கணித் தமிழ் என்றால் கணினிக்குத் தமிழ் தெரியுமா? எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனுஞ் சமி

1,409 views
Skip to first unread message

படிக்காப் புலவர் கருநாகனார்

unread,
Nov 18, 2013, 1:26:23 AM11/18/13
to vall...@googlegroups.com, மின்தமிழ்
கணித் தமிழ் என்றொரு புதிய சொல்லாடல் இணையத்தில் அதிகமாக உலாவரும் நிலையில் இந்த அடிப்படை சந்தேகம் தெளிவுபெறவேண்டியது அவசியமாகிறது..

கணினியில் ஆங்கிலக் கணினி பிரெஞ்சுக் கணினி என்றெல்லாம் யாரும் அழைப்பதில்லை.  ஆனால் தமிழகத்தில்மட்டும் தமிழில் ஒரு புதிய பிரிவாகக் 
கணித்தமிழ் உருவாக்கப்படுள்ளது புதுமையாக உள்ளது

எங்களுக்குப் பாடம் சொன்ன ஆசிரியர்கள் கணினிக்குத் தெரிந்த ஒரே மொழி கணிமொழி என்ற கணினி மொழிமட்டுமே.  அம்மொழியை அறிந்து அம்மொழியில் இடப்படும் கட்டளையைமட்டுமே செயல்படுத்தும் வேலையைக் கணினி செய்யும்.  கணினிக்கு மனித மொழி தெரியவே தெரியாது.  மனித மொழியில் உள்ள கட்டளையைத் தரவை கணினிமொழியில் உள்ளீடு செய்தால் மட்டுமே கணினி அதைப் புரிந்துகொள்ளும் என்று சொல்லிக் கொடுத்தார்கள்

இப்போது தமிழ் நாட்டில் கணித்தமிழ் என்றொரு புதிய தமிழை சுற்றுக்கு விட்டுள்ளார்களே அந்த கணித்தமிழ் என்றால் என்ன? 

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனுஞ் சாமி

படிக்காப் புலவன்

தேமொழி

unread,
Nov 18, 2013, 2:10:21 AM11/18/13
to vall...@googlegroups.com
ஒருவேளை ஒருங்குறியில் எழுத்துக்கள் மாறுபடுவதை சொல்வார்களோ பேராசிரியரே?


'ர்' என்பது அச்சுக்கும் கணினிக்கும் மாறுபடுகிறது. காட்டாக கீழே....



நிர்மலாவிற்கு இந்த மாற்றம் (அவர்கள் பெயரிலேயே 'ர்' இருப்பதாலோ???) சங்கடப்படுத்துகிறது என்பதை   குழும மடல் ஒன்றில்  அவர்கள் கேட்ட கேள்விகளில் இருந்து புரிந்து கொண்டேன்.



..... தேமொழி 

Nagarajan Vadivel

unread,
Nov 18, 2013, 2:22:06 AM11/18/13
to vallamai

2013/11/18 தேமொழி <them...@yahoo.com>

ஒருவேளை ஒருங்குறியில் எழுத்துக்கள் மாறுபடுவதை சொல்வார்களோ பேராசிரியரே?

​அய்யோடா சாமி என் வாயைக் கிளறாதீர்கள்.  ஏற்கனவே எனக்குக் கைபட்டால் குற்றம் கால்பட்டால் குற்றம் என்று கர்ஜனை செய்யும் தமிழ் மாமியார்கள் ஏராளம்.  அவர்களிடம் என்னை மாட்டிவிடுகிறீர்களே நியாயமா தர்மமா அடுக்குமா

Hari Krishnan

unread,
Nov 18, 2013, 2:22:59 AM11/18/13
to vallamai
2013/11/18 தேமொழி <them...@yahoo.com>
ஒருவேளை ஒருங்குறியில் எழுத்துக்கள் மாறுபடுவதை சொல்வார்களோ பேராசிரியரே?

இந்த இரண்டு வடிவங்களும் நெடுநாட்களாகப் பயன்பாட்டில் இருந்து வருகின்றன.  முரசு அஞ்சல் வெளியிட்ட திஸ்கி எழுத்துருக்களில் (தற்போது எப்படியோ தெரியாது) ர் என்ற எழுத்துக்குக் கீழ்க்கோடு இல்லாமல் ா மேல் புள்ளி வைத்ததைப் போல் வந்திருக்கிறது; மற்ற சில எழுத்துருக்களிலும் இப்படி உண்டு.  லதாவைத் தவிர்த்த மற்ற எழுத்துருகளில் வேறு எதிலாவது இப்படிப்பட்ட மாற்று வடிவம் இருக்கும் வாய்ப்பு உண்டு.


--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

Hari Krishnan

unread,
Nov 18, 2013, 2:26:18 AM11/18/13
to vallamai

2013/11/18 Hari Krishnan <hari.har...@gmail.com>

இந்த இரண்டு வடிவங்களும் நெடுநாட்களாகப் பயன்பாட்டில் இருந்து வருகின்றன.  முரசு அஞ்சல் வெளியிட்ட திஸ்கி எழுத்துருக்களில் (தற்போது எப்படியோ தெரியாது) ர் என்ற எழுத்துக்குக் கீழ்க்கோடு இல்லாமல் ா மேல் புள்ளி வைத்ததைப் போல் வந்திருக்கிறது; மற்ற சில எழுத்துருக்களிலும் இப்படி உண்டு.  லதாவைத் தவிர்த்த மற்ற எழுத்துருகளில் வேறு எதிலாவது இப்படிப்பட்ட மாற்று வடிவம் இருக்கும் வாய்ப்பு உண்டு.

தேனீயூனி டிஎக்ஸ் எழுத்துருவில் கால் வாங்காத ரகர மெய் இருக்கிறது.

Nagarajan Vadivel

unread,
Nov 18, 2013, 2:26:40 AM11/18/13
to vallamai
கணினிக்கு உள்ளே இருப்பது 01010101010101010 தானே தமிழ் எங்கே இருக்கிறது?

கநா


2013/11/18 தேமொழி <them...@yahoo.com>
ஒருவேளை ஒருங்குறியில் எழுத்துக்கள் மாறுபடுவதை சொல்வார்களோ பேராசிரியரே?

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

Nagarajan Vadivel

unread,
Nov 18, 2013, 2:29:43 AM11/18/13
to vallamai
எழுத்துருக்களும் ஒருங்குறியீடும் வேறு வேறல்லவா?

எழுத்துரு என்பது படமாக வரையப்படுவது குறியீடு எண்ணிம வடிவில் எழுத்துருவவை உள்ளிடு குறியாக குறிப்படுவது என்றல்லவா நினைத்தேன்

கநா


2013/11/18 Hari Krishnan <hari.har...@gmail.com>

--

துரை.ந.உ

unread,
Nov 18, 2013, 2:32:51 AM11/18/13
to வல்லமை, மின்தமிழ்
Inline image 1 அய்யாவுக்கு சமர்ப்பணம் !


2013/11/18 படிக்காப் புலவர் கருநாகனார் <radius.co...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.



--
 -இனியொரு விதி செய்வோம்
                                        ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in/
காட்சி:அசை(க்கும்) படங்கள் :http://duraigif.blogspot.in/
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in/
ஹைக்கூ :வானம் வசப்படும் :http://duraihaikoo.blogspot.in/
புகைப்படம் :எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.in/
                                                       : http://www.flickr.com/photos/duraian/
0 ALU.jpg

Hari Krishnan

unread,
Nov 18, 2013, 2:51:00 AM11/18/13
to vallamai

2013/11/18 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

எழுத்துருக்களும் ஒருங்குறியீடும் வேறு வேறல்லவா?


ஃபான்ட் என்பதை எழுத்துரு என்று குறிப்பிடுவது கற்காலக் கணியர்களின் வழக்கம்.  ஒருங்குறியில் இருப்பதும் ஃபான்ட்தான்.  திஸ்கியில் இருப்பதும் ஃபான்ட்தான்.  98-99ல் எழுத்துரு என்ற சொல்லை திரு இராமகி, சந்திரா போன்றோர் ஆக்கித் தந்தனர்.

Nagarajan Vadivel

unread,
Nov 18, 2013, 3:05:15 AM11/18/13
to vallamai
ஃபான்ட் என்பதும் ஸ்கிரிப்ட் என்பதும் வேறு வேறு என்றல்லவா எண்ணிக் கொண்டிருந்தேன். என்னே என் அறியாமை.  

எழுத்துருக்கள் கணித்திரையில் தோன்றும் எழுத்துரு என்றும் அதைப் பயனாளர்கள் அவர்கள் விருப்பத்துக்கேற்ப வடிவமைப்பதால் தமிழ் எழுத்துக்களுக்கென ஒரு தர நிணயம் தேவை என்று கருதியே 1999-ல் ஒரு பொதுக் கருத்தை உருவாக்கினார்கள் (அந்தக் கூட்டத்தில் விவரம் தெரியாத நானும் கலந்துகொண்டதாக நினைவு).  அதுவே தமிழ் எழுத்துக்களான TAB TAM என்ற கணினிக்கான தமிழ் எழுத்துருக்களாக உலக அளவில் ஏற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டது என்றல்லாவ எண்ணிக்கொண்டிருக்கிறேன்

யூனிகோட் என்ற ஒருங்குறியீட்டு வரிவடிவம் தமிழர்களைக் கலந்துகொள்ளாமல் மைய அரசால் முடிவு செய்யப்பட்டது என்று கிளப்பிய புழுதி இன்றுவரை அடங்கவில்லை என்றும் நான் தமிழ்நாட்டில் கேள்விப்பட்டதெல்லாம் தவறா

வடைபோச்சே என்ற வருத்தத்தில்

கநா


2013/11/18 Hari Krishnan <hari.har...@gmail.com>

--

Hari Krishnan

unread,
Nov 18, 2013, 4:18:46 AM11/18/13
to vallamai

2013/11/18 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

யூனிகோட் என்ற ஒருங்குறியீட்டு வரிவடிவம் தமிழர்களைக் கலந்துகொள்ளாமல் மைய அரசால் முடிவு செய்யப்பட்டது என்று கிளப்பிய புழுதி இன்றுவரை அடங்கவில்லை என்றும் நான் தமிழ்நாட்டில் கேள்விப்பட்டதெல்லாம் தவறா

ஐயா,

நான் எழுத்துரு என்று தவறாகக் குறிப்பிட்டிருந்தால் மன்னிக்கவும்.  நீங்கள் குறிப்பிடும் அந்த தாம்-தாப் கூட்டத்தில் திரு மணி. மணிவண்ணன் அவர்கள் பங்கேற்றுக் கொண்டு, தன் அனுபவத்தை (அவதியை) விவரித்துஃஎழுதியிருந்தார்.  

இதற்கு விடையாக தம்பி ஆசீஃப் மீரான் ஒரு கடிதம் எழுதியிருந்தார்.  அதில் இவ்வாறு குறிப்பிடுகிறார்:

தஸ்கியை வைத்துக் கொண்டு இயக்குவியல்எழுத்துருக்களை(dynamic fonts) இயக்க 
முடியாதென்றும் ஆகவே தஸ்கி காலாவதியாகி விட்டதாகவும் சொல்லப்படுகிறதே? 
தயவு செய்து கொஞ்சம் நீண்ட விளக்கம் தருவீர்களா? 

இங்கே--


இரண்டு கடிதங்களையும் காணலாம்.  பழைய நினைவில் எழுத்துரு என்றால் ஃபான்ட் என்று நான் கருதிக் கொண்டிருப்பது தவறாகவும் இருக்கலாம்.  அதற்குப் பின்னால் நிகழ்ந்தவை எனக்கு நினைவில்லை.  தவறிருப்பின் பொறுத்தருள்க.

Nagarajan Vadivel

unread,
Nov 18, 2013, 4:30:43 AM11/18/13
to vallamai
ஐயா 

இயக்கவியல் எழுத்துருக்கள் ஒரு இடைக்கால நிவாரணியாகச் செயல் பட்டது எனலாம்.


நீங்கள் பெரிய பெரிய வார்த்தைகளைப் போட்டு என்னை அவதிக்குள்ளாக வேண்டாம்.  இன்னும் வெளிச்சமே தெரியாத இருட்டறைக்குள்தான் தமிழ்க் கணினி உள்ளது.  எனவே எதுவும் இறுதி என்றோ சரி அல்லது தவறு என்றோ சொல்லவியலாது

கநா


2013/11/18 Hari Krishnan <hari.har...@gmail.com>

ஐயா,

--

Nagarajan Vadivel

unread,
Nov 18, 2013, 11:13:30 AM11/18/13
to vallamai
நல்லாவே படம் பார்த்துக் கதை சொல்லுகிறீர்கள்

உருளையின் சில்லு உருளை சிப்ஸ்

மின்னணுச் சில்லு மணலைக் கயிறாத் திரித்து எடுத்த சில்லுதானே 

படிக்காப் புலவன்


2013/11/18 துரை.ந.உ <vce.pr...@gmail.com>
0 ALU.jpg

Nagarajan Vadivel

unread,
Nov 18, 2013, 11:48:11 AM11/18/13
to vallamai
2013/11/18 தேமொழி <them...@yahoo.com>
ஒருவேளை ஒருங்குறியில் எழுத்துக்கள் மாறுபடுவதை சொல்வார்களோ பேராசிரியரே?

​பட்டுக் கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப்பாக்கு விலை சொல்கிறீர்களே நியாயமா?

நானோ கணினி பற்றிப் படிக்காதவன்.  பணத்தை முதலீடு செய்து பணம் பண்ணும்போது போகிற போக்கில் சில துக்கடாக்களைக் கற்றது தவிர வேறெதுவும் தெரியாது

படிக்காப் புலவனை அலைக்கழிக்கக்கூடாது ஆமா சொல்லீட்டேன்

தேமொழி

unread,
Nov 18, 2013, 12:37:49 PM11/18/13
to vall...@googlegroups.com

எனக்கும் கணினி தெரியாதே பேராசிரியரே.
சில சமயம் ஆழ்ந்து நோக்காமல் மேம்போக்காக  தூரத்தில் இருந்து பார்க்கும் பொழுது வேறு ஒரு கோணம் தெளிவாகத் தெரியுமே (மரம்/மதயானை போல).

நீங்கள் அந்தப் பிரிவு என வைத்துக் கொள்வோம். 
Not going native with the issues that are discussed, that is also an advantage.
அது போல பார்க்கவும், வேறு கோணத்தை சொல்லவும் ஒரு பிரிவு வேண்டுமல்லவா?

..... தேமொழி

Nagarajan Vadivel

unread,
Nov 18, 2013, 12:41:06 PM11/18/13
to vallamai
2013/11/18 தேமொழி <them...@yahoo.com>
எனக்கும் கணினி தெரியாதே பேராசிரியரே.

​கணினி தெரியாத தரவுப் பகுப்பாயினி அமெரிக்காவில் ​ஒரு அதிசயம்தான்

கநா

தேமொழி

unread,
Nov 18, 2013, 12:58:49 PM11/18/13
to vall...@googlegroups.com

கணினிக்கு கட்டளையிடும் நிரல்கள் எழுதுவது எனக்குத் தெரியாது பேராசிரியரே.
html உபயோகித்து வலைப்பக்கம் உருவாக்கும் அளவிற்கும் மென்பொருள்களை உபயோகிக்கும் அளவிற்கு மட்டுமே தெரியும்.

ஆனால் திருப்புளி கையில் கிடைத்தால் ஆர்வமுள்ள குழந்தைகள் எதையும் குடைந்து  கொண்டிருப்பது போல கணினியை வைத்து குடைய மட்டும் எனக்கு நன்றாகத் தெரியும்.

1993 இல் முதன் முதலில் ஒரு கேட்வே கணினி (விண்டோஸ் 3.1) என் கணவர் வாங்கினார். எனது கல்லூரி பாடங்களை அவரைத்தட்டச் சொன்னதால் இந்த முடிவு.

அமெரிக்கா ஆன்லைன் சேவை ஒரு மாதத்திற்கு $ 25.00 க்கு 10 நேரம் என்பது போல ஒரு திட்டம் வாங்கினார்.

முதல் நாள் மாலை கணக்கு ஆரம்பித்துவிட்டு அவர் தூங்கப் போக, நான் இரவோடு இரவாக இணையத்தில் அங்கும் இங்கும் உலா வந்ததும், அரட்டை அறைகளில் அரட்டை அடிப்பது போன்ற சிலபல திருவிளையாடல்களில் ஈடுபட்டேன். அவர் மீண்டும் தூங்கி எழுவதற்குள் ஒருமாத சேவையை ஒரே இரவில் தீர்த்துவிட்டு அவரை அச்சத்தில் அலற, கோபத்தில் கத்த வைத்திருக்கிறேன். 

..... தேமொழி

Nagarajan Vadivel

unread,
Nov 18, 2013, 9:58:08 PM11/18/13
to vallamai
2013/11/18 தேமொழி <them...@yahoo.com>
1993 இல் முதன் முதலில் ஒரு கேட்வே கணினி (விண்டோஸ் 3.1) என் கணவர் வாங்கினார். எனது கல்லூரி பாடங்களை அவரைத்தட்டச் சொன்னதால் இந்த முடிவு.

​புதிய தலைமுறை

நான் ஆராய்ச்சித் தரவுகளை அலச ஆரம்பித்தபோது எங்களுக்குக் கணினி கிடைக்கவில்லை.  அது 1970-ஆம் ஆண்டு.  1964-ல் தான் முதல் கணினி மும்பாயில் உள்ள டாடா ஆய்வு நிறுவனத்துக்கு வந்தது.  நாங்கள் ஐ.பி.எம் மின் கணக்கிடும் கடுவியை வயர்களை மாற்றி அமைப்பதன் மூலம் ஐ.பி.எம்.  கார்டுகளில் துளையாக மாற்றிய தரவுகளை பகுப்பது.  குறிப்பாக ​பல்லாயிரக்கணக்கான கார்டுகளில் தெரியாது பதில் இல்லை என்று பதியப்பட்ட தரவுகளை நிரலிட்டுக் கொடுப்பது முக்கிய வேலை

அதே ஆண்டு மத்திய அரசு ரஷியாவில் இருந்து வந்த கணினி ஒன்றை எங்களின் ஆய்வு நிறுவனத்துக்குக் கொடையாகக் கொடுத்தது.  அதைப் பயன்படுத்த அனுமதிக்காமல் டில்லி பல்கலைக் கழகத்தில் நள்ளிரவில் ஐ.பி.எம் 360 மெயின் பிரேம் கணினியில் தரவுகளை ஃபோர்ட்ரான் கட்டளை மூலம் பகுத்துத் தொகுக்கும் வேலையை ராக் கோழியாக இருந்து செய்து இரவில் வேலை செய்யப் பழகிக் கொண்டேன்

பின்னர் சென்னை வந்து ஆய்வில் ஈடுபட்டபோது சமூகவியலில் கணினி பயன்படுத்தத் தெரிந்த ஒரே ஆய்வாளன் என்பதால் அனைவரும் பயந்து ஒதுங்க ஆரம்பித்தனர்.  அறிவியல் ஆய்வாளர்கள் கணினியைப் பயன்படுத்திய நிலையில் மெல்ல மெல்ல சமூகவியல் ஆய்வாளர்களும் கணினியைப் பயன்படுத்த ஆரம்பித்தனர்

பின்னர் அரசு கடன்கொடுத்து ஓடாமல் நின்றுவிட்ட ஒரு டெக் கணினியைச் செயல்படுத்தும் பணியை மேற்கொண்டு அதைச் செயல்படுத்திக் கொடுத்தபோது அதைப் பயன்படுத்தௌம் வாய்ப்புக் கிடைத்ததால் பல்கலைக் கழகத்துக்கு விடுப்பில் செல்ல அனுமதி பெற்று ஒரு மென்பொருள் உருவாக்கும் நிறுவனத்தைத் தொடங்கினேன்

1985-ல் ஆரம்பிக்கப்பட்ட மென்பொருள் உருவாக்க ஆர்வம் இன்றுவரை தொடர்கிறது.  இப்போதும் இன்டெல் நிறுவனத்தின் இலைட் மென்பொருள் உருவாக்கும் வேலையைச் செய்து வருகிறேன்

ஆனாலும் எனக்கு கணினித் துறையில் ஒரு பட்டயப் படிப்பு சான்றிதழ்கூட இல்லை என்பதால் கணினி வல்லுனர்கள் குறிப்பாகத் தமிழ் தெரிந்த கணினி வல்லுநர்கள் எண்னைக் கணித் தமிழ் வல்லுவராக ஏற்றுக்கொள்வதில்லை

அதனால் என்ன நான் தான் படிக்காப் புலவன்தானே கணினி பற்றிப் படிக்காமலேயே கணினியைப் பற்றிக்கொண்டு வாழ்கிறேன்

படிக்காப் புலவன்

துரை.ந.உ

unread,
Nov 18, 2013, 10:27:10 PM11/18/13
to வல்லமை



2013/11/18 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

நல்லாவே படம் பார்த்துக் கதை சொல்லுகிறீர்கள்

உருளையின் சில்லு உருளை சிப்ஸ்

மின்னணுச் சில்லு மணலைக் கயிறாத் திரித்து எடுத்த சில்லுதானே 

வாழ்க ஐயா 

பார்வை 1 : ALU = உருளைக் கிழங்கு / சிப்ஸ்

பார்வை 2 : ALU = Arithmetic Logic Unit / சிப்ஸ்

அவ்வளவுதான் ஐயா ...
இடத்தைப் பொறுத்து பார்வைகள் மாறும் :))


படிக்காப் புலவன்


2013/11/18 துரை.ந.உ <vce.pr...@gmail.com>
Inline image 1 அய்யாவுக்கு சமர்ப்பணம் !


0 ALU.jpg

Nagarajan Vadivel

unread,
Nov 18, 2013, 10:39:43 PM11/18/13
to vallamai

2013/11/19 துரை.ந.உ <vce.pr...@gmail.com>

இடத்தைப் பொறுத்து பார்வைகள் மாறும் :))

பார்வை இல்லை ஐயா

தொழில் நுட்பம் மாறிப் போச்சு

இப்போ உருளிச் சிப்ஸ் தயாரிக்கும் எந்திரங்கள் எல்லா வேலையையும் செய்துவிடும். சிப்பிச் சில்லெடுக்கும் வேலை எல்லாம் இல்லை

அதுபோன்று ஆலு என்ற அமைப்பு மாறி இன்டெல் சிப்ஸ்சிக்குள் போய் ஒளிந்துகொண்டது

மைக்ரோ சிபஸ்சுக்குள் எல்லாம் அடக்கம் இன்டெல் உள்ளே அப்புடின்னு வெளியே சீட்டு ஒட்டி கதையை முடிச்சிடறாய்ங்க

வேந்தன் அரசு

unread,
Nov 19, 2013, 7:11:19 AM11/19/13
to vallamai, மின்தமிழ்



18 நவம்பர், 2013 1:26 AM அன்று, படிக்காப் புலவர் கருநாகனார் <radius.co...@gmail.com> எழுதியது:

கணித் தமிழ் என்றொரு புதிய சொல்லாடல் இணையத்தில் அதிகமாக உலாவரும் நிலையில் இந்த அடிப்படை சந்தேகம் தெளிவுபெறவேண்டியது அவசியமாகிறது..

கணினியில் ஆங்கிலக் கணினி பிரெஞ்சுக் கணினி என்றெல்லாம் யாரும் அழைப்பதில்லை.  ஆனால் தமிழகத்தில்மட்டும் தமிழில் ஒரு புதிய பிரிவாகக் 
கணித்தமிழ் உருவாக்கப்படுள்ளது புதுமையாக உள்ளது



தமிழ் கம்ப்யூட்டிங் என்பதற்கு  தமிழில் இடப்பட்ட இடுகுறிப்பெயர். 

Nagarajan Vadivel

unread,
Nov 19, 2013, 7:24:14 AM11/19/13
to vallamai

2013/11/19 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>

தமிழ் கம்ப்யூட்டிங் என்பதற்கு  தமிழில் இடப்பட்ட இடுகுறிப்பெயர். 

​இதை ஏற்றுக்கொள்ள முடியாததற்கு வருந்துகிறேன்

கம்ப்யூட்டிங் என்ப்து கணினிக்குள்ளே எண்ணிம நிலையில் நிகழும் செயல்.  மனித மொழிகளுக்கும் கம்ப்யூட்டிங்கிற்கும் தொடர்பே இல்லை என்று என் ஆசிரியர்கள் சொன்னது தவறா

கணினிக்கும் மனிதனுக்கும் கருத்துப்பரிமாற்றம் நிகழ மனிதன் கணினி மொழிக்கு இடுகுறியாக உருவாக்கிய செயற்கை மொழியும் ஆங்கிலம் அல்ல ஆங்கிலம்போன்ற தோற்றத்தில் உருவான செயற்கைமொழி

அதற்கு நிகராகத் தமிழிலும் கணினி மொழிக்கு நிகராக ஒரு செயற்கை மொழியை உருவாக்கவில்லை அப்புறம் எப்படித் தமிழ் கம்ப்யூடிங் நடக்கும்

கணினித்தைரையில் தமிழ் தோன்ற ஒரு பத்தாண்டுகள் ஒருங்குறியீட்டுக்கு ஏற்ற தமிழ் எது என்பதைத் தீர்மானிக்க இன்னொரு 15 ஆண்டுகள் எனக் கால் நூற்றாண்டைக் கணினித் தொழில்நுட்ப வளர்ச்சியில் தொலைத்துவிட்டுப் பின் தங்கி நின்றாலும் பேச்சளவில் வீறுகொண்டு கணித்தமிழ் என்று பெருமை பேசுவது நல்லாவே இருக்கு நல்லத்தான் இருக்கும்

படிக்காப் புலவன்​

வேந்தன் அரசு

unread,
Nov 19, 2013, 7:34:21 AM11/19/13
to vallamai



19 நவம்பர், 2013 7:24 AM அன்று, Nagarajan Vadivel <radius.co...@gmail.com> எழுதியது:


2013/11/19 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
தமிழ் கம்ப்யூட்டிங் என்பதற்கு  தமிழில் இடப்பட்ட இடுகுறிப்பெயர். 

​இதை ஏற்றுக்கொள்ள முடியாததற்கு வருந்துகிறேன்



என்னுடைய கணினியில் A  எனும் விசையை தட்டினால் அது அ எனும் தமிழாக திரையில் விழுகிறது? இந்த வித்தைகள் அடங்கியது  கணினித்தமிழ் 


வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

Innamburan S.Soundararajan

unread,
Nov 19, 2013, 7:34:30 AM11/19/13
to vall...@googlegroups.com
படிக்காப் புலவா! கவலையற்க. வருந்தேல்.

'ஆனாலும் எனக்கு கணினித் துறையில் ஒரு பட்டயப் படிப்பு சான்றிதழ்கூட இல்லை என்பதால் கணினி வல்லுனர்கள் குறிப்பாகத் தமிழ் தெரிந்த கணினி வல்லுநர்கள் எண்னைக் கணித் தமிழ் வல்லுவராக ஏற்றுக்கொள்வதில்லை

அதனால் என்ன நான் தான் படிக்காப் புலவன்தானே கணினி பற்றிப் படிக்காமலேயே கணினியைப் பற்றிக்கொண்டு வாழ்கிறேன்.'


~ இதை படித்துவிட்டு விழுந்து புரண்டு அழுதேன், தேர்தலில் டிபாசிட்டிழந்த மங்கலரசியல் வாதியைப் போல. நீவிர் வல்லனர் இல்லை என்றால் நாங்களெல்லாம் எங்கே போவது? மரத்தடிக்கா?

Hari Krishnan

unread,
Nov 22, 2013, 5:06:21 AM11/22/13
to vallamai

2013/11/18 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

ஐயா 

இயக்கவியல் எழுத்துருக்கள் ஒரு இடைக்கால நிவாரணியாகச் செயல் பட்டது எனலாம்.

ஃபான்ட் என்பதை எழுத்துரு என்று குறிக்கும் வழக்கத்தைக் குறித்து, தமிழ் மன்றத்தில் திரு இராமகி இன்று, இப்போது எழுதியது இது:


ஐயா,
 
அருள்கூர்ந்து கலைச்சொற்கள் பயன்படுத்துவதிற் குழப்பம் வேண்டாம். எழுத்துரு (font) என்ற சொல்லிற்கு நீங்கள் சொல்லும் பொருள் கிடையாது; வேறு பொருளாகும்.
 
இப்பொழுது “லதா” என்பது தமிழுக்கான ஓர் எழுத்துரு. “Arial Unicode MS" என்பது இன்னோர் எழுத்துரு.  இப்படிப் பல்வேறு எழுத்துருக்கள் உள்ளன. [எழுத்துரு என்ற சொல்லிற்கு 30 ஆண்டுகளுக்கு முன் ”வார்ப்பு” என்ற சொல்லிருந்தது. நானும் அதைப் பல்வேறு கட்டுரைகளிற் பயன்படுத்தி வந்தேன். ”வார்ப்படம்/ வார்ப்புத் தொழில் (foundary) என்பது இரும்புப் பட்டறையை யொட்டித் தமிழிற் பன்னூறு காலம் பழகி வந்த சொல். என்ன ஊழோ தெரியவில்லை, இற்றைத் தமிழில் அருவி போய், நீர்வீழ்ச்சியானது  போல், எல்லாரும் இப்பொழுது வார்ப்பை விடுத்து எழுத்துரு என்பதையே font ற்கு நிகராகப் பயன்படுத்துகிறார்.
 
ஒவ்வோர் எழுத்துருவும் ஒவ்வொரு தோற்றங் காட்டும்.  நீங்கள் சொல்லும் எழுத்தின் (alphabet or character) நீளக்கணக்கில் வரும் கருத்து வேறொன்றாகும்..
 
எழுத்து என்பது தொல்காப்பிய எழுத்ததிகாரத்திற் சொன்னபடி வருவதாகும். நம்முடைய எழுத்துக்கள் அசையெழுத்துக்களாகும் (syllabic characters).
 
எழுத்துக்களின் பகுதிகளைக் கீற்றுக்கள் (glyphs) என்று சொல்கிறோம். தமிழில் அடிப்படைக் கீற்றுக்கள் போக, (மெய்யெழுத்திற்குப்) புள்ளி  , (ஆகாரத்திற்குக்) கால், (இகரத்திற்குக்) கொக்கி, (ஈகாரத்திற்குச்)சுருட்கொக்கி, (உகரத்திற்குக்) கொண்டை, (ஊகாரத்திற்குச்) சுருட்கொண்டை, (எகரத்திற்கு) ஒற்றைக்கொம்பு, (ஏகாரத்திற்கு) இரட்டைக் கொம்பு, (ஐகாரத்திற்கு) ஐகாரக் கொம்பு, (ஔகாரத்திற்குச்) சிறகு என்று இந்தக் காலத்திற் துணைக் கீற்றுகளைச் சொல்கிறோம். [இதே கீற்றுக்களுக்கு மேல்விலங்கு, கீழ்விலங்கு என்ற சொற்களும் உரையாசிரியர் காலத்தில் இருந்தன.]
 
”கொ” என்பதில் 3 கீற்றுக்கள் இருக்கின்றன. இந்த கீற்றுக்கள் குறியேற்ற முறைக்குத் தக்க மாறும். ஒருங்குறிக் குறியேற்ற முறையில் (encoding) ”க” என்பது ஒரு கீற்று; ”க், கா, கி.கீ,கு,கூ,கெ, கே” என்பவை இரு கீற்றுக்கள் கொண்டவை. ”கொ,கோ,கௌ” ஆகியவை மூன்று கீற்றுக்கள் கொண்டவை.
 
கீற்றுக்களுக்கு வெவ்வேறு தோற்றங் கொடுக்கலாம். அவை எழுத்துருக்கள் (fonts) என்று சொல்லப்படுகின்றன.
 
சுருங்கச் சொன்னால், “கோ என்ற எழுத்திற்கு 3 கீற்றுக்கள் உண்டு. அதற்கு ஒருங்குறிக் குறியேற்றத்தில் காட்டாக, லதா என்ற எழுத்துருத் தோற்றங் கொடுத்துப் படிக்கலாம்.”
 
எழுத்துரு என்பதைக் குழப்பி எழுத்து என்ற சொல்லிற்கு மாறாக எழுத்தாளர் செயமோகன் அண்மையிற் பயன்படுத்தினார். நீங்கள் கீற்றுக்களுக்கு மாறாகப் பயன் படுத்துகிறீர்கள். தமிழர்கள் எழுத்துக்கள், கீற்றுக்கள், எழுத்துருக்கள் (அல்லது வார்ப்புக்கள்) ஆகிய மூன்றிற்கும் இடையே குழப்பமில்லாது பயனாக்குவதை என் போன்றோர் வேண்டுகிறோம்.
 
குறியேற்றங்களுக்காக தமிழ்க் கணிஞர்  16 ஆண்டுகளுக்கு முன் பாடுபட்டபோது இந்தக் கருத்தீடுகளில் தெளிவுவேண்டிய உரையாடல்களில் நானும் பங்களித்திருக்கிறேன்.  
 

Nagarajan Vadivel

unread,
Nov 22, 2013, 11:06:34 AM11/22/13
to vallamai

2013/11/22 Hari Krishnan <hari.har...@gmail.com>
குறியேற்றங்களுக்காக தமிழ்க் கணிஞர்  16 ஆண்டுகளுக்கு முன் பாடுபட்டபோது இந்தக் கருத்தீடுகளில் தெளிவுவேண்டிய உரையாடல்களில் நானும் பங்களித்திருக்கிறேன்.  
​தமிழ் மொழியைக் கணினி மயப்படுத்தும் முயற்சி அதிகம் தமிழகத்துக்கு அப்பால் உள்ள நாடுகளில் உள்ள புலம் பெயர்ந்த தமிழந்களின் தன்னார்வத்தால் வளர்ச்சியுற்றது என்பதே உண்மை

1999=ல் சென்னையில் தமிழ் நெட் மாநாட்டில் ஃபான்ட் என்ற எழுத்துருக்களில் ஒரு தர நிர்ணயம் தேவை என்ற அடிப்படைதில் எழுத்துருக்களுக்கான தர நிர்ணயமும் தமிழ் தட்டச்சு செய்ய ஒரு விசைப்பலகை உருவாக்கவும் தீர்மானிக்கப்பட்டது

ஒருங்குறியீட்டுச் சேர்த்தியம் அதற்குப் பின்னர் உலக மொழிகளில் உள்ள வரிவடிவங்களுக்கு ஒருங்குறியீட்டு எண் அளிக்கும் குயற்சியை முன்னெடுத்தது.  

தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் (நெடுங்கணக்கு + கிரந்த எழுத்துக்கள்​ + சிறப்புக் குறியீடுகள்) மொத்தம் 380-க்கு மேல் என்ற நிலையில் நடுவன் அரசு சிடேக் என்ற நிருவனத்தின் மூலம் தமிழுக்கு 128 குறியீட்டு எண்களுக்குள் அடக்கி ஒரு முன்மொழிவை ஒருங்குறியீட்டுச் சேர்த்தியத்துக்கு அனுப்பினர்.  அவர்கல் தமிழகத்தில் உள்ள தமிழறிஞர், மொழி அறிஞர் பொறிஞர் ஆகியோரைக் கலந்துபேசித் தமிழின் தனித்தன்மைக்கு ஏற்ப ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு குறியீட்டு எண் என்ற அடிப்படையில் வழங்காததால் வந்த குழப்பம் இன்று வரை தீரவில்லை

தமிழ்மொழி கணினியில் தட்டச்சு செய்து எண்ணிம வடிவில் வளங்களை உருவாக்குவதோடு நிற்பதல்ல.  அது ஒரு கட்டளைமொழியாகி கணினியில் தமிழ்வழி தேடுதல் பகுத்தல் தொகுத்தல் பணிகளைச் செய்யவேண்டும்.  நாம் இன்னும் அந்த நிலையை அடையவில்லை அடைவோம் என்ற நம்பிக்கையும் இல்லை

மிஞ்ஞானி


Reply all
Reply to author
Forward
0 new messages