குஞ்சிதபாதம்

337 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Sep 6, 2015, 1:59:43 AM9/6/15
to மின்தமிழ், vallamai
Monier Williams Sanskrit dictionary gives:
kuJcita mfn. crooked ; curved , bent , contracted R. &c. ; curled MBh. Sus3r. BhP. ; (%{A}) f. (scil. %{sirA}) an unskilful way of opening a vein Sus3r. ; (%{am}) n. the plant Tabernaemontana coronaria L.

Seshadri writes:
> குஞ்சிதபாதம் என்பதை தூக்கியகால் என்று கொள்ளாமல் மேலிருந்து கீழ்நோக்க தொங்கும் கால் என்கிறார் வேரியல் 
> அறிஞர் ப. அருளி. அதன்படி இது ஒரு தூய தமிழ்ச் சொல் என்றாகிறது. ஆதன் 

பாதம் என்பது எப்படி தூய தமிழ்ச்சொல்? பாதம் தூய ஸம்ஸ்கிருதச்சொல், இந்தோ-ஐரோப்பியச் சொல்.
குஞ்சித பாதம் (வளைத்துத் தூக்கிய திருவடி) என்பதில் குஞ்சிதம் என்பது த்ராவிடச்சொல்லாக இருக்கலாம்.

குஞ்சு, குஞ்சி, லிங்கம் போன்ற தமிழ்ச் சொற்கள் மிக நெடிய வரலாற்றைக்கொண்டவை.
செவ்வியல் இலக்கியங்களிலும், அன்றாட வாழ்க்கையிலும் பலநிலைகளில் பயன்படும் சொற்கள் இவை.
குஞ்சி - தொங்கும் பல பொருட்கள். உ-ம்: tassels. அடிப்படையான பொருள்கொண்ட தமிழ்ச்சொற்கள்
நிலைத்துநிற்கும் என்பதில் ஐயமில்லை. குஞ்சிதபாதம் நடராஜரின் வளைந்த பொற்பாதம்.


On Saturday, September 5, 2015 at 11:13:37 AM UTC-7, தமிழ்த்தேனீ wrote:
நன்றி

 
சஞ்சிதம் வீடும் நெஞ்சித பாதம்
தஞ்சித மாகும் சஞ்சித பாதம்
கொஞ்சித மேவும் ரஞ்சித பாதம்
குஞ்சித பாதம் குஞ்சித பாதம் 

                                             - வள்ளலார்

தூக்கிய திருவடி - நித்யஸ்ரீ அழகாகப் பாடுகிறார்.
சுத்தானந்த பாரதியார் பாடல்

14-ஆம் நூற்றாண்டிலே சகலாகமபண்டிதர்
உமாபதி சிவாச்சாரியார் சிதம்பரத்தில் வாழ்ந்தார்.
தமிழிலும், வடமொழியிலும் நிபுணர், இரு மொழிகளிலும்
சைவ நூல்கள் யாத்தவர். அவர்தான் நந்தனார்
என்னும் தலித் நாயனார் பற்றி வடமொழியிலே
முதலில் குறிப்பிடுகிறார். குஞ்சிதாங்கிரிஸ்தவம் என்னும்
ஸ்தோத்திர நூலில். இந்நூலை என் நண்பர் 
டேவிட் ஸ்மித் 20 ஆண்டுகளுக்கு முன்னர் விரிவாக
ஆராய்ந்தார். அப்போது அடிக்கடி இந்தாலஜி போன்ற
குழுக்களிற் பேசுவோம். இரண்டாம் பதிப்பு

The Dance of SivaReligion, Art and Poetry in South India

Front Cover
Cambridge University PressNov 13, 2003










நந்தன் போலவே இன்னொரு தலித் குல பக்தரும் பலராலும் புகழப்பட்டுள்ளார்.
சேந்தனார் வரலாற்றை நம்பியாண்டார் நம்பி என்னும் சிவாச்சார்யார் குறித்துள்ளார்.
தமிழ் இலக்கியத்திலே 3 கடிதங்கள் சிவனால் எழுதப்பட்டுள்ளன என்பது மரபு.
மூன்றுமே தலித் மக்களுக்கு சிபாரிசு செய்யும் கவிதைகள் தாம்.
பாணனுக்காக சேரமானுக்கு எழுதிய பாடல், உமாபதி சிவாச்சாரியாருக்கு
பெற்றான் சாம்பவனுக்காக எழுதிய வெண்பா.

நா. கணேசன்

 
அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net




2015-09-05 11:08 GMT-07:00 N. Ganesan <naa.g...@gmail.com>:


On Saturday, September 5, 2015 at 10:45:51 AM UTC-7, தமிழ்த்தேனீ wrote:

 மிக்க  நன்றி  ​கணேசனாரே​

குஞ்சிதபாதம்  என்றொரு பெயர் உள்ளது

கொங்கு-/குங்கு- என்றால் வளைதல்.

குஞ்சிதபாதம் - சிதம்பரம் நடராஜாவின் தூக்கிய திருவடி.

குஞ்சித- < குங்கு-/கொங்கு-

நா. கணேசன்

 

அன்புடன்
தமிழ்த்தேனீ


N. Ganesan

unread,
Sep 6, 2015, 1:20:25 PM9/6/15
to மின்தமிழ், vallamai
On Sunday, September 6, 2015 at 8:53:30 AM UTC-7, N. Ganesan wrote:
pada, pAda of Sanskrit is from Indo-European root, ped-. Nothing to do with Tamil for pada/pAda 'foot' in Sanskrit.


ஒரு சொல் த்ராவிடபாஷைகளின் சொல்லா? இல்லை, வடமொழி/ஸம்ஸ்கிருதம்/இந்தோ-ஐரோப்பியச் சொல்லா
என்று பகுத்தறிய  இரண்டு முனைகளிலும் பார்க்கவேண்டும். தமிழ் மரபு, இந்தோ-ஐரோப்பிய மொழிகளின் வார்த்தைகள்.
அப்படி ஆராய்கிறபோது பதம்/பாதம் தமிழ் அல்ல, இந்தோ-ஐரோப்பிய சொல் அது. தமிழ்க்கு வடமொழியின் கொடை
என்பது புலனாகும்.

அதேபோல, கொரியாவுக்கு பழனியில் இருந்து பெண்மணி போனாளா? - என்கிற ஆராய்ச்சியும் தெளிவுகளை ஏற்படுத்தும்.
கொரியாவின் பல பேராசிரியர்கள் அவர்களுடைய founding mythology-ஐ ஆராய்ந்து எழுதியுள்ளனர். அவற்றை, தமிழ்நாட்டு
அறிஞர்கள் மொழிபெயர்க்க அரசாங்க பணம் (சில கோடிகள் ஒதுக்கலாம்) கொண்டு ஏற்பாடு செய்தல் வேண்டும். கொரிய
அறிஞர்களின் நூல்கள், கட்டுரைகள் - சில தரவுகள் கொடுத்துள்ளேன். நேரம் கிடைத்தால் இன்னும் தரலாம். தமிழிலே
சங்க இலக்கியம், தொல்காப்பியம் கடலாடுதல் பற்றி என்ன சொல்கிறது. பிற்கால இலக்கியங்கள் கூறுவதென்ன?
உ-ம்: மணிமேகலை நாவலில் பெண்கள் கடற் பயணம் இல்லையாதலால் திடீர் என்று ஃப்ளைட்டில் பறந்து செல்கிறாள்
என்கிறார் நாவலாசிரியர் சாத்தனார் அவர்கள். ஆய்வுக் கட்டுரைகள், மொழியியற் கட்டுரைகள் (தமிழ் - சைனீஸ்,
தமிழ் - கொரியன், ...) நல்ல அந்தந்த துறை ஆய்வேடுகளில் வெளிவந்தால், துறையறிவு பெற்ற நிபுணர்கள் எழுதுவார்கள்.
கடலோடி நரசையா அவர்களுக்கு நான் எழுதிய மடல் பார்க்கவும்: On Spikenard, where it grows, its Tamil name (attested in all Indic languages),

கொரியா - தமிழ் ஆராய்ச்சிகள் வளர வாழ்த்துக்கள்.

நா. கணேசன்
நேற்று தமிழ் மக்கள் வீட்டு முன்றிலில் போடும் மாக்கோலம் கிருஷ்ணர் பாதம் என்று அறிந்தோம். கீதை வழியில் தமிழ்மக்களை செல்ல
தமிழக முதல்வர் வாழ்த்தி கிருஷ்ணர் பாதம் காட்டும் கோலத்தைக் குறிப்பிட்டார். உங்கள் இல்லத்தில்
கோலாகலமாக கோகுலாஷ்டமி இருந்திருக்கும் என நம்புகிறேன். 

சின்னக் கண்ணன்:
சீர்க்கோல முற்றத்தில் சீறடியை ஏற்றினால்
மாக்கோலம் கண்டுவரு வான்!



pedestrian (adj.) Look up pedestrian at Dictionary.com
1716, "prosaic, dull" (of writing), from Latin pedester (genitive pedestris) "plain, not versified, prosaic," literally "on foot" (sense contrasted with equester "on horseback"), from pedes "one who goes on foot," from pes (genitive pedis) "foot," from PIE root *ped- (1) "a foot" (see foot (n.)). Meaning "going on foot" is first attested 1791 in English (it also was a sense of Latin pedester). The earlier adjective in English was pedestrial (1610s).

pedal (n.) Look up pedal at Dictionary.com
1610s, "lever (on an organ) worked by foot," from French pédale "feet, trick with the feet," from Italian pedale "treadle, pedal," from Late Latin pedale "(thing) of the foot," neuter of Latin pedalis "of the foot," from pes (genitive pedis) "foot," from PIE root *ped- (1) "a foot" (see foot (n.)). 

Extended to various mechanical contrivances by 1789. Pedal steel guitar is from 1969. Pedal-pushers "type of women's trousers suitable for bicycling" is from 1944.
When college girls took to riding bicycles in slacks, they first rolled up one trouser leg, then rolled up both. This whimsy has now produced a trim variety of long shorts, called "pedal pushers." ["Life," Aug. 28, 1944]
pedal (v.) Look up pedal at Dictionary.com
1866 of musical organs, 1888 of bicycles, from pedal (n.). Related: Pedaledpedaling.


On Sunday, September 6, 2015 at 8:44:20 AM UTC-7, N. Ganesan wrote:
On Sunday, September 6, 2015 at 12:57:48 AM UTC-7, dorai sundaram wrote:
பதித்தல் என்னும் செயலுக்கான சொல்லில் இருந்து பாதம் என்னும் சொல் 
கிடைக்கப்பெற்ரது என்பது என் கருத்து. பதி-பதித்தல்-பதிவு-பாதம்.
சுந்தரம்.


pedis, pedal (சைக்கிளின் மிதி பெடல்), pedestrian (பாதசாரி) போன்றவற்றில்
உள்ள இந்தோ-ஐரோப்பியச் சொல் பதம், பாதம் என்னும் வடமொழிசொற்கள்.

பதித்தல் என்னும் பதம்/பாதம் என வராது. மேலும் சங்க இலக்கியம்
போன்றவற்றிலும் இந்த வடமொழிச் சொற்களைக் காணோம்.
பத, பதம், பதவு, ... என்னும் சொல் தமிழ்ச்சொற் பொருளில் சங்கத்தில் பார்க்கிறோம்.
பாதம் என்ற இந்தோ-ஐரோப்பியச் சொல்லே சங்கத்தில் இல்லை,
பதம் = feet என்றும் காணவில்லை.

நா. கணேசன்
 

தேமொழி

unread,
Sep 6, 2015, 6:25:39 PM9/6/15
to மின்தமிழ், vall...@googlegroups.com


On Sunday, September 6, 2015 at 10:20:24 AM UTC-7, N. Ganesan wrote:
On Sunday, September 6, 2015 at 8:53:30 AM UTC-7, N. Ganesan wrote:
pada, pAda of Sanskrit is from Indo-European root, ped-. Nothing to do with Tamil for pada/pAda 'foot' in Sanskrit.


ஆங்கிலம் 
path = a way or track laid down for walking or made by continual treading.

path = பாதை
 
பாதை = வழி, தடம்

அப்படியானால் "பாதை" என்பது தமிழ் சொல் கிடையாதா?


..... தேமொழி 

N. Ganesan

unread,
Sep 7, 2015, 7:47:09 AM9/7/15
to வல்லமை, mint...@googlegroups.com


On Sunday, September 6, 2015 at 3:25:39 PM UTC-7, தேமொழி wrote:


On Sunday, September 6, 2015 at 10:20:24 AM UTC-7, N. Ganesan wrote:
On Sunday, September 6, 2015 at 8:53:30 AM UTC-7, N. Ganesan wrote:
pada, pAda of Sanskrit is from Indo-European root, ped-. Nothing to do with Tamil for pada/pAda 'foot' in Sanskrit.


ஆங்கிலம் 
path = a way or track laid down for walking or made by continual treading.

path = பாதை
 
பாதை = வழி, தடம்

அப்படியானால் "பாதை" என்பது தமிழ் சொல் கிடையாதா?


தமிழில் ஆயிரக்கணக்கான சொற்கள் பிற மொழிச்சொற்கள்.
ஒரு வாழுகிறமொழி பல மொழிகளுக்கும் சொற்களை 
கடன் கொடுக்கும், கடன் வாங்கும். இது இயற்கை நியதி.

path, paathai - வடசொற்கள் தமிழில் புழங்குவன. பாதம், பாதை
போன்றன சங்க இலக்கியத்தில் இல்லை.

*ped- என்னும் இந்தோ-ஐரோப்பிய தாது பத-/பாத- என சம்ஸ்கிருதத்தில்
மாறுவதற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு. சம்ஸ்கிருத நெடுங்கணக்கில்
எ, ஒ என்னும் குறில்கள் இல்லை. எனவே, ped- பத- என்று மாறிவிடுகிறது.

வேந்தன் அரசு

unread,
Sep 7, 2015, 8:59:37 AM9/7/15
to vallamai, மின்தமிழ்


7 செப்டம்பர், 2015 ’அன்று’ 7:47 முற்பகல் அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:



On Sunday, September 6, 2015 at 3:25:39 PM UTC-7, தேமொழி wrote:


On Sunday, September 6, 2015 at 10:20:24 AM UTC-7, N. Ganesan wrote:
On Sunday, September 6, 2015 at 8:53:30 AM UTC-7, N. Ganesan wrote:
pada, pAda of Sanskrit is from Indo-European root, ped-. Nothing to do with Tamil for pada/pAda 'foot' in Sanskrit.


ஆங்கிலம் 
path = a way or track laid down for walking or made by continual treading.

path = பாதை
 
பாதை = வழி, தடம்

அப்படியானால் "பாதை" என்பது தமிழ் சொல் கிடையாதா?


தமிழில் ஆயிரக்கணக்கான சொற்கள் பிற மொழிச்சொற்கள்.
ஒரு வாழுகிறமொழி பல மொழிகளுக்கும் சொற்களை 
கடன் கொடுக்கும், கடன் வாங்கும். இது இயற்கை நியதி.

path, paathai - வடசொற்கள் தமிழில் புழங்குவன. பாதம், பாதை
போன்றன சங்க இலக்கியத்தில் இல்லை.

*ped- என்னும் இந்தோ-ஐரோப்பிய தாது பத-/பாத- என சம்ஸ்கிருதத்தில்
மாறுவதற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு. சம்ஸ்கிருத நெடுங்கணக்கில்
எ, ஒ என்னும் குறில்கள் இல்லை. எனவே, ped- பத- என்று மாறிவிடுகிறது.


பாதம் பதிதல் என்பதில் வரும் பதி தமிழா? அல்லவா? 

வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

N. Ganesan

unread,
Sep 8, 2015, 9:19:14 AM9/8/15
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, Ashraf N.V.K., Dr. Krishnaswamy Nachimuthu, sirpi balasubramaniam, Iravatham Mahadevan
மஞ்ஞை - மஞ்சை எனப் பாடுவர். மஞ்ஞை = மயில்.
குன்னு “குன்று” போலிருக்கும் யானை குஞ்ஞரம்.
வடக்கே இந்திக்காரர்களுக்கு ஞ வராது. எனவே,
குஞ்ஞரம் - குஞ்சரம் என ஆகிவிட்டது எனலாம்.
குஞ்சு/குஞ்சி/குஞ்சல் - எல்லாம் சிறிதாக இருக்கும் பொருள்கள்.
குஞ்சி = tassels, கல்லூரி பட்டமளி விழாவில் தொப்பியில் உள்ள குஞ்சி,
இதனைச் சீவக சிந்தாமணி பாடுகிற பாடல் அளித்தேன். பார்க்கவும்.
எனவே, குஞ்சி யானைத் துதிக்கை என என்னால் எடுக்க இயலவில்லை.
குஞ்சரத்தின் கை என்றுதான் வருமேயல்லால், குஞ்சரத்தின் குஞ்சி
என்றால் துதிக்கை என வாராது. எனவே, குன்னு/குஞ்ஞு --> குஞ்ஞர/குஞ்சரம்.

குன்று = குன்னு என வரும். குன்றூர் = குன்னூர் ஆங்கிலத்தில் Coonoor https://en.wikipedia.org/wiki/Coonoor (கூன்னூர்)
காளையின் திமில் மலையாளத்தில் கூஞ்ஞு (< கூன்னு < குன்னு/குன்று)
DEDR 643 Ma. kūññu

1643 Ma. kūññu the hump on a bull's shoulders. Go. (Ma.) kunjāṛi hump of bullock (Voc. 723); (LuS.) koonjaree id. Konḍa gunzam, guzam shoulder.


1864 Ta. kuṉṟam, kuṉṟu hill, mountain; kuṉṟuvar mountaineers. Ma. kunnam mountain; kunnu hill, mountain; conical heap, hill-fort; kunnan mountaineer; kunnikka to pile up, heap up; kuṟuhill. To. küḏ-xas̱, küḏs̱ large rock standing by itself. Ka. koṇḍa hill, mountain (< Te.). Koḍ. kundï mountain. Te. koṇḍa, (inscr.) konṟa mountain, hill, rock; koṇḍavã̄ḍu a mountaineer; kuruva, (Inscr.) kuṟuva a raised ground, footpath on a hill. Nk. (Ch.) kod hill. Pa. kondi (pl. kondkul) mountain. Ga. (S.2konḍekor the Gadbas near Salur; (S.3koṇḍavān a hill-man. Go. (W.) kuṛuhill; (Ph.) kuṛo mountain, forest (Voc. 795). Konḍa goṟon (pl. goṟoku/ goṟonku) hill, mountain, forest on a hill. Cf. 1844 Ta. kuṟam. DED(S) 1548.


குஞ்சரம் என்னும் சொல்லை Cmparative Dictionary of Indo-Aryan Languages என்னும் ஆரிய மொழிகளின்
வேர்ச்சொல் அகராதியில் பார்த்தால் காணோம்.

ஆனால், தமிழிலே நீண்ட காலமாக இருக்கிறது.
குஞ்சரம் பெறுமே குழவிப் பெயர்க்கொடை - தொல்காப்பியம்.

குஞ்சி - அளவிற் சிறிய தலைமயிர். முக்கியமாக, ஆண்களின்
குடுமி. பெண்களின் சிறிய முடிக்கும் வரும். குஞ்சி என்பது 
நீண்ட குழல், சடை அல்ல.  அதனால் தான், குஞ்சரம்
என்னும் வலிய, திண்ணிய குன்று போன்ற ஆண்யானைக்கு
குஞ்சரம் என்னும் பெயர் குஞ்சி/குஞ்சு என்பனவற்றில் இருந்து
வேறாகக் காணவேண்டும்.

பெண்யானையை பிடி என்றும், குன்றுபோல் வலிய
பெரிய ஆண்யானையை குஞ்சரம் என்றும் தமிழ் இலக்கியம்
வகைப்படுத்தி 2000 ஆண்டுகளாய்ச் சொல்கிறது.

அகப்பாடலின் கூறுகள் அமைந்த புறநானூற்றுப் பாடல்.
குஞ்சரம் என்னும் ஆண் களிறுகளொடு அவற்றின் துணைகளாகிய
பிடிகளைப் பாடுகிறது.

பொன்வார்ந்தன்ன புரியடங்கு நரம்பின்
மின்நேர் பச்சை, மிஞிற்றுக்குரல் சீறியாழ்
நன்மை நிறைந்த நயவரு பாண!
சீறூர் மன்னன் சிறியிலை எஃகம்
வேந்து ஊர் யானை ஏந்து முகத்ததுவே;
வேந்து உடன்று எறிந்த வேலே, என்னை
சாந்தார் அகலம் உளம் கழிந்தன்றே;
உளம் கழி சுடர்ப்படை ஏந்தி, நம் பெருவிறல்
ஓச்சினன் துரந்த காலை, மற்றவன்
புன்தலை மடப்பிடி நாணக்
குஞ்சரம் எல்லாம் புறக்கொடுத்தனவே.
உரை:

நற்குஞ்சரக் கன்று நண்ணில் கலைஞானம் 
கற்குஞ் சரக்கன்று காண்.  - உமாபதிசிவம், திருவருட்பயன்

சொற்கும் பொருட்கும் உயிராம் மெய்ஞ்ஞானத்தின் தோற்றம் என்ன
நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார் நிலம்தோய் புழைக்கை
நற்குஞ்சரத்தின் பிடியோடு அரசன்னம் நாண நடை
கற்கும் பதாம்புயத்தாயே சகலகலாவல்லியே - குமரகுருபரர்

(அன்னம் = BH geese of the Himalayas coming to Tamil country each year)
 
On Sunday, September 6, 2015 at 9:16:59 PM UTC-7, வேந்தன் சரவணன் wrote:
கணேசர் ஐயா

குஞ்சி என்ற சொல்லின் தோற்றம் குறித்து மிக விரிவாக எனது குயம் என்றால் என்ன என்ற கட்டுரையில் ஏற்கெனவே சொல்லி இருக்கிறேன். நீங்கள் படிக்கவில்லையா?.

இல்லை ஐயா.

குயம் என்ற சொல்லுக்கும், குஞ்சு/குஞ்சி/குஞ்சல் என்ற சொல்லுக்கும் பொருள் வெவ்வேறானவை.
இவை ஒரே மூலத்தில் இருந்து பிறந்தன அல்ல. குயம் (குயம்/குசைப் புல். குயவரி - புலி இவை கூர்மை.

குயம் - மென்மை. மண்ணை நீரால் குழைத்து மென்மை ஆக்கிப் பானை வனைவோன் குயவன்.
குயம் - கொங்கைநகில் என சங்க இலக்கியம் பாடுவதுங் காண்க.

------------------------------

5000+ ஆண்டுகளாக தமிழில் வழங்கும் பலபொருளொருமொழி பற்றி சினிமாவில் காட்டியுள்ளதை
செல்வன் கொடுத்திருக்கிறார். [...]
 
இலிங்க வழிபாட்டின் உருவாக்கம், சங்க இலக்கியத்தில் இலிங்கம் எனப்படுவது யாது?
குஞ்சு/குஞ்சி/குஞ்சல் என்ற தொன்மையான தமிழ்ச் சொற்களின் பொருள்கள்
லிங்கம், விடங்கர், குஞ்சு/குஞ்சி/குஞ்சல் - இவற்றின் பொருள்களால் சிந்து
நாகரீகத்திலிருந்து திராவிட மக்கள் உருவாக்கும் சமயங்களின் வரலாறு, ... என
ஆராயப் பயன் படும்.

குஞ்சிதபாதம் - நடராஜாவின் தூக்கிய திருவடி.
சிவ. கார்த்திகேயன் குஞ்சிதபாதம் என்ற பெயரில் நடிக்கும் சினிமாவின் பெயர் என்ன?

குஞ்சிதம் = நந்தியாவட்டை என்ற பொருள் உண்டு. நந்தியாவர்த்தம்,
காளைகள் நெல்லடிக்கும் களத்தில் தாம்பு கட்டி ஓட்டுவதுபோல்
திரும்புதலால் ஏற்பட்ட பெயர். நந்திப்பூவின் இதழ்கள் வளைந்திருக்கும்
எனவே குஞ்சிதம் என ஒரு பெயர்.



மஞ்ஞை - மஞ்சை எனப் பாடுவர். மஞ்ஞை = மயில்.
குன்னு “குன்று” போலிருக்கும் யானை குஞ்ஞரம்.
வடக்கே இந்திக்காரர்களுக்கு ஞ வராது. எனவே,
குஞ்ஞரம் - குஞ்சரம் என ஆகிவிட்டது எனலாம்.
குஞ்சு/குஞ்சி/குஞ்சல் - எல்லாம் சிறிதாக இருக்கும் பொருள்கள்.
குஞ்சி = tassels, கல்லூரி பட்டமளி விழாவில் தொப்பியில் உள்ள குஞ்சி,
இதனைச் சீவக சிந்தாமணி பாடுகிற பாடல் அளித்தேன். பார்க்கவும்.
எனவே, குஞ்சி யானைத் துதிக்கை என என்னால் எடுக்க இயலவில்லை.
குஞ்சரத்தின் கை என்றுதான் வருமேயல்லால், குஞ்சரத்தின் குஞ்சி
என்றால் துதிக்கை என வாராது. எனவே, குன்னு/குஞ்ஞு --> குஞ்ஞர/குஞ்சரம்.
 
குந்து- முட்டைக்குள் உள்ள குஞ்சு குந்தியிருப்பதை இன்று
அழகான மெடிக்கல் போட்டோக்கள் காட்டுகின்றன. நீர்ந்து/நீந்து - இந்து - இஞ்சி
ஆவது போலவே, குந்து -> குஞ்சு/குஞ்சி/குஞ்சல் எனத் தோன்றுகின்றன.

இந்து- இங்கி என தெலுங்கில் இஞ்சிக்குப்பெயர்.
அதுபோல், கொந்து/கொங்கு/கொஞ்சு. 
வளைதல் கருத்துக்கும், தொங்கும் கருத்துக்கும் குந்து/குங்கு/குஞ்சு என்னும் சொற்றொகுதி.
குஞ்சி/குஞ்சு/குஞ்சல் எல்லாம் சிறிதானவை. இவையெல்லாம் 5000+ ஆண்டுகளாக
தமிழர்கள் மிகப் பரவலாக வழக்காற்றுமொழியில் புழங்கிவருபவை. 
இந்திய சமயங்கள் உருவாக்க தோற்றத்தில் லிங்கம், விடங்கர், குஞ்சு/குஞ்சி, ....
எல்லாம் இன்றியமையாத பொருள்கொண்டவை. தமிழர் என்றும் பயன்படுத்துவார்கள்
என்பதில் ஐயமில்லை. 

நீண்டு தொங்கும் சடையோ, நீண்ட தும்பிக்கையோ குஞ்சு/குஞ்சி எனப் பெயரில்லை.

‘குஞ்சி ஆண்மயிர் புட்பார்ப்புக்
 குன்றியின் கொடிமுப் பேரே’

              - சூடாமணி நிகண்டு

குஞ்சி என்பது சிறிய அளவில் உள்ள முடி.
ஆண் தலைமயிர், பெண் தலைமயிரை
விடச் சிறிதாய் இருக்கும். எனவே,
சூடாமணி நிகண்டில் சூத்திரம் இது.
சிறிய தலைமுடி ஆண் எனினும், பெண் எனினும்
குஞ்சி வருகிறது. “குஞ்சி அழகும், கொடுந்தானைக்
கோட்டழகும்”. பள்ளி செல்லும் சிறுமியின் 
தலைமுடி - குஞ்சி. 

”உச்சி முச்சிக் குஞ்சி” - மீனாட்சி பிள்ளைத்தமிழ்
குஞ்சி = tassels (e.g., in a University
graduation ceremony cap).

சம்பந்தர் என்னும் குழந்தையின் சிறுமயிரைக்
கூட்டி முடிக்க இயலாத குழந்தைப் பருவம்
= குஞ்சி கூடாப் பருவம் 
கொங்குதங் குங்குஞ்சி கூடாப் பருவத்துக் குன்றவில்லி
பங்குதங் கும்மங்கை தன்னருள் பெற்றவன், பைம்புணரிப்
பொங்குவங் கப்புனல் சேர் த புதுமணப் புன்னையின்கீழ்ச்
சங்குதங் கும்வயற் சண்பையர் காவலன் சம்பந்தனே
                            - நம்பியாண்டார்நம்பி

மைத்த கருங் குஞ்சி மைந்தா மா மருது ஊடு நடந்தாய் 
வித்தகனே விரையாதே வெண்ணெய் விழுங்கும் விகிர்தா 
இத்தனை போது அன்றி என்-தன் கொங்கை சுரந்து இருக்ககில்லா 
உத்தமனே அம்மம் உண்ணாய் உலகு அளந்தாய் அம்மம் உண்ணாய்
                            - உண்ணிக்கிருஷ்ணனின் குஞ்சி
                       (ஆழ்வார் பாசுரம்)

வேடர்கள் வரவின் சிறப்பு (அரிச்சந்திரபுராணம்)

பீலிகட்டி யதன் மீதுமொய்த் தொளி 
   பிறங்கு செட்டைகள் அணைத்துநீள் 
மாலை யிட்டுவளர் குஞ்சி துஞ்சநெல் 
   வரிந் திறுக்கிமலர் சூடியே 
காலி னிற்றொடு செருப் பணிந்துகழல் 
   கட்டி நீடுடி கறங்கவை 
வேல்பிடித் துடலம் வேர்வ ரும்பிட 
   விரைந்து வந்தன ரனந்தரே.
     (இ - ள்.) பீலி கட்டி - மயில் தோகையைக் கட்டிக்கொண்டு, 
அதன்மீது - அதன்மேல், மொய்த்து ஒளி பிறங்கு செட்டைகள் அணைத்து
- நெருக்கமாக ஒளிவிளங்குகின்ற இறகுகளைச் சேர்த்து, நீள் மாலையிட்டு
- நீண்ட மாலையணிந்து, வளர் குஞ்சி துஞ்ச - வளர்ந்த குடுமிகளில் 
தொங்கும்படி, நெல் வரிந்து இறுக்கி - குளநெற்கதிரை வரிந்து இறுகக் 
கட்டிக்கொண்டு, மலர் சூடி - அதற்குமேல் பூ முடித்து, காலினில்.

சமணர்கள் வளர, வளர தலைமயிரை இணுங்குவதை மேருமந்தரபுராணம்
குஞ்சி வாங்கல் என்கிறது.

மாதவ னருளிச் சித்தி வருகமற் றிவர்கட் கென்னாப்
    போதணி குஞ்சி வாங்கப் புணர்ந்துமா தவத்திற் சென்றா
    ராதாம் பண்ணு நாமத் தரசிளங் குமரன் பாலின்
    மாதிரம் பில்கு நல்ல வார்த்தைமா முனிவ னானான்.

     (இ-ள்.) (அவ்வாறு   சொன்னபோது),    மாதவன்  - தர்மருசி
முனிவரனானவன், இவர்கட்கு   -     இவ்விருவர்கட்கும்,    சித்தி -
ஸ்வாத்மோ பலப்தியாகிய ஸித்தியானது,வருக - வரக்கடவது,என்னா -
என்று,   அருளி  - ஆசீர்வதித்து, போதணி - புஷ்பமாலைகளணிந்த,
குஞ்சி    - தலைமயிர்    முதலானவைகளை, வாங்க    -    தபோ
*தீக்ஷாவிதியின்   கிரமத்தால்    பரிஹரித்து ஜினதீக்ஷையினை யருள,
மாதவத்தில்  - பெரிதாகிய தபத்தில், புணர்ந்து - சேர்ந்து, சென்றார் -
இவ்விருவரும்  சென்றார்கள், (அவர்களுள்), ஆதரம் பண்ணு நாமத்து
- ப்ரீதிங்கரனென்னும்         பெயருடைய,     அரசிளங்குமரன் -
இராஜபுத்திரனாகியவன், பாலின்     -   பால்போல்,    மாதிரம்   -
மாதுரியத்தை,பில்கும் - கொடுக்கும், நல்ல - நன்மையாகிய, வார்த்தை.

----------------------

குஞ்சி - அளவிற் சிறிய தலைமயிர். முக்கியமாக, ஆண்களின்
குடுமி. பெண்களின் சிறிய முடிக்கும் வரும். குஞ்சி என்பது 
நீண்ட குழல், சடை அல்ல.  அதனால் தான், குஞ்சரம்
என்னும் வலிய, திண்ணிய குன்று போன்ற ஆண்யானைக்கு
குஞ்சரம் என்னும் பெயர் குஞ்சி/குஞ்சு என்பனவற்றில் இருந்து
வேறாகக் காணவேண்டும்.


நா. கணேசன்


குஞ்சம் = புல்லின் நுனியில் வளைந்து தொங்கும் நீண்ட மென்மையான பூ, மென்மையான பூங்கொத்து, மென்மையான துணி.

குஞ்சி = ஆண்குறி - வளைந்து தொங்குவது என்ற பொருளில். பழங்காலத்தில் சிறு ஆண் குழந்தைகளின் பிறப்புறுப்புகளை ஆடைகளை அணிவித்து மறைக்க மாட்டார்கள். சிறிய பட்டுப்போன்ற குஞ்சத்தினை  முன்னால் தொங்கவிட்டு அணிவித்து அதைக் கொண்டு மறைத்திருப்பார்கள். ஆரம்பத்தில் இக் குஞ்சத்தைக் குறித்துவந்த குஞ்சி என்ற சொல் நாளடைவில் பிறப்புறுப்பைக் குறிக்கவும் பயன்படலாயிற்று.

குஞ்சியப்பன் = சித்தப்பன் - அப்பாவுக்கு இளையவர் என்ற பொருளில்.
குஞ்சியாயி / குஞ்சியாய்ச்சி = சித்தி - அம்மாவுக்கு இளையவர் என்ற பொருளில்.
குஞ்சு = பறவைகளின் இளமைப் பெயர்.
குஞ்சிதம் = வளைந்தது.
குஞ்சரம் = துதிக்கை. நீண்டு வளைந்து தொங்கும் கை யானையின் சிறப்பாதலால், ஆகுபெயராய் யானைக்கு வழங்கியது.

மேலும் முழு விவரங்களை அறிய..

http://thiruththam.blogspot.in/2014/11/blog-post.html



--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.
------------------------------------------------------------------
கடந்துபோன மணித்துளிகள் - மண்ணில்
கரைந்துபோன மழைத்துளிகள் - மீளாது !
கடமையைச் செய் ! - அதையும்
உடனடியாய்ச் செய் !
----------------------------------------------------------------

தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண: http://thiruththam.blogspot.com

திருக்குறளுக்கான புதிய விளக்க உரைகளைப் படிக்க: http://kuraluraikal.blogspot.com

N. Ganesan

unread,
Sep 9, 2015, 1:35:33 AM9/9/15
to மின்தமிழ், vallamai, Natrajan Kalpattu Narasimhan
2015-09-09 7:37 GMT+05:30 Natrajan Kalpattu Narasimhan <knn...@gmail.com>:
இந்த மர மண்டைக்கு ஒரு சந்தேகம்'  குஞ்சிததால் (யானையால்) ஓடி வர முடியும்.  குஞ்சித பாதத்தால், அதான் யானைக் கால் உடையவரால், ஓடி வர முடியுமா?

குஞ்சிதம் = வளைவு. வளைவுள்ள பூ நந்தியாவட்டை. யானைக்குக் குஞ்சிதம் என்ற பெயர் இல்லை.
குஞ்சிதபாதம் = தில்லைக் கூத்தப்பிரானின் வளைந்த தூக்கிய திருவடி.

குஞ்சரம் = யானை. இங்கே வளைவுப்பொருள் இல்லை. குஞ்ஞு/குன்னு. 
The temples on elephant's head, like the hump of a zebu bull - குஞ்ஞு/குன்னு - with ra possessive suffix குஞ்ஞரம்/குஞ்சரம்.

மொத்து-/மத்து-: மொத்தகம்/மத்தகம் --> மஸ்த். 
குன்று அனைய விலங்கு. அல்லது குஞ்ஞு/குன்னு என்னும் மத்தகம் கொண்ட களிறு - குஞ்ஞரம்/குஞ்சரம்.

படிக்கவேண்டிய கட்டுரை (நன் இன்னும் பார்க்கலை):
Meenakshi, K. 1989. "Lexical Borrowing From the Non-Aryan Into Indo-Aryan Elephant: a Case Study." In Indian Linguistics
IL, 50, 1989 (1991), 113-126.

நா. கணேசன்
Reply all
Reply to author
Forward
0 new messages