ஞானக்குறள் நன்று.
திருப்புகழில், ஏதாவது வடசொல்லில் முதற்சீர் தொடங்கும். அதில் ரா எதுகை இருக்கும். தேடித் தரவும்:
http://tamilconcordance.in/TABLE-TPGZ.htmlவிராலிமலை என்றதும், அங்குள்ள அழகன் மீது ரா எதுகையில் திருப்புகழ் பாடினார்:
நிராமய புராதன பராபர வராம்ருத நிராகுல சிராதிக ப்ரபை ஆகி
நிராச சிவ ராஜ தவ ராஜர்கள் பராவிய நிராயுத புராரி அச்சுதன் வேதா
சுராலய தராதல சராசர பிராணிகள் சொரூப இவர் ஆதியை குறியாமே
துரால் புகழ் பராதின கரா உள பராமுக துரோகரை தரை ஆசையுற்று அடைவேனோ
இராகவ இராமன் முன் இராவண இரா வண இராவண இராஜன் உட்குடன் மாய் வென்ற
இராகன் மலர் ஆள் நிஜ புராணர் குமரா கலை இராஜ சொல வாரணர்க்கு இளையோனே
விராகவ சுராதிப பொராது தவிராது அடு விராயண பராயண செரு ஊரா
விராவிய குரா அகில் பராரை முதிரா வளர் விராலிமலை ராஜத பெருமாளே
நா. கணேசன்