அகழ்நானூறு 30.

12 views
Skip to first unread message

ருத்ரா (இ.பரமசிவன்)

unread,
Mar 15, 2023, 10:38:09 PMMar 15
to வல்லமை

எயினந்தை மகனார் இளங்கீரனார் அகநானூறு பாடல் 399ல் கீழ்க்கண்ட வரிகளை எழுதியுள்ளார்.

நெல்லிக்காய்கள் கொத்து கொத்தாக பளிங்கு போல் காய்த்து இருக்கும் அழகை வெகு அழகுடன் காட்டியிருக்கிறார். அந்த கற்பனைத்தடத்தில் நான் எழுதியதே இந்த அகழ்நானூறு 30.



அகழ்நானூறு 30.

----------------------------------------------------------------------------------------

சொற்கீரன்



"மை இல் பளிங்கின் அன்ன தோற்றப்

பல் கோள் நெல்லிப் பைங் காய்"

உதிர்தரு கான் அவன் புகுதரு காலை

அவள் கிளர்மொழி ஆங்கு கிளராநின்று

அவன் பால் உரிக்கும் ஓர் அடு மைஊழே.

அற்றே அவனும் அவள் இறைவளை நோக்கி

படுமணி இரட்ட பாய் பரி தேரும்

கலிமா நுசுப்பு அசைக்கும் சிறு வண்டும்

உடைக்கண் வேய் அமை அறையும் புள்ளும்

அவனொடு ஆங்கு விரையும் அறிதி அறிதி!

பொருள்வயின் வேட்டலின் அவள் நீள்விழி ஆற்றின்

எதிர்வழி நீந்தலே சாலும் சாலும் மற்று என்

பொருள் மொழிக்காஞ்சி ஈண்டு இவண் ஓர்வது?



________________________________________________________________

Reply all
Reply to author
Forward
0 new messages