ஷைலஜா!பஞ்சரம் என்றால் கூண்டுதான்.. வடமொழிச் சொல்.இத்தகைய கூடைகள் இரவில் கோழி அடைத்து வைப்பதற்குப் பயன்படுத்துகிறார்கள்.பஞ்சரம்லோ சிலக (கூண்டுக்கிளி), பங்காரு பஞ்சரம் (தங்கக் கூண்டு)என்றெல்லாம் சினிமாக்கள் பார்த்ததாக ஞாபகம்.
அன்புடன்திவாகர்
2014-07-09 12:34 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:பஞ்சாரம் எல்லாமொழிகளிலும் இருக்கு பாருங்க கூண்டு என்பதான பொருளில் கூடை தானே அது ?கூண்டுமாதிரி இருப்பதால் அந்தப்பேரா திவாகர் மாதிரி தெலுங்குதெரிஞ்சவங்க சொல்லலாம்--
On 8 July 2014 23:47, நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com> wrote:ஆந்திரா பாமிடி என்ற ஊரில் பார்த்தது .
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
அன்புடன்ஷைலஜா.நல்ல குணங்களே நம்மிடை யமரர்பதங்களாம். கண்டீர்! பாரிடை மக்களே!....பாரதி......--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
On Wednesday, July 9, 2014 2:24:07 AM UTC-7, dhivakar wrote:ஷைலஜா!பஞ்சரம் என்றால் கூண்டுதான்.. வடமொழிச் சொல்.இத்தகைய கூடைகள் இரவில் கோழி அடைத்து வைப்பதற்குப் பயன்படுத்துகிறார்கள்.பஞ்சரம்லோ சிலக (கூண்டுக்கிளி), பங்காரு பஞ்சரம் (தங்கக் கூண்டு)என்றெல்லாம் சினிமாக்கள் பார்த்ததாக ஞாபகம்.காளைராசன் இழையைப் பார்த்ததும், சோழப் பேரரசன் மீது பாடிய ஓசைநயமும், சொல்நயமும் மிகப் பெற்றபாடல் நினைவுக்கு வந்தது. தமிழ்.நெட் காலத்தில் இணையத்துக்கு அனுப்பினேன். மீண்டும் வாசிக்கலாம்.வடவைக் கனலைப் பிழிந்தெடுத்து
..மற்றும் ஒருகால் வடித்தெடுத்து
...வாடைத் துருத்தி வைத்தூதி
....மறுகக் காய்ச்சிக் குழம்புசெய்து
புடவிக் கயவர் தமைப்பாடிப்
..பரிசுபெறாமல் திரும்பிவரும்
...புலவர் மனம்போல் சுடுநெருப்பைப்
....புழுகென் றிறைத்தால் பொறுப்பாளோ?
அடவிக் கதலிப் பசுங்குருத்தை
..நச்சுக் குழலென் றஞ்சியஞ்சி
...அஞ்சொற் கிளிகள் பஞ்சரம்விட்
....டகலா நிற்கும் அகளங்கா
திடமுக் கடவா ரணமுகைத்த
..தேவே! சோழ சிங்கமே!
...திக்கு விசயம் செலுத்தியொரு
....செங்கோல் நடாத்தும் எங்கோவே!
By முனைவர் ந.முருகேசன்
First Published : 11 March 2012 12:35 AM IST
கவிஞர்களில் சிலர், தங்கள் கவிதைகளால் அற்புதங்கள் நிகழ்த்தும் ஆற்றல் மிக்கவர்கள் என்றும், சொன்னது பலிக்கும் வாக்குப் பலிதம் உடையவர்கள் என்றும், ஒரு காலத்தில் மக்கள் நம்பினர். புலவர்கள், கவிஞர்களின் ஆற்றல்களில் ஒன்று "கண்டசுத்தி'.
÷கண்டசுத்தி என்பது, ஒருவர் மனதில் எண்ணியதை, மற்றவர் தம் மனதால் கண்டுணர்ந்துப் பாடுவதாகும். "கண்ட சுத்தி' என்பதை, "கண்ட சித்தி' என்றும் கூறுவர். தனிப்பாடல் திரட்டு, அபிதான சிந்தாமணி முதலியவற்றில் இதுபற்றி அறியமுடிகிறது.
÷அபிதான சிந்தாமணியில், (அந்தகக்) கவி வீரராகவ முதலியார், கண்ட சுத்தி பாடுவதில் வல்லவர் என்றும், ஈழ நாட்டில் பாடி, தம் திறமையைக் காட்டிப் பரிசு பெற்றார் என்றும் குறிப்பு உள்ளது. பிறவியிலேயே கண் பார்வை இல்லாதவராக இருந்தும், இறையருளால் கவிபாடும் ஆற்றல் பெற்றுத் திகழ்ந்தவர் அவர். கண்பார்வையற்ற கவிஞர் என்பதைக் குறிப்பால் உணர்த்த, "அந்தகக் கவி' (அந்தகன்-கண்ணில்லாதவன்) என்றனர். 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அவர், சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ், சேயூர் கலம்பகம், திருவாரூர் உலா முதலிய நூல்களைப் பாடியுள்ளார். சீட்டுக் கவி பாடுவதிலும், நகைச்சுவையோடு கவிதை புனைவதிலும் வல்லவர். ""ஏடாயிரம் கோடி எழுதாது தன் மனத்து எழுதிப் படித்த விரகன்'' என்று தம்மை அறிமுகப்படுத்திக்கொண்ட பெரும் புலவர் அவர்.
÷அவர் பாடிப் பரிசுபெறும் பொருட்டு ஈழ நாட்டுக்கு ஒருமுறை சென்றார். அப்போது அந்நாட்டை ஆண்ட மன்னன் ஒருநாள், சோலை சென்று உலாவியபோது கிளிகள் சில, ஒரு மரத்தில் இருந்த கூட்டில் இருந்து வெளியே வருவதும், பறந்து செல்லாமல் மீண்டும் கூட்டுக்குள் போவதுமாக இருப்பதைக்கண்டு காரணம் புரியாமல் மயங்கினான். கண்ட சுத்தியால், தன் மனதில் உள்ளதைப் புலப்படுத்துமாறு தன் அவைக்களப் புலவர்களிடம் கூறினான். அரசன் உள்ளத்தில் உள்ளதைக் கண்டுணர்ந்து பாடமுடியாத அவைக்களப் புலவர்கள், கண்டசுத்தி பாடுவதில் கவி வீரராகவ முதலியார் வல்லவர் என்று கூறி, அவரை மன்னனிடம் அழைத்துச் சென்றனர். அங்கு சென்ற கவி வீரராகவர், ""வடவைக் கனலை'' எனத் தொடங்கும் பாடலைப் பாடினார். அதில்,
""அடவிக் கதலிப் பசுங்குருத்தை
நஞ்சுக் குழல்என்று அஞ்சியஞ்சி÷
அஞ்சொற் கிளிகள் பஞ்சரம்விட்டு
அகலா நிற்கும் அகளங்கா!''
என்ற வரிகளால், அரசன் மனதிலுள்ள சந்தேகத்தைத் தெளிவுபடுத்தினார்.
÷கிளிகள் மரத்தில் கூடுகட்டி வாழ்கின்றன. அம் மரத்தின் அருகே வாழை மரம் ஒன்று உள்ளது. அவ் வாழை மரத்தின் பசுங்குருத்து, கிளிகள் இருந்த கூட்டின் பக்கத்தே அசைந்து கொண்டு இருந்தது. கூட்டில் இருந்த கிளிகளுக்கு, அப் பசுங்குருத்து பாம்பாகத் தெரிந்தது. அதனால் கூட்டை விட்டு வெளியே வந்த கிளிகள், அஞ்சிக் கூட்டுக்குள் சென்றன. பாம்பு போயிருக்கும் என்று நினைத்து, மீண்டும் கூட்டை விட்டு வெளியே வந்த கிளிகள், மறுபடியும் பசுங் குருத்தைப் பாம்பாக நினைத்து மயங்கி, அது (பாம்பு) போகவில்லை என்று எண்ணி மீண்டும் கூட்டுக்குள் சென்றன. அப்பாடலுக்கான பொருள் இதுதான். கவி வீரராகவரின் பாடலைக் கேட்டு மனம் மகிழ்ந்த மன்னன் ஏராளமான பரிசுகளைக் கவிஞருக்கு வழங்கி கெüரவப்படுத்தினான். இதனால் கவி வீரராகவரின் புகழ் திக்கெட்டும் பரவியது.
÷ஈழத்து அரசன் பரராசசிங்கம், பரராசசிங்கத்தின் துணைவியார், கச்சியப்பர், கயத்தாற்று மன்னன் முதலியோர் கவி வீரராகவரைப் புகழ்ந்து பாடியுள்ளனர். அவர்களின் பாடல்களைத் தனிப்பாடல் திரட்டில் காணலாம். ""கவி வீரராகவன் பாடிய நற் கவியே கவி'' என்ற பரராசசிங்கத்தின் பாராட்டும், ""போத வழகன் கவி வீரராகவன் போற்றுகவி ஓதையைக் கேட்டுக் கொண்டாடாத பேரில்லை'' என்ற பரராசசிங்கத்தின் துணைவியார் புகழுரையும் என்றும் நினைவுகூரத்தக்கவை.
http://www.dinamani.com/weekly_supplements/tamil_mani/article888288.ece
very nice sharings
2014-07-09 20:15 GMT+05:30 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>:
'பங்காரு பஞ்சரம்' என்ற தலைப்பில் 500 சொற்களில் ஒரு கட்டுரை அமைக்கவும். தேமொழி முதலில் எழுதுவார்.இ
இன்னம்பூரான்
--Dr.R.ChandramohanPrincipalSree Sevugan Annamalai College,Devakottai-630 303,Tamilnadu State,India
பஞ்சாய்க் கோரை எனப்படும் ஒருவகைப் புல் உண்டு. சங்க இலக்கியங்கள் இதைப்பற்றிக் கூறுகின்றன. இது இருஞ்சாய் என்றும் அழைக்கப்படுகிறது. எனவே இது கெட்டியான தண்டுடையதாக இருந்திருக்கலாம். இதனைக் குறுக்கும் நெடுக்குமாகப் பின்னிச் செய்தது பஞ்சாரம் எனப்பட்டது எனலாம். பின் நாட்களில் கோரைக்குப் பதிலாக சீவப்பட்ட மூங்கில் பயன்படுத்தப்பட்டிருக்க்லாம்.ப.பாண்டியராஜா
ஐயா, அருமையானவிளக்கந்தந்தீர்கள்!
"போறாளே பொன்னுத்தாயி பொலபொலனென்று கண்ணீர்விட்ட'" என்றபாடலில்வரும் 'பஞ்சாரத்து கூட்டவிட்டு' என்றவரிகளிலேதான் இந்த சொல்லை முதன்முதலாக கேட்டிருக்கிறேன்.
On Thursday, July 10, 2014 7:05:06 AM UTC+5:30, N. Ganesan wrote:
On Wednesday, July 9, 2014 9:58:31 AM UTC-7, rathinam.chandramohan wrote:very nice sharingsநன்றி, திரு. சந்திரமோகன், இ ஸார்.முதலில் பஞ்சரம் என்ற சொல்லின் வரலாற்றைச் சற்றுப் பார்ப்போம். பருத்தி (cotton balls) பருமை காரணமாகபருமை > பன்னல் என்றழைக்கப்பட்டது. இதில் கொட்டை நீக்கி பஞ்சாக்குவதைப் பன்னுதல் (= பின்னுதல்) என்கிறோம்.பருநலின் விதை நீக்கினால் பஞ்சு என்கிறோம். இந்தியா முழுதும் இப்பெயர்கள் உண்டு, தங்குவது தஞ்சம்,மிகுவது/மிங்குவது மிஞ்சு, மங்கல் வெயில் மஞ்சள் (நிறப்பெயர்), வங்கு (வளைந்திருப்பது) வஞ்சி (கொடி), போலபருத்தியும் விதையும் பங்கினால்(பிரித்தால்) விளைவு பஞ்சு. துணி நெய்யும் போது பாவும் ஊடுமாக நெய்கின்றனர்.இது இந்தியாவில் 7000 வருஷமாய் நடக்கிறது. உலகில் பருநல் (பருத்தி) முதலில் பயிரிட்டோர் சிந்துவெளி மக்களே.துணி பஞ்சில் நெய்வதுபோல, குறுக்கும் நெடுக்குமான மூங்கில் தப்பைகளால் முடையும் கூடு பஞ்சரம் எனப்படுகிறது.இது தமிழ்ச்சொல் தான், இந்தியாவில் எல்லா மொழிகளிலும் உண்டு. பஞ்சர, உடும்பர, தம்புர (மீராபாய் வைத்திருக்கும் தம்பூரா),நாரஹர் போல தும்புரு (முனி) - சொல்லின் இறுதியில் -ர சேர்வதைப் பார்க்கலாம்.நா. கணேசன்
///இத் தனிப்பாடல்பாடும் சோழ மகாராஜா யார்? - என்றறிய மு. அருணாசலத்தின் தமிழ் இலக்கிய வரலாறு காண்க///"அகளங்கா" என்பவர் யார்? யாரிந்தக் களங்கமற்றவர்?
| 53 56 |
|
வரிகள் 53 - 56 : பூதலங்கள் .............பெருமான் தரும் புதல்வன் சொற்பொருள் : பூமிபாரத்தைச் சுமந்த சிறந்த புயங்களையுடைய அகளங்கன் என்ற பட்டம் பெற்றவன்; பகைவர் விரும்பிய கோட்டைகளிற் போர் புரிந்து களவேள்வி செய்து கலிங்கப் போரில் ஆயிரம் யானைகளைக் கொன்று அவ் வெற்றி குறித்துப் பாடிய கலிங்கப் பெரும்பரணியாகிய நூலை யேற்றுக் கொண்ட வேந்தன் ஆகிய விக்கிரம சோழ தேவன் பெற்ற மைந்தன். |
"அகளங்கர் என்னும் ஜைனர், காஞ்சீபுரத்தில் உள்ள காமக்கோட்டத்தில், பௌத்தருடன் சமயவாதம் செய்து அவரைத் தோற்பித்துச் சிங்கள நாட்டிற்குத் துரத்திவிட்டார் என்னும் செய்தி பலர் அறிந்ததொன்றே." <<< இவரா திரு. கணேசன்?
பஞ்சாய்க் கோரை எனப்படும் ஒருவகைப் புல் உண்டு. சங்க இலக்கியங்கள் இதைப்பற்றிக் கூறுகின்றன. இது இருஞ்சாய் என்றும் அழைக்கப்படுகிறது. எனவே இது கெட்டியான தண்டுடையதாக இருந்திருக்கலாம். இதனைக் குறுக்கும் நெடுக்குமாகப் பின்னிச் செய்தது பஞ்சாரம் எனப்பட்டது எனலாம். பின் நாட்களில் கோரைக்குப் பதிலாக சீவப்பட்ட மூங்கில் பயன்படுத்தப்பட்டிருக்க்லாம்.ப.பாண்டியராஜா
ஐயா, அருமையானவிளக்கந்தந்தீர்கள்!
"போறாளே பொன்னுத்தாயி பொலபொலனென்று கண்ணீர்விட்ட'" என்றபாடலில்வரும் 'பஞ்சாரத்து கூட்டவிட்டு' என்றவரிகளிலேதான் இந்த சொல்லை முதன்முதலாக கேட்டிருக்கிறேன்.
பஞ்சாய்க் கோரை எனப்படும் ஒருவகைப் புல் உண்டு. சங்க இலக்கியங்கள் இதைப்பற்றிக் கூறுகின்றன. இது இருஞ்சாய் என்றும் அழைக்கப்படுகிறது. எனவே இது கெட்டியான தண்டுடையதாக இருந்திருக்கலாம். இதனைக் குறுக்கும் நெடுக்குமாகப் பின்னிச் செய்தது பஞ்சாரம் எனப்பட்டது எனலாம். பின் நாட்களில் கோரைக்குப் பதிலாக சீவப்பட்ட மூங்கில் பயன்படுத்தப்பட்டிருக்க்லாம்.ப.பாண்டியராஜா
On Thursday, July 10, 2014 7:05:06 AM UTC+5:30, N. Ganesan wrote:
1940-களில் நகர்ப்புற நாகரிகம் எட்டிப்பார்க்காத, பேருந்து போக்குவரத்து இல்லாத, எப்போதாவது கரி அடுப்பில் ஓடும் லாரிகள் மட்டும் வந்துபோகும் ஒரு மிகச் சிறிய கிராமத்தில் மாலை ஆறு மணிவாக்கில் முற்றத்தில் பஞ்சாரத்தைக் கவிழ்த்து, ஒரு பக்கத்தை மட்டும் சிறிது உயர்த்தி "ba, ba, ba" என்று அழைத்தால் தாய்க்கோழி தயங்கித் தயங்கி முன்னே வர,குட்டிக்குஞ்சுகள் குடுகுடுவென்று பின்னே ஓடிவந்து கூடைக்குள் அடையப் பஞ்சாரத்தைக் கவிழ்த்து உச்சியில் சாக்கைப்போட்டு மூடிவைத்திருக்கிறேன். பஞ்சரம் என்பது இலக்கிய வழக்காக இருக்கலாம். நாம் இப்பொழுது சும்மாடு என்று சொலவது சங்க இலக்கியத்தில் சுமடு எனப்படுகிறது. இதைப் போன்று இதுவும் இருக்கலாம். வேறு தென்னிந்திய மொழிகளிலும் இது காணப்படுவதால் இது தமிழ்ச் சொல் என்பதற்கு வாய்ப்புகள் மிகுதி. எங்கள் ஊரில் அப்போது 'சாவி' கிடையாது - தொறக்குச்சி-தான் (திறவுக் குச்சி) 'மண்ணெண்ணெய்' கிடையாது - சீமத்தண்ணி-தான். 'தாழ்ப்பாள்' கூடக் கிடையாது - நாதாங்கி-தான். அந்த ஊரில் வடசொல் வந்திருப்பதற்கு வாய்ப்புகள் குறைவு.
ப.பாண்டியராஜா
--
திரு பாண்டியராஜா அவர்களேஇப்பொழுதுதான் எனக்கு நினைவிற்கு வருகின்றது, மலாய் மொழியில் 'penjara' என்றோர் சொல் இருக்கின்றது, இது 'சிறை' என்ற பொருளது, penjarakan" என்றால் சிறையில் அடைத்தல் . இங்கு 'கான்' என்பது துணை வினை - 'செய்' எனபதுபோல்.தமிழிலிருந்து சென்றிருக்கலாம். பல தமிழ் சொற்கள் பழங்காலத்திலேயே மலாய் மொழியில் உண்டு. மேலும் இரவல் அல்லாத மூலமே தமிழைப் போன்ற பல சொற்கள் அங்கும் உண்டு.உலகன்
2014-07-11 22:58 GMT+08:00 Pandiyaraja <pipi...@gmail.com>:1940-களில் நகர்ப்புற நாகரிகம் எட்டிப்பார்க்காத, பேருந்து போக்குவரத்து இல்லாத, எப்போதாவது கரி அடுப்பில் ஓடும் லாரிகள் மட்டும் வந்துபோகும் ஒரு மிகச் சிறிய கிராமத்தில் மாலை ஆறு மணிவாக்கில் முற்றத்தில் பஞ்சாரத்தைக் கவிழ்த்து, ஒரு பக்கத்தை மட்டும் சிறிது உயர்த்தி "ba, ba, ba" என்று அழைத்தால் தாய்க்கோழி தயங்கித் தயங்கி முன்னே வர,குட்டிக்குஞ்சுகள் குடுகுடுவென்று பின்னே ஓடிவந்து கூடைக்குள் அடையப் பஞ்சாரத்தைக் கவிழ்த்து உச்சியில் சாக்கைப்போட்டு மூடிவைத்திருக்கிறேன். பஞ்சரம் என்பது இலக்கிய வழக்காக இருக்கலாம். நாம் இப்பொழுது சும்மாடு என்று சொலவது சங்க இலக்கியத்தில் சுமடு எனப்படுகிறது. இதைப் போன்று இதுவும் இருக்கலாம். வேறு தென்னிந்திய மொழிகளிலும் இது காணப்படுவதால் இது தமிழ்ச் சொல் என்பதற்கு வாய்ப்புகள் மிகுதி. எங்கள் ஊரில் அப்போது 'சாவி' கிடையாது - தொறக்குச்சி-தான் (திறவுக் குச்சி) 'மண்ணெண்ணெய்' கிடையாது - சீமத்தண்ணி-தான். 'தாழ்ப்பாள்' கூடக் கிடையாது - நாதாங்கி-தான். அந்த ஊரில் வடசொல் வந்திருப்பதற்கு வாய்ப்புகள் குறைவு.ப.பாண்டியராஜா
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
நானும் பாரதிராஜா படத்தின் மூலம்தான் முதன்முதல் 'பஞ்சாரம்" என்ற சொல்லைக் கேள்விப்பட்டேன்...முதல் மரியாதையில்...மதுரைப் பக்கத்து வழக்கமாக இருக்கலாம்.
On Friday, 11 July 2014 07:58:12 UTC-7, Pandiyaraja wrote:
அப்போது 'சாவி' கிடையாது - தொறக்குச்சி-தான் (திறவுக் குச்சி)
'தாழ்ப்பாள்' கூடக் கிடையாது - நாதாங்கி-தான்.