Re: சன்மார்க்கக் கவிதைகள்

11 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Apr 14, 2026, 10:48:14 AM (9 days ago) Apr 14
to santhav...@googlegroups.com
ரா எதுகை சிறப்பு.

தமிழ் நாட்டில் பலவருடங்கள் உயர்ந்த கட்டடம் எல்.ஐ.சி. கட்டடம் தான். தமிழகம் கொணர்ந்தவர் இருமொழிகளில் நல்ல தேர்ச்சியாளர். தமிழ்ப் புரவலர். நாராயணசாமி அவர்கள். அவரது மகள் உஷா திருமணத்தின்போது பாரதிதாசன் பாடிய ஒரு விருத்தம்
ரா வர்க்க எதுகையை நினைவூட்டுகிறது. 

ஒரேகாதல் பாட்டுப் பாடும்
    இரண்டுள்ளம் ஒன்றை ஒன்று
சரேலெனத் தழுவக் கண்டோம்
    தங்கத்து மணவ றைக்குள்!
வரா இன்பம் வரப்பெற் றார்கள்
   மணமக்கள் குறைவோ ஒன்றும்
இராஇல்ல றத்தேர் தன்னை
   இழுப்பார்கள் புகழூர் நோக்கி

இணையப் பல்கலைத் தளத்தில் பல பக்கங்கள் திறப்பதில்லை. அரசாங்க வேலைதானே!

----------------

போப்பையர் அறிவுறூஉ அமெரிக்க ஜனாதிபதி செவியேறின்  உங்கள் விழைவு நிறைவேறும்.

தமிழ்ப் புது வருட வாழ்த்துடன்,
நா. கணேசன்

On Mon, Apr 13, 2026 at 10:04 PM தங்கவேல் காஞ்சிபுரம் <k.thanga...@gmail.com> wrote:
தமிழ்த் புத்தாண்டு வெண்பா 

பராபவ வந்தது பாரிலினி போரும்
இராதபடி செய்வாய் இறைவா - இராசா
நிராகுலா மக்களினி நித்தியமாய் வாழ
வராம்ருதா வாராய் மகிழ்ந்து.

பொருள் 

பராபவ தமிழ் புத்தாண்டு வந்துவிட்டது இறைவனே இனி இவ்வுலகில் போர் நிகழாதபடி செய்வாய் , என் அரசனே, கவலை இல்லாதவனே மக்கள் இனி மரணமில்லாப் பெருவாழ்வில் நிலைத்து வாழ , வரம் தரும் வள்ளலே அழிவிலா அமுதே மகிழ்ச்சியுடன் வந்து அருள் புரிவாயாக.

14-04-2026
Kanchipuram K Thangavel


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/43c3db22-8aaa-4964-b3c7-8fa62afe1938n%40googlegroups.com.

N. Ganesan

unread,
Apr 14, 2026, 10:09:12 PM (9 days ago) Apr 14
to santhav...@googlegroups.com, vallamai, housto...@googlegroups.com
ஞானக்குறள் நன்று.

திருப்புகழில், ஏதாவது வடசொல்லில் முதற்சீர் தொடங்கும். அதில் ரா எதுகை இருக்கும். தேடித் தரவும்:
http://tamilconcordance.in/TABLE-TPGZ.html

விராலிமலை என்றதும், அங்குள்ள அழகன் மீது ரா எதுகையில் திருப்புகழ் பாடினார்:

நிராமய புராதன பராபர வராம்ருத நிராகுல சிராதிக ப்ரபை ஆகி
     நிராச சிவ ராஜ தவ ராஜர்கள் பராவிய நிராயுத புராரி அச்சுதன் வேதா
சுராலய தராதல சராசர பிராணிகள் சொரூப இவர் ஆதியை குறியாமே
     துரால் புகழ் பராதின கரா உள பராமுக துரோகரை தரை ஆசையுற்று அடைவேனோ
இராகவ இராமன் முன் இராவண இரா வண இராவண இராஜன் உட்குடன் மாய் வென்ற
    இராகன் மலர் ஆள் நிஜ புராணர் குமரா கலை இராஜ சொல வாரணர்க்கு இளையோனே
விராகவ சுராதிப பொராது தவிராது அடு விராயண பராயண செரு ஊரா
    விராவிய குரா அகில் பராரை முதிரா வளர் விராலிமலை ராஜத பெருமாளே

நா. கணேசன்

On Tue, Apr 14, 2026 at 7:41 PM தங்கவேல் காஞ்சிபுரம் <k.thanga...@gmail.com> wrote:
ஐயா வணக்கம் 

ஞானக்குறள் அருமை.
மேலும் ஒரு ரா எதுகை.

பேராத் தவத்தின் பயனாம் பிறப்பின்மை
ஆராய்ந் துணர்வு பெறின். 87

இடம் பெயராமல் செய்த தவத்தின் பயன்தான் மறுபிறப்பு இல்லாத பேறு. ஆராய்ந்து உணர்ந்தால் இது புலப்படும்.

On Tuesday, April 14, 2026 at 10:19:17 PM UTC+5:30 N. Ganesan wrote:
ரா எதுகை, ஞானக்குறள், 

Nice website 
தூராதி தூரஞ் சொல்லத் தொலையாது
பாராப் பராபரம் பார்.
பர, அபர வித்தைகள் காணாதோருக்குத் சொல்ல முடியாத தூரமாயும், கண்டவருக்கு வெகு அருகிலும் இருக்கும்.
Reply all
Reply to author
Forward
0 new messages