பிய் > பிய்லி > பீலி

20 views
Skip to first unread message

seshadri sridharan

unread,
Mar 20, 2023, 10:40:46 AM3/20/23
to வல்லமை
On Mon, Mar 20, 2023 at 3:19 AM seshadri sridharan <ssesh...@gmail.com> wrote:
>
> புய் > துளைக் கருத்து, பிளவுக் கருத்து >  பிய் > பிய்லி > பீலி - விரிந்து காணப்படும் தோகை. பிறங்கு பிளந்த விரிந்த என்று பொருள் காட்டினேன். தென்னம் பூவை படம் இட்டேன்.    உமி உரித்த அரிசி  பிய்> பிய்யம் (தெலு) - அரிசி < அரி என்றால் உமியை பிளந்தெடுத்த அரிசி.

இல்லை. biyyam, biijam. அது வேறு.
தனியிழை.
குறள்  475 
பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ் 
சால மிகுத்துப் பெயின்
[பொருட்பால், அரசியல், வலியறிதல்]
முழுப்பொருள்
மயிலிறகு என்பது மிகவும் எடை குறைவான பொருள் தான். இது என்ன செய்து விட போகின்றது என்று, அதை வண்டியின் மேல் அளவுக்கு அதிகமாக ஏற்றினால், வண்டியின் அச்சாணி முறிந்து விடும்.

இறும் - பிளக்கும் / உடையும். இந்த இற் - இர்   > இறகு என்பதும் பிளவுக் கருத்து உள்ளது தான். இரண்டு ஒன்றை பிளப்பதால் உண்டானது இரண்டு.

எனவே பீலி என்பது மயில் இறகையே குறிக்கும் தோகையை அல்ல. தோகை என்பது தொகையான மயில் இறகு. பிய்த்து எறி என்றால் பிளந்து எறி எனப் பொருள்.   

seshadri sridharan

unread,
Mar 20, 2023, 11:03:30 PM3/20/23
to வல்லமை
தலைவாறும் சீப்பின் பற்களிடையே பிளவு இருப்பது போல குஞ்சங்களின் இடையே பிளவு இருப்பதால் தான் பிய், இற் என்ற பிளவுக் கருத்து வேரைக் கொண்டு பிய்லி > பீலி, இற் >இறகு  ஆகிய சொற்கள் உருவாக்கப்பட்டன.  இறகு - சீப்பு ஒரு ஒப்பீடு படத்தில்.

image.pngimage.png

seshadri sridharan

unread,
Mar 22, 2023, 4:43:50 AM3/22/23
to வல்லமை
மயில் என்பது மயிலின் நீலக் கழுத்து குறித்து வந்தது. நீலம் என்பது கருமையையும் குறிக்கும். அதேபோல் மை என்பது அடர் நீலத்தையும் குறிப்பதால் மயில் என்ற சொல் உருவானது. இறகில் உள்ள நீலக்கண் குறித்து உருவானது அல்ல.

image.png
Reply all
Reply to author
Forward
0 new messages