அலாவுதின் கில்ஜி மாலிக்காபூர் காலங்களில் எல்லாம் சிங்கள அரசர்களாக இன்று சுட்டப்படும் பரம்பரையினர் பெண்கள் தீப்பாய்ந்ததில்லை. ஆனால் குடிப்படைத்தலைவரான அடாதெல்லா ராகுத்தரின் தேவி மல்லணா தீப்பாய்ந்துள்ளார். தென்காசி நெல்லை குமரி கொற்கை மாவட்டங்களில் பல தீப்பாய்ந்த அம்மன் கோவில்கள் உண்டு. ஆனால் பாண்டியர் கால கல்வெட்டிலேயே இந்த செய்தி கிடைத்திருப்பது கூடுதல் சிறப்பு. கல்வெட்டில் உள்ளதை நான் கீழ்வருமாறு படிக்கிறேன்.
குறிப்பா பத்மாவதி பற்றியும் குலசேகர பாண்டியன் கொலை செய்யப்படவில்லை என்ற எனது Youtube Twitter பக்கங்களில் பதிந்துள்ள செய்திகளுக்கும் இது வலு சேர்க்கிறது. இந்த கல்வெட்டில் பல வியக்க வைக்கும் தகவல்கள் உள்ளன. குலசேகர பாண்டியன் பற்றி நான் வெளியிடாத செய்திகளும் சில உள்ளன. அது போகப்போக தெரியும்.
வீரபாண்டியன் 1309 இல் முடி சூடினான் என்றால் இந்த நிகழ்வு 1323 இல் நடந்துள்ளது. அபிதெல்லா ராகுத்தர் என்று படிக்க வேண்டும். மல்லண தேவி அரச குலத்தவர் ஆகலாம். அபிதெல்ல மாலிக்கபூர் படையெடுப்பில் இசுலாமியராக மாற்றப்பட்டிருக்கலாம்.