--
ஞானச்செருக்கு என்பதுக்கு "அறிவுத்திமிர்" "கர்வம்" என பொருள் கொடுத்துள்ளது தமிழ் விக்சனரி
ஞானச் செருக்கு, பெயர்ச்சொல்.
--
திமிர்/திமில் திமு,திமு என வளர்ந்த பொலிகாளையின் மூரி.
இதன் நிறம் கருமை,
http://en.wikipedia.org/wiki/File:Bos_taurus_indicus.jpg
காங்கயம் காளை - இன்று தமிழ்நாட்டில் ஸ்போர்ட்ஸ் விலங்கு ஆகிவிட்டது.
இருட்டாக இருப்பதற்கு சிந்து சமவெளி வேளாண் நாகரீகத்தில் திராவிடச் சொல்
வடசொல் ஆகியிருக்கும். திமிர என்ற வடசொல்லுக்கு ஈரானிய பாஷையில்
உறவில்லை. கண்ணில் படலம் வரும்போது இருட்டுவதை
தைமிர (< திமிர்) என்பதும் இத் திமிர்/திமில் என்னும் தமிழ்ச் சொல் என
நினைக்கிறேன்.
இமில், சிமிழ் - இவையும் திமில்/திமிர் என்பதிலிருந்து பிறப்பவை.
கவர்/கவல், செக்கர்/செக்கல், மம்மர்/மம்மல், விதிர்/விதில்(விதலை -
பரிபாடல்)
போல் திமிர்/திமில்.
நா. கணேசன்
> //புதுமைப் பெண் என்பவள் வரும் புது யுகத்தில் எப்படி இருக்க வேண்டும்?
> *
> *
> *நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும் *
> *
> *
> *நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும் *
> *
> *
> *திமிர்ந்த ஞானச்செருக்கும் இருப்பதால்*
>
>
>
>
>
>
>
> > *
> >> *
> >> *செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்:*
> >> *
> >> *
> >> * *
> >> *
> >> *
> >> *அமிழ்ந்து பேரிரு ளாமறியா மையில்*
> >> *
> >> *
> >> *அவல மெய்திக் கலையின்றி வாழ்வதை*
> >> *
> >> *
> >> *உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்*
> >> *
> >> *
> >> *உதய கன்னி உரைப்பது கேட்டிரோ!
>
> >> திமிர் என்பதும் செருக்கு என்பதும் குமுகம் மகிழ்ந்து ஏற்றுக் கொள்ளும்
> >> நடத்தை அல்லவை என்று தெரிந்திருந்தும் ஒரு புது மொழியை உருவாக்கியதன் உள்
> >> அர்த்தம் என்ன?
>
> >> பெண்ணோ ஆணோ திமிர்ந்த ஞானச் செருக்குடன் யாருக்கும் அஞ்சாமல் நடந்துகொள்வதை
> >> மெய் உலகும் மெய் நிகர் உலகும் தகவென்று ஏற்றுக் கொள்ளுமா?
> >> *
> >> இந்த உண்மை எனக்க்குத் தெரிஞ்சாகனும் சாமி
>
> >> நாகராசன்*
இங்கிட்டு கருப்பா இல்லீங்களே , ஐயா
http://www.4shared.com/photo/ZB6z5NdT/Tharparkar_bull_100_3327.html
William Dwight Whitney 'திம்’ என்று வேர் காட்டுகிறார்
தேவ்
On 24 Nov, 10:20, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> On Nov 23, 8:17 pm, seshadri sridharan <sseshadr...@gmail.com> wrote:
>
> > திமிரிக்கொண்டு எழுந்தான் என்ற சொல்லாட்சியை ஊன்றி கவனித்தால் எல்லா
> > ஆற்றலையும் திரட்டி எனப் பொருள்படுவதை உணரலாம். ஆதலால் திமிர்ந்த என்பது இங்கு
> > ஒருவருக்குள்ள அறிவாற்றலின் திரட்சி என பொருள்படுவதாகக் கொள்கிறேன். காளை
> > மாட்டின் முதுகில் உள்ள திமில் திரண்ட சதைப் பகுதியைக் குறிப்பதை ஈண்டு
> > நோக்கலாம். வீட்டில் 'திம்ம உலக்கை' என்று திட்டுவார்கள். இங்கே திம்ம
> > என்பதும் திரட்சிப் பொருள் கொண்டதே. திம்மன் திம்மள் என்ற சொற்கள் உருண்டு
> > திரண்டவன், உருண்டு திரண்டவள் என்ற பருமன் கருத்தைக் கொண்டது. ஆகவே தமிர்ந்த
> > என்பது திரட்சிக் கருத்தே.
>
> > சேசாத்திரி
>
> திமிர்/திமில் திமு,திமு என வளர்ந்த பொலிகாளையின் மூரி.
> இதன் நிறம் கருமை,http://en.wikipedia.org/wiki/File:Bos_taurus_indicus.jpg
2012/11/24 N. Ganesan <naa.g...@gmail.com>//திமிர்/திமில் திமு,திமு என வளர்ந்த பொலிகாளையின் மூரி. இதன் நிறம் கருமை,காங்கயம் காளை - இன்று தமிழ்நாட்டில் ஸ்போர்ட்ஸ் விலங்கு ஆகிவிட்டது.//திமு திமு என்பதும் திரட்சிக் கருத்து தான். வீடு கட்டித் தரை வேயும் போது உடைந்த செங்கற்களை நிறப்பி அதை சமனாக தட்டி திடப்படுத்துவதற்கு இரும்பால் ஆன மிகக்கனமான செவ்வகப் பலகையில் கொம்பை முடுக்கி அதைத் தரையில் தொம் தொம் என்று தட்டுவார்கள். இதனால் செங்கல் உடைந்து பொடிப்பொடியாகிச் சமன்பட்டு உறுதியாகும். இந்தச் செவ்வக இரும்புப் பலகையைக் கொத்தனார்கள் திமிசு என்பார்கள். ஏனென்றால் அது கனத்தால் திரண்டது என்ற பொருளில்.சரி தலைப்பிற்கு வருவோம் திமிர்ந்த ஞானச்செருக்கு என்றால் பல ஏடுகளைக் கற்றுத் திரண்ட அறிவினால் உண்டாகிய பெருமிதஉணர்வு என்றே பொருள். எனவே பாரதி நன்றாகத் தமிழறிந்து தான் இப்பாவியற்றி உள்ளான்ஆதலால் //திமிர் என்பதும் செருக்கு என்பதும் குமுகம் மகிழ்ந்து ஏற்றுக் கொள்ளும் நடத்தை அல்லவை என்று தெரிந்திருந்தும் ஒரு புது மொழியை உருவாக்கியதன் உள் அர்த்தம் என்ன?// என்ற பொருள்பாடு தவறானது. ஏனென்றால் திமிர் என்பதும் செருக்கு என்பது இங்கு குமுகத்தால்தூற்றப்படும் பொருளில் ஆளப்படுவில்லை. ஆகவே இது புதுமையான சொல்லாட்சியும் அல்ல.
சேசாத்திரி
திமிருதல், திருமுதல் என்ற பேச்சுவழக்கு - பாரதி காலத்தில் இருந்தது -
இன்றும் இருக்கிறதா? எனக் கேட்டுப்பார்ப்போம்.
திமிரித் தழுவியதில் நின்முகம் கண்டேன்’ என்பதை ‘திருமித் தழுவியதில் நின்முகம் கண்டேன்’ என்றானே, அது, புதிய சொல்லாக்கம். Tongue of the slip என்று சொல்வார்களே, அப்படி an example in itself.
;-)
ஈரோடு கதிர், பழமைபேசி, ... கேட்டுப்பாருங்க.
திமிராக இல்லாத பருவத்தில் கன்று (calf), காயடித்த பின்னர் எருது
(castration - ox)
திமிர் இராது. திமிர்ந்த செருக்கு உள்ள பருவம் காளைக்கே உண்டு,
திமு, திமு என மூரி வளர்ந்து பொலியும் பருவம் பொலிகாளைக்குத் தான் உண்டு.
> William Dwight Whitney 'திம்’ என்று வேர் காட்டுகிறார்
>
அது சரியே. திம் என்பதுதான் தமிழ் திமிர்/திமில் என்பதன் வேர்.
செக்கர்/செக்கல்
திமிர்/திமில் போல் படர்:படலை. திகிர்/திகில் பொலிகிடாவைப்
பொலிபோடும்போது பண்டாரம் திகில்கொடுப்பது என்றால்
கயிறை அசைத்து பலியாணை தருதல்.
வெவ் வாய எயிற்றால் மிடல்
வீரர் கடிப்ப, மீச் சென்று,
அவ் வாய் எழு சோரிஅது,
ஆசைகள்தோறும் வீச,
எவ் வாயும் எழுந்த கொழுஞ்
சுடர் மீன்கள் யாவும்,
செவ்வாயை நிகர்த்தன; செக்கரை
ஒத்த, மேகம். - கம்பன்
இதனுரையில் உள்ள செய்தி:
” மேகம் செக்கரை ஒத்த - மேகங்கள்
செவ்வானத்தை ஒத்து விளங்கின.
கடித்த இடங்களிலிருந்து பெருகிய குருதியின் மிகுதி கூறப்பெற்றது.
செவ்வாய் - நவக்கிரங்களில் ஒன்று. சிவந்த நிறமுடையது. சோரி அது
என்பதில் அது பகுதிப்பொருள் விகுதி. செக்கர் - செவ்வானம். இது செக்கல்
என்ற சொல்லின் ஈற்றுப் போலி; பின் பண்பாகு பெயராய்ச் செவ்வானத்தைக்
குறித்தது. “
செக்கர் பண்பாகுபெயராய் வானத்தைக் குறித்தற்போல,
திமிர என்னும் சிந்துசமவெளி வேளாண்சொல் கருமையை, இருளைக்
குறித்தது. இதனை சுஸ்ருத சங்கிதை என்னும் மருத்துவ நூலிலும்
“தைமிர” என்று உள்ளதைப் பார்க்கலாம்.
இதற்கு இலக்கிய ஆட்சி இருக்கிறதா? என ஆராய்வோம்.
ஒரு சொல் இலக்கியத்தில் இருக்கிறது:
குயவனின் திரிகை:திகிரி என்றாகி 2000 வருஷமாய்.
அன்புடன்
நா. கணேசன்
On Nov 24, 5:29 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2012/11/24 N. Ganesan <naa.gane...@gmail.com>
>
> > திமிருதல், திருமுதல் என்ற பேச்சுவழக்கு - பாரதி காலத்தில் இருந்தது -
> > இன்றும் இருக்கிறதா? எனக் கேட்டுப்பார்ப்போம்.
>
> பாரதி காலத்தில் அந்த வழக்கு இருந்ததாக எப்போது சொன்னேன்? அது ஒரு புதிய
> படைப்பு; கவிதா உத்தி என்றுதான் சொன்னேன்.
>
> திமிரித் தழுவியதில் நின்முகம் கண்டேன்’ என்பதை ‘திருமித் தழுவியதில்
>
> > நின்முகம் கண்டேன்’ என்றானே, *அது, புதிய சொல்லாக்கம்*. Tongue of the slip
இதற்கு இலக்கிய ஆட்சி இருக்கிறதா? என ஆராய்வோம்.
On Nov 24, 5:44 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2012/11/24 N. Ganesan <naa.gane...@gmail.com>
>
> > இதற்கு இலக்கிய ஆட்சி இருக்கிறதா? என ஆராய்வோம்.
>
> ஆராஞ்சி கண்டுபுடிச்சி டாக்டர் பட்டம் வாங்கிக்கங்க. வேணாம்னா சொன்னேன்?
> அதுக்குள்ள, பாரதி காலத்துல அந்த வழக்கு இருந்தது என்று நான் சொன்னதாக ஒரு
> கும்மாங்குத்து குத்தறீங்களே... இருந்தா இருக்கற எடத்தக் காட்டுங்கன்னுதான்
> சொல்றேன். பிடிங்க பிடிங்க நல்லா கண்‘டும் பிடிங்க... மூக்‘டும் பிடிங்க...
> அதுக்குள்ள என் தலயப் போட்டு உருட்டாதீங்க. அவ்ளதான்.
>
பாரதி காலத்துல அந்த வழக்கு இருந்தது என்று நீங்கள் சொன்னதாக
எங்கே குறிப்பிட்டுள்ளேன்? என் மடலை மீண்டும் ஒருமுறை
படித்துப் பார்க்க வேண்டுகிறேன்:
https://groups.google.com/group/mintamil/msg/f4d4d928d527cfd2
"திரு. ஹரிகி ‘திருமி’ என்ற பாரதியின் பாட்டில் வரும் சொல்லைக்
குறிப்பிட்டிருந்தார்."
http://www.keetru.com/rebel/bharathi/76.php
மதுரை > மருதை, குதிரை > குருதை, திரிகை > திகிரி, திமிரி- > திருமி-
என்பது நாட்டார் வழக்கு என விளக்கியுள்ளேன்.
நா. கணேசன்
--
தமிழ் முனைவர்கள் ஆராய வேண்டும்.
நா. கணேசன்
> ~ஏன் மற்றவர்கள் தலையை உருட்டுவது உமது ஏகபோக உரிமையா, திரு. ஹரிகி அவர்களே.தமிழ் முனைவர்கள் ஆராய வேண்டும்.
> இன்னம்பூரான்
>
திம்மி, திம்மக்கா, திம்மணா, திமிசு, திமு-திமு, திமிர்/திமில் (Cf.
திமிர வடசொல்),
... போன்ற சொற்களின் வினைச்சொல் திமிரியது என வரும்.
(1) அறிஞர் அண்ணாவின் அச்சான புத்தகச் சொல்:
http://www.annavinpadaippugal.info/sorpozhivugal/valimai_mikka_ethiriyai.htm
“இந்த நேரத்தில் சீனத்துச் சிறுகதையொன்று நினைவுக்கு வருகிறது. ஒரு
மலைப்பாம்பு ஒரு பெரிய மரத்தைச் சுற்றிக் கொண்டதாம். நான் ஆட்டைச் சுற்றி
எலும்பை முறித்தேன். மாட்டைச் சுற்றிக் கொன்றேன். இந்த மரம்
எம்மாத்திரம்? என்று அது கருதியதாம். ஆடு மலைப்பாம்பிடமிருந்து தப்ப
முழுப் பலத்துடன் திமிரியது. பாம்பும் முழுப் பலத்துடன் சுற்றி அழுத்த
இரு பலமும் சேர்ந்ததால் ஆடு இறக்க நேரிட்டது. மாடும் அப்படித்தான். ஆனால்
மரம் அப்படியல்ல, எத்தனையோ பாம்புகள் ஏறி இறங்கியிருக்கின்றன"
(2) http://moonramkonam.com/thirukayilaya-manasarovar-mukthinath-yathirai-13-baba-nalini/
திருக்கைலாய யாத்ரை வர்ணனை,
”எதிரே வரும் வாகனத்திற்கு வழிவிட பள்ளத்தாக்கின் ஓரமாக ஜீப்
ஒதுங்கும்போது—கடவுளைத்தவிர வேறு எதைப்பற்றியும் மனம்
சிந்திக்காது . வெளிநாட்டைச்சேர்ந்த ஒருவர் ,குதிரையின் மீது வந்து
கொண்டிருந்தார் . ஜீப் எழுப்பிய ஒலியக்கேட்டு குதிரை அரண்டு
போய் , முன்னங்கால்களைத்தூக்கி திமிரியது .அடுத்தக்கணமே குதிரை
ஓட்டி அதை அடக்கிவிட்டார் .சிறிது
தாமதித்திருந்தாலும் ,பள்ளத்தாக்கில்தான் .”
(3) நாவலில்,
http://puthu.thinnai.com/?p=13587
”விவேகானந்தனுக்கு ஆத்திரம் அடி வயிற்றில் உஷ்ணமாய்த் திமிரியது.
“அடிப்பாவி.. எத்தன லுக் விட்டுறுப்ப… சைக்கிள்ள உன் ஃப்ரண்ட்ஸை
விட்டுட்டு எத்தனை நாள் எங்கூடப் பேசிக்கிட்டே சைக்கிள் ஓட்டியிருக்கே.”
பழைய திராவிட பாஷைகளின் வினைச்சொல் திமிருதல்.
நா. கணேசன்
>
> சேசாத்திரி ஐயா விளக்கியிருப்பதுபோல்,
> திமிருதல் என்றால் திமிருறச் செய்தல் என்ற பொருளும் உண்டு.
> கலித்தொகை உரைகாரர் சொல்லியுள்ளார். திமிருதல் - திமிறுதல்
> என்றாதல் பிற்காலம். பல சொற்கள் ர- ற்-கரம் எனப் பிற்காலத்தில்
> ஆகியுள்ளன.
>
On Nov 24, 8:55 am, Vis Gop <vis...@gmail.com> wrote:
> கல்யாணம் என்பது நம் வேதத்தில் உள்ள சொல்லாயிற்றே! அதற்குத்திருமணம் என்ற
> தனிப் பொருள் இல்லை. நல்லவை யாவும் கல்யாணமே. நல்ல நிகழ்ச்சி, நல்ல குணம் கூட!
> கோபால்.
>
Our Vedas do contain many Dravidian words. 200 years of work in
Universities
have established the fact. A reason will be found in the followin
paper
Here is a paper I wrote and published at International School of
Dravidian Linguistics,
Kerala:
http://groups.google.com/group/tiruvalluvar/msg/b6747e262b8bfff9
will appreciate your learned input after reading my paper, available
for download as a PDF,
N. Ganesan
http://www.outlookindia.com/article.aspx?271375
கொங்குமண்டிலம் மாத்திரம் இல்லை.
க்லாஸிக் ஃசீபு (zebu bulls) திமிர்/திமில்
எப்படி இருக்கு ஓங்கோல் கொங்கிலும் இல்லை.
வேளிர் துவரையை விட்டு வெளியேறி தென்னகம் புகுந்து
வேளாண்மை பெருக்கியபோது கொணர்ந்த
காளையினங்கள்.
நீங்க படம் காட்டும் சிவப்புக் காளையும் நானறிவேன்.
அவை விழுக்காட்டில் மிகக் குறைவானவை.
காங்கயம், ஓங்கோல் போன்ற சிந்து வமிசாவளி
மாடுகளில்.
நா. கணேசன்
எவ்வளவு முயன்றும் தனது திறமையினால் ஞானச் செருக்கு உள்ள ஆளை நடைமுறை வாழ்க்கையில் அடையாளம் கூற என்னால் முடியவில்லை.
--
இது தொடர்பான ஒரு கவிதை, இந்தப் பக்கங்களில் உள்ளது:http://www.vallamai.com/literature/poems/2163/
--
ஞானச்செருக்கு என்பதுக்கு "அறிவுத்திமிர்" "கர்வம்" என பொருள் கொடுத்துள்ளது தமிழ் விக்சனரி
--
ஐயா...
--
தேவு ஐயா காட்டியிருப்பது கொங்குநாட்டில் வாழ்ந்து கம்பனுக்கு
எதிர்காவியம்
பாடிய நாத்திகப் புலவர் குழந்தை அவர்கள். 20-ஆம் நூற்றாண்டு.
பழைய வழக்கம் திமிரியது என்பது. சிதல்/சிதர் (குடல்/குடர், சுடர்/சுடலை,
சுவர்/சுவல்
... போல, திமில்/திமிர்- வல்லினமாதல் தற்போதுதான். முரிந்தது, முறிந்தது
என்று
தற்காலத்தில் எழுதுகிறோமே அதுபோல. சிதரியது என்னும் பழைய வழக்கு
சிதறியது என இன்று எழுதுகிறோம். அதேபோல திமிரியது என்னும் இன்றுமுள்ள
பழைய வழக்கத்தை திமிறியது எனக் புலவர் குழந்தை எழுதிச் செல்கிறார்.
கண்ணாலம், ஆத்தாள் என்பது போல நாட்டார் வழக்காகிய திமிரு- > திருமு-
என்னும்
வினைச்சொல்லை பொருத்தமாக பாரதி கையாள்கிறார் என்ற பொருளும்
சொல்லலாம்.
கண்ணாலம், ஆத்தாள் என்பது போல நாட்டார் வழக்காகிய திமிரு- > திருமு-
என்னும்
திமிர்ந்த ஞானச் செருக்கு உள்ள பெண்கள் = liberal unconstrained women with bold and outspoken character
Aung San Suu Kyi, Arundhati Roy
Kamala Das
Jeyalaithaa Jeyaramகூகுள் தேடலில் சொற்கள் கொடுத்துத் தேடும்போது ஒரு சொல்லுக்கு மட்டுமே உரிய தகவலையும் பட்டியலில் இணைத்துத் தருகிறது. அதுபோல உங்கள் பதில் இருக்கிறது திருமிகு தேமொழி.
திமிர்ந்த ஞானச் செருக்கு உள்ள பெண்கள் = liberal unconstrained women with bold and outspoken character
2012/11/26 தேமொழி <them...@yahoo.com>திமிர்ந்த ஞானச் செருக்கு உள்ள பெண்கள் = liberal unconstrained women with bold and outspoken character
They could be conservative too.
அதிகமான ஞானத்தை அடைந்ததால் நியாயமாக பெருமிதம் அடையும் பெண் என வைத்துகொண்டால் நிறைய படித்த பெண்கள் பலரையும் சொல்லமுடியும். தேமொழியே நல்ல உதாரணம். பவளசங்கரி, ஸ்வாதி, தலைவி கீதா சாம்பசிவம் போன்று இங்கு எழுதும் பெண்கள் அனைவரும் நல்ல ஞானமும், துணிவும் உள்ளவர்கள். பாரதி காண ஆசைப்பட்ட புதுமைப்பெண்கள்.
டூய் என்றால் பயந்து ஓடிவிடமாட்டார்களே
--
--
'அடிச்சு' சொன்னா சொர்ணாக்கான்னு கூப்பிடுறாங்க
--