

ஆத்திசூடி அமர்ந்த தேவனைஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே - ஔவை
- இதனை முதல்நூலாகக் கொண்டு ஆத்திசூடி இலக்கியம் என்று பலர் செய்கிறார்கள். ஆத்தி/தாதகி மரத்தின் அடியில் அமர்பவர் பார்சுவநாதர். இந்தியாவில் 2000 ஆண்டுகளுக்கு மேலாக ‘ஆத்திசூடி அமரும் தேவன்’ இருக்கிறார். பாம்புக் குடை இருக்கும். பூசைக் காலங்களில் முடிமீதோ, கழுத்திலோ, திருவடிகளிலோ ஆத்திசூடலாம். சில பழைய சிற்பம், சித்திரம் ஆத்திசூடி தீர்த்தங்கரரைப் பார்ப்போம். பெருமாளுக்கு துளசி, சிவனுக்கு கொன்றை, விநாயகருக்கு அறுகு, முருகனுக்குக் கடம்பு, ... என்பதுபோல இந்த தீர்த்தங்கரருக்கு ஆத்தி.
பார்சுவநாதர், நேமிநாதரை அடுத்துத் தோன்றியவர். கி.மு.எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். 23ஆவது தீர்த்தங்கரர். இவர், அரச குலத்தில் தோன்றியவர். நூறு ஆண்டுகள் உயிர் வாழ்ந்தவர். முப்பது ஆண்டுகள் இல்லற வாழ்வு நடத்தினார்; எழுபது ஆண்டுகள் துறவு வாழ்வு மேற்கொண்டார். உயிர்க் கொலை, சாதிப் பாகுபாடு இவற்றைக் கடுமையாக எதிர்த்தார்.
ஆத்திசூடி அமரும் தேவன் (தீர்த்தங்கரர்)
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே - ஔவை
ஆத்திசூடி அமர்ந்த தேவனைஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே - ஔவை
Note the totemic tree connected with Parsva - the Aaththi/Dhaataki tree.
It is not found on Siva's iconography in early texts such as Tevaram.N. Ganesan

அருமையான பதிவு. நன்றி கணேசன் ஐயா.


அது வேறு அவ்வை இது வேறு அவ்வை எனலாம். ஆனால் எல்லா அவ்வையும் சிவனை பாடுவது வழக்கம் (உதா: புறநானூறு, கொன்றைவேந்தன் (செல்வன்). ஆக எல்லா அவ்வையும் இந்துவாக இருக்க ஒரு அவ்வை மட்டும் நடுவே எப்படி சமணர் ஆனார்?
2
படங்களுக்கு நன்றி. மிக அழககாக இருக்கிறது
ஆனால் இதனால் எல்லாம் அவ்வை சமணர் என நிருபணம் ஆகவில்லை
அவ்வை புறநானூற்று காலத்திலேயே சிவனை பாடியுள்ளார்.
அதியமான் அவ்வைக்கு நெல்லிகனியை ஈந்தபோது அவ்வை அவனை வாழ்த்தி
பால்புரை பிறைநுதல் பொலிந்த சென்னி
நீலமணிமிடற் றொருவன் போல
மன்னுக பெரும நீயே..... (புறம் 91)
என பாடுகிறார்
பொருள்: பால்போலும் பிறை நெற்றியில் பொருந்திப் பொலிந்த திருமுடியினையும் நீலமணி போலும் கரிய திருமிடற்றினையும் உடைய ஒருவனைப்போல (சிவனைப்போல) நிலைபெறுவாயாக என வாழ்த்துகிறார்.
அது வேறு அவ்வை இது வேறு அவ்வை எனலாம். ஆனால் எல்லா அவ்வையும் சிவனை பாடுவது வழக்கம் (உதா: புறநானூறு, கொன்றைவேந்தன் (செல்வன்). ஆக எல்லா அவ்வையும் இந்துவாக இருக்க ஒரு அவ்வை மட்டும் நடுவே எப்படி சமணர் ஆனார்?
லிங்க வழிபாடு சம்பந்தர் தமிழ்நாட்டில் புகுத்தியது என்பதும் தவறு. லிங்க வழிபாடு ஹரப்பா, மொகஞ்சதாரோ காலம் முதல் இருக்கிறது. திருப்பதிக்கு தெற்கே சித்தூரில் உள்ள குடிமங்கலத்தில் உள்ள சிவலிங்கம் கிமு 1- 2ம் நூற்ராண்டை சேர்ந்தது
(குடிமல்லம் இலிங்கம்)
மிக தொன்மையான சிவன் கோயில்கள் பலவற்றில் ஸ்தல விருட்சம் ஆத்தி
உதா: சோழநாட்டில் உள்ள பலுங்கண்டநாதர் கோயில்
தேவார பாடல்களில் ஆத்தி மரத்தடியில் சிவலிங்கம் ஸ்தாபிக்கபடுகிறது
உதா:
தழைத்ததோர் ஆத்தி யின்கீழ்த்
தாபர மணலாற் கூப்பி
அழைத்தங்கே ஆவின் பாலைக்
கறந்துகொண் டாட்டக் கண்டு
பிழைத்ததன் றாதை தாளைப்
பெருங்கொடு மழுவால் வீசக்
குழைத்ததோர் அமுதம் ஈந்தார்
குறுக்கைவீ ரட்ட னாரே.
சுந்தரர் தேவாரம்
அடல்விடையினன் மழுவாளினன்
அலர் ஆல் அணி கொன்றைப்
படருஞ்சடை முடிவுடையவர்க்கு
இடமாவது பரவை
கடலிடையிடை கழியருகினில்
கடிநாறுதண் கைதை
மடலிடையிடை வெண்குருகெழு
மணிநீர்மறைக் காடே.
தெளிவுரை : வெற்றியை உடைய இடப ஊர்தியை உடையவனும், மழுப்படையை உடையவனும், நல்ல ஆத்தி மாலையையும் அழகிய கொன்றை மாலையையும் அணிந்த விரிந்த சடைமுடியையுடைய சிவ பெருமானுக்கு இடமாவது பரந்து கிடத்லையுடைய கடலின் இடை இடையும் கழியின் அருகிலும் மணம் வீசுகின்ற தண்ணிய தாழை மடல்களின் இடை இடையும் வெண்மையான குருகுகள் மேலெழுந்து பறக்கின்ற நீலமணி போலும் கடல்நீரையுடைய திருமறைக்காடேயாகும்.
ஆக ஆத்தி பார்சுவநாதருக்கே உரியது
லிங்க வழிபாடு சம்பந்தர் தமிழ்நாட்டில் வலிந்து புகுத்தியது
சிவன் தமிழரின் தொல்தெய்வம் அல்ல
தேவாரத்தில் ஆத்தி இல்லை
என்ற கருத்தாக்கங்கள் அனைத்தும் முழுக்க தவறானவை
மாலுக்கு அடிமை செய்தல், மாலடிமை எனும் சொற்றொடர்கள் தமிழ் இலக்கியங்களில் (உதா: கம்பராமாயணம், திருவாய்மொழி) பயன்படுவதை காண்கிறோம்
அரசனுக்கு அடிமையாக இருக்க சொல்லி பள்ளிமாணவர்களுக்கு அவ்வை கற்பித்தார் என்பது பொருந்தைல்லை
சக்கரநெறி நில் என சொல்லிவிட்டு
அதே பொருள் வரும்படிக்கு "திருமாலுக்கடிமை செய்" என எப்படி அவ்வையார் சொல்லுவார்? சொல்லியிருந்தால் அது ரிடண்டன்ட்.
மேலும் மாலடிமை எனும் பொருள் வரும் ராமதாஸ் (உதா: மருத்துவர் இராமதாஸ்) எனும் பெயரை தமிழர்கள் இன்றும் வைத்துகொள்வதை காண்கிறோம்.
ஆக ஆத்திசூடி அமர்ந்த தேவன் மொகஞ்டதோரோ, ஹரப்பா காலம் முதல் தமிழர்களை காத்து ரட்சிக்கும் சிவபெருமானே
சமண ஔவையின் ஆத்திசூடியைப் பார்த்து, ஆத்திசூடி இலக்கியம் என்றவழிநூல் மரபை உண்டாக்கியவர் இந்த சைவசித்தாந்தி ஔவை. பின்னர் பலர்பாடினர்
படங்களுக்கு நன்றி. மிக அழககாக இருக்கிறது
ஆனால் இதனால் எல்லாம் அவ்வை சமணர் என நிருபணம் ஆகவில்லை
அவ்வை புறநானூற்று காலத்திலேயே சிவனை பாடியுள்ளார்.
2014-05-02 19:47 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
சமண ஔவையின் ஆத்திசூடியைப் பார்த்து, ஆத்திசூடி இலக்கியம் என்றவழிநூல் மரபை உண்டாக்கியவர் இந்த சைவசித்தாந்தி ஔவை. பின்னர் பலர்பாடினர்
சமண அவ்வை மட்டும் ஆத்தி ச் சூடிய மட்டுந்தான் பாடினார். பாவம் பார்ஸ்வ நாதர். அவ்வையின் அருட் கடாட்சம் அவருக்கு அதுக்கு மேல சித்திக்கவில்லை.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
ஆத்தின்னு அரபிச்சு இணைய டார்ஜான் மாதிரி ஆஹூன்னு கூவுக் கூவி அங்கே இங்கேன்னு அலைஞ்சு அவ்வையார் சைவரா பெள்த்தரான்னு விவாதிக்கும் இடத்தில் பாக்குக் கடிக்கிற நேரத்தில் ஒளவை ஒரு சமணர்னு முடிச்சுட்டீங்கஇன்னும் 20 நூற்றாண்டுகளுக்கு அரைத்த மாவையே அரைக்கவேண்டியதுதானா?
2014-05-02 19:47 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
சமண ஔவையின் ஆத்திசூடியைப் பார்த்து, ஆத்திசூடி இலக்கியம் என்றவழிநூல் மரபை உண்டாக்கியவர் இந்த சைவசித்தாந்தி ஔவை. பின்னர் பலர்பாடினர்
சமண அவ்வை மட்டும் ஆத்தி ச் சூடிய மட்டுந்தான் பாடினார். பாவம் பார்ஸ்வ நாதர். அவ்வையின் அருட் கடாட்சம் அவருக்கு அதுக்கு மேல சித்திக்கவில்லை.
osperous.
--
மறுபடியும் முதல்ல இருந்தா ?ஆத்திச் சூடிஅறம் செய்ய இரும்புஆறுவது காஃபிஎன எழுதிய அவ்வைக்கு இப்படி ஒரு குழப்பமான இடர்பாடா ?
தமிழின் முனைவர்கள் சமணர்களின் தமிழ்க் கொடையையும், ஆத்தி சூடி அமரும் தேவனையும் பற்றிச் சொல்லியுள்ளனர். தங்களுக்கு முனைவர்களின் ஆய்வுகள் பிடிக்கிறதா? - என அறியேன்.
விள்-விண்- சொல்லில் இருந்து பிறப்பது வடசொல் விஷ்ணு என்றும் பல மொழியியல் நிபுணர்கள் எழுதியுள்ளனர்.
N. Ganesan
On Saturday, May 3, 2014 1:51:46 AM UTC+8, N. Ganesan wrote:
தமிழின் முனைவர்கள் சமணர்களின் தமிழ்க் கொடையையும், ஆத்தி சூடி அமரும் தேவனையும் பற்றிச் சொல்லியுள்ளனர். தங்களுக்கு முனைவர்களின் ஆய்வுகள் பிடிக்கிறதா? - என அறியேன்.எனக்கு முனைவர்களின் ஆய்வு பிடிக்கும்.
எனக்கு முனைவர்களின் ஆய்வு பிடிக்கும்.
Is it so? MunaivarkaL have written about who Aaththi ChuuDi is. Pl. refer to researchers' works in journals,
that will also show viL-/viN- ti viSNu formation.
N. Ganesan
இன்னும் 20 நூற்றாண்டுகளுக்கு அரைத்த மாவையே அரைக்கவேண்டியதுதானா?சவடால்
ஔவை என்றால் மூத்த மெண்மணி எனப் பொருள். பல ஔவையார்கள் உண்டு.ஆத்திசூடி அமரும் தேவன் தீர்த்தங்கரைப் பாடும் ஔவையார் சமணர் என்பது மரபு.இவர் கல்வியொழுக்கம் என்ற நூலும் குழந்தைகளுக்காகச் செய்தவர். ஏராளமானசமணர் ஔவையின் சுவடிகள் கிடைப்பது கொங்குநாட்டிலே தான். பார்க்க:தமிழ்ப் பல்கலை (தஞ்சை) - ஔவையார் சுவடிகள்.BTW, சிவன் என்ற சொல்லே சங்க இலக்கியத்தில் இல்லை. சிவகதி என்றுமுதலில் தமிழில் சொல்பவர் சமணர். அங்கு நீங்கள் சொல்லும் சிவன் என்ற பொருள் இல்லை.
ஆத்திசூடி அமர்ந்த தேவன் படங்கள் அழகாக இருப்பது அதிசயமல்ல.ஆத்திசூடி திர்ர்த்தங்கரரை ஏத்தி ஏத்தித் தொழும் ஔவையின்நூலும் அழகானது. அதனால் தான் அவர் பின்னால் வந்த பல சைவர்கள்அவர் வழியில் பாடியுள்ளனர். சமணக் காப்பியம் தந்த சிந்தாமணிநூலைப் பார்த்துக் கம்பன் தன் காவியன் படைத்தான். அதுபோல,தமிழ் வளர பாதை போட்டுக் கொடுத்திருக்கிறார்கள் ஔவை, திருவள்ளுவர்,இளங்கோ அடிகள், சிந்தாமணி உடையார் தேவர், .. என்னும் சமணர்கள்.
ஆத்தி சூடி அமர்ந்த தேவனை ஏத்தி ஏத்திதொழுவோம் என்கிறார் அவ்வை. இங்கேயே மாணவருக்கு தெய்வ வழிபாடுசொல்லிவிட்டாள் ஔவைப் பாட்டி. அமர்ந்த தேவன் - ஆத்திலோகத்தில் (தாதகித்வீபத்தில்)அமர்ந்த தேவன் எனினும் அமையும்.அதனால் தான், ‘திருமாலுக்கு அடிமை செய்’ என்று நூலின் நடுமத்தியில் ஆத்திசூடியைமீண்டும் சொல்ல தேவையில்லை. சமணர்கள் போற்றும் திருமால் = அரசன்சொற்படி கேட்டு சட்டம், ஒழுங்குடன் வாழ் எனப் பள்ளிச் சிறார்களுக்குப் போதிக்கிறார்நூலின் இடையிலே. ஔவை எழுதியது கல்வியொழுக்கம், ஆத்திசூடி.
அப்பரடிகள் சமணர் ஆக இருந்த பெருமான். ஆத்திசூடி தீர்த்தங்கரர்ஞாபகத்தால் சண்டியின் hagiography-ல் சொல்கிறார்.
சுந்தரர் பாடலில் ஆத்தி இல்லை. பூத்துக்குலுங்கும் அழகான கொன்றை மலர்களைச் சடையில் அணிந்தஎனச் சுந்தரர் 8-ஆம் நூற்றாண்டில் பாடியுள்ளார். ’அலரால் அணிகொன்றை’ கொன்றை மரத்தை வர்ணிக்கிறார்.செர்ரி ப்லாஸம் போன்ற காட்சி. கொன்னைமரத்தில் பார்த்துப் பாடியுள்ளார் சுந்தரர். தேவாரத்தில் ஆத்தி அணிவதாகShiva's iconography எங்குமில்லை.
ஆத்திசூடி அமர்ந்த தேவனைஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே - ஔவை
ஆத்தியை தீர்தங்கரரும் சூடுகிறார். சிவனும் சூடுகிறார். சிவன் காலத்தால் தீர்த்தங்கரருக்கு முற்பட்டவர். அவ்வை யாரை ஆத்திசூடி என சொன்னாள் என அறிய நூலினுள்லே "திருமாலுக்கு அடிமை செய்" என தெளிவாக கொடுத்திருக்கிறாள். கடவுள் வாழ்த்தில் சிவன், நூலுக்கு உள்லே திருமால். சைவ-வைணா சண்டைகள் நிலவிய காலகட்டத்தில் மாணவர்களுக்கு இதை விட சிறப்பாக சமய பொறையை யாரும் கற்பித்திருக்க முடியாது.
பல அவ்வையார்கள் உண்டு. இன்றும் அவ்வை என பெயர் வைத்திருப்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால் ஆத்திசூடி, கொன்றைவேந்தன், புற்நானூற்று அவ்வைகள் எல்லாம் இந்துக்கள்.

--
கண்டுபுடீங்கய்யா கண்டுபுடீங்க

--
பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டா கொட்டைப்பாக்கு குடுக்கலாமாஅயோத்திதாசர் குறிப்பிட்ட கோவில் எங்குள்ளது
பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டா கொட்டைப்பாக்கு குடுக்கலாமாஅயோத்திதாசர் குறிப்பிட்ட கோவில் எங்குள்ளது
பரிகசிப்பதையும் விட, சுயமாகவே தேடிக் கண்டுபிடிக்க முடிந்தவர்கள் இப்படி அடிக்கடி அடுத்தவர்களைச் சீண்டுவதை, தங்களைப் போன்றோர், உள்குத்து என்று வர்ணிப்பார்கள். நான் அப்படிச் செய்ய மாட்டேன். நன்றி.
--
நல்லா கவனமா பாத்து எழுதுங்க, கணேசரு.ரெண்டு படத்துலயும் இருக்கறது ஏழுதல நாகம்.நிக்கிறது ஆத்தி சூடியில்லை; அரவம் சூடிதேவ்
ஆத்தாடி.. ஆத்தியை சொந்தம் கொண்டாட இத்தனை போட்டியா ?
அப்படியெனில் முதலில் ஆத்தி மரம் பற்றி அறிந்து கொள்ள..
http://en.wikipedia.org/wiki/Bauhinia_racemosa
http://www.flowersofindia.net/catalog/slides/Bidi%20Leaf%20Tree.html
http://en.wikipedia.org/wiki/Bauhinia
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF
http://www.britannica.com/EBchecked/topic/88099/Caesalpiniaceae
https://www.pinterest.com/pin/142918988144905026/
http://karkanirka.org/2009/04/23/99tamilflowers_71_80/
http://www.britannica.com/EBchecked/topic/199651/Fabaceae
//இது கடல் மட்டத்தில் இருந்து 1650 மீட்டர் வரை உயரமான இடங்களில் இந்தியா எங்கும் காணப்படுவதுடன், இலங்கை, சீனா, திமோர் ஆகிய நாடுகளிலும் இது பரவலாக உள்ளது//
கடல் மட்டத்தில் இருந்து;சென்னை 20 மீட்டர்; கோவை 1300 அடி; நீலகிரி 7350 அடி; பெங்களூரு 3100 அடி; மைசூர் 2476 அடி; பெல்லாரி 1479 அடி; ஷிமோகோ 1800 அடி;
//இம் மரத்தின் பட்டை, தலைவலி, காய்ச்சல், தோல் வியாதிகள், கட்டி, இரத்த நோய்கள், வயிற்றுப்போக்கு போன்றவற்றைக் கட்டுப்படுத்துவதற்காக உள்ளூர் மக்களால் பயன்படுத்தப்படுகின்றது. இது நுண்ணுயிரெதிர்ப்புப் பொருட்களுக்கான மூலமாகப் பயன்படக்கூடும் எனவும் ஆய்வுகள் காட்டுகின்றன//
பெரும்பான்மை துறவிகள், யோகிகள், முனிவர்கள்.. மருத்துவத்தை பயன்படுத்தும் வழக்கமுள்ளவர்கள். அவர்களை கடவுள் என சொல்லும் உரிமை யாருக்கு வேண்டுமானாலும் உள்ளது. ஆனால் நிச்சயமாக கடவுள்கள் இல்லை.
//இந்தியாவின் சில பகுதிகளில் இதன் இலை பீடி சுற்றுவதற்குப் பயன்படுகிறது.//
சோம பானம், சுராபானம், கஞ்சா - இதெல்லாம் சிவனோடு தொடர்பு படுத்தப்பட்டவை.
பீடி ??இப்போது தொடரலாம்..
பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டா கொட்டைப்பாக்கு குடுக்கலாமாஅயோத்திதாசர் குறிப்பிட்ட கோவில் எங்குள்ளதுகணேசர் ஐயா கன்னியா குமரியில் உள்ள ஒரு கிராம தேவதையின் கோவிலைக் குறிப்பிடுகிறார்சோழ நாட்டில் குறிப்பாக நாகபட்டினம் பகுதியில் பெளத்த விஹாரங்கள் அதிகம்அவர் அனுமானிக்கும் அவ்வையார் ஒரு பெளத்தர் என்பதற்கு ஆதாரம் உள்ளதா என்று பார்க்க உதவுமேசவடால்
On Sat, May 3, 2014 at 8:53 AM, Geetha Sambasivam <geetha...@gmail.com> wrote:
அவருக்கு ஆத்தியாத் தெரிஞ்சா தெரியட்டுமே! :))))எங்களுக்குப் பாம்பா இல்ல பழுதான்ன்ணு தெரியவேணாங்களா தாயிஎல்லாம் மாயைதானா பாட்டு காதுல கொஞ்சம் பூவோடசவடால்
2014-05-02 9:27 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
ஆத்திசூடி அமர்ந்த தேவன் படங்கள் அழகாக இருப்பது அதிசயமல்ல.ஆத்திசூடி திர்ர்த்தங்கரரை ஏத்தி ஏத்தித் தொழும் ஔவையின்நூலும் அழகானது. அதனால் தான் அவர் பின்னால் வந்த பல சைவர்கள்அவர் வழியில் பாடியுள்ளனர். சமணக் காப்பியம் தந்த சிந்தாமணிநூலைப் பார்த்துக் கம்பன் தன் காவியன் படைத்தான். அதுபோல,தமிழ் வளர பாதை போட்டுக் கொடுத்திருக்கிறார்கள் ஔவை, திருவள்ளுவர்,இளங்கோ அடிகள், சிந்தாமணி உடையார் தேவர், .. என்னும் சமணர்கள்.
திருமாலுக்கு அடிமை செய் என தம் பிள்ளைகளுக்கு கற்பிப்பது சமணர் வழக்கமா?
--
2014-05-02 9:17 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
ஔவை என்றால் மூத்த மெண்மணி எனப் பொருள். பல ஔவையார்கள் உண்டு.ஆத்திசூடி அமரும் தேவன் தீர்த்தங்கரைப் பாடும் ஔவையார் சமணர் என்பது மரபு.இவர் கல்வியொழுக்கம் என்ற நூலும் குழந்தைகளுக்காகச் செய்தவர். ஏராளமானசமணர் ஔவையின் சுவடிகள் கிடைப்பது கொங்குநாட்டிலே தான். பார்க்க:தமிழ்ப் பல்கலை (தஞ்சை) - ஔவையார் சுவடிகள்.BTW, சிவன் என்ற சொல்லே சங்க இலக்கியத்தில் இல்லை. சிவகதி என்றுமுதலில் தமிழில் சொல்பவர் சமணர். அங்கு நீங்கள் சொல்லும் சிவன் என்ற பொருள் இல்லை.
பல அவ்வையார்கள் உண்டு. இன்றும் அவ்வை என பெயர் வைத்திருப்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால் ஆத்திசூடி, கொன்றைவேந்தன், புற்நானூற்று அவ்வைகள் எல்லாம் இந்துக்கள்.
சிவன் என்ற பெயர் இல்லாவிட்டால் என்ன?
சங்க இலக்கியங்களில் சிவன் முழுமுதற்கடவுளாக வேறு பெயர்களில் அறியபடுகிறார்
உதா:
இமையவில் வாங்கிய ஈர்ஞ்சடை யந்தணன் (கலித்தொகை)
முக்கண்ணான் (கலித்தொகை 2)
நீலமணிமிடற் றொருவன் (புறநானூறு. அவ்வையார் பாடல்)
நீணிமிர்சடை முது முதல்வன் (புறநானூறு)
நீலமணி வாலிழை பாகத்து ஒருவன் (ஐன்குறுனூறு)
இதுபோக நந்தி, உமையாள், கார்த்திகை பெண்கள் அனைத்தும் சங்க தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடபடுகின்றன. ஆக சிவன் தமிழரின் தொல்தெய்வம் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது.
அயோத்திதாசர் மாயையாய் எல்லாம் பௌத்தம் என்று எழுதியுள்ளார்.ஆனால், அவை சமண சமயம் என்று பேராசிரியர்கள் (சுவெலெபில்) போன்றோர்ஆராய்ந்து காட்டியுள்ளனர். ஆத்திசூடி தீர்த்தங்கரரே, புத்தர் அல்லர்

The pipal tree or asvatta (Ficus religiosa) has had a conspicuous position in the cultural landscape of north India and human collective memory for more than 5,000 years. It was depicted even on Mohenjo Daro seals. Buddha himself found enlightenment under a pipal tree (Mansberger, 1988). Buddha is reported to have been born in a sacred grove, Lumbinivana, full of sal trees (Gadgil, 1985).
For Hindus the bel tree, Aegle marmelos, is associated with Shiva, tulasi with Vishnu, and fig (Ficus glomerata) with Dattatreya, the son of Trimurty.
Nakeera, the Tamil poet of the Sangam period, states that Lord Muruka could be found in the forest, in a place surrounded by water, rivers, tanks, meeting places under trees, new-grown groves, etc. The kadampa tree is likened to Lord Muruka himself. Sangam tradition holds that he is the owner of all the hilly tracts with rich groves (Ramachandran, 1990). Ayyappa, Aiyanar and Sasta (all considered to be the same) of south India is essentially a deity of the woods, whose province is to guard the fields, crops and herds of the peasantry and to drive away their enemies.
No temples existed in India during the Vedic period. They were not to be found in the pre-Buddhist period except for wooden ones. The ancient Buddhist sacred place was the stupa(Hastings, ed., 1934). The various gods and goddesses whom the indigenous population of peninsular India worshipped were not accustomed to dwell in the secluded atmosphere of temples; they loved the open air. Even today, for the gramadevata (village goddess) of south India there are no temples in many villages. The deity may be in the shadow of a big tree. Generally they are lodged in small shrines. In a good number of villages no object is placed to represent the deity and the tree itself is regarded as the embodiment of the deity.
An interesting stage in the transformation of the sacred tree into the anthropomorphic form was observed by the Italian traveller Della Valle, who visited India in 1623–25. He found in Surat the worship of Parvati in the form of a tree. Her face was painted on the tree and offerings were of vegetable origin (Wheller and Macmillan, 1956).
ஹிஹிஹிஹி, பாம்பும் இல்லை, பழுதையும் இல்லைனு நினைக்கிறேன். எல்லாம் மாயை தான்.
2014-05-03 15:36 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
அயோத்திதாசர் மாயையாய் எல்லாம் பௌத்தம் என்று எழுதியுள்ளார்.ஆனால், அவை சமண சமயம் என்று பேராசிரியர்கள் (சுவெலெபில்) போன்றோர்ஆராய்ந்து காட்டியுள்ளனர். ஆத்திசூடி தீர்த்தங்கரரே, புத்தர் அல்லர்ஆத்தி சூடி என்பதில் சிவனா தீர்த்தங்கரரா என்று நீங்கள் விவாதித்துக்கொண்டே இருங்கள்ஆத்தி சுவட்டில் என்பது மரத்தடியில் அமர்ந்த என்ற பொருளைத்தான் தரும்
கல்லாலம் - கல்லாத்தி மரத்து நிழலில் அமர்ந்த தேவன் என்பதும் ஆத்தியைச் சூடியுள்ளதாக நீங்கள் தீர்த்தங்கரருக்கு இட்டுக்கட்டுவதும் ஒன்றல்ல. கோவில்கள் உருவாகும் முன் எல்லாத் தெய்வங்களும் மரத்தடியில்தான். எந்த மரத்தடியில் என்று இயம்புவதே ஸ்தல புராணம்
நாங்க ஜில் ஜில்லுன்னு ஒரு ஓரமா ஆடுறோமுன்னு எங்கள ஆட்டத்தில சேத்தாம கமில் ஸ்வெலபில் போன்ற பெரிய ஆட்டக்காரர்களை மட்டும் காட்டாதீங்க. அவரு எங்க பலகலைக்கழகத்துக்கு வந்து ஓரமா இருந்து தமிழ் கற்றவர்தானே ஐயா. அவருடைய அகராதியில் அவ்வையாரைப்பற்றி என்ன எழுதியிருக்கிறார் என்பதை இங்கே எடுத்து விடுங்க ஐயா கொஞ்சம்
உங்களிடமா கமில் சுவலெபில் தமிழ் கற்றார்? சென்னைப் பல்கலையிலா அவர் தமிழ் படித்துப் பட்டம் வாங்கினார்?
இதென்ன பச்சப்புள மாதிரி முகத்தை வச்சிக்கிட்டு கைப்பிள்ளகிட்டக் கேள்வி கேட்டுக் கலாய்க்கிறீங்க
ஆத்திமரத்தில் ஆத்திசூடி ஞானம் பெற்றார் என்பது சமணர்கள் 2300 வருஷமாக இயம்புவது சவடால் ஐயா
On Friday, May 2, 2014 11:26:34 AM UTC-7, ஜீவ்ஸ் wrote:On 3 May 2014 02:19, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:எனக்கு முனைவர்களின் ஆய்வு பிடிக்கும்.
Is it so? MunaivarkaL have written about who Aaththi ChuuDi is. Pl. refer to researchers' works in journals,
that will also show viL-/viN- ti viSNu formation.
N. Ganesan yes yes. பரிந்துரைத்தமைக்கு நன்றி ஜி. ஆனால் அவர்கள் யாரும் கேள்வி கேட்டவர்களிடம் “ நீ முனைவரா” “ ஐயா முனைவரே” என்று கிண்டல் செய்திருந்தால் அவர்களின் ஏட்டைப் படிப்பது கசுட்டம். . அப்படி ஏதும் எள்ளல் புரியாதவர்களின் ஆக்கங்கள் தேடிப் படித்துக் கொண்டு தான் ஐயா இருக்கிறேன். எனினும் மீண்டும் ஒரு முறை பரிந்துரை செய்ததற்கு நன்றி பல.முனைவர்களின் ஆராய்ச்சிகளைப் படித்தல் நல்லது. அவர்களுக்கு நன்மை புரியும் அல்லவா?நா. கணேசன்
சவடால்
Note the totemic tree connected with Parsva - the Aaththi/Dhaataki tree.It is not found on Siva's iconography in early texts such as Tevaram.N. Ganesan
அலங்காரமான ஆத்தி/தாதகி நீழலில் அமரும் தேவன்http://prafulla.net/graphics/god-and-goddess/shri-shankeshwar-tirth-and-shree-parsvanath-bhagwan-and-stuti-from-youtube/
On Thursday, May 1, 2014 9:38:42 PM UTC-7, N. Ganesan wrote:
ஆத்திசூடி அமர்ந்த தேவனைஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே - ஔவை
- இதனை முதல்நூலாகக் கொண்டு ஆத்திசூடி இலக்கியம் என்று பலர் செய்கிறார்கள். ஆத்தி/தாதகி மரத்தின் அடியில் அமர்பவர் பார்சுவநாதர். இந்தியாவில் 2000 ஆண்டுகளுக்கு மேலாக ‘ஆத்திசூடி அமரும் தேவன்’ இருக்கிறார். பாம்புக் குடை இருக்கும். பூசைக் காலங்களில் முடிமீதோ, கழுத்திலோ, திருவடிகளிலோ ஆத்திசூடலாம். சில பழைய சிற்பம், சித்திரம் ஆத்திசூடி தீர்த்தங்கரரைப் பார்ப்போம். பெருமாளுக்கு துளசி, சிவனுக்கு கொன்றை, விநாயகருக்கு அறுகு, முருகனுக்குக் கடம்பு, ... என்பதுபோல இந்த தீர்த்தங்கரருக்கு ஆத்தி.பார்சுவநாதர், நேமிநாதரை அடுத்துத் தோன்றியவர். கி.மு.எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். 23ஆவது தீர்த்தங்கரர். இவர், அரச குலத்தில் தோன்றியவர். நூறு ஆண்டுகள் உயிர் வாழ்ந்தவர். முப்பது ஆண்டுகள் இல்லற வாழ்வு நடத்தினார்; எழுபது ஆண்டுகள் துறவு வாழ்வு மேற்கொண்டார். உயிர்க் கொலை, சாதிப் பாகுபாடு இவற்றைக் கடுமையாக எதிர்த்தார்.
ஆத்திசூடி அமரும் தேவன் (தீர்த்தங்கரர்)
நீங்கள் கொடுத்த இரண்டு படங்களிலும் தலையில் சூடியிருப்பது பாம்பு தான். நன்றாக உற்று கவனித்துப் பார்க்கவும். தயவு செய்து.அரவஞ்சூடி தீர்த்தங்கரைப் போற்றித் தொழுவோம்.
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே - ஔவை
Note the totemic tree connected with Parsva - the Aaththi/Dhaataki tree.It is not found on Siva's iconography in early texts such as Tevaram.N. Ganesan
பழைய ஓவியங்களில், ஆத்தியும் ஆத்திசூடியும்:
இந்தப் படத்திலும் தலையில் சூடப்பட்டிருப்பது அரவம் தான்.
அரவஞ்சூடி தீர்த்தங்கரைப் போற்றித் தொழுவோம் யாம்.
பல படங்களில் ஆத்திசூடி இருக்கிறார். அவரை ஆயிரம் ஆண்டுகளுக்குமேலாய் ஔவை குரத்தியும், எல்லாப் பள்ளிகளிலும் கோடிக்கணக்கானதமிழ்ச் சிறார்கள் தொழுது கல்வியை ஆரம்பிக்கிறார்கள்.அரவஞ்சூடி தீர்த்தங்கரைப் போற்றித் தொழுவோம் யாம்.யாரை வேண்டுமானாலும் தொழுக. ஆத்திசூடியை தமிழர் தொழுதல் வரலாறு,நா. கணேசன்
2014-05-04 0:44 GMT+08:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
பல படங்களில் ஆத்திசூடி இருக்கிறார். அவரை ஆயிரம் ஆண்டுகளுக்குமேலாய் ஔவை குரத்தியும், எல்லாப் பள்ளிகளிலும் கோடிக்கணக்கானதமிழ்ச் சிறார்கள் தொழுது கல்வியை ஆரம்பிக்கிறார்கள்.அரவஞ்சூடி தீர்த்தங்கரைப் போற்றித் தொழுவோம் யாம்.யாரை வேண்டுமானாலும் தொழுக. ஆத்திசூடியை தமிழர் தொழுதல் வரலாறு,நா. கணேசன்ஐயன்மீர்,இது ஆய்வுக்கான பதில் இல்லையே. நீங்கள் ஆத்திச் சூடி என்று படங்களை வாரி வாரி அளித்தீர்கள். அவற்றில் இருப்பவை அனைத்தும் அரவம். அப்படியானால் ஆத்திச்சூடி எப்படி தமிழர் தொழுதலின் வரலாறு என்று போதிய ஆதாரம் அல்லவா தாங்கள் அளிக்க வேண்டும். அது விடுத்து... நீ என்னான்னா பண்ணிக்கோ நான் சொல்றது தான் சரி என்பது எப்படி ஒரு ஆய்வின் முடிவாக ஏற்க முடியும்?இன்ன இன்ன காரணங்கள் - இன்ன இன்ன அனுமானங்கள்.. அவற்றிற்கு இன்ன இன்ன ஆதாரங்கள் ஆகவே முடிவு என்பது இது என்று ஆணித்தரமாகச் சொல்ல வேண்டியது அல்லவா ஆய்வு என்று நான் இதுகாறும் எண்ணிக் கொண்டிருக்கிறேன். கொஞ்சம் விளக்கமாக பதில் சொல்லுங்கள்.
அயோத்திதாசர் கூற்றின் ஆத்திசூடியாய்புத்தர் இல்லை. தீர்த்தங்கரர் ஆத்தியில் ஞானம் பெற்றார், புத்தர் போதியில் ஞானம் என்பது வரலாறு.
----
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/k8FteCwW5uE/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.
இதில் ஆத்தி எங்கே சூடி இருக்கிறார்
சிற்பங்களில் ஆத்திசூடி இருக்கிறார். பார்க்கவும். அப்படித்தான் ஆராய்ச்சியாளர்கள்எழுதியுள்ளனர்.நா. கணேசன்
சூடி என்பதற்கு “மரத்தடியில் அமர்தல்” என்று அர்த்தம் தொனிக்கும் வகையில் இருக்கும் ஆதாரங்களை அவர்கள் அளித்தால் அவை உங்களின் வாதத்திற்கு வலு சேர்க்கும்
நேரடியான ஆதாரங்களை - உண்மையான முனைவர்கள் எழுதியது தான் - கொடுத்துள்ளேன்.
போதிசூடியாக புத்தர் விளங்குகிறார். ஆத்திசூடியாக தீர்த்தங்கரர் விளங்குகிறார் என்பது வரலாறு.
2014-05-04 1:48 GMT+08:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
போதிசூடியாக புத்தர் விளங்குகிறார். ஆத்திசூடியாக தீர்த்தங்கரர் விளங்குகிறார் என்பது வரலாறு.புத்தரை போதுசூடி என்று எங்கே அழைக்கப் பட்டிருக்கின்றது ? . இது தங்களின் யூகமா ? அல்லது ஆய்வாளர்களின் கருத்தா ? சங்க இலக்கியங்களில் குறிப்பேதும் உண்டா?
ஆன்மிக அடையாளங்களையும், சின்னங்களையும் குறித்து இப்படி ஒரு விவாதம் நடப்பது வியப்பு !!
--
வழக்கமான பாணியில் திரும்பத் திரும்ப கையப் புடிச்சு இழுத்தியா வேண்டாமே ? எல்லாரும் படிச்சுட்டு இருக்காங்க. சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லிட்டிருக்கீங்க. கேள்விகள் புரியலையா இல்லை பதில் தெரியலையா ? இல்லை மொழி அறிஞர்களிடம் ஏதும் கேட்டுப் பார்க்கனுமா ?
இதுவும் அதே பழைய பாணி எஸ்கேப்பிசம். நல்லாருக்குங்க உங்க ஐடியா :))))))
உங்க பாணி எஸ்கேப்பிசம் நிறைய இருக்கு. ஆத்திசூடி தீர்த்தங்கரர் சிற்பங்களில்,ஓவியங்களில் ஆத்தி இல்லை, ஆத்தியில் ஞானம் அவருக்குக் கிடைக்கலைன்னுஆராய்ச்சிக் கட்டுரை எழுதுங்க விரைவில். முனைவர்கள் படிப்பார்கள்.போதுசூடியாய்புத்தர் இருக்காரா என்றும் ஆராய்ச்சி செய்வோம்.நா. கணேசன்
நீங்கள் தந்த சுட்டிகளில் பாம்பு மட்டுமே உள்ளது. நீங்கள் கொடுத்த சுட்டியே ஆதாரம். வேறென்ன வேண்டும் ? ஒரு முறை நீங்கள் தந்த சுட்டியை ஊன்றி கவனித்து அதில் இருக்கும் படத்தைப் பாருங்கள். :)))))))


--

On Saturday, 3 May 2014 10:43:30 UTC-7, Prakash Sugumaran wrote:ஆன்மிக அடையாளங்களையும், சின்னங்களையும் குறித்து இப்படி ஒரு விவாதம் நடப்பது வியப்பு !!
ஆன்மிக அடையாளங்களை மாற்றவோ, அவமதிப்பதோ நோக்கமில்லை.அதில் தகிடுதத்தம் எதற்காக ? ரிஷபரின் தீக்ஷா தரு ஆல மரம்என்பதில் விவாதம் இல்லை. சிவபெருமானுக்கு மட்டுமே அதுஆன்மிக அடையாளம் என்றும் விவாதிக்கவில்லை. பார்சுவரின்தீக்ஷா தரு எது என்பதில் விவாதிக்க இடமுள்ளதால் அதைச்செய்ய நேர்கிறது. முந்தைய வினா ஒன்றைப் பாருங்கள் -ஆத்தி சூடி அமர்ந்த தேவனைஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே.On Monday, 28 April 2014 20:14:46 UTC-7, N. Ganesan wrote:ஆத்தி சூடி = ஆத்தி கவிகையாய் கவிந்து இருக்கும் தீர்த்தங்கரசாமி.ஆல இலை கவிகையாய்க் கவிந்து இருக்கும் தீர்த்தங்கரசாமிஇருக்கிறார்; சால இலை கவிகையாய்க் கவிந்து இருக்கும் தீர்த்தங்கரசாமிகளும்உண்டு. முக்கியமாக மஹாவீரர் சால மரக் கவிகை சூடி இருக்கும்தீர்த்தங்கரசாமி ஆவார். அவரை இதுபோல் ஏத்தி ஏத்தித் தொழும்பாடல் உள்ளதா ?அரவஞ்சூடி தீர்த்தங்கரசாமி -

தேவ்
>ஆத்தி சூடி அமர்ந்த தேவனைஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே.
சிவ பெருமானை தேவன் என்று குறிப்பிடும் வழக்கம் உண்டா.தேவர் குறள் என்றும் திருத்தக்க தேவர் என்றும் உண்டு.
சிவ பெருமானை தேவன் என்று குறிப்பிடும் வழக்கம் உண்டா.தேவர் குறள் என்றும் திருத்தக்க தேவர் என்றும் உண்டு.
2014-05-03 15:02 GMT-05:00 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
சிவ பெருமானை தேவன் என்று குறிப்பிடும் வழக்கம் உண்டா.தேவர் குறள் என்றும் திருத்தக்க தேவர் என்றும் உண்டு.
சிவபெருமான் பெயர் மஹாதேவன்
ஹர ஹர மஹாதேவா என்பதும் சிவனையே
திருமாலுக்கு அடிமை செய் என தம் பிள்ளைகளுக்கு கற்பிப்பது சமணர் வழக்கமா?ஆம். திருமால் என்றால் அரசன். ராஜாங்க சட்டதிட்டங்களின் படி வாழ்க என்பது சமணர்கள் வழக்கம்தான்.க்ஷத்திரியர்களின் மேன்மை சொல்வது சமணம். அரசாங்கத்தை எதிர்த்து வாழ் என்று சமணரோ, புத்தரோபோதிக்கவில்லை.
உலகில் மனிதன் அடிமையாக கூடிய ஒரே வழி அன்புக்கு மட்டும் தான்.
அரசு அதிகாரிகளுக்கு குடிமக்களை அடிமையாக்கும் ஸ்லேவரி முரையை அவ்வையார் பிள்லைகளுக்கு எப்படி போதிப்பார்?
நந்தி எந்த சங்க இலக்கியத்தில் பார்த்தீங்க?மேலே சொன்ன கடவுள் வாழ்த்துக்கள் எப்போது யாரால் தொகுக்கப்பட்டன? சங்க இலக்கிய தொகைநூல் வரலாறு படிக்கலாமே.அவ்வாறு தாங்கள் செலவிடும் நேரம் உதவலாம்.
| புறனானூற்று கடவுள் வாழ்த்தில் நந்தி குறிப்பிடபடுகிறது கண்ணி கார்நறுங் கொன்றை காமர் வண்ண மார்பின் தாருங் கொன்றை ஊர்தி வால்வெள் ளேறே சிறந்த சீர்கெழு கொடியும் அவ்வே றென்ப உரை : கண்ணி - திருமுடிமேற் சூடப்படுங் கண்ணி;கார் நறுங் கொன்றை - கார்காலத்து மலரும் நறிய கொன்றைப்பூ; காமர் வண்ண மார்பின் தாரும் கொன்றை - அழகிய நிறத்தையுடைய திருமார்பின் மாலையும் அக்கொன்றைப்பூ; ஊர்தி வால் வெள்ளேறு - ஏறப்படுவதுதூய வெளிய ஆனேறு; சிறந்த சீர் கெழு கொடியும் அவ் ஏறு என்ப - மிக்க பெருமைபொருந்திய கொடியும் அவ்வானே றென்று சொல்லுவர்; புறநானூற்றை யார் தொகுத்தார்களோ, அவர்கள் தான் இதையும் தொகுத்தார்கள். சங்க இலக்கியத்தில் சிவபெருமான் குறிப்பிடபடும் ஏராளமான இடங்களை பட்டியலிட்டு, பொருளோடு இட முடியும். சங்க இலக்கியத்தில் சிவனே கிடையாது என சொல்கிறீர்களா இல்லை சிவன் என்ற சொல் மட்டும் கிடையாது என சொல்கிறீர்களா என முதலில் தெரியபடுத்தவும். அதை விரிவாக விவாதிப்போம். அல்லது சங்க இலக்கியத்தில் சிவன் இருப்பதை ஒத்துகொண்டால் வேறு பாயின்டுக்கு நகரலாம். சங்க இலக்கியத்தில் சிவன் என்ற வார்த்தை பிரயோகம் இல்லை. ஆனால் சிவபெருமான் வேறு பெயர்களில் அழைக்கபடுகிறார் | |
|
|
ஒரு கும்பெனியில் பலர் அடிமைகளாய் தொண்டு புரிகின்றனர்.அது அன்பினாலா?
அரசுக்கும், அரசு சட்டதிட்டங்களுக்கும் பணியாதே என்றா ஔவை சொல்லிக் கொடுப்பார்?
ஒருவர் பிடிக்கப்படுவதனாலோ, விலைக்கு வாங்கப்படுவதனாலோ, அல்லது பிறப்பினாலோ அடிமையாகிறார். அவ்வாறு அடிமையானவருக்கு, இத் தளையில் இருந்து விடுபடும் உரிமையோ, வேலை செய்ய மறுக்கும் உரிமையோ அல்லது தமது உழைப்புக்கான ஊதியம் பெறும் உரிமையோ கிடையாது.
2014-05-03 16:03 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
ஒரு கும்பெனியில் பலர் அடிமைகளாய் தொண்டு புரிகின்றனர்.அது அன்பினாலா?
அடிமையாக பணிபுரிவது சட்டவிரோதம்.
2014-05-03 16:05 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
அரசுக்கும், அரசு சட்டதிட்டங்களுக்கும் பணியாதே என்றா ஔவை சொல்லிக் கொடுப்பார்?
அடிமையாக இரு என சொல்வதும் "சட்ட திட்டங்களுக்கு கட்டுபடு" என சொல்வதும் ஒன்றா?
அடிமை எனும் சொல்லின் பொருள் என்ன?
அப்டியா? கம்பெனி வேலை அடிமை வேலை என்கிறார்கள் பலர்.
அடிமைச்சீட்டு, -முறி, a bill of sale for a slave.
அடிமைத்தனம், bondage, slavery.
அடிமைப்பட, to become a slave.
அடிமைப்படுத்த, to enslave.
அடிமையை மீட்க, to redeem a slave, to set at liberty.
அடிமை வியாபாரம், slave trade.
2014-05-03 16:31 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
அப்டியா? கம்பெனி வேலை அடிமை வேலை என்கிறார்கள் பலர்.
அப்படி சொல்லுவது நெகடிவ் கண்ணோட்டத்தில். முதலாளி தன்னை கொடுமைபடுத்துகிறான் என்ற கண்ணோட்டத்தில் தான். முதலாளி நன்றாக நடத்தும் பட்சத்தில் தொழிலாளிகள் அப்படி புலம்ப போவது கிடயாது.
இப்படி ஒரு இழிநிலைக்கு மாணவர்களை செல்ல அவ்வை தூன்டுவாரா? எல்லாரும் மன்னனுக்கு அடிமையாக இருங்கள் என்ற தவறான அறிவுரையை அந்த பெருமாட்டி மாணவர்களுக்கு போதிப்பாரா> ஸ்லேவரி எனும் இழிவான முறையை அவ்வை எப்படி ஆதரித்து இருப்பார்?
2014-05-03 16:37 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
அடிமை - Servant, devotee; தொண்டன்.
முழு பொருள்அடிமை
s. slavery தொண்டு; 2. a slave, devotee, தொண்டன்.அடிமைச்சீட்டு, -முறி, a bill of sale for a slave.அடிமைத்தனம், bondage, slavery.அடிமைப்பட, to become a slave.அடிமைப்படுத்த, to enslave.அடிமையை மீட்க, to redeem a slave, to set at liberty.அடிமை வியாபாரம், slave trade.
இறைவனுக்கு அடிமைபடுபவர்களை தான் தொண்டர்கள், இறைதொண்டர்கள், இறையடியார்கள், மாலடிமை, இராமானுஜதாஸன் என அழைக்கிறோம்
மன்னனுக்கு அடிமையாகிரவர்கள் வெறும் ஸ்லேவ்ஸ் தான்.
ஸ்லேவரி சொல்லலை ஔவை. தொண்டு அரசனுக்குத் தொண்டு ஆற்றச் சொல்கிறாள். அரசின்சட்டதிட்டங்களின் கீழ்ப்படிந்து அடிமை (=தொண்டு) ஆக விளங்கு என்கிறாள்.
ஏன்? அரசனுக்கு தொண்டர்கள், அணுக்கத் தொண்டர்கள், படைத் தொண்டர்கள், ராஜாங்க தொண்டர்கள்,அறிவுரைக்க தொண்டர்கள் எல்லாம் உண்டு. பலகலைகளும் வல்ல அணுக்கி தொண்டர் இசை, நாட்டியம் போன்றவற்றால்பல தொண்டுகள் அரண்மனைகளில் செய்தனர். இவ்வகைத் தொண்டுகள் கோவில் என்றுகடவுள்களுக்கும் ட்ரான்ஸ்பர் ஆச்சு.
2014-05-03 16:41 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
ஸ்லேவரி சொல்லலை ஔவை. தொண்டு அரசனுக்குத் தொண்டு ஆற்றச் சொல்கிறாள். அரசின்சட்டதிட்டங்களின் கீழ்ப்படிந்து அடிமை (=தொண்டு) ஆக விளங்கு என்கிறாள்.
அடிமை தொன்டூழியமும் செய்வான் என்பது உண்மைதான்.
ஸ்லேவ்ஸ் ஆல்ஸொ டு சர்விஸ்
ஸ்லேவரி பன்டைய தமிழகத்திலும் வழக்கில் இருந்தது. அமெரிக்காவில் கிரேக்கத்தில் மட்டும் தான் அடிமைகள் இருந்தார்களா என்ன?