On Monday, October 27, 2014 7:47:38 AM UTC-7, N. Ganesan wrote:சிங்கை கிருஷ்ணன் ஐயா சொன்ன நாடோடிமன்னன் பாட்டு மாத்திரம் தனியாகயுட்யூபில் இருக்கிறதா? எந்த மணி, நிமிஷம் முழுப்பட யுட்யூபில் வருகிறது? - என சொல்லமுடியுமா?
மின்னல் கண்டு தாழை மலர்வதாகச் சொல்வதை கவிமரபு, என்று சொல்வதும் உண்டு. வைரமுத்து, 'மின்னொளியில் மலர்வன தாழம்பூக்கள்' (பாடல்: வெள்ளி மலரே..படம்:ஜோடி), என்றும், விவேகா "மின்னல் கண்ட தாழை போல உன்னால் நானும் பூத்தாட" (பாடல்: இப்பவே இப்பவே..படம்: ராமன் தேடிய சீதை (சேரன் நடித்தது) என்றும் எழுதியிருக்கிறார்கள்.திருத்தொண்டர் திருவந்தாதியில், நம்பியாண்டார் நம்பி, " கொண்டல் கொண்டேறிய மின்னுக்குக் கோல மடல்கடொறும் கண்டல்வெண் சோறளிக்குங்கடற் காழி" என்று சீர்காழியைக் குறிக்கிறார். கவி காளிதாசனும் இந்த உவமையை மேகதூதத்தில் கையாண்டிருக்கிறார்.சம்ஸ்கிருதத்தில் கேதகி என்பர் இதை. கேது என்பது மின்னலையும் குறிப்பதாகச் சொல்வதாலேயே தாழைக்கு இந்தப் பெயர் வந்தது என்னும் கூற்று உண்டு. மதுரை ஸ்பெஷல் தாழம்பூ குங்குமம் பிரசித்தி பெற்றது. அர்ச்சனைக்கு இதை உபயோகப்படுத்துவது வழக்கம்.
வரலக்ஷ்மி விரத பூஜையில் தாழை மலர் கண்டிப்பாக இடம் பெறும். பூஜை நிறைந்த பின், மறு நாள் மாலை, பூஜையில் வைத்த தாழை மலரைக் கொண்டு எங்களுக்கு ஜடை பின்னுவார்கள். பொட்டி ஜடை (தாழை மடல்களை உட்புறமாக மடக்கி வைத்து ஜடையில் தைப்பது), கத்தி ஜடை (மடல்கள் வெளிப்புறமாக நீட்டிக் கொண்டிருக்குமாறு வைத்துத் தைப்பது) என்று ஜடையில் இருவகைகள் உண்டு. அம்மன் அலங்காரத்தின் போதும் இம்மாதிரி சவுரி முடியில் தைத்து கலசத்தின் பின்புறம் வைத்து அலங்கரிப்பது வழக்கம்.இந்தப் படத்தில் செயற்கை பூக்களால் செய்யப்பட்டிருப்பதைப் போல், தாழம்பூ ஜடையாலும் செய்யலாம்.படம் உபயம் கூகுளார்.
///சம்ஸ்கிருதத்தில் கேதகி என்பர் இதை. கேது என்பது மின்னலையும் குறிப்பதாகச் சொல்வதாலேயே தாழைக்கு இந்தப் பெயர் வந்தது என்னும் கூற்று உண்டு.///கைதை என்பதற்கும் கேதகி என்பதற்கும் தொடர்பு இருக்கலாம் எனத் தோன்றுகிறது...
.............................................................................கைதைப் பூ.
இந்தப் பூ வைத் தாழம் பூ என்றும் அழைப்பர் .
தாழை மலர் தற்காலத்தில் தாழம்பூ என அழைக்கப்படுகிறது. வழுவழுப்பான மரத்தை வாழை என்பது போன்று தாழந்து தொங்கும் மடல்பூவைத் தாழை என்றனர். நீர்நிலைகளின் கரைகளில் இவை செழித்து வளரும். தாழம்பூவை மகளிர் தலையில் சூடிக்கொள்வர். கூந்தலில் சடை பின்னும்போது சேர்த்துப் பின்னிக்கொண்டும் மணம் கமழச் செய்வர்.
கைதை என்னும் மலரும் இதன் இனம். கைதை மேட்டுநிலங்களிலும் மழைநீர் வளத்தில் வளரும். கடற்கரை மணல்வெளியில் வளர்வது கைதை. தாழை என்பது சூடும் பூ. கைதை என்பது நிழல் தரும் மரம்.
சங்ககால மகளிர் குவித்து விளையாடிய மலர்களில் தாழை , கைதை ஆகிய இரு மலர்களும் இடம்பெற்றுள்ளன.............................................................................................
2014-10-27 8:24 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
(இ - ள்.) தாழைமரங்கள் அண்மியிருக்கின்ற குளிர்ச்சிபொருந்திய கடலைப் பொருந்தி நீரையுட்கொள்ளு மேகங்கள் நீரோடு கைக்கொண்ட செல்வம் இஃதாமென்று உள்ளத்தின்கணிறைந்த அன்பினால் மகிழ்ச்சி கொண்டாற்போல மின்னலுண்டாகுந்தோறும் பூத்தலைச் செய்வன.
(வி - ம்.) தடித்து - மின்னல்; மின்னலைக் கண்டவுடன் தாழை பூப்பதியல்பு; இதனை, "மின்பொ ருட்டினாற் கேதகை மலர்ந்திடும் விளங்கும், என்பொ ருட்டினால் மாமழை சொரிந்திடு மீட்டும், பொன்பொ ருட்டினால் யாவுமுண் டாமது போல, உன்பொ ருட்டினாலவுணர்க்கு மேன்மைய துளதாம்" (மாயைப் - 7) என்னும் கந்தபுராணச் செய்யுளானறிக. செல்வமென்றது மின்னை. தாம் அண்ணிய விடத்திலுள்ள செல்வத்தைப் பிறர் கொள்ள உவத்தல் மேலோர்க் கியல்பாகலின் அதுபோல மேகங்கள் கடலையண்மி நீரோடு கொண்டு சென்ற செல்வமிஃதாமென எண்ணி மின்னலைக் கண்டவுடன் தாழைகள் பூத்தல் மகிழ்தலை யொத்திருந்தன என்க. கொண்டென - கொண்டாற்போல. தாழையாகிய தாமடுத்திருக்கும்படியான கடல். நீரை முகத்தலானிம் மின்னலுளதாய தென்க.
காற்றில் ஒட்டிய முன்பனி நீ
பனியை ஒற்றிய ஒளிவிரல் நான்!
மேகம் கும்மிய மின்னல் நீ!
மின்னல் தூவிய தாழை நான்!
சங்கம் கொஞ்சிய செய்யுள் நீ
செய்யுள் சிந்திய சந்தம் நான்!
வெட்கம் கவ்விய வெப்பம் நீ!
வெப்பம் தணிகிற நுட்பம் நான்!