பாலர்பாடம் - கணபதி வணக்கம்

20 views
Skip to first unread message

N. Ganesan

unread,
May 5, 2018, 11:34:18 AM5/5/18
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, tiruva...@googlegroups.com, panbudan
ஈழத் தீவிலே இந்து சமயம் இல்லாமல் போயிருக்கும். அச்சூழலில் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் யாழ்ப்பாணத்தில் அவதரித்தார்கள். திருநீறு அணிந்து பள்ளிகளுக்கு இந்து சமயத்தார் குழந்தைககள் செல்ல இயலாத நிலையில் காலனிய அரசாங்கம், சர்ச்சுகள், மிஷனரிகள் பள்ளிகள் நடாத்திவந்த சூழல் இலங்கையிலும், இந்தியாவிலும் பரவிப் பெருகிவந்தது. அதை எதிர்த்து, ஹிந்து சமயத்தார்களின் வீட்டுப் பிள்ளைகள் பள்ளிகளுக்குச் சென்று நவீன முறையில் கல்வி கற்க அடிக்கல் நாட்டும் பள்ளிகளை 1840களில் தொடங்கினார். நான்கு தொகுதிகளாக பாலபாடம் வெளியிட்டார். 1864-ஆம் ஆண்டு சிதம்பரத்தில் நாவலர் அவர்கள் அதே முறையில் பள்ளியைத் தொடங்கி நடத்தினார். அது என்றும் நடைபெற்றுவர நிலபுலங்களை வாங்கி அறக்கட்டளை வைத்தார். 150 ஆண்டுகளுக்கு மேலாக, சிறப்புடன் அப் பள்ளி தில்லையில் நடைபெற்றுவருகிறது.

ஆறுமுக நாவலர் பள்ளியின் 150-ஆம் ஆண்டு விழா மலர்:
நாவலர், நாவலர் தொடங்கிய தில்லைப்பள்ளியின் வரலாறு குறித்த அரிய கட்டுரைகளை இதில் காணலாம். படித்தருளுக.
விளம்பரங்களே இன்றி 256 பக்கங்களில் பள்ளிப் பழைய மாணவர்கள் மலர் வெளியிட்டுள்ளமை அரிதான செயல்.
பக்கம் 139-ல் ஒரு கவிதை. அதில் இறைவணக்கமாக நாவலர் பள்ளிகளில் பாடும் வெண்பா சிதைந்த நிலையில் உள்ளது:

அதற்கான மூல வடிவம் பாலபாடம் போன்ற நூல்களிலோ, இலங்கைத் தமிழர்கள் அச்சிட்ட நூல்களில் இருக்கும்.
தெரிந்தோர் இங்கே அளிக்க வேண்டுகிறேன். செப்பமிட என் முயற்சி இது:

அகத்தியர் மாத்த மிழ்அரிச் சுவடி
செகத்தலப்ர காசமுடன் செப்பமாய் நான்படிக்க
வாரா எழுத்தெல்லாம் வந்தருள நல்வரம்தா
காரார் கணபதியே காப்பு


அகத்தியர் வரலாற்றுக்கு நாவலரவர்களின் பங்களிப்புப் பற்றிப் பின்னர் இவ்விழையில் சொல்கிறேன்.

நனிநன்றி,
நா. கணேசன்


N. Ganesan

unread,
May 9, 2018, 7:38:50 PM5/9/18
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
சி. வை. தாமோதரம்பிள்ளை சொல்லிய கையறுநிலைப் பாக்கள்:

(1)

நல்லைநகர் ஆறுமுக நாவலர் பிறந்திலரேல்
சொல்லுதமி ழெங்கே சுருதியெங்கே – எல்லவரும்
ஏத்துபுரா ணாகமங்கள் எங்கேப்ர சங்கமெங்கே
ஆத்தனறி வெங்கே அறை

(ஆத்தன் ஆப்தன் என்னும் வடசொல் பழந்தமிழில் ஆத்தன் என வரும். காட்டு: தேவாரம்)

(2)

வேதம்வலி குன்றியது மேதகுசி வாகம விதங்கள் வலிகுன்றி னவடற்
சூதன்மொழி மூவறுபு ராணம்வலி குன்றியது சொல்லரிய சைவ சமயப்
போதம்வலி குன்றியது பொற்பொதிய மாமுனி புகன்றமொழி குன்றி யதுநம்
நாதனிணை ஞாலமிசை நாடரிய ஆறுமுக நாவல ரடைந்த பொழுதே

N. Ganesan

unread,
May 9, 2018, 7:58:04 PM5/9/18
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
நாயனார் நாற்குரவர் நாவலர்தென் ஞாலமிசை
மேயினார் ஈசனருள் மேல்  - சி.வை.தா

N. Ganesan

unread,
May 11, 2018, 12:25:18 AM5/11/18
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, tiruva...@googlegroups.com, panbudan

சி. வை. தாமோதரம்பிள்ளை, B.A., B.L.

(1)
வேதம்வலி குன்றியது மேதகு சிவாகம விதங்கள்வலி குன்றி னவடற்
சூதன்மொழி மூவறுபு ராணம்வலி குன்றியது சொல்லரிய சைவ சமயப்
போதம்வலி குன்றியது பொற்பொதிய மாமுனி புகன்றமொழி குன்றி யதுநம்
நாதனிணை ஞாலமிசை நாடரிய ஆறுமுக நாவல ரடைந்த பொழுதே.

(2)
நல்லைநகர் ஆறுமுக நாவலர் பிறந்திலரேல்
சொல்லுதமி ழெங்கே சுருதியெங்கே – எல்லவரும்
ஏத்துபுரா ணாகமங்கள் எங்கேப்ர சங்கமெங்கே
ஆத்தனறி வெங்கே அறை

(ஆத்தன் ஆப்தன் என்னும் வடசொல் பழந்தமிழில் ஆத்தன் என வரும். காட்டு: தேவாரம்)

(3) 
தகைசேர் தமிழ்க்குத் தனிமுதல் வன்கந்த வேள்குமர
னகுவே றலமிசை யான்புல வோன்குரு நல்லையறு
முகநா வலனர னார்க்கினி யான்புகழ் மொய்ம்பனிம்ப
ரிகல்சூர் மதப்பகை செற்றீ சனாருல கெய்தினனே.

(4)
கார்த்திகைமா தத்துமகங் காசினிக்குச் சைவநிலை
சேர்த்திப் பரசமயஞ் சேதித்துச் - சீர்த்திமிக
மேவுதமிழ் தந்தகந்த வேணல்லூ ராறுமுக
நாவலர்வீ டுற்றதிரு நாள்.

(5)
நாயனார் நாற்குரவர் நாவலர்தென் ஞாலமுய்ய
மேயினா ரீசனருண் மேல்.

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் சரித்திரம்,
யாழ்ப்பாணம் நல்லூர் கைலாசபிள்ளை அவர்களால் எழுதப்பட்டது.
ஆறுமுகநாவலர் வி. அச்சகம், 
300 தங்கசாலைஅத் தெரு, சென்னை 1
நான்காம் பதிப்பு
மன்மத, புரட்டாதி
அக்டோபர், 1955.

தெரிவு,
நா. கணேசன்


2018-05-05 8:33 GMT-07:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
Reply all
Reply to author
Forward
0 new messages