எண்ணலங்காரம்.

199 views
Skip to first unread message

shylaja

unread,
Jan 4, 2013, 10:24:49 PM1/4/13
to mintamil, vallamai, பண்புடன், தமிழ் சிறகுகள், தமிழ் வாசல்
எண்ணலங்காரம்!
 
இலக்கியத்தில் எண்ணலங்காரம் பற்றி அண்மையில் வாசித்தேன் சுவாரஸ்யமாக இருந்தது.
 
எண்களை வரிசைப்படுத்தி எழுதுவதை எண்ணலங்காரம் என்கிறார்கள். திருவிளையாடல் படத்தில்  வரும் ஒன்றானவன் உருவில் இரண்டானவன்  ஓர் எடுத்துக்காட்டு.
 
  அஞ்சுமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்
வெஞ்சமரில் அஞ்சலென வேல் தோன்றும் 
 நெஞ்சில் ஒருகால் நினைக்கில் இருகாலும் தோன்றும்
முருகாஎன்றோதுவார் முன்..
 
என்ற நேரிசை வெண்பா எண்ணலங்காரப்பாடல்.
 
நான் உன்னைசேர்ந்த செல்வம்  என்ற  திரைப்பாடலில் ‘உன் அச்சம் நாணம் என்ற  நான்கும் என் அருகில் நெருங்கிவர அஞ்சும்’ என வருவதும் எண்ணலங்காரமே!
 
இன்னொரு பாடல்   கண்ணதாசன் எழுதியதென நினைக்கிறேன் அதில்’ வவனிடம் சொன்னேன் என் அஞ்சுதலை அந்த அண்ணலே தந்து வைத்தான்  ஆறுதலை’ என்று வரும்  சரவணப்பொய்கையில் நீராடி என்ற  பாடலும் எண்ணலங்காரம் தான்..
 
 
இன்னும் பல பாடல்கள்  இப்படி இருக்குமே!


--
SHYLAJA
 

தேமொழி

unread,
Jan 5, 2013, 12:14:59 AM1/5/13
to mint...@googlegroups.com, mintamil, vallamai, தமிழ் சிறகுகள்
சங்கரர்க்கும் ஆறுதலை; சண்முகற்கும் ஆறுதலை;
ஐங்கரற்கும் மாறுதலை ஆனதே - சங்கைப்
பிடித்தோர்க்கும் மாறுதலை; பித்தா! நின்பாதம்
படித்தோர்க்கும் ஆறுதலைப் பார்!
.....
அஞ்சிலே ஒன்று பெற்றான்; அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்றாக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கு கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான்; அவன் எம்மை அளித்துக் காப்பான்
.....
பூநக்கி ஆறுகால்; புள்இனத்துக்கு ஒன்பதுகால்;
ஆனைக்கு கால் பதினேழ் ஆனதே; மானே! கேள்!
முண்டகத்தின் மீது முழுநீலம் பூத்ததுண்டு;
கண்டதுண்டு; கேட்டதில்லை காண்!
.....
முக்காலை ஊன்றி மூவிரண்டு செல்கையில்
ஐந்து தலை நாகம் அழுத்த கடித்துது .
பத்துரதன் புத்திரனின் மித்திரனின் சத்துருவின்
பத்தினியின் கால் வாங்கி தேய்.
.....

shylaja

unread,
Jan 5, 2013, 2:28:19 AM1/5/13
to mint...@googlegroups.com, vallamai, தமிழ் சிறகுகள்

கடைசி  2ம்  எண்ணலங்கார இலக்கணம் இருக்கு தேமொழி நன்றி
2013/1/5 தேமொழி <them...@yahoo.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
SHYLAJA
 

Benjamin LE BEAU

unread,
Jan 5, 2013, 3:49:13 AM1/5/13
to vall...@googlegroups.com
அனைவருக்கும் வணக்கம்

சகோதரி குறிப்பிட்டது போன்ற
எண்ணலங்காரம் மட்டும் இல்லை
ககர வருக்கம் தகர வருக்கம், உதடு ஒட்டா, உதடு ஓட்டும் ...பாடல்கள், சிலேடைகள் 
எனப் பலப்பல நிறைந்த  மொழி தமிழ் மொழி.
தமிழ் மொழி மட்டுமே!

நால்  வகைக் கவிகளுள் சித்திரக் கவியும் ஒன்று :
இதில் கவிதைகள் சித்திர வடிவில் எழுதப்படும்.
இவை நாக பந்தம்,  இரட்டை  நாக பந்தம், தேர் பந்தம்...என்று
சித்திர வடிவுக்கு ஏற்பப்   பெயர் பெரும்.

ஒன்று முதல் பதினெட்டு வரை வரிசையாகப புணர்த்து எழுதிச்
சீர் பிரித்து அலகிட்டுபாருங்கள் தளை  தட்டாத,
இலக்கணம் பிறழாத வெண்பா கிடைக்கும்.

இப்படித்தான் சொல் விளையாட்டுகளில் ஈடுபட்டு
இலக்கியத் தரம் வாய்ந்த படைப்புகளைப்  படைக்காமல்  கோட்டை விட்டார்கள்
18 ஆம் நூற்றாண்டுப் புலவர்கள்.
காளமேகம்  தொடங்கி வைத்த இந்தச் சொல் விளையாட்டுகளைப்
பிற்காலப் புலவர்கள் பின் பற்றத தொடங்கிவிட்டனர்.
கமபனுக்கு நிகராகப் பாடல் இயற்றும் திறமை படைத்தவன் காளமேகம்.
ஆனால் இந்தச் சொல் விளையாட்டில் இறங்கிப் / கிறங்கிப் போய்
காவியப் படைப்பு ஏதும் படைக்காமலே காலமாகிப் போன கவிஞன் அவன்.

'The perverted genius' என அவனைக் குறிப்பிடுவார்
எங்கள்  பச்சையப்பன் கல்லூரித் தமிழ்ப்  பேராசிரியர்
திருமிகு அ ..மு.  பரசிவானந்தம் ஐயா அவர்கள்.

அன்புடன் பெஞ்சமின் 







2013/1/5 shylaja <shyl...@gmail.com>


--
SHYLAJA
 

--
 
 

Dhivakar

unread,
Jan 5, 2013, 4:15:25 AM1/5/13
to vall...@googlegroups.com, மின்தமிழ்
//கமபனுக்கு நிகராகப் பாடல் இயற்றும் திறமை படைத்தவன் காளமேகம்.

ஆனால் இந்தச் சொல் விளையாட்டில் இறங்கிப் / கிறங்கிப் போய்
காவியப் படைப்பு ஏதும் படைக்காமலே காலமாகிப் போன கவிஞன் அவன்.//

காளமேகத்தைப் பற்றிய மிகச் சரியான கணிப்பு..

எனக்கு மிகவும் பிடித்த பாடல் எண்களின் பின்னங்களை வைத்து எழுதியது

முக்காலுக்கு ஏகாமுன் முன்னரையில் வீழாமுன்
அக்கா வரைக்கால் கண்டு அஞ்சாமுன் - விக்கி
இருமாமுன் மாகாணிக்கு ஏகாமுன் கச்சி
ஒருமாலின் கீழரைஇன்று ஓது.
(காஞ்சி ஏகாம்பரநாதரைக் கனவில் கண்டு அசதி ஆடிய ஒரு
பெண்ணின் கூற்றாகப் பாடிய சிலேடை வெண்பா)

ஒன்றுஇரண்டு, மூன்றுநான்கு, ஐந்துஆறு, ஏழ்எட்டு
ஒன்பதுபத் துப்பதி னொன்று - பன்னிரண்டு பதின்
மூன்றுபதி னான்குபதி னைந்து
பதி னாறுபதி னேழ்பதி னெட்டு.
(ஒரு வெண்பாவில் ஐந்து டு வரப்பாடியது) - நன்றி - பிராஜக்ட் மதுரை

சற்று நிதானித்திருந்தால், காளமேகத்தால் வெகு எளிதாக காளிதாசன் போல
காவியங்கள் எத்தனையோ எழுதியிருக்கலாம் என்றுதான் அவ்வப்போது தோன்றும்..
தமிழன்னைக்கு கொடுப்பினை அவ்வளவுதான்..

திவாகர்

2013/1/5 Benjamin LE BEAU <benjami...@gmail.com>


>
> கமபனுக்கு நிகராகப் பாடல் இயற்றும் திறமை படைத்தவன் காளமேகம்.
> ஆனால் இந்தச் சொல் விளையாட்டில் இறங்கிப் / கிறங்கிப் போய்
> காவியப் படைப்பு ஏதும் படைக்காமலே காலமாகிப் போன கவிஞன் அவன்.


--
Dhivakar
www.vamsadhara.blogspot.com
www.aduththaveedu.blogspot.com

Benjamin LE BEAU

unread,
Jan 5, 2013, 5:07:33 AM1/5/13
to vall...@googlegroups.com


அனைவருக்கும் அன்பு வணக்கம்!
அன்புள்ள நண்பர் திவாகர் அவர்கள் கருத்தே என் கருத்தும்
தமிழிலக்கியத்தில் தனியிடம், சிறப்பிடம் பெற்றிருக்கவேண்டியவன் காளமேகம்
என்பதில் ஐயம் இல்லை!
இம்மென்றால் எழு நூறும் அம்மென்றால் ஆயிரமும்
பாடக்கூடியவன் அல்லனா அவன்!

நண்பரைப் போலவே,யானும்
'தமிழன்னைக்கு கொடுப்பினை அவ்வளவுதான்..'
என்று  பெரு  மூச்சு விடுகிறேன்.


அன்புடன்
பெஞ்சமின் 


2013/1/5 Dhivakar <venkdh...@gmail.com>

--



Dhivakar

unread,
Jan 5, 2013, 5:15:03 AM1/5/13
to mint...@googlegroups.com, vallamai
//*ஒருமாலின் கீழரைஇன்று ஓது. <<<
*ஒருமாவின் கீழரை இன்றோது
ஒரு மா - ஏகாம்ரம்
ஒருமாவின் கீழர் - ஏகாம்ர நாதர்//

தேவ்! கீழே குறிப்பிட்டுள்ளேன், பிராஜக்ட் மதுரை என்று.. ஸ்பெல்லிங் செக்
செய்யவில்லை போலும்..

ஒரு மாலின் என்பது தவறுதான்.. ஒரு மாவின் என்றே வந்தாக வேண்டும்.
இருந்தாலும் ஒரு ’மால்’ திருமால் அங்கேயே உள்ளான் அல்லவா.. ஒருக்கால்
அந்த ஒரு’மால்’ தன் இருப்பையும் அங்கே நினைக்க வைத்தானோ என்னவோ..

திவாகர்


2013/1/5 DEV RAJ <rde...@gmail.com>:
> *ஒருமாலின் கீழரைஇன்று ஓது. <<<
>
>
> *ஒருமாவின் கீழரை இன்றோது
>
> ஒரு மா - ஏகாம்ரம்
> ஒருமாவின் கீழர் - ஏகாம்ர நாதர்

--
Dhivakar
www.vamsadhara.blogspot.com
www.aduththaveedu.blogspot.com

N. Ganesan

unread,
Jan 5, 2013, 10:06:05 AM1/5/13
to மின்தமிழ், vall...@googlegroups.com
சில எண்ணலங்காரங்கள்:

திருவாஞ்சியம் - சம்பந்தர் தேவாரம்:

மேவி லொன்றர்விரி வுற்ற இரண்டினர் மூன்றுமாய்
நாவின் நாலர்உட லஞ்சினர் ஆறர்ஏ ழோசையர்
தேவில் எட்டர்திரு வாஞ்சிய மேவிய செல்வனார்
பாவந் தீர்ப்பர்பழி போக்குவர் தம்மடி யார்கட்கே.
http://www.shaivam.org/tamil/thirumurai/thiru02_007.htm

--------------

வீழிமிழலை - சம்பந்தர்

ஈறாய்முத லொன்றாயிரு பெண்ணாண்குண மூன்றாய்
மாறாமறை நான்காய்வரு பூதம்மவை யைந்தாய்
ஆறார்சுவை யேழோசையொ டெட்டுத்திசை தானாய்
வேறாயுட னானானிடம் வீழிம்மிழ லையே.

------------------------

மூத்தபிள்ளையார் திருமும்மணிக்கோவை

*ஒருநெடுங் கங்கை இருங்குறும் பைம்புகர்
மும்முகச் செந்நுதி நாலிணர் வெள்நிணக்*
குடற்புலபு கமழும் அடற்கழுப் படையவன்
மதலை மாமதந் துவன்றிய கதனுடைக்
கடதடக் கபோலத் தோரிட மருப்பின்
கரண்டக உதரத்து முரண்தரு குழவிதன்
சேவடி யுகளம் அல்லது
யாவையும் இலம்இனி இருநிலத் திடையே.
- அதிராவடிகள்

http://www.tamilvu.org/slet/l4100/l4100pd2.jsp?bookid=119&pno=557

தெரிவு:
நா. கணேசன்

N. Ganesan

unread,
Jan 5, 2013, 10:51:55 AM1/5/13
to வல்லமை

On Jan 5, 12:49 am, Benjamin LE BEAU <benjaminleb...@gmail.com> wrote:
> அனைவருக்கும் வணக்கம்
>
> சகோதரி குறிப்பிட்டது போன்ற
> எண்ணலங்காரம் மட்டும் இல்லை
> ககர வருக்கம் தகர வருக்கம், உதடு ஒட்டா, உதடு ஓட்டும் ...பாடல்கள், சிலேடைகள்
> எனப் பலப்பல நிறைந்த  மொழி தமிழ் மொழி.
> தமிழ் மொழி மட்டுமே!
>
> நால்  வகைக் கவிகளுள் சித்திரக் கவியும் ஒன்று :
> இதில் கவிதைகள் சித்திர வடிவில் எழுதப்படும்.
> இவை நாக பந்தம்,  இரட்டை  நாக பந்தம், தேர் பந்தம்...என்று
> சித்திர வடிவுக்கு ஏற்பப்   பெயர் பெரும்.
>
> ஒன்று முதல் பதினெட்டு வரை வரிசையாகப புணர்த்து எழுதிச்
> சீர் பிரித்து அலகிட்டுபாருங்கள் தளை  தட்டாத,
> இலக்கணம் பிறழாத வெண்பா கிடைக்கும்.
>
> இப்படித்தான் சொல் விளையாட்டுகளில் ஈடுபட்டு
> இலக்கியத் தரம் வாய்ந்த படைப்புகளைப்  படைக்காமல்  கோட்டை விட்டார்கள்
> 18 ஆம் நூற்றாண்டுப் புலவர்கள்.
> காளமேகம்  தொடங்கி வைத்த இந்தச் சொல் விளையாட்டுகளைப்
> பிற்காலப் புலவர்கள் பின் பற்றத தொடங்கிவிட்டனர்.
> கமபனுக்கு நிகராகப் பாடல் இயற்றும் திறமை படைத்தவன் காளமேகம்.
> ஆனால் இந்தச் சொல் விளையாட்டில் இறங்கிப் / கிறங்கிப் போய்
> காவியப் படைப்பு ஏதும் படைக்காமலே காலமாகிப் போன கவிஞன் அவன்.
>

கவிச்சக்கரவர்த்திகள் செயங்கொண்டார், ஒட்டக்கூத்தர், கம்பர் போன்றோர்
காலத்தில் தமிழகத்தைத் தமிழ்ச்சக்கரவர்த்திகள் ஆண்டனர். காளமேகம்
காலத்தில் தமிழ் மாமன்னர்கள் ஆளவில்லை. ஆதரவு இல்லாமல்
பெருங்காவியங்கள் எழுவதில்லை. இதனை அழகாக முதலில்
சொன்னவர் படிக்காசுப்புலவர் (17-ஆம் நூற்றாண்டில்).

நா. கணேசன்

> 'The perverted genius' என அவனைக் குறிப்பிடுவார்
> எங்கள்  பச்சையப்பன் கல்லூரித் தமிழ்ப்  பேராசிரியர்
> திருமிகு அ ..மு.  பரசிவானந்தம் ஐயா அவர்கள்.
>
> அன்புடன் பெஞ்சமின்
>

sk natarajan

unread,
Jan 5, 2013, 9:24:55 PM1/5/13
to vall...@googlegroups.com, mintamil, பண்புடன், தமிழ் சிறகுகள், தமிழ் வாசல்
அருமையான இழை
தொடருங்கள் ...

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்




2013/1/5 shylaja <shyl...@gmail.com>

தேமொழி

unread,
Jan 5, 2013, 10:10:13 PM1/5/13
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
வாசி வாசி என்று வாசித்த தமிழ் இன்று
சிவா சிவா என சிந்தை தனில் நின்று
அவாவினால் இந்த ஒளவைத் தமிழ் கொண்டு
கவிபாடினான் உன்னைக் கண் குளிரக் கண்டு!

ஒன்றானவன், உருவில் இரண்டானவன்,
உருவான செந்தமிழில் மூன்றானவன்,
நன்றான வேதத்தில் நான்கானவன்,
நமச்சிவாய என ஐந்தானவன்,

இன்பச் சுவைகளுக்குள் ஆறானவன்,
இன்னிசை ஸ்வரங்களில் ஏழானவன்,
சித்திக்கும் பொருள்களில் எட்டானவன்,
தித்திக்கும் நவரச வித்தானவன்!

பத்தானவன், நெஞ்சில் பற்றானவன்!
பன்னிருகை வேலவனைப் பெற்றானவன்!
முற்றாதவன்! மூல முதலானவன்!
முன்னைக்கும் பின்னைக்கும் நடுவானவன்!

ஆணாகிப் பெண்ணாகி நின்றானவன்!
அவை ஒன்று தான் ஒன்று சொன்னானவன்!
தான் பாதி உமை பாதி கொண்டானவன்!
சரி பாதி பெண்மைக்குத் தந்தானவன்!

காற்றானவன், ஒளியானவன்! நீரானவன் நெருப்பானவன்!
நேற்றாகி இன்றாகி என்றைக்கும் நிலையான
ஊற்றாகி நின்றானவன்! அன்பின் ஒளியாகி நின்றானவன்!

குரல்: கே.பி.எஸ்
வரி: கவியரசர் கண்ணதாசன்
இசை: கே.வி.மகாதேவன்
படம்: திருவிளையாடல்

N. Ganesan

unread,
Jan 20, 2013, 10:49:17 AM1/20/13
to வல்லமை
இப்பாடல் இழையில் வந்ததா? என தெரியலை.

பாரிப்பாக்கம் சித்தாந்த பேராசிரியரின் தமிழ்த் திருமணம்
ஐங்குறுநூறு கடவுள் வாழ்த்து தருகிறார்.
எண்ணலங்காரம் அது.

நீலமேனி வாலிழை பாகத்து
ஒருவன் இருதாள் நிழற்கீழ்
மூவகை உலகும் முகிழ்த்தன முறையே. - ஐங்குறுநூறு கடவுள் வாழ்த்து.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Jan 20, 2013, 10:52:01 AM1/20/13
to வல்லமை

On Jan 5, 7:10 pm, தேமொழி <themo...@yahoo.com> wrote:
> வாசி வாசி என்று வாசித்த தமிழ் இன்று
> சிவா சிவா என சிந்தை தனில் நின்று
> அவாவினால் இந்த ஒளவைத் தமிழ் கொண்டு
> கவிபாடினான் உன்னைக் கண் குளிரக் கண்டு!
>


கொடுமுடி கோகிலத்தின் குரலில் எம்பி3 அல்லது யுட்யூப் உண்டோ?
கீதா சாம்பசிவம் வலைப்பதிவில் காணொளி தெரிவதில்லை.

நா. கணேசன்

> *ஒன்றானவன்,* உருவில் *இரண்டானவன்*,
> உருவான செந்தமிழில் *மூன்றானவன்*,
> நன்றான வேதத்தில்* நான்கானவன்*,
> நமச்சிவாய என *ஐந்தானவன்,*
>
> இன்பச் சுவைகளுக்குள் *ஆறானவன்,*
> இன்னிசை ஸ்வரங்களில் *ஏழானவன்,*
> சித்திக்கும் பொருள்களில் *எட்டானவன்,*
> தித்திக்கும் *நவரச வித்தானவன்!*
>
> *பத்தானவன்,* நெஞ்சில் பற்றானவன்!
> *பன்னிருகை *வேலவனைப் பெற்றானவன்!

Nagarajan Vadivel

unread,
Jan 20, 2013, 11:59:35 AM1/20/13
to vallamai

//கொடுமுடி கோகிலத்தின் குரலில் எம்பி3 அல்லது யுட்யூப் உண்டோ?//

Nagarajan


2013/1/20 N. Ganesan <naa.g...@gmail.com>
--



N. Ganesan

unread,
Jan 20, 2013, 12:43:32 PM1/20/13
to வல்லமை

On Jan 20, 8:59 am, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:


> //கொடுமுடி கோகிலத்தின் குரலில் எம்பி3 அல்லது யுட்யூப் உண்டோ?//
>
> http://www.youtube.com/watch?v=34-388nUN60
>
> Nagarajan
>

பலமுறை உங்கள் பழனியில் பார்த்துள்ளேன். ராக்காலப் பூஜைக்கு
வரும்போது அர்த்தமண்டபத்தில் பாடுவார்.

என்னவோ நித்யஸ்ரீ நினைவுக்கு வருகிறார்.
அவரும் தனிப்பட்ட துயரிலிருந்து மீள முருகன் துணை.
http://www.youtube.com/watch?v=GdpDAhT95tU

நா. கணேசன்

N. Ganesan

unread,
Feb 27, 2013, 5:30:18 AM2/27/13
to வல்லமை
களத்தூர்க் கிழார் (திருவள்ளுவமாலையில்)

ஒருவர் இருகுறளே முப்பாலின் ஓதும்
தர்மம் முதல்நான்கும் சாலும் - அருமறைகள்
ஐந்தும் சமயநூல் ஆறும்நம் வள்ளுவனார்
புந்தி மொழிந்த பொருள்

இது ஓர் எண்ணலங்காரம்.

--------------------------------------------

சமணர் தந்த குறளை சைவமாக்க எழுந்த முயற்சி திருவள்ளுவமாலையில்.
இந்நூல் எழுந்த காலகட்டத்தில் துருக்கர்கள் தில்லியில் இருந்து
தாக்கினர். இந்து மதத்தைக் காக்க வேண்டிய கட்டாயம்
அப்போது எழுந்த நிலை. ஏராளமான தமிழ்ச் சைவக் கதைகள்
சமஸ்கிருதமயமாகின. தமிழ்க் கதைகள் பலவும்
சங்கரவிஜயம் என்ற பெயரில் சங்கராச்சாரியார் வரலாறு
என மொழிபெயர்க்கப்பட்டது. இதேபோல் இன்னொன்று
பின்னால் நிகழ்ந்தது. பல தமிழ்க் கதைகள், பாடல்கள்
வீரமாமுனி எழுதினார் என்று சொல்லப்பட்டது. காளமேகத்தின்
பாடல்கள் கூட பெஸ்கி எழுதினார் என்று கதைகள், புராணங்கள்
எழுதப்பெற்றன.

நா. கணேசன்

On Jan 20, 7:49 am, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> இப்பாடல் இழையில் வந்ததா? என தெரியலை.
>
> பாரிப்பாக்கம் சித்தாந்த பேராசிரியரின் தமிழ்த் திருமணம்

> ஐங்குறுநூறு கடவுள் வாழ்த்து தருகிறார்.எண்ணலங்காரம்அது.

DEV RAJ

unread,
Feb 27, 2013, 7:28:52 AM2/27/13
to vall...@googlegroups.com
On Wednesday, 27 February 2013 16:00:18 UTC+5:30, N. Ganesan wrote:
>>>> சமணர் தந்த குறளை சைவமாக்க எழுந்த முயற்சி
திருவள்ளுவமாலையில். இந்நூல் எழுந்த காலகட்டத்தில்
துருக்கர்கள் தில்லியில் இருந்து தாக்கினர். இந்து மதத்தைக்
காக்க வேண்டிய கட்டாயம் அப்போது எழுந்த நிலை. <<<<



வெண்பா எழுதினால் துருக்கர் தாக்குதல் நின்று விடுமா ?
என்னே யுனிவெர்ஸிடி லெவெல் ஆராய்ச்சி !

கி.பி. 8ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சேரமான் பெருமாள்
நாயனாரின் திருக்கயிலாய ஞான உலாவில்
இடம்பெறும் இரு குறட் பாக்கள் -

இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு

கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள

இதுவும் குறளைச் சைவமாக்கும் முயற்சியா ?


தேவ்

DEV RAJ

unread,
Feb 27, 2013, 8:01:27 AM2/27/13
to vall...@googlegroups.com
 
ஒருகோட்டன் இருசெவியன் மும்மதத்தன் நால்வாய் ஐங் கரத்தன் ஆறு 
தருகோட்டம் பிறையிதழித் தாழ்சடையான் தரும்ஒரு வாரணத்தின் தாள்கள், 
உருகோட்டன் பொடும் வணங்கி ஒவாதே இரவுபகல் உணர்வோர் சிந்தைத், 
திருகோட்டும் அயன்திருமால் செல்வமும்ஒன் றோஎன்னைச் செய்யும் தேவே
 
                                                                                 - சிவஞானசித்தியார்

Nagarajan Vadivel

unread,
Feb 27, 2013, 8:48:16 AM2/27/13
to vallamai
பன்னிருகை வேல் வாங்கப் பதினொருவர் படை தாங்கப் பத்து திக்கும்
நன்னவ வீரரும் புகழ மலைகளெட்டும் கடலேழு நாடி யாடிப்
பொன்னின் முடி ஆறேந்தி அஞ்சுதலை யெனக்கொழித்துப் புயநால் மூன்றாய்த்
தன்னிருதாள் தருமொருவன் குற்றாலக் குறவஞ்சித் தமிழ் தந்தானே

                                                  -திருக்குற்ற்ராலக் குறவஞ்சி


2013/2/27 DEV RAJ <rde...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 

shylaja

unread,
Feb 27, 2013, 8:50:22 AM2/27/13
to vall...@googlegroups.com
அட  எண்ணலங்காரம் பின்னலங்காரமாய்ப்போகிறதே!

2013/2/27 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>



--
ஷைலஜா
 
 வாழ்தல் என்பது பிறர் மனத்தில் வாழ்வதுதான்..!
 

Nagarajan Vadivel

unread,
Feb 27, 2013, 9:19:01 AM2/27/13
to vallamai

 ஒன்றிலிருந்து எழுவரை ஏற்றியும் இறக்கியும் அமைத்த எண்ணலங்காரப் பாடல்கள் பல
  நாகராசன்


2013/2/27 shylaja <shyl...@gmail.com>

Innamburan Innamburan

unread,
Feb 27, 2013, 9:28:27 AM2/27/13
to vall...@googlegroups.com
One to Infinity:

பரிபாடல்

வடிவு வேற்றுமையும் பெயர் வேற்றுமையும்
கூந்தல் என்னும் பெயரொடு கூந்தல்
எரி சினம் கொன்றோய்! நின் புகழ் உருவின, கை;
நகை அச்சாக நல் அமிர்து கலந்த
நடுவுநிலை திறம்பிய நயம் இல்
ஒரூ கை,
இரூ கை மாஅல் ! 35

முக் கை முனிவ! நாற் கை அண்ணல்!
ஐங் கைம் மைந்த! அறு கை நெடு வேள்!
எழு கையாள! எண் கை ஏந்தல்!
ஒன்பதிற்றுத் தடக் கை மன் பேராள!
பதிற்றுக் கை மதவலி! நூற்றுக் கை ஆற்றல்! 40

ஆயிரம் விரித்த கைம் மாய மள்ள!
பதினாயிரம் கை முதுமொழி முதல்வ!
நூறாயிரம் கை ஆறு அறி கடவுள்!
அனைத்தும் அல்ல பல அடுக்கல் ஆம்பல்
இனைத்து என
எண் வரம்பு அறியா யாக்கையை! 45 

இன்னம்பூரான்

shylaja

unread,
Feb 27, 2013, 9:35:53 AM2/27/13
to vall...@googlegroups.com

அருமையான பாடலாக இருக்கிறதே!  எனக்குத்தான் ஒன்றும்  தோன்றவில்லை ஒரே ஒரு சினிமா  பாட்டு தவிர:)
2013/2/27 Innamburan Innamburan <innam...@gmail.com>

>>>

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 

Nagarajan Vadivel

unread,
Feb 27, 2013, 9:50:27 AM2/27/13
to vallamai

ஸ்வாமிமலையில் ஸ்வாமிநாதஸ்வாமி தர்சனம் செய்ய சென்றிருந்த போது ஆங்கே அந்த திருவேரக ஆலய சுவற்றிலே இந்த திருவெழுகூற்றிருக்கையை அழகான ரதபந்த சித்ரமாக எழுதியிருந்தனர்.

அதேபோல் சார்ங்கபாணிப்பெருமாளை தர்சனம் செய்ய சென்றிருந்த போது ஆங்கே அந்த ஆராவமுதனது திருவிண்ணகரத்து சுவற்றிலே இதே போல ரதபந்தமான திருவெழுகூற்றிருக்கையையும் அருகிலே திருநாகேஸ்வரமா அல்லது வேறு சிவாலயமா என்று நினைவிலில்லை இதே போன்று சிவாலயத்திலும் திருவெழுகூற்றிருக்கை பார்த்ததாய் நினைவு உள்ளது.

முனைவர் ஸ்ரீ.முத்துக்குமாரஸ்வாமி மற்றும் ஸ்ரீ.கந்தர்வன் போன்ற சைவ வைஷ்ணவ மரபில் ஆழ்ந்த சான்றோர் இந்த அரிதான பாடல்களை நினைவு கூர்ந்து இத்தளத்தில் பதிக்க வேண்டும் என விக்ஞாபித்துக் கொள்கிறேன்.

இம்மூன்று பாடல்களும் ஒருங்கே பதிக்கப்பெறின் நிஸ்ஸம்சயமாக அவை ரத்னத்ரயமாக ஒளிரும்.

ஓருரு வாகிய தாரகப் பிரமத்
தொருவகைத் தோற்றத் திருமர பெய்தி
ஒன்றா யொன்றி யிருவரிற் றோன்றி மூவா தாயினை

இருபிறப் பாளரி னொருவ னாயினை
ஓராச் செய்கையி னிருமையின் முன்னாள்

நான்முகன் குடுமி இமைப்பினிற் பெயர்த்து
மூவரும் போந்து இருதாள் வேண்ட
ஒருசிறை விடுத்தனை

ஒருநொடி யதனில் இருசிறை மயிலின்
முந்நீ ருடுத்த நானிலம் அஞ்ச நீவலஞ் செய்தனை

நால்வகை மருப்பின் மும்மதத் திருசெவி
ஒருகைப் பொருப்பன் மகளை வேட்டனை

ஒருவகை வடிவினி லிருவகைத் தாகிய
மும்மதன் தனக்கு மூத்தோ னாகி
நால்வாய் முகத்தோன் ஐந்துகைக் கடவுள்
அறுகு சூடிக் கிளையோ னாயினை

ஐந்தெழுத் ததனில் நான்மறை யுணர்த்து
முக்கட் சுடரினை இருவினை மருந்துக்
கொருகுரு வாயினை

ஒருநாள் உமையிரு முலைப்பா லருந்தி
முத்தமிழ் விரகன் நாற்கவி ராஜன்
ஐம்புலக் கிழவன் அறுமுக னிவனென
எழில்தரு மழகுடன் கழுமலத் துதித்தனை

அறுமீன் பயந்தனை ஐந்தரு வேந்தன்
நான்மறைத் தோற்றத்து முத்தலைச் செஞ்சூட்
டன்றி லங்கிரி யிருபிள வாக ஒருவேல் விடுத்தனை

காவிரி வடகரை மேவிய குருகிரி இருந்த
ஆறெழுத் தந்தணர் அடியிணை போற்ற
ஏரகத் திறைவ னென இருந்தனையே.

[குறிப்பு:

இந்த சிறப்பான திருவெழுகூற்றிருக்கை என்ற பாடல் தேர்த் தட்டு போல் அமைந்துள்ளது. 1 முதல் 7 வரை படிப்படியாக கீழிருந்து மேல் பின்பு மேலிருந்து கீழ் என்று தேர் தட்டு மேலே செல்வதும், கீழே செல்வதுமாக அமைந்த அற்புதமான பாட்டு.

1
1 2 1
1 2 3 2 1
1 2 3 4 3 2 1
1 2 3 4 5 4 3 2 1
1 2 3 4 5 6 5 4 3 2 1
1 2 3 4 5 6 7 6 5 4 3 2 1

இடையில் தேர் தட்டு . . . . . . . . . . . . . . . . . . .

1 2 3 4 5 6 7 6 5 4 3 2 1
1 2 3 4 5 6 5 4 3 2 1
1 2 3 4 5 4 3 2 1
1 2 3 4 3 2 1
1 2 3 2 1
1 2 1
1

Nagarajan



2013/2/27 shylaja <shyl...@gmail.com>

shylaja

unread,
Feb 27, 2013, 9:55:57 AM2/27/13
to vall...@googlegroups.com

சுவாரஸ்யமாய் இருக்கே...ரதபந்த சித்திரம்  கேள்விப்பட்டதுண்டு பார்த்ததில்லை. ரொம்ப  அழகாய் இருக்கு பாட்டு..ஆமா  புரபசர்  சின்ன டவுட்டு  மடல் நடைல  லேசா  இ சார் வாசம் அடிக்குதே  உதாரணம்’ நிஸ்ஸம்சயமாக ’ என்கிற வார்த்தை!:):)
2013/2/27 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

Nagarajan Vadivel

unread,
Feb 27, 2013, 10:00:40 AM2/27/13
to vallamai
ஆமா  புரபசர்  சின்ன டவுட்டு  மடல் நடைல  லேசா  இ சார் வாசம் அடிக்குதே  உதாரணம்’ நிஸ்ஸம்சயமாக ’ என்கிற வார்த்தை!:):)

அப்புடியா எனக்கு மூக்கடைப்பு இருக்குமோ

என் வாச(க)ம் இதுல என் கையெழுத்து மட்டுமே மத்ததெல்லாம் கட்டர் ஒட்டர் கைங்கர்யம்

நாகராசன்


2013/2/27 shylaja <shyl...@gmail.com>

shylaja

unread,
Feb 27, 2013, 10:03:06 AM2/27/13
to vall...@googlegroups.com
என்னவோ நீங்கதான் அங்கல்லாம்  போய்ப்பார்த்துரசிச்சி  எழுதிட்டீங்கன்னு  நினைக்கல   :)  ஏனென்றால்  கடைசில உண்மைதெரிஞ்சாகணும் சாமியைக்காணோம்!! அதான் டவுட்ல கேட்டேன்!”:)

Nagarajan Vadivel

unread,
Feb 27, 2013, 10:13:47 AM2/27/13
to vallamai
நாங்களும் அந்தப்பக்கம் நிறையத்தடவை போயிருக்கோமில்ல

நீங்க இப்படி எண்ணலங்காரம் எழுதுவீங்கன்னு தெரிஞ்சிருந்தா அதெல்லம் பாத்திருப்போம்

போன வருடம் என் சம்பந்தியின் (வங்காளி) மகளுக்கும் மும்பையில் வாழும் ஒரு (ஐயங்கார்) பையனுக்கும் (காதல்) திருமணம் ஒப்பிலியப்பன் கோவிலில் என்னுடன் என் மனைவி ஐவரி (மாமியும்) மகள் எலிசபெத் (மாமியும்) (அப்படித்தான் அங்கே கூப்பிட்டாய்ங்க) கலந்துகொண்டாங்க

நிறைய அடைப்பு இருப்பதைக் கவனிக்கவும் மூக்கடைப்பு காரணமல்ல

நாகராசன்

shylaja

unread,
Feb 27, 2013, 10:20:07 AM2/27/13
to vall...@googlegroups.com


2013/2/27 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

நாங்களும் அந்தப்பக்கம் நிறையத்தடவை போயிருக்கோமில்ல

நீங்க இப்படி எண்ணலங்காரம் எழுதுவீங்கன்னு தெரிஞ்சிருந்தா அதெல்லம் பாத்திருப்போம்

போன வருடம் என் சம்பந்தியின் (வங்காளி) மகளுக்கும் மும்பையில் வாழும் ஒரு (ஐயங்கார்) பையனுக்கும் (காதல்) திருமணம் ஒப்பிலியப்பன் கோவிலில் என்னுடன் என் மனைவி ஐவரி (மாமியும்) மகள் எலிசபெத் (மாமியும்) (அப்படித்தான் அங்கே கூப்பிட்டாய்ங்க) கலந்துகொண்டாங்க
 
>>யப்பா...பாரதவிலாஸ் குடும்பமா இருக்கே!  தமிழ்  உங்களுக்கு மட்டும்தான்  தெரியும் போல?
 
 
 
நிறைய அடைப்பு இருப்பதைக் கவனிக்கவும் மூக்கடைப்பு காரணமல்ல>>>>>
உங்க குடும்பக்கலப்புத்திருமண வரலாறு வாசிச்சி நான் வாயடைச்சிபோயிட்டேன் சாமி:):) 

Innamburan Innamburan

unread,
Feb 27, 2013, 11:02:29 AM2/27/13
to vall...@googlegroups.com

புலவர் அப்துல் கபூர் சாஹிப் எழுதிய சித்திரகவிமாலையை படிக்கவும், ஷைலஜா. த.ம.அ.வின் மின்னாக்கம் செய்யப்பட்ட 218 வது நூல். புலவரை ஆதரித்தவர்கள் பட்டியல் ~ மு.ராகவையங்கார், உ.வே.சா. முதல் ~ படிக்கவே ஆனந்தம். தமிழ் மறுமலர்ச்சி காலமது.

இன்னம்பூரான்


2013/2/27 shylaja <shyl...@gmail.com>

shylaja

unread,
Feb 27, 2013, 11:07:04 AM2/27/13
to vall...@googlegroups.com
  அவசியம் படிக்கறேன் இ சார்.

2013/2/27 Innamburan Innamburan <innam...@gmail.com>

தேமொழி

unread,
Apr 23, 2013, 11:02:31 PM4/23/13
to vall...@googlegroups.com
வல்லமையில் இன்று  கவிஞர் சத்தியமணி  அவர்களின் கவிதை ஒன்றும்  கண்டேன் ஷைலஜா ...

வசந்த நவராத்திரி நாயகி

ஒன்றாக இருக்கின்ற தாயானவள்

இரண்டாக இணைகின்ற உறவானவள்

மூன்றாக சுழல்கின்ற நிகழ்வானவள்

நாலாக நவில்கின்ற மறையானவள்

ஐந்தாக அருள்கின்ற வடிவானவள்

ஆறாக சுவைக்கின்ற ருசியானவள்

ஏழாக ரசிக்கின்ற நிறமானவள்

எட்டாக படைக்கின்ற சித்தானவள்

ஒன்பதாய் உண்டாக்கும் சுமையானவள்

பத்தாகி வெற்றிக்கு பிறப்பானவள்

இரவிலே ஒளிகாட்டும் விளக்கானவள்

எல்லா மிடம்நிறைந்தப் பெண்தானிவள்.

-சத்திய மணி








On Friday, January 4, 2013 7:24:49 PM UTC-8, shylaja wrote:
எண்ணலங்காரம்!
 
இலக்கியத்தில் எண்ணலங்காரம் பற்றி அண்மையில் வாசித்தேன் சுவாரஸ்யமாக இருந்தது.
 
எண்களை வரிசைப்படுத்தி எழுதுவதை எண்ணலங்காரம் என்கிறார்கள். திருவிளையாடல் படத்தில்  வரும் ஒன்றானவன் உருவில் இரண்டானவன்  ஓர் எடுத்துக்காட்டு.
 
  அஞ்சுமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்
வெஞ்சமரில் அஞ்சலென வேல் தோன்றும் 
 நெஞ்சில் ஒருகால் நினைக்கில் இருகாலும் தோன்றும்
முருகாஎன்றோதுவார் முன்..
 
என்ற நேரிசை வெண்பா எண்ணலங்காரப்பாடல்.
 
நான் உன்னைசேர்ந்த செல்வம்  என்ற  திரைப்பாடலில் ‘உன் அச்சம் நாணம் என்ற  நான்கும் என் அருகில் நெருங்கிவர அஞ்சும்’ என வருவதும் எண்ணலங்காரமே!
 
இன்னொரு பாடல்   கண்ணதாசன் எழுதியதென நினைக்கிறேன் அதில்’ வவனிடம் சொன்னேன் என் அஞ்சுதலை அந்த அண்ணலே தந்து வைத்தான்  ஆறுதலை’ என்று வரும்  சரவணப்பொய்கையில் நீராடி என்ற  பாடலும் எண்ணலங்காரம் தான்..

shylaja

unread,
Apr 23, 2013, 11:11:12 PM4/23/13
to vallamai
நன்றாக இருக்கிறது தேமொழி
மூன்றாக சுழல்கின்ற? என்னவாக இருக்கும்?

2013/4/24 தேமொழி <them...@yahoo.com>
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--
ஷைலஜா
 
 பனிக்கடலில் பள்ளி கோளைப்
  பழகவிட்டு ஓடி வந்து என்
மனக்கடலில் வாழ வல்ல
 மாயமணாள நம்பீ!
தனிக்கடலே! தனிச்சுடரே!
தனி உலகே என்று என்று
உனக்கிடமாய் இருக்க என்னை
 உனக்கு உரித்து ஆக்கினையே!
 
பெரியாழ்வார்

தேமொழி

unread,
Apr 23, 2013, 11:20:07 PM4/23/13
to vall...@googlegroups.com
நேற்று, இன்று, நாளை = முக்காலமும் (என்றுமிருப்பவள்) என்று நான் பொருள் கொண்டேன் ஷைலஜா ...

.... தேமொழி

shylaja

unread,
Apr 23, 2013, 11:30:51 PM4/23/13
to vallamai
சரியாக இருக்கு தேமொழி...பத்தாகி என்பதை பற்றாகியின் திரிபாகக்கொள்ளணுமா?

Tthamizth Tthenee

unread,
Apr 23, 2013, 11:44:52 PM4/23/13
to vall...@googlegroups.com
மூன்றாக சுழல்கின்ற நிகழ்வானவள்

என்றால்

இச்சா,  க்ரியா , ஞான    சக்தியாய்

அதாவது முச்சக்தியாயும் சுழல்பவள் அவளே    என்று பொருள் கொள்ளலாம்

அன்புடன்
தமிழ்த்தேனீ


2013/4/24 shylaja <shyl...@gmail.com>

தேமொழி

unread,
Apr 23, 2013, 11:48:36 PM4/23/13
to vall...@googlegroups.com
விஜயதசமி   :-)

shylaja

unread,
Apr 23, 2013, 11:51:35 PM4/23/13
to vallamai
ஆமாம் தேனி சா்ர் முன்று சக்திகளின்  ஓருரு  .ஒன்றாய் அரும்பிப்பலவாய்   விரி்ந்து...என்கிறார் அபிராமி பட்டரும். 


2013/4/24 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

shylaja

unread,
Apr 23, 2013, 11:52:30 PM4/23/13
to vallamai
விஜய தசமி!  correct!

Nagarajan Vadivel

unread,
Apr 24, 2013, 1:08:24 AM4/24/13
to vallamai
இந்த எண்ணலங்கார வித்தை சரிவரப் புரியமாட்டேன் என்கிறதே

எண்கள் புரிகிறது 0 முதல் 9 வரை கனிதத்துக்கு அடிப்படை

கணிணியில் எண்ணிம உள்ளீடாக புறத்தில் பார்க்கும் பொருட்கள் நிகழ்வுகளின் பண்பைக் குறிக்க சங்கேதங்களாக எண்வரிவடிவங்கள் பயன்படுத்தப்படுகிறது

0 முதல் 9 வரை உள்ள எண்களும்  எண்ணிம வரிவடிவில் 0 முதல் 9 வரை உள்ள குறியீடுகளும்  வெறும் தரவாக இருக்கும்

தரவைத் தகவலாக மாற்றம் செய்ய கருத்துருக்கள் தேவை

0 என்ற எண்ணும் 0 என்ற வரிவடிவமும் விவிலியத்தில் கர்த்தர் வெறுமையிலிருந்து உலகப் படைத்தார் என்ற வாசகத்தில் வெறுமையைச் சுட்டிக்காட்டுவதாகவும் பெளத்தத்தில் வடிவம் வரிவடிவம் எல்லாம் மறைந்து பாழ்நிலையை அடைவது 0 என்ற கருத்துருவைக் குறிக்கும்போது தரவு தகவலாக மாறூகிறது

இந்த எண்ணலங்கார இழையில் எண்களும் வரிவடிவங்களும் தரவில் இருந்து தகவலாக மறுப்போது எத்தனை கருத்துக்களை வெளியிடுகிறது என்று பார்த்தால் வியப்பாக இருக்கிறது

இந்தப்பாடலுக்கு மூன்று என்ற தரவுபற்றி மூன்று விளக்கங்கள்

பேஷ் பேஷ்

நாகராசன்


2013/4/24 shylaja <shyl...@gmail.com>

s.r...@alicongroup.co.in

unread,
Apr 24, 2013, 3:19:56 AM4/24/13
to vall...@googlegroups.com
Hope u hd read sri arunagirinathar's "thiru Ezhuj KuuRRirukkai".
It is amzing chithra kavi
Su.Ravi
Sent from BlackBerry® on Airtel

From: தேமொழி <them...@yahoo.com>
Date: Tue, 23 Apr 2013 20:48:36 -0700 (PDT)
Subject: Re: [வல்லமை] Re: எண்ணலங்காரம்.

Anna Kannan

unread,
Apr 24, 2013, 5:43:07 AM4/24/13
to vall...@googlegroups.com
திருஎழுகூற்றிருக்கையில் எண்கள் வரும் அமைப்பு இப்படி இருக்கும். மேற்பாகத்தில் முதல் கூற்றில் ஒன்று, பிறகு அடுத்த கூற்றில் ஒன்று இரண்டு, ஒன்று என்ற வகையில் கீழே கொடுத்துள்ளவாறு அமையும்.

1
121
12321
1234321
123454321
1234567654321

கீழ் பாகம் இதேமாதிரி மாறி அமையும்.

ஒவ்வொரு கூறுக்கும் இரண்டிரண்டு அறைகள் அதிகமாகிக் கொண்டே வருவதால் தேர் போன்ற அமைப்பு. மேலும் கீழுமாய் அமைகின்றன. உச்சியிலிருந்து நடுவுக்கு இறங்குமுகம் அடியிலிருந்து நடுவுக்கு ஏறுமுகம். ( கூறு - பகுதிஅறைகள் - சதுரகட்டங்கள் )

மேற்பகுதியை  நோக்கினால் அதில் வரும் எண்கள் ரதத்தைச் சுற்றி சுழந்து நின்று தொங்கும் சுரங்களைப் போலத் தொய்ந்து காட்சியளிக்கின்றது அல்லவா!

கணிதம் தெரிந்தவர்கள் உடனே சொல்லி விடுவார்கள், இது 1, 112,  1112, 11112, 111112, 1111112, 11111112 என்றல்லவா இருக்கிறது என்று. அதற்கும் மேலாக ஒவ்வொரு கூற்றின் கூட்டுத்தொகை எண்களான1, 4, 9, 16, 25, 36, 49  என்பது 12, 22, 32, 42, 52, 62, 72 ஆக அமைந்திருப்பது ஏதோ ஒரு வர்ணஜாலம் மாதிரி இருக்கிறது அல்லவா!

மேற்பகுதியின் 7 கூறுகளின் கூட்டுத்தொகை 140. அதேபோல் கீழ்பகுதியின் 7 கூறுகளின் கூட்டுத்தொகை 140. இவை இரண்டையும் கூட்டினால் 280. இந்த எண்ணை ஒற்றை எண்ணாக கொணர்ந்தால் வருவது 1. இதனால் திருஎழுகூற்றிருக்கைப் பாடல் ‘ஒன்று’ என்ற முழுமையையும், ‘ஏகத்துக்கு பெருமைக்கொண்டது.







--
Dr.Annakannan

Tamil Editor, Yahoo India
(http://tamil.yahoo.com)
Bengaluru.
Reply all
Reply to author
Forward
0 new messages