vallamai |
|
Posted: 16 Jul 2015 11:17 AM PDT மீ.விசுவநாதன் தொந்தி சரியத் துவண்டு நடக்கின்றாய் ! பந்தியில் நன்றாய்ப் பசிக்குமேல் வந்ததை தொப்பையில் கொட்டுகிறாய் ! தூங்காதே ஏங்குகிறாய் ! உப்பை விலக்கியே உண். (131) 10.05.2015 முகநூலில் வாழ்த்தியே மோகத்தை உன்னுள் தகதகக்க ஏற்றுவர் ! தாகந் தவிக்க மணிக்கணக்காய் வாய்பிளந்து மௌனத்தில் நிற்பாய் ! பணிமறக்கச் செய்யும் பவிசு. (132) 11.05.2015 தொத்து வியாதி தொடவே நடுங்குவர் ; சொத்து வியாதி சுகமென நித்தமும் சுற்றிக் கிடந்தே சுரண்டத் துடிப்பரே ! பற்றறு […]
|
|
Posted: 16 Jul 2015 04:26 AM PDT இன்னம்பூரான் சட்டம், சட்டம் போடப்பட்ட நிலைக்கண்ணாடி அல்ல. இயற்றப்பட்ட சட்டபுத்தகம் அடித்தளம். உச்ச நீதி மன்றம் அளித்தத் தீர்வுகளுடன் அதை இணைத்து, சட்டம் வகுக்கப்படுகிறது. காலகட்டத்துக்கேற்ப, அடித்தளமும் அசைக்கப்படலாம். இன்று அசைக்கப்பட்டு, தளர்க்கப்பட்டது. என்ன தான் பெண்ணியம் வாதாடினாலும் ஆணாதிக்கத்தின் பிடி தளர்ந்து போவதில்லை. பெண்ணியம் பாய்க்கு அடியில் புகுந்தால், ஆணாதிக்கம் கோலத்துக்கு அடியில், மயில் ராவணன் போல் புகுந்து, தர்பார் நடத்துவது கண்கூடு. கீதா ஹரிஹரன் என்ற பிரபல எழுத்தாளர் 1999ல் தன்னுடைய மைந்தனின் பெயரில் […]
|
|
Posted: 16 Jul 2015 12:54 AM PDT புல்லாங் குழலால் பவுலிங், அவுட்டாக்கி, தள்ளுகிறான் ராகத் துவேஷத்தை, -வல்லானே, தீராத ஆட்டத்தை, மாறாத தோட்டத்தில்(பிருந்தாவனம்), சீராக ஆடிடும் சேய் …… துடைப்பங் கழியைத் துணிப்பட்டால் மூடிப், படைத்தாய் பிறவிப் பிணியை, -இடைப்பையா, தீராவுன் ஆட்டத்தில், தோள்கொடுக்கும் தோழனெனைப், பாரா திருப்பதேன் பகர் ….கிரேசி மோகன்….
|
|
Posted: 15 Jul 2015 08:02 PM PDT – தேமொழி. உயர்கல்வியின் சிகரமாக விளங்கும் முனைவர் படிப்பை முடித்து, முனைவர் பட்டம் என்ற வெற்றிக் கொடியை நாட்ட விரும்புவது பெரும்பாலோருக்கு நிறைவேறாக் கனவாகவே முடிந்துவிடும். அதற்கு அவர் முயற்சி மேற்கொள்ளவில்லை, திறமையில்லை போன்ற காரணங்களைச் சொல்வதற்குக் கூட சிலசமயம் வழியிருக்காது. பெரும்பாலும் படித்து முடித்து சொந்தக்காலில் நிற்கவேண்டிய நேரம், தனது கடமைகளும் தன்னை அழைக்கிறது என்ற வயதில் பலர் சிக்கிக் கொள்ளும் வாழ்க்கையின் திருப்புமுனையான காலம் அது. சரி இப்பொழுது கொஞ்சம் விலகிச் சென்று மீண்டும் […]
|
| You are subscribed to email updates from வல்லமை
To stop receiving these emails, you may unsubscribe now. |
Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
|
Posted: 19 Jul 2015 10:13 PM PDT ஜூலை 20, 2015 இவ்வார வல்லமையாளர்கள் வல்லமைமிகு சொற்பொழிவாளர் இசைக்கவி இரமணன் அவர்கள் இந்த வார வல்லமையாளராகப் பாராட்டப்படும் இசைக்கவி இரமணன் அவர்களைப் பற்றிய ஒரு அறிமுகம் முற்றிலும் தேவையற்றது. அவரது இலக்கிய பகிர்வுகளில் மூழ்கித் திளைத்திராத தமிழரும் இருக்க வாய்ப்பில்லை. இருப்பினும் முன்னுரையாக ஓரிரு அறிமுக வரிகள் தரவேண்டும் என்ற மரபில் அடுத்து சில வரிகள் அவரைப் பற்றி இங்கு தரப்படுகிறது. நெல்லையில் பிறந்த இசைக்கவி இரமணன், கவிஞர், எழுத்தாளர், சொற்பொழிவாளர், தொகுப்பாளர் எனப் […]
|
Posted: 19 Jul 2015 10:11 PM PDT ”எதற்கென்ற கேள்வி முதற்கொண்டு மாயை உதிக்கின்ற ஞானமே எல்லாம் -மதித்துத் துதிக்கின்ற நானும் விதிக்கின்ற நீயும் நதிக்கரை நாணல்நீர் நட்பு”….கிரேசி மோகன்….
|
|
Posted: 19 Jul 2015 05:23 PM PDT பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்? திரு ரவிச்சந்திரன் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார். இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (25.07.2015) வரை உங்கள் […]
|
|
Posted: 19 Jul 2015 05:20 PM PDT நிர்மலா ராகவன் கண்கண்ட தெய்வமா? கேள்வி: கணவன் எவ்வளவுதான் கொடுமை செய்தாலும், இந்தக் காலத்திலும் சில பெண்கள் பொறுத்துப்போவது ஏன்? பிறருக்கு அன்பையும், தனது சேவையையும் ஓயாது அளிப்பதே நல்ல பெண்ணுக்கு அடையாளம் என்ற போதனை சமீப காலம்வரை உலகிலுள்ள எல்லா நாடுகளிலும் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. தமிழ் இலக்கியத்திலும் கணவனுக்குப் பணிவிடை செய்யும் பெண் கல்லையும் வேக வைப்பாள், அவள் `பெய்யெனப் பெய்யும் மழை’ என்றெல்லாம் (ஆண்கள்?) சொல்லி வைத்திருக்கிறார்களே! இதையெல்லாம் கேட்டும், படித்துமுள்ள அம்மா, அத்தை, […]
|
|
Posted: 19 Jul 2015 05:16 PM PDT -மலர் சபா மதுரைக் காண்டம் – 06: கொலைக்களக் காதை மாதரி கண்ணகியைத் தக்கதோர் இல்லத்தில் சேர்த்து, அவளுக்கு வேண்டும் பணி செய்வதற்கு ஏற்றவர்களை நியமித்தல் பெறுவதற்கரிய மடந்தையான கண்ணகியை அடைக்கலமாகப் பெற்ற மிக்க மகிழ்ச்சியடைந்தவளான இடைக்குல ஆய்ச்சி மாதரி, மோர் விற்றுக் கிடைத்த பொருளால் உணவை உண்டு வாழும் வாழ்க்கைமுறை உடைய ஆய்ச்சியரோடு கட்டிய வேலிகள் சூழ்ந்த இடையர்களின் இருப்பிடத்தின்கண் அழகும் சிறப்பும் உடைய பந்தலையும் காவலினையும் உடைய செம்மண் பூசிய சிறப்புவாய்ந்த சிறுவீட்டினை அடைந்தாள். நெருக்கமாக […]
|
|
Posted: 19 Jul 2015 05:08 PM PDT – மீனாட்சி பாலகணேஷ். மனதில் தைத்த முள்! மானின் மருண்ட பார்வை; இயற்கையாகவே எழில் பொங்கும் பால்வதனம்; அழகுக்கு யாராவது அழகு செய்வார்களோ? இருப்பினும், நந்தவன மலர்கள் அவ்விளம் மங்கையைப் போட்டி போட்டுக் கொண்டு அலங்கரித்தன. எளிய ஆசிரம உடையிலும் அவளது பேரெழில் பொங்கி வழிந்தது. அவளும் தோழியரும் நீர் கொண்டு செல்கின்றனர். ஆசிரமத்திலுள்ள எல்லாச் செடி கொடிகளுக்கும் அன்பாக நீர் வார்க்கிறாள் அம்மங்கை. ஒரு முல்லைப் பூங்கொடி அழகான மலர்களைக் கொத்துக் கொத்தாகத் தாங்கி நின்று […]
|
|
Posted: 19 Jul 2015 05:06 PM PDT -செண்பக ஜெகதீசன் உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு. (திருக்குறள்-339: நிலையாமை) புதுக் கவிதையில்… நிலையா உலகம் இது, சாவு இதில் சோர்ந்து தூங்குதல் போன்றது தூங்கி எழுவது போன்றதுதான் தரணியில் பிறப்பு! குறும்பாவில்… ஆழ்ந்த உறக்கம் போன்றது சாவு, அதை முடித்து விழித்தெழுதல் ஒப்பதே பிறப்பு! மரபுக் கவிதையில்… நிலையா உலகின் நிலையிதனை நினைத்து செயல்படு வாழ்வினிலே, அலைந்து திரிந்தே பணிமுடித்து அயர்ந்து தூங்குதல் போன்றதாகும் விலையிலா உயிரதும் உடல்பிரிந்து […]
|
|
Posted: 19 Jul 2015 04:56 PM PDT பவள சங்கரி வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும். ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும் என்பது இதுதானோ!! ஒரு காலத்தில், இந்தியா உள்பட தெற்காசிய கண்டத்தில் உள்ள பல நாடுகளை பிரிட்டன் ஏகாதிபத்தியம் அடிமைப்படுத்தி வைத்திருந்தது. இன்று நிலைமையைப் பாருங்களேன்…. இதைச் சாத்தியமாக்கிய அத்துனை இந்தியர்களுக்கும் உளமார்ந்த பாராட்டுகள்! இந்திய கோடீசுவரர்கள் அனைவரும் பிரிட்டனில் வீடு மனை விற்பனைத் துறையில் முதலீடு செய்வதில் அதிக ஆர்வமுடன் உள்ளனர். பிரிட்டனில் ஆடம்பர பங்களா வாங்குவதற்காக, அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியர்கள் […]
|
|
விக்கிரமாதித்தனின் கிருஷ்ணவேணி … Posted: 19 Jul 2015 04:55 PM PDT – கவிஜி. விக்கிரமாதித்தனின் கிருஷ்ணவேணி இந்தக் கதைக்கு நான் முக்கியம் என்று இப்போதைக்கு எனக்குத் தோன்றவில்லை. ஆனால், கிருஷ்ணாவை பின் தொடரத்தான் வேண்டும். அவன் இன்று பாபநாசம் செல்கிறான், எதற்கு என்று தெரியவில்லை. தெரிந்து கொள்ள வேண்டுமானால், அவனுக்கும் தெரியாமல் பின் தொடரத்தான் வேண்டும். தெரிந்தால், கத்துவான். கத்தினால் கதை இல்லை*. கிருஷ்ணா, ஓரளவு படித்து சமுதாயத்துக்கு தேவையான ஒரு வேலையில் இருக்கும் சமுதாயச் சிந்தனை உள்ள ஒரு குடிமகன். இங்கு தான் எனக்கு கொஞ்சம் சந்தேகம். […]
|
|
Posted: 19 Jul 2015 04:53 PM PDT -பத்மநாபபுரம் அரவிந்தன் சில வாசனைகள் நம்மை அதை – முன்பு எப்பொழுதோ நுகர்ந்த காலத்திற்கு அழைத்துச் சென்று அச்சம்பவத்தின் நிழலுருவை மீட்டுத் தரும்…! அப்படியொரு மீட்டெடுப்பு நிகழ்ந்தது இன்றெனக்கு இவளின் வாசனை என்னுள் அதிரப்பள்ளி அருவியின் நினைவினை மீட்டெடுத்து வலைபோல்வீசி மனம் பின்னோக்கி நகர்ந்து அருவியில் குளித்தது நகர்வாழ் இவளுக்கு எப்படி வந்தது காட்டருவி வாசனை…? இவ்வாசனை இனி நுகர்கையில் இவள் நினைவும் உடன் வருமோ அருவியில் நனைந்ததைப் போல்!
|
vallamai |
|
இந்தியாவில் நேர்ந்த நரோரா அணுமின் நிலைய வெடி விபத்து [1993] Posted: 21 Jul 2015 10:22 AM PDT [Narora Atomic Power Station] சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா தவறுகளைப் புரிவது மானுடம்! ஆனால் தவறுகளைக் குறைப்பது தெய்வீகம்! [To err is human! But erring less is Divine!] முன்னுரை: 1979 இல் அமெரிக்காவின் திரிமைல் தீவு அணுமின் உலையில் நேர்ந்த யுரேனிய எரிக்கோல்கள் உருகிய விபத்தும், 1986 இல் சோவியத் ரஷ்யாவில் நேர்ந்த செர்நோபிள் அணுமின் உலை வெடிப்பும் உலக மக்களுக்கு அச்சமூட்டி அதிர்ச்சிக்குள் தள்ளி விட்டுள்ளன. பயங்கரச் […]
|
Posted: 21 Jul 2015 02:43 AM PDT ‘பாம்புத் தலைமேலே நடமிடும் பாதத்தினைப் பணிவோம் மாம்பழ வாயினிலே குழலிசை வன்மை புகழ்ந்திடுவோம்’ என்ற மகாகவி பாரதியாரின் வரிகளால் வந்த வெண்பா…. ‘பாம்பின் தலைமேல் படமொடுங்க ஆடிடும் மாம்பழ வாயா, மதுராவின், -ஆம்பிளை, சிங்கமே, வெல்லமே, சீராயர் செல்லமே வங்கக் கடல்கடைந்தோய் வா’ ….கிரேசி மோகன்….
|
|
Posted: 22 Jul 2015 07:01 AM PDT ஹரி கிருஷ்ணன் பாரதிக்கு எத்தனை மொழிகள் தெரியும் என்பது இணையத்தில் நெடுங்காலமாக விவாதப் பொருளாக இருந்து வருகிறது. விக்கிபீடியா பாரதிக்கு 29 இந்திய மொழிகளும் 3 வெளிநாட்டு மொழிகளும் தெரிந்திருந்தது என்று சொல்கிறது. https://en.wikipedia.org/wiki/Subramania_Bharati இது மிகவும் தவறான தகவல். என்னதான் பாரதி நம் நேசத்துக்குரியவன் என்றாலும் இப்படிப்பட்ட மிகைநவிற்சிகள், சொல்லப்படுவதன் நம்பகத் தன்மையைப் பெரிதும் பாதிக்கின்றன. இந்தியாவின் அலுவல் மொழிகள் (official languages) மொத்தமே 22 என்னும்போது, இவற்றைத் தாண்டி வேறு என்னென்ன ஏழு மொழிகளை […]
|
Posted: 21 Jul 2015 09:19 PM PDT ஐதீகமாய் சிவபெருமான் சந்தியா காலத்தில் நந்தியின் கொம்புக்கு இடையே பிரதோஷ நடனம் ஆடுவார்….இங்கு நந்திக்கு பதில் பசு….நமச்சிவாய மாப்பிள்ளைக்கு பதில் மைத்துனன் நம்பி….அமர்களம் கேசவ்…. ”கண்ணன் பிரதோஷ காலத்தில், காளைமுக், கண்ணனுக்கு மாற்றாய் களிநடனம்: -கண்ண நவனீதன், தில்லை நடராஜன் டான்ஸால், சிவனீதன் ஆனான்கே சவ்’’….கிரேசி மோகன்….
|
|
Posted: 21 Jul 2015 07:32 PM PDT -Niveditha Monkeys live all over the world and come in different shapes, sizes and colors. Monkeys are mammals. They are our closest relatives because they act just like humans. Monkeys are very intelligent and have opposable thumbs allowing them to use tools and play games. There are more than 260 different types of monkeys. They […]
|
|
Posted: 21 Jul 2015 07:14 PM PDT – தேமொழி. பழமொழி: சுமையொடு மேல்வைப்பா மாறு சிறந்த நுகர்ந்தொழுகும் செல்வ முடையார் அறஞ்செய் தருளுடைய ராதல் – பிறங்கல் அமையொடு வேய்கலாம் வெற்ப! அதுவே சுமையொடு மேல்வைப்பா மாறு. (முன்றுறையரையனார், பழமொழி நானூறு) பதம் பிரித்து: சிறந்த நுகர்ந்து ஒழுகும் செல்வம் உடையார் அறம் செய்து அருள் உடையர் ஆதல்-பிறங்கல் அமையொடு வேய் கலாம் வெற்ப! அதுவே சுமையொடு மேல் வைப்பு ஆமாறு. பொருள் விளக்கம்: சிறப்பாக இன்பங்களைத் துய்த்து வாழும் […]
|
|
“கல்விக்கண் திறந்தவர்” – கர்மவீரர் காமராசர்! Posted: 21 Jul 2015 05:27 PM PDT – தி. ஆறுமுகம். கர்மவீரர் காமராஜர் கையால் துவைத்து மடித்த, நீளக்கைகொண்ட நாலைந்து கதர் சட்டை, வேட்டியோடு… ரொக்கமாக நூறு ரூபாய் தவிர தனது உடமையென்று சொல்ல வேறெதுவுமின்றி, 1975 அக்டோபர் திங்கள் 2ம் நாளில் பூதவுடலை நீத்தும், பூமியில் வாழ் மனிதரின் உள்ளத்தில் உறைந்திருக்கும் தன்னலமற்ற மாமனிதர், ஏழைப்பங்காளர், கல்விக்கண் திறந்த கர்மவீரர் காமராஜர் 1903 ஜூலை 15ல் தற்போதைய விருதுநகர் (அப்போதைய விருதுபட்டி) இல் குமாரசாமி – சிவகாமி அம்மாள் மகவாக இவ்வுலகில் […]
|
|
Posted: 21 Jul 2015 05:17 PM PDT -ராகவபிரியன் வயல் தலையின் வகிடு வரப்பின்மேல் சீப்பாய் ஊர்ந்தனர் குழந்தைகள்! மதகு மடிமீது தலைவைத்துப் படுத்திருந்தது நிழல் காலடி கேட்டு ஓடி ஒளியும் அணிலாய் நிழலோடிக் குவிந்தனர் குழந்தைகள்! சுள்ளி அடுப்பின்மேல் சுகமாய் அமர்ந்து தாளமிட்டவாறே தயாரானது கூட்டாஞ்சோறு! உப்பிலிமாட்டான் கோவில் வேல்மேல் குத்திய எலுமிச்சைச் சாறாய் எல்லோர் முகத்திலும் ஆவல் வடிந்தது முதல் கவளம்…காகத்திற்கு! இந்தக் கோடையிலும் அந்தக் கூட்டாஞ்சோறு இன்னும் ஆறவேயில்லை!
|
|
Posted: 21 Jul 2015 05:06 PM PDT -பா. ராஜசேகர் கண்ணசைத்தாய் மெல்லச் சிரித்தேன் ! புன்னகைத்தாய் கை கொடுத்தாய் மெல்ல அணைத்தேன்! துள்ளிக்குதித்தாய் முத்தமிட்டாய் மனம் மகிழ்ந்தேன்! உனை அணைத்துத் தெருமுழுதும் வலம் வந்தேன் ! ஆற்றில் கலந்தாய் ஏரி குளம் நிறைந்தது பலன் தந்தாய் ! காதலித்தேன் என்னையே மறந்தேன் கிராமத்து மழையே ! நகரம் வந்தேன் பின்தொடர்ந்தாய்! புன்னகைத்தாய் மெல்லச் சிரித்தேன் ! துள்ளிக்குதித்தாய் நீ சேரும் இடம் சகதி கண்டேன் திரும்பிவந்தேன் ! உன்னையே மறந்தேன் நீ அவளில்லை நகரத்து […]
|
|
பாவாடை தாவணியில் பார்த்த உருவமா? Posted: 21 Jul 2015 05:00 PM PDT – கவிஞர் காவிரிமைந்தன். பாவாடை தாவணியில் … நினைவுகளின் நீரோடையில் தெளிவான இளம்பருவம்! வாலிபம் வந்து தலைநீட்டும் அது ஒரு வசந்தகாலம்!! தலைவன் தலைவி துணைதேடும் மானுட விளையாட்டு! இறைவன் படைப்பில் இதயங்கள் இணையும் திருமணம் எனும்கூட்டு!! காதல் என்னும் பரவசத்தால் ஆயிரம் பரபரப்பு! காலை மாலை வேளைகள் எல்லாம் நெஞ்சில் துடிதுடிப்பு!! எண்ணிப் பார்க்கும் இதயத்தில் எத்தனை அலையடிக்கும்! எண்ணத்தானே முடிவதில்லை இதுவரை ஒருவருக்கும்!! கனவுகளிலே மிதப்பதுவே பருவம் செய்யும் ஜாலமாகும்! கண்களிலே சுமப்பதுவே பருவம் […]
|
|
Posted: 21 Jul 2015 04:59 PM PDT வையவன் “ஞானும் வரும்” என்றாள் பிரீதா. இருவரும் அதை எதிர்பார்க்கவில்லை. குறிப்பாக சிவா. “நீங்க என்ன சொல்றீங்க?” என்று பிரீதாவைக் கேட்டான். “ஞானும் ரிஷிகேஷ் வரும்.” அவர்கள் புட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்த நேரத்தில் உள்ளே வந்தாள் பிரீதா. இந்த நண்பர்களின் விவாதத்தைக் கேட்டாள். திடீரென்று எதிர்பாராவிதமாக தன் முடிவை அறிவித்தாள். “என்ன பிரீதா சொல்றீங்க?” “எனிக்கு எவிடயோ போகணும் எவ்விடயெங்கிலும்” என்று தட்டுத் தடுமாறி அவள் தமிழில் தொடர்ந்தாள். “நான் இருபது நாட்களாக மனுஷியாகவே இல்லை. எனக்கு […]
|
|
Posted: 21 Jul 2015 04:59 PM PDT -துஷ்யந்தி எதையடா இழந்துவிட்டாய் இன்பத் தமிழை மறப்பதற்கு? நவீனத்துடன் ஓடுகின்றாய் நாயாய்ப் பேயாய் அலைகின்றாய்! உறக்கத்தைத் தொலைத்தாய் உறவுகளையும் தொலைத்தாய் அந்நியன் ஆக்கித்தந்த ஆங்கிலத்தைப் பேசுகின்றாய்! அரைகுறையாய் ஆடைகளையும் மாற்றித்தான் பார்க்கின்றாய் சர்வதேசம் என்ற பேரில் சாக்கடை நோக்கிப் பயணம்! “அம்மா” என்ற அழகிய தமிழை “மம்மி” என்று மரணக் கல்லறை ஆக்கிவிட்டாய்! தமிழின் இனிமையைக் கொச்சை படுத்திக் காட்டுகின்றாய்! போதும் அறியாமையை நிறுத்திடு அமுதத் தமிழை உணர்ந்திடு சர்வதேச மொழி – அது உலகின் சவால்களை […]
|
|
பொருளாதாரத்தின், புதிய வளர்ச்சி வங்கி Posted: 23 Jul 2015 04:54 AM PDT பவள சங்கரி தலையங்கம் பன்னாட்டு நிதியமான ஐ.எம்.எப், மற்றும் உலக வங்கி ஆகியவைகளுக்கு மாற்று வங்கியாக செயல்படும், ‘புதிய வளர்ச்சி வங்கி’ திறப்பு விழா, சமீபத்தில் சீன வர்த்தக நகரங்களில் ஒன்றான ஷாங்காய் நகரில் நடந்தேறியது. பிரிக்ஸ் நாடுகளான, பிரேசில், உருசுயா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய ஐந்து நாடுகளும் இணைந்து இந்த வங்கியை துவக்கியுள்ளது. இவ்விழாவில் காமத் , சீன நிதியமைச்சர் லூ ஜிவெய் மற்றும் ஷாங்காய் மேயர் யாங் சியாங் ஆகியோர் கலந்துகொண்டனர். […]
|
|
பாரதிக்குத் தெரிந்த மொழிகள் (2) Posted: 23 Jul 2015 04:44 AM PDT ஹரி கிருஷ்ணன் பாரதி தன் வடமொழிப் புலமையைப் பற்றி ஓரிடத்தில் போகிற போக்கில் குறிப்பிட்டிருக்கிறான். தற்போது சுயசரிதை என்றறியப்படும் ‘கனவு‘ நெடும்பாபடலில் குருதரிசனம் என்ற தலைப்பின் கீழ் பின்வருமாறு சொல்கிறான்: அன்றொருநாள் புதுவைநகர் தனிலே கீர்த்தி அடைக்கலஞ்சேர் ஈசுவரன் தர்ம ராஜா என்றபெயர் வீதியிலோர் சிறிய வீட்டில், இராஜாரா மையனென்ற நாகைப் பார்ப்பான் முன்தனது பிதாதமிழில் உபநி டத்தை மொழிபெயர்த்து வைத்ததனைத் திருத்தச் சொல்லி என்தனைவேண் டிக்கொள்ள யான்சென் றாங்கண் இருக்கையிலே அங்குவந்தான் குள்ளச் சாமி. […]
|
Posted: 23 Jul 2015 02:29 AM PDT கண்ணிநுண் தாம்பினால் தாய் யசோதை தன்னைக் கட்டியது போல், பசுவை தன்கரம் என்னும் வாத்சல்யக் கண்ணிநுண் தாம்பினால் கட்டிப்பிடிக்கின்றான் கண்ணன்….தாயைப் போல் பிள்ளை…. ”வாசல்யத் தாம்பினால் வாசுதே வன்மாடை சேர்த்தணைத் துக்கொள்ளும் செய்கையின், -தாத்பர்யம், ”தாயைப்போல் பிள்ளை”, தரணிக்(கு) உணர்த்தவே, ஆயர் குலத்தோனின் அன்பு”….கிரேசி மோகன்….
|
|
”திருவாடிப் பூரத்தாள் திருக்கோதை காப்பு” Posted: 24 Jul 2015 05:34 AM PDT கிரேசி மோகன்
|
|
Posted: 24 Jul 2015 04:30 AM PDT -மேகலா இராமமூர்த்தி நரையில வாகுதல் யாங்ஙனம்? மனித வாழ்க்கையில் குழந்தைப் பருவம் தொடங்கிக் கிழப் பருவம் வரை பருவங்கள் பல. பருவத்திற்கேற்ப உருவத்தில் ஏற்படும் மாற்றங்களும் பலப்பல. வயது ஏற ஏற நரை, திரை, மூப்பு, பிணி போன்ற பலவும் தோன்றி இறுதியில் சாக்காடு வாய்க்கும் என்பது பொதுவான வாழ்வியல் நியதி. அவ்வகையில், தோற்றத்தில் முதுமையை முதலில் தொடங்கிவைப்பது நரையே ஆகும். ஆண் பெண் பாகுபாடின்றி இருபாலருமே வாழ்வில் ஒருநாள் நரையைச் சந்திக்க வேண்டியிருக்கின்றது. ஆனால் இதற்கெல்லாம் […]
|
Posted: 24 Jul 2015 04:25 AM PDT – தேமொழி. பழமொழி: அயிரை விட்டு வராஅஅல் வாங்குபவர் சிறிய பொருள்கொடுத்துச் செய்த வினையால் பெரிய பொருள்கருது வாரே – விரிபூ விராஅம் புனலூர வேண்டயிரை விட்டு வராஅஅல் வாங்கு பவர். (முன்றுறையரையனார், பழமொழி நானூறு) பதம் பிரித்து: சிறிய பொருள் கொடுத்துச் செய்த வினையால், பெரிய பொருள் கருதுவாரே;-விரி பூ விராஅம் புனல் ஊர! வேண்டு அயிரை இட்டு, வராஅஅல் வாங்குபவர். பொருள் விளக்கம்: சிறிய பொருளைக் கொடுத்துச் செய்கின்ற செய்கைக்குப் […]
|
|
“பாரத ரத்னா கே.காமராஜ்” – கர்மவீரர் காமராசர்! Posted: 23 Jul 2015 06:23 PM PDT – இன்னம்பூரான். பாரத ரத்னா கே.காமராஜ் காமராசர் பாமரனின் பிம்பம். பிரதிபிம்பம் அன்று. மக்கள் என்ற கடலோடு கலந்து உறவாடிய தலைமாந்தன். மண் வாசனை பூமியில் ஊன்றிய கால்களை அவர் அகற்றியதும் இல்லை; ஆகாயகோட்டை கட்டியதும் இல்லை. அதனால், பாமரமக்களின் வாழ்வாதாரம் அவரது இதயகமலத்தில். அவர் முதல்வராக இருந்த போது, கலோனிய அரசின் இரும்புக்கோட்டை எனப்படும் ஐ.சி.எஸ் அதிகாரிகள் உயர்பதவிகளில் இருந்தார்கள். படிக்காத மேதை என்று தவறாக சுட்டிக்காட்டப்பட்ட முதல்வரிடம் அவர்கள் மிகுந்த மரியாதையுடன் பழகினார்கள். அதன் […]
|
|
“பெருந்தலைவர்” – கர்மவீரர் காமராசர்! Posted: 23 Jul 2015 06:21 PM PDT – எஸ். நித்தியலக்ஷ்மி. பெருந்தலைவர் முன்னுரை: தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, அரசரை உருவாக்குபவர் (King Maker),பெருந்தலைவர் என்ற பெருமைக்குரிய காமராசர் எளிய குடும்பத்தில் பிறந்து இந்தியாவின் தலைவிதியை நிர்ணயிக்கும் அளவிற்கு உயர்ந்தவர். வாழ்க்கைத் துணையின்றி வாழ்ந்து தமிழகத்துக்கும், இந்தியாவின் வளர்ச்சிக்கும் தான் சார்ந்த காங்கிரஸ் கட்சியின் நலன்களுக்கு மிகப்பெரும் தொண்டாற்றியவர். பிறப்பு: விருதுநகர் மாவட்டம் விருதுபட்டி என்னும் விருதுநகரில் குமாரசாமி நாடார் – சிவகாமி தம்பதியருக்கு 15.07.1903 ஆம் ஆண்டு பிறந்தார். முதலில் இவரின் பெயர் […]
|
|
Posted: 23 Jul 2015 06:03 PM PDT – தஞ்சை வெ.கோபாலன். தஞ்சை என்றதும், பசுமையான நெல்வயல்கள், அந்த வயல்களை ஈரமாக்கி விளைச்சலை கொள்ளை கொள்ளையாகத் தரும் காவிரி நதியும்தான் முதலில் நம் எண்ணத்தில் வரும். ஆடியில் காற்றடித்தால், காவிரியில் தண்ணீர் வரும் என்பர் அந்த நாளில். “ஆடியிலே காத்தடிச்சா, ஐப்பசியில் மழை வரும்” என்றொரு பாடலும் உண்டு. ‘அக்கா’ குருவிகளின் ‘அக்கோ’ எனும் சோக ஒலி சோலைகளிலும், தோப்பு, துரவுகளிலும் எதிரொலிக்கும். காவிரி வறண்டு கிடக்கும் காலங்களில் ஆற்றுப் படுகைகளில் தெருக்கூத்து விடிய விடிய […]
|
|
Posted: 23 Jul 2015 06:01 PM PDT கிரேசி மோகன் குமார சம்பவம் —————————— காப்பு ———————- சிவபார்வதி —————- சொல்லும் பொருளுமாய், அல்லும் பகலுமாய் கல்லும் கடவுளாய் கோர்ந்திருந்து -புல்லும் உமாமஹேச தம்பதியின் ஊக்கம் விழைகிறேன் குமாரசம்ப வம்செய் குறித்து….(1)….2-10-2010 முருகன் ———- உன்பிறப் புக்குமுன்னால் உண்டான சம்பவத்தை தன்படைப்பில் காளிதாசன் தந்ததைமுக் -கண்பிறப்பே முந்தைத் தமிழில் மொழிபெயர்த்திட மூலமே வந்தெனக்கு கைகொடுத்து வாழ்த்து….(2)….2-10-2010 பிள்ளையார் ————— உன்னை மறந்தால் உலகம் பழித்திடும் என்னை, எருக்கம்பூ ஏகனே -முன்னை கந்தன் மணமுடித்தாய், எந்தன் மொழிபெயர்ப்பில் […]
|
|
Posted: 23 Jul 2015 05:44 PM PDT ஒரு எளிய மனிதனின் சுயசரிதை மீ.விசுவநாதன் அத்யாயம்: 22 கரந்தையார்பாளையம்ஸ்ரீ தர்மசாஸ்தா கல்லிடைகுறிச்சிக்கு மற்றொரு பெயர் கரந்தையார்பாளையம். இந்த ஊரில் வசிக்கும் அநேகம் குடும்பத்தினருக்கு ஸ்ரீ தர்மசாஸ்தா குலதெய்வமாக இருப்பார். இந்த ஊர் என்றில்லை. மதுரையும் மதுரைக்குத் தெற்கே உள்ள திருநெல்வேலி, தூத்துக்குடி, கல்லிடைக்குறிச்சி, ஆழ்வார்குறிச்சி, கடையம், தென்காசி, செங்கோட்டை, சுந்தரபாண்டியபுரம், கடையநல்லூர், இராஜபாளையம், ஸ்ரீவில்லிப்புத்தூர், வத்தராயிருப்பு போன்ற பல ஊர்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் ஸ்ரீ தர்மசாஸ்தாவே குலதெய்வமாக இருப்பார். பெயர்கள் வேண்டுமானால் சாஸ்தா, ஐயனார், ஐயப்பன், […]
|
|
நீராழி மண்டபத்தில் தென்றல் நீந்தி வரும் நள்ளிரவில் … Posted: 23 Jul 2015 05:43 PM PDT – கவிஞர் காவிரிமைந்தன். நீராழி மண்டபத்தில் தென்றல் நீந்தி வரும் நள்ளிரவில் … 1970ல் வெளிவந்த தலைவன் திரைப்படத்திற்காக எம்.ஜி.ஆர். வாணிஸ்ரீ நடிக்க, எஸ்.பி.பாலசுப்பிரமணியம், பி.சுசீலா குரல் கொடுக்க, கவிஞர் வாலியின் பாடலிது! மெல்லிசை மன்னருக்கு குருவாய் விளங்கிய எஸ்.எம்.சுப்பையா நாயுடு அவர்களின் இசையில் உருவான கானமிது! வண்ணக்கனவுகளில் வலம் வந்த எம்.ஜி.ஆரின் காதல் பாடல்களுக்கு முன்னோடியாய் கறுப்பு வெள்ளை காலத்திலும் இதுபோன்ற இன்னிசையில் பிரபலமான பாடல்கள் பல உண்டு. நினைத்தேன் வந்தாய் (காவல்காரன்) முதலாக இதோ […]
|
|
இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(158) Posted: 23 Jul 2015 05:41 PM PDT –சக்தி சக்திதாசன். அன்பினியவர்களே ! இனிய வணக்கங்கள். வாரங்கள் ஒவ்வொன்றாய் ஓடி மறையுது. காலங்கள் காற்றாய் கனவேகத்தில் பறக்குது. ஜனனங்கள் ஒருபுறம், மரணங்கள் ஒருபுறமென இயற்கை தன் செயற்பாடுகளை கனகச்சிதமாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. வாழ்க்கை நிலைத்திடும் எனும் நினைப்பில் மனிதன் தனது தேவைகளுக்கான தேடல்களில் தன் மகிழ்ச்சியைத் தொலைத்துக் கொண்டிருக்கிறான். அன்னையின் பாதுகாப்புக் கவசமான கருப்பையிலிருந்து இந்த பூமாதவின் மடியில் விழும்போது வெற்றுக் காகிதம் போல எமது மனங்கள் பால் போல வெளுத்து இருக்கிறது. கூட்டிலிருந்து […]
|
|
Posted: 26 Jul 2015 01:36 PM PDT – தஞ்சை வெ.கோபாலன். அந்த கிராமத்து அக்கிரகாரத்தில் வெளியிடங்களுக்குக் குடிபெயர்ந்தவர்கள் போக மிச்சமுள்ள ஏழெட்டு வீடுகளில் மட்டும் இன்னமும் அங்கு நிலமோ, வேலையோ உள்ளவர்கள் மட்டும் மிச்சமிருந்தார்கள். அதே பழைய, தழைந்த ஓட்டு வீடுகள், முற்றம், தாழ்வாரம், கூடம் பின்புறம் கிணறு என்று பழைய பாணியில் அமைந்த வீடுகள். அதில் ஹெட்மாஸ்டர் வீடு என்றழைக்கப்பட்ட வீட்டில் அந்த காலத்தில் பள்ளி தலைமை ஆசிரியராக இருந்த ஒருவரின் வாரிசுகள் இன்னமும் இருந்தனர். அதில் கடைசி தலைமுறையச் சேர்ந்த பெரியவர் ஒருவர் […]
|
|
படக்கவிதைப் போட்டி 22-இன் முடிவுகள் Posted: 26 Jul 2015 11:45 AM PDT -மேகலா இராமமூர்த்தி இந்த வாரப் போட்டிக்கான படத்தைத் தந்திருக்கும் திரு. ரவிச்சந்திரனுக்கும், அதனைப் போட்டிக்குத் தேர்வுசெய்திருக்கும் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பனுக்கும் நன்றிகள் உரித்தாகுக. தந்தையின் அணைப்பில் மகிழ்ந்திருக்கும் இந்த இனிய மழலையின் கூர்த்த பார்வை நம் உள்ளத்தை ஈர்க்கிறது. மழலையின் தீண்டலுக்கும், அது வாய்திறந்து உதிர்க்கும் அமுதச் சொற்களுக்கும் இவ்வியனுலகில் ஈடேது? அதனாலன்றோ வான்புகழ் வள்ளுவரும், ”மக்கள் மெய்தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர் சொற்கேட்டல் இன்பம் செவிக்கு” என்று வாயூறிப் பேசுகின்றார். பாண்டியன் […]
|
|
Posted: 26 Jul 2015 05:19 AM PDT கிரேசி மோகன் கோவை சூரியன் எப்ஃஎம் மற்றும் கே.ஜி மருத்துவமனையும் இணைந்து நிகழ்த்திய விழாவில் அடியேனுக்கு “சிரிப்பு டாக்டர்’’ என்ற பட்டத்தை புரூக்பீஃல்ட் வர்த்தக வளாகத்தில் கே.ஜி மருத்துவமனை தலைவர், டாக்டர் பத்மஸ்ரீ ஜி.பக்தவச்சலம் அவர்கள் வழங்கினார்கள்… இது ஒரு Hyper Tension Awareness Initiative…. டாக்டர் பேசும்போது BP குறைய உப்பைத் தவிருங்கள் என்றார்….அடியேன் பேசும்போது ‘’உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள்’’ என்றேன்….நான் சொன்ன உப்பு சிரி-உப்பு சிரிப்பு….’’உப்பில்லா பண்டம் குப்பையிலே….உப்புள்ள பண்டம் தொப்பையிலே’’….’’காலை எழுந்தவுடன் வாக்கிங்….பின்பு […]
|
Posted: 26 Jul 2015 03:55 AM PDT ”குன்றெடுத்து ஆயரை அன்றுகாத்த கண்ண(ன்)இன்று கன்றெடுத்து மேகத்திற் கப்பாலே, -நன்றிது, கேசவ் மழைவருமுன், காத்திடும் வைத்தியனாய், ஈசனைப் போட்டாய்(வரைந்தாய்) இனிது’’….(OR)…. ஈசனுன் கையில் இருப்பு’’….கிரேசி மோகன்….
|
|
Posted: 25 Jul 2015 11:09 PM PDT பவள சங்கரி ‘பெரிய புராணம்’ எனும் தெய்வீக நூலில், அடியார்களைப் பற்றிப் பாடும்போது சேக்கிழார் பெருமான், கேடு மாக்கமுங் கெட்ட திருவினார் ஒடுஞ் செம்பொனு மொக்கவே நோக்குவார் கூடு மன்பினிற் கும்பிட லேயன்றி வீடும் வேண்டா விறலின் விளங்கினார். குறைவதும் மிகுவதும் இல்லாத நிலைத்த ஐசுவரியத்தை உடையவர்கள், பிச்சைபுக்கு மண் ஓட்டையும் பசும் பொன்னையும் ஒன்று போலவே காண்பவர்கள். இறைவனை இதயக்கூட்டிலே கட்டி வைக்கும் அன்பு மேலீட்டினால் அவனை வழிபடும் பிறப்பு ஒன்றேயன்றி வீட்டையும் விரும்பாத வன்மையுடையார். […]
|
Posted: 25 Jul 2015 02:18 AM PDT “கோசகா ஏ!ராச கோபாலா!, உங்கம்மா, தோஸயை வாத்தாளோ, தின்னுபுட்டு, -கேசவ்க்கு, போஸளித்து, அம்மாசேய் ஆஸதோஸ பாதமுண்ண, பாச முடன்பங்கு போட்டு’’….கிரேசி மோகன்….
|
| You are subscribed to email updates from வல்லமை
To stop receiving these emails, you may unsubscribe now. |
Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
vallamai |
|
Posted: 27 Jul 2015 10:22 AM PDT அண்ணாகண்ணன் 2002இல் நான் எழுதி, கங்காராணி பதிப்பகம் வெளியிட்ட, ‘கலாம் ஆகலாம்’ சிறுவர் பாடல் நூலின் தலைப்புப் பாடல்
|
|
Posted: 27 Jul 2015 10:15 AM PDT மீ.விசுவநாதன் சலாம் சலாம்- எங்கள் “அப்துல் கலாம்” ! கலாம் கனவு நாளை கனியும் எலாம் ! (சலாம் சலாம்…..) “அப்துல் கலா”மெனும் மனிதன் – தேச அமைப்பை மாற்றிய சரிதன் ! உப்பள பூமியில் பிறந்தான் – அணு உச்சத்தைத் தொட்டவன் சிறந்தான் ! (1) கல்வியின் மதிப்பை அறிந்தான் – அதைக் கனவு கண்டுடன் கடந்தான் ! நல்வினை மதித்து நடந்தான் -ஞான நட்புடன் மதியால் தெளிந்தான் ! (2) வள்ளுவன் […]
|
|
Posted: 27 Jul 2015 09:02 AM PDT ஷில்லாங்கில், இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் மாணவச் செல்வங்களுடன் ஒரு கருத்தரங்கில் உரையாடிக் கொண்டிருந்தபோது, நம்முடைய இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் உயர்திரு ஏ.பி.ஜே அப்துல்கலாம் அவர்கள் மாரடைப்பால், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறைவனடி சேர்ந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். மாணவச் செல்வங்களுக்கு கலங்கரை விளக்காக வழிகாட்டி, ஒளியூட்டிக்கொண்டிருந்த தீபம் நம்மை விட்டு விலகியது தாங்கொணாத் துயரம் அளிப்பது. கனவு காணுங்கள் என்று இளைய சமுதாயத்தினரை ஊக்கப்படுத்திய ஐயா இப்படி எங்களை தவிக்கவிட்டு செல்ல எப்படி […]
|
|
”கவிமணி தேசிக வினாயகம் பிள்ளை” Posted: 27 Jul 2015 02:47 AM PDT கிரேசி மோகன் இன்று ”கவிமணி தேசிக வினாயகம் பிள்ளையின்” பிறந்த நாளில் அடியேனின் மலரும் நினைவுகள்….இளமையில் ”தண்டமிழ் கொண்டல் சிதம்பரம் ஸ்வாமினாதன்” தலைமையில் ”சிந்தனைக் கோட்டம்” என்ற அமைப்பில், வாராவாரம் கவிஞர்கள் சுகி சிவம், வானவில் பண்பாட்டு நிலையத்தின் தலைவர் வக்கீல்/ கவிஞர் க.ரவி, எனது தோழன் சு.இரவி எல்லோரும் கூடி கவிகளை பாடி மகிழ்வார்கள்….இந்த அஷ்ட திக் கஜங்களுக்கு மத்தியில் அடியேன் தெனாலி ராமன் போல் அமர்வதுண்டு….அப்போது எங்கள் கிருஷ்ண தேவராயர் ”தண்டமிழ் கொண்டல்” ‘ […]
|
|
Posted: 26 Jul 2015 06:56 PM PDT பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்? திரு. சுரேஷ் ராம் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார். இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (01.08.2015) வரை […]
|
Posted: 26 Jul 2015 06:30 PM PDT ஜூலை 27, 2015 இவ்வார வல்லமையாளர் வல்லமைமிகு எம். ஆர். ஹப்பர்ட் அவர்கள் வறட்சிக்குப் பிறகு புத்துயிர் அளிக்கும் மழைக்கு ஷப்னம் என்று பெயர். அதைப் போன்று வறண்டு போன வறிய நிலையில் வாழும் சிறுவர், சிறுமியரும், இளைஞர்களும் வாழ்வில் வளம் பெறும் வகையில் தொண்டூழியம் செய்யும் அரசு சாரா தொண்டு நிறுவனம் “ஷப்னம் ரிசோர்செஸ்“ என்ற அறக்கட்டளை அமைப்பு. அரசு பதிவு பெற்ற இந்த ஷப்னம் தன்னார்வ தொண்டு நிறுவனத்தைத் தோற்றுவித்து, கடந்த 17 […]
|
|
Posted: 26 Jul 2015 06:19 PM PDT பவள சங்கரி ஆன்மீக நெறியில் நயந்து இருப்போரின் உள்ளம் என்றும் எதைக்கண்டும் அஞ்சுவதில்லை. எம்மைக் காக்கும் ஈசன், பரம்பொருள் எம்மை வழிநடாத்துவான் என்ற இறுமாப்பு கொண்டோர்களாகவே, தன்னம்பிக்கையின் சிகரமாக வலம் வருகின்றனர். அந்த வகையில் அப்பரடிகளின் பாடல்கள் அனைத்தும் பெரும்பாலும் சுதந்திர உணர்வுமிக்க எழுச்சிப் பாடல்களாகவே அமைந்துள்ளன எனலாம். உழவாரப்படை கொண்டு சமூகப் பணியையும் குறைவிலாது நிறைவேற்றியவர். சாதி, குலம், மதம் என எந்தவித வேறுபாடும் இன்றி, ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்ற தூய […]
|
|
Posted: 26 Jul 2015 05:09 PM PDT -பத்மநாபபுரம் அரவிந்தன் இரையுண்ணும் போதும் நிம்மதியற்றுத் தற்காப்புணர்வுடன் எச்சமயமும் பறக்கத் தயாராய் இருக்கும் காகம் போல மாறிவிட்டது மனித வாழ்வும்… யதார்த்த நிலை தொலைத்து ஒரு பதட்டத்துடன் நகர்கின்றன நாட்கள்… நடிப்பைச் சதா கைக்கொண்டு இயல்பைத் தொலைத்து வாழ்ந்துதான் ஆக வேண்டியிருக்கிறது! இதில் சற்றே ஏமாந்தால் நொடியில் துளைத்து விடுகிறது ஒரு தோட்டா!
|
|
Posted: 26 Jul 2015 05:08 PM PDT நிர்மலா ராகவன் மரியாதை கேள்வி: குழந்தைகளுக்கு சுதந்திரம் அளிப்பது சரிதானா? விளக்கம்: `என் குழந்தைகள் என்னைப்போல இல்லை. ரொம்ப தைரியசாலிகள்!’ பணிவு, அடக்கம், மரியாதை என்ற பெயர்களில் தாம் அளவுக்கு மீறி ஒடுக்கப்பட்டு விட்டோம் என்ற மனக்குறை உடையவர்கள் பெருமையாகப் பேசுவது இது. பழையகால வளர்ப்பு முறை தவறு என்பது அவர்கள் வாதம். சமயம் கிடைத்த போதெல்லாம் மேலதிகாரிகளுக்கு அடிவருடிகளாக, தம் புகழை ஒன்றுக்குப் பத்தாக தாமே பாடிக்கொண்டு, எதிரி என்று தோன்றுபவர்களை எல்லாம் மிரட்டலும், அவதூறும் […]
|
|
Posted: 26 Jul 2015 05:08 PM PDT -பா.ராஜசேகர் பச்சையிலே பட்டுடுத்திப் பாறையிலே முகம் புதைத்து நாணலாக இடையசைத்துத் தவழ்ந்துவரும் மலைமகளே ! வான் பொழிந்த புன்னகையிலே மலையரசி பெற்ற மலையருவி வறட்சிகண்ட உயிரினங்கள் மகிழ்ச்சிகொள்ள வந்த பேரழகே ! இளமை பொங்க இருகரையும் மனமகிழ்ந்து ஓடி ஆடி நீ ஆர்ப்பரித்துக் கொட்டும் அழகுக்கு ஈடு இணை இல்லையடி! இயற்கை தந்த இன்பத்திலே உன் சிரிப்பொலியே எமக்குப் பசுமைச் சொர்க்கமடி !
|
| You are subscribed to email updates from வல்லமை
To stop receiving these emails, you may unsubscribe now. |
Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
vallamai |
|
டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் (15-10-1931 – 27-7-2015) Posted: 28 Jul 2015 08:56 AM PDT -பா வானதி வேதா. இலங்காதிலகம் இந்திய ஏவுகணை நாயகன், தமிழ் இலக்கிய ஆர்வலன், பன்முக விஞ்ஞானி இந்தியா வல்லரசாகக் கனவு கண்டார் இராமேஸ்வரத்தில் உதித்த முத்து கலாம் இந்திய அறிவியல் நட்சத்திரம், வீணையும் இசைக்கும் இசை ஆர்வலர் மரணமற்றவர் மகத்துவர், மக்களின் ஜனாதிபதியானவருடல் மறைந்தது மனிதருள் மாணிக்கத்திற்கு ஆத்ம அஞ்சலி! பத்மபூஷன், பாரதரத்னா, ஆர்யபட்டா இன்னும் பத்விபூஷன் என்று எண்ணற்ற விருதாளர் படகுச் சொந்தக்காரர் மரைக்காயர் தந்தையார் ஜைனுலாப்தீன் – ஆஷியம்மாவின் திருப்புதல்வன் சைவ உணவுக்கார இசுலாமியர், […]
|
|
Posted: 28 Jul 2015 08:43 AM PDT -கவிஜி அவர் அனுப்பும் ஏவுகணைகள் கூடக் கருணை கக்கிக் கொண்டுதான் சீறுகிறது…! எப்போதும் புன்னகைக்கும் பூந்தோட்டமெனக் கனவுகளின் திறவுகோலையே தருகிறார்… எதிர்கால வளையத்தை நிகழ்காலக் கரங்களில் விட்டு விட்ட அக்னிக் கடவுள் அவர்! தன்னலம் அற்று விண் நலம் காக்கும் மண்ணுலகம் தந்த ஹிப்பி வைத்த அறிவியல் அவர்! சென்ற இடமெல்லாம் கல்வியை விட்டுச் செல்லும் நூலகம் அவர்! சிறகுகளின் வெளிகளைச் சின்னஞ்சிறு குழந்தைகளின் கண்களில் கொட்டிய விசைக்காரர்… கூட இசைக்காரர்! மகாத்மா என்றொரு சொல்லுக்கு மீண்டும் […]
|
|
இந்தியாவுக்கு அசுர வல்லமை அளித்த ராக்கெட் விஞ்ஞானி Posted: 28 Jul 2015 08:10 AM PDT சி. ஜெயபாரதன், கனடா டாக்டர் அப்துல் கலாம் சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா “உன் விதியை ஏற்றுக்கொண்டு, வாழ்க்கையில் முன்னேறிச் செல்; விமானப் படையில் நீ சேர்ந்து வேலை செய்யக் கூடாதென்று விதி யுள்ளது. நீ என்ன செய்யப் போகிறாய் என்பது இன்னும் நிர்ணயமாக வில்லை. ஆனால் என்ன நீ பண்ணப் போகிறாய் என்னும் விதி ஏற்கனவே நிச்சமாக்கப் பட்டுள்ளது. நீ புரிய வேண்டிய பணிக்கு அவசியம் இருப்பதால் விதியிட்ட பாதைக்கு உன்னை அழைத்துச் […]
|
|
Posted: 28 Jul 2015 05:32 AM PDT தமிழ்த்தேனீ எத்தனையோ மகன்கள் பிறந்திருக்கலாம் மகான்களாய்த் சிலரதிலே திரிந்திருக்கலாம் எத்தனையோ மனிதர்கள் பிறந்திருக்கலாம் புனிதராய்ப் பலரதிலே திகழ்ந்திருக்கலாம் எத்தனையோ பிறவிகள் பிறந்திருக்கலாம் துறவியாய் அனைத்தையும் துறந்திருக்கலாம் பலகோடி வகையாய்ப் பிறந்திருக்கலாம் பலகோடி வகையாய்ச் சிறந்திருக்கலாம் எல்லா உயிர்களையும் பிடித்திருக்கலாம் எல்லா உயிர்க்குமே பிடித்திருக்கலாம் மனிதராய் யாரும் பிறப்பதில்லை வளர்ந்தபின் குழந்தையா யிருப்பதில்லை பிறந்த பின் மனிதராய் வளர்வதில்லை மாமனிதராய் பலரும் வாழ்வதில்லை குழந்தையாய்ப் பிறந்து மனிதராய் வளர்ந்து மாமனிதராய்த் திகழ்ந்து மேதையாய் மலர்ந்து மனிதாபிமானம் கொண்டு மனிதருள் […]
|
|
Posted: 28 Jul 2015 12:29 AM PDT செல்வரகு டி. ஆர்.
|
|
Posted: 27 Jul 2015 11:59 PM PDT எம். ஜெயராமசர்மா … மெல்பேண் .. அவுஸ்த்திரேலியா வல்லரசு நல்லரசு எனமனதில் கொண்டுநிதம் வல்லவராய் நல்லாவராய் வாழ்ந்துநின்ற மாமனிதர் எல்லோரின் மனங்களிலும் இருந்தமர்ந்த கலாமவர்கள் இல்லை என்றுசொல்லிவிட எம்மனது அழுகிறது ! ஈடில்லா விஞ்ஞானி எமைவிட்டுப் போனசெய்தி நாடெல்லாம் நினைந்தழவே நமன்கூட நடுங்குகிறான் விஞ்ஞானி தனையழைத்து விண்ணவரோ மகிழுகின்றார் மண்மீது இருப்போரோ மனம்நொந்து தவிக்கின்றார் ! அப்துல்கலாம் ஐயா அனைவருமே அழுகின்றார் அணுத்துறையும் உமைத்தேடி அலமந்து நிற்கிறது அமைதியாய் இருந்துகொண்டு அனைத்தையும் செய்துநின்றாய் அழுகின்றோம் கலாமையா அழகுமுகம் […]
|
| You are subscribed to email updates from வல்லமை
To stop receiving these emails, you may unsubscribe now. |
Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
|
Posted: 29 Jul 2015 10:55 AM PDT பி. சுவாமிநாதன் ‘ஒரு மனிதன் இருக்கும்போது பேசப்படுவதை விட, இறந்த பின்தான் அதிகம் பேசப்படுவான்’ என்பதை நன்றாகவே அறிவோம். அனுபவபூர்வமாகப் பார்த்தும் வருகிறோம். ஆனால், இருக்கும்போதும் இறந்த பின்னும் – இன்று அதிகம் பேசப்பட்டு – வணங்கப்பட்டு வருபவர் உலக மேதை டாக்டர் அப்துல் கலாம் அவர்கள். ஒரு மகனின் மறைவுக்காகத் தாயாகப்பட்டவள் அழுது அரற்றி அனுதாபம் தெரிவித்தால், அவன் ஒரு நல்ல மகனாக இருந்துள்ளான் என்று அறியலாம். ஒரு கணவனின் மறைவுக்கு மனைவியாகப்பட்டவள் கண்ணீர் விட்டுக் […]
|
|
இந்திய மண்ணின் இரண்டாம் இமயம் இன்று சரிந்ததே! Posted: 29 Jul 2015 10:29 AM PDT கவிஞர் காவிரிமைந்தன் இந்திய மண்ணின் இரண்டாம் இமயம் இன்று சரிந்ததே! இவர்போல் மனிதர் இதுவரை இங்கு பிறந்ததில்லையே! வள்ளுவன் வாய்மொழி வகுத்தது பாதையென வாழ்ந்தவரல்லவா? ”சொல்’ எனும் சொல்லே உருதுமொழியில் ‘கலாம்’ ஆனதைச் சொல்லவா? காலம் நமக்குத் தந்த கொடைதான் ‘அப்துல் கலாம்’ அல்லவா? வாழும் நாள்வரை நாளும் பொழுதும் நாட்டிற்காய் உழைத்தவரல்லவா? உலகம் போற்றும் உன்னதத் தலைவர்கள் எவரும் போற்றும் புகழ்மனிதர்! மாணவ மாணவியர் மத்தியில் மட்டுமே – தன் வாழ்நாளைக் கழித்தவர்! நாளைய இந்தியா […]
|
Posted: 29 Jul 2015 04:15 AM PDT யாமறிந்து கண்ணனுக்கு பிறகு எட்டாவது அதிசயம் ‘’மதுரகவி ஸ்ரீனிவாச அய்யங்கார்’’ பாடல்கள்….கம்பராமாயணம், பாரதம், வேதாந்த தேசிகரின் ‘’பாதுகா சஹஸ்ரம்’’, நாரதீயம் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்….ஆசுகவி மேலும் மகான்….நிமிஷத்திற்கு நாலு வெண்பா எழுத வல்லவர்….அவரது புத்தகங்கள் எனது பூஜா விக்ரகங்கள்….அவருடைய ‘’பாதுகை ஆயிரம்’’ படித்து நப்பாசையில் அடியேனும் முன்பு பெருமாளின் பாதுகையைப் பாட ஆரம்பித்தேன்….பாதிகைதான் வந்தது….வேதாந்த தேசிகர் பாதுகையைப் பாடினார்….ஆனால் நம் கேசவ் பசு ‘’அதையும் தாண்டி புனிதமாக’’ கண்ணன் பாதத்தை வருடிப் போற்றுகிறது….கீழ் கண்ட அடியேன் […]
|
Posted: 29 Jul 2015 04:11 AM PDT ’’ஏக தெய்வம் ஜனார்த்தனம்’’ (இசைக்கவி ரமணனின்)பில்வாஷ்டகம் படித்த பாதிப்பில் முயன்றது…. ————————————————————————— ‘’சங்குசக்ரம் சாரங்கம் தெண்டம்வாள் நந்தகி அங்கையேந்தும் அவதார விஷ்ணு ஏக தெய்வம் ஜனார்த்தனம்’’….(1) ‘’மூணுமோர் மறைகள் மீட்க மீனமாய்க் கடலுள் சென்ற வானவைகுந்தனே ஏக தெய்வம் ஜனார்த்தனம்’’….(2) கடல்கடைந்த போதன்று வடவரையை வழுவிடாது உடல்சுமந்த ஆமையே ஏக தெய்வம் ஜனார்த்தனம் ….(3) கொம்பிலே குவலயத்தை கால்சிலம்பில் கோள்குலுங்க நெம்பிய வராகரே ஏக தெய்வம் ஜனார்த்தனம் ….(4) தானாடும் துட்டனைத் தரைமட்டம் ஆக்கிட தூணாடும் துரைசிங்கனே […]
|
|
Posted: 28 Jul 2015 09:30 PM PDT – தேமொழி. பழமொழி: தம்மை யுடைமை தலை எண்ணக் குறைபடாச் செல்வமும் இற்பிறப்பும் மன்ன ருடைய உடைமையும் – மன்னரால் இன்ன ரெனல்வேண்டா இம்மைக்கும் உம்மைக்கும் தம்மை யுடைமை தலை. (முன்றுறையரையனார், பழமொழி நானூறு) பதம் பிரித்து: எண்ணக் குறைபடாச் செல்வமும், இல் பிறப்பும், மன்னர் உடைய உடைமையும், மன்னரால் இன்னர் எனல் வேண்டா; இம்மைக்கும் உம்மைக்கும் தம்மை உடைமை தலை. பொருள் விளக்கம்: எண்ணிக்கைக்கு அப்பாற்பட்ட குறைவற்ற செல்வ வளமும், சிறந்த குடியில் […]
|
|
Posted: 28 Jul 2015 07:11 PM PDT -சரஸ்வதி ராசேந்திரன் வையம் வியக்கும் விஞ்ஞானி நீ விண்கலச் சாதனையாளன் ஏவுகணை நாயகன் கனவுகளின் நாயகன்! நினைவுகளின் நிஜம் நீ தன்னலம் கருதாத் தலைவன் நீ தன் சுகம் விடுத்துத் தமிழினம் காத்தவன்! விருதுகள் கூட உன்னால் பெருமை அடைந்தன இந்திய வீணையை மீட்டியவன் நீ இன்று உன் வீட்டு வீணை இசைப்பவனை இழந்து நிற்கிறது! தமிழினமே உன் இழப்பால் கையறு நிலையில் கலங்கி நிற்கிறது விரல் இழந்த கையாய் நரம்பிழந்த வீணையாய் நலமிழந்து வாடுகிறோம்! நீவிட்டுச்சென்ற […]
|
|
Posted: 28 Jul 2015 05:25 PM PDT -மீ.விசுவநாதன் முத்தான இளமையிலே பக்தி –முற்றாமல் இளமையிலைத் தேடி சத்தான பொழுதுகளைக் காதற் –சந்தையிலே கழித்தேனே பாவி! பித்தாகத் திரிந்தவனைக் கூட்டி –பிள்ளையெனச் சேர்த்தகுரு பாதம் பித்தாக ஆனேன்வாய் பொத்தி –பேச்செல்லாம் சிவநாம சக்தி ! (அறுசீர் விருத்தம்: காய்,காய்,மா, காய்,காய்,மா)
|
|
Posted: 28 Jul 2015 05:20 PM PDT பவள சங்கரி அடியார்கள் எந்த நிலையிலும் மனம் கலங்கி நிற்கமாட்டார்கள். போற்றுவார் போற்றலும், தூற்றுவார் தூற்றலும் ஒன்றேபோல் பாவித்து அன்பும், பக்தியும் தம் இரு கண்களென வாழ்க்கை நெறியில் சற்றும் தடம் புரளாமல் வாழ்ந்து காட்டுபவர்கள். எக்காலத்தும், எஞ்ஞான்றும் சிவபிரானை வழுவாமல் வாளாக் கிடந்து வாடி நிற்கமாட்டார்கள். அன்பும் சிவமும் இரண்டு என்பர் அறிவிலார் அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார் அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே (திருமந்திரம் : -270) அன்பும், […]
|
|
Posted: 28 Jul 2015 05:19 PM PDT வையவன் சாந்த்னி சௌக்கும், செங்கோட்டையும், குதுப்மினாரும், பிர்லா மந்திரும், குருத்வாரா ஸிஸ்கன்ஜும், ஜும்மா மசூதியும், ராஜகட்டமும், சாந்தி கட்டமும், ஜந்தர் மந்தரும், கனாட்பிளேஸும் பிரீதாவுக்கு உணர்ச்சிகளின் கலைடாஸ்கோப்பில் புதுப்புதுச் சித்திரங்களைத் தீட்டிக் காட்டின. அவள் சிரிப்பதும் வியப்பதும் ரசிப்பதும் சிவாவை விட வெற்றிவேலுக்கு திருப்தியாக இருந்தது. அவள் வந்தது சரி! ஆக்ரா, தாஜ்மஹால், பதேபூர் சிக்ரி, மதுரா. கட்டிடங்கள்.. காட்சிகள்… சரித்திரத்தின் மிஞ்சிய எலும்புக்கூடு போன்ற சாட்சிகள். ஓயாமல் ஒழியாமல் இறந்த காலத்தின் பாதுகாக்கப்பட்ட எலும்புக்கூடுகளைத் தரிசிக்கப் […]
|
|
Posted: 28 Jul 2015 05:01 PM PDT -மெய்யன் நடராஜ் வாசற்படியில்லாமல் கட்டிய வீட்டுக்கு வேயப்படாத கூரை விருந்தாளிகளாய் வருவோர் விருந்தாகும் வினோத வீடு பூச்சிகளின் அந்தர மயானம் சிக்கலான வீட்டுக்குள் சிறப்பாக வாழ்வது பற்றிக் கற்றுக் கொள்ள கட்டப்பட்ட பள்ளிக்கூடம் சிக்கலுக்குள் வாழ்ந்தாலும் சிக்கிக் கொள்வதுகளிடத்தில் சிக்கிக் கொள்ளாமல் வாழ்வதன் சிறந்த எடுத்துக் காட்டு சிக்கல் இல்லாமல் போனால் வாழ்தலில் சுவாரஸ்யம் இல்லை என்பதையும் உணர்த்தும் சிந்தனை கூரையில்லா வீட்டுக்குள் குறைவில்லாக் குடும்பம் நடத்துவதற்கான குறும்படம் அரண்மனை வாசலில் துப்பாக்கியோடு நிற்கும் காவலனை ஏமாற்றிவிட்டு […]
|
vallamai |
|
Posted: 30 Jul 2015 10:06 AM PDT “ஞானேஸ்வரி” பாவார்த்த தீபிகா(பகவத் கீதைக்கு ஞானதேவரின் உரை) படிக்கையில் தோன்றியது…. விஸ்வரூபம் கண்டு பயந்த பார்த்தனை, எள்ளி நகையாடி, பழையபடி க்ருஷ்ணரூபம் காட்டி சமாதானம் செய்விக்கிறார்….எனக்கென்னமோ கேசவின் இந்தப் பசுதான் பார்த்தன்….பதி பகவான்…. பாசம் பிரேமை….. ‘நிஜத்தினை விட்டு நிழலைப் பிடிக்க, புஜத்தினை நீட்டுகிறாய் பார்த்தா !, -அசத்துநீ, விஸ்வரூபம் கண்டு வெலவெலத்தாய், வந்துசெல்லும் க்ருஷ்ணரூபத் தில்குளிர் காய்’ ….கிரேசி மோகன்….
|
|
Posted: 29 Jul 2015 11:15 PM PDT (முன்னாள் குடியரசுத் தலைவருக்கு இரங்கற் பா) முனைவர் சி.சேதுராமன் தமிழாய்வுத் துறைத்தலைவர், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. sethurama...@yhoo.com அன்பான அருளான பண்பான பாரதத்தின் தலைமகனே! பிறப்பைச் சரித்திரமாக்கிய இந்தியாவின் பிரபஞ்சமே! எம்மில் கலந்து எம் கண்ணில் கலந்து உள்ளில் கலந்து எம் ஊனில் கலந்து விண்ணில் கலந்தாய் இன்று….! மண்ணில் பிறந்தாய்! மனிதரிலே உயர்வானாய்! விண்ணில் விதி பறக்க விதி உன்னை அழைத்ததுவோ…? எண்ணத்தில் கருவானாய்! இளைஞர்களின் எண்ணத்தில் கருவானாய்…! ஏழையரின் ஏந்தலானாய்! கண்களிலே […]
|
| You are subscribed to email updates from வல்லமை
To stop receiving these emails, you may unsubscribe now. |
Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
Posted: 01 Aug 2015 08:35 AM PDT ஓவியத்திற்கேற்ற வெண்பா எழுதி காலைக் கடனை ஸாரி கேசவ்திரு ”மாலைக் கடனை” முடிக்காமல் முன்பு எழுதியதை அனுப்பி ஓபி அடித்து விட்ட உறுத்தல் கொண்டதால்…. ”கைFULLஆ வெண்ணையொடு, கைவல்ய கண்ணனை, கைவல்ல கேசவ் கொடுக்கையில், -பொய்மல்கும் மண்நெய்க்(கு) அலைவதேன்! மானுடா , போய்மாட்டுப் பண்ணையில் கண்ணனைப் பார்”….கிரேசி மோகன்….
|
|
”அப்துல் கலாம் சார்”….TIMES OF INDIA…. Posted: 01 Aug 2015 08:30 AM PDT Crazy Mohan
|
|
Posted: 01 Aug 2015 08:22 AM PDT சத்தியமணி கலமென்று விரைந்தாய் கலாமென்று உரைத்தாய் காலமென்று கரைந்தாய் காலார துயின்றாய் இருக்கின்ற போதுன்னை எத்தனை பேர் அறிந்தார் இல்லாதபோதுன்னை எத்தனை பேர் சுமந்தார் வழித் துணையாய் நிழலாக எத்தனை பேர் தொடர்ந்தார் தன்வழியில் எத்தனையோ தடமாற்றி மறைந்தார் புகைப்படம் உடன் எடுத்தோர் முகப்பதிவில் பகிர்ந்தார் புரியாமல் உடல் எடுத்தார் (அவர் என) புரிந்து நீ நகைத்தாய் மதமென்றும் இனமென்றும் உறவுரைத்து அணைத்தார் மதியாலே அவரெண்ணம் அறிந்துநீ அணைந்தாய் அடுத்துவரும் தலைமுறையும் ஆற்றல்பெற அலைந்தாய் அணுயுகமும் (ஏவு) […]
|
|
காலத்துக்குக் காலம் உணர்வுகள் மாறுபடுமா? Posted: 01 Aug 2015 08:20 AM PDT தஞ்சை வெ.கோபாலன் முன்பு சென்னை மாகாணத்தைப் பிரித்துத் தெலுங்கு மொழி பேசுவோர் அதிகமுள்ள பகுதிகளை ஆந்திரப் பிரதேசம் என்று தனி மானிலமாகப் பிரிக்க வேண்டுமெங்கிற கோரிக்கையை வைத்து பொட்டி ஸ்ரீராமுலு உண்ணாவிரதமிருந்தார். அப்போதைய ஆந்திரத் தலைவர்கள் டி.பிரகாசம், புலுசு சாம்பமூர்த்தி போன்ற பெரியவர்கள் அந்தக் கோரிக்கையை வலியுறுத்தி வந்ததோடு பொட்டி ஸ்ரீராமுலுவின் உண்ணாவிரதத்துக்குத் தூண்டி அவர் இறப்பதையும் பார்த்திருந்தனர். உடனே தெலுங்கு மக்கள் வசிக்கும் பகுதிகள் தீப்பற்றி எரிந்தன. ஆந்திரம் கேட்டதோடு “மதறாஸ் மனதே” என்கிற […]
|
Posted: 31 Jul 2015 09:11 PM PDT ”அதனால் இதுவாய், இதனால் அதுவாய், மதனால் மயங்கும் மனமே ,-முதலாம், பதியாய் இருக்கும் ,பசுநேசன் பாதம், கதியாய்க் கிடக்கக் களிப்பு”….கிரேசி மோகன்….
|
Posted: 31 Jul 2015 08:58 PM PDT ”வாக்கிலே பாரதி வார்த்தைகள் வந்திட, நாக்கிலே நம்மாழ்வார் நின்றிட, -நோக்கிலே, ஆண்டாளின் பக்தி அகலா(து) இருந்திட, வேண்டினேன் கண்ணா வழங்கு….கிரேசி மோகன்….
|
|
Posted: 31 Jul 2015 08:55 PM PDT -சேசாத்திரி பாஸ்கர் யாக்கோப் தூக்கில் இட்டதற்கு எல்லோரும் எம்பி குதிக்கிறார்கள். சரி, இவர்களின் ஹுமன் ரைட்ஸ் இத்தனை வருஷம் என்ன செய்தது ? வன்முறையைத் தடுக்க முடிந்ததா ? இவர்கள் வன்மம் ஒரு பக்கம், இவர்கள் கோபம் ஒரு பக்கம். இத்தனை உயிர்களைப் பிரித்த இவர்களுக்கு மன்னிப்பு கொடுத்தால் மக்கள் அவனைக் கல்லடித்து கொன்று விடுவார்கள். நம் ’செகுலர்’ என்ற அன்புப் போர்வை இவர்கள் துப்பாக்கி வைத்து கொள்ளும் மறைவிடமா? சட்டத்திற்கு என்ன மரியாதை?தூக்கில் போட மாட்டார்கள் […]
|
|
எங்கேயும் எப்போதும் சங்கீதம் அவர் பெயர் Posted: 31 Jul 2015 07:54 PM PDT எஸ் வி வேணுகோபாலன் “ஆபட்ஸ்பரி திருமண மண்டபம்” என்ற பெயரைக் கேட்டதுமே, எங்களுக்குச் சம்பந்தமே இல்லாத தி நகரின் மிகப் பெரிய ஜவுளிக்கடை இல்லத் திருமணத்திற்கு அண்ணன் தம்பிகள் நாங்கள் புறப்பட்ட எழுபதுகளின் காலம் மறக்க முடியாதது. இத்தனைக்கும் பத்திரிகை மேற்கு மாம்பலத்தில் நாங்கள் குடியிருந்த வீட்டுக்குச் சொந்தக்காரரான – அந்தமானில் வர்த்தகம் செய்துவந்த ஒரு குடும்பத்துக்குத்தான் வந்திருந்தது. இருந்தால் என்ன, எப்படியோ அந்த அமர்க்களமான அழைப்பிதழ் எங்கள் கண்ணிலும் பட்டுவிட்டது. சென்னையின் பிரசித்தமான அந்த மண்டபத்தை […]
|
|
படக்கவிதைப் போட்டி 23-இன் முடிவுகள் Posted: 02 Aug 2015 10:26 AM PDT -மேகலா இராமமூர்த்தி திரு. சுரேஷ் ராமின் புகைப்படத்தைப் போட்டிக்கான படமாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன். இவ்விருவருக்கும் எம் நன்றி! வலைவீசும் கலையில் வல்லவராய் இருந்தும் எதிர்பாராமல் ஏற்படும் முடிச்சுக்கள், இம்மீனவ நண்பரின் நேரத்தை விழுங்கினாலும் அதற்கெல்லாம் சோர்ந்துபோகமாட்டார் இம்மறவர் என்றே தோன்றுகின்றது. ஐயா! மீனெறி தூண்டிலை நம்பிக்கையோடு கடலில் வீசுங்கள்! வெற்றி உம் வசப்படும்! இவ்வாரக் கவிதைப்போட்டிக்கு வந்திருக்கும் கவிமுத்துக்களை அள்ளி இரசிக்கும் நேரமிது! நீரிலே மீன் சுழலலாம்; வீசுகின்ற […]
|
Posted: 02 Aug 2015 04:20 AM PDT கீதை சொன்ன TREND அவனே குசேலன் FRIEND…. இவன் சிரித்தால் இன்று தீபாவளி…. N.S.கிருஷ்ணன்….N.S For நரகாசுரன் என்றபகைச்சுவையைப் போக்க வந்த நகைச்சுவை கிருஷ்ணன்…. ”நல்லா சிரியன், நகைச்சுவை நாயகன், நல்லா சிரியன் நூலுரைத்து(கீதை), -வில்லோனை, தேற்றிடும் சாக்கிலே, தேரேறும் தோழனவன், நேற்றின்று நாளைக்கும் நட்பு”….கிரேசி மோகன்….
|
|
Posted: 01 Aug 2015 10:21 PM PDT பவள சங்கரி நட்பு என்பது இனிமையான பொறுப்பேயன்றி அருமையான வாய்ப்பன்று! – கலீல் கிப்ரான் நாடிச்சென்று நயந்துகட்டும் வாய்ப்பின்றி அமைந்துவிடுகிறது சிறுவிதயங்களைப் பிணைக்குமந்த நட்பெனும் பொற்சரடுகள் கடந்ததை உணர்ந்ததாக வரப்போவதில் நம்பிக்கையாய் அன்றைய நிலையை அவ்வண்ணமே ஏற்றுக்கொள்ளல். புரிதலே இதன் பொருள் புரிந்துணர்வு ஒப்பந்தமல்ல மன்னிப்பதே இதன் மகத்துவம் மறப்பதல்ல இதன் தத்துவம் பொற்சரடின் பிணைப்பு தளர்வடைந்தாலும் நிலைத்தேயிருப்பது பேசவும் கேட்கவும் உணர்ந்து இடுக்கண் களையவும் இயலாத பொற்சிகரமாயினும் வெற்றுமண்ணே இதன்முன் ஆயினும் அனைத்தும் உயிராய் உன்னத […]
|
| You are subscribed to email updates from வல்லமை
To stop receiving these emails, you may unsubscribe now. |
Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
Posted: 03 Aug 2015 02:47 AM PDT கேசவ் ஓவியத்தைப் பார்த்ததும் ‘’சாந்தி நிலையத்தில்’’ சித்ராலயா கோபு வசனம் நாகேஷ் சார் ஒரு பொடியனைப் பார்த்து ‘’தம்மாத்தூண்டு பயலுக்கு தில்ல பாருடி’’ என்பார் நினைவுக்கு வந்தது….அடியேன் மிகவும் ரசித்த வசனம்…. வில்லுக்கு கீதை சொன்னதில், பாரதம் செய்ததில்,குவலயா பீடத்தின் கொம்பொசித்ததில் இப்படி பல ’தில்’ கொண்ட தம்மாத்தூண்டு பையன் பாகவதக் கண்ணன் தில் இருந்தாலும் அவன் ‘’தில் ஏக் மந்திரில்’’ குடியிருக்கும் தெய்வம் கோமாதாதான்… அனன்ய பக்திக்கு வாத்சல்யம் காட்டும் அவதாரம் கண்ணன்…. ”தம்மாத்தூண்(டு) ஆனாலும், தில்லாயர் ஆச்சியின், […]
|
|
வருமானத்திற்கு வேறு வழியா இல்லை? Posted: 02 Aug 2015 08:21 PM PDT பவள சங்கரி தலையங்கம் ‘குடி குடியைக் கெடுக்கும்’ என்பது சர்வ சாதாரணமான வழக்கு மொழியாகிவிட்டபோதிலும் ஏனோ அது எப்போதும் ஆட்சியாளர்களின் செவியில் மட்டும் விழுவதே இல்லை. மது விற்பனையினால் அரசிற்கு கனிசமான வருமானம் வருவது மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவது நல்லது அல்ல. நாட்டு மக்களின் நலனில் சற்றேனும் அக்கறை எடுக்க வேண்டியதும் ஆட்சியாளர்களின் கடமை. திருவள்ளுவர் முதல் காந்தியடிகள் வரை குடிப்பழக்கத்தின் தீமையை எடுத்துரைத்துள்ளனர். இருந்தபோதிலும் வருமானத்தை மட்டுமே கருத்தில்கொண்டு மதுவிலக்கை அமல்படுத்தாமல் இருப்பது மக்களின் மனதில் […]
|
|
Posted: 02 Aug 2015 07:05 PM PDT பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்? திரு. ராகுல் ரவீந்திரன் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார். இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (08.08.2015) வரை […]
|
Posted: 02 Aug 2015 06:30 PM PDT ஆகஸ்ட் 3, 2015 இவ்வார வல்லமையாளர்கள் வல்லமைமிகு “ஃப்ரீடமில்இபுக்ஸ்.காம்” குழுவினர் சென்ற வாரம் ஜூலை 26, 2015 அன்று “மூலிகை வளம்” என்ற மின்னூல் வெளியீட்டின் மூலம், இரண்டு ஆண்டுகளில் 200 மின்னூல்களை வெளியிட்டு தனது மூன்றாவது ஆண்டில் வெற்றிகரமாக அடியெடுத்து வைத்துள்ள தன்னார்வப் பணி செய்யும் ஃப்ரீடமில்இபுக்ஸ்.காம் குழுவினரை (freetamilebooks.com) இவ்வார வல்லமையாளர்களாகப் பாராட்டுவதில் வல்லமைக் குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம். சென்னை, மும்பை, காரைக்குடி, கோவை, விழுப்புரம், புதுக்கோட்டை, பூனே என இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும்; அமெரிக்கா, […]
|
|
Posted: 02 Aug 2015 05:14 PM PDT -மலர் சபா மதுரைக் காண்டம் – 06. கொலைக்களக் காதை இடைக்குல மடந்தையர் கண்ணகிக்குக் கொடுத்த பொருள்கள் மாதரி கூறியது போலவே, தம் இயல்பில் இருந்து சிறிதும் குன்றாத இடைக்குல மகளிர், சமைப்பதற்கு உரிய பாத்திரங்களோடு, மாட்சிமை பொருந்திய பெரியவர்கள் பிறர்க்குச் சொல்லாமல் கொடுப்பது போலவே, பூக்கள் பூக்காமல் காய்க்கும் தன்மையுடைய பலாமரத்தின் செழிப்பான திரண்ட பலாக்காய், வளைந்த கோடுகளை உடைய வெள்ளரிக்காய், மாதுளை மரத்தின் பசுங்காய், மாமரத்தின் கனியாம் மாங்கனி, வாழைப்பழம், செந்நெல், அரிசி ஆகிய இவற்றுடன் இடையர் […]
|
|
Posted: 02 Aug 2015 05:08 PM PDT -செண்பக ஜெகதீசன் கூற்றத்தைக் கையால் விளித்தற்றா லாற்றுவார்க் காற்றாதா ரின்னா செயல். (திருக்குறள்-894:பெரியாரைப் பிழையாமை) புதுக் கவிதையில்… எப்போது அழைத்தாலும் எமன் வருவான், அப்படிப்பட்டவனைக் கைதட்டி அழைத்தல் போன்றதே ஆற்றல்மிக்க பெரியோர்க்கு அல்லல் கொடுப்பதும்! குறும்பாவில்… உயிர் பறிக்கும் எமனை உவந்து அழைத்தல் போன்றதே, உயர்ந்த பெரியோர்களைத் துன்புறுத்துதலும்! மரபுக் கவிதையில்… எருமை மீது பவனிவரும் –எமனை எப்போ தழைத்தாலும் உரிமை யோடு வந்திடுவான் –உயிரைக் கொண்டு சென்றிடுவான் பெருமை மிக்கப் பெரியோர்கள் –புண்படத் தீங்கு செய்திடுதல் […]
|
|
Posted: 02 Aug 2015 05:06 PM PDT -துஷ்யந்தி சுடர் விளக்கினைப்போல் – உள்ளே இருள் குகைதனைப் போல் உள்ளம் இருக்கக் கண்டேன் – மனிதர் எண்ணம் இதுவென உணர்ந்தேன்! ஈயாதவன் தனை வௌவி – நல்ல இரவலர்க்கு ஈயும் புரவலர் போல வேண்டும் மனநிலை என்று – மனது நித்தம் சொல்லக் கேட்டேன்! வாழ்வை இழந்த குழந்தை – பலர் கைநீட்டி வீதியோரமாக வாடி நிற்பதைக் கண்டேன் – உள்ளம் வெறுத்துத் துடிப்பதை யுணர்ந்தேன்! கல்வி சிறிதும் காணா – குழந்தை வாழ்வில் உயர்வதெப்படி? […]
|
|
Posted: 02 Aug 2015 05:04 PM PDT நிர்மலா ராகவன் ஆரம்பம் எப்போது? கேள்வி: `என் பிள்ளைகளுக்கு அம்மாதான் எல்லாம்!’ என்று சில தந்தைமார்கள், நாற்பது வயதுக்குமேல், குறைப்படுவது ஏன்? விளக்கம்: தாயை, அவளுடைய இருதயத்துடிப்பை, எண்ணங்கள், உணர்ச்சிகள், குரல் எல்லாவற்றையும் ஒன்பது மாதங்கள் அதிகமாக அறிந்திருக்கிறார்களே! 1970-லிருந்து கருவின் உளவியல் (FOETAL PSYCHOLOGY) கணிக்கப்பட்டு வந்திருக்கிறது. அதன்படி, மனைவி வயிற்றிலிருக்கும் (ஐந்து மாதங்களுக்கு மேற்பட்ட) கருவிடம் தந்தை பேசியோ, பாடியோ செய்தால், அவருடைய குரல் பழகிவிடும் பிறக்கப்போகும் குழந்தைக்கு. இம்மாதிரிச் செய்த ஒரு […]
|
|
Posted: 02 Aug 2015 04:56 PM PDT -கவிஜி உள்ளக் கசிவின் உறுத்தலில் ஒருவகை நெளியலாம்… அல்லாத ஒன்றைக் கொண்டு சூடிக் கொள்ளும் சூட்சுமக் கயிறுகளின் புழுவில் நீண்ட பசி சிறு சிறு வயிறாகலாம்… கற்று மறந்த கல்வியை வெற்றுப் புறம் தள்ளப் பட்டுப் பாழாகும் பரிதவிப்பில் தரிசனம் உடைந்த ஒற்றைக் கண்ணாகலாம்… சற்றே மறந்த கணப் பொழுதைப் பிசைந்து உருட்டி உடல் முழுக்கப் பூசிக் கொண்ட பூதமாகலாம்… இல்லவே இல்லாத கருந்துளையின் சுவர்ப் பரப்பில் அசைந்தாடும் எச்சிலின் காமம் வழிந்தும் நெளியலாம்… நம்பினோரின் நயம்பட நர்த்தக […]
|
|
Posted: 02 Aug 2015 04:53 PM PDT -ஷகி, இலங்கை ஏனோ மனசு அழுகிறது எதையும் சொல்ல மறுக்கிறது! தேற்றித் தேற்றிப் பார்த்து விட்டேன் அழுது தீர்க்கட்டும் என்றே விட்டு விட்டேன்! நானாய் எதையும் நாடவில்லை தானாய் அதுவே நடக்கிறது! வீணாய் எதையோ நினைக்கிறது தரையில் மீனாய்க் கிடந்து துடிக்கிறது! வலிகள் அதற்குப் புதிதுமில்லை வஞ்சிக்கப் பட்டதும் புதிதுமில்லை! ஏக்கங்கள் அதற்குப் புதிதுமில்லை தாக்கங்கள் அதற்குப் புதிதுமில்லை! இழப்புக்கள் அதற்குப் புதிதுமில்லை ஏமாற்றங்கள் ஒன்றும் புதிதுமில்லை! புறக்கணிப்புக்கள் புதிதுமில்லை அவமதிப்புக்கள் அதற்குப் புதிதுமில்லை! தோல்வியலே வாழ்வியலாய்க் […]
|
|
Posted: 04 Aug 2015 09:16 AM PDT கிரேசி மோகன் ————————————— ”அவனியின் கர்வம், அருணையாம் பர்வம் சிவனிதய மர்ம ஸ்தலமாம்: -புவனத்தின், ஆன்மீக நெஞ்சமாம் , அண்ணா மலைதீபம், ‘’நான்’’மோகம் நீக்கும் நெருப்பு”…. ”ஆரூர் பிறந்தோர்க்கும், அக்காசி மாய்ந்தோர்க்கும் பாரில் சிதம்பரம் பார்த்தோர்க்கும், -நேரும், திருநாளாம் முக்தி அருணா சலத்தை ஒருநாள் நினைத்தாலே உண்டு”…. ”பூசை புரியாது , ஈசன் திருநாமம் ஓசை செவியில் ஒலிக்காது, -ஆசை பலவசம் போயும், மலைவலம் செய்ய, இலவசம் முக்தி இணைப்பு”…. ”மின்னிடும் பொன்னாய் , மிளிரும் வயிரமாய், […]
|
Posted: 04 Aug 2015 03:19 AM PDT ”மாதாமுந் தானை முடிச்சுள் ஒளித்துவைத்த, கீதா ரஹஸ்யமகன் கண்ணபிரான், -வேதாக, மங்கள், முனிகள், முனைந்திடும், மார்கழித் திங்களவன் தூரிகைக்குத் தாள்(PAPER)”….(OR) திங்களவன் கேசவ்க்குத் தாள்(PAPER)”….கிரேசி மோகன்….
|
|
Posted: 04 Aug 2015 03:11 AM PDT நிர்மலா ராகவன் தீபாவளி சமயம். வீட்டில் இருந்தால், பண்டிகை விசாரிக்க வருபவர்களுடன் அர்த்தமில்லாது பேசிச் சிரித்து, பிடிக்கிறதோ இல்லையோ, அவர்களுடைய குழந்தைகளைக் கொஞ்சிவைத்து,எல்லாவற்றிற்கும் மேலாக, இடுப்பு உடைய சமையற்கட்டில் வேலை பார்த்து, இரவு, `இதில் என்ன ஹாப்பி தீபாவளி?’ என்று ஒவ்வொரு முறையும் சலித்துக் கொண்டுவிட்டு, இப்போது –வயதான காலத்தில் — நானும், என் கணவரும் ஆரவாரமற்ற பினாங்கு கடற்கரைப் பகுதிக்குப் போய் ஓய்வாக இருப்பதை வழக்கமாக வைத்திருந்தோம். கடற்கரை ஓரமாக நடந்து கொண்டிருந்தபோது, என் கண்கள் […]
|
|
Posted: 03 Aug 2015 10:37 PM PDT மீ.விசுவநாதன் “குடி குடியைக் கெடுக்கும்”என்ற முதுமொழியை மறக்கச் செய்த அரசியல் போலிகளை தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இன்று அரசியல் தலைவர்களே குடித்து விட்டும், ஒழுக்கம் கெட்டும் இருப்பதால் அவர்களால் மக்களுக்கு வழிகாட்டவோ முன்னுதாரணமாக இருக்கவோ முடியாது. தமிழகத்தில் நல்ல தலைவர்கள் இருந்தார்கள். பெருந்தலைவர் காமராஜர், மூதறிஞர் ராஜாஜி, மது ஒழிப்பிற்காகத் தன் வீட்டுக் கொல்லையில் வளர்ந்திருந்த தென்னை மரங்களை எல்லாம் வெட்டி எறிந்த பெரியார் ஈ.வே.ராமசாமி, எளிய மனிதர் கக்கன், ப.ஜீவானந்தம், பாலதண்டாயுதம், பி.ராமமூர்த்தி […]
|
|
அடியாரும் ஆன்மீகமும் (5) – விஞ்ஞானமும், மெய்ஞ்ஞானமும்! Posted: 05 Aug 2015 04:33 AM PDT பவள சங்கரி இந்து மதத்தில், ஆன்மீகம் என்பது வெறும் பக்தி, வழிபாடு அல்லது மதம் சார்ந்த ஒரு விசயம் என்பதற்கும் மீறி, கூர்ந்து நோக்குங்கால் அறிவியல் சார்ந்த விசயமாகவும் காணமுடிகிறது. அதாவது மெய்ஞ்ஞானம் என்பது விஞ்ஞானம் சார்ந்ததே என்பதை உணர முடிகிறது. ‘இந்து’ என்ற வார்த்தைக்கு பல்வேறு பொருள்கள் உண்டு. அவைகளில் முக்கியமான ஒன்று, ‘ஒருவரை உற்சாகம் இழக்கச் செய்யும் அந்த ஒன்றை அழிப்பது’ என்பதாம். அந்த வகையில் நம்மை உற்சாகம் இழக்கச் செய்கிற அவநம்பிக்கை, சுயபச்சாதாபம், […]
|
Posted: 05 Aug 2015 02:54 AM PDT நீலம் அரவணைக்க, நிர்மூலம் ஆகிடும், காலம் இடம்பொருள் ஏவல்கள், -கோல, விடமுறங்கி ஆலில், விளையாடும் பிள்ளை, உடனிருக்க உற்சாக ஊற்று …. பாதம் பருகவந்த பசுவுக்கு வாத்சல்யத்தோடு பாதாம் பாலாய் ஆரத் தழுவி அருச்சுனர்க்காக இயற்றிய கீதையை இயம்புகிறான்…. காலிங்க நர்த்தனக் கூத்தாட வந்ததை, ஆலிங் கனித்தான், அவதார- மாலிங்கு, மாதாவை மெய்சுமந்து, காதோடு காதாக, கீதா ரஹஸ்யம் கொடுப்பு ….கிரேசி மோகன்…
|
|
Posted: 04 Aug 2015 11:53 PM PDT – உமாஸ்ரீ. கீழ்த்திசையில் மெல்லென எழும் உதயசூரியன் தன் தங்கக்கதிர்களை அழகாகப் பரப்பினான். “மதுரம் அப்பார்ட்மெண்ட்ஸ்” பெயருக்கேற்ற மாதிரி அழகான இருபது வீடுகள் கொண்ட கம்பீரமான அடுக்கு மாடி குடியிருப்பு. ஏ பிளாக், பி பிளாக் என்று இரண்டு பிரிவுகள் உண்டு. சென்னைக்கு அருகிலிருக்கும் கோவூரிலுள்ள அந்தக் குடியிருப்பு சமீபத்தில்தான் கட்டி முடிக்கப்பட்டது. ”வாட்ச்மேன், வாட்ச்மேன்“ பத்மா உரத்த குரலில் அழைத்தாள். ரத்தன் கீழேயிருந்து அண்ணாந்து பார்த்து “இதோ வந்துட்டேம்மா“ என்று குரல் கொடுத்து விட்டு மேலேறிச் […]
|
|
முன்பு பின்பு இன்றி: கம்பரின் எதிர்காலவியல் சிந்தனைகள் Posted: 04 Aug 2015 05:16 PM PDT – முனைவர் மு.பழனியப்பன். முன்பு பின்பு இன்றி (கம்பரின் எதிர்காலவியல் சிந்தனைகள்) முக்காலங்களில் சிறப்படையது எதிர்காலம். இன்றைய காலத்தில் நின்றுகொண்டு, நேற்றைய காலங்களில் நடந்த தவறுகளைத் திருத்திக்கொண்டு நாளைய காலத்தை வளமாக அமைத்துக்கொள்ள வாய்ப்பிருப்பதால் எதிர்காலம் நம்பிக்கைக்குரிய காலமாக விளங்குகின்றது. எதிர்காலத்தில் நிகழ உள்ள, நிகழவேண்டிய நடப்புகளை இன்றைக்கு அல்லது நேற்றைக்குச் சொல்லுவது என்பது எதிர்காலவியல் ஆகின்றது. வரலாறு (https://ta.wikipedia.org/s/a8d) தற்கால மாற்றங்களின் போக்குக்கள், விஞ்ஞான (https://ta.wikipedia.org/s/1bl) தொழில்நுட்ப வளர்ச்சி நிலைகள் போன்ற பல அம்சங்களின் துணையுடன் […]
|
|
Posted: 04 Aug 2015 05:15 PM PDT – தேமொழி. இனபேதம், குறிப்பாக வெள்ளையர் உயர்ந்தவர் என்ற எண்ணம் பரவலாக அமெரிக்காவில் இருந்தது, இருக்கிறது….இன்றும் கூட !!!! சரியாக 150 ஆண்டுகளுக்கு முன்னர் கறுப்பினத்தவரை அடிமையாக அடக்கி ஆள்வதை தடை செய்ததில் துவங்கிய அமெரிக்க உள்நாட்டுப் போர் நிகழ்ந்த காலத்தில், அமெரிக்காவின் தென்மாநிலங்கள் “கன்ஃபெடரேட்” (Confederate) கூட்டமைப்பாக அமெரிக்க வடமாநிலங்களுடன் போரைத் துவக்கியது. கறுப்பின உழைப்பாளிகளை அடிமைகளாக, தங்களது சொத்துகளாக வைத்திருப்பது தென்மாநில மக்களுக்கு, குறிப்பாகப் பெரிய நிலபுலன்கள் கொண்ட நிலக்கிழார்களுக்கு மிகவும் உதவிய சமூக […]
|
|
வேலாலே விழிகள் இன்று ஆலோலம் இசைக்கும் … Posted: 04 Aug 2015 05:15 PM PDT – கவிஞர் காவிரிமைந்தன் அன்பின் பரிபாஷையை உள்ளம் எப்போதும் வரவேற்கும். அது கண்களால் பேசினாலும் சரி, இமைகளால் அசைக்கப்பட்டாலும் சரி, புன்னகையால் பூத்திருந்தாலும் சரி, படைப்பியிலின் நியதிப்படி ஒன்றை ஒன்று நாடும், தேடும், திரைப்படமாக இருந்தால் பாடும்! சரிதானே!! என்னைப்போல் ஒருவன் திரைப்படத்திற்காக நடிகர்திலகம் சிவாஜி கணேசன் அவர்களுடன் உஷா நந்தினி இணைந்து வழங்கிய ஒரு காதல் சித்திரம் இப்பாடல்! சந்தங்கள் நர்த்தனமாடும் இசை அதற்கு ஏற்ப வளைந்து கொடுக்க, மெல்லிசை மன்னரின் இன்னிசையில் உருவான காதல் […]
|
|
Posted: 04 Aug 2015 05:07 PM PDT கவிதை மூலம்: பாப்லோ நெருடா மொழி பெயர்ப்பு: ந. சந்திரக்குமார் என்னை நீ மறப்பாய் எனில் கவிதை மூலம்: பாப்லோ நெருடா மொழி பெயர்ப்பு: ந. சந்திரக்குமார் நீ ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டுகிறேன். நீ அறிந்திருக்கலாம், இது இப்படித்தானென்று: பளிங்கு நிலவையோ இலையுதிர் காலத்தின் நிதானத்தில் சிவப்பு மரக்கிளையையோ என் ஜன்னல் வழியே நான் பார்ப்பதும் தீயில் எரியும் மரக்கட்டையின் தொட்டுணர முடியாத சாம்பலை அல்லது உருமாறிய அதன் தண்டை நெருப்பினருகில் நான் தொடுவதும் என […]
|
|
Posted: 04 Aug 2015 04:58 PM PDT -பாஸ்கர் சேஷாத்ரி சுமார் நாற்பது வருஷங்கள் இருக்கும். அவர் பீ. எஸ். ராமச்சந்திர அய்யர். எனக்கு பள்ளியில் ஆங்கில வாத்தியார். அச்சுப் போலக் கையெழுத்து; நடுத்தரமான உசரம். வெள்ளைக் கதர் ஜிப்பா,வேட்டி. அதனைத் துவைத்தால் காய்வதற்கே ரெண்டு நாளாகும். கொஞ்சநாள் தாச்சி அருணாசலம் தெருவில் இருந்தார். ’ரொட்டிக்காரன் தெரு’ என்றால் பழைய மயிலாப்பூர்வாசிகளுக்குத் தெரியும். சமயத்தில் வகுப்புக்குப் பிரம்புக்குச்சி கொண்டுவருவார். அவ்வப்போது மாறும் என்றால் அது எத்தனை கையைப் பதம் பார்த்திருக்கும்! அவரைப் பார்த்தால் கொஞ்சம் பயம் […]
|
|
Posted: 04 Aug 2015 04:52 PM PDT – மீனாட்சி பாலகணேஷ். நின்னைப்போல் பாவை தெரியுதடீ! வீணையின் சுநாதம் எழுந்து அந்தப் பெரிய அறையை நிறைக்கின்றது. ‘விறு விறு’வென்ற ஒரு ராகத்தின் ஸ்வரக் கோர்வையைப் பின் தொடரும் ஒரு வாசிப்பு அருமையான கமகங்கள் நிறைந்து மனத்தை மயக்கும் வகையில் அநாயாசமாக வீணை வித்தகனான ஆசானின் வீணையிலிருந்து எழுகின்றது. அதனைத் திரைக்குப் பின் அமர்ந்துள்ள அவரது மாணவி அப்படியே திரும்ப வாசித்துக் காட்ட வேண்டும்… அவளும் முயற்சிக்கிறாள். குருவுக்கேற்ற மாணவி தான்… ஆயினும் சோதனையாக, […]
|
|
Posted: 04 Aug 2015 04:47 PM PDT -கவிஜி கொழுத்த தனிமனிதத் தத்துவம் குளமாகி வழியத் துவங்க, பொதுவுடைமை கடல் ஆக, காத்து நிற்கும் கொக்கின் ஒற்றைக் காலைக் கவ்விக் கொண்டு நிற்கிறது பசி என்னும் மாயக் கைகளின் வயிறு…! வயிற்றின் மேல் ஒட்டிக் கிடக்கும் சிவப்புத் துணியில் கொழுத்தவனின் குளம் வடிகட்டப் படுகிறது…! ஏகாதிபத்திய எதேச்சாதிகாரம் திமிங்கலத் தீவாய் கடல் அசைக்கிறது! கரைதட்டி நிற்பது குளம் கொண்ட காவுகளின் சிவப்பு வண்ணச் சித்தாந்தம்! நீச்சல் மறக்கும் திமிங்கிலம் கரைக்கு இரையாவது எதிர்காலப் புரட்சி! வந்தே […]
|
| You are subscribed to email updates from வல்லமை
To stop receiving these emails, you may unsubscribe now. |
Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
vallamai |
|
பயன்மிகு இணையவழிச் சேவைகள் – கட்டுரைப் போட்டி முடிவுகள் Posted: 06 Aug 2015 04:53 AM PDT அன்பினிய நண்பர்களே, வணக்கம். சென்ற [ஜூலை, 2015] மாதத்திற்கான, ‘பயன்மிகு இணையவழிச் சேவைகள்’ கட்டுரைப் போட்டிக்கான, நடுவர் திரு ஐயப்பன் கிருஷ்ணன் அவர்களின் முடிவை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துகள். இந்த மாத போட்டிக்குத் தயாராகிவிட்டீர்களா? விரைவில் தங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டுகிறோம். வாழ்த்துகள். ஐயப்பன் கிருஷ்ணன் மூன்று கட்டுரைகளில் இரண்டின் பேசு பொருள் ஒன்றாக இருக்கிறது. திருமதி. சிவானந்தம் கனகராஜ். மற்றும் – எஸ். நித்யலக்ஷ்மி. இருவரும் இணையத்தில் ஆவண சேமிப்பு மற்றும் பகிர்தல் குறித்து […]
|
Posted: 06 Aug 2015 02:57 AM PDT ”மேய்ப்போன் அவனிருக்க, மந்தை மனமேனோ, போய்ப்போய்ப் புலனைந்தைப் பேணுகின்றாய், -தாய்போல, வேற்றுமை பாராது வேண்டியதை ஊட்டிடும், காற்றினி லேவரும் கீத்”….கிரேசி மோகன்….
|
| You are subscribed to email updates from வல்லமை
To stop receiving these emails, you may unsubscribe now. |
Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
|
கர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி – நினைவூட்டல் Posted: 07 Aug 2015 03:53 AM PDT அன்பினிய நண்பர்களுக்கு, வல்லமை மின்னிதழும் கவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கமும் இணைந்து வழங்கும் கர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி வணக்கம். அன்னை சிவகாமி பெற்றெடுத்த தமிழ்ச் சிங்கம்.. பொற்கால ஆட்சியை நடத்திக் காட்டிய தலைவர்! தர்மமே மானிடப் பிறப்பெடுத்துத் தரணியிலே வந்துதித்து ஏழைகளைக் காத்து நின்றதென்றால் காமராசருக்கே அது சாலப் பொருந்தும். நம் தமிழ் நாட்டில் இலட்சோப லட்சம் மக்கள் கல்விச்செல்வம் பெற்றுத் திகழ்வதற்கு காமராசர் ஒருவரே காரணம் என்பதை மறுக்க இயலாது. எளிமைக்கு இவர், இனிய […]
|
Posted: 07 Aug 2015 03:05 AM PDT ”நீந்தித், தவழ்ந்து, நடந்துவிரைந்(து) ஓடியாடி, ஏந்தினாய் வேடங்கள் எத்தனை, -சாந்தி, உனக்களிக்க வெண்பாவில், உட்கார்நீ ஓய்வாய், எனக்களிப்பாய் வேலை எழுத்து”…. ”எழுத்தில் பிழையிருந்தும், ஏற்றுக்கொள் கண்ணா, வழுத்த வழியறியேன் வேறு, -பழுத்த, கவியாக்கி(டு) என்னை, குறையொன்றும் இல்லாப், புவிவாழ்வை கோவிந்தா போடு”…. ”மாற்ற உடையின்றி, மானமே கூரையாய்க், காற்றைப் புசிப்போரும் காணாத, -நாற்றத், துழாய்மணி மார்பா, திருவருளை இந்தக், குழாய்வழி சோவென்று கொட்டு”…. ”கொட்டும் மழைக்குக், குடையாகக் குன்றினைச், சுட்டு விரலால் சுமந்தவா, -திட்டம், உனக்குண்டோ […]
|
Posted: 06 Aug 2015 05:34 PM PDT -மேகலா இராமமூர்த்தி சின்னப் பையனும் கொழுத்த மனிதனும்! பெயர்களைப் பார்த்ததும் சின்னப் பையன் ஒருவனைப் பற்றியும், கொழுத்த மனிதன் ஒருவனைப் பற்றியும் ஏதோ சொல்லப் போகிறேன் என்றுதானே நினைக்கிறீர்கள்? நீங்கள் நினைப்பது சரிதான்…நான் சொல்லப்போவது அவர்கள் இருவரையும் பற்றித்தான்! ஆனால் அவர்களிருவரும் உயிருள்ள மனிதர்கள் அல்லர்! பின்பு யார் என்கிறீர்களா? அவர்கள் இருவரும் ஒரு நாட்டையே பேரழிவுக்கு உள்ளாக்கிய அணுகுண்டு வடிவிலான அரக்கர்கள் ஆவர்! இனியும் புதிர் எதற்கு? சின்னப் பையனும் (Little Boy), கொழுத்த மனிதனும் […]
|
|
Posted: 06 Aug 2015 05:28 PM PDT – தேமொழி. பழமொழி: நாவல்கீழ்ப் பெற்ற கனி கற்றானும் கற்றார்வாய்க் கேட்டானும் இல்லாதார் தெற்ற உணரார் பொருள்களை – எற்றேல் அறிவில்லான் மெய்தலைப் பாடு பிறிதில்லை நாவற்கீழ்ப் பெற்ற கனி. (முன்றுறையரையனார், பழமொழி நானூறு) பதம் பிரித்து: கற்றானும், கற்றார் வாய்க் கேட்டானும், இல்லாதார் தெற்ற உணரார், பொருள்களை; எற்றேல், அறிவு இலார் மெய்த் தலைப்பாடு பிறிது இல்லை; நாவல் கீழ்ப் பெற்ற கனி. பொருள் விளக்கம்: (அறிவுபெறும் பொருட்டு தாமே முயன்று) […]
|
|
Posted: 06 Aug 2015 05:06 PM PDT சு. கோதண்டராமன் திருவாஞ்சியம் வன்னி கொன்றை மதமத்தம் எருக்கொடு கூவிளம் பொன்னி யன்ற சடையிற் பொலிவித்த புராணனார் தென்ன வென்றுவரி வண்டிசை செய்திரு வாஞ்சியம் என்னை யாளுடை யானிட மாகவு கந்ததே -சம்பந்தர் ஹரதத்த சர்மா திருவாஞ்சியம்வாசி ஆகி மூன்று வருடங்கள் ஆகின்றன. அதற்குள் ஊர் மக்கள் அத்தனை பேரின் அன்புக்கும் மரியாதைக்கும் பாத்திரமாகிவிட்டார். ஊரில் யார் வீட்டில் எந்த விசேஷமானாலும் வலுவில் போய் உதவி செய்வார். அடுத்த வீட்டுக்காரர் கூரை வேய்ந்து […]
|
|
Posted: 06 Aug 2015 04:55 PM PDT -எம் . ஜெயராம சர்மா – அவுஸ்த்திரேலியா பார்வையை இழந்தவர்கள் பலபேர்கள் இருக்கின்றார் பார்வையுடன் இருப்பவர்நாம் பலவழியில் உதவிடலாம் ! கல்விதனைக் காணாமல் கணக்கற்றோர் நாட்டிலுள்ளார் கற்றுநிற்கும் நாமவர்க்குக் கற்பதற்கு உதவிடலாம் ! அன்னைதந்தை […]
|
|
சித்திரச் செவ்வானம் சிரிக்கக்கண்டேன் … Posted: 06 Aug 2015 04:53 PM PDT – கவிஞர் காவிரிமைந்தன். சித்திரச் செவ்வானம் சிரிக்கக்கண்டேன்… முழுநிலாக்கோலம்போல் முகமிருக்க, மோகனராகத்தை மனம் படிக்க, கடற்கரை அலைகளும் மெட்டமைக்க, வருகின்ற பாடல் கதை சொல்கிறது! காற்றினிலே வரும் கீதம் என்கிறது! முத்துராமன், கவிதா ஜோடி எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில், ஜெயச்சந்திரன் குழுவினரோடு பாடிய பாடல், இளையராஜாவின் இதமான இசை கவிதையைக் கைப்பிடித்து வருகிறது! பஞ்சு அருணாசலம் அவர்களின் பாடலிது! இது அவரின் சொந்தப்படம் என்பதும் கூடுதல் தகவல்! நீரின்மேல் அமைந்திட்ட குடில்தன்னை மலர்கள் அலங்கரிக்க, ஓடமது , ஏதோ […]
|
|
எல்லோரும் வழிபடத்தக்க போப் பிரான்ஸிஸ் Posted: 06 Aug 2015 04:52 PM PDT – நாகேஸ்வரி அண்ணாமலை. போப் பிரான்ஸிஸ் போப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவுடனேயே மற்ற கார்டினல்களிடம் பின்வருமாறு கூறினாராம்: என்னைத் தேர்ந்தெடுத்ததற்கு இறைவன் உங்களை மன்னிக்கட்டும். அவர் அப்போது நகைச்சுவையாக அப்படிக் கூறினாலும் இப்போது சிலராவது அவரைத் தேர்ந்தெடுத்ததற்கு தங்கள் மனதிற்குள்ளேயாவது வருந்தக் கூடும். அவருடைய சிந்தனைகள், பேச்சுக்கள் இதுவரை எந்தப் போப்பும் சிந்திக்காதவை, பேசாதவை. ஆரம்பத்திலேயே இவர் வித்தியாசமானவர் என்று தெரியவந்தாலும் இத்தனை வித்தியாசமானவர் என்று தெரியவில்லை. சாதாரணமாக மதபோதகர்கள் மத சம்பந்தப்பட்ட விஷயங்களில்தான் கவனம் செலுத்துவார்கள்; மத போதனைகளைத்தான் […]
|
|
Posted: 06 Aug 2015 04:51 PM PDT -றியாஸ் முஹமட் தீப்பந்தங்கள் எல்லாம் என்னை நோக்கியே குறி வைக்கப்படுகிறது கருகிப் போன என் தோல்களுக்கு வலி உணர்வு தெரிவதேயில்லை பாழாய்ப்போன என் மனதிற்குப் பாதகர்களின் கொடும் செயல் புரிவதேயில்லை! கருகிப்போன என்னுடம்பின் தழும்புகளையும், நரம்புகளையும் எலும்புகளையும் எப்படித்தான் அடையாளம் கண்டு சித்திரவதை செய்கிறார்களோ…? உணர்வுகளற்று உயிரும், கருகிப் போன உடல்தானே ! இனி, கருநாகம் தீண்டினாலென்ன? கழுகுகள் கொத்தினாலென்ன? கண்டம் துண்டமா நீ வெட்டினாலென்ன? இறைவன் வகுத்த போதனையில்தானே வாழ்ந்தேன் ஏன் இந்தச் சித்திரவதையால் சாகிறேன் […]
|
vallamai |
|
Posted: 08 Aug 2015 03:33 AM PDT கேசவ், பிரமாதம்….ஓங்கி உலகளந்த ஓவியம்…. ‘’கன்றதன் உச்சியைக் கண்ணன் முகர்தலும், நின்றது நெஞ்சம் நெகிழ்தலும், -நன்றிது(சூப்பர்), கீதை ‘அ’வுக்களித்து, ஆதரவு ‘ஆ’வுக்கும், காதல் ‘இ’வுக்கும் கொடுப்பு’’….கிரேசி மோகன்…. ‘அ’வுக்கு கீதை-அருச்சுனர்க்கு கீதை ‘ ஆ’வுக்கு ஆதரவு-பசுவுக்கு வாத்சல்யம் ‘இ’வுக்கு-இராதை EVEவுக்கு காதல்…’ஈ’வுக்கு-ஈன்றவளுக்கு விஸ்வரூபம்….’உ’வுக்கு-உரலுக்கு மோட்ஷம்…. இப்படியாக பாகவத ஹரிச்சுவடி….
|
|
நினைவு நாள் : [August 5, 1945] Hiroshima Day ஜப்பானில் போட்ட முதல் அணுகுண்டுகள் Posted: 08 Aug 2015 02:26 AM PDT ஜப்பானில் போட்ட முதல் அணுகுண்டுகள் [ஆகஸ்டு 6, 1945] சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா http://www.dailymotion.com/video/x2e5ikv_hiroshima-nuclear-atomic-bomb-usa-attack-on-japan-1945_travel http://www.dailymotion.com/video/x259uwy_hiroshima-nuclear-atomic-bomb-usa-attack-on-japan-1945_people அணு ஆயுதங்கள் உண்டாக்கிய முதல் பிரளயம்! ‘உலகத்தைத் தூள் தூளாகத் தகர்க்கும் மரண உருவெடுத்து விட்டேன், நான்! என்று கிருஷ்ண பரமாத்மா பகவத் கீதையில் அர்ஜூனனுக்கு அருளிய ஓர் வேத மொழியை, நியூ மெக்ஸிகோ சோதனைத் தளமான டிரினிடியில் [Trinity], 1945 ஜூலை 16 நாள் சரித்திரப் புகழ் பெற்ற முதல் ஆய்வு அணுகுண்டு, பயங்கர வெடிப்பை உண்டாக்கிய போது, ராபர்ட் […]
|
| You are subscribed to email updates from வல்லமை
To stop receiving these emails, you may unsubscribe now. |
Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
|
படக்கவிதைப் போட்டி 24-இன் முடிவுகள் Posted: 09 Aug 2015 09:50 AM PDT -மேகலா இராமமூர்த்தி திரு. ராகுல் ரவீந்திரன் எடுத்த இந்தப் படத்தை இவ்வாரப் போட்டிக்குத் தேர்வு செய்து தந்தவர் நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். புகைப்படம் தந்தவருக்கும் அதனைத் தேர்ந்தெடுத்துத் தந்தவருக்கும் வல்லமையின் நன்றி! காந்தள் மெல்விரல் சிவப்பப் -பாந்தமாய் யாழ்மீட்டும் பெண்ணே! காந்தமாய் உன்னெழில் ஈர்க்கப் -பாய்கிறது கவிதையெனும் வெள்ளம்! என்று பாடுமளவிற்குக் கவிமழை பொழிந்திருக்கின்றார்கள் நம் கவிஞர்கள் இவ்வாரம்! இனி, கவிவெள்ளத்தில் நீந்துவோம் வாரீர்! ’நங்கையிவள் நளின […]
|
Posted: 09 Aug 2015 08:00 AM PDT ”எத்தனை ஜென்மங்கள் யாமெடுத் தாலுமே, அத்தனே ஆயர் அணிவிளக்கே, -இத்தரையில், கேசவ் கரங்களில் வாசம் புரிந்திடுவாய் தேசம்நூற் றெட்(டு)எமக்க தான்’’….கிரேசி மோகன்…. தேசம் நூற்றெட்டு-திவ்ய தேசம் 108….
|
|
Posted: 08 Aug 2015 10:17 PM PDT Crazy Mohan
|
|
Posted: 08 Aug 2015 07:28 PM PDT “சொந்தப்பாக்(கு) ஆரணம் தந்தப்பா தென்பழனி கந்தப்பா சோணை கிரிநாதர் -சந்தப்பா , என்தப்பா வெண்பா எழுத்தில் தளைதட்டல் ! குந்தப்பா என்நாவுக் குள்”….கிரேசி மோகன்…. ஆரணம் -வேதம்…. அறுபடையோன் புகழ்…. —————————————— திருவேரகம்(சுவாமி மலை)…. ————————————- ”குந்திக்கால் மண்டியிட்டு கூப்பியக் கைகொண்ட தந்தைக்கு சொன்ன தனயனை -சிந்தைக்குள் வேராக ஊன்றி விருட்ஷமாய் நட்டிடு ஏரகச் செல்வனை ஏத்து’’….(1) பழமுதிர்சோலை ——————– ”கூப்பாடு போட்டவுடன் கும்பல் கூடிடும் தோப்பாய் இருந்து தனிமரமாய் -மூப்பால் கிழமுதிரும் போதேனும் கந்தன்கை கோர்க்க […]
|
| You are subscribed to email updates from வல்லமை
To stop receiving these emails, you may unsubscribe now. |
Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
|
உலகில் முதல் அணு ஆயுதம் ஆக்கிய ராபர்ட் ஓப்பன்ஹைமர் Posted: 10 Aug 2015 09:02 AM PDT (1904-1967) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா விண்வெளியிலே ஒரே சமயத்தில் ஓராயிரம் சூரியன்கள் வெடித்துக் கதிரொளி பரப்பினால் எப்படி இருக்குமோ அப்படித்தான் பராக்கிரம் படைத்த வல்லவனின் பேரொளி இருக்கும் ! உலகத்தைத் தூள் தூளாகத் தகர்க்கும் மரண உருவெடுத்து விட்டேன் ! கிருஷ்ண பரமாத்மா (பகவத் கீதை) அணு ஆயுதப் பெருக்கத்தை ஆரம்பித்த அமெரிக்க விஞ்ஞானி! அணு ஆயுதப் படைப்புக்கு ஐம்பது ஆண்டுகளாக நேரிடை யாகவோ அன்றி மறைமுக மாகவோ வழி வகுத்தவர்கள், முக்கியமாக ஐந்து விஞ்ஞான மேதைகள்! முதலில் […]
|
|
Posted: 10 Aug 2015 03:02 AM PDT நிர்மலா ராகவன் `நீ யாரை வேணுமானாலும் கல்யாணம் பண்ணிக்க. எனக்கு இருக்கிற வேலையில, ஒனக்கு எங்கே போய் மாப்பிள்ளையைத் தேடறது?’ கவிதாவுக்குப் பதினைந்து வயதானபோதே மங்களம் அப்படிக் கூறியிருந்தாள். `அட, ஜாதகம், மத்த பொருத்தமெல்லாம் பாத்துச் செய்யற கல்யாணமெல்லாம் நல்ல விதமா அமைஞ்சுடுதா, என்ன!’ பத்துப் பொருத்தம் பார்த்து செய்த திருமணமானாலும், இரண்டே வருடங்களில் அவளைவிட்டு எங்கோ தலைமறைவாகிவிட்ட கணவனால் அவளது சிந்தனை, அணுகுமுறை வித்தியாசமாக இருந்தது. சில பெண்களைப்போல ஒரேயடியாக இடிந்து போய்விடாது, மேற்படிப்புப் படித்து, […]
|
Posted: 10 Aug 2015 02:37 AM PDT ”களிப்பில் திளைத்துக், களைத்துச் சலித்துப், புளிக்கும் பழமாம்இப் பூமி, -ஒளித்த, நிலத்தை வராகமாய், நெம்பிய ஆயர், குலத்தோனின் கால்கண்கை கூப்பு”….கிரேசி மோகன்….
|
|
வெளிச்சக்கடன் கேட்கும் வெள்ளிநிலா! Posted: 09 Aug 2015 07:59 PM PDT -மெய்யன் நடராஜ் முக்கனியின் இரண்டாங்கனி முகமெடுத்த போதிலுமே –முள்போன்று குத்தாத முகமலர்ச்சி கொண்டிருந்தே அக்கனியின் உள்ளிருக்கும் அமுதச்சுளை போலிருக்கும் –அகம்படைத்த குலமகளாய் அன்புஎனும் மேகத்தினால் சர்க்கரைபோல் இனிக்குமொரு சாரல்மழை பொழிந்திட்டால் –சாக்கடைபோல் கிடப்பவனும் சந்தனமாய் உருமாறும் அக்கறையும் கொண்டெழுந்து அடியெடுத்துக் கால்நடக்க –அமைகின்ற தாரமவன் அரண்மனைக்கு அஸ்திவாரம்! இல்லையெனும் பாடலினை எந்நாளும் பாடாமல் –இருப்பதனை கொண்டவளும் பொறுப்புடனே நடந்திட்டால் தொல்லைதரும் வாழ்வினிலே தொடர்கதையாய் வருகின்ற –துன்பங்கள் துயரங்கள் தூரத்தில் போய்மறையும் எல்லையில்லா ஆனந்தம் இல்லறத்தில் பூப்பூக்கும் –எதிர்கால […]
|
Posted: 09 Aug 2015 06:30 PM PDT ஆகஸ்ட் 10, 2015 இவ்வார வல்லமையாளர் வல்லமைமிகு மீனாட்சி பாலகணேஷ் அவர்கள் வல்லமை இதழின் எழுத்தாளர்களில் ஒருவராகத் தனது இலக்கியப்படைப்புகள் மூலம் வல்லமை வாசகர்களைத் தொடர்ந்து மகிழ்வித்துவரும் திருமதி மீனாட்சி பாலகணேஷ் அவர்களை இவ்வார வல்லமையாளராகப் பாராட்டுவதில் வல்லமைக் குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம். இந்திய இலக்கியங்களையும் அதில் வரும் காதலர்களையும் அறிமுகப்படுத்தி, இலக்கிய நயம் பாராட்டுதலையும், அக்காதலர்களின் காதலின் மேன்மையையும் ஒருங்கே வழங்கிவரும் “காதலின் பொன்வீதியில்” (http://tinyurl.com/kadhalin-ponveethiyil) என்ற கட்டுரைத்தொடருக்காக அவர் பாராட்டப் படுகிறார். அறிவியல் […]
|
|
Posted: 09 Aug 2015 05:37 PM PDT பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்? திரு. வினித் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார். இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (15.08.2015) வரை உங்கள் […]
|
|
Posted: 09 Aug 2015 05:13 PM PDT திவாகர் (இது ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட கதை. இந்த அடிப்படையைச் சொன்ன என் நண்பன் வாசுவுக்கு இந்தக் கதையை சமர்ப்பணம் செய்கிறேன் – திவாகர்) ஒரு போலீஸ்காரனுக்கு இப்படிப்பட்ட சோதனைகளெல்லாம் சகஜம்தான் என்றாலும் இது வித்தியாஸமாக இருக்கிறதே என்று கவலைப்பட ஆரம்பித்தேன் நான். அதுவும் அந்தப் பெண் இடம் தெரியாமல் ராத்திரி வேளையில் அழுது ஆர்ப்பாட்டம் செய்யும்போது வெளியாட்கள் பார்த்தால் என்ன நினைப்பார்கள்.. நல்ல காலம் மீடியாக்காரர்கள் யாரும் அன்று பார்த்துத் தென்படவில்லை.. ”சார், […]
|
|
Posted: 09 Aug 2015 05:03 PM PDT நிர்மலா ராகவன் ஆண்களுடன் போட்டியா? கேள்வி: `நீ ஒன் தம்பியோட போட்டி போடக்கூடாது. என்ன இருந்தாலும், அவன் ஆம்பளை!’ என் தாய் அடிக்கடி இப்படிக் கூறுகிறார். இது நியாயமாகப் படுகிறதா? பதில்: நிச்சயம் நியாயம் இல்லை. பருவப்பெண் இருட்டில் தனியாக வெளியே போனால், ஏதாவது அபாயம் விளையலாம் என்று அஞ்சினால், பெண்ணுக்குப் புரியும் வகையில் தாய் அதை விளக்க வேண்டும். நெடுங்காலமாகவே பெண்கள் ஆண்களுக்கு அடங்கினவர்களாகவே வாழ்ந்துவிட்டார்கள். இப்போது தங்களுடைய உயரிய நிலையில் மாற்றம் வந்துவிடுமோ என்று […]
|
|
பயன்மிகு இணையவழிச் சேவைகள் – கணினி இடர், தரவுகள் மீட்பு முதலுதவி சேவைகள் Posted: 09 Aug 2015 04:59 PM PDT – எஸ். நித்யலக்ஷ்மி. தரவுகள் மீட்பு: அழித்த ஃபைல்களை மீட்கப் பலவழிகள் உண்டு. அது நம்மில் பலருக்குத் தெரிவதில்லை. இதோ சில பயனுள்ள இணையதளங்கள் … 1. Hard Disk’ ல் இருந்து டெலிட் செய்யப்பட்ட ஃபைல்களை எப்படி மீட்பது: திடீரென நம்மை அறியாமலேயே தவறுதலாக கணினியில் இருந்து ஃபைல்களை நீக்கி விடுவோம். அந்த நிலையில் ரீசைக்கிள் பின்னில் தேடினால் நமக்கு அதிர்ச்சி மட்டுமே காத்திருக்கும். எந்த ஒரு ஃபைலும் இருக்காது. நம்முடைய கணினியில் எங்கு தேடினாலும் […]
|
|
Posted: 09 Aug 2015 04:56 PM PDT -கவிஜி மாயப் பூட்டுகளும் மந்திரமின்றியே திறந்து கொள்கின்றன… மறைக்க மறைக்க, சிரைக்கச் சிரைக்க வளருவது போல மறைக்க முடிவதேயில்லை… அத்தனைப் புனைவுகளும் கட்டுடைந்து கசிந்து விடுகின்றன… ரகசியக் காப்புரிமைகள் பலபோது மீறுவதுதான் சுகமென்றாக்கப் படுகிறது… தொடாமலும் படாமலும் தோல்விகள் துவளுவதாய்க் கடன் தீர்க்கும் கரை தேடுகிறது… முகமூடிகள் கிழிபட வெறும் மூத்திரக் குழிகள் என்று சொல்லிக் கடந்து போக முடியாத தூரமெங்கும் ஆதாமின் நிர்வாணங்களும் ஏவாளின் ஆப்பிள்களும்… சுற்றிலும் தடை செய்த பழங்கள் இருக்க, மனதுக்குள் திறந்து […]
|
| You are subscribed to email updates from வல்லமை
To stop receiving these emails, you may unsubscribe now. |
Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
vallamai |
|
Posted: 11 Aug 2015 02:51 AM PDT ”அக்ரபாடிக் கண்ணனின், அக்ரலிக் நர்த்தனம் உக்ரகா ளிங்கனின் உச்சியில்கூர்ச் -சக்ரமாய்: கூனாட்டி கெய்விக்கு, தூணாட்டி பிள்ளைக்கு, காணாட்டி கேசவ்கை காண்’’….கிரேசி மோகன்…. தூணாட்டி பிள்ளைக்கு,-பிரகலாதனுக்காய் கூனாட்டி கெய்விக்கு-மதுராபுரி சென்றதும் கண்ணன் செய்த முதல் காரியம் ஒரு கிழவியின் கூனை நிமிர்த்தியது….
|
| You are subscribed to email updates from வல்லமை
To stop receiving these emails, you may unsubscribe now. |
Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
|
“தங்கத் தலைவர்” – கர்மவீரர் காமராசர்! Posted: 14 Aug 2015 11:27 AM PDT –சுமதி ராஜசேகரன். முன்னுரை: பண்டித ஜவஹர்லால் நேரு புகழ்ந்தது: காமராசரின் ஆட்சியில் பெரிய திட்டங்களிலும் சரி, அன்றாட அரசாங்க நிர்வாகத்திலும் சரி, ஊழலே இல்லை. காமராசரின் நிர்வாகத் திறமைக்கு இது ஓர் உதாரணம் ! என்றும் … மத்திய மந்திரி நந்தா புகழ்ந்த உரை: எல்லா மாநிலங்களுக்கும் மத்திய அரசு முன்னேற்ற மானிய நிதி வழங்குகிறது. இருப்பினும் அதை முறையாகப் பயன்படுத்தி தமிழகத்தை வளர்ச்சி காணச் செய்தவர் காமராசர். “ என்றும் … குடியரசுத் தலைவர் பாபு […]
|
Posted: 14 Aug 2015 11:00 AM PDT – தேமொழி. பழமொழி: அணியெல்லாம் ஆடையின் பின் அறிவினால் மாட்சியொன் றில்லா ஒருவன் பிறிதினால் மாண்ட தெவனாம்? – பொறியின் மணிபொன்னும் சாந்தமும் மாலையும் இன்ன அணியெல்லாம் ஆடையின் பின். (முன்றுறையரையனார், பழமொழி நானூறு) பதம் பிரித்து: அறிவினால் மாட்சி ஒன்று இல்லா ஒருவன் பிறிதினால் மாண்டது எவனாம்?-பொறியின் மணி பொன்னும், சாந்தமும், மாலையும், இன்ன அணி எல்லாம், ஆடையின் பின். பொருள் விளக்கம்: அறிவுடையவர் என்ற பெருமையைப் பெற்றிராத ஒருவருக்கு, பிற […]
|
Posted: 14 Aug 2015 10:56 AM PDT ”தேற்றி விஜயனைத், தேரேற்றி வில்லேந்தச், சாற்றினாய் கீதையை சர்வேசா, -சேற்றினுள், பஞ்சப் புரவிகள். அஞ்சிப் புதைத்திடும், நெஞ்ச ரதத்தை நடத்து”….கிரேசி மோகன்….
|
|
“படிக்காத மேதை” – கர்மவீரர் காமராசர்! Posted: 14 Aug 2015 10:55 AM PDT – சித்ரப்ரியங்கா பாலசுப்பிரமணியன். “படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு பாடம் படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு” என்னும் கவிஞர் கண்ணதாசன் வரிகளுக்கு உகந்தவரான நம் படிக்காத மேதை காமராஜர் பற்றி எழுதுவதற்கான வாய்ப்பு பெற்றதில் நான் அகம் மகிழ்கிறேன். காமராஜர் அவர்கள் இராமநாதபுரம் மாவட்டம் விருதுப்பட்டி என்னும் ஊரில், 1903 ஆம் ஆண்டு ஜூலைத் திங்கள் 15 ஆம் நாள் அவதரித்தார். தந்தையார் குமாரசாமி நாடார் விருதுப்பட்டியில் தேங்காய் மொத்த வியாபாரம் செய்து வந்தார், தாயார் […]
|
|
Posted: 13 Aug 2015 08:39 PM PDT -எம். ஜெயராம சர்மா – மெல்பேண், அவுஸ்த்திரேலியா ) அண்ணல் காந்தி அஹிம்சை கொண்டு அரவணைத்த சுதந்திரம் மண்ணிலிருக்கும் நிலையைப்பார்க்க மனசுஒடிஞ்சு போகுதே ! காந்திமகான் படத்தைமட்டும் காசில்போட்டு வைத்துளோம் காந்திநினைத்த அத்தனையும் காற்றில்கரைந்து போயிற்றே ! காந்திமகான் உள்ளகாசை கட்டுக்கட்டாய் பதுக்கிறார் […]
|
|
உலக வாழ்க்கைக்குத் தமிழ்-கற்றல் கற்பித்தல் Posted: 13 Aug 2015 07:56 PM PDT –முனைவர் பி.ஆர்.லக்ஷ்மி. தமிழ் இன்றைய அளவில் உலகில் பல நாடுகளிலும் கற்பிக்கப்படுகிறது. தமிழ்நாட்டுப் பள்ளிக்கல்வி கிராமங்களை மிகுதியாகக் கொண்டதனால் மேசைக்கணினி, மடிக்கணினி என்ற அளவில் கற்பித்தல் முறைகளை இணையத்தினை துணைக்கருவியாகப் பயன்படுத்தி வருகிறது. வெளிநாடுகளில் இருப்பதுபோல திறன்பேசிகள் வழியாகக் கற்பித்தல் பணியினைத் தமிழ்நாட்டில் அளிக்க இயலாது. தமிழ்நாட்டில் ஆசிரியர்களினால் செய்யப்பட்ட பல படைப்பாற்றல் திறன்மிகுந்த துணைக்கருவிகள் வழியாகக் கற்பித்தல் பணிகள் நடைபெற்று வருகின்றன. வாசிப்புப் பயிற்சியில் துணைக்கருவிகளின் பயன்பாடு இன்றிமையாதது. வாசிப்புப் பயிற்சியின்றி ஒரு மாணவனால் முழுமையாக […]
|
Posted: 13 Aug 2015 07:22 PM PDT -மேகலா இராமமூர்த்தி தமிழன்னையின் தவப்புதல்வர்! நம் தாய்த்திருநாடாம் இந்தியா சுதந்திரக்காற்றைச் சுவாசிக்கத் தொடங்கி நாளையோடு (2015 ஆகஸ்ட் 15-ஆம் நாளோடு) 68 ஆண்டுகள் நிறைவுற்றுவிட்டன. இவ்வேளையில், சுதந்திரப் பயிரைத் தண்ணீர்விட்டு வளர்க்காமல் தம் கண்ணீரால் காத்த விடுதலைவீரர்கள் அனைவரையும் நன்றியோடு நினைவுகூர்ந்து போற்றுதல் நம் கடன்! இந்தியா எங்கிலுமே அன்று கொழுந்துவிட்டு எரிந்த விடுதலை வேள்வியில் நம் தமிழகத்து தீரர்களும் திரளாகப் பங்குகொண்டு தம் இன்னுயிரைத் துச்சமென மதித்து அவ் வேள்வித்தீக்கு நெய்வார்த்தனர். தம் எழுத்துக்களாலும் பேச்சுக்களாலும் […]
|
|
“கல்விக்கண் திறந்தவர்” – கர்மவீரர் காமராசர்! Posted: 13 Aug 2015 06:37 PM PDT – பி. தமிழ்முகில் நீலமேகம். படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு – பாடம் படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு ! என்ற கவியரசர் கண்ணதாசன் அவர்களின் பாடல் வரிகளுக்கு கனகச்சிதமாக பொருந்தக் கூடியவர் நமது பெருந்தலைவர் காமராசர் அவர்கள். இவர்தம் ஆட்சிக் காலத்தில் தமிழகம் கல்வியில் அபார வளர்ச்சி பெற்றமையால் இவர் “கல்விக்கண் திறந்த காமராசர்” என்று பெருமையுடன் அழைக்கப் படுகிறார். தனது ஆட்சிக் காலத்தில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்த காமராசர் அவர்கள் படித்தது ஆறாம் […]
|
|
“கிங் மேக்கர்” – கர்மவீரர் காமராசர்! Posted: 13 Aug 2015 06:29 PM PDT – எஸ். வசந்தி. காமராஜர் இராமநாதபுரம் மாவட்டம் விருதுநகரில் 1903 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15 ஆம் நாள் பிறந்தார். அவரது தந்தை பெயர் குமாரசாமி நாடார். தாயார் சிவகாமி அம்மாள் ஆவார். முதலில் காமராஜருக்கு “காமாட்சி” என்று பெயரிட்டார்கள். காமாட்சி என்பது அவர்களின் குல தெய்வமான காமாட்சி அம்மனின் பெயராகும். சிவகாமி அம்மாள் காமராஜரை “ராஜா” என செல்லமாக அழைத்து வந்தார். பின்னர் காமாட்சி மற்றும் ராஜா ஆகிய பெயர்களை இணைத்து காமராஜர் என்றே […]
|
|
Posted: 13 Aug 2015 05:31 PM PDT ஷைலஜா, பெங்களூர் கர்மம் எனில் செயல்.செயல்வீரராக வாழ்ந்துகாட்டிச்சென்றவர் அந்த உன்னத மனிதர்! அதனால்தான் கர்மவீரர் என்று போற்றப்படுகிறார். சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல் எனும் வள்ளுவரின் வாக்குபோல சொல்லியவண்ணம் வாழ்ந்து காட்டியவராம் காமராஜர்! மக்களுக்காக வாழ்ந்த மாமனிதரைப் பற்றிச் சொல்ல நிறைய இருக்கிறது.ஆயிரத்தில் ஒருவரின் பெருமையை வெறும் ஆயிரம் சொற்களில் அடக்க முடியாதுதான்! பெருந்தலைவர் காமராஜர் ஆண்ட காலத்தைத் தமிழ்நாட்டின் பொற்காலம் என்பார்கள். கர்மவீரர், கருப்புக்காந்தி, ராஜதந்திரி, படிக்காத மேதை, பாரத ரத்னா, […]
|
| You are subscribed to email updates from வல்லமை
To stop receiving these emails, you may unsubscribe now. |
Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
Posted: 17 Aug 2015 11:12 AM PDT கிரேசி மோகன் இந்த ஓவியத்தை ”கேசவ்” ஆடிப் பூரத்திற்காக அனுப்பியிருந்தார்…. அச்சமயம் அடியேன் நாடகம் போட நாமக்கல் சென்றிருந்தேன்…. வழக்கமான வெண்பா அனுப்ப அங்கு கம்ப்யூட்டரும் இல்லை, கேசவ் ஆண்டாள் போல் தூதாக அனுப்ப கிளியும் இல்லை…. ஆகவே இன்று….என்ன ஆச்சரியம் இன்று ”கேசவ்”வுக்கு KSA TRUST “CHAMPION” பட்டம் கலைத்துறைக்காக கொடுத்தார்கள்…. கொடுத்தது அடியேன்….கொடுக்க வைத்தவன் கண்ணன்…. மேலும் கேசவ்விடம் பேசியபோது ”ஆண்டாள் தூதாக கிளியை அனுப்பியதன் தாத்பர்யத்தைச் சொன்னார்….வடமொழியில் கிளியை சுகம் என்பார்களாம்….பாகவதம் சொன்ன […]
|
|
Posted: 16 Aug 2015 10:54 PM PDT பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்? திரு. துளசிதாசன் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார். இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (22.08.2015) வரை உங்கள் […]
|
Posted: 16 Aug 2015 06:30 PM PDT ஆகஸ்ட் 17, 2015 இவ்வார வல்லமையாளர் வல்லமைமிகு டாக்டர் டெஸ்ஸி தாமஸ் அவர்கள் வல்லமையின் இவ்வார வல்லமையாளராகச் சிறப்பிக்கப்படுபவர் “இந்தியாவின் ஏவுகணைப் பெண்மணி“(Missile Woman of India) எனவும், “அக்னிபுத்திரி” எனவும் அன்புடன் அழைக்கப்படும் “டாக்டர் டெஸ்ஸி தாமஸ்” அவர்கள். இவரை வல்லமையாளர் விருதுக்குப் பரிந்துரைத்தவர் வல்லமையின் அறிவியல் எழுத்தாளரும் கவிஞருமான திரு. ஜெயபாரதன் அவர்கள். அவருக்கு வல்லமைக் குழுவினரின் நன்றிகள் உரித்தாகிறது. வல்லமையாளர் டாக்டர் டெஸ்ஸி தாமஸ் அவர்கள், பணியிடத்தில் “இந்தியாவின் ஏவுகணை மனிதர்” (Missile […]
|
Posted: 16 Aug 2015 05:09 PM PDT –ஜியாவுத்தீன். முன்னுரை: கர்மவீரரைப் பற்றித் துவங்கும் முன் சமீபத்தில் மறைந்த நமது அன்பின் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களைப் பற்றிக்குறிப்பிடுவது இங்குப் பொருத்தமாக இருக்கும் என்று எண்ணுகிறேன். அவர் குடியரசுத் தலைவராக இருந்தபோதுகடைப்பிடித்த நேர்மையும், அரசு இயந்திரத்தைத் தனக்காகப் பயன்படுத்திக் கொள்ளாததும், தன் குடும்பத்தினருக்கானசெலவுகளையும், வசதிகளையும், அரசாங்கக் கணக்கில் சேர்க்காமல், சொந்தப் பணத்தில் செலவு செய்ததையும், தன்பதவியைப் பயன்படுத்தி சொத்தோ லாபமோ அடையாததும், எந்தச் சூழ்நிலையிலும் தன் பதவியை தவறாகப்பயன்படுத்தாததும் என்று 5 வருடங்கள் பதவியில் இருந்தபோது […]
|
|
“பெரும் தலைவர்” – கர்மவீரர் காமராசர்! Posted: 16 Aug 2015 05:05 PM PDT –திருக்குவளை மீ.லதா. தமிழ்நாட்டின் தலைமகன் இந்தியாவின் பெருந்தலைவன் பிள்ளை மனம் கொண்ட தங்கமகன் கம்பீர நடை கொண்ட சிங்கமகன் செல்வம் சேர்க்காத செல்வமகன் ஏழைகளின் செல்ல மகன் சாதனைகளின் சரித்திர நாயகன்… எங்கள் கல்விக்கண் திறந்த ஐயா உங்கள் பாதம் பணிகிறோம் தந்தை பெரியார் அவர்களால் தமிழ் நாட்டின் இரட்சகர் என்று அழைக்கப்பட்ட கல்வி வள்ளல் பெருந்தலைவர் காமராசர். நூற்றுப் பத்து ஆண்டுகளுக்கு முன் மிகச் சாதாரண குடும்பத்தில் பிறந்து ஆறாம் வகுப்பு வரை மட்டுமே கல்வி […]
|
|
Posted: 16 Aug 2015 05:05 PM PDT பவள சங்கரி கிரேக்க நாட்டு பேரறிஞர் சாக்ரடீசு மிகப்பெரும் தத்துவவாதியும் கூட. ஒரு நாள் ஏற்கனவே பரிச்சயமான ஒருவர் சாக்ரடீசிடம் வந்து, “உங்கள் நண்பரைப் பற்றி நான் கேள்விப்பட்ட ஒரு செய்தியை சொல்லவா?” என்றார். “ஒரு நிமிடம் பொறுங்கள்”, என்றார் சாக்ரடீசு. “என்னிடம் நீங்கள் எதுவும் சொல்வதற்கு முன்னால் ஒரு சிறு சோதனை உங்களுக்கு. முச்சல்லடை சோதனை என்று பெயர் இதற்கு, சரியா” “முச்சல்லடை சோதனையா?” “ஆம், அதேதான்” என்றவாறு தொடர்ந்தார் சாக்ரடீசு. “என் நண்பரைப்பற்றி என்னிடம் […]
|
|
Posted: 16 Aug 2015 05:03 PM PDT -சோழகக்கொண்டல் விசையுற்று விரிந்த சிறகு அசைவற்று உறைந்த கணத்திலேயே ஆயிரம் ஆண்டுகளாய் நிற்கிறது இந்த அன்னம்! அதன் முதுகின்மேல் துருத்திய கண்களோடும் தூக்கிய கால்களைப் பிளந்து முளைத்த தும்பிக்கையோடும் விழிக்கிறது ஒரு யாளி! இரண்டுக்குமிடையில் எதிர்த்தூண் மன்மதன் எய்யும் மலர் அம்புக்காய்க் காலங்காலமாய்க் காத்துநிற்கிறாள் ரதி! மலர்க்கணை துளைக்கையில் இவள் மார்பு சுரக்கும்பாலைத் தனித்துப்பருகவே தவமிருக்கும் அன்னம் இதன் உன்மத்த வெப்பம் மேலேறி ஊறி உறைகிறது மதநீர் மண்டபத்தைத் தாங்கிநிற்கும் யாளியின் மண்டைக்குள்! இந்த நித்தியகாம நெடுந்தவத்தின் […]
|
|
“கடமை வீரர்”– கர்மவீரர் காமராசர்! Posted: 16 Aug 2015 05:03 PM PDT – எஸ். நித்யலக்ஷ்மி. “கர்ம வீரர்” என அன்பாக அழைக்கப்பட்ட காமராஜர், 1903 ஆம் ஆண்டு ஜூலை 15 அன்று, இந்நாளில் விருதுநகராக வளர்ந்திருக்கும் அன்றைய திருநெல்வேலி மாவட்டம் விருதுப்பட்டியில் குமாரசாமி நாடார், சிவகாமி அம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். கடமை வீரர் என்று புகழப்பட்ட காமராசரின் பிறந்த தினம், “கல்வி வளர்ச்சி தினமாக” கடைபிடிக்கப்படுகிறது. கலைஞர் கருணாநிதி தனது சென்ற ஆட்சிக்காலத்தில் காமராஜர் பிறந்த தினத்தை கல்வி வளர்ச்சி தினமாக அறிவித்து பள்ளிகள் தோறும் கொண்டாட […]
|
|
Posted: 16 Aug 2015 05:00 PM PDT நாகேஸ்வரி அண்ணாமலை உலகில் எத்தனையோ மனிதர்கள் பிறக்கிறார்கள், இறக்கிறார்கள். எல்லோரும் பெரிய மனிதர் என்ற பெயர் வாங்குவதில்லை. ஆனால் கலாம் போன்ற மிகச் சிலரே இறந்த பிறகும் பலராலும் போற்றப்படுகிறார்கள். அவர் இறந்த சமயம் நான் தமிழ்நாட்டில் இருந்தேன். தமிழ்நாட்டில் பல இடங்களுக்கும் சென்றபோது அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு, மதங்களுக்கு அப்பாற்பட்டு, ஜாதிகளுக்கு அப்பாற்பட்டு அவர் சிறப்பாக வாழ்ந்ததற்கு ஆதாரமாக எல்லா அலுவலகங்கள் முன்பும் சாலை ஓரங்களிலும் அவர் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து உருக்கமாகக் கீழே எழுதியிருந்த […]
|
|
Posted: 16 Aug 2015 05:00 PM PDT – தேமொழி முதியவரின் நம்பிக்கை – ஆலன் அக்டோவியன் ஹ்யூம் இந்திய மக்களே உங்கள் சோர்வின் காரணமென்னவோ ? இறைவனின் உதவியைத்தான் எதிர்பார்த்துள்ளீர்களோ ? வரிந்து கட்டி, எழுச்சியுடன் போராடுங்கள் தன்முயற்சி செய்வதாலேயே நாடுகள் தோன்றுகின்றன தீர்மானிக்கப்படுகிறது உங்களின், உங்கள் நாட்டின் எதிர்காலம் ஆனாலும் அதைத் தீர்மானிப்பவர் நீங்களல்லவே ஊமைகளாகிவிட்டீர்களா? உரிமைக்குக் குரல் கொடுங்கள் தன்முயற்சியால்தான் நாடுகள் தோன்றுகின்றன கல்வியும் செல்வமும்தான் இருந்தென்ன செய்தீர்கள் வெற்றுப் பட்டங்கள் அளிக்கப்பட்டு ஏமாற்றப்பட்டீர்கள் தன்னாட்சி செய்வதன் மதிப்பிற்கு ஈடாகுமா […]
|
Posted: 18 Aug 2015 09:10 AM PDT ”மெய்யே நவனீதம், மேவும் உயிர்நம்பிக் கையகல் கொண்டான்மன் காட்டுவேன், -பையனே, தூரத் திலிருந்து ஆரத்தி, ஆயர்தம் ஹாரத்தி கண்ணா, அருள்’’….கிரேசி மோகன்…. ஆயர்தம் ஹாரத்தி-ஆயர்தம் அணிவிளக்கே….
|
Posted: 18 Aug 2015 02:28 AM PDT ”நூலறியேன், மண்ணளந்த தாளறியேன், மல்லாண்ட தோளறியேன், ஞானவிளக்(கு) ஆளறியேன், -மாலரியே, தேசிகனாய் வந்தெனக்(கு), ஆசை அடங்கவைத்து, ஊசிவாயில் ஒட்டகத்தை ஓட்டு”….கிரேசி மோகன்….
|
| You are subscribed to email updates from வல்லமை
To stop receiving these emails, you may unsubscribe now. |
Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
vallamai |
|
Posted: 19 Aug 2015 05:56 AM PDT நமது நாட்டில் அதுவும் நம் தமிழ்த் திருநாட்டில் எத்தனை தலைவர்கள் தங்கள் செயலிலும், பேச்சிலும் நாகரீகம் காத்தனர். கொள்கைளை விமர்சித்தார்கள். வெள்ளையர்களோ கொள்ளையர்களோ அவர்களை நாகரீகமான முறையிலேதான் விமர்சித்தார்கள். என்னுடைய தலைமுறையில் நான் நேரில் பார்த்து வியந்த தலைவர்களில் பெருந்தலைவர் காமராஜர் என் மனதில் இன்றும் சிம்மாசனம் போட்டு அமர்துள்ள அரிய தலைவர். இன்றைய தலைமுறை அறிந்துகொள்ள வேண்டிய அருமையான தலைவரும் கூட. 1973ம் வருடம் சென்னையில் தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் ஒரு கூட்டம் நடைபெற்றது. கூட்டம் […]
|
|
சிகரம் நோக்கி . . . . . . (15) Posted: 18 Aug 2015 05:10 PM PDT சுரேஜமீ எண்ணங்கள் பிறந்ததன் பயனை வாழ்வு சொல்லவேண்டுமெனில், வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என தீர்மானிப்பது நம் எண்ணங்கள்தான் என்பதை அறியும் எவரும் மண்ணில் வீழ்ந்ததாகச் சரித்திரம் இல்லை. அந்த அளவிற்கு நம்மைச் செதுக்குவது நம் எண்ணங்கள்! அத்தகைய உயர்ந்த எண்ணங்கள் உருவாக அடிப்படைக் காரணிகள் எவை? அத்தகைய எண்ணங்களைச் செயலாக்குவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? அதன் மூலம் நம் வாழ்வின் பயனை அடைவது எப்படி? என்று அலசுவதுதான் இந்தப் பதிவின் இலக்கு ஆகும். […]
|
|
Posted: 18 Aug 2015 04:58 PM PDT – கவிஞர் காவிரிமைந்தன். புகுந்தவீடு என்னும் திரைப்படத்தில் இடம்பெற்ற ஏ.எம்.ராஜா, ஜிக்கி பாடிய பாடலிது! பாடலை இயற்றியவர் விசித்ரா. பாடலின் பல்லவி முதலாக பற்றிக் கொள்கிற இனிமை, இறுதிவரை தொடர்கிறது. பாடிய குரல்கள் தரும் மயக்கத்தில் இப்பாடலைக் கேட்பவரும் மயக்கத்திற்கு அடிமையாகிறோம். அடிமனதை வருடுகின்ற சுகம்தருகிறார் இசையமைப்பாளர் சங்கர் கணேஷ். மெல்லிசை என்னும் சொல்லுக்குப் பொருள் சொல்லும் இன்னிசையிது என்று ரசிகர்கள் சத்தியம் செய்யலாம். தமிழ் மொழியின் இனிமையைப் பறைசாற்ற சான்று பகரும் தமிழ்த்திரையிசைப்பாடல்களில் இதுவும் ஒன்று! […]
|
|
Posted: 18 Aug 2015 04:55 PM PDT வையவன் யாரோ தொட்டு உலுப்புகிறார்கள். கங்கையோடு கங்கையாக வனாந்திரங்களில் பர்வதத் தாழ்வுகளில் பாறைகளில் சிக்கி ஆனால் அடிபடாமல் சிவா போய்க் கொண்டேயிருந்தான். ஏதோ நீந்துகிற மாதிரி… தண்ணீரின் மீதே பறப்பது மாதிரி… பறவைகள் பாடிய கரையோரங்களைப் பார்த்துக் கொண்டே போகிறான். யாரோ தொட்டு உலுப்புகிறார்கள். சட்டென்று கண் விழித்தான். வெற்றிவேல். “என்ன வெற்றி… பொழுது விடிஞ்சாச்சா?” “இல்லை. இன்னும் நேரமிருக்கு. வெளியே பாபா காத்துகிட்டிருக்கார். கங்கையிலே குளிக்கப் போவோம், வர்றீங்களாண்ணு கூப்பிட்டார்.” “இந்தக் குளிர்லேயா?” “குளிர்லே குளிச்சா […]
|
|
Posted: 18 Aug 2015 04:53 PM PDT -கவிஜி ஊர் எல்லையில் காவலிருக்கும் அய்யனாரைக் கடக்கும் போது மட்டும் விசில் ஊதுவதை நிறுத்தி விடுகிறார் அய்யனாரையும் சேர்த்து காவல் காக்கும் கூர்க்கா…!
|
|
ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீ ஸ்ரீ சன்னிதானம் Posted: 18 Aug 2015 04:46 PM PDT -மீ.விசுவநாதன் கொஞ்சும் அழகிய சோலை – குயில் கூவுதோர் ஞானியின் பேரை! நெஞ்சங் குவித்தே நின்றேன் – “விது சேகர பாரதீ” கண்டேன்! (கொஞ்சும் அழகிய சோலை) உன்னை ஆட்கொண்ட ஆசான் – ஓர் உத்தம குருவம்ச யோகி! தென்னை மரக்கிளை மீதில் – இளந் தென்றல் சொன்னதிச் சேதி! (கொஞ்சும் அழகிய சோலை) இச்சை என்பதே இல்லா – இந்த எளிய குருவைப் பாரீர்! பச்சைக் கிளிகளின் கூட்டம் – வானில் […]
|
|
Posted: 18 Aug 2015 03:02 PM PDT –கவிஜி. உங்கள் வீட்டில் உள்ள ஒருவரை திட்டமிட்டுக் கொன்று புதைத்தவருக்குத் தூக்கு தண்டனை விதித்தால், “வேண்டாம், மனிதனை மனிதன் கொல்வது தவறு” என்று நீங்கள் கூறுவீர்களா? அப்படி நீங்கள் கூறினீர்கள் என்றால் நீங்கள் இந்தச் சட்டத்துக்கும், இந்த வாழ்வு முறைக்கும் ஏதோ ஒரு வகையில் முரண்பட்டு இருக்கிறீர்கள் என்று அர்த்தம். சரி, உடன்பாடுதான் வாழ்க்கையா என்றால், அதுவும் இல்லை முரண் பட படத்தான் உடன்பாடு பற்றிய புரிதல் ஏற்படும். அடித்தால் மறுகன்னம் காட்டுதல் அன்பின் தீர்க்க தரிசனம். […]
|
| You are subscribed to email updates from வல்லமை
To stop receiving these emails, you may unsubscribe now. |
Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
|
ராக்கெட் முன்னோடிப் பொறிநுணுக்க அமெரிக்க நிபுணர் ராபர்ட் கோடார்டு Posted: 22 Aug 2015 06:56 AM PDT [Robert Goddard] (1882-1945) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா மனிதனால் எதைச் சாதிக்க முடியாது என்று தீர்மானம் செய்வது, கடினம்! ஏனெனில் நேற்றைய தினத்தின் நமது கனவு, இன்றைய தினத்தில் நமக்கு நம்பிக்கை யூட்டி, அது நாளைய தினத்தின் மெய்யான சாதிப்பாக நேர்ந்து விடுகிறது! ராபர்ட் கோடார்டு வெண்ணிலவுப் பயணத்துக்கு ஓர் ஏவுகணை அமைத்தார் 1926 ஆம் ஆண்டு மார்ச் 26 இல் அமெரிக்க எஞ்சினியர் ராபர்ட் கோடார்டு, மாஸ்ஸசுஸெட்ஸ் ஆபர்ன் [Auburn, Massachusetts] […]
|
Posted: 22 Aug 2015 04:40 AM PDT நம்பாளை வரைந்ததற்கு நன்றி கேசவ்…. கிரேசி மோகன் அஞ்சும் அருச்சுனர்க்கு ஆறுதல் கூறியன்று அஞ்சரசு ஆளவைக்க, ஆண்டதேர்மேல் -அஞ்சனை சேய்பறக்கக் கையில், சவுக்கெடுத்த சாரதி, ஆய்க்குல சிங்கா அருள் …. பாலுக்கும் காவலாய், பூனைக்கும் தோழனாய்அப், பாலுக்கும் அப்பாலே பாதுகாக்கும் -மாலே, பழகிடப் பூனையே, பாய்ந்தால் புலியே, அழகிய சிங்கா அருள் …. நாணமின்றி யுத்தத்தில், நாலுகால் ஜந்துக்கள், சாணமள்ளிக் கொட்டும் ஜனார்த்தனனை, -ஞானமள்ளி உண்ணென கீதையை, ஊட்டியதே ரோட்டியை, கண்ணனை நெஞ்சே கருது …. […]
|
|
Posted: 21 Aug 2015 01:52 PM PDT –கவிஜி. என்னால் அடங்கி இருக்க முடியவில்லை. கையில் கிடைத்த சாவி என்னைத் திறந்து கொண்டே இருந்தது. நானும் என்வீட்டுக் கதவு பூட்டுக்கு பொருத்திப் பார்த்தேன். திறக்க முடியவில்லை. பின், வீட்டுக்குள் இருந்த உள் அறைக்கான பூட்டில்பொருத்திப் பார்த்தேன். ம்ஹும், சரியாக மாட்டிக் கொள்ள வில்லை. “அப்படி என்றால் இந்தச் சாவி யாருடையது? எதற்கு என் கையில் கிடைத்திருக்கிறது! என்னால் தூங்க முடியவில்லை.இரவுகளின் கும்மாளம் நிறமற்றுக் கிடந்த கருவிழிக்குள் கருமை அடித்தது போலவே நினைத்துக் கொண்ட நான்மெல்லவெளியே கிளம்பினேன். […]
|
|
திருக்குறளுக்குப் புது விளக்கம் – 10 Posted: 21 Aug 2015 01:10 PM PDT – புலவர் இரா. இராமமூர்த்தி. ஓர் அரசனுக்குப் பொருள் இன்றியமையாதது! பொருளாதாரம் அரசாட்சிக்குத் தேவை! இந்தப் பொருளை அரசன் எவ்வாறெல்லாம் ஈட்டலாம் என்று திருவள்ளுவர் கூறியுள்ளார்! நாட்டின் பொருளாதாரத்தைப் பெருக்க அரசன் இயற்கைச்செல்வத்தை முறைப்படி, தேவையான பொருளாக மாற்றிக் கொள்ளலாம்! பொருள் என்பதற்குப் பரிமேலழகர் தரும் விளக்கம் சிறந்தது! நாட்டால் ஆக்கவும், அரணால் காக்கவும் படுவதாகியபொருள் என்கிறார் அவர்! நாட்டின் இயற்கை வளங்களால் உருவாக்கப்படும் பொருள், நாட்டால் ஆக்கப்படுவது; நாட்டின்மக்களின் உழைப்பால், வயலிலும், கடலிலும், தொழிற்சாலைகளிலும் ஈட்டப் […]
|
|
படக்கவிதைப் போட்டி 26-இன் முடிவுகள் Posted: 23 Aug 2015 10:24 AM PDT -மேகலா இராமமூர்த்தி திரு. துளசிதாசன் எடுத்த இந்தப் படத்தைக் கவிதைப் போட்டிக்குத் தெரிவுசெய்தவர் நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன். இவ்விருவரும் வல்லமையின் நன்றிக்கு உரியவர்கள். ஒளிபடைத்த கண்களோடும் உறுதிகொண்ட நெஞ்சோடும் வீட்டின் வெளியில் நிற்கும் சிறுமியே! கதவுகள் பூட்டப்பட்டிருந்தால் என்ன? உன் மனக்கதவுகள் திறக்கட்டும்! உலகம் உய்யவும் தீமைகள் கொய்யவும் உடனே புறப்படு! என்று இவளுக்கு நாமும் தைரியம் சொல்லுவோம்! இவ்வாரப் போட்டிக்கு வந்திருக்கும் கவிதைகளைப் படித்துச் சுவைக்கும் தருணமிது! வீட்டுக்குள் […]
|
|
Posted: 23 Aug 2015 07:18 AM PDT நிர்மலா ராகவன் பெரியசாமி தினசரியின் ஞாயிறு பதிப்பைப் பிரித்தார். கொட்டையெழுத்தில் காணப்பட்ட அந்தப் பெயர் அவரை அலைக்கழித்தது. யார் இந்த டி.எஸ்.விஜயலட்சுமி? நிச்சயம் ஒரு பெண் இவ்வளவு வெளிப்படையாக எழுதமாட்டாள். ஒரு வேளை, அவளுடைய கணவன் எழுதி, பிரச்னை எதிலும் மாட்டிக்கொள்ள விரும்பாத கோழையாக இருந்ததால், மனைவியின் பெயரில் தனது எழுத்துப் படிவங்களை அனுப்பிவிடுகிறானோ? எழுத்துத் துறையில் ஒரு ஜாம்பவான் என்று தன்னைப்பற்றி ஒரு கணிப்பு உண்டு பெரியசாமிக்கு. தான் அறியாத ஓர் எழுத்தாளர் இவ்வளவு பிரபலமாக […]
|
Posted: 23 Aug 2015 12:35 AM PDT ஆழ்ந்த உறக்கம் மனிதம்…. அதையும் தாண்டிய புனிதம் ஆயர்பாடி சேய் கானம்…. ”ஆனந்தம் உண்டுதான் ஆழ்ந்த உறக்கமதில், நானந்த ஆதியில்லா நீளுறக்கம்: -கோநந்தன், வாமக்கால் தன்னை வலக்காலிட்(டு) ஊதுகிறான், ஏமத் துயில்விட்(டு) எழு”….கிரேசி மோகன்…. வாமம் -இடது ஏமம் -மயக்கம்
|
|
தமிழனென்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா! Posted: 22 Aug 2015 11:31 PM PDT டாகெசுதான் என்றொரு நாடு இருக்கிறது. அங்கு முப்பதுக்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகிறதாம். அதில் ஒன்று, ‘அவார்’ எனும் மொழி. இந்த மொழியின் மீப்பெரும் கவிஞர் ரசூல் கம்சடோவ் (Rasul Gamzatov)என்பவர். தம் மொழியின் மீது நம் பாரதிக்கு ஈடாக ஆழ்ந்த காதல் கொண்டிருந்தவனாம் ரசூல். ‘ஒருவேளை இந்த அவார் மொழி நாளை இறந்துவிடும் என்ற நிலை வந்தால், நான் இன்றே இறந்துவிடுவேன்’ என்றானாம் அக்கவி! கம்சடோவ் இத்தாலி நகரில் இருந்தபோது, தம் நாட்டினர் ஒருவரைச் சந்தித்தாராம். இந்தச் […]
|
vallamai |
|
Posted: 25 Aug 2015 03:50 AM PDT ”கொட்டும் மழைதனில், கோகுலம் காக்கவெற்பை சுட்டு விரலால் சுமந்தவனை, -சொட்டுநீல, வண்ணனை, கேசவ் வரைந்தவிதம் காண்போர்தம், கண்களால் ஆடிக் குளிப்பு”(துலா ஸ்நானம் மாதிரி விசேஷம்)….கிரேசி மோகன்….
|
|
Posted: 24 Aug 2015 07:59 PM PDT பவள சங்கரி தலையங்கம் பொருளாதாரச் சந்தையின் நேற்றைய வீழ்ச்சிகள் இன்றும் தொடருகின்றன. பொதுவாகவே அன்றைய நாளின் சந்தை துவக்கம், ஜப்பானிலிருந்துதான் துவங்குகிறது. பொருளாதார சந்தை தொடக்கமே சரிவுடன் ஆரம்பமாகியுள்ளது. அதைத் தொடர்ந்து சங்காய் பொருளாதாரச் சந்தையும் 6% சரிவுடன் தொடங்கியுள்ளது. இது இப்படியே தொடருமானால் சீனா, இந்தியா, ஆசுதிரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளின் பொருளாதாரச் சந்தைகள் பெருமளவில் விழ்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது நாணய மதிப்புகளில் சரிவுகளைச் சந்திக்காமல் தாக்கு பிடிப்பது யூரோ மற்றும் பவுண்டின் மதிப்புகள் […]
|
Posted: 24 Aug 2015 06:49 AM PDT ”புல்லார்வ ஆவுக்கு பாதப் பசுந்தளிரை, ஃபில்லார்(PHILHAR) (MONIC)மணிவண்ணன் போடுகிறான், -மெல்லிசையாய்: அண்ணல் இராமர் அணிலுக்(கு) அளித்தாற்போல், கண்ணன் பசுமுதுகில் (இசை) கோர்ப்பு”….கிரேசி மோகன்….
|
Posted: 23 Aug 2015 06:30 PM PDT ஆகஸ்ட் 24, 2015 இவ்வார வல்லமையாளர் வல்லமைமிகு இயக்குநர் நந்தினி அவர்கள் ‘சிவப்புக்கல் மூக்குத்தி’ என்ற தமிழின் முதல் எண்ணிம படக்கதை புதினத்தை (Tamil’s First Digital Graphic Novel ) மின்னூலாக வெளியிட்டமைக்காக இயக்குநர் நந்தினி அவர்கள் இவ்வார வல்லமையாளராகப் பாராட்டப்படுகிறார். “திருதிரு துறுதுறு” படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகத்தில் இயக்குநராக அறிமுகமாகிய நந்தினி, தமிழக திரைப்பட விளம்பரப்பட கல்வி நிலையத்தின் மாணவியும், 2003 ஆம் ஆண்டு அக்கல்வியில் தங்கப்பதக்கமும் பெற்றவர் (Gold Medalist (2003) from […]
|
|
Posted: 23 Aug 2015 06:28 PM PDT பவள சங்கரி எஞ்ஞான்றும் மகிழ்ச்சி நிலைக்கும் சூக்குமம் சூழ்நிகழ்வுகளை நாட்டமுடன் நயந்தொழுகும் நற்பண்பும் வீணர்களின் வேடிக்கையை வீசியெறியா மனப்பாங்கும் நிலையில்லாக் கூத்தின் நிசமறியும் வானகமும் ஏதிலார் இன்சொலால் தீதில்லா திட்பமும் சூறைக்காற்றாய் சுதந்திரம் பறிக்கும் சூலநாசமும் அமிழ்தே பெறினும் உள்ளொன்று வைத்து புறத்தே பொய்யுரையை நாடாமையும் ஔவியம் கொண்டோரை திடமாய் ஒதுக்கியும் உளம் புரத்தல் கவ்வுடை பரமமே!
|
|
Posted: 23 Aug 2015 05:14 PM PDT -தமிழ்நேசன் த. நாகராஜ் வானத்தை எட்டிப்பிடிக்க முயன்றால் மேகத்தைத் தொட்டுவிடலாம் ஆம்! தொட்டதால்தான் வெயில் மழையின் முன்அறிவிப்பு! சூரியனை எட்டிப்பிடிக்க முயன்றால் சந்திரனைத் தொட்டுவிடலாம் ஆம்! தொட்டதால்தான் சந்திரனில் மனிதன் கால்தடம்! ஆலமரத்தை எட்டிப்பிடிக்க முயன்றால் விழுதுகளைத் தொட்டுவிடலாம் ஆம்! தொட்டதால்தான் மரக்கிளையில் ஆடுகிறது ஊஞ்சல்! ஆகாயத்தை எட்டிப்பிடிக்க முயன்றால் பறவைகளைக் தொட்டுவிடலாம் ஆம்! தொட்டதால்தான் காற்றில் பயணிக்கிறது விமானம்! நினைவை எட்டிப்பிடிக்க முயன்றால் நிகழ்வுகளைத் தொட்டுவிடலாம் ஆம்! தொட்டதால்தான் காட்சிகளை அள்ளித் தருகிறது தொலைக்காட்சி! காற்றை எட்டிப்பிடிக்க முயன்றால் காற்றலைகளைத் தொட்டுவிடலாம் ஆம்! தொட்டதால்தான் காதுகளுக்கு இனிமையான ஒலிதருகிறது வானொலி! எட்டிப் பிடிக்கும் தூரத்தில் வெற்றி இல்லை! அதை விட்டுவிடும் எண்ணத்தில் மனிதன் இல்லை!
|
|
அமுதா . . . (சமூகத்தால் ஒடுக்கப்பட்ட திருநங்கையின் கதை…) Posted: 23 Aug 2015 05:13 PM PDT விஜய் விக்கி… சமூகத்தால் இன்றளவும் ஒடுக்கப்பட்டுள்ள திருநங்கை சமூகத்தின் உண்மை நிலையை எடுத்துச்சொல்லவே இந்த படைப்பு… இது உண்மை சம்பவத்தை தழுவிய சிறுகதை… ஐந்து மணிக்கெல்லாம் எழுந்துவிட்டாள் அமுதா… பால் வாங்கி காய்ச்சி டீ போட்டு பிளாஸ்க்கில் ஊற்றிவைத்துவிட்டு, சமையல் வேலைகளையும் முடித்தாகிவிட்டது… ஏழு மணிக்கெல்லாம் குளித்து முடித்து கிளம்புவதற்கும் ஆயத்தமாகிவிட்டபோதும், செல்வியும் ரோஸியும் இன்னும் எழுந்திருக்கவே இல்லை, எப்படியும் பத்து மணி ஆகலாம்.. இருவருக்குமே காலை சாப்பாடு சாப்பிடும் பழக்கமில்லை என்பதால், தேநீர் மட்டும் குடித்துவிட்டு […]
|
|
எதைநோக்கிப் போகிறது சுதந்திரம்? Posted: 23 Aug 2015 05:08 PM PDT -ஆர். எஸ். கலா நெஞ்சி பொறுக்கலயே பஞ்சமா பாதகர்கள் செயல் கண்டு! உள்ளம் ஊனம் ஆன கள்வர்களோ இல்லை கடமையைக் கண்ணும் கருத்துமாகப் பார்க்கும் காவலர்களோ… பாதம் பதித்து நடக்க வழியில்லா வாலிபனைத் தன் பாதத்தாலே கொட்டுகிறான் சட்டமோ போடுகிறது பல விதத்தில் ஆட்டம் இது என்ன புதுக் கூட்டம்? மட்டம் தட்டுகிறது காவலர்களை ப்பல மாவட்டம்! நல்ல சில அதிகாரி தன்னுள்ளே குமுறுகிறான் இது என்ன பிழைப்பு என்று! இதில் எங்கே சுதந்திரம் ? மதுவுக்குத் […]
|
|
Posted: 23 Aug 2015 05:07 PM PDT பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்? திரு. ராம்குமார் ராதாகிருஷ்ணன் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார். இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (29.08.2015) வரை […]
|
|
தாய்த்தமிழ்ப் பள்ளிகளைத் தூக்கி நிறுத்துங்கள்! Posted: 23 Aug 2015 05:07 PM PDT -அரசெழிலன் பி.இரெ உங்களால் இயன்ற நன்கொடைகளைத் தவறாது தொடர்ந்து அனுப்புங்கள். தாய்த்தமிழ்க் கல்விக்காகத் தமிழ்நாடெங்கும் ஏறத்தாழ 100 தாய்த்தமிழ்ப் பள்ளிகள் இயங்கி வந்தன. அரசின் ஆதரவின்மையாலும், தமிழைச் சொல்லி வயிறு வளர்த்த, வளர்க்கும் போலிகளின் ஆதரவின்மையாலும் அந்தப்பள்ளிகள் ஒவ்வொன்றாக மூடப்பட்டு இன்று 30 பள்ளிகளாகக் குறைந்துவிட்டன. இவை மேலும் குறைந்துவிடாமல் காக்கும் தமிழ்க்கடமை நம்முன்னே உள்ளது. தமிழ்வழிக்கல்விதான் சிறந்தது எனக் கழுத்து நரம்பு புடைக்கப் புடைக்க மேடைதோறும் வெற்று முழக்கம் முழங்குவதை விட்டுவிட்டு, எழுதுவதை விட்டுவிட்டு […]
|
|
வியப்பில் ஆழ்த்தும் குறள் அமைப்பு Posted: 23 Aug 2015 05:05 PM PDT –முனைவர் சி.சேதுராமன். பல்லாண்டு காலங்கள் ஆனாலும் பல நூல்கள் நீடித்து வாழ்ந்து கொண்டே இருக்கின்றன. அதற்குக் காரணம் அந்நூலின் அமைப்பு, அழகு, எளிமை ஆகியவையே என்று கூறலாம். ஒரு நூலின் அமைப்பே அந்நூலைக் காலங்கடந்தும் மக்களின் மனதில் கொண்டு சேர்த்து நிலையாக நிறுத்துகிறது. அவை என்றும் இறவாப் புகழ் கொண்ட நூல்களாக விளங்குகின்றன. இறவாப் புகழடைந்த நூல்களுள் கட்டமைப்பில் திருக்குறள் சிறந்து விளங்குகின்றது. ஒவ்வொரு திருக்குறளும் படிக்கின்ற ஒவ்வொருவருக்கும் ஒரு புதிய விளக்கத்தைத் தருவனவாக உள்ளது. அதிலும் […]
|
|
Posted: 23 Aug 2015 04:55 PM PDT -செண்பக ஜெகதீசன் குடிப்பிறந்தார் கண்விளங்குங் குற்றம் விசும்பின் மதிக்கண் மறுப்போ லுயர்ந்து. (திருக்குறள்:957 – குடிமை) புதுக் கவிதையில்… வானில் வலம்வரும் நிலவு வனப்புமிக்கது, அழகு தெரிவதுபோல் அதன் களங்கம் அனைவருக்கும் தெரியும்… உயர்குடிப் பிறந்தோரின் குற்றம் தெளிவாய் ஊருக்கே தெரிந்துவிடும்! குறும்பாவில்… வான்நிலவின் கறையும், உயர்குடி மக்கள் குறையும் தெளிவாய்த் தெரியும் வெளியே! மரபுக் கவிதையில்… விண்ணுக் கழகிய வெண்ணிலவின் –வெள்ளை மேனிக் களங்கமது கண்ணில் தெரியும் பளிச்செனவே –காணும் இயற்கை விதியிதுவே, […]
|
| You are subscribed to email updates from வல்லமை
To stop receiving these emails, you may unsubscribe now. |
Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
|
Posted: 26 Aug 2015 06:04 AM PDT பவள சங்கரி வாழ்க்கையில் ஒருவருக்கு எந்த நேரமும் துன்பங்களும், துயரங்களும், அபாயங்களும் நேரலாம். இதில் ஆண் என்ன பெண் என்ன… இதற்கெல்லாம் நாம் எப்போதும் தயாராக இருக்க முடியாது என்றாலும், நம் குழந்தைகளுக்கு இளம் வயது முதலே அதற்கான துணிவையும், மன உறுதியையும் ஊட்டி வளர்க்க வேண்டியது ஒரு பெற்றோரின் கடமையாகிறது. எங்கு பார்த்தாலும், வன்முறைகள் கொடி பிடித்து ஆட்டம் காட்டும் இன்றைய காலகட்டத்தில் இது போன்ற தெளிவை நம் குழந்தைகளுக்கு ஏற்படுத்த வேண்டியது அவசியமாகிறது! ஆனாலும் […]
|
Posted: 26 Aug 2015 02:10 AM PDT ”எழில்சிவந்த கண்ணன் , பொழில்வேணு கானம் , தொழில்மாடல் கேசவ் தனுக்கு -(தொப்புள்)சுழியில், உலகெலாம் உண்டு அலைகடல் நீந்தும், கலகலப்பு கோபாலன் காண்”….கிரேசி மோகன்….
|
|
Posted: 26 Aug 2015 12:30 AM PDT மீ.விசுவநாதன் சிற்றெறும்பு ஒன்றன்பின் ஒன்றாகச் செல்லுவதும், வானத்தில் வெண்புறாக்கள் சுற்றமுடன் ஒழுங்காகப் பறப்பதுவும், சோதியொளி நேர்கோட்டில் வருவதுவும், முற்றத்தில் மழைத்துளிகள் தாளத்தை முழுமூச்சாய் மதிப்பதுவும், பார்க்கின்ற கற்றறிந்த மானுடந்தான் சுயநலத்தால் காப்பதில்லை ஒழுக்கத்தை உலகினிலே ! தேனெடுக்கும் வண்டினங்கள் பூக்களினை தேவதையாய்ப் போற்றுவதும், காட்டினிலே மானெடுக்கும் பூற்களெலாம் பகைமறந்து மனமொத்துப் பழகுவதும், ஆற்றினிலே மீனெடுக்கும் கொக்குகளும் தேவைக்கு மேலாகக் கொள்ளாம லிருப்பதுவும் நானெடுக்க விரும்பாத மானுடர்க்கு நற்பாடம் நடத்துவது வீண்தானோ? பலவண்ணக் கோலங்கள் வானத்தில் பளபளெனத் தோன்றுவதும், […]
|
|
Posted: 25 Aug 2015 05:16 PM PDT -மலர் சபா மதுரைக் காண்டம் – 06: கொலைக்களக் காதை ஐயையும் மாதரியும் கோவலனையும் கண்ணகியையும் பாராட்டுதல் அரிய மறைகளில் அரசர்க்கு அடுத்த நிலையில் வைத்துப் போற்றக்கூடிய வணிகர்க்கு எனக் கூறப்பட்ட முறைமைகளுள் உணவு உண்ணும் முறைமைகள் அனைத்தையும் முறையாக முடித்துப் பின் உணவருந்த வந்தான் கோவலன். “இம்மதுரைக்கு வந்த நம்பி கோவலனும் ஆயற்பாடியில் நல்ல உணவு உண்ணும் யசோதை மகன் காயாம்பு வண்ணன் கண்ணன் தானோ! இவன் பசித்துயர் தீர்க்கும் பலவகை வளையல்களை அணிந்த இந்தக் கண்ணகியும் முன்னொருகாலத்தில் நம் […]
|
|
யார் சொல்வது? தமிழா யார் சொல்வது? Posted: 25 Aug 2015 05:15 PM PDT -தமிழ்நேசன் த.நாகராஜ் பார் புகழும் பல தமிழர் வாழ்ந்த மண் இது! அதை நீ அறியாமலே இருந்துவிட்டால் யார் சொல்வது ? உன் குழந்தைக்கு யார் சொல்வது ? மனித மேம்பாடும் பண்பாடும் கொண்ட மொழி இது! அதை நீ உணராமலே இருந்துவிட்டால் யார் சொல்வது ? உன் குழந்தைக்கு யார் சொல்வது ? பல்வேறு திட உணவு முறையைக் கண்டு தந்த இனம் இது! அதை நீ ருசிக்கவே மறந்துவிட்டால் யார் சொல்வது ? உன் […]
|
|
Posted: 25 Aug 2015 05:08 PM PDT நிர்மலா ராகவன் `நீங்கள் இந்தியாதானே?’ சிங்களர்கள், தமிழர்கள் எல்லாரும் என்னைக் கேட்ட கேள்வி. நான் தலையாட்டியதும், `இந்தியா, ஸ்ரீ லங்கா ஸேம்-ஸேம் (same same)!’ என்றார்கள். பார்ப்பவர்களெல்லாம் புன்னகைத்தார்கள். நான் தெருவில் நின்றுகொண்டிருந்தபோது, பேருந்துக்குள்ளிருந்து ஒரு மாது தோழமையுடன் புன்னகைத்தார். (அவர் தமிழரில்லை. தமிழர்கள் முன்பின் தெரியாதவர்களைப் பார்த்து சிரிப்பது அபூர்வம்). கடந்த ஜூலை மாத இறுதியில் நானும், என் மகளும் ஆறு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தோம். கோலாலம்பூரிலிருந்து மூன்றரை மணி நேர விமானப் பயணம். பண்டாரநாயக […]
|
|
Posted: 25 Aug 2015 05:05 PM PDT – கவிஜி. ஊட்டி. ஊட்டியில் இருந்து 35 கிலோ மீட்டரில் ஒரு காட்டு பங்களா. நான், என் அக்கா, தங்கை, தம்பி, மாமா பையன், என் நண்பன் கிரி, அவனின் தங்கை மாயா, மாயாவின் தோழிகள் என்று ஒரு பட்டாளமே பிக்னிக் போயிருந்தோம். ஊட்டிக்குள் நுழையும் நிமிடங்களை மனம் செல்ஃபி எடுத்துக் கொண்டே வந்தது. எடுத்துக் கொண்ட செல்ஃபி நினைவுகளை அசை போட்ட நொடிகளோடு சேர்த்து முகநூலில் ஏற்றிக் கொண்டே இருந்தோம். அன்று இரவு அந்தக் காட்டு […]
|
|
Posted: 25 Aug 2015 05:02 PM PDT -சுரேஜமீ மழலைமுன் ஆற்றாமை காட்டல் அறிவன்று வாழ்வின் ஒளியாய் வந்தது – வள்ளுவம் சொல்தினம் பாடம் இயல்பு மாறிப் பழக்கிடும் உள்ளம் கனி! இலக்கு நோக்கும் நிறைமனம்; மாற்றாய் இருப்பு காக்கும் வழிச்செல் உண்டு! இராது புறம்பேசத் தங்கும் சிறுமையும் வள்ளுவம் தள்ளும் புறம்! தானேகி நிற்கின் தடுக்கும் வாழ்வொருநாள் தன்னைப் போக்கின் தமிழேகி – வள்ளுவம் வாக்கின் வழிநிற்கத் தன்னையும் தாங்கும் வளம்பெருகும் மண்ணில் உணர்! இன்முகம் சொல்நலம் பண்புடை நாளும் இறைசெவி செல்லும் நினைத்த […]
|
|
Posted: 25 Aug 2015 05:00 PM PDT – தேமொழி. பழமொழி: நெய்த்தலைப் பால் உக்குவிடல் விழுத்தொடைய ராகி விளங்கித்தொல் வந்தார் ஒழுக்குடைய ராகி ஒழுகல், – பழத்தெங்கு செய்த்தலை வீழும் புனலூர! அஃதன்றோ நெய்த்தலைப்பா லுக்கு விடல். (முன்றுறையரையனார், பழமொழி நானூறு) பதம் பிரித்து: விழுத் தொடையர் ஆகி விளங்கி, தொல் வந்தார் ஒழுக்கு உடையர் ஆகி ஒழுகல்,-பழத் தெங்கு செய்த்தலை வீழும் புனல் ஊர!-அஃது அன்றோ நெய்த்தலைப் பால் உக்குவிடல். பொருள் விளக்கம்: பெருமைதரத்தக்க பாரம்பரியப் பின்னணியுடன், பழம்பெரும் […]
|
|
Posted: 25 Aug 2015 04:58 PM PDT வையவன் கையிலிருந்த சூட்கேஸை கீழே வைத்து விட்டு, பிரீதாவிடமிருந்து சாவியை வாங்கி கதவைத் திறந்தான் சிவா. திறந்தவுடனே ஒரு கடிதம் எதிர்பட்டது. எடுத்துப் பார்த்தான். திஷ்யாவிடமிருந்து தான் வந்திருந்தது. கையெழுத்தைப் பார்த்ததுமே பளிச்சென்று புலப்பட்டது. திருப்பி தேதியைப் பார்த்தான். பத்து நாட்களுக்கு முன் வந்திருந்தது. மடித்துச் சட்டையில் போட்டுக் கொண்டு சூட்கேஸ்களை உள்ளே எடுத்து வைத்தான். ஆட்டோவிற்குப் பணம் கொடுத்து விட்டுத் திரும்பி வந்தாள் பிரீதா. “எத்ர கம்பெல் செய்தும் வெற்றிவேல் எந்தினாணு நிர்க்காம நாட்டினு போயது?” […]
|
| You are subscribed to email updates from வல்லமை
To stop receiving these emails, you may unsubscribe now. |
Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
vallamai |
|
Posted: 26 Aug 2015 04:46 PM PDT -மீ.விசுவநாதன் குளிர்ந்த நீரில் தினந்தோறும் –குளித்து உன்னை வழிபடுவேன்! ஒளிர்ந்த உன்தன் முகம்பார்த்து –உடம்பில் திருநீறு நானணிவேன் ! கனிந்த ஞானம் வரவேண்டிக் –கவனத் துடனே தவம்செய்வேன் ! புனிதன் போலத் தோன்றுவதால் பொய்யாம் முகத்தை மூடிவிட்டேன்! எவனோ இல்லை நானேதான் –என்றே கர்வக் கூத்தடிப்பேன் ! கவன மாக இருந்தாலும் –கள்ள உள்ளம் நீயறிவாய் ! சவமாய் இருக்கும் மனம்வேண்டும் –சரியாய் எனக்குள் நீவேண்டும் ! சிவனே நீயும் நான்தானே –சித்த புருஷ உயிரோனே ! […]
|
|
நாளை உலகை ஆளவேண்டும்..உழைக்கும் கரங்களே! – புலவர் புலமைப்பித்தன் Posted: 26 Aug 2015 05:16 AM PDT கவிஞர் காவிரிமைந்தன் நாளை உலகை ஆளவேண்டும் கோவை செழியன் அவர்கள் தயாரிப்பில் கே.சி.பிலிம்ஸாரின் உழைக்கும் கரங்கள் திரைப்படம் இயக்குனர் ஸ்ரீதர் இயக்கத்தில்!! எம்.ஜி.ஆர். கதாநாயகனாக.. மெல்லிசை மன்னரின் இன்னிசையில் புலவர் புலமைப்பித்தன் வரைந்த பூபாளமிது! உழைக்கும் மக்களுக்காக வரையப்பட்ட உன்னத சாசனமிது!! கே.ஜே.யேசுதாஸ் என்னும் கானப்பறவை தன் கந்தர்வக்குரலில்.. நாளை உலகை ஆளவேண்டும்..உழைக்கும் கரங்களே! நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே – இந்த நாடு முழுதும் மலர வேண்டும் புரட்சி மலர்களே புரட்சி மலர்களே […]
|
| You are subscribed to email updates from வல்லமை
To stop receiving these emails, you may unsubscribe now. |
Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
Posted: 28 Aug 2015 05:07 AM PDT “வரலக் ஷிமிவிரதம் ,வாமனனாய் வந்த , - கரலக் ஷணகாந்தன் கண்ணன், -பரவிஷ்ணு ஆணுத் தமனவன் ,ஆயர் குலக்கொழுந்தை, ஓணத் திருநாளில் ஓம்பு “….கிரேசி மோகன் ….
|
|
சமூகவியல் ஆய்வாளர் சாந்தி சச்சிதானந்தம் கொழும்பில் காலமானார் Posted: 28 Aug 2015 02:19 AM PDT தடாகம் கலை இலக்கிய வட்டத்தின் ஆரம்ப கால உறுப்பினரும் ,என் மிக நெருங்கிய தோழியும் அரசியல் விமர்சகரும், சமூகவியல் ஆய்வாளரும், பெண்ணியல் வாதியுமான சாந்தி சச்சிதானந்தம் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் இன்று வியாழக்கிழலை காலமானார். நீண்டகாலமாக சுகயீனமடைந்திருந்த நிலையிலும், சமூகப் பணிகளில் ஆர்வம் காட்டியதுடன் சமகால அரசியல் நிலைமைகளையும் நாளேடுகளில் விமர்சித்து வந்தார். கொழும்பு – 07 டொரின்டன் அவனியுவிலுள்ள விழுது மேம்பாட்டு மையத்தின் ஸ்தாபகரும், அதன் நிறைவேற்றுப் பணிப்பாளராகவும் பதவிவகித்த அவர், ஐக்கிய நாடுகள் சபையிலும் […]
|
|
Posted: 27 Aug 2015 08:39 PM PDT -மேகலா இராமமூர்த்தி பாட்டாளி வர்க்கத்தின் பிதாமகன்! பரந்துவிரிந்த இப்பூவுலகில் வாழும் மாந்தர்கள் பலகோடி; அவர்களில், அல்லற்பட்டு ஆற்றாது அழுதுநிற்கும் மக்களின் எண்ணிக்கைக்கும் குறைவில்லை. ஆனால் அவர்களின் துயர்துடைக்க, அவர்தம் வாழ்வில் ஒளிதுலங்கக் கரம் நீட்டுவோர், வழிகாட்டுவோர் எத்தனை பேருளர் என்று ஆராய்ந்துபார்த்தால் ’வெகு சிலரே’ கிட்டுவர். அத்தகைய வெகுசிலரில் ஒருவராய், தொழிலாளர்களின் தோழராய், பாட்டாளிகளின் கூட்டாளியாய்த் திகழ்ந்தவர்தான் வரலாற்று நாயகர் காரல் மார்க்ஸ்! ஜெர்மனியின் ரைன்லாந்தில் (Rhine Province or Rhineland) பிறந்த கார்ல் மார்க்ஸ், அடிப்படையில் […]
|
|
திருக்குறளுக்குப் புது விளக்கம் – 11 Posted: 27 Aug 2015 06:03 PM PDT – புலவர் இரா. இராமமூர்த்தி. இவ்வுலகின் உறவுகளில் மிகச்சிறந்த உறவு நட்பேயாகும்! தாய் – மகள், தந்தை – மகன், கணவன் – மனைவி, அண்ணன்- தம்பி, அக்கா- தங்கை, ஆண்டவன்- அடியார், தோழன்- தோழி போன்ற உறவுகள் நம் சமுதாயத்தில் நாம் பெறும் இடத்தினை வரையறுக்கின்றன! இவற்றுள் சிறந்த உறவாகிய நட்பின் பெருமையைத் திருவள்ளுவர், நட்பு, நட்பாராய்தல், தீநட்பு, கூடாநட்பு, சிற்றினஞ்சேராமை, பெரியாரைத் துணைக்கோடல் ஆகிய அதிகாரங்களில் பல்வேறு அணுகுமுறைகளில் நிலைநாட்டியுள்ளார்! மேலும், ஆணும் பெண்ணும் […]
|
|
Posted: 27 Aug 2015 05:48 PM PDT –தேமொழி. அமெரிக்காவில் ஆகஸ்ட் 26 ஆம் நாள், “மகளிர் சமத்துவ நாள்” (Women’s Equality Day) எனக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு அமெரிக்காவின் 95 ஆவது மகளிர் சமத்துவ நாள் கொண்டாடப்பட்டது. இந்நாள் அமெரிக்கப் பெண்மணிகள் 1920 ஆம் ஆண்டு தேர்தலில் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றதைக் கொண்டாடும் நாளாகும். மிகுந்த போராட்டத்திற்கிடையே, 70 ஆண்டுகளுக்கும் மேலாகத் தடைகள் பலவற்றை எதிர்கொண்டு அமெரிக்கப் பெண்கள் வாக்களிக்கும் உரிமை பெற்றார்கள். சூசன் பி. ஆண்டனி, எலிசபெத் காடி ஸ்டாண்டன், மற்றும் […]
|
|
Posted: 27 Aug 2015 05:45 PM PDT சு.கோதண்டராமன் குடந்தைக் காரோணம் பூவார்பொய்கை அலர்தாமரைசெங் கழுநீர்புறவெல்லாந் தேவார்சிந்தை அந்தணாளர் சீராலடிபோற்றக் கூவார்குயில்கள் ஆலும்மயில்கள் இன்சொற்கிளிப்பிள்ளை காவார்பொழில்சூழ்ந் தழகார்குடந்தைக் காரோணத்தாரே -சம்பந்தர் ஆங்கிரஸ பிரமராயர் தூக்கம் வராமல் கோவிலின் முன் முகப்பில் இங்கும் அங்கும் உலவிக் கொண்டிருந்தார். இன்று பிற்பகல் வந்த செய்தி அவரது உள்ளத்தை மிகவும் கலக்கியிருந்தது. ஒரு வருடமாகவே அவர் கவலைப்படும் வகையிலான தகவல்கள் காதில் விழுந்து கொண்டிருந்தன. ஆனால் இன்று வந்தது எல்லாவற்றிற்கும் உச்சகட்டமானதாக இருந்தது. மூவாயிரம் பேரின் உயிருக்கும் […]
|
|
Posted: 27 Aug 2015 05:42 PM PDT –தஞ்சை வெ.கோபாலன். பெருந்தலைவர் காமராஜ் பற்றி எத்தனை எழுதினாலும் மனம் முழுத் திருப்தி அடையவில்லை. மேலும் மேலும் அவரைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருக்கவே மனம் விரும்புகிறது. அவரைப் பற்றி நாம் என்ன சொல்கிறோம் என்பதுகூட அத்தனை முக்கியமில்லை. அவருடைய தாய் சிவகாமி அம்மையார் என்ன சொல்லியிருக்கிறார் என்பதைப் பார்ப்போமா? “நான் ஒரு மாணிக்கத்தைப் பெற்றேன், இப்போ உலகத்தில் உள்ள எல்லா மாணிக்கங்களும் என்னைப் பார்க்க வர்றாங்க”. இப்படி அவர் சொன்ன செய்தியை சென்னையிலிருந்து வெளிவரும் வாராந்தரி ராணி […]
|
|
இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(163) Posted: 27 Aug 2015 05:17 PM PDT –சக்தி சக்திதாசன். அன்பினியவர்களே ! இனிய வணக்கங்கள் ! இவ்வுலகத்தில் பிறந்த அனைவருக்கும் தம் வாழ்க்கையை தாம் நினைத்த வகையில் வாழும் உரிமை இருக்கிறது. எனது வாழ்க்கையை நான் நினைத்த வகையில் வாழும் உரிமை எனக்கிருக்கிறது என்று கூறிக் கொண்டு மற்றொருவருடைய வாழ்வினைச் சிதைப்பது என்பது ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதொன்றா ? இல்லையே ! ஒவ்வொருவருக்கும் தமது வாழ்வினை அமைத்துக் கொள்ளும் உரிமை இருக்கும் அதேசமயம் அவ்வாழ்க்கையை ஒரு சமூகநீதிக்குட்பட்ட வகையில் வாழ்ந்து முடிக்கவேண்டிய கடப்பாடு உள்ளது. […]
|
|
Posted: 27 Aug 2015 05:06 PM PDT ஆர். எஸ். கலா 1. செழுமையான ஆட்சியில் எளிமையாய் வாழ்ந்தவர் பார் புகழும் அண்ணா! 2. குயவனுக்கு மகிழ்ச்சி தை மாத வருகை பானை விற்பனை 3. தமிழர்தின விழாவில் வரவேற்பு வாசகம் வெல்கம்! 4. வேற்றுமையைப் பாராது ஒருதாய் மக்களாய் மதுக்கடையில்! *** லிமரைக்கூ 1. மேகத்தின் அழுகையோ மோகம் பூமியிலே நிறைந்து விட்டது வெள்ளம் என்னுள்ளே ஒரு சோகம் 2. […]
|
|
Posted: 27 Aug 2015 04:54 PM PDT -ஆர். எஸ். கலா கதை கதையாக அளந்து காலத்தையும் நேரத்தையும் கழிக்கும் மனிதர்களே…! பேசும்போது உம் பேச்சு மற்றோரைத் திருத்தும் மருந்தாக இருக்கின்றதா…இல்லை விருந்தாகச் சுவைக்கின்றார்களா என்று உணர்ந்து உரைக்கின்றீரோ…? தெருவிலும் கூட்டம் போட்டுப் பேச்சு வீட்டிலும் அதே நிலமையாச்சு…! சினிமா பற்றியும் அதில் வரும் தேவதைகள் பற்றியும் பேச்சு, இறுதியில் நாசமாகப் போச்சு பொன்னான நேரம்! உருப்படியாக ஒரு காரியம் பற்றிப் பேசுவது உண்டா? அதைச் செய்ய முயன்றது உண்டா? கொலை கொள்ளை பற்றியே எப்போதும் […]
|
vallamai |
|
ஜப்பான் புகுஷிமா அணு உலை விபத்துக்குப் பின் அகில நாட்டு அணுமின் உலைகளின் நிலைமை என்ன ? Posted: 29 Aug 2015 10:59 AM PDT –சி. ஜெயபாரதன். ஜப்பான் புகுஷிமா அணு உலை விபத்துக்குப் பின் அகில நாட்டு அணுமின் உலைகளின் நிலைமை என்ன ? (Power Demand :1980 – 2035) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா http://bcove.me/pyhaicf3 https://www.youtube.com/watch?v=0nUtqHlQ0Hk ++++++++++++++ மேம்பட்ட படைப்பு ஒன்றை உருவாக்க ஒரு பாதை இருக்குமானால், அதனால் விளையப் போகும் பாதிப்புகளின் முழுத் தோற்றத்தை முதலில் ஆழ்ந்து அறிந்த பிறகுதான் அதை ஆரம்பிக்க வேண்டும். தாமஸ் ஹார்டி [Thomas Hardy 1840–1928] […]
|
vallamai |
|
படக்கவிதைப் போட்டி 27-இன் முடிவுகள் Posted: 30 Aug 2015 10:18 AM PDT -மேகலா இராமமூர்த்தி இவ்வாரக் கவிதைப்போட்டிக்கான ஒளிஓவியத்துக்குச் சொந்தக்காரர் திரு. ராம்குமார் ராதாகிருஷ்ணன். இதனைப் போட்டிக்கு உகந்ததெனத் தேர்ந்தெடுத்துத் தந்தவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவ்விருவருக்கும் வல்லமையின் நன்றி! திறந்திருக்கும் கதவு; சிதறியிருக்கும் காலணிகள்; அவற்றினருகே விழுந்திருக்கும் செய்தித்தாள்; இவற்றையெல்லாம் வேடிக்கை பார்த்தபடி வீற்றிருக்கும் நாற்காலி என…இப்புகைப்படம் வகைப்படுத்திக் காட்டும் பொருள்கள், ”இது எந்த இடம்? இங்கிருப்பவர்கள் யார்?” எனப் பற்பல வினாக்களை நம்முள் விதைக்கின்றன. விடைபகரும் பொறுப்பை நம் கவிஞர் பெருமக்கள் […]
|
Posted: 31 Aug 2015 07:38 PM PDT ஹரிச்சுவடி அந்தரி அண்ணா கோவிந்தா ஆவுடை அப்பா கோவிந்தா இந்திர லோகம் கோவிந்தா ஈ கொசு எனக்கு கோவிந்தா உந்தன் மலையில் கோவிந்தா ஊர்வேன் புழுவாய் கோவிந்தா எந்த நாளுமே கோவிந்தா ஏகாந்த சேவை கோவிந்தா ஐந்து பொறிகட்கு கோவிந்தா ஐயமிட்டிடு கோவிந்தா ஒன்றி உரைப்போம் கோவிந்தா ஓம் நம நாரண கோவிந்தா
|
| You are subscribed to email updates from வல்லமை
To stop receiving these emails, you may unsubscribe now. |
Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
|
Posted: 01 Sep 2015 05:17 PM PDT -கிரேசி மோகன் சூரி நாகம்மாள் ஸ்ரீ ரமணாஅஸ்ரம லேகுலு… பச்சைப்புல் பூண்டு படுத்திடப் பஞ்சணை, எச்சக்கை சோத்துக்கை ஏந்திட – பிச்சைக்கு, புண்ணிய மாதர்கள் போதாதா! வைராகிக்(கு) அன்னியர்முன் நிற்றல் அவம்.
|
|
Posted: 01 Sep 2015 05:15 PM PDT -பாவலர் கருமலைத்தமிழாழன் பெருந்தலைவர் காமராசர் முதல்வ ராகப் –பெருமைமிகு தமிழ்நாட்டை ஆண்ட போது வருங்காலச் சந்ததியை நெஞ்சி லெண்ணி –வளர்தொழில்கள் விவசாயம் கல்விக் காக அருந்திட்டம் பலதீட்டி மாநி லத்தை –அனைத்துவகைத் துறைகளிலும் முதன்மை யாக்கித் திருவாக இந்தியாவை ஆட்சி செய்த –திருமகனாம் நேருவினை அழைத்தார் காண ! மதுரையிலே நடக்குமொரு விழாவிற் காக –மாண்புமிகு நேருவுடன் சென்ற போது இதுவுங்கள் ஊருக்குப் பக்கம் தானே –இன்றுங்கள் அம்மாவைப் பார்த்துச் செல்வோம் பொதுவாழ்விற் குயர்ந்தோனை அளித்த […]
|
Posted: 01 Sep 2015 05:12 PM PDT – தேமொழி. பழமொழி: தனக்கு இன்னா, இன்னா பிறர்க்கு வினைப்பயன் ஒன்றின்றி வேற்றுமை கொண்டு நினைத்துப் பிறர்பனிப்ப செய்யாமை வேண்டும் புனப்பொன் அவிர்சுணங்கிற் பூங்கொம்ப ரன்னாய் தனக்கின்னா இன்னா பிறர்க்கு. (முன்றுறையரையனார், பழமொழி நானூறு) பதம் பிரித்து: வினைப் பயன் ஒன்று இன்றி, வேற்றுமை கொண்டு, நினைத்துப் பிறர் பனிப்ப செய்யாமை வேண்டும்; புனப் பொன் அவிர் சுணங்கின் பூங் கொம்பர் அன்னாய்! தனக்கு இன்னா, இன்னா பிறர்க்கு. பொருள் விளக்கம்: செய்யும் செயலால் […]
|
|
Posted: 01 Sep 2015 05:05 PM PDT -பாவலர் கருமலைத்தமிழாழன் பெருந்தலைவர் காமராசர் நாகர் கோயில் –பெருந்தொகுதி உறுப்பினராய் நாட்டை ஆளும் அருமன்றில் இருந்தபோது தில்லி வந்த –அமெரிக்க அதிபராக இருந்த நிக்சன் அருந்தலைவர் காமராசர் எளிமை நேர்மை –அருந்தொண்டு தியாகத்தைக் கேள்வி யுற்றுப் பெருமகனார் தமைக்கண்டு பேசு தற்கே –பேரார்வ விருப்பத்தை எடுத்து ரைத்தார் ! உலகத்தின் மிகஉயர்ந்த பதவி தன்னில் –உள்ளநிக்சன் ஆசையினைத் தமிழ கத்தின் குலக்கொழுந்தாம் காமராச ரிடத்தே கூறிக் –குறித்துரைப்பீர் நேரத்தை என்றே கேட்க நிலமாளும் பிரதமரைத் தேர்ந்தெ டுக்கும் […]
|
|
Posted: 01 Sep 2015 05:03 PM PDT -மீ.விசுவநாதன் முப்பது மாடிக் கட்டிடம்! இரண்டாவது ஐந்தாவது மாடிகளிலும் வெளிச்சுவர் ஓரமாகவும் “கார்பார்க்கிங்” வசதிகள், நீச்சல்குளம், உடற்பயிற்சிக் கூடம், அழகிய பிள்ளையார் கோவில், வரிசையாக நிற்கும் பன்னீர்ப்பூ, குல்மோகர் மரங்கள், “கிளப்ஹவுஸ்” வாசலில் மல்லிச் செடி… குழந்தைகள் விளையாட, முதியோர் அமர்ந்து பேச இடங்கள்… எல்லாமே கொள்ளை அழகு…! இன்று பெய்தது ஒரு பெரு மழை! மாடிவாசிகளின் வீட்டுச் சுவரெல்லாம் தண்ணீர்க் கசிவு… நடுக்கூடத்து “காங்க்ரீட்” விரிசலில் ஒழுகல்… வீடு கட்டிக் கொடுத்த மெத்தப் படித்த “என்ஜினியரை”க் […]
|
|
Posted: 01 Sep 2015 04:59 PM PDT -மீ.விசுவநாதன் காலையில் சோலையில் தள்ளுவண்டிக்குள் குழந்தையை வைத்துத் தள்ளியபடி நான்… மரக்கிளையில் குருவி , குயில், புறா, காக்கை , மைனா…இன்னும் மரத்தடியில் இரண்டு இளசுகள்… கொஞ்சம் தள்ளி நல்ல கிழடுகள்… ஓடியும், நடந்தும் வரும் நடுவயது ஆணும், பெண்ணும்… பேசியும், காதலித்தும், சண்டைக்குரலுடனும்… பசுவின் பின்னால் காளை…பசு முறைக்கிறது! பன்னீர்ப் பூக்களும், சாமந்தியும், செம்பருத்தியும், பலவண்ண ரோஜாவும், அரளிகளும் குல்லென மலர்ந்து சிரிக்கிறது… தள்ளுவண்டிக்குள் குழந்தையும் கள்ளமின்றிச் சிரிக்கிறது… இயற்கையில் பூவுக்கும், குழந்தைக்கும் மட்டுமே கவலையின்றிச் […]
|
|
Posted: 01 Sep 2015 04:59 PM PDT -ஆர். எஸ். கலா கணங்கள் ரணமாகிப் பெருகுகின்றது இரத்த ஆறு! தினமும் உப்பு நீரிலே குளிக்க விரும்புகின்றது விழிகள்! சொந்த வரிகளைப் போட்டுச் சுரங்கள் இல்லாமலே சோக கீதம் இசைக்கின்றது இதயச் சுரங்கம்! பிம்பம் இழந்து துன்பம் சுமக்கின்றது உடல்! அங்கம் எங்கும் ஓடாமலே உறைந்து விட்டது குருதி! அன்ன நடை இன்றி அமைதி கொண்டது பாதம்! பஞ்சு மெத்தையும் கண்ணில் படாதவாறு விரித்துள்ளது முள் விரிப்பு! உறக்கம் இன்றி எனக்கும் தவிப்பு! மூன்று மாதங்களாக நீ […]
|
|
Posted: 01 Sep 2015 04:57 PM PDT -தமிழ்நேசன் த. நாகராஜ் பத்து மாதம் சுமந்தவளே பத்தியம் இருந்து காத்தவளே உதிரத்தை உணவாகக் கொடுத்தவளே பார்த்துப் பார்த்து வளர்த்தவளே அன்பையும் பண்பையும் தந்தவளே! உயராத செல்வத்தால் எனைக் காக்க அயராது உழைத்தவளே ஆதிசக்தியாய் எனக்குக் காட்சியளித்தவளே அம்மா! என்றும் நீ என்னவளே! அன்று உனது முந்தானை தந்த – நிம்மதி… இன்று அந்தச் சிந்தனையும் தருகிறதே – அம்மா!
|
|
Posted: 01 Sep 2015 04:56 PM PDT -மீ.விசுவநாதன் எங்கோ கால்கள் போகிறது – நன்மை ஏதோ செய்ய நடக்கிறது! எங்கும் யாரும் ஒன்றாக – அன்பில் இசைந்து மகிழக் கடக்கிறது! (எங்கோ கால்கள்) ரயிலில் பயணம் செய்கின்றேன் – மனித ரசனை அறிய முயல்கின்றேன்! வெயிலில் களைத்து நிற்கின்றேன் – ஒரு வேம்பு நிழலைக் கற்கின்றேன்! (எங்கோ கால்கள்) பிச்சை எடுப்போன் வீதியிலே – கைப் பிள்ளைப் பசியை விற்கின்றான்! கொச்சை மொழியில் அவனையுமே – பணக் கொழுப்பில் பேசுவோன் இருக்கின்றான்! (எங்கோ கால்கள்) ஏட்டுக் கல்வி இளைஞரென – […]
|
|
Posted: 01 Sep 2015 04:55 PM PDT –சுரேஜமீ. நேரம் உழைப்பின் அருமையை அறிந்தவர்கள் நேரத்தின் தன்மையை உணர்ந்தவர்களாக இருப்பார்கள்! ஒவ்வொரு நிமிடமும் வாழ்வின் அர்த்தத்தை நமக்கு விளக்கிக்கொண்டு இருக்கிறது என்பதை ஒரு சிலர் மட்டுமே அறிய, அவர்கள் வாழ்வு மற்றவர்களுக்குப் பாடமாக அமைகிறது! எளிதில் எதை வேண்டுமானாலும் இவ்வுலகில் பெற்று விடலாம்; ஆனால், உலகையே கொடுத்தாலும் கிடைக்காத ஒன்று உண்டென்றால்; அதுதான் கடந்து சென்ற காலம்! மேல்நாட்டிலே நேரத்தின் அருமையைப் புரியவைக்க ஒரு கற்பனைக் கதை ஒன்றைச் சொல்வார்கள்; நீங்கள் ஒரு […]
|
Posted: 04 Sep 2015 01:14 PM PDT -மேகலா இராமமூர்த்தி வல்லமை வாசகர்கள் அனைவருக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்! நானிலம் போற்றும் நல்லாசிரியர்! மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசையில் அன்னை தந்தைக்கு அடுத்த உயரிய இடம் வழங்கப்படுவது குரு என்று போற்றப்படும் ஆசிரியர்களுக்கே. ‘ஆசு’ எனப்படும் அறியாமைக் குற்றந்தன்னை மாணாக்கர் மனத்தினின்று இரியச் (விலக) செய்பவரே ’ஆசிரியர்’ ஆவார். கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லா தவர் என்பார் தெய்வப் புலவர். எனவே கல்வியெனும் கண்ணைத் திறந்து மாணாக்கரை மாண்புடையோராய் […]
|
|
Posted: 04 Sep 2015 11:00 AM PDT அவன், அது, ஆத்மா (ஒரு எளிய மனிதனின் சுயசரிதை) – மீ.விசுவநாதன். கோகுலாஷ்டமி அவன் சிறுவயதுமுதலே பார்த்து மகிழ்ந்த உற்சவம் என்றால் அது வடக்கு மாடத்தெருவில் உள்ள பஜனை மடத்தில் நடக்கும் “கோகுலாஷ்டமி”தான். ஆவணி மாதத்தில் கிருஷ்ணபக்ஷ அஷ்டமி அன்று, அதாவது பௌர்ணமி கழிந்த அஷ்டமி திதியில் “கிருஷ்ண ஜயந்தி” உற்சவத்தைக் கொண்டாடுவார்கள். அதாவது ரிக், யஜுர் வேத ஆவணி அவிட்டம் முடிந்து வரும் அஷ்டமியில் “கோகுலாஷ்டமி”யைக் கொண்டாடுவார்கள். அதை கிராமிய வழக்கில் “விட்டம் கழிஞ்ச […]
|
|
Posted: 03 Sep 2015 06:30 PM PDT – கவிஞர். மா. உலகநாதன். “பல்கால் பழகினும் தெரியா உளவேல் தொல்காப்பியம் திருவள்ளுவர் கோவை மூன்றினும் முழங்கும்” -சுவாமிநாத தேசிகர் மெய்ப்பாடு என்பது, வெளிப்படுவது என்று பொருள்படும். உள்ளத்து உணர்ச்சிகளால் செயல்களில் தோன்றும் வெளிப்பாடு மெய்ப்பாடு. எட்டு வகையான மெய்ப்பாடுகள் எனத் தொல்காப்பியம் வரையறுக்கிறது. விரிக்கின் அதுவே 32 வகையெனவும் கூறும். “நகையே அழுகை இனிவரல் மருட்கை அச்சம் பெருமிதம் வெகுளி உவகை யென்று அப்பால் எட்டே மெய்ப்பா டென்ப!” (தொல் – பொருள்:247) நகை: நகை […]
|
|
இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்….. (164) Posted: 03 Sep 2015 06:21 PM PDT –சக்தி சக்திதாசன். அன்பினியவர்களே ! இனிய வணக்கங்கள். இப்பொழுதுதான் 2015 ஆம் ஆண்டு பிறந்தது போலொரு உணர்வு, அதற்குள்ளாக ஒரு குதிரையைத் தட்டி விட்டதும் அது கண்மூடித் திறப்பதற்குள் காததூரம் கடந்து விடுவது போல காலமும் ஓடி செப்டெம்பர் மாதத்தில் வந்து நிற்கிறது. மனிதனின் வாழ்வில் அவன் கடக்கும் ஒவ்வொரு வினாடியும் அவன் தனது முடிவை நோக்கி எடுத்து வைக்கும் வினாடிகள் என்பதே உண்மையாகிறது. ஆனால், அதற்காக எமது வாழ்வை எப்படி வாழ்ந்தாலும் வாழ்ந்து முடித்தால் சரி […]
|
|
Posted: 03 Sep 2015 06:20 PM PDT – மு. கோபி சரபோஜி. பண்டிகைகள் தோறும் ஒரு பட்டிமன்றத்தை அரங்கேற்றி விட வேண்டும் என்பதை எழுதா விதியாகக் கொண்டிருக்கும் எல்லாத் தொலைக்காட்சி சேனல்களும் தயவு செய்து அதை மறுபரிசீலனை செய்தால் நல்லது என்றே தோன்றுகிறது. மின்னல் கீற்றைப் போல ஒரு கருத்தை, சிந்தனையைக் கலகலப்பு என்ற இரசவாதத்திற்குள் வைத்து கவிதையும், கதையும், இலக்கியமும், இன்னபிறவுமாய் இழைத்துச் செவிகளில் அரங்கேற்றி விசேச நாட்களை விடுதலைத் திருநாள் கொண்டாட்டங்களாய் மாற்றிக் கொடுத்த பட்டிமன்றங்கள் இன்றைக்கு அரிதாகி வருகின்றன. பழுது […]
|
|
திருக்குறளுக்குப் புது விளக்கம் – 12 Posted: 03 Sep 2015 06:15 PM PDT – புலவர் இரா. இராமமூர்த்தி. திருக்குறளில் ஒப்புரவறிதல், ஈகை ஆகிய இரண்டு அதிகாரங்களும் அடுத்தடுத்து அமைந்துள்ளன! ஒப்புரவு அறிதல் என்ற தொடரின் பொருள் ஈகையிலிருந்து வேறு பட்டது என்பதை நமக்கு உணர்த்துவதற்காகவே, இவற்றை வள்ளுவர் அடுத்தடுத்து வைத்தார்! ஈகைக்கும் ஒப்புரவுக்கும் இடையே உள்ள நுட்பமான வேறுபாடு அறிந்து மகிழ்தற்கு உரியது. பரிமேலழகர் ஒப்புரவறிதல் இம்மை நோக்கியது; ஈகை மறுமை நோக்கியது என்கிறார்! ஒப்புரவு என்பது உலகத்தாரோடு ஒத்துச் செய்கின்ற சிறந்த தொழில். அதாவது ஒரு தொழிலைச் செய்பவன் […]
|
|
Posted: 03 Sep 2015 05:14 PM PDT -கிரேசி மோகன் -சூரி நாகம்மாள் ஸ்ரீ ரமணாஸ்ரம லேகுலு…. பகவான் ஸ்ரீ ரமண மஹரிஷி தன்னை ‘’நானே லாஸ்ட்டில் ஃபர்ஸ்ட்(கடைசியில் முதல்)’’ என்று சொல்லிக் கொள்வாராம்… லாஸ்ட்டுலஃபர்ஸ்ட் ஆனால்லாங் லாஸ்டிங் நிறைவுண்டு, ஃபார்ஸ்ட்ஃபுட்டாம் வாழ்வில் பசியாறி – வேஸ்ட்டாகாய்: டேஸ்ட்டான்மா காண திருவருணை ஈசரின், கோஸ்ட்டாம்(நிழல்) ரமணபதம் கொள்.
|
Posted: 03 Sep 2015 05:07 PM PDT எந்தவேலை ஆனாலும், எந்தவேளை ஆனாலும், நந்தலாலா நிந்தன் நினைவாக -அந்தரங்க பாவம் தனில்மூழ்கி, பார்க்கும் இடத்திலெல்லாம், நீவந்து நீலமாய் நில்! இல்லா ததைத்துரத்தி, செல்லா ததைச்சேர்த்து, பொல்லா தவனென்ற பேர்வாங்கி – நில்லாது, விட்டிலென மாயா வெளிச்சத்தில் வீழாது, விட்ட(ல்)இருள் வண்ணன்தாள் வீழ்! அக்கரைப் பச்சை அணுகா தவர்களுக்கு அக்கறை காட்டிட ஆயர்க்காய் – இக்கரை ஆறெமுனா தீரம் அடைந்தவன், கம்சனுக்கு, […]
|
|
Posted: 03 Sep 2015 05:06 PM PDT -விஜயகுமார் வேல்முருகன் இரவின் கருமை மெல்லக் கரைந்து கொண்டிருந்தது கிழக்கில் எழும் செங்கதிர்களால்… கரைகின்ற இருளிலும் கரைக்கின்ற ஒளியிலும் கரைகின்றன காக்கை கூட்டங்கள் பாறையின் மீது பாதைகள் கண்டு பாதங்கள் பதித்தன எறும்புகள் பாவையர் வளை கைகள் பாவிசைக்கும் ஒலியோடு பார்த்து இட்டனர் கோலங்கள் கோலத்தின் அழகைக் காணக் கோளமாய் ஆதவன் உதிக்கவே கோவையாய்ப் பொழுதும் விடிந்தது!
|
|
Posted: 03 Sep 2015 05:02 PM PDT -பா.ராஜசேகர் தினம் காலைப்பொழுது இனிதாக விடியவேண்டும்! அசைந்தாடும் செடிகொடிகள் குளிர நல்மழைவேண்டும்! நதி நீரெல்லாம் முழு தேசம் பகிரவேண்டும்! பந்தபாசம் மனிதரிலே பெருகவேண்டும்! சாதிமத பேதமில்லா நாடென்று உலகம் காணவேண்டும்! பசிக்கொடுமை பகல் கனவாய் மாறவேண்டும்! நடிகர்களைத் தெய்வமாக்கும் நிலை மாறவேண்டும்! நல்மனிதர்களை மதிக்கும் நிலை உயரவேண்டும்! தமிழன் தலைநிமிர்ந்து பவனிவரும் வரம்வேண்டும்! பரதத்தாயை பார்புகழப் பார்த்ததுமே என்னுயிர் போகவேண்டும்!
|
| You are subscribed to email updates from வல்லமை
To stop receiving these emails, you may unsubscribe now. |
Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
|
Posted: 05 Sep 2015 05:23 AM PDT “என்றுமே நலமான தாயும் சேயும்”…. லவ்லி கேசவ்….மாஸ்டர் ஃபீஸ்…. ————————————————————– மருமகன் வேலனோ தகப்பன்சாமி, தாய்மாமன் மாலனோ தாய்ச்சாமி…. தகப்பன் சுவாமி, தணிகை முருகன், அகப்பட்டு அன்னை அணைப்பு, -சுகம்பெற்றான்: வெஞ்சிறை விட்டு, வெளிவந்(து) எசோதையின், மஞ்சம் துயின்றதாய்சா மி ….கிரேசி மோகன்…. உந்த எதுகை, உருவாக மோனைகள், வந்ததே வெண்பா விதவிதமாய், -அந்தக், குழலினிது யாழினிது என்போர்கள், கண்ணன், மழலைச்சொல் கேளாத தவர் ….கிரேசி மோகன்….
|
|
Posted: 04 Sep 2015 07:39 PM PDT -கிரேசி மோகன் நாளையவன் ஐயர்க்கு, நாமம் அணிந்தவர்க்கு,(வைணவர்க்கு), நாளை மறுநாள் நவநீதம் – வேளைதனில், இஷ்டம்கொள் ளாதே, இரவில் உதித்த, அஷ்டமிக்கு அன்பே அவல்.
|
|
Posted: 04 Sep 2015 07:31 PM PDT -சரஸ்வதி ராசேந்திரன் ஏகாந்தச் சேவை தாராய்! காரிருள் நடு நிசி வேளையிலே கண்ணன் பிறந்தான் கடுஞ்சிறையில் மண்ணை உண்டு உலகைக் காட்டினான் வெண்ணெய் திருடித் தின்பவனவன் மாடுகள் மேய்க்கும் கண்ணன் அவன் ஜாலம் ஆடும் மாயக் கண்ணன் குருவாயூரில் குழந்தையாய் நின்று திருமேனித் தரிசனம் தந்தான் குழலூதி மனம் குளிர வைப்பான் கோபியரின் சேலைமறைத்துக் குறும்புசெய்வான் பகலிரவாய் அவனை நாம் வணங்குவோம் பரந்தாமன் தாளினைச் சரண் புகுவோம் எத்தனையோ லீலை […]
|
Posted: 04 Sep 2015 11:14 AM PDT – தேமொழி. பழமொழி: தெளியானைத் தேறல் அரிது ஆறாச் சினத்தன் அறிவிலன் மற்றவனை மாறி யொழுகல் தலையென்ப – ஏறி வளியால் திரையுலாம் வாங்குநீர்ச் சேர்ப்ப! தெளியானைத் தேற லரிது. (முன்றுறையரையனார், பழமொழி நானூறு) பதம் பிரித்து: ஆறாச் சினத்தன் அறிவு இலன்; மற்று அவனை மாறி ஒழுகல் தலை என்ப;-ஏறி வளியால் திரை உலாம் வாங்கு நீர்ச் சேர்ப்ப!- தெளியானைத் தேறல் அரிது. பொருள் விளக்கம்: ஆற்றமாட்டாத சினம் கொண்டவர் அறிவற்ற மூடர், […]
|
| You are subscribed to email updates from வல்லமை
To stop receiving these emails, you may unsubscribe now. |
Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
Posted: 07 Sep 2015 01:06 AM PDT கண்ணிநுண் தாம்பினால், கட்டுண்ட காரணம், அன்னையின் அன்பினாலா!, அல்லது -கண்ணனே, ஓயாத லீலையின் மாயா வசப்பட்டு, ஆயாசம் ஆனதா லா! …. மண்ணுண்டு , மாதா மயங்கிட, மாம்பழக் கன்னங்கள் உப்பக் கதவுவாய்க்குள், -அன்னன்டை, உள்ள மகோன்னத உன்னதங்கள் காட்டிய, புள்ளேபுள் ளூறும் பரம் ….கிரேசி மோகன்….
|
Posted: 06 Sep 2015 06:30 PM PDT செப்டம்பர் 7, 2015 இவ்வார வல்லமையாளர் வல்லமைமிகு திரு. பி.சங்கர் மகாதேவன் அவர்கள் சென்னை தியாகராய நகரில் உள்ள “உதவும் உள்ளங்கள்” அமைப்பு கடந்த வாரம் (ஆகஸ்ட் – 30) ஏழை எளிய குடும்ப் பெண்களுக்கு தையல், கணினி மற்றும் அழகுக்கலை ஆகியவற்றில் தொழிற்பயிற்சி அளித்து, அதற்கான சான்றிதழ்களை அவர்களுக்கு வழங்கி, அதிகம் படித்திராத எளிய குடும்பப் பெண்களுக்கு வாழ்வாதாரத்திற்கு உதவியுள்ளது. இத்தகைய சமூகப்பணிகளுக்குத் தூண்டுகோலாய் இருந்து வந்துள்ள “உதவும் உள்ளங்கள்” அமைப்பின் நிறுவனரும் மற்றும் அமைப்பின் […]
|
|
Posted: 06 Sep 2015 06:04 PM PDT பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்? காயத்ரி அகல்யா எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார். இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (12.09.2015) வரை உங்கள் […]
|
|
வேண்டுதல் வெண்பா – 36ம் ஆண்டு நிறைவு நாள்! Posted: 06 Sep 2015 05:35 PM PDT ‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு’ என்ற முதுமொழியின் இலக்கணமாகத் திகழும் கிரேசி கிரியேசன்சு குழுவினருக்கு வல்லமையின் மனம் நிறைந்த வாழ்த்துகள். இன்று கிரேசி கிரியேஷன்ஸ் 36 ஆண்டுகள் நிறைவுபெற்று, 37ல் அடியெடுத்து வைக்கிறது….இதற்கு காரணம் கிரேசி மோகனின் எழுத்தோ இல்லை மாது பாலாஜியின் நடிப்போ அல்ல….கூட்டுக் குடும்பமாக நாங்கள் இருந்ததுதான்….Being Together தான் காரணம்….ஒன்று பட்டால் உண்டு ஆண்டு…. வேண்டுதல் வெண்பா…. ———————————————- ஆண்டுகள்முப் பத்திஆ(று), ஆச்சு அரங்கேறி, வாண்டுகள் ஆனோம் வயோதிகமாய், -நீண்டு, உலகளந்த உத்தமா, உற்சாகம் […]
|
|
Posted: 06 Sep 2015 05:17 PM PDT -மலர் சபா மதுரைக் காண்டம் – 06: கொலைக்களக் காதை கண்ணகியின் பணிவுரை “அறவோர்க்கு உணவளித்தல் அந்தணர் போற்றுதல் துறவிகளை எதிர் கொள்ளுதல் பழங்காலம் முதல் இல்லறத்தினர் செய்துவரும் பெருமைவாய்ந்த அறமாகிய விருந்தினரை வரவேற்று உபசரித்தல் ஆகிய நல்லறங்களை இழந்து மிகவும் வருத்தமுற்றிருந்தேன். இங்ஙனம் துன்புற்ற என்னைக் காணப் பெருமை வாய்ந்த உம் தாயோடு, அனைவரிடமும் நற்பெயரும் பொருள் தேடுவதில் மிகச் சிறந்த முயற்சியும் மன்னனுக்கு நிகரான பெருமையுடைய மாசாத்துவானும் ஆகிய உம் தந்தையும் வருவர். நீவிர் எம்முன் இல்லாது […]
|
|
Posted: 06 Sep 2015 05:15 PM PDT -பாவலர் கருமலைத் தமிழாழன் விடியாத இரவுக்கு விடியல் தந்து –விரிகதிராய் எழுந்திட்ட வீரச் சிங்கம் மடியாதோ எனயேங்கி மாய்ந்த மக்கள் –மனக்குமுறல் தீர்த்திட்ட ஞான வித்து பிடியாதோ எனும்மயலில் பின்னால் நின்றோர் — பிடறிதள்ளி முன்நிறுத்திய புரட்சி வேந்தன் படியீதோ எனத்தன்னைத் தந்து தாழ்ந்தோர் –பயணத்தைத் துவக்கிவைத்த பண்பின் முத்து! நீவந்த பின்னால்தான் எங்கள் வீட்டில் –நின்றிருந்த பழமைகளும் எரியக் கண்டோம் நீவந்த பின்னால்தான் எங்கள் நெஞ்சில் –நியாயத்தின் […]
|
|
Posted: 06 Sep 2015 04:59 PM PDT நேர்மையும் வாய்மையும் நிர்மலா ராகவன் கேள்வி: என் தந்தை என்னைப்பற்றி (வயது 17) புகழ்ச்சியாகப் பிறரிடம் கூறுகிறார். அது எல்லாமே உண்மையாக இருக்காது என்று தெரிந்தும், அவர்களும் ஏன் அதை நம்புவதுபோல் நடிக்கிறார்கள்? பதில்: உங்கள் தந்தைக்குத் தன் குடும்பத்தைப்பற்றி எல்லாரும் நல்லவிதமாக நினைக்கவேண்டும் என்ற ஆதங்கம். அனேகமாக அவரது நண்பர்களும் இப்படி இருப்பதால், மற்றவருக்குத் தலைகுனிவு ஏற்படாதவகையில், அவர் கூறும் பொய்யைப் பெரிதுபடுத்துவதில்லை. இதில் வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால், தாயோ, தந்தையோ இப்படி ஒன்றைப் பத்தாக்கிப் […]
|
|
Posted: 06 Sep 2015 04:59 PM PDT -சக்தி சக்திதாசன் உயிரை இழக்கப் போகிறோம் எனும் உணர்வு பறித்திடும் வாழ்வுதனை எண்ணித் தகித்திடும் எதிர்காலக் கனவுகளோடு கடலேறிப் பயணமொன்று துடித்திடும் உயிர்கள் பலதை அடுக்கிட்ட கட்டைகள் போலவே நிறுத்திட்ட படகுகள் நீந்திடும் மறுகரை நோக்கி அடித்திடும் அலைகளின் வேகம் அறிந்திடுமா? அம்மனிதரின் நெஞ்சங்கூட்டில் அரித்திடும் வேதனைகளை முடித்திடாப் பயணங்களில் சரிந்திடும் படகுகளில் மூழ்கிடும் மனிதர்களில் எவர் சேர்ந்திடுவர் அக்கரையை? கூட்டமாய் அடுத்தொரு பயணத்துக்காய்ப் போரிடும் அகதிகள் கூட்டம் மறுபுறம் அகதிகளா இவர்கள்? இல்லை ஆசைமிக்க ஜரோப்பிய […]
|
|
Posted: 06 Sep 2015 04:52 PM PDT -மீ.விசுவநாதன் எவ்வளவு நாளாச்சு ஒன்னப்பாத்து என்றார் எதிரில் வந்தவர் ஆமாம்… …நீங்க சௌக்கியமா? ரொம்ப சௌக்கியம்… வா நம்மாத்துக்கு… ஒரு காப்பி குடிச்சுண்டே பேசலாம்… நல்ல மனுஷா நீங்க…! ஆத்துக்காரி கொழந்தைகள அழைச்சுண்டு அவசியம் வா… விலாசம் சொல்லி நடந்தார்… போனேன்… விலாசம் இருந்தது அவரில்லை! அந்த வீட்டு வெளிச்சுவரில் ஒரு சுவரொட்டி விளம்பரம்… “செய்கூலி இல்லை சேதாரம் இல்லை வாங்க தங்கம் வாங்க” வாங்கிய நகையில் தங்கமே இல்லை!
|
|
Posted: 06 Sep 2015 04:38 PM PDT -செண்பக ஜெகதீசன் அற்றர்கொன் றாற்றாதான் செல்வம் மிகநலம் பெற்றாள் தமியள்மூத் தற்று. (திருக்குறள்-1007: நன்றியில் செல்வம்) புதுக் கவிதையில்… இல்லார்க்கு இல்லையெனச் சொல்லாமல் கொடுக்காதவனிடம் சேர்ந்த செல்வம், அழகுமிகுந்த குமரிப்பெண் மணமாகாமல் மூதாட்டியாவது போன்றதே! குறும்பாவில்… அழகுக் குமரி மணமாகாமல் கிழவியாவதை ஒப்பதே, ஏழைக்கு உதவாதவன் செல்வமும்! மரபுக் கவிதையில்… இல்லை யென்று வருமேழை —இன்னல் தீரக் கொடுக்காமல், செல்வம் சேர்த்து வைத்திருக்கும் —சீமான் கொண்ட பொருளெல்லாம், பல்லது வீழும் பருவம்வரைப் —பருவ அழகெலாம் பாழாக, நல்லதோர் […]
|
| You are subscribed to email updates from வல்லமை
To stop receiving these emails, you may unsubscribe now. |
Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
|
படக்கவிதைப் போட்டி 28-இன் முடிவுகள் Posted: 06 Sep 2015 12:09 PM PDT -மேகலா இராமமூர்த்தி திரு. ராகுல் ரவீந்திரனின் கைவண்ணத்தில் உருவான இந்த அழகிய புகைப்படத்தைப் போட்டிக்குத் தேர்வுசெய்தவர் நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் வல்லமையின் சார்பில் நன்றி நவில்கின்றேன். சிறக்கணித்த பார்வையால் காளையரைச் சிறையிடுகின்ற காரிகையே! இலைகளினூடிருந்து ஊடுருவும் உன் பார்வையின் பொருள்தான் என்ன? கொஞ்சம் என் காதோரம் கிசுகிசுத்துவிட்டுத்தான் போயேன்! பெண்ணைக் கண்ட உற்சாகத்தில் விண்ணைமுட்டும் அளவுக்குக் கவிதைகள் வந்து குவிந்துவிட்டன இந்த வாரம்! பெண்ணும் நிலவும் என்றுமே […]
|
Posted: 06 Sep 2015 09:46 AM PDT ”அசல மனத்துள் அவதரித்து அன்பாய், குசலம் விசாரிப்பான் கண்ணன் -வசன - திரைக்கதை பாகவதன் ,திவ்யப் பிரபந்தன் - சிறைக்கதவை விட்டகன்ற சேய் “…. ”ஆன்மக் கவசம் அணிந்தைம் புலனடக்கி, நான்மன நூறை நசுக்கிடு, -வீணெண்ணம், கொள்ளாய்” எனவசன கீதை மொழிந்தனன், புள்வாயைக் கீண்ட பிரான்”….கிரேசி மோகன்….. புள்ளின் வாய் கீண்டானை-பறவை வடிவில் வந்த அரக்கனைக் கிழித்தானை….
|
|
Posted: 05 Sep 2015 04:34 PM PDT -சித்ரப்ரியங்கா பாலசுப்ரமணியன் அகிலத்தையே அன்னைக்கு வாய்வழி காட்டியவனே ஆயர்குலக் கொழுந்தாய் விளங்கும் நல் அச்சுதனே இரந்துபின் கர்ணனுக்கு மோட்சம்தனைத் தந்தவனே ஈதலினால் சபையில் திரௌபதியின் மானம் காத்தவனே! உலகம் உய்ய கீதோபதேசம் அருளிய நாயகனே – நீ ஊதும் குழலால் மெய்ம்மறந்த கோபியர்தான் எத்தனை பேர்? எட்டாவது மழலையாய் இன்று அஷ்டமியில் வந்தவனே ஏற்ற தசாவதாரத்தில் உந்தன் ஆற்றலினால் சிறந்தவனே! ஐ! கண்டதுமே திருஷ்டிபடும் அழகு செல்லக் கண்ணனே ஒருத்திக்கு ஒருவனெனும் உயர்வழி நின்ற சீதாராமனே ஓங்கி […]
|
|
Posted: 05 Sep 2015 04:24 PM PDT -பா. ராஜசேகர் விரல் பிடித்தாய் போற்றி! மொழி கொடுத்தாய் போற்றி போற்றி! அறிவு அளித்தாய் போற்றி! அறியாமை இருளகலப் போற்றி போற்றி! அறிவொளி கொடுத்தாய் போற்றி! ஆக்கமும் ஊக்கமும்நீயே போற்றி போற்றி! அறிவினைப் பகிர்ந்தளித்தாய் போற்றி! அறிவின் சிகரமே போற்றி போற்றி! சூரியனாய் ஒளிர்ந்தாய் போற்றி! நிலவொளியாய் மிளிர்ந்தோம் போற்றி போற்றி! ஒழுக்கத்தின் சிறப்பே போற்றி! சீரிய நல்லறிவே குருவே போற்றி போற்றி! அறிவு பெற்றோம் வாழ்க்கை முழுமை பெற்றோம் போற்றி! போற்றி!! போற்றி!!!
|
|
Posted: 05 Sep 2015 04:19 PM PDT -மீ.விசுவநாதன் நதியைப் பார்த்தேன் கரையில் நின்று முதலில் பயமாக இருந்தது… குனிந்து தொட்டுத் தலையில் தெளித்துக் கொண்டேன்… மெல்ல வலது காலை நனைத்து இடது கால் விரல்களை ஈரமாக்கி உடனே நீருக்குள் நடந்தேன்… மேலே குளிர் மெல்லிய சூடு கழுத்துக்குக் கீழே… மூன்று முங்கு போட்டேன்! இன்று… மண்டபத்தின் மேலிருந்து நீரில் குதித்து நீந்தினேன் சுகம் பரம சுகம்…! கற்றுத்தரும் குருவிடமும் முதல் பயம் பாசமாகிப் பக்தியாகி வித்தை முழுதும் நன்றாகக் கசடற உள்ளே இறங்க வைக்கிறார்! […]
|
|
Posted: 05 Sep 2015 04:14 PM PDT -ஆர். எஸ். கலா அன்பாகப் பேசி அதட்டிப் பேசி தட்டிக்கொடுத்து திட்டிச் சொல்லி அடித்துச் சொல்லி குட்டிச் சொல்லி முட்டிபோட வைத்து மேசை மேல் ஏற்றி வைத்து முறைப்பாகப் பார்த்து விறைப்பாகப் பழகி சிரித்துப் பேசி கோபமாகப் பேசி கேலியாகப் பேசி நடித்துக் காட்டி நண்பன் போல் நெருங்கி தாயைப் போல் அணைத்து தந்தை போல் அதட்டி பாட்டி போல் கதை கூறி மழலை போல் கூடி விளையாடி குரங்குபோல் குதித்துக்காட்டி நாய்போல் குரைத்துக் காட்டி ஒரு […]
|
|
Posted: 05 Sep 2015 04:05 PM PDT -சித்ரப்ரியங்கா பாலசுப்ரமணியன் அன்னை தந்தையை அடுத்துவரும் ஆசானே – உம் ஆசி ஒன்றிருந்தால் உலகையே தான் வெல்லலாமே இலைமறை காய் போன்ற மாணவர் அறிவதனை ஈடற்ற கலங்கரை விளக்கமாய் ஒளிரச் செய்பவரே உன்னதமான நின் கரத்தால் பாலகர் கரம் பிடித்து ஊக்கமுடன் ‘அ, ஆ’ எழுதக் கற்றுக் கொடுப்பவரே எழுத்தறிவித்த இறைவனே, எங்கள் குருநாதரே ஏகமனதுடன் உமை இன்று நினைவுகூா்வோம் நாமே ஐயம் தெளிவித்துக் கல்விக்கண் திறக்கும் கர்த்தாவே ஒளிமயமான எதிர்காலம் எங்களுக்கு நீர் வழங்கி ஓய்வின் […]
|
|
பூகோளச் சூடேற்றத்தால் நாசா எச்சரிக்கும் கடல் மட்ட உயரம் எவ்வளவு ? Posted: 05 Sep 2015 02:09 PM PDT -சி. ஜெயபாரதன். பூகோளச் சூடேற்றத்தால் நாசா எச்சரிக்கும் கடல் மட்ட உயரம் எவ்வளவு ? எத்தனை விரைவில் நேரும் ? சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா http://www.cbsnews.com/videos/scientists-warn-of-sea-level-rise-as-antarctic-glacier-melts/ https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=G7iEYgb50yc https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=-EMCxE1v22I [ http://collapseofindustrialcivilization.com/tag/fossil-fuel-based-economy/ ] சூட்டு யுகம் புவிக்கு வேட்டு வைக்கப் போகுது ! நாட்டு ஊர்கள், வீட்டு மக்கள் நாச மாக்கப் போகுது ! பெரும் புயல் எழுப்ப மூளுது ! பேய் மழைக்கு மேகம் சூழுது ! நீரை, நிலத்தை, வளத்தை, பயிரை, உயிரை, […]
|
|
Posted: 05 Sep 2015 01:52 PM PDT – எஸ். வி. நாராயணன். ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி என்றாலே அனைவருக்கும் கொண்டாட்டம்தான். முக்கியமாக, சிறுவர், சிறுமிகள் இந்தப் பண்டிகையை வெகுவாக எதிர்பார்த்து இருப்பர். ஏனெனில், தின்பதற்கு நிறைய பட்சணங்கள் கிடைக்குமே! பட்சணங்கள் ஒன்றா, இரண்டா? சீடை, முறுக்கு, தேன்குழல், ஓமப்பொடி, லட்டு, மைசூர்பாகு, தேங்காய் பர்பி, அப்பம் என பல்வேறு பட்சணங்களை ஸ்ரீஜெயந்திக்காக ஒவ்வொரு வீட்டிலும் செய்வார்களே! ஒரு காலத்தில், வைணவ குடும்பங்களில், போட்டிபோட்டுக் கொண்டு, 21 வகையான தின்பண்டங்கள் செய்வார்கள். இவற்றைத் தயாரிப்பதற்கான வேலைகள், பண்டிகைநாளுக்கு […]
|
| You are subscribed to email updates from வல்லமை
To stop receiving these emails, you may unsubscribe now. |
Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
vallamai |
|
Posted: 08 Sep 2015 09:13 AM PDT ”கண்ணபிரான், காயாம்பூ வண்ணபிரான், வெண்ணைமண் தின்னபிரான், நற்கீதை சொன்னபிரான், -பின்னமுறா, முன்னவனாம், தென்மதுரை அன்னையவள் அண்ணனையே, எண்ணவரும் ஏகாந்தம் இங்கு”…. ”திருக்கண் ணமுது, திரள்கின்ற வெண்ணை, பருப்புதயிர் சாதம், பழங்கள் -உருக்குலைந்து, அண்டாவில் சாறு, அதிரசம் சீடைமுறுக்கு, உண்டேனுன் நாமம் உரைத்து”….கிரேசி மோகன்….
|
|
Posted: 07 Sep 2015 06:58 PM PDT ——————————————— நிலாச்சில்லை தங்க நீள்முடியில் தாங்கி விலாநோகச் சேலை வலம்வரும் சின்ன இலாவல்லி இடையாள் சொலாச்சொல்லை உடையாள் கலாவல்லியை ராஜ ச்யாமளாவில் கண்டேன்….(1) சிரமுச்சித் தங்கும் சிறுபிறையும் அறிவும் கரும்பிச்சை கொள்ளும் கரும்பச்சை வடிவும் கரமர்ச்சிக்கின்ற கற்பனை யாழ் இசையும் தரும்பிச்சை கொள்வோர் தரணியிலே மேலோர்….(2) மேடான நெற்றி அதற்க்கீடாம் அம்மேரு தேடுகின்ற ஞானிக்கது திகழ்கின்ற ஊரு நாடுகின்ற அன்பர்க்கு நல்லறிவுச் சாறு பாடுஅவள் பேரு பயனடைவாய் பாரு….(3) ஓலையுற்ற செவிகள் ஓமிசைக்கும் கிளிகள் மாலையுற்ற கழுத்து […]
|
| You are subscribed to email updates from வல்லமை. |
To stop receiving these emails, you may unsubscribe now. |
| Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
Posted: 08 Sep 2015 11:01 PM PDT – தேமொழி. பழமொழி: போமாறறியா புலன்மயங்கி ஊர்புக்குச் சாமாகண் காணாதவாறு ஆமாலோ என்று பெரியாரை முன்னின்று தாமாச் சிறியார் தறுகண்மை செய்தொழுகல் போமா றறியா புலன்மயங்கி ஊர்புக்குச் சாமாகண் காணாத வாறு. (முன்றுறையரையனார், பழமொழி நானூறு) பதம் பிரித்து: ஆமாலோ என்று பெரியாரை முன் நின்று தாமாச் சிறியார் தறுகண்மை செய்து ஒழுகல், போம் ஆறு அறியா, புலன் மயங்கி, ஊர் புக்கு, சாம் மா கண் காணாதவாறு. பொருள் விளக்கம்: ஆகுமா இந்தப் பெரியோர்களால் என்று […]
|
|
Posted: 08 Sep 2015 06:55 PM PDT -மேகலா இராமமூர்த்தி தலைவன் ஒருவனும் அவன் ஆருயிர்க் காதலியான தலைவி ஒருத்தியும் இல்லற வாழ்வில் இணைந்து இன்பவானில் பறவைகளாய்ப் பறந்துகொண்டிருந்தனர். ஒருபுறம், காதல் கைகூடிய இன்பம் தலைவனுக்கு அளவற்ற மகிழ்ச்சியைத் தந்தாலும், மறுபுறம் அவன் மனத்தில் கலக்கமொன்றும் கூடவே பயணித்தபடி இருந்தது. அது என்ன கலக்கம்? ”தலைவியோடு நடாத்திக்கொண்டிருக்கும் இல்லறம் நெடுநாளைக்கு நல்லறமாய்த் திகழப் பொருள் வேண்டுமே! இல்லையெனில் மனித வாழ்க்கைக்குப் பொருளேது? ’பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை’ என்றனரே சான்றோர். இருக்கும் கையிருப்பும் கொஞ்சம் கொஞ்சமாகக் கரையத் […]
|
|
Posted: 08 Sep 2015 06:30 PM PDT வையவன் வெற்றிவேல் நேராக அம்மாவிடம் வந்து அவர்களையும் அழைத்துக் கொண்டு சிங்காரப்பேட்டை போயிருக்கிறான். திருப்பத்தூரில் வீடு பூட்டியிருந்தது. பக்கத்து வீட்டில் சொன்னார்கள். அம்மா தான் எழுதிய கடிதத்தையே பார்த்திருக்க முடியாது என்று புரிந்தது. சிவா சிங்காரப்பேட்டைக்குப் பஸ் ஏறினான். இறங்கி ஐயர் ஹோட்டலில் பால் சாப்பிட்டு விட்டு அவர் எடுத்துக் கொடுத்த சைக்கிளில் புளியம்பட்டிக் காட்டு நிலத்துக்குப் போனான். தூரத்தில் நிலத்தை நெருங்கும் போதே வித்தியாசம் பளிச்சென்று தெரிந்தது. ஆங்காங்கே நிலத்தின் நடுவிலிருந்த சிறு சிறு பாறைகள் […]
|
|
Posted: 08 Sep 2015 05:38 PM PDT ஸ்ரீலங்கா (பகுதி 3) நிர்மலா ராகவன் சிங்கள மொழியில், வில்பட்டு என்றால் ‘இயற்கை ஏரிகள்’ என்று பொருள். பெயருக்கேற்ப, அறுபது ஏரிகள். அவைகளில் வெள்ளை நிற அல்லிப்பூக்கள் அழகாக மலர்ந்திருந்தன. வடமேற்குக் கடற்கரையை ஒட்டிய இதில் வரட்சியான நிலமும் உண்டு. அலையடிக்கும் கடல் பகுதியும் இருந்தது. ஜீப் ஓட ஆரம்பித்தது. கடல் காற்றில் அசைந்த மரக்கிளைகளிலிருந்த முட்கள் என் முகத்தைக் கீறாதிருக்க அவ்வப்போது முகத்தைத் திருப்பிக்கொள்ள வேண்டியிருந்தது. மல்லிகை, மருதாணி — இரண்டு மரங்களைத் தவிர, மரங்கள் […]
|
|
இலக்கியச் சித்திரம் – இனிய பிள்ளைத்தமிழ் – 1 Posted: 08 Sep 2015 05:38 PM PDT - மீனாட்சி பாலகணேஷ். பைந்தமிழ்ப் பின் சென்ற பச்சைப் பசும் கொண்டல்! பிள்ளைத்தமிழ்ச் சிற்றிலக்கிய நூல்கள் கடவுளரைக் குழந்தையாகக் கண்டு அவர்களின் உடல், உள்ள வளர்ச்சியை அழகுற விவரித்துப் போற்றுகின்றன. குழந்தைகளின் வளர்ச்சியை பத்துப் பருவங்களாகப் பிரித்து ஒவ்வொரு பருவத்துக்கும் உண்டான செயல்களை விவரிக்கும் போது, அப்பாடல்கள் தமிழ் மொழியின் இனிமை, இலக்கிய நயம், சந்த நயம், வண்ணம், பலவகையான அணிகள், உவமங்கள், தொன்மக் கருத்துக்கள் முதலியனவும் இணைந்து இயைந்து மிளிரும் அழகையும் ரசிக்கும் விதத்தில் அமைந்துள்ளன […]
|
|
ஆழ்வார்களை ஆட்கொண்ட கண்ணன் – 2 Posted: 08 Sep 2015 05:36 PM PDT – எஸ். வி. நாராயணன். புலிக்குப் பிறந்தது பூனையாகுமா என்பது போலே, பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் பிள்ளையான ஆண்டாள், யசோதை இளஞ் சிங்கம் என்றும், கார்முகில் போன்ற மேனியை உடையவன் என்றும், செந்தாமரை போன்ற கண்களை உடையவன் என்றும், எதிரிகளுக்கு சூரியன் போலவும், அன்புடையார்க்கு சந்திரன் போலவும் உள்ள ‘கதிர் மதியம் போல் முகத்தான்’ என்றும் கண்ணனை வர்ணிக்கிறாள். உவகையுடன் வர்ணிக்கிறாள். ஆயர்குல மணி விளக்கு என்கிறாள். தாயைக் குடல் விளக்கஞ் செய்த தாமோதரன் என்கிறாள். இப்படி […]
|
|
Posted: 08 Sep 2015 05:35 PM PDT சுரேஜமீ கடமை உலகமே ஒரு நாடக மேடை என்றார் ஷேக்ஸ்பியர்! இது எந்த அளவு உண்மை என்பதை நாம் ஒவ்வொருவரும் சற்று யோசித்தால் புலனாகும். காலை எழுந்தது முதல் இரவு படுக்கும் வரை செய்யக்கூடிய பலவகையான பாத்திரங்கள், நமக்கு ஷேக்ஸ்பியர் ஒரு தீர்க்கதரிசி என்பதை விளக்கும். ஒரு தந்தையாக;; மகனாக; கணவனாக; சகோதரனாக; உறவினராக; நண்பனாக; பணியாளராக; மேலாளராக, சக மனிதனாக என்று பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்! இதிலென்ன வியப்பு என்கிறீர்களா? ஆம்! ஒவ்வொரு வகைப் பாத்திரத்திற்கும் […]
|
|
Posted: 08 Sep 2015 05:30 PM PDT –உமாஸ்ரீ. சமீபத்தில் எழுத்தாளர் திருமதி. ஸ்ரீஜா வெங்கடேஷ் எழுதி வெளிவந்த ”பாண்டியன் நெடுங்காவியம்“ என்ற சரித்திர நாவலைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. படித்தவுடன் உண்டான மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். கேன்மின் ! கேன்மின் ! ஸ்ரீஜா வல்லமையில் எழுதிக் கொண்டிருப்பவர்; வல்லமைக்குப் பரிச்சியமான எழுத்தாளர் மட்டுமல்ல ; மிகச் சிறந்த எழுத்தாளரும் கூட . இந்த நாவலின் மூலம் தமிழில் வரலாற்றுப் புதினம் எழுதிய ”முதல் பெண் எழுத்தாளர் ” என்ற சிறப்பையும் பெறுகிறார் ஸ்ரீஜா […]
|
|
Posted: 08 Sep 2015 05:16 PM PDT – ராஜகவி ராகில் உன் அழகு திருவிழா அதில் தொலைந்து போனான் என் கண் சிறுவன்! உன்னைப் புகைப்படம் எடுத்தால் தெரியும் ரோஜாப்பூ! உன் பாதம்பட்ட மண்ணெடுத்து எறும்புகள் கட்டும் மணல் மாளிகை! உன் கொலுசு ஓசை கேட்ட தென்றல் உணர்ச்சிவசப்பட்டு ஆகிடலாம் புயலாக! உன் தரிசனம் கிடைப்பின் தேனாகும் எவர் குருதியும்! தமிழ் தன்னைத் தானே ரசிக்கிறது நீ உச்சரிக்கும்போது மட்டும்! முழு நிலா தேய்கிறது உன் முகஅழகை வெல்ல முடியவில்லையாம்! உன் ஊர்ச்சிப்பிக்குள் ஒரே […]
|
|
Posted: 08 Sep 2015 05:06 PM PDT -ஆர். எஸ். கலா இறைவன் படைப்பில் ஒவ்வொன்றும் உலகிற்கு நன்மை தீமை புரிகின்றது என்பதில் ஐயம் இல்லை! ஆனால் மனிதனைப் போல் தீமை புரிகின்றவை எவையும் இல்லை என்பதிலும் ஐயம் இல்லை! சுய நலத்திலும் சுய நலம் சுரங்கமாக அவன் மனதில்! தான் மட்டும் நலமாக வாழ அடுத்தவன் தலையை எடுத்தால்தான் முடியும் என்றால் தயங்காமல் தூக்குவான் அருவாளை! ஒன்றை ஒன்று அழித்து உயிர் வாழ்வதில் முதல் இடத்தில் இருப்பது மனித இனமே! கூட்டைக் கட்டும் பறவையின் […]
|
| You are subscribed to email updates from வல்லமை. To stop receiving these emails, you may unsubscribe now. |
Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |