K. Loganathan
unread,Jul 1, 2013, 4:27:43 AM7/1/13Sign in to reply to author
Sign in to forward
You do not have permission to delete messages in this group
Either email addresses are anonymous for this group or you need the view member email addresses permission to view the original message
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com
அன்பர்களே
சுமேருத் தமிழ் ஆய்வு இன்னும் வேண்டிய அளவிற்கு பரவவில்லை. எனினும் அது பரவும் போது தமிழ் மொழியின் தோற்றத்தையும் அதன் வரளர்சியையும் செவ்வே காணமுடியும் என்று நம்புகின்றேன்
இங்கு 'சூத்திரன்' என்ற சொல்லைப் பற்றி ஓர் கருத்து. இச்சொல் sud-ra என்று பயில்கின்றது.
காண்க
The NeRi of Suruppak ( c.3000 BC)
1. [u]ri-a u sud-ra ri-a ( In those distant days, in those far remote days)
ஊ எரிய ஊ சூத்திர எரிய
uu eriya uu cuuttira eriya
2. gi ri-a gi bad-du ri-a ( In those nights, in those far-away nights)
மை அரிய மை பண்டு அரிய
mai ariya mai paNdu ariya
3. mu ri-a mu sud-ra ri-a ( In those years, in those far remote years)
மூஉ அரிய மூஉ சூத்திர அரிய
mUu ariya mUu cuuttra ariya
>>
இங்கு சூத்திர என்ற சொல், தொன்மை தொலைவு தூரம் மிக
உயர்ந்த(உச்சியில்) என்றெல்லாம் பொருள்படுகின்றது.
ziu-sudra என்ற சொல் அக்காடிய மொழியில் நாபிஷ்து என்று மொழி
பெயர்க்கப்பட்டு பிறகு அதுவே அரபி மொழியில் நூ நபி என்றாகி உள்ளது,
தேவாரத்தில் வரும் தோணி அப்பர் இவராக இருக்கலாம்
ஆனால இந்த சொல்லின் பொருள் இதனால நீண்ட் ஆயுள் உடையவர். நெடுங்காலம் வாழ்ந்தவர் என்றெல்லாம் பொருள்படும். தொன்மை என்ற கருத்தும் அடங்கும். ஆக சூத்திரர் என்றால தொன்மையானவர் பழங்குடி மக்கள் ஏற்கனவே வாழ்ந்தவர்கள் என்றெல்லாம் பொருள்பட இடனுண்டு என்று தெரிகின்றது
சுமேருத் தமிழர்களிடையே சாதி பிரிவுகள் இருந்ததாகத் தெரியவில்லை.
ஆயினும் இது உண்மையென்றால் 'சூத்திரன்' என்ற சொல் தமிழே என்றாகின்றது
உலகன்
2013/7/1 Geetha Sambasivam
<geetha...@gmail.com>
அருமையான கருத்து ஐயா, தலை வணங்குகிறேன்.
//பின்னர் வந்த மேலைநாட்டு ஆய்வாளர்கள் இந்தப் பிரிவுகளை ஜாதி என்ற பெயரில் அழைக்க அதுவே ஜாதிய அடிப்படையிலானது இந்தியக் குமுகம் என்று நிலை பெற்றுவிட்டது//
இதைத் தான் நானும் பல முறை சொல்லி இருக்கிறேன். இனியும் சொல்லி வருவேன்.
//தென் இந்தியாவில் பழந்தமிழகத்தில் குமுகப் பிரிவுகள் செய்யும் தொழிலின் அடிப்படையில் அமைந்திருந்தது பிறப்பால் அமைந்ததல்ல//
மிக மிக உண்மையானது. இப்படித் தொழிலின் அடிப்படையில் அமைந்திருந்தவற்றை ஒழித்ததின் மூலம் அந்தத் தொழில்களே அடியோடு ஒழிக்கப்பட்டன என்பதும் கொடுமையானதொரு உண்மை.
//ஒரு குமுகத்தின் வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாதது மனித சேவையும் அது தொடர்பான சேவையுமே//
ஆம்,
//குமுகத்தின் அன்றாட நடைமுறை வாழ்வைச் சீரமைக்கவும் செயல்படுத்தவும் மனித சேவையில் ஈடுபடும் பல பிரிவுகள் குமுகத்துக்குத் தேவை//
உண்மை.
//வாழ்வியல் மரபில் பொருளாதாரத்தில் உயர்வுபெற்ற குமுகத்தில் மனித சேவை செய்பவர்கள் அதிகம் தேவைப்படுவர்//
இன்று அத்தகைய சேவை செய்பவர்களைத் தேடிப்பிடிக்க வேண்டும். எத்தகைய சேவையாக இருந்தாலும்! :(
//பொருளாதார மேம்பாட்டுக்கு அடிப்படையாகக் குடும்பம் இருந்ததால் சேவை பற்றிய அறிவும் திறனும் குடும்ப வழியில் பெற்றோரிடமிருந்து குழந்தைகளுக்குச் சென்றது. இதுவே பின்னாளில் பிறப்பால் அமைவது தொழில் என்று திரிந்தது//
ஆஹா, எத்தனை எளிமையாக மிக உயர்ந்ததொரு கருத்தைச் சொல்லி விட்டீர்கள்!
//ஆடவருக்கு நான்குவகை வர்ணங்கள் இருந்தபோது பெண்டிருக்கு இந்த நாலவகைக் குமுகப் பிரிவு இல்லையென்றும் சேவை புரிவதால் அவர்கள் அனைவரும் சூத்திரர்களே என்று சில அறிஞர்கள் அனுமானம் செய்வதுண்டு//
இதையும் கேள்விப் பட்டிருக்கிறேன். இந்த இழையை ஆரம்பித்ததற்கு நன்றி. நம் நண்பர்கள் கருத்தையும் தெரிந்து கொள்ள ஆவல்.