சத்தியானந்த சித்தர் எனும் பகவான் கோழிப்பீ சுவாமிகள்

209 views
Skip to first unread message

seshadri sridharan

unread,
Dec 3, 2013, 11:23:58 AM12/3/13
to seshadri sridharan
சென்னை நகரம் ஆங்கிலர் ஆட்சியில் மேன்மை பெற்று வரும் காலத்தே அதன் பரப்பு சிறிதாகவே இருந்தது. இன்று சென்னை மாநகரின் உட்பிரிவாக உள்ள பல இடங்கள் 1900 க்கு முன் பண்ணைகளும் கிராமங்களுமாகவே இருந்தன. 

அவ்வாறான அன்றைய சென்னையின் சுற்றுப்புற கிராமங்களில் பல ஓகியரும் சித்தரும் வாழ்ந்துள்ளனர். கிண்டி அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த ஒரு பகுதியாக இருந்துள்ளது. அங்கு மாங்குளம் என்ற பகுதியில் சில சித்தர் சமாதிகள் அமைந்துள்ளன. கிண்டி ரயில் நிலையத்திற்கு பக்கத்தில் ஷீரடி சாயி பாபா கோவில் அமைந்துள்ளது. அதன் உள்ளே சத்தியானந்த சித்தர் எனும் பகவான் கோழிப்பீ சுவாமிகள் என்பவரது ஜீவசமாதி அமைந்துள்ளது.

இந்த சத்தியானந்த சித்தர் எனும் பகவான் கோழிப்பீ சுவாமிகள் யார் எவ்வூரினர் என்ற செய்தி அறியக் கிடைக்கவில்லை. ஆனால் அவர் வட நாட்டு பயணத்தின் போது ஷீரடி சாயி பாபாவை சந்தித்துள்ளார் எனக்  கூறப்படுகிறது.

இவரைச் சுற்றி எப்போதும் கோழியின் எச்சம் ( பீ ) இருக்குமாம். உட்கார்ந்திருக்கும் இவர் மீது சிறுவர்கள் கோழி எச்சத்தை எடுத்துப் போடுவார்களாம் அது உடனே லட்டாக மாறி கீழே விழுமாம். இந்த விந்தையால் உந்தப்பட்டு சிறுவர் பலர் அதை ஒரு பொழுது போக்காய் கொண்டிருந்தனர்.  இதனாலேயே இவரை மக்கள் கோழிப்பீ சுவாமிகள் என்று அழைக்கத் தொடங்கியுள்ளனர். 

இந்த சித்தின் பெருமையை கேள்வியுற்ற ஒரு ஆங்கிலேயர் சத்தியானந்த சித்தராகிய இவரைக் காணவந்த போது இவரிடம் கோழி எச்சத்தை கையில் கொடுத்துள்ளார் அதைக்  கோழிப்பீ சுவாமிகள் மீண்டும் அந்த ஆங்கிலேயரிடமே கொடுத்த போது அது தங்கமாக மாறியது. அதை அவர் இலண்டன் அருங்காட்சியகத்திற்கு கொடுத்துள்ளார். அவர்கள் அதுபோல் இன்னும் நிறைய தங்கம் வேண்டும் என்று கேட்டு அனுப்பிய போது சித்தர் கோழிப்பீயை தங்கமாக மாற்றமுடியும் என்று காட்டவே அவ்வாறு கொடுத்ததாகவும் மேலும் அவ்வாறு தரமுடியாது என்று மறுத்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது.   

கோழிப்பீ சுவாமிகள் 1904 ஆம் ஆண்டு இன்றுள்ள ஜீவா சமாதி கோவில் இடத்தில் ஜீவா சமாதி அடைந்தார். அது பின்னர் கோவிலாகக்  கட்டி எழுப்பப்பட்டது. பின்பு 1946 இல் இக் கோவிலை ஒட்டிய பகுதியில் ஷீரடி சாயி பாபாவிற்கு என்று ஒரு கோவில் கட்டப்பட்டது. அந்த சாயி பாபா கோவில் அமைப்புக் குழுவில் ஒரு உறுப்பினராக புட்டபர்த்தி சாயி பாபா இருந்தபோது சத்தியானந்த சித்தர் எனும் கோழிப்பீ சுவாமிகளின் ஜீவசமாதிக்கு வந்து அடிக்கடி தியானம் (ஊழ்கம்) செய்வார் என்று சொல்லப்படுகிறது. சத்தியானந்த சித்தரின் பெயரையே தமது பெயராக்கிக் கொண்டு சத்திய சாயி பாபா என்று தம்மை அழைத்துக் கொண்டதாகவும்  சொல்லப்படுகிறது. .இன்று இந்த ஜீவா சமாதி கோவில் சாயி பாபா கோவில் அறக்கட்டளையின் பேணலில் இருக்கின்றது.    



சேசாத்திரி 

krishnan

unread,
Dec 3, 2013, 11:48:08 AM12/3/13
to vall...@googlegroups.com

Innamburan S.Soundararajan

unread,
Dec 3, 2013, 11:55:50 AM12/3/13
to vall...@googlegroups.com
கோழிப்பீ சுவாமிகள் மீண்டும் அந்த ஆங்கிலேயரிடமே கொடுத்த போது அது தங்கமாக மாறியது. அதை அவர் இலண்டன் அருங்காட்சியகத்திற்கு கொடுத்துள்ளார்.

~ மேலதிக விவரங்களும், குறிப்பும், வருடமும், முடிந்தவரை, கொடுத்தால், அங்கு விசாரித்துச் சொல்கிறேன்.
இன்னம்பூரான்
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

seshadri sridharan

unread,
Dec 3, 2013, 9:32:10 PM12/3/13
to vall...@googlegroups.com
2013/12/3 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>
கோழிப்பீ சுவாமிகள் மீண்டும் அந்த ஆங்கிலேயரிடமே கொடுத்த போது அது தங்கமாக மாறியது. அதை அவர் இலண்டன் அருங்காட்சியகத்திற்கு கொடுத்துள்ளார்.

அவரைப் பற்றி செய்தி வெளியிட்டதாக இன்னம்பூரான்]

நேற்று (2/11/2013) ஒரு வேலையாக கிண்டி சென்றிருந்த போது கோழிப்பீ சுவாமிகளின் சமாதிக்கு ஊழ்கம் செய்யலாம் என்று சென்றேன். அப்போது அங்கு வந்த பிராமணர் ஒருவர் பெண்களைப் போல காலை ஒட்டினாற்போல் அரைப் பாத அளவிற்கு நடந்து கொண்டிருந்தார். அவரிடம் சித்தரைப் பற்றி நீங்கள் அறிந்த செய்தி யாது எனக் கேட்டேன். அவர்தாம் இந்த தங்க மாற்று நிகழ்வை பற்றிச் சொன்னார். அது இன்றும் லண்டன் அருங்காட்சியகத்தில் இருப்பதாகவும் சொன்னார்.

ஏன் இப்படி சிறுநடைபோட்டு நடக்கிறீர்கள் என்றேன். இப்படி மூன்றுமுறை நடந்தால் அவர் நம்மோடு மூன்று நாள்கள் இருப்பார் என்றார். இவர் காகபுசண்டருடைய சனி பகவானின் அம்சம் என்றார். முன்னம் ஜீவசமாதி கோவிலுக்கு என்று தனியே அறக்கட்டளை இருந்தது என்றும் இப்போது கோவிலை சாய் பாபா அறக்கட்டளை ஏற்று நடத்துவதாகவும் சொன்னார். சித்தர் பற்றி ஏதேனும் நூலுள்ளதா என்றுகேட்டேன். தனி அறக்கட்டளை இருந்தபோது அவர்களே தனியாக அவரைப் பற்றி செய்தி வெளியிட்டதாகவும் இப்போது அது இல்லை என்றார். சாயி அறக்கட்டளையிடம் கேட்டால் கிடைக்கலாம் என்றார். சாயி கோவிலில் சென்று கேட்ட போது தம்மிடம் நூல் ஏதும் இல்லை என்றனர். பின்பு ஜீவசமாதி கோவிலை பேணியவர்கள் வீடு அங்கேயே உள்ளது என்பதை அறிந்து அவர்களிடம் அவரது வாழ்கை வரலாறு பற்றிய நூல் உள்ளதா என்று உசாவினேன். கோழிப்பீயை சிறுவர்கள் எடுத்து அவர்மேல் போட அது லட்டாக மாறியது என்ற சேதி தவிர வேறு எதுவும் எமக்கு தெரியாது என்றனர். அவர்கள் தாம் சத்திய சாய் பாபா அங்கு அடிக்கடி தியானம் செய்துள்ளார் என்றனர்.

சத்தியானந்த சித்தர் 1904 இல் ஜீவசமாதி ஆனதால் அதற்கு முன் சென்னையில் இருந்து தங்கமாக மாற்றப்பட்டு வந்த தங்கம் ஏதேனும் உள்ளதா என்று லண்டன் அருங்காட்சியக பொருள் பட்டியலைத் தேடிப்பார்த்தால் கிட்டலாம். அடுத்தமுறை அங்கு சென்றால் மேலும் சேதி கிடைக்கிறதா என்று பார்க்கிறேன்.

Granny Visalam

unread,
Dec 6, 2013, 6:53:09 AM12/6/13
to vall...@googlegroups.com
சத்திய சாயி  பாபா பிறந்தவுடன் அவர் பாம்பணை மேல் பள்ளிக்கொண்டவாறு காட்சியளித்தார் .என்றும் அதனால் அவருக்கு சத்திய நாராயணா என்ற பெயரும் சூட்டியதாக புத்தகத்தில் படித்திருக்கிறேன் நான் திருமங்கலம் இடத்தில் இருக்கும் திருவீதிஅம்மன் கோயிலுக்கு அடிக்கடி போய் வருவேன் .அங்கு சாயி பாபா அடிக்கடி வந்து அங்கு திருவீதிஅம்மனைப்பிரதிஷ்டையும் செய்திருக்கிறார் என்று கல்வெட்டில் கண்டேன்.அங்கு ஒரு சித்தர் வந்ததாகவும் தகவல் .அதுவும் மேலே கூறப்பட்ட இடமும்  ஒன்றா? 


2013/12/4 seshadri sridharan <ssesh...@gmail.com>

--

Innamburan S.Soundararajan

unread,
Dec 6, 2013, 6:56:31 AM12/6/13
to vall...@googlegroups.com
நன்றி திரு சேசாத்திரி. நானும் விசாரிக்கிறேன். நீங்களும் விசாரியுங்கள்.











இன்னம்பூரான்



2013/12/6 Granny Visalam <meera...@gmail.com>

seshadri sridharan

unread,
Dec 6, 2013, 9:54:56 AM12/6/13
to vall...@googlegroups.com
2013/12/6 Granny Visalam <meera...@gmail.com>

சத்திய சாயி  பாபா பிறந்தவுடன் அவர் பாம்பணை மேல் பள்ளிக்கொண்டவாறு காட்சியளித்தார் .என்றும் அதனால் அவருக்கு சத்திய நாராயணா என்ற பெயரும் சூட்டியதாக புத்தகத்தில் படித்திருக்கிறேன் நான் திருமங்கலம் இடத்தில் இருக்கும் திருவீதிஅம்மன் கோயிலுக்கு அடிக்கடி போய் வருவேன் .அங்கு சாயி பாபா அடிக்கடி வந்து அங்கு திருவீதிஅம்மனைப்பிரதிஷ்டையும் செய்திருக்கிறார் என்று கல்வெட்டில் கண்டேன்.அங்கு ஒரு சித்தர் வந்ததாகவும் தகவல் .அதுவும் மேலே கூறப்பட்ட இடமும்  ஒன்றா? 

இன்று நான் கிண்டி சிர்டி சாயி பாபா கோவிலில் அமைந்த சத்தியானந்த சித்தர் ஆகிய கோழிப்பீ சவாமிகளின் சமாதியில் தியானம் செய்யச் சென்றிருந்தேன். தியானம் முடிந்ததும் கண் விழித்த போது கோவில் பூசகர் சமாதி லிங்கத்தின் மீது இருந்த ரோஜா மாலையை எனக்கு தந்தார். வெளியே வரும்போது சமாதி கோவிலை ஒட்டி அமைந்துள்ள அக்கோவிலை எழுப்பிய காலஞ்சென்ற திரு லோகநாத முதலியாருடைய பேத்தி வீட்டிற்கு சென்று கோழிப்பீயை தங்கமாக மாற்றிய ஆண்டு எது? அதைப் பெற்று கொண்ட ஆங்கிலர் பெயர் யாது என வினாவினேன். அது பற்றி தெரிந்தவர் யாரும் இலர் அவர்கள் எல்லாம் இறந்துவிட்டனர் என்று கூறினார். 

திரு லோகநாத முதலியார் 1890 இல் பிறந்தவர். பிள்ளைப் பருவத்தில் கோழிப்பீ சித்தரை பார்த்துள்ளார். petrol bunk முதல் சாயி பாபா கோவில் அமைந்த பகுதி உட்பட MKN சாலை வரை அமைந்த 6 ஏக்கர் நிலமும் திரு லோகநாத முதலியாருடைய பாட்டனாருக்கு சொந்தமான இடம். அக்கால் அது செடி கொடி அடர்ந்த பதரும் காடுமாக இருந்துள்ளது. அதில் இப்போது சத்தியானந்தர் சமாதி அமைந்த இடத்தில் சில கொடுக்காபுளி மரங்கள் இருந்துள்ளன. அந்த கொடுக்காபுளி மர நிழலில் பல காலமாக கோழிப்பீ சுவாமிகள் தங்கி இருந்து அங்கேயே 1905 இல் சமாதி வைக்கப்பட்டார். அவர் ஒருபோது லோகநாதன் தான் என் தலைமை மாணாக்கன் என்று சொல்லி உள்ளார். அப்பொது லோகநாதன் சிறு பையன்.

பின்னர் லோகநாதன் ஐதராபாத்தில் சில ஆண்டுகள் பணியாற்றி உள்ளார். 1943 இல் புட்டபர்த்தியில் பைத்தியம் பிடித்த பையன் என்று ஊரே சத்திய நாராயசாவை அடித்துவிரட்டிய போது அவர் சென்னைக்கு வந்துவிட்டார். அப்போது சென்னை திருவல்லிகேணியில் லோகநாதன் குடியிருந்தார். புட்டபர்த்தி சத்தியநாராயணாவை திருவல்லிக்கேணியில் சந்தித்துள்ளார். ஒரு நாள் உன்னுடைய இடத்திற்கு என்னை அழைத்துப் போ என்று சத்தியநாராயணா கோரவே திரு லோகநாதன் கிண்டியில் கூரை மட்டுமே வேயப்பட்ட கோழிப்பீ சுவாமிகளின் சமாதி அமைந்த தன்னுடைய 6 ஏக்கர் நிலப் பகுதிக்கு அவரை அழைத்துச் சென்றார். அப்போது சத்தியநாராயணாவுக்கு 17 அகவை தான். காலை முதல் மாலை வரை எப்போதும் கோழிப்பீ சித்தருடைய சமாதியில் சத்திய நாராயணா தியானம் செய்து கொண்டிருப்பார். அதனால் அவரது பித்து ஒரளவு தெளிந்துவிட்டது. அவரிடம் சில தெய்வீக ஆற்றல் இருந்ததால் லோகநாத முதலியார் அவரைப் புரந்தார். அவருக்கு அங்கே ஒரு வளமனை (bungalow) கட்ட திட்டமிட்டு இன்று பெட்ரோல் பங்கு அமைந்த பகுதியையும் பிற புகிதியையும் விற்று 45,000 செலவில் வளமனை கட்ட முனைந்த போது கோழிப்பீ சித்தர் சத்தியநாராயணாவுக்கு "நான் இவனுக்கு சீரடி சாயி பாபாவுக்கு கோவில் கட்ட சொல்லி இருந்தேன் அதை அவன் மறந்துவிட்டான். எனவே வளமனைக்கு பதிலாக சீரடி சாயிக்கு அங்கேகோவில் கட்டுங்கள் " என்று உணர்த்தியதால் 1946 இல் கோவில் கட்ட ஒரு குழு அமைக்கப்பட்டு அக்குழுவில் ஒரு உறுப்பினராக சத்தியநாராயணா இருந்துள்ளார். வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்பதற்கு இலக்கணமாக சத்திய நாராயணாவையயும் லோகந்தன் வடிவில் தமிழகம் வாழவைத்தது. பின்பு லோகநாத முதலியாரின் அறிவுரைப்படி சத்தியானந்த சித்தரின் பெயரில் உள்ள சத்திய என்ற பெயரை ஏற்று சத்திய சாயி பாபா என தம்மை அழைத்துக் கொண்டார். லோகநாத முதலியார் 1963 இல் இறந்துவிட அவருடைய சமாதியும் அதே வளகத்தில் அமைக்கப்பட்டது.


மேற்கசண்ட செய்திகள் லோகநாதனின் பேத்தி என்னிடம் நேரிடையாகக் குறியவை.

மேலும் சில செய்திகள் அடுத்த சந்நிப்பில் கிட்டும்.



சேசாத்தரி

Granny Visalam

unread,
Dec 6, 2013, 11:22:07 AM12/6/13
to vall...@googlegroups.com
மிக்க நன்றி .பல புது விஷயங்களைத்தெரிந்து கொண்டேன் .இந்த இடத்தைப்பார்க்கும் ஆவல் அதிகமாகிவிட்டது 


2013/12/6 seshadri sridharan <ssesh...@gmail.com>

--

Innamburan S.Soundararajan

unread,
Dec 6, 2013, 12:49:27 PM12/6/13
to vall...@googlegroups.com
நன்றி, சேசாத்திரி. நீங்கள் இவ்வளவு சொன்ன பிறகு, பல நாட்கள் என் மனதில் கிடந்த ஒன்றை பகிர்ந்து கொள்கிறேன். சத்தியநாராயணாவுக்கு 17 அகவை தான் என்று நீங்கள் சொல்லும் காலகட்டத்தில் நான் புதுக்கோட்டையில் பள்ளி மாணவன். கீழ ராஜ வீதியே கடைத்தெரு. ஆகஸ்ட் 2013ல் பார்த்து விட்டு வந்தேன். அந்த தெருவில் ஒரு கடை வாசலில் ஒரு பால சன்னியாசி தன் கைக்குள்ளிருந்து அழகிய சிறிய விக்ரகங்களை மாயாஜாலமாக எடுத்துக்காட்டி எல்லாரையும் வியக்க வைத்தார். பல வருடங்களுக்கு பிறகு ஶ்ரீ சத்ய சாயி பாபாவை புட்டபர்த்தியிலும், ஒயிட்ஃபீல்டிலும், ஹைதராபாத்திலும், சென்னையிலும் என் மனைவியின் விருப்பப்படி தரிசிக்கப்போன போதெல்லாம், இந்த பால சன்னியாசி இவர் தானோ என்ற எண்ணம் எழும். 
பிற பின்னர்.











இன்னம்பூரான்



2013/12/6 Granny Visalam <meera...@gmail.com>

seshadri sridharan

unread,
Dec 7, 2013, 7:43:25 AM12/7/13
to vall...@googlegroups.com
2013/12/6 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>
சத்தியநாராயணாவுக்கு 17 அகவை தான் என்று நீங்கள் சொல்லும் காலகட்டத்தில் நான் புதுக்கோட்டையில் பள்ளி மாணவன். கீழ ராஜ வீதியே கடைத்தெரு. அந்த தெருவில் ஒரு கடை வாசலில் ஒரு பால சன்னியாசி தன் கைக்குள்ளிருந்து அழகிய சிறிய விக்ரகங்களை மாயாஜாலமாக எடுத்துக்காட்டி எல்லாரையும் வியக்க வைத்தார். பல வருடங்களுக்கு பிறகு ஶ்ரீ சத்ய சாயி பாபாவை புட்டபர்த்தியிலும்,  இந்த பால சன்னியாசி இவர் தானோ என்ற எண்ணம் எழும். 
பிற பின்னர்.


சத்தியநாராயணா 17 அகவையில் புதுக்கோட்டையில் இருந்தாரா? 

N. Ganesan

unread,
Dec 7, 2013, 1:51:18 PM12/7/13
to vall...@googlegroups.com
பல நாட்களுக்க்குப் பின் தமிழ்கூகுள் குழு. தலைப்பைப் பார்த்ததும் கோழிப்பீ ஸ்வாமிகள் பற்றிப் படிக்க ஆவலாயினேன்.
கோழிப்பீ சுவாமிகள் அருள் நண்பர் சேசாத்திரிக்கு எப்பொழுதும் இருப்பதாக.

அங்கிருந்த புட்டபர்த்தியார் காவளம் ஸ்ரீகுமார் இசையை - ஜகதோதாரண - விரும்பிக் கேட்கிறார் - 6 ஆண்டு முன்னம்


நா. கணேசன்


 

சேசாத்தரி

seshadri sridharan

unread,
Dec 7, 2013, 9:42:27 PM12/7/13
to vall...@googlegroups.com

2013/12/8 N. Ganesan <naa.g...@gmail.com>
பல நாட்களுக்க்குப் பின் தமிழ்கூகுள் குழு. தலைப்பைப் பார்த்ததும் கோழிப்பீ ஸ்வாமிகள் பற்றிப் படிக்க ஆவலாயினேன். கோழிப்பீ சுவாமிகள் அருள் நண்பர் சேசாத்திரிக்கு எப்பொழுதும் இருப்பதாக. 

அங்கிருந்த புட்டபர்த்தியார் காவளம் ஸ்ரீகுமார் இசையை - ஜகதோதாரண - விரும்பிக் கேட்கிறார் - 6 ஆண்டு முன்னம் 

http://www.youtube.com/watch?v=EfSWB47o0LQ   நா. கணேசன்

Uploaded on Oct 7, 2007

PURANDARADAS KRITI IN KAPI RAGA 
KAVALAM SRIKUMAR SINGING BEFORE SWAMY IN WHITE FIELD. 
This was a rare experience with Swamy during Vishu festival. Swamy listened to an instruement ensemble and after the programme came down and distributed prasada to each and every artist. Finally Swamy reached before Kavalam Srikumar, gave prasada and asked him to sing. This was the rarest of experience to be remembered for the whole life. Fortunately this was captured by the videographer.


திருமங்கலம் திருவீதி அம்மன் கோவில் அண்ணாநகருக்கு அருகே உள்ள பகுதி. கோழிப்பீ சுவாமிகளின் சமாதியோ கிண்டி தொழிற் பேட்டைக்கு எதிரே, கிண்டி இரயிலடிக்கு மிக அருகே உள்ளது. இது புட்டபர்த்தி சாயி பாபாவுக்கு சத்திய சாயி என்ற பெயரை வழங்கிய தாய்வீடு. அவரை ஒரு ஓகியாக உலகுக்கு அடையாளப்படுத்திய வீடு. 1943 முதல் அங்கத்து சீரடி சாயி பாபா கோவில் கட்டி முடிக்கின்ற 1948 வரை அவர் அங்கே இருந்தவர்.


சேசாத்தரி
Reply all
Reply to author
Forward
0 new messages