யாவகம் (ஜாவா) தீவுகளில் இருந்து தொண்டி (பாண்டிநாட்டுக்கு) துறைமுக வாணிகம்

48 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Sep 1, 2017, 11:02:08 AM9/1/17
to மின்தமிழ், மின்தமிழ், vallamai
யா(=ஆச்சா மரங்கள்) = Shorea trees.
கோங்கு மரங்கள் = Hopea treea.

சங்க காலத்திலே புகழ்பெற்ற இரண்டு துறைமுகங்கள் “தொண்டி” என்ற பெயரிலே உண்டு.
ஒன்று சேர நாட்டிலும், மற்றொன்று சோழ நாட்டிலும் இத் துறைமுகங்கள் இருந்தன.

நெய்தல் திணைப்பாடல்கள் எழுதிப் புகழ்வாய்ந்த அம்மூவனார்
சேரர் கடற்கரைத் துறைமுகமான தொண்டியின் மீது தொண்டிப்பத்து பாடியுள்ளார்.
ஆனால், அவரே பாண்டிநாட்டுத் துறைமுகமான தொண்டி மீதும் ஒரு பாடல் செய்துள்ளார்.
அம்மூவனார் காலம் கி.பி. 3-ஆம் நூற்றாண்டு என்றால், அதற்கும் 2 நூற்றாண்டு கழிந்து
இளங்கோ அடிகளும் யாவகத் தீவுகளில் இருந்து ஆச்சா மரப் பொருள்களும், கருப்பூரப்
பிசினும், கோங்கு மரங்களும் இறக்குமதியாகியுள்ளன. அருமணம் (மரமணம், பர்மா),
வருணத் தீவு (போர்னியோ), யாவகம் (> சாவகம், மணிமேகலை) எனக் கிழக்கே இருந்து
தொண்டிக்கு தொடர்புகள் இருந்துள்ளன.

அப் பழைய இலக்கியச் செய்திகளை இவ்விழையில் காண்போம்.
சிலம்புக் காப்பியத்திலே சொல்லப்படுதலால், அகத்தியர் கதைகள் மிக்குள்ள
அக் காப்பியம், தொண்டி பாண்டி நாட்டில் சிறப்புற்று, அகத்தியர் கதைகள்
தென்கிழக்கு ஆசியாவில் பரவிய காலம் ஆதல் வேண்டும். எனவே தான்
தமிழறிஞர்கள் கி.பி. 5-ஆம் நூற்றாண்டு என்பது சாலும்.

திரு. ஜலசயனனுக்கு நன்றி.

நா. கணேசன்

On Thursday, August 31, 2017 at 11:31:40 PM UTC-7, Jalasayanan Chellappa wrote:

அன்புடை கணேசனார் அவர்களுக்கு

 

எனது பொருட்பிழையை திருத்தியமைக்கு நன்றி.

 

முன்பு இட்ட தகவலை வெட்டி ஒட்டும் போதுகூட முன்னர் செய்த பிழையை கவனிக்க தவறினேன்.


நன்றி, திரு. ஜலசயனன் அவர்களே.

இந்தப் பெருங்குடும்பத்தில் யா (சால்) (= Shorea), 
கோங்கு (= Hopea) மர இனங்களும் சேரும்.

யா (=சால்) மரங்கள். பாண்டிநாட்டு தொண்டி துறைமுகத்துக்கு
யா மரங்களின் பொருள்கள் யாவகத்தில் இருந்து வந்ததை சிலம்பு
போன்ற நூல்கள் கூறுகின்றன. சங்க இலக்கியத்திலும் பாண்டிநாட்டுத்
தொண்டி துறைமுகத்துக்கு ஒரு பாடல் உண்டு. யாவகம் தான்
தென்கிழக்கு ஆசியாவின் முதல் தலைநகர். பின்னர் தான் கம்போடியா ஆனது
என்பதை தாங்கள் அறிவீர்கள்.

யா மரங்கள் (சால் வடமொழி).:

கோங்கு மரங்கள் 

யாவும், கோங்கும் சேர்ந்த பெருங்குடும்பத் தாவரங்கள்:

உலகின் முக்கியமான timber மரங்கள் இவை. கட்டிடம், ஃபர்னிச்சர் எல்லாம் இவை.

நா, கணேசன்
 

 

 

கோங்கு என்பது வேறு மரம். சால் வகை அல்ல. கொங்கை என்ற சொல் இந்தக் கோங்கு மரப்பூவால் வைத்தனர்.

 

சால மரம் என்பது யா மரம். பெரு வறட்சியிலும் பட்டைகளில் நீர் இருக்கும். யானைகள் உறிஞ்சி அந்த நீரைக் குடிக்கும். பாலைத் திணை செய்யுள்களில் காண்க.

 

--------------

 

கோங்கு - இலவ மர வகைகள். Caung trees. They are not shorea ( yaa in Sangam, saal in Indo-Aryan languages) trees.

கோங்குக்கு கணிகாரம்/கர்ணீகாரம் என்பது ஒரு பெயர்.

கணிகாரம் kaṇikāram

, n. < karṇikāra. Red cotton tree. See கோங்கு. கணிகாரங் கொட்குங்கொல் (கலித். 143, 5).

 

 

 

கோங்கிலவு kōṅkilavu

 

, n. < id. + இலவு. False tragacanth, m. tr., Cochlospermum gossy- pium; மரவகை. (L.)

 

கோங்கு kōṅku

 

, n. 1. Common caung, 1. tr.Hopea wightiana; கோங்குவகை. (L.) 2. Iron-wood of Malabar, Hopea parviflora; நீர்க்கோங்கு. (L.) 3. See கோங்கிலவு. (மலை.) 4. Red cotton tree. See முள்ளிலவு. (L.)

 

 

 

 

நான் சொல்ல வந்தது யாதெனில், பரவலாக இந்த சால மரம் எனும் ஷொரியா ரோபஸ்டா வெண்கோங்கு இனத்தை சார்ந்தது எனும் தாவிரவியல் செய்தி.  எனது சொற்கள் இந்த செய்தியை சொல்ல தவறியதற்கு மன்னிக்கவும்

 

Common name: Malabar Ironwood, White Kongu, Hopea • Kannada: Bogi mara, Bovu Mara, Kiralbhogi, Sannele Bogi • Malayalam: Urippu, Irumbogum, Kongu, Thambagam, Iripu • Tamil: Irubogam, Pongu, Vellaikongu வெள்ளை கோங்கு எனும் வெண்கோங்கு, இருபோகம்

 

Botanical name:  Hopea parviflora    Family: Dipterocarpaceae (Sal family)

 

தாங்கள் குறிப்பிடும் Hopea wightiana வும் சால மர வகையை சார்ந்த்தே.  இதன் இன்னொரு பெயராக Hopea ponga   

 

Common name: Ponga • Kannada: ಹೈಗ haiga • Konkani: पाव pav • Malayalam: ഇലപ്പൊങ്ങ് ilappong, ഇരുന്വകം irunvakam, കന്വകം kanvakam • Marathi: कवशी kavshi • Tamil: கோங்கு konku

 

Botanical name:  Hopea ponga    Family: Dipterocarpaceae (Sal family) Synonyms: Artocarpus ponga, Hopea wightiana

 

இந்த கோங்கு வகையை சாராத மற்றொரு மரத்திற்கும் கோங்கு என்ற பெயர் வழக்கத்தில் உண்டுஇது சால வகை அல்ல. 

Common name: Ceylon Cherry • Malayalam: അട്ടനാറിപ്പൊങ്ങ് attanaripongu, ഇരട്ടാനി irattani, മുട്ടക്കൊങ്ങ് muttakkon, നെയ്‌ക്കമ്പകം naikambagam,നായ്‌ത്തമ്പകം naithambagam, രെട്ടിയാ rettiyan • Marathi: ढाका dhaka, कौला kaula, कोगल kogal • Tamil: முட்டைநாரி கோங்கு muttainari kongu, பாலன்கச்சி palankacchi

 

Botanical name:  Prunus ceylanica    Family: Rosaceae (Rose family)

 

மேலும் தாங்கள் தரும் Cochlospermum gossypium என்பது காட்டு பருத்தி. அது பிக்ஸ்ஸேஸி Bixaceae (Annatto family) எனும் தாவிர குடும்பத்தை சார்ந்த்து.  நல்ல பருத்தி - நூல் நூற்கும் பருத்தி -மால்வேஸி இனத்தை சார்ந்தது- Malvaceae (Mallow family)

 

முள்ளிலவு என்பது - Common name: Silk Cotton Tree, Kapok Tree • Hindi: शाल्मली Shalmali, सेमल Semal • Manipuri: Tera • Assamese: Dumboil • Tamil: Sittan, Sanmali • Malayalam: Unnamurika • Nepali: सिमल Simal  Botanical name: Bombax ceiba      Family: Bombacaceae (baobab family)Synonyms: Salmalia malabarica. இவண் சால்மாலியா மலபாரிகா எனும் மாற்று பெயர் தொடர்பை தந்தாலும், பின்னர் இது வேறு குடும்பத்தை சார்ந்ததாக கண்டு மாற்றப்பெற்றது.

 

இவை வெவ்வேறு தாவிர குடும்பத்தை சார்ந்தது

 

எனவே சாலவிருக்ஷம் கோங்கு வகையை சார்ந்த ஒரு மரம் என்பதை தாவிரவியல் ரீதியில் குடும்ப இனத்தின் பெயரால் தவறாக குறித்துவிட்டேன். மன்னிக்கவும்.

 

-----Original Message-----
From: vall...@googlegroups.com [mailto:vall...@googlegroups.com] On Behalf Of N. Ganesan
Sent: 30 August 2017 19:30
To: 
மின்தமிழ்

Cc: vall...@googlegroups.comthami...@googlegroups.com
Subject: Re: [
வல்லமை] {தமிழாயம்} Sonepur: Digging up a new Lanka // இராமாயணமே தென்னாட்டில் நடக்கவில்லை

 

On Tuesday, August 29, 2017 at 11:14:03 PM UTC-7, Jalasayanan wrote:

>  

சால மரம் என்பது குங்கிலிய மரம்.

>  

> Common name: Sal • Hindi: साल Sal, Salwa, Sakhu, Sakher • Marathi: sal, guggilu, rala, sajara • Tamil: attam, venkungiliyam, kungiliyam • Malayalam: karimaruthu, kungiliyam, maramaram • Kannada: ashvakarna, asina, asu, bile-bhogimara • Bengali: Sal • Oriya: Sargi gatcho • Urdu: Ral, Safed dammar • Assamese: Sal, Hal • Khasi: Dieng blei • Sanskrit: agnivallabha, ashvakarna, ashvakarnika

>

> Botanical name: Shorea robusta    Family: Dipterocarpaceae (Sal family)

>  

இதற்கு பரவலான பெயர் கோங்கு – இது தென்னிந்தயாவில் பரவலாக காணக்கூடிய மரமே.  கேரளத்தில் இதை கரிமருது என்பர்.  மருத இனத்தை சார்ந்த்து என தமிழ் வழக்கு

>  

> Falsus in Uno, Falsus in omnibus

>  

சால விருக்ஷம் என்றால் என்ன என்று தெரியாத்தால் வந்த நிலை இது. நிற்க.

>  


ஆமாம். சால மரங்கள் தென்னிந்தியாவில் பல வகைகள் உள்ளன. சங்க காலத்தில் இருந்த பலவகைகள் இன்று அழிந்த நிலை. இருப்பினும் சால மரங்களின் பல வகைகள் தென்னகத்தே உள்ளன. அவை பற்றி.

https://groups.google.com/forum/#!msg/mintamil/x4EBxnSZuQA/JiealWsDBgAJ


----------------


கோங்கு என்பது வேறு மரம். சால் வகை அல்ல. கொங்கை என்ற சொல் இந்தக் கோங்கு மரப்பூவால் வைத்தனர்.

சால மரம் என்பது யா மரம். பெரு வறட்சியிலும் பட்டைகளில் நீர் இருக்கும். யானைகள் உறிஞ்சி அந்த நீரைக் குடிக்கும். பாலைத் திணை செய்யுள்களில் காண்க.

 

--------------

 

கோங்கு - இலவ மர வகைகள். Caung trees. They are not shorea ( yaa in Sangam, saal in Indo-Aryan languages) trees.

கோங்குக்கு கணிகாரம்/கர்ணீகாரம் என்பது ஒரு பெயர்.

கணிகாரம் kaṇikāram

, n. < karṇikāra. Red cotton tree. See கோங்கு. கணிகாரங் கொட்குங்கொல் (கலித். 143, 5).


கோங்கிலவு kōṅkilavu

, n. < id. + இலவு. False tragacanth, m. tr., Cochlospermum gossy- pium; மரவகை. (L.)

 

கோங்கு kōṅku

, n. 1. Common caung, 1. tr., Hopea wightiana; கோங்குவகை. (L.) 2. Iron-wood of Malabar, Hopea parviflora; நீர்க்கோங்கு. (L.) 3. See கோங்கிலவு. (மலை.) 4. Red cotton tree. See முள்ளிலவு. (L.)

http://www.tamilvu.org/slet/l4100/l4100pd2.jsp?bookid=72&pno=725

இறைவன்      - கைச்சினேஸ்வரர்கரச்சினேஸ்வரர்.

     இறைவி   - சுவேதவளை நாயகிவெள்வளைநாயகி

     தலமரம்   - கோங்கு இலவு (இதன் அடியில் உள்ள லிங்கம் கோங்கிலவு வனநாதேஸ்வரர்)

நா. கணேசன்


தரப்பட்ட சுட்டியில் உள்ள பதிவை காணும் போது

>  

லங்கா எனும் இலங்கை சோன்பூர் எனும் போது சிற்சில சிந்தனைகள்.  1. இராமாயணம் முழுவது சரித்திரம் என ஏற்கொண்டால் மட்டுமே இதனை நம்ப வேண்டும்.  2. லங்கா என்பது சோன்பூர் மற்றும் சிங்கள என்பது சிலோன் என்றதும் மனதில் எழுவதுசிலோன் தமிழ் கூறும் நல்லுலகு இல்லையாதிராவிடம் என்று சொல்லப்படும் பூமியில் சிலோன் இல்லையாசிங்களம் தமிழ் போலும் பழமை வாய்ந்த மொழிதானா என்ற கேள்விகளுக்கு ஆமாம் என்றே பதில் தர வேண்டியிருக்கிறது. ஏன் எனில் முதல் கேள்விக்கான பதில்தான்.  சரித்திரம் என்று ஏற்கொண்டாகிவிட்டதே. 3. சொல்லப்படும் 7-6 கிமு கலிங்கம் முழுவதும் பௌதமாக இருந்ததாக உள்ள சரித்திரம் எங்கு ஒளிந்துள்ளதுமௌரிய சாம்ராஜ்ய காலத்திற்கு முன்பும் இப்பிரதேசம் கலிங்கம் என்று குறிக்கப்பட்டதை கவனத்தில் கொள்ளாதது ஏன். இராமாயண மகாபாரதத்தில் கலிங்கம் எனும் சொல்லே இல்லையோ 4. அனுமன் கடல் கடந்ததாக உள்ள சரித்திரம் எங்கே ஒத்துபோகிறது

>  

சிலோன் எனும் சிறீலங்காவை இராமாயணத்திடம் இருந்து பிரிப்பது என்னை பொருத்தவரை வெற்று சூழ்ச்சியாகவே காண்கிறேன்.

>  

>  

N. Ganesan

unread,
Sep 2, 2017, 1:02:13 AM9/2/17
to மின்தமிழ், minT...@googlegroups.com, vall...@googlegroups.com

சங்க இலக்கிய மரங்களில் முக்கியமானது யா மரம். இந்த யா மரம் ஆ, ஆச்சா என்று பின்னாளில் வழங்கும்.
ஆ மலரை விரும்பிக் கொற்றவை அணிகிறாள் என்கிறது தேவாரம். கொற்றவை பாலைநிலத்துக்கு கடவுள்.
யா மரங்கள் பாலை நிலத்தில் நெடிது வளர்வன.

ஆச்சா மரத்தை சாலம் என்கிறது பிங்கலந்தை நிகண்டு. சாலம் இந்தியில் சால் என்பர். யா என்னும் பெயர்
-ல் விகுதியேறு சால் என்று வழங்குகிறது போலும். சாலம் என்னும் ஆச்சா (ஆ/யா) மரங்கள்
Shorea species. இதனால், யாவகம் என்று சாலியூர், கொற்கை, தொண்டி, நாகை, புகார் போன்ற
துறைமுகங்களில் இருந்து சென்றோர் பெயரிட்டனர், யாவகம் சாவகம் என்றும் ஜாவா என்றும் மருவியுள்ளது.

சங்க இலக்கியத்தில் யா மரங்கள் (Shorea robusta, சாலம்)
யா/ஆ/ஆச்சா - primarily shorea trees. கராச்சி (கரு+ ஆச்சி), கம்மரம் (கருமரம்) (கன்னடத்தில்), அஞ்சனம் (hardwickia binata) என்னும் மரமும் பிற்காலத்தில் ஆச்சா எனப்படுதல் உண்டு, ஆனால், யா மரம் முக்கியமாக ஷொரியா மரங்கள். பார்க்க பிங்கலந்தை, சென்னைப் பல்கலைப் பேரகராதி, DED. (first Pingalandai was published by Pollachi SivanpillaiyavarkaL, in which he said he will publish VaLaiyApati next. Obviously, Sivanpillai, UvECaa, VeLLakaal pa. Subramanyam had in their possession VaLaiyaapati mss. now presumably lost.)

மரைக்காடு (antelope forest) மறைக்காடு (Veda forest) என மொழிபெயர்ப்பு
ஆனதுபோல, யா என்றால் ஷொரியா மரங்கள் என்பதை விட்டுவிட்டு, யவ த்வீபம் என்று
சம்ஸ்கிருதத்தில் மொழிபெயர்த்தனர். ஆனால், யவம் = பார்லி தான்யம் யாவகத் தீவில் விளைவத்தில்லை.
இது ஈராக் போன்ற ஊர்களின் தானியம் யவம்.

நா. கணேசன்

திரு மரைக்காடு - பழைய காலத் தமிழ்ப் பெயர் என்று காட்டிய தமிழறிஞர்கள்,

N. Ganesan

unread,
Sep 2, 2017, 1:00:13 PM9/2/17
to மின்தமிழ், minT...@googlegroups.com, vall...@googlegroups.com, housto...@googlegroups.com

சங்க இலக்கிய மரங்களில் முக்கியமானது யா மரம். இந்த யா மரம் ஆ, ஆச்சா என்று பின்னாளில் வழங்கும்.
ஆ மலரை விரும்பிக் கொற்றவை அணிகிறாள் என்கிறது தேவாரம். கொற்றவை பாலைநிலத்துக்கு கடவுள்.
யா மரங்கள் பாலை நிலத்தில் நெடிது வளர்வன.

யா = Shorea trees என்பதற்கு இன்னும் சில சான்றுகள்:

(1) கருமரம் (கம்மரம் - கன்னடத்தில், by consonant assimilation), கராச்சி எனப்படும் Hardwickia binata என்னும் இந்தியாவின் மரத்தில் பூக்கள் சிறப்பதில்லை.
”The tiny, white/greenish-yellow coloured flowers are inconspicuous and are easily overlooked.[4]  “

ஆனால், சாலமரத்தில் வாகைப்பூக்கள் போன்ற வெண்மையான பூக்கள் மரம் முழுதும் பூத்துக் குலுங்கும்.
கொற்றவை வாகைப்பூ விரும்பிச் சூடுவள். இதனால் தான் வாகைத்திணை என்று தமிழ் இலக்கியம் புறத்திணைகளில்
ஒன்றைக் கூறுகிறது. இன்றைய எலெக்ஷன்களில் கூட கக்ஷிக்காரர்கள் தங்கள் தலைவர் வெற்றிவாகை சூடினார்
என்கிறார்கள். உ-ம்: பிரதமர் மோதி, ஆடிட்டர் குருமூர்த்தி உதவியுடன் தமிழ்நாட்டில் ஓபிஎஸ் துணைமுதல்வர் பதவிக்கு
வெற்றிவாகை சூடியுள்ளார்.

ஆ மலரை பார்வதியும், சிவபிரானும் அணிவதைத் தேவாரம் பாடுகிறது. ஆ ( < யா, = ஆச்சா) மலர்கள்
Flowers of the Yaa tree. (Shorea Robusta).
யா மரங்கள் (shorea robusta) இன்றும் காடுகளில் நட்டு வளர்த்தால் நன்கு வருகிறது.
முன்னர் இருந்து பின்னர் அழிந்திருக்க வேண்டும். இப்போது கருமரம், கராச்சி (hardwickia binata) அழிந்துவருகிறது.
சில நூற்றாண்டு முன்னர் யா மரங்களில் பல சாதிகள் அழிவுற்றன என்பது தெரிகிறது.
பல பறவைகளும் (உ-ம்: போதா (பெருநாரை) இன்றில்லை தமிழ்நாட்டில். அதே போல, அகில், யா மரங்களில் சிறப்பான shorea robusta ...)

சிவன், பார்வதி சூடும் ஆம்பூக்கள்: sal tree flowers,





























""Once a protocol of any plant is made, it can be grown back even if it gets extinct. We are also working on developing synthetic seeds of Anjan (Hardwickia binata) which is highly endangered plant as no flowering and seeding is taking place due to its over exploitation," Shrivastav said.


...


Leafs of Anjan has very high fodder value and is rich with protein which increases production of milk in animals by 9%. The trees are under stress in the region. "Large scale looping takes place of this plant species. As a result, flowering does not takes place and it grows no seeds. If adequate steps are not taken now, the plant may get extinct. We are trying to develop synthetic seeds of these plants with which future generation of plants can be developed. It will contribute in development of rural economy," Shrivastav added."
அஞ்சனம் என்னும் கருமரம்/கராச்சி மறைந்து வருகிறது. அதேபோல, சால (யா மரம் என்று பழைய தமிழ்நூல்கள்) விவரிக்கும் மரங்களில் பல இனங்கள் அண்மை நூற்றாண்டுகளில் அழிந்துவிட்டன. தமிழ்நாட்டில். அவற்றை மீண்டும் பரவலாக வளர்த்துக் காடுகளை அதிகப்படுத்தினால் மழைவளம் போன்றன பெருகும்.

(2) யா மரத்தின் பெயரால் யாவகம் தீவு அமைந்தது யா/ஆ/ஆச்சா என்பது Shorea மரங்கள் - சங்ககாலத்தில் என்பதற்கு முக்கியச் சான்று. அங்கே கருமரம் (Hardwickia Binata) சிறப்பான மரமாக இல்லை.
எனவே தான், சங்க காலத் தமிழர் - தொண்டி போன்ற பாண்டிநாட்டுத் துறைமுகத்தின் வழியாகச் சென்றோர் - அங்குள்ள நூற்றுக்கு மேலான ஷொரியா மரங்கள் பெயரில் யாவகம் என்று அமைத்தனர்.

Hardwickia is a monotypic genus of flowering plant in the subfamily Detarioideae of the legumes. The only species is the Anjan, Hardwickia binata Roxb., an Indian tree that grows some 25 to 30 m high.[1][2] This plant genus was named after Thomas Hardwicke by William Roxburgh.[3]


Distribution and Habitat[edit]

It is a characteristic tree of the dry deciduous forests and can grow on shallow,gravely soils.[4] In India, it is found in the western Himalayas up to an elevation of 1500m[6][7] and dry open forests of Central and South India.[4][6] In southern India, it is particularly found in Kadapa, Nellore and Ceded districts and in the valleys of Cauvery and Bhavani rivers[8]


எனவே, யாவகம் என்ற பெயர் சால மரங்களுக்காக தமிழர் அமைத்தனர் என்பது தெளிவு. மலாயா (மலையகம்), அருமணம் (மரமணம், இன்றைய பர்மா), வருணத் தீவு (போர்னியோ), யாவகம் (சாவகம், ஜாவா) என்ற பெயர்கள் தமிழர்கள் தந்த பெயர்கள். Tamils also imported tin to make tin bronzes from South East Asia.


நா. கணேசன்




N. Ganesan

unread,
Sep 3, 2017, 9:56:51 AM9/3/17
to மின்தமிழ், vallamai


On Sunday, September 3, 2017 at 6:24:49 AM UTC-7, nkantan r wrote:
A fishing port? Not an all-weather shipping port...??

rnk


The poem talks of the North East monsoon winds and  the sea trade between
ThoNDi & South East Asia was vigorous in only those months.

koNDal is North East monsoon winds, and the rains coming due to
this wind, is called கொண்கமழை (= கொங்கமழை) in Tamil.
kODai mazai is different, it is from Southwest Monsoon which hits
places like ThoNDi of Kerala, called Tyndis by Greek sailors.

I have given the two reasons why Yaa tree is shorea robusta.
Hardwickia binata is mainly Indian tree. See 

Shoreas are famous in Java and other parts of Indonesia.
That is why Tamils named it Yaavakam (=Yaa + akam)
travelling from Pandyas' ThoNDi during the kONDal season.
(Ref. Ammuuvanaar's Akananuru poem). What are the
South East Asian products reaching this Pandyan ThonDi
port is listed in Cilappatikaaram.

As one of the oldest nighaNTu-s attest that yaa = sal tree,
and it grows well, when planted in Kerala or Tamil Nadu
even now, the old Tamil sources are correct information.
Also, Hardwickia binata's flowers are tiny and often ignored.
Whereas Saal tree flowers are adorning the whole tree
and beautiful and conspicuous. Just like Hardwickia binata
is not reproducing and dying out, shorea robusta must have
become extinct few centuries ago. For reintroduction
TN Agri University, Coimbatore has some programs going.

I will write to Dr. Krishnamurthy on this some time later.
The Tamil literature data on Yaa trees as shorea-s cannot be ignored.
Just like ancient history of ThoNDi port of Tamil Nadu.

N. Ganesan


Shorea species. இதனால், யாவகம் என்று சாலியூர், கொற்கை, தொண்டி, நாகை, புகார் போன்ற
துறைமுகங்களில் இருந்து சென்றோர் பெயரிட்டனர், யாவகம் சாவகம் என்றும் ஜாவா என்றும் மருவியுள்ளது.

சங்க இலக்கியத்தில் யா மரங்கள் (Shorea robusta, சாலம்)
யா/ஆ/ஆச்சா - primarily shorea trees. கராச்சி (கரு+ ஆச்சி), கம்மரம் (கருமரம்) (கன்னடத்தில்), அஞ்சனம் (hardwickia binata) என்னும் மரமும் பிற்காலத்தில் ஆச்சா எனப்படுதல் உண்டு, ஆனால், யா மரம் முக்கியமாக ஷொரியா மரங்கள். பார்க்க பிங்கலந்தை, சென்னைப் பல்கலைப் பேரகராதி, DED. (first Pingalandai was published by Pollachi SivanpillaiyavarkaL, in which he said he will publish VaLaiyApati next. Obviously, Sivanpillai, UvECaa, VeLLakaal pa. Subramanyam had in their possession VaLaiyaapati mss. now presumably lost.)

மரைக்காடு (antelope forest) மறைக்காடு (Veda forest) என மொழிபெயர்ப்பு
ஆனதுபோல, யா என்றால் ஷொரியா மரங்கள் என்பதை விட்டுவிட்டு, யவ த்வீபம் என்று
சம்ஸ்கிருதத்தில் மொழிபெயர்த்தனர். ஆனால், யவம் = பார்லி தான்யம் யாவகத் தீவில் விளைவத்தில்லை.
இது ஈராக் போன்ற ஊர்களின் தானியம் யவம்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Sep 19, 2017, 10:12:27 AM9/19/17
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
2017-09-03 5:23 GMT-07:00 nkantan r <rnka...@gmail.com>:
இதுவா?  (கொண்டல் ...)
===========================================
from: https://ta.wikisource.org/wiki/அகநானூறு/01_முதல்_10_முடிய

பாடல் 10 (வான்கடற்)

 
வான்கடற் பரப்பில் தூவற்கு எதிரிய,
மீன்கண் டன்ன மெல்லரும்பு ஊழ்த்த,
முடவுமுதிர் புன்னைத் தடவுநிலை மாச்சினை,
புள்ளிறை கூரும் மெல்லம் புலம்ப!
நெய்தல் உண்கண் பைதல கலுழப் 5

பிரிதல் எண்ணினை ஆயின், நன்றும்,
அரிது துற்றனையால். பெரும!- உரிதினின்
கொண்டு ஆங்குப் பெயர்தல்வேண்டும்- கொண்டலொடு
குரூஉத்திரைப் புணரி உடைதரும் எக்கர்ப்
பழந்திமில் கொன்ற புதுவலைப் பரதவர் 10

மோட்டுமணல் அடைகரைக் கோட்டுமீன் கொண்டி,
மணங்கமழ் பாக்கத்துப் பகுக்கும்
வளங்கெழு தொண்டி அன்ன இவள் நலனே 13



இதில் உள்ள செய்தி

அம்மூவனார் என்னும் புலவர் பாடிய நெய்தல் திணைப் பாடல் இது. தலைவியை நல்கும்படி தலைவன் தோழியை வேண்டுகிறான். தோழி மறுக்கிறாள். தலைவன் விலகிச் செல்ல நினைக்கிறான். விலகிச் சென்றால் உரிய முறையில் மணந்து இவளையும் அழைத்துச் செல்க என்று தோழி தலைவனை வற்புறுத்துகிறாள்.

அவன் புலம்பு(நாடு) - கடலில் மழை பெய்யும்போது மழைத்துளியை அருந்த மீன்கள் தலைதூக்கும். அது புன்னைப் பூக்கள் உதிர்வது போல இருக்கும். மீன்களை அருந்த அந்தப் புன்னை மரத்தில் பறவைகள் அமர்ந்திருக்கும். இப்படிப்பட்ட புலம்புநாட்டின் தலைவன் அவன்.

அவள் தொண்டித் துறைமுகம் போன்ற அழகுள்ளவள். தொண்டியில் உள்ள பரதவர் கொண்டல் என்னும் கீழைக்காற்று அடிக்கும்போது தம் பழைய திமில்படகுகளைப் புதிதாக்கிக்கொள்வர். தாம் பிடித்துவந்த மீன்களை மணல் மேட்டில் விரித்து ஊர்மக்களுக்குப் பங்கிட்டுத் தருவார்கள்.


கோவை மாவட்டத்தில் கிராமங்களில் பாலக்காட்டுப்பக்கத்தில் உள்ள
மூசாரிகள் செய்த பெரிய உருளிகளைப் பார்க்கலாம். அருமையான
மெட்டலர்ஜி தொழிநுட்பம். சரக்கு என்போம். பல நூறு பேர் கூடும்
சிவராத்திரிக்கு மறுநாள் (தொம்பரம், அதன் பின் பள்ளையம்) போடும்போது
ஊராருக்கு சோறு ஆக்க இந்த சரக்குகள் பயன்படுகின்றன. 
இப்பொது (ஒகசந்தி) பண்டாரங்களும், சரக்குகளும், இந்த நோன்புகளும்
குறைந்துவருகின்றன.

சாரதா ஸ்ரீநிவாசன் இந்த தொழிநுட்பம் பற்றி ஆழமான ஆய்வுக்கட்டுரைகளை
20+ ஆண்டுகளாக எழுதிவருகிறார். கா. ராஜனும் குறிப்பிட்டுள்ளார்.
Hig tin bronze, almost 21% tin content, has been largely consistent for 4000 years in India.
Many beautiful high tin bronzes have been found from Adichanallur, Ooty (Nilgiris).
While areas further to the west of India is poor, South East Asia is known for its tin metal ores.
Ports like Thondy on the Pandyan coast, mentioned by Ammuvanar, as utilizing the
North Eastern monsoon winds (koNDal) for traffic to South East Asia from/to Tami Nadu
are an important source for tn for Ages. Abhayagiri Vihara has tin metal ingots from South East Asia,
though sources of tin is not yet identified in South India, Chozha high tin bronzes indicate
a high level of import of tin metal from South East Asia for 2000+ years. I think the famous glass mirrors
of Kerala may be developed after seeing ancient bronze mirrors of China in South East Asia.  This is traded
for agate, carnelian, glass, pearls etc., going from Peninsular India to Thailand, Malaysia, ...


 ஈயச் செம்பும், ரசமும்:

தொண்டி, அழகன்குளம் (வையைப் பூம்பட்டினம்), நாகப்பட்டினம், பூம்புகார்
போன்ற துறைமுகங்கள் இரண்டு பிரதேசங்களுக்குமான வாணிகத்தைக்
கையாண்டுள்ளன.

 தமிழறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி முதன்முதலாக, தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன்
தொண்டி துறைமுகம் போன்றவை கடல்வணிகத்தில் ஈடுபட்ட சங்கச் சான்றினைக்
காட்டியவர். ஈய உலோகம் அதனால், தமிழகம் பெற்றிருக்க வேண்டும். இலங்கையும் தான்.

மயிலை சீனி. வேங்கடசாமியின் கடவுள், இறைவன் கட்டுரையை பானுகுமார் குறிப்பிட்டார்.
அதுபோல, தமிழகத்டத்தின் பாண்டிநாட்டுத் தொண்டி துறைமுகத்துக்கும்,
தென்கிழக்கு நாடுகளுக்கும் (உ-ம்: யாவக த்வீபம்) உள்ள உறவு, வணிகம் அறியப் பயன்படும்.
யாவகம், மலையகம், மரமணம் (அருமணம்/பர்மா), வருணத் தீவு (போர்னியோ), .....
என்று இவ்விடங்களின் பெயர்கள் இட்டவர்கல சங்க காலத் தமிழர்கள்.

ஏற்கெனவே, சிலம்பின் கால நிர்ணயத்திற்கு அகஸ்தியர் படிமை தென்கிழக்கு
ஆசியா சென்ற காலம் மிக உதவும். சிலம்பு கி.பி. 5-ஆம் நூற்றாண்டு என விளக்கியுள்ளேன்.
இரட்டைக்காப்பியங்கள் சிலம்பும், மேகலையுமாகும் என்பது தமிழர் நன்கறிந்த
செய்தி. அப்போதெல்லாம், தொல்காப்பியம் குறிப்பிட்ட மாதிரி பெண்கள் நெடுந்தொலைவு
கடற்பிரயாணம் மேற்கொண்டதில்ல்லை. எனவே தான், சாத்தனார் வான்வழியிலே
மணிமேகலை யாவகம் (சாவகத் தீவு) சென்றாள் எனப் பாடியருளினார்.

நா. கணேசன்

தொண்டித் துறைமுகம்
மயிலை சீனி வேங்கடசாமி

சங்க காலத்திலே கிழக்குக் கரையிலும் மேற்குக் கரையிலும் இரண்டு தொண்டிப் பட்டினங்கள் இருந்தன. இரண்டும் துறைமுகப் பட்டினங்கள். ஒரு தொண்டி சேரநாட்டில் மேற்குக் கடற்கரையில் இருந்தது; மற்றொரு தொண்டி பாண்டிநாட்டில் கிழக்குக் கடற்கரையில் இருந்தது. இந்தத் தொண்டி கிழக்குக் கரையிலிருந்த பாண்டி நாட்டுத் தொண்டியாகும்.

கடைச் சங்க காலத்துப் புலவரான அம்மூவனார் ஐங்குறு நூற்றில் நெய்தற்றிணையில் தொண்டிப் பத்து என்னும் தலைப்பில் பத்துச் செய்யுட்களைப் பாடியுள்ளார். அது சேர நாட்டுத் தொண்டி. அந்தப் புலவரே அகநானூறு பத்தாம் செய்யுளில் பாண்டி நாட்டுத் தொண்டியைப் பாடியுள்ளார். இந்தத் தொண்டியை இவர் இவ்வாறு கூறுகிறார்.

‘கொண்ட லொடு
குரூஉத் திரைப் புணரி யுடைதரும் எக்கர்ப்
பழந்திமில் கொன்ற புதுவலைப் பரதவர்
மோட்டு மணல் அடைகரைக் கோட்டுமீன் கொண்டி
மணங்கமழ் பாக்கத்துப் பகுக்கும்
வளங்கெழு தொண்டி’                    (அகம். 10: 8-13)

கிழக்குக் கடலிலிருந்து வீசுகிற கடற்காற்றுக் கொண்டல் காற்று என்பது பெயர். இந்தத் தொண்டி கிழக்குக் கடற்கரையிலிருந்தது என்பதைக் கொண்டல் காற்று வீசுகிற தொண்டி என்று கூறுவதிலிருந்து அறிகிறோம். இந்தத் தொண்டி பாண்டி நாட்டில் இப்போதைய இராமநாதபுர மாவட்டத்தில் இருந்தது என்று தோன்றுகிறது.

இந்தத் தொண்டித் துறைமுகத்தைச் சிலப்பதிகாரக் காவியமும் கூறுகின்றது. கடல் கடந்த நாடுகளிலிருந்து அகிற் கட்டை, சந்தனக் கட்டை, பட்டுத் துணி, சாதிக்காய், இலவங்கம், குங்குமப்பூ, கருப்பூரம் முதலான வாசனைப் பொருள்களை ஏற்றி வந்த நாவாய்கள் கொண்டல் காற்றின் உதவியினால் தொண்டித் துறைமுகத்துக்கு வந்ததையும் இறக்குமதியான அந்தப் பொருள்களைத் தொண்டியிலிருந்து பாண்டியனின் தலைநகரான மதுரைக்கு அனுப்பப்பட்டதையும் சிலப்பதிகாரம் கூறுகிறது.

‘ஓங்கிரும் பரப்பின்
வங்க ஈட்டத்துத் தொண்டியோர் இட்ட
அகிலும் துகிலும் ஆரமும் வாசமும்
தொகு கருப்பூரமும் சுமந்துடன் வந்த
கொண்டலொடு புகுந்து கோமகன் கூடல்
வெங்கண் நெடுவேள் வில்விழாக் காணும்
பங்குனி முயக்கத்துப் பனியரசு’.                    (ஊர் காண் காதை, 106-112)

இங்குக் குறிப்பிடப்பட்ட பொருள்கள் எல்லாம் கிழக்குக் கடலுக் கப்பால் கீழ்க்கோடி நாடுகளிலிருந்து வந்தவை. இந்தக் காலத்தில்
இந்தோனேஷியா என்றும், கிழக்கிந்தியத் தீவுகள் என்றும் கூறப் படுகின்ற தீவுகள் அந்தக் காலத்தில் சாவக நாடு என்று கூறப்பட்டன. இங்குக் கூறப்பட்ட பொருள்கள் எல்லாம் அந்தக் காலத்தில் சாவக நாட்டுக்கேயுரியவை. இப்பொருள்கள் அந்தக் காலத்தில் வேறு எங்கும் கிடைக்காதவை. கீழ்க்கடல் தீவுகளிலிருந்து கொண்டு வரப்பட்டுத் தொண்டித் துறைமுகத்தில் இறக்குமதியான பொருள்கள் அகில், துகில், ஆரம், வாசம், கருப்பூரம் முதலானவை என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. இவற்றை விளக்கிக் கூறுவோம்.

அகில்

இது ஒருவகை மரத்தின் கட்டை. நெருப்பில் இட்டுப் புகைக்கப் படுவது; புகை மணமாக இருக்கும். கோவில்களில் தெய்வங்களுக்கு நறுமணம் புகைக்கவும், மகளிர் கூந்தலுக்குப் புகைத்து மணமேற்றவும் மற்றும் சிலவற்றுக்கும் உபயோகிக்கப் பட்டது. அகில் மரங்கள் தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலையிலும் இருந்தன. ஆனால் சாவக நாட்டு அகில் தரத்தில் உயர்ந்தது, பேர் போனது. கிழக்குக் கோடி நாடுகளிலிருந்து வந்த காரகில் சிறந்தது என்பதைச் சிலப்பதிகாரம் “குணதிசை மருங்கில் காரகில்” என்று (சிலம்பு, 4:36) கூறுகின்றது.

துகில்

துகில் என்பது இங்குப் பட்டுத் துணிகளைக் குறிக்கிறது. சங்க காலத்தில் பட்டுத் துணிகள் சீன நாட்டில் மட்டும் கிடைத்தன. அக் காலத்தில் பட்டு வேறு எங்கும் கிடைக்கவில்லை. சீன நாட்டு வாணிகர் பட்டு முதலான பொருள்களைக் கப்பலில் ஏற்றிக் கொண்டு வந்து சாவக நாட்டில் (கிழக்கிந்தியத் தீவுகளில்) விற்றார்கள். அக்காலத்தில் சீனர் தமிழ்நாட்டுக்கு வரவில்லை. சாவக நாட்டோடு நின்றுவிட்டார்கள். அவர்கள் சாவக நாட்டுக்குக் கொண்டு வந்த பட்டுகளைத் தமிழ்நாட்டு வாணிகர் அங்கிருந்து கொண்டு வந்து தமிழ்நாட்டில் விற்றார்கள். தமிழ் நாட்டிலிருந்து பட்டுத் துணியை மேல்நாட்டு வாணிகர் வாங்கிக் கொண்டு போய் மேற்கு நாடுகளில் விற்றார்கள்

ஆரம்

ஆரம் என்பது சந்தனம். சந்தன மரம் தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலை (சய்ய மலை)களிலும் உண்டாயிற்று. ஆனால் இந்தச் சந்தனத்தைவிடச் சாவக நாட்டுச் சந்தனம் தரத்திலும் மணத்திலும் உயர்ந்தது.

அது வெண்ணிறமாக இருந்தது. அகிற்கட்டையைப் போலவே சந்தனக் கட்டையும் சாவக நாட்டிலிருந்து அக்காலத்தில் இங்கு இறக்குமதி யாயிற்று.

வாசம்

வாசம் என்பது வாசனைப் பொருள்கள். அவை கிராம்பு (இலவங்கம்), குங்குமப்பூ, தக்கோலம், சாதிக்காய் முதலியவை. இந்த வாசப் பொருள்கள் அக்காலத்தில் சாவக நாட்டில் மட்டும் உண்டாயின; வேறெங்கும் இவை அக்காலத்தில் கிடைக்கவில்லை.

கருப்பூரம்

கருப்பூரம் என்பது சாவக நாட்டில் சில இடங்களில் உண்டான ஒருவகை மரத்தின் பிசின். கருப்பூரத்தில் பலவகையுண்டு. ஆகை யினால் இது ‘தொடு கருப்பூரம்’ என்று கூறப்பட்டது. கருப்பூர வகைக்குப் பளிதம் என்றும் பெயர் உண்டு. ஒருவகைப் பளிதம் தாம்பூலத்துடன் அருந்தப்பட்டது. அது மணமுள்ளது, விலையுயர்ந்தது.

கிழக்குக் கடற்கோடியில் கடல் கடந்த சாவக நாட்டுத் தீவு களில் உண்டான இந்தப் பொருள்கள் தொண்டித் துறைமுகத்தில் இறக்குமதி யானதைச் சிலப்பதிகாரம் கூறுவதிலிருந்து அறிகிறோம். தொண்டித் துறைமுகத்தைப் பற்றி நாம் அறிவது இவ்வளவுதான்.

‘தொண்டியோர்’ என்பதற்கு அடியார்க்கு நல்லார் என்னும் உரையாசிரியர் தம்முடைய உரையில் ‘சோழ குலத்தோர்’ என்று உரை எழுதுகிறார். இது தவறு என்று தோன்றுகின்றது. தொண்டி இவர் காலத்தில் சோழர் ஆட்சிக்குக் கீழடங்கியிருக்கக்கூடும். ஆனால், சிலப்பதிகாரக் காலத்தில் தொண்டி, கூடல் (மதுரை) அரசனாகிய பாண்டியனுக்குக் கீழடங்கியிருந்தது. தொண்டியில் பாண்டிய குலத்து அரசன் ஒருவன் இருந்தான் என்று தோன்று கிறது. பாண்டி நாட்டின் முக்கியத் துறைமுகமாகிய கொற்கையில் பாண்டிய குலத்து இளவரசன் இருந்து போலவே, தொண்டித் துறைமுகப் பட்டினத்திலும் ஒரு பாண்டிய இளவரசன் இருந்திருக்கக் கூடும்.

தொண்டித் துறைமுகப் பட்டினம் பிற்காலத்தில் சிறப்புக் குன்றி இக்காலத்தில் குக்கிராமமாக இருக்கிறது.

-----------------------------------------

தொண்டி

மயிலை சீனி வேங்கடசாமி

சங்க காலத்தில் தமிழகத்தில் இரண்டு தொண்டித் துறைமுகப் பட்டினங்கள் இருந்தன. ஒன்று, கிழக்குக் கடற்கரையில் பாண்டியருக்கு உரியதாக இருந்தது. மற்றொன்று, மேற்குக் கடற்கரையில் பூழி நாட்டில் சேரருக்கும் பொறையருக்கும் உரியதாக இருந்தது. கொங்கு நாட்டை யரசாண்ட பொறையர்களுக்குத் துறைமுகப்பட்டினம் இல்லாத படியால், அவர்கள் தொண்டியைத் தங்களுடைய துறைமுகப்பட்டின மாகக் கொண்டிருந்தார்கள். சங்கச் செய்யுள்கள் தொண்டிப் பட்டினத்தைக் கூறுகின்றன. “ வெண்கோட்டியானை விறல்போர்க் குட்டுவன், தெண்திரைப் பரப்பில் தொண்டி முன்துறை” (அகம். 290, 12 :18) என்றும், “ திண்தேர்ப் பொறையன் தொண்டி முன்துறை” என்றும் (குறுந். 128 : 2). “வளைகடல் முழவின் தொண்டியோர் பொருந” என்றும் (9ஆம் பத்து 4 :21), “திண் தேர்ப் பொறையன் தொண்டி” என்றும் (அகம் 60 : 7), “கல்லெண் புள்ளியன் கானலந் தொண்டி” என்றும் (நற் . 195:5), “அகல் வயல், அரிநர் அரிந்தும் தருவநர்ப் பெற்றும், தண்சேறு தாய் மதனுடை நோன்றாள், கண்போல் நெய்தல் போர் விற்பூக்கும். திண்டேர்ப் பொறையன் தொண்டி” என்றும் (நற். 8: 5 - 9) இந்தப் பட்டினம் கூறப்படுகிறது.

தொண்டிப் பட்டினத்தைச் சூழ்ந்து கோட்டை மதில் இருந்தது. கோட்டை வாயிலின் கதவில் மூவன் என்பவனுடைய பல்லைப் பிடுங்கிப் பதித்திருந்தது என்று நற்றிணைச் செய்யுள் கூறுகிறது. “மூவன் , முழுவலி முள்ளெயிறு அழுத்தியகதவில், கானலந் தொண்டிப் பொருநன் வென்வேல், தெறலருந்தானைப் பொறையன்” (நற் 18: 2 -5). யவனர்கள் தொண்டியைத் ‘திண்டிஸ்’ (Tindis) என்று கூறினார்கள்.

 

N. Ganesan

unread,
Dec 3, 2017, 10:36:02 PM12/3/17
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, panbudan, tiruva...@googlegroups.com
2017-09-19 9:02 GMT-07:00 Singanenjam Sambandam <singa...@gmail.com>
உண்மைதான். வெள்ளீய தாது தென்னிந்தியாவில் இதுநாள் வரை கண்டு பிடிக்கப்படவில்லை.  Casiterite ( Tin Oxide-Sn O2 ) எனப்படும் வேள்ளீயத்  தாது  1970 களில் மத்தியப்பிரதேசத்தில் ,(இப்போது சத்தீஸ்கர் மாநிலம்) பஸ்தார் மாவட்டத்தில்  எங்கள் இந்திய  புவியியல் ஆய்வுத் துறையால் கண்டுபிடிக்கப்பட்டது.  1980 களில்  பயிற்சிக்காக எங்கள் துறையைச் சேர்ந்த புவியியலாளர்கள் மலேசிய நாட்டிற்கு சென்று வந்தனர். என்றாலும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. 

வெண்கல சிலைகள் செய்யப்பட்ட காலங்களில் , வெள்ளீயம் மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது என நம்புவதற்கு வழியுண்டு.

சோழர் காலச் சிலைகள் எங்குத் தோண்டினாலும் கிடைக்கின்றன. அண்மையில் பழஞ்சியூரில். பழ + இஞ்சி + ஊர் = பழஞ்சியூர்.
இஞ்சி = மதில், மதில் சூழ் கோட்டை. சோழர் காலத்தில் செய்த அழகு வெண்கலப் படிமங்கள் செய்ய தென்கீழ் ஆசியா வணிகம்
பெருத்தது முக்கியமான காரணம். வெள்ளீயம் டன் கணக்கில் கப்பல்களில் தொண்டி, நாகை, .... போன்ர துரைமுகங்களுக்கு
வந்திருக்கவேண்டும். இப்போது போர்க்காலத்தில் அவசரகதியாகப் புதைத்தவை வெளிப்படுகின்றன. உடனே, பொக்குளி
மெஷின்களைப் போட்டுத் தோண்டுகிறார்கள். அந்த அருமையான கலைப்படைப்புகள் கையையும், காலையும் உடைத்து
போட்டொ எடுத்துப் போடுகிறார்கள். பார்த்தால் பாவமாக இருக்கிறது. இந்தியா இல்லாமல், கொரியா, ஜப்பான், சீனா,
ஐரோப்பா, ... இங்கெல்லாம் இக் கலைப் பொக்கிஷங்கள் கிடைத்தால் இப்படியா உடைத்து நொறுக்கி எடுப்பார்கள்???

-----------------

குராம்பு > கராம்பு/கிராம்பு (clove) - சொல்லாய்வு:


இலவங்கம் (cinnamon), கராம்பு/கிராம்பு (clove)
--------------------------------------

இளங்கோ அடிகள் குறிப்பிடும் வாசப் பொருள்களாக
இலவங்கப் பட்டையும், கராம்பும் சேரும். அவற்றை
தமிழர்கள் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து
கடல் வாணிகத்தால் பெற்றமை கண்கூடு.

லவங் என்று இலவங்கம் மலாய் மொழியில் இருந்து வந்த சொல்
எனக் கொள்ளமுடிகிறது.

ஆனால், கராம்பு/கிராம்பு (clove) < qaranful என உர்துமொழியைச்
சென்னைப் பேரகராதி குறிப்பிடுகிறது. ஆனால், அரபி, பாரசீக
மொழியியலாளர்கள் கரான்ஃபுல் இந்திய மொழிகளில் இருந்து
ஈரான், அராபியா வந்த சொல் என்றே குறிப்பிடுகின்றனர்,

தமிழர்கள் குராம்பு என வைத்த பெயர் கராம்பு (மலாயாளம், சிங்களம்,
தமிழ், மலாய்), கிராம்பு என மருவி வழங்குகிறது.
எனவெ, உர்து, பெர்சியன், அறபி மொழிகளில் இந்த நறுமணப்பொருள்
திராவிட மொழிகளில் இருந்து பெற்ற பெயர். i.e.,
குராம்பு/கராம்பு/க்ராம்பு > qaranful (in the Middle East).
குராம்பு மரத்தின் பூவைப் பார்த்தால் புரிந்துவிடும்.

மலாயா (மலையகம்), யாவகம் (யா = ஆச்சா, shorea robusta & related trees),
மரமணம் > அரமணம்/அருமணம் (பர்மா), பலி தீவு, வருண தீவு (பொர்ணியோ), ....
என தென்கீழ் ஆசிய நாடுகள் பலவுக்கும் பெயரிட்டு அழைத்தவர்கள் தமிழர்கள்.

குராம்பு > கராம்பு/கிராம்பு > கரான்ஃபூல் என உலகமொழிகளில் 
Clove spice-க்கு பெயரிட்டு அழைத்ததில் வியப்பில்லை தானே.
குராம்பு : https://en.wikipedia.org/wiki/Clove

மேலும் பின்னர்,
நா. கணேசன்


 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Reply all
Reply to author
Forward
0 new messages