம்
. . . ஆயிரம் ஆயினும் இன்னுமக் கதையே. (1)

கரையிலும் தரையிலும் காதல் -- மீசை
. . . நரைத்தவர் மனதிலும் நப்பாசை மோதல்
திரையிலும் மரஞ்சுற்றி ஓடல் -- எட்டுத்
. . . திசையிலும் மாரனின் திரிகால ஆடல். (2)

வள்ளிமேல் முருகனுக்கு நாட்டம் -- இன்றும்
. . . மங்கைமுன் வாலிபர் கண்களின் ஓட்டம்
பள்ளத்தில் பாய்வெள்ள வேகம் -- வெறும்
. . . பெளதீக அல்பமிக் காதலெனுந் தாகம். (3)

பாங்கான பெயருள்ள நோவு -- இன்று
. . . பட்டணப் பேச்சிலே மாய்ந்தவோர் காவு
ஆங்கிலப் பிணியான லவ்வு -- இந்த
. . . அந்நியச் சொல்லிலே கிட்டுமோ நவ்வு ? (4)

அம்பிகா பதியின் தவிப்பு -- பின்பு
. . . ஆங்கில ரோமியோ எனவோர் பிறப்பு
உம்பருக் குண்டேயித் தகிப்பு -- இந்த
. . . உடலிலே உயிரினை ஊட்டும் நெருப்பு (5)

கண்மணி தேனென்று பேசல் -- பின்பு
. . . கல்யாணம் என்றாலோ மனதிலே ஊசல்
நொண்டியான சாக்குகள் சொல்லல் -- பிறகு
. . . நோட்டமிட் டின்னொரு பேதையை வெல்லல். (6)

உள்ளங் குலுக்கிடும் வேட்டல் -- ஒன்று
. . . ஒன்றோடு சேர்ந்தால் ஒன்றாகும் கூட்டல்
மொள்ளமொள்ளக் குறைவற்ற ஊற்று -- காதல்
. . . முன்பெந்த சக்தியும் போய்விடும் தோற்று ! (7)

**
நவ்வு=நன்மை

From:


Pas Pasupathy

unread,
Dec 12, 2008, 4:25:58 PM12/12/08
to yAppulagam / யாப்புலகம்

Sunday March 11, 2001

எலிப் பந்தயம்

பசுபதி


வாழ்க்கையெலிப் பந்தயத்தில் ஓடும் மனிதா! -- உன்றன்
. . . வீட்டினுள்ளே பார்வைதனை வீசு மெதுவாய் !
சூழ்ந்திருக்கும் உன்குடும்பம் அன்புக் குருகி -- உன்னைச்
. . . சுற்றிவந்து ஏங்குவதைப் பாரு துரையே! (1)

எரிச்சலுடன் எழுந்திருந்து காபி குடித்து -- மனையை
. . . ஏறெடுத்தும் பார்த்திடாது போகும் மனிதா!
கரிசனத்தைக் காபியுடன் சேர்த்துக் கொடுக்கும் -- வண்ணக்
. . . கைவளைகள் கொஞ்சுவதைப் பாரு கணவா ! (2)

காலையிதழ் வாரவிதழ் தேடிப் பிடித்தே -- அதில்
. . . கண்புதைத்துக் காலமதைப் போக்கும் மனிதா!
காலருகே சுற்றிவரும் சின்னக் குழந்தை -- அந்தக்
. . . கண்சிரிப்பில் கொஞ்சநேரம் மூழ்கி எழய்யா! (3)

சந்தையிலே பங்குகளின் புள்ளி விவரம் -- போன்ற
. . . சங்கதிகள் நாளுமுருப் போடும் மனிதா!
சந்ததமுன் துக்கசுகம் பங்கு பெறுவாள் -- அவள்
. . . சந்தையில்காய் வாங்கப்பை தூக்கு தலைவா! (4)

நள்ளிரவில் கண்விழித்துக் கணினி வழியாய்த் -- தொலை
. . . நாட்டிலுள்ள நண்பனுடன் பேசும் மனிதா!
பள்ளிதந்த வேலையதில் மூச்சுத் திணறும் -- உன்றன்
. . . பையனுக்கும் கொஞ்சம்வழி காட்டி விடய்யா! (5)

சாலையோரம் தள்ளிநின்று வாழ்வைச் சுவைப்பாய் ! -- உன்றன்
. . . சம்பளமே சாரமென்று நம்பி விடாதே !
காலைமுதல் மாலைவரை ஓடும் மனிதா! -- இங்கே
. . . காலத்தேர் கருணையின்றிச் சுற்றும் விரைவாய்! (6)

From :
 



Pas Pasupathy

unread,
Dec 12, 2008, 4:28:08 PM12/12/08
to yAppulagam / யாப்புலகம்

Sunday May 13, 2001

புலவி நுணுக்கம்

பசுபதி




வள்ளுவர் ஆய்ந்த புலவி -- பின்பு
. . . மன்மதன் வந்துதரு வானோ கலவி ?
உள்ளத்தில் ஊறுமே கூடல் -- ஆனால்
. . . உஷ்ணமாய்ச் சொல்லில் உதிப்பதோ ஊடல்! (1)

பரந்தவென் மார்புக்(கு) அழைத்தேன் -- 'அது
. . . பரத்தையர் சொத்தெ 'னச் சீறி மறுத்தாள்.
பரமனின் கோயிலுக்(கு) அழைத்தேன் -- ' அங்கு
. . . பாவையர் தேடியோ ? ' என்றே கரித்தாள். (2)

காதில் மலர்சொருகி வந்தேன் -- ' எந்தக்
. . . கன்னி கொடுத்தனள் ' என்றே குடைந்தாள்.
வாதம் மறந்திடச் சொன்னேன் -- முதலில்
. . . மனதிலுள பெண்ணை மறந்திடச் சொன்னாள். (3)

பின்னலில் பூச்சூட்டப் போனேன் -- ' எந்தப்
. . . பெண்ணுடன் ஒப்பெ 'ன் றெரிந்தே வெகுண்டாள்.
' இன்பத்தின் உச்சிநீ ' என்றேன் -- ' வேறு
. . . யாரைவிட ? யாரைவிட ? ' என்றே தொளைத்தாள். (4)

' என்றென்றும் வாழிநீ ' என்பாள் -- என்று
. . . எண்ணி அவள்பக்கம் தும்மிநான் நின்றேன்;
' இன்றுனை நானெண்ண வில்லை ! -- இரதி
. . . எவளுன்னை எண்ணியே ஏங்குறாள் ? ' என்றாள். (5)

' மறவேனிவ் வாழ்வினில் ' என்றேன் -- ' மறு
. . . பிறப்பினில் என்னை மறப்பயோ ? ' என்றாள்.
' இரவெல்லாம் தூக்கமிலை ' என்றேன் -- ' பகலில்
. . . என்நினைவு ஏனோ இழந்தனை ' என்றாள். (6)

நல்லுணவில் ஊறுகாய் போலே -- காதல்
. . . நளபாகம் ஆகவே வேணுமே ஊடல் !
புல்லலின் இன்பசுகம் பின்னே -- குறள்
. . . போற்றிடும் ஊடலின் நுண்மைகள் முன்னே ! (7)


(திருக்குறளின் 132-ஆம் அதிகாரத்தைத் தழுவியது.)


From:



Pas Pasupathy

unread,
Dec 12, 2008, 4:30:16 PM12/12/08
to yAppulagam / யாப்புலகம்

Saturday June 2, 2001

சொல்லேர் உழவர்


பசுபதி

மண்நேய நல்லுரத்தில் மார்க்ஸீய செம்புனல்பாய்

பண்ணைப் பயிர்பெற்ற பாராட்டைக் காணீர்!

தொராந்தோ இயல்விருது சொல்லேர் உழவர்

சுராவின் எழுத்துக்கோர் ஷொட்டு.

[ பிரபல எழுத்தாளர் திரு சுந்தர ராமசாமி (சு.ரா) க்குக் கனடாவில் உள்ள டொரான்டோ பல்கலைக் கழகத்தின் தென் ஆசியப் பிரிவும், 'தமிழ் இலக்கியத் தோட்ட 'மும் இணைந்து மே 25, 2001 -அன்று 'இயல் விருது ' வழங்கிய நிகழ்ச்சி கண்டு எழுதியது.]
 
 
From :



Pas Pasupathy

unread,
Dec 13, 2008, 4:19:39 PM12/13/08
to yAppulagam / யாப்புலகம்

Monday June 18, 2001

முத்தமிடு!

பசுபதி





போகி ஒருநண்பன் - எனக்குப்
. . போதித்த சொற்களிவை.
'தேகம் நிரந்தரமோ ? - இதனைச்
. . சிந்தனை செய்துவிடு!
சோகம் தவிர்த்துவிடு -தினநள
. . பாகம் புசித்துவிடு!
மோகக் கடல்மூழ்கி -- மங்கை
. . முத்துகள் முத்தமிடு! '

யோகம் பயில்பெரியார் - ஒருவர்
. . என்னிடம் சொன்னதிது.
' தேகம் ஒருகோயில் - அதனைத்
. . தினமும் வணங்கிவிடு!
நாகம் எனவளைந்தே -- உனது
. . நாபியை முத்தமிடு!
ஏகன் ஒருவனையே -- நினைத்து
. . இந்த்ரியம் கட்டிவிடு! '

காவி உடுத்தியவர் -- எனது
. . காதில் உரைத்ததிது.
' தேவை சுருக்கிவிடு -- உனது
. . சிந்தை விரித்துவிடு!
பாவம் வெறுத்துவிடு -- ஆனால்
. . பாவியை முத்தமிடு!
சாவில் அமைதியுறு -- ஆன்ம
. . சாதனை செய்துவிடு! '

கனவில் அருவுருவம் -- என்றன்
. . கருத்தில் பதித்ததிது.
'நினைவை எரித்துவிடு -- உன்றன்
. . நெற்றிக்கண் பார்வையிலே!
மனதை முழுங்கிவிடு -- தினமும்
. . மெளனத்தை முத்தமிடு !
எனதெனும் எண்ணமதைக்-- கொன்றே
. . இறையுன தாக்கிவிடு ! '.


From :


Pas Pasupathy

unread,
Dec 13, 2008, 4:21:22 PM12/13/08
to yAppulagam / யாப்புலகம்

Saturday July 7, 2001

நாட்டு நடப்பு

பசுபதி




நட்ட நடுநிசிக் காட்சி -- சன
நாயக நற்றமிழ் நாட்டிற்கு வீழ்ச்சி !

பண்பற்ற செய்கையின் உச்சம் -- இந்தப்
. . பழிவாங்கும் போக்கோ அரசியல் துச்சம்;
கண்ணியம் உள்கட்டுப் பாடு -- கடமை
. . காற்றில் பறந்தது நம்வெட்கக் கேடு.

அதிகாரம் என்பதோர் போதை -எல்லை
. . அதிகமாய் மீறினால் ஆபத்துப் பாதை;
முதிராத ஆட்சியின் காதை -- அதில்
. . முறைகேடு கண்டால் உடலுக்குள் ஊதை*.

மனிதர்க்கு வேண்டும் உரிமை -- அதை
. . மதியாத ஆட்சியில் ஏது பெருமை;
பணிவுள்ள சட்டக்கண் டிப்பு -- இதைப்
. . பயிலாத ஆட்சிக்(கு) இருக்கும் இழப்பு.

மக்கள் கொடுத்திடும் வாக்கு -- அதை
. . மதித்து நடப்பது கற்றவர் போக்கு;
வக்கிர புத்தியோர் சீக்கு -- வாய்மை
. . வைத்தியம் செய்து களைகளை நீக்கு.

கள்ளப் பணத்தின் புழக்கம் -- இதைக்
. . காப்பது தொண்டரின் கெட்ட பழக்கம்;
குள்ள மனத்தின் அழுக்கு -- இதைக்
. . கொய்யாது போனாலோ நாட்டிற்(கு) இழுக்கு.

*ஊதை=குளிர்க் காற்று.

From:

Pas Pasupathy

unread,
Dec 13, 2008, 4:23:27 PM12/13/08
to yAppulagam / யாப்புலகம்

Sunday September 2, 2001

அன்னையும் தந்தையும்

பசுபதி


அன்னை பூமி இந்தி யாவின்

. . அழகு மயிலை ஊரடா!

தந்தை நாடு என்றன் வாழ்வில்

. . தண்மை சூழும் கானடா!

பெற்ற மக்கள் பளுவில் விழிகள்

. . பிதுங்கும் அன்னை நாடடா!

கற்ற குடிகள் ஏற்றம் செய்து

. . கைகள் நீட்டும் கானடா!

மணலில் தமிழை எழுதி அறிவை

. . மலர வைத்த தாயடா!

கணினி மூலம் கவிதை யாக்கும்

. . கல்வி தந்த கானடா!

தொன்மை யான சங்கம் ஈன்ற

. . சொன்ன அன்னை நாடடா!

என்றும் புதுமை மதுவை ஊட்டி

. . இன்பம் சேர்க்கும் கானடா!

ஆன்ம ஞானம் ஒளிர வைக்க

. . அன்னை வேண்டு மேயடா!

மேன்மை தாழ்வு பார்த்தி டாது

. . மெச்சும் தந்தை கானடா!

வேலை யின்பம் கான டாவில்

. . வெல்ல மென்றி னிக்குதே!

மாலை தன்னில் பாழும் நாசி

. . வாச மல்லி தேடுதே!

கயிலை என்று கீரன் கண்ணில்

. . காட்சி தந்த காளத்தி;

மயிலை என்று கான டாவும்

. . மாலை வேளை மாறுமோ ?

அன்னை மடியில் பாதி வாழ்வு;

. . தந்தை முதுகில் மீதியோ ?

இன்னும் ஈசன் தந்த மிச்சம்

. . எந்த நாட்டில் தீருமோ ?


From:



2008/12/13 Pas Pasupathy <pas.pa...@gmail.com>

Pas Pasupathy

unread,
Dec 13, 2008, 4:26:10 PM12/13/08
to yAppulagam / யாப்புலகம்

Monday September 10, 2001

மூன்று குறும்பாக்கள்

பசுபதி



[ Limerick என்ற ஆங்கிலக் கவிதை வடிவினைக் 'குறும்பா ' வாகத் தமிழில் முதலில் உருவாக்கினவர் ஈழத்துக் கவிஞர் 'மஹாகவி ' (உருத்திரமூர்த்தி). ]

1.
பட்டணத்தில் படிக்கின்ற கிட்டு
பந்தயத்தில் போக்கிடுவான் துட்டு !
. . கொட்டினாள்தாய் சுடுசொல்லை;
. . குணத்தையவன் விடவில்லை.
சட்டென்று போட்டாள் 'கால் கட்டு ' !

2.
ஊரிலுளோர் ஊமையெனுங் காசி
ஆரிடமும் பேசாச்சங் கோசி !
. . காரிருளில் பெண்நின்றாள் ;
. . 'காட்டெனக்கு வழி 'யென்றாள்.
மாறிவிட்டான் மங்கையுடன் பேசி!

3.
உணவுக்குப் பின் 'பாதாம் கீரை '
உறிஞ்சிடுமோர் மங்கைபெயர் தாரை!
. . அணங்கினெடை ஏறிடவே
. . அருந்துகிறாள் 'மடக் 'கெனவே
உணவுக்குப் பதிலாய்த்தண் ணீரை !

From;
 

Pas Pasupathy

unread,
Dec 13, 2008, 4:28:17 PM12/13/08
to yAppulagam / யாப்புலகம்

Monday September 17, 2001

கருப்புச் செவ்வாய்

பசுபதி




கழுகு:

விடிந்தது கருப்புச் செவ்வாய்
. . செந்தழல் மேனிச் செவ்வாய் !
வெடித்தது வஞ்சக் குண்டு !
. . வெறுப்புமிழ் விமானம் தாக்கி
இடிந்தது வணிக மையம் !
. . எரிந்தது இழந்தோர் வையம் !
மடிந்தது மனித நேயம் !
. . மறக்குமோ யூயெஸ் தேயம் ?

புறா:

கூவிடும் மக்கள் சோகம்
. . குறைத்திடும் கொலைஞர் தாகம் !
யாவரும் கேளிர் என்றும்
. . யாதுமே நம்மூர் என்றும்
தீவிர வாதம் பேசும்
. . தீயவர் அறிவார் நாளை !
ஏவுவோம் அமைதிக் குண்டு !
. . தூவுவோம் அன்புச் செண்டு !

கழுகு:

சூளுரைப்போம் துடித்தெழுந்த அமெரிக்க நாட்டிற்கு,
. . . 'தோழா! உங்கள்
தோளுக்குத் தோள்கொடுத்துத் துஷ்டர்செய் வன்முறையைத்
. . . துண்டம் செய்வோம் !
வாளதனை உறைக்குள்ளே வைத்திருப்போம்; பொறுத்திருப்போம்;
. . . வாய்ப்ப ளிக்கும்
நாளதனில் பாய்ந்திடுவோம் ; நசுக்கிடுவோம் எதிரிகளை ;
. . . நமக்கே வெற்றி ! '

புறா:

விண்வெளியின் மேலுண்டோ வேலி ? விசாச்சீட்டு
வன்முறைக்கு வாங்கவும் வேண்டுமோ ? -- அன்றிழந்த
கண்ணுக்குக் கண்பறிக்கக் கங்கணம் கட்டினால்
அந்தகர்கள் ஆவர்உல கோர்.

****

 
From:



Pas Pasupathy

unread,
Dec 19, 2008, 12:51:43 PM12/19/08
to yAppulagam / யாப்புலகம்

Monday September 24, 2001

பலகாரம் பல ஆகாரம் !

பசுபதி



தட்டில் ததும்பிடும் சாம்பார் அணைநடுவில்
கெட்டித்தேங் காயரைத்த சட்னியுடன் -- வெட்டவெட்ட
வட்ட வடிப்பஞ்சாய் வந்துவிழுஞ் சூடான
இட்டலிக்கு வேறேது ஈடு. (1)

இட்டலிக்(கு) ஏற்றதுணை இவ்வுலகில் ஏதென்னும்
பட்டிமன்றம் பள்ளியிலே பார்த்ததுண்டு ; நற்சுவை
முட்டும் மிளகாய்ப் பொடிமூழ்த்தும் எண்ணையா ?
சட்டினியா ? சாம்பாரா ? சாற்று. (2)

உருளைக் கிழங்கதனை உள்ளடக்கி மேனி
முறுகலாய்ச் சாம்பாரில் முக்குளித்துச் சட்னியுடன்
வேசறவு நீக்கிநல் வெண்ணெய் மணங்கமழுந்
தோசைச் சுவைக்குண்டோ தோற்பு. (3)

வெங்காயம் வெவ்வேறு காய்களுடன் வெந்நீரில்
தங்க ரவைகிளறிச் சாறிட்டுத் தாளித்துச்
செப்பமாய் முந்திரியும் சிற்றளவு சேர்ந்திருக்கும்
உப்புமா ஒப்பில்லா ஊண். (4)

விடிகாலைக் கூதலிலே வெம்பனிசூழ் நாட்டில்
அடியேன் அலுவலகம் ஓடும் அவசரத்தில்
துய்த்திடவோர் தொன்னைதனில் வெங்காயக் கொத்ஸுடனே
நெய்யொழுகு வெண்பொங்கல் நேர். (5)

****
வேசறவு=மனச்சோர்வு; சாறு=(எலுமிச்சைப்பழச்)சாறு ;


From:


Pas Pasupathy

unread,
Dec 19, 2008, 12:52:57 PM12/19/08
to yAppulagam / யாப்புலகம்

Monday October 1, 2001

குழப்பக் கோட்பாடு

பசுபதி



பட்டிக்காட்டில் பறந்திடுமோர்
பட்டுப்பூச்சி சிறகடித்தால்
பட்டணத்தில் பருவமழை பலக்கும்.

காலவெளியின் ஞாலத்தில்
அணுவொன்றின் அக்குளில்
ஒரு 'கிசுகிசு ';
வேறிடத்தில் வேறோர் துகள்
விலாப் புடைக்க சிரிக்கும் !
குழப்பக் கோமான் குதூகலிக்கும்
விஞ்ஞான விளையாட்டு !
அறிவியலின் புதுப்பாட்டு!
குழப்பக் கோட்பாடு!

காலவெளியைச்
சொடுக்கியது ஒரு சலனம்.
மயிலையில் ஒரு ஜனனம்.
வாயசைத்தது வள்ளுவப் பூச்சி.
'ஒன்றாக நல்லது கொல்லாமை
. . . . .
பொய்யாமை நன்று. '

அதிர்வுகள் அமுங்கின;
ஆண்டுகள் கழிந்தன.
குஜராத்தில் ஓர் அக்டோபர்.
கருவுற்ற ஒரு கார்மேகம்
சிலிர்த்தது; சிரித்தது.
அஹிம்சை மின்னியது; வாய்மை இடித்தது.
பெய்தது மோகனதாஸ் மழை.
குளிர்ந்தது பாரத மண்.

மீண்டும் வருமா வண்ணப் பூச்சி ?

******
குழப்பக் கோட்பாடு = Theory of Chaos


From:

Pas Pasupathy

unread,
Dec 19, 2008, 12:54:22 PM12/19/08
to yAppulagam / யாப்புலகம்

Sunday October 7, 2001

பின் லேடன்

பசுபதி



வன்முறைச் சின்னம் 'பின் லேடன் ' -- இவனைக்
கொன்றிடில் வென்றியென்(று) ஆர்ப்பவன் மூடன்.

புகைநடுவில் தீயெரியும் உண்மை -- வன்முறைப்
. . புதிரை அவிழ்த்தால் உலகுக்கு நன்மை !
பகைமரம் வெட்டல்மிக எண்மை -- அதன்வேர்
. . பரவாமல் செய்வதே கற்றோரின் தன்மை! (1)

வினையறுக்க முந்துமோர் ஆளு -- அவனை
. . 'வினையை விதைத்தது யாரெ 'ன்று கேளு !
பனையுயரம் நில்பலாத் காரம் -- அதனைப்
. . பாலூட்டிச் சீராட்டல் யாருப சாரம் ? (2)

கண்ணாடி மாளிகை மக்கள் -- பிறர்மேல்
. . கனவிலும் வீசலா மோபெருங் கற்கள் ?
தண்மையே நல்வாழ்வின் சாரம் -- உரிய
. . தண்டனை செய்திட வந்திடும் நேரம் ! (3)

கத்தியை நம்பியே வாழ்வான் -- முடிவில்
. . கத்தியே காலனாய் வந்துயிர் மாள்வான் !
புத்தியே தந்திடும் சித்தி -- இந்த
. . யுத்தத்தில் வெற்றிபெற வேண்டும்நல் உத்தி ! (4)

மார்பினில் பாய்வது யாரு ? -- மேற்கு
. . வளர்த்த கடாவாம் தாலிபான் பாரு !
தேர்ந்து விரோதியை வெல்லு ! -- கூட
. . வேற்றினம் மேலுள் வெறுப்பையும் கொல்லு! (5)

அரசியல் வாதியுப தேசம் -- கேட்டு
. . ஆத்திரப் பாதையில் போகுதே தேசம் !
பரஸ்பரம் மானிட நேசம் -- இருப்பின்
. . பாரிலே வாழலாம் இன்பமாய் வாசம் ! (6)

வெறுப்பினால் வந்ததித் துக்கம் -- நிறைய
. . வேண்டும் நமக்கே இனநல்லி ணக்கம் !
கறுவினால் மூண்டதீ யாண்டும் -- அணையக்
. . கருணை மழைபெய்ய ஈசனருள் வேண்டும் ! (7)

*******
வென்றி=வெற்றி; எண்மை=இலேசு; கறு=ஆழ்ந்த பகைமை.


From:

Pas Pasupathy

unread,
Dec 19, 2008, 12:56:12 PM12/19/08
to yAppulagam / யாப்புலகம்

Monday October 22, 2001

பயராத்திரி

பசுபதி



மன்ஹாட்டனில் வந்தானொரு
. . . மஹிஷாசுர மூர்க்கன்;
. வணிகர்மையம் இடித்தானுடன்
. . . மடிந்தார்பலர் அன்று.

பண்டைக்கறுப் பகையால்படர்
. . . கிருமிச்சமர் அஞ்சிப்
. பாரெங்கணும் கிலிராஜ்ஜியம்
. . . பயராத்திரி இன்று.

நம்நாட்டினர் கொண்டாடிடும்
. . . நவராத்திரி நாளில்
. நயவஞ்சக அசுரர்களை
. . . நசித்தாள்ஜய துர்க்கை.

வன்பாலையில் நிகழ்தீவிர
. . . வாதாசுரப் போரில்
. வரந்தந்திடு வஜ்ரேஸ்வரி !
. . . வாளிற்துணை நிற்பாய் !

****
மன்ஹாட்டன்=Manhattan;
கறு = ஆழ்ந்த பகைமை;
கிருமிச்சமர் = biological war .

 
From:

Pas Pasupathy

unread,
Dec 19, 2008, 12:57:37 PM12/19/08
to yAppulagam / யாப்புலகம்

Sunday November 11, 2001

இலையுதிர் காலம்

பசுபதி



வேகமான நடைக்குப்பின்
மேல்மூச்சு, கீழ்மூச்சு.
'மேப்பிள் ' மரத்தடிப் பெஞ்சில்
வியர்த்தபடி விழுந்தேன்.

வழக்கமாய் வம்பளக்க வரும்
வயோதிக நண்பர் இன்றும்
வரவில்லை. அவரைப் பார்த்து
வாரம் ஒன்றாச்சே ?

பச்சோந்தி போல் நிறமாறிப்
பழுப்புச் சிவப்புப் படர்ந்த
பச்சையிலை எந்தலை மேல்
'பாரசூட் ' செய்தது.

நண்பரின் நகைப்பு
நினைவில் துளிர்த்தது.

'பச்சையிலை சிவப்பாவது வெறும்
பருவத்தின் சேட்டை!
சிவப்பு பச்சையாவதோ
சிருஷ்டியில் அபூர்வம்!
சேர்ந்தேன் முதலில்
சிவப்புக் கட்சி !
அஞ்சுவருடமாய்ப் 'பசுமை
அமைதி 'க் கட்சி ! '

நகைப்பு நிற்கும்.
நரைமுடி சூடேறும்.

'பரந்த மரத்தடியில்
பச்சையிலையும் விழும்.
பறவை எச்சமும் விழும் !
எந்த எச்சம் தெரியுமா ? '

கண்கள் சிவக்கும்.
கைத்தடி ஆடும்.

'பரிதியை மறைத்துப்
பறக்கும் பேய்ப்பறவை.
காலனை மடியில் கட்டிக்
கனலுமிழும் கழுகு.
பொத்தானை அமுத்தினால்
சைத்தானை எச்சமிடும்
போர்விமானப் பருந்து.
பச்சிளம் சிறாரைச்
சிவப்புச் சேற்றில்
புதைக்கும் எச்சம். '

நண்பரின் வீட்டுப் பக்கம்
நடையைக் கட்டினேன்.

கதவைத் திறந்த பெண்மணியின்
கனத்த முகம் பொட்டில் அறைந்தது.

இலையுதிர் காலம்.
பழமுதிர்க்கும் காலன்.
பசுமைப் பழம்
அமைதி அடைந்துவிட்டது.

'காரணமதாக வந்து புவிமீதே
காலன் அணுகா திசைந்து
கதி காண.... '
பழமுதிர் சோலை. ஆறாம்
படைவீட்டுத் திருப்புகழ்.
பாடியே நாடினேன்
வீடு.

*********
பசுமை அமைதி = Green Peace

From:

Pas Pasupathy

unread,
Dec 19, 2008, 1:00:05 PM12/19/08
to yAppulagam / யாப்புலகம்

Sunday November 18, 2001

இன்னும் கொஞ்சம்

பசுபதி




வியப்பூட்டும் அறிவுச் சக்தி ,
. . வியாபார வெற்றி யுக்தி
வியர்வையின்றி கிட்டா என்றே
. . மேல்நாடு கூறும் புத்தி !
'ஜயமுண்டு ' ஜபமே செய்து
. . பயமின்றி இன்னும் கொஞ்சம்
உயர்வானில் பறக்க வேண்டும்,
. . உழைப்பென்னும் சிறகை வீசி !

தொன்மையிலும் சொன்னம் உண்டு
. . தொலைநாட்டில் கழிவும் உண்டு !
அந்நியத்துத் தண்ணீர்ப் பாலை
. . அருந்திடுவோம் அன்னம் போல !
கந்தலான கருத்தை ஓட்டிக்
. . காற்றடிக்க இன்னும் கொஞ்சம்
சன்னல்கள் திறக்க வேண்டும் ,
. . சாரலிலே புதுமை வீச !

தாய்மொழியில் கல்வி ஊட்டத்
. . தடைஇருப்பின் உடைக்க வேண்டும் !
ஆய்வுகளின் தாக்கம் ஓங்க
. . ஆழமாக உழுதல் வேண்டும் !
சாய்வற்ற நீதி என்றே
. . சரித்திரம் படைக்க வேண்டும் !
பாய்ச்சலிலே இன்னும் கொஞ்சம்
. . பெளருஷத்தைக் காட்ட வேண்டும் !

From:

Pas Pasupathy

unread,
Dec 23, 2008, 1:50:18 PM12/23/08
to yAppulagam / யாப்புலகம்

Sunday November 25, 2001

இந்த மண் பயனுற வேண்டும்

பசுபதி



கூழ்வேண்டிக் கெஞ்சுபவர் குழிவிழுந்த கண்ணில்
. . கொடுங்காலன் கண்டுளம் கொதிப்பவர் வேண்டும்;
ஊழ்வினையால் வறுமையெனும் உளுத்தபழங் கருத்தை
. . உதறிடநல் அறிவுரை உரைப்பவர் வேண்டும்.
வாழ்வினிலே வளமென்று வாக்குறுதி கூறி
. . வாய்கிழியும் அரசியல் வாதிகள் ஒதுக்கி
ஏழ்மையெனும் இருளதனை இல்லையெனச் செய்யும்
. . இளைஞரால் இந்தமண் பயனுற வேண்டும்.

விதவிதமாய் வண்ணங்கள் விரித்தாடும் வெண்மை
. . வேற்றுமையுள் ஒற்றுமை மிளிர்ந்திடும் உண்மை;
இதயங்கள் அனைத்திலுமே இரத்தநிறம் சிவப்பு;
. . இறையொன்றே என்றிட ஏன்மிகக் கசப்பு ?
மதமென்னும் புதரினிலே மறைந்திருந்து வெறியை
. . வளர்த்துவிடும் தீவிர வாதிகள் விலக்கி
மதஇனநல் இணக்கமெனும் மரத்தினிலே மலரும்
. . மக்களால் இந்தமண் பயனுற வேண்டும்.

தொன்மரபை, செந்தமிழின் சொல்லழகைத் துகைக்கும்
. . தொலைக்காட்சித் தொல்லையைத் தொலைப்பவர் வேண்டும்.
இன்னிசையும் இலக்கியமும் இறவாமல் காக்கும்
. . இலக்குடனே இல்லறம் ஏற்பவர் வேண்டும்.
சின்னதென்றும் பெரியதென்றும் செந்தழலில் உண்டோ ?
. . சீரழிக்கும் சிறுதிரைப் பெட்டியைத் தவிர்த்துப்
பண்பாட்டுப் பழந்தேனைப் பாலோடு புகட்டும்
. . பாவையரால் இந்தமண் பயனுற வேண்டும்.

From :



Pas Pasupathy

unread,
Dec 23, 2008, 1:51:46 PM12/23/08
to yAppulagam / யாப்புலகம்

Sunday December 2, 2001

உதிர்ந்த இசைமலர்

பசுபதி



இங்கிலாந்து நமக்கீந்த இனியஜார்ஜ் ஹாரிஸனே !
வங்கதேச உதவிக்கு வந்துநிதி தந்தவனே !

இந்தியரின் தயத்தில் என்றும்வாழ் இசையுனதே !
இன்றிந்த இசையுலகை இருள்கவிந்து மூடியதே !

ரவிசங்கர் நட்புற்றாய் ! இறைதேடும் பண்புற்றாய் !
அரேகிருஷ்ண நாமமதை அரவணைத்தே இன்புற்றாய் !

ஞாலமெங்கும் புகழ்பெற்ற நால்வரின் நாதம்நீயோ ?
காலனைக் கிதாரிசையால் கவர்ந்திடவே கடுகினையோ ?

கீர்த்திபல பெற்றாலும் குடவிளக்காய் சுடர்ந்தனையே !
கார்த்திகைத் தீபமெனக் கர்த்தருடன் கலந்தனையோ !

பாரதம்சொல் ஆன்மீகம் பலர்நாடக் காரணம்நீ !
ஹாரிஸனே ! உன்னாத்மா ஹரிஈசன் பக்கமினி !

'கதிரவன் எழுங்காட்சி கணநேரம் மீறிடுமோ ?
அதிர்ந்திடும் அடைமழையும் அதிகநேரம் பெய்திடுமோ ?

உதிப்பதெல்லாம் ஒடுங்கும் 'எனும் உன்னுரையோ மெய்யென்றும் !
உதிர்ந்தசை மலர்மணமும் உலகெங்கும் வீசட்டும்!

*****


From:


Pas Pasupathy

unread,
Dec 23, 2008, 1:53:50 PM12/23/08
to yAppulagam / யாப்புலகம்


Monday December 10, 2001

குரல்வளம்

பசுபதி



திருவருள் தேடினேன் சிம்மக்
. . குரலென்னைச் சேர்ந்திடவே;
வருடங்கள் ஓடி மறைந்தன;
. . வல்லோசை வாய்க்கவில்லை.
மருந்தொன்(று) அறிந்தேன்; மறைக்கா(து)
. . உரைப்பேனம் மர்மமதை !
குரல்வளம் கோடை இடியாய்க்
. . குமுறும் குளிக்கையிலே ! (1)

மறுவற்ற சங்கீத மன்னன்
. . மதுரை மணிநினைவில்
சரமாரி போல்வரும் சர்வ
. . லகுவான சங்கதிகள்
சிரமமே யின்றிச் திரிகாலப்
. . போக்கில் சிறந்திடும்;என்
குரல்வளம் கோலக் குயிலெனக்
. . கொஞ்சும் குளிக்கையிலே ! (2)

சுருதிபோல் வெந்நீர் சுகமாய்த்
. . தலைமேல் சொரியுமொலி ;
தெறிக்கும் பிடிகளோ ஜீ.என்.பி
. . சார்போல் செவிக்குணவாய்
பிருகாக்கள் கூடிப் பிசிறின்றி
. . அங்கே பிறக்கும்;என்றன்
குரல்வளம் கேட்டால் குலாம்அலி
. . என்பீர் குளிக்கையிலே ! (3)

இன்னிசை மன்னவன் எம்.கே.டி
. . போல எழுச்சியுடன்
பண்ணிசை பொங்கிடப் பைந்தமிழ்ப்
. . பாடலைப் பாடிடுவேன் !
அன்றாடக் கச்சேரி என்றன்
. . அகமதில் ஆவதனால்
சென்னை இசைவிழா செல்லுமோர்
. . வெட்டிச் செலவிலையே ! (4)

From:

Pas Pasupathy

unread,
Dec 23, 2008, 1:55:13 PM12/23/08
to yAppulagam / யாப்புலகம்


Saturday December 15, 2001

வலைதந்த வரம்

பசுபதி



தண்டமிழில் கவியாப்போர் தவறி ழைத்தால்
. . தள்ளிடுமோர் சங்கத்துப் பலகை இல்லை ;
வென்றிக்கோர் விலையாகப் புலவர் காதை
. . வெட்டிடுமோர் குறடுகொண்ட வில்லி இல்லை ;
குன்றனைய குற்றங்கள் குவிக்கும் என்னைக்
. . குறைகூறக் கூரறிவுக் கீரன் இல்லை ;
மின்குப்பை ஜல்லியடி வீணர் மேயும்
. . மின்வலையில் மேதையென மின்னு வேனே --- வெறும்
. . மேம்புல்மேய்ந் தேகாலம் தள்ளு வேனே ! (1)

செருகலெனச் சீறும் 'டி. கே.சி. ' இல்லை ;
. . சிரச்சேதம் செய்ஒட்டக் கூத்தன் இல்லை ;
கருத்துகளைக் கேலி செய்யக் 'கல்கி ' இல்லை ;
. . கடிந்துவசை சொல்காள மேகம் இல்லை ;
விருத்தமென்று வருத்தப்பா வீச லாமே ;
. . வீரபத்ரர் விதியெல்லாம் மீற லாமே!
இறுமாப்பை ஒளிவளையம் என்ற ணிந்தே
. . இணையத்தில் இரவியென இலங்கலாமே ! --- இங்கே
. . எளிதாக ஏமாற்றிப் பிழைக்க லாமே ! (2)

அம்பலத்தில் அங்குமிங்கும் அஞ்சல் மூலம்
. . அன்றாடம் அரங்கேறி ஆடு வேனே !
தம்பட்டம் தட்டுவதைத் தவமாய்க் கொண்டு
. . சளைக்காமல் தற்பெருமை சாற்று வேனே !
சம்பந்தம் சற்றுமின்றிச் சான்றோர் பேரைச்
. . சட்டென்று தகவலிலே சொருகு வேனே !
வம்புகளை வாய்மையென மாற்று வேனே!
. . வலைஞனென மாபெரும்பேர் வாங்கு வேனே ! --- வைய
. . வலைதந்த வரமெனமார் தட்டு வேனே ! (3)

****
வீரபத்ரர்= 'விருத்தப்பாவியல் ' ஆசிரியரான வீரபத்திர முதலியார்;
ஒளிவளையம் = halo;
வலைஞன் = வலைக் கலைஞன் .


From:

Pas Pasupathy

unread,
Dec 24, 2008, 4:25:11 PM12/24/08
to yAppulagam / யாப்புலகம்

Saturday December 29, 2001

தேவன் அவதாரம்

பசுபதி



வந்துதிக்கும் புத்தாண்டை வரவேற்கும் விருந்தில்
. . வழக்கம்போல் ஒருநண்பர் மனையதனில் புதிய
. . வாக்குறுதிப் பட்டியலை வாய்விட்டுப் படித்தேன் !

'மின்னிணைய கழிவுகளை மேய்ந்திருக்கும் போது
. . விதம்விதமாய் சிற்றுண்டி வெட்டுவதை விட்டு
. . மேனிஎடை குறைக்கவழி மேற்கொள்ளல் வேண்டும் ! '

'செந்தமிழின் செல்வமெலாம் தெளிவுறவே தேர்ந்து,
. . சிறுவருடன் தமிங்கிலத்தில் சீராட்டல் தவிர்த்துத்
. . தினந்தோறும் தாய்மொழியில் தேன்பாய்ச்ச வேண்டும் ! '

சென்றஆண்டும் செபித்ததிது ! செயலாற்ற வில்லை :-((
. . தேவன்அவ தாரமிது ; திரும்பவந்து நிற்கும் !
. . சித்ரபானு செனித்தபின்னர் சூளுரைப்பேன் மீண்டும் ! :-))

****
தமிங்கிலம் =தமிழ்+ஆங்கிலம்;
சித்ரபானு = ஏப்ரலில் வரப்போகும் தமிழ்ப் புத்தாண்டு.


From :

 

Pas Pasupathy

unread,
Dec 24, 2008, 4:26:42 PM12/24/08
to yAppulagam / யாப்புலகம்

Sunday January 13, 2002

கன்னிகைத் தைக்கோர் கண்ணூறு!

பசுபதி



நெய்மணம் வீசிடும் பொங்கலில் கல்லின்
. . நெருடல் சுவையைக் கெடுப்பதுபோல்
தைமகள் வீசும் எழில்தனில் முள்ளெனத்
. . தைக்கும் குறையொன்று கண்டதுண்டோ ? (1)

பொங்கலைத் தந்த தைத் திங்கள் சிரித்ததும்
. . பூவையர் வாழ்வில் வழிபிறக்கும் !
மங்கையின் தந்தைதம் வாழ்வில் குவித்திட்ட
. . வங்கிப் பணத்தில் குழிபிறக்கும் ! (2)

கைமாறும் சீதனம் கன்னிகைத் தைக்கொரு
. . கண்ணூ றெனவே தெரியலையோ ?
தைமாதக் கல்யாணம் ஒன்றில் கரும்பதன்
. . சக்கை நடப்பதைப் பார்த்ததுண்டோ ? (3)

பெண்வாழ்வு பொங்கிடும் தைமாதம்; பெண்களைப்
. . பெற்றவர் வீடோ அடைமானம் !
புண்ணிது தைமகள் கோல எழில்தனில் ;
. . பொங்க லினிக்குமோ பெற்றவர்க்கு ? (4)

பூவை முகர்ந்திடப் பூக்கொடி வெட்டியே
. . போடும் கொடுமையைப் பார்த்ததுண்டோ ?
பாவைதந் தைவர தட்சிணை நல்கும்
. . பணப்பசு என்றே கறப்பதுவோ ? (5)

வீட்டு மருமகள் தீபமென்பார்; வெள்ளி
. . விளக்குகள் சீதனம் கேட்டிடுவார்;
பாட்டுகள் பாடப்பெண் தேடிடுவார்; பெற்றோர்
. . படுகின்ற பாட்டை மறந்திடுவார் ! (6)

கற்றோர் பரிசம் கொடுப்பது நீக்கிக்
. . கரும்பென வாழ்ந்திடக் கும்மியடி !
பெற்றோர் விடுதலை பெற்ற மகிழ்ச்சிகள்
. . பேசிக் களிப்போடு கும்மியடி ! (7)

****

From:

Pas Pasupathy

unread,
Dec 24, 2008, 4:28:05 PM12/24/08
to yAppulagam / யாப்புலகம்

Sunday January 20, 2002

கண்ணகி

பசுபதி



சென்னைக் கடற்கரைச் சாலையிலே -- எங்குத்
. . தேடியும் உன்சிலை காணலையே !
சென்றதின் காரணம் சொல்லுவையோ -- அந்தச்
. . சென்னைக்கு மீண்டும் திரும்புவையோ ? (1)

தண்டமிழ் நாட்டுத் தலைநகரில் -- வீண்
. . தமிங்கிலம் பாய்ந்ததோ காதினிலே ?
எந்தையர் நாடெனும் போதினிலே -- ஒரு
. . ஏக்கம் பிறந்ததோ மூச்சினிலே ? (2)

'வார்த்த சிலைஅழ கானதடி ! -- அபி
. . மான நடிகையின் சாயலடி ! '
பார்த்தவர் வம்பு பரப்புவதைக் -- கேட்டுப்
. . பாவையுன் உள்ளம் பதறியதோ ? (3)

கற்பினைக் கற்காலக் கற்பனைதா(ன்) -- என்று
. . கற்றவர் பேசல் கசந்ததுவோ ?
தற்கால ராப்பகல் மாதவியர் -- பயில்
. . சல்லாப வாணிபம் சுட்டதுவோ ? (4)

குங்குப்பூ கற்றிடும் கோதையர்கள் -- கற்புக்
. . கோட்டினைத் தாண்டிடும் கோவலரின்
கன்னத்தில் கைவைக்கும் கண்ணகியர் -- தமைக்
. . கண்டஉன் உள்ளம் கலங்கியதோ ? (5)

போட்டே உடைத்திடு பொற்சிலம்பை ! - போய்ப்
. . பொறுக்கவும் சோதிடம் பார்த்திடுவார் !
நாட்டின் அரசியல் நாறுதடி ! --இந்த
. . ஞாலமே பார்த்து நகைக்குதடி ! (6)

சீட்டொன்று தந்தால் விமானத்திலே -- என்றன்
. . தேசத்தில் தோன்றித் திகழ்குவையோ ?
தோட்டத்தில் வைத்திங்குத் தூள்கிளப்பி -- செல்வத்
. . தோராண்டோ கண்ணகி ஆக்கிடுவேன் ! (7)

****
குங்குப்பூ = Kungfu; தோராண்டோ= Toronto.

From:

Pas Pasupathy

unread,
Dec 24, 2008, 4:29:33 PM12/24/08
to yAppulagam / யாப்புலகம்

Sunday February 3, 2002

வழித்துணை

பசுபதி



( 'நந்த வனத்திலோர் ஆண்டி ' சந்தம்)


எடுப்பு
-------
வண்டி வரும்நேர மாச்சு ! -- துணை
வருவேன் எனச்சொன்ன வாக்கென்ன ஆச்சு ? (வண்டி)

முடிப்பு
----------
போகு மிடம்மிக தூரம் --அங்குப்
. . போவதற் கில்லையே நெஞ்சினில் தீரம் !
வேகமாய்ச் செல்கடி காரம் -- இவ்
. . வேதனை நெஞ்சினில் ஏற்றுதே பாரம் ! (வண்டி)

வாணாளில் போகாத ஊரு ! -- உன்
. . வழித்துணை வேண்டல் பிழையென்றால் கூறு !
காணாத காட்சியங் குண்டா ? -- அங்குக்
. . காவெனக் கூவினால் நீயங்கே உண்டா ? (வண்டி)

மீண்டுமிவ் வூர்வரு வேனோ ? -- விளை
. . யாட்டின் விதிகள் அறிந்திடு வேனோ ?
நீண்டவி னாக்களும் உண்டு ! -- இந்த
. . நீர்மேல் குமிழியில் ஒன்றிடு வேனோ ? (வண்டி)

மிதியடி போட்டுக்கொண் டாச்சு -- பின்னர்
. . விடைபெற யாவரும் கைகாட்டி யாச்சு !
விதியின் முகத்தைக்கண் டாச்சு ! -- விளை
. . யாட்டு முடிந்து மணிஅடிச் சாச்சு! (வண்டி)

நெஞ்சினில் அச்சத்தைத் தாங்கி --ரயில்
. . நிலையத்தில் நிற்கிறேன் சீட்டொன்று வாங்கி !
அஞ்சாமல் ஊர்செல்ல வேண்டும் -- உன்
. . அன்புக் கரங்கள் அணைத்திடல் வேண்டும் ! (வண்டி)

From:

Pas Pasupathy

unread,
Dec 24, 2008, 4:31:13 PM12/24/08
to yAppulagam / யாப்புலகம்

Sunday February 10, 2002

விளையாட்டுப் பொம்மை

பசுபதி



மண்ணாசை வளருவதேன் பூம்பொழில்சூழ்
. . மாளிகையை நெருங்கும் போது
பெண்ணாசை பெருகுவதேன் கன்னியரின்
. . பேரழகைப் பருகும் போது
பொன்னாசை பொங்குவதேன் சொகுசான
. . பொருளைக்கை உரசும்போது
விண்ணகத்தில் வீற்றிருக்கும் அவளியக்கும்
. . விளையாட்டுப் பொம்மை யோநான் ?

இட்டமுட னிவ்வுலகில் உதித்திடவே
. . எவரையும்கை ஏந்த வில்லை.
திட்டமிட்டுப் பருவங்கள் தாண்டவில்லை;
. . செத்தழிதல் கையி லில்லை;
கட்டுமர வாழ்வினிலே கழித்துவிட்டேன்
. . காலமெனும் கடலில் நீந்தி !
வெட்டவெளி அரசாளும் மின்னாளின்
. . விளையாட்டுப் பொம்மை யோநான் ?

மதிசொன்ன வழியொன்றால் வளம்பெற்று
. . மார்தட்டி மகிழும் போது
சதிசெய்யும் சக்தியவள் சிரித்திடுவாள்!
. . 'சாதனைகள் எனதே ' என்பாள் !
கதியொன்று காட்டிடுவாய் ! எஞ்சியுள்ள
. . காலத்தைக் கொடுவென் கையில் !
விதியெழுத்தை வென்றவனாய் மாற்றிடுவாய் !
. . விளையாட்டுப் போதும் போதும் !


From:

Pas Pasupathy

unread,
Dec 28, 2008, 11:07:36 AM12/28/08
to yAppulagam / யாப்புலகம்
Sunday February 17, 2002
 
விடுதளை!
 
 பசுபதி
 
 
விடுதலை! விடுதலை! விடுதளை!
 
 
கற்ப னைக்குக் கெட்டி மேளம்
      கொட்டு  வோர்க்கு விடுதலை ;
காயுங் கனியும் புளியு மின்றி
      கவிதை சமைக்க விடுதலை ;
கற்கும் போதி லக்க ணத்தைக்
      கரித் தவர்க்கும் விடுதலை;
காலங் கரையுங் கதைகள் தம்மைக்
      குறுக்கிச் சொல்ல விடுதலை.      (விடுதலை!)
 
துருப் பிடித்த மரபு தன்னை
      தூக்கி வீசிப் போடுவோம் ;
தொல்லை புரியுஞ் சந்த மதனைத்
      தூர வைத்துப் பாடுவோம்.
உருவ மன்றி ஓசை யின்றி
     உலக முண்டு பண்ணுவோம்;
உரையில் நல்ல உண்மை எழுதி
     உடைந்த நடையில் காட்டுவோம்.  (விடுதலை!)
 
ஆடை யற்ற சொற்கள் நடனம்
       ஆட மேடை கட்டுவோம் ;
அசையும் சீரும் கையில் மாட்டும்
      அடிமைத் தளையை  வெட்டுவோம்.
பாட லுக்கு வடிவ மென்னும்
       பாசி யதனை நீக்குவோம்;
படிம வரைவில் புதுமை சேர்த்துப்
       பாரில் மேன்மை தேடுவோம்.         (விடுதலை!)


Pas Pasupathy

unread,
Dec 28, 2008, 11:09:33 AM12/28/08
to yAppulagam / யாப்புலகம்

Sunday March 10, 2002

பகைவன்

பசுபதி




பிள்ளைப் பிராயத்திலே --என்மனப்
. . பீடத்தில் ஏறிவிட்டான்.
பள்ளிப் படிப்பினிலே -- கோணல்
. . பாதையைக் காட்டிவிட்டான்.

அண்டை மனைகளிலே -- அவனால்
. . அவச்சொல் பெற்றுவிட்டேன்
நண்பனவன் அல்லவே -- எனக்கு
. . நச்சுப் பகைவனவன்.

தீய குணம்மனதில் --தேங்கத்
. . தித்திப்புச் சேர்த்துவிட்டான்
ஆயுள் முழுதுமவன் -- எனக்(கு)
. . ஆண்டானாய் ஆகிவிட்டான்.

வாழ்வினில் தோல்விகளை-- எனக்கு
. . வாரி வழங்கிவிட்டான்
தாழ்வில் மனமயர்ந்தேன் -- அவனைச்
. . சந்திக்க ஆசைகொண்டேன்.

காலம் சுழன்றதடா -- அவனோ
. . கண்ணில் தெரியவில்லை
மூலப் பகைவனவன் --ஒருநாள்
. . முகத்தைக் காட்டிவிட்டான்.

கண்ணாடி முன்னிலையில் -- அன்று
. . கண்டேன் விரோதிமுகம்
விண்டேன்; விழிதிறந்தேன் -- எனக்கு
. . வெம்பகை நானேதான்.


***

From:


Pas Pasupathy

unread,
Dec 28, 2008, 11:11:25 AM12/28/08
to yAppulagam / யாப்புலகம்

Saturday March 30, 2002

சொன்னால் விரோதம்

பசுபதி



மண்ணென்றும் பெண்ணென்றும் வரம்பற்ற ஆசைகள்முன்
மண்டியிட்டு மடிந்தனர் வரலாற்றில் பலமாந்தர். (1)

ஆசைகள் வெறியாகி அழுக்காற்றுப் பால்குடித்து
நாசப் படமெடுக்கும் நச்சரவம் விரோதம் . (2)

அயலாரை, அன்னியத்தைக் கண்டாலே அஞ்சிடுவோர்
பயமென்னும் உண்மைதனைப் பகையுணர்வில் புதைத்திடுவர். (3)

அச்சக் கடல்கடைந்தால் ஆலமென விரோதமெழும்.
அச்சத்தின் காரணம் அறியாமை ஊற்றன்றோ ? (4)

மதமென்றும் சாதியென்றும் மாறிமாறிப் பிரித்திடுவோர்
விதவிதமாய் வெறுப்பூற்றி விரோதத்தை வளர்த்திடுவர். (5)

அறியாமையை அகற்றிவிடின் அண்டிடுமோ விரோதம் ?
அறியாமலா ஞானவாளை அருணகிரி வேண்டினார் ? (6)

என்னசொன்னால் விரோதம் இவ்வுலகில் மறைந்துவிடும் ?
அன்புநெறி தழைத்தோங்கி ஆலமரமாய் வளர்ந்துவிடும் ? (7)

அருணகிரி அன்றுரைத்த அருள்வாக்கு அவிரோதம் !
திருமூலர் நம்அன்பே சிவமென்று மெய்பகர்ந்தார்! (8)

அன்னியரும் அன்பரும் ஆண்டவன்முன் சமமன்றோ ?
அன்பே இறை எனவுணர்ந்தால் அவிரோதம் உலகாளும் ! (9)

**********

From:



Pas Pasupathy

unread,
Dec 28, 2008, 11:13:09 AM12/28/08
to yAppulagam / யாப்புலகம்

Sunday April 21, 2002

அந்த நாளும் அண்டாதோ ?

பசுபதி



பவனிவரும் நடையழகு; பைந்தமிழின் மொழியழகு;
. . பத்து மூன்று சொல்லழகு.
சிவனுடனே வாதிடலாம்; திருக்குறளை ஓதிடலாம்;
. . சிறுவர் பாட்டு யாத்திடலாம்.
நவநவமாய் எழுதிடலாம்; நாவல்கள் குவித்திடலாம்;
. . நோபல் பரிசும் நாடிடலாம்.
அவனிமிகு தமிழர்கள் முத்தமிழை அரவணைக்கும்
. . அந்த நாளும் அண்டாதோ ?

சுரங்களிலே ஒன்றிழைந்து சுருதிலயம் பெற்றெடுத்த
. . தொன்மை இசையில் களித்திடலாம்.
மரபுவழித் தென்னிசையாம் மாளிகையில் உட்புகுந்து
. . வண்ண ஜாலம் வனைந்திடலாம்.
தரங்குறையாக் கனமிகுந்த சங்கீத நிதியுள்ள
. . தமிழில் பாடத் தயங்குவதேன் ?
தரணிநிறை தமிழர்கள் தண்டமிழ்த்தேன் குடித்தாடும்
. . தங்க நாளும் வாராதோ ?

கன்னியென்பர்; அன்னையென்பர்; கல்தோன்றாக் காலமென்பர்;
. . காப்போம் என்றே சூளுரைப்பர்.
தன்னகத்தில் நாடோறும் தம்மனைவி மக்களுடன்
. . தமிங்கி லத்தில் திளைத்திடுவர்!
என்றிவர்கள் அறிவியலை எண்ணெழுத்தின் நுண்மைகளை
. . இனிய தமிழில் கற்றிடுவர் ?
அன்னைமொழி அனைத்துலகத் தமிழர்தம் மனையாளும்
. . அந்த நாளும் அண்டாதோ ?

 
 
From:
 

http://www.thinnai.com/?module=displaystory&story_id=30204215&format=html

Pas Pasupathy

unread,
Dec 28, 2008, 11:18:22 AM12/28/08
to yAppulagam / யாப்புலகம்

Sunday May 12, 2002

மறைந்த உருது கவிஞர் கைஃபி ஆஸ்மி - கவிஞரும் கவிதையும்

பசுபதி



கைஃபி ஆஸ்மி அவர்களது கவிதை ஷராரா (பொறி) -யின் மொழிபெயர்ப்பு
**
பொறி

பசுபதி


விழியோடு விழிகலந்தால் விளைவென்ன ? கேட்காதே!
எழுந்ததுஓர் காதற்பொறி இருவர்விழி மோதலினால்.

பறக்குமுன் ஓர்தயக்கம்; பார்வையிலே சிறுநாணம்;
சிறப்பு,மென்மை கபடமின்மை; கிறங்கும்ஓர் சைகைஉரு.

விரைந்ததுகண் பார்வைவிட்டு வியர்த்திடும் நெற்றிக்கு
உருஇதழாய், எழில்மலராய், உயர்கெம்பாய், விண்மீனாய்.

குதித்ததுநெற் றிக்குப்பின் கோலமலர்க் கன்னம்மேல்
அதிருசித்தேன் போலல்ல, அதைவிடவும் விலைஅதிகம்!

கன்னமலர் விட்டுதடின் வன்னத்தில் சுருங்கியது
பண்ணலைபோல் மட்டுமல்ல பளிச்சிடும்மின் கொடிபோல.

செவ்விதழின் வர்ணம்விட்டுச் சென்றதுமென் கரம்நோக்கி
அவ்விடத்தில் இளைப்பாறி அடைந்ததுபின் இதயத்தை.

அருளிரக்கம் மரியாதை அன்புகாதல் உருவினிலே
இருதயத்தில் இறங்கினபின் நாளம்வழி சிந்தியது.

கண்பார்வைச் சாரமாகிக் கண்காட்சிச் சாரமாகி
இன்னிதயச் சாரமாகி எழிலுடலை விட்டேஎன்
இளங்காமம் தணித்திடவே எனைநோக்கிப் பறந்ததுகாண்.

புலன்வேட்டை ஆடாமல் பொறிஉணர்வு தந்தெனக்குப்
புலன்கட்டுப் பாட்டினையே புரியவைத்த பொறிஅதுவே.

துயர்எனவே தோன்றிடினும் மகிழ்வமைதிக் காரணம்காண்.
பயிர்அதனைக் காய்ச்சினும் உயிரைவிட உயர்ந்ததுகாண்.

வந்தமறு கணமேஎன் வாழ்வதனைக் கவ்வியது
தொலைந்தஎன் உள்ளுயிர்க்கோர் துணைதரும்ஆ தாரமது.

கன்னத்தில், அவளிதழில் காதல்பொறி தவழ்கிறது
கைஃபி! என் கனல்கக்கும் கண்ணிகளில் மறைந்துளது!
 


(மூலம்: Kaifi Azmi 's Urdu Poem)



2. SHARARA

DO NIGAHOn KA ACHANAK WO TASADUM MAT POOCHH
THESLAGTEY HI UDA ISHQ SHARARA BAN KAR
UD KE PAHLEY INHI JHEnPI HUI NAZROn MEIn RUKA
NARM, MAASOOM, HASEEn, MAST ISHARA BAN KAR
PHIR NIGAH SE ARAQ AALOOD JABEEn PAR JHALKA
PAnKHDI, PHOOL, GUHAR, LAAL SITARA BAN KAR
DHAL KE MAATHEY PE UTAR AAYAA GUL-E-AARIZ MEIn
RAnG RAS SHAHD NAHIEn UN SE BHI PYARA BAN KAR
GUL-E-AARIZ SE SIMAT AAYAA LAB-E-RAnGEEn MEIn
RAAG HAI LAHR NAHIEn BARQ KA DHARA BAN KAR
LAB GUL RAnG SE PHIR RENG GAYAA BAAHOn MEIn
BAS KE BAAHOn KI GUDAZI SE CHALA DIL KI TARAF
CHAH, ALTAF, KARAM, PYAR, MADAARA BAN KAR
DIL MEIn DOOBA THA KE BAS PHOOT PADA RAG RAG SE
JAAN-E-DIL, JAAN-E-NAZAR, JAAN-E-NAZAARA BAN KAR
PAIKAR-E-HUSN SE PHIR UD KE CHALA MERI TARAF
EK BAD-MAST JAWANI KA UTAARA BAN KAR
RAHZAN-E-HOSH MAGAR HOSH KA PAIGHAM LIYE
DUSHMAN-E-ZABT MAGAR ZABT KA YAARA LE KAR
DARD HI DARD MAGAR WAJAHE SUKOOn, WAJHE TARAB
SOZ HI SOZ MAGAR JAAN SE PYARA BAN KAR
AATEY HI CHAA GAYAA KHOI HUI HASTI PE MIRI
MERI KHOI HUI HASTI KA SAHARA BAN KAR
AB SHARARA WOHI USKEY LAB-O-RUKHSAR MEIn HAI
AUR KAIFI MEREY TAPTEY HUYE ASH 'AAR MEIn HAI

TOP


2. SPARK

Don 't ask [what happened] when the two eyesights
instantly confronted each other
The moment [they 're] knocked off, the spark of love
flew
Having taken the flight first it paused in the bashful
visions
In the form of a tender, innocent, exquisite [and]
tipsy gesture
Then, from vision it trekked to the perspiring
forehead
Having taken the forms of petal, flower, ruby [and]
star
From the forehead it landed on the flower of the cheek
Not just like luscious honey but more precious than
that
From the flower of the cheek it got compressed in the
colour of lips
Not merely as a surge of tune but as a chain of
lightening
From the colour of lips it crawled towards the arms
It rested in the softness of the arms [for awhile and
then] moved towards the heart
In the guise of longing, kindness, favour, love [and]
courtesy
The moment it sank in the heart it spilled out from
the veins
In the form of essence of the heart, essence of the
sight [and] essence of the spectacle
From the body of the beauty it flew towards me
To exorcise the lust of the youth
[Though] it appeared like the raider of the sense, it
brought [me] to senses
[Though] it came like the adversary of restraint, it
helped [me] control myself
[Though] it surfaced like pain, it ended up as the
cause of calmness and bliss
[Though] it cropped up like scorch, it became dearer
than life
The moment it arrived it took control my being
Like the sustenance of my lost being
Now, the same spark is apparent in her lips and cheeks
And O Kaifi! It is also concealed in my fiery couplets


**
கைஃபி ஆஸ்மி பற்றிய திண்ணைக்குழு குறிப்புகள்

உலகப்புகழ் பெற்ற கவிஞரான கைஃபி ஆஸ்மி அவர்கள் லக்னவி உருதுவை பிரபலப்படுத்தியவர். ஏராளமான சினிமாப்பாடல்களில் கவிநயத்தை தோய்த்தவர். 'அர்த் ', 'காகஜ் கி ஃபூல் ', பகிசா, கோரா, ஹக்கீக்கத் ஆகிய படங்களின் கவிதைகளை எழுதியவர்.

கைஃபி ஆஸ்மி அசாம்கார் மாவட்டத்தில் உத்தரப்பிரதேசத்தில் நிஸ்வான் ஊரில் பிறந்தவர். ஹ்யூசேன் ரிஸ்வி என்ற பெரும் ஜமீன்தாரின் மகனாகப்பிறந்தாலும் வாழ்நாள் முழுவதும் கம்யூனிஸ்டாக வாழ்ந்தவர்.

தெரு ஓரங்களில் உட்கார்ந்து கொண்டு தொழிலாளர்களுடனும் தினக்கூலிகளுடனும் உட்கார்ந்து தேநீர் அருந்திக்கொண்டு பேசிக்கொண்டிருப்பதை பழங்கால லக்னவ் ஆட்கள் அறிவார்கள்.

இவரது உறவினர்கள் எல்லோரும் பாகிஸ்தானுக்கு சென்றபோது இவர் மட்டும் கம்யூனிஸ்ட் என்ற காரணத்தினால் ஒளிந்து கொண்டிருந்ததால் இவர் மட்டும் செல்லமுடியாமல் போனது இறுதி வரை செல்லமுடியாமல் போயிற்று. பிறகு அவர் அவர்களை சென்று சந்தித்தாலும் இந்தியக்குடியுரிமையை விடவில்லை.

இளம் வயதில் சுல்தான்-இ-மதாரி என்ற ஷியா பள்ளிக்கூடத்தில் மதக்கல்வி பெற்றாலும், மத விஷயங்களில் நாட்டம் இல்லாமலும், அதன் மீது எதிர்ப்பு உணர்வுடனும் வளர்ந்தவர் இவர். தன் நண்பர்களுடன் இணைந்து இஸ்லாமிய மதகுருக்களை பகிரங்கமாக எதிர்த்ததால், பள்ளிக்கூடத்திலிருந்து துரத்தப்பட்டவர். அவர் லக்னவ் நகரில் இருந்தாலும் மும்பாய் நகரில் இருந்தாலும், குருட்டுத்தனமான மதக்கருத்துக்களை தன் வாழ்நாள் முழுவதும் எதிர்த்துவந்தவர்.

மத அடிப்படை வாதத்தையும், தீவிரவாதத்தையும் வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கைஃபி ஆஸ்மி, எந்த மதத்தின் தீவிரவாதத்தையும் எதிர்க்கத் தயங்கியதில்லை. பாபரி மசூதி உடைக்கப்பட்டதும், அவர் எழுதிய 'ராம்ஜி கி வன்வாஸ் ' ராமரின் வனவாசம் என்ற கவிதை பலராலும் பாராட்டப்பட்டது.

ஹிந்தி-உருது சாகித்ய பரிசு கமிட்டியின் சேர்மனாக 1968இல் நியமிக்கப்பட்டார் கைஃபி ஆஸ்மி. ஹீரா பஞ்சா என்ற கவித்துவமான கவிதைப்படத்தையும் இவரே எழுதினார்.

உருது மொழி உத்தரபிரதேசத்தில் அழிகிறது என்று கவலைப்பட்டார். மற்ற பிரதேசங்களிலிருந்து லக்னவுக்கு வருபவர்களால் சுத்தமான லக்னவ் உருது அசுத்தமாகிறது என்றும் இவர் கவலைப்பட்டார்.

இவரது மகள் புகழ்பெற்ற நடிகை ஷபனா ஆஸ்மி.

***
From:
 



Pas Pasupathy

unread,
Dec 31, 2008, 1:49:17 PM12/31/08
to yAppulagam / யாப்புலகம்

Monday June 10, 2002

என்று கற்பேனோ ?

பசுபதி



நண்பர் குழுநடுவே 'நானொருநற் சர்வர்போல்
பண்ணுவேன் ', என்றசவால் பார்வையுடன் -- விண்நோக்கிக்
கோப்பை சுழற்றிக் குஷியாய் முழநீளம்
காப்பியை ஆற்றும் கலை.

கற்றால் கவர்ந்திடலாம் கன்னியரைக் காந்தமென;
மற்றோரும் மொய்த்திடுவர் வண்டுகளாய் -- சுற்றத்தில்
கைராசிப் பேர்பெற்றால் காசுமழை கூரைபிய்க்கும்.
கைரேகை பார்க்கும் கலை.


வள்ளென்று பல்காட்டி வந்தவர்தோள் ஏறிச்செய்
ஜொள்ளபி ஷேகத்தைத் துய்த்தபின் -- உள்ளத்தில்
பாய்பய வெள்ளத்தைப் பார்வையிலே சொட்டாமல்
நாய்ச்சனியைக் கொஞ்சும் நடிப்பு.

கண்ணாடி முன்நின்று கஷ்டப்பட்(டு) ஒவ்வொன்றாய்ப்
பின்னே வளர்முடியை முன்பரப்பி -- மின்னும்
முழுமதியைக் கார்மேகம் மூடுவது போன்று
வழுக்கை மறைத்திடும் வாகு.


From:



Pas Pasupathy

unread,
Dec 31, 2008, 1:52:15 PM12/31/08
to yAppulagam / யாப்புலகம்

Monday July 22, 2002

தென்றல்

பசுபதி



'அலர்கள் பறித்தால் அபராதம் ' என்ற
பலகையைப் பூங்காவில் பார்த்தும் --மலர்க
ளிறைத்துப் படம்வரைந்த(து) எங்கும், படிக்க
அறியாத தென்றல்வந்(து) அங்கு.

(ஓர் ஆங்கிலக் கவிதையின் தழுவல்.)

From:

Pas Pasupathy

unread,
Dec 31, 2008, 1:53:53 PM12/31/08
to yAppulagam / யாப்புலகம்

Sunday July 28, 2002

துப்பறியும் சாம்பு

பசுபதி




காகம் அமர்ந்த கணத்தில் மரம்விட்டு
வாகாய் விழுங்கனியை வைத்துப்பின் -- ஆகமது
நோகாமல் துப்பு நொடியில் துலக்கிடுவான்
சாகா வரம்பெற்ற சாம்பு.

ஆகம்=உடம்பு

From:



Pas Pasupathy

unread,
Dec 31, 2008, 1:56:09 PM12/31/08
to yAppulagam / யாப்புலகம்

Monday August 12, 2002

தீ, திருடன், சிறுத்தை

பசுபதி



பஞ்சென்பான் ஆலாய்ப்ப றந்தான்,
பரவசமாய்ப் பாவைபக்கம் வந்தான் !
. . . மஞ்சத்தில் ராசாத்-தீ !
. . . வாட்டியது காமத்-தீ !
வஞ்சியுடல் தொட்டபஞ்சு வெந்தான் !

*****
கன்னமிட்டான் காரிருளில் நம்பி
தந்திரமாய் ஜன்னல்கம்பி நெம்பி !
. . . குடியிருந்தவன் போலீசு !
. . . தடியெடுத்தவன் 'விளாசு ' !
இiன்றுநம்பி எண்ணுகிறான் கம்பி !

*****
சிரித்தபடி செல்கின்றாள் வீரி
சிறுத்தையதன் முதுகில்ச வாரி !
. . . திரும்பிவந்தனர் சேரி ,
. . . சிறுத்தைவயிற்றில் நாரி ;
விரிந்தபுலி முகத்தில்நகை மாரி !
*****
(மூலம்: ஆங்கில லிமெரிக்; நன்றி: எஸ்.பொன்னுத்துரை)
 
From:

 


 

Pas Pasupathy

unread,
Jan 4, 2009, 7:38:19 PM1/4/09
to yAppulagam / யாப்புலகம்

Monday August 19, 2002

பூமகளே! மன்னித்துவிடு!

பசுபதி



சின்னஞ் சிறுவயதில் -- நீயொரு
. . சிட்டாய்த் திரிநாளில்
இன்பம் விளைசூழல் -- இன்றது
. . எங்கே மறைந்ததடி ? (1)

தூய உலகமதின் -- சுற்றுச்
. . சூழல் இறந்தாச்சோ ?
தாயெனும் மண்ணினையே -- நன்கு
. . சாக அடிச்சாச்சோ ? (2)

நாசி திறந்தவுடன் -- சேய்கள்
. . நஞ்சை முழுங்குதடி!
காசினி சாகுதடி -- காண்போர்
. . கலங்கும் போக்கிதடி ! (3)

எத்தனை கோடியின்பம் -- இன்று
. . எங்கே தொலைந்ததுவோ ?
வித்து விதைப்பதற்கே -- ஈசன்
. . மெத்தத் தயங்குவனோ ? (4)

நீலக் கடல்வானம் -- புவி
. . நிறைய மாசுமயம் ;
காலம் விளைத்ததல்ல -- காரணம்
. . காட்டிட வெட்குதடி ! (5)

பன்னரு பூக்களையே -- முகரப்
. . பரமன் தந்திருந்தான் ;
கன்னெஞ்சன் நானன்றோ -- அவற்றைக்
. . கசக்கி விட்டெறிந்தேன் ! (6)

ஞாலம் நசித்துவிட்டேன் -- விஞ்
. . ஞானத் துணையுடனே !
ஆலம் கடைந்தெடுத்தேன் -- சூழல்
. . அவலம் ஆக்கிவிட்டேன் ! (7)

வேதனைப் பாதையிலே -- வழுக்க
. . வெண்ணெய் தடவிவிட்டேன் ;
மேதினித் தற்கொலைக்கே -- இனி
. . மீளும் வழியுமுண்டோ ? (8)

ஐந்திணை ஒன்றாகி -- பாலை
. . அண்டம் படர்ந்திடுமோ ?
என்னைமன் னித்துவிடு ! -- மகளே!
. . யாவுமே என்பிழைகள் ! (9)

உன்னெதிர் காலமதை --மகளே!
. . ஒட்ட எரித்தேனோ ?
என்னை எரித்திடுமுன் -- மகளே!
. . என்னைமன் னித்துவிடு ! (10)

*~*~*

From:

Pas Pasupathy

unread,
Jan 4, 2009, 7:40:09 PM1/4/09
to yAppulagam / யாப்புலகம்

Monday September 2, 2002

கானம், கனவு, கல்யாணம்

பசுபதி


~*~o0o~*~

'மெருகுடனே பாட்டிசைக்கக் குரல் !
வீணை,குழல் மற்றதற்கு விரல் ! '
. . குருசொல்வார் சீடனுக்கு,
. . 'குரல்,விரலில் வீணனுக்கு,
இருப்பதொரு தொழில்இட்லி உரல் ! '
*****
வந்தமர்ந்தாள் என்படுக்கை ஓரம்,
மனங்கவர்ந்த நடிகைஇரா நேரம்.
. . இன்னுமொரு நொடியினிலே,
. . இருந்திருப்பாள் மடியினிலே .
என்கனவைக் கலைத்தகடி காரம்!
*****
முறைமனைவி மூன்றுடைசிங் காரம்,
மும்மணத்திற்(கு) அவன்விளக்க சாரம் :
. . 'மறைசொல்லும் பெருங்கடமை !
. . மணமொன்றோ முழுமடமை !
சிறைதள்ளும் குற்றம்இரு தாரம் ! '

~*~o0o~*~

 
From:


Pas Pasupathy

unread,
Jan 4, 2009, 7:42:00 PM1/4/09
to yAppulagam / யாப்புலகம்

Tuesday September 24, 2002

மனிதமறை

பசுபதி




வையம் எங்கும் வன்முறையே --நம்
. . வாழ்வைக் கருக்கும் பெருங்கறையே !
செய்தி எல்லாம் வன்செயலே ! -- சின்னத்
. . திரையும் ரத்தம் மிகுவயலே ! (1)

காந்தி மகானைப் புதைத்திருந்தால் -- இன்று
. . கண்ணீர் உகுப்பார் கல்லறைக்குள் ;
சாந்தி சூக்தம் சொன்னமுனி -- பலரைச்
. . சாம்பல் ஆகச் சபித்திருப்பார் ! (2)

குணவான் அறியான் சுடுசொல்லை ! -- ஒரு
. . கோழை புரிவான் சுடுதொழிலை !
வணங்கும் தெய்வம் மகிழ்ந்திடுமோ ? -- தீவிர
. . வாதம் மதத்தை அழித்திடுமோ ? (3)

பச்சைப் புளுகு 'கற்பிழப்பு ' ! -- அது
. . பலவந் தத்தின் உடன்பிறப்பு !
நச்சுப் பாம்பாம் வன்செயற்கு -- பால்
. . நல்கும் மதங்கள் நமக்கெதற்கு ? (4)

மனங்கள் மாறா சொற்சமரால் ! -- விரைந்து
. . வராது சொர்க்கம் தற்கொலையால் !
சினங்கள் சிதையால் குளிராது! -- வன்
. . செயலால் மதமும் வளராது ! (5)

குறிக்கோள் கொள்வோம் அன்புநெறி ! -- இது
. . குறைக்கும் உலகில் துன்பவெறி ;
மறுப்போம், மாய்ப்போம் வன்மைமுறை ! -புவியில்
. . மலரச் செய்வோம் 'மனித 'மறை ! (6)

***



From:
 

Pas Pasupathy

unread,
Jan 4, 2009, 7:43:42 PM1/4/09
to yAppulagam / யாப்புலகம்


Sunday October 13, 2002

முறையாய் முப்பால் குடி!

பசுபதி



அள்ளிப் பருகிட வாரீர்! -- திரு
வள்ளுவர் நல்கும்முப் பாற்சுவை தேரீர்!

பாலன் அழுவதைப் பார்த்தாள் - ஞானப்
. . பாலைச்சீ காழியில் பார்வதி வார்த்தாள் !
ஞாலச் சிசுகண்டு நொந்தார் -- முப்
. . பாலைப் பரிவுடன் வள்ளுவர் தந்தார் ! (1)

முறையாய்க் குடித்திடல் வேண்டும் -- அந்த
. . முப்பால் முதலில் அறம்வர வேண்டும் !
அறவழி ஈட்டாத செல்வம் -- ஓடும்
. . ஆற்றினில் உப்பெனக் கைவிட்டுச் செல்லும் ! (2)

இல்லறத் தேரினை ஓட்டு ! -- பொருள்
. . இன்பம் பரிகள் இரண்டையும் பூட்டு !
கல்விசொல் நேர்வழி செல்ல -- உன்
. . கைக்கடி வாள அறத்தினை மாட்டு ! (3)

இன்பத்துள் இல்லறம் உச்சம் -- பொருள்
. . இல்லானை இல்லாள் கருதுவாள் துச்சம் !
நன்றே பொருளின்ப நாட்டம் -- அது
. . ஒன்றே குறியெனின் வாழ்க்கையே வாட்டம் ! (4)

எண்ணொன்று சூன்யம்முன் வந்தால் -- மதிப்பு
. . ஏறிடும் என்றே கணிதமும் கூறும் !
இன்பமும் செல்வமும் சூன்யம் -- அவை
. . முன்னர் அறம்வரின் வாழ்வே தழைக்கும் ! (5)

குஞ்சினை வீட்டில் வளர்க்க -- பறவை
. . குச்சி இரைகளைத் தேடுதல் வேண்டும் !
கொஞ்சமும் அண்டாது 'வீடு ' -- நாம்
. . 'குச்சி 'கள் தேடலே வாழ்வெனக் கொண்டால் ! (6)

முன்னோரின் மெய்ஞ்ஞான ஜாடி -- நம்
. . முன்னேற்றப் பாதையைக் காட்டிடும் ஆடி !
செந்தமிழ்ப் பண்பாட்டுச் சிற்பம் -- இதில்
. . தேடினால் காணா அழகுகள் சொற்பம் ! (7)

வள்ளுவர் வாக்கினை ஆய்ந்தால் -- நம்
. . வாழ்வின் நெறிகள் விழுப்பொருள் யாவும்
தெள்ளத் தெளிந்திடும் பாரீர் ! -- அதைச்
. . செந்தமிழ் வேதமாய்ப் போற்றிட வாரீர்! (8)

*~*~o0o~*~*

 
From:

Pas Pasupathy

unread,
Jan 4, 2009, 7:45:31 PM1/4/09
to yAppulagam / யாப்புலகம்


Sunday October 27, 2002

எனக்குள் ஒருவன்

பசுபதி



எனக்குள் ஒருவன் அழுவான் ! -- பின்னர்
எரியும் கனலாய் எழுவான்!

கங்கை நதியினில் வெள்ளம் ! -- ஐயோ!
. . காவிரி யோமணல் பள்ளம் ! -- தன்னலம்
பொங்குதே சோதரர் வீட்டில் ! -- மனிதம்
. . பொய்த்ததோ பாரத நாட்டில் ! (1) (எனக்குள் ..)

காந்தி பெயரைத் துதிப்பார் -- அன்பைக்
. . காந்தி உயிரை வதைப்பார் ! -- நாட்டில்
சாந்தி பிறப்பதென் னாளோ ? -- வன்முறைச்
. . சாத்தான் இறப்பதென் னாளோ ? (2)

தேசத்தில் நேர்மைக்குப் பஞ்சம் -- எந்தத்
. . திசையில் திரும்பினும் லஞ்சம் ! --உலவும்
காசுக்கும் உண்டிரு வண்ணம் -- நாடு
. . கருப்பிலே மூழ்குதல் திண்ணம் ! (3)

பெண்ணின் பெருமையைச் சொல்வார் -- பிறகு
. . பேயெனப் பெண்சிசு கொல்வார் ! --எந்த
மண்ணும் மறவாதிப் பாபம் -- பல
. . மறைகள் அறிந்தென்ன லாபம் ? (4)

குனிந்து குறுகுதல் ஏனோ ? -- நாட்டின்
. . குறைகளை உள்ளம் உணர்ந்தோ ? -- பின்னர்
சினத்தில் சிவப்பதும் ஏனோ -- சிலரின்
. . செயல்கள் விளைவை நினைத்தோ ? (5) (எனக்குள் ..)

*~*~o0o~*~*

From:

Pas Pasupathy

unread,
Jan 10, 2009, 7:49:10 PM1/10/09
to yAppulagam / யாப்புலகம்

Sunday November 24, 2002

கனவு நாடு

பசுபதி



என்றன் இனிய கானடா!
. . இன்பக் கனவு நாடடா!
தந்தை தேசப் புகழினைத்
. . தாயின் மொழியில் சொல்லடா! (1)

கழுகு நாட்டு நேசனாம்;
. . கனடா என்ற தேசமாம்;
அழகு, அமைதிப் பறவைகள்
. . யாவும் இங்கு வாசமாம். (2)

கார்வ ழுக்கும் சாலைகள்;
. . கணினி ஓட்டும் ஆலைகள்;
நீர்சி லிர்க்கும் காலைகள்;
. . நிலவு கொஞ்சும் சோலைகள். (3)

நளின, பருவ அழகுகள்
. . நான்கும் காட்டும் வானிலை;
எளிதில் உறையும் நீர்நிலை;
. . என்றும் ஈர மனநிலை. (4)

வேரில் பிரெஞ்சின் ஊட்டமாம்;
. . மேற்குக் கிழக்குக் கூட்டமாம்;
பாரில் அமைதி நாட்டவே
. . படைகள் அனுப்பிக் காட்டுமாம். (5)

எண்ணெய் என்ற பொக்கிடம்
. . எங்கும் நிலத்தின் அடியிலே;
மண்ணின் மைந்தன் மேபிளின்
. . வண்ணக் கையும் கொடியிலே. (6)

அகதி யான மாந்தரை
. . அழைத்து, இதயம் திறக்குமாம்;
மகுட ராணி பெயரிலே
. . மக்க ளாட்சி சிறக்குமாம். (7)

இனங்கள் மொழிகள் வண்ணமாய்
. . இணைந்த வான வில்லிது;
மனித பண்பு வேர்களை
. . மதித்து போற்றும் நாடிது. (8)

கருணைக் கனடா நாடெனக்
. . கைகள் கொட்டி ஆடுவோம்;
அருமைத் தந்தை நாடென
. . அன்னை மொழியில் பாடுவோம். (9)

***

From:



Pas Pasupathy

unread,
Jan 10, 2009, 7:50:49 PM1/10/09
to yAppulagam / யாப்புலகம்

Saturday December 7, 2002

அவிரோதம்

பசுபதி



சமயத்தில் சண்டைமலி காலம் -- அந்தச்
. . சமயத்தில் ஒலித்ததொரு தாளம் !
சமரசமாம் ஷண்முகனின் பாலம் -- அதில்
. . சந்தத்தின் நடனவொலி ஜாலம் ! (1)

'முத்தி 'யெனத் தொடங்கினவோர் ஆரம் -- அது
. . முழு 'இந்து ' சமயத்தின் சாரம் !
முத்துப்போல் அங்கொளிரும் வித்து --அது
. . முருகனருள் பொங்கும்மெய்ச் சத்து ! (2)

அருணகிரி சொன்னவொரு வாக்கு -- அது
. . 'அவிரோத ' மெய்ஞ்ஞானப் போக்கு !
கரமிணைப்பின் கிட்டாத தில்லை -- பகைக்
. . கண்பார்வை அமைதிக்கோர் தொல்லை ! (3)

அன்பினால் யாவரையும் கட்டு ! -- வாழ்க
. . அவிரோதம் என்றுகைகள் கொட்டு !
வன்முறையின் வழியதனை விட்டு -- ஒரு
. . வரையற்ற அன்புலகம் கட்டு ! (4)

இனமொழியின் விரோதங்கள் நீக்கி-- நம்
. . இதயத்தை விசாலமாய் ஆக்கி
மனவீட்டின் நீள்சுவரு டைப்போம் -- ஒரு
. . மதிலற்ற வையம்ப டைப்போம் ! (5)

From:

Pas Pasupathy

unread,
Jan 10, 2009, 7:52:06 PM1/10/09
to yAppulagam / யாப்புலகம்

Saturday December 21, 2002

வல்லூறு

பசுபதி



தினவெடுத்த வல்லூறு தேடிடுமோர் கோழி;
சினம்கனத்த வல்லரசோ சீறும்-- தினந்தோறும்
ஓர்கையால் சுத்தியலை ஓங்கும் முரடனுக்கோ
ஊர்முழுதும் ஆணி உரு.

From:

Pas Pasupathy

unread,
Jan 10, 2009, 7:53:38 PM1/10/09
to yAppulagam / யாப்புலகம்

Monday December 30, 2002

கொள்ளையின்பம்

பசுபதி



கொள்ளையின்பம் தந்திடுவாள் கோலமங்கை நித்தம் !
தொல்லைகளை முத்தமெனச் சொல்பவள்மேல் பித்தம் !

பொறியியலாம் சோலையில்நான் பூப்பறிக்கும் போது -காதற்
. . பொறியொன்றின் பிறைகாட்டிப் போதைதந்தாள் மாது
அறிவியலாம் ஆழ்மடுவில் நீந்துகின்ற அந்நாள் -- என்னை
. . அவள்பக்கம் இழுத்தனளே அழகரசி மின்னாள் ! (1)

ஆசிரியப் பணிநடுவே ஆசைகாட்டி அலைப்பாள் --என்
. . அருங்கால நிர்வாகம் அத்தனையும் குலைப்பாள் !
காசுபணம் தேடுபணி மூட்டைகட்டச் சொல்வாள் -- தன்
. . காலடியில் பகலிரவு கழித்திடவே செய்வாள். (2)

கல்யாவும் மாணிக்கக் கல்லாகா என்பாள் -- வெறும்
. . கற்பனையை மெய்யுடனே கலப்போரைத் தின்பாள்
நல்லோரின் சொற்களிலும் நாலுகுற்றம் கண்டு -- சற்றும்
. . நடுங்காமல் சபைநடுவில் நடமாட வைப்பாள். (3)

'வெண்மையிலே பலநிறங்கள்; வீண்குழப்பம் ' என்பேன் -- 'வான
. . வில்முடிவில் நிதிக்குவியல் மீட்டிடலாம் ' என்பாள்.
'தண்ணீரில் மூழ்குகிறேன் தருவாய்கை ' என்பேன் -- 'நன்கு
. . தத்தளித்தால் தானினிக்கும் என்தழுவல் ' என்பாள். (4)

பயன்தருமோர் கருத்துரைத்தால் 'புதிதல்ல ' என்பாள் -- புதுப்
. . படைப்புகளை முன்வைத்தால் 'பயனில்லை ' என்பாள்
அயராமல் உழைத்தாலோ அவள்தரும் முயக்கம் -- ஆகா!
. . அவளணைப்பில் ஐம்புலனும் அமுதுண்ட மயக்கம்! (5)

முன்னோடித் தோளேறி முக்காலம் பார்ப்பேன் -- அவள்
. . முந்தானைப் பின்னோடும் முயற்சியில் வியர்ப்பேன் !
உன்னதமாம் புதுநகைகள் உவந்தவட்(கு) அளித்தால் -- இமய
. . உச்சிக்கே அவளணைப்பு உயர்த்துதல் உணர்வேன் ! (6)

பழமைக்கும் புதுமைக்கும் பாலமிடும் அறிவு -- அந்தப்
. . பாதையிரு பக்கத்தில் பாதாளச் சரிவு!
அழகினுள்மெய் அறைகூவி அழைத்திடுமே நம்மை -- அதை
. . அடைவதற்குப் பீறிடுமோர் அசுரவெறித் தன்மை ! (7)

அள்ளவள்ளக் குறையாமல் அழகிதரும் இன்பம் -- நான்
. . ஆண்டவனே என்றெழுமோர் அகங்கார இன்பம் !
விள்ளவிள்ள விக்ரமனாய் வளர்மர்ம இன்பம் -- அந்த
. . மின்ஞானம் காட்டிடுமோர் மெய்ஞ்ஞான இன்பம். (8)

காரிருளைக் கண்டவுடன் கடுஞ்சாபம் இடாமல் -- அகலின்
. . கனலொன்றால் இருளகற்றிக் களிப்படையும் இன்பம் !
தாரகையைப் பிடித்திடவே தாவாமல் குனிந்து -- சின்னத்
. . தரையொன்றில் களையெடுக்கும் சாதனையில் இன்பம்! (9)

'ஆய் 'வென்னும் அழகிதரும் ஆனந்தம் என்னே! -- எனை
. . ஆளவந்த அரசியவள்; கொத்தடிமை நானே !
தேய்வில்லா நிறைமதியாள் தெவிட்டாத தேனாள் -- இனி
. . தினந்தோறும் அவள்பணியில் தீர்த்திடுவேன் வாணாள் ! (10)

From:

Pas Pasupathy

unread,
Jan 21, 2009, 11:08:39 AM1/21/09
to yAppulagam / யாப்புலகம்
Sunday January 19, 2003

நன்றி

பசுபதி


பண்டிகையில் பொங்கல்நாள் பரிதிக்கோர் நன்றி
. . பல்வேறு வழிபாடு பரமனுக்கோர் நன்றி
வண்டிசையோ மகரந்தத் தேனுக்கோர் நன்றி
. . வணக்கங்கள் கைகுலுக்கல் நண்பர்செய் நன்றி
பண்ணிசைத்தல் பழந்தமிழர் மரபுக்கோர் நன்றி
. . படுக்கையறைக் கிசுகிசுப்புக் காதலுக்கோர் நன்றி
மண்ணிலெழு வாசனையோ பெய்மழைக்கோர் நன்றி
. . மன்பதையில் அன்புவழி சான்றோர்க்கு நன்றி

வசந்தத்தில் விரிதோகை மயில்காட்டும் நன்றி
. . வானோக்கி நீளலைகள் வாரிதிசொல் நன்றி
புசித்தார்பின் விடுமேப்பம் பசித்தவனின் நன்றி
. . பூங்காற்றில் பொழிகானம் குயில்நவிலும் நன்றி
விசையோங்கும் சீழ்க்கையொலி ரசிகர்சொல் நன்றி
. . வேர்ப்புநிறை நெற்றிநல்ல விருந்துக்கோர் நன்றி
எசமான்முன் வாலாட்டல் நாய்காட்டும் நன்றி
. . இனியதமிழ்க் கவிபுனைதல் தாய்மொழிக்கோர் நன்றி

From:

http://www.thinnai.com/?module=displaystory&story_id=30301199&format=html

Pas Pasupathy

unread,
Jan 21, 2009, 11:10:31 AM1/21/09
to yAppulagam / யாப்புலகம்
Sunday February 2, 2003

பைமடந்தை

பசுபதி

கனடாவின் தைமாதம் கருணையின்றிப் பிறந்தது.
இனம்புரியா வெறுப்பொன்று என்னுள்ளே கரித்தது.

'பொங்கலைத் துய்த்திடவே போனானோ சென்னைக்கு ? '
செங்கதிரோன் தெரியவில்லை; சீற்றமென்னுள் பொங்கியது.

மேலும்,

அடையவியல் முன்னிரவு; அநுமபிதா சிரிவயிறு;
கடைநகைகள் கைக்கெட்டாக் கடுங்கோபச் சமையலறை .

காபிஇட்லி கிடைக்காத கடுப்புடனே வெளிச்சென்றேன்;
சாபங்கள் இருமொழியில் சரளமாக உமிழ்ந்ததென்வாய்.

பழவினைக் குன்றமெனப் பனிமுண்டப் பிசாசொன்று
அழுத்தியென்றன் 'கார் 'மூடி அமர்ந்துபல் காட்டியது.

கடவுளர் எனக்கீந்த கனடாவை நொந்தபடி
நடந்தேன் பணிபுரிய; நாடினேன் ரயில்நிலையம்.

அங்கே,

தள்ளுவண்டி பக்கத்தில்; தள்ளாடும் பைமடந்தை#
அள்ளியொவ்வோர் குப்பையையும் ஆராய்தல் கண்டுநின்றேன்.

அழுகினஅக் கழிவிடையே அணுவளவு உணவிருந்தால்
ஒழுகும்தன் சளிதுடைப்பாள் ; உணவெச்சம் உட்கொள்வாள் .

அதிர்ந்தேன்,

கனத்தது என்இதயம் ; கரித்தனவே என்கண்கள்.
பனித்திரை விலகியது; பகலவனின் நகைகண்டேன்.


நின்றிருந்த அவள்கையை நிறைத்துவிட்டேன் பலகாசால்.
'நன்றி 'என்றேன்; மீண்டுமொரு 'நன்றி 'சொல்லி நகர்ந்தேன்நான்.


#பைமடந்தை= baglady

From:

http://www.thinnai.com/?module=displaystory&story_id=303020211&format=html

Pas Pasupathy

unread,
Jan 21, 2009, 11:17:16 AM1/21/09
to yAppulagam / யாப்புலகம்
Sunday February 9, 2003

நல்ல வார்த்தைக் கிளி

பசுபதி

கிளிவாயால் கெட்டசொல்^ கேட்குமொரு நாடு.
கிளிவாய் அநுபூதி கேட்டதொரு நாடு;
கலைக்கண் சுவைக்கும் கசப்பும் களிப்பும்.
மலைநடுவில் உண்டு மலம்.

*****

தெய்வக் குறமகளின் -- கையமர்
சின்னஞ் சிறுகிளியே!
செய்யோன் அருளடைய -- ஒருசொல்
செவியில் பகர்வாயோ ? (1)

உன்னை 'அருணகிரி ' -- என்றே
உலகோர் கூப்பிடுவர்!
உன்னிடம் ஓர்கணம்நான் -- அமர
யுக்தி உரைப்பாயோ ? (2)

பத்தித் திருப்புகழை --ஓதிடப்
பாத்திரன் ஆக்குவையோ ?
அத்தி மணவாளன் -- எனக்கு
அருளைத் தருவானோ ? (3)

'முத்தைத் தரு 'வென்றே -- உனக்கு
முருகன் தந்தஅடி
'தத்தத் தன 'ச் சந்தம் -- அதனால்
'தத்தை ' உருவமிதோ ? (4)

குகனின் உள்புகுந்தே -- இஇன்பக்
கொள்ளை புரிந்துவிட்டாய்!
சுகத்தில் சொக்கினதால் -- வந்ததோ
'சுகமெ ' னும்பெயரும் ? (5)

சும்மா இருப்பதற்கோர் -- மந்திரம்
சொல்லிக் கொடுத்தெனையே
ஐம்புல வேட்டுவர்கள் -- எய்திடும்
அம்பிடம் கா கிளியே! (6)

'தனந்தந் தன ' மென்றே -- புகழில்
தாளக் களிநடனம்;
'தனம்தந் தன 'மென்றே -- மெய்யருள்
தனமெ னக்கருளாய்! (7)

உள்ளமாம் கூண்டினிலே -- கிளியே!
உன்னைச் சிறைபிடிப்பேன்!
உள்ளொளி காட்டிடுவாய் ! -- என்றும்
ஓமெனப் பாடிடுவாய்! (8)

கந்தர் அனுபூதி -- பெற்றுக்
கந்தர் அனுபூதி
சொன்ன 'அருணகிளி ' ! -- காப்பாய்
'ஸோஹம் ' நிலையருளி! (9)

கிள்ளை கடித்தகனி -- சுவையில்
கொள்ளை இஇனிப்பென்பர் ;
கிள்ளிக் கொடுத்திடுவாய்! -- பூதியைக்
கேட்டே கதிபெறுவேன்! (10)


^ கெட்ட வார்த்தைக் கிளி (உரை வெண்பா)

மத்தளராயன் (என்னும்) இரா.முருகன்

from:

http://www.thinnai.com/?module=displaystory&story_id=303020210&format=html

====================

From:

http://www.thinnai.com/?module=displaystory&story_id=30302098&format=html

Pas Pasupathy

unread,
Jan 21, 2009, 11:18:44 AM1/21/09
to yAppulagam / யாப்புலகம்
Sunday February 23, 2003

காதலர் தினக் கும்மி

பசுபதி

காதலர் நாளும்பி றந்ததடி -- நம்
. . கண்ணியம் பண்பாடி றந்ததடி!
மேதினி போகுமிவ் வேதனையை -- பார்த்து
. . வெட்கியே வானம் சிவக்குமடி! (1)

ஆண்டுக்கோர் நாள்தானோ காதலுக்கு --அது
. . அன்றாட வாழ்விலோர் அங்கமடி!
வேண்டாப் பொருள்களை அங்காடிகள் -- சேர்ந்து
. . விற்கவே செய்திடும் சூழ்ச்சியடி! (2)

காதல் கடைச்சரக் கானதடி ! -- பணங்
. . காசெனும் மீன்பிடி தூண்டிலடி!
காதலே ஓர்பரி சென்றிடுவார் ! -- அந்தக்
. . காதல் பரிசால் கிடைத்திடுமோ ? (3)

பண்டையில் காம தகனம்;இன்றோ -- பரிசுப்
. . பண்டத்தில் காசை எரித்திடுவர் !
வண்ண மலர்க்கொத்து வாங்குகிறார் -- தினம்
. . மாலையில் மல்லிக்க தீடாமோ ? (4)

பாதி உடையிலே ஈசுகிறார் -- நடைப்
. . பாதை, கடற்கரை, வண்டியிலே !
காதலின் உச்சமோ 'பச்சை 'யடி! -- அதைக்
. . கட்டிலொன் றேகாண வேண்டுமடி! (5)

நேர்மை இலாதது காதலன்று -- வெறும்
. . நேரம் கழிப்பது காதலன்று !
ஈர்க்கும் உடையும், உடற்பசியும் -- பருவ
. . ஏக்க விளைவுகள் காதலன்று ! (6)

கொச்சைப் படுத்துதல் காதலன்று -- பூங்காக்
. . கொட்டம் அடிப்பது காதலன்று !
இச்சை உணர்வு புனிதமெய்தி -- பின்
. . ஈருயிர்ச் சங்கமம் காதலடி ! (7)

~*~o0o~*~

From:

http://www.thinnai.com/?module=displaystory&story_id=303022311&format=html

Pas Pasupathy

unread,
Jan 27, 2009, 10:46:53 AM1/27/09
to yAppulagam / யாப்புலகம்
Monday March 17, 2003

பைங்கணித எண் பை

பசுபதி

மூவரில் முன்னவன் நான்முகனே* பைங்கணிதப்
பாவை அழகுகண்டு 'பை 'யென்று சொன்னானோ ?
வட்டத்தின் சுற்றளவை விட்டம் வகுத்திடின்
பட்டென்று பம்பிடுவாள் பை.

மார்ச் 14 (3/14) கணித எண் 'பை 'யின் தினம்.
* முதல் மூன்று சீர்கள் பையின் தோராய மதிப்பாம் 3.14-ஐக் குறிக்கிறது.

http://www.winternet.com/~mchristi/piday.html


From :
http://www.thinnai.com/?module=displaystory&story_id=30303174&format=html

Pas Pasupathy

unread,
Jan 27, 2009, 10:49:38 AM1/27/09
to yAppulagam / யாப்புலகம்
Monday March 17, 2003

இன்னும் கொஞ்சம் தூங்கவிடு!

பசுபதி

இன்னும் கொஞ்சம் என்னைத் தூங்கவிடு! --ஈசா!
இரவுக் கனவின் இறுதி பார்க்கவிடு!

பைநிறைய சுவடிகளைச் சுமந்து நின்றார் --முனிவர்
. . பக்கத்தில் வாசுகியும் பைய வந்தாள்;
ஜைனரோ ?பின் சைவரோ ?நீர் என்று கேட்டேன் -- நகைத்து,
. . சைகைசெய்து கூப்பிட்டார்; அருகில் சென்றேன். (1) (இன்னும்)

ஆரணியார்^ வடுவூரின்^ கூட்டு நாவல் -- ஆகா!
. . ஆழ்வார்#தன் கடைக்குள்ளே உண்டு, என்றார்!
'பாரெங்கும் துப்பறியச் செல்வோன் நாமம் -- அதனில்
. . பசுபதியே ' என்றுசொல்லித் தேடச் சென்றார். (2) (இன்னும்)

வந்தியத் தேவனுடன் காதற் போட்டி -- கடும்
. . வாட்போரில் சரிநிகராய்ப் பொருதி நின்றேன்.
குந்தவை கண்களிலோர் குழப்பம் கண்டேன் -- கையில்
. . கோலமலர் மாலையுடன் கிட்டே வந்தாள். (3) (இன்னும்)

பண்டொருநாள் பள்ளியிலே வெண்பாப் போட்டி -ஈற்றடி
. . 'பசுபதியோர் சின்னப்ப யலெ 'ன்றார் ஆசான்;
முண்டாசு நண்பனொரு நகையு திர்த்தான் -- 'பாண்டியா!
. . முழிக்காமல் எழுதெ 'ன்று வாய்தி றந்தான்! (4) (இன்னும்)

இனியதமிழ் அறிவோங்க மருந்து வேண்டி-- நான்
. . ஏங்கிநிற்கும் போதிலொரு சிறுவன் வந்தான்.
'குனிந்துன்றன் நாநீட்டு ! தருவேன் ' என்றான் -- ஒரு
. . கூர்வேலும் அவன்கையில் மின்னக் கண்டேன். (5) (இன்னும் )

அன்றொருநாள் இணையத்தில் மேயும் போது -- ஒரு
. . யமலோகச் சோதிடரின் சுட்டி கண்டேன்.
என்பெயரின் கீழ்ஆயுள் தேடும் போது -- பாவி
. . எருமையொன்று, அலறிடவே கண்வி ழித்தேன் ! (6)

இன்னும் கொஞ்சம் இம்மை நீட்டிவிடு! --ஈசா!
இறுதிக் கனவைத் தள்ளிப் போட்டுவிடு!
=======

^ஆரணி= ஆரணி குப்புசாமி முதலியார்)(1867-1925);
வடுவூர்= வடுவூர் துரைசாமி ஐயங்கார்(1880-1940); தமிழில் துப்பறியும்
கதைகள் எழுதிய முன்னோடிகள்.

#ஆழ்வார் கடை= சென்னையில் இருக்கும் பிரபல பழைய புத்தகக்கடை .


~*~o0o~*~

From:

http://www.thinnai.com/?module=displaystory&story_id=30303172&format=html

Pas Pasupathy

unread,
Jan 27, 2009, 10:51:59 AM1/27/09
to yAppulagam / யாப்புலகம்
Sunday March 23, 2003

வஞ்சம்

பசுபதி


கண்ணிழந்த வெஞ்சினத்தார் கண்பறிக்க முற்பட்டால்
மண்ணில் குருடரன்றோ வாழ்ந்திடுவர் ? -- விண்டறிவாய்
பாமரனே! வஞ்சப் பயணம் தொடங்குமுன்னே
ஈமத் தழல்இரண்(டு) ஏற்று.

சின்ன நியாயமெனும் தென்றலாய்த் தோன்றிடும்;
பின்னர் பெருந்தவறாய்ப் பேய்ச்சூறைக் காற்றாகும்.
நெஞ்சகத்தில் உட்புகுந்து துஞ்சுநற்கு ணத்தைவிஞ்சும்
வஞ்சமென்னும் நஞ்சையுண்ண அஞ்சு.

~*~o0o~*~

From:

http://www.thinnai.com/?module=displaystory&story_id=30303238&format=html

Pas Pasupathy

unread,
Jan 27, 2009, 10:54:44 AM1/27/09
to yAppulagam / யாப்புலகம்
Sunday April 27, 2003

சிலந்தி

பசுபதி

தினமும் தியானம் தனியறையில் -- ஒரு
. . சீடன் செய்யத் தொடங்கியதும்
மனதிற் கச்சம் தருமுறையில் -- ஒரு
. . மர்மப் பூச்சி தோன்றியது. (1)

கரிய உருவில் சிலந்தியொன்று -- அவன்
. . கண்முன் தொங்கும் உணர்வடைந்தான்.
சிறிய தென்று தோன்றிடினும் -- அதன்
. . தேகம் தினமும் பெருத்ததுவே. (2)

இடிதன் தலைமேல் விழுந்ததென -- குரு
. . எதிரில் சீடன் போய்ப்பகர்ந்தான்:
'மடியில் கத்தி மறைத்திருந்து -- சிலந்தி
. . வந்தால் வெட்டி வதைத்திடுவேன். ' (3)

'இந்தா ' என்று சாக்கட்டி -- குரு
. . எடுத்துக் கொடுத்தார் சீடனிடம்.
வந்தால் வெட்டிக் கொல்லாமல் -- அதன்மேல்
. . வட்டக் குறியை இடச்சொன்னார். (4)

நிட்டை குலைத்த பூச்சியின்மேல் -- என்றும்
. . நிலைக்கும் படிசாக் கட்டியினால்
வட்டக் குறியை வயிற்றிலிட்டு -- சீடன்
. . மறுநாள் குருவைப் போய்ப்பார்த்தான். (5)

சட்டை கழற்றக் குருசொல்ல -- சீடன்
. . தயக்கம் இன்றி அடிபணிந்தான்.
வட்ட வெள்ளைக் குறியொன்று -- சீடன்
. . வயிற்றின் நடுவில் மின்னியது ! (6)

[ ஆதாரம்: ஒரு திபேத்தியக் கதை.]

~*~o0o~*~

From:

http://www.thinnai.com/?module=displaystory&story_id=303042710&format=html

Pas Pasupathy

unread,
Feb 4, 2009, 1:41:18 PM2/4/09
to yAppulagam / யாப்புலகம்

Sunday May 4, 2003

செந்தமிழ்ப் பாட்டன்

பசுபதி



செல்லரித்த பண்டையோலை சென்றலைந்து தேடியே
புல்லரிக்க வைக்குமினிய புத்தகங்கள் பொன்னொளிர்
செல்வம்யாவும் சேர்த்தவர்க்கென் சென்னியென்றுந் தாழுமே
. . . சீலன்சாமி நாதனுக்கென் சென்னியென்றுந் தாழுமே (1)

தேமிகுந்த காப்பியங்கள் தீச்செலாமல் காத்தவன்;
தோமிலாத பார்வைகொண்டு தொன்மைநூல்கள் ஆய்ந்தவன்;
சாமிநாத ஐயனுக்கென் சென்னியென்றுந் தாழுமே
. . . சங்கநூல்கள் மீட்டவர்க்கென் சென்னியென்றுந் தாழுமே (2)

இன்றுநேற்றி ரண்டுகாலங் கூடும்பால மாகியே
கண்டகாட்சி சொந்தவாழ்வு காகிதத்தில் வார்த்தவன்;
தென்னிசைக்கு நண்பர்முன்பு சென்னியென்றுந் தாழுமே
. . . செந்தமிழ்தன் பாட்டனுக்கென் சென்னியென்றுந் தாழுமே. (3)

~*~o0o~*~
உ.வே.சாமிநாதய்யர் நினைவுநாள் கவிதை

From :

Pas Pasupathy

unread,
Feb 4, 2009, 1:43:09 PM2/4/09
to yAppulagam / யாப்புலகம்

Thursday June 26, 2003

என்னவளுக்கு

பசுபதி




காலைக் கதிரோன்போல் கண்ணால் எனைஉயிர்க்க
வாலையவள் போலுண்டோ மண்ணுலகில் ? -- கோலவிழி
என்றன்று கொஞ்சவில்லை; எண்ணுகிறேன் அவ்வுவமை,
என்னவள் இல்லாத இன்று.

(ஆதாரம்: Leonard Cohen 's 'For Anne ')

~*~o0o~*~
From:

Pas Pasupathy

unread,
Feb 4, 2009, 1:45:36 PM2/4/09
to yAppulagam / யாப்புலகம்

Thursday July 3, 2003

கணையும் கானமும்

பசுபதி



விண்ணில் எய்தேன் அம்பொன்றை --மண்ணில்
. வீழ்ந்த தெங்கோ; தெரியவில்லை
கண்பின் தொடர முடியாத -- கடிய
. கதியில் கணையும் பறந்ததுவே.

விண்ணில் உயிர்த்தேன் பாடலொன்றை -- மண்ணில்
. வீழ்ந்த தெங்கோ; தெரியவில்லை.
கண்வலு நுட்பம் எவர்க்குண்டு -- பறந்த
. கானப் பயணம் தொடர்வதற்கு ?

கண்டேன் பலநாள் கழிந்தபின்னர் -- உடையாக்
. கணையை ஆல மரமொன்றில்
கண்டேன் மீண்டும் முழுப்பாடல் -- என்றன்
. நண்பன் ஒருவன் இதயத்தில் .

[மூலம்: Longfellow 's ' The Arrow and the Song ']

From:

Pas Pasupathy

unread,
Feb 4, 2009, 1:47:10 PM2/4/09
to yAppulagam / யாப்புலகம்

Thursday July 17, 2003

கற்பனை

பசுபதி



கண்கள் இழந்தபின்பு --மில்டன்
. கண்டதே கவிதையென்பர் -நாம்
பண்ணும் கற்பனைதான் -- ஆன்மா
. பார்க்கும் விழிகளென்பர் (1)

'கற்பனை காட்டுமெழில் -- அதுவே
. காலம் கடந்தமெய்யாம் ' -- என்று
நற்கவி 'கீட்ஸு 'ரைத்தான் --அது
. நமக்கும் பொருந்திடுமே ! (2)

கற்பனை ஊரென்ற -- பாரதி
. கவிதைப் பொருளென்ன ?
'புற்புத வாழ்வினையே -- புனைவெனப்
. புரிந்திடில் மோட்சமுண்டு! ' (3)

'இழந்த இன்பங்கள் --பெறவே
. ஏகுதீர் கற்பனையூர் ' - என்றார்
'குழந்தை நிலையதனை -- அவ்வூர்
. குறித்திடும் ' என்றபொருள் ! (4)

குழவிபோல் தூயநிலை -- கவிஞர்
. கோரல் சரியன்றோ ?
அழகுறு கவிபடைக்க -- நமக்கு
. அதுவே இயற்கையன்றோ ? (5)

கலைகள் மிளிர்ந்திடவே -- உயர்
. கற்பனை ஒளிவேண்டும்; --எண்ண
அலைகள் கவியாக -- புனையும்
. ஆற்றல் மிகவேண்டும் (6)

உணர்வெனும் விதைவேண்டும் -- கவிதை
. உளத்தில் பிறந்திடவே -- ஆனால்
மணமிகு கற்பனைகள் -- வேண்டும்
. மலர்கள் சிறந்திடவே ! (7)

தணலைக் கனலாக்க -- காற்றைச்
. சரியாய் ஊதவேண்டும்
உணர்வைக் கவியாக்க -- கற்பனை
. யுக்தி பலவேண்டும் (8)

மனத்தில் மின்னிடுமோர் --உணர்வால்
. வாசகன் நனைவதில்லை!
கனத்த கருமுகிலாம் -- புனைவே
. மனத்தில் மழைபொழியும் (9)

உதிக்கும் நிலாபோல --உணர்வு
. உள்ளத் தையொளிர்க்கும்
கதிரோன் கற்பனைதான் -- மூலம்
. . கற்றை மதியொளிக்கு ! (10)

பகுக்கும் அறிவுக்கு -- முதலிடம்
. படித்தோர் தருவதில்லை ;
வகிக்கும் தலைமையிடம் -- புனைவே
. மனத்தின் திறன்களிடை. (11)

படைக்கும் திறனதனால் -- கற்பனை
. பரமனை அணுகிவிடும் -- அது
உடைக்கும் கட்டுகளை ! -- மாந்தர்
. உணர்வின் விதிமீறும். (12)

படிப்பவன் மனமுலுக்கல் -- வேண்டும்
. பாடல் தரமெட்ட !
படைத்தவன் மனவுணர்வை -- கற்பனை
. படிப்போன் உணர்வாக்கும். (13)

அநுபவ தளைக்குள்தான் -- உணர்வு
. அடிமையாய் நடைபோடும்
கனவுசெய் கற்பனையோ -- எந்தக்
. கட்டையும் மீறிவிடும். (14)

புவியில் நாம்காணும் -- உணர்வில்
. புதுமைகள் ஏதுமில்லை --அதைக்
கவியாய் செய்வேதம் -- அது
. கற்பனை ரசவாதம் (15)

ஆர்த்திடும் கவியுணர்வை -- நமது
. ஆய்வுத் திறனுடனே
சேர்ப்பது கற்பனையே -- பாடல்
. சிறக்க நற்றுணையே (16)

கற்பனை செய்திடுவீர் -- நம்மைக்
. . கடவுள் படைத்தகணம்!
கற்பனை செய்தன்றோ -- உணர்வைக்
. கடவுள் படைத்திருப்பான் ? (17)

கனவில் புனைந்தளித்தான் -- உலகே
. கடவுளின் முதற்கவிதை !
தனது கற்பனையால் -- நமக்குத்
. தந்தனன் கவியாற்றல் ! (18)

~*~o0o~*~

From:

Pas Pasupathy

unread,
Feb 4, 2009, 1:48:43 PM2/4/09
to yAppulagam / யாப்புலகம்

Thursday July 24, 2003

சார்புநிலைக் கோட்பாடு

பசுபதி



ஐன்ஸ்டானின் பெரும்விசிறி ஆண்டாள்,
மின்வேகம் மிஞ்சுகலை தேர்ந்தாள்;
. பார்த்தொருநாள் புறப்பட்டு,
. சார்புவழி பறந்துவிட்டு,
முன்னிரவு வீடுவந்து சேர்ந்தாள் !

****
ஐன்ஸ்டானின் சீடன்சொன்ன பேச்சு:
'என்மறதி அதிகமாகிப் போச்சு!
. வாழ்வேகம் மிகவாகி,
. வருங்காலம் இறப்பாகி,
ஜனிக்குமுன்பே நான்எரிந் தாச்சு! '

****
(ஆதாரம்: இரு ஆங்கில லிமெரிக்குகள்.)

சார்புநிலைக் கோட்பாடு =Theory of Relativity;
சார்புவழி = relative way; மின் =ஒளி.
இறப்பு = இறந்த காலம்.
~*~o0o~*~

From:

Pas Pasupathy

unread,
Feb 11, 2009, 7:22:12 PM2/11/09
to yAppulagam / யாப்புலகம்

Friday October 10, 2003

இணையத்துக்கு இல்லை இணை !

பசுபதி



கணவன்:
ஆறாம் திணைவெளியில் யாவரும் மன்னர்கள்!
மாறுபெயர் சூடி மடற்குழுக்கள் ஊடுருவி
நாரத வேலைக்கோர் நாடக மேடையது !
நாராசம் நாடோறும் வீசிட, நச்சுக்
கணைகள் தொடுத்தெனது காழ்ப்புணர்வைக் கக்க,
இணையத்துக்கு இல்லை இணை !

மனைவி:
கடவுச்சொல் ஒன்றே கணிச்சந்தை உள்ளே!
கடனட்டை எண்ணே கலிகால மந்த்ரம்,
கணவன் தயவின்றிக் காசினியில் உள்மின்
வணிகப் பொருளை மனைக்கே கொணர!
பணமின்றிப் பாரீஸ் பஜார்கூட்டிச் செல்லும்
இணையத்துக்கு இல்லை இணை !

மகன்:
பாங்காயென் பாட்டி பழங்கதையைச் சொல்லியே
தூங்கியபின் மின்வலையில் துள்ளுவேன் மீனாய்!
அணைக்கத் துடிப்பாள் அரையாடை ரம்பை!
பணமின்றிக் கிட்டுமோர் பாலியல் சொர்க்கம் !
புணர்ச்சிப் படங்கள் புதுக்கதைகள் 'ஜொள் 'ளும்!
இணையத்துக்கு இல்லை இணை !


மகள்:
இலக்கணம் வேண்டாம்! இலக்கியம் வேண்டாம்!
கலப்படக் கல்விக்கு மின்கணினி போதும்!
பள்ளிப் பணியைப் பனியெனக் காய்பானு,
எள்ளென்று தட்டுமுன் எண்ணெயருள் தேனு,
கணக்கற்ற கட்டுரைகள் தந்துதவும் கர்ணன்,
இணையத்துக்கு இல்லை இணை !

~*~o0o~*~

From:
 



Pas Pasupathy

unread,
Feb 11, 2009, 7:23:50 PM2/11/09
to yAppulagam / யாப்புலகம்

Thursday November 27, 2003

சரிவில் ஒரு சிகரம்

பசுபதி



கச்சிதமாய் மிருதங்கம் பிச்சுதறும் என்னைக்
. 'கணக்கு 'பல போட்டொருநாள் கழுத்தறுத்தார் வித்வான்;
கச்சேரி உச்சத்தில் (கட்டாலே போக!)
. 'காலிடத்து 'ப் பல்லவியில் 'தனி 'எனக்கு விட்டார். (1)

'நந்தி 'படம் வணங்காமல் நானெழுந்த வேளை;
. நான்தொட்ட கோர்வையெல்லாம் சத்யநாசம் ஆச்சு!
அன்றெனக்கோ அபிமன்யுக் கானதுபோல் ஆச்சு!
. அஞ்சுமூன்றில் பின்னமிட்டேன்; 'அம்போ 'ன்னு போச்சு! (2)

குருசொல்வார்: 'நிச்சயமாய்க் கூட்டத்தில் இருப்பான்
. கூர்மதியன்; அவன்மகிழக் கோணாமல் வாசி '.
இரண்டுமுறை சுற்றிவந்தேன்; 'இடம் 'வரவே இல்லை.
. இனியுமொரு முறைமுயல எனக்குமனம் வரலை . (3)

மங்குசனி என் 'தனி 'யில் மண்ணள்ளிப் போட்டான்!
. வழக்கமான கையொலியும் வாயடைச்சுப் போச்சு!
சங்கீத வித்வானும் சலித்துரைத்தார் காதில்,
. 'சமாளிக்கத் தெரியாத சன்மம்நீ சீ!சீ! ' (4)

'பக்காவாய்ப் பக்கவாத்யம் இல்லை 'என்ற பேச்சு;
. படுகுழியில் தன்மானம் சரிந்தோடிப் போச்சு. .
துக்கமுற்ற என்றன்முன் ஓர்பெரியார் வந்தார்;
. துணைவந்த பேரனென்கால் தொட்டபின் சொன்னார். (5)

'அவமானம் என்பதுமோர் அனுபவம்தான் தம்பி!
. அணுகுமுறை சரியென்றால் தலைகுனிவும் ஏது ?
தவறுகள்தான் அவனியிலே தவறாமல் நடக்கும்!
. சரிவொன்றின் பின்பார்த்தால் சிகரமன்றோ தெரியும் ? ' (6)

'வெற்றிகளை விடத்தோல்வி நற்பாடம் உணர்த்தும் ;
. மிருதங்க வாசிப்பில் காண்பித்தீர் நேர்மை ;
பெற்றுவிட்டார் பிறருக்குக் குருவாகும் தகுதி ;
. பேரனிவன்; சீடனாக ஏற்றிடுவீர் ' என்றார் . (7)

மலைச்சரிவில் விரைபாறை லேசாகிப் போயோர்
. மகத்தான கோபுரம்மேல் மகுடமான உணர்வு!
விலையற்ற உபதேசம் குருசொன்ன தன்று ;
. விலையற்ற குருபீடம் வந்துநின்ற தின்று. (8)

மனச்சரிவு! மகிழ்வுச்சி! மல்கினவென் கண்கள் ;
. மனதுக்குள் குருபாதம் வணங்கியே நெகிழ்ந்தேன்.
எனக்குமொரு சீடன்வரும் வாய்ப்பெண்ணிச் சிலிர்த்தேன் .
. இமயத்தை வென்றதுபோல் இதயத்தில் நிமிர்ந்தேன் . (9)

~*~o0O0o~*~

From:
 



Pas Pasupathy

unread,
Feb 11, 2009, 7:28:16 PM2/11/09
to yAppulagam / யாப்புலகம்

Thursday December 18, 2003

திரை அரங்கில்

பசுபதி



திகில்படம் வெள்ளித் திரையில்; நடுங்கி
நகம்கடித்து மெளனமாய் நாங்கள்; --- வகைவகையாய்
தித்திப்பு மிட்டாய் ஜிகினா உறைஉரித்துச்
சத்தமிட்டுச் சாப்பிடும் ஜந்து . (1)


பன்முறை பார்த்த படத்தை வருணிக்கும்
பின்வரிசை பீற்றிக்கொள் பேச்சிடையே -- இன்னாரைக்
கொல்பவன் யாரென முந்திரிக் கொட்டையாய்ச்
சொல்லித் தொலைக்கும்சும் பன். (2)

படம்தொடங்கிப் பாதிமணிப் பின்வந்(து) அரங்கில்
இடம்தேடி என்மேல் இடறி -- தடாரென்றன்
கண்ணில் விலாகுத்திக் காலைத் துவையல்செய்
குண்டுக் கனவானின் கூத்து. (3)

மேலைப் படமொன்றில் மேலாடை இல்லையென்றான்;
நீலம் திரையை நிரப்புமென்றான் -- கேலி!
அறுவைப் படத்தால் அவிந்தேன் ; அறிந்தேன்
குறும்புசெய் நண்பன் குணம். (4)


அன்றாடம் ஆங்கிலத்தில் அக்கப்போர் கேட்டலுத்(து)
அன்னை மொழிகேட்க அண்டினால்-- என்சொல்வேன்!
தண்டமிழ் மீனைத் தமிங்கிலம் சாப்பிடும்
கண்றாவி கண்ட கசப்பு. (5)

~*~o0O0o~*~

 
From:
 



Pas Pasupathy

unread,
Feb 11, 2009, 7:29:56 PM2/11/09
to yAppulagam / யாப்புலகம்

Thursday January 15, 2004

கால ரதம்

பசுபதி



கால ரதம்வேண்டும் -- இறைவா!
கால ரதம்வேண்டும் !

சோலைக் கிளிமொழியாள்-- உடலெரி
. . சூட்டில் சிடுசிடுத்தாள் -- அணியக்
கோல நகைபலவும் -- கொடுத்தால்
. . கோபம் குறையுமென்றாள்! -- இன்றைய
ஞால வலம்வந்தேன் -- அணிகலன்
. . நல்ல வைகிட்டவில்லை -- அதனால்
காலைக் கதிர்வேகம் -- கொண்டுபழங்
. . காலம் பயணிக்க (கால)

வங்கக் கடலலைபோல் -- செல்வங்கள்
. . பொங்கு பழங்காலம் -- நாட்டில்
தங்கம் மணிகுவிந்த -- கடைகளைத்
. . தாண்டி நடந்திடுவேன் -- மெய்யொளி
மங்கும் நவமணிகள் -- அவற்றை
. . வாங்க மனமில்லை -- என்றன்
நங்கைக் குயர்நகைகள் -- எக்காலம்
. . நாடி அடைந்திடுவேன் (கால)

ஆடிப் பதினெட்டில் -- மற்றும்
. . ஆடும் சுவாலைகளில் -- புலவர்
சாடும் சுவடிகளை -- மின்னெனத்
. . தாவிப் பலமீட்பேன்-- அந்தச்
சூடா மணிகளையே -- என்றன்
. . சொர்ணத் தமிழ்க்குமரி -- மகிழ்வுடன்
சூடிச் சினங்குறைவாள் -- தமிங்கிலச்
. . சூட்டைத் தணித்திடுவேன் . (கால)

~*~*~o0O0o~*~*~

 
From:
 



Pas Pasupathy

unread,
Feb 15, 2009, 8:53:40 PM2/15/09
to yAppulagam / யாப்புலகம்

Thursday January 22, 2004

காதலன்

பசுபதி



வாலையின் கண்ணிமை மென்மையைப் போல,
. மங்கையின் முத்துப்பல் வெண்மையைப் போலக்
காலை உதித்திடக் கட்டளை இட்டவன்
. கட்டாயம் அவனொரு காதலன் தானய்யா! (1)

குறைகளும் குற்றமும் கொண்டவோர் அன்பன்மேல்
. கோபமுறு காதலி கொட்டிடும் கண்ணீர்போல்,
திரைகடல் நீரில் கரிக்கும் வெறுப்பைச்
. சேர்த்தவன் உறுதியாய்க் காதலன் தானய்யா! (2)

பொங்கிடும் காதலின் பித்துடன் தன்னுயிர்ப்
. பூவை இசைக்கையில் புவனம் படைத்தவன்,
மங்கையின் ஆத்மாவை வசந்தச் சிரிப்பினில்
. வைத்தவன் நிச்சயமோர் காதலன் தானய்யா! (3)

மடந்தை ஒருத்தியின் மந்திரக் கட்டினில்
. மயங்கியே போனவன்; மங்காத் துயரமும்,
அடங்காத தாகமுள்ள அணங்காய்க் கோடையை
. ஆக்கியவன் ஐயமின்றிக் காதலன் தானய்யா! (4)

சோலையில் சுனைகளைச் சூழ்ந்திடும் மரங்களைச்
. சுந்தர மங்கையர் உருவினில் ஆக்கியே
கோல இலைகளில் கூந்தலின் காந்தியைக்
. கொணர்ந்தவன் உண்மையில் காதலன் தானய்யா! (5)

வனப்புடை மலர்களின் வளர்ச்சியில் அறியலாம்;
. வாலையின் கண்களை வனசத்தில் பார்க்கலாம்
இனிப்பிதழ் செம்மையை ரோஜாவில் சுட்டலாம்;
. இவற்றைப் படைத்தவனோர் காதலன் தானய்யா! (6)

[ஷா நீல்ஸனின் ஓர் ஆங்கிலக் கவிதையின் தழுவல்]

~*~o0O0o~*~

 
From:



Pas Pasupathy

unread,
Feb 17, 2009, 4:58:19 PM2/17/09
to yAppulagam / யாப்புலகம்

Thursday February 5, 2004

நானோ

பசுபதி



வெம்பகலில் வேலைசெய்து வெம்பிடும் மக்கள் -- உலகில்
கும்பலாய் ஓடிக் குளிரறைசேர் மக்கள் -- நானோ
வேர்வையின்றி நின்று வெயிலிலே தண்மையாய் -- என்றன்
காரியம் நடத்திவரும் சூரிய காந்திப்பூ.

தரைநடுக்கம் வங்கிகளை ஆக்கும் தரைமட்டம் -- நாட்டில்
அரசாள் சபைகளையும் அச்சுறுத்தும் வெள்ளங்கள் -- நானோ
உண்மையிலே பத்திரமாய் ஊறேதும் இன்றியே -- உலகின்
மண்ணுக் கடியிலே வாழுமோர் மண்புழு.

விளம்பர 'நியான் 'விளக்கு காற்றில் பறந்திடும் -- தீர்க்க
தரிசியொளி வட்டமும் காலத்தில் தாழ்ந்திடும் -- நானோ
என்றும் எவரும் எடுக்க முடியாத -- ஒளியுடன்
விண்ணில் பறந்திடும் மின்மினிப் பூச்சி.

[கவிதைக் கரு: கோபால் ஹொன்னகரே ]

~*~o0O0o~*~

 
From:



Pas Pasupathy

unread,
Feb 17, 2009, 5:00:03 PM2/17/09
to yAppulagam / யாப்புலகம்

Thursday February 19, 2004

காலத்தின் கணமொன்றில்

பசுபதி



சிற்சில கணங்கள் சேர்ந்ததே வாழ்வு.
கடிதில் மறையும் நொடிகள் ஒன்றில்,
மேசைமேல் தேநீர் கோப்பைகள் மேலே,
இருவிழி கலந்து
இதயம் இரண்டைத் தொளைத்து,
உரைத்தன:
'பேசாதே இன்றுநீ;
பேசவில்லை நானும்;
இருப்போம் மெளனமாய் இதுபோல்;
சோகப் பரிசால் இணைந்து
உணர்ச்சிப் பெருக்கில் பிணைந்து
அமர்வோம் கைகளை இறுகப் பற்றி.
எவரே அறிவார் ? இந்தக் கணத்தில்
தொலைவில் உளதோர் மலையின் உச்சியில்
உறைபனி மெதுவாய் உருகத் தொடங்குமோ ? '
[ கைஃபி ஆஜ்மியின் ஒரு கஜலின் தழுவல்]


~*~o0O0o~*~

From:

Pas Pasupathy

unread,
Feb 17, 2009, 5:01:48 PM2/17/09
to yAppulagam / யாப்புலகம்

Thursday April 29, 2004

தாலாட்டு

பசுபதி



தாரணி நம்மூர்; பாரிலோர் கேளிரெனத்
தாரகம் ஆர்த்தகவி தந்தான் உனக்கிதயம்;
வேரைப் புரிந்துபின் மேலே வளர்ந்துவிடு;
பாரதப் பெண்ணரசி! தாலேலோ!
. . பைந்தமிழ்ச் செல்வமே! தாலேலோ! (1)

கண்ணகியும் மாதவியும் கைகோத்து வந்தனர்;
வண்ணச் சிலம்பிரண்டு போட்டு மகிழ்ந்தனர்.
பண்டைக் கலையில் படைப்பாய் புதுமைகளை!
கண்ணசைத்துக் காலசைத்துள் ளங்கவர்
. . கள்ளியே! வள்ளியே! தாலேலோ! (2)

நம்பனைப் பண்ணிசையால் நாடிடக் காரைக்கால்
அம்மை தமிழ்மரபை, ஆண்டாள் இசையறிவை,
சம்பந்தர் தாளத்தைத் தாமுவந்து தந்தனரே.
சம்பகப் பூப்பந்தே! தாலேலோ!
. . தவழ்மழலைத் தென்னிசையே! தாலேலோ! (3)

எண்ணும் எழுத்துமே கண்ணெனக் கொள்ளென்று
தண்டமிழ்ப் பாட்டியார் தந்தார் உனக்கறிவு;
விண்ணோர் வியந்திட மண்ணினை மாற்றிடு!
கண்மணி! கண்வளர்! தாலேலோ!
. . கட்டிக் கரும்பே!நீ தாலேலோ! (4)

முன்னம் இருமுனிவர் மூலர் அருணகிரி
'அன்பே சிவ 'மென்(று) 'அவிரோதம் ஞான 'மென்றும்
சொன்னப் பதக்கங்கள் சூடக் கொடுத்தனர்;
என்னுயிரே ! ஆரமுதே! தாலேலோ!
. . இன்பச் சுரங்கமே! தாலேலோ! (5)

காய்தல் உவப்பின்றிக் கண்டதும் கேட்டதும்
சாய்வின்றித் தந்தநம் சாமிநா தய்யனும்
ஆய்வு பொறுமையிரு கண்ணீந்தான் அன்புடனே;
வாய்மை வழிவகுப்பாய்! தாலேலோ!
. . மயிலே! மரகதமே! தாலேலோ! (6)


தேச விடுதலை செந்தமிழ் என்றுபல
மாசில் கனாக்களால் வானம் அளாவிய
மீசைக் கவியுனக்கு மீதியைத் தந்தான்;அவ்
வாசைகள்மெய் ஆகுக! தாலேலோ!
. . அவனிக் குடிமகளே! தாலேலோ! (7)

~*~o0O0o~*~

 
From:


Pas Pasupathy

unread,
Feb 17, 2009, 5:03:43 PM2/17/09
to yAppulagam / யாப்புலகம்

Thursday May 6, 2004

எழிற்கொள்ளை

பசுபதி




கோடி வீட்டு மங்கை -- தினமும்
. குழந்தை யுடன்நடப்பாள் -- ஒருநாள்
மூடு துகிலும் நெகிழ -- மூக்கு
. மொண்ணை யெனக்கண்டேன் ! (1)

வனிதை நிமிர்ந்து பார்த்தாள் -- நானோ
. மண்ணில் விழிவைத்து --தலையைக்
குனிந்து நடந்து சென்றேன் -- ஏதோ
. குற்றம் புரிந்தவன்போல். (2)

அழகுத் தீனி தேடல் -- இந்த
. அறுப திலும்உண்டு --- ஏதோ
பழக்க தோஷம் ஐயா ! -- இதில்
. பாவம் ஏதுமுண்டோ ? (3)

எங்கும் எதிலும் முழுமை -- எழிலின்
. இலக்க ணமிஃதன்றோ ? -- சிறகு
பங்கம் ஆன பறவை -- அழகில்
. பாதி என்போமோ ? (4)

முந்தைப் பிறவிப் பயனோ ? -- இவள்
. மூளி முகம்கண்டு -- ஒதுங்கும்
என்றன் பார்வை தவறோ ? -- ரசனை
. இறைவன் தந்ததன்றோ ? (5)

மறக்க முடிய வில்லை -- ஐயோ!
. வதன எழிற்கொள்ளை ! -- இவளின்
பிறவி என்ன கொடுமை ! -- துணையாய்ப்
. பெற்ற கணவனெவன் ? (6)

ஒரு நாள்..

எதிரில் வந்த புருடன் --உருவோ
. இராச எழிற்கொள்ளை ! -- இந்தப்
புதிரை அவிழ்க்கத் துடித்தேன் -- இதுயார்
. புரிந்த விளையாடல் ? (7)


மனிதன் என்ன சிவனா ? -- தேய்ந்த
. மதியை முடியேற்ற ? --- அழகின்
இனிமை அற்ற பெண்ணை -- மணக்கும்
. இரும்பு நரனுமுண்டோ ? (8)

கருணை ஊறும் கனிவில் -- அவளைக்
. கணவன் மணந்தானோ ? -- மனைவி
உருவம் தினமும் அவனை -- கனவிலும்
. உலுக்கி எடுக்குமன்றோ ? (9)


பின்னொரு நாள்...

கோட்டு, சூட்டு, போட்ட -- கணவன்
. கூட அந்தமங்கை -- தன்
வீட்டு வெளியே வந்து -- அவனை
. விடைய னுப்பிநின்றாள். (10)

அன்றோர் காட்சி கண்டேன் -- அவன் 'டை '
. அணியைச் சரிசெய்தாள் -- அவளின்
கன்னம் தட்டி நின்றான் -- கணவன்
. கண்ணில் ஆசைபொங்க. (11)

முகத்தை நாணம் சிவக்க -- பின்னர்
. முகிழ்த்த தெழிற்கொள்ளை! -- ஒன்றின
அகத்தின் முகங்கள் கண்டேன் -- அன்பின்
. அழகிற் கேதுகுறை ? (12)


~*~o0O0o~*~

From:

Pas Pasupathy

unread,
Feb 17, 2009, 5:06:24 PM2/17/09
to yAppulagam / யாப்புலகம்

Thursday May 13, 2004

சொல்லின் செல்வன்

பசுபதி



அன்றொருநாள் ராமபிரான் அனுமனிடம் கேட்டார்;
'என்னைப் பற்றியென்ன எண்ணுகிறாய் எப்போதும் ? '

தாழ்மையுடன் மாருதியும் தயங்கிப்பின் பதிலிறுத்தான்:
'ஆழ்ஞானம் தேடுமுன் அரசன்நீ; அடிமைநான். '

ஞானம் மலர்நிலையில் ஞாலம்நீ ; துகள்நான்;
ஞானம் கனிந்தபின்னர் நானேநீர்; நீரேநான். '

சிரித்தணைத்தார் ஸ்ரீராமர் சொல்லின் செல்வனை;
திருமாலாய்க் காட்சிதந்தார்; செஞ்சொற்கள் ஒலித்ததங்கே.

' 'திருமால் மாருதி! ' திருப்பியிதைப் படித்தாலும்
'திருமால் மாருதி 'தான் ! தெளிந்தவர் களித்திடுக! '

இருநாமம் இணைந்துநிற்கும் இணையற்ற மந்த்ரமிது!
இருபோதும் ஓதுங்கள் ! இறையோடு இணையுங்கள் !


~*~o0o~*~

From:

Pas Pasupathy

unread,
Dec 10, 2013, 7:47:09 PM12/10/13
to yAppulagam / யாப்புலகம்
Reply all
Reply to author
Forward
0 new messages