தேவையே இல்லாமல், கரூரில் 41 உயிர்கள் சாவைச் சந்தித்துள்ளன. @DrGanesh_Japan ட்வீட் மூலமாக, "இரண்டு தமிழ்நாடு" காணொளி கண்டேன்.
https://www.youtube.com/watch?v=Fp5F2aKrLwk என்னத்தைச் சொல்ல? கரூர், நாமக்கல் போன்ற ரோட்ஷோ கூட்டங்கள் தடைசெய்யப்படல் வேண்டும் - எந்தக் கட்சி ஆயினும். பாரதிதாசன் சினிமா உலகால் மனமுடைந்தவர். இறந்ததும் அதனால் தான். மாரியப்பன் (2022) கட்டுரை,
https://x.com/naa_ganesan/status/1918992384823525768சங்க காலத்தில் இப்போதைய கேரளம் பெரிய வனாந்தரம், ஜனத்தொகை குறைவு. கரூர் என்ற பெயரே வஞ்சி மாநகரத்தின் downtown என்ற பொருளில் அமைந்ததுதான். சேர மன்னர்கள் பல புலவர்களை ஆதரித்தனர். தமிழ்நாடு முழுவதிலும் இருந்து அரச ஆதரவால் உவப்பத் தலைக்கூடினர். எனவே, கருவூரில் வாழ்ந்த புலவர்கள் என்ற பெரிய பட்டியலே இருக்கிறது. தமிழின் பொற்காலம், அங்கே இருந்த அரண்மனையில் பிறந்து வளர்ந்தவர் இளங்கோ அடிகள். முத்தமிழ்க் காப்பியம் படைத்து தமிழ்த் தேசியத்துக்கு முதனூல் அளித்தவர். கொங்குநாட்டுப் புலவர், அடியார்க்குநல்லார் சிலம்பின் உரைதான் தமிழிசைக்கு ஆதாரமாக இன்றும் இருக்கிறது. கடைசியாகக் கரூரில் வாழ்ந்த சேர மன்னர் குலசேகர ஆழ்வார். பொற்காலம் அது. ஆனால், தற்காலம்??!!
பாரதிதாசன் கண்ட தமிழ்க்கனவும், கரூரில் தமிழர் நனவும் அவர் பாடலை நினைவூட்டுகிறது.
தமிழ்க் கனவு - பாரதிதாசன்