Re: ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தைப் படிப்போம்!

1,092 views
Skip to first unread message

DEV RAJ

unread,
Aug 16, 2013, 12:20:33 PM8/16/13
to vall...@googlegroups.com, min tamil, தமிழ் வாசல், தமிழ் சிறகுகள்
ஆஹா,

அரங்கனார் திருவாக்கிலிருந்து அரங்கனின் அழகொழுகும் நாமங்கள் !
’ஸூஷா ச மே, ஸுதிநஞ்ச மே’ என்று கூச்சலிடத் தோன்றுகிறது.
இலக்கிய இன்பமும், இறையியல் இன்பமும் செவிநுகர் கனிகளாக,
இல்லை கண்நுகர் கனிகளாக நாடோறும் இடையறாமல் பருகக் கிடைக்கும்
என நம்புகிறேன். மறுப்பவர் யார்? உடனே தொடங்கலாமே


தேவ்

Mohanarangan V Srirangam

unread,
Aug 16, 2013, 12:39:41 PM8/16/13
to vallamai, min tamil, தமிழ் வாசல், தமிழ் சிறகுகள்
நன்றி ஐயா. தங்களின் ஆசீர்வாதங்கள் பலத்தைக் கொடுக்கட்டும். 

***


2013/8/16 DEV RAJ <rde...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

Granny Visalam

unread,
Aug 16, 2013, 12:54:07 PM8/16/13
to vall...@googlegroups.com
நானும் படிக்க மிக ஆவலாக இருக்கிறேன் .ஒவ்வொரு நாமமும் தேன் போல் இனிக்கும் ஒவ்வொரு நாமமும் ஒரு கதையைக்கொண்டிருக்கும் .திரு வேளக்குடி கிருஷ்ணன் அவர்கள் மிக அழகாக சொல்லி வந்ததை டிவி யில் கேட்டிருக்கிறேன்  எத்தனை தடவைக்கேட்டாலும்  தெவிட்டாத அமுதல்லவா?


2013/8/16 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>

Tthamizth Tthenee

unread,
Aug 16, 2013, 6:55:22 PM8/16/13
to vall...@googlegroups.com
தொடங்குங்கள் நாத்திகரே  :)

தொடர்கிறேன்

அன்புடன்
தமிழ்த்தேனீ


2013/8/16 Granny Visalam <meera...@gmail.com>

கி.காளைராசன்

unread,
Aug 18, 2013, 3:38:18 AM8/18/13
to mintamil, தமிழ் வாசல், vallamai, தமிழ் சிறகுகள்
வணக்கம் ஐயா.

(அமெரிக்க நடேசன் என்று ஒரு அன்பர், அசைவர்.  ஆனால் சைவம் அற்புதமாகச் சமைப்பார், அவரை விஞ்ச ஆளில்லை.
எனது தங்கை பிறவிச் சைவம், ஆனால் அசைவம் அருமையாகச் செய்வாள்.)

ஆகவே நீங்கம் ஆய்திகரோ அல்லது நாஸ்திகரோ எப்படி வேண்டுமானாலும் இருங்கள்.

ஆனால், எங்களுக்கு பகவத் நாமத்தைத் தினமும் அளித்திடுங்கள்.
ஏதோ உங்களது புண்ணியத்திலாவது அடியேனும் அறிந்து கொள்ள முயற்சிக்கிறேன்.

அன்பன்
கி.காளைராசன்



2013/8/16 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
ரொம்ப நாளாக இப்படி ஓர் ஆசை. ஸ்ரீமந் நாராயணனின் நாமங்களை ஒவ்வொன்றாகக் கனியைச் சுவைப்பது போல் நன்கு ரசித்துச் சுவைக்க வேண்டும் என்று. ‘நாம் ஏன் அதைப் பற்றி எழுத வேண்டும்? ஒன்று முழுக்க நம்பிக்கையாளனாக இருக்க வேண்டும். அது இல்லை என்பது நிச்சயம். பின்னர் எதற்கு இந்த இரண்டுங் கெட்டான் வேலை? என்று தயக்கம். 

ஆனாலும் எவ்வளவு பழங்காலம் தொட்டோ எத்தனையோ மகான்கள், வித்வான்கள், வேதாந்திகள் எல்லாம் வாய் கொள்ளாமல் சுவைத்த தீஞ்சுவைக் கனிகள் ஆயிரம் இவை. அதில் ஏதோ ஆசை பற்றி எறும்புகளும் மொய்க்கும் அன்றோ! அந்தக் கணக்கில் நாமும் சுவைக்கலாமே என்று நப்பாசை. 

பழங்காலம் என்றால் நான் சொல்வது பகவத்பாத ஸ்ரீ ஆதிசங்கரரின் காலத்திற்கும் மிகப்பழங்காலத்திலிருந்தே மிகவும் மக்களை, பல்வேறுபட்ட சித்தாந்திகளெல்லாம், சாதாரண பொது ஜனங்கள், அறிவின் உச்சத்தில் திகழும் மகா ஞானிகள் என்ற வேறுபாடின்றிக் கொண்டாடிக்கொண்டு வரும் திவய நாமாக்கள் இந்த ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம். 

ஹிந்து மதப் பொதுவான நூல்களில் இது தலையாயது. 

அனைவருக்கும் பொது என்பதால் விஷயம் ஏதோ லேசானதோ என்றால் அப்படி இல்லை. அனைத்து வேதாந்த உண்மைகளும் உள்ளடங்கிய சிறந்த நூல் இதுவாகும். அதனால்தான் ஸ்ரீ ஆதிசங்கரரே முதன்முன்னம் உரை எழுதியது இந்த ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமத்திற்குத்தான். 

ஆன்மிகம் என்று மட்டும் இல்லாமல் மருத்துவத் துறையிலும் பழங்காலத்தில் தீர்க்கவியலா சில நோய்களுக்கு இந்த ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தைப் படித்தல் என்பதையே வைத்தியமாக விதித்துள்ளனர் என்பதை சரக ஸம்ஹிதை என்னும் பழங்காலப் பெரும் மருத்துவ கிரந்தத்தைப் பார்த்தாலே தெரியும். மனோ வியாதிகள், தீய கனவுத் தொல்லைகள், பீதியினால் ஏற்படும் உள்ளக் கோளாறுகள் என்று பலவற்றிற்கும் கைகண்ட மருந்தாக வழிவழி மக்களின் அனுபவமாக இருப்பது ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம படனம். 

என்னைப் பொறுத்தவரையில் உலக ஆசைகள் என்னும் பவ நோயைவிடக் கொடிய நோய் என்ன உண்டு? அறியாமை இருளை விட பேய் பிசாசுகளின் பிறப்பிடம் வேறு என்ன வேண்டும்? இந்த நோயை அகற்றும் உன்னத மருந்தும், இந்த இருளை ஓட்டும் உத்தம ஒளியும் ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாமம் என்று நிச்சயம் சொல்லலாம். 

நான் படிக்கப் போவது இந்த உரை அந்த உரை என்று இன்றி பகவந் நாமங்கள் ஆயிரம். அதாவது அங்கங்கே எங்கெங்கே என்ன என்ன உரைகள் உண்டோ, என் மனம் போனது மார்க்கம் என்று படிக்கலாம் என்று எண்ணம். 

என்னைப் பொறுத்தவரையில் நான் ரசிப்பது அத்தனை உரைகளையும். என்னால் ஒரு சித்தாந்தவாதியாக இருக்க முடியவில்லை. ரசிக்கக் கொட்டிக் கிடக்கிறது. அப்புறம் என்ன இந்தக் கட்சி அந்தக் கட்சி என்று என்பது என் எண்ணம். 

ரசனைதான் பிரதானம். 

உனக்கு என்ன யோக்கியதை இருக்கிறது என்று விரலை நீட்டத் துடிக்கும் பேர்வழிகளுக்கு முதலிலேயே சொல்லிவிடுகிறேன். 

பகவந் நாமத்தில் ருசி - அது ஒன்றுதான் என்னுடைய யோக்கியதை. 

நீ ஆஸ்திகனா? என்று கேட்டால் இல்லை என்பது என் பதில். நாஸ்திகனா? என்று கேட்டால், அப்படிச் சொல்வதுதான் அதிகப் பொருத்தமானது என்றுதான் சொல்வேன். 

ஆமாம். என்று கடவுள் என்ற ஒன்றை நாம் நம் அனுபவத்தில் சாக்ஷாத்கரிக்கிறோமோ, நேரடியாக உணர்கிறோமோ அன்றுதானே நாம் உண்மையில் நம்மை ஆஸ்திகர் என்று சொல்லிக்கொள்ள முடியும். அதுவரையில் நாத்திகம்தானே, சொன்னாலும் சொல்லாவிட்டாலும். 

சரி வேண்டாம் ஆரம்பிக்காதே என்று சொல்பவர்கள் இப்பொழுதே எதிர்ப்பு சொல்லிவிடுங்கள். அப்புறம் வருத்தப் படாதீர்கள். 

*** 

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் 


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.
360.gif

Mohanarangan V Srirangam

unread,
Aug 18, 2013, 7:49:44 AM8/18/13
to min tamil, தமிழ் வாசல், vallamai, தமிழ் சிறகுகள்
ஏதோ உங்களது புண்ணியத்திலாவது அடியேனும் அறிந்து கொள்ள முயற்சிக்கிறேன்.<<<<< 

மைசூருக்கே மைசூர்பாவா? தினம் ஒரு திவ்யநாமம் அளித்து எங்களையெல்லாம் பல வருஷங்களாக மகிழ்ச்சியில் ஆழ்த்திவருபவர் நீங்கள் திரு காளைராஜன். உங்களுக்கு நான் சொல்வது எப்படி? திருநெல்வேலிக்கே அல்வாவா! :-) 

***



2013/8/18 கி.காளைராசன் <kalair...@gmail.com>
360.gif

K. Loganathan

unread,
Aug 18, 2013, 9:07:40 PM8/18/13
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com
அன்பரே

தங்கள் கூற்று:

//அதாவது நமது நூல்களில் அருமையான ரத்தினங்கள், மாணிக்கங்கள் எல்லாம் உள்ளன. ஆனால் எல்லாம் தூசி துப்பட்டை சிலந்தி ஒட்டடை அண்டிப் போய் இருக்கிறது. அதாவது என்ன சொல்கிறேன் என்றால் எல்லாம் இந்த வர்ணாஸ்ரமம் பற்றியும், பிராம்மணகளின் பெருமையைப் பற்றியும் எங்கு பார்த்தாலும் இண்டு இடுக்கில் எல்லாம் நுழைத்து எதைத் தொட்டாலும் இவைதான் கண்ணில்படும்படி -- இது என்ன ஒரே ஒட்டடை என்று எரிச்சல் வருகிறது. //

இதுதான் எனது உணர்வும், பகவத் கீதையை நான் படிக்க முயலும் போதெல்லாம இந்த அற்ப வர்ணாஸ்ரமம் வந்து இந்த நூல் இறைவனால் மொழியப்பட்ட ஓர் சுருதி அல்ல யாரோவோர் பிரம்மணனால் எழுதப் பட்டது என்றே படும்.  சாதி வரண பேதங்களை வற்புறுத்துவது எப்படி இறைவனாக இருக்க முடியும் என்ற கேள்வி என்னுள் எழுந்துகொண்டே இருக்கும். இதனால் என் கண்களுக்கு கீதை ஓர் சுருதி என்று படுவதே இல்லை,

இவ்வகையில் திருக்குறள் போன்ற ஞான நூற்கள் மிகவும் சுத்தமானவை மேலானவை என்றெல்லாம் படும்

உலகன்


2013/8/18 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
ஒரு விதத்தில் பார்த்தால் பகவந் நாமாக்களைப் பற்றி நான் எழுதக் கூடாது. 

ஏன் என்றால் ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் என்று சொன்னதும் ஸ்ரீ விஷ்ணுதான் ஞாபகத்திற்கு வர வேண்டுமேவொழிய அதற்கு எத்தனை உரைகள், யார் யார் சொன்னதற்கு என்ன வித்யாசம், இப்படி இலைகளை எண்ணுகிற ஆர்வம் என்னத்துக்கு ப்ரயோஜன்ம்? கனியாகிய அவன் பக்தியில் கண்ணீரும் கம்பலையுமாய் இருந்தால் எழுதலாம். 

என்ன செய்வது என்னிடம் பக்தி இல்லையே என்ற கட்டாந்தரையைக் காட்டித்தான் சண்டை போடலாமோ? 

பாருங்கள். ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் என்று போய்ப் பார்த்ததும் ஸ்ரீ மஹாபாரதத்தில் முதலில் எனக்கு கடுப்பான கடுப்பு. 

அதாவது நமது நூல்களில் அருமையான ரத்தினங்கள், மாணிக்கங்கள் எல்லாம் உள்ளன. ஆனால் எல்லாம் தூசி துப்பட்டை சிலந்தி ஒட்டடை அண்டிப் போய் இருக்கிறது. அதாவது என்ன சொல்கிறேன் என்றால் எல்லாம் இந்த வர்ணாஸ்ரமம் பற்றியும், பிராம்மணகளின் பெருமையைப் பற்றியும் எங்கு பார்த்தாலும் இண்டு இடுக்கில் எல்லாம் நுழைத்து எதைத் தொட்டாலும் இவைதான் கண்ணில்படும்படி -- இது என்ன ஒரே ஒட்டடை என்று எரிச்சல் வருகிறது. 

அருமையான தத்துவ மணிகளை எடுக்க வேண்டும் என்றால் இப்படித் தூசி துப்பட்டை பூச்சி ஒட்டடை இதையெல்லாம் விலக்கித்தான் எடுக்க வேண்டியிருக்கிறது. என்ன செய்வேன் கடவுளே! 

அம்புப் படுக்கையில் படுத்திருக்கிறவன் ஆன்ற அறம் என்ன என்று கேட்டவனுக்கு பகவானின் பெயரை ஜபம் செய் அதுதான் வழி என்கிறான். அங்கு பார்த்தாலும் மாமூல் சாமிக்கு மகிமை பாட ஆரம்பித்தால் என்னய்யா இது...... 

நல்ல வேளை ஸ்ரீராமகிருஷ்ணர், விவேகாநந்தர் வந்தார்களோ நான் ஹிந்து மதத்தில் ஆர்வம் போகாமல் ஆன்மிகம் என்று இருக்கிறேனோ. இல்லையென்றால் என்றோ இவைகளையெல்லாம் தூக்கியெறிந்தவன்தான் அப்படியே முழுக்க முழுக்க நாத்திகம் என்று போயிருப்பேன். (இப்ப மாத்திரம் என்ன வாழுது? அப்படித்தான் இருக்கிறாய் என்கிறீர்களா.. அதுவும் சரிதான்.) 

***



2013/8/18 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
ஸ்ரீ ஆதிசங்கரர் உரைக்கும் ஸ்ரீ பராசர பட்டர் உரைக்கும் ஓர் ஒப்பீட்டை இங்கே பார்க்கலாம்.


http://www.ibiblio.org/sadagopan/ahobilavalli/vishnu_sahasra_namam_vol1.pdf 

கேட்டுக் கொண்டே, பார்த்துப் படிக்க வசதி இங்கே




***





--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

K. Loganathan

unread,
Aug 19, 2013, 3:14:03 AM8/19/13
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com
நின்னா கண்ணன்

 வரணாஸ்ரம தர்மம் வெறுக்கத் தக்கது.  சாதி பேதங்கள் அதிலும் குறிப்பாக ஓரு சாதியரை தாழ்த்தப்பட்டவர்கள் என்று ஒதுக்குவது அவர்களது உரிமையை பரிப்பது வெறுக்கத் தக்கது,  யார் இதுபோன்ற சமுதாய வேற்றுமைகளைப் போற்றிப் புகழ்கின்றார்களோ அவர்கள் கீழானவர்கள் கண்டிக்கத்தக்வர்கள்.

இதனோடு நான் நிறுத்திக் கொள்கின்றேன். தொடர்ந்தால் சாதி பிரச்சினையைக் கொண்டு வரும்  அது மின்.தமிழிற்கு ஒத்து வராது. இந்த சாதி பிரச்சினையின் ஆழத்திற்கே சென்று அதனை வேரொடு பிடுங்கி எரிய தமிழர்கட்கு முடியாத ஒன்றாகப் போய்விட்ட்து போலும்.

உலகன் 


2013/8/19 N. Kannan <navan...@gmail.com>
2013/8/19 K. Loganathan <k.ula...@gmail.com>
அன்பரே

தங்கள் கூற்று:

//அதாவது நமது நூல்களில் அருமையான ரத்தினங்கள், மாணிக்கங்கள் எல்லாம் உள்ளன. ஆனால் எல்லாம் தூசி துப்பட்டை சிலந்தி ஒட்டடை அண்டிப் போய் இருக்கிறது. அதாவது என்ன சொல்கிறேன் என்றால் எல்லாம் இந்த வர்ணாஸ்ரமம் பற்றியும், பிராம்மணகளின் பெருமையைப் பற்றியும் எங்கு பார்த்தாலும் இண்டு இடுக்கில் எல்லாம் நுழைத்து எதைத் தொட்டாலும் இவைதான் கண்ணில்படும்படி -- இது என்ன ஒரே ஒட்டடை என்று எரிச்சல் வருகிறது. //

இதுதான் எனது உணர்வும், பகவத் கீதையை நான் படிக்க முயலும் போதெல்லாம இந்த அற்ப வர்ணாஸ்ரமம் வந்து இந்த நூல் இறைவனால் மொழியப்பட்ட ஓர் சுருதி அல்ல யாரோவோர் பிரம்மணனால் எழுதப் பட்டது என்றே படும்.  சாதி வரண பேதங்களை வற்புறுத்துவது எப்படி இறைவனாக இருக்க முடியும் என்ற கேள்வி என்னுள் எழுந்துகொண்டே இருக்கும். இதனால் என் கண்களுக்கு கீதை ஓர் சுருதி என்று படுவதே இல்லை,

இவ்வகையில் திருக்குறள் போன்ற ஞான நூற்கள் மிகவும் சுத்தமானவை மேலானவை என்றெல்லாம் படும்

உலகன்


வள்ளுவன், அந்தணன் என்று சொல்லும் போது என்ன பொருள் சொல்கிறான்? சிவனை அந்தணன், ஆரியன் எனும் போது என்ன பொருள் கொள்கிறார்கள்? நம்மாழ்வாரின் திய்வப்பிரபந்த ஈடு உரையைத் தமிழாக்கம் செய்த புருஷோத்தம நாயுடு, பார்ப்பான், அந்தணன், பாகவதன் இவற்றிற்கும் உரை செய்கிறார். 

எனவே நாம் ஏதாவது anachronistic ஆகப் பொருள் செய்கிறோமோ? என்றொரு சந்தேகம் வருகிறது. நமது சிந்தனை பெரியாருக்கு முன்/பெரியாருக்குப் பின் எனப் பகுத்துப் பார்க்க வேண்டியுள்ளது. ஆங்கிலேயர் வருகைக்குப்பிறகு நமது போக்கு மாறிவிட்டது.

இந்திய வர்ணாஸ்ரமத்தில் ஜாதிகள் மேலும் கீழும் போய் வருவதைக் காண்கிறோம். இப்போது பிராமணன் என்றால் வெறுப்பிற்கு ஆளாகத்தக்கவன் என்று பொருள் போலும். வாழ்க இந்தியா!

நா.கண்ணன் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Nagarajan Vadivel

unread,
Aug 19, 2013, 3:53:07 AM8/19/13
to vallamai
வர்ணாஸ்ரமம் என்பது அரசாளுமைக்காக உருவாக்கப்பட்ட உத்தி.  அவரவர் அவர்தம் நிலையில் நின்று செயல்பட்டால் குமுகத்தின் பொருளாதாரம் வளரும் என்ற எண்ணத்துடன் உருவாக்கப்பட்டது.  மெளரியர்கள் இந்த அமைப்பைச் செயல்படுத்திப் பெரும்பயன் அடைந்தனர்

தமிழகத்தில் இந்த அமைப்பை அறிமுகப்படுத்தியவர்கள் ஒட்டுமொத்தக் குமுகத்தின் வளர்ச்சியையும் கருத்தில் கொள்ளாமல் ஒரு சிலர் அதிகாரம்பெற்று மற்றவர்களை அடக்கி ஆள உத்தியை மாற்றியபோது வேறுபாடுகள் பிரிவினைகள் தோன்ற ஆரம்பித்தது

முதன் முதல் கேரளாவுக்குப் புலம்பெயர்ந்த அந்தணர்கள் குமுகத்தின் எல்லாப் பிரிவினருடனும் கலந்து வாழ்ந்தனர்.  இறுதியாக தமிழகத்துக்கு வந்தவர்களோ தங்களின் பிறப்பின் பெருமையை நிலை நாட்டிக்கொள்ள மற்றவர்களுடன் கலந்து வாழாமல் தனிமைப் படுத்திக் கொண்டனர்.  அவ்வாறு அவர்கள் அவர்களுக்காகவே உருவாக்கிகொண்ட வாழ்வுமுறையைத் பஞ்ச திராவிட ஆச்சாரியம் என்றழைத்துக்கொண்டு கேரளாவில் இருந்த அந்தணர்கள் அனாச்சரியர்கள் என்று அவர்கள் குழுவிலிருந்து விலக்கி வைத்தனர்

இந்த தனித்துவ மேன்மை வாதம் ஒரு காலத்தில் அவர்களைக் குமுகத்தின் உச்சியில் நிலை நிறுத்தியது. காலப்போக்கில் அரசியல் மாச்சரியங்கள் இந்த மேன்மையைக் குலைக்கத் தலைப்பட்டது. 

அந்தணர்கள் அதிகாரத்தில் பெருமளவு பதவியில் இருப்பதில் பங்குவேண்டும் என்று ஆரம்பிக்கப்பட்ட நீதிக் கட்சியைச் சார்ந்த அந்தணர் அல்லாத உயர் சாதியினர் இதே உத்தியைக் கைக்கொண்டே அரசுப் பதவிகளில் அமர்ந்தனர்

தங்களுக்கு எந்தப் பலனும் கிட்டவில்லை என்பதை உணர்ந்த சிறுபான்மையினரும் கீழ் சாதியினரும் நீதிக் கட்சியின் ஆட்சியைத் தேர்தலில் எதிர்த்து வாக்களிப்பதன் மூலம் முடிவுக்குக் கொண்டு வந்தனர் 

எனவே தமிழகத்தில் வளர்ந்த சமூக அந்நிதிக்கு அடிப்படை வர்ணாஸ்ர தர்மத்தைத் தவறான் நோக்கத்துடன் பயன்படுத்தி ஒரு குழு உயர்வடைய மற்ற குழுக்களின் வளர்ச்சியைத் தடை செய்யவேண்டும் என்ற மனப்பக்குவத்துடன் செயல்பட்டதே

அந்தணர்கள் ஆதிக்கம் குறைந்ததால் குமுகத்தில் அவர்கள் காரணம் என்று குற்றம் சாட்டும் வேறுபாடுகள் மறைந்துவிட்டதா?  அந்தணர்கள் இடத்தில் மற்ற குழுக்கள் இருந்து வேறுபாட்டைத் தீமூட்டி வளர்த்துக்கொண்டு உள்ளனரே

ஆராய்ச்சிக் குஞ்சு




2013/8/19 K. Loganathan <k.ula...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

K. Loganathan

unread,
Aug 19, 2013, 4:22:57 AM8/19/13
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com
பேராசிரியர் அவர்களே

 கீழே தங்களது கேள்வி

// அந்தணர்கள் ஆதிக்கம் குறைந்ததால் குமுகத்தில் அவர்கள் காரணம் என்று குற்றம் சாட்டும் வேறுபாடுகள் மறைந்துவிட்டதா?  அந்தணர்கள் இடத்தில் மற்ற குழுக்கள் இருந்து வேறுபாட்டைத் தீமூட்டி வளர்த்துக்கொண்டு உள்ளனரே//

மிக அருமையான சிந்தனையைத் தூண்டும் நல்ல ஓர் கேள்வி.  மனிதர்கள் ஓர் குழுவாக கூடி இன்னொரு குழுவை கீழ் தள்ளி அடிமையாக்க முயலும் வரையில் புதியப் புதிய பிராம்மணர்கள் தோன்றிக் கொண்டே இருப்பார்கள். பெயர் வேறு படும் ஆனால் பண்பில் வேறுபாடு இல்லாதிருக்கும்

 நாம் செய்ய வேண்டியது என்ன? வர்ணாஸ்ரம தர்மம் தோன்றும் உள்ளத்தின் பண்புகளையே அலச வேண்டும் ஏன் ஓர் மனிதன் இன்னொருவனை கீழே தள்ளி அவன் உரிமைகளைப் பரித்து தன் அடிமையாக்க வேண்டும்? ஏன் மனிதன் இதனைச் செய்கின்றான? வேதாந்தம் சித்தாந்தம் கம்யூனிச்ம் மார்க்சிசம் போன்ற கோட்பாடுகள் இதனை விளக்க முடியுமா? இல்லை தமிழ் பேராசிரியர்கள் இப்படிப்பட்ட கேள்விகளை எழுப்பி தக்க விளக்கங்களைத் தரவல்லவர்களாக இருக்கின்றார்களா? விளக்கினால் நன்று.

 உலகன்


2013/8/19 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

K. Loganathan

unread,
Aug 19, 2013, 10:14:03 AM8/19/13
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com
பேராசிரியர் அவர்களே

தங்கள் தந்த வரலாற்ரு குறிப்புகட்கு மிக்க நன்றி. எவ்வாறு பலவேறு அரசியல் சூழ்நிலையின் காரண்மாக பெரியார் பிராம்மணர்களையும் அவர்களது வர்ணாஸ்ரம தர்மத்தையும் காரணங்காட்டி அவர்களை கண்டிக்கத் தொடங்கினார் என்பது புரிகின்றது, மேலும் தங்கள் கூற்று:

//வர்ணாஸ்ரமக் கொள்கையின் பிரதிநியாகப் படம்பிடித்துக் காட்டி சமூக அநீத்களுக்கு அவர்களே அடிப்படை என்ற கருத்த்தை சமூகச் சீர்திருத்தம் என்ற பெயரில் தமிழகத்தில் பரப்பினர் என்பது தெளிவாகும்//

இப்படி பிராம்மணர்கள் அல்லாதாரை தாழ்த்துவதும், திராவிடர்கள் பிராம்மணர்களை குறை கூறி தாழ்த்துவதும் கண்டிப்பதும் அரசியல் செய்வதும், ஏன் நடக்கின்றது? என்ற கேள்விக்கு இங்கு பதில் இல்லை,

மனிதர்கள் ஏன் ஒருவரை ஒருவர் தாழ்த்தி பகைமை பாராட்டுகின்றனர் என்பதற்கு பதில் இப்படிப்பட்ட வரலாற்றுக் குறிப்புக்கள் அல்ல, இவை பிரச்சனையிம் முதல் படிதான. இந்த அளவில் நாம் நின்று விட்டால இந்தப் பிரச்சினை மீண்டும் தலை துக்கும். யார் கண்டார்கள் விரைவில் வன்னியர்கள்  ஆட்சியைக் கைப்பற்றி வன்னியர்கள் அல்லாத பிறரை தாழ்த்தலாம்.

பிரச்சனையின் மூலத்திற்கே சென்று, இந்த நோயின் முதலை நாடி தக்க மருந்து கண்டு குணப்படுத்த வேண்டும்

வர்ணத்தை எதிர்த எதிர்க்கும் புத்தம் சமணம் இசுலாம் சீக்கியம் போன்ற சமயங்கள் இந்த பிரச்சினையைத் தீர்த்துவிட்டனவா? இல்லையே?

இந்தப் பிரச்சினை ஏன் எழுகின்றது என்பதையே நாம் புரிந்துகொள்ள வில்லை, அப்புறம் எப்படி பிரச்சினைத் தீர்க்க முடியும்?

உலகன்




2013/8/19 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>
வர்ணாஸ்ரமம் தமிழகத்தில் பல நூற்றாண்டுகளாக வழக்கில் இருந்த வாழ்வியல் மரபு.  வடபுலத்தாரால் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தாலும் தமிழகத்தின் சூழலுக்கேற்ப சிறு மாற்றங்களுடன் குமுகத்தில் தழைத்து வளர்ந்தது

ஆங்கிலேயர் ஆட்சியில் ஆங்கில்க் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டு ஆங்கிலக் கல்வி பெறும் ஆர்வம் அந்தணர்களிடம் இருந்ததுபோல் மற்ற பிரிவினரிடம் இல்லாமையால் அரசு அலுவலில் அவர்கள் அதிக எண்ணிக்கையில் சேரும் வாய்ப்பு ஏற்பட்டது

அரசாளுமையில் அரசுப் பதவிகளில் தங்களுக்கும் பங்குவேண்டும் என்ற கோரிக்கையுடன் தொடங்கப்பட்ட தமிழகக் காங்கிரஸ் கட்சியின் தலைமையில் அதிகம் அந்தணர்கள் அமர்ந்து அதிகாரம் மிக்கவர்களாக இருந்தும் அவர்கள் சமூக நீதியுடன் குமுகத்தின் மற்ற பிரிவினர்களும் பதவி பெறவேண்டும் என்பதில் அக்கறை இல்லாதவர்களாக இருந்தனர்

1919-ல் ஆங்கிலேயர்களின் நட்புக்குப் பாத்திரமாகி பல அரசுப் பதவிகளிலும் ஈரோடு நகர் மன்றத் தலைமைப் பதவியிலும் இருந்த பெரியார் அவற்றைத் துறந்து 1919-ல் காங்கிரஸில் சேர்ந்தார்.  தமிழகக் காங்கிரஸின் பொறுப்பில் இருந்தவர்கள் சமூக நீதி நலிந்த பிரிவினர் வாழ்வின் மேன்மைக்கான அக்கறை கல்வியில் இட ஒதுக்கீடு போன்ற சமூகப் பிரச்சினைகளில் அக்கறையில்லாமல் இருந்த்தைக் கண்டு அவர் காங்கிரஸ் கட்சியின் கொள்கையாக இவை ஏற்றுக்கொள்ளவேண்டும் வலியுறுத்தியதைக் காங்கிரஸ் கட்சி ஏற்றுக்கொள்ளாததற்குக் காரணம் கட்சிப் பொறுப்பில் இருந்த அந்தணர்கள் என்று கருதினார்

1919-ல் காங்கிரஸில் சேர்ந்து 1925-ல் அதைவிட்டு விலகிய இந்த ஆறு ஆண்டுகளில் அவர் ஒவ்வொரு ஆண்டிலும் கூடும் காங்கிரஸ் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்ற முயற்சித்து வெற்றிபெறவில்லை.  அவருக்கும் அந்தணர்களுக்கும் கருத்து வேறுபாடுகள் அவர் காங்கிரஸில் இருந்த காலத்தில் உருவானது

Even before he resigned from membership of the Congress, Periyar was convinced that communalism was deep-rooted in Tamil Nadu and that the forward community members of the Congress showed only lip service for backward classes. When Mohandas Karamchand Gandhi started the Non-Cooperation Movement in 1920, he suggested that Congressmen should avoid sending their children to schools which were under the supervision of the British rulers. There were also new schools started by individuals and charitable institutions, for the benefit of the children who were not going to Government schools.[7]

In a place called Cheranmadevi in Tirunelveli district, a residential school, also known as Gurukulam, was started with help from the Tamil Nadu Congress. It was manned by V.V.S. Iyer who was believed to be an ardent Congressman. The Tamil Nadu Congress was given an annual grant of ten thousand rupees to the school. For the year 1925, half of he grant for the school had already been given by the time Periyar became the secretary. On receipt of complaint, Periyar found that Brahmin children and Non-Brahmin children were given food in separate places. He advised Iyer to treat children alike and not instill communalism into them by putting them into separate groups. Iyer refused to listen to Periyar's advice, upon which the latter refused to release the other half of the grant. Iyer then managed to get the amount from the joint secretary of the Congress, without the knowledge of Periyar. When this came to the attention of Periyar, he addressed public meetings about it and created public awareness of what was happening in Gurukulam. Prominent congressmen like Dr. Varadarajulu Naidu, Thiru V.Ka, S. Ramanathan and others condemned the sectarian attitude of Iyer in running a public institution.[7] When Gandhi's attention was drawn to what was happening in the school, he too did not succeed in the matter. Iyer was reluctant to change his attitude and therefore the school was closed.[7]

When Periyar joined the Congress in 1919, he believed that the prominent people in that organization were enlightened and hoped that with their co-operation, he could get rid of the practice of untouchability. Furthermore, Periyar believed that people of the backward and depressed classes could be enabled to have proper education and have their proper share in government appointments through the help of the Congress Party.[9] Periyar unsuccessfully tried to get passed a resolution regarding communal representation five times. Soon after his return from Vaikom, Periyar made the last and sixth attempt at getting the Tamil Nadu Congress to pass the resolution regarding communal representation at a conference held in Kanchipuram in 1925. Thiru V.Ka was the President at the time and sensing opposition in the open session, he did not permit Periyar to propose the resolution. In utter disgust, Periyar left the Congress.[9]

So by the time Periyar resigned from the Congress, he knew that in order to enable the backward community people to come up, they must be made to realize that they had the right to claim equality with the so called upper classes, and that, in fact, they had the right to claim proportionate representation in public offices. Thus, some of these themes constituted the platform of his future work. It should be said to the credit of Periyar that his repeated public meetings on the question of communal representation forced the government to pass G.O.No.1129 on December 15, 1928 by which Brahmins, non-Brahmins, ChristiansMuslims and depressed classes were assured of proportionate representation in public offices.[7]

Periyar felt that the Brahmins, who formed a majority in the Indian National Congress and occupied the high posts, desired to dominate the party. Periyar was against the activities of the Brahmin leadership, which he felt, conspired to secure the high posts in the party for themselves and members of their community [7] As soon as Periyar joined the Indian National Congress, he tried to introduce the usage of khadi. However, he soon got the impression that the Khadi Board Administration was dominated by Brahmins. The affairs of this Board also convinced Periyar that in order to get justice done to non-Brahmins in Tamil Nadu, he must leave the Congress and work from outside.[7]

http://en.wikipedia.org/wiki/Periyar_E._V._Ramasamy_and_the_Indian_National_Congress#cite_note-Kandasamy-6


மேலே சுட்டிக் காட்டப்பட்ட நிகழ்வுகளை உற்றுநோக்கினால் இது ஒரு அரசியல்கட்சியில் நடந்த கருத்து மோதல் என்பது தெளிவாகும்.  வர்ணாஸ்ரம தர்ம எதிர்ப்புச் சிந்தனை என்ற பேச்சே எழவில்லை.  நீதிக் கட்சியை திராவிடர் கழகமாக மாற்றியபின்னர் அந்தணர் வர்ணாஸ்ரமக் கொள்கையின் பிரதிநியாகப் படம்பிடித்துக் காட்டி சமூக அநீத்களுக்கு அவர்களே அடிப்படை என்ற கருத்த்தை சமூகச் சீர்திருத்தம் என்ற பெயரில் தமிழகத்தில் பரப்பினர் என்பது தெளிவாகும்


ஆராய்ச்சிக் குஞ்சு




2013/8/19 seshadri sridharan <ssesh...@gmail.com>
2013/8/19 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

அந்தணர்கள் அதிகாரத்தில் பெருமளவு பதவியில் இருப்பதில் பங்குவேண்டும் என்று ஆரம்பிக்கப்பட்ட நீதிக் கட்சியைச் சார்ந்த அந்தணர் அல்லாத உயர் சாதியினர் இதே உத்தியைக் கைக்கொண்டே அரசுப் பதவிகளில் அமர்ந்தனர்

தங்களுக்கு எந்தப் பலனும் கிட்டவில்லை என்பதை உணர்ந்த சிறுபான்மையினரும் கீழ் சாதியினரும் நீதிக் கட்சியின் ஆட்சியைத் தேர்தலில் எதிர்த்து வாக்களிப்பதன் மூலம் முடிவுக்குக் கொண்டு வந்தனர் 

எனவே தமிழகத்தில் வளர்ந்த சமூக அந்நிதிக்கு அடிப்படை வர்ணாஸ்ர தர்மத்தைத் தவறான் நோக்கத்துடன் பயன்படுத்தி ஒரு குழு உயர்வடைய மற்ற குழுக்களின் வளர்ச்சியைத் தடை செய்யவேண்டும் என்ற மனப்பக்குவத்துடன் செயல்பட்டதே

அந்தணர்கள் ஆதிக்கம் குறைந்ததால் குமுகத்தில் அவர்கள் காரணம் என்று குற்றம் சாட்டும் வேறுபாடுகள் மறைந்துவிட்டதா?  அந்தணர்கள் இடத்தில் மற்ற குழுக்கள் இருந்து வேறுபாட்டைத் தீமூட்டி வளர்த்துக்கொண்டு உள்ளனரே - ஆராய்ச்சிக் குஞ்சு




சுரக்காய் சித்தர் பற்றிய நூலில் தமது அனுபவன்கள் என்ற தலைப்பில் இடம் பெற்ற பலர் தெலுங்கர், அதிலும் நாயுடு பிரிவினர் . 1880 களிலேயே இவர்கள் B.A. , M .A , .B .L என படித்து solicito, ,Dy  collector, Inspector of schools என பெரும் பதவியில் இருந்துள்ளனர். இதைப் படிக்கும்போது பிராமணரே எல்லா வேலை வாய்ப்புகளையும் பெற்றனர் என்ற கூற்று மிகைப்படுத்தப்பட்ட கூற்று என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது என்பதோடு அல்லாமல் நாயுடுகளும் 3% தொகை தான் இருந்திருப்பர். ஆனால் அரசு வேலைவாய்ப்பில் பேரெண்ணிகையில் இவர்கள் இருந்ததை மட்டும் ஏன் பிராமணரை எதிர்த்ததைப் போல் இவர்களை  எதிர்க்கவில்லை என்ற கேள்வியையும் ஏற்படுத்துகிறது.   

சித்தர்ப்பற்றி இன்னும் இரு நூல்கள் வெளியாகியுள்ளன. அடையாறு theosophical சொசிஎட்டி இல் அவை இருக்கலாம் எனக்கருதுகிறேன் .


  .    Bibliography[edit source | editbeta]
  • SAGE OF NARAYANAVARAM (His Life, Miracles and Prophecies) by Shri.T.Bhakthavatsalam
  • SRI SURAILLAI SWAMI (The Sage of Narayanavaram) by V.A.Devasenapathi
  • SRI SORAKAYA SWAMI CHARITRA by B.Ramaraju & B.Rukmini

சேசாத்திரி 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

Mohanarangan V Srirangam

unread,
Aug 19, 2013, 10:26:45 AM8/19/13
to vallamai, min tamil
நல்லது. பேராசிரியர் ஐயாவும், திரு லோகநாதன் ஐயாவும், திரு கண்ணன் ஐயாவும் பல கருத்துகளை நம் பார்வைக்குக் கொண்டு வந்தனர். 

ஆனால் சொல்ல வந்த விஷயம் வேறு. பக்திக்கான இடத்தில் இந்த மாதிரி மாமூல் சங்கதிகள் வந்து படிப்பில் அலுப்பைத் தருகின்றன என்பது சொல்ல வந்த விஷயம். 

விசாரம் இத்துடன் பக்தியின் பக்கம் திரும்பட்டும். பெரியவர்கள் கோபிக்காமல் ஒத்துழைக்க வேண்டும். 

***




2013/8/19 K. Loganathan <k.ula...@gmail.com>
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

DEV RAJ

unread,
Aug 19, 2013, 1:17:48 PM8/19/13
to mint...@googlegroups.com, min tamil, தமிழ் வாசல், vallamai, தமிழ் சிறகுகள்
மன்னிக்க வேண்டும்; பானகத் துரும்பாக
இடைப்படும் கருத்துகள்.

வருணக் கட்டுக்கோப்பைச் சொல்லும் வியாச முனிவரே
அந்தணன் ஒருவன் தருமவியாதனிடம் சென்று ஞானம்
பெற்றதைச் சொல்கிறார். விதுரரின் சித்த பரிபக்குவம்
சிறப்பாக வெளியிடப்படுகிறது; கீதையில் நால்வருணம் 
பேச இருக்கும் கண்ணபிரானே பல அரசியல் / சமூக அழுத்தங்களைப் 
புறக்கணித்து விதுரரின் குடிலில் தங்கியதை வியாச
முனிவர் ஒளிக்கவில்லை. சுக முனிவர் ஜனக மன்னரால்
பரீக்ஷிக்கப்பட்டதையும் பண்டைய நூல்கள் பேசுகின்றன.

சுக முனிவரின் தகுதியைச் சோதிக்கும் ஆற்றல் மிக்க ஜனக
மன்னர்; ஜனகருக்கு நிகராக ஆன்மிகம் பேசும் சுலபா’ எனும்
மங்கை நல்லாள் [சாந்தி பர்வம்].
வியாச முனிவர் ஞானம் எல்லையற்றது, 
பால் பகுப்புக்கும்,வருணப் பகுப்புக்கும்
அப்பாற்பட்டது என நிறுவுகிறார்.

நால்வருணத்தாரின் சமூக -ஆன்மிகப் பொறுப்புகள்
சொல்லப்படுவதாக எடுத்துக்கொண்டால் முரண் 
தோன்றாது. பிறவியால் முக்தி கிடைத்து விடாது, 
தகுதியால்தான் முக்தி என்பதில் எல்லா நூல்களும் 
மிகத் தெளிவாக உள்ளன.

அரங்கனார் விச்வ சப்தத்திலிருந்து தொடங்குவர் என
நினைக்கிறேன்


தேவ்

Iyappan Krishnan

unread,
Aug 19, 2013, 2:58:21 PM8/19/13
to தமிழ் வாசல், min tamil, vallamai, தமிழ் சிறகுகள்

2013/8/20 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>

இதில் வேடிக்கை என்னவென்றால் ஸ்ரீஆதிசங்கரரே வெட்ட வெளிச்சமாக பிறவியெனும் தர்மத்தில் இந்த உலகின் கண் வந்து பிறந்த அனைத்து உயிர்களும் சொல்ல அதிகாரம் உடையன என்று பாஷ்யமே எழுதி வைத்திருக்கும்போதும் இப்படி ஒரு கோளாறு! அந்தோ தெய்வமே! 

அவரு சொல்லிட்டா ஆய்டுச்சா ?

உங்களுக்கு எதுவுமே தெரியலை ஸ்வாமி.  பெண்களுக்கு எந்த அதிகாரமும் கிடையாதுன்னு கார்முக கலியேந்திரப் புராணத்தில் கலிபகவானுக்கு பகவான் ஸ்ரீமன் நாராயணனே நேரடியா சொல்லிருக்கிறார். நாராயணன் பெரியவரா, இல்லை ஆதிசங்கரர் பெரியவரா

#இப்படித்தான் பதில் வரும் ஏன்னு கேட்டா

Iyappan Krishnan

*>*<*
"பொல்லாங்கு சொல்பவர்கள், தன்முதுகை பார்ப்பதில்லை
நல்லோர்கள் அவர் பேச்சை எந்நாளும் கேட்பதில்லை "
*>*<*
Dont argue with ppl who say "World is flat" but advise them not to reach the edge of the world
*>*<*
**

shylaja

unread,
Aug 20, 2013, 3:13:57 AM8/20/13
to தமிழ் வாசல், min tamil, vallamai, தமிழ் சிறகுகள்
த்ருடபக்தி நின்னல்லி பேடி
நான் அடிகெரகுவேனய்ய அனுதின ஹாடி
கடெகண்ணிலே நன்ன நோடி
பிடுவே கொடு நின்ன த்யானவ மனசுசி மாடி (தாஸன)

எப்போதும் மாறாதிருக்கும் திடமான பக்தியை உன்னிடத்தில் வேண்டி,
நான் உன் பாதத்தில் தினமும் விழுந்து உன் நாமத்தை பாடிக்கொண்டிருப்பேன்.
உன் கடைக்கண்ணால் என்னை பார்த்து
நான் என்றென்றும் உன்னை தூய மனதோடு நினைத்துக்கொண்டிருக்குமாறு அருள்புரிவாய்
 
என்கிறார்புரந்தரதாசர்.வாயினால் பாடி என ஆண்டாள் சொல்வதும் இதைதானோ?  வேற ஒண்ணுமில்லைனாலும் பிரதானமாய் ரசனை ஏகப்பட்டது இருக்கு. ஆகவே   அரங்கனார் மொழிவதை ஆர்வமுடன் வாசிப்பேன்!


2013/8/16 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
ரொம்ப நாளாக இப்படி ஓர் ஆசை. ஸ்ரீமந் நாராயணனின் நாமங்களை ஒவ்வொன்றாகக் கனியைச் சுவைப்பது போல் நன்கு ரசித்துச் சுவைக்க வேண்டும் என்று. ‘நாம் ஏன் அதைப் பற்றி எழுத வேண்டும்? ஒன்று முழுக்க நம்பிக்கையாளனாக இருக்க வேண்டும். அது இல்லை என்பது நிச்சயம். பின்னர் எதற்கு இந்த இரண்டுங் கெட்டான் வேலை? என்று தயக்கம். 

ஆனாலும் எவ்வளவு பழங்காலம் தொட்டோ எத்தனையோ மகான்கள், வித்வான்கள், வேதாந்திகள் எல்லாம் வாய் கொள்ளாமல் சுவைத்த தீஞ்சுவைக் கனிகள் ஆயிரம் இவை. அதில் ஏதோ ஆசை பற்றி எறும்புகளும் மொய்க்கும் அன்றோ! அந்தக் கணக்கில் நாமும் சுவைக்கலாமே என்று நப்பாசை. 

பழங்காலம் என்றால் நான் சொல்வது பகவத்பாத ஸ்ரீ ஆதிசங்கரரின் காலத்திற்கும் மிகப்பழங்காலத்திலிருந்தே மிகவும் மக்களை, பல்வேறுபட்ட சித்தாந்திகளெல்லாம், சாதாரண பொது ஜனங்கள், அறிவின் உச்சத்தில் திகழும் மகா ஞானிகள் என்ற வேறுபாடின்றிக் கொண்டாடிக்கொண்டு வரும் திவய நாமாக்கள் இந்த ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம். 

ஹிந்து மதப் பொதுவான நூல்களில் இது தலையாயது. 

அனைவருக்கும் பொது என்பதால் விஷயம் ஏதோ லேசானதோ என்றால் அப்படி இல்லை. அனைத்து வேதாந்த உண்மைகளும் உள்ளடங்கிய சிறந்த நூல் இதுவாகும். அதனால்தான் ஸ்ரீ ஆதிசங்கரரே முதன்முன்னம் உரை எழுதியது இந்த ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமத்திற்குத்தான். 

ஆன்மிகம் என்று மட்டும் இல்லாமல் மருத்துவத் துறையிலும் பழங்காலத்தில் தீர்க்கவியலா சில நோய்களுக்கு இந்த ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தைப் படித்தல் என்பதையே வைத்தியமாக விதித்துள்ளனர் என்பதை சரக ஸம்ஹிதை என்னும் பழங்காலப் பெரும் மருத்துவ கிரந்தத்தைப் பார்த்தாலே தெரியும். மனோ வியாதிகள், தீய கனவுத் தொல்லைகள், பீதியினால் ஏற்படும் உள்ளக் கோளாறுகள் என்று பலவற்றிற்கும் கைகண்ட மருந்தாக வழிவழி மக்களின் அனுபவமாக இருப்பது ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம படனம். 

என்னைப் பொறுத்தவரையில் உலக ஆசைகள் என்னும் பவ நோயைவிடக் கொடிய நோய் என்ன உண்டு? அறியாமை இருளை விட பேய் பிசாசுகளின் பிறப்பிடம் வேறு என்ன வேண்டும்? இந்த நோயை அகற்றும் உன்னத மருந்தும், இந்த இருளை ஓட்டும் உத்தம ஒளியும் ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாமம் என்று நிச்சயம் சொல்லலாம். 

நான் படிக்கப் போவது இந்த உரை அந்த உரை என்று இன்றி பகவந் நாமங்கள் ஆயிரம். அதாவது அங்கங்கே எங்கெங்கே என்ன என்ன உரைகள் உண்டோ, என் மனம் போனது மார்க்கம் என்று படிக்கலாம் என்று எண்ணம். 

என்னைப் பொறுத்தவரையில் நான் ரசிப்பது அத்தனை உரைகளையும். என்னால் ஒரு சித்தாந்தவாதியாக இருக்க முடியவில்லை. ரசிக்கக் கொட்டிக் கிடக்கிறது. அப்புறம் என்ன இந்தக் கட்சி அந்தக் கட்சி என்று என்பது என் எண்ணம். 

ரசனைதான் பிரதானம். 

உனக்கு என்ன யோக்கியதை இருக்கிறது என்று விரலை நீட்டத் துடிக்கும் பேர்வழிகளுக்கு முதலிலேயே சொல்லிவிடுகிறேன். 

பகவந் நாமத்தில் ருசி - அது ஒன்றுதான் என்னுடைய யோக்கியதை. 

நீ ஆஸ்திகனா? என்று கேட்டால் இல்லை என்பது என் பதில். நாஸ்திகனா? என்று கேட்டால், அப்படிச் சொல்வதுதான் அதிகப் பொருத்தமானது என்றுதான் சொல்வேன். 

ஆமாம். என்று கடவுள் என்ற ஒன்றை நாம் நம் அனுபவத்தில் சாக்ஷாத்கரிக்கிறோமோ, நேரடியாக உணர்கிறோமோ அன்றுதானே நாம் உண்மையில் நம்மை ஆஸ்திகர் என்று சொல்லிக்கொள்ள முடியும். அதுவரையில் நாத்திகம்தானே, சொன்னாலும் சொல்லாவிட்டாலும். 

சரி வேண்டாம் ஆரம்பிக்காதே என்று சொல்பவர்கள் இப்பொழுதே எதிர்ப்பு சொல்லிவிடுங்கள். அப்புறம் வருத்தப் படாதீர்கள். 

*** 

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் 


--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.



--
 

Mohanarangan V Srirangam

unread,
Aug 20, 2013, 3:26:30 AM8/20/13
to தமிழ் வாசல், min tamil, vallamai, தமிழ் சிறகுகள்
 வேற ஒண்ணுமில்லைனாலும் பிரதானமாய் ரசனை ஏகப்பட்டது இருக்கு.<<<<< 

வேற ஒன்றும் வேண்டாம்மா. இந்த ரசனை போதும். கொடுத்து வைத்த புண்ய ஆத்மா. 

வாயினால் பாடி 
மனத்தினால் சிந்திக்கப் 
போய பிழையும், 
புகுதருவான் நின்றனவும் 
தீயினில் தூசு ஆகும். 
செப்பு (ஏல்) ஓர்ந்து. 

***




2013/8/20 shylaja <shyl...@gmail.com>

shylaja

unread,
Aug 20, 2013, 4:31:55 AM8/20/13
to தமிழ் வாசல், min tamil, vallamai, தமிழ் சிறகுகள்
    பெரியாழ்வார் பாசுரங்கள் சற்றே நினைவிற்கு வநதன்..
 


காசும் கறையுடைக் கூறைக்கும் அங்கோர் கற்றைக்கும்
ஆசையினால்*அங்க வத்தப் பேரிடும் ஆதர்காள்!*
கேசவன் பேரிட்டு நீங்கள் தேனித் திருமினோ*
நாயகன் நாரணன் தம்அன்னை நரகம்புகாள்.              

அங்கொரு கூறை அரைக்குடுப் பதனாசையால்*
மங்கிய மானிட சாதியின் பேரிடும் ஆதர்காள்!*
செங்கணெடுமால்! சிரீதரா! என்று அழைத்தக்கால்*
நங்கைகாள்! நாரணன் தம்அன்னை நரகம்புகாள்.          

உச்சியில் எண்ணெயும் சுட்டியும் வளையும் உகந்து*
எச்சம் பொலிந்தீர்காள்! எஞ்செய்வான் பிறர்பேரிட்டீர்?*
பிச்சை புக்காகிலும் எம்பிரான் திருநாமமே
நச்சுமின்* நாரணன் தம்அன்னை நரகம்புகாள்.             

மானிட சாதியில் தோன்றிற்று ஓர்மானிட சாதியை*
மானிட சாதியின் பேரிட்டால் மறுமைக் கில்லை*
வானுடை மாதவா! கோவிந்தா! என்று அழைத்தக்கால்*
நானுடை நாரணன் தம்அன்னை நரகம்புகாள்


2013/8/20 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
 வேற ஒண்ணுமில்லைனாலும் பிரதானமாய் ரசனை ஏகப்பட்டது இருக்கு.<<<<< 




--
 

Mohanarangan V Srirangam

unread,
Aug 20, 2013, 4:37:48 AM8/20/13
to vallamai, தமிழ் வாசல், min tamil, தமிழ் சிறகுகள்
இனிமை.. இனிமை... இனிமை.. 

***



2013/8/20 shylaja <shyl...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

Mohanarangan V Srirangam

unread,
Aug 20, 2013, 7:49:31 AM8/20/13
to min tamil, தமிழ் வாசல், vallamai, தமிழ் சிறகுகள்
கேட்டதெல்லாம் கேட்டான் தருமன். ஆனால் மனம் அமைதியுறவில்லை. 

வழி வழியாக வரும் சமுதாய ஒப்பந்த அமைப்புகளாகிய வழக்கமும், சட்டமும், நெறிகளும் வேண்டியது பார்த்தாயிற்றே! 

தன் பெயரே தர்ம புத்திரன். தர்மங்களின் பெயரால் தன் குடும்பமே நடுத்தெருவில் வந்து நின்ற கதை மறந்துவிடுமா என்ன? 

தர்மத்திற்கு மேல் தர்மமாகத் தன் உயிர் ஊசலாடும் நிலையிலும் அர்ஜுன பாண தீர்த்தமாகப் பொழிகின்றாரே பாட்டன், இவரே அதே தர்மங்கள், வழிவழி வழக்கங்கள் என்று சொல்லிக் கட்டுண்டு கண்ணுக்கும் கருத்திற்கும் நேரே அநியாயம் நடந்ததைத் தட்டிக் கேட்க முடியாமல் வாயடைத்து நின்றவர்தாமே! 

மறைகிறான் மஹாவிரதன். உயிர் போகும் முன் போய்க் கேள் என்று கேசவன் சொல்லத் தாங்கள் வந்து கேட்ட பொழுது கோவிந்தன் புகழ் பாடிக் கண்ணீரும் கம்பலையுமாய் நின்றாரே! 

விதியால் ஏவப்பட்டு அன்றோ தன் வாழ்வும், ஏன் அனைத்து பிராணிகளின் வாழ்வும் இயங்குகின்றன. நேற்று காட்டில் காய் கனி கிழங்கு, இன்று அரச கட்டில் என்று தன்னை விதி வைக்கும் சதுரங்கக் காய் என்று தானே சொல்ல வேண்டும். எவ்வளவு தர்மங்கள் கேட்டு என்ன.. எத்தனை தர்மங்கள் இருந்தும் என்ன... இயங்கும் ஒரே தர்மம் சூட்சுமமான விதியின் தர்மம் தானே. அதை யாரும் சாத்திரம் செய்ய முடியாதே. 

நான்கு வேதங்களையும் முற்றும் ஓதின ஒருவன் கள்ளுக்கு அடிமையாகிறான். கள்ளும் இறைச்சியும் விற்கும் ஒருவன் கருத்தெல்லாம் கடவுளிடம் வைத்துத் தூய்மையின் உருவமாகிறான். 

உலகையாளும் மன்னன் தன் புலன்களை ஆளத்தெரியாமல் பெண்ணிற்கும் மண்ணிற்கும் பொன்னிற்கும் அடிமையாகிப் புன்மை அடைகிறான். 

தன் உடலே தன் வசமற்ற வேசியோ தன் உள்ளத்தைப் பரம்பொருளுக்கு நிவேதனமாக்கி உன்னதம் அடைகிறாள். 

ஆனால் வழிவழியாக மனிதர்கள் யாத்த தர்மங்களோ, மனிதருக்கு விதித்த தர்மங்களோ வண்டி வண்டியாய் இருக்கின்றன. இதுதானே பாட்டன் கூறிய இதுகால்வரை கேட்ட அறப்பொழிவு உணர்த்துவது. 

இன்றிருந்து நாளை மறையும் உடலில் கோத்து வைத்த தர்ம படலங்கள் எண்ணிறந்தவை. 

ஆனால் என்றும் அழியாத ஆன்மாவின் இயல்பில் செழிக்கும் அந்த ஒரே தர்மம் எது? 

வந்து போகும் வாழ்க்கைக்குக் கடலாய் தர்மங்கள். பிறவியால் வராத வழியாகவும், மரணத்தால் போகாத நிலையாகவும் உள்ள ஆத்ம கடைத்தேற்றத்திற்கு உத்தமமான அந்த தர்மம் என்ன? 

விதியின் கைப்பாவை என்று உள்ள வாழ்க்கையில் அனைத்தும் அசுபம்தானே. எது சுபம் என்று தன்னியல்பிலேயே உணரத்தக்கதாய் இருக்கிறதோ அந்த சுபம் என்பதை மானிடர் எப்படி அடையலாம்? 

சொல்லப்பட்டவற்றில் இல்லை சூட்சுமம். சொல்லில்தான் இருக்கிறது. ஆம். சிறைக்கைதியாகிக் கர்மச் சங்கிலிகளில் பிணைப்புண்டு பிறவியினின்றும் பிறவிக்கு பிணைக்கைதியாகி இழுப்புண்ணும் நம் ஜீவன் ஏதோ ஒரு சொல்லை மறந்துவிட்டது. 

அதைச் சொன்னால் சங்கிலிகள் விட்டுப் போகும். சிறைக் கதவுகள் விலகும். சிறகு முளைக்கும். சிந்தை சிறக்கும். சிறப்பின் பாதை திறக்கும். சவமெனக் கிடந்த வாழ்வு சிவமெனச் சிறந்து பொலியும். அந்தச் சொல்? சொல் ஒன்று வேண்டும். தேவ சக்திகளை நம்முள்ளே நிலைபெறச் செய்ய சொல் ஒன்று வேண்டும். தேடித் தேடிக் கடைசியில் வாயில் இருக்கிறது வாய்மை. சொல்லில் இருக்கிறது சுதந்திரம். கிம் ஜபந் முச்யதே ஜந்து: ஜன்ம ஸம்ஸார பந்தநாத்? எதைச் சொல்லுவதால் பிறவி உயிர்கள் பிறவிச் சுழல் என்னும் கடுந்தளைக் கட்டு அவிழ விடுதலை பெறலாகும்? 

அதை அறிவானா நம் பாட்டன்? கேட்டுப் பார்ப்போமா? பதில் வருமா? அல்லது பழைய தர்மக்கட்டு ஒன்றை விரிப்பானா? 

கேட்டதெல்லாம் கேட்டு மீண்டும் கேட்கிறான் யுதிட்டிரன் என்கிறார் வைசம்பாயனர். என்ன கேட்டான் அப்படி? 

*** 


Sk Natarajan

unread,
Aug 20, 2013, 9:52:30 PM8/20/13
to தமிழ் வாசல், min tamil, vallamai, தமிழ் சிறகுகள்
அருமையான எண்ண  வெளிப் பாடுகள்


என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்


Mohanarangan V Srirangam

unread,
Aug 21, 2013, 10:02:00 AM8/21/13
to min tamil, தமிழ் வாசல், vallamai, தமிழ் சிறகுகள்
ஆறு கேள்விகளைக் கேட்கிறான் தருமன். 

1) கிம் ஏகம் தைவதம் லோகே? 

2) கிம் வா அபி ஏகம் பராயணம்? 

3) ஸ்துவந்த கம் ப்ராப்நுயுர் மாநவா: சுபம்? 

4) கம் அர்ச்சந்த: ப்ராப்நுயுர் மாநவா: சுபம்? 

5) கோ தர்ம: ஸர்வ தர்மாணாம் பவத: பரமோ மத:? 

6) கிம் ஜபந் முச்யதே ஜந்து: ஜந்ம ஸம்ஸார பந்தநாத்? 

*

கிம் ஏகம் தைவதம் லோகே? 

லோகத்தில் ஒரே தெய்வம் எது? - இது என்ன கேள்வி புரியவில்லை. லோகத்தில் ஒரே தெய்வம் என்றால்? லோகத்தில் எவ்வளவோ நாடுகள், மக்கள், பண்பாடுகள், மதங்கள், அந்தந்த மதங்களில் தெய்வங்கள். லோகத்தில் ஒரே தெய்வம் என்றால் என்ன சொல்வது? 

லோகம் லோகம் என்றால் கடல் சூழ்ந்த இந்தப் பரந்த பூமி என்று பொருளன்று. லோகம் என்றால் இங்கு பொருளே வேறு. 

Statistics என்னும் துறையில் universe என்று ஒரு சொல்லைப் பயன்படுத்துவார்கள். அங்கு உடனே ஆஹா கலாக்ஸி எல்லாம் இருக்குமே, வானவெளி மண்டலம், மில்கி வே என்றெல்லாம் அந்தத் துறையில் அந்த வார்த்தை வந்ததும் பொருள் செய்துகொள்ளக் கூடாது. அங்கு யுனிவர்ஸ் என்றால் ஸ்டாடிஸ்டிகள் ஆய்வுக்கு நிர்ணயிக்கப்படும் தகவல் பரப்புக்குப் பெயர் யுனிவர்ஸ் என்பது. 

அது போல் இங்கு ’லோகம்’ என்றால் கண்ணுக்குப் புலப்படாத அதீந்திரிய விஷயங்களைப் பற்றிச் சாத்திரங்களால் நிர்ணயிக்கப்படும் பொருள் நிச்சயங்களால் ஆன அறிவுத்தளம் என்று பொருள். அதாவது கடவுளைப்பற்றிய அறிவை ஏற்படுத்தும் பிரமாண நூல்களின் லோகம் என்பது அர்த்தம். 

‘அறிவை ஏற்படுத்தும் பதினான்கு வித்யா ஸ்தானங்கள்’ என்று பொருள் சொல்லுகிறார் ஸ்ரீ ஆதிசங்கரர். ‘அறிவுக்குக் காரணமான பதினான்கு வித்யா ஸ்தாங்களிலும் சிறந்தவராக நிர்ணயிக்கப்படும் அந்த ஒரே கடவுள் யார்?’ என்று ஸ்ரீ ஆதிசங்கரர்  விளக்கமாக இந்தக் கேள்வியைப் புரியும்படி உரையில் எழுதிகிறார். 

‘சாத்திரங்களில் சொல்லப்பட்ட ஒப்புயர்வற்ற கடவுள் யார்?’ என்பது ஸ்ரீபராசர பட்டரின் உரையில் இந்தக் கேள்வியின் வடிவம். 

பதினான்கு வித்யா ஸ்தானங்கள் என்று ஸ்ரீ ஆதிசங்கரர் சொன்ன கணக்கு என்ன என்ன? 

நான்கு வேதங்கள், ஆறு வேதாங்கங்கள், மீமாம்ஸை, நியாய் சாஸ்திரம், தர்ம சாஸ்திரம், புராணம் ஆக மொத்தம் பதினான்கு. இந்தப் பதினான்காலும் ஒட்டு மொத்தமாக அர்த்த நிர்ணயம், தாத்பர்யம் என்றபடிச் சிறந்தவராகக் கூறப்பட்ட அந்தக் கடவுள் யார்? என்று கேட்கிறான் தருமன் என்கிறார் ஸ்ரீ ஆதிசங்கரர். 

இப்பொழுது இந்தக் கேள்வி தெளிவாகப் புரிகிறது. 

ஐந்தாவது கேள்வியில் ‘பவத: பரமோ மத:’ என்று ஒரு சொல் கோவை இருக்கிறது. அதற்கு ’தாங்கள் உங்களுக்கென்று உயர்ந்தது என்று கொண்டிருக்கும் கருத்து’ என்று பொருள். 

அதாவது தெய்வத்தன்மை பூரணமாகவும், தத்வ சாத்திரங்களால் மிகச் சிறந்த தெய்வம் என்று நிர்ணயிக்கப்பட்டிருப்பது என்று தாங்கள் எந்தத் தெய்வத்தை உங்கள் கருத்து முடிவாகக் கொண்டிருக்கிறீர்கள்? என்பது ஸ்ரீபராசர பட்டரின் உரை விளக்கும் கேள்வியின் வடிவம். 

’பவத: பரமோ மத:’ என்னும் பகுதியை எல்லாக் கேள்விகளும் சேர்த்து படிக்க வேண்டும் என்று சொல்கிறார் ஸ்ரீபராசர பட்டர். 

ஆக பீஷ்மர் மரபு சார்ந்த அறிவனைத்தும் திரண்ட பெருங்கடல் என்று ஸ்ரீகிருஷ்ணன் சொல்கிறார். பீஷ்மர் மறைந்துவிட்டால் அவருக்குத் தெரிந்த மரபுச் செல்வங்கள் அனைத்தும் மறைந்துவிடும். எனவே அந்த செல்வங்களை பின்வரும் சந்ததிகள் இழக்காவண்ணம் காக்க நீ விரும்பினால் போ போய் பீஷ்மரிடம் சென்று அனைத்தையும் கேள் என்பது ஸ்ரீகிருஷ்ணனின் அறிவுரை தருமனுக்கு. 

அச்சுதன் உரைத்தவண்ணமே அறப்புதல்வன் கேட்கிறான். இவ்வளவு படித்த பாட்டன் தன் நிச்சயமாக எந்தக் கருத்தை, எந்த நிச்சயத்தைக் கொண்டிருக்கிறார் என்று அறிய வேண்டும் என்பது தருமனின் வேட்கை. 

இதை நன்கு விளக்கிக் காட்டுகின்றனர் உரையாசிரியர்களாகிய ஸ்ரீஆதிசங்கரரும், ஸ்ரீபராசர பட்டரும். முன்னவர் அத்வைத ஆசாரியர். பின்னவர் விசிஷ்டாத்வைத ஆசாரியர். பரம தத்துவ நிலையைப் பற்றிய சித்தாந்த முடிவில் இருவருக்கும் கருத்து வேறுபாடு. ஆனால் வேத வேதாந்த சாத்திரங்களின் அடிப்படையில் உயர்ந்த மோக்ஷத்திற்காக வேண்டி வழிபடத்தக்கதாக நிர்ணயிக்கப்பட்ட அந்தச் சிறந்த தெய்வம் எது? என்னும் விஷயத்தில் இருவருக்கும் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை போலும்! 

இவர்கள் என்ன? சங்கப் புலவர்களே கூட இந்தக் கருத்தைத்தான் மோக்ஷம் என்னும் உயர்ந்த இலட்சியத்திற்கு அருள் செய்யும் தெய்வம் என்னும் விஷயத்தில் கொண்டிருந்தார்களோ என்று நினைக்க வேண்டியிருக்கிறது. பரிபாடலில் ‘நாறிணர்த் துழாயோன் நல்கின் அல்லதை ஏறுதல் எளிதோ வீறுபெறு துறக்கம்?’ என்றல்லவா கேட்கின்றனர்! 

வீறுபெறு துறக்கம் -- மீண்டும் பிறவிச் சுழலில் திரும்பி வந்து சிக்காத உயர்ந்த மோக்ஷம். 

ஸ்ரீமத்வாசாரியரின் துவைத சித்தாந்தப்படி இந்த ஸஹஸ்ர நாமத்திற்கு உரை எழுதியிருக்கிறார்கள். அவை என்னிடம் இப்பொழுது இல்லை. எனவே ஒப்பீட்டுக்கு அந்தக் கருத்துகளை என்னால் அளிக்கமுடியவில்லை. மேலும் இந்த இழையில் என் மனம் போன போக்கில் நான் ரசித்துப் படிப்பது என்பதுதான் என் நோக்கம். எனவே அனைத்து உரைக் களஞ்சியம் என்று ஆக்கும் நிர்பந்தம் எனக்கும் இல்லை. 

அத்வைதம் என்னும் பார்வையில் ஒருவர் பார்க்கிறார். விசிஷ்டாத்வைதம் என்னும் பார்வையில் ஒருவர் பார்க்கிறார். எவற்றை? ஒரே கடவுளின் ஆயிரம் நாமங்களை. 

இரண்டுமே அத்வைதம்தான். ஒன்று அத்வைதம் அப்படியே. மற்றொன்று சித் அசித் ஆகிய இரண்டையும் என்றும் தன்னைவிட்டுப் பிரியாத உடலாகக் கொண்ட அத்வைதம். 

ஸ்ரீமத்வரின் கருத்து நேர் எதிரானது. துவைதம். அபேதம் என்பது சரியில்லாத கருத்து. உயிருக்கும் கடவுளுக்கும் இடையே பேதம், கடவுளுக்கும் உலகத்திற்கு இடையே பேதம். உயிர்களுக்குள் பேதம். உயிர்கள், உயிரற்ற பொருள் இவற்றிடையே பேதம். 

இவற்றைத் தவிர சுத்தாத்வைதம், பேதாபேதம், அசிந்த்ய பேதாபேதம் என்று பல. 

எனக்கு பாரத நாட்டின் மெய்ப்பொருள் ஆய்வுகளில் மிகவும் பிடித்ததே இந்த மாதிரியான பார்வைகளின் பன்மைதான். எவ்வளவு சித்தாந்தங்கள்! எவ்வளவு ஆகமங்கள்! எவ்வளவு கடவுள்இயல் ஆய்வுகள்! 

’யோசிக்கும் வேளையில் பசி தீர உண்பதும் உறங்குவதுமாக முடியும்’ என்று ஸ்ரீ தாயுமானவர் சொன்னபடிதான் வாழ்வு போகிறது என்றாலும் இவற்றில் ஆழும் போது அமர வாழ்வின் அடுப்பில் உலை கொதிக்கத்தான் செய்கிறது. 

Parvathy Ramachandran

unread,
Aug 21, 2013, 1:29:16 PM8/21/13
to vall...@googlegroups.com

பக்தி என்பது லவலேசம் இல்லாவிட்டாலும் இறைவனின் திருநாமங்களின் பெருமை குறித்துப் பெரியோர் பலர் கூறக் கேட்கும் பாக்கியம் கிட்டியிருக்கிறது. அரங்கனாரின் அமுதூறும் மொழிகளால் ஆயிரம் நாமங்களின் மகிமை கேட்க ஆவலுடன் காத்திருக்கிறேன். என் போன்றவர்களையும் கடைத்தேற்றும் பொருட்டு மிக‌எளிமையாகவும் இனிமையாகவும் விளக்கி வருகிறீர்கள். சிரம் தாழ்ந்த பல்லாயிரம் கோடி நன்றிகளுடனும் வணக்கங்களுடனும் தொடர்ந்து படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.

அன்புடனும் வணக்கத்துடனும்,
பார்வதி இராமச்சந்திரன்.

On Friday, 16 August 2013 20:01:35 UTC+5:30, Mohanarangan V Srirangam wrote:
ரொம்ப நாளாக இப்படி ஓர் ஆசை. ஸ்ரீமந் நாராயணனின் நாமங்களை ஒவ்வொன்றாகக் கனியைச் சுவைப்பது போல் நன்கு ரசித்துச் சுவைக்க வேண்டும் என்று. ‘நாம் ஏன் அதைப் பற்றி எழுத வேண்டும்? ஒன்று முழுக்க நம்பிக்கையாளனாக இருக்க வேண்டும். அது இல்லை என்பது நிச்சயம். பின்னர் எதற்கு இந்த இரண்டுங் கெட்டான் வேலை? என்று தயக்கம். 

ஆனாலும் எவ்வளவு பழங்காலம் தொட்டோ எத்தனையோ மகான்கள், வித்வான்கள், வேதாந்திகள் எல்லாம் வாய் கொள்ளாமல் சுவைத்த தீஞ்சுவைக் கனிகள் ஆயிரம் இவை. அதில் ஏதோ ஆசை பற்றி எறும்புகளும் மொய்க்கும் அன்றோ! அந்தக் கணக்கில் நாமும் சுவைக்கலாமே என்று நப்பாசை. 

பழங்காலம் என்றால் நான் சொல்வது பகவத்பாத ஸ்ரீ ஆதிசங்கரரின் காலத்திற்கும் மிகப்பழங்காலத்திலிருந்தே மிகவும் மக்களை, பல்வேறுபட்ட சித்தாந்திகளெல்லாம், சாதாரண பொது ஜனங்கள், அறிவின் உச்சத்தில் திகழும் மகா ஞானிகள் என்ற வேறுபாடின்றிக் கொண்டாடிக்கொண்டு வரும் திவய நாமாக்கள் இந்த ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம். 

ஹிந்து மதப் பொதுவான நூல்களில் இது தலையாயது. 

அனைவருக்கும் பொது என்பதால் விஷயம் ஏதோ லேசானதோ என்றால் அப்படி இல்லை. அனைத்து வேதாந்த உண்மைகளும் உள்ளடங்கிய சிறந்த நூல் இதுவாகும். அதனால்தான் ஸ்ரீ ஆதிசங்கரரே முதன்முன்னம் உரை எழுதியது இந்த ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமத்திற்குத்தான். 

ஆன்மிகம் என்று மட்டும் இல்லாமல் மருத்துவத் துறையிலும் பழங்காலத்தில் தீர்க்கவியலா சில நோய்களுக்கு இந்த ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தைப் படித்தல் என்பதையே வைத்தியமாக விதித்துள்ளனர் என்பதை சரக ஸம்ஹிதை என்னும் பழங்காலப் பெரும் மருத்துவ கிரந்தத்தைப் பார்த்தாலே தெரியும். மனோ வியாதிகள், தீய கனவுத் தொல்லைகள், பீதியினால் ஏற்படும் உள்ளக் கோளாறுகள் என்று பலவற்றிற்கும் கைகண்ட மருந்தாக வழிவழி மக்களின் அனுபவமாக இருப்பது ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம படனம். 

என்னைப் பொறுத்தவரையில் உலக ஆசைகள் என்னும் பவ நோயைவிடக் கொடிய நோய் என்ன உண்டு? அறியாமை இருளை விட பேய் பிசாசுகளின் பிறப்பிடம் வேறு என்ன வேண்டும்? இந்த நோயை அகற்றும் உன்னத மருந்தும், இந்த இருளை ஓட்டும் உத்தம ஒளியும் ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாமம் என்று நிச்சயம் சொல்லலாம். 

நான் படிக்கப் போவது இந்த உரை அந்த உரை என்று இன்றி பகவந் நாமங்கள் ஆயிரம். அதாவது அங்கங்கே எங்கெங்கே என்ன என்ன உரைகள் உண்டோ, என் மனம் போனது மார்க்கம் என்று படிக்கலாம் என்று எண்ணம். 

என்னைப் பொறுத்தவரையில் நான் ரசிப்பது அத்தனை உரைகளையும். என்னால் ஒரு சித்தாந்தவாதியாக இருக்க முடியவில்லை. ரசிக்கக் கொட்டிக் கிடக்கிறது. அப்புறம் என்ன இந்தக் கட்சி அந்தக் கட்சி என்று என்பது என் எண்ணம். 

ரசனைதான் பிரதானம். 

உனக்கு என்ன யோக்கியதை இருக்கிறது என்று விரலை நீட்டத் துடிக்கும் பேர்வழிகளுக்கு முதலிலேயே சொல்லிவிடுகிறேன். 

பகவந் நாமத்தில் ருசி - அது ஒன்றுதான் என்னுடைய யோக்கியதை. 

நீ ஆஸ்திகனா? என்று கேட்டால் இல்லை என்பது என் பதில். நாஸ்திகனா? என்று கேட்டால், அப்படிச் சொல்வதுதான் அதிகப் பொருத்தமானது என்றுதான் சொல்வேன். 

ஆமாம். என்று கடவுள் என்ற ஒன்றை நாம் நம் அனுபவத்தில் சாக்ஷாத்கரிக்கிறோமோ, நேரடியாக உணர்கிறோமோ அன்றுதானே நாம் உண்மையில் நம்மை ஆஸ்திகர் என்று சொல்லிக்கொள்ள முடியும். அதுவரையில் நாத்திகம்தானே, சொன்னாலும் சொல்லாவிட்டாலும். 

சரி வேண்டாம் ஆரம்பிக்காதே என்று சொல்பவர்கள் இப்பொழுதே எதிர்ப்பு சொல்லிவிடுங்கள். அப்புறம் வருத்தப் படாதீர்கள். 

Mohanarangan V Srirangam

unread,
Aug 21, 2013, 1:38:50 PM8/21/13
to min tamil, தமிழ் வாசல், vallamai, தமிழ் சிறகுகள்
கிம் வா அபி ஏகம் பராயணம்? 

மனிதன் அடைய வேண்டிய சிறந்த அந்த ஒரே உறுதிப்பொருள் எது? எதற்கு அழிவே இல்லையோ, எது ஆநந்தமே வடிவானதோ, எது நித்தியமும், நிர்மலமுமான உயர்ந்த இலட்சிய நிலையோ அந்த ஒரே பர அயநமாகிய பராயணம் எது? 

பரம புருஷார்த்தம் எது? என்று கேள்வியை விளக்குகிறார் ஸ்ரீபராசர பட்டர். இங்கும் ‘பவத: பரமோ மத:’ என்பதைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதாவது பீஷ்மரின் கருத்துப்படி எது சிறந்த வாழ்க்கை இலட்சியம்? 

யாரைத் துதிப்பதால் மனிதர் வாழ்க்கையில் சுபம் அடைகின்றனர்? சிலப்பதிகாரம் ஆய்ச்சியர் குரவை சொல்கிறது: ‘நாராயணா என்னா நாவென்ன நாவே?’ 

யாரையாவது துதித்துத்தான் ஆகவேண்டியிருக்கிறது வாழ்க்கையில். கடவுளைத் துதிப்பது கர்நாடகம் என்று முகம் சுளிப்பவர் காரியம் பழமாக முக்கியமான நபரின் காமக் கிழத்தியைத் துதி பாடினால்தான் காரியம் நடக்கும் என்று பல மணி நேரம் பக்குவமாய்த் துதிகற்கிறார். எதற்குத் துதி பாடுவது? என்று அப்பொழுது தோன்றுவதில்லை. காரணம் நடைமுறையில் நன்கு தெரிகிறது. எனவே இதற்குத்தான் இன்னாரை நாம் துதி பாடுகிறோம் என்று புரிகிறது. எல்லா இடத்திலும் யாரையோ இல்லாததும் மிகையானதும் பொல்லாததும் சொல்லிப் போற்றி ஒருவழியாய்க் காரியம் கைகூடி வரும் போது நிலைமையே மாறிவிடுகிறது. அதற்கான தேவையே இல்லை என்று ஆகிவிடுகிறது. ஆனாலும் துதி என்பதன் மகிமை ஒரு நாளும் மங்குவதில்லை. வாழ்க்கை முழுவதும் இப்படி வெற்றி டிப்ஸுகளில் ஓட்டிவிட்டுக் கடைசியில் பார்த்தால் வாழ்வில் என்ன சுபம் இருக்கிறது? ஆனால் யாரைத் துதித்தால் வாழ்வே சுபமாக சோபனம் என்று ஆகுமோ அந்த இலக்கு யார்? 

அதாவது சாதாரண லௌகிக உலகின் நடைமுறைகளை வைத்தே இங்கு கேள்விகள் எழும்புகின்றன. காரியார்த்தமான லௌகிக உலகம் யார் பேரைச் சொல்லியோ ஓடிக்கொண்டு இருக்கிறது. ஆனால் யார் பேரைச் சொல்ல வேண்டும்? 

எதோ நோக்கத்திற்கெல்லாமோ ஆளாகி ஓடும் உலகில் எந்த நோக்கம் அழியாத இலட்சியமாகும்? 

யார் யாரையோ துதித்து அலையும் வாழ்வில் யாரை உண்மையில் துதிக்க வேண்டும்? 

யார் யாரையோ எதை எதையோ வாங்கித் தந்து அர்ச்சனை செய்து குஷிப் படுத்தி வேலை சாதிக்க வேண்டியிருக்கிறது. ஆனால் அர்ச்சிக்கத் தகுந்த ஒரே இடம் எது? 

யார் யாருக்கோ கோஷம் போட்டு எதை எதையோ சாதித்துக்கொள்ள ஓடுகிறோம். யார் பெயரை ஜபிக்க வேண்டும்? நம் நிலைமையிலிருந்து உண்மையில் விடுதலை அடையவேண்டுமானால் யார் பெயரை ஜபித்தால் உண்மையான விடுதலை எது என்றே நமக்குப் புரியவரும்? 

அறவழி என்பது ஏன் முக்கியம் என்று எடுத்ததும் நம் கண்ணுக்குத் தெரிவதில்லை. அறத்தை மீறுபவன் உடனே ஐயோ என்று விழுந்தால் ஓஹோ இதுதான் அறமா என்று தெரியும். அப்படி எதுவும் நடப்பதில்லை. ஆனால் அறத்தை மீறி நடப்பவன் அதற்கான ஊதியத்தை வட்டியும் முதலுமாக அனுபவிக்கும் போது யாருக்கும் அது தெரிவதில்லை. இதனால் இதை இவன் அனுபவிக்கிறான் என்று பொதுப்பட ஒரு நிரூபணம் ஆக்க முடியவில்லை. ஆனால் அப்படியும் சில நேரங்களில் அந்த உதாரணங்கள் நம் கண் படவே நடக்கும் போது ஒரு நிமிஷ நேரம் ‘ஆஹா அறத்தின் கண்ணில் எதுவும் தப்புவதில்லை பார்த்தாயா!’ என்கிறோம். பிறகு பழைய கதை. 

காரணமும் காரியமும் காலத்தில் மிகவும் தள்ளி நடக்கும் தர்மம் என்ற விஷயத்திலேயே இப்படி என்றால் தர்மங்களுக்கெல்லாம் பெரிய தர்மமாகிய ஆன்ம நேயம் எது என்று எப்படி அறுதியிடுவது? அப்படி அறுதியிட்டாலும் அதில் தமக்கு விசுவாசம் பிறக்க வேண்டுமே. 

ஒருவன் எந்த நிலையில் சத்யம் ஒன்றிருக்கத் தனக்குப் பிடித்தது என்று ஒன்றைப் பேசலாம். ஆனால் மரிக்கும் தருவாயில் ஒருவன் பொய் சொல்லுவது கடினம். எனவே நமது பாட்டன் தன்னுடைய கருத்து என்ன என்பதை மரணத்தின் முற்றத்தில் கிடக்கும் இந்நிலையில் என்ன என்று சொன்னால் அது விசுவாசிக்கத் தக்கது அன்றோ? என்று கேட்கிறான் தருமன் ஆறு கேள்விகளையும். 

***





2013/8/21 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>

DEV RAJ

unread,
Aug 21, 2013, 10:45:42 PM8/21/13
to thamiz...@googlegroups.com, min tamil, vallamai, தமிழ் சிறகுகள்
On Wednesday, 21 August 2013 07:02:00 UTC-7, Srirangam V Mohanarangan wrote:
3) ஸ்துவந்த கம் ப்ராப்நுயுர் மாநவா: சுபம்? 
4) கம் அர்ச்சந்த: ப்ராப்நுயுர் மாநவா: சுபம்? 
 

ப்ராப்நுயு: மாநவா: சுப₄ம் - இதை இரு வினாக்களுடன்
அந்வயித்ததும், லோகம் விளக்கமும் மிக அருமை


தேவ்

Mohanarangan V Srirangam

unread,
Aug 22, 2013, 8:33:58 AM8/22/13
to தமிழ் வாசல், min tamil, vallamai, தமிழ் சிறகுகள்
அந்வயித்ததும், விளக்கமும் எனது இல்லை. உரையாசிரியர்களுடையவை.


2013/8/22 DEV RAJ <rde...@gmail.com>

Mohanarangan V Srirangam

unread,
Aug 22, 2013, 11:35:06 AM8/22/13
to min tamil, தமிழ் வாசல், vallamai, தமிழ் சிறகுகள்
ஆறு கேள்விகளில் பொது ஜன ஆன்மிகத்தை அடக்கிவிட்டான் தருமன். முதல் கேள்வியில் பொது மக்கள் ஆன்மிகத்திற்கும், வேதாந்தத்திற்கும் தொடர்பு தருகிறான். 

யாரைத் துதிப்பது? யாரை அர்ச்சிப்பது? வாழ்க்கை சுபமாகத் திகழ என்ன வழி? என்றெல்லாம் கேட்டுவிட்டு முதல் கேள்வியில் சாத்திரங்கள் ரீதியாகப் பார்த்தால் சிறந்த ஒரே தெய்வம் எது? அடைய வேண்டிய நிலை எது?  என்று வேதாந்த விசாரத்தோடு பொது மக்களை இணைக்கின்றான் தருமன். 

அனைத்து மக்களுக்கும் மோக்ஷம் அடையச் சிறந்த வழி கடவுள் நாம ஜபம் என்ற நிச்சயம் தருமனுக்கு இருக்கிறது. எனவே பிறப்பு இறப்பு கர்ம பலனால் மீண்டும் பிறப்பு இறப்பு என்ற ஸம்ஸாரத் தளைகளினின்றும் விடுதலை அடைய எதை ஜபிக்க வேண்டும்? என்று உயர்ந்த சாதனம் எதுவோ அதைக் கேட்கிறான். 

அடைய வேண்டிய உயர்ந்த நிலை, மிகச் சிறந்த பேறு என்னும் பரயாணம் எது என்றும் கேட்கிறான். 

ஆக தருமனின் கேள்விகளே வேதாந்த சாத்திரத்தின் அமைப்பில் பொது மக்களின் ஆன்மிகத்தை வடிவமைத்ததுபோல் இருக்கிறது. 

வேதாந்த சாத்திரம் ஆன்மிகவழிக்கு மூன்று அம்சங்கள் உண்டு என்கிறது. அவை என்ன என்ன? 

தத்துவம், ஹிதம், புருஷார்த்தம் என்பன அந்த மூன்று. 

அதாவது, the philosophy, the way and the goal என்று சொல்லலாம். 

தத்துவம், அதை அடையும் வழி, அதனால் அடையப்படும் உயர்ந்த நிலைப்பேறு என்று இந்த மூன்றின் அடிப்படையில் தன் கேள்விகளை அமைக்கிறான் தருமன். 

பதினான்கு வித்யா ஸ்தானங்களாகிய சாத்திரங்களும் ஒரே முடிவாகச் சொல்லும் அந்த உயர்ந்த தைவதம் எது? 

தத்துவம் பற்றிய கேள்வி. 

யாரை ஸ்துதிக்க வேண்டும், அர்ச்சிக்க வேண்டும்? எது மிகச் சிறந்த தர்மம்? எதை ஜபித்தால் ஜன்ம ஸம்ஸாரத் தளையினின்றும் விடுதலை கிட்டும்?

ஹிதம் பற்றிய கேள்விகள். 

அடைய வேண்டிய சிறந்த நிலை எது? 

புருஷார்த்தம் பற்றிய கேள்வி. 

இதில் தத்துவம் பற்றிய கேள்வியை எடுத்துக்கொண்டால் பதினான்கு வித்யா ஸ்தாங்களாகிய சாத்திரங்கள் அனைத்திலும் சிறந்த ஒ ரே கடவுளாகக் கூறப்பட்ட தைவதம் யார்? என்ற கேள்விக்கு விடையாக பீஷ்மர் உரைத்ததை விளக்கி ஸ்ரீ ஆதிசங்கரர் எழுதுகிறார் -- 

“ஆதியுகத்தின் தொடக்கத்தில் எல்லாவஸ்துவும் எவரிடமிருந்து உண்டாகின்றனவோ, திரும்பவும் யுக முடிவில், மஹா பிரளயத்தில் எவரிடத்தில் முடிவை அடைகின்றனவோ, இடையில் எவரிடத்தில் எல்லா வஸ்துவும் நிலைத்து நிற்கின்றனவோ, பதினான்கு விதயா ஸதானங்களால் கூறப்படுகின்றவரும் ஜக்ந்நாதரும் ஆன அந்தப் பரமாத்மா விஷ்ணு, அவருடைய ஸஹஸ்ர நாமங்கள் பாபத்தையும், பயத்தையும் போக்குபவை. ஓ பூபதியே! அந்த ஸஹஸ்ர நாமங்களை என்னிடமிருந்து கேட்பாயாக.” 

“ அந்த விஷ்ணு பரிசுத்தமான தீர்த்தாதிகளுக்கும் பரிசுத்தியைத் தருகின்றார். பரமானந்த வடிவான மங்கள ரூபி. அவர் தேவதைகளுக்கெல்லாம் தேவதை. அவர்தான் உயிர்கட்கு அழிவற்ற பிதா. அவர் ஒருவர்தாம் சிறந்த தெய்வம்.” 

இது ஸ்ரீ ஆதிசங்கர பாஷ்யம். 

கிட்டத்தட்ட இவ்வண்ணமே ஸ்ரீ பராசர பட்டரின் பாஷ்யமும் பேசுகிறது. 

எனக்கு இந்த இடத்தில் ஒரு கேள்வி. பீஷ்மரின் அபிப்ராயம் இதுவாக இருக்கலாம். ஏன்? வேத வியாசரே என்ன கூறுகிறார்? “சாத்திரங்கள் அனைத்தையும் நான் ஆலோசனை செய்தேன். செய்தபின் நான் வந்த மிக நிச்சயமான முடிவு இதுவாகும், என்னவென்றால் வேதத்தைக் காட்டிலும் சாத்திரம் இல்லை. கேசவனைக் காட்டிலும் தெய்வம் இல்லை.” என்றுதானே வியாச வாக்குமூலமும். வியாசர், பீஷ்மர் எல்லாருமே ஒரே மனப்பான்மை கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்று சொல்லலாம். 

ஆனால் கேள்வி என்னவென்றால் விஷ்ணுதான் மிக்குயர்ந்த தெய்வம் என்றால் வைணவ ஆகமங்களுக்குச் சரியாக இருக்கும். அதன் வழி நடக்கும் வைணவர்களுக்கு முழுதும் உடன்பாடாக  இருக்கும். ஆனால் சைவ ஆகமங்கள் பரம்பொருளாக சிவனை நிர்ணயிக்கின்றனவே! அவையும் சிவனுக்கு அனைத்து பரம்பொருள் லட்சணங்களையும் கூறித்தானே சித்தாந்தம் செய்கின்றன. அவையும் வேதங்களைப் பிரமாணமாகக் காட்டுபவைதானே! அதாவது வேதங்களைப் பொதுப் பிரமாணம் என்றும், சைவ ஆகமங்களைச் சிறப்புப் பிரமாணம் என்றும் சொல்லும். 

ஏன்? இதே ஸ்ரீமஹாபாரதத்தில் இந்த அநுசாசன பர்வத்திலேயே சிவ ஸஹஸ்ர நாமம் என்பதும் வருகின்றதே! உபமன்யு மஹரிஷி தமக்கு உபதேசித்தார் என்று ஸ்ரீகிருஷ்ணன் யுதிஷ்டிரருக்குச் சொன்னதாகத்தானே அங்கு வருகிறது? 

இதைத்தவிர சாக்தத்தில் சக்தியை அன்றோ பரம்பொருளாகக் காட்டப்படுகிறது? லலிதா ஸ்ஹஸ்ர நாமம், பவானி ஸஹஸ்ர நாமம், துர்க்கா ஸப்த ஸதீ என்றெல்லாம் இருக்கின்றதே. 

’எனக்குப் பிடித்த தெய்வம் இது’ என்று சொல்லலாம். ஆனால் ’சாத்திரங்களில் ஒரே முடிவாக நிர்ணயிக்கப்பட்ட ஒரே தைவதம் இன்னதுதான்’ என்று பீஷ்மரோ, வியாசரோ சொன்னதன் காரணம் என்ன? அததனை புராணங்களையும் இயற்றியவர் அதே வியாசர்தானே. அவரே என்ன சொல்கிறார் என்று பார்த்தோம் - ‘அத்தனை சாத்திரங்களையும் ஆலோசித்ததில் வேதத்தைக் காட்டிலும் சாத்திரம் இல்லை. கேசவனைக் காட்டிலும் தெய்வம் இல்லை’ என்றல்லவோ சொல்கிறார். 

இந்தக் கேள்வி வேதங்களை ஏற்றுக்கொண்ட வைணவம், சைவம், சாக்தம் ஆகிய சித்தாந்தங்கள் பார்வையில் எழுவது ஒருபக்கம் இருக்க, இன்னும் பௌத்தம், சமணம், சாங்க்யம் என்று வழிவழியாக பாரத நாட்டில் நிலவி வரும் சித்தாந்தங்களின் பார்வைகளையும் கணக்கில் கொண்டால் கேள்வி ஆழ்ந்த சிந்தனைக்குரியது. 

DEV RAJ

unread,
Aug 22, 2013, 12:17:02 PM8/22/13
to vall...@googlegroups.com, தமிழ் வாசல், min tamil
On Thursday, 22 August 2013 05:33:58 UTC-7, Mohanarangan V Srirangam wrote:
அந்வயித்ததும், விளக்கமும் எனது இல்லை. உரையாசிரியர்களுடையவை.

இருக்கட்டும்; அழகாக, தெளிவாக, புரியும்படி
எடுத்துக்காட்ட வேண்டுமல்லவா :))

தேவ்

Mohanarangan V Srirangam

unread,
Aug 28, 2013, 4:05:47 AM8/28/13
to min tamil, தமிழ் வாசல், vallamai, தமிழ் சிறகுகள்
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தைப் பாராயணம் செய்ய வேண்டும். படிக்க வேண்டும். அதன் பொருளை நன்கு சிந்திக்க வேண்டும். அவ்வப்பொழுது அதன் நாமங்களையும், அவற்றின் பொருள்களையும் நினைவுபடுத்திப் பார்க்க வேண்டும். 

அதாவது என்ன செய்வது என்றே தெரியவில்லை, டி வி யில் எல்லாம் போரடிக்கிறது, சும்மா உட்கார்ந்தால் ஏதோ பழைய விஷயங்கள் எல்லாம் நினைவுக்கு வந்து தொல்லைப்படுத்துகின்றன என்று பலரும் சொல்கிறோம். அதாவது வாழ்க்கையில் நிற்க நேரம் இல்லாமல் ஓடும் வாழ்வு கூட எவ்வளவோ மேல். ஆனால் நின்று போய் நகர இயலாமல் நம் வாழ்க்கை குத்துக்கல் மாதிரி நிற்கும் நேரம் இருக்கிறதே அது கொடுமை. 

உள இயல் படிப்பு என்னும் சைகாலஜியில் டீ ஏ என்னும் ஒரு ஸ்கூல் உண்டு. அதில் எரிக் பேர்ன் என்பார் கூறுகிறார். Time structuring என்பது மனிதர்களுக்குச் சமயத்தில் பெருத்த கஷ்டம் ஆகிவிடுகிறது என்கிறார். பல மன வியாதிகளும் இந்த காலம் நகராமல் திகைத்து நின்றுவிடுவது என்ற காரணத்தால் ஏற்படுகின்றன. 

அப்படியெல்லாம் என்ன செய்வது என்று திகைக்கும் கணங்களிலாவது இந்த ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் நல்ல துணை. அதாவது தனிமை உங்களுக்கு ஒரு பிரச்சனை இல்லை என்றாகிவிடுகிறது. No work உங்களுக்கு ப்ராப்ளமே இல்லை. உங்கள் கைவசம்தான் தயாராக ஒரு வேலை, அருமையான வேலை இருக்கிறதே! 

உறவு அல்லது நட்பு என்று பார்த்தாலும் கடவுளின் பெயர்களைவிடச் சிறந்தது ஒன்றும் இல்லை. விட்டுப்பிரியாத உறவும், கட்டப்படும் போது தானே வந்து உதவும் கரமான நட்பும் பகவானுடைய நாமங்கள்தாமே! 

ஏனய்யா? எல்லாவற்றையும் உணர்ந்துவிட்டுத்தான் வந்து பேசுகிறாயா? இல்லை ஆட்கள் கிடைத்தார்கள் என்று சும்மா வார்த்தை ஜாலம் ஆடிக் காண்பிக்கிறாயா? என்று நீங்கள் லேசாக நினைப்பது தெரிகிறது. ஒன்று சொல்வேன். ‘கடவுளைக் கண்டாயா?’ என்றால், ’இல்லை. அதான் சொன்னேனே அந்த விஷயத்தில் இன்னும் நாத்திகம்தான். ஆனால் பகவானுடைய நாமங்கள் மிக நல்ல துணை, சிறந்த நட்பு என்பதில் எனக்கு ஓரளவு அனுபவம் உண்டு.. தனிமையோ, வாழ்க்கையில் ‘ஐயோ’ என்று நிர்கதியாகி நிற்கும் நேரங்களோ அப்பொழுது எல்லாம் சிறந்த பாதுகாப்பு இந்த நாமங்களை நினைத்தல், சொல்லல், சிந்தனை என்பதுதான். ஒண்டிக்கட்டையாக இவ்வளவு நாள் ஓட்டிவிட்டேனே, அதுவே கடவுள் நாமத்தின் பக்க பலம்தான். 

‘அவன் தூரஸ்தன் ஆனாலும் இது (பகவானின் நாமம்) கிட்டி நின்று உதவும்’ என்று சொல்கிறார் பிள்ளை லோகாசாரியர். அதாவது ஸ்ரீகிருஷ்ணன் துவாரகையில் எங்கோ தள்ளி இருந்தான். ஆனால் அவனுடைய திருநாமம் பக்தர்களுக்கு அவர்கள் வாயிலேயே நெஞ்சிலேயே அருகில் இருந்து எப்பொழுதும் உதவியது என்கிறார். 

என்ன சார்! விஞ்ஞான உலகத்துல வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இப்ப போயி நீங்க கடவுளின் நாமம், ஜபம், அது இதுன்னு ஏதாவது சொல்லிக்கிட்டு..! ஏதோ தியானம் என்று சொல்றீங்களா..போனாப் போவுது.. பெரிய விஞ்ஞானிகள் எல்லாம் பரிசோதனையில தியானம்த்துக்கு எஃபெக்ட் இருக்கு என்கிறார்கள். கொஞ்சம் ஒத்துக்கலாம். சாத்திர நூல்களை ஆராய்ந்து படிக்கிறீங்களா? சரி.. போனால் போவுது.. அது ஏதோ ஒருவித மரபு சார்ந்த அறிவு...தொலையுது என்று விடலாம்.... அவனவன் ஊரையே ஏமாத்தி ஏப்பம் விடுவது எப்படி என்று படிக்கும் போது நீங்க பொழைப்பு அத்த தனமா இந்த மாதிரி படிப்புகளில் கருத்து செலுத்துறீங்கன்னாலும்...சரி.. போவுது.. ஏதோ அவரு ஆர்வம்... பழைய விஷயத்தைத் தெரிஞ்சுக்கிறாரு என்று சொல்லலாம். ஆனால்... இதெல்லாம் சுத்தமா ஓவர்... பகவானின் நாமங்கள்... அதைச் சொல்ரது,... ஜபம்.... ஒழிந்த போதில் சிந்திப்பது... விட்டா எல்லாரையும் சாமியாராக ஆக்கப் பார்க்குறீங்களா? - இவ்வளவும் நீங்கள் சொல்கிறீர்களா? மிகவும் சரி. நியாயம்தான் உங்கள் கேள்விகள். ஆனால் இந்தப் பைத்தியக்காரத்தனம் இல்லாமல் நீங்கள் உயர்ந்த விஞ்ஞானம், தத்துவப் படிப்பு, பெரும் ஆராய்ச்சிகள் என்று பொழுதைக் கழிக்கிறீங்களா? அப்ப சொல்லுங்க நீங்க சொல்றதை நான் மறுக்கவில்லை. 

ஆனால் 90 சதவீதம் உங்கள் நேரம் அல்பத்தனத்திலும், ஏதோ ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று குதிப்பதிலும், அதை வேடிக்கை பார்ப்பதிலும், வெட்டியாகக் கற்பனையாக மனத்தின் வக்கிரங்களையெல்லாம் காட்சிகளாக்கி அவற்றை தினப்படி விடாமல் தவணை முறையில் அந்த நேரம் வந்ததும் துஇடிதுடித்துப் போய் உட்கார்ந்து, குழந்தைகளின் படிப்பு லட்சியம் இல்லை, பெண்டாட்டி லட்சியம் இல்லை, கணவன் லட்சியம் இல்லை, வீட்டிற்கு வந்த நண்பர்கள் லட்சியம் இல்லை என்று உங்கள் சர்வத்தையும் தியாகம் செய்துவிட்டுப் பார்க்கிறீர்களே பொழுதுபோக்குக் காட்சிகள், நிச்சயம் அவற்றைவிடப் பைத்தியக்காரத்தனம் இல்லை பகவானின் நாமஜபம். 

ஒரு சீரியல் பார்த்துவிட்டு அன்று முழுதும் டல்லாக உட்கார்ந்திருக்கும் பெரிசுகளைப் பார்த்திருக்கிறேன். ஏன் நானே சில சமயம் அப்படியெல்லாம் உட்கார்ந்திருக்கிறேன். மனத்தின் சக்தி வீணாகிப்போய் சோர்ந்து போனதுதான் மிச்சம் என்று ஆகிவிடும். 

ஆனால் கடவுளின் நாமங்கள் என்பவை அப்படி இல்லையே. ஏதேதோ உயர்ந்த தத்துவ சிந்தனைகளை உள்ளத்தில் கிளப்பிய படியே நம்மோடு கூட வரும் கண்கண்ட சொல்கண்ட துணை ஆயிற்றே! இதுவும் பைத்தியக்காரத்தனம்தான், கடவுளே எங்கிருக்கு என்று கண்ணுக்குத் தெரியல்லியாம்..  இந்த அழகில் அவர் நாமத்தை ஜபிக்க வேறு செய்ய வேண்டுமா? என்றெல்லாம் தோன்றட்டும். ஆனால் வாயில் சூயிங் கம் போட்டு மெல்லுவதுபோல் ஜபம் அது பாட்டுக்குப் போய்க்கொண்டிருக்கட்டும். நீங்கள் தாராளமாக உங்கள் வழியே போய்க்கொண்டிருங்கள். என்னதான் இருந்தாலும் உத்தமமான பைத்தியக்காரத்தனம் இல்லையா... ஏதோ ஒருவிதத்தில் எல்லாரும் பைத்தியக்காரத்தனம் ஒன்றை வைத்துக்கொண்டு திரிகிறோம். அதில் நல்ல பைத்தியம் இதுவும்தான் இருந்துவிட்டுப் போகட்டுமே. 

ஆறு காரணங்களுக்காக ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமங்களைப் படிக்க வேண்டும் என்கிறார் ஸ்ரீபராசர பட்டர் தமது ‘பகவத் குண தர்ப்பணம்’ -- (பகவானின் குணங்களைக் காட்டும் கண்ணாடி) என்னும் உரையில். என்ன என்ன காரணங்கள்? 

1) ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாமம் என்பது மஹாபாரதத்தின் சாரமான பக்தி என்பதே உருவமான நூல். 

2) மந்திரங்களை நேராகக் கண்டவர்கள் ருஷிகள். அவர்கள் ஆனந்தத்துடன் பாடிக் களித்த நாமங்கள் இவை. 

3) வேதங்களில் கரைகண்டவர் வியாசர். வேதங்களை நான்காகப் பகுத்தவரும் அவரே. அந்த வியாசர் தமது வாழ்க்கையின் பெரும் பணியாக ஒரு விஷயத்தைச் செய்தாராம். அது என்ன என்றால் இப்படி அங்கங்கே ருஷிகளால் பாடப்பட்ட பகவானின் நாமங்களையெல்லாம் தேடிச் சென்று தொகுத்து இப்படி ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் என்று ஆக்கி நமக்குத் தந்திருக்கிறார். 

4) அனைத்து கலைகளையும் கற்றவன் பீஷ்மன். அவனுக்குத் தெரியாத தர்மங்களே இல்லை என்று ஸ்ரீகிருஷ்ணனே சான்று சொல்கிறார். அப்படிப்பட்ட பீஷ்மன் தன் அரச வாழ்க்கையில் எவ்வளவு இன்னல்கள், அனுப்வங்கள், படிப்புகள், படிப்பினைகள் என்று சந்தித்திருப்பான்! எவ்வளவு தத்துவ நூல்களை நோண்டியிருப்பான்! அப்படிப்பட்ட பீஷ்மன் தன்னுடைய மிகச் சிறந்த வாழ்க்கைக் கருத்தாக இந்த ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாமத்தைக் கூறுகிறான். 

5) இன்னார் இனையார் என்று இன்றி எல்லா தரத்தாரும், தத்துவம், காவியம், மருத்துவம் என்று வித்யாசமே இன்றி எல்லா துறையினரும் இதைக் கைக்கொண்டு ஈடுபட்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட முக்கியத்துவம் ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாமத்திற்கு உண்டு. 

6) ஹிந்து மதத்தின் மூன்று முக்கிய நூல்கள் என்பவை - உபநிஷதங்கள், ஸ்ரீ பகவத் கீதை, ஸ்ரீ பிருஹ்ம ஸூத்திரம். இவற்றில் ஸ்ரீபகவத் கீதை என்பது அனைத்து அத்யாத்ம சாத்திரங்களையும் பிழிந்த சாரம் போல்  இருப்பது. ஆன்மிகத்தில் எந்தக் கருத்தை சொன்னாலும் அதற்கு விளக்கம் கீதையில் இருக்கும். அப்படி உள்ளடக்கிய சாத்திரம் கீதை. கீதையை 700 சுலோகங்கள், 18 அத்யாயங்கள் என்று ஞாபகம் வைத்துக்கொள்வது எப்படி என்று யோசித்தால் அதற்கு ஓர் எளிய வழி இருக்கிறது. ஆயிரம் நாமங்களின் பொருளும், கீதையின் கருத்தும் ஒன்றே. நாமங்கள் ஆயிரமும் நினைவில் கொள்வது சுலபம். கொஞ்ச நாள் தொடர்ந்து கேட்டாலே தானாகவே ஞாபகத்தில் கிடக்கும். ஆனால் பொருளோ கீதையின் உட்கருத்துகளைக் கொண்டதாகும். 

மகாபாரத்தின் சாரம் என்பதால் 
ருஷிகள் பாடியவை என்பதால் 
வேத ஆசாரியர் நன்கு தொகுத்தவை என்பதால் 
பீஷ்மரின் உயர்ந்த உள்ளக்கருத்து என்பதால் 
விதயாசமின்றி அனைவரும் 
கைக்கொண்டு போற்றியது என்பதால் 
கீதையோடு பொருள் ஒப்புமை 
உடையது என்பதால் நமக்கு 
ஸஹ்ஸ்ர நாமங்களைப் படித்தல் என்பது 
கைக்கொள்ள வேண்டிய வழிகளில் 
சிறந்த வழியாகும். 

***


வேந்தன் அரசு

unread,
Aug 28, 2013, 6:33:29 AM8/28/13
to தமிழ் சிறகுகள், min tamil, தமிழ் வாசல், vallamai



16 ஆகஸ்ட், 2013 10:31 AM அன்று, Mohanarangan V Srirangam <ranga...@gmail.com> எழுதியது:



நீ ஆஸ்திகனா? என்று கேட்டால் இல்லை என்பது என் பதில். நாஸ்திகனா? என்று கேட்டால், அப்படிச் சொல்வதுதான் அதிகப் பொருத்தமானது என்றுதான் சொல்வேன். 

ஆமாம். என்று கடவுள் என்ற ஒன்றை நாம் நம் அனுபவத்தில் சாக்ஷாத்கரிக்கிறோமோ, நேரடியாக உணர்கிறோமோ அன்றுதானே நாம் உண்மையில் நம்மை ஆஸ்திகர் என்று சொல்லிக்கொள்ள முடியும். அதுவரையில் நாத்திகம்தானே, சொன்னாலும் சொல்லாவிட்டாலும். 



விஷ்ணு சகஸ்ர நாம ஆவளி தொடுத்தவர் யார் என கூட அறியாத நானே மெய்யாலும் ந ஆத்திகன்.
--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

Mohanarangan V Srirangam

unread,
Aug 28, 2013, 6:40:37 AM8/28/13
to min tamil, தமிழ் வாசல், vallamai, தமிழ் சிறகுகள்
இதுவரையில் எழுதப்பட்டவைகளைக் கோவையாகப் படிக்க இங்கே சொடுக்கவும் 



***





2013/8/28 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>

வேந்தன் அரசு

unread,
Aug 28, 2013, 7:34:17 AM8/28/13
to vallamai, min tamil, தமிழ் வாசல், தமிழ் சிறகுகள்



28 ஆகஸ்ட், 2013 6:40 AM அன்று, Mohanarangan V Srirangam <ranga...@gmail.com> எழுதியது:

இதுவரையில் எழுதப்பட்டவைகளைக் கோவையாகப் படிக்க இங்கே சொடுக்கவும் 




நாங்க அத்தனை பேரும் அங்கே வருவதற்கு நீங்க ஒருவர் இங்கே வரலாமே?
 குழமம் ஒரு சந்தை.

Mohanarangan V Srirangam

unread,
Aug 29, 2013, 12:19:04 PM8/29/13
to min tamil, தமிழ் வாசல், vallamai, தமிழ் சிறகுகள்
கேள்விகளுக்குப் பதில்கள் 

ஆறு கேள்விகள் கேட்டான் தருமன். மிக்குயர்ந்த பெருந்தெய்வம் எது? அறுதியான இறுதி நிலையம் உயிர்களுக்கு எது? சுபம் அடைய யாரைத் துதிப்பது? யாரை பூஜை செய்வது? தர்மங்களில் சிறந்த தர்மம் உங்கள் கருத்துப்படி எது? எந்த ஜபத்தால் உயிர்கள் முத்தி அடைகின்றன? 

தாகத்திற்குத் தவிக்கும் மனிதன் காதில் தண்ணீர் பற்றிய செய்திதான் முதலில் விழும். 

தருமனுக்கு உயிரின் பிரிவு என்பது என்றோ நடக்கப் போகும் ஒன்று. ஆனால் பாட்டனுக்கு அது நிகழ்காலம். அதுவும் நீட்டிவைத்த நிகழ்காலம். The moment of dying extended to obey his wish but still remains a moment. 

‘கணத்தின் நெட்டுயிர்ப்பொன்றைக் கிழித்தேன்’ என்று திருலோக சீதாராம் கவிதையில் வரும். அந்தக் கணம் இன்னும் பாட்டனுக்குக் கிழிபடவில்லை. 

புறத்திலும் அம்புப் படுக்கை. அகத்தின் மர்ம ஸ்தானத்திலும் அம்புப் படுக்கை. அம்புகளின் கூரிய முனைகளாகிய மலர்களால் தன் வாழ்வு என்னும் படையலைக் கண்ணனுக்கு ஆக்குகிறான் காங்கேயன். உண்மையில் அவன் ஒருவனே வீரன். ஆனால் அவன் உபதேசம் செய்வதோ ஆன்ம தீரத்தைப் பற்றி. அவனைச் செய்ய வைக்கிறான் அச்சுதன். ஆகாதவற்றை ஆக்குவோன். கூடாதவற்றைக் கூட்டுவோன். பேசாதவற்றைப் பேச வைப்போன்; பாராதவற்றைப் பார்க்கவும் அவன் அருளல்லால் நமக்கு ஏது கதி? 

விவேகாநந்தர் கூறுவார் - ‘மேற்கில் மிகப்பெரிய தேவாலயத் துறவிகளும் கூட தங்கள் பூர்வீகம் சொல்வது கொள்ளைச் சீமான்களிலிருந்து. ஆனால் கிழக்கிலோ என்றால் பெரும் மன்னாதி மன்னர்களும் தங்கள் பூர்வீகத்தை வெறும் மரப்பட்டை உடுத்திய ஏழை ரிஷிகளிலிருந்து சொல்லிக் கொள்வார்கள்’ என்பார். 

வென்று வேலெடுத்த விரை திண் தோளையும், வரையன்ன உடலையும் வீழ்ச்சியின் ஆயிரம் நாவுகளாகச் சுவைக்கின்றன ஆயிரம் அம்புகள். 

ஆனால் மடியும் உடலின் ஒற்றை நா உரைப்பதோ மடியாத உயிருக்கு ஆயிரம் நாமங்கள். 

அம்புகளின் தாகம் தீரக் கிடந்தவன் தன் அம்பு தாகம் தீர விழைந்தக்கால், அம்பால் நீரூட்டித் தாகம் தீர்த்தவனின் தேர்ச் சாரதியை அன்பால் பரவுகிறான் புனிதநீர்ப் புதல்வன். 

தவித்த உயிர்த்தாகத்திற்குக் காதில் முதலில் விழுவதோ ஆறாவது கேள்வி. ‘எதை ஜபித்தால் உயிர் முத்தி பெறலாகும்?’ 

அவன் அளித்த விடையை அருந்த நமக்கு அளிக்கிறார் ஆதிசங்கரர். -- 

“நிலைப்பன திரிவன என்று உருவான உலகத்திற்கு உடையவன்; படைப்பின் கடவுளருக்கும் படைக்கும் பெருங்கடவுள்; இடம் காலம் பொருள் ஆகியவற்றால் அளவிட முடியாதவன்; புருஷோத்தமன், அவனையே சிறிதும் சோர்வில்லாமல் அவன் விஷயத்திலேயே முயலும் மனிதர் எல்லாவிதத் துக்கத்திலிருந்தும் நீங்கியவர்கள் ஆகிறார்கள்” 

பராசர பட்டரின் உரை பேசுகிறது -- 

“திரிவன நிலைத்தன என்னும் ஜகத் என்பதற்கு உடையவனாகிய ஸ்வாமி; தேவர்களுக்கும் பெருந்தேவன்; அளவிடக்கூடாத பெருமையுள்ளவன்; தன்னையும் அளிக்கும் பரம வள்ளல்தன்மை கொண்டவன்; அத்தகைய அவரை ஆயிர நாமங்களால் எக்காலமும் முயன்று துதி செய்வதனால்  மனிதர் எல்லாத் துன்பங்களையும் கடந்தவர் ஆவர்.” 

அம்பின் நுனி குளிக்க அம்பின் துளி குளிரக் கிடந்து உரைத்தவனின் அன்பு மொழி நம் வாழ்வின் வறட்சியைப் போக்காதோ! 

***


வேந்தன் அரசு

unread,
Aug 30, 2013, 9:34:06 PM8/30/13
to vallamai, min tamil, தமிழ் வாசல், தமிழ் சிறகுகள்
கலைஞரின் பராசக்தி வசனம் போல் இருக்குங்க உங்க பனுவல்.


29 ஆகஸ்ட், 2013 12:19 PM அன்று, Mohanarangan V Srirangam <ranga...@gmail.com> எழுதியது:

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.

Mohanarangan V Srirangam

unread,
Aug 31, 2013, 9:36:02 AM8/31/13
to min tamil, தமிழ் வாசல், vallamai, தமிழ் சிறகுகள்
வீரர்களின் வாழ்க்கை  வில், அம்பு, வேல், கவசம், போர், அழிவு, காப்பு என்றிருப்பது. வீரர்களின் பிதாமகன் இங்கு மரணத்தின் முற்றத்தில் கிடந்தபடி அழியா உயிருக்கு ஆக்கம் தேடுகிறான். 

இந்த உயிரை நலியும் அறியாமை, உலக ஆசைகள், மாயை என்னும் பகை முடிக்கும் ஆயுதத்தைப் பேரனுக்குப் போதிப்பதுபோல் உலகிற்கு அளிக்கிறான். 

உயிரின் இந்த ஓயாப் போரில் கைகண்ட ஆயுதம், வாய்கண்ட ஆயுதமாக இருக்கிறது. 

வினைகளின் கட்டை அவிழ்க்கும் மர்மம் பெயர்ச்சொல்லில் இருக்கிறது. அந்த ஆயுதத்தை தன் வீர வாழ்க்கையின் பழக்கத்தில் விளக்குகிறான். 

‘தருமா! எந்த ஆயுதத்திற்கும் தேவதை உண்டு, பீஜம் உண்டு, சக்தி என்பது உண்டு, இதயம் என்பது உண்டு. அந்த ஆயுதத்திற்கான பிரயோஜனம் என்பதும் உண்டு. சாதாரணமாக போர் ஆயுதங்களுக்கு எஃகு என்பதை பீஜம் என்று கூறுவோம். ஏனெனில் காரணம் ஆகிய எஃகிலிருந்துதான் ஆயுதம் உருவாகிறது. ஆயுதத்தின் அழிக்கும் திறன் அதன் முனையின் கூர்மையில் இருக்கிறது என்ற காரணத்தால் ஆயுத முனையைச் சக்தி என்று சொல்வது வழக்கம். ஆயுதத்தின் மையப் பகுதியானது அதன் இயக்கம் வேகம் இலக்கு நாட்டம் முதலிய அம்சங்களுக்கு முக்கியமாக கேந்திரம் என்பதால் இதயம் என்று சொல்லப்படுகிறது. ஓர் ஆயுதம் என்றால் அது என்றும் வெறும் அலங்காரமாகவும் பொழுது போகவும் செய்யப்படுவது அன்று. ஆயுதம் என்று ஒன்று உருவானால் அதற்குப் பிரயோஜனம் என்று ஒன்று கண்டிப்பாக உண்டு. பொதுவாக நாம் அறிந்து பழகிய ஆயுதங்கள் சத்ரு வதம் என்னும் பயனை நோக்காக உடையன. 

ஆனால் தருமா! நான் சொல்லப்போகும் இந்த புருஷோத்தமனின் ஆயிர நாமங்கள் என்பதும் ஒரு வகையில் ஓர் ஆயுதம்தான். சத்ரு வதம் என்பதையும் நோக்காக உடையதுதான். இந்த ஆயுதத்திற்கும் கண்டறிந்த ரிஷிகள், தேவ்தை என்று உண்டு. இந்த தேகம் நிலையில்லாதது. அதை அழிக்க வரும் எதிரிகளே சத்ருக்கள் என்று ஆயுதங்களை எறிந்து அழிக்கத் தக்கவர்கள் என்றால், இந்த ஆத்மாவிற்கு எதிரிகள் ஆக வரும் அறியாமை, உலக ஆசைகளின் வேகம், மாயை, காமம், குரோதம் லோபம், மதம், மாச்சரியம், மோகம் ஆகிய சத்ரு கூட்டங்கள் மாயாவிகளிலும் மாயாவிகளான பகைகள். 

மற்ற புறப்பகைகள் உன் உடைமைகளைக் கைப்பற்றி, உன் இருப்பிடத்தைக் கைப்பற்றிப் பின் உன்னை அழிக்கும். ஆனால் இந்த கொடிய அகப்பகைகளோ முதலில் உன்னை அடிமைப் படுத்திப் பின்னர் உன் நிதய வாழ்வு, அளவிலா ஆநந்தம், எல்லையற்ற ஞானம் ஆகிய உன் சொந்த இயல்புகளாகிய செல்வங்களை உன்னைக் கொண்டே தங்கள் ஆட்சிக்குக் கொண்டு வந்துவிடும். இவற்றுக்கு அழிவு என்பது ஒரே ஆயுதத்தினால்தான். அதுதான் பகவானின் நாமஜபம். 

இந்த ஆயுதத்திற்கு யார் ரிஷி? சந்தஸ் என்ன? தேவதை எது? பீஜம் எது? சக்தி எது? இதயம் எது? பிரயோஜனம் எது? என்கிறாயா, சொல்கிறேன் கேள். 

வேத வியாசர்தாம் இதைக் கண்டறிந்த ரிஷி. பாதம் ஒன்றுக்கு எட்டு உயிரெழுத்துக்களால் ஆன அனுஷ்டுப் என்னும் சந்தம் தான் இதற்கு சந்தஸ். தேவதை யார் என்றால் பகவானான விஷ்ணு. பீஜம் என்பது அம்ருதாம்சூத்பவ: என்பது. தேவகீநந்தன: என்பது சக்தி. திரிஸாமா என்பது இதயம். அனைத்துக் குற்றங்களையும் களைந்து ஆழ்ந்த நிலைத்த சாந்தி என்பது இதன் பிரயோஜனம். பாற்கடலில் பள்ளிகொண்ட மாய மணாள நம்பியை தியானித்தபடியே இந்த ஆயுதத்தை நீ நாவினால் ஏவினாலே போதும், போய பிழையும், புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும். எனவே மனத்தால் ஓர்ந்து திடநம்பிக்கையுடன் செப்பு.’ என்கிறான் பீஷ்மன் மரணத்தின் வாயிற்படியில் அமர்ந்தபடி. 

அவனைவிட வீரனும் இருந்ததில்லை. அவனுடைய சொற்களைவிட தீரமும் இருந்ததில்லை. 

Mohanarangan V Srirangam

unread,
Sep 1, 2013, 9:47:40 AM9/1/13
to min tamil, தமிழ் வாசல், vallamai, தமிழ் சிறகுகள்
’வேதாந்தம் கற்பதால் என்ன பலன்?’ என்ற கேள்விக்குப் பதிலாக விவேகாநந்தர் கூறிய கருத்து ஒன்று நினைவுக்கு வருகிறது. வேதாந்தம் கற்றால் அனைவரும் வீடு வாசல் என்று எல்லாம் விட்டுவிட்டு ஆண்டிகளாகப் போய்விடுவார்களோ என்ற அச்சமும் பலர் நினைவில் தொனிப்பதுண்டு. ஆனால் விவேகாநந்தர் கூறுவது என்னவெனில் வேதாந்தம் கற்பதால் ஒரு மெக்கானிக் இன்னும் சிறந்த மெகானிக்காக ஆகிறான். ஒரு தொழிலதிபர் இன்னும் சிறந்த தொழிலதிபராக ஆகிறார். பேராசிரியர் ஒருவர் முன்னிலும் சிறந்த ஆசிரியராக ஆகிறார். அலுவலகத்தில் வேலை செய்பவர், பட்டறையில் வேலை செய்பவர், துறைமுகத்தில் வேலை செய்பவர், வண்டி ஓட்டுபவர் என்று அவரவர் தம்தம் சூழ்நிலையிலேயே முன்னிலும் மிகச் சிறந்து விளங்க ஆரம்பித்துவிடுகின்றனர் என்பது விவேகாநந்தரின் கருத்து. 

பீஷ்மரும் இதையே கூறுகிறார் ஆயிர நாமங்கள் ஓதுவோர் தம்தமக்கு விருப்பமான தொழில், படிப்பு, ஈடுபாடு என்ற சூழ்நிலைகளிலேயே மேலும் சிறந்து விளங்கத் தொடங்குகின்றனர் என்று. 

இந்த ஆயிர நாமங்களைக் கேட்பவனும் கீர்த்தனம் செய்பவனும் சரி அனைவருமே இம்மையிலும், மறுமையிலும் யாதொரு கெடுதலையும் அடைவதில்லை என்று அடித்துச் சொல்கிறார் பீஷ்மர், தாம் மரணம் அடையும் தருவாயிலும் கூட. 

அது மட்டும் அன்று, நித்யமாக இந்த ஸஹஸ்ர நாமத்தைப் படிப்பவன் யாராய் இருந்தாலும் அவன் மனிதர்களில் முதன்மை பெறுகிறான், செல்வங்கள் ஓங்கப் பெறுகிறான், குறைவற்ற வாழ்நாள் அடையப் பெறுகிறான், ஆபத்துகள் அனைத்தினும் விடுதலை அடைகிறான், பிணியாளன் பிணிகளிலிருந்து விடுதலை உருகிறான், சிறைப்பட்டவனும் விடுதலை உறுகிறான். பயம், பிணி, ஆபத்து இந்த சஹஸ்ர நாமம் படிப்பவனை அண்டா. இத்தனையும் ஆயிர நாமங்கள் கற்பதால் ஏற்படும் பலன்களாகக் கூறுகிறான் பீஷ்மன். 

இன்று நேற்று அன்று. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக எத்தனை எத்தனை மக்கள் இந்த வார்த்தைகளில் மிகுந்த விசுவாசம் வைத்து இவற்றைக் கற்கின்றனர்! 

‘ரோகார்த்தோ முச்யதே ரோகாத்’ அதாவது ரோகம் ஆகிய வியாதியினின்று விடுதலை அடைய வேண்டுபவன் நோயினின்றும் விடுதலை அடைகிறான் என்ற சொல் தொடரின் ‘ரோகார்த்த:’ என்பது ஒரு பழைய கணித முறைப்படி எண்ணினால் 632 என்ற எண்ணிக்கையைக் கூறும். அதாவது கடபயாதி சங்க்யை - கட பயம் என்று தொடங்கி எண்ணும் முறை என்ற கணக்கு முறையின் படி இவ்வாறு ‘ரோகார்த்த:’ என்ற சொல்லுக்கு 632 என்ற எண்ணிக்கை வருகிறதாம். எனவே பிணியாளர்கள் 632 தடவை இதை ஜபித்து ஹோமம் செய்வது உண்டென்றும், இது கேரள தேசத்தில் நடக்கிறது என்றும் 1928ல் ஸ்ரீ மணலூர் எம் வி ராமானுஜாசாரியார் (மஹாபாரதம் முழுதும் தமிழில் கொண்டுவந்த மகான்) எழுதுகிறார். அன்றைய நாளில் விஜ்ஞாந சிந்தாமணி என்னும் இதழுக்கு ஆசிரியராக இருந்த வைத்ய சாத்திர நிபுணரான புன்னசேரி ப்ரஹ்மஸ்ரீ நீலகண்ட சர்மா தமக்குச் சொன்னதாகவும் எழுதுகிறார். 

கீழ்க்கண்ட 3 செய்யுட்களும் எனக்குப் படிக்கும்தோறும் கேட்கும்தோறும் கண்களை நனைத்துவிடுகின்றன. 

துர்க்காணி அதிதரதி ஆசு: புருஷ: ப்ருஷோத்தமம்| 
ஸ்துவந் நாம ஸஹஸ்ரேண நிதயம் பக்தி ஸமந்வித:|| 

வாசுதேவ ஆச்ரயோ மர்த்த்யோ வாசுதேவ பராயண:| 
ஸர்வ பாப விசுத்தாத்மா யாதி ப்ரஹ்ம சநாதனம்|| 

நவாசுதேவ பக்தாநாம் அசுபம் வித்யதே க்வசித்| 
ஜன்ம ம்ருத்யு ஜரா வ்யாதி பயம் நைவ உபஜாயதே|| 

இந்த மூன்றுக்கான தமிழாக்கம் -- 

பத்தியுடன் என்றும் பொருந்தி 
பகவானின் நாமங்கள் ஆயிரமும் 
போற்றுபவர் கடந்திடுவர் விரைவாகப் 
பொல்லாத துன்பங்கள் எவற்றையுமே. 

மரிக்கும் மனிதர் வாசுதேவனை அண்டி 
வாசுதேவனையே புகலாகக்கொண்டு வழுத்தினால் 
பாபங்கள் அனைத்தினும் விடுபட்ட தூய ஆன்மாவாய் 
நிலையான பரம்பொருளில் சென்று சேர்வர் 

வாசுதேவ பக்தர்களுக்கு என்றும் 
சிறிதும் அசுபம் என்பது ஏற்படுவதில்லை 
பிறப்பு மரணம் முதுமை வியாதி பயம் 
ஒரு நாளும் உண்டாவதுமில்லை. 

யாருக்கு உண்மையில் புருஷோத்தமனிடம் அந்தத் தூய பக்தி இருக்கிறது? இதைக் கண்டுபிடிக்க ஒரு சூத்திரம் சொல்கிறார் பீஷ்மர். 

‘யாரிடம் கோபம் இல்லையோ, பகையில்லையோ, பொருளாசையில்லையோ, கெட்ட எண்ணம் இல்லையோ அவர்கள் புருஷோத்தமனின் பக்தர்கள் என்று உணரலாம். யாரும் சொல்ல வேண்டியதில்லை.’ 

உலகம், திசைகள், கோள்கள், பூமி, கடல் ஆகிய அனைத்தும் வாசுதேவரின் சக்தியினால் தாங்கப்பட்டு இருக்கின்றன. உயிர்க்குலம் முழுதும் கிருஷ்ணன் வசம் இருக்கின்றன. இந்திரியங்கள், மனம், புத்தி, சத்வ குணம், சக்தி,வன்மை, தைர்யம், தேகம், ஆத்மா இவையனைத்தும் வாசுதேவனின் சரீரங்கள் என்று சாத்திரங்கள் கூறுகின்றன. அனைத்துப் பிரபஞ்சங்களும், அனைத்து சொல்லால் ஆகிய உலகங்களும் ஸ்ரீமந் நாராயணரிடமிருந்து உண்டானவை. செந்தாமரைக் கண்ணனாகிய ஸ்ரீமந் நாராயணனைத் தொழுபவர் தோல்வியை அடைவது இல்லை, தோல்வியை அடைவது இல்லை என்று ஊர்ஜிதமாக உரைக்கின்றார் பீஷ்மர். 

ஸ்ரீ ஆதிசங்கரரின் உரையில் வரும் கீழ்க்கண்ட இந்த வார்த்தைகளைவிட என்ன பெரும் விளக்கம் நாம் அளித்துவிட முடியும்? :-- 

“எதில் முதலில் விஷ்ணு நமஸ்காரம் செய்யப்படுகிறதோ அதுதான் நல்ல லக்னம்; அதுதான் நல்ல நக்ஷத்திரம்; அதுதான் சுபதினம்; அதுதான் கிரியைக்குச் சுத்தம். விஷ்ணுவை நமஸ்காரம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டு அவ்வாறு செய்யும் முன்னரே அதன் பலன் கைமேல் வந்துவிடும். 

’கிருஷ்ணனுக்குச் செய்த ஒரு நமஸ்காரம் பல யாகங்கள் செய்து புனித நீர்க் குளிப்பதற்குச் சமானம். பல்யாகங்களைச் செய்தவனும் மீண்டும் பிறப்பான் ஆனால் கிருஷ்ணனை நமஸ்கரிப்பவன் மீண்டும் பிறப்பதில்லை’ என்றும், 

‘காயாம்பூ நிறமுள்ளவரும் பீதக ஆடை உடுத்தவரும் தம் இயல்பு, சுபாவம் ஆகியவற்றில் மாறாதவருமான கோவிந்தரை நமஸ்கரிப்பவர்களுக்குப் பயமில்லை’ என்றும், 

‘மூன்று லோகங்களுக்கு அதிபதியும் ஒப்பற்ற மஹிமை உள்ளவரும் ஸர்வ சக்தரும், ஸர்வ ஈசுவரருமான பகவானைச் சிறிது தலை வணங்கினாலும் மனிதனுக்குப் பல ஜன்மங்களிலும் பிரளயங்களிலும், யுகங்களிலும் உண்டான பாபங்களனைத்தும் உடனே  ஒழிந்துவிடும்’ என்றும் கூறுவர்.” 

இவ்வாறு உரை வரைந்து பரவுகிறார் ஸ்ரீஆதிசங்கரர். அவர் காலத்திலேயே ‘என்றும் கூறுவர்’ என்றால் இந்த எண்ணங்களின் பழமையை உணரலாம். 

shylaja

unread,
Sep 1, 2013, 11:02:57 AM9/1/13
to தமிழ் வாசல், min tamil, vallamai, தமிழ் சிறகுகள்


2013/9/1 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>

’வேதாந்தம் கற்பதால் என்ன பலன்?’ என்ற கேள்விக்குப் பதிலாக விவேகாநந்தர் கூறிய கருத்து ஒன்று நினைவுக்கு வருகிறது. வேதாந்தம் கற்றால் அனைவரும் வீடு வாசல் என்று எல்லாம் விட்டுவிட்டு ஆண்டிகளாகப் போய்விடுவார்களோ என்ற அச்சமும் பலர் நினைவில் தொனிப்பதுண்டு. ஆனால் விவேகாநந்தர் கூறுவது என்னவெனில் வேதாந்தம் கற்பதால் ஒரு மெக்கானிக் இன்னும் சிறந்த மெகானிக்காக ஆகிறான். ஒரு தொழிலதிபர் இன்னும் சிறந்த தொழிலதிபராக ஆகிறார். பேராசிரியர் ஒருவர் முன்னிலும் சிறந்த ஆசிரியராக ஆகிறார். அலுவலகத்தில் வேலை செய்பவர், பட்டறையில் வேலை செய்பவர், துறைமுகத்தில் வேலை செய்பவர், வண்டி ஓட்டுபவர் என்று அவரவர் தம்தம் சூழ்நிலையிலேயே முன்னிலும் மிகச் சிறந்து விளங்க ஆரம்பித்துவிடுகின்றனர் என்பது விவேகாநந்தரின் கருத்து. 
>>>>
 
ஆக  வேதாந்தம் என்பது  ஆழ்வார்  பெருமான் கூறiயது  போல ‘வாரி சுருக்கி மதக்களிறு ஐந்தினையும் சேரி  திரியாமல் சென்னிறீ இ  கூரிய மெய்ஞானத்தால் உணர்வார்  காண்பரே’ என்பது  போன்றதென தெரிகிறது 
பீஷ்மரும் இதையே கூறுகிறார் ஆயிர நாமங்கள் ஓதுவோர் தம்தமக்கு விருப்பமான தொழில், படிப்பு, ஈடுபாடு என்ற சூழ்நிலைகளிலேயே மேலும் சிறந்து விளங்கத் தொடங்குகின்றனர் என்று. 

இந்த ஆயிர நாமங்களைக் கேட்பவனும் கீர்த்தனம் செய்பவனும் சரி அனைவருமே இம்மையிலும், மறுமையிலும் யாதொரு கெடுதலையும் அடைவதில்லை என்று அடித்துச் சொல்கிறார் பீஷ்மர், தாம் மரணம் அடையும் தருவாயிலும் கூட. 
அது மட்டும் அன்று, நித்யமாக இந்த ஸஹஸ்ர நாமத்தைப் படிப்பவன் யாராய் இருந்தாலும் அவன் மனிதர்களில் முதன்மை பெறுகிறான், செல்வங்கள் ஓங்கப் பெறுகிறான், குறைவற்ற வாழ்நாள் அடையப் பெறுகிறான், ஆபத்துகள் அனைத்தினும் விடுதலை அடைகிறான், பிணியாளன் பிணிகளிலிருந்து விடுதலை உருகிறான், சிறைப்பட்டவனும் விடுதலை உறுகிறான். பயம், பிணி, ஆபத்து இந்த சஹஸ்ர நாமம் படிப்பவனை அண்டா. இத்தனையும் ஆயிர நாமங்கள் கற்பதால் ஏற்படும் பலன்களாகக் கூறுகிறான் பீஷ்மன். 

இன்று நேற்று அன்று. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக எத்தனை எத்தனை மக்கள் இந்த வார்த்தைகளில் மிகுந்த விசுவாசம் வைத்து இவற்றைக் கற்கின்றனர்! 
 
 
>>>>>  ஆம்   இன்னமும்  இது  பலகாலத்திற்கு நிலைத்துதான் நிற்கும்
 
 
மனமாசுதீரும் அறுவினையும்சாரா தனமாய தானே கைகூடும் புனமேய  பூந்துழாயான் அடிக்கே’ என்று  முதல் திருவந்தாதியில் ஆழ்வார் அருள்வதும் இதைத்தானோ?
‘ரோகார்த்தோ முச்யதே ரோகாத்’ அதாவது ரோகம் ஆகிய வியாதியினின்று விடுதலை அடைய வேண்டுபவன் நோயினின்றும் விடுதலை அடைகிறான் என்ற சொல் தொடரின் ‘ரோகார்த்த:’ என்பது ஒரு பழைய கணித முறைப்படி எண்ணினால் 632 என்ற எண்ணிக்கையைக் கூறும். அதாவது கடபயாதி சங்க்யை - கட பயம் என்று தொடங்கி எண்ணும் முறை என்ற கணக்கு முறையின் படி இவ்வாறு ‘ரோகார்த்த:’ என்ற சொல்லுக்கு 632 என்ற எண்ணிக்கை வருகிறதாம். எனவே பிணியாளர்கள் 632 தடவை இதை ஜபித்து ஹோமம் செய்வது உண்டென்றும், இது கேரள தேசத்தில் நடக்கிறது என்றும் 1928ல் ஸ்ரீ மணலூர் எம் வி ராமானுஜாசாரியார் (மஹாபாரதம் முழுதும் தமிழில் கொண்டுவந்த மகான்) எழுதுகிறார். அன்றைய நாளில் விஜ்ஞாந சிந்தாமணி என்னும் இதழுக்கு ஆசிரியராக இருந்த வைத்ய சாத்திர நிபுணரான புன்னசேரி ப்ரஹ்மஸ்ரீ நீலகண்ட சர்மா தமக்குச் சொன்னதாகவும் எழுதுகிறார். >>>
 
அருமை!  சிறப்பான தகவலை அறியத்தந்தமைக்கு  நன்றி 

கீழ்க்கண்ட 3 செய்யுட்களும் எனக்குப் படிக்கும்தோறும் கேட்கும்தோறும் கண்களை நனைத்துவிடுகின்றன. 

துர்க்காணி அதிதரதி ஆசு: புருஷ: ப்ருஷோத்தமம்| 
ஸ்துவந் நாம ஸஹஸ்ரேண நிதயம் பக்தி ஸமந்வித:|| 

வாசுதேவ ஆச்ரயோ மர்த்த்யோ வாசுதேவ பராயண:| 
ஸர்வ பாப விசுத்தாத்மா யாதி ப்ரஹ்ம சநாதனம்|| 

நவாசுதேவ பக்தாநாம் அசுபம் வித்யதே க்வசித்| 
ஜன்ம ம்ருத்யு ஜரா வ்யாதி பயம் நைவ உபஜாயதே|| 

இந்த மூன்றுக்கான தமிழாக்கம் -- 

பத்தியுடன் என்றும் பொருந்தி 
பகவானின் நாமங்கள் ஆயிரமும் 
போற்றுபவர் கடந்திடுவர் விரைவாகப் 
பொல்லாத துன்பங்கள் எவற்றையுமே. 

மரிக்கும் மனிதர் வாசுதேவனை அண்டி 
வாசுதேவனையே புகலாகக்கொண்டு வழுத்தினால் 
பாபங்கள் அனைத்தினும் விடுபட்ட தூய ஆன்மாவாய் 
நிலையான பரம்பொருளில் சென்று சேர்வர் 

வாசுதேவ பக்தர்களுக்கு என்றும் 
சிறிதும் அசுபம் என்பது ஏற்படுவதில்லை 
பிறப்பு மரணம் முதுமை வியாதி பயம் 
ஒரு நாளும் உண்டாவதுமில்லை. 

யாருக்கு உண்மையில் புருஷோத்தமனிடம் அந்தத் தூய பக்தி இருக்கிறது? இதைக் கண்டுபிடிக்க ஒரு சூத்திரம் சொல்கிறார் பீஷ்மர். 

‘யாரிடம் கோபம் இல்லையோ, பகையில்லையோ, பொருளாசையில்லையோ, கெட்ட எண்ணம் இல்லையோ அவர்கள் புருஷோத்தமனின் பக்தர்கள் என்று உணரலாம். யாரும் சொல்ல வேண்டியதில்லை.’ >>>
 
ஆஹா அந்த பக்தர்களை முக  தேஜஸ்  காண்பித்துவிடுமே! 

உலகம், திசைகள், கோள்கள், பூமி, கடல் ஆகிய அனைத்தும் வாசுதேவரின் சக்தியினால் தாங்கப்பட்டு இருக்கின்றன. உயிர்க்குலம் முழுதும் கிருஷ்ணன் வசம் இருக்கின்றன. இந்திரியங்கள், மனம், புத்தி, சத்வ குணம், சக்தி,வன்மை, தைர்யம், தேகம், ஆத்மா இவையனைத்தும் வாசுதேவனின் சரீரங்கள் என்று சாத்திரங்கள் கூறுகின்றன. அனைத்துப் பிரபஞ்சங்களும், அனைத்து சொல்லால் ஆகிய உலகங்களும் ஸ்ரீமந் நாராயணரிடமிருந்து உண்டானவை. செந்தாமரைக் கண்ணனாகிய ஸ்ரீமந் நாராயணனைத் தொழுபவர் தோல்வியை அடைவது இல்லை, தோல்வியை அடைவது இல்லை என்று ஊர்ஜிதமாக உரைக்கின்றார் பீஷ்மர். 

ஸ்ரீ ஆதிசங்கரரின் உரையில் வரும் கீழ்க்கண்ட இந்த வார்த்தைகளைவிட என்ன பெரும் விளக்கம் நாம் அளித்துவிட முடியும்? :-- 

“எதில் முதலில் விஷ்ணு நமஸ்காரம் செய்யப்படுகிறதோ அதுதான் நல்ல லக்னம்; அதுதான் நல்ல நக்ஷத்திரம்; அதுதான் சுபதினம்; அதுதான் கிரியைக்குச் சுத்தம். விஷ்ணுவை நமஸ்காரம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டு அவ்வாறு செய்யும் முன்னரே அதன் பலன் கைமேல் வந்துவிடும். 

’கிருஷ்ணனுக்குச் செய்த ஒரு நமஸ்காரம் பல யாகங்கள் செய்து புனித நீர்க் குளிப்பதற்குச் சமானம். பல்யாகங்களைச் செய்தவனும் மீண்டும் பிறப்பான் ஆனால் கிருஷ்ணனை நமஸ்கரிப்பவன் மீண்டும் பிறப்பதில்லை’ என்றும், 

‘காயாம்பூ நிறமுள்ளவரும் பீதக ஆடை உடுத்தவரும் தம் இயல்பு, சுபாவம் ஆகியவற்றில் மாறாதவருமான கோவிந்தரை நமஸ்கரிப்பவர்களுக்குப் பயமில்லை’ என்றும், 

‘மூன்று லோகங்களுக்கு அதிபதியும் ஒப்பற்ற மஹிமை உள்ளவரும் ஸர்வ சக்தரும், ஸர்வ ஈசுவரருமான பகவானைச் சிறிது தலை வணங்கினாலும் மனிதனுக்குப் பல ஜன்மங்களிலும் பிரளயங்களிலும், யுகங்களிலும் உண்டான பாபங்களனைத்தும் உடனே  ஒழிந்துவிடும்’ என்றும் கூறுவர்.” 

இவ்வாறு உரை வரைந்து பரவுகிறார் ஸ்ரீஆதிசங்கரர். அவர் காலத்திலேயே ‘என்றும் கூறுவர்’ என்றால் இந்த எண்ணங்களின் பழமையை உணரலாம். 

*** 
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் 

* >>>உன்னதமான எழுத்து. உலகளந்தானைப்பற்றியதாலோ என்னவோ  வாசிக்கும் போதே உள்ளம் நெகிழ்கிறது...
மறுபடி ஆழ்வார்  வாக்கே  அடைக்கலம்!
 
 
நினைப்பன் திருமாலை நீண்டதோள் காண
 நினைப்பார் பிறப்பொன்றும் நேரார் மனைப்பால்
 பிறந்தார் பிறந்தெய்தும் பேரின்ப மெல்லாம்
 துறந்தார் தொழுதாரத் தோள் 

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal.

Mohanarangan V Srirangam

unread,
Sep 2, 2013, 9:54:23 AM9/2/13
to min tamil, தமிழ் வாசல், vallamai, தமிழ் சிறகுகள்
நன்கு ரசித்து கமெண்ட்ஸ் எழுதியமைக்கு நன்றி.


2013/9/1 shylaja <shyl...@gmail.com>

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Mohanarangan V Srirangam

unread,
Sep 2, 2013, 11:43:33 AM9/2/13
to min tamil, தமிழ் வாசல், vallamai, தமிழ் சிறகுகள்
சோம்பேறிகளுக்கும் கருணை கிடைக்கும் என்பதை அம்மா பார்வதியின் வாயால் நிச்சயம் ஆன பின்னர்தான் எனக்கே கொஞ்சம் நிம்மதி வருகிறது. 

பிரஸ்தான திரயம் என்னும் உபநிஷதங்கள், கீதை, பிருஹ்ம சூத்திரம் என்னும் மூன்று பிரமாண நூல்களின் கருத்துகளும் இந்த ஆயிர நாமாவளியில் கிடைக்கும் என்பதே சுருக்கு வழி. 

என்னைப் போல் சோம்பேறிகளுக்கு அதுவும் பத்தாது. ஆயிர நாமாவளியையும் சொல்வதற்குப் பதில் சுருக்கமாக ஏதாவது வழி உண்டா? இப்படி நான் கேட்பேன் என்று தெரியும் போலும்! அன்னை பார்வதியே ஈசுவரனிடம் எனக்காக இந்தக் கேள்வியைக் கேட்கிறாள். 

‘எந்த எளிமையான உபாயத்தால் விஷ்ணுவின் ஸஹஸ்ர நாமத்தையும் நித்தியம் பண்டிதன் ஒருவன் படித்தவனாக ஆகிறான். பிரபுவே! அதைக் கேட்க எனக்கு இச்சை’. 

ஆனால் இங்கு ஒரு சின்ன சூக்ஷுமம் வைக்கின்றாள் அன்னை. என்ன? அந்த எளிய உபாயம் யாருக்கு? எதுவும் தெரியாத என்னைப் போன்றாருக்கு இல்லை. யார் ’பண்டிதன்’ என்று சொல்லமுடியுமோ அவனுக்கு. யார் பண்டிதன் என்று கீதை டெஃபெனிஷனே தருகிறதே! பண்டிதா: சமதர்சின: இன்பம் துன்பம், நன்மை தீமை, லாபம், நஷ்டம், சுகம் துக்கம் என்று எல்லா நிலைகளிலும் எவன் சமநிலையில் நழுவாமல் இருக்கிறானோ அவனே பண்டிதன். அப்படிப்பட்ட பண்டிதர்கள் ஆயிரம் நாமங்களையும் கூறினால் என்ன ஆழ்ந்த தியானத்துடனும் ஞானத்துடனும் கூறுவார்களோ அந்த தியானம், ஞானம் என்பது அவர்களுக்கு ஸ்ரீராம என்ற ஒரு நாமத்தைச் சொல்வதனாலே சித்தி அடைகிறது என்று பொருள். ராம நாமத்தின் மகிமையைச் சொல்கிறாள் அன்னை. ஆனால் நானோ என் சோம்பேறித்தனத்திற்கு அவள் வழி சொல்லிவிட்டாள் என்று மகிழ்ந்து போகிறேன். பரவாயில்லை இந்த மட்டும் அந்த அளவிலாவது ஊக்கம் வருகிறதே என்றுதான் சிரித்துக்கொள்வாள். 

கேந உபாயேந லகுநா விஷ்ணோர் நாம ஸஹஸ்ரகம்| 
பட்யதே பண்டிதைர் நித்யம் 
ச்ரோதும் இச்சாமி அஹம் ப்ரபோ:|| 

தர்மங்கள் அனைத்தினும் உயர்ந்த தர்மம், அதிகதமமான தர்மம் உங்கள் கருத்தின்படி என்ன? என்று கேட்டான் தருமன் பீஷ்மனை. 

பீஷ்மனும் சூக்ஷுமமாகச் செய்தியை உரைக்கின்றான். 

“அப்பா! உலகில் ஆகமங்கள் பல இருக்கின்றன. ஆகமம் என்றால் கடவுள் இன்னார் என்று சொல்லி அவரை அடைய வழிகாட்டும் மார்க்கம். ஆகமங்கள் எல்லாம் எதை அடிப்படையாய்க் கொண்டிருக்கின்றன என்று நீ அறிவாயா? நீ அத்தனை ஆகமங்களையும் ஒன்றுவிடாமல் நன்கு படித்துப் பரிட்சை கொடுத்துத் தேறி மஹாவித்வானாக இருக்க வேண்டும் ஆகம சித்தாந்தங்களில் என்பது அவற்றின் நோக்கமன்று தருமா! ஆகமங்களுக்கு நோக்கம் நீ அதை வாழ்க்கையில் அனுஷ்டானம் செய்ய வேண்டும் என்பதுதான். நீ அதை ஆசரிப்பதில்தான் அந்த ஆகமங்கள் இருக்கின்றன. வாய் வார்த்தைகளில், பக்கம் பக்கமாக எழுதுவதில், பெரும் புத்தகங்கள் எழுதிப் படித்துக் குவிப்பதில் இல்லையப்பா உண்மையில் ஆகமங்கள். 

“நீ அதன்படி ஒழுகுகின்றாய் என்ற அந்த ஒழுக்கத்தில்தான் எந்த தர்மமும் நன்கு வெளிப்பட்டு நிலைபெறுகிறது. 

“ஒன்று தர்மம் என்று எப்படி ஆகும்? எது உன்னை உடனே தன்னைக் கைக்கொண்டு ஒழுகும்படிச் செய்யுமோ அதுதான் தர்மத்தின் லக்ஷணம். அப்படிச் செய்யாத தர்மம் வெறும் ஏட்டுச்சுரைக்காய் என்ற அளவில்தான் நிற்கும். 

“ஒருவரை ஒரு வாக்கியத்தின் மூலம் ஒரு கட்டளையைச் சொல்லி அதன்படி நடக்க வைக்க மூன்று விதங்களில் முடியும் என்கிறது காவிய சாத்திரங்கள். 

“ஒன்று ஒரு நண்பன் மற்றொரு நண்பனுக்கு இடித்துச் சொல்லி அறிவுறுத்திச் செய்ய வைப்பதுபோல் செய்யலாம். அப்படிச் செய்தால் அந்த மாதிரியான நூலுக்கு மித்ர ஸம்ஹிதை, ‘நட்பால் ஏவும் நூல்’ என்று பெயர். 

“சில நூல்கள் பல இனிய கதைகள், கவிதைகள் எல்லாம் சொல்லி சிந்தையைக் கொள்ளை கொண்டு அழகுடன் சேர்த்து இன்ன விதத்தில் இருக்க வேண்டும் என்று கனிவுடன் கூறிச் செய்ய வைக்கின்றன. அந்த நூல்களுக்கு ‘காந்தா ஸம்ஹிதை’ என்று பெயர். 

“சில நூல்கள் எந்த வித ஆடம்பரமுமின்றி இன்னது செய்ய வேண்டும், இன்னது தவிர்க்க வேண்டும் என்று தெளிவுபடச் சுருக்கமாக நேரே தைக்கும் வண்ணம் உரைக்கின்றன. அதைப் படிக்கின்ற எவரும் முதல் காரியம் அதைச் செய்துவிட்டுத்தான் மறுவேலை என்று செயலில் ஈடுபடுகின்றனர். அதாவது ஒரு பிரபு கட்டளை பிறப்பித்தால் அவரிடம் வேலை செய்வோர் அந்தக் கட்டளைகளைச் செயலாக்குவது தம் தலையாய கடன் என்ற பொறுப்புணர்ச்சியில் மும்முரமாக ஈடுபடுகின்றனர். அப்படிப்பட்ட நூல்களை ‘பிரபு ஸம்ஹிதை’ என்று சொல்வார்கள். 

அத்தகைய பிரபு ஸம்ஹிதை போன்று நம்மை உடனே ஏற்று அனுஷ்டானம் செய்ய எது தூண்டுமோ அவைதான் தர்மங்கள். 

அப்படிப்பார்த்தால் எவைதான் தர்மங்கள்? யார்தான் எந்தத் தர்மங்களை ஏற்று எங்கு செய்கின்றனர்? என்று நினக்கிறாயா? 

இந்த லக்ஷணங்கள் எந்த தர்மங்களில் பொருந்தி இருக்கிறதோ அதுதான் தர்மங்களில் எல்லாம் சிறந்த தர்மம். 

பகவந் நாமா என்ற தர்மத்தை யோசித்துப் பார். இந்த நாமங்கள் தாம் சாக்ஷாத் நேரடியான தர்மங்கள். இதைச் சொல் என்பதற்கும், அப்படியே இதை ஏற்று இதன்படி ஒழுகுவதாக இதைச் சொல்வதற்கும் இடையில் வித்யாசமே இல்லை. 

தர்மம் ஒன்று தனியாக இருக்கிறது. அதை ஏற்று அதன்படி நடத்தல் என்ற ஆசாரம் என்பது தனியாக இருக்கிறது என்பதை பகவந் நாமங்கள் விஷயத்தில் சொல்ல முடியாது. நாம ஜபம் விஷயத்தில் எது தர்மமோ அதுவேதான் ஆசாரமும். 

இதைச் சொல் என்பவனும் அதைச் சொல்கிறான். அதைச் சொல் என்று காதால் கேட்பவனும் அதையே அந்தக் கேட்கும் கணத்திலேயே, மனத்தால் வாங்கும் கணத்திலேயே சொல்பவனாய் ஆகிவிடுகிறான். தர்ம உபதேசமும், அந்த தர்மத்தை ஆசரிக்கிற ஆசாரமும் ஒரே கணத்தில் நடைபெறுவதை நீ பகவந் நாம ஜபம் ஆகிய இந்தச் சிறந்த தர்மம் ஒன்றில்தான் பார்க்க முடியும். 

“அப்படிப்பட்ட பகவந் நாம ஜாபம் ஆகிய தர்மத்தைவிட வேறு எந்த தர்மம் முழுக்க முழுக்க பிரபு ஸம்ஹிதை என்பதற்கு ஒவ்வியதாய் வருகிறது? யோசித்துப் பார். ஆகவே இந்த அழிவில்லாத தர்மம் ஆகிய பகவந் நாம ஜபம் என்னும் தர்மத்திற்கு யார் பிரபு? பிரபு ஸம்ஹிதை என்று சொல்கிறீர்களே, அப்படி என்றால் அவ்வாறு செய்யப் பணிக்கும் ஆணைசக்தி உடைய அந்தப் பிரபு யார் என்கிறாயா? அழியாத, பொய்க்காத, மாறாத இந்தத் தர்மத்திற்கு பிரபு மாறாதவனாகிய அச்சுதன். 

ஸர்வ ஆகமாநாம் ஆசார: ப்ரதமம் பரிகல்பித:| 
ஆசார ப்ரபவோ தர்ம: தர்மஸ்ய ப்ரபு: அச்யுத:|| 

அனைத்து ஆகமங்களிலும் அவற்றின்படி நடப்பதே முக்கியமாக முதலில் விளக்கப்படுவது ஆகும். அவ்வாறு நடக்கும் ஒழுக்கமே தர்மத்தை நன்கு வெளிப்படுத்தும். (இந்த பகவந் நாம ஜபம் என்ற) தர்மத்திற்கு பிரபு அச்சுதன். 

எனவே நீ தர்மம் என்று கவலைப் பட்டாலும் இதைவிடச் சிறந்த தர்மம் இல்லை. தனம் என்று கவலைப் பட்டாலும் இதைவிட அருந்தனம் எதுவும் இல்லை. இன்பம் என்று கவலைகொண்டவனாய் இருந்தாலும் இதைவிடப் பேரின்பம் எது உண்டு? மோக்ஷம் என்று கவன்றால் நாமஜபம் சொன்னால் அன்றே அப்பொழுதே வீடு வீடாமே என்பது அன்றோ பக்த சமுதாயத்தின் அனுபவமாக இருப்பது. 

எனவே ஒரு கல்லில் நான்கு மாங்காய் என்பதுபோல் நீ நான்கு புருஷார்த்தங்களையும் ஒன்றில் பெற விரும்பினால், அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்காகவும் நிற்கும் அந்த மிகச்சிறந்த ஆத்ம தர்மம் என்பது பகவந் நாம ஜபம்” 

என்கிறான் பாட்டன். கேவலம் ஜடப் பொருள்கள் இரும்பாலாகிய அம்புகள். அவற்றுக்கே நாம ஜபத்தின்பால் ஆசை வந்து அவன் உடலை ஊன்றிச் சுவைக்கின்றன என்னும் போது நாம் அறிவுள்ள உயிர்கள் ஆயிற்றே! 

Tulsi Gopal

unread,
Sep 2, 2013, 6:41:53 PM9/2/13
to vall...@googlegroups.com
ராமா ராமா......

பார்வதி கேட்டது என் சார்பில் என்று கூட நான் நினைப்பதுண்டு:-)

கர்மயோகத்தில் மூழ்கிக் கிடப்போர்க்கு அரை மணி ஒதுக்கமுடியும்தான். எந்த  அரை மணி என்பதுதான் பிரச்சனை, இல்லையோ?


பார்வதி:  விஷ்ணுவின் ஸகஸ்ரநாமம்  எப்போதும் ஞானவான்களால் எந்த உபாயத்தால் எளிதில் ஜபிக்கப்படுகின்றதோ, அதை நான் கேட்க விரும்புகின்றேன்.

பரமேச்வரன்:  அழகிய முகத்தினளே, ' ஸ்ரீராம ராம ராம ' என்று மனதிற்கு இனியவனான ராமனிடத்தில் :  நான் ரமிக்கிறேன். அந்த ராமநாமம் சகஸ்ரநாமத்திற்கு சமம். அழகிய முகத்தினளே, ஸ்ரீ ராமநாமமே  சகஸ்ரநாமத்திற்கு சமம்.   ஓம் நமஸ்காரம் 


இப்படி ஒரு விளக்கம் ஸ்ரீ வ்ஷ்ணு ஸகஸ்ரநாம பாஷ்யம் என்ற நூலிலிருந்து. (என் தற்போதைய வாசிப்பு)




2013/9/3 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.



--
என்றும் அன்புடன்,
துளசி

Mohanarangan V Srirangam

unread,
Sep 3, 2013, 11:41:10 AM9/3/13
to min tamil, தமிழ் வாசல், vallamai, தமிழ் சிறகுகள்
வழிவழியாக வரும் ஆசாரிய புருஷர்கள் அனைவருமே இந்த ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாமம் என்பதை நாமாவளி ரூபத்தில் இருக்கும் வேதாந்தச் செப்பு என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். வேதாந்த மறைபொருளைத் தன்னிடத்தே இந்தக் கடவுள் நாமங்கள் செறிவாகக் கொண்டுள்ளன என்ற உறுதியில்தான் அவர்தம் உரைகள் எழுந்துள்ளன. பெயர்களின் பட்டியலில் அப்படிப் பெரும் வேதாந்தக் கருத்துகளைப் பொதிந்து வைத்த வியாசர்தாம் என்ன தயை மிக்கவர்! 

ஸ்ரீபராசர பட்டர் கூறுகிறார் -- 

“இந்த ஸம்சாரமாகிய உலகம் பகவானின் இயல்பு முதலிய ஆன்மிக விஷயங்களில் ஏற்கனவே அறிவில்லாத ஒன்று. அதுவும் கலி காலத்தில் கேட்கவே வேண்டாம். அறியாமை இன்னும் அதிகம். அது மட்டுமில்லை. தமக்குத் தெரியாது என்ற குறைபாடே தங்கள் நெஞ்சில் சிறிதும் தோன்றாமல், தங்களை எல்லாம் தெரிந்து நிரம்பினதாக நினைத்துக்கொண்டிருக்கும் ஜனங்களிடத்தில் வேதாந்த ரஹஸ்யத்தை நான் சொல்லத் துணிவது சாகசமே! இந்த விஷயத்தில் ஸஹஸ்ர நாமத்தை வெளியிட்ட வியாசரும், துதிக்கப்படும் ஸ்ரீமந் நாராயணனும் இப்படித் துணியும் என் அறியாமையைப் பொறுத்துக் கொள்வார்களாக!” 

என்ன சார்! ராமா கிருஷ்ணா கோவிந்தா என்று சொல்லும் நாமாவளியில் அப்படி என்ன வேதாந்தம் என்று அலட்சியமோ, பொறாமையோ எதுவுமின்றி தயவு செய்து உங்கள் உள்ளத்தை உட்செலுத்திக் கேளுங்கள் என்று கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறார் அன்றைக்கே! 

உரைக்காரர்கள் நாமங்களின் எண்ணிக்கையையும், வகைகளையும் பற்றிப் பலவாறாக யோசித்திருக்கின்றனர். பொதுவாகச் சொன்னால் ஆயிரம் நாமங்கள் என்பது இயல்பாக நூறு நூறாக வகைபடுத்தும் முறையைத் தந்திருக்கிறது. 

ஸ்ரீ ஆதிசங்கரர் வகைபடுத்தும் பத்து நூறுகள் ஒருவகை. ஸ்ரீபராசர பட்டர் வகைபடுத்தும் பத்து நூறுகள் ஒருவகை. எல்லாம் அதே நாமாங்கள்தாம். ஆனால் அங்கங்கே ஒவ்வொரு நூறும் எந்த நாமத்தோடு முடிவடைகிறது என்பதில் கமாவை முன்னரும் பின்னரும் தள்ளி வைக்கின்றார்கள். 

மொத்தம் நாமங்கள் 1034. ஆனால் ஆயிரம் என்று நூலுக்குள்ளேயே வரையறை செய்துள்ளதனால் தனித்தனி நாமங்களாகக் கணக்கிடும் நாமங்களின் எண்ணிக்கை, பலசொற்கள் சேர்ந்து கணக்கிடப்படும் நாமங்கள் என்று வித்யாசங்கள் வருகின்றன. ஒருவர் ஒரு சொற்கோவையையே ஒரு நாமமாகக் கொண்டால் மற்றவர் அதையே இரண்டு அல்லது மூன்று நாமங்களாகக் கொள்கின்றனர். ஆக அனைவரும் அறுதியிடும் எண்ணிக்கை ஆயிரம். 

ஸ்ரீ ஆதிசங்கரரின் வகைபாடு -- 

100) விசவம் தொடங்கி அச்யுத: வரை 

200) வ்ருஷாகபி: தொடங்கி ஸிம்ம: வரை 

300) ஸந்தாதா தொடங்கி யுகாதிக்ருத் வரை 

400) யுகாவர்த்த: தொடங்கி அநய: வரை 

500) வீர: தொடங்கி போக்தா வரை 

600) கபீந்த்ர: தொடங்கி சிவ: வரை 

700) ஸ்ரீவத்ஸவக்ஷா: தொடங்கி ஸத்க்ருதி: வரை 

800) ஸத்தா தொடங்கி ஸுவர்ணபிந்து: வரை 

900) அக்ஷோப்ய: தொடங்கி அப்யய: வரை 

1000) ஸ்வஸ்தித: தொடங்கி ஸர்வப்ரஹரணாயுத: வரை 



ஸ்ரீபராசர பட்டரின் வகைபாடு --- 

100) விச்வம் -----> ஸர்வாதி: 

200) அச்யுத: -------> அம்ருத்யு: 

300) ஸர்வத்ருக் ---> ப்ரபு: 

400) யுகாதிக்ருத் --> நய: 

500) அநய: ------------> புராதந: 

600) சரீரபூதப்ருத் --> கோப்தா 

700) வ்ருஷபாக்ஷ: ----> வாஸுதேவ: 

800) வஸு: ----------------> ஸுலோசந: 

900) அர்க்க: ----------------> கபிரவ்யய: 

1000) ஸ்வஸ்தித: ------> ஸர்வப்ரஹரணாயுத: 

இந்தக் கணக்கையெல்லாம் நிர்ணயித்துத் தருபவை நிர்வசன நூல்கள். 

இவற்றையெல்லாம் தெரிந்துகொண்டுதான் பகவந் நாமாவைச் சொல்லணுமா என்றால் அதெல்லாம் இல்லை. பக்திதான் முக்கியம். இவை என்னைப் போல ஆட்களுக்குப் போலும்! இதைத்தவிர ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் பதிப்பில் ஸ்ரீஅண்ணா அவர்கள் நாமங்களின் வகைபாடுகளைப் பற்றி ஆய்வுக் குறிப்புகளே பல தந்துள்ளார். அதாவது ஒரே நாமம் எவ்வளவு தடவை மீண்டும் வருகிறது. ஆனாலும் அந்த அந்த இடத்தில் எப்படி அவற்றின் பொருள் வேறுபடுகின்றன, அ, ஆ, இ, ஈ என்று தொடங்கி வடமொழி அரிச்சுவடி வரிசையில் ஒவ்வொரு எழுத்திலும் ஆரம்பிக்கும் நாமங்கள் எவ்வளவு, ஸ்ரீஆதிசங்கரர் ஒரு நாமமாகக் கொண்டு ஸ்ரீபராசர பட்டர் ஒன்றுக்கு மேற்பட்ட நாமங்களாகக் கொண்டவை எவை எவை, அதே போல் இவர் ஒன்றாகவும் அவர் பலவாகவும் கொண்டவை என்று ஒரே கணக்கு மயம். அதாவது ஈடுபாடு அதிகம் ஆனால் எப்படி எப்படியெல்லாம் ஒன்றை அனுபவிக்கச் சொல்கிறது பாருங்கள்! 

ஸ்ரீபராசர பட்டர் காட்டும் வகைபாட்டில் ஓர் அருமையான நயத்தைக் காட்டுகிறார், பாஞ்சராத்திர சித்தாந்த ரீதியாக. அதாவது ஸ்ரீபாஞ்சராத்திர சித்தாந்தம் என்பது பரமாத்மாவின் ஐந்து இறைநிலைகளைப் பற்றிப் பேசுவது. பரத்வ நிலை, வ்யூஹ நிலை, விபவ நிலை, அந்தர்யாமி நிலை, அர்ச்சை நிலை என்பன அந்த ஐந்து நிலைகள். மொத்த நாமாக்களையே இந்த ஐந்து நிலைகளை வைத்து வகைபடுத்திக் காட்டுகின்றார் ஸ்ரீபட்டர். 

ஸ்ரீஆதிசங்கரரின் உரை அத்வைத சித்தாந்தமான பிருஹ்மம் என்பது சத்யம், ஜகத் என்பது மிதயை, இந்த ஜீவன் உண்மையில் பிரம்மமே, வேறு அன்று என்ற கருத்தில் நிற்பது என்றாலும் ஸ்ரீஆதிசங்கரரின் கூற்றுப்படி, ‘அந்த பிரம்மம் மாயாவிசிஷ்டமாகக் கொண்டு சகுண பிரம்மமாக இந்த ஆயிர நாமங்களுக்குப் பொருளாகிறது’ என்றாலும் பல இடங்களிலும் ஸ்ரீஆதிசங்கரர் பக்தியிலேயே நெகிழ்ந்து போகிறார். 

உதாரணத்திற்கு ‘நாராயண;’ என்னும் நாமத்திற்கு உரை எழுதுகையில் ஸ்ரீஆதிசங்கரர் எழுதிவைத்திருக்கும் வரிகள்தாம் இவை -- 

“நரன் என்னப்படும் ஆத்மாவினிடத்து உண்டானதால் நாரங்கள் என்னப்படும் ஆகாயம் முதலிய கார்ய வர்க்கங்களில் காரண ரூபியாக வியாபித்திருப்பதனால் அவற்றைத் தமக்கு இருப்பிடமாக உடையவர்; நரர்கள் என்னப்படும் ஜீவர்களுக்குப் பிரளய காலத்தில் ஆதாரமாயிருப்பவர்; நரம என்னப்படும் ஜலமாகிய ப்ரளயசாகரத்தில் சயனித்திருப்பவர்; ‘விஷயப்பற்றுக்களை விட்டு ச்ரேயஸைக் கருதுகிற ஸந்யாசிகள் ஸம்ஸாரம் என்னும் கொடிய விஷத்தைப் போக்குவதற்கு உரியதாகிய ‘நாராயணாய நம:’ என்னும் இந்த ஸத்ய மந்த்ரத்தையே கேட்க வேண்டும் என்பதை நான் கைகளைத் தூக்கிக்கொண்டு உயர்ந்த குரலால் உபதேசிக்கிறேன்’ என்பது நரஸிம்ம புராணம்.” 

Sk Natarajan

unread,
Sep 3, 2013, 10:10:51 PM9/3/13
to தமிழ் வாசல், min tamil, vallamai, தமிழ் சிறகுகள்
அருமையான விளக்கங்கள்
தொடர்கின்றேன் ஐயா


என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்




2013/9/3 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
வழிவழியாக வரும் ஆசாரிய புருஷர்கள் அனைவருமே இந்த ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாமம் என்பதை நாமாவளி ரூபத்தில் இருக்கும் வேதாந்தச் செப்பு என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். வேதாந்த மறைபொருளைத் தன்னிடத்தே இந்தக் கடவுள் நாமங்கள் செறிவாகக் கொண்டுள்ளன என்ற உறுதியில்தான் அவர்தம் உரைகள் எழுந்துள்ளன. பெயர்களின் பட்டியலில் அப்படிப் பெரும் வேதாந்தக் கருத்துகளைப் பொதிந்து வைத்த வியாசர்தாம் என்ன தயை மிக்கவர்! 



DEV RAJ

unread,
Sep 3, 2013, 11:41:48 PM9/3/13
to vall...@googlegroups.com, min tamil, தமிழ் வாசல், தமிழ் சிறகுகள்
On Tuesday, 3 September 2013 21:11:10 UTC+5:30, Mohanarangan V Srirangam wrote:

ஸ்ரீ ஆதிசங்கரரின் வகைபாடு -- 

100) விசவம் தொடங்கி அச்யுத: வரை 
200) வ்ருஷாகபி: தொடங்கி ஸிம்ம: வரை 
300) ஸந்தாதா தொடங்கி யுகாதிக்ருத் வரை 
400) யுகாவர்த்த: தொடங்கி அநய: வரை 
500) வீர: தொடங்கி போக்தா வரை 
600) கபீந்த்ர: தொடங்கி சிவ: வரை 
700) ஸ்ரீவத்ஸவக்ஷா: தொடங்கி ஸத்க்ருதி: வரை 
800) ஸத்தா தொடங்கி ஸுவர்ணபிந்து: வரை 
900) அக்ஷோப்ய: தொடங்கி அப்யய: வரை 
1000) ஸ்வஸ்தித: தொடங்கி ஸர்வப்ரஹரணாயுத: வரை 

உதாரணத்திற்கு ‘நாராயண;’ என்னும் நாமத்திற்கு உரை எழுதுகையில் ஸ்ரீஆதிசங்கரர் எழுதிவைத்திருக்கும் வரிகள்தாம் இவை -- 

“நரன் என்னப்படும் ஆத்மாவினிடத்து உண்டானதால் நாரங்கள் என்னப்படும் ஆகாயம் முதலிய கார்ய வர்க்கங்களில் காரண ரூபியாக வியாபித்திருப்பதனால் அவற்றைத் தமக்கு இருப்பிடமாக உடையவர்; நரர்கள் என்னப்படும் ஜீவர்களுக்குப் பிரளய காலத்தில் ஆதாரமாயிருப்பவர்; நரம என்னப்படும் ஜலமாகிய ப்ரளயசாகரத்தில் சயனித்திருப்பவர்; ‘விஷயப்பற்றுக்களை விட்டு ச்ரேயஸைக் கருதுகிற ஸந்யாசிகள் ஸம்ஸாரம் என்னும் கொடிய விஷத்தைப் போக்குவதற்கு உரியதாகிய ‘நாராயணாய நம:’ என்னும் இந்த ஸத்ய மந்த்ரத்தையே கேட்க வேண்டும் என்பதை நான் கைகளைத் தூக்கிக்கொண்டு உயர்ந்த குரலால் உபதேசிக்கிறேன்’ என்பது நரஸிம்ம புராணம்.” 


வாஸுதேவ’ ஏன் அத்துவித மரபில் முதன்மை பெறுகிறது ?
அதன் உட்பொருள் என்ன ?  பகவத்பாத சங்கரர் தரும்
பொருள் என்ன ?

இவற்றையும் உரிய தருணத்தில் விளக்கக்
கோருகிறேன்


தேவ்

Mohanarangan V Srirangam

unread,
Sep 6, 2013, 3:08:58 PM9/6/13
to min tamil, தமிழ் வாசல், vallamai, தமிழ் சிறகுகள்
ஸ்ரீ பகவந் நாமாம்ருத ரஸோதயம் என்பது ஸ்ரீபகவந் நாம போதேந்திர ஸரஸ்வதி செய்த அற்புதமான நூல். முழுக்க முழுக்க பகவந் நாமத்தின் மகிமையை ஆசாரியர்கள் ரிஷிகள் முனிவர்கள் ஆகியோரின் வாக்குகளைக் கொண்டு நிர்ணயிக்கிறார் ஸ்ரீ போதேந்திரர். (தமிழில் இந்த நூலைச் சிறப்பாக தமிழாக்கம் செய்திருக்கிறார் ஸ்ரீ கிருஷ்ண ப்ரேமி ஸ்வாமிகள்). 

கடவுளின் நாம இயக்கத்தின் மகிமை என்னவென்றால் எவ்வளவோ, ஆனால் கண்ணுக்குத் தெரிந்து சொல்ல வேண்டும் என்றால், ஜாதியினால் ஏற்படும் பிரிவினைப் பார்வையை அடித்துக் கீழே வீழ்த்துகிறது. பக்தி என்னும் உள்ளத்தின் எழுச்சியில் மனிதர்களின் அஹங்காரம் தீனியாகக் கேட்கும் பல திமிர்த்தனங்களை எரித்த கயிறாக ஆக்குகிறது. கடவுளின் நாமத்தில் ஈடுபட்ட உள்ளத்தரான பக்தர்களிடத்தில் உயர்வு தாழ்வு பார்ப்பவன் அருநரகு அடைவான் என்ற நிர்தாட்சண்யமான செய்தியை அஞ்சாமல் அமுல்படுத்திப் பார்த்த இயக்கம் எது என்று பார்த்தால் இந்த இறைவனின் திருநாமத்தில் உள்ளம் உருகும் ஈடுபாடு என்ற நாம ஜபம், கீர்த்தனம் என்ற இயக்கம்தான். ஓரிடத்தில் என்று இல்லாமல் பாரதம் நெடுக இந்த நாம சங்கீர்த்தனம் பரவத் தொடங்கிய பிறகுதான் நம் சமுதாயத்தைப் பிடித்த கலிக்குக் கொஞ்சமாவது கிலி பிடிக்க ஆரம்பித்தது. 

“நாவலிட் டுழிதருகின்றோம் நமன்தமர் தலைகள் மீதே நின் நாமம கற்ற ஆவலிப்புடைமை கண்டாய் அரங்கமா நகருளானே!” என்று பாடுகிறார் ஆழ்வார். 

‘ஒரு தடவை நீ அவன் நாமத்தை சொன்னால் பாபங்களின் குடியிருப்பில் சுனாமியே வந்துவிடுகிறது’ என்கிறார் கபீர். 

ஸ்ரீ ஆதிசங்கர பகவத் பாதர்கள் தமது ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம பாஷ்யத்தில் அசைக்க முடியாமல் நாம சித்தாந்தமே செய்கிறார். அவர் செய்த நாம சித்தாந்தப் பகுதியை அழகாகச் சுருக்கித் தருகிறார் தமது ஸ்ரீபகவந் நாம ரஸோதய நூலில் ஸ்ரீ போதேந்திரர். 

“வசமிழந்து நாமகீர்த்தனம் செய்தாலும் சிம்மத்தைக் கண்ட மிருகங்கள் போல் பாபங்கள் ஓடிவிடும். நாமகீர்த்தனமே குப்பைகளை அக்னிபோல் எல்லா பாபங்களையும் பொசுக்கிவிடும். நரகத்தைத் தரும் மிக உக்கிரமான கலிகல்மஷம் ஒருதரம் செய்த நாமஸ்மரணத்தாலேயே (கடவுள் நாமத்தின் நினைவு) நாசமாகும். 

“ தெரிந்தோ தெரியாமலோ வாஸுதேவ கீர்த்தனம் செய்தால் தண்ணீரில்பட்ட உப்புபோல் பாபம் கரைந்துவிடும். ஒருதரம் கோவிந்தநாமத்தை சொன்னாலும் பலபிறவிகளில் செய்த பாபங்கள் அனலில்பட்ட பஞ்சு போல் பொசுங்கிப் போகும். 

“ ஹரி என்ற இரண்டு எழுத்தை ஒருதரம் உச்சரித்தவன் கூட மோக்ஷத்திற்காக மூட்டை கட்டிவிட்டான். 

“’நாராயண’ என்ற நாமம் இருக்கிறது. வாக்கும் வசமாக இருக்கிறது. அப்படியிருந்தும் மக்கள் நரகில் விழுகின்றனரே! என்பதுதான் அதிசயம். நரகவேதனைப் படும் ஜீவனைப் பார்த்து யமன் கேட்கிறானாம், ‘ஏனடா! நீ கேசவனை பூஜிக்கவில்லையா? இங்கு வந்து அவதிப்படுகிறாயே!’ 

“’கமல நயன! வாஸுதேவ! விஷ்ணோ! தரணீதர! அச்சுத! சங்கசக்ரபாணே! நீரே சரணம் என்று சொல்பவர்களை விட்டுவிடு, கிட்டே அணுகாதே’ என்று யமன் தன் தூதனுக்குச் சொன்னான். 

“இதுமுதலான வசனங்களால் ச்ரத்தையும், பக்தியும் இல்லாதபோனாலும் நாமசங்கீர்த்தனம் ஸகலபாபங்களையும் நாசம் செய்துவிடும் என்று சொல்லப்பட்டது. 

“மனத்தால் நினைத்தே வாயால் பேசுகிறான், எதை  மனத்தால் நினைப்பானோ அதையே வாயால் பேசுகிறான்’ என்ற இரண்டு வாக்கியங்களாலும் ஸ்மரணமும், தியானமும் நாமகீர்த்தனத்துள் அடங்கியது. 

“’எவரை தியானம் செய்தால் நரகத்தை அடையமாட்டானோ, எவரை சிந்தனை செய்வதற்கு ஸ்வர்க்கசுகம் கூட இடையூறாகுமோ, எவரிடம் லயித்த மனம் உடையவனுக்கு பிரும்ம லோகமும் அல்பமோ, எவரை சாக்ஷாத்கரித்தவனுக்கு மோக்ஷம் சுலபமாகிறதோ, அந்த அச்சுதனைக் கீர்த்தனம் செய்ததுமே பாபங்கள் நாசமாகுமென்கிற விஷயத்தில் என்ன ஆச்சரியம் என்று ஸ்ரீபராசரர் ஸ்ரீவிஷ்ணு புராணத்தை முடிக்கிறார். 

“ஸர்வ சாத்திரங்களையும் கிளறிப்பார்த்து, பலதடவை விசாரித்து, ‘எப்பொழுதும் நாராயணனை தியானம் செய்ய வேண்டும்’ என்றே நிர்ணயம் செய்யப்பட்டது என்று ஸ்ரீவேத வியாசரால் ஸ்ரீமத் மஹாபாரதம் முடிக்கப்பட்டது. 

“’ஸத்வ குணத்துடன் ஹரி ஒருவனையே தியானம் செய்யுங்கள். எப்பொழுதும் ஓம்காரத்தை சொல்லுங்கள். கேசவனைத் தியானம் செய்யுங்கள்’ என்று ஸ்ரீஹரிவம்சத்தில் கைலாச யாத்திரையில் ‘ஹரிரேக: ஸதா த்யேய:’ என்று மஹேச்வரனாலேயே முடிக்கப்பட்டது. 

“இதெல்லாவற்றின் அபிப்ராயத்தைக்கொண்டே ‘ஏஷ மே ஸர்வ தர்மாணாம்’ என்றபடி எல்லாதர்மங்களையும்விட நாமகீர்த்தனம் சிறந்ததென்று சொல்லப்பட்டது. -- 

“இதுவரை சங்கரரின் விஷ்ணு ஸஹஸ்ரநாமபாஷ்யம்.” 

--- இவ்வாறு ஸ்ரீபோதேந்திரர் ஸ்ரீஆதிசங்கரரின் நாம சித்தாந்த முடிவுகளைச் சுருக்கித் தமது நூலில் காட்டுகிறார். 

ஸ்ரீஆதிசங்கரரின் ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாம பாஷ்யத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது ஸ்ரீபோதேந்திரர் எழுதுகிறார் -- 

‘பகவத் பாதாசார்யர் அவர்களால் செய்யப்பட்ட ஸஹஸ்ரநாம பாஷ்யத்தில், ஹரிநாமமானது வேதத்தில் சொல்லப்பட்ட எல்லா தர்மங்கலைக் காட்டிலும் உயர்ந்தது என்றும், யாவருக்கும் பொது என்றும், ஸகுண நிர்க்குணப்ரும்ம சாக்ஷாத்காரத்திற்கு ஸாதனம் என்றும் கூச்சலிட்டுச் சொல்லப்பட்டது.” 

ஸ்ரீபோதேந்திரர் தமது குருவின் ஆணையால் பூரி ஜகந்நாதம் சென்று அங்குள்ள ஸ்ரீலக்ஷ்மீதரகவியிடமிருந்து அவரது ’நாமகௌமுதி’ என்னும் நூலைப் பெற்று வந்து அதன் அடிப்படையில் ஸ்ரீபகவந் நாம மகிமையை ஊரெல்லாம் பரப்பவேண்டும் என்று பெரும் முடிவு எடுத்தவ்ராய்ச் சென்றார். இரவு நேரம். பண்டித ஸ்ரீஜகந்நாதரைத் தொந்தரவு செய்யாமல் திண்ணையில் ஓரிடத்தில் படுத்தார். ஆனால் ஸ்ரீஜகந்நாதரை நோக்கி ஒரு வினோத வழக்கு அப்பொழுது வந்து சேர்ந்தது. ஒரு கணவன் மனைவி. குடும்பம் பிரிந்தது. மனைவியை மீண்டும் தன்னோடு சேர்த்துக்கொள்வதா, அவளிடம் குற்றமில்லை என்று தன் நெஞ்சு அறியும். ஆனால் ஜாதிக் கட்டுப்பாடு என்பது தயை அற்றது ஆயிற்றே! என்ன செய்யுமோ என்று அவர்கள் ஸ்ரீஜகந்நாதரை அண்டி வந்தனர் தர்ம சாத்திரத்தில் ஏதாவது கழுவாய் இருந்து அதன் மூலம் குடும்பம் மீண்டும் ஒன்றாக இணைய வாய்ப்புண்டா என்று. 

ஸ்ரீஜகந்நாத கவி சொன்னார் - ‘ராம ராம ராம’ என்று மூன்று தடவை ராம நாமத்தை சொல்லுங்கள். பிறகு கவலைப் படாமல் சென்று குடும்பம் நடத்துங்கள். ஒரு தூய்மைக் கேடும் இல்லை.’ என்றார். 

ஸ்ரீபோதேந்திரரோ திண்ணையில் ஓர் ஓரத்தில் ஏதோ வழிப்போக்கன் தூங்குவது போல் கவனித்துக்கொண்டிருக்கிறார். 

அப்பொழுது உள்ளிருந்து ஸ்ரீஜகந்நாதரின் தாய், அதாவது ஸ்ரீலக்ஷ்மீதரகவியின் மனைவி அதட்டலாக ஒரு குரல் எழுப்பினாள் -- “ஏனப்பா இப்படி நாத்திகனாக ஆகிவிட்டாய்? உங்கள் தந்தையார் அடிக்கடி சொல்வாரே - ‘ஒரு தடவை ராம நாமத்தைச் சொன்னவர்களைப் பாபம் தீண்டவே முடியாது’ என்று. அப்படியிருக்க மூன்று தடவை சொல்ல வேண்டுமாமே! ஏன் இந்த அவநம்பிக்கை உனக்கு?” 

இதைக் கேட்டதும் தாங்கவில்லை ஸ்ரீபோதேந்திரார் அவர்களுக்கு. ‘நாராயண நாராயண’ என்று ஆனந்தத்தில் கீர்த்தனம் செய்து கூத்தாட ஆரம்பித்துவிட்டார். அப்பொழுதுதன் வீட்டுக்காரருக்கே தெரிந்தது வந்திருப்பது ஸ்ரீபோதேந்திரர் என்று. அனைவரும் அவரை வணக்கித் துதிக்க, ஸ்ரீஸ்வாமிகள் ஜகந்நாதரிடம் ‘இவ்வாறு நீங்கள் கூறும் தர்ம சங்கடத்திற்கான ப்ராயச்சித்தத்திற்கு ஏதாவது ஆதாரம் உண்டா என்று விசாரித்து அவரிடமிருந்து ‘பகவ்ந் நாம கௌமுதி’ என்னும் நூலைப் பெற்று அன்றிரவே அதைப் படித்து முடித்து ஜகந்நாதரிடமே திருப்பிக் கொடுத்தார். 

jayasree shanker

unread,
Sep 7, 2013, 10:31:58 AM9/7/13
to vall...@googlegroups.com
புண்ணியம் கோடி செய்தவரால் மட்டும் தான் இதைத் தொட்டு எழுதவும் சாத்தியம்.அதற்கும் பகவானின் அனுக்ரஹம் வேண்டும். 

நித்யம் விஷ்ணு சஹஸ்ரநாமம் கேட்கிறோம், வாசிக்கிறோம்....பாஷ்யங்களை அவ்வளவாக இதுவரை ஏனோ கண்டு கொள்ளவில்லை.

தங்களின் எழுத்தில் படிக்கும் போது  அத்தோடு கூடவே மகிமை புரிகிறது.

தங்களின் இந்த மகத்தான ஆன்மீக சேவை சேவை போற்றுதலுக்குரியது.

பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு வாழ்க...வாழட்டும்..!

பணிவோடு,

ஜெயஸ்ரீ ஷங்கர்.


7 செப்டம்பர், 2013 12:38 AM அன்று, Mohanarangan V Srirangam <ranga...@gmail.com> எழுதியது:

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

Mohanarangan V Srirangam

unread,
Sep 7, 2013, 2:26:02 PM9/7/13
to min tamil, தமிழ் வாசல், vallamai, தமிழ் சிறகுகள்
கடவுளின் நாமத்தை ஜபித்தல் என்பதைப் பற்றி ரிஷிகள் முனிவரர்கள் மட்டும்தான் கொண்டாடியிருக்கிறார்கள் என்று நினைக்க வேண்டாம். உலக அளவில் ஆன்மிக அருள் செல்வர்கள் அனைவருமே மிகவும் கொண்டாடியிருக்கும் தவறாத ஆன்மிக சாதனம் எது என்று பார்த்தால் இந்த  கடவுள் நாம ஜபம்தான். அவற்றைப் பார்க்கும் முன் உலக கவிச் சக்கரவர்த்தி வில்லியம் ஷேக்ஸ்பியர் ரோமியோவின் வாயால் கூறும் கூற்று ஒன்று அருமை. 

“It is my soul that calls upon my name." 

எவ்வளவு சித்தாந்த சாரமான வாக்கியம் இது என்பது யோசித்துப் பார்த்தால் புரியும். 

Eckhart என்னும் அருளாளர் கூறுவது - 

“Hearer and heard are one in the eternal Word." 

Ippen Shonin என்பார் கூறுவது அற்புதம் - 

“When I invoke the sacred name, there is neither myself nor the Buddha, but merely the invocation." 

Angelus Silesius என்பார் கூறுவது - 

“The sweet Name of Jesus is honey on the tongue: 
To the ear a nuptial chant, in the heart a leap of joy." 

ஸ்ரீஆதிசங்கரரின் சகுண நிர்க்குண பிரம்ம நிஷடையை நமக்கு ஞாபகப் படுத்துவது போல் இருக்கிறது துளஸிதாசரின் மொழிகள் -- “பகவானை விட பகவந் நாமம் பெரியது. ஏனெனில் பிரம்மத்தின் அகுண, சகுண அம்ச்ங்கள் இரண்டையுமே நம்மால் நாமத்தின் மகிமையால் அன்றோ சுவைக்க முடிகிறது!” 

இதையே எதிரொலிப்பது போல் கூறுகிறார் ஆஞ்ஜெலஸ் சைலீஷியஸ் - 

“The Ineffable which one is accustomed to call God 
Is expressed and made known through a single Word." 

ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸரின் ஞான புத்திரன் என்று கொண்டாடப்பட்ட சுவாமி பிரம்மாநந்தர் கூறுவது -- 

“Repeat his name and call upon him. He is very near and he is dear to all. Why should he not reveal himself? Open your heart to him. He will guide you along the right path. There is nothing more purifying than his name and meditation upon him. He is our very own. He easily becomes revealed to us." 

தாரக் மஹராஜ் என்னும் சுவாமி சிவாநந்தர் ஸ்ரீராமகிருஷ்ணரின் சிஷ்யர். அவர் கூறுவது -- 

"It is people with gross ideas alone who think that the more one tells beads, the more propitious does God become. Does He really look at the number? He only watches how much the heart is dedicated to Him. If the proper divine mood prevails, what does it matter whether you keep count or not?" 

ஸ்ரீராமகிருஷ்ணரின் நேரடிச் சீடர்கள் ஒவ்வொருவரும் ஆன்ம சாதனையில் நன்கு பழுத்த பெரும் மகான்கள். அவர்களில் சுவாமி அத்புதாநந்தர் என்னும் லாட்டு மஹராஜ் என்பவர் விசேஷமானவர். ஸ்ரீராமகிருஷ்ணர் நிகழ்த்திய அற்புதம் இந்த லாட்டு மஹராஜ் என்பதாலேயே சுவாமி விவேகாநந்தர் இவருக்கு அத்புதாநந்தர் என்னும் துறவுத் திருநாமத்தைச் சூட்டினார். அத்புதாநந்தர் என்பவரை ஜப சித்தர் என்றே கூறலாம். இவரை ஒப்பிட்டால் ஸ்ரீராமகிருஷ்ணர் படிப்பரிவில் மிகவும் கற்றவர் என்று சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு லாட்டு படிப்பறிவு சிறிதும் இல்லாதவர். ஆனால் ஆன்ம சாதனையினாலும், குருவின் பேரருளாலும் லாட்டு மஹராஜ் அடைந்த ஆன்மிகப் பெருநிலை சொல்லும் அளவன்று. அவர் ஜபத்தைப் பற்றிக் கூறும் கருத்து -- 

“Sri Ramakrishna used to say that before starting to chant the name of the Lord, one should salute the name. One should take refuge in the name of the Lord. The name and the named, that is, the Lord, are one." 

நாம மஹிமையைப் பற்றி அதை அனுஷ்டித்தவர்கள் சொன்னவற்றைத் தொகுத்தாலே பல பெரிய நூல்கள் அளவிற்கு வந்துவிடும். 

நான் சொல்லக் கூடியது -- நல்ல பொழுது போக்கு. தத்துவச் சிந்தனைக்குச் சுருக்கு வழி. தனிமை மிகவும் இனிமை என்று ஆக்கவல்ல உயர்ந்த சத்சங்கம் இந்த நாம ஜபம் என்பது ஆகும். 

*** 
ஸ்ரீரங்கன் வி மோகனரங்கன் 

*

சொ. வினைதீர்த்தான்

unread,
Sep 8, 2013, 1:20:55 AM9/8/13
to vallamai, min tamil, தமிழ் வாசல், தமிழ் சிறகுகள்
3/9/7 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
கடவுளின் நாமத்தை ஜபித்தல் என்பதைப் பற்றி ரிஷிகள் முனிவரர்கள் கொண்டாடியிருக்கிறார்கள் 


நான் சொல்லக் கூடியது -- நல்ல பொழுது போக்கு. தத்துவச் சிந்தனைக்குச் சுருக்கு வழி. தனிமை மிகவும் இனிமை என்று ஆக்கவல்ல உயர்ந்த சத்சங்கம் இந்த நாம ஜபம் என்பது ஆகும். 

இனிய நண்பரே வணக்கம்.
இதுவரை தாங்கள் கூறும் நாமஜபம் சத்சங்கம் வாய்த்ததில்லை. தங்கள் பதிவு முயன்று பார்க்க வைக்கப் பெரிதும் ஊக்குவிக்கிறது. தேர்ந்த சொற்கள். தெளிவான நடை. எளிமைப்படுத்தல்.அருள் பெற்ற வாக்கு!
ஹரே ராம ஹரே கிருஷ்ண இயக்க நண்பர் சொல்லி ஒருநாள் முன்பு முயன்றேன். இயல்பான சோம்பல் கைவிட வைத்தது. தனிமைக் கூட்டு வாய்க்குமா என்பது தெரியவில்லை. அவனருளாலே அவன் தாள் வணங்கி என்பது பெரியவர் மொழி. இப்போதைக்கு அப்போது சொல்லிக்கொள்ளலாம் என நாட்கள் கழிகின்றன. ஏனென்றால் நல்லவர் வாய்ச்சொல் கேட்டிருக்கிறேனே!
தொடருங்கள்.
நன்றி
சொ.வினைதீர்த்தான்.    

Mohanarangan V Srirangam

unread,
Sep 8, 2013, 5:35:40 AM9/8/13
to vallamai, min tamil, தமிழ் வாசல், தமிழ் சிறகுகள்
>>தங்களின் எழுத்தில் படிக்கும் போது  அத்தோடு கூடவே மகிமை புரிகிறது.<< 

நன்றி ஜெயஸ்ரீ. நலமாக இருக்கிறீர்களா? 





2013/9/8 சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com>
நன்றி ஐயா. சோம்பலில் உங்களுக்கு நான் அண்ணன். ஆனாலும் நாம ஜபம் அதைவிட இனியதுதான். நல்ல துணை. வீண்கவலைகளில் நம் காலம் அதிகம் விரயமாவதை எண்ணும் போது.. என்ன சொல்வது.... 

***



Mohanarangan V Srirangam

unread,
Sep 8, 2013, 11:39:49 AM9/8/13
to min tamil, தமிழ் வாசல், vallamai, தமிழ் சிறகுகள்
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்திரம் என்கிறோம். பிறகு நாமாவளி என்கிறோம். நூல்களிலும் முதலில் செய்யுள் வடிவில் இரண்டு இரண்டு வரிகளாகப் பிரித்துப் போட்டிருக்கிறார்கள். அப்புறம் வரிசையாகப் பெயர்ப் பட்டியல் மாதிரி போட்டு எல்லா நாமங்களிலும் தொடக்கத்தில் பிரணவமும், அந்த நாமத்தின் முடிவில் நம: என்றும் போட்டு முடித்திருக்கிறார்கள். 

அப்படியென்றால் ஸ்தோத்திரம் என்றால் என்ன? நாமாவளி என்றால் என்ன? இரண்டு விதங்களிலும் அதே ஆயிரம் நாமங்கள்தாமே வருகின்றன? என்று ஒரு நண்பர் கேட்டார். அவருக்குத் தந்த விளக்கத்தை இங்கேயும் தருகிறேன். 

ஸ்தோத்திரம் என்பது பகவானின் நாமங்களைச் செய்யுள் வகை ஒன்றில் பாக்களாகச் சேர்த்துத் தரப்படும் வடிவம். இங்கு அனுஷ்டுப் என்னும் சந்தத்தில் ஸ்ரீவிஷ்ணுவின் ஆயிரம் நாமங்களும் செய்யுள் வடிவில் தரப்பட்டிருக்கின்றன. இப்படித் தந்தால் அந்த வடிவத்தில் அதற்குப் பெயர் ஸ்தோத்திரம். 

சரி. அனுஷ்டுப் சந்தம் என்றால் என்ன? அதாவது வடமொழியில் பொதுவாக ஒரு செய்யுள் என்று எடுத்துக்கொண்டால் இரண்டு வரிகள் இருக்கும். முதல் வரியின் முடிவில் | - இப்படி ஓர் ஒற்றைக் கோடு இட்டிருக்கும். இரண்டாவது வரி அந்தச் செய்யுளின் முடிவு வரியாக இருக்கும். அதன் முடிவில் || - இப்படி இரண்டு செங்குத்துக் கோடுகள் இடப்படும். அப்படி இட்டால் அந்தச் செய்யுள் முடிவடைகிறது என்று பொருள். 

ஒவ்வொரு வரியையும் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கலாம். ஒவ்வொரு பகுதிக்கும் பாதம் என்று பெயர். அப்படி என்றால் ஒவ்வொரு செய்யுளிலும் இரண்டுவரிகள் இருக்கும். ஒவ்வொரு வரியிலும் இரண்டு பாதங்கள் இருக்கும். ஆக மொத்தம் ஒவ்வொரு செய்யுளும் நான்கு பாதங்கள் கொண்டது. ஒவ்வொரு பாதத்திலும் எண்ணினால் எட்டு உயிரெழுத்துகள் மட்டுமே இருக்க வேண்டும். அதாவது ஒவ்வொரு வரிக்கும் 16 உயிரெழுத்துகள். முழுச் செய்யுளுக்கு 32 உயிரெழுத்துகள். அப்படி உள்ள செய்யுளுக்கு அனுஷ்டுப் சந்தஸ் என்று பெயர். 

இப்பொழுது தர்ம புத்திரன் கேட்ட கேள்வி ச்லோகம், அதையே எடுத்துக்கொள்வோம். 

கிமேகம் தைவதம் லோகே கிம்வாப்யேகம் பராயணம் | 
ஸ்துவந்தக்கம் கம்ர்ச்சந்த: ப்ராப்நுயுர் மாநவா:சுபம் || 

இதில் 1)கிமேகம் தைவதம் லோகே, 2) கிம்வாப்யேகம் பராயணம், 3) ஸ்துவந்தக்கம் க்மர்ச்சந்த:, 4) ப்ராப்நுயுர் மாநவா:சுபம் - என்பன நான்கு பாதங்கள். 

ஒவ்வொரு பாதத்திலும் எண்ணிப்பாருங்கள். எட்டு உயிரெழுத்துகள் இருக்கும். இப்படிப் பாடுவது அனுஷ்டுப் சந்தஸ். ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாமம் முழுவதும் இப்படி அனுஷ்டுப் சந்தஸில் பாடப்பட்டிருக்கிறது. இது ஸ்தோத்திரம். 

இந்த ஸ்தோத்திரம் தொடங்கும் போது ஹரி: ஓம் என்று ஹரி நாமத்தோடும், பிரணவத்தோடும் தொடங்கி முடிவில் ஸர்வப்ரஹரணாயுத ஓம் நம இதி என்று நமஸ்காரத்தில் முடிகிறது. அதாவது இது எப்படி என்றால் ராமா கிருஷ்ணா கோபாலா நாராயணா அச்சுதா என்று வரிசையாகக் கூப்பிட்டு உனக்கு நமஸ்காரம் என்று ஸ்தோத்திர முடிவில் வணங்குவது.

இனி நாமாவளி என்னும் வடிவத்திற்கு வருவோம். ஒவ்வொரு நாமத்தையும் ப்ரணவத்தோடு சொல்லி இன்ன பெயர் கொண்ட கடவுளே உனக்கு நமஸ்காரம் என்று முடித்து, மீண்டும் அடுத்த நாமத்திற்கும் அப்படியே செய்வது. இந்த  வடிவத்தில் ஒவ்வொரு நாமத்தோடும் நான்காம் வேற்றுமை உருபு சேரும். ராமனுக்கு, கிருஷ்ணனுக்கு, நாராயணனுக்கு, அச்சுதனுக்கு என்று. 

ஏன் ப்ரணவம் சொல்லவேண்டும்? ஏன் சொல்கிறோம்? அங்குதான் ஒரு முக்கியமான சூக்ஷுமம் இருக்கிறது. நாம் யாரையாவது மனிதர்களைப் பார்த்தால் அவர் பெயரைச் சொல்லியே நினைத்தோ வணக்கம் சார் என்கிறோம். இங்கு நாம் வணங்குவது ஓர் ஆளை அன்று. ஏதோ பெரிய அதிகாரி, சக்ரவர்த்தி என்பவரை நாம் வணங்கவில்லை. நம்மைப் போல் உருவம் உடைய ஒருவரை, நம்மைப் போல் பிறந்து வளர்ந்து, நம்மைப் போல் இது பிடிக்கும் இது பிடிக்காது என்ற வேண்டுதல் வேண்டாமைகள் உள்ள ஒரு மனிதரையோ அல்லது புராணங்களில் கூறும் அதிக சக்தி உடைய ஒரு தேவ வியக்தியையோ நாம் வணங்கவில்லை. 

நாம் இங்கு வணங்குவது எல்லாம் அனைத்துப் பிரபஞ்சமாகவும் ஆகி, அனைத்தினுள்ளும்  இருக்கும் அந்த பரம தத்துவமான ஆத்மாவையே, பரமாத்மாவையே நாம் வணங்குகிறோம். அந்த பரமாத்மாவைக் குறிப்பிடும் பெயர் பிரணவம். 

எனவேதான் பிரணவத்தைச் சொல்லி வணங்குகிறோம். பரமாத்மாவாகிய ராமனை வணங்குகிறேன், பரமாத்மாவாகிய கிருஷ்ணனை வணங்குகிறேன், பரமாத்மாவாகிய அச்சுதனை வணங்குகிறேன், பரமாத்மாவாகிய நாராயணனை வணங்குகிறேன் என்பதை நமக்கு மனத்தில் தியானிக்க பிரணவம் தூண்டுகிறது. 

அந்தந்த நாமத்தின் முடிவில் நம: என்பது என்ன? நம: என்பதில் இரண்டு எழுத்துகள் உள்ளன. ந + ம:. ம: என்றால் எனக்கு என்று பொருள். அதனோடு ந என்னும் எதிர்மறை ஒட்டைச் சேர்த்தால் எனக்கு இல்லை என்று பொருளாகும். எனவே ஒவ்வொரு நாமத்தையும் ’பரமாத்மாவுக்கு என்னை நான் உரியவன் என்று உணர்கிறேன், நான் எனக்கு உரியவன் இல்லை’ - என்று பரமாத்மாவிடம் நம் அஹங்கார மமகாரங்களை அதாவது நான் எனக்கு என்னும் எண்ணங்களை ஒப்படைத்துவிடுதலுக்குப் பெயர்தான் நமஸ்காரம். 

ஆனால் எல்லோரும் சர்வ சாதாரணமாகத் தெருவில் யாரையாவது பார்த்தால் கூட ‘நமஸ்காரம் சார்’ என்கிறோம். என்ன பொருள் இருக்கிறது? நாம் நமஸ்காரம் என்பதன் பொருளைச் சரியாக உணராததால் அப்படிச் சொல்லுகிறோம். 

பரவாயில்லை. அந்தப் பழக்கத்தை நிறுத்த வேண்டும் என்று இல்லை. ஆனால் அப்படிச் சொல்வதோடு ஒரு சிந்தனையையும் நாம் மனத்தில் கூடச் சேர்த்துக்கொண்டால் போதும் அதுவே, அதாவது தெருவில் யாரையாவது நாம் பார்த்துச் சொல்லும் வணக்க்கமே, நமஸ்காரமே கூட உயர்ந்த வழிபாடாக ஆகிவிடும். என்ன சிந்தனையைச் சேர்த்துக்கொள்ள வேண்டும்? 

அதாவது நாம் வணங்குவது அந்த மனிதருக்குள் அந்தர்யாமியாக வீற்றிருக்கும் பகவானுக்குத்தான், நாராயணருக்குத்தான் நாம் வணங்குகிறோம் என்ற சிந்தனையைச் சேர்த்துக்கொண்டால் போதும், அங்கும் நம் நமஸ்காரம் பொருள் வாய்ந்ததாக ஆகிவிடும். 

அப்படி மனிதருக்குள் வீற்றிருக்கும் நாராயணரை அவ்வாறு சிந்தித்து வழிபடுவதே சிறந்த பூஜை என்கிறார் விவேகாநந்தர். நரனுக்குள் நாராயணனை வழிபடுவதே மிக உயர்ந்த பூஜை முறை என்கிறார் ஸ்ரீராமகிருஷ்ணர். 

ஆனால் நம்மில் பலர் என்ன செய்கிறோம்? கொஞ்சம் ஏடாகூடமாகச் செய்கிறோம். அவ்வளவே. என்னவென்றால் மனிதர்கள் சிலரைத் தெய்வங்களாகக் கருதி வழிபடுகிறோம். சிந்தனை செம்மையானால் செயலும், வணக்கமும் செம்மை ஆம். 

சரி நாமாவளிக்கு வருவோம். அப்படி பிரணவத்துடன் நாமம் நமஸ்காரம் ஆகிய வடிவத்தில் ஒவ்வொரு நாமத்தையும் ஜபிக்கும் போது அதுவே சிறந்த தியானமாக ஆகிறது. கூடவே ஒவ்வொரு நாமத்திற்கும் பூக்களை இட்டு நாராயணனைத் தொழுதக்கால் அதுவே சிறந்த அர்ச்சனை ஆகிறது. 

ஏன் பூக்களை இட்டு அர்ச்சிக்கிறோம்? உள்ளம் என்பது மலர வேண்டும். மலர்ந்த உள்ளத்தில்தான் மாதவன் வீற்று அருள் புரிவான். உள்ளம் மலர்வது என்பது என்ன? உலகக் கவலைகள், ஆசைகள், புலன் நாட்டங்கள், கீழ்மை, பொறாமை, வஞ்சம், அஹங்காரம் ஆகிய வாட்டங்கள் எல்லாம் நீங்கி உள்ளம் உள்முகமாக, கடவுளை நோக்கி விரிவதுதான் மலர்வது என்று பொருள். அவ்வாறு ’என் உள்ளம் உன்னை நோக்கி மலர வேண்டும்’ என்று அவனிடம் பிரார்த்திக்கும் புறச் சடங்கே பூக்களை இட்டு அர்ச்சிப்பதன் உட்பொருள். 

எனவேதான் நாமாவளி என்ற வடிவத்தில் வரிசையாக ஆயிரம் நாமங்களையும் கொடுத்திருக்கிறார்கள். 

எப்படியும் நாம் இழந்து போகாமல் இருக்க நமது முன்னோர்கள் செய்து வைத்துப் போன நம் சொத்துகள் இவை. 

யார் யாரையோ அர்ச்சிக்கிறோம், யார் யாரையோ துதி பாடுகிறோம், யார் யாரையோ அல்ப விஷயங்களுக்கு வணங்குகிறோம், நாம் வணங்கும் அவர்களோ நமக்கு முன் போய்ச் சேர்ந்துவிடுகிறார்கள். இது ஒரு பக்கம்.... ஆனால் நம் முன்னோர்களோ நாம் வணங்க வேண்டியது எங்கே எப்படி என்று பல வடிவங்களில் தந்துள்ளனர். ஆனால் அதை நாம் அவமானம் என்று கருதுகிறோம். பரவாயில்லை. தெரிந்துகொள்ளும் வரையில்தானே தடுமாட்டம்! 

*** 
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் 

*

Tulsi Gopal

unread,
Sep 8, 2013, 11:50:17 AM9/8/13
to vall...@googlegroups.com
அருமையான விளக்கம்.

 நன்றி.


2013/9/9 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.



--
என்றும் அன்புடன்,
துளசி

shylaja

unread,
Sep 8, 2013, 11:54:38 AM9/8/13
to vallamai
அரங்கனார்  கைக்கு  யாராவது தங்கக்காப்பிடவும் அத்தனை அருமையான வரிகளைதட்டச்சிருக்கிறார். ..பிரணவத்தின் மேன்மை மகத்துவம்  ...ஆஹா... பாராட்டக்கூட வார்த்தை வராத  பேதைமை எனக்கு.


2013/9/8 Tulsi Gopal <gopal...@gmail.com>

Mohanarangan V Srirangam

unread,
Sep 8, 2013, 12:26:24 PM9/8/13
to vallamai
நன்றி துளசி கோபால். ஓ எல்லோரும் பார்த்துக்கிட்டு இருக்கீங்களா..! ஓகே ஓகே 


2013/9/8 shylaja <shyl...@gmail.com>

அரங்கனார்  கைக்கு  யாராவது தங்கக்காப்பிடவும் அத்தனை அருமையான வரிகளைதட்டச்சிருக்கிறார். ..பிரணவத்தின் மேன்மை மகத்துவம்  ...ஆஹா... பாராட்டக்கூட வார்த்தை வராத  பேதைமை எனக்கு. 


அடடா என்ன பெரிய மனம் உங்களுக்கு! நன்றிங்கோ நன்றி. 

jayasree shanker

unread,
Sep 8, 2013, 12:38:23 PM9/8/13
to vall...@googlegroups.com
/////நம் அஹங்கார மமகாரங்களை அதாவது நான் எனக்கு என்னும் எண்ணங்களை ஒப்படைத்துவிடுதலுக்குப் பெயர்தான் நமஸ்காரம்.////

படிக்கப் படிக்க.புரியாததெல்லாம் புரிகிறது. 

ஒவ்வொன்றின் விளக்கமும் மூன்றாவது கண்ணை தட்டி எழுப்புகிறது.
. யதார்த்தமான வார்த்தைகள்.நன்றி. நன்றி


8 செப்டம்பர், 2013 9:56 PM அன்று, Mohanarangan V Srirangam <ranga...@gmail.com> எழுதியது:

shylaja

unread,
Sep 8, 2013, 10:48:54 PM9/8/13
to தமிழ் வாசல், min tamil, vallamai, தமிழ் சிறகுகள்
மதுரபாரதி அவர்களின்  ஒவ்வொரு வார்த்தையும் மதுரம்!  அதுவும் சாரதாமணி அம்மையாரைப்பற்றிய வரிகளைப்படிக்கும்போதே கண் பனிக்கிறது. , அடிக்கடி அரங்கனார் உங்களுக்கு  இப்படி வாய்ப்புகளை ஏற்படுத்த்திதரவேண்டும் உன்னத  விஷயங்களை வாசிக்க நாங்களும் கொடுத்துவைத்திருக்கவேண்டும். 


2013/9/9 Madhurabharati <madhura...@gmail.com>

2013/9/7 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>

ஓரிடத்தில் என்று இல்லாமல் பாரதம் நெடுக இந்த நாம சங்கீர்த்தனம் பரவத் தொடங்கிய பிறகுதான் நம் சமுதாயத்தைப் பிடித்த கலிக்குக் கொஞ்சமாவது கிலி பிடிக்க ஆரம்பித்தது
​.

அன்புக்குரிய மோகனரங்கன் செய்வது மகத்தான காரியம். அவர் எழுத்தை அறிதொறும் என் அறியாமையையும் அது சற்றே அகல்வதையும் காண்கிறேன். இங்கே நாமஜப மகிமை குறித்து மேலும் சிலவற்றைப் பகிர ஆசையாயிற்று, வாய்ப்புக் கிடைத்தமையால்.

நாமத்தை எப்படியும் சொல்லலாம். அங்கே அன்பின் மிகவுயர்ந்த வடிவமான பக்தியே மிக முக்கியம். பக்தி என்பது “தன்னளவிலே மிகவுயர்ந்த அன்பின் வடிவமாம்” (ஸா தஸ்மின் பரமப்ரேம ரூபா) என்று நாரத பக்தி சூத்திரம் சொல்கிறது. ஆனால் மந்திரத்தைப் பிழையுற உச்சரித்தல் கூடாது. நாமத்தை பக்தி, சிரத்தையோடு எப்படிக் கூறினாலும் பலனுண்டு என்பதற்கு மாதா ஸ்ரீ அமிர்தானந்த மயி தேவி கூறுவார், “ரத்னாகர் ‘ராம, ராம’ என்றுகூடக் கூறவில்லை. ‘மராமரா’ என்றுதான் ஜபித்தான். அவன் ஆதிகவியானான்.” என்ன அழகு பாருங்கள்.

அதற்கு அம்மச்சி ஒரு உதாரணமும் சொல்வார். “நெல்லை எப்படித் தூவினாலும் அது முளைத்து நாற்றாவது போல” என்று. ஆஹா! என்ன அழகு! சரியோ தவறோ இறைநாமம் நாவில் சுழன்றுகொண்டே இருக்க வேண்டும். அன்பின் வடிவமான இறைவன் நம் பிழைபொறுத்து நம் பக்தியை ஏற்பான்.

ஆன்மிகத்தில் மேற்செல்ல விரும்புவோருக்கு நாமஜபம் எப்படி மனதைக் கட்டுப்படுத்தி வைக்க உதவுகிறது என்பதை ஸ்ரீ ரமண மகரிஷி வெகு அழகாகச் சொல்வார். யானை இருக்கிறதே அதன் தும்பிக்கை ஒரு போதும் சும்மா இருக்காது. தொங்குகின்ற வாயைக் கொண்டிருப்பதால் யானைக்கே ‘நால்வாய்’ (நாலுதல் என்றால் தொங்குதல்) என்று பெயர். ‘கொலை நால்வாய் கொணர்ந்தார்’ என்று பாரதி பாஞ்சாலி சபதத்தில் இதைக் கூறுவான். (கயிற்றில் தொங்கிச் சாவதை ‘நாண்டுகிட்டுச் சாவது’ என்று நெல்லையூரார் சொல்வர்).

தனது தும்பிக்கையை நீட்டி யானை வலமும் இடமும் நடுவும் மேலும் கீழுமாக எதையாவது தொட்டுக்கொண்டே இருக்கும். நம் மனதைப் போல. தொட்டதைப் பிடிக்காது மீண்டு வேறொன்றைத் தேடும். நம் மனதைப் போல! யானைப்பாகன் தன் கையில் இருக்கும் சங்கிலித் துண்டு ஒன்றை அதனிடம் கொடுப்பான். தான் ‘பாஸ்’ ஏதோ முக்கியமானதொன்றைத் தன்னிடம் ஒப்படைத்திருக்கிறார் என்று கருதிய யானை அதைப் பிடித்துக் கொண்டு தன் தும்பிக்கையை அசையாமல் வைத்திருக்குமாம்!

நம் மனதிற்கும் இறைவனின் நாமத்தைக் கொடுத்துவிட்டால் அதை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு சலனமில்லாமல் இருக்குமாம், சங்கிலித்துண்டைப் பற்றிய நால்வாய் போல! மனதை ஒருநிலைப்படுத்த நாமஜபம் எவ்வளவு முக்கியம் என்பதற்கு மௌனகுரு ரமணர் கூறும் அழகான உதாரணம் இது.

வாழ்க்கை என்பது ஓர் அடர்ந்த காட்டினூடே இருளில் பயணம் செய்வது போன்றது. அதற்குள்ளே முட்புதர்கள், ஆறலைக்கும் கள்வர், மேடு பள்ளங்கள், கொடிய விலங்குகள் என எல்லாம் இருக்கின்றன. அதுவோ இருள் நேரம். காடெங்கும் ஆயிரம் வாட் பல்புகள் போட்டால்தான் நான் அதைக் கடந்து போவேன் என்றால் நடக்கிற காரியம் அல்ல. ஆகவே பகவான் ஸ்ரீ சத்திய சாயி பாபா கூறுகிறார், “உன் கையில் நாமம் என்ற ஒளிப்பந்தத்தைப் பிடித்துக் கொள். உனக்கு அடுத்த அடியை எடுத்து வைக்க வழி தெரியும். அதை வைத்துக்கொண்டு எத்தனை இருட்டிலும் எவ்வளவு நீண்ட காட்டையும் கடந்துவிடலாம்” என்கிறார். நெருப்பைப் பார்த்தால் கொடிய விலங்குகள் நம்மை அணுகமாட்டா. அதுபோலத்தான் நாமத்தின் வீரியமும்.

‘எந்நேரம் வேதம்போம் வாயன் விகடராமன்’ என்று தெனாலிராமனை. நாமும் எந்நேரம் ‘நாமம்போம் வாயராக’ இருத்தல் மிகவுயர்வு.

ஸ்ரீ சாரதாமணி தேவியார் தினமும் அதிகாலை மூன்று, மூன்றரை மணிக்கே எழ வேண்டிய கட்டாயம். நாள் முழுவதும் ஓயாத வேலை. உதவிக்கு ஒரே ஒரு உறவுக்கார இளம்பெண்தான். பரமஹம்சரைப் பார்க்க யாராவது வந்தபடியே இருப்பார்கள். அவர்களை வெறும் வயிற்றோடு அனுப்ப முடியாது. வேலை, வேலை, வேலைதான். குருமகராஜின் மதிய உணவுக்குப் பின் தான் சாப்பிட்டுவிட்டுச் சற்றே கண்ணயரலாம். அப்போது கிரைண்டர், மிக்சி, கேஸ் ஸ்டவ் என்று எந்த உதவியும் கிடையாது. அத்தனை வேலைக்கு நடுவிலும் ஒரு நாளைக்கு இரண்டு லட்சம் முறை ராம நாமம் சொல்லிவிடுவார் என்கிறது அவரது புண்ணிய சரிதம். ஸ்ரீ ராமகிருஷ்ணர் மகாசமாதிக்குப் பின் ஆன்மீகச் சிங்கம் விவேகானந்தர், அன்னையின் வழிகாட்டலையே தேடினார் என்றால் அதற்குக் காரணம் குருபத்தினி என்கிற மரியாதை மட்டுமே அல்ல. அன்னையும் மிகவுயர்ந்த ஆன்மநிலையை அடைந்திருந்ததே காரணம்.

நாம ஜபத்தின் பெருமை எழுதவொண்ணாது! எழுதி மாளாது. வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த அரங்கத்தம்மாவுக்கு அனந்தகோடி நமஸ்காரம்

அன்புடன்
மதுரபாரதி​​


--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.



--
 
ஷைலஜா
 
//'யார்க்கும் எளியனாய், யார்க்கும் வலியனாய்,
யார்க்கும் அன்பனாய், யார்க்கும் இனியனாய்
வாழ்ந்திட விரும்பினேன்...
மனமே! எனை நீ வாழ்வித் திடுவாய்!
வீணே யுழலுதல் வேண்டா,
சக்தி குமாரன் சரண்புகழ் வாயே!'//
பாரதி

Reply
Forward
 

Mohanarangan V Srirangam

unread,
Sep 8, 2013, 10:57:50 PM9/8/13
to தமிழ் வாசல், min tamil, vallamai, தமிழ் சிறகுகள்
ஆஹா அருமை மதுரபாரதியின் எழுத்தும் மதுரவாறு. நன்றி ஐயா 

ஷைலஜாவின் ஊக்க உந்துதலுக்கு எவ்வளவு நமஸ்காரம்!


2013/9/9 Madhurabharati <madhura...@gmail.com>

2013/9/7 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
ஓரிடத்தில் என்று இல்லாமல் பாரதம் நெடுக இந்த நாம சங்கீர்த்தனம் பரவத் தொடங்கிய பிறகுதான் நம் சமுதாயத்தைப் பிடித்த கலிக்குக் கொஞ்சமாவது கிலி பிடிக்க ஆரம்பித்தது
​.

அன்புக்குரிய மோகனரங்கன் செய்வது மகத்தான காரியம். அவர் எழுத்தை அறிதொறும் என் அறியாமையையும் அது சற்றே அகல்வதையும் காண்கிறேன். இங்கே நாமஜப மகிமை குறித்து மேலும் சிலவற்றைப் பகிர ஆசையாயிற்று, வாய்ப்புக் கிடைத்தமையால்.

நாமத்தை எப்படியும் சொல்லலாம். அங்கே அன்பின் மிகவுயர்ந்த வடிவமான பக்தியே மிக முக்கியம். பக்தி என்பது “தன்னளவிலே மிகவுயர்ந்த அன்பின் வடிவமாம்” (ஸா தஸ்மின் பரமப்ரேம ரூபா) என்று நாரத பக்தி சூத்திரம் சொல்கிறது. ஆனால் மந்திரத்தைப் பிழையுற உச்சரித்தல் கூடாது. நாமத்தை பக்தி, சிரத்தையோடு எப்படிக் கூறினாலும் பலனுண்டு என்பதற்கு மாதா ஸ்ரீ அமிர்தானந்த மயி தேவி கூறுவார், “ரத்னாகர் ‘ராம, ராம’ என்றுகூடக் கூறவில்லை. ‘மராமரா’ என்றுதான் ஜபித்தான். அவன் ஆதிகவியானான்.” என்ன அழகு பாருங்கள்.

அதற்கு அம்மச்சி ஒரு உதாரணமும் சொல்வார். “நெல்லை எப்படித் தூவினாலும் அது முளைத்து நாற்றாவது போல” என்று. ஆஹா! என்ன அழகு! சரியோ தவறோ இறைநாமம் நாவில் சுழன்றுகொண்டே இருக்க வேண்டும். அன்பின் வடிவமான இறைவன் நம் பிழைபொறுத்து நம் பக்தியை ஏற்பான்.

ஆன்மிகத்தில் மேற்செல்ல விரும்புவோருக்கு நாமஜபம் எப்படி மனதைக் கட்டுப்படுத்தி வைக்க உதவுகிறது என்பதை ஸ்ரீ ரமண மகரிஷி வெகு அழகாகச் சொல்வார். யானை இருக்கிறதே அதன் தும்பிக்கை ஒரு போதும் சும்மா இருக்காது. தொங்குகின்ற வாயைக் கொண்டிருப்பதால் யானைக்கே ‘நால்வாய்’ (நாலுதல் என்றால் தொங்குதல்) என்று பெயர். ‘கொலை நால்வாய் கொணர்ந்தார்’ என்று பாரதி பாஞ்சாலி சபதத்தில் இதைக் கூறுவான். (கயிற்றில் தொங்கிச் சாவதை ‘நாண்டுகிட்டுச் சாவது’ என்று நெல்லையூரார் சொல்வர்).

தனது தும்பிக்கையை நீட்டி யானை வலமும் இடமும் நடுவும் மேலும் கீழுமாக எதையாவது தொட்டுக்கொண்டே இருக்கும். நம் மனதைப் போல. தொட்டதைப் பிடிக்காது மீண்டு வேறொன்றைத் தேடும். நம் மனதைப் போல! யானைப்பாகன் தன் கையில் இருக்கும் சங்கிலித் துண்டு ஒன்றை அதனிடம் கொடுப்பான். தான் ‘பாஸ்’ ஏதோ முக்கியமானதொன்றைத் தன்னிடம் ஒப்படைத்திருக்கிறார் என்று கருதிய யானை அதைப் பிடித்துக் கொண்டு தன் தும்பிக்கையை அசையாமல் வைத்திருக்குமாம்!

நம் மனதிற்கும் இறைவனின் நாமத்தைக் கொடுத்துவிட்டால் அதை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு சலனமில்லாமல் இருக்குமாம், சங்கிலித்துண்டைப் பற்றிய நால்வாய் போல! மனதை ஒருநிலைப்படுத்த நாமஜபம் எவ்வளவு முக்கியம் என்பதற்கு மௌனகுரு ரமணர் கூறும் அழகான உதாரணம் இது.

வாழ்க்கை என்பது ஓர் அடர்ந்த காட்டினூடே இருளில் பயணம் செய்வது போன்றது. அதற்குள்ளே முட்புதர்கள், ஆறலைக்கும் கள்வர், மேடு பள்ளங்கள், கொடிய விலங்குகள் என எல்லாம் இருக்கின்றன. அதுவோ இருள் நேரம். காடெங்கும் ஆயிரம் வாட் பல்புகள் போட்டால்தான் நான் அதைக் கடந்து போவேன் என்றால் நடக்கிற காரியம் அல்ல. ஆகவே பகவான் ஸ்ரீ சத்திய சாயி பாபா கூறுகிறார், “உன் கையில் நாமம் என்ற ஒளிப்பந்தத்தைப் பிடித்துக் கொள். உனக்கு அடுத்த அடியை எடுத்து வைக்க வழி தெரியும். அதை வைத்துக்கொண்டு எத்தனை இருட்டிலும் எவ்வளவு நீண்ட காட்டையும் கடந்துவிடலாம்” என்கிறார். நெருப்பைப் பார்த்தால் கொடிய விலங்குகள் நம்மை அணுகமாட்டா. அதுபோலத்தான் நாமத்தின் வீரியமும்.

‘எந்நேரம் வேதம்போம் வாயன் விகடராமன்’ என்று தெனாலிராமனை. நாமும் எந்நேரம் ‘நாமம்போம் வாயராக’ இருத்தல் மிகவுயர்வு.

ஸ்ரீ சாரதாமணி தேவியார் தினமும் அதிகாலை மூன்று, மூன்றரை மணிக்கே எழ வேண்டிய கட்டாயம். நாள் முழுவதும் ஓயாத வேலை. உதவிக்கு ஒரே ஒரு உறவுக்கார இளம்பெண்தான். பரமஹம்சரைப் பார்க்க யாராவது வந்தபடியே இருப்பார்கள். அவர்களை வெறும் வயிற்றோடு அனுப்ப முடியாது. வேலை, வேலை, வேலைதான். குருமகராஜின் மதிய உணவுக்குப் பின் தான் சாப்பிட்டுவிட்டுச் சற்றே கண்ணயரலாம். அப்போது கிரைண்டர், மிக்சி, கேஸ் ஸ்டவ் என்று எந்த உதவியும் கிடையாது. அத்தனை வேலைக்கு நடுவிலும் ஒரு நாளைக்கு இரண்டு லட்சம் முறை ராம நாமம் சொல்லிவிடுவார் என்கிறது அவரது புண்ணிய சரிதம். ஸ்ரீ ராமகிருஷ்ணர் மகாசமாதிக்குப் பின் ஆன்மீகச் சிங்கம் விவேகானந்தர், அன்னையின் வழிகாட்டலையே தேடினார் என்றால் அதற்குக் காரணம் குருபத்தினி என்கிற மரியாதை மட்டுமே அல்ல. அன்னையும் மிகவுயர்ந்த ஆன்மநிலையை அடைந்திருந்ததே காரணம்.

நாம ஜபத்தின் பெருமை எழுதவொண்ணாது! எழுதி மாளாது. வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த அரங்கத்தம்மாவுக்கு அனந்தகோடி நமஸ்காரம்

அன்புடன்
மதுரபாரதி​​

Mohanarangan V Srirangam

unread,
Sep 9, 2013, 11:24:54 AM9/9/13
to min tamil, தமிழ் வாசல், vallamai, தமிழ் சிறகுகள்
ஸ்ரீமஹாவிஷ்ணுவை துதிக்கும் ஸ்தோத்திரம், ஆயிரம் நாமங்களால் நமஸ்காரம் செய்யும் நாமாவளி. புஷ்பங்கள் இட்டு அர்ச்சிக்கும் ஸஹஸ்ரநாம அர்ச்சனை, இவையெல்லாவற்றிற்கும் அடிப்படை என்ன? 

நாம் யார்? அவன் யார்? இந்த இரண்டுதானே. 

அவன் என்றால் ஏதோ நம்மைப் போல் ஓர் ஆளில்லை என்பது தெரிகிறது. அதாவது பிறந்து வளர்ந்து உருவம் மாறி பெருத்து இளைத்து அதெல்லாம் உடைய ஓர் ஆள் இல்லை. இதெல்லாம் இல்லாமல் ஓர் ஆள் இருக்க முடியுமா? ஏதோ காயகல்பம் அது இதுன்னு கதைகள் உண்டே அன்றி, அங்கும் நீண்ட நாள் இருக்கலாம் என்றுதான் கதை, அப்புறம் முதுமை, மரணம் என்று இயற்கை முந்திக்கொள்ளும் என்றுதான். எப்படிப் பார்த்தாலும் பல அங்கங்கள் ஒருங்கிணைந்து ஓருடல், ஓருருவம் என்றால் அதெல்லாம் ஒருநாளில் மறைந்துதான் ஆகவேண்டும். அது ஆளோ, அல்லது பெரிய தேவ ஆளோ, யாராய் இருந்தாலும். தேவ ஆள் என்று எல்லாம் இல்லை. அப்படி இருந்தாலும் எல்லாம் மாற்றத்திற்கு உட்பட்டதுதான். 

வேதாந்த தேசிகர் பாடுகிறார் - எல்லா தேவர்களும் கர்மச் சங்கிலியில் பூட்டியபடி ரோல்பரேடில் நிற்கிறார்கள். காலம் நியதி இரண்டும் அவர் அவர்கள் அந்தஸ்துக்கு தக்கபடி வரிசையில் நிறுத்தியிருக்கிறது. மிக நீண்ட நாள் வாழும் தேவன் முன்னாடி நிற்கிறான். மிகக் குறுகிய வாழ்நாள் உடைய ஜந்து பின்னால் நிற்கிறது. மிகத் தள்ளி வரிசையில் நிற்கும் மனிதர் முன்னால் நிற்கும் தேவர்களிடம் தங்கள் கர்மத் தளையை அவிழ்த்துவிடுமாறு கெஞ்சிக் கையை நீட்டினால், அவர்கள் தங்கள் கைகளைப் பதிலுக்குக் காட்டுகின்றனர். வரிசையில் நிற்பவர் ஒருவருக்கொருவர் எங்கே விடுவித்துக் கொள்வது? சுதந்திரமான தத்துவம் எதுவோ அதுவன்றோ விடுவிக்கவல்லது. 

ஸ்ரீராமகிருஷ்ணர் சொல்கிறார் -- முக்குணங்களும் தளைகள்தாம். சத்வம் அதில் கொஞ்சம் நல்ல தளை. அவ்வளவுதான். ஒரு காடு. மனிதன் ஒருவன் மூன்று திருடர்களிடம் மாட்டிக்கொண்டு விட்டான். ஒருவன், ‘ஏய் இவனைக் கொன்று போட்டு இவன் பொருட்களைக் கவர்வோம்’ என்கிறான். அவன் தமோகுணம். இன்னொருவன், ‘ஏய் இவனைக் கொல்வதால் நமக்கு என்ன லாபம்? கட்டிப் போட்டுவிட்டுக் கவர்வோம். இவனால் போலீசுக்குத் தெரிவிகக முடியாது’ என்கிறான். அவன் ரஜோகுணம். மூன்றாமவனோ கொஞ்ச தூரம் போய்விட்டுத் திரும்பி வந்து, ‘ஐயோ பாவம், இப்படியே நீ இங்கே கிடந்தால் ஏதாவது மிருகங்கள் வந்து அடித்துவிடும். பாவம் நீ ஏன் சாக வேண்டும்? வா காட்டின் எல்லை வரையில் வந்து உன்னை நகரத்துக்குள் போக வழிகாட்டிவிட்டுச் செல்கிறேன்’ என்று அவிழ்த்துவிட்டு அழைத்துச் செல்கிறான். அவன் சத்வகுணம். ஆனால் எல்லைக்கு வந்ததும் மனிதன் நன்றிப் பெருக்கால், ‘அண்ணே! வாங்க வந்து ஒருவாய் காபித் தண்ணி குடித்துவிட்டுப் போங்க’ என்று அழைக்கிறான். அந்த மூன்றாமவனோ, ‘ஐயய்யோ! நான் நகரத்துள் வரமுடியாதப்பா! நான் மாட்டிக்கொள்வேன். போய்வா’ என்கிறான். சத்வ குணம் நல்லவன். ஆனால் அவனும் திருடனே. சமுதாயத்தில் நடமாட முடியாது. அதுபோல் முக்குணங்களும் பிரம்மத்திடம் அண்ட முடியாது. ஏதோ சத்வ குணம் பிரம்மத்தை நோக்கி வழிகாட்டும். அம்மட்டே. 

வேதம் முழுதும் மூன்று குணங்களை விஷயமாகக் கொண்டது அர்ச்சுனா! நீயோ மூன்று குணங்களும் கடந்தவனாக இரு - என்கிறான் ஸ்ரீகிருஷ்ணன் கீதையில். 

அவனே சொல்கிறான் - மூன்று குணங்களால் ஆன என் மாயையானது கடத்தற்கரியது அர்ச்சுனா. யாராலும் தங்கள் தங்கள் முயற்சியால் கடந்துவிட முடியாது. என்னையே சரணடைகிறவன் எவனோ அவன் இந்த முக்குணங்களைக் கடந்தவனாக ஆகிறான். 

ஆக ஒன்று தெரிகிறது. ஸ்ரீமந் நாராயணன் என்பது ஓர் ஆளில்லை நம்மைப் போல், ஏன் யாரையும் போல். அவன் சரி இந்த உலகில் இயங்கும் எவ்வளவோ தத்துவங்கள் போன்று ஒரு தத்துவமோ என்றால் அதுவும் இல்லை. சரி ஏதாவது பெரிய ஜோதி உருவமா என்றால் அப்படியும் இல்லை. இல்லை பெரிய ஸ்தானமா நிலையா ம் ம் இல்லை. 

இதனைத்தையும் உள்ளடக்கிய முழுமை. இந்தத் தத்துவங்களோடு எல்லாம் ஒன்றாக வைத்து எண்ண முடியாத பரம தத்துவம். 

இந்த ஜோதிகள் இவற்றோடு எல்லாம் வைத்து நினைக்க முடியாத பரம ஜோதி. 

இந்த நிலை அந்த நிலை என்று அழிவுறும் நிலைகள் எதிலும் வைத்து எண்ண முடியாத பரம தாமம், நிலை. 

அத்தனையையும் தனக்கு உடலாகவும், தான் அனைத்தினுள்ளும் ஒன்றாகிக் கலந்து உயிராகி நிறைந்து நிற்பதால் பரம ஆத்மா. 

இப்படிச் சொன்னால் எப்படி சார் நினைத்துப் பார்ப்பது? அதனால்தான் அசிந்த்யன். 

பகுதி படாத முழுமை. அதனால்தான் அவ்யயன். 

ஆனாலும் அவனுக்கு, அந்த முழுமைக்கு, அந்த நாராயண பரஞ்சோதிக்கு, நாராயண பரந்தாமத்திற்கு, நாராயண பர தத்துவத்திற்கு ஓர் உருவம் தந்து பார்க்கிறது ஸ்ரீமத் பாகவதம். 

அவனுடைய பாதங்கள் இந்த பூமி. 

விண்ணுலகம் அவன் சிரம். 

இடைப்பட்ட வானம் அவனுடைய நாபி. 

ஞாயிறு அவன் கண். 

வாயு அவன் நாசி. 

திசைகள் அவன் செவிகள். 

சந்திரன் அவன் மனம். 

மாயை அவன் முறுவல் 

மரங்கள் அவன் ரோமங்கள் 

மேகங்கள் அவன் குழல் கற்றை 

அவன் மார்பில் இருக்கும் கௌஸ்துபம் 
சுத்த ஜீவ சைதன்யம் 

இப்பொழுது நாம் யார்? எங்கிருக்கிறோம்? என்று தெரிகிறதா? அவன் மார்பில் திகழும் கௌஸ்துபம் நாம். ஜீவர்கள். 

ஜீவர்களின் கூடத் திகழ்ச்சி ஸ்ரீவத்ஸம் 

வனமாலை மாயையின் விசித்ர குணங்கள் 

அவனுடைய மஞ்சள் ஆடை வேதம் 

அவன் அணிந்த முப்புரி நூல் மூன்று அக்ஷரங்கள் கொண்ட பிரணவம். 

அநந்தனாகிய ஆதிசேஷன் அவ்யாக்ருதம். 

அவன் அமரும் பத்மம், தர்மம் ஞானம் என்ற இதழ்கள் உடைய சுத்த ஸத்வம் 

பிராணன் கதையாகிய கௌமோதகி 

அப்பு தத்துவம் பாஞ்சஜன்யம் 

அக்னி தத்துவம் சுதர்சனம் 

அதாவது என்னவென்றால் முழுமைக்கு உருவம் தந்து தந்து இந்த மனம் தோல்வி அடைவதுதான் இதன் வெற்றி. 

ஏனெனில் உருவம் தந்து இந்த மனம் வென்றுவிட்டால் அப்பொழுது அது தோல்வி. மனத்தால் கிரஹிக்கக் கூடிய எதுவும் பரம் தத்துவமாக ஆகிவிடமுடியாது. 

ஆனாலும் உருவம் தராமல் மனம் ஒன்றை மனம் கொள்ள முடியாது. எனவேதான் தேர்வு பெற பரிட்சை எழுதாமல் தோல்வி அடைய பரிட்சை எழுதவைக்கின்றன தியான ச்லோகங்கள். 

நினைத்துப் பார்த்து மனத்தில் வாங்க முயன்று அந்த முழுமையில் தான் அமிழ்ந்து போகும் போதுதான் கரையேற முடிகிறது. 

வெறும் கடலில் விழுந்து அமிழ்ந்து போனால் கரை ஏறமுடியாது. ஆனால் இந்தப் ’பெரும் புறக்கடலில்’, ‘கிருபா சமுத்திரத்தில்’ அமிழ்ந்து போனால் தான் வாழ்வு. 

அப்படி அமிழக் கற்றவர்கள்தாம் ஆழ்வார்கள். 

ஸ்ரீராமகிருஷ்ணர் நரேனை ஒரு முறை ஒரு கேள்வி கேட்டார். ‘அப்பா! நீ சச்சிதாநதமாகிய ரஸம் ஊற்றிய ஒரு பாத்திரத்தின் விளிம்பில் ஒரு தேனியாக உட்கார்ந்திருக்கிறாய். எப்படி அந்தத் தேன் ரஸத்தை அருந்துவாய்?’ 

ஜாக்கிரதையாக விளிம்பில் கெட்டியாக ஊன்றியபடித் துருத்தியை நீட்டி நீட்டி அருந்துவேன். 

ஏன்? 

ஆம். தவறினால் அதற்குள் விழுந்து இறக்க நேரிடுமே! 

அடடா! குழந்தாய்! இது பிறப்பு இறப்பு என்பதையே நீக்கும் அமிர்தக் கடல் ஆயிற்றே! நீ எதற்குப் பயப்பட வேண்டும்? இதற்குள் ஆழ்ந்து அமிழ்ந்தால் என்ன? அமிழ்ந்து போகப் போக நித்யத்வம் அன்றோ? மரணம் அன்றோ மறைந்து போகும். 

அந்தத் தத்துவத்தை அன்றோ தியானித்து இங்கே ஸ்ரீமஹாவிஷ்ணு என்று ஆயிர நாமங்களால் ரீங்காரம் இட்டுலவும் வண்டாக ஆகச் சொல்கிறது பீஷ்மனின் ஜீவ நாதம். 

தியாயந் ஸ்துவந் நமஸ்யம்ச 

தியானம் செய், தோற்றுப் போ! 

துதி செய், தோற்றுப் போ! 

அந்தத் தோல்விக்கு வெற்றிவாகை பாடு! 

அதுதான் நமஸ்காரம். 

Tulsi Gopal

unread,
Sep 9, 2013, 5:21:44 PM9/9/13
to vall...@googlegroups.com
வாவ்!!!!!!!!!!!


2013/9/10 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.



--
என்றும் அன்புடன்,
துளசி

K. Loganathan

unread,
Sep 10, 2013, 10:05:05 AM9/10/13
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com
நின்னா கண்ணன்

முடிந்த்வரை படித்துத்தான் வருகின்றேன். படித்து மகிழ்வதோடு பல கேள்விகள் வராமல் இல்லை, ஆனால் சுவைப்பதோடு நின்று விடுகின்றேன். யான் காரைக்கால் பேயாரின் அற்புதத் திருவந்தாதிக்கு உரை எழுதியும் உள்ளேன். அங்கு இப்படிப்பட  Icon Thinking  வந்துள்ள்து. இதேப் போன்ற  Icon Thinking  சுமேருத் தமிழ்  ஈன் அன்னா சீர்பியத்திதிலும் வந்துள்ளது

 இந்த இடுகையில் தரப்பட்ட வருணயைப் பாருங்கள்,

.//

ஆனாலும் அவனுக்கு, அந்த முழுமைக்கு, அந்த நாராயண பரஞ்சோதிக்கு, நாராயண பரந்தாமத்திற்கு, நாராயண பர தத்துவத்திற்கு ஓர் உருவம் தந்து பார்க்கிறது ஸ்ரீமத் பாகவதம். 

அவனுடைய பாதங்கள் இந்த பூமி. 

விண்ணுலகம் அவன் சிரம். 

இடைப்பட்ட வானம் அவனுடைய நாபி. 

ஞாயிறு அவன் கண். 

வாயு அவன் நாசி. 

திசைகள் அவன் செவிகள். 

சந்திரன் அவன் மனம். 

மாயை அவன் முறுவல் 

மரங்கள் அவன் ரோமங்கள் 

மேகங்கள் அவன் குழல் கற்றை 

அவன் மார்பில் இருக்கும் கௌஸ்துபம் 
சுத்த ஜீவ சைதன்யம்
>>>

இது எனக்கு புருஷ சுக்தத்தில் வரும் புருடனை நினைவூட்டுகின்றது. அந்த புருடனும் சுமேரிய  ஏண்லில் எனும் சீர்மால்(திருமாலை) நினைவூட்டுகின்றது

இந்த பரந்து விரிந்து பொய்யிலாத மாயமில்ல்லாத இந்த பிரபஞ்சத்தை உருவகப் படுத்தினால் இப்படியும் உருவகப் படுதலாம். மேலும் இதே மெய்யான பிரபஞ்சத்தை கூத்தபிர்ரனின் ஆனந்த திருநடமாகவும் காணலாம் அப்படி செய்துள்ள ஞானிகளும் உளர், s  சுமேருத் தமிழ் இலக்கியத்திலும் உண்டு

'நின் மெய் சர்வ உள் தெள்ளிய', அதாவது எல்லாம் மெய்களின் அன்னை, தெள்ளிய ஒளி' என்றும் ஏன் உடு அன்னா காணபதுபோலவும் காணலாம.

ஆனால் இவை எல்லாமே உருவங்கள் தாம் தெள்ளிய ஒளி பரஞ்சோதி கூட  உருவந்தான் . முக்கியமானது இவை எல்லாமே உண்மை, ஆன்மாவின் ஆரோபிதம் அத்தியாசம் எனும் கற்பனைகள் அல்ல, கயிற்றை பாம்பெனக் காணுவது போல  Illusion  அல்ல,

இந்த பிரபஞ்சத்தை  கூத்தபிரானின் ஆநதத்த் தாண்டவமாகக் காண்பது, ப்ராபரையின் தோற்றமாக் காண்பது போன்றவை தனக்கென்று எவ்வுருவும் இல்லா இறைவன் சிற்றறிவின் ஆன்மாகளுக்கு ஞானம் புகட்டுமா இறைவன் தன்னை காட்டி அருளும் வடிவங்கள் அல்லது அவன் தரும் நுதிப்புக்கள்

ஒருசிலர் ஓருருவில் மயங்கி அந்த மயக்கத்தில் ஆனந்தம் காண்கின்றனர். தவ்றில்ல்லை, என்னைப் போன்ற இன்னும் சிலர் இவ்வாறு பல வடிவங்களில் கண்டு ஆனந்திக்கின்றனர். அதுவும் தவறில்லை

நம்மாழ்வார் இதனைத்தானே 'அவரவர் தமதம அறிவு அறி வகை) என்ற பாடலில் கூறுகின்றார்?

இறைவன் காட்ட நாம் இவ்வாறெல்லாம் காண்கின்றோம். ஞானம் பெற்று மகிழ்கின்றோம் இது இறைவனது போதனை, ந்மது ஆரோபிதம் அல்ல அத்தியாசம் அல்ல.

 We are NOT  deluding ourselves in understanding the cosmos in these divine images

உலகன்

..




2013/9/9 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
ஸ்ரீமஹாவிஷ்ணுவை துதிக்கும் ஸ்தோத்திரம், ஆயிரம் நாமங்களால் நமஸ்காரம் செய்யும் நாமாவளி. புஷ்பங்கள் இட்டு அர்ச்சிக்கும் ஸஹஸ்ரநாம அர்ச்சனை, இவையெல்லாவற்றிற்கும் அடிப்படை என்ன? 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

Mohanarangan V Srirangam

unread,
Sep 10, 2013, 11:43:21 AM9/10/13
to min tamil, தமிழ் வாசல், vallamai, தமிழ் சிறகுகள்
How To Love INFINITY?

நீங்கள் INFINITYஐ காதல் செய்து பார்த்திருக்கிறீர்களா? கிட்டத்தட்ட அதுதான் ஸ்ரீமந் நாராயணனை தியானம் செய்வது என்பது. 

எல்லாவிதத்திலும் அநந்தம். இடத்தால் எல்லைப் படாத அநந்தம். காலத்தால் எல்லைப் படாத அநந்தம். பொருளால் எல்லைப்படாத அநந்தம். புரியவில்லை. எப்படி இத்தகைய ஓர் வஸ்துவைக் காதல் செய்வது? எனவேதான் பரவஸ்து. 

கூகிள் மேப்பில் காட்டுகிறார்கள். சும்மா பத்தாயிரம் கணக்கில் ஒரு பெருக்கம் போனாலே பூமியே கண்ணுக்குத் தெரியாமல் போய்விடுகிறது. 

அவ்வளவு பொடியாய். அந்தப் பொடியில் எங்கோ எங்கோ பொடி நுண் நுனிக் கோண் கூறின் சதத்தில் ஒன்று. நாம் அநந்தத்தை, இன்ஃபினிடியைக் காதல் செய்வது என்று நினைத்துப் பாருங்கள். 

ஆனாலும் அந்த அநந்தம், அந்த பராத்பரம், அந்த பரவஸ்து, அந்தப் பரம ஆத்மா தன்னை இந்த அணு பரிமாணம் உள்ள ஜீவன் நினைக்கவும், காணவும், பூஜிக்கவும், ஸ்தோத்திரம் செய்யவும் ஆகலாம்படி அவனுக்கு எந்த எந்த உருவம் பிடிக்கிறதோ அந்த உருவத்தில் எல்லாம் த்ன்னை எல்லைக்கு உட்பட்டது போல் ஒரு மாயையை ஆக்கிக்கொண்டு வந்து இவன் முன் நிற்கிறதே! இது என்ன இது என்ன இது என்ன என்று மூர்ச்சை ஆகிறார் பீஷ்மர். 

அந்த அநந்தம், அந்தப் பரம்பொருள், எல்லையற்ற பராபர வஸ்து இப்படி ஓர் ஆய்ச்சிக் கை வெண்ணைக்கு அழுவதும் இதழ் நெளிப்பதுமாய் இருந்து ஏங்கி நின்ற எளிவே என்று நினைத்தார் நம்மாழ்வார். ஆறுமாச காலம் அப்படியே மூச்சுப் பேச்சின்றி மோகித்துக் கிடந்தார். 

இந்தப் பகுதியை கூரேசர் எடுத்து விளக்க ஆரம்பித்தார். ‘ஆழ்வாருக்கு ஓடுகின்ற பா4வம் அறியாதே நாம் யார் இருந்து இதற்குப் பாசுரம் இடுவது!’ என்று காலாழ்ந்தார் நெஞ்சாழ்ந்தார் கண் சுழன்றார், கண்ண நீர் வார ‘இன்று இத்துடன் விட்டால் ஆகாதோ!’ என்று அதிலேயே பரவசமாகிக் கிடந்தார். 

எழுந்து சென்ற வைணவர்கள் எம்பெருமானாரிடம் சென்றார்கள். எம்பெருமானாரோ காத்துக் கிடக்கிறார். ‘என்ன சொன்னார் கூரேசர் இன்றைக்கு?’ இந்த இடம் வந்தவாறே பரவசமானார், ’ஆழ்வார்க்கு ஓடுகின்ற பாவம் அறியாதே நாம் யார் இருந்து இதற்கு என்ன பாசுரம் இடுவது’ என்று பேச்சோய்ந்தார், கண்ணீர் அளறில் ஆழ்ந்தார் என்றார்கள். அதற்கு எம்பெருமானார், ‘என்ன பரம சேதநனோ! என்ன பரம சேதநனோ, ஆழ்வான்!’ என்றார். அதுமுதல் கூரத்தாழ்வான் என்றே பக்த குலம் குலாவத் தொடங்கியது. 

’அவ்வளவு பெரியவன் கிடீர்! நம்முன்னே இவ்வளவு எளியனாய் ஏவின செய்யும் சேவகனாய், தூது போ என்றால் ஓலை கட்டிக்கொண்டு தூது போவான் ஒருவனாய் நிற்கிறான் இந்த ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா!’ என்று சொல்ல வருகிறார் பீஷ்மர். 

சொல்ல முடியவில்லை. நெஞ்சடைக்கிறது. அப்பொழுதே பிராணன் பிரிந்துவிடுமோ என்று பயம் பிடிக்கிறது. 

இதெல்லாம் பீஷ்மர் சொன்னாரா, தியான ச்லோகம்? என்பதன்று கேள்வி. சொல் ஓய்ந்து பரவசராய் ஆழ்ந்த பாட்டனின் உள்ள ஆவேசத்திற்கு யாரோ பாசுரம் இட்டிருக்கிறார்கள். அவர்கள் வாழி! 

அற்புதமான கவிதை. சௌந்தர்யமெல்லாம் சிமிழ்ப்புற பெய்த சொற்கள். அநந்தம் என்பது உருவம் கொண்டது போல் உயிர்கள் முன் நடிக்கும் என்றால், அந்தச் சாகசத்தையும் சொல்லாடித் தோற்கின்ற வெற்றி இந்தக் கவிதை - தியான ச்லோகம். 

பாலால் ஆகிய பெருங்கடல். ஏன் பால்? பால் என்பது ஜீவ ரசம். 

பாற்கடலின் கரை எதனால் ஆனது? 

தூய ரத்தினங்கள் வில் எறியும் சுடர் பரப்புதான் கரைமணல். 

முத்துமாலைகளால் ஆகிய ஆசனம். ஸ்படிக மணி போன்று பளிங்கிடும் முத்துகளால் ஆனவையோ அவர் அங்கங்கள்? 

ஆசனத்தின் மேலே விதானமிடும் மேகங்கள் தாம் கர்ப்பம் சுமந்த அமுதத்தை அவ்வப்பொழுது பிலிற்றும் சாரல். 

சங்கம் ஒருகை, சக்கரம் ஒருகை, கதை ஒருகை, லீலா பதுமம் ஒருகையில். அந்த முகுந்தன்! 

அடுத்த ச்லோகம் இந்தச் சித்திரத்தைப் பெரும் புதிர் வியப்பாக ஆக்குகிறது. உங்கள் கற்பனையைக் கட்டி அதில் உங்களை ஏற்றிப் பின் அதை உடைத்து, கற்பனாதீதமான அநந்தத்தின் முற்றத்தில், அரங்கன் திருமுற்றத்தில் உங்களை இடுகிறது தியான ச்லோகம். 

இப்படி ஓர் திருவின் ம்ணாளன் வீற்ற கோலம், அந்த முகுந்தன் யார்? அவர் எப்படி இருப்பார்? 

அவரா? 

அவருக்கு இந்த பூமிதான் பாதங்கள். 

அவருக்கு இந்த வானம் நாபி. 
வாயு பிராணன் 
சந்திரன் சூரியன் இருகண்கள் 
திக்குகள் காதுகள் 
திய: என்னும் விண்ணுலகு தலை 
அக்கினி வாய் 
சமுத்திரம் அடிவயிறு 
எந்த வயிற்றில் தேவர், மனிதர், பறவைகள், மிருகங்கள், நாகர், கந்தருவர், அசுரர் என என என விரிந்த உலகு 
விசித்திரமாக விளையாடிக் களிக்கிறதோ 
அந்த மூவுலக வடிவினர்தாம் ஈசராகிய 
இந்த விஷ்ணு 
இந்த விஷ்ணுவாகிய ஈசரை நமஸ்கரிக்கிறேன். 

அந்த பரமாத்மாவாகிய வாஸுதேவருக்கு நமஸ்காரம் 

எப்படி இந்த விராட் சொரூபத்தை மனத்தில் வாங்குவது? கவிதையாக்கிப் பார்த்தாலும் கற்பனையின் கீல்கள் உடைந்து போகின்றன. 

அந்தத் தோல்வியைக் கண்டு பரம கருணை ஏற்படுகிறது அந்த எல்லையற்று எல்லையற்று எல்லையற்றதான் ஒன்றில். 

தூய்மையான யோகிகளின் இதயத்தில் பரம தயையால் நாம் புரிந்துகொள்ள வேண்டி, அஃது ஓர் உருவம் கொள்கிறது. 

சாந்தமான வடிவு 
அரவணைமேல் சயனம் 
நாபியில் மலர்ந்த தாமரை 
தேவர்களுக்கெல்லாம் நாயகன் 
உலகின் ஆதாரம் 
ககனமாகிய ஆகாயத்தைப் போன்ற தன்மை 
மேகம் போன்ற நிறம் 
திருவின் கேள்வன் 
அந்தக் கேண்மையால் 
கமலமென மலர்ந்த கண்கள் 
யோகிகளின் உளத்தே 
தியானத்தால் புலப்படும் அருள் 
பவ பயத்தைப் போக்கும் அபயம் 
ஸர்வ லோகங்களுக்கும் ஏக நாதன் 
அந்த விஷ்ணுவை என் ஆற்றாமையால் 
வணங்கியவண்ணமே இருப்பன் யான். 

கார்மேகமன்ன மேனி 
மஞ்சள் பட்டில் ஆடை 
திருமறு மார்வம் 
உயிர்க்குல மணி விடுசுடரால் 
ஒளிர்தரு அங்கங்கள் 
முளரி அலர்ந்தன்ன 
விரிந்த கண்கள் 
புண்ணியர் புடைசூழ் சுற்றம் 
உலகனைத்துக்கும் ஒரே நாதன் 
விஷ்ணுவை வந்தித்து உவப்பேன் 

(பொருளனைத்துக்கும் ஆதி 
புவியைத் தாங்கும் பொறை 
பல்லுருவம் கொண்ட பரிவு 
பிரபுவான விஷ்ணுவிற்கு நமவே) 

கையன சங்கமும் நேமியும் 
தலையன கிரீட குண்டலமும் 
பொன்னாடையரையும் 
பதுமநல் பார்வையும் 
ஆரமார் மார்வம் 
விளங்குயிர் மணியும் 
நாற்கரம் திகழும் 
விஷ்ணுவை வணங்குவன் தலையால். 

பாரிசாத தருநிழலும் பொன்னரிமாத் தவிசும் 
கார்மேகவண்ணமும் கண்புடைபரந்த நோக்கும் 
அணிதிகழ் இருக்கையும் திங்களேய்க்கு முகமும் 
நாற்கரமும் திருமறுமார்வும் கொண்டு 
ருக்மிணி சத்ய பாமையுடன் விளங்காநிற்கும் 
ஸ்ரீகிருஷ்ணனைச் சரணம் எய்துகிறேன். 


இது ஏதோ ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தில் இருப்பது. பக்தர்கள் உவப்பது என்று மட்டுமன்று. சங்க காலப் புலவோர் மெய்மறந்து சொல் மறந்து வாய்வெருவி நிற்பது. 

நம்ப முடியவில்லையோ? இதோ - 

“ஆயிரம் விரித்த அணங்குடை அருந்தலை 
தீ உமிழ் திறலொடு முடிமிசை அணவர, 

மாவுடை மலர் மார்பின் 
(ஸ்ரீவத்ஸ வக்ஷ:) 
மைஇல் வால் வளை மேனி 
சேய் உயர் பணைமிசை எழில் வேழம் ஏந்திய 
வாய்வாங்கும் வளை நாஞ்சில், 
ஒரு குழை ஒருவனை; 

எரிமலர் சினைஇய கண்ணை; 
பூவை விரிமலர் புரையும் மேனியை; 
மேனித் திரு ஞெமிர்ந்து அமர்ந்த மார்பினை; 
(ஸ்ரீவத்ஸாங்கித வக்ஷஸம்) 
மார்பில் தெரிமணி பிறங்கும் பூணினை; 
(ஸஹார வக்ஷஸ்தல சோபி கௌஸ்துபம்) 

மால் வரை எரி திரிந்தன்ன பொன் புனை உடுக்கையை; 
சேவல் அம் கொடியோய்! 
(கருட த்வஜா!) 
நின் வலவயின் நிறுத்தும் 
ஏவல் உழந்தமை கூறும் 

நா வல் அந்தணர் அரு மறைப் பொருளே.” 

(பரிபாடலில் பகுதி, பிறைக்கோட்டினுள் வடமொழிப் பகுதி ஒப்பு நோக்க நான் கொடுத்தது) 

பீஷ்மன் பரவசத்தில் தியான நிஷ்டையில் ஆழ்ந்ததும், நம்மாழ்வார் ஆறுமாசம் மோகித்து மூச்சு பேச்சின்றிக் கிடந்ததும், சொல்ல வந்த கூரேசர் சொல்லொழிந்து கண்ணருவி இழியப் பரவசமானதும், பரிந்து பரமனைப் பரவும் பரிபாடலும் எந்த சேதநருக்காக என்று நினைக்கின்றீர்கள்? 

நமக்காக எல்லாம் நமக்காக. 

K. Loganathan

unread,
Sep 11, 2013, 8:52:06 AM9/11/13
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com
நின்னா கண்ணன்

மிக்க நன்றி.  இயற்கையில் ஓர் போதனை நடந்து கொண்டே இருக்கின்றது, மிக ஆழமான போதனைகள் இந்த இறைவடிவங்களில் அடங்கி உள்ளன. ஆனால் ஒரே வடிவத்தில் தான் இருக்கும் என்பதில்லை,

காட்டாக  infinity  எனப்படும் அநந்தம்

இழையில் மேலே வரும் ஒன்று

//
எல்லாவிதத்திலும் அநந்தம். இடத்தால் எல்லைப் படாத அநந்தம். காலத்தால் எல்லைப் படாத அநந்தம். பொருளால் எல்லைப்படாத அநந்தம். புரியவில்லை. எப்படி இத்தகைய ஓர் வஸ்துவைக் காதல் செய்வது? எனவேதான் பரவஸ்து. //

இக்கருத்தை நம்வாழ்வாரின் 'உயர்வர உயர் நலம் உடையவன்" என்பதிலும் காணலாம்


இதுபோன்ற ஓர் கருத்தைத்தான் மெய்கண்டார் தன் முதற் சூத்ரத்திலேயே இறைவன் அந்தமாதி என்று குறிப்பிடுவதின் கூறுகின்றார்.  அனைத்தையும் அந்திக்கின்றவன் அந-அந்தனாகத் தானே இருக்கவேண்டும் . இதையே 'வாக்குமனாதீத கோசரம் 'என்றும் கூறுவார்

மேலும் இதுவே ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதி' என்ற கருத்திலும். சிவன் இப்படிப்பட்ட நெடுந் தீயாக வெளிப்பட அன்னமாக மேலே சென்ற பிரமனாலும் வராகமாக குடைந்து குடைந்து கீழே  சென்ற திருமாலாலும் காண முடியாது போயிற்று என்ற புராணத்திலும் உணர்த்தப் படுகின்றது

இங்குதான் சைவம் வைணவம் என்ற பேதமௌம் வருகின்றது, ஆனால் சம்யாதீத நிலையில் ஏறக்குறைய ஒரே ஆழமான ஞானம்  ஓர் இறை வடிவம் வழியில் புராணம் வழியில் உணர்த்தப்படுகின்றதை உணர்வோம்

பிறகு நான்  ஏன் வேதாந்தத்தை கண்டிக்க வேண்டும்?

மாயாவாத வேதாந்தம் இப்படிபட்ட கற்றல் எழவிடாது செய்து விடுகின்றத். உலகை திருமாலாகக் காணபது நடராசப் பெருமானாகக் காண்டபது ஆதியும் அந்த்மும் இல்லா அருட்பெருஞ்ச்சொதியாகக் காணப்து எல்லாம்  கயிற்றை பாம்பெனக் காணப்து போல மித்தியா காட்சிகள், ஆரோபம் அத்தியாசம் ( illusions delusions) போன்றவற்றால் வருவது என்பர். இப்படிக் கூறும் போது 'கற்றல்' எழாது போகின்றது.  இந்த வடிவங்களை எல்லாம் என்னதான் அவை உணர்த்துகின்றன என்ற விசாரணை எழாது இந்த மித்தியா காட்சியியல் செய்து விடுகின்றது.

ஆக இப்படிப்பட்ட ஆய்வுகள் விசாரணைகள், இறைகல்வி பால் பட்டவை,  இறைவன் காட்ட நாம் கண்டு பின் பல்வாறு விசாரித்து உணர்த்தப்படும் உண்மையை அறிந்து ஞானம் மகிழ்கின்றோம்

ஏன் இப்படி செய்ய வேண்டும் எனும்போது, ஆன்மாக்கள் அணுத்துவப்பட்டு , ஆணவ மலத்தால் அணுத்துவப் பட்டு கிடக்க அந்த அணுத்துவத்டைப் போக்கவே இப்படிப்பட்ட காலம் இடம் கட்டு போன்றவற்றை கடக்கச் செய்யும் இப்படிப்ட்ட உருவக்கள் வழி புராணங்கள் வழி நடக்கும் போதனைகள்.

இதை இன்னும் தீவிரமாக ஆய்ந்தால் முப்பொருள் உண்மையின் அநாதிப்பொருளியல் வந்து விடும்  ஆக இத்தகைய  ஆய்வுகள் விசாரனைகள் அத்துவித வேதாந்தம் அல்லாது சித்தாந்தம் ஆகிவிடுகின்றது

இது போதுமென்று  நினைக்கின்றேன் மேற்கொண்டு எனது 'மெய்கண்டாரியம் ; உலக வாழ்க்கை" தொடரில்

உலகன்


2013/9/11 N. Kannan <navan...@gmail.com>
2013/9/10 K. Loganathan <k.ula...@gmail.com>
ஆனால் இவை எல்லாமே உருவங்கள் தாம் தெள்ளிய ஒளி பரஞ்சோதி கூட  உருவந்தான் . முக்கியமானது இவை எல்லாமே உண்மை, ஆன்மாவின் ஆரோபிதம் அத்தியாசம் எனும் கற்பனைகள் அல்ல, கயிற்றை பாம்பெனக் காணுவது போல  Illusion  அல்ல,
>>

இது ஆறுதலாக உள்ளது. பக்தியின் அடிப்படை அலகு ‘பா(b)வம்’தான். பாவம் வரும் போது கடவுள் காட்சி தருகிறான்.

எதற்குள்ளும் அடங்காத பரஞ்சோதி சின்னக்கண்ணனாக வந்த எளிமையை நினைத்தவுடன் அந்தப் பரம காருண்யத்தை நினைத்து நம்மாழ்வார் ஆறு மாதங்கள் இன்ப அதிர்ச்சியில் கிடந்தாராம். இதைப் பல நூற்றாண்டுகளுக்குப் பின் ஸ்ரீரங்கத்தில் கூரேசர் சொல்லப்போய் இந்தக் கட்டம் வந்தவுடன், ஆழ்வார் எப்படி அனுபவித்து இருப்பார் என்று சொல்ல வந்த இவரும் மூர்ச்சித்துப் போனாராம். அதனால்தான் இவரைப் பின்னால் கூரத்தாழ்வான் என்றனராம். அந்த அழகிய பாசுரம்:

பத்துடை யடியவர்க் கெளியவன், பிறர்களுக் கரிய
வித்தகன் மலர்மகள் விரும்பும்நம் அரும்பெற லடிகள்
மத்துறு கடை வெண்ணெய் களவினில் உரவிடை யாப்புண்டு
எத்திறம் உரலினோ டிணைந்திருந் தேங்கிய எளிவே.

இதனால்தான் இவரின் பிரதம சீடர், மதுரகவி, “கண்ணி நுண்சிறுத் தாம்பினால் கட்டுண்ணப் பண்ணி யபெரு மாயன்”

என்கிறார்.


இறைவன் காட்ட நாம் இவ்வாறெல்லாம் காண்கின்றோம். ஞானம் பெற்று மகிழ்கின்றோம் இது இறைவனது போதனை, ந்மது ஆரோபிதம் அல்ல அத்தியாசம் அல்ல.


இதைத் தாங்கள் மனதாரச் சொன்னால் வைணவம் உங்கள் மடிப்பிள்ளை!

நா.கண்ணன் 

--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
 
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Mohanarangan V Srirangam

unread,
Sep 12, 2013, 1:53:49 PM9/12/13
to min tamil, தமிழ் வாசல், vallamai, தமிழ் சிறகுகள்
எல்லையற்ற முடிவற்ற வரையற்ற அநந்தம் என்பதில் எல்லாம் இழந்தான், தன்னையும் இழந்தான் என்று சொல்ல முடியாது, அனைத்தையும் பெற்றான், தன்னையும் உண்மையில் பெற்றான், அனைத்தும் ஆகப்பெற்ற தன்மையின் மணத்தைச் சிறிது நுகர்ந்ததுமே பேச்சு மூச்சு ஓய்வதைக் கண்டான். நான் என்பது பெருங்கடலில் கரைந்துகொண்டிருக்கும் சிறு பனித்துளி போலும், விரிந்த விண்ணில் உற்றுப் பார்க்கும் பொழுது நெளியும் சிறுவெண்கோடு போன்றுதான் ‘நான்’ என்பதே இந்த அநந்தத்தில் மறைவதும் எழுவதுமாய் நெளியக் கண்டான். 

ரிஷிகள் பாடிய நாமங்களைக் கூறுகிறேன் என்றவன் அந்தப் பன்மை அனைத்தும் பெருகும் ஒரு பெரும் திருநாமத்தைக் கண்டான். முழு ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமமும் ஒற்றை வடிவம் கொண்டு உரைக்குமானால் அது இதுதான். 

இந்த ஒரு நாமத்தின் விரிவாக்கம்தான் தொடரும் 999 நாமங்களும். அப்படித்தான் அனுபவிக்கிறார் ஸ்ரீபராசர பட்டர். 

எது அவனில்லை என்று தெரிந்தால் அல்லவோ எது அவன் என்று பட்டியல் இடலாம். அவன் இல்லாத ஒரு பொருள் இருப்பில் இல்லை. இல்லாமையாவது அவனைத் தவிர்த்த பெயராக இருக்குமோ என்றால் இல்லாமை ஒன்று இருக்கிறது என்று கூறவும் அவன் அடிப்படையாக இருந்து அதை இயல வைக்க வேண்டியிருக்கிறது. 

அவன் அவன் என்கிறோமே அவன் என்றால் ஆணா? அப்படி இல்லையெனில் பெண்ணா? அலியா? இல்லையெனில் இந்த வகைபாடெல்லாம் செல்லுபடியாகாத ஒன்றை ஏன் அது என்று சொல்லக் கூடாது? அது என்பது உயிரில் பொருளுக்குக் குறிக்கும் சொல்லாகப் போனதால் அனைத்து உயிர்ப்பொருள், உயிரில் பொருள் அனைத்துமாகி நிற்கும் ஒரு தத்துவத்தை, தன்னை அனைத்தும் சார்ந்திருக்க தான் எதிலும் சாராத ஒன்றைக் குறிக்க மொழியில் சொல் கிடையாது. எனவே அவன் என்று சொல்ல வேண்டியிருக்கிறது. 

அந்த ’அனைத்தும்’ என்பது ‘அனைவரும்’ என்பதையும் உட்கொண்டதாகச் சொன்னால் என்ன சொல்வது? அனைத்தும், அனைவரும் என்பதெல்லாம், அதாவது all things all beings, everything everyone என்பதெல்லாம் pronouns என்று சொல்வோம். ஸர்வநாமம் என்று வடமொழி சொல்லும். 

இந்த உலகில் நாம் ஒரு தொகுதியைக் குறிக்க அனைத்தும் என்கிறோம். ஆனால் உண்மையில் இந்த இருக்கின்ற பொருள்கள் அனைத்தும் என்பதைக் குறித்து ‘அனைத்தும்’ என்று நாம் பயன்படுத்தும் போது அது அத்தனை பெயர்ச்சொல் வகைகளையும் உள்ளடக்கி, வினைச்சொல், உரிச்சொல், சொல்லால் குறிக்கும் பொருள் என்று அனைத்து முழுமையையும் குறித்த ஒரு பெரும் தனிப்பெயராய் ஆகி அநாதி ஸம்ஞையாக ஆகிறது. 

அந்த முழுமையை The All என்று சொன்னாலும் என்ன அல்லது Everything Everyone என்று சொன்னாலும் என்ன? முழுமையை முழுதும் அகப்படுத்திச் சொல்லும் போது ஒரு விதமாகவும், அந்த முழுமை அடக்கிய அனைத்தையும் ஒவ்வொன்றாகத் தொட்டுச் சொல்லும் போது ஒரு வ் இதமாகவும் உரைப்பதைத்தானே இந்த விதங்கள் காட்டும். 

இந்த இரண்டு விதங்களாகவும் உரைக்க வசதியான சொல்லாக வடமொழியில் இருப்பது ‘விச்வம்’ என்னும் சொல். 

விச்வம் என்னும் உலகனைத்துக்கும் காரணமான பிரும்மத்தைக் குறிக்கவும் ‘விச்வம்’ என்ற பெயர் பயன்படுத்தப் படுகிறது என்கிறார் ஸ்ரீ ஆதிசங்கரர். 

உலகமும், பிரும்மமும் உண்மையில் வேறல்ல. அறியாமையில் உலகமாகத் தெரிவது அறியாமை அகன்ற காட்சியில் பிரும்மமாகத் தெரிகிறது. 

கரந்தசில் இடந்தொறும் இடந்திகழ் பொருள் தொறும் கரந்தெங்கும் பரந்துளன் என்கிறார் நம்மாழ்வார். 

ஸ்ரீமஹாவிஷ்ணுவின் ஆயிர நாமங்களைச் சொல்வேன் என்று ஆரம்பித்த பீஷ்மன் உரைக்கின்ற முதல் நாமம் - அனைத்தும் இந்த உலகனைத்தும், ஜீவர்கள் பொருட்கள் காலம் தேசம் செய்கை, தொடர்பு, அனைத்தும் சேர்ந்த அந்த  முழுமை அதுதான் அவன் முதல் பெயர் என்கிறார். - விச்வம். 

உலகை விட்டுப் பிரியும் உயிருக்குத் தெரியும் இந்த உலகின் அருமை. உலகெல்லாம் அந்த விஷ்ணுவே என்று உணர்ந்த உயிருக்குத் தெரியும் இந்த முதல் நாமத்தின் பெருமை. 

இது ஏக நாம ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாமம். இனிவரும் பெயர்கள் இந்த நாமத்தின் பொருளை விவரிக்கின்றன. 

Tulsi Gopal

unread,
Sep 12, 2013, 5:19:25 PM9/12/13
to vall...@googlegroups.com
யாதுமாகி................    !!!!


2013/9/13 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.



--
என்றும் அன்புடன்,
துளசி

Mohanarangan V Srirangam

unread,
Sep 13, 2013, 1:22:35 PM9/13/13
to min tamil, தமிழ் வாசல், vallamai, தமிழ் சிறகுகள்
அனைத்துமாக ஒன்று எப்படி ஆகமுடியும்? அல்லது அனைத்தும் என்ற ஒரு முழுமை அதற்கும் அதைத் தியானிக்கும் தனக்கும், தான் சொல்வதைக் கேட்கும் இவர்களுக்கும் என்ன பரஸ்பரம்? ஏதோ ஒரு முழுமையான ஒன்றில் தாங்கள் அடக்கம் என்பதைத் தவிர வேறு என்ன? அப்படிப் பட்ட முழுமையைப் புரிந்துகொள்ள ஏன் தியானிக்க வேண்டும்? கொஞ்சம் யோசித்தால் போதுமே. ஏதோ முழுமை இருக்கிறது என்று மனத்தில் படுமே. 

ஆனால் இந்த முழுமை அப்படி இல்லையே. உயிரோடு பரஸ்பரம் உறவு கொண்டாடும் முழுமையன்றோ! அந்த உறவு மட்டும் இல்லையென்றால் அதனுடைய பிரம்மாண்டம், அதனுடைய பெரும் பரத்வம், யார் கேட்டார்கள்! இருந்துவிட்டுப் போகட்டும் நல்லது என்று போக வேண்டியதுதான். ஆனால் ஒழிக்க ஒழியாத அந்த உறவுதானே அந்த எல்லையற்ற விச்வமாம் ஒன்றை இந்த ஜீவனுக்காகவும் முகம் காட்டப் பண்ணுகிறது. 

அந்த எல்லையற்ற அநந்தத்தை, விச்வத்தை நமக்கு உறவாக்குகின்ற அந்தப் பெருங்கருணை எது? அந்த முதல் அருள் எது? என்று நெகிழ்ந்தார் பீஷ்மர். அந்த இன்ஃபினிடியின் முதல் அவதாரம் தான் அவர் சிந்தையை நிறைத்தது. அனைத்தும் ஆன அந்த அநந்தம், ஒவ்வொன்றினுள்ளும் உட்கரந்து புகுந்து ஊடுருவி நிறைந்துள்ளதே எப்படி! என்று வியப்பில் மூழ்கினார். ‘ஊடுருவிப் புகுந்தது’ என்னும் தாதுவான ‘விச்’ என்பதையே சொல்லடியாகக் கொண்டு உருவான பெயர் விஷ்ணு என்று அவர் இதயம் மொழிந்தது. 

அனைத்தினுள்ளும் ஊடுருவி நிறைந்ததால்தான் அனைத்துமாய் நிற்கும் பேரியல் பரம்பொருள் உயிரோடும், உயிர் அதனோடும் உறவாட முடிகிறது. உயிருக்கும் உயிராய் நிற்க முடிகிறது. அந்த உயிர் உறவின் முதல் அவதாரத்தை துதிக்கிறார் பீஷ்மர் - விஷ்ணு. 

விச்வம் விஷ்ணு :

Ranjani Narayanan

unread,
Sep 13, 2013, 1:38:34 PM9/13/13
to vall...@googlegroups.com
வல்லமையில் சேர்ந்ததற்கு மிகப் பெரிய பலன் தேவரீருடைய இந்த கட்டுரையைப் படிப்பது, ஸ்வாமின்!
மனதை அசைத்து விடுகிறீர்கள், ஒவ்வொரு சொல்லிலும்!
பீஷ்மர் முதல் அருளில், அந்தப் பெருங்கருணையில் நெகிழ்ந்தது போல அடியோங்களும் தேவரீருடைய எழுத்து / வாக்கு சாதுர்யத்தில் நெகிழ்ந்து விட்டோம்.
வாய் பாட்டுக்கு விஷ்ணு சஹஸ்ரநாமத்தை சொல்லிக் கொண்டிருக்கும்; மனம் எங்கேயோ மேய்ந்து கொண்டிருக்கும். இனி அப்படி நடக்காது. தேவரீருடைய அதி அற்புதமான விளக்கம் நிச்சயம் மனதில் அசை போடும். 


2013/9/13 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
அனைத்துமாக ஒன்று எப்படி ஆகமுடியும்? அல்லது அனைத்தும் என்ற ஒரு முழுமை அதற்கும் அதைத் தியானிக்கும் தனக்கும், தான் சொல்வதைக் கேட்கும் இவர்களுக்கும் என்ன பரஸ்பரம்? ஏதோ ஒரு முழுமையான ஒன்றில் தாங்கள் அடக்கம் என்பதைத் தவிர வேறு என்ன? அப்படிப் பட்ட முழுமையைப் புரிந்துகொள்ள ஏன் தியானிக்க வேண்டும்? கொஞ்சம் யோசித்தால் போதுமே. ஏதோ முழுமை இருக்கிறது என்று மனத்தில் படுமே. 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

Mohanarangan V Srirangam

unread,
Sep 13, 2013, 1:41:51 PM9/13/13
to vallamai
ஓ வாங்கோ. நல்வரவு. 

தாங்கள் மிகவும் ஈடுபட்டீர்கள் என்பதைக் காண மிகவும் மகிழ்ச்சி. 

நன்றி. 

***



2013/9/13 Ranjani Narayanan <ranjanid...@gmail.com>

DEV RAJ

unread,
Sep 13, 2013, 3:50:28 PM9/13/13
to mint...@googlegroups.com, தமிழ் வாசல், vallamai, தமிழ் சிறகுகள்
On Friday, 13 September 2013 22:52:35 UTC+5:30, Mohanarangan V Srirangam wrote:
 ‘ஊடுருவிப் புகுந்தது’ என்னும் தாதுவான ‘விச்’ என்பதையே சொல்லடியாகக் கொண்டு உருவான பெயர் விஷ்ணு என்று அவர் இதயம் மொழிந்தது. 


யஸ்மாத்₃விஶ்வமித₃ம்  ஸர்வம் தஸ்ய ஶக்த்யா மஹாத்மந:।
தஸ்மாதே₃வோச்யதே விஷ்ணு: விஶ்தா₄தோ: ப்ரவேஶநாத் |।
 

Mohanarangan V Srirangam

unread,
Sep 14, 2013, 10:38:12 AM9/14/13
to min tamil, தமிழ் வாசல், vallamai, தமிழ் சிறகுகள்
அனைத்தும் - என்பதே அவன் பெயர். அனைத்துமாய் அவன் எப்படி நிற்கிறான்? பார்த்தால் பலப்பல பொருட்கள். அதெல்லாம் அவனா? ஆனால் எந்தப் பொருளிலும் காலத்தால், இடத்தால், ஈறுநிற்கும் பொருண்மை என்ற தத்துவத்தால் எது மாறாமல், மறையாமல் நிற்பது என்று பார்த்தால் அப்படித் தேர்வாக நிற்பதுதான் விசவம். அவ்வாறு அவன் அனைத்தினுள்ளும் உள் உயிராய், உள் சாரமான நிலைப்பேறு உடையதாய் நிற்பதால் அவன் விஷ்ணு. 

ஆனால் அனைத்தினுள்ளும் உட்புகுந்து நிற்பது என்றால் ஆகாயம் கூட அனைத்தினுள்ளும் உட்புகுந்து நிற்கவிலையோ? ஆனால் விஷ்ணு நிற்பது அவ்வாறன்று. அனைத்தினுள்ளும் அந்தர்யாமியாக அனைத்தையும் நியமித்துக்கொண்டு ஈச்வரனாய் நிற்கிறான் என்று சொல்ல வருகிறார் பீஷ்மர். ஆனால் அவர் உள்ளத்தில் அவன் செய்யும் நியமன சாமர்த்தியம் எத்தகையது என்ற யோசனை ஓடுகிறது. பிரமிக்கிறார். 

ஒருவன் ஒரு பெரும் பிரபுவாக இருக்கலாம். அவன் கீழ் வேலை செய்யும் ஆட்கள் அவன் ஆணைக்குப் பயந்து இட்ட கட்டளை சிரமேல் என்று அவசர அவசரமாகக் கீழ்ப்பணிந்து செய்யலாம். அதுவும் நியமன சாமர்த்தியமே. ஆனால் விஷ்ணுவின் நியமன சாமர்த்தியம்தான் எத்தகையது! 

ஒரு குழந்தை கொள்ளை அழகு. குடும்பத்தில் அந்தக் குழந்தையின் மனம் கோணாதபடி அதன் முகத்தில் அந்த அற்புத முறுவலைக் காண்பதற்காகவே அதற்குப் பணிவிடையும், பாங்கான உபசரிப்பும், லாலனையும், அது ‘ஊ’ என்று கையைக் காட்டினால் போதும், கட்டளைகூட இடவேண்டாம் நான் முந்தி நீ முந்தி என்று பெற்றோரும் உற்றோரும் அவசரம் உந்த பணி செய்யும் அந்தக் காட்சி இருக்கிறதே, அது என்ன நியமன சாமர்த்தியம்! 

ஒரு காதலியின் கண்சாடையில் அந்த விண்ணையும் சாடுவோம் என்று கவிஞர்கள் பாடிக் களிப்பது போன்று, காதலியின் நியமன சாமர்த்தியம் முறுவலும் கொஞ்சலும் மாறாமல்தானே நடைபெறுகிறது! 

ஒரு பெரும் புதையல் இருக்கிறது. இது ஒரு திருடனுக்குத் தெரிந்துவிட்டது. அவன் என்னப் பிரயத்தனப்படுவான்! எவ்வளவு கஷ்டங்களைத் தாங்கி, எவ்வளவு தியாகங்கள் செய்து, ஊண் உறக்கமின்றி அவன் கண்ணில் எது நியமனமாக நிற்கும்? அந்தப் புதையல். அது இவனிடம் பேசக் கூட இல்லையே. அது உயிருள்ளது கூட இல்லையே. அதன் மதிப்பு, அதனால் ஆன பயன் அன்றோ அவனை இந்தப் பாடு படுத்துகிறது. அறநெறி, சட்டம் எதனாலும் கீழ்ப்படிய வைக்க முடியாத அவனைக் கோலின் கீழ்க் குரங்காக அந்த உலோகம், மணிகள் தம்முடைய மதிப்பால் ஆட்டிவைத்துவிட முடிகிறது என்றால், அது என்ன நியமனம்? 

ஆம் இவை மூன்றிலும் காணப்படுவது வசீகரம் என்பதுதானே! குழந்தை தன் எளிமையாலும், மென்மையாலும், பச்சிளம் உள்ளத்தாலும் வசீகரிக்கிறது. காதலி அழகாலும், காதலாலும், போகத்தாலும் வசீகரிக்கிறாள். தனம் என்பது தன் மதிப்பால் வசீகரிக்கிறது. 

இந்த மூன்று வசீகரமும் உனக்குக் கடவுளிடத்தில் ஏற்படுமானால் நீ நிச்சயம் கடவுளைக் காண்பது உறுதி என்றாரே ஸ்ரீராமகிருஷ்ணர்! அந்த வசீகரம் அது அல்லவோ உண்மையில் நியமன சாமர்த்தியம்! 

இந்த அனைத்து வசீகரமும் யாரிடமிருந்து இந்த உலகில் பரவுகிறதோ அந்த விஷ்ணு அல்லவோ உண்மையில் வசம் செய்வோன். அந்த வசீகரத்தால் அன்றோ உயிர்கள் அவனிடத்தில் வசமாகி அவனுக்கு, அவன் இஷ்டப்படி, அவன் விரும்பிய வண்ணமெல்லாம் இழுப்புண்டு தாம் அவன் பணியே செய்து கிடப்பதே தமக்குப் பெரும் பேறு என்று அனவரதமும் அவன் வழியில் அன்றோ, அவன் ஆட்டுவித்த வண்ணம் அன்றோ, அவன் லீலைக்கு விஷயம் ஆகியோ அல்லது அவன் கிருபைக்கு விஷயம் ஆகியோ அவனால் நியமிக்கப்பட்டு இயங்குகின்றன.! 

ஞானம் ஏற்படும்  வரையில் அவன் நியமிப்பதைத் தாங்களே முடிவெடுத்தது என்று உறுதியாகச் சுய ஆர்வத்துடன் அன்றோ ஈடுபடுகின்றன. உள்ளிருந்து உள்ளுவார் உள்ளிற்றெல்லாம் உடன் இருந்து அறிதி என்றே நான் விலவறச் சிரித்திட்டேனே என்கிறார் இதைக் கண்டுபிடித்தவர். 

எனவே விஷ்ணு யார்? வசம் செய்வோன் அல்லவா? 

(’வச’ என்பதில் ச என்பது ஷ என்று ஆகி ஒரு ட் சேர்ந்து, செய்பவன் என்பதற்கு கார: என்பதோடு இணைந்து வச(ஷ)ட் + கார: = வஷட்கார: என்று ஆகிறது.) 

வஷட்கார: 

தேவர்களை வசம் செய்யும் யாகம் வஷட்காரம், வசம் செய்யும் மந்திரம் வஷட்காரம். 

‘அனைத்தையும் வசீகரிக்கிறான் அதனால் அனைத்துக்கும் ஈசனாகிறான்.’ என்று சொல்கிறது உபநிஷதம். 

விச்வம் விஷ்ணு: வஷட்கார: 

விஷ்ணு என்பதற்கு பூர்வ பாகமாகவும், நிகமனப் பாசுரமாகவும் இருக்கின்றன ‘விச்வம்’, ‘வஷட்கார:’ என்னும் நாமங்கள். 

Mohanarangan V Srirangam

unread,
Sep 15, 2013, 12:04:47 PM9/15/13
to min tamil, தமிழ் வாசல், vallamai, தமிழ் சிறகுகள்
வசீகரத்தால், உட்புகுந்து உறைவதால், உயிருக்கு உயிராக நிலவுவதால் அவனுடைய ஈசத்வம் இயல்பானதாக இருக்கிறது, உயிர்களின் உள் இயல்பாகவும் அவனால் நியமிக்கப்படுவதே இருக்கிறது என்றெல்லாம் நினைத்தார் பீஷ்மர். என்ன அவனுடைய பிரபுத்துவம் என்று வியக்கிறார். 

ஒரு பிரபு என்பவன் பயத்தாலும் நயத்தாலும் தானே ஆள்கிறான். ஆனால் இங்கோ இந்த பிரபு அந்தராத்மாவாக நிற்கும் பெருங்காதலால், பெரும் மென்மையால், உள் நிற்கும் பேர் இயல்வால் ஆள்கிறானே, இவன் அல்லவோ உண்மையில் பிரபு. பிரபுத்துவம் என்பது இவனிடத்தில் பிரவஹித்துச் சென்று ஆபாஸ இடங்களில் எல்லாம் பிரதிபலிக்க அல்லவோ காண்கிறோம்! 

உலகில் நாம் காணும் பிரபுத்துவங்கள் எல்லாம் நிகழ்காலத்திற்கு அன்றோ இருக்கின்றன. மிகவும் அன்பால் ஆளும் ஒருவரை நினைத்து உபசாரமாக மக்கள் அவர் எல்லாக் காலத்திற்கும் பிரபு என்று பாராட்டு வார்த்தைதான் சொல்ல முடிகிறது. அதைக்கூடக் கேட்க அந்தப் பிரபு இருக்க முடிவதில்லை. 

ஆனால் கடந்த காலத்திலும் இவன் தான் பிரபு, நிகழ்காலத்திலும் இவன் தான் பிரபு, எதிர்காலத்திலும் இவனே பிரபு என்ற மாறாத பிரபுத்துவம், காலத்தால் அவதி, முடிவு பெறாத, கால அவதியாகாத பிரபுத்துவம் வஷட்காரனாகிய விஷ்ணுவின் பிரபுத்துவம் அன்றோ! 

இவன் முக்காலத்திலும் நிலைநின்ற பிரபுவாக இருக்கலாம். ஆனால் கடந்த காலத்தில் இருந்து மறைந்துபட்ட பொருள்கள், உயிர்கள் ஆகியவற்றிற்கு இவன் எப்படி பிரபுவாக இருக்க முடியும்? ஆம் அங்குதான் அவருக்கு ஸ்ரீகிருஷ்ணன் அர்ச்சுனனுக்கு உரைத்த மெய்மைப் பெருவார்த்தையான கீதை மனத்தில் எழுகிறது. எக்காலத்திலும் இவர்களோ, இந்தப் பொருட்களோ இல்லாமல் இருந்ததும் இல்லை, இல்லாமல் போவதும் இல்லை அர்ஜுனா!...-- 

ஆம் இவன் முக்காலத்திற்கும் பிரபு என்ற இந்த ஒன்று போதுமே உயிர்களாகிய நாம் ஒரு நாளும் அழிவதில்லை என்பதைச் சிலாசாசனமாகக் காட்ட! இருக்கின்ற அனைத்தில் ஒன்று அழிந்தாலும் அது அவன் பிரபுத்துவத்திற்கு அன்றோ ஹானி! 

நாரணனே! நான் உன்னையன்றி இலேன் என்ற அடியார் உடனே நீயும் என்னை அன்றி இலை கண்டாய் நாரணனே என்று கூறியதும் உண்டே! 

அவன் நடத்துகின்ற திண்ணைப் பள்ளிக்கூடம்தானே இந்த உலகம், இந்தப் பிறவி, இறப்பு எல்லாம். யார் அழிகிறார்கள்? எதுதான் அழிகிறது? எல்லாம் ஒரு அவஸ்தை மாறி இன்னொரு அவஸ்தை அவ்வளவுதானே! ஒரு வகுப்பு மாறி இன்னொரு வகுப்பில் போய் உட்காருவதைப் போன்று! 

தான் போகப் போகிறோம் என்று காத்துக் கிடக்கும் பீஷ்மருக்கு தாம் கிடக்கும் அம்புப்படுக்கையே பீச் ரிஸார்ட்டில் படுத்துக்கிடக்கும் மெத்தை சயனம் போல் இனிக்கிறது விஷ்ணுவின் முக்காலமுமான பிரபுத்துவத்தை நினைக்கும் போது. 

ஒரு கணம், ஸம்ஸாரச் சுழல், பவபயம், மாறிமாறிப் பிறந்திறந்து என்னும் கொடுங்காட்சி மாறி முழு உலகமே அரங்கன் திருமுற்றமாக, ஸ்ரீரங்க விலாஸமாகக் காட்சியளிக்கிறது பீஷ்மருக்கு. 

அதில் தூணுக்குத் தூண் கண்ணாமூச்சி விளையாடும் சிறுவனாய் ஆகிவிடுகிறார். அனைத்துமான ஒன்று, அந்த அச்சுதனாகிய பிரபு லீலா நாயகனாகக் காட்சியளிக்கிறான். குழந்தைபோல் சிரித்துக் களித்தபடியே கூறுகிறார் -- 

பூத பவ்ய பவத் பிரபு: -- சென்றதற்கும், இருப்பதற்கும், இனிவருவதற்கும், சென்ற காலத்தும், நிகழ்காலத்தும், வருங்காலத்தும் அவனே பிரபு. 

அவனோ மகாகஞ்சன் அதாவது மஹாபிரபு. தன் உடைமைகளில் ஒன்று காணாமல் போய்விட முடியாது. 

உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது என்பதற்குக் கையெழுத்திட்ட திருநாமம் இந்த நாமம் - பூத பவ்ய பவத் பிரபு: 

Mohanarangan V Srirangam

unread,
Sep 16, 2013, 9:53:41 AM9/16/13
to min tamil, தமிழ் வாசல், vallamai, தமிழ் சிறகுகள்

பூதக்ருத் பூதப்ருத் பாவ:

உண்டான பொருட்கள் பூதங்கள். ’பூ4’ என்னும் வேர்ச்சொல்லுக்கு உளதாய் ஆதல் என்னும் பொருள். உளதாய் ஆனவை பூதங்கள்.

ஒரு பொருள் உளதாய் ஆகிறது என்று சொன்னால் அங்கு ஏதோ ஒன்று அடிப்படையான வஸ்து. அதனோடு அதற்கான நாமம் ரூபம் என்பவை சேரும் போது அது பொருளாக ஆகிறது. நாமம் என்பது essential data of  thing. ரூபம் என்பது Form. FORM, DEFINITION and CONTENT மூன்றும் சேர்ந்து பொருள். 
-- தொடர்ந்து படிக்க --> 


***

Mohanarangan V Srirangam

unread,
Sep 17, 2013, 11:09:33 AM9/17/13
to min tamil, தமிழ் வாசல், vallamai, தமிழ் சிறகுகள்
பூதாத்மா பூதபாவன: 


உளதாய்ப் பொருட்களைச் செய்வோன். உளதாய் ஆன பொருட்களைத் தாங்குவோன். உள்ளதாம் தன்மையாய் இருப்போன். பூதக்ருத், பூதப்ருத், பாவ: என்றால் பூதங்களுக்குள், உள்ளாதாம் பொருட்களின் உள் உயிராய் நிற்பவன் அவனே. 

ஒரு பொருள் தான் எதுவாக இருக்கிறதோ அது அதுவாக இருக்க வேண்டும், அது அதுவாக இருக்கும் வரையில் அந்தப் பொருள் என்னவோ, அதன் பயன் என்னவோ, அதன் வடிவம் என்னவோ, அதன் உருகெழு இயல்பு என்னவோ அது மாறாமல் இருக்கும் வரையில் அது அந்தப் பொருள். ஒவ்வொரு பொருளும் தன் நிலை நிற்றல், நின்று நிலவல் என்பது அந்தப் பொருளினுள் அதற்கான ஆத்மாவாய் பரம்பொருள் நிற்கும் வரையில்தான். 

தொடர்ந்து படிக்க இங்கே --> http://sribhagavannama.blogspot.in/2013/09/blog-post_17.html 



***


Mohanarangan V Srirangam

unread,
Sep 18, 2013, 10:29:03 AM9/18/13
to min tamil, தமிழ் வாசல், vallamai, தமிழ் சிறகுகள்
பூதாத்மா பரமாத்மா ச 


பூதங்களுக்கு ஆத்மாவாய், பூதங்கள் தங்கள் இயல்பை வெளிப்படுத்தி முழு தன் நிறைவை நோக்கி வளரவும் உள்ளே ஆண்டு நிற்கும் அவனாய் நிற்கிறது பரம்பொருளாகிய ஸ்ரீவிஷ்ணு என்றால் பூதங்களின் தோற்றம், பெருக்கம், குணம், தேய்வு, நாசம் எல்லாம் உள்ளே ஆத்மாவாய் இயலும் அவனையும் பற்றியதாய் ஆகாதோ? 

தொடர்ந்து படிக்க இங்கே --> http://sribhagavannama.blogspot.in/2013/09/blog-post_18.html 


***


Mohanarangan V Srirangam

unread,
Sep 19, 2013, 11:41:49 AM9/19/13
to min tamil, தமிழ் வாசல், vallamai, தமிழ் சிறகுகள்
முக்தானாம் பரமாகதி: 

அவன் பரம ஆத்மா. அனைத்தும் யாரை நோக்கியவண்ணம், யாரைச் சென்றடைய போய்க்கொண்டிருக்கின்றனவோ அந்த கடைசி உயிர் நிலை அவன் தான். அனைத்துக்கும் சென்று எய்தும் வீடு ஆக இருப்போன் ஆகையாலே பரம அயநம் அவனே. அவன் தான் பராயணம். 

தொடர்ந்து வாசிக்க -- http://sribhagavannama.blogspot.in/2013/09/blog-post_19.html 

***



Mohanarangan V Srirangam

unread,
Sep 20, 2013, 10:13:59 AM9/20/13
to min tamil, தமிழ் வாசல், vallamai, தமிழ் சிறகுகள்
அவ்யய: புருஷ: சாக்ஷீ க்ஷேத்ரக்ஞோS அக்ஷர ஏவ ச 


முக்தர்களுக்கு அவனே பரம கதி. அவனே பரம கதி என்றால் மோக்ஷத்திலும் முதல் கதி, இரண்டாம் கதி, எல்லாவற்றுக்கும் மேலான பரம கதி என்று இருக்குமோ என்றால், ஸ்ரீபராசர பட்டர் இந்த பரமா கதி என்பதற்கு ஒரு குறிப்பு தருகிறார். 

தொடர்ந்து படிக்க --- > http://sribhagavannama.blogspot.in/2013/09/s.html 

***

Mohanarangan V Srirangam

unread,
Sep 22, 2013, 8:59:28 AM9/22/13
to min tamil, தமிழ் வாசல், vallamai, தமிழ் சிறகுகள்
யோகோ யோகவிதாம் நேதா ப்ரதான புருஷேச்வர: 
நாரஸிம்ஹ வபு: ஸ்ரீமாந் கேசவ: புருஷோத்தம: 

இங்கு உலகில் பிறந்து இறந்து பின் முக்தியடைந்த முக்தர்களும், பவ சாகரத்தினுள்ளே ஒரு நாளும் வராத நித்ய முக்தர்களும் தங்களுக்கு மிக உயர்ந்த பரமா கதியாகக் கருதும் ஸ்ரீமந் நாராயணனை எந்த மார்க்கத்தால், என்ன நெறியால், அல்லது எந்த உபாயத்தைக் கைக்கொண்டு அடைந்தனர்? 

அவன் தான் அடையப்பட வேண்டிய மிகச் சிறந்த பரமா கதி என்றால் அவனை அடைவிக்கும் வழி எது? அல்லது உபாயம் என்ன? அல்லது அவனோடு நம்மைச் சேர்ப்பிக்கும் மார்க்கம் எது? நன்கு அவனோடு பொருந்தி கலந்து சேர்ந்த நிலை என்பதை ஸாயுஜ்யம் என்று சொல்வதுண்டு. அத்தகைய யுஜ் எனப்படும் சேர்க்கையை நன்கு செய்யும் வழி. யோகம் எது? 

நான்கு பாதங்களாகப் பிரித்துத் தனித்தனியாக வரிசையில் படிக்கச் சுட்டிகள் --

யோகோ யோகவிதாம் நேதா 



ப்ரதான புருஷேச்வர: 



நாரஸிம்ஹ வபு: ஸ்ரீமாந் 



கேசவ: புருஷோத்தம: 

Mohanarangan V Srirangam

unread,
Sep 30, 2013, 10:57:52 AM9/30/13
to min tamil, தமிழ் வாசல், vallamai, தமிழ் சிறகுகள்
ஸர்வ: சர்வ: சிவ: ஸ்தாணு: பூதாதி: நிதிரவ்யய:| 
ஸம்பவோ பாவனோ பர்த்தா ப்ரபவ: ப்ரபு; ஈசவர:|| 


சிங்கப் பெருமாளாய்த் தோன்றிய அந்தக் கேசம் அழகியோன், அந்தப் புருஷோத்தமன் அப்படித் தோன்ற வேண்டும் என்று என்ன சம்பந்தம்? அதுவும் ஒவ்வொரு பொருளிலும் உள்நின்றது ஒரு பக்தனுக்காக என்று சொல்லும்படியாக அன்றோ அவன் வாத்ஸல்யம்! 

அதாவது புள்ளி ஒரு பக்கம். மறுபக்கம் பிரம்மாண்டம். இது ஒரு சின்ன துளி. அதுவோ பரமாத்மா. அது அனைத்தும். ஒவ்வொன்றும். அதனுள் நின்று உள்ளுயிராய், உள் நிலவும் தத்துவமாய் உலவும் மூர்த்தி. ஆனால் இந்த புள்ளிக்குள், இந்தத் துளிக்குள் இருக்கும் ஒன்று, ஏதோ ஒன்று அந்த பராத்பர வஸ்துவை பாடாய்ப் படுத்துகிறது! 

அரைகுலைய நிலைகுலைய தன் குட்டியைத் தாக்க வரும் எதிரியிடமிருந்து தன் குட்டியைக் காக்க கடும் ஆக்ரோஷமாக வரும் சிங்கம் ஒன்றைப் போல் அந்தப் பரமாத்மா இந்தக் குட்டியூண்டு ஜீவனுக்காக ஓடிவருகிறது. பதறுகிறது. வாரியணைத்து நாவால் தடவித் தடவி தன் வாத்ஸல்யம் எல்லாம் காட்டுகிறது என்றால்.. உண்மையிலேயே புரியவில்லை. அப்படி என்னதான் இருக்கிறது மினுக் மினுக் என்று மின்மினி போல் ஒளிரும் இந்த ஜீவனிடம்? 

வேண்டுமென்றால் ஏகப்பட்ட அறியாமை, மயக்கு, துயக்கு எல்லாம். ஆனால் அதையெல்லாம் மீறி இந்த ஜீவனுக்குள் தோன்றும் அந்த தூய பக்தி, பிரதிபலன் நோக்காத அந்த சுத்த பக்தி இருக்கிறதே, அதுதான் பரமாத்மாவை இந்தப் பாடு படுத்துகிறது. 

ஏன்? ஸர்வமாகவும் அவன் இருக்கிறான். ஸர்வத்தையும் அவன் தான் படைத்தான், ஸர்வத்தையும் அவன் தான் காக்கிறான், பிரளயத்தில் ஸர்வத்தையும் அவனே உள்ளே தரிக்கிறான். அவன் தான் ஸர்வமும். அனைத்தையும் கடந்தவனாய் இருப்பதும் அவனே. அனைத்தினுள்ளும் இருப்பவனும் அவனே. அனைத்துமானவனும் அவனே. ஸர்வம் என்றே அவனுக்குப் பெயர். விச்வம் என்று தனித்தனியாய்த் தன்னைக் கணக்கிட்டுக் காட்டியது போதாது என்று ஸர்வம் என்று ஒட்டு மொத்தமாய்த் தன்னை நிறுத்தும் காட்டுகிறான். அவன் தான் விச்வம். அவன் தான் ஸர்வம். உயிருள்ள பொருளுக்குள் அவனே உயிர். உயிரற்ற பொருளுள்ளும் அவனே ஆத்மா. நாம் சிலதை நமக்கு வேண்டாம் என்று அகற்றலாம். ஆனால் ஸர்வமும் ஆன, ஸர்வம் என்ற அவன் எதை எங்கே அகற்றுவான்? 

ஸர்வமும் அவனே என்றால் எங்கிருந்து வருகிறது பீதி, பயம், எதிரி, அவன் வந்து காக்க வேண்டிய அவசரம்? என்ன விளையாட்டு இது எல்லாம். அவனே வந்து சாரதியாய்த் தேரோட்டுகிறான். ஆனால் அவனையே அண்டிய ஜீவன்களுக்கு எத்தனை கஷ்டங்கள்! அப்படி என்றால் ஸர்வம் என்ற அவனது முழுமையில் இந்தக் கஷ்டங்கள் இல்லாமலா போகின்றன? 

திகைக்கிறார் பீஷ்மர். புருஷோத்தமன் என்றவர் ஸர்வ: என்கிறார். 

யாருடைய கஷ்டங்கள்? ஜீவர்கள் யார்? அவனுடைய சரீரங்கள்தாமே? அப்படி என்றால் கஷ்டம் என்றால் உள்ளிருக்கும் ஆத்மாவான அவனே தான் கஷ்டமும் படுகிறானோ? பிறகு தன் கஷ்டத்தைத் தானே நீக்கிக் கொள்கிறானோ? ஆமாம். அனைத்தும் அந்த முழுமைக்குள்ளேதானே, அந்தப் பரம்பொருள் சந்நிதானத்தில்தானே அனைத்தும் நடைபெறுகின்றன! கஷ்டம், நிவாரணம், சுகம், துக்கம் எல்லாம் அவனே மாறி மாறி தனக்குத் தானே சொந்த சீட்டுப் போட்டுக்கொண்டு விளையாடும் விளையாட்டுதானே! ஆம் ஜீவர்களின் கஷ்டங்களை அழிப்பவன் அவன் தானே எனவேதான் அவன் சர்வ: 

கி.காளைராசன்

unread,
Oct 1, 2013, 8:20:14 PM10/1/13
to mintamil, தமிழ் வாசல், vallamai, தமிழ் சிறகுகள்
திருவரங்கத்திற்கு வணக்கம்.

அன்பன்
கி.காளைராசன்


2013/9/30 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.

K. Loganathan

unread,
Oct 1, 2013, 9:54:00 PM10/1/13
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com
நின்னா கண்ணன்

எங்கிருந்து வருகின்றது பீதி  பயம் கொலைவெறி வனமுறை போன்றவை,

இதை மும்மல கோட்பாடு இன்றி விளக்க முடியாது. அகத்தே விடாப்பிடியாக வேதாந்ததின் எகாத்துவிதம் இருந்தால் எப்படி முடியும்?

அகத்தே கீதையின் சாங்கீயக் கோட்பாட்டின் முக்குணப் பிரகிருதி மாத்திரம் இருந்தால் எப்படி இவற்றை எல்லாம் விளக்க முடியும்?

எல்லாம் வேதந்த மயக்கம். சித்தாந்தப் புறக்கணிப்பு.

இதைச் சொல்லப்போனால வீணான மன வருத்தம்

இந்துக்களால  உள்ளதை உள்ளவாறு  சிந்தித்துத் தெளிய முடியாது போலும். என்றும் சாத்திரங்கட்கு அடிமையாகி மகான்களுக்கு அடிமையாகி உலகில் நடப்பதைப் பற்றி கவலைப்படாது ஆழ சிந்திக்காது ஓர் கனவு உலகில் வாழ்ந்துகொண்டிருப்பது போல்  இந்து  மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள்

இன்றைய ஆகமவுளவியல் கட்டுரை  பாடம் இரண்டு இடுகை 4 எழுதிக் கொண்டிருக்கின்றேன், படித்துப் பாருங்கள் , நான் சொலவது புரியும்

ஆகமவுளவியல் சீனர்களிடையே நலமேப் பரவ தமிழர்களிடையே அப்படி இல்லை, ஏன்? எல்லாம கனவில் வாழ்வதுபோல் உலக வாழ்க்கையை வாழ்வதுதான்

உலகன்


2013/10/1 N. Kannan <navan...@gmail.com>
2013/9/30 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
ஸர்வமும் அவனே என்றால் எங்கிருந்து வருகிறது பீதி, பயம், எதிரி, அவன் வந்து காக்க வேண்டிய அவசரம்? என்ன விளையாட்டு இது எல்லாம். அவனே வந்து சாரதியாய்த் தேரோட்டுகிறான். ஆனால் அவனையே அண்டிய ஜீவன்களுக்கு எத்தனை கஷ்டங்கள்! அப்படி என்றால் ஸர்வம் என்ற அவனது முழுமையில் இந்தக் கஷ்டங்கள் இல்லாமலா போகின்றன? 


இதைப் புரிந்து கொள்ளுதல் மிகவும் கடினமாக உள்ளது. 

ஊழிதோறும் தன்னுள்ளே படைத்து காத்து கெடுத்துழலும்!

என்று சொல்லும் போது மிகவும் தேர்ந்தெடுத்த வார்த்தையாக, ‘உழலும்’ என்பதைப் போடுகிறார் ஞான தேசிகனான சடகோபன். இதற்கு எப்படியும் விளக்கம் சொல்ல முடியாது. பெருமாளாளும் விளக்கம் சொல்ல முடியாது. பிரபஞ்சத்தின் உயிர்த்துடிப்பு. ஒரு உழற்சி. அது அப்படித்தான். ஆளை விடுங்கப்பா ;-)

நா.கண்ணன்

 
--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
 
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

K. Loganathan

unread,
Oct 2, 2013, 12:31:31 AM10/2/13
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com
நின்னா கண்ணன்

நான் செய்து வருகின்ற ஓர் புதுமை  ஐரோப்பியத் தக்கத்தை  அகப்படுத்தி உள்ளத்தின் போக்கினை தருத்தேர்வு போன்ற ஆழ்நுழைவுத் தேர்வுகள் வழி அளந்து சொல்வது.

கள ஆய்வு உண்டு,

 Empirical Facts are gathered

இப்படிப்பட்ட போக்கு இந்து பாரம்பரியத்தில் எங்கே இருக்கின்றது.?

ஓர் வகையில் யோகப் பயிற்சியில் உண்டு, ஆனால் ஆய்வுக் கருவிகள்(   test instruments) பயனபடுத்தல் உண்டா?

நல்ல பல சித்தர்கள் தவிர்த்து பிறர் எல்லாம் சாத்திரங்களை ஓதி கதை சொல்வது போலத்தான் விளக்கங்கள், 

empirical data  போன்றவை சேகரித்து அவற்றை விளக்க முயன்றிருக்கின்றார்களா?

அப்படி இருந்தால் தெரிவிக்கவும். நான் பல இடங்களில் தேடியும் கிடைக்க வில்லை

உலகன்



 


2013/10/2 N. Kannan <navan...@gmail.com>
2013/10/2 K. Loganathan <k.ula...@gmail.com>
நின்னா கண்ணன்

எங்கிருந்து வருகின்றது பீதி  பயம் கொலைவெறி வனமுறை போன்றவை,

இதை மும்மல கோட்பாடு இன்றி விளக்க முடியாது. அகத்தே விடாப்பிடியாக வேதாந்ததின் எகாத்துவிதம் இருந்தால் எப்படி முடியும்?

அகத்தே கீதையின் சாங்கீயக் கோட்பாட்டின் முக்குணப் பிரகிருதி மாத்திரம் இருந்தால் எப்படி இவற்றை எல்லாம் விளக்க முடியும்?

எல்லாம் வேதந்த மயக்கம். சித்தாந்தப் புறக்கணிப்பு.

இதைச் சொல்லப்போனால வீணான மன வருத்தம்.
>>>>>

வணக்கம். அறிவுத்தேட்டம் உள்ளவனுக்கு புறக்கணிப்பு கிடையாது. எது பூரணமாக விளக்குகிறது என்பதே முக்கியம். ஏகாத்துவத்தில், ‘உழற்சி’, ‘விளையாட்டு’ எனும் கருதுகோளை வைத்து சிலவற்றைப் புரிந்து கொள்ள விழைகின்றனர். இது கூட ஒரு சால்ஜாப்புதான். காரணம் நித்தம் நவமாக இருக்கும் பரம்பொருளை மனிதத் தர்க்கத்தால் புரிந்து கொள்ள முடியாது என்பதே உண்மை. அதை வேதாந்திகள் அறிவர்.

ஆயினும், நான் என் பின்னூட்டத்தை எழுதும் போது உங்களை நினைத்துக்கொண்டேன். நீங்களும் பதிலளித்துள்ளீர்கள். உண்மை. சித்தாந்தம் இதற்கு பதில் அளிக்கிறது. ஆயினும் முப்பொருள் உண்மையில் மூன்று அநாதிகளை முன்வைக்க வேண்டியுள்ளது. இதுவும் ஒரு வசதிக்கு என்றுதான் தோன்றுகிறது. எப்படியாவது விடை கண்டே தீரவேண்டுமென்ற அவா! அது அவசியமா? அவசியமில்லையா? என்று தெரியவில்லை.

நீங்கள் உங்கள் வழக்கமான ஜார்கனை விடுத்து எளிமையாகச் சொல்லிப்பார்க்கலாம். எல்லோருக்கும் விளங்கும். 

<<எங்கிருந்து வருகின்றது பீதி  பயம் கொலைவெறி வனமுறை போன்றவை,>>

இதற்கு வேளுக்குடி அவர்கள் பதிலளித்துவிடுகிறார் (தேவ் அவர்களின் இடுகை). 

நா.கண்ணன்

--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
 
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

Nagarajan Vadivel

unread,
Oct 2, 2013, 1:45:01 AM10/2/13
to vallamai

2013/10/2 K. Loganathan <k.ula...@gmail.com>

empirical data  போன்றவை சேகரித்து அவற்றை விளக்க முயன்றிருக்கின்றார்களா?

அப்படி இருந்தால் தெரிவிக்கவும். நான் பல இடங்களில் தேடியும் கிடைக்க வில்லை

​கேட்டதால் சொல்லுவேன் தவறாகக் கருத வேண்டாம்

கருத்தியல் இல்லாது உளவியல் இல்லை

இந்தியக் கருத்தியல் (வித்யா) இருவகை.இவையே உளவியல் செயல்பாடுகளுக்கு அடிப்படை

1.​ சப்த பிரம்மம்

2. பரப்பிரம்மம்

சப்த பிரம்மம் என்பது இதுவரை மனிதச் சிந்தனை வடித்தெடுத்த வேதங்கள் மந்திரங்கள் ஆகமங்கள் ஆகியவற்றின் தொகுப்பு.  இந்தப் பிரம்மம் யுஅர்வானதல்ல ஏனெனில் இங்கே வார்த்தைகளும் வடிவங்களும் நிறைந்துள்ளன.  இவை மனித மனம் பரம்பொருளை உணர உதவி செய்கின்றன.  புத்தகங்களைப் படித்தல் மனப்பயிற்சி போன்றவற்ரால் இந்த நிலையில் இருந்து உயர்நிலையை அடைய முடியும். கற்றநிந்தோர் முற்றூம் துறந்த மொன நிலையை அடைய புலனறிவால் உணர்ந்த கருத்துக்கள் அனைத்தையும் தொகுத்து வகுத்து சப்த பிரமத்தை அறிய உதவுவது விஞ்ஞானம்

விஞ்ஞானம் என்பது மட்டற்ற தகவல் தொகுப்பு. அதைத் தேடும் நாட்டமே கல்வி.  கல்வி கரையில.  விஞ்ஞானம் என்பது அனைத்துத் தகவல்களையும் உள்ளடக்கியது.  இல்லாதது ஒன்றுமில்லை என்ற அளவில் அனைத்துத் தகவல்களும் இருக்கும் களம் விஞ்ஞானம். விஞ்ஞானம் என்பது அத்வைதமும் ஞானமும் கலந்து வாழும் சூழலில் உள்ள இயற்கையின் மறைபொருளை வெளிக்கொணரும் செயல்.  சித்தாந்தங்கள் மூலம் பர்ம்பொருளை நேரடியாக உணர விஞ்ஞானம் உதவுவதில்லை

விஞ்ஞானம் சப்த பிரம்ம நிலைக்கு மட்டுமே எடுத்துச் செல்லும்

நூலறிவு தொடமுடியாத எல்லையில்லாத பரம்பொருளை உள்ளம் நான்காம் நிலையாகிய துரிய நிலையை அடைந்து மெய்ஞானத்தை உணர நேரடியாக உதவாது


விஞ்ஞானம் புற உலகின் லெளகீகங்களை விளக்கத் தரவுகளைப் பயன்படுத்தும் என்பதும் அதுவே எல்லையில்லாத பரம்பொருளை எந்நாளும் விளக்க இயலாது என்பதும் தமிழக அறிவுலகம் அறிந்து சொன்ன உண்மை

ஆராய்ச்சிக் குஞ்சு

K. Loganathan

unread,
Oct 2, 2013, 3:07:10 AM10/2/13
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com
பேராசிரியர் அவர்களே

தங்கள் கூற்று

//விஞ்ஞானம் புற உலகின் லெளகீகங்களை விளக்கத் தரவுகளைப் பயன்படுத்தும் என்பதும் அதுவே எல்லையில்லாத பரம்பொருளை எந்நாளும் விளக்க இயலாது என்பதும் தமிழக அறிவுலகம் அறிந்து சொன்ன உண்மை//

தாங்கள் கொண்டிருக்கின்ற 'விஞ்ஞானம்' என்பது ஐரோப்பியர் வளர்த்த  positive sciences  என்பவற்றையே குறிக்கும் என்று நினைக்கின்றேன் ஆனால் தமிழர்கள் வளர்த்த 'நூலியல் அறிவியல' எனும் துறைகளை அடக்காது என்றே நினைகின்றேன் 

 தொல்காப்பியம் ஓர் நூலியல் அறிவியல் நூல் அதேப் போலத்தான் மெய்கண்டாரின் சிவஞானபோதமும். சமய வாழ்க்கையை இவ்வாறு ஓர் அறிவியல் துறை ஆக்கியப் பெருமை மெய்கண்டாருக்கு உண்டு.

நூலியல் வழி  அறிவியல் முறையில்(  Hermeneutic Sciences)  இறைவன அடைந்து அனுபவிக்க வழி காட்டுகின்றது. இந்த  பேரண்டத்தையே இரட்டுருவின் ஓர் நூலாக் கொண்டு அவன் அவள் அது என்றவாறு மூவினைப்படும் புறவுருவைக் கண்டு இவற்றிற்கெல்லாம் காரண்மாக  புதையுருவாக இருக்கும் சங்காரகாரணாகிய முலையேயே முதலாக உடைத்து  என்று மெய்கண்டார் காட்டுகின்றார். 

 அவர் வழியில் சென்றால் யார் பரம்பொருளாகிய இறைவனை அடைய முடியாது வீடுபேறு அடைய முடியாது என்று சொல்வது?

 தங்களுக்கு சிவஞானபோதம் என்றொரு நூல் இருப்பது தெரியாது என்று நினைக்கின்றேன்.  தொடர்ந்து வாதிப்பதற்கு முன் போதத்தின் முதல் சூத்திரத்தையாவது படித்து வாருங்கள். தொடர்ந்து நன் முறையில் கருத்துப் பரிமாற்றங்கள் செய்ய ஆவலுடையவனாக இருக்கின்றேன்

 சிவஞான போதம் என் உரையோடு கீழ் வரும் சுட்டியில்:

உல்கன்




2013/10/2 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

Mohanarangan V Srirangam

unread,
Oct 2, 2013, 3:24:33 AM10/2/13
to vallamai, min tamil, தமிழ் வாசல், தமிழ் சிறகுகள்
>>>தங்களுக்கு சிவஞானபோதம் என்றொரு நூல் இருப்பது தெரியாது என்று நினைக்கின்றேன்.  தொடர்ந்து வாதிப்பதற்கு முன் போதத்தின் முதல் சூத்திரத்தையாவது படித்து வாருங்கள். <<< 

ஐயா! பேராசிரியரின் பதிலில் கருத்துகளுக்கான மாற்றுக் கருத்துகளையே பதிவு செய்யும் நடுநிலை உணர்வைக் காணமுடிகிறது. 

ஆனால் தங்களின் அதற்கான பதிலில் மேற்கண்டதுபோல் தேவையற்ற சாடல் தொனியோடு எழுதுகிறீர்கள். கருத்துக்களுக்கு கருத்து என்பது நல்லது. மேற்படியான உளவியல் தாக்கல்களைத் தவிர்த்துவிடுக. 

***
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் 

*


2013/10/2 K. Loganathan <k.ula...@gmail.com>

K. Loganathan

unread,
Oct 2, 2013, 3:44:13 AM10/2/13
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com
அன்பரே

இது பல ஆண்டுகால ஏமாற்றத்தால்  வருவது.  சிவஞான போதத்தின் அறிவியல் முறையியலை தமிழ் பேராசிரியர்கள் அறியாதே இருக்கின்றார்களே என்ற வேதனையால் வருவது.

போதத்தின் காண்டிகை உரை தொல்காப்பியத்தின் நூலியல் அறிவியலைச் சார்ந்து வருவது என்று அறியாதே இருக்கின்றார்களே என்பதால் வருவது

எனது ஏமாற்றங்களும் வேதனைகளும் பேராசிரியருக்குத் தெரிந்த ஒன்றே.  அவர் மனம் புண்படாது

உலகன்


2013/10/2 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>

K. Loganathan

unread,
Oct 2, 2013, 6:42:44 AM10/2/13
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com
அன்பரே

 நான் ஏறக்றைய 40-50 ஆண்டுகள் சிந்தித்து எழுதி வருகின்றேன். முறையாக சிந்தித்தே எழுகின்றேன். பொருட் குற்றங்கள் இல்லை என்றே நினைக்கின்றேன். ஆனால் இருந்தால்  தாங்கள் குற்றங்களை சுட்டிக் காட்டத் த்டையில்லை, நீங்கள் தான் செய்வதில்லை,

இழைகளை நானே நிருத்தவில்லை, தாங்கள் எனது குற்றங்களை சுட்டிக் காட்டத் தவறினால் என்ன செயவ்து? காத்திருந்து காத்திருந்து அதன் பின் தான் எழுத வேண்டிமா?

நீங்களே ஓர் தனி இழை தொடஙகி உலகனின் பொருட்பிழைகள் என்று உங்கள் வசதிக்கு எழுதலாமே? அதற்குத் த்டையில்லை,

எழுதுங்கள், ஆனால் இடையே வீணான கூறி என் எழுத்துப் பணியை தடை செய்யாதீர்கள்

உலகன்




2013/10/2 ரா.கிருஷ்ணன் <krish...@gmail.com>
அன்பு லோகநாதன் ஐயா
 
நீங்கள் எழுதுவதிலேயே ஏகப்பட்ட பொருட்குற்றங்கள் தென்படுவது போல் தெரிகிறது. இதை நீங்களும் நானும்  விவாதித்த இழையிலேயே சுட்டிக் காட்டி இருந்தேன்.
 
ஆனால் 'எனக்கு நீங்கள் என்ன சொல்கிறீர் என்று புரியவில்லையே...' என்பது போலவே அனைத்திற்கும் பதில் தந்து, அதற்கு மேல் ' நீங்களே விளக்குங்கள்' என்று சொல்லி விவாதத்தை நிறுத்தி விடுகிறீர்.
 
ஆனால் மீண்டும் வேறொரு இழையில் அதே தொனியில் அதே குற்றச்சாட்டு, எள்ளல் தென்படுகிறது.
 
உங்கள் தரப்பை நீங்கள் இன்னும் முறையான 'ஆய்வு முறையில்' நிரூபிக்கவில்லை. அதைச் செய்தப் பின்னரே எது ஒன்றையும் நீங்கள் கண்டிக்க முடியும்.
 
எனக்கு நீங்கள் இப்படி செய்வது முறையல்ல என்று தோன்றுகிறது. இந்தக் கருத்தையும் தாங்கள் கவனத்தில் கொள்ள வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.
 


2013/10/2 K. Loganathan <k.ula...@gmail.com>

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

K. Loganathan

unread,
Oct 2, 2013, 7:37:56 AM10/2/13
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com
பேராசிரியர் அவர்களே

தங்கள் கூற்று

//மெய் என்பது சிவஞானபோதம் மட்டும் படித்தால் மட்டும் வருவது என்று நீங்கள் கூறுவதை என் கைக்கெட்டும் தூரத்தில் உலக மதங்கள் பற்றிய 800 பக்க நூலைக் கையில் வைத்துக்கொண்டு எனக்கு மானுடவியல் அரிச்சுவடி கற்றுகொடுத்த அய்யனபள்ளி அய்யப்பனை மனதில் இருத்தினால் ஏற்க முடியவில்லை ஐயா.//

இப்படியா நான் சொன்னேன்?  தொல்காப்பியம் திருமந்திரம் போன்ற நூல்களும் மெய்மை பகர்கின்றன என்று நான் சொல்லவில்லையா?

என்னால் ஒத்துப்போக முடியாத நூற்கள் கைவல்ய நவநீதம் போன்ற வேதாந்த நூற்களும் உல்காயத நூற்களும் இவை போன்றவையும்

ஆயினும் இதுவரை நான் கண்ட நூற்களில் அதுவும் உல்களாவிய நிலையில் சிவஞான போதத்திற்கு ஓர் தனிச் சிறப்புண்டு என்று கூறியது உண்மை,

கூறியும் வருகின்றேன்  உண்மையைக் கூறுவத்ற்கு நான் ஏன் தயங்கவேண்டும்

அவர் வேதங்கள் என்றும் ஆகமங்கள் என்றும் மற்றும் ஏனைய சுருதிகள் என்றும் கொள்ளாது அனைவருக்கும் பொதுவாகிய இந்த உலகம் எனும் பொருளையே ஓர் மாபெரும் நூலாகக் கொண்டு அதன் புறவுருவின் இயலபுகளைக் கொண்டு புதையுருவாக சங்கார காரணனாக இறைவன் இருக்கின்றான் என்று நிறுத்டுவதுவது பொய்யா? தவறா? ஏற்ருகொள்ல முடியாவிட்டல் ஏன் என்று விளக்குவீர்களா?

பிற உலக சமய்னக்கள் இவ்வாறு செய்யவில்லை  என்றால், அது மெய்கண்டாரின் சாதனையைப் பாதிக்காது. மாறாக இன்னும் சிறப்புறச் செய்யும்

 இங்கு யாரது வாக்கையும்  கொள்ளாது அனைவருக்கும் பொதுவான இந்த உலகத்தை வைத்தே இறைவனது உண்மையை நிறுத்தி  பிறகு ஏனையய சூத்திரங்களின் வழி இறைவனை அடைய உதவும் சாதனங்கள் பலவற்றை  வகுத்துக் கூறியுள்ளதை காணாது விட்டீர்களா?

இப்படிப்பட்ட ஓர் சாதனை வடமொழியிலோ அல்லது வேறெந்த மொழியிலோ இருக்கின்றதா?

தெரிவித்டால்  பெரிதும் மகிழ்வேன்

மெய்கண்டாரின் முறையியல் தொல்காப்பியதிலிருந்து வளர்ந்த  ஒன்று,

தொல்காப்பியத்தில் பொருளாய்விற்கு Empirical Facts  ஆக இருப்பது வழக்கியல் எனபப்டும் பேச்சு மொழியும் செய்யுளியல் எனப்படும் பாடல்கள்  இவற்றோடு வரும்  paralinguisitc features எனப்படும் மெய்ப்பாடுகளும் ஆகும்

இவற்றை அலசிதான் அகத்திணை புறத்திணை  என்றும் பொருளஒ வகுத்து இவற்றில் அன்பின் ஐந்திணக்ட்கு ஆட்சி செய்யும் தெய்வங்கள் என்றும்  metaphysics  கூறினார்.

இதன் வளர்ச்சியே சிவஞானபோதம் போன்ற ஞானநூற்கள்.

இங்கு   மெய்கண்டார் கொண்ட  Empirical Facts  என்பது இந்த மூவினைப்படும் உலகந்தான் நாம் வாழும் இந்த உலகின் இயல்பை வைத்தே ஆழத்தில் இறைவன் சங்கார காரணனாக இருக்கின்றான் என்று கூறுகின்றார்.

பிறகு பக சாதன்ங்கள் வழி இறைவனை எப்படி அடைவது என்றும் விளக்குகின்றார்/

நூலே அழிவில் உண்மை எனும் பிரமாணவியல், பிறகு அநாதிப்பொருளாக நிறுத்தப்பட்டவற்றின் இலக்கணங்கள் என்றும் பிறகு உண்டெனன நிறுத்தப்பட்ட இறைவனை அடையும் சாதனங்கள்  என்றும் கடைசியாக அதனால் ஆன்மா அடையக்கூடிய பயன்கள் என்றுமாக நூல் செல்கின்றது

இவ்வாறான பகுப்பு நூலியல் அறிவியல் ( Hermeneutic Science)  என்பதின் வளக்கமாக இருக்கின்றது.

  இங்கு  Hermeneutics  என்றால் இப்பெயரில் விளங்கும் எல்லா ஐரொப்பிய துறைகளும் ஒரேத் தன்மையன என்றும் அது தொல்காப்பிய மரபில் விளங்குவதோடு ஒத்துவருவது என்றும் பொருளாகாது. தமிழர்களுடிய  Hermeneutics  என்பதை  Pedagogic Hermeneutics   என்று பெயரிட்டுள்ளேன்

இனி ஆகவுளவியல் பற்றி ஒரு வார்த்தை. பிறகு நிறைய வரும் உண்மையில் இந்தத் துறையின் பெயர் 'ஆகமீய உளவியல்" அதாவது ஒருவனை ஆக்க, சமைக்க தன் முயற்சியில் தானே பக்குவபப்ட உதவும் ஓர் உளவியல் துறை. ஆகமீயம் என்றோ ஆகமம் என்றோ அழைக்கபப்டுகின்றது. ஆனால் இதன் பொருள் இதுதான்

இங்கு  Empirical Facts  ஆக அமைவது மாந்தர்கள் தரப்படும் ஆணைகட்கு  ஏறப எழுதும் தருக்களே, சங்க காலத்து  கூற்றுகளும் பாட்ல்களும்  போல் இங்கு எழுதபடு தருக்கள்,

இந்த தருக்கள் உள்ளத்தைச் சொல்கின்றன. அதனை பெயர்த்து அறிந்து போதகன் ஒருவன்  உளச்சிக்கல் உள்ள ஒருவனுக்கு உபதேசித்து  அவனை நல்வழிபடுக்கின்றான்

இக்க்லை வழி நான் பலருக்கு உதவி உள்ளேன். இன்றும்  உதவியும் வருகின்றேன்

இதுவும் இவ்வகையில் ஓர் நூலியல் அறிவியல் துறைதான். மிகவும் பயனுள்ள ஒன்று/

உலகன்






2013/10/2 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>
அன்புடை உலகன் ஐயா 

உங்களைப்போல் நானும் இந்தத் துறையைப் பற்றிய பாலபாடம் அறிந்தவன்.  நீங்கள் உங்கள் பூட்டிய இரும்புக் கூண்டைவிட்டு வெளியே வந்து பல்புலப் பன்முக பொதுமைக் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ல வேண்டும்.  மெய் என்பது சிவஞானபோதம் மட்டும் படித்தால் மட்டும் வருவது என்று நீங்கள் கூறுவதை என் கைக்கெட்டும் தூரத்தில் உலக மதங்கள் பற்றிய 800 பக்க நூலைக் கையில் வைத்துக்கொண்டு எனக்கு மானுடவியல் அரிச்சுவடி கற்றுகொடுத்த அய்யனபள்ளி அய்யப்பனை மனதில் இருத்தினால் ஏற்க முடியவில்லை ஐயா.

இந்த தரவுத்தளம் சாராத விஞ்ஞானத்தால் விளக்கவியலாத மெய்ஞான உண்மைகளை அறிய ஆகம உளவியல் என்ற உங்கள் விளக்கம் சிவஞான போதத்தை விளக்கும் என்பதைத் தவிர ஆன்மீகத்தை விளக்கும் என்று ஏற்றுக்கொள்ள இயலவில்லையே

ஆகமம் என்பதே உங்கள் சிந்தனையின் பரப்பைச் சுருக்கும் என்றால் அது சிவஞானபோதம் மட்டும் என்றால் இன்னும் சுருங்கிவிடுமே

சாதுக்களும் சந்நியாசிகளும் சித்தர்களும் அறிவது மட்டும் மெய்ஞானம் அல்ல.  சுடுகாட்டுப் புலையனும் ஆடு மேய்க்கும் சிறுவ்னும் அறியச் செய்வதே இந்த நெறிமுறையின் அடிப்படை

நூலோர்களுக்கும் மேலோர்களுக்கும் மட்டுமே மெய்ஞானம் என்பது உலகத்திம் முக்காலே மூணுவீசம் மனிதர்களைப் புறந்தள்ளுவதாகும்



//Hermeneutics cannot happen without a level of inter-disciplinary collaboration that does not yet exist on university campuses. The theologian needs the philosopher as much as the philosopher needs the theologian; both need the literary critic. Hermeneutics is a resolute break with the specialization that has isolated academic disciplines, an effort to redress fragmentation without infringing upon any science's unique area of inquiry.

The world of business knows that the economy is global; the world of academia has been slower to recognize the global unification of research through communication technology. A university can no longer remain content within its national boundaries; it must become a center for inter-national collaboration. We only understand the other by entering their horizon. We only enter the horizon of the other by acknowledging its otherness. We must meet. We must interpretThe contemporary university must become a center for inter-cultural and intra-cultural dialogue if it is to remain relevant in the twenty first century.//

வவ


2013/10/2 ரா.கிருஷ்ணன் <krish...@gmail.com>
அன்பு லோகநாதன் ஐயா
 
நீங்கள் எழுதுவதிலேயே ஏகப்பட்ட பொருட்குற்றங்கள் தென்படுவது போல் தெரிகிறது. இதை நீங்களும் நானும்  விவாதித்த இழையிலேயே சுட்டிக் காட்டி இருந்தேன்.
 
ஆனால் 'எனக்கு நீங்கள் என்ன சொல்கிறீர் என்று புரியவில்லையே...' என்பது போலவே அனைத்திற்கும் பதில் தந்து, அதற்கு மேல் ' நீங்களே விளக்குங்கள்' என்று சொல்லி விவாதத்தை நிறுத்தி விடுகிறீர்.
 
ஆனால் மீண்டும் வேறொரு இழையில் அதே தொனியில் அதே குற்றச்சாட்டு, எள்ளல் தென்படுகிறது.
 
உங்கள் தரப்பை நீங்கள் இன்னும் முறையான 'ஆய்வு முறையில்' நிரூபிக்கவில்லை. அதைச் செய்தப் பின்னரே எது ஒன்றையும் நீங்கள் கண்டிக்க முடியும்.
 
எனக்கு நீங்கள் இப்படி செய்வது முறையல்ல என்று தோன்றுகிறது. இந்தக் கருத்தையும் தாங்கள் கவனத்தில் கொள்ள வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.
 


2013/10/2 K. Loganathan <k.ula...@gmail.com>
அன்பரே

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

K. Loganathan

unread,
Oct 2, 2013, 9:16:54 AM10/2/13
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com
பேராசிரியர் அவர்களே

ஏறக்குறைய 25 ஆண்டுகள்  ஆராய்ச்சிக்குப் பிறகே நான் சிவஞானபோதத்திதின் சிறப்புக்களை அறிய வந்தேன்,  அதற்கு ஆங்கிலத்திலும் தமிழிலும் நான் கண்ட முறையில் உரையும் எழுதினேன். கீழே வருவது ஆங்கில மொழிபெயர்ப்புக்கு நான் எழுதிய அறிமுக உரையிலிருந்து ஒரு பகுதி. எவ்வாறு மெய்கண்டார் மெய்யறிவு ஆய்வை அணுகுகின்றார் என்று விளக்குவது,

முழு கட்டுரை கிழ் வரும் சுட்டியில்:

https://sites.google.com/site/ulagansbooks/metaphysics-as-herm-science

2.2 The Onto-enigmas and the Hermeneutic Sciences

Positivism in India, which shares with that in the West taking seeing as consisting of only the ontic seeing, is challenged by Meykandar: he affirms that not all seeing is ontical, there are ways of seeing other than this and that a true understanding of Existence is impossible unless we learn to see in ways other than the ontical. The first sutra begins with this protest and develops further and further ways of seeing deeper and deeper. For along with the above ontic-enigmas, there are also onto-enigmas that also arise from the existential engagement with life and with a structure of its own. Such enigmas arise usually when a person encounters a resistance to his understanding that throws him to a Temporal Mode of Being, a mode of Being in which he awaits for something that is a not-yet, till he resolves and overcomes that resistance. Such a Temporal way of Being, we shall call Situational-Temporality, to distinguish it from Fundamental Temporality that arises only within an understanding that comprehends the World-as-a-Whole. Such Situational Temporal ways of Being continuously emerge in our personal and social existence. When a friend all of a sudden becomes a foe, the happy mood is lost and replaced with that of melancholy, the loving wife becomes a devastating enemy, coherent and peaceful coexistence gives way to discontent and disarray and situations similar to these the onto-enigmas emerge gripping the researcher, throwing him to a way of seeing that is not ontical but ontological.

The peculiarity of the onto-enigmas is that the person gripped with it realizes the existence of a certain IGNORANCE , a certain DARKNESS in the understanding because of which onto-enigmas exist as an enigma for him. The onto-enigma highlights or discloses for the researcher the existence of a BLIND SPOT in HIS OWN UNDERSTANDING, which also impels him to remove it, to eradicate it by demolishing that ignorance. In this manner when this exposure of ignorance orientates him ontologically i.e. towards a Way of Being in which there is an awaiting for a way of Being that is a NOT YET but which is a strong possibility, a way of Being that he CAN BE but NOT YET, we have the genesis of an onto-enigma and which would result in hermeneutic scientific efforts to resolve if its character remains undistorted. The recognition of the presence of a DARK SPOT in one’s own understanding is constitutive of onto-enigmas and as long as this essence is kept there without transforming it to the ontical, it calls for improving one’s own understanding so that with regard to the phenomena in question, one stands under it, one gains a vision, an illumination that removes the initial blind spot, the patch of darkness in understanding. The avoidance of transforming it to the ontical and remaining steadfast within the ontological and seeking to resolve the enigma by a restructuring of one’s own understanding and hence by self transformation brings about hermeneutic sciences as opposed to the positivistic.

The notion that hermeneutic sciences are concerned with overcoming resistance to under-standing a phenomena by self-transformation towards standing-under it, that Deetz and others have articulated and which we are articulating here within however, the notion of onto-enigma, needs to be re-examined more thoroughly and carefully to wrest out some hidden notions in it without which the spirit of Metaphysica Universalis of Meykandar cannot be grasped at all.
The self-transportation from a state of NOT under-standing towards a standing-under is an ontological movement that results from activities that do not consist of instrumental interventions but rather interpretive in nature or as we shall call ontopretive, consistent with Pedagogic Hermeneutics that we are proposing. But these interpretive (or ontopretive) movements as belonging to ontology - as belonging to the question of what are really there? - are in fact attempts to SIGHT a phenomenon, a reality that remains hidden, buried in the underground of consciousness, lurking in the Depths, remains somehow covered up, disguised camouflaged and so forth. The investigatory or ontopretive activities are in fact archeoductive, an ontological seeking to see what is there in the Depths, beneath the surface and because of which the onto-enigma exists as such. Thus the ontological seeking begins with casting the problem as multi-layered or polylevelic with at least two levels of structure for every phenomena: Surface Structure (S.S) and Deep Structure (D.S) which interact and continue to be present simultaneously. Every phenomena is seen inherently hierarchical in structure, with at least TWO levels of structure. The onto-enigmas arise and are constituted as hermeneutical when an element in the S.S of a phenomenon resists understanding in the sense that one cannot locate and be with an element in the D.S. of the same phenomenon that founds it. When a person has not YET sighted that element of that D.S that founds the problematic in the S.S., he is thrown to a state of Situational-Intentionality, that of wanting to sight which also institutes Situational-Temporality, a way of Being as NOT YET but with a future possibility of a distinct kind as immensely available.


With this grasp of the meaning of hermeneutic sciences, we can also see its link with the notion of TEXT and why the hermeneuts are so much preoccupied with this notion and enshrine it as central in the Hermeneutic Sciences.
The notions of S.S and D.S that the ontological inquiries presuppose can be made sense only in relation to the notion of TEXT for it is only TEXTS and TEXT ANALOGUES that can have such DOUBLE structures or even possibly more. There is a level of structure within which the onto-enigma is allowed to emerge and another level as underlying that which has elements within its sighting which would eliminate the enigma, the blind spot in understanding. The onto-enigma is accessed first at the phenomenological or S.S. level where sighting is no problem, a level that locates the original emergence of the problem. It is within a TEXTUAL presentation of a phenomena, and within the S.S. elements of the phenomena considered as a TEXT, where the enigma is allowed to emerge as it is from within itself, unaffected by the interpretive or manipulative tendencies of the researcher. For example accurate transcriptions of conversations, letters written to friends, doodlings and spontaneously drawn sketches as in some psychoanalytic studies, the erection of monumental structures, inspired poetry, writings in the form of essays, autobiographies, the private speech of young children and so forth are TEXTS which when obtained within a phenomenological attitude, an attitude of openness, of letting-something-be as it chooses to disclose itself, can serve the emergence of onto-enigmas. (more details on this in the next section)

The TEXTS with respect to their S.S - that which is visible for everyone without occasioning serious disagreements and even if they arise, resolvable purely with reference to the factical structure of the text - is the objective presentation of the PROBLEM or ENIGMA in the hermeneutic sciences. The enigma that invites hermeneutical efforts, is allowed to present itself as it is, from within itself so that all researchers are able to SEE it and on SEEING so come to be thrown into an ontological Mode of Being, constituted by Temporality of time consciousness. A researcher thus gripped by an onto-enigma assumes a way of Being in which he awaits a FUTURE Way of Being which at the moment remains only a possibility but which is also a necessity to FREE him from that enigma. The researcher thus freed, stands-under the enigma, has now an understanding that FREES him from being caught by such enigmas again. He is also made FREE to be caught by other enigmas either related or unrelated to the solved.

Thus the origins of hermeneutic problems and the attainment of solutions, the resolution of onto-enigmas are not simply objective exercises, a mental acrobatics of complicated statistics and so forth but rather something that transforms the possibilities of Being of the researcher himself so that he is no more the same person he was before, earlier on. The researcher who has solved an onto-enigma now understands a phenomena and through that has liberated himself from being thrown into some situational temporalities by some surface structures of textual presentations of phenomena. He has conquered them waylaid them, broken their mystery and thereby freed himself from being temporally affected by them.

The concept of MOKSA articulated in this book is directly related to the above notion of freeing oneself from temporalities by understanding a phenomena that can be sources of onto-enigmas. The more a researcher battles with such onto-enigmas and emerges victorious, the more AUTONOMOUS he becomes. Progressively he becomes less and less onto-enigmatic and thereby less and less prone to being thrown into the intentional, Temporal Ways of Being. He masters existence and lives unaffected by the diverse phenomena surrounding his existence, sometimes even constituting it. By standing UNDER them, he LIBERATES himself from them. Such a way of living is said to be authentic existence by Meykandar. As a person persists in such authentic existence, the onto-enigmas become progressively deeper touching upon the universalistic at the deepest level, at which point the person becomes a mey jnaani, the genuinely philosophic, a description of which is available in the fourth part of this book.
But this is not the only relevance of the above analysis for introducing the book. We shall now point others and how without the presupposition of the analysis of ontic-onto enigmas we have given, the book will be quite unintelligible.

Mohanarangan V Srirangam

unread,
Oct 2, 2013, 9:46:35 AM10/2/13
to min tamil, தமிழ் வாசல், vallamai, தமிழ் சிறகுகள்
சர்வ: என்று தன் உடல்களாகிய ஜீவர்களின் கஷ்டங்களைத் தானே நிவிருத்தி செய்கிறான். அதாவது அனைத்துமாய், அனைத்தின் உள்ளுயிருமாய் நின்று முழுமையின் அமைதியில் நின்றோங்கும் பேருயிர், தனித்தனி என்ற பகுதிகளினுள்ளிலும், அவை அவைதொறும் நின்று அவற்றின் அனுபவங்களையும் பொருள் உள்ளது ஆக்குகிறான் என்பதை அருள் என்று கூறுவதா? அல்லது மருள் என்பதா? எப்படிப் புரிந்துகொள்வது? இந்தப் புதிரால் தலைக்குத்து அடையாத வேதாந்திகள் இல்லை. எந்த சித்தாந்தத்திலும் இது புரியாத புதிராகத்தான் இருக்கிறது. இதை அந்த அந்த சித்தாந்தத்தில் உண்மையாகவே மெய்யறிவுடன் இருப்பவர்கள் நன்கு உணர்ந்துதான் இருக்கிறார்கள். 

உதாரணத்திற்கு, சைவ சித்தாந்தத்தின் பதினான்கு சாத்திரங்களுக்குப் பெயர் மெய்கண்ட சாத்திரம் பதினான்கு. அதில் ஒன்று அருணந்தி சிவாசாரியார் எழுதிய சிவஞான சித்தியார் பரபக்கம், சுபக்கம். செய்யுள் வடிவினாலானது. ஸ்ரீமாதவ சிவஞான முனிவருடைய உரை இருக்கிறது. அதில் சிவஞான சித்தியார் சுபக்கத்தில், பிரமாண இயலில் ஒரு கருத்தைக் கூறுகிறார் அருணந்தி சிவாசாரியார். என்ன சொல்ல வ்ருகிறார் என்றால் இந்த உலகம், காரணம் என்ற முழுமையில் என்ன என்ன இருக்கிறது! அழிப்பு இருக்கிறது! என்னவாக இருக்கிறது? இளைப்பாற்றலாக இருக்கிறது. ஆக்கமும் இருக்கிறது என்னவாக? அவரவர் கர்மங்கள் கழியும் முகத்தால் மலபாகம் வரச்செய்தல்; காப்பும் இருக்கிறது, அதனை நுகர்வித்தல், மறைப்பு என்று கன்ம ஒப்பு வருவித்து மலங்களை முதிர்வித்தல், அருள் என்று பந்தத்தினின்றும் வீடு செய்தல் - ஆக அழிப்பு, ஆக்கம், காப்பு, மறைப்பு, அருள் ஆகிய ஐந்தொழிலும் அந்த முழுமையின் அருளின் வடிவமாகவேதான் காண வேண்டும். அது அன்றி இது மட்டும் அருள், மற்றது கொடுமை என்பதுபோல் நினைக்கக் கூடாது என்கிறார் அருணந்தியார். பாடல்: 

அழிப்பு இளைப்பு ஆற்றல் ஆக்கம் 
அவரவர் கன்மம் எல்லாம் 
கழித்திடல் நுகரச் செய்தல் 
காப்பது கன்ம ஒப்பில் 
தெழித்திடல் மலங்கள் எல்லாம் 
மறைப்பருள் செய்தி தானும் 
பழிப்பு ஒழி பந்தம் வீடு 
பார்த்திடின் அருளே எல்லாம். 

நமது அனுபவத்தில் பார்த்தால் எல்லாம் கொடுமை, கடுமை, அழிப்பு என்று படுகிறது. ஆனால் முழுமையின் கணக்கில் எல்லாம் அருள். 

எப்பொழுதும் அருளாகி நிற்கும் ஒன்று எப்பொழுதும் மங்களமானதாக அன்றோ இருக்க வேண்டும்! அதன் மங்களத் தன்மை ஒரு கால் இருந்து மறுகால் இல்லாமல் போக முடியாதே! 

எனவே பீஷ்மருக்கு அடுத்து தோன்றும் நாமமே அவன் மங்களமானவன் என்றும், மங்களமே உருவானவன், மங்களம் என்பதையே அனைத்துக்கும் தருபவன். அவன் பெயரே மங்களம் என்று சொல்கிறார் ‘சிவ:’. சிவம் என்றால் மங்களம் என்று பொருள். மங்களமே உருவாக இருப்பவன் ஆகையாலே ஸ்ரீமந் நாராயணனுக்கு ‘சிவ:’ என்றே திருநாமம். 

இங்கும் ஸ்ரீஆதிசங்கரருக்குப் பொறுக்க முடியவில்லை. எழுதுகிறார்: 

“முக்குணங்களுக்கு உட்படாமல் தூயவனாக இருப்பதால் சிவ: என்று பெயர். கைவல்ய உபநிஷதம் ‘அவனேதான் பிரம்மா, அவனேதான் சிவன்’ என்று பிரம்மனும் சிவனுமாய் அவன் தான் ஆகி நிற்பதால், அபேதம் அறிவுறுத்தப்படுவதால், சிவன் முதலிய பெயர்களால் ஹரியேதான் துதிக்கப் பெறுகிறான்.” 

என்று வெட்ட வெளிச்சமாக்கி பாஷ்யம் இடுகிறார். பகவத் பாதரின் பாஷ்ய தீபம் இருக்கும் விதம் இவ்வாறு!. 

மங்களமானவன் மட்டுமன்று. அனைத்து மங்களங்களையும் தன்னை நினைத்தார்க்கு நிலையாக, வாரி வழங்கும் இயல்பினன். கனித்திளம் கற்றெருமை கன்றுக்கிரங்கி நினைத்து முலைவழியே நின்றுபால் சோர என்பதுபோல் நிலைத்த, நீடித்த, முடிவடையாத மங்களத்தை, சிறப்பைத் தந்து அதுவும் போதாதோ என்று குறைபட்டுக்கொள்வான் ஒருவன் ஆகையாலே அவனுக்கு ஸ்தாணு என்று பெயர். 

சிவ: ஸதாணு: 

***





2013/9/30 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
ஸர்வ: சர்வ: சிவ: ஸ்தாணு: பூதாதி: நிதிரவ்யய:| 

Nagarajan Vadivel

unread,
Oct 2, 2013, 10:25:16 AM10/2/13
to vallamai
​அன்புடை உலகன் ஐயா

விஞ்ஞானம் என்பது ஒட்டு மொத்தத் தகவல்களின் தொகுப்பு என்றாலும் அது மெய்மையை முழுதுமாக உணர்த்த முடியாத நிலையில்தான் உள்ளது

ஐம்புலன்கள் வழியாக ஐம்பொறிகளைப் பயன்படுத்தி புற உலகை ஆய்ந்து வழக்கில் உள்ள தகவலில் உள்ள உண்மையைவிட மேம்பட்ட உண்மையை நிறுவுவது என்ற தொடர் ஓட்டத்தில் இயங்குவது விஞ்ஞானம்

முழு உண்மையையும் ​விஞ்ஞானம் என்றுமே விளங்கிக் கொள்ள முடியாததால் உண்மை என்ன என்றூ விளக்க முடியாது

மெய்ஞானத்தில் ஆகம உளவியல் மூலம்மக்ச் சொல்லும் அதே தர்க்கத்தை விஞ்ஞானம் எப்படி விளக்கும் என்பதைக் காணலாம்

அவனன்றி ஓரணுவும் அசையாது என்பது ஆகம உளவியல் தர்க்கம் என்றூ வைத்துக் கொண்டால் இந்த திரைப்படப்பாடல் காலம் காலமாக மக்கள் மனதில் பதிந்துள்ள நம்பிக்கை மூலம் வெளிப்படுத்தும்


விஞ்ஞானத்தில் அதேஎ கருத்துரு பருப்பொருள் அணுக்களால் உருவானது அணுத்திரளின் வேகத்தை வைத்தே இரு பொருளின் வடிவை நிறூவ முடியும்

அணுத்திரளுக்கு இடையே உள்ள இடைவெளி குறைவாக இருந்தால் அது திடப்பொருள் 

கொஞ்சம் இடைவெளி  அதிகமாயிருந்தால்யிருந்தால் திரவம் 

இடைவெளி மிகவு அதிகம் பரவியிருந்தால் அது வாயு என்பதும் 

அணுக்களின் இயக்கத்தை வெப்பத்தைத் தணிப்பதன் மூலம் குறைத்து வாயுப் பொருளை திரவமாகவும் திடப்பொருளாகவும் மாற்ற முடியும் என்ற விஞ்ஞானம் வெப்பத்தின் அளவு சூன்யமாக ஆனால் அணுக்களின் இயக்கம் நின்று விடும் என்பதை நிறுவ ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதையும் மைனஸ் 283 டிகிரி வெப்பத்தில் அணு ஆடாமல் அசையாமல் ந்ன்றூவிடும் என்ற நிலையை விஞ்ஞான இன்னும் அடைய முடியவில்லை என்பதும் பருப்பொருள் ஆய்வு முடிவுகள் சுட்டுகின்றன

ஆனால் ஆன்மீகம் இந்தக் கருத்தை விஞ்ஞானத்தின் உதவியில்லாமல் மெய்ஞானக் கருத்துருவாக விளக்குவதை வெளிக் கொணர்வதே ஆகமவியலிம் நோக்கம் என்றூ கருதலாம்

விஞ்ஞானம் மெய் என்பதை முழுமையாக உணர்த்தும் பண்பு கொண்டதல்ல.  விஞ்ஞான ஆய்வு நெறிமுறைகள் சப்த பிரமத்தை அறிய உதவாது.  ஆகம உளவியல் மட்டுமே நாம ரூப அடிப்படையில் மெய்யியலை விளக்கி பரப்பிரமத்தை அறீய உதவும்

வவ

K. Loganathan

unread,
Oct 2, 2013, 8:55:10 PM10/2/13
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com
நின்னா கண்ணன்

இது ஆதிசங்கரரின் அத்துவிதம் அல்ல, மாறாக சைவத்தின் சமயாதீதம். இது சித்தர்களால் பண்டே வளர்க்கப்பட்டு தாயுமாமானவர் போன்ற சித்தாந்திகளால் பெரிதும் போற்றப்பட்டது. எனக்கு பெரிதும் உடன்பாடான ஒர் கருத்துமாகும்

மாயாவாத அத்டுவித வேதாந்தம் தமைழ் நாட்டில் தோன்றி இருந்தாலௌம் உலகம் பொய் எனக் கூறும் அது சமயாதீதம் பகரவில்லை, எல்லா மூர்த்டங்கலைஅயும் அது கற்பிதம் என்றே கூறுகின்றது.

இப்படித்தான் தமிழில் உள்ள வேதாந்த நூற்களாகிய  கைவல்ய நவநீதம், வேதாந்த இலக்கணம் வேதாந்த சூளாமணி போன்ற நூற்கள் வழியாக நான் அறிந்துகொண்டது



உலகன்




2013/10/2 N. Kannan <navan...@gmail.com>
அருணந்தி சிவாச்சாரியாரையும், பீஷ்மரையும் இரு தோளில் அனைத்துச் செல்லும் பாங்கு அருமை. அத்வைத நோக்கு இருந்தால் மட்டுமே இவ்வொற்றுமை அரவணைப்பு சாத்யமாகும். அது ஆதி சங்கரரரிடம் பூரணமாக இருந்தது என்பதைத் தெளிவாகக் காட்டுகிறீர்கள். சிவன் கோயிலிலும், பெருமாள் கோயிலில்ம் அருள் பாலிக்கும் தெய்வம் ஒன்றுதான் என்றும் விளக்கினீர்கள். பேதமை அகலும் போது அருள் மட்டுமே தெரிகிறது. சிவ: சிவ: சிவ:

நா.கண்ணன்


2013/10/2 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
நமது அனுபவத்தில் பார்த்தால் எல்லாம் கொடுமை, கடுமை, அழிப்பு என்று படுகிறது. ஆனால் முழுமையின் கணக்கில் எல்லாம் அருள். 

எப்பொழுதும் அருளாகி நிற்கும் ஒன்று எப்பொழுதும் மங்களமானதாக அன்றோ இருக்க வேண்டும்! அதன் மங்களத் தன்மை ஒரு கால் இருந்து மறுகால் இல்லாமல் போக முடியாதே! 

>>

இங்கும் ஸ்ரீஆதிசங்கரருக்குப் பொறுக்க முடியவில்லை. எழுதுகிறார்: 

“முக்குணங்களுக்கு உட்படாமல் தூயவனாக இருப்பதால் சிவ: என்று பெயர். கைவல்ய உபநிஷதம் ‘அவனேதான் பிரம்மா, அவனேதான் சிவன்’ என்று பிரம்மனும் சிவனுமாய் அவன் தான் ஆகி நிற்பதால், அபேதம் அறிவுறுத்தப்படுவதால், சிவன் முதலிய பெயர்களால் ஹரியேதான் துதிக்கப் பெறுகிறான்.” 

என்று வெட்ட வெளிச்சமாக்கி பாஷ்யம் இடுகிறார். பகவத் பாதரின் பாஷ்ய தீபம் இருக்கும் விதம் இவ்வாறு!. 

மங்களமானவன் மட்டுமன்று. அனைத்து மங்களங்களையும் தன்னை நினைத்தார்க்கு நிலையாக, வாரி வழங்கும் இயல்பினன். கனித்திளம் கற்றெருமை கன்றுக்கிரங்கி நினைத்து முலைவழியே நின்றுபால் சோர என்பதுபோல் நிலைத்த, நீடித்த, முடிவடையாத மங்களத்தை, சிறப்பைத் தந்து அதுவும் போதாதோ என்று குறைபட்டுக்கொள்வான் ஒருவன் ஆகையாலே அவனுக்கு ஸ்தாணு என்று பெயர். 

சிவ: ஸதாணு: 

***

--

DEV RAJ

unread,
Oct 3, 2013, 2:32:08 AM10/3/13
to mint...@googlegroups.com, தமிழ் வாசல், vallamai, தமிழ் சிறகுகள்
On Wednesday, 2 October 2013 19:16:35 UTC+5:30, Mohanarangan V Srirangam wrote:
“முக்குணங்களுக்கு உட்படாமல் தூயவனாக இருப்பதால் சிவ: என்று பெயர். கைவல்ய உபநிஷதம் ‘அவனேதான் பிரம்மா, அவனேதான் சிவன்’ என்று பிரம்மனும் சிவனுமாய் அவன் தான் ஆகி நிற்பதால், அபேதம் அறிவுறுத்தப்படுவதால், சிவன் முதலிய பெயர்களால் ஹரியேதான் துதிக்கப் பெறுகிறான்.” 
என்று வெட்ட வெளிச்சமாக்கி பாஷ்யம் இடுகிறார். பகவத் பாதரின் பாஷ்ய தீபம் இருக்கும் விதம் இவ்வாறு!

 
निस्त्रैगुण्यतया शुद्धत्वात् शिव:
“स ब्रह्मा स शिव:" इत्यभेदोपशात् 
शिवादि नामभि: हरिरेव स्तूयते ॥

நிஸ்த்ரைகு₃ண்யதயா ஶுத்₃த₄த்வாத் ஶிவ: | 
“ஸ ப்₃ரஹ்மா ஸ ஶிவ:" இத்யபே₄தோ₃பஶாத்
ஶிவாதி₃ நாமபி₄: ஹரிரேவ ஸ்தூயதே ||

ஆம்,
மறைகள் துதிப்பதும் மாலவனையே
என உரையிட்டுள்ளார்


தேவ்

K. Loganathan

unread,
Oct 3, 2013, 3:52:26 AM10/3/13
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com
நின்னா கண்ணன்

தங்கள் கூற்று

//ஸ்ரீரமணர் கூட மூர்த்தம் கற்பிதம் என்று சொல்லவில்லை என்றே நம்புகிறேன்.//

இது உண்மையாக இருக்கலாம். இந்து சமயத்தின் மேலான மெய்ஞானிகள் மூர்த்தங்கள் கற்பிதம் என்று சொல்லவில்லை, சைவம் வைணவம் சாக்தம் என்ற பாகுபாடுகளும் அவர்களிடையே சமயப் பிணக்குகளும் இருக்கலாம். மேலும் சைவர்கள் சிவனை உயர்த்த வைண்வர்கள் திருமாலை  உயர்த்த சாக்தர்கள் அம்மையை உயர்த்த ஒருவகைய ச்மயச் சார்பு வெடித்திருக்கலாம். பூசல்களும் தோன்றியுள்ளன

இவற்றைக் கடப்பதே சமயாதீதம்- சித்டர்கலாலௌம் தாயுமானவர் போன்ற சிவஞானிகளாலௌம் போற்றப்பட்டது

ஆதிசங்கார் பரிணாம வாதம் கூறாது விவர்த்த வாதம் கூறியுள்ளதும், அநாதிப்பொருளாக பரப்பிரமம் ஒன்றையே கூறியுள்ளதும் அவர் படராயண்ணாவின் வேதாந்த சூத்திரங்க்ட்கு எழுதிய உரையுயில் மிகத் தெளிவாக  இருக்கின்றது

இதோ மீண்டும் உறுதி செய்யும் வகையில்  சுவாமி விஸ்வேராநந்தா மொழி பெயர்த்த ஆதி சங்கரர் எழுதிய வேதாந்த சூத்திர விருத்தியை மீண்டும் பார்த்தேன் அங்கு அத்தியாசம் (  suoerimposition)  எனப் படும் கருத்தை பலவாறு ஆய்வது தெரிகின்றது. ஆதி சங்கரரின் மாயாவாத அத்துவித வேதாந்ததில் அந்நதிப்பொருளகா பரப்பிரமனே இருக்கின்றான். ஆன்மா என்பது உண்மையில்  இந்த பரப்பிரமமே என்று நிறுத்துதற்கு இந்த அத்தியாசம் போன்றவறை கொண்டு வந்தே இதனை நிறுத்தியுள்ளார்.

மேலும் இந்த அறிமுகத்தில் படாராயண்ணாவின் வேதாந்த சூத்திரத்தில் இதுபோன்ற மாயாவாத கருத்துக்கள் இருப்பதாகத் தெரியவில்லை என்றும் கூறப்படுகின்றது,

இங்கு நான் மீண்டும் வேதாந்த மரபுகளின் ஓர் அடிப்படை பழுதை  சுட்டிக்காட்ட வேண்டும்

படாராயண்ணாவின் வேதாந்த சூத்திரங்கள் உபநிடங்கள் என்ன கூற வருகின்றன என்பதின் ஓர் தொகுப்பு ஆகும் உபநிடதங்களோ ஓர் உள்ளுணர்வில் எழுந்த ஞான வாசகங்கள்  சுமேரிய உப்பர்தூது( விண்ணிலிருந்து வெடிக்கும் சொற்கள்) என்பதுபோல உப்பர்நீ சாற்றுகள் ஆகும்,   Mystical Utterances  ஆகும்

இவை மெய்யறிவு அணுகுமுறையை  empirical facts ஆய்ந்து ஆங்கு புதைந்து கிடக்கும் ஆழ்ஞானங்களை வெளிப்படுதியவை அல்ல. தொல்காப்பிய பொருளதிகாரம் போன்றும் சிவஞான போதம் போன்றும் இப்பொழுது நான் வளர்த்டு  வரும் ஆகமவுளவியல் போன்றும் உலகைல் கிடப்பதை முதலைல் நிறுத்டி பின் அவற்ரை ஆய்ந்து மெய்ஞானம் பகர்வதல்ல,

இதனால் தெய்வவாக்கு போல் இவை எடுத்துக்கொள்ளப்பட்டு உணமையாகத்தான் இருக்க வேண்டும் என்று கொளப்பட்டு வேதாந்த மரபு வளர்ந்துள்ளது

இங்கு தொல்காப்பியத்திலும் சித்தாந்த மரபிலும் இருக்கும் ஞானம் தேடுத்தல் ஏது நடையிலும் எடுக்காட்டுகள் வழியாக மெய் நிறுத்தல் என்றெல்லாம் இல்லை,

உபநிடங்கள் அவற்றின் பிழிவான வேதாந்த சூத்திரங்கள்  ஏது எடுத்துக்காட்டுகள் வழி மெய்நிறுத்தலை வேண்டாதவை. உண்மையை தவிர்த்து வேறொன்றும் அங்கே இல்லாது போக, வேண்டப்படுவது ஏரணம் அல்ல மாறாக சாதன சதுட்டயம் போன்ற புரிந்து கொள் உத்திகள் தாம், வேதாந்த சூத்திரங்களை சரியாக புரிந்துகொண்டாலேயே மெய்ஞானம் தானே விளையும் என்ற நம்பிக்கையின் அடிப்ப்டையில் வேதாந்த மரபு சென்று  empirical facts  தேடும் கட்டாயத்தைக் கொன்று விட்டது.

வேதாந்த மரபில் ஆய்வு நெறி இல்லை, புரிந்துகொள் நெறி தான் உண்டு.

இதற்கு மாறாக தொல்காப்பிய நெறியும் சித்தாந்த நெறியும் இருப்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்

இதைத்தான் நான் வற்புறுத்தி வருகின்றேன்

உலகன்


2013/10/3 N. Kannan <navan...@gmail.com>
2013/10/3 K. Loganathan <k.ula...@gmail.com>
நின்னா கண்ணன்

இது ஆதிசங்கரரின் அத்துவிதம் அல்ல, மாறாக சைவத்தின் சமயாதீதம். இது சித்தர்களால் பண்டே வளர்க்கப்பட்டு தாயுமாமானவர் போன்ற சித்தாந்திகளால் பெரிதும் போற்றப்பட்டது. எனக்கு பெரிதும் உடன்பாடான ஒர் கருத்துமாகும்

மாயாவாத அத்டுவித வேதாந்தம் தமைழ் நாட்டில் தோன்றி இருந்தாலௌம் உலகம் பொய் எனக் கூறும் அது சமயாதீதம் பகரவில்லை, எல்லா மூர்த்டங்கலைஅயும் அது கற்பிதம் என்றே கூறுகின்றது.

இப்படித்தான் தமிழில் உள்ள வேதாந்த நூற்களாகிய  கைவல்ய நவநீதம், வேதாந்த இலக்கணம் வேதாந்த சூளாமணி போன்ற நூற்கள் வழியாக நான் அறிந்துகொண்டது



மிகவும் அடிப்படைப் புரிதல் போல் படுகிறது.

உலகம் பொய் என்று ஏன் சொல்கிறோம்? மிக எளிதாக கற்றையியல் கொண்டு விளக்க முடியும். அதே நேரத்தில் உண்மை என்று பகர்வது சார்புடையது என்றும் எளிதாக விளக்கமுடியும்.

மூர்த்தம் கற்பிதம் என்று சொல்லியிருக்க நியாயமே இல்லை. விசிஷ்டாத்வைதத்தின் உயர் நிலையில் மூர்த்தத்தை வெறும் கல்லென்று காண்பவன் வைஷ்ணவனே இல்லை என்று சொல்கிறார்கள். அர்ச்சாவதாரம் எனும் கருப்பொருள் ஆழ்வார்களின் corner stone.

எங்கோ பிழையாகப் புரிந்து கொண்டு சங்கரரைத் தாக்கு தாக்கென்று தாக்குகிறீர்கள். இந்தியாவின் அனைத்து சமயத்துறைகளிலும் சங்கரரின் அடிச்சுவட்டைக் காணமுடியும். என்னால் அவ்வழியில் வரும் இராமகிருஷ்ணரையும், விவேகாநந்தரையும் முட்டாள் எனக்காணும் துணிவு வரவில்லை. ஸ்ரீரமணர் கூட மூர்த்தம் கற்பிதம் என்று சொல்லவில்லை என்றே நம்புகிறேன்.

நா.கண்ணன்


 
--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
 
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

--

Mohanarangan V Srirangam

unread,
Oct 24, 2013, 10:57:43 AM10/24/13
to min tamil, தமிழ் வாசல், vallamai, தமிழ் சிறகுகள்
பூதாதி: நிதி: அவ்யய: 


உண்டாயவற்றிற்கெல்லாம் காரணம், ஆரம்பம், முதல் அந்த ஸ்ரீவிஷ்ணுதான். ‘பூதாநாம் ஆதிகாரணத்வாத் பூதாதி:’ என்பது ஸ்ரீ பகவத் பாதரின் உரை. 

பூதங்கள், உண்டான பொருள்கள், உயிர்கள் அனைத்தும் எதிலிருந்து தோன்றியிருந்தால் என்ன? உண்டான பிறகு அந்த ஆதிக்கும், அவைக்கும் என்ன சம்பந்தம்? வளர்ந்த நிலை என்பது ஆரம்ப நிலையை விட்டு வெகு தூரம் வந்து விட்டது அன்றோ! சாதார்ணமாக வளர்ந்த நிலையில் ஏற்படும் பெருமை எல்லாம் ஆரம்ப காரணத்தில் இருந்தது என்று முழுக்க சொல்லிவிட முடியாதே! அப்படிச் சொல்லிவிட முடியாது என்கிறார் ஸ்ரீபராசர பட்டர். ஏன்? 

உலகியல் ரீதியாக வேண்டுமானால் அப்படிச் சொல்லலாம். அதாவது உலகப் பொருட்களுக்கு ஒன்று ஆரம்பம், அதிலிருந்து வளர்ந்தவை என்ற கணக்கில். ஆனால் இந்த உலகம் அனைத்தையும் தோற்றுவித்த ஆதி காரணம், தன்னிலிருந்து தோன்றிய எதுவும், எந்த விதத்திலும் தன்னோடு ஒப்போ, உயர்வோ சொல்ல முடியாத அளவிற்குத்தான் ‘உயர்வற உயர்நலம் உடையதாகத்’ திகழ்கிறது. இந்த உலகத்தில் தோன்றும் சிறப்பேல்லாம் இனிவரும் காலத்தையும் மொத்தமாகச் சேர்த்துக் கூட்டினாலும் அந்தப் பரம்பொருளின் லவலேசமான சிறப்பிற்குப் பக்கத்தில் வைத்து எண்ணவும் போதாது என்றுதான் சொல்ல வேண்டும். அது மட்டுமன்று. இந்தப் பொருட்களுக்கு உள்ள கிஞ்சித் சிறப்பும் இவைகளுக்கு உண்டாக வேண்டுமென்றால் அந்தப் பரம்பொருள் உள்நின்று தாங்கினால்தான், ஊட்டினால்தான், உவப்புற அருளினால்தான் இவைக்குச் சித்திக்கவும் செய்கிறது. 

அது மட்டுமா? உண்டாய பொருள்கள் எல்லாம் எந்த இலட்சிய நிலைக்குப் போக வளர்ந்து கொண்டிருக்கின்றனவோ அந்த பரம லட்சிய சிறப்பு நிலையாகவும் இருப்பதும் அந்த ஆதி காரணமே. அதாவது இந்த ஆதி காரணத்திலிருந்து உண்டானவை அந்த அதே ஆதி காரணத்தையே தங்கள் பரம லட்சியமாகக் கொண்டு கடு வேகத்தில் வளர்ந்துகொண்டிருக்கின்றன. அதாவது இந்தப் பிரபஞ்சம் தோன்றிய புள்ளியினின்றும் வேகமாகப் பயணப்படுவது எதை நோக்கி? அந்தத் தோற்றப் புள்ளியை நோக்கியேதான். என்ன வினோதமான ஒரு மெக்கானிக்ஸ் இது! 
குவாண்டம் மெகானிக்ஸ், பிக் பேங்க் மெகானிக்ஸ் எல்லாம் ஒன்றும் உதவாது போல் இருக்கிறது இந்த இயக்கத்தைப் புரிதுகொள்ள. 

அது மட்டுமன்று. வெறுமனே ஆதி அன்று. பூதங்கள் எல்லாம் சென்று சேரத் துடிக்கும் லட்சியமான ஆதி. அனைத்துப் பொருட்களுக்கும் அனைத்து விருப்பங்களையும் அளிக்கும் ஆதி. எது இருந்தால் உலக இன்பங்கள் கூட இனிக்குமோ, எது இல்லையென்றால் வேறு எது இருந்தும் இலலமையே மிஞ்சுமோ அப்படிப்பட்ட ஆதி, உண்டான பொருட்களுக்கு இந்த பூதாதி: என்கிறார் ஸ்ரீபராசர பட்டர். 

***

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் 

*



2013/10/2 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
சர்வ: என்று தன் உடல்களாகிய ஜீவர்களின் கஷ்டங்களைத் தானே நிவிருத்தி செய்கிறான். அதாவது அனைத்துமாய், அனைத்தின் உள்ளுயிருமாய் நின்று முழுமையின் அமைதியில் நின்றோங்கும் பேருயிர், தனித்தனி என்ற பகுதிகளினுள்ளிலும், அவை அவைதொறும் நின்று அவற்றின் அனுபவங்களையும் பொருள் உள்ளது ஆக்குகிறான் என்பதை அருள் என்று கூறுவதா? அல்லது மருள் என்பதா? எப்படிப் புரிந்துகொள்வது? இந்தப் புதிரால் தலைக்குத்து அடையாத வேதாந்திகள் இல்லை. எந்த சித்தாந்தத்திலும் இது புரியாத புதிராகத்தான் இருக்கிறது. இதை அந்த அந்த சித்தாந்தத்தில் உண்மையாகவே மெய்யறிவுடன் இருப்பவர்கள் நன்கு உணர்ந்துதான் இருக்கிறார்கள். 

Mohanarangan V Srirangam

unread,
Dec 26, 2013, 7:53:21 AM12/26/13
to min tamil, தமிழ் வாசல், vallamai, தமிழ் சிறகுகள்
ஸம்பவ: பாவனோ பர்த்தா 

உலகில் பிறப்பு எப்படி உண்டாகிறது? பிறப்பு என்பது எதற்கு? அதாவது பூத உடல் கருக்கொண்டு, உருக்கொண்டு, வளர்ந்து, பருவ நிலைகளை அடையும் ஜீவனை அந்த உடலை வைத்துத்தான் பார்க்கிறோம். உடலுக்கு சம்பந்தம் இல்லாத ஆன்மா என்பதை சுய அனுபவத்தில் ரிவர்ஸில் செய்யும் ஆய்வு மூலமாகத்தான், பிரித்து அல்சிக் காரணத்தை ஆய்ந்துகொண்டு போகும் அணுகுமுறையால்தான் ஆன்மா என்ற ஒன்றைப் புரிந்து கொள்கிறோம். 

ஆன்மா என்பது கொஞ்சம் புரிந்தாலே பிறப்பு, அதன் கண்ணுக்குத் தெரியாத பல சங்கல்பங்கள், அடுத்து அடுத்து என்று நம்மை இழுத்துக்கொண்டு போகும் நிரல்கள் எல்லாம் பெரும் பிணைப்புகள் போன்று, சங்கிலிகள் போன்று நம் சுதந்திரம் என்பதையே சும்மா ஒப்புக்கான ஆட்டம் போல் ஆக்கிவிடுகின்றன. ஒரு தரம் இந்தப் பிறப்பிலிருந்து விடுபட்டால் பிறகு ஒரு நாளும் மீண்டும் இந்தச் சுழற்சிக்குள் வர சம்மதிப்போமா என்பது சந்தேகம்தான். இன்று வரை நமக்கு அந்த உணர்த்தி, awareness ஏற்படவில்லையோ பிழைத்தோம். ஏதோ ஓடின தடத்தில் ஓடு என்று போய்க்கொண்டிருக்கிறது. 

ஆனால் யோசித்துப் பாருங்கள். இப்படிப் பல ஜீவன்கள், தம் தம் நிலையில் யோசித்தும், மயங்கியும், மீண்டும் உணர்ந்தும், மீண்டும் முயங்கியும் போய்க்கொண்டே இருக்கும் போது இவை அத்தனைக்கும் உள்ளே தொடர்புடைய ஒரு பேருயிர் தான் எதிலும் படாமல், இவை படும் இத்தனை ஆட்டத்தையும் தன் உணர்வில் கொண்டு, சில ஆத்மாக்கள் திடீரென விழித்து, ஐயோ என்னால் முடியாது என்று திமிறி விடுபட்டுப் போகும் பொழுது அதைக்கண்டு ரசித்தபடி, மற்றவை ஐயோ நாம் எங்காவது விடுபட்டு விடுவோமோ, நமக்கு கிடைத்தற்கரிய இந்த பொம்மை விளையாட்டுகள் கிடக்கும் தருணத்தில் எங்காவது ஆட்டம் முடிந்து விடுமோ என்று அஞ்சி, எதற்கும் அந்த பரமாத்மா கண்ணில் படாமல் இருப்பது நல்லது என்று ஒளிய நினைக்கின்றனவே, அவற்றின் ஆகாத சாகசத்தைக் கண்டு நகைத்தபடி, நிலவும் அந்தப் பேருயிர், 

அந்தப் பேருயிரும் தான் பிறக்க வேண்டும் என்று நினைக்கிறது என்கிறது சாத்திரம். 

என்னடா இது? ஜீவன்கள் பிறக்கின்றன என்றால் அவற்றின் கர்ம மூட்டையைக் கழிப்பதற்கு என்று சொன்ன சாத்திரம், என்றுமே கர்மமானது தொடவே முடியாத, பந்தம் என்பதே பிணைக்காத அந்தப் பரமாத்மாவும் பிறக்கிறது என்று சொன்னால், அது என்ன பிறப்பு? நிச்சயம் கர்மாவின் அடிப்படையில் வரும் பிறப்பு அன்று அது. பின் என்ன? 

கருணையால் பிறக்கும் பிறப்பு. 

நாம் பிறந்தால் அது பவ: 

அது பிறந்தால் அது ஸம்பவ: 

ஸ்வேச்சயா ஸம்பவாமி ஏவம் கர்பதுக்க விவர்ஜித: என்று காட்டுகிறார் ஸ்ரீ ஆதிசங்கரர்.

அது பரம்பொருள் என்பதில் என்ன பெருமை? 

அது எல்லாவற்றையும் கடந்தது என்பதில் என்ன பெருமை? 

ஆனால் ஜீவர்கள் படும் அவத்தையைக் கண்டு, அதாவது தமக்கு என்ன வேண்டும் என்றே தெரியாமல் அந்த பிரக்ஞையே இல்லாமல், அந்த ப்ரக்ஞை இல்லாததும் ஒரு குறை என்பதையே அறியாமல் இருக்கும் மூட நிலை, அந்த மூடமே பெரிய சாகசம் என்று ஜாக்கிரதையாகப் பாதுகாத்துக் கொள்ளும் நிலை, அதைவிட என்ன துர்கதி வேண்டும் அந்த பரமாத்மா தானே பிறந்துதான் ஆகவேண்டும் என்று கருதுவதற்கு? 

‘அறிவினால் குறைவில்லா அகல்ஞாலத்தவர் அறிய’ என்று அழுகிறார் ஆழ்வார். 

அகல் ஞாலத்தவரைக் கேட்டால் ‘உங்களுக்கு எதில் குறைவு?’ என்று, அவர்கள் நிச்சயம் தம் சொந்த நிலையான ஆன்ம பெருநிலையை அறியாதது குறை என்று ஒரு பொழுதும் சொல்வதில்லை. வேறு என்ன என்னவோ குறைகள் பட்டியல் நீளும். அதில் தேடிப் பார்த்தாலும் ஆன்ம ஞானம், பரம்பொருளைப் பற்றிய அறிவு என்பது இல்லாதது ஒரு குறை என்று மருந்துக்கும் இருக்காது. அப்படி ஒன்றே இல்லை என்று நிரூபிக்கத்தான் முனைப்பு போகும். 

அந்த நிலையில் பரம்பொருளுடைய காரணமே அற்ற, எதையும் எதிர்பாராத வெறும் கருணை அடிப்படையிலேயே அந்த மங்களமான பிறப்பு, ஸம்பவம் ஏற்படுகிறது என்கிறார் பீஷ்மர். 

அப்படிப் பிறந்ததுண்டோ? 

கேட்கிறான் யுதிஷ்டிரன். 

இதோ என்று கண்ணால் காட்டியபடிக் கண்ணனைப் பெயரிட்டுச் சுட்டுகிறார் -  ‘ஸம்பவ:’ 

காதலன் கட்டுண்டான்; சிறையில் கிடக்கிறான். இளவரசி நள்ளிரவில் கைப்பந்தம் ஏந்தி வந்து அவன் கட்டை விடுவிக்கிறாள், விடுதலை ஆக்க. அவளும் சிறைக்குள்தான் கட்டுண்ட கவிஞனும் சிறையில்தான். 

இவன் இருக்கும் இருப்பு தண்டனை. அவள் வந்து இருக்கும் இருப்பு கருணை. 

ஒரு பெரும் தவறு. சிக்ஷைக்காக மகனைச் சிறையில் வைக்க வேண்டிய கட்டாயம். தண்டனை மகனுக்கு. நள்ளிரவில் மகனைப் பிரிய மாட்டாது ராஜாவும்  வந்து சிறையிலேயே கிடந்து புலம்புகிறான். 

முன்னது தண்டனை. பின்னது கருணை. 

நாம் கர்மத்தால் பிறக்கிறோம்; நாராயணன் கருணையால் பிறக்கிறான் என்கின்றன சாத்திரங்கள். 

‘ஒளி வரும் பிறப்பு’ என்று கொண்டாடுகிறது ஆழ்வாரின் ஞானத் தமிழ். 

ஸம்பவ: என்கிறார் பீஷ்மர். 

பிறந்து அவனும் படாதன பட்டு, (பருத்திபட்ட பன்னிரண்டும் பட்டு என்கிறார்கள் பூர்வாசாரியர்கள்), ஜீவன் முகம் தன்னை நோக்கித் திரும்பாதா என்று என்ன என்னவோ சாகசம் செய்து பார்க்கிறான். 

இல்லை. நீயும் என்னைப் போல் என்ன கருமம் செய்து தொலைத்தாயோ பிறந்தாய், நீ என்ன பெரிய ஆள்? என்று பரமாத்மாவிடமே பீடிக்கு வத்திப் பெட்டி கேட்கிறது ஜீவன். 

அவனுடைய கர்மம் கொஞ்சமாவது தலை மடியும் நேரம் பார்த்துத் தன் கருணையே பற்றாசாகக் கொண்டு அவனுக்கு உணர்வை ஊட்டுகிறது. 

லேசாக உணர்வு வர ‘நீ யார்?’ என்று கேட்கிறான் ஜீவன். நான் உன்னைப் போல் மனிதன் என்கிறது பரமாத்மா.

‘இல்லை இல்லை நீ என்னவன் இல்லை. ஐயோ நான் பெரும் பாபி; நீ யாரோ...’ என்று விலகி ஓடுகிறது ஜீவன். 

தன்னை அணுகக் கொடுத்த ஞானம் ஜீவனுக்கு விலக வழியானதே என்று அயர்ந்த பரமாத்மா, ஆனால் தன்னுடைய குறையை இப்பொழுதாவது உணரத் தலைப்பட்டதே என்று மகிழவும் செய்த பரமாத்மா ஜீவனுக்கு மேலும் மேலும் அந்த முதலில் முகிழ்த்த உணர்வை வளர்க்கிறது. மேலும் மேலும் தன் அருளைப் பொழிந்து வளர்க்கிறது விழித்த ஜீவனை. 

ஞானம் வளர வளர ஜீவன் தான் இப்பொழுதுதான் உளதாய் ஆனோம் என்று ஆனந்திக்கிறது. 

மேலும் மேலும் ஞான வளத்தைத் தந்து ஜீவனை உளதாய் ஆக்குவதால் பரமாத்மாவிற்கு ‘பாவந:’ என்று பெயர் என்கிறார் பீஷ்மர். 

ஞானம் கனிந்த அன்றுதான் ஜீவன் தான் உளதாய் ஆனதாகவே நினைக்கிறது. 

இவ்வுலகில் பிறந்த நாள் உண்டான நாள் அன்று. 

ஞானம் பிறந்து, போன நாட்களுக்குக் கழிவிரக்கம் பிறந்து, ஞானம் கனிந்து அவன் சிந்தை இல்லா நாள் பட்டினி நாளே என்று ஆன நிலை பிறக்கும் நாளே பிறந்த நாள் ஜீவனுக்கு. 

‘அன்று நான் பிறந்திலேன்; பிறந்த பின் மறந்திலேன்’ என்கிறார் ஆழ்வார். 

’பலமத உபபத்தே:’ என்னும் வேதாந்த சூத்திரத்திற்குப் பொருளாகக் காண்கிறார் ஸ்ரீ ஆதிசங்கரர் இந்த நாமாவை. 

தான் யார் என்று ஜீவனுக்கு விளங்கிய பின், அந்த ஜீவன் தன்னைத் தாங்கிக் கொள்ள முடியாது. காரணம் ஞானம் கனிந்தால் அது பக்தியாகி விடுகிறது. பக்தியில் அழுவதும் விழுவதும் மூர்ச்சை ஆவதுமே மிஞ்சும். 

அந்த ஜீவன் தாங்கி நிற்கவும், தளர் நடை இட்டாவது தொடரவும் அதற்குத் தன்னை ஒத்த ஜீவன்களின் சங்கம் வேண்டும். அந்த பரமாத்மா என்றும் தனக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கிறது என்று அடிக்கடி பார்த்துக் கொள்ள வேண்டும். 

அவன் பேரே பிதற்றித் தரிக்கவும், அவன் பித்தில் முற்றித் தரிக்கவும் அவனேதான் வேண்டும். 

தனக்குப் பதிலாக ஓர் ஆளை இட்டு வேலை பார்க்க முடியாது இந்த விஷயத்தில். 

பார்க்கப் போனால் பரமாத்மா பிறப்பதே, ஸம்பவ: என்ற பெயருடையவன் ஆவதே இந்த மாதிரியான ஜீவன்களுக்கு இருக்கிறேன் என்று முகம் காட்டி அவர்களைத் தரிப்பிக்கப் பண்ணுவதற்குத்தான் என்கின்றனர் அருளாசிரியர்களான பூர்வாசிரியர்கள். 

பொருள் வாய்ப்பில் ஸஹஸ்ர நாமத்தில் திருப்பாவையாக இருக்கிறது இந்த நாமம். பர்த்தா

ஸம்பவ: என்பது பலித்த பின்பு புஷ்கலமான நாமம் பர்த்தா. 

ஸம்பவோ பாவநோ பர்த்தா 

***




2013/10/24 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>

Mohanarangan V Srirangam

unread,
Dec 27, 2013, 9:44:45 AM12/27/13
to min tamil, தமிழ் வாசல், vallamai, தமிழ் சிறகுகள்
ப்ரபவ: ப்ரபு; ஈசவர: 

கர்மத்தால் பிறக்கும் பிறப்பு பவ: 

கருணையால பிறக்கும் பிறப்பு ஸம்பவ: 

கருணையால் பிறந்தாலும் சாதாரண மக்கள் போலே மாயை, கர்ம வினைகள் ஆகியவற்றை அவனும் துய்த்து, அதனால் தாக்குண்டு, இந்த அனுபவங்களை அவனும் ஆட்பட்டுத்தானே ஆகவேண்டும்? பிறப்பு என்பது அவனைப் பொறுத்தவரையில் தன் இச்சையால் வந்தாலும், படும் பாடு ஒன்றுதானே. காரணம் சிறப்பு என்பது கட்டுண்டதின் இயல்பை மாற்றாதே. 

அவ்வாறில்லை. அவனுடைய பிறப்பு என்பது ஒரு சிறந்த வகையின்பாற்பட்டது. பரமபதத்தில் உள்ளது போல் சிறிதும் மாறாமல் குறையாமல் அதே தெய்விகத்துடன் அவனுடைய பிறப்பு நடைபெறுகிறது என்கிறது சாத்திரம். சோதியம் திருவுருவை அங்கு வைத்து இங்கு பிறந்தான் என்கிறார் ஆழ்வார். அங்கு உள்ளது போன்றே திவ்ய ஸம்ஸதானத்தொடே ஒன்றும் குறைவு படாதபடி இங்கு பிறக்கிறான் என்கிறார் ஸ்ரீமத் வேதாந்த தேசிகர். அங்கு நித்ய விபூதியில் எப்படித் தன் இயல்பாய் அந்தப் பெருவோலக்கத்தைக் கொண்டு விளங்குகிறானோ, அதே ஈடுபாட்டுடனும், பீடுடைய உகப்புடனும் பிறப்பிலும் தான் ஏற்கும் சரீரத்தில் உகந்து வீற்றருளுகிறான் என்கின்றனர் பூர்வாசாரியர்கள். 

அத்தகைய ஒளிவரும் முழுநலம் திகழும் பிறப்பு அவனுடையது என்பதை வைத்துச் சொல்கிறார் பீஷ்மர் - ப்ரபவ: 

பிறந்துவிட்டான். அங்கு இருக்கும் இருப்பு அமரர்கள் தொழநின்ற அதிபதியாய் ப்ரபுத்வம். இங்கு பிறந்த பின்பு, எந்நின்ற யோனியுமாய்ப் பிறந்தாய் இமையோர் தலைவா! என்று நம்மாழ்வார் கூப்பிடும்படி, எப்பிறப்பு எடுத்தாலும் அவன் இமையோர் தலைவனாகவே இருக்கிறான். அவன் எடுக்கும் பிறப்பு அவனுடைய பிரபுத்வத்திற்கு அழகு சேர்க்கிறதே அன்றி அந்த ப்ரபுத்வம் சற்றும் குறைவு படுவதில்லை. மற்றவர்களின் பிரபுத்வம் நிலை மாறினால் போய்விடும். பதவியில் இருக்கும் வரை செய்ய முடிந்தது, செய்யும் ஆற்றல், செய்யும் அதிகாரம், செய்யவைக்கும் அதிகாரம் இருந்தது. ஆனால் நிலை மாறும் போது அந்த ப்ரபுத்வம் வெறும் நினைவாக ஆகிவிடுகிறது. 

நித்ய விபூதியில் இருக்கும் வரை பரமபதம் தர முடியும். மோக்ஷம் தர முடியும். ஆனால் மண்ணில் பிறந்த பின்பு முடியுமா என்ற கேள்விக்கு இடமில்லை. அவனுடைய ப்ரபுதவம் சூழ்நிலைக்கு ஆட்பட்ட ப்ரபுதவம் அன்று. ஸ்வாபாவிகமான ப்ரபுத்வம். தன்னியல்பில் ஒப்பாரை மிக்காரை இலையாய ஒரே ப்ரபு. மாறாத, குறையாத ப்ரபுதுவம் அவனுடையது. இங்கு வீற்றபடியே விண்ணும் ஆளும் ப்ரபுதவம். எனவே அவனுடைய பெயரே ப்ரபு: என்கிறார் பீஷ்மர். 

ப்ரபு ஆளலாம், கட்டளை இடலாம், தரலாம், வழங்கலாம். ஆனால் அதனதன் அமைப்புள் நின்று நியமிப்பது, அதனதன் இயல்பில் அவ்வவற்றைச் செலுத்தி ஆண்டு நியமிப்பது என்று ஒன்று இருக்கிறதே அதை யார் செய்வது? 

ப்ரபு நமக்குக் காரை  வழங்கி விடலாம். ஆனால் போய்ச் சேர வேண்டிய இடத்திற்கு அதைத் திறம்பட ஓட்டி நம்மைக் கொண்டு சேர்ப்பது யார்? மிகவும் குறுகலான பாதையில், கண்ணிமைக்கும் நேரத்தில் பெரும் ஆபத்து நேரலாம் என்னும் கணத்தில் மிக லாகவமாக அந்தக் காரை ஒடித்து வளைத்து ஒரு அதிர்ச்சி இன்றி ஓட்டி மீட்டுச் செல்லும் ட்ரைவரை ஐயா தெய்வமே என்றல்லவோ கும்பிடுகிறோம்! 

நமக்கு மிக உன்னதமான வாகனம் ஆன சரீரத்தை அளித்தான், பொறி புலன்கள் என்ற சாஃப்ட் வேர் ஹார்டு வேர் அனைத்தையும் அளித்தான். ஆனால் அவனே உள்நின்று நமக்கு உற்று நின்று நியமிக்கவிலையேல் இலட்சியத்திற்கு எப்படிப் போய்ச் சேரும்? அதையும் அவன் தானே செய்தாக வேண்டும்! ‘என்னிடம் தன் சித்தம் அனைத்தையும் வைத்தவனின் யோக க்ஷேமங்களை நானே வகிக்கிறேன்’ என்பதன்றோ அவன் வார்த்தை! 

நித்ய விபூதியைக் காட்டிலும் அவனுடைய ஈசவரத்வம் இங்கு மண்ணில்தான் நன்கு வெளிப்படுகிறது என்கிறார் ஸ்ரீபராசர பட்டர். 

எங்கு அவன் ஈசவரத் தன்மை நன்கு வெளிப்பட்டதோ அதே மண்ணில் அவனைக் கண்டு இதோ ஈசவர: என்கிறார் பீஷ்மர். 

எல்லாவற்றையும் அப்படியா என்று கேட்டுக் கொண்டிருக்கிறான் பாண்டவர்கள், யுதிஷ்டிரர், முனிவர்கள் ஆகியோருடன் சேர்ந்து ஸ்ரீ கிருஷ்ணன். 

பாட்டனுக்கு என்னதான் இருந்தாலும் ஸ்ரீ கிருஷ்ணன் என்றால் ஒரு தனி அன்புதான் என்று புன்னகைக்கின்றனர் பாண்டவர்கள். 

காங்கேயனுக்கு மாயவனிடத்தில் என்ன பக்தி என்று நினைக்கின்றனர் முனிவரர்கள். 

நீர் என்னதான் வெளிப்படையாக எவ்வளவு சொன்னாலும் யாரும் உணரப் போவதில்லைங்காணும், பீஷ்மரே! என்று குமிணகை பூக்கிறான் மாயன். 

இருந்த காலத்தை விட போகின்ற காலத்தில் இந்த மர்மங்கள் தனக்கு இவ்வளவு ஸ்வச்சமாகத் தென்படுவதே! என்று வியக்கிறான் விதியின் முற்றத்து கதி உரைக்கும் வள்ளல். 

ப்ரபவ: ப்ரபு: ஈசவர: 

***
(உங்களுக்கெல்லாம் ஒரு சந்தோஷமான செய்தி -- இந்த இழை இத்துடன் இப்போதைக்கு நிறுத்தப்பட்டது. இனி எப்பொழுதாவது ஒரு வேளை தொடர்ந்தாலும் தொடரப் படலாம். அந்தக் கஷ்டம் உங்களுக்கு ஏற்படாமலிருக்க பிரார்த்தனை புரிவீர்களாக!) 

*

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Dec 27, 2013, 9:49:14 AM12/27/13
to vall...@googlegroups.com, min tamil
என்ன ஆச்சு?!! ஏன் இந்த திடீர் முடிவுங்கறத நான் தெரிஞ்சுக்கலான்னா சொல்லுங்க.. உங்க எழுத்துக்களால் நிறையத் தெரிந்து கொண்டிருந்தேன். அற்புதமான விளக்கங்கள்!!!!.. பாதி சாப்பாட்டில் படீரென இலையைப் பிடுங்கிக்கொண்ட மாதிரி தோணுது!!..

நான் ஏதாவது தப்பா சொல்லியிருந்தேன்னா மன்னிச்சுக்குங்க!!.. சீக்கிரமே இந்த இழை தொடரணும்னு கண்டிப்பா பிரார்த்தனை பண்ணுவேன்..


2013/12/27 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

sathiya mani

unread,
Dec 27, 2013, 10:09:07 AM12/27/13
to vall...@googlegroups.com
ரங்கன் பாஷ்யம் தொடர்ந்தால் ஸ‌ம்பவ:   இழை  நின்றால்  அஸம்பவ:
காவிரியிலிருந்து இடம் பெயர்ந்து இங்கு யமுனைக் கரையில் படித்து
அனுபவிப்பதை ஸ்ரீரங்கன் அறியானோ
 
S.Sathiyamani,
Director (Technical)
NIC, DIT, M/o IT And Communcation,
New Delhi
9868126406


சொ. வினைதீர்த்தான்

unread,
Feb 3, 2014, 12:50:34 PM2/3/14
to vallamai, min tamil, தமிழ் வாசல்


2014-02-02 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:

இதைக் கிட்டத்தட்ட ஸ்ரீ கிருஷ்ணன் எழுதிய உரை என்றே கொள்ளலாம் போல இருக்கிறது. இது மட்டும் கிருஷ்ணன் எழுதியது என்று உனக்கு எப்படித் தெரியும்? இதுவும் யாரோ கலந்து விட்ட கைச்சரக்காய் இருந்தால் என்ன பண்ணுவாய்? என்று கேட்காதீர்கள். 

என்னைப் பொறுத்தவரையில், (சரியாக இருக்கலாம் அல்லது தவறாக இருக்கலாம்), ஓர் அணுகுமுறைக் கோட்பாடு வைத்திருக்கிறேன். அது என்னவென்றால் எது மிக உயர்ந்த விஷயமோ, எது சிறந்த கருத்தோ, எது உண்மையான ஆன்மிக எழுச்சி தரும் பகுதியோ அது ஒரிஜினல் சரக்கு. அது உண்மையான அருளாளர்கள் தந்த கொடை. எது ஈனத்தனமாக இருக்கிறதோ, பண்பாடு கெட்டு இருக்கிறதோ, மனித குல உயர்வுக்கும், அறிவுக்கும் குந்தகமாக இருக்கிறதோ அது நிச்சயம் கடவுள் சம்பந்தம் அற்றது. ஆன்மிகத்தில் சிறந்தவர்களால் நிச்சயம் செய்யப்பட்டிருக்காது. அந்த மாதிரிப் பகுதிகள் நிச்சயம் மிக இழிந்த மனப்பான்மை கொண்டவர்களால் காலத்தின் கோளாறுகளாய், புகுத்தப்பட்டு நூல்களில் நுழைந்துவிட்டிருக்கிறது. இதுதான் நான் கொள்ளும் workable hypothesis. தவறாக இருக்கலாம். அல்லது சரியாக இருக்கலாம்.

அருமையான பார்வை.
சொ.வி, 
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
It is loading more messages.
0 new messages