முன்னுரை
(குறிப்பு: எழுதப்பட்ட காலம் நினைவில்லை)
பாஞ்சாலி சபதம்
================
'பாரதிக்கு உரை எழுதும் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது' என்று சில ஆண்டுகளுக்கு முன்னால் எழுதினேன். (பார்க்க: http://www.maraththadi.com/article.asp?id=465 ) அது இவ்வளவு விரைவில் என்னாலேயே செய்யப்படும் என்று நினைக்கவில்லை. ஹரிஹரன் பிரசன்னாவும், பரிமேலழகரும் அவ்வப்போது பாரதி பாடல்களில் ஏதாவது - சொல்லின் பொருள் தொடர்பான - ஐயங்களை எழுப்பிக்கொண்டே இருப்பார்கள். பாரதிக்குச் செம்பதிப்பு ஒன்று வரவேண்டும் என்று என் ஆசிரியர் திரு. தி. வேணுகோபாலன் (நாகநந்தி) அவர்கள் விரும்பினார்கள். ஒவ்வொரு கவிதைக்கும் எழுதப்பட்ட பின்புலம், சூழல், கவிதையில் காணப்படும் மாந்தர், நாடு, கருத்து போன்றவற்றுக்கான விளக்கக் குறிப்புகள் இருக்க வேண்டும் என்பது அவருடைய விருப்பங்களில் ஒன்று. எடுத்துக்காட்டாக, மாஜினியின் சபதம் என்றால், யார் அந்த மாஜினி, எதற்காக ஒரு சபதத்தை மேற்கொண்டார், என்ன காரணத்தால் பாரதி அந்தச் சபதத்தைத் தமிழில் தந்தார் என்பன போன்ற அடிப்படையான குறிப்புகள் இருக்க வேண்டும் என்று அடிக்கடி சொல்லுவார். இதைச் செய்தால்தான் பாரதியின் வீச்சை இன்னும் அதிகமாக உணர முடியும். இதைப் பல கூட்டங்களில் சொல்லியிருக்கிறார். பல அறிஞர்களிடம் வலியுறுத்தியிருக்கிறார். அவரே ஒரு கைப்பிரதி தயாரித்து வைத்திருந்தார். அவர் ஆஸ்திரேலியாவில் காலமான காரணத்தால் அதைப் பதிப்பிப்பது போன்ற கனவுகள் இன்னும் கனவு நிலையிலேயே இருக்கின்றன. திரு. சீனி. விசுவநாதன் அவர்கள் 'கால வரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள்' என்ற தொகுப்பில் இந்தக் காரியத்தைச் செய்திருக்கிறார்.
'பாரதியின் பாடல்கள் மிக எளிமையானவை; பாமரருக்கும் புரியக் கூடியவை' என்று பரவலாக ஒரு கருத்து நிலவுகிறது. உண்மைதான். அதை மறுக்க முடியாது. மறுக்கக் கூடாது. அரண்மனை மற்றும் ஜமீன்தாரர்களின் அந்தப்புரக் கனவுகளை அலங்கரித்துக்கொண்டிருந்த தமிழைப் பொது மக்களிடம் எடுத்து வந்தவன் பாரதிதான். 'தெருவெங்கும் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்' என்று சேமமுற வேண்டுமெனில் என்ன செய்யவேண்டும் என்று சொன்னவன்தான். 'ஓரிரண்டு வருஷத்து நூற்பழக்கம் உள்ள தமிழ் மக்கள் எல்லோருக்கும் நன்கு பொருள் விளங்கும்படி எழுதுவதுடன், காவியத்துக்குள்ள நயங்கள் குறைவுபடாமலும் நடத்துதல் வேண்டும்,' என்று பாஞ்சாலி சபதத்துக்கு எழுதிய முகவுரையில் சொன்னவன்தான்.
அவன் சொன்னது 'ஓரிரண்டு வருஷத்து நூற்பழக்கம்.' நம் பெருமக்கள் புரிந்துகொள்வது 'ஓரிண்டு வருஷத்து தமிழ்ப் பழக்கம்.' நம்முடைய சமகாலத்தில் 'ஓரிரண்டு வருஷத்துத் தமிழ்ப் பழக்கம்' உள்ளவர்கள் எழுத்துக் கூட்டி ஆனந்த விகடன், கல்கி, குமுதம் வாசித்தாலே அதிகம். அனா ஆவன்னா பயிற்சிதான் ஓரிரண்டு ஆண்டுகளில் இப்போதெல்லாம் சாத்தியம். நூற் பழக்கமே என்றால் கூட, என்ன நூற்பழக்கம் என்பதற்கும் ஒரு வரையறை இருக்கிறதில்லையா? அவன் 'நூற்பழக்கம்' என்னும்போது குறிப்பிட்டிருக்கக் கூடிய நூல்களும், இப்போதைய 'ஓரிரண்டு வருஷத்து நூற்பழக்கமும்' ஒன்றாகி விடாதல்லவா? அவன் காலத்துத் 'தமிழ் நூல் பழக்கம்' என்பதற்கான வரைவு வேறு, நம் காலத்தில் அது சுத்தமாக வேறல்லவா?
ஆகவே, சுருக்கமாக, பாரதி பாடல்களுக்கு நிறைய விளக்கக் குறிப்புகளும், ஒரளவுக்குச் சொற் பொருளும் தேவைப்படுகின்றன என்பது மறுக்க முடியாத உண்மை. இன்றைய இளைஞர்கள் பலர் இதை உணர்ந்தே இருக்கின்றனர். பிரசன்னாவின் கடிதம் ஓர் உதாரணம். (http://groups.yahoo.com/group/marabilakkiyam/message/634 )
நான் மதுரைத் திட்டத்திற்காகத் தட்டித் தந்த 'பாஞ்சாலி சபதத்தில்' (http://www.tamil.net/projectmadurai/pub/pm0091/panchali.pdf) மிகச் சில இடங்களில் இந்த குறிப்புகளையும், சொற் பொருளையும் சேர்த்திருக்கிறேன். ஒவ்வொரு பாடலும் என்ன யாப்பு வகையைச் சேர்ந்தது என்றொரு பட்டியலும் கடைசியில் தந்திருக்கிறேன். பெரும்பாலும் சிந்து; விருத்தங்கள்; ஓரடிக்கு இத்தனை எழுத்து என்ற கணக்குடன் கூடிய கட்டளைக் கலிப்பா என்று வேறுபட்ட யாப்பு வகைகள் பாஞ்சாலி சபதத்தில் அடக்கம். நேர் இருபது; நிரை இருபத்தொன்று என்று ஒரு புதிய வகையை உருவாக்கியிருக்கிறான் பாரதி. அதாவது நேரசையில் தொடங்கியிருந்தால் ஒற்றொழித்து இருபது எழுத்தும்; நிரையசையில் தொடங்கியிருந்தால் ஒற்றொழித்து இருபத்தோரு எழுத்தும் உள்ள வகை இது. எழுத்துக் கணக்கெல்லாம் பார்த்து எழுதினால், சொல் கூட்டம்தான் வரும்; கவிதை வராது என்றெல்லாம் புதுப்புது நம்பிக்கைகள் தோற்றுவிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஒன்று இரண்டல்ல; தொடர்ச்சியாக ஏழெட்டு பாக்களில், இரண்டு மூன்று இடங்களில், இந்த வகையைக் கையாண்டிருக்கிறான் பாரதி. எவ்வளவு உணர்ச்சிகரமாக இந்த வகையைச் செய்ய முடிந்திருக்கிறது; எவ்வளவு செறிவாகச் சொல்ல முடிந்திருக்கிறது என்பதையெல்லாம் பார்ப்போம். இன்னொரு செய்தியும் உண்டு. இப்படி எழுத்துக் கணக்குப் பொருந்தி வரும்படியாக எழுதியிருந்தாலும் (ஓரிடத்திலும் இந்தக் கணக்கு ஒரே ஓர் எழுத்தளவு கூட தப்பவில்லை) பாரதியே இதை கவனிக்கவில்லை. கட்டளைக் கலிப்பா என்று தலைப்பில் குறிக்காமல், எண்சீர் விருத்தம் என்று குறித்திருக்கிறான். பாரதி எழுத்துக் கணக்கை கவனிக்காமல் இயற்றிய விருத்தங்கள், தானாகவே கட்டளைக் கலிப்பாவாகவும் அமைந்திருக்கின்றன என்பதை நிறுவ இது ஒன்றே போதும். தமிழ் இசை சார்ந்த மொழி. இசைக்கும் தாளத்துக்கும் பொருந்தி வந்தால், தாளக் கணக்கு துல்லியமாக அமைந்தால், எழுத்துக் கணக்கு தானாகவே அமையும். எண்ணிப் பார்க்க வேண்டிய தேவையே இல்லை. விளக்கங்களை உரிய இடத்தில் அளிக்கிறேன்.
இன்று தொடங்கி, தினம் ஒன்றாக - அவ்வப்போது இரண்டோ, மூன்றோ கூட ஆகலாம் - பாஞ்சாலி சபதத்துக்குக் குறிப்புகளும் சொற்பொருளும் தருகிறேன். அத்தனைப் பாடல்களுக்கும் சொற்பொருளும் குறிப்பும் தேவைப்படாது என்றாலும், அத்தனைக்கும் செய்வதே விரும்பத்தக்கது. பாரதியே இந்தக் காரியத்தைச் செய்திருக்கிறான் - முதல் 203 பாடல்களில் ஒரு சிலவற்றுக்கு மட்டும். மொத்தம் 413 பாடல்களால் ஆனது பாஞ்சாலி சபதம். கம்ப இராமயணக் கட்டுரைத் தொடருக்கு நான்காண்டுகள் என்று எல்லை வகுத்துக்கொண்டிருக்கிறேன். இது ஓராண்டு பிடிக்கக் கூடிய இன்னொரு தொடர். மரபிலக்கியம், மரத்தடி, ராயர் காபி கிளப் ஆகிய குழுக்களில் இந்தத் தொடர் வரும். கூடவே மரபிலக்கிய வலைப்பதிவில் (http://marabilakkiyam.yarl.net) ஆவணப்படுத்தப்படும்.
வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். வாசிப்பவர்களின் பின்னூட்டு; ஆதரவு; ஆசி.
அன்புடன்,
ஹரி கிருஷ்ணன்.
--
அன்புடன்,
ஹரிகி.
--
Follow my blogs on http://tnelango.blogspot.com/
கடைசி பெஞ்ச்சில் நான்..காத்திருக்கிறேன்..
வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். வாசிப்பவர்களின் பின்னூட்டு; ஆதரவு; ஆசி.
நின்றிடும் பிரமம் என்பார் - அந்த
நிர்மலப் பொருளினை சிந்தை செய்வேன்
நன்றுசெய் தவம்யோகம் - சிவ
ஞானமும் பக்தியும் நணுகிடவே
வென்றிகொள் சிவசக்தி - எனை
மேவுறவே இருள் சாவுறவே
இன்றமிழ் நூலிதுதான் - புகழ்
ஏய்ந்தினிதாய் என்றும் இலகிடவே. (2)
பதம் பிரித்து: இந்தப் பாடலுக்குத் தேவையில்லை. இன்றமிழ் என்பதை இன் தமிழ் என்றும், ஏய்ந்தினிதாய் என்பதை ஏய்ந்து இனிதாய் என்றும் பிரித்துக்கொள்ள வேண்டும்.
அ: சொற் பொருள்:
நிர்மலப் பொருள்: மலம் என்றால் அழுக்கு; குற்றம். நிர்மலம் என்றால் அழுக்கற்றது; குற்றமற்றது.
பிரமம்: பிரமம் அல்லது பிரம்மம் என்பது வேறு; பிரம்மன் எனப்படும் படைப்புத் தொழிலை மேற்கொண்ட இறைவன் வேறு.
மேவுறவே: மேவுதல்: 1. அடைதல் (to reach); 2. விரும்புதல் 3. நேசித்தல், 4. ஓதுதல் (to learn) 5. உண்ணுதல் 6. நிரவி, சமம் ஆக்குதல் 7. மேலிட்டுக் கொள்ளுதல் (to manifest, to assume) 8. வேய்தல் (to thatch, to cover)
இந்த இடத்தில் 'வெற்றிகொள்ளும் சிவசக்தி என்னை வந்து அடையட்டும்,' என்று பொருள். 'வீணையடி நீயெனக்கு மேவு விரல் நான் உனக்கு' என்ற இடத்தினைப் போல். 'நான் அதை அடைந்தவனாகட்டும்' என்றிருந்தால், 'நான் அதற்குத் தகுதியானவனாகட்டும்' என்று பொருள் கொள்ளலாம். இங்கே அவ்வாறில்லை என்பது கவனிக்கத் தக்கது.
ஏய்ந்து: ஏய்தல் என்ற வினைச் சொல்லில் இருந்து பிறந்த சொல். பொருந்துதல் (to be suited), தகுதல் (to be fit) என்று இந்தச் சொல் transitive verb ஆகப் பயன்படும்போது பொருள் வரும். இந்த நூல் புகழ் பொருந்தியதாய், புகழுக்குத் தக்கதாய் விளங்கட்டும் என்ற வேண்டுதலுடன்
ஆ: இலக்கணம்: வென்றி: வெற்றி என்பதன் மெலித்தல் விகாரம்.
இ: யாப்பு: இதுவும் நொண்டிச் சிந்து
ஈ: பாடல் சொல்வது: நிர்மலப் பொருளாக விளங்கும் பிரமத்தை நான் என் மனத்தில் இருத்துகிறேன். தவமும், யோகமும், சிவஞானமும், பக்தியும் என்னால் நன்றாகச் செய்யப்படட்டும். சிவசக்தி என்னை அடையட்டும். இன் தமிழில் செய்யப்படும் இந்த நூல் புகழுள்ளதாக என்றும் விளங்கட்டும்.
:))
உண்மைதான்
--
வெள்ளைக் கமலத்திலே - அவள்
வீற்றிருப்பாள் புகழ் ஏற்றிருப்பாள்
கொள்ளைக் கனிஇசைதான் - நன்கு
கொட்டுநல் யாழினைக் கொண்டிருப்பாள்.
கள்ளைக் கடலமுதை - நிகர்
கண்டதொர் பூந்தமிழ்க் கவிசொலவே
பிள்ளைப் பருவத்திலே - எனைப்
பேணவந்தாள் அருள் பூணவந்தாள். (3)
பதம் பிரித்து: இந்தப் பாடலுக்குத் தேவையில்லை
அ. சொற் பொருள்: -
ஆ. இலக்கணம்:
கொட்டுநல்: கொட்டும் நல் என்று ஏன் சொல்லவில்லை? வருமொழி முதலில் ந-கரம் வரின், நிலைமொழி ஈற்று மகரம் கெடும். அதாவது, இரண்டாவது சொல் 'ந' வர்க்கத்தில் தொடங்கியிருந்தால், அதே சமயத்தில் அந்த இரண்டாவது சொல்லுக்கு முன்னால் இருக்கும் சொல் 'ம்' என்ற எழுத்தில் முடிந்திருந்தால், அந்த முதற் சொல்லின் கடைசி எழுத்தான 'ம்' ஒலிக்கப்படாது; எழுதப்படாது. 'கொட்டும்' என்று முதற் சொல் 'ம்' என்ற எழுத்தில் முடிந்திருக்கிறது. அடுத்த சொல் 'நல்' என்று ந-கரத்தில் தொடங்குகிறது. எனவே கொட்டுநல்.
இந்த விதியைப் பின்பற்றுவது 'எளிமை நாடுவோருக்குச் சற்றுக் கடினம்' என்று குறிப்பிடுகிறார் பேராசிரியர் ம. ரா. போ. குருசாமி அவர்கள். என்ற போதிலும் இந்த விதியை நெடுகிலும் போற்றியிருக்கிறான் பாரதி. எல்லா இடங்களிலும் இந்த விதி பின்பற்றப்பட்டிருப்பதைக் காணலாம்.
கள்ளைக் கடலமுதை - கள்ளையும், கடல் அமுதையும் என்று 'உம்'மை தொக்கி நிற்பதால் உம்மைத் தொகை.
கண்டதொர்: கண்டதோர் என்பதன் குறுக்கல் விகாரம்.
இ. யாப்பு:
இதுவும் நொண்டிச் சிந்து.
ஈ. பாடல் சொல்வது:
'சரஸ்வதி வணக்கம்' என்று வாணியைத் துதித்துத் தொடங்கிய சில கவிஞர்களுள் பாரதி ஒருவன். இங்கே மட்டுமின்றி, பாஞ்சாலி சபதத்தின் 'இரண்டாவது சூதாட்ட சருக்கம்' தொடங்கும் போதும் 'தெளிவுறவே அறிந்திடுதல்' என்று தொடங்கி 'ஒளி வளரும் தமிழ் வாணி' என்று வாணி வணக்கம் செய்திருப்பதைக் காணலாம். பாஞ்சாலி சபதத்தின் இரண்டாம் பாகம் பராசக்தி வணக்கத்தோடு தொடங்குகிறது.
'பிள்ளைப் பருவத்திலே எனைப் பேண வந்தாள் - அருள் - பூண வந்தாள்' என்ற இடம், 'சிறு வயதில் வாணியே தன்னை நேரில் ஆட்கொண்டாள்' என்று கவிஞன் சொல்வதாகக் கருதுவோர் உண்டு. பிள்ளைப் பருவ நிகழ்ச்சிகளைச் சொல்லும் போதெல்லாம் பாரதி இப்படி ஒரு சம்பவத்தைக் குறிப்பிடுகிறான் என்பது நோக்கத் தக்கது.
ஆதிரைத்திரு நாளொன்றில் சங்கரன்
ஆலயத்தொரு மண்டபம் தன்னில்யான்
சோதி மானொடு தன்னந் தனியனாய்ச்
சொற்களாடி யிருப்ப மற்று அங்கு அவள்
பாதி பேசி, மறைந்து பின் தோன்றினாள்
பங்கயக் கையில் மை கொணரந்தே 'ஒரு
சேதி, நெற்றியில் பொட்டு வைப்பேன்' என்றாள்.
திலதமிட்டனள். செய்கை அழிந்தனன்.
என்று 'கனவு' என்ற தலைப்பில் செய்யப்பட்ட தன் வரலாற்றில் சொல்வது, வாணியின் அருள் பெற்ற நிகழ்வையா அல்லது இளம்பருவத்தில் ஏற்பட்ட காதலையா என்ற ஐயத்தைத் தந்தாலும், இன்னோர் இடத்தில் மிகத் தெளிவாகவே சொல்கிறான்.
'மூன்று காதல்' என்று சரஸ்வதி, லக்ஷ்மி, பார்வதி தேவியரின் மீது கொண்ட காதலை விவரிக்கும் கவிதை சரஸ்வதியைக் குறித்துத் தொடங்குகிறது.
'பிள்ளைப் பிராயத்திலே - அவள்
பெண்மையைக் கண்டு மயங்கிவிட்டேன் - அங்குப்
பள்ளிப் படிப்பினிலே - மதி
பற்றிடவில்லை.....
'ஆற்றங் கரைதனிலே - தனி
ஆன மண்டப மீதினிலே - தென்றல்
காற்றை நுகர்ந்திருந்தேன் - அங்குக்
கன்னிக் கவிதை கொணர்ந்து தந்தாள்....'
இது சிந்திக்கத் தக்கது.
வேதத் திருவிழியாள் - அதில்
மிக்கபல் லுரையெனும் கருமையிட்டாள்.
சீதக் கதிர்மதியா - நுதல்
சிந்தனையே குழல் என்றுடையாள்.
வாதத் தருக்கமெனும் - செவி
வாய்ந்த நற்றுணிவெனும் தோடணிந்தாள்.
போதமென் நாசியினாள் - நலம்
பொங்குபல் சாத்திர வாயுடையாள். (4)
பதம் பிரித்து: இந்தப் பாடலுக்குத் தேவை இல்லை. நற்றுணிவு என்பதை நல் துணிவு என்று பிரித்துக் கொள்ளவும்.
அ. சொற் பொருள்
சீதக் கதிர்: குளிர்ச்சியான ஒளி. சந்திரன் அல்லது மதியின் கிரணங்களுக்கு நிலா என்பது பெயர். (நிலா என்பது ஆகாயத்தில் வட்டமாக மிதக்கிறதே, அதைக் குறிக்கும் பெயராக இருந்ததில்லை. சந்திரனின் ஒளிக்கு அந்தப் பெயர் வழங்கி வந்தது.)
கலவிக் களியின் மயக்கத்தால்
கலைபோய் அகலக் *கலை மதியின்
நிலவைத்* துகில் என்று எடுத்து உடுப்பீர்!
நீள்பொன் கபாடம் திறமினோ!
(கலிங்கத்துப் பரணி - கடைத் திறப்பு)
'ஆடை இதுவென நிலவினை எடுக்கும் ஆனந்த மயக்கம்' என்று கண்ணதாசன்(?) எழுதிய திரைப்பாடலில் இந்தக் கருத்து இடம் பெற்றது.
சுடர்ப் பரிதி ஒளிப்ப *நிலவு ஒழுக்கு மதி*
ஒளிப்ப அலை அடக்கு தழல் ஒளிப்ப
ஒளிர் ஒளிப் பிரபை வீசும்
(வேல் வகுப்பு - அருணகிரி நாதர்)
சூரியனின் கிரணங்களுக்குக் கதிர் என்று பெரும்பாலும் வழங்கும். ஆனால் சூரிய, சந்திரருக்கே கூட 'கதிர்' என்ற பெயர் உண்டு. 'சீத' என்ற அடைமொழியோடு சொன்னதற்கு இந்தக் காரணம் இருந்திருக்கலாம்.
போதம்: ஞானம் (wisdom); அறிவு (knowledge, intelligence). அறிவின் மேல் நிலையே ஞானம். அறிவு என்பது ஒரு data bank போல. தகவல் தளத்தைப் பயன்படுத்துவதால் கிடைக்கும் முடிபுகளை மனிதன் இன்னும் துல்லியமாகக் கணக்கிட்டுக் கொள்கிறான் அல்லவா, அது ஏறத்தாழ ஞானம் என்று சொல்லலாம்.
ஆ. இலக்கணம் -
இ. யாப்பு
இதுவும் நொண்டிச் சிந்து
ஈ. பாடல் சொல்வது
வாணிக்கு வேதமே விழி; வேதங்களுக்குக் காணப்பட்ட உரை, அந்த விழிகளுக்கு இடப்பட்ட மை. ('மை கண்ணுக்கு நல்லது. அழகுங் கூட. ஆனால், அளவுக்கு மிஞ்சிப் பூசினால் விகாரமாகத் தோன்றுவதுடன் கண்ணே போனாலும் போய்விடும்' என்று பாரதி இந்த இடத்துக்குக் குறிப்பு எழுதியிருக்கிறான். உரையாசிரியர்கள் ஒவ்வொருவரும் கவனத்தில் கொள்ள வேண்டிய குறிப்பு. {நான் எழுதுவது குறிப்பு. உரையில்லை. எனவே எனக்கு இது பொருந்தாதப்பா... :P} குளிர்ச்சியான ஒளி விடும் சந்திரனே அவளுடைய நெற்றி. சிந்தனையே அவளுடைய குழல்.) வாதம், தருக்கம் என்பன அவளுடைய செவி. அந்தச் செவிக்கு அலங்காரமான தோடு எதுவோ என்றால், துணிவு. துணிவில்லாத வாதமோ, தருக்கமோ அழகில்லாமல், ஒளிவிடாமல் போகும் என்பது குறிப்பு. ஞானமும், அறிவுமே சுவாசிக்கவும், உயிர் தரிக்கவும் தேவையான மூச்சைப் பெற்றுத் தரும் நாசி. பல விதமான சாத்திரங்களே அவளுடைய வாய்.
'சாத்திரங்களென்றாலே அருவருப்புக் கொள்பவன்' பாரதி என்றொரு கருத்துண்டு. 'கோத்த பொய் வேதங்களும், மதக் கொலைகளும் அரசர்தம் கூத்துகளும்,' என்றும் 'சாத்திரங்கள் பல தேடினேன், அங்குச் சங்கையில்லாதன சங்கையாம்,' என்றும் சொல்வதால் இப்படியொரு கருத்தை உருவாக்கிக் கொண்டுள்ளனர். பாரதி உண்மையில் சாத்திரங்கள் *எல்லாவற்றையும்* வெறுத்தவனல்லன். 'சந்தி தெருப் பெருக்கும் சாத்திரம் கற்போம்' என்று அவன் சொல்லும்போது, மிகுந்த பக்தி சிரத்தையுடன் 'சாத்திரம்' என்ற சொல்லை உச்சரிக்கிறான் என்பது என் கருத்து. (வேதங்கள், பற்றிய பாரதியின் கருத்தில் ஒரு சிறிது, 'கண்ணன் - என் தந்தை'யில் வெளிப்படக் காணலாம்.)
சாத்திரங்களை முற்றிலும் வெறுத்தவனாக இருந்திருந்தால், அவனுடைய வாணியை 'நலம் பொங்கு பல் சாத்திர வாய் உடையாள்' என்று சொல்லியிருக்க மாட்டான்.
'சிந்தனையே குழல்' என்று சொல்லியிருப்பது சுவைக்கத் தக்கது. 'முடியுமா?' என்ற என் பழைய கட்டுரையிலிருந்து ஒரு பகுதி:
------------
"சீதக்கதிர் மதியா நுதல் சிந்தனையே குழல் என்றுடையாள்" என்றல்லவா சரஸ்வதியைப் பாடுகிறான் பாரதி? சிந்தனையே குழல் என்றால்? இரண்டுக்கும் அடர்த்தி இருந்தால்தான் மதிப்பு. தொடர்ந்த பராமா¢ப்பு இல்லாவிட்டால் குழல் கெட்டுப் போகும். தொடர்ந்த, முறையான பயிற்சி இல்லாவிட்டால் சிந்தனை கெட்டுப்போகும். பொடுகு, பேன் என்று அடர்ந்த கூந்தலைக் கெடுக்க ஆயிரம் வெளித்தாக்குதல்கள். அடர்ந்த சிந்தனையைக் கூட பல வெளித்தாக்குதல்கள் கெடுக்கும் - சா¢யான முறைகளைப் பின்பற்றாவிட்டால். வெட்டி, திருத்தி, வா¡¢, முடிந்துவைத்தால்தான் குழல் அழகாக விளங்கும். வெட்டி, திருத்தி, ஒழுங்குபடுத்தி, தகுந்த முடிவுகளுடன் இருந்தால்தான் சிந்தனை அழகுற விளங்கும். வயதானால் வண்ணம் மாறுவதைக்கூட சொல்லலாம். ஒரு ஆங்கிலப் பழமொழி உண்டு. முப்பது வயதுக்குக் குறைந்தவன் கம்யூனிஸ்ட்டாக இல்லையென்றால் அவனுக்கு இதயமே கிடையாது. முப்பது வயதுக்கு மேற்பட்டவன் இன்னும் கம்யூனிஸ்டாகவே இருந்தால் அவனுக்கு மூளையே கிடையாது. (A person below thirty who is not a communist, has no heart. A person above thirty and who is still a communist, has no head.) சத்தியமாகக் கட்சித் தாக்குதல் இல்லை. நமக்கு வேறெந்த சாயமும் கிடையாது. வயதானால் வண்ணம் மாறுவதற்கு உதாரணம் காட்ட ஒரு பழமொழியை உபயோகித்துக் கொண்டேன். அவ்வளவுதான். முடிமீது கைவைத்து சத்தியம். சிந்தனையே குழலை இன்னும் வி¡¢த்தால் பாஞ்சாலியின் கூந்தலைப் போல வி¡¢யும். சொல்லப்போனால் பாஞ்சாலி சபதமும், பாரதப் போரும் கூந்தல் முடியத்தானே. கம்பன் சொல்லியிருக்கும் இராமனின் குஞ்சி பற்றிய வர்ணனைகளில் பெரும்பான்மையும் சிந்தனைக்கும் பொருந்தும். கம்பனில் தோய்ந்த பாரதி இந்த இடத்திலிருந்தும் சிந்தனையே குழல் என்பதற்கான எண்ணத்தைப் பெற்றிருக்கலாம்.
--------------
(முழுக் கட்டுரையும் எந்த வலைத் தளத்தில் இருக்கிறது என்பது நினைவில்லை)
இந்த இடத்தில் பிரசன்னா எழுப்பியிருக்கும் கேள்விக்கும் விடை சொல்லிவிடுகிறேன்.
===========
"நீங்கள் தட்டச்சி இட்டதில் புந்தி நாடரிதாய் மனம் தேடரிதாய் என்று இருக்கின்றது. என் புத்தகத்தில் மனம் நாடரிதாய்ப் புந்தி தேடரிதாய் என்று இருக்கிறது. மனமும் புந்தியும் இலக்கணப்படி எங்கிருந்தால் சரியாக இருக்கும்?"
"அந்த நிர்மலப்பொருளினை சிந்தை செய்வேன் என்பது அந்த நிர்மலப்பொருளினை நினைத்திடுவேன் என்று இருக்கிறது. எப்படி இப்படி மாறுபாடு வருகிறது?"
===========
பிரதி பேதம் அல்லது பாட பேதம் என்ற சாபக்கேடு நம் தமிழ் நூல்கள் அனைத்துக்கும் பொதுவானது. முன்பெல்லாம் பிரதி செய்த (வேணாம். copy எடுத்த... சரியா?) பெரியவர்கள் கைத் தவறுதலாகச் செய்ததிலிருந்து, தவறாக உணர்ந்து செய்ததிலிருந்து, வேண்டுமென்றே நுழைத்ததிலிருந்து ஏராளமான காரணங்களால் பிரதி பேதங்கள் ஏற்பட்டன. இப்போதெல்லாம் பதிப்பாசிரியர்களின் அலட்சியத்தால், கவனக் குறைவால் பெரும்பாலான பிரதி பேதங்கள் நிகழ்கின்றன. வெறும் நூறு வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்த பாரதியின் எழுத்தில் ஏராளமான பாட பேதம் (பிரசன்னா குறிப்பிட்டுள்ளதைப் போன்ற வேறுபாடுகள்) இருப்பது நம்முடைய பதிப்பாளர்களுடைய வருத்தத்துக்குரிய போக்கின் மீது வைக்கப்பட்டுள்ள விமரிசனம்.
பிரசன்னா, மனத்துக்கும் புத்திக்கும் வேறுபாடு தேடுவது இப்போதைக்கு செய்யக் கூடிய காரியமில்லை. அதையெல்லாம் தனிக் கட்டுரையில் பார்க்கலாம். (அதாவது எழுத நேரம் கிடைத்தால்.) சிந்துப் பாவின் இலக்கணப்படி, 'மனம், புந்தி' இரண்டையும் எந்த இடத்திலும் மாற்றிப் போட்டுக் கொள்ளலாம். பொருள் பொருத்தம் எது என்பது சிந்தனைக்குரியது.
ஆனால் மனம் வேறு; புத்தி வேறுதான்.
'புத்தி மனம் சித்தம் புலன் ஒன்று அறியாமல்
வித்தை செயும் சூத்திரத்தின் மேவுமொரு பொம்மை என'
--குயில் பாட்டு.
மற்ற கேள்விகளுக்குப் பிறகு வருகிறேன் பிரசன்னா.
பிரசன்னாவின் குள்ளச்சாமி யார் இழையில் கடைசிக் கேள்வி:
========
கொசுறு கேள்வி: நேரமில்லாத நேரத்துல இத்தனைக் கேள்வியான்னு என்னை யாரும்
திட்டலையே? :P
========
யார் திட்டினாலும், நான் திட்ட மாட்டேன். நிறைய கேள். நான் இல்லாவிட்டாலும் யாராவது விடை சொல்வார்கள். நான் சொல்வதை எனக்குப் பொழுது கிடைக்கும்போதெல்லாம் சொல்கிறேன்.
===============
நேற்றைக்கு இருந்த நெருக்கடியில் ஒரு முக்கியமான குறிப்பு விட்டுப் போயிற்று. முக்கியமாக நான் செய்திருக்க வேண்டிய திருத்தமும் விட்டுப் போயிற்று. பாரதி பாட்டை - பாரதி என்று இல்லை, யார் எழுதியது என்றாலும் - பாரதி எழுதிய விதத்தில்தான் பதிப்பிக்க வேண்டும். பிரதிபேதம் எப்படி நேருகிறது என்று சொல்ல நினைத்தேன். காலை வேளை; அலுவலகம் கிளம்பும் அவசரத்தில் எப்படியோ போய்விட்டது.
அண்மைக் காலத்தில் வெளிவந்த பல பதிப்புகளில் 'சீதக் கதிர்மதியே - நுதல்' என்று அச்சிடப்படுகிறது. நான் படித்த பழைய சக்தி வை. கோவிந்தன் பதிப்பில் 'சீதக் கதிர்மதியா - நுதல்' என்று இருக்கும். பாரதி காலமான பிறகு பாரதி பிரசுராலயத்தார் அவனுடைய கவிதைகளைப் பதிப்பித்தார்கள். இந்த, 'சீதக் கதிர்மதியா' அச்சுப் பிழை என்றெண்ணி, 'சீதக் கதிர்மதியே' என்று பதிப்பித்தார்கள். ஆகவே அதைத் தொடர்ந்து வந்த பதிப்புகள் பெரும்பாலானவற்றில் இந்த 'யே'தான் இருக்கும். சக்தி கோவிந்தன் பதிப்பிற்குப் பிறகு சுமார் முப்பது-முப்பத்தைந்து பதிப்புகள் என்னிடம் இருந்தன. இந்த 'யே' பழக்கம் என்னையும் தொற்றிக்கொண்டது.
பாரதி 'சீதக் கதிர்மதியா' என்றுதான் எழுதியிருக்கிறான். அவன் எழுதியிருக்கும் குறிப்புகளில் பின்வரும் விளக்கம் காணப்படுகிறது:
'சீதக் கதிர்மதியா(ம்) நுதல்,' குளிர்ந்த ஒளியையுடைய மதியே ஸரஸ்வதி தேவிக்கு நெற்றியாக வர்ணிக்கப்பட்டிருக்கிறது. 'ஊகம்' என்பது அவளுடைய கூந்தல்.'
எனவே, 'சீதக் கதிர்மதியா' என்பதே சரியான பாடம். அது மட்டுமன்று. முதல் பதிப்பு வெளிவரும் போது, 'ஊகம்' என்பதே குழல் என்று வர்ணித்திருக்கிறான். அச்சுப் புத்தகமாக வெளிவந்த பிறகு, 'ஊகம்' என்பதை விடவும், 'சிந்தனை' என்பதே குழலுக்குப் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றியிருக்கிறது. அச்சுப் படியில் 'ஊகம்' என்ற சொல்லை அடித்துவிட்டு, 'சிந்தனை' என்று திருத்தியிருக்கிறான். (தஞ்சைப் பல்கலைக் கழக ஆய்வுப் பதிப்பில் காணப்படும் குறிப்பு.)
எனவே நாம் கொள்ள வேண்டிய பாடம், 'சீதக் கதிர்மதியா'தான்.
--
--
--
--
--
What happened Hari anna? Waiting for your postings..Elango
பதம் பிரித்து:
இந்தப் பாடலுக்குத் தேவையில்லை.
அ. சொற் பொருள் -
'தேமலர்க் கரமென' தேனை உடைய மலர்களைப் போன்ற கரம் என. சிற்பம் முதலான பல கலைகளே வாணியின் கரங்கள். மலர்க் கரங்கள். தேன் கொண்ட மலர்க்கரங்கள்.
ஆ. இலக்கணம் -
இ. யாப்பு
நொண்டிச் சிந்து
ஈ. பாடல் சொல்வது
கவிதைக்கு இசை தேவையா இல்லையா? இந்தப் பாடலில் பாரதியின் கருத்து என்ன என்பது தெளிவாக வெளிப்படுகிறது. 'சொற்படு நயம் அறிவார்.' சொல்லுக்குள் உறைந்திருக்கும் நயத்தை அறிவார். 'இசை தோய்ந்திடத் தொகுப்பதன் சுவை அறிவார்.' அந்தச் சொல் இசையில் தோய்ந்திருக்குமாறு தொகுக்கின்ற வேலைப்பாட்டினால் விளைவதாகிய சுவையை அறிவார். யார்? விற்பனத் தமிழ்ப் புலவோர். தமிழ்க் கவிதையை இசையோடு ஒத்துச் செய்வதன் சுவையை அறிந்தவர்கள் தமிழ்ப் புலவர்கள்.
கவிஞர்கள், பாவலர்கள், புலவர்கள் எல்லாம் ஒன்றுக்கொன்று சமமான பொருளுடைய சொற்களே. 'புலவர் என்பவர் scholar மட்டுமே. அவர் கட்டுவது ஒன்றுக்கொண்டு ஒட்டாத செங்கல் அடுக்கு,' என்றொரு கருத்தும் நிலவுகிறது. அப்படி இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். A lawyer is an advocate; but an advocate need not be a lawyer என்பதைப் போல்தான் 'கவிஞர் என்பவர் புலமை உள்ளவர்; புலவர் கவிஞராகத்தான் இருக்க வேண்டுமென்பதில்லை.' தனிக் கட்டுரைக்கு உரிய ஒன்று. இப்போதைக்கு இத்தோடு விட்டுவிடுகிறேன்.
வாணியைச் சரண்புகுந்தேன் - அருள்
வாக்களிப்பாள் எனத்திடமிகுந்தேன்.
பேணிய பெருந்தவத்தாள் - நிலம்
பெயரளவும் பெயர் பெயராதாள்.
பூணியல் மார்பகத்தாள் - ஐவர்
பூவை திரௌபதி புகழ்க்கதையை
மாணியல் தமிழ்ப்பாட்டால் - நான்
வகுத்திடக் கலைமகள் வாழ்த்துகவே! (6)
பதம் பிரித்து:
வாணியைச் சரண் புகுந்தேன் - அருள்
வாக்கு அளிப்பாள் எனத் திட(ம்) மிகுந்தேன்.
பேணிய பெருந்தவத்தாள் - நிலம்
பெயரளவும் பெயர் பெயராதாள்.
பூண் இயல் மார்பகத்தாள் - ஐவர்
பூவை திரௌபதி புகழ்க்கதையை
மாண் இயல் தமிழ்ப்பாட்டால் - நான்
வகுத்திடக் கலைமகள் வாழ்த்துகவே!
அ. சொற் பொருள்
பேணிய: பேணுதல் என்ற சொல்லுக்குப் பதினான்கு தனித் தனிப் பொருள் உண்டு. இங்கே 'போற்றுதல்,' (to cherish, foster, nurture) 'மதித்தல்' (to regard), 'அலங்கரித்தல்' (to adorn) என்பன பொருந்தும். 'பேணிய பெருந் தவத்தாள்' என்றால் 'போற்றக் கூடிய அளவுக்குப் பெரிய தவத்தைச் செய்தவள்' என்று பொருள் காண்பது விபரீதமாக முடியும். கல்விக்கு இறைவியை அப்படிச் சொல்வது முறையில்லை. 'தன் அன்பர்களால் போற்றப்பட்ட பெரிய தவத்தை உடையவள்,' என்றே கொள்ள வேண்டும். 'தனது அன்பர்கள்' என்பதை வருவித்துக்கொள்ள வேண்டும்.
மாண் இயல்: மாண் என்றால் மாண்பு; மாட்சிமை. Splendour, excellence, glory, dignity. தமிழ்ப் பாட்டு - தான் இயற்றும் இந்தக் காவியம் - மாண் இயன்றது என்ற பெருமிதம் தோன்றச் சொல்வதைக் காணலாம்.
ஆ. இலக்கணம் -
இ. யாப்பு
நொண்டிச் சிந்து
ஈ. பாடல் சொல்வது
நல்ல அணிகலன்களை (பூண்களை) மார்பின் மீது அணிந்தவளாகிய (இயல் - பூண் இயல்), ஐவர் தேவியான திரெளபதியின் புகழைச் சொல்லும் இந்தக் கதையை, நல்ல ஒளி நிறைந்த பாடல்களால் நான் சொல்ல வேண்டும் என்பதற்காக 'உலகம் உள்ளளவும் தன் பெயர் உள்ளவளான' வாணியைச் சரண் புகுந்தேன். அவள் எனக்கு அருள் நிறைந்த வாக்கினை அளிப்பாள் என்ற திடம் அதனால் எனக்கு உண்டாயிற்று.
--

--
*/எனில்
சேர்ந்திடும் கலிசெயு மறமுமுண்டாம்.
Hope you are enjoying mumbai trip, and monsoon. It is the perfect time, because the famouse ganapathy festival is also approaching. enjoy
கலி செய்யும் அறம்- இங்கே கலி காலத்தை தொடர்பு படுத்துவதால், அறம் என்ற வார்த்தைக்கு, எதிர்மறைப் பொருள் கொள்ள வேண்டுமா?இளங்கோ
===========
பதம் பிரித்து:
இந்தப் பாடலுக்குத் தேவையில்லை. 'கனிந்தோர்ந்திடு' என்பதை, 'கனிந்து ஓர்ந்திடு' என்று பிரித்துக்கொள்ளவும்.
அ. சொற் பொருள்
மெய்த்தவர்: மெய்யான தவம் மேற்கொண்டவர்
ஓர்ந்திடு மேலவர்: ஓர்தல்: ஆராய்ந்து அறிதல் (to consider attentively, examine, investigate)
உய்த்திடு: உய்தல் என்ற சொல்லுக்கு 'வாழுதல் - ஜீவித்தல்' என்ற பொருள் உண்டு. 'அபாயங்களின்றும், துயரங்களின்றும் நீங்குதல்' என்பது இந்தச் சொல் தரும் பொருள். உய்தல் - செய்வினை - active voice. உய்த்தல் - செயப்பாட்டுவினை (passive voice).
கிரியை: ஏழு வேறு வேறு பொருளுள்ள இந்தச் சொல்லுக்கு இங்கே பொருத்தமாவது: 1) செய்கை - act, action, deed. 2) சிவனை ஆகமங்களில் விதித்தவாறு அகத்தானும் புறத்தானும் வழிபடுவது
கைத்திடு: கைப்பதாகிய. கசப்பான.
ஆ. இலக்கணம்
ஓர்ந்திடு மேலவர்: ஓர்ந்திடும் மேலவர். மகரம் கெட்டதன் விதியைப் பார்த்தோம்.
இ. யாப்பு
நொண்டிச் சிந்து
ஈ. பாடல் சொல்வது
துறவியரில் இரு வகை எந்தக் காலத்திலும் இருந்திருக்கிறது. உண்மையான துறவு மேற்கொண்டு, உள்ளத்தால் உயர்ந்து நிற்போர் ஒரு புறமும், துறவு வேடம் புனைந்து மக்களை ஏமாற்றித் திரிபவர் இன்னொரு புறமும் இன்று நேற்றல்ல; திருவள்ளுவர் காலத்திலும் இருந்திருக்கிறார்கள். அதனால்தான் துறவிகளுக்கே பெரிதும் சொல்லப்பட்ட 'கூடா ஒழுக்கம்' என்ற அதிகாரத்தில் (அறத்துப் பால், துறவற இயலில் இந்த அதிகாரம் இடம் பெறுகிறது)
வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று
என்றார். 'மனத்தைத் தன் வழிப் படுத்தும் வலி (வலிமை) இல்லாத நிலையை உடையவனுடைய (தவ வேடம் புனைந்த) வெளித் தோற்றம் எத்தகையது என்றால், பசு, புலியின் தோலைப் போர்த்துக் கொண்டு வயலில் இறங்கி மேய்வதைப் போன்றது.' புலித்தோல் போர்த்திய பசுவைத்தான் நமக்குத் தெரியும். பசுத்தோல் போர்த்திய புலியைக் காட்டுகிறார் வள்ளுவர்.
பாரதி காட்டும் அத்தினபுரத்துத் துறவியருள்ளும் இரண்டு வகையும் இருந்திருக்கின்றனர். மெய்யான தவம் உடைய மெய்த்தவரும் அங்கே இருந்தனர். வேடங்கள் புனைந்தவரும் இருந்தனர். வாழ்வின் துன்பங்களிலிருந்து விடுவிப்பதான சிவஞானத்தை 'ஓர்ந்து,' ஆராய்ந்து அறிந்து, கனிந்திடும் ஞானியர் ஒருபுறம் இருந்தனர். பொய்யான இந்திரசாலமும் (கையை நீட்டினால் பொருள் கொட்டுகிறதே, அது போன்ற வித்தைகள்), அதற்கு நிகரான பூசைகளும், கிரியைகளும் (வெளித்தோற்றத்தால் சிவஞானம் பெற்றவர்போல் தோன்றி, உள்ளே நிகழ்வதால் நடிப்பதாகிய செயல் என இரண்டு பொருளையும் தரக் கூடிய சொல் என்பதை மேலே கண்டோம்), இழிவான நடத்தையும் (புலை நடை) கொண்டு, வாயைத் திறந்தாலே பொய் உதிரும்படியான கசப்பான செய்கையும் கொண்டு, கண்ணால் ஆளை மயக்கிப் பிழைப்பு நடத்தும் துறவியரும் அந்த ஊரில் இருந்தனர்.
பாரதி நிகழ்த்தும் சமூக விமரிசனம் இது.
மாலைகள் புரண்டசையும் - பெரு
வரையெனத் திரண்டவன் தோளுடையார்
வேலையும் வாளினையும் - நெடு
வில்லையும் தண்டையும் விரும்பிடுவார்.
காலையும் மாலையிலும் - பகை
காய்ந்திடு தொழில்பல பழகிவெம்போர்
நூலையும் தேர்ச்சி கொள்வார் - கரி
நூறினைத் தனிநின்று நொறுக்கவல்லார். (10)
பதம் பிரித்து:
திரண்டவன் தோளுடையார்: திரண்ட வன்தோள் உடையார்
அ. சொற் பொருள்
வரை: மலை, கரி: யானை.
ஆ. இலக்கணம் -
இ. யாப்பு
நொண்டிச் சிந்து
ஈ. பாடல் சொல்வது
அந்தணர் வீதிகளில் தொடங்கிய அத்தினபுர நகர வருணனை, இப்போது மறவர் வீதிகளைக் காட்டுகிறது. மாலைகள் அணிந்த, மலைபோன்ற தோள்களை உடைய மறவர்கள் அவ்வீதிகளில் வேல், வாள், வில், தண்டு (கதை) போன்ற ஆயுதப் பயிற்சிகளை மேற்கொள்வார்கள். காலை தொடங்கி மாலை வரை, பகைவரைகளை எதிர்பதற்குத் தேவையான ஆயுதப் பயிற்சியையும், போர் நூல் பயிற்சியையும் செய்வார்கள். ஒவ்வொரு மறவனும் தனி ஒருவனாக நின்று நூறு யானைகளை வீழ்த்தக் கூடியவன்.
ஒரு போர் வீரனின் ஆற்றலை அளக்கும் அளவைகளில் ஒன்று, 'அவன் எத்தனை யானை வலுவுடையான்,' என்பதும், 'எத்தனை யானைகளை வீழ்த்த வல்லான்,' என்பதும். திருதிராட்டிரன் ஆயிரம் யானை வலுவுடையவன். 'நெடுங்கை வளர் யானை பலவற்றின் வலி காட்டிடும் வெந்திறல் வீமனை, உங்கள் பொய் வளர் சூதினில் வைத்திட்டேன், வென்று போ!' என்று பின்னால் சூதாடும்போது தருமன் சொல்லப் போகிறான். வீமன், துரியோதனன் போன்றோரும் இப்படிப்பட்ட 'ஆயிரம் யானை பலம்' கொண்டவர்களாகச் சொல்லப்பட்டவர்கள்.
போர் வீரர்களில் முதல் - உயர் - பிரிவைச் சேர்ந்தவர்கள் தேர் வீரர்கள். அவர்களுடைய ஆற்றலை நான்கு வகையாகப் பிரித்திருந்தனர். அர்த்த ரதன், சமரதன் (அல்லது) ரதிகன், அதிரதன், மகாரதன் என்பன அவை. மகாபாரதம், உத்தியோக பருவம், ரதாதிரத சங்கியான பருவத்தில் இதற்கான குறிப்பு காணப்படுகிறது.
அர்த்தரதன் என்பவன் தன்னை மட்டும் காத்துக்கொள்ளும் அளவுக்கு (நால்வகைப் படையில் ஏதேனும் ஒன்றைச் சேர்ந்த ஏதாவது ஒரே ஒரு வீரனை எதிர்த்துப்) போரிடும் ஆற்றல் பெற்றவன். சமரதன் அல்லது ரதிகன் என்பவன் தன்னையும், தன்னுடைய தேர், சாரதி, குதிரைகளைக் காத்த வண்ணம் ஒரு வீரனை எதிர்த்துப் போரிடும் ஆற்றல் உடையவன். மகாரதன் என்பவன், தான், தன் தேர், சாரதி, குதிரைகள், தன் சேனை ஆகியவற்றைக் காத்தவண்ணம் ஒரு சில வீரர்களோடு போர் புரியும் ஆற்றல் பெற்றவன். (அதாவது, அதிரதனின் கீழ் ஒரு படைப்பிரிவு அடங்கும். அவன் ஒரு படைப்பிரிவின் தலைவனாகவும் இருப்பான்.) மகாரதன் என்பவன், தான், தன் தேர், சாரதி, குதிரைகளையும், தன் சேனையையும் காத்துக் கொண்டு, பலரோடு ஒரே நேரத்தில் போரிட வல்லவன். Commander-in-Chief என்று சொல்லப்படும் பதவியைப் போன்ற பதவிக்குத் தகுந்தவன்.
அர்ஜுனனை மகாரதன் எனவும், கர்ணனை அர்த்தரதன் (தன்னை மட்டும் காத்துக் கொள்ள வல்லவன்; தன் தேர், சாரதி, குதிரைகளைக் கூட காத்துக்கொள்ளும் வன்மை அற்றவன்) எனவும் என்று பிதாமகர் தரம் பிரித்த காரணத்தால், 'இவர் வீழ்ந்த பிறகே போர்க்களத்தில் நுழைவேன்,' என்று சபதமிட்டான் கர்ணன். இவ்வாறு மூன்று தருணங்களில் சபதம் செய்கிறான். இது மூன்றாவது தருணம்.
வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்றுஎன்றார். 'மனத்தைத் தன் வழிப் படுத்தும் வலி (வலிமை) இல்லாத நிலையை உடையவனுடைய (தவ வேடம் புனைந்த) வெளித் தோற்றம் எத்தகையது என்றால், பசு, புலியின் தோலைப் போர்த்துக் கொண்டு வயலில் இறங்கி மேய்வதைப் போன்றது.' புலித்தோல் போர்த்திய பசுவைத்தான் நமக்குத் தெரியும். பசுத்தோல் போர்த்திய புலியைக் காட்டுகிறார் வள்ளுவர்.
வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று
என்றார். 'மனத்தைத் தன் வழிப் படுத்தும் வலி (வலிமை) இல்லாத நிலையை உடையவனுடைய (தவ வேடம் புனைந்த) வெளித் தோற்றம் எத்தகையது என்றால், பசு, புலியின் தோலைப் போர்த்துக் கொண்டு வயலில் இறங்கி மேய்வதைப் போன்றது.' புலித்தோல் போர்த்திய பசுவைத்தான் நமக்குத் தெரியும். பசுத்தோல் போர்த்திய புலியைக் காட்டுகிறார் வள்ளுவர்.
<<<<<<<<<<<<<<<<<<இந்த இடத்தில் எனக்கும் குழப்பம் வருகின்றது.
பசுத்தோல் போர்த்திய புலி என்றுதானே வள்ளுவர் சொன்னதாய் பாடசாலையில் எங்கள் தமிழாசான் சொல்லிக்கொடுத்தார்.
எனக்கு இங்கே இடர்கின்றதே ஐயா.
ஐயம் தணிப்பீரா ஐயா ?
--
நின்றிடும் பிரமம் என்பார் - அந்த
நிர்மலப் பொருளினை சிந்தை செய்வேன்
நன்றுசெய் தவம்யோகம் - சிவ
ஞானமும் பக்தியும் நணுகிடவே
வென்றிகொள் சிவசக்தி - எனை
மேவுறவே இருள் சாவுறவே
இன்றமிழ் நூலிதுதான் - புகழ்
ஏய்ந்தினிதாய் என்றும் இலகிடவே. (2)பதம் பிரித்து: இந்தப் பாடலுக்குத் தேவையில்லை. இன்றமிழ் என்பதை இன் தமிழ் என்றும், ஏய்ந்தினிதாய் என்பதை ஏய்ந்து இனிதாய் என்றும் பிரித்துக்கொள்ள வேண்டும்.
அ: சொற் பொருள்:
நிர்மலப் பொருள்: மலம் என்றால் அழுக்கு; குற்றம். நிர்மலம் என்றால் அழுக்கற்றது; குற்றமற்றது.
பிரமம்: பிரமம் அல்லது பிரம்மம் என்பது வேறு; பிரம்மன் எனப்படும் படைப்புத் தொழிலை மேற்கொண்ட இறைவன் வேறு.
மேவுறவே: மேவுதல்: 1. அடைதல் (to reach);
அ. சொற் பொருள்
சீதக் கதிர்: குளிர்ச்சியான ஒளி. சந்திரன் அல்லது மதியின் கிரணங்களுக்கு நிலா என்பது பெயர். (நிலா என்பது ஆகாயத்தில் வட்டமாக மிதக்கிறதே, அதைக் குறிக்கும் பெயராக இருந்ததில்லை. சந்திரனின் ஒளிக்கு அந்தப் பெயர் வழங்கி வந்தது.)
கலவிக் களியின் மயக்கத்தால்
கலைபோய் அகலக் *கலை மதியின்
நிலவைத்* துகில் என்று எடுத்து உடுப்பீர்!
நீள்பொன் கபாடம் திறமினோ!
(கலிங்கத்துப் பரணி - கடைத் திறப்பு)'ஆடை இதுவென நிலவினை எடுக்கும் ஆனந்த மயக்கம்' என்று கண்ணதாசன்(?) எழுதிய திரைப்பாடலில் இந்தக் கருத்து இடம் பெற்றது.
சுடர்ப் பரிதி ஒளிப்ப *நிலவு ஒழுக்கு மதி*
ஒளிப்ப அலை அடக்கு தழல் ஒளிப்ப
ஒளிர் ஒளிப் பிரபை வீசும்
(வேல் வகுப்பு - அருணகிரி நாதர்)
சூரியனின் கிரணங்களுக்குக் கதிர் என்று பெரும்பாலும் வழங்கும். ஆனால் சூரிய, சந்திரருக்கே கூட 'கதிர்' என்ற பெயர் உண்டு. 'சீத' என்ற அடைமொழியோடு சொன்னதற்கு இந்தக் காரணம் இருந்திருக்கலாம்.
This is in compensation of yesterday's absence. :)நூல்அத்தின புரமுண்டாம் - இவ்
அவனியிலே அதற்கிணையிலையாம்.
பத்தியில் வீதிகளாம் - வெள்ளைப்
பனிவரைபோற் பலமாளிகையாம்
முத்தொளிர் மாடங்களாம் - எங்கு
மொய்த்தளி சூழ்மலர்ச் சோலைகளாம்.
நத்தியல் வாவிகளாம் - அங்கு
நாடும் இரதிநிகர் தேவிகளாம். (7)
இந்த மூன்று தருணங்களைச் சொல்ல முடியுமா ஐயா...
இது மூன்றாவது தருணம் எனச் சொல்வதின் மூலமாக, குருக்ஷேத்திரப் போருக்கு வீரரைப் பிரிக்கும் தருணம் இது என்றறிகிறேன்... குருக்ஷேத்திரப் போருக்கு வீரரைப் பிரிக்கும் தருணம் என்றால் எதிரிப் படையில் இருக்கும் அர்ஜுனனை பிதாமகர் பீஷ்மர் எங்கனம் மகாரதன் என தரம் பிரிக்க முடியும். தனது படையில் இல்லாத ஒருவரை எப்படி தனது படைக்கான பிரிவில் தரம் பிரிக்க முடியும்.
வேண்டுமானால் பிதாமகர் அர்ஜுனனை மகாரதன் எனச் சொல்லியும் கர்ணனை அர்த்தரதன் எனச் சொல்லியும் ஒப்புமைப் படுத்தி கர்ணனை இழிவுபடுத்தி இருக்கலாம்...
நம்மிடம் இருப்பதில் ஒப்புமைப்படுத்தும் பொழுது தரம் பிரிப்பது எனவும், நம்மிடம் இருப்பதையும் மற்றவருடன் இருப்பதையும் ஒப்பிடுகையில் அதை ஒப்புமை என்றும் சொல்வதுவுமே சரியாக இருக்கும் என நான் நினைக்கிறேன் ஐயா... தெளிவுபடுத்தவும்...
Yes. I have them marked up. But since the character study of Karna (or any other character for that matter) it is not to be taken up for a detailed discussion here. We can have it on another occasion. Or please wait till I return home tomorrow, when I will be able to deal with this point and substantiate my arguments with direct quotations from Vyasa.
[1] 23 senāpatis tv ahaṃ rājan samayenāpareṇa
te
bhaviṣyāmi yathākāmaṃ tan me śrotum ihārhasi
24 karṇo vā yudhyatāṃ pūrvam ahaṃ vā pṛthivīpate
spardhate hi sadātyarthaṃ sūtaputro mayā raṇe
25 nāhaṃ jīvati gāṅgeye yotsye rājan kathaṃ cana
hate bhīṣme tu yotsyāmi saha gāṇḍīvadhanvanā (Mbh. Book 5, Ch.
153) Karna binds himself by this vow. And his vow presupposes the death of Bhishma. This means, he would not fight at all, if
Bhishma was not killed at all. That is a
pretty unwarranted situation, in the light of Duryodhana’s dependance on
him.
Alone I will exterminate the army of the Pandavas! The fame, however, of such a feat will attach to Bhishma, O tiger among kings, for this Bhishma, O monarch, hath been made by thee the commander of thy forces, and the renown always attacheth to the leader and not to those that fight under him. I will not, therefore, O king, fight as long as Ganga's son liveth! After Bhishma, however, hath been laid low, I will fight with all the Maharathas of the enemy united together!'
"Bhishma said, 'Both the brothers Achala and Vrisha are Rathas. Invincible (in battle) they will slay thy foes. Endued with great strength, those tigers among men, those foremost of Gandharvas, are firm in wrath. Young and handsome, they are possessed of great strength. As regards this thy ever dear friend, this one who is always boastful of his skill in battle, this one who always urgeth thee, O king, to fight with the Pandavas, this vile braggart, Karna, the son of Surya, this one who is thy counsellor, guide, and friend, this vain wight who is destitute of sense, this Karna, is neither a Ratha nor an Atiratha. Without sense, this one hath been deprived of his natural coat of mail. Always kind, he hath also been deprived of his celestial ear-rings. In consequence of the curse of Rama (his preceptor in arms) as also of the words of a Brahmana (who cursed him on another occasion), owing also to his deprivation of the accoutrements of battle, he, in my judgment, is only half a Ratha. Having approached Falguni (in battle), he will not certainly escape with life!' Hearing this, Drona, that foremost of all wielders of weapons, said, 'It is even so as thou hast said. That is not untrue! He boasteth on the eve of every battle, but yet he is seen to retreat from every engagement. Kind (out of season) and blundering, it is for this that Karna, in my judgment, is only half a Ratha!' [1]
[1] 4 paruṣaḥ
katthano nīcaḥ karṇo vaikartanas tava
mantrī netā ca bandhuś ca mānī cātyantam ucchritaḥ
5
eṣa naiva
rathaḥ pūrṇo nāpy evātiratho nṛpa
viyuktaḥ kavacenaiṣa sahajena vicetanaḥ
kuṇḍalābhyāṃ ca divyābhyāṃ viyuktaḥ satataṃ dhṛṇī
6
abhiśāpāc ca rāmasya brāhmaṇasya
ca bhāṣaṇāt
karaṇānāṃ viyogāc ca tena me 'rdharatho mataḥ
naiṣa phalgunam āsādya punar jīvan vimokṣyate
7
7 [s]
tato 'bravīn mahābāhur droṇaḥ śastrabhṛtāṃ
varaḥ
evam etad yathāttha tvaṃ na mithyāstīti kiṃ cana
8
raṇe raṇe
'timānī ca vimukhaś caiva dṛśyate
ghṛṇī karṇaḥ pramādī ca tena me
'rdharatho mataḥ
(Mbh. Book 5, Ch.
165) That Karna was an Ardha Ratha was affirmed and
acknowledged by Drona as well.
Alone I will exterminate the army of the Pandavas! The fame, however, of such a feat will attach to Bhishma, O tiger among kings, for this Bhishma, O monarch, hath been made by thee the commander of thy forces, and the renown always attacheth to the leader and not to those that fight under him. I will not, therefore, O king, fight as long as Ganga's son liveth! After Bhishma, however, hath been laid low, I will fight with all the Maharathas of the enemy united together!'
6 krodhas tejaś ca tapasā
saṃbhṛto ''śramavāsinā
droṇenānugṛhītaś ca divyair astrair udāradhīḥ
7 doṣas tv asya mahān eko yenaiṣa bharatarṣabha
na me ratho nātiratho mataḥ pārthiva sattama
பொருந்துதல் என்பது இன்னும் சிறபபன பொருள்தரும் என கருதுவேன்
2012/9/15 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>பொருந்துதல் என்பது இன்னும் சிறபபன பொருள்தரும் என கருதுவேன்
அஸ்தினபுரம், ரதி எழுதாது
அத்தினபுரம், இரதி என பாரதி எழுதிபோந்தான் காணீரோ?
2012/9/16 பிரசாத் வேணுகோபால் <pras...@gmail.com>இந்த மூன்று தருணங்களைச் சொல்ல முடியுமா ஐயா...Yes. I have them marked up. But since the character study of Karna (or any other character for that matter) it is not to be taken up for a detailed discussion here. We can have it on another occasion. Or please wait till I return home tomorrow, when I will be able to deal with this point and substantiate my arguments with direct quotations from Vyasa.
குபேர சம்பத்து எவ்வளவோ, அவ்வளவுதான் இவர்களுடைய ஆவணங்களில் புழங்கும் குறைந்தபட்சத் தொகையே.
ஹரியண்ணா,/*குபேர சம்பத்து எவ்வளவோ, அவ்வளவுதான் இவர்களுடைய ஆவணங்களில் புழங்கும் குறைந்தபட்சத் தொகையே.*/இது பாடலில் சொல்லப்பட்டிருக்கிறதா? அன்றி இது தங்கள் விளக்கவுரையில் வரும் கருத்து மட்டும்தானா?
அப்புறம் ஆயிரம் கோடி அன்றான வகாபுலரிக்கு வந்தது; இப்போதுதான் லட்சம் கோடி வந்திருக்கிறது. இனிவரும் காலங்களில் இதற்கு மேற்பட்ட தொகை என்ன என்பதை இனிமேல்தான் அறியப் போகிறோம்.
அவனுடைப் பெருஞ்செல்வம் - இவர்ஆவணந்தொறும் புகுந்திருப்பதுவாம்
எழுத்துக் கணக்கெல்லாம் பார்த்து எழுதினால் அந்தப் பாட்டில் உயிர் எப்படி இருக்கும், கவிதை எப்படி இருக்கும், உணர்ச்சி எப்படி இருக்கும் என்றெல்லாம் விமரிசிப்பவர்களும், கவலைப் படுபவர்களும் இதைப் பார்க்கவும்:
எனக்கும் எந்த உணர்வு இருக்கிறது. அதாவது இப்படிக் கடுமையான வரம்புக்குள் பொருந்தி வருமாறு, அதே சமயம் அழகியல் உணர்வோடு, பொருள் பொதிந்த, உணர்வுபூர்வமான பாடல்களை இவரால்( இவர்களால்) எப்படி எழுத முடிந்தது? என்ற ஆச்சரிய உணர்வு. அவையெல்லாம் எப்படி சாத்தியமாயின?
--
20 வயதில் இரட்டை நாகபந்தம் இயற்றிய இன்னோருவர், இங்கிருக்கிறார்.
--
20 வயதில் இரட்டை நாகபந்தம் இயற்றிய இன்னோருவர், இங்கிருக்கிறார்.
20 வயதில் இரட்டை நாகபந்தம் இயற்றிய இன்னோருவர், இங்கிருக்கிறார்.
இரட்டை நாகபந்தம் இயற்றிய அந்த பொல்லாப்பிள்ளை யார்...
ஐயப்பன், (இந்த இடத்தில் மட்டும்) என் மனசாட்சி. அவரது கூற்றை வழிமொழிகிறேன். நம் எடிட்டர் இப்போ, பவளாஜி. --
Yes. I have them marked up. But since the character study of Karna (or any other character for that matter) it is not to be taken up for a detailed discussion here. We can have it on another occasion. Or please wait till I return home tomorrow, when I will be able to deal with this point and substantiate my arguments with direct quotations from Vyasa.
இது மூன்றாவது தருணம் எனச் சொல்வதின் மூலமாக, குருக்ஷேத்திரப் போருக்கு வீரரைப் பிரிக்கும் தருணம் இது என்றறிகிறேன்... குருக்ஷேத்திரப் போருக்கு வீரரைப் பிரிக்கும் தருணம் என்றால் எதிரிப் படையில் இருக்கும் அர்ஜுனனை பிதாமகர் பீஷ்மர் எங்கனம் மகாரதன் என தரம் பிரிக்க முடியும். தனது படையில் இல்லாத ஒருவரை எப்படி தனது படைக்கான பிரிவில் தரம் பிரிக்க முடியும்.Please read this portion in context. I hope you have read the original (or a faithful word for word translation of Vyasa.) Bhishma is just answering Duryodhana, who wants to know the individual strengths and weaknesses of each warrior head of his side. When doing this, it can be considered an insult, only if Bhishma confined his remarks with Karna. Whereas, he assays the strengths and weaknesses of every, repeat, every King on the side of Duryodhana, including Acharya Drona and Aswaththaama. If the unkindly remarks of Bhishma did not affect others, and affect only Karna, how would or should one look at the particular character in question. The remarkable thing is Bhishma does not spare himself in the analysis.There are a few more things to consider in this respect:
- That Karna expects Bhishma to die. Otherwise, the vow would not read as 'I will fight on your side only after the death of Bhishma'. This in itself shows the position in which Karna had rated Bhishma.
- There is one point which is not at all mentioned in any version, or anyone's narration of this portion. Karna's final reasoning for not participating in the war ends with the fuming remark: 'Here, he is the leader. I would be shedding my blood and win the war. Whereas the glory then belongs to Bhishma as he is the leader. When I fight and win the war, why should the glory go to him?' There were numberless kings assembled in the great hall, including Drona, who was also a Guru of Karna. Why did any other warrior worth his salt, think in the lines of Karna and only Karna looked at it this way?
- The serious result of this clumsy decision was that, Karna who kept on pushing Duryodhana relentlessly into war, denied his services to the best of his friends, the helper in distress, the one who made him the king at a time of 'personal insult' (this portion also needs an elaborate discussion), DENIED HIS SERVICES TO HIS FRIEND DURYODHANA FOR TEN DAYS, IN OTHER WORDS, MORE THAN 50% OF THE TOTAL DURATION OF WAR, 18 DAYS. This very same Karna, had no difficulty in accepting the leadership of Drona and fight under him for five days. Then where is consistency or clarity of thought in Karna's decision? Number one: I push my bosom friend into war. Number two, I ditch him at a moment when my help is needed very badly, at a very critical moment. How is this to be explained?
வேண்டுமானால் பிதாமகர் அர்ஜுனனை மகாரதன் எனச் சொல்லியும் கர்ணனை அர்த்தரதன் எனச் சொல்லியும் ஒப்புமைப் படுத்தி கர்ணனை இழிவுபடுத்தி இருக்கலாம்...You have also said "குருக்ஷேத்திரப் போருக்கு வீரரைப் பிரிக்கும் தருணம் என்றால் எதிரிப் படையில் இருக்கும் அர்ஜுனனை பிதாமகர் பீஷ்மர் எங்கனம் மகாரதன் என தரம் பிரிக்க முடியும். தனது படையில் இல்லாத ஒருவரை எப்படி தனது படைக்கான பிரிவில் தரம் பிரிக்க முடியும்." in your earlier paragraph. Can you substantiate this particular point with a direct quotation from Vyasa? What does Vyasa Bharata say? When was this comparison between Arjuna and Karna made? Was it in Ratha-Athi Raha-Nirnaya Parva or some other place? If Bhishma made such a remark what action or speech of Karna led him to speak those words? Please put forward your case so that I can understand your stance more clearly.நம்மிடம் இருப்பதில் ஒப்புமைப்படுத்தும் பொழுது தரம் பிரிப்பது எனவும், நம்மிடம் இருப்பதையும் மற்றவருடன் இருப்பதையும் ஒப்பிடுகையில் அதை ஒப்புமை என்றும் சொல்வதுவுமே சரியாக இருக்கும் என நான் நினைக்கிறேன் ஐயா... தெளிவுபடுத்தவும்...This does not gel with the general body of discussion now. I am saying this not without reason. From what I can see from your questions, I am not very sure if you have read the ORIGINAL VERSION or at least a faithful translation of it in toto. Please confirm so that I can draw my explanation appropriately. Or if this is going to be an argument, get ready with my part.
ஐயா,இங்கு எனது நிலையை நான் தெளிவாகவே உரைத்து விடுகிறேன்.எனது மகாபாரத அறிவு என்பது சிறு வயது முதல் ஊரில் பாரதக் கோவிலில் செவிவழியாக கேட்ட பாகவதம் மூலமாகவும், ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர் எழுதிய மகாபாரதம் மூலமாகவும், துக்ளக் இதழில் சோ அவர்கள் எழுதிய மகாபாரதம் பேசுகிறது தொடர் வாயிலாகவும் மட்டுமே கிடைத்ததாகும். நான் வியாசர் எழுதிய மூலக் கதையை படித்தவனும் கிடையாது.முந்தைய மடலில் நான் கேட்ட கேள்விகள் ஆனது, தங்களுடைய செபடம்பர் பதினைந்தாம் தேதி வெளியான பதிவில் வந்த கீழ்கண்ட வரிகளால் என் மனதில் எழுந்த சந்தேகம் அவ்வளவே. உங்களது வாசகங்கள் உங்களுக்காக இதோ மீண்டும்...// அர்ஜுனனை மகாரதன் எனவும், கர்ணனை அர்த்தரதன் (தன்னை மட்டும் காத்துக் கொள்ள வல்லவன்; தன் தேர், சாரதி, குதிரைகளைக் கூட காத்துக்கொள்ளும் வன்மை அற்றவன்) எனவும் என்று பிதாமகர் தரம் பிரித்த காரணத்தால்//
நீங்கள் ஆங்கிலத்தில் கீழே எனக்கு அளித்துள்ள பதிலிலும், துரியோதனனுக்கு பீஷ்மர் துரியோதனன் பக்கம் இருக்கும் அனைத்து வீரர்களின் வீர பராக்கிரமங்களை எடுத்துரைப்பதாகவே சொல்லி இருக்கிறீர்கள். அப்படி ஒவ்வொருவரைப் பற்றிச் சொல்லும் பொழுது கர்ணனை அர்த்தரதனாகச் சொல்வதாகவும் சொல்கிறீர்கள். இதனை நான் சற்றும் மறுக்கவில்லை. ஏற்கிறேன்.
அடுத்த பதிலில் நான் ஏதோ அர்ஜுனனையும் கர்ணனையும் பீஷ்மர் ஒப்புமைப்படுத்தியிருக்கிறார் என எங்கோ படித்து சொல்வதைப் போலவும் அதைச் சுட்டிக் காட்டும்படியும் நீங்கள் கேட்டிருப்பதாக அறிகிறேன்.நான் சொல்ல வருவது இதுவே, நீங்கள் உங்கள் செப்டம்பர் பதினைந்தாம் தாஏதி பதிவில் அர்ஜுனனையும் கர்ணனையும் ஒப்புமைப்படுத்திப் பேசுவதாகச் சொல்லி அதனால் கர்ணன் கோபப்பட்டு பீஷ்மர் இறந்த பின்னே களம்புகுவேன் என சபதம் செய்வதாகவும் சொல்லி இருந்தீர்கள். அதனாலேயே நான் துரியொதனனின் படையில் இல்லாத ஒருவனை(அர்ஜுனனை) எதற்காக பீஷ்மர் கர்ணனுடன் ஒப்புமைப்படுத்தி பேசினார் எனக் கேட்டேன். அதே கேள்வியை நீங்கள் மீண்டும் என்னிடம் கேட்டால் நான் எங்கு செல்வேன்.எனக்கு எதுவும் தெரியாது ஐயா. அதனால் நான் ஏதும் தவறாக கேள்வி முன் வைத்திருந்தால் தயை கூர்ந்து பொறுத்தருளி எனது சந்தேகங்களை நிவர்த்தி செய்யுங்கள்...(ஒரு வேண்டுகோள். எத்தனை நாளானாலும் தமிழில் எனக்கு மறுமொழியைத் தாருங்கள். எனக்கு ஆங்கிலம் அர்த்தப்படுத்திக் கொள்வதில் நிறையச் சிக்கல்... அதனாலேயே இந்த வேண்டுகோள்...)On Sun, Sep 16, 2012 at 9:00 AM, Hari Krishnan <hari.har...@gmail.com> wrote:Yes. I have them marked up. But since the character study of Karna (or any other character for that matter) it is not to be taken up for a detailed discussion here. We can have it on another occasion. Or please wait till I return home tomorrow, when I will be able to deal with this point and substantiate my arguments with direct quotations from Vyasa.இது மூன்றாவது தருணம் எனச் சொல்வதின் மூலமாக, குருக்ஷேத்திரப் போருக்கு வீரரைப் பிரிக்கும் தருணம் இது என்றறிகிறேன்... குருக்ஷேத்திரப் போருக்கு வீரரைப் பிரிக்கும் தருணம் என்றால் எதிரிப் படையில் இருக்கும் அர்ஜுனனை பிதாமகர் பீஷ்மர் எங்கனம் மகாரதன் என தரம் பிரிக்க முடியும். தனது படையில் இல்லாத ஒருவரை எப்படி தனது படைக்கான பிரிவில் தரம் பிரிக்க முடியும்.Please read this portion in context. I hope you have read the original (or a faithful word for word translation of Vyasa.) Bhishma is just answering Duryodhana, who wants to know the individual strengths and weaknesses of each warrior head of his side. When doing this, it can be considered an insult, only if Bhishma confined his remarks with Karna. Whereas, he assays the strengths and weaknesses of every, repeat, every King on the side of Duryodhana, including Acharya Drona and Aswaththaama. If the unkindly remarks of Bhishma did not affect others, and affect only Karna, how would or should one look at the particular character in question. The remarkable thing is Bhishma does not spare himself in the analysis.There are a few more things to consider in this respect:
- That Karna expects Bhishma to die. Otherwise, the vow would not read as 'I will fight on your side only after the death of Bhishma'. This in itself shows the position in which Karna had rated Bhishma.
- There is one point which is not at all mentioned in any version, or anyone's narration of this portion. Karna's final reasoning for not participating in the war ends with the fuming remark: 'Here, he is the leader. I would be shedding my blood and win the war. Whereas the glory then belongs to Bhishma as he is the leader. When I fight and win the war, why should the glory go to him?' There were numberless kings assembled in the great hall, including Drona, who was also a Guru of Karna. Why did any other warrior worth his salt, think in the lines of Karna and only Karna looked at it this way?
- The serious result of this clumsy decision was that, Karna who kept on pushing Duryodhana relentlessly into war, denied his services to the best of his friends, the helper in distress, the one who made him the king at a time of 'personal insult' (this portion also needs an elaborate discussion), DENIED HIS SERVICES TO HIS FRIEND DURYODHANA FOR TEN DAYS, IN OTHER WORDS, MORE THAN 50% OF THE TOTAL DURATION OF WAR, 18 DAYS. This very same Karna, had no difficulty in accepting the leadership of Drona and fight under him for five days. Then where is consistency or clarity of thought in Karna's decision? Number one: I push my bosom friend into war. Number two, I ditch him at a moment when my help is needed very badly, at a very critical moment. How is this to be explained?
வேண்டுமானால் பிதாமகர் அர்ஜுனனை மகாரதன் எனச் சொல்லியும் கர்ணனை அர்த்தரதன் எனச் சொல்லியும் ஒப்புமைப் படுத்தி கர்ணனை இழிவுபடுத்தி இருக்கலாம்...You have also said "குருக்ஷேத்திரப் போருக்கு வீரரைப் பிரிக்கும் தருணம் என்றால் எதிரிப் படையில் இருக்கும் அர்ஜுனனை பிதாமகர் பீஷ்மர் எங்கனம் மகாரதன் என தரம் பிரிக்க முடியும். தனது படையில் இல்லாத ஒருவரை எப்படி தனது படைக்கான பிரிவில் தரம் பிரிக்க முடியும்." in your earlier paragraph. Can you substantiate this particular point with a direct quotation from Vyasa? What does Vyasa Bharata say? When was this comparison between Arjuna and Karna made? Was it in Ratha-Athi Raha-Nirnaya Parva or some other place? If Bhishma made such a remark what action or speech of Karna led him to speak those words? Please put forward your case so that I can understand your stance more clearly.நம்மிடம் இருப்பதில் ஒப்புமைப்படுத்தும் பொழுது தரம் பிரிப்பது எனவும், நம்மிடம் இருப்பதையும் மற்றவருடன் இருப்பதையும் ஒப்பிடுகையில் அதை ஒப்புமை என்றும் சொல்வதுவுமே சரியாக இருக்கும் என நான் நினைக்கிறேன் ஐயா... தெளிவுபடுத்தவும்...This does not gel with the general body of discussion now. I am saying this not without reason. From what I can see from your questions, I am not very sure if you have read the ORIGINAL VERSION or at least a faithful translation of it in toto. Please confirm so that I can draw my explanation appropriately. Or if this is going to be an argument, get ready with my part.
The following is from Kisari Mohan Ganguli's word for word English Translation. For the Tamil version, I need to have access to my bookshelf, which can be done only when I return home. Let me assure you that I will quote from the Sanskrit version as well of this portion.Karna's vow not to fight - Instance number 1(Mahabharata, Udyoga Parva, Chapter LXII in English)Karna's vow not to fight - Instance number 2
"Karna said, 'As long as Ganga's son liveth, O king, I shall never fight. After Bhishma is slain, I shall fight with the wielder of Gandiva[1].
[1] 23 senāpatis tv ahaṃ rājan samayenāpareṇa te
bhaviṣyāmi yathākāmaṃ tan me śrotum ihārhasi24 karṇo vā yudhyatāṃ pūrvam ahaṃ vā pṛthivīpate
spardhate hi sadātyarthaṃ sūtaputro mayā raṇe25 nāhaṃ jīvati gāṅgeye yotsye rājan kathaṃ cana
hate bhīṣme tu yotsyāmi saha gāṇḍīvadhanvanā (Mbh. Book 5, Ch. 153) Karna binds himself by this vow. And his vow presupposes the death of Bhishma. This means, he would not fight at all, if Bhishma was not killed at all. That is a pretty unwarranted situation, in the light of Duryodhana’s dependance on him.Mahabharata, Udyoga Parva, Chapter CLVII)(Footnotes are mine.)Karna's vow not to fight - Instance number 3Alone I will exterminate the army of the Pandavas! The fame, however, of such a feat will attach to Bhishma, O tiger among kings, for this Bhishma, O monarch, hath been made by thee the commander of thy forces, and the renown always attacheth to the leader and not to those that fight under him. I will not, therefore, O king, fight as long as Ganga's son liveth! After Bhishma, however, hath been laid low, I will fight with all the Maharathas of the enemy united together!'
Mahabharata, Udyoga Parva, Chapter CLXIXBhishma's opinion on Karna (Remember, this was spoken at the request of Duryodhana, who wants Bhishma's opinion on each and every warrior head on his, as well as Pandava's side)
"Bhishma said, 'Both the brothers Achala and Vrisha are Rathas. Invincible (in battle) they will slay thy foes. Endued with great strength, those tigers among men, those foremost of Gandharvas, are firm in wrath. Young and handsome, they are possessed of great strength. As regards this thy ever dear friend, this one who is always boastful of his skill in battle, this one who always urgeth thee, O king, to fight with the Pandavas, this vile braggart, Karna, the son of Surya, this one who is thy counsellor, guide, and friend, this vain wight who is destitute of sense, this Karna, is neither a Ratha nor an Atiratha. Without sense, this one hath been deprived of his natural coat of mail. Always kind, he hath also been deprived of his celestial ear-rings. In consequence of the curse of Rama (his preceptor in arms) as also of the words of a Brahmana (who cursed him on another occasion), owing also to his deprivation of the accoutrements of battle, he, in my judgment, is only half a Ratha. Having approached Falguni (in battle), he will not certainly escape with life!' Hearing this, Drona, that foremost of all wielders of weapons, said, 'It is even so as thou hast said. That is not untrue! He boasteth on the eve of every battle, but yet he is seen to retreat from every engagement. Kind (out of season) and blundering, it is for this that Karna, in my judgment, is only half a Ratha!' [1]
[1] 4 paruṣaḥ katthano nīcaḥ karṇo vaikartanas tava
mantrī netā ca bandhuś ca mānī cātyantam ucchritaḥ5 eṣa naiva rathaḥ pūrṇo nāpy evātiratho nṛpa
viyuktaḥ kavacenaiṣa sahajena vicetanaḥ
kuṇḍalābhyāṃ ca divyābhyāṃ viyuktaḥ satataṃ dhṛṇī6 abhiśāpāc ca rāmasya brāhmaṇasya ca bhāṣaṇāt
karaṇānāṃ viyogāc ca tena me 'rdharatho mataḥ
naiṣa phalgunam āsādya punar jīvan vimokṣyate7 7 [s]
tato 'bravīn mahābāhur droṇaḥ śastrabhṛtāṃ varaḥ
evam etad yathāttha tvaṃ na mithyāstīti kiṃ cana8 raṇe raṇe 'timānī ca vimukhaś caiva dṛśyate
ghṛṇī karṇaḥ pramādī ca tena me 'rdharatho mataḥ (Mbh. Book 5, Ch. 165) That Karna was an Ardha Ratha was affirmed and acknowledged by Drona as well.Mahabharata, Udyoga Parva, Chapter CLXIXTherefore, it was just not the opinion of Bhishma. It was acknowledged and affirmed by Drona as well, who was the first Guru of Karna.Karna's reason for abstaining from war till Bhishma's death:Alone I will exterminate the army of the Pandavas! The fame, however, of such a feat will attach to Bhishma, O tiger among kings, for this Bhishma, O monarch, hath been made by thee the commander of thy forces, and the renown always attacheth to the leader and not to those that fight under him. I will not, therefore, O king, fight as long as Ganga's son liveth! After Bhishma, however, hath been laid low, I will fight with all the Maharathas of the enemy united together!'
Mahabharata, Udyoga Parva, Chapter CLXIX(the URL is the same as the above)Read the marked text in green colour.Bhishma's view on Aswathama:6 krodhas tejaś ca tapasā saṃbhṛto ''śramavāsinā
droṇenānugṛhītaś ca divyair astrair udāradhīḥ7 doṣas tv asya mahān eko yenaiṣa bharatarṣabha
na me ratho nātiratho mataḥ pārthiva sattamaMahabharata, Udyoga Parva, Chapter CLXVIIIIn his opinion, Aswathama was alos not either a Ratha or Maharatha. But that does not make Aswathama react in the way Karna did! Why? What is your opinon on this?Since it is already too much, I am not for the present posting the views of Bhishma on Drona. In case it is considered very essential, yes, I am game.
--
இனியொரு விதி செய்வோம்
துரை.ந.உ --
மிக உதவிகரமான விளக்கங்கள். பாண்டவர்களும் கெளரவர்களே என்பது, புதிய செய்தி.
பாண்டுவின் பிள்ளைகள் பாண்டவர்கள் என அழைக்கப்பெற்ற போது, திருதராஷ்டிரன் பிள்ளைகள் மட்டும் ஏன் கெளரவர்கள் என அழைக்கப்பெற்றார்கள்? அவர்களைத் திருதராஷ்டிரர்கள் என அழைத்திருக்கலாமே.
பூருவின் வழியில் பரதன் வந்தான். பரதனின் மகன் குருவோ, தன் பெயரில் ஒரு வம்சத்தைக் கொண்டுள்ளான். இங்கே தந்தை ஒரு வம்சமாகவும் மகன் வேறு வம்சமாகவும் இருக்கிறான். இது, தன் பெயரில் ஆண்டுக் கணக்கைத் தொடங்குவது போல், செல்வாக்கைக் காட்டும் சமாச்சாரமா?
இது, தன் பெயரில் ஆண்டுக் கணக்கைத் தொடங்குவது போல், செல்வாக்கைக் காட்டும் சமாச்சாரமா?
/பெளரவ வம்சத்தில் வந்தவர்கள்தாம் துஷ்யந்தன், பரதன் போன்ற மாமன்னர்கள். இந்த வம்சத்தில்தான் பரதனுக்குப் பிள்ளையாக குரு (Kuru) தோன்றினான். /இந்த அடிப்படையிலேயே கேட்டேன்.
ஐயா,சோரனவ் வெதுகுலத்தான் என இங்கு குறிப்பிடப்படுபவர் யார்... தருமரா...சொல்லும் சூழ்ச்சியும் என தருமர் செய்த எச்செயலைக் குறிப்பிடுகிறார்...
2012/9/21 Anna Kannan <annak...@gmail.com>
குரு வம்சத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் கௌரவர்கள். உச்சரிப்பு: Kaurava. Gaurava இல்லை. யயாதியின் ஐந்தாவது மகனான புருவுக்கு அரசு கிடைத்ததால் முதலில் பௌரவ வம்சம் என்றறியப்பட்டது. யயாதிக்கும் சர்மிஷ்டைக்கும் பிறந்தவன் புரு. சர்மிஷ்டை, யயாதியின் இரண்டாவது மனைவி. தேவயானி-சர்மிஷ்டை கதை தெரிந்திருக்கும்.
பென்
--------------------------------------------------------------------------------------------------------------------
K.Penneswaran, Editor, VADAKKU VAASAL - Tamil Monthly Magazine,
5A/11032, Second Floor, Gali No.9, Sat Nagar, Karol Bagh, New Delhi-110 005
Phone: 99100318 # http://www.vadakkuvaasal.com
http://www.kpenneswaran.com
2012/9/22 Hari Krishnan <hari.har...@gmail.com>:
> --
>
>
எனக்கு எதுவும் தெரியாது ஐயா. அதனால் நான் ஏதும் தவறாக கேள்வி முன் வைத்திருந்தால் தயை கூர்ந்து பொறுத்தருளி எனது சந்தேகங்களை நிவர்த்தி செய்யுங்கள்...(ஒரு வேண்டுகோள். எத்தனை நாளானாலும் தமிழில் எனக்கு மறுமொழியைத் தாருங்கள். எனக்கு ஆங்கிலம் அர்த்தப்படுத்திக் கொள்வதில் நிறையச் சிக்கல்... அதனாலேயே இந்த வேண்டுகோள்...)
--
இந்த இழையில் மட்டும் இவற்றைத் தொக்கி விடாமல் தயவு செய்து இவற்றைத் தொகுத்து வைக்க வேண்டும் நீங்கள்.
இவ்வளவு அருமையான விஷயங்கள் எங்கே கிடைக்கின்றன இப்போது. தயவு செய்து இவற்றுக்கு எப்படியாவது நூல் வடிவம் கொடுக்க முயற்சி செய்யுங்கள்.
இறைவன் எனக்கு தேவையான பொருளாதார வசதி அளிததிருந்தால் எவ்விதத் தயக்கமும் இன்றி, மிகவும் பெருமையுடன் உங்கள் இழைகளை நூலாக்கி மகிழ்ந்திருப்பேன்.நெகிழ்வுடன்
ஹரிகி சார்ரங்கனுக்கும் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.உங்களுக்கும் ஒரு தாழ்மையான வேண்டுகோள்.இந்த இழையில் மட்டும் இவற்றைத் தொக்கி விடாமல் தயவு செய்து இவற்றைத் தொகுத்து வைக்க வேண்டும் நீங்கள்.இவ்வளவு அருமையான விஷயங்கள் எங்கே கிடைக்கின்றன இப்போது. தயவு செய்து இவற்றுக்கு எப்படியாவது நூல் வடிவம் கொடுக்க முயற்சி செய்யுங்கள்.இறைவன் எனக்கு தேவையான பொருளாதார வசதி அளிததிருந்தால் எவ்விதத் தயக்கமும் இன்றி, மிகவும் பெருமையுடன் உங்கள் இழைகளை நூலாக்கி மகிழ்ந்திருப்பேன்.நெகிழ்வுடன்பென்
--------------------------------------------------------------------------------------------------------------------
K.Penneswaran, Editor, VADAKKU VAASAL - Tamil Monthly Magazine,
5A/11032, Second Floor, Gali No.9, Sat Nagar, Karol Bagh, New Delhi-110 005
Phone: 9910031958 # http://www.vadakkuvaasal.com
http://www.kpenneswaran.com
அச்சுப் புத்தகம் ஆகும்வரை, வடக்குவாசல் இணைய இதழ், வல்லமை போன்றவற்றில்
தொகுக்கலாம். அச்சுப் புத்தகம் தமிழ்நாட்டில் சில ஆண்டுகளில் கிடைப்பது அரிதாகிவிடும்.
ஆனால் வல்லமை கூகுள்குழுவின் பதிவுகள் என்றும் இருக்கும். இனி எதிர்காலம்
தமிழுக்கு இணையம் தான். ஆனால், மின்வெட்டும், இணைய வசதியும்
தமிழ் போன்ற இந்திய மொழிகளுக்கு இந்தியாவில் பெருகவில்லை என்பதும்
உண்மையே.
நா. கணேசன்
University of Cologne Monier Williams Sanskrit-English Dictionary
(2008 revision) Brown University
(H1B) कदली [L=42878] f. the plantain tree
(H1B) कदली [L=42879] f. **a kind of deer** (the hide of which is used
as a seat) MBh. Sus3r.
(H1B) कदली [L=42880] f. a flag , banner , flag carried by an elephant
L.
http://www.sanskrit-lexicon.uni-koeln.de/monier/
dev
> Mahabharata Unique Noun Listhttp://ancientvoice.wikidot.com/mbh-unique-noun-list-k(See: ID No.4054)
> excellent textures. (Sabha Parva, Chapter XLVIIIhttp://www.sacred-texts.com/hin/m02/m02048.htm)
'நான்ற வாயும் நாலிரு புயமும் மூன்று முக்கண்ணும் மும்மதச் சுவடும்,' என்று ஒளவையின் விநாயகர் அகவல் பாடுகிறது.
Follow my blogs on http://tnelango.blogspot.com/
கதலி: இந்தச் சொல்லை பாரதி எங்கிருந்து பிடித்தான் என்பதே வியப்புக்குரிய ஒன்று.
மன்னிக்கவும்.. மூன்று கண்ணும்...என்றிருந்திருக்க வேண்டுமோ? டைப்போ?
--