தினம் ஒரு குறள்

257 views
Skip to first unread message

KKSR

unread,
Feb 16, 2018, 11:05:08 PM2/16/18
to vall...@googlegroups.com

இனிய காலை வணக்கம்!


தினம் ஒரு குறள் 


அதிகாரம் - கல்லாமை


அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய 

நூலின்றிக் கோட்டி கொளல்.


ஆடுகளம் இன்றி ஆடுபொருள் கொண்டு ஆடுவதுபோல, முழுமை அறிவு பெறாது சபையின்கண் பேசுவது கல்லாமை ஆகும்.


பேச்சு வழக்கில் பழமொழிகள் வந்ததற்குக் காரணமாக இருந்தது, மூத்தோர் முழங்கிய மூதுரைகள் யாவருக்கும் சென்றடைய வேண்டும் என்ற உயரிய நோக்கமும்,


அத்தகைய மேற்கோள்கள் திரும்பத் திரும்பப் பழக்கத்தில் இருக்கும் போது, அதுவே செயலில் வெளிப்படும் ஆற்றலும் உடைத்து.  ஆகையால், பழமொழிகள் நிலைபெற்றன.


அத்தகைய ஒரு மேற்கோளை இன்றைய குறளில் கையாளுகிறார் தெய்வப் புலவர் வள்ளுவர்.  


இதிகாச காலந்தொட்டு இன்றைய காலம் வரை, தாயம் உருட்டுதல் விளையாட்டு வழக்கத்தில் இருக்கிறது.  அத்தகைய விளையாட்டிற்கு, அடிப்படையாக இருப்பது விளையாட்டு வரைபடமும்; விளையாட்டை நகர்த்த உதவும் கருவியான தாயக்கட்டை எனும் உருட்டையும்.  இதில், ஏதேனும் ஒன்றை மட்டும் வைத்து விளையாடுவது என்பது விளையாட்டு ஆகா.  அது அறிவார்ந்த செயலும் இல்லை.


இதனைக் கல்லாமையோடு ஒப்பிடுகிறார் இருவரி ஞானி.  


கற்க வேண்டிய நூல்களை முழுமையாகக் கற்று, அறிவில் தேர்ச்சி பெறாமல், மக்கள் கூடி இருக்கும் சபைமுன் பேசுவதென்பது, கல்லாமை ஆகும் என்றும், 


அத்தகைய செயல், ஆடுகளம் இல்லாது ஆடுபொருள் மட்டும் கொண்டு அரைகுறை ஆட்டம் ஆடுவது போன்றது என்று ஒரு உவமையைச் சுட்டிக்காட்டி,  


கல்லாமையை விளக்குகிறார் வள்ளுவர்.


இன்னும் எளிமையாக விளக்க வேண்டும் என்றால்,


ஆடத் தெரியாதவர் தெருக்கோணல் என்று சொன்னால் எப்படியோ, அதுபோலவே அறிவிலார் பேசும் அரைகுறைப் பேச்சு ‘கல்லாமை’ யின் விளைவு என்று சொல்கிறார்!


- சுரேஜமீ 



--
Sent from Mobile

வேந்தன் அரசு

unread,
Feb 17, 2018, 10:01:31 AM2/17/18
to vallamai
கோட்டி என்றால் என்னவெனத்தெரியலை? அச்சொல்லை  பழகுதமிழில் எப்படி பயனாக்கலாம்?

Megala Ramamourty

unread,
Feb 17, 2018, 10:37:52 AM2/17/18
to vallamai
வேந்தரே... இப்போது நாம் ’கோஷ்டி’ என்று சொல்லுகிறோமே அதைத்தான் வள்ளுவர் ’கோட்டி’ என்று குறிப்பிடுகின்றார்.  :-)

அன்புடன்,
மேகலா

On Sat, Feb 17, 2018 at 10:01 AM, வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> wrote:
கோட்டி என்றால் என்னவெனத்தெரியலை? அச்சொல்லை  பழகுதமிழில் எப்படி பயனாக்கலாம்?

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

வேந்தன் அரசு

unread,
Feb 17, 2018, 1:50:08 PM2/17/18
to vallamai


17 பிப்ரவரி, 2018 ’அன்று’ முற்பகல் 7:37 அன்று, Megala Ramamourty <megala.r...@gmail.com> எழுதியது:

வேந்தரே... இப்போது நாம் ’கோஷ்டி’ என்று சொல்லுகிறோமே அதைத்தான் வள்ளுவர் ’கோட்டி’ என்று குறிப்பிடுகின்றார்.  :-)

நூலின்றி கோஷ்டிகொளல்.??

Megala Ramamourty

unread,
Feb 17, 2018, 6:50:22 PM2/17/18
to vallamai
ஆமாம்! நூலறிவின்றிக் கற்றோர் கோஷ்டியின்கண் (கூட்டத்தின்) ஒன்றைச் சொல்லுதல் அரங்கம் இழைக்காமல் வட்டாடுவதைப் போன்றது என்கிறார் வள்ளுவர்.

வறுங்கோட்டி’ என்ற சொல் ’அறிவிலார் கூட்டம்’ என்ற பொருளில் நாலடியாரிலும் உளது.

--

KKSR

unread,
Feb 18, 2018, 3:00:09 AM2/18/18
to vall...@googlegroups.com
இனிய காலை வணக்கம்!

தினம் ஒரு குறள் 

கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும் 
இல்லாதாள் பெண்காமுற் றற்று.

கல்வி அறிவில்லாதார் சபையின்கண் பேச விரும்புவது, கொங்கை இல்லாதாள் தானும் பெண் எனக் காதல் கொள்வதற்கு ஒப்பாகும்.

திருக்குறள் உரை எழுதத் தொடங்கிய நாள் முதல் இதுகாறும் 40 அதிகாரங்கள்; 400 குறட்பாக்கள்; கணக்கிலடங்காச் சொற்களைத் தாண்டி வந்திருக்கிறோம்.  இருந்தாலும், முதல் தடவையாக ஒரு முரண்; ஒரு வேறுபாடு; ஒரு வித்தியாசம்; ஒரு குறை மேற்சொன்ன குறளில் இருப்பதாக உள்ளுணர்வு சொல்லிற்று.  இருப்பினும்,  நிச்சயம் ஒரு நம்பிக்கையும் கூடவே இருக்க, நம் நாயகன்; மானுட நலன் சார்ந்தவர்; மனிதர்களின் குறையை முன்னிறுத்தி ஒரு உவமையைச் சொல்ல மாட்டார் என்ற உறுதியும் இருந்தது.

குறள் உரை எழுதும்போது, நேற்றைய குறளின் நினைவோ, நாளைய குறளின் நிழலோ தீண்டுவதில்லை; ஆகவே, அன்றைய ஒரு குறள் மட்டுமே, சில அலைகளை, சில மணித்துளிகளுக்கு ஏற்படுத்தும்.  அத்தகைய நிலையில், இன்றைய குறளை உள்வாங்க எத்தனிப்போம்.

கூடிய நிபுணத்துவம் இல்லாமல், கூடுமானவரை அரங்கின் முன் பேசுவதைத் தவிர்த்தல் அறிவுடைமை.  அஃதல்லார், பேச விரும்புவது,

கொங்கை அற்ற பெண் காதல் வயப்படுவதை ஒத்தது!

கொங்கை அற்ற பெண் எனச் சொல்லி இருப்பதால், நிச்சயம் வயது குறைந்தவரும் அல்ல; வயது கூடியவரும் அல்ல! ஆக, வளர்ந்த வயது என்று வைத்துக் கொள்ளலாம்.  

சரி, கொங்கை இல்லாதது குறையா?  நிச்சயம் வள்ளுவர் அப்படிச் சொல்லவில்லை.  வேறு என்ன சொல்கிறார் என்ற கேள்வி உங்கள் முன் எழும்.

அவர் சொல்ல வருவது, ஒரு உணர்ச்சியின் உந்துதலை மட்டுமே அன்றி, பிறப்பின் குறைபாடை அல்ல என்பதை நாம் உள்வாங்க வேண்டும்.

பொதுவாக ஒரு பெண்ணுக்கு ஆண் மீதோ, ஆணுக்குப் பெண் மீதோ, உடல் மூலமாகத் தான் முதல் கவர்ச்சி தோன்றும்.  அது இயல்பானதும் கூட.  அத்தகைய உடல் கவர்ச்சிக்கு வித்திடுவது அங்க வளர்ச்சியே என்றால் மிகையல்ல.  அதுவும் பெண்களுக்குக் கொங்கை அதில் முக்கியப் பங்கு வகிப்பதால், 

காதல் எனும் உணர்ச்சிக்குத் தூண்டுதலாக இருப்பதால், இயல்பான விருப்பத்தை அதன் மீதேற்றி,

காதல் வயப்பட அங்க உறுப்பு துணைபோவது போல், அறிவு வயப்பட நூல்பல கற்றுத் தேற வேண்டும் என்ற செய்தியை 

எதிர்மறையாகச் சொல்கிறார் ஞானத்தந்தை!

நாளை வேறொரு குறளில் சந்திப்போம்!

KKSR

unread,
Feb 18, 2018, 4:29:32 AM2/18/18
to vall...@googlegroups.com
தானாகக் கூடுவதைக் கூட்டம் என்றும்; அழைத்தால் வருவோரைக் கோட்டி எனவும் சொல்லலாமா?

On Sun, Feb 18, 2018 at 3:50 AM Megala Ramamourty <megala.r...@gmail.com> wrote:
ஆமாம்! நூலறிவின்றிக் கற்றோர் கோஷ்டியின்கண் (கூட்டத்தின்) ஒன்றைச் சொல்லுதல் அரங்கம் இழைக்காமல் வட்டாடுவதைப் போன்றது என்கிறார் வள்ளுவர்.

வறுங்கோட்டி’ என்ற சொல் ’அறிவிலார் கூட்டம்’ என்ற பொருளில் நாலடியாரிலும் உளது.
2018-02-17 13:50 GMT-05:00 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:


17 பிப்ரவரி, 2018 ’அன்று’ முற்பகல் 7:37 அன்று, Megala Ramamourty <megala.r...@gmail.com> எழுதியது:
வேந்தரே... இப்போது நாம் ’கோஷ்டி’ என்று சொல்லுகிறோமே அதைத்தான் வள்ளுவர் ’கோட்டி’ என்று குறிப்பிடுகின்றார்.  :-)

நூலின்றி கோஷ்டிகொளல்.??

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
--
Sent from Mobile

Megala Ramamourty

unread,
Feb 18, 2018, 9:31:03 AM2/18/18
to vallamai
அது இந்நாளுக்குப் பொருந்திவருவது.  :-)
ஆனால் குறளிலோ நாலடியாரிலோ அவ்வாறு வேறுபடுத்திக் காண இயலவில்லை. கற்றோர் அவையைக்  ’கோட்டி’ என்ற சொல்லால் குறிக்கிறது குறள். கல்லாக் கூட்டத்தை ’வறுங்கோட்டி’ என்கிறது நாலடியார்.

2018-02-18 4:29 GMT-05:00 KKSR <aur...@gmail.com>:
தானாகக் கூடுவதைக் கூட்டம் என்றும்; அழைத்தால் வருவோரைக் கோட்டி எனவும் சொல்லலாமா?
On Sun, Feb 18, 2018 at 3:50 AM Megala Ramamourty <megala.r...@gmail.com> wrote:
ஆமாம்! நூலறிவின்றிக் கற்றோர் கோஷ்டியின்கண் (கூட்டத்தின்) ஒன்றைச் சொல்லுதல் அரங்கம் இழைக்காமல் வட்டாடுவதைப் போன்றது என்கிறார் வள்ளுவர்.

வறுங்கோட்டி’ என்ற சொல் ’அறிவிலார் கூட்டம்’ என்ற பொருளில் நாலடியாரிலும் உளது.
2018-02-17 13:50 GMT-05:00 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:


17 பிப்ரவரி, 2018 ’அன்று’ முற்பகல் 7:37 அன்று, Megala Ramamourty <megala.r...@gmail.com> எழுதியது:
வேந்தரே... இப்போது நாம் ’கோஷ்டி’ என்று சொல்லுகிறோமே அதைத்தான் வள்ளுவர் ’கோட்டி’ என்று குறிப்பிடுகின்றார்.  :-)

நூலின்றி கோஷ்டிகொளல்.??

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
--
Sent from Mobile

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

N. Ganesan

unread,
Feb 18, 2018, 9:52:16 AM2/18/18
to வல்லமை
On Sunday, February 18, 2018 at 6:31:03 AM UTC-8, Megala Ramamourty wrote:
அது இந்நாளுக்குப் பொருந்திவருவது.  :-)
ஆனால் குறளிலோ நாலடியாரிலோ அவ்வாறு வேறுபடுத்திக் காண இயலவில்லை. கற்றோர் அவையைக்  ’கோட்டி’ என்ற சொல்லால் குறிக்கிறது குறள். கல்லாக் கூட்டத்தை ’வறுங்கோட்டி’ என்கிறது நாலடியார்.


சென்னைப் பேரகராதி:
கோட்டி² kōṭṭi, n. < gōṣṭhī. 1. Assembly of learned or respectable persons; சபை. தோமறு கோட்டியும் (மணி. 1, 43). 2. Multitude, collection, class; கூட்டம். (பிங்.) 3. Speech or utterance, as in an assembly; பேச்சு. வீரக்கோட்டி பேசுவார் (கம்பரா. மாயாசனகப். 13). 4. Company or association, as of a person; ஒருவரோடு கூடி யிருக்கை. தன்றுணைவி கோட்டியினி னீங்கி (சீவக. 1035).

தமிழில் முதலிலே அதன் இயல்புக்குத் தகுந்தவாறு சொற்களை அமைத்து இலக்கணம் தந்தவர்கள் சமணர்கள். அவ்வகையில் திருவள்ளுவர் தரும் வடசொல் இஃது.
பல வடசொற்கள் உள்ள முதல் தமிழ் நூல் எது என்று பார்த்தால் அது திருக்குறளே. பல சொற்கள் பிராகிருதம் வழியாகத் தருகிறார். அவ்வகையில்,
கோட்டி. < gōṣṭhī என குறள், நாலடி பயன்படுத்துகின்றனர். வடமொழிகளில் எல்லா தர்ம சாஸ்திரங்களும் பார்த்து தமிழர்க்கு ஏற்றவற்றை ஆதிபகவனை வணங்கித் தருகிறார்.

கல்லூரி என்ற சொல்லே தமிழில் சமணர்கள் கொடுத்தது தான்.

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் 
கண்என்ப வாழும் உயிர்க்கு

ஆதிபகவன் (முதற் குறளில்) கற்றுக் கொடுத்த எண்ணும் எழுத்தும் வளர்ந்து கல்லூரிக்கு அட்மிஷன் அப்ளிகேஷன் அனுப்பும்
நிலையில் தந்தைக்கு எழுதிக் காட்டும் அரிய சிற்பம் வஞ்சி மூதூர் அருகே கிடைத்துள்ளது:
ஸ்ரீபுராணக் கருத்தை வெளிப்படுத்தும் அரிய சமணச் சிற்பம் கண்டுபிடிப்பு
துரை. சுந்தரம், கோயம்புத்தூர்

தமிழகத்தின் தலையாய சிற்பங்களுக்கு இரு அஷ்ட நாகபந்தம்:

நா. கணேசன்

 
2018-02-18 4:29 GMT-05:00 KKSR <aur...@gmail.com>:
தானாகக் கூடுவதைக் கூட்டம் என்றும்; அழைத்தால் வருவோரைக் கோட்டி எனவும் சொல்லலாமா?
On Sun, Feb 18, 2018 at 3:50 AM Megala Ramamourty <megala.r...@gmail.com> wrote:
ஆமாம்! நூலறிவின்றிக் கற்றோர் கோஷ்டியின்கண் (கூட்டத்தின்) ஒன்றைச் சொல்லுதல் அரங்கம் இழைக்காமல் வட்டாடுவதைப் போன்றது என்கிறார் வள்ளுவர்.

வறுங்கோட்டி’ என்ற சொல் ’அறிவிலார் கூட்டம்’ என்ற பொருளில் நாலடியாரிலும் உளது.
2018-02-17 13:50 GMT-05:00 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:


17 பிப்ரவரி, 2018 ’அன்று’ முற்பகல் 7:37 அன்று, Megala Ramamourty <megala.r...@gmail.com> எழுதியது:
வேந்தரே... இப்போது நாம் ’கோஷ்டி’ என்று சொல்லுகிறோமே அதைத்தான் வள்ளுவர் ’கோட்டி’ என்று குறிப்பிடுகின்றார்.  :-)

நூலின்றி கோஷ்டிகொளல்.??

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
--
Sent from Mobile

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

வேந்தன் அரசு

unread,
Feb 18, 2018, 10:56:25 AM2/18/18
to vallamai
ஆசாரக்கோவை
ஆன்றோர் செய்யாதவை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

புழைக்கடைப் பின் புகார்; கோட்டி, உரிமை,
இவற்றுக்கண் செவ்வியார், நோக்காரே, அவ்வத்
தொழிற்கு உரியர் அல்லாதவர்.
81


பிறர் மனையின்கண் புழைக்கடை வாயிலால் புகார், அரசன் கோட்டி கொண்டு கூத்து முதலாயின இன்புறாநின்றவிடத்தும், உரிமை மகளிரோ டிருந்தவிடத்தும் செவ்வியராயுள்ளா ரென்றும் நோக்கார்; அந்தந்தத் தொழிற்குரிய ரல்லாதார். 

கருத்துரை: வேறொருவர் வீட்டில் புழைக்கடை வாயிலாற் போதலும், அரசன் களியாட்டிடத்தும் அந்தப்புரத்திடத்தும் செல்லுதலும் ஆன்றோர் செயலாகா. 

Calogne Dictionary:

goSThIf. of %{-STha4} q.v. ; %{-pati} m. the chief person or president of an assembly W. ; %{-bandha} m. meeting for conversation Ka1d. v , 825 ; %{-yAna} m. a society-carriage Mr2icch. vi , 4 ; %{-zAlA} f. a meeting-room ; %{-zrAddha} n. a kind of S3ra1ddha ceremony Kull. on Mn. iii , 254 (RTL. p. 305).



வேந்தன் அரசு

unread,
Feb 18, 2018, 11:11:03 AM2/18/18
to vallamai
வள்ளுவர்காலத்தில் wonder bra இல்லை. அதனால் "டென்னிஸ் கோர்ட்" பெண்கள் பெண்மைமிளிர்வோராக  காட்டிக்கொள்ளுதல் இயலாது

17 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 11:59 அன்று, KKSR <aur...@gmail.com> எழுதியது:
--
Sent from Mobile

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

KKSR

unread,
Feb 18, 2018, 8:58:22 PM2/18/18
to vall...@googlegroups.com
இனிய காலை வணக்கம்!

தினம் ஒரு குறள் 

கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன் 
சொல்லா திருக்கப் பெறின்.

கற்றோர் கூடிய அவையில் பேசாமல் இருக்கும் கல்வி அறிவு பெறாதவரும் மிக நல்லவராகவே கருதப் படுவர்.

கல்லாதவர் யார்?

இதுவரை நாம் பார்த்த இரு குறள்களும் சரி; இன்றைய குறளும் சரி! 

ஒன்றை நமக்குப் புலப்படுத்துகிறது.  அதாவது, கல்லாதவர் என்று இக்குறட்பாக்களில் வள்ளுவர் உணர்த்துவது, அரை வேக்காட்டு ஞானிகளைப் பற்றித்தான் என்பதே நம் புரிதல்.  அதற்குச் சான்றாக ஒன்றை மட்டும் உள்வாங்கினாலே போதுமானது.  

கல்வி அறிவு அறவே அற்றவர்கள் எவரும், கற்றறிந்தோர் சபைக்குச் சென்று பேச முனையார்.  ஏனெனில், அத்தகையோர்க்கு ஆங்கு பேசுபொருள் இருக்க வாய்ப்பில்லை.  ஆனால், கற்றுத் தெரிந்த தெளிவற்றவர்கள் தம்மையும் கற்றாரோடு ஒப்பிட்டுத் பேச முனைந்து, தமக்கே இழிவைத் தேடிக்கொள்வதோடு மட்டுமல்லாமல், அறிஞர்களின் காலத்தையும் வீணடித்து விடுவர்.  

அதனாலேயே, முதல் இரு குறள்களில் வள்ளுவர் கையாண்ட உவமைகள் 50:50 ஆகவே இருந்தது.  

அதாவது முதல் குறளில் ‘ஆடுகளம் இல்லாது ஆடுபொருள் வைத்து விளையாடுவது போல’ என்றார்.  

அடுத்த குறளில்,

‘கொங்கை இல்லாத பெண் காமுறுவது போல’ என்றார்.

இரண்டிலும் ஒன்று இருக்கிறது; ஒன்றைச் சார்ந்த மற்றொன்று இல்லை!

அப்படியானால், கல்லாதவர் என்று வள்ளுவர் குறிப்பிடுவது, அரைகுறை அறிவு பெற்றவர்கள் தான் என்பது உறுதியாகிறது.

ஆகவே, அரைகுறை அறிவு முதலில் நல்லதல்ல.  அறிவுசார் சான்றோர் முன் அரைகுறை அறிவைப் பறைசாற்றுவது, அதனினும் நன்றன்று என்று சொல்வதற்காகவே, அமைதியை வலியுறுத்தி, அவர்களை மிக நல்லவர்கள் என அடைமொழியும் கொடுத்துப் போற்றுகிறார்.

மிக எளிய குறளில் மிக ஆழ்ந்த தத்துவத்தை, வாழ்வியல் வெற்றியை, நேரிய பண்பை வைத்திருக்கும் வள்ளுவம் பழக்க வாழ்வே செம்மையாகும்.

Theetharappan R

unread,
Feb 18, 2018, 10:17:51 PM2/18/18
to vall...@googlegroups.com
நனி நல்லர் என்பதற்கு நன்கு கற்றவர் என்றே சொல்லி விடலாம் என்று ரசிகமணி டிகேசி அவர்கள் சொல்லுவார்கள் 

--
Sent from Mobile

--

N. Ganesan

unread,
Feb 19, 2018, 7:22:30 AM2/19/18
to மின்தமிழ், vallamai
2018-02-19 10:37 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
வேட்டி வேஷ்டி ஆனது போல 

வேட்டி என்பது வேஷ்டி ஆனதா? எவ்வாறு?

தமிழிசை அறிஞர் வீ.ப.கா. சுந்தரம் எனது இல்லத்தில் பல நாள் தங்கியிருந்தார். கூடவே, கே. ஏ. குணசேகரன் - நாட்டுப்புற இசைக்கலைஞர்
(பின்னாளில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் ஆனார்0.

வீ.ப.கா.சுந்தரம் பாவாணருடன் பேசிச் சுட்டிக்காட்டினாராம். பாவணர் வேட்டியில் இருந்து வேஷ்டி வந்தது என்பது தவறு என.
வீ.ப.கா. சுந்தரம் பாவாணருக்குச் சொன்ன cognates பற்றி முன்னரும் சில முறை எழுதியுள்ளேன். துழாவினால் கிட்டும்.

வீபகா சுந்தரம் பாண்டியராஜா அவர்களின் உறவினர்.

நா. கணேசன்




2018-02-18 21:37 GMT-08:00 kanmani tamil <kanmani...@gmail.com>:
 ///கோஷ்டி கோட்டி ஆனது சஷ்டி, அஷ்ட, இஷ்ட, நஷ்ட, குஷ்ட போன்று  தமிழில் எழுதும்  மாறுதலா ///

பிராகிருதத்திலிருந்து தமிழுக்கு வந்த சொல் என்பதால் ---கோஷ்டி >>>>>>>கோட்டி எனத்தான் மாறியிருக்க வேண்டும்.
கண்மணி 

2018-02-19 10:37 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
வேட்டி வேஷ்டி ஆனது போல 
கோட்டி கோஷ்டி ஆகியிருக்க வாய்ப்பிருக்கலாமா?

அல்லது   கோஷ்டி கோட்டி ஆனது சஷ்டி, அஷ்ட, இஷ்ட, நஷ்ட, குஷ்ட போன்று  தமிழில் எழுதும்  மாறுதலா?

..... தேமொழி



On Sunday, February 18, 2018 at 8:34:50 PM UTC-8, kanmanitamilskc wrote:
///கோட்டி. < gōṣṭhī என குறள், நாலடி பயன்படுத்துகின்றனர். /// N.Ganesan wrote on 18.2.2018

கோட்டி என்ற சொல்லை இளங்கோவடிகள் "வருமொழியாளரோடு வம்பப் பரத்தரொடு 
                                                                                    குறுமொழிக் கோட்டி நெடுநகை புக்குப் 
                                                                                     பொச்சாப்புண்டு பொருளுரையாளர் 
                                                                                      நச்சுக் கொன்றேற்கு -----------------------"   கொலைக்களக்காதையில் (அடி -64) பயன்படுத்துகிறார்.
'பிறர் பழி கூறும் கயவர் கூட்டம் 'என்று பெருமழைப் புலவர் பொருள் கூறுகிறார்.
அடியார்க்கு நல்லாரும் 'பிறர் பழி தூற்றிச் சிரிப்பதையே இன்பமாகக் கருதும் கயவர் கூட்டம் 'என்கிறார் .
இது கோவலன் தன்  குறையைத் தானே ஆராய்ந்து பேசும் பகுதியாகும்.
திருவள்ளுவர்,நாலடியார் கூறும் பொருளினின்றும் சற்று வேறுபட்ட பொருளையே இளங்கோவடிகள் குறிப்பிடுவது போல் தெரிகிறது.
கண்மணி 


2018-02-19 7:12 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:


On Sunday, February 18, 2018 at 5:17:08 PM UTC-8, N. Ganesan wrote:


On Sunday, February 18, 2018 at 4:59:32 PM UTC-8, தேமொழி wrote:


On Sunday, February 18, 2018 at 4:53:42 PM UTC-8, N. Ganesan wrote:


On Sunday, February 18, 2018 at 2:41:12 PM UTC-8, தேமொழி wrote:

கற்பனைக்கு எல்லையில்லை என்பது சரியே...

கேள்வி: "வளர்ந்த பெண்கள்" எழுதுவது போல  ஏன் சிலையில்  கட்டப்பட்டுள்ளது... 
பதில்:  அவர்கள் கல்லூரியில் படிப்பதற்காக விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து  அப்பாவின் கையொப்பம்  வேண்டி நிற்கும் காட்சி அது. 

யாரால் மறுக்க இயலும்?

மாணவர்கள் தங்கள் படைப்புகளை - எண்ணும் எழுத்தும் - ஆசிரியருக்குக் காட்ட எழுதி எடுத்துச் செல்கின்றனர் எனலாம்.
இது பள்ளியில் படிக்கும் காலத்திலும் நிகழலாம்.

அப்பா ஆரம்பித்த கல்லூரியில் மகள்கள் இருவரும் ஆசிரியைகளாகப் பொறுப்பேற்றுள்ளனர்.

சுந்தரி கணிதப் பேராசிரியை.
பிராமி  மொழியியல் பேராசிரியை.

தெரியவில்லை.

நானும் கொஞ்சம் கற்பனையை ஓட விட்டேன்.


..... தேமொழி


 
பெண்களின் எல்லா வயதிலும் கல்வி முக்கியம் என்றவர்கள் சமணர்கள்:
ஸ்ரீபுராணம், நாலடி, குறள், சிலம்பு, ....
 

திருவள்ளுவர்   உருவத்தைப் பாருங்கள் அவரை  எழுதிய ஏடுகளுடன் எழுத்தாணிகளுடனும் காட்சியளிக்கும் விதத்தில்தான் வடித்துள்ளார்கள் 


இது சமணர்களுக்கு பின் ஏற்பட்ட சித்தர் வடிவம்.

திராவிட மொழிக்குடும்பக் கோட்பாட்டை வெளியிட்டு மொழியியலில் புரட்சி செய்த எல்லிஸ் சமணர்களிடம் கேட்டு
அவர்கள் வழிபாட்டில் இருந்த வள்ளுவர் திருவுருவை தங்கக் காசுகள் ஆக்கி வெளியிட்டுள்ளார். 200 ஆண்டுகள் முன்.
இந்த வள்ளுவர் வடிவம் தமிழர்களிடையே புழங்க வேண்டும். தமிழ் வரலாறும், வள்ளுவர் வரலாறும் அறிவர், 
கல்லூரிகளில் ஆராய்வர். இதே ஓவியரைக் கொண்டு ஸ்ரீபுராணச் சிற்பம் எழுதலாம். எல்லிஸ் காசில்
ஏடும் எழுத்தாணியுமாய் இருக்கிறார் வள்ளுவர். 




NG

 


 
அரிய சிற்பம் வஞ்சி மூதூர் அருகே கிடைத்துள்ளது:
ஸ்ரீபுராணக் கருத்தை வெளிப்படுத்தும் அரிய சமணச் சிற்பம் கண்டுபிடிப்பு
துரை. சுந்தரம், கோயம்புத்தூர்

தமிழகத்தின் தலையாய சிற்பங்களுக்கு இரு அஷ்ட நாகபந்தம்:

நா. கணேசன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

S. Jayabarathan

unread,
Feb 19, 2018, 8:46:25 AM2/19/18
to vallamai, tamilmantram, மின்தமிழ்
கோட்டி, கோட்டித்தனம் --->> என்றால் அவையிற் பேசுதல், இகழ்தல், இகழ்ச்சி, நிந்தித்தல், துன்புறுத்தல், பித்தேறுதல்.

கழகப் புலவர் தமிழ் அகராதி, திருநெல்வேலி, தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்

சி. ஜெயபாரதன்

You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

N. Ganesan

unread,
Feb 19, 2018, 9:01:49 AM2/19/18
to மின்தமிழ், vallamai
2018-02-19 5:45 GMT-08:00 S. Jayabarathan <jayaba...@gmail.com>:
கோட்டி, கோட்டித்தனம் --->> என்றால் அவையிற் பேசுதல், இகழ்தல், இகழ்ச்சி, நிந்தித்தல், துன்புறுத்தல், பித்தேறுதல்.


கோடுதல் - என்னும் தமிழ் தாதுவேர் தரும் சொல் இது. உ-ம்: கோடாமை சான்றோர்க்கு அணி - குறள்.

மேகலா ராமமூர்த்தி குறிப்பிடுவது வடசொல். கோட்டி < கோஷ்டி.

We need to distinguish between these two homophones, one from Indo-Aryan, the other Dravidian word roots.

NG

N. Ganesan

unread,
Feb 19, 2018, 9:24:20 AM2/19/18
to vallamai

---------- Forwarded message ----------
From: N. Ganesan <naa.g...@gmail.com>
Date: 2018-02-19 6:10 GMT-08:00
Subject: Re: [MinTamil] Re: தினம் ஒரு குறள்
To: மின்தமிழ் <mint...@googlegroups.com>, housto...@googlegroups.com
Cc: Banukumar Rajendran <banuk...@gmail.com>, Kanaka Ajithadoss <ajith...@gmail.com>


2018-02-18 20:34 GMT-08:00 kanmani tamil <kanmani...@gmail.com>:
>
> ///கோட்டி. < gōṣṭhī என குறள், நாலடி பயன்படுத்துகின்றனர். /// N.Ganesan wrote on 18.2.2018
>
> கோட்டி என்ற சொல்லை இளங்கோவடிகள் "வருமொழியாளரோடு வம்பப் பரத்தரொடு
>                                                                                     குறுமொழிக் கோட்டி நெடுநகை புக்குப்
>                                                                                      பொச்சாப்புண்டு பொருளுரையாளர்
>                                                                                       நச்சுக் கொன்றேற்கு -----------------------"   கொலைக்களக்காதையில் (அடி -64) பயன்படுத்துகிறார்.
> 'பிறர் பழி கூறும் கயவர் கூட்டம் 'என்று பெருமழைப் புலவர் பொருள் கூறுகிறார்.
> அடியார்க்கு நல்லாரும் 'பிறர் பழி தூற்றிச் சிரிப்பதையே இன்பமாகக் கருதும் கயவர் கூட்டம் 'என்கிறார் .
> இது கோவலன் தன்  குறையைத் தானே ஆராய்ந்து பேசும் பகுதியாகும்.
> திருவள்ளுவர்,நாலடியார் கூறும் பொருளினின்றும் சற்று வேறுபட்ட பொருளையே இளங்கோவடிகள் குறிப்பிடுவது போல் தெரிகிறது.
> கண்மணி
>

இது புன்கோட்டி. நன்கோட்டி உடனிருப்பதும் வஞ்சிக்காண்டத்தில் பாடியுள்ளார் இளங்கோ.
”தானுமோர் புன்கோட்டி கொள்ளுமாங் கீழ்” - நாலடியார். குறுமொழிக்கோட்டி என்பது புன்கோட்டிகளில் ஒரு தினுசு.

குறுமொழி = குறளை. தீக்குறளை சென்றோதோம் என்கிறாள் ஆண்டாள். இதனை, “தீக்குறள்” என்பது திருக்குறளைச் சொல்கிறாள்
ஆண்டாள் என காஞ்சி பெரியவர் சொல்ல, ஸ்ரீவைஷ்ணவர்கள் அவ்வாறில்லை என, பெரிய சர்ச்சை ஆனது. பிரதிவாதி பயங்கரம்
அண்ணங்கராச்சார்ய ஸ்வாமிகள் விரிவாக மறுப்புரை எழுதினார். இந்த சர்ச்சையின் மூலக் கட்டுரைகளை ஸ்ரீவைஷ்ணவர்கள்
தொகுக்கவேண்டும். அதன் பின்னர்தான் காஞ்சி பெரியவர் திருப்பாவை-திருவெம்பாவை விழா கொண்டாட ஏற்பாடு செய்தார்கள்.
அப்போது வெளியான மலர்கள் அழகானவை. பல சில்பி (மகாதேவன்) படங்கள் இருப்பவை. தீக்குறளைச் சென்றோதோம் எனச்
சொல்லலை ஆண்டாள். ஒற்று மிகுதலுக்கும், மிகாமைக்கும் உள்ள வேறுபாடு. ஆபயன் - குறள், ஆப்பயன் - சிலம்பு.
இதன் வேறுபாட்டைச் சமணர்கள் எழுதியுள்ளனர். இணையத்தில் திரு. பானுகுமார் முதலில் விளக்கினார்,

கோட்டி² kōṭṭi, n. < gōṣṭhī.  இச் சொல்லை இலக்கிய ஆட்சிகளை விரிவாக தனியிழையில் பார்ப்போம்.
அதன் தொடக்கமாக, சில :

(1)
பரிபாடலில் அப்போது வழங்கிய கதைகளை முதன்முதலாகப் பார்க்கிறோம்.
சமஸ்கிருதத்துக்கும் பிராகிருதத்துக்கும் இருந்த உறவை - சமணர்கள்
வாயிலாக தமிழகம் வந்தது. அவ்வாறு வந்த சொல் கோட்டி < கோஷ்டி.
சம்ஸ்கிருத-ப்ராகிருத கதைதான் இந்திரன் அகலிகை கதையில் பூனையாகிப்
போந்தது. இதனை தமிழில் முதன்முதலில் பரிபாடல் தான் பேசுகிறது.

”நாணுக் குறைவில ணங்கைமற் றென்மரும் 
கோட்டியுட் கொம்பர் குவிமுலை நோக்குவோன்
ஓட்டை மனவ னுரமிலி யென்மரும் ” - பரிபாடல்

”நங்கை நாணாள் கொல் என்மரும் - அந் நங்கை நாணுடையள் 
ஆவளோ என்று கூறுவோரும், கோட்டியுள் கொம்பர் குவிமுலை 
நோக்குவோன் - கூட்டத்தின்கண் நின்றே ஒருவன் பூங்கொம்பு ஒப்பா
ளொருத்தியின் குவிந்த முலைகளைக் கூர்ந்து நோக்காநிற்பன், ஓட்டை
மனவன் உரம் இலி என்மரும் - அவன் இள நெஞ்சன் 
திண்மையில்லாதவன் என்று இகழ்வாரும்,”

(2)
”பண்டைப் பிறவியர் ஆகுவர் ஆதலின்
ஆங்கது கொணர்ந்தாங்கு ஆயிழை கோட்டத்து
ஓங்கு இருங் கோட்டி இருந்தோய் உன்கைக்
குறிக்கோட் டகையது கொள்கெனத் தந்தேன்” - சிலம்பு, வஞ்சிக்காண்டம்

தேவந்திகை உரை. சாமியாடிச் சொல்கிறாள்.
இருங்கோட்டி = கண்ணகி கோட்டத்தில் பெருங் கோஷ்டி இருத்தல்
- செங்குட்டுவன் திருவோலக்கம் சாதித்தல் (royal entourage).

(3)
இதே போல,
”தகைப்பெரு வேந்தன் ஆகலின் மிகச்சிறந்து
ஆனா நன்மொழி தான்அவள் கொண்டு
கோட்டிச் செவ்வியுள் வேட்டனள் விரும்பா
உரைத்தல் ஊற்றமொடு திருத்தக இருப்ப” என்பார் கொங்குவேளிரும் (பெருங்கதையில்).

(4)
அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தர் 
அல்லார்முன் கோட்டி கொளல் - குறள்

(5)
அரங்கு இன்றி வட்டு ஆடி அற்றே நிரம்பிய 
நூல் இன்றிக் கோட்டி கொளல். - குறள்

(6)
கல்லாதான் ஊரும் கலிமாப் பரிப்பு இன்னா;
வல்லாதான் சொல்லும் உரையின் பயன் இன்னா;
இல்லார் வாய்ச் சொல்லின் நயம் இன்னா; ஆங்கு இன்னா,
கல்லாதான் கோட்டி கொளல். - இன்னா நாற்பது

(7)
உஞ்சைக்காண்டம்
 
யாழ் கைவைத்தது

மழலைக் கிண்கிணிக் கழலோன் பெருமகன்
அரும்பெறற் றத்தைக் காசா னாகிப்
போக வீணை புணர்க்கப் பெற்ற
தேசிக குமரன் றிருவுடை யன்னென
அடியரு மாயமு நொடிவனர் வியப்ப
ஏனைத் தாயரு மானா தேத்த
வத்தவர் பெருமகன் வல்ல வீணை
தத்தை தனக்கே தக்க தாலென
வேட்டது பகருங் கோட்டி யாகிக்
கோட்டமின் முற்றங் குமிழ்குமிழ்த் துரைப்ப
       - கொங்குவேளிர், பெருங்கதை.

உதயணகுமரன் வாசவதத்தைக்கு யாழ் கற்பித்து,
அவளை மணக்கிறான் என்றறிந்த நகர மக்கள்
அரண்மனை முன் கோஷ்டி கோஷ்டியாகக் கூடி
வாழ்த்தை உரைக்கின்றனர்.

(8)
"தன்றுணைவி கோட்டியி னீங்கி" (சீவக. 2035).

(9)
ஈசனே முதலா மற்றை மானிடர் இறுதி ஆகக்
கூச, மூன்று உலகும் காக்கும் கொற்றத்தென்; வீரக் கோட்டி
பேசுவார் ஒருவர்க்கு ஆவி தோற்றிலென்; பெண்பால் வைத்த
ஆசை நோய் கொன்றது என்றால், ஆண்மைதான் மாசுணாதோ? - கம்பன்

வீரக் கோட்டி = வீரர் கோஷ்டியில் பேசப்படும் எவருக்கும் தோற்றிலன்.

(10)
உலகினுட் பெருகி யந்த வொண்டமிழ் மூன்றும் பாடற்
றிலகமாய்ச் சிறந்த வாய்ந்த தெய்வநா வலருந் தங்கள்
கலகமா நவையிற் றீர்ந்து காசறு பனுவ லாய்ந்து
புலமிகு கோட்டி செய்து பொலிந்தன ரிருந்தார் போலும் -திருவிளையாடற் புராணம்

(11)
சேட்டித் துலகச் சிறுநடையில் பல்கால் புகுந்து திரிந்துமயல் 
நீட்டித் தலைந்த மனத்தைஒரு நிமிடத் தடக்கிச் சன்மார்க்கக் 
கோட்டிக் கியன்ற குணங்கள்எலாம் கூடப் புரிந்து மெய்ந்நிலையைக்
காட்டிக் கொடுத்தாய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.  - வள்ளலார்

சன்மார்க்க சங்கத்தைச் சன்மார்க்கக் கோட்டி என்கிறார் வள்ளலார்.

(12)

இது ஸங்கீத கோஷ்டி. விறலியர், தாசியர்கள், நட்டுவர், ... என்று கோஷ்டிகளுடன் மன்னன் கலைகளை ரசிக்கும் வேளை.

கோடுதல் - என்னும் தமிழ் தாதுவேர் தரும் சொல் இது. உ-ம்: கோடாமை சான்றோர்க்கு அணி - குறள்.

மேகலா ராமமூர்த்தி குறிப்பிடுவது வடசொல். கோட்டி < கோஷ்டி.

We need to distinguish between these two homophones, one from Indo-Aryan, the other Dravidian word roots.


நா. கணேசன்




On Sunday, February 18, 2018 at 6:31:03 AM UTC-8, Megala Ramamourty wrote:
அது இந்நாளுக்குப் பொருந்திவருவது.  :-)
ஆனால் குறளிலோ நாலடியாரிலோ அவ்வாறு வேறுபடுத்திக் காண இயலவில்லை. கற்றோர் அவையைக்  ’கோட்டி’ என்ற சொல்லால் குறிக்கிறது குறள். கல்லாக் கூட்டத்தை ’வறுங்கோட்டி’ என்கிறது நாலடியார்.


சென்னைப் பேரகராதி:
கோட்டி² kōṭṭi, n. < gōṣṭhī. 1. Assembly of learned or respectable persons; சபை. தோமறு கோட்டியும் (மணி. 1, 43). 2. Multitude, collection, class; கூட்டம். (பிங்.) 3. Speech or utterance, as in an assembly; பேச்சு. வீரக்கோட்டி பேசுவார் (கம்பரா. மாயாசனகப். 13). 4. Company or association, as of a person; ஒருவரோடு கூடி யிருக்கை. தன்றுணைவி கோட்டியினி னீங்கி (சீவக. 1035).

தமிழில் முதலிலே அதன் இயல்புக்குத் தகுந்தவாறு சொற்களை அமைத்து இலக்கணம் தந்தவர்கள் சமணர்கள். அவ்வகையில் திருவள்ளுவர் தரும் வடசொல் இஃது.
பல வடசொற்கள் உள்ள முதல் தமிழ் நூல் எது என்று பார்த்தால் அது திருக்குறளே. பல சொற்கள் பிராகிருதம் வழியாகத் தருகிறார். அவ்வகையில்,
கோட்டி. < gōṣṭhī என குறள், நாலடி பயன்படுத்துகின்றனர். வடமொழிகளில் எல்லா தர்ம சாஸ்திரங்களும் பார்த்து தமிழர்க்கு ஏற்றவற்றை ஆதிபகவனை வணங்கித் தருகிறார்.

கல்லூரி என்ற சொல்லே தமிழில் சமணர்கள் கொடுத்தது தான்.

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் 
கண்என்ப வாழும் உயிர்க்கு



>>>

>>> பெண்களின் எல்லா வயதிலும் கல்வி முக்கியம் என்றவர்கள் சமணர்கள்:
>>> ஸ்ரீபுராணம், நாலடி, குறள், சிலம்பு, ....
>>>  
>>>>
>>>>
>>>> திருவள்ளுவர்   உருவத்தைப் பாருங்கள் அவரை  எழுதிய ஏடுகளுடன் எழுத்தாணிகளுடனும் காட்சியளிக்கும் விதத்தில்தான் வடித்துள்ளார்கள்
>>>>
>>>
>>> இது சமணர்களுக்கு பின் ஏற்பட்ட சித்தர் வடிவம்.
>>>
>>> திராவிட மொழிக்குடும்பக் கோட்பாட்டை வெளியிட்டு மொழியியலில் புரட்சி செய்த எல்லிஸ் சமணர்களிடம் கேட்டு
>>> அவர்கள் வழிபாட்டில் இருந்த வள்ளுவர் திருவுருவை தங்கக் காசுகள் ஆக்கி வெளியிட்டுள்ளார். 200 ஆண்டுகள் முன்.
>>> இந்த வள்ளுவர் வடிவம் தமிழர்களிடையே புழங்க வேண்டும். தமிழ் வரலாறும், வள்ளுவர் வரலாறும் அறிவர்,
>>> கல்லூரிகளில் ஆராய்வர். இதே ஓவியரைக் கொண்டு ஸ்ரீபுராணச் சிற்பம் எழுதலாம். எல்லிஸ் காசில்
>>> ஏடும் எழுத்தாணியுமாய் இருக்கிறார் வள்ளுவர்.
>>>
>>>




வேந்தன் அரசு

unread,
Feb 19, 2018, 12:35:33 PM2/19/18
to vallamai


18 பிப்ரவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:31 அன்று, Megala Ramamourty <megala.r...@gmail.com> எழுதியது:

அது இந்நாளுக்குப் பொருந்திவருவது.  :-)
ஆனால் குறளிலோ நாலடியாரிலோ அவ்வாறு வேறுபடுத்திக் காண இயலவில்லை. கற்றோர் அவையைக்  ’கோட்டி’ என்ற சொல்லால் குறிக்கிறது குறள். கல்லாக் கூட்டத்தை ’வறுங்கோட்டி’ என்கிறது நாலடியார்.

அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார்
அல்லார்முன் கோட்டி கொளல்.

பரிமேலழகர் உரை: 
தம் கணத்தார் அல்லார்முன் கோட்டி கொளல் - நல்லார் தம்மினத்தரல்லாதார் அவைக்கண் ஒன்றனையும் சொல்லற்க; 

N. Ganesan

unread,
Feb 19, 2018, 8:24:46 PM2/19/18
to மின்தமிழ், housto...@googlegroups.com, vallamai
On Monday, February 19, 2018 at 9:35:33 AM UTC-8, வேந்தன் அரசு wrote:
அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார்
அல்லார்முன் கோட்டி கொளல்.

பரிமேலழகர் உரை: 
தம் கணத்தார் அல்லார்முன் கோட்டி கொளல் - நல்லார் தம்மினத்தரல்லாதார் அவைக்கண் ஒன்றனையும் சொல்லற்க; 



வான்மீகத்திலே அரசன் தவிர்க்க வேண்டிய எழுவகைக் குற்றங்களுள் “வெள்ளைக் கோட்டி” என்பதொன்று.
”காமக் குரோதங்களால் அரசர்களிடத்து  உண்டாகும் எழுவகைக் 
குற்றங்கள்10 உன்னை அணுகாமல் பார்த்துக்கொள்.”
10.    எழுவகைக் குற்றங்களாவன:  பிறன்மனை நயத்தல்,  சூது,  விதி மீறி
      வேட்டையாடுதல், மது,  வெள்ளைக் கோட்டி,  குற்றத்தை விஞ்சிய
      தண்டனை,  வீண்செலவு ஆகியன. (Valmiki II.3.42-46)


சிலம்பு, வரந்தரு காதை,

பிறர்மனை அஞ்சுமின் பிழையுயிர் ஓம்புமின்
அறமனை காமின் அல்லவை கடிமின்
கள்ளுங் களவுங் காமமும் பொய்யும்
வெள்ளைக் கோட்டியும் விரகினில் ஒழிமின்
இளமையும் செல்வமும் யாக்கையும் நிலையா

உளநாள் வரையாது ஒல்லுவ தொழியாது
செல்லுந் தேஎத்துக் குறுதுணை தேடுமின்
மல்லன்மா ஞாலத்து வாழ்வீ ரீங்கென்.

வெள்ளைக் கோட்டி = அறிவிலிகள் கோஷ்டி.
வள்ளுவர் 2 இடத்திலும், இளங்கோ அடிகள் 3 இடத்திலும் கோட்டி (< கோஷ்டி) என்னும் தற்பவச் சொல்லை ஆள்கின்றனர்.

மேலும் பார்க்க,

நா. கணேசன்

KKSR

unread,
Feb 19, 2018, 10:34:38 PM2/19/18
to vall...@googlegroups.com
இனிய காலை வணக்கம்!

தினம் ஒரு குறள் 

கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும் 
கொள்ளார் அறிவுடை யார்.

கல்லாதான் அறிவு ஒருவேளை தேர்ந்த சிறப்புடையதே ஆயினும், கற்றவர்கள் சபையில் அதனை ஏற்க மாட்டார்கள்.

நம் மொழியின் சிறப்பே ஒவ்வொரு சொல்லும், இடத்திற்குத் தகுந்தாற்போல் தன் திறனை செவ்வனே வெளிப்படுத்தும் ஆற்றல் உடைத்து.  சொல் மட்டுமல்ல; சில வேளை ஒற்றை எழுத்து கூடத் தன்னைத் தானே விளிக்கும் ஆற்றல், உலகில் வேறு எந்த மொழிக்கும் உண்டா என்பது ஐயமே.  உதாரணமாக, ஆ; பா; நா; தீ; நீ என அடுக்கிக் கொண்டே போகலாம்.

அவ்வகையில், ‘ஒட்பம்’ என்ற வார்த்தை இன்றைய குறளில் நம்மை சிந்திக்க வைக்கிறது.  

அதென்ன ஒட்பம்? 

அறிவு என்ற பொருளில் உரையாசிரியர்கள் பயன்படுத்தியிருப்பினும்,  நம் அன்றாட வழக்கத்தில் இருக்கும் ஒரு வார்த்தையை வைத்துப் பொருள் கொள்ள முனைவோம்.

நுட்பம் - நுண்ணிய தகவல்

ஒட்பம் - ஒளி பொருந்திய தகவல்; மேன்மையான தகவல்; சிறந்த செய்தி அப்படின்னு சொல்லலாமா?

மேற்கூறிய இரண்டு வார்த்தைகளிலும், முதல் எழுத்துதான் முழுப் பொருளுக்கும் வித்திடுகிறது.  அதுதான் தமிழின் சிறப்பு.  சிறப்பைப் பெருமை பேசுவதில் ஒரு பயனும் இல்லை.  அத்தகயை சிறப்பை அன்றாட வாழ்வில் ஒவ்வொரு செயலிலும் உணர்வதில்; உணர்த்துவதில் தான் சிறப்புக்கே சிறப்பு சேர்க்க முடியும்.

அது சரி, கல்வி அறிவில்லாதார் எது சொன்னாலும் கற்றவர்கள் புறந்தள்ளுவர் என வள்ளுவர் சொல்றாரே? கொஞ்சம் சிக்கலா இருக்கே!  ஏன் அப்படிச் சொல்கிறார்?  கொஞ்சம் சிந்திக்க வேண்டிய செய்தி!!

ஒரு உதாரணத்தைக் கொண்டு, ஏன் அப்படிச் சொன்னார் என்று விளங்க முயற்சிப்போம்.  

மின்னல் நாம் அனைவரும் அறிந்ததே.  மின்னல் ஒரு வகை ஒளியே.  அதை ஒப்ப சூரியனும் ஒளி தருகிறது.  ஆனால், இரண்டிற்கும் உள்ள வேறுபாடு, 

மின்னல் கண நேர ஒளி உமிழி; ஆனால், சூரியன் நிரந்தர ஒளி உமிழி!  இதுதாங்க வித்தியாசம்.  

இப்ப, குறளையும், குறள் தரும் விளக்கத்தையும் திரும்பப் படிங்க! 

நாளை பிறிதொரு குறளில் சந்திப்போம்!

வேந்தன் அரசு

unread,
Feb 20, 2018, 12:46:12 AM2/20/18
to vallamai
ஒட்பம்= brilliancy??

19 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 7:34 அன்று, KKSR <aur...@gmail.com> எழுதியது:
--
Sent from Mobile

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--

KKSR

unread,
Feb 20, 2018, 2:08:24 AM2/20/18
to vall...@googlegroups.com
அப்படியும் ஒரு பொருள் இருக்கிறது ஐயா!


---------------------------------------------------------------------------------------------------
This email transmission is confidential and intended for the addressee only. It may contain privileged and confidential information. If you are not the person or organisation to whom it is addressed, you must not copy, distribute, or take any action in reliance upon it. If you have received this message in error, please notify the sender immediately.

N. Ganesan

unread,
Feb 20, 2018, 8:38:23 AM2/20/18
to மின்தமிழ், vallamai
2018-02-18 20:56 GMT-08:00 kanmani tamil <kanmani...@gmail.com>:
/// பெண் குரத்தியை சமயங் கற்பிப்பவராக வஞ்சி நகர அரண்மனையில்வாழ்ந்த அடிகள் தம் காப்பியத்தில் அமைக்கிறார்.///

இளங்கோவடிகள்  கொங்கு வஞ்சியில் பிறந்தார் ;வளர்ந்தார் ;எங்கோ கங்க நாட்டில் படித்தார் என்றெல்லாம் ஆசை (தீர ) மென்மேலும் பெருகப் பெருகக் 
கற்பனை செய்து கொள்ளலாம். யாரும் கேள்வி கேட்கப்போவதில்லை.

ஆனால் இளங்கோ படைத்த கவுந்தி (பெண் குரத்தி) சமயம் கற்பித்தார் என்ற கற்பனைக்கு ஆதாரமே இல்லை.

??

ஜைந சமயத்தின் ஸம்போதனைகளுக்காகவே இளங்கோ அடிகள் கவுந்தி என்னும் சமணக் குரத்தியாரைத் தன் காப்பியத்தில் படைத்துள்ளார்.
கவுந்தி அடிகளை சிலப்பதிகாரத்தில் இருந்து நீக்கிவிட்டால் சமணக் காப்பியம் என்றோ, சமண சமய போதனைகளையோ தெளிவாக
சிலம்பில் காணமுடியாது.
ஜைந சமயத்தின் மூல நூல்கள் பலவற்றை ஆராய்பவர் பேரா. ராபர்ட் சைடன்பாஸ் (Prof. Dr. Robert Zydenbos). கமில் சுவெலெபில்லிடம் பயின்றவர்,

Robert Zydenbos, (1987): “The Jaina Nun Kavunti.” Bulletin d’études indiennes (Paris) 5, pp. 387-417
கவுந்தி அடிகளின் சமணம் பற்றிய முக்கியமான ஆய்வுக் கட்டுரை இது. கட்டுரை வெளியானபோது படித்தேன். ராபர்ட் சைடன்பாஸின்
ஜைந மற்றும் கன்னட இலக்கிய ஆய்வுகளை அவர் வெளியீடுகளில் படிக்கலாம். His list of publications is enclosed.

காதம் என்ற அளவை கர்நாடக, தமிழ்ச் சான்றுகளால் கணித்தபோது தான் சைய மலைப்பகுதியில் இளங்கோ அடிகள்
கவுந்தி அடிகள் தவப்பள்ளியை அமைத்திருப்பது புரிந்தது. கங்க ராஜ்ஜியத்தின் ஸ்ரீரங்கத்திலே அந்த சாரணர் வருகை ...
இளங்கோ அடிகள் புகழும் காவேரிநாடு:  (சிலம்பின் நாடுகாண் காதை)

நா. கணேசன்
 
ஒரு அரைகுறைப் பெண் துறவி எப்படி இருப்பார் என்பதற்கு சான்றாகத்தான் கவுந்தியைப் படைத்துக் காட்டியிருக்கிறார்.-தன் காப்பியத்தில் .

கண்மணி  


2018-02-19 10:14 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:
///திராவிட மொழிக்குடும்பக் கோட்பாட்டை வெளியிட்டு மொழியியலில் புரட்சி செய்த எல்லிஸ் சமணர்களிடம் கேட்டு
அவர்கள் வழிபாட்டில் இருந்த வள்ளுவர் திருவுருவை தங்கக் காசுகள் ஆக்கி வெளியிட்டுள்ளார். 200 ஆண்டுகள் முன்.
இந்த வள்ளுவர் வடிவம் தமிழர்களிடையே புழங்க வேண்டும். தமிழ் வரலாறும், வள்ளுவர் வரலாறும் அறிவர், 
கல்லூரிகளில் ஆராய்வர். இதே ஓவியரைக் கொண்டு ஸ்ரீபுராணச் சிற்பம் எழுதலாம். எல்லிஸ் காசில்
ஏடும் எழுத்தாணியுமாய் இருக்கிறார் வள்ளுவர். 

RZ_publications-110903.pdf

N. Ganesan

unread,
Feb 20, 2018, 10:06:29 AM2/20/18
to மின்தமிழ், vallamai, Banukumar Rajendran, Kanaka Ajithadoss
பேரா. கண்மணி worte:
>''மழித்தலும் நீட்டலும் வேண்டா ''  என்று பளிச்சென்று பாடிய வள்ளுவரை மழித்த நிலையில் எல்லிஸ் பாதிரியார் காட்டி இருப்பதும் --- 200
 >ஆண்டுகளுக்கு முன் சமணர்களிடம் கேட்டு அவர் இந்த உருவத்தை தேர்ந்தார் என்பதும் யாருடைய கற்பனை வளத்ததைக் காட்டுகிறது.???
கண்மணி 
எல்லிஸ் பாதிரியாரா? எந்த ஊரில், சர்ச்சில் பாதிரியாராக இருந்தார்? இன்னும் பலருக்கும் எல்லீசனின் பணி, தொண்டு பற்றித் தெரியவில்லை.
எல்லிஸ் பாதிரியார் ” ''மழித்தலும் நீட்டலும் வேண்டா ''  என்று பளிச்சென்று பாடிய வள்ளுவரை மழித்த நிலையில்” காட்டியிருக்கிறார் என்கிறீர்கள். திருவள்ளுவரைச் சமணர்கள் வழிபடுகிறார்கள். அதைத் தான் எல்லிஸ் வெளியிட்டுள்ளார். இதற்கு அருமையான சான்று ஒன்று உள்ளது. அதை நாகர்கோவில் திருக்குறள் மாநாட்டில் குறிப்பிட்டேன். லிவர்பூல், இங்கிலாந்து நிகழவுள்ள திருக்குறள் மாநாட்டிலும் குறிப்பிடுவேன்.  எல்லிஸ் வெளியிட்ட வள்ளுவர் திருவுரு தாங்கிய பொன் நாணயம் போலவே, எல்லிஸ் காசை அறியாத சமண அறிஞர் திருவள்ளுவர் வடிவம் அவர் நூலில் வெளியிட்டார். அது சமண அறிஞர்கள் எல்லிசுக்கு அளித்த வடிவம் இது என உறுதிப்படுத்துகிறது.
 
            மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் 
          பழித்தது ஒழித்து விடின்.


        இக்குறளைக் காட்டிப் பலரும் இது வள்ளுவர் சமணர் அல்லர் என்பதற்குச் சான்று என்கிறார்கள். அது சரியா?
       எல்லிஸ் வெளியியிட்ட அரசாங்க பொன் நாணயத்தில் இருக்கும் திருவள்ளுவருக்கு இக் குறள் எதிர்ப்பாகவா இருக்கின்றது?

      நா. கணேசன்


2018-02-18 20:44 GMT-08:00 kanmani tamil <kanmani...@gmail.com>:
NG>> ///திராவிட மொழிக்குடும்பக் கோட்பாட்டை வெளியிட்டு மொழியியலில் புரட்சி செய்த எல்லிஸ் சமணர்களிடம் கேட்டு
அவர்கள் வழிபாட்டில் இருந்த வள்ளுவர் திருவுருவை தங்கக் காசுகள் ஆக்கி வெளியிட்டுள்ளார். 200 ஆண்டுகள் முன்.
இந்த வள்ளுவர் வடிவம் தமிழர்களிடையே புழங்க வேண்டும். தமிழ் வரலாறும், வள்ளுவர் வரலாறும் அறிவர், 
கல்லூரிகளில் ஆராய்வர். இதே ஓவியரைக் கொண்டு ஸ்ரீபுராணச் சிற்பம் எழுதலாம். எல்லிஸ் காசில்
ஏடும் எழுத்தாணியுமாய் இருக்கிறார் வள்ளுவர். 

 

''மழித்தலும் நீட்டலும் வேண்டா ''  என்று பளிச்சென்று பாடிய வள்ளுவரை மழித்த நிலையில் எல்லிஸ் பாதிரியார் காட்டி இருப்பதும் --- 200
 ஆண்டுகளுக்கு முன் சமணர்களிடம் கேட்டு அவர் இந்த உருவத்தை தேர்ந்தார் என்பதும் யாருடைய கற்பனை வளத்ததைக் காட்டுகிறது.???
கண்மணி 





Theetharappan R

unread,
Feb 20, 2018, 12:42:44 PM2/20/18
to vall...@googlegroups.com
சமணத்துறவிகள் மழிப்பதும் சைவத்துறவிகள் நீட்டுவதும் அக்காலத்தில் துறவிகளின் நிலை எனச் சொல்லுவார்கள். இவ்விரு துறவிகளும் துறவற ஒழுக்கத்தை ஒழுங்காகக் கடைப்பிடித்தால் போதும், மழித்தல் மற்றும் நீட்டல் என்ற புறவேஷங்கள் வேண்டாம் என்று துறவிகளை தோலுரித்துக் காட்டியவர் வள்ளுவர்.

வேந்தன் அரசு

unread,
Feb 20, 2018, 1:38:19 PM2/20/18
to vallamai, மின்தமிழ், housto...@googlegroups.com

நாணாள் கொல் தோழி நயன் இல் பரத்தையின் 45

தோள் நலம் உண்டு துறந்தான் என ஒருத்தி
யாணர் மலி புனல் நீத்தத்து இரும் பிடி
சேண வெரிநின் சிறந்தானோடு ஏறினாள்
நாணுக் குறைவு இலள் நங்கை மற்று? என்மரும்
கோட்டியுள் கொம்பர் குவி முலை நோக்குவோன் 50

ஓட்டை மனவன் உரம் இலி என்மரும்



19 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 5:24 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Feb 20, 2018, 7:23:31 PM2/20/18
to மின்தமிழ், vallamai
2018-02-20 10:38 GMT-08:00 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:

நாணாள் கொல் தோழி நயன் இல் பரத்தையின் 45

தோள் நலம் உண்டு துறந்தான் என ஒருத்தி
யாணர் மலி புனல் நீத்தத்து இரும் பிடி
சேண வெரிநின் சிறந்தானோடு ஏறினாள்
நாணுக் குறைவு இலள் நங்கை மற்று? என்மரும்
கோட்டியுள் கொம்பர் குவி முலை நோக்குவோன் 50

ஓட்டை மனவன் உரம் இலி என்மரும்


தங்கணத்தார் அல்லார் முன் கோட்டி கொளல் - இக் குறளுடன்
இப் பரிபாடல் வரிகளும் கொடுத்துள்ளேனே:

(1)
பரிபாடலில் அப்போது வழங்கிய கதைகளை முதன்முதலாகப் பார்க்கிறோம்.
சமஸ்கிருதத்துக்கும் பிராகிருதத்துக்கும் இருந்த உறவை - சமணர்கள்
வாயிலாக தமிழகம் வந்தது. அவ்வாறு வந்த சொல் கோட்டி < கோஷ்டி.
சம்ஸ்கிருத-ப்ராகிருத கதைதான் இந்திரன் அகலிகை கதையில் பூனையாகிப்
போந்தது. இதனை தமிழில் முதன்முதலில் பரிபாடல் தான் பேசுகிறது.

”நாணுக் குறைவில ணங்கைமற் றென்மரும் 
கோட்டியுட் கொம்பர் குவிமுலை நோக்குவோன்
ஓட்டை மனவ னுரமிலி யென்மரும் ” - பரிபாடல்

”நங்கை நாணாள் கொல் என்மரும் - அந் நங்கை நாணுடையள் 
ஆவளோ என்று கூறுவோரும், கோட்டியுள் கொம்பர் குவிமுலை 
நோக்குவோன் - கூட்டத்தின்கண் நின்றே ஒருவன் பூங்கொம்பு ஒப்பா
ளொருத்தியின் குவிந்த முலைகளைக் கூர்ந்து நோக்காநிற்பன், ஓட்டை
மனவன் உரம் இலி என்மரும் - அவன் இள நெஞ்சன் 
திண்மையில்லாதவன் என்று இகழ்வாரும்,”

மேற்கோள் காட்டா இலக்கிய வரிகளைத் தாருங்கள்,

NG
 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

KKSR

unread,
Feb 21, 2018, 12:55:46 AM2/21/18
to vall...@googlegroups.com

இனிய காலை வணக்கம்!


தினம் ஒரு குறள்


கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து 

சொல்லாடச் சோர்வு படும்.


கல்வி அறிவில்லாத ஒருவரது தற்பெருமை தன்னிச்சையாக அறிஞர்கள் அவையில் உரையாடும்போது தானாகவே அயற்சியுறும்.


பெரியவர்கள் பேசும்பொழுது பேசாமல் இருக்க வேண்டும் என நாம் சிறுவர்களாக இருக்கும் போது அறிவுறுத்தப் பட்டோம்அது நம் பண்பாடுஏன் பேசக் கூடாது என்று செந்நாப் புலவர் அன்றே சொல்லி வைத்திருக்கிறார்!


கற்றவர்கள், பட்டவர்கள், பெற்றவர்கள் பேசுவது ஆய்ந்த மொழிகள்; தேர்ந்த சொற்கள்; அனுபவ மொழிகள்! தெளிந்த பேச்சு!


அவர்களுக்கு இடையே அவர்களில் குறைந்த அறிவுடையர் பேசும்பொழுதுஅறியாமை வெளிப்படுவது மட்டுமல்ல; சிறுமையும் ஆகும்எனவே, அத்தகைய செயலைக் கண்டித்தனர்!


ஆனால், இன்று இளம் வயதில் தம்மக்கள் தன்னில் சிறந்தோர் எனப் பெருமிதம் கொண்டு, அறிவின் விளிம்பில் இருப்பவர்கள் பேச, நாமே ஊக்குவிக்கும் நிலை பரந்து கிடக்கிறதுஇதிலென்ன தவறு? எனக் கேள்வி எழுப்பலாம்! தவறில்லைஆனால், தன்முனைப்பிற்கு கொம்பு சீவி விடுகிறோம்பின்னர், தலைப் படும்போது தவறுகள் தன்னை மறைத்து விடும் உண்மை கசக்கிறது.


ஆக, பண்பாடு என்பது தொன்று தொட்டு வருவதுஅத்தகைய பண்பாட்டை பன்னெடுங் காலமாகக் காத்து வந்ததைத்தான்,  


திருக்குறள் போன்ற மறைநூலுக்கு உரை எழுதிய ஆசிரியர்கள் மெய்ப்பித்து உள்ளனர்.  


அத்தகைய பண்பாட்டை வலியுறுத்துவதும்; அதன் தன்மையை எடுத்துரைப்பதும் தான் இன்றைய குறள்!


ஆகவே, சிந்தனையைச் சீரிய முறையில் உள் விதையுங்கள்நிச்சயம் தென்னையை விதைத்த இடத்தில் வாழை வாரா என்ற உயரிய உண்மையுடன் உய்வோம் வாழ்வில்!

வேந்தன் அரசு

unread,
Feb 21, 2018, 12:32:52 PM2/21/18
to vallamai
"கல்லா ஒருவன் தகைமை"

இதை கல்லாஒருவன்     தகைமை என வாசிப்பதா? அல்லது கல்லா      ஒருவன்தகைமை என வாசிப்பதா?

கல்லாஒருவன்   தகைமை = கல்லாத ஒருவனுடைய தகைமை.
கல்லா    ஒருவன்தகைமை=  ஒருவனுடைய தகைமையைப்பற்றிக்கல்லாமை 


20 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 9:55 அன்று, KKSR <aur...@gmail.com> எழுதியது:




















--
Sent from Mobile

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

வேந்தன் அரசு

unread,
Feb 21, 2018, 12:39:55 PM2/21/18
to vallamai, மின்தமிழ்
கோட்டி என்பதற்கு இருபொருள் உள.
கோஷ்டி மற்றும் அவையில் உரையாற்றுவது.

20 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 4:23 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

N. Ganesan

unread,
Feb 21, 2018, 2:51:12 PM2/21/18
to மின்தமிழ், vallamai
2018-02-21 9:39 GMT-08:00 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
கோட்டி என்பதற்கு இருபொருள் உள.
கோஷ்டி மற்றும் அவையில் உரையாற்றுவது.

gOSThI has both meaning.

Monier-Williams gives, among others,
http://www.sanskritdictionary.com/?q=go%E1%B9%A3%E1%B9%ADh%C4%AB&iencoding=deva&lang=sans&action=Search

goṣṭhī = meeting, meeting room, conversation, dialogue, discourse, talking together ...

विविधशास्त्रगोष्ठी vividhaśāstragōṣṭhī = discourse about various sciences

NG

KKSR

unread,
Feb 22, 2018, 12:19:30 AM2/22/18
to vall...@googlegroups.com
இனிய காலை வணக்கம்!

தினம் ஒரு குறள் 

உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக் 
களரனையர் கல்லா தவர்.

கல்லாதவர் உயிருளர் என்று அறியப்படுவரே அன்றி களர் நிலத்தில் நெற்பயிர் விளையாதைப் போல கல்லாதாராலும் ஒரு பயனும் வாராது.

ஒரு காலம் வரை கல்வியில் சிறந்தோங்கிய சமூகம் மண்ணில் இருந்ததென்றால், அது தமிழ்ச் சமூகம் மட்டுமே என்பதில் இரு வேறு கருத்துகளுக்கு இடமில்லை.  அத்தகைய சான்றாண்மைச் சமூகம், கால வெள்ளத்தில் பல்வேறு பின்னடைவுகளைச் சந்தித்து, கல்லாமை இருள் சூழ்ந்த நிலையிலும் இருந்தது.  தற்போது, நூலறிவில் மீண்டு வந்தாலும், அது மட்டும் கல்வி ஆகா.  

நூலறிவு கல்வியின் ஒரு அங்கமே.  நூலறிவை வாழ்க்கையில் பழக்க வேண்டும்.  பண்பட வேண்டும். பார்வையில் அறிய வேண்டும்.  அதைத் தான் நம் முன்னவர்கள்,

சொல் புத்தி வேண்டும்; அல்லது சுய புத்தி வேண்டும் எனக் கூறினர்.

கல்வி என்பதை புத்தி என்றும் கொள்ளலாம்.  புத்தியில் உறைவதே புழக்கத்தில் வரும்.  அத்தகைய புத்தியில் நேர்மை, நயம், சாதுர்யம், சமூகம் சார்ந்த நன்மை, பயன்பாடு இருக்குமானால்,

அதுதான் கற்றவருக்குச் சிறப்பு!  

கல்வி அறிவு அற்றவர்களை மனிதர்களே அல்ல என்று விளித்த ஒரே குரலுக்குச் சொந்தங்கள் நாம்!  மீண்டும் நினைவில் கொள்க.... கல்வி என்பது ஏதோ ஒரு அங்கீகாரத்திற்காக, வாங்கும் பட்டம் அல்ல!  கல்வி என்பது ஒரு பண்பாடு; பயன்பாடு!!

ஆக, கல்வி அறிவில்லாதாரைக் களர் நிலத்திற்கு ஒப்பிடுகிறார் நம் ஞானத் தந்தை.  

அதென்ன களர் நிலம்?

நிலங்க ளெல்லாம் கட்டடமாக்கும் ஒரு காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நமக்குக் களர் நிலம் பற்றிய அறிவும் அவசியமே.

களர் நிலம் என்பது காய்ந்த நிலம்; வறண்ட நிலம்; உலர்ந்த நிலம்; உவர்ந்த நிலம்.  ஆங்கே, ஒரு புல்லுக்குக் கூட வாய்ப்பில்லை.  பெரும்பாலும் எம்போன்ற முகவை மாவட்டத்துக் காரர்களுக்கு, மிகவும் பரிச்சயமான நிலம்.  வானம் பார்த்த பூமி.  அது போன்ற நிலத்தில், என்ன விளையும்?

அதை ஒப்பக் கல்லாதரால் பயனில்லை என்று சொல்வதோடு நிறுத்தாமல், அத்தகையோர் உடலில் உயிரோட்டம் இருப்பதால், மனிதர் என்ற உருவில் இருக்கிறார்; ஆனால், அவரால் மனித குலத்திற்குப் பயனில்லை என்று கூறுகிறார் வள்ளுவர்.

என்ன நண்பர்களே, உள்ளத்தின் ஒரத்தில் உங்கள் எண்ணத்தைச் சீண்டுகிறதா இக்குறள்?

இதுதான் நாம்! நம்மைத் தேடுவோம்! நலமே பெறுவோம்!!

KKSR

unread,
Feb 22, 2018, 9:25:03 AM2/22/18
to vall...@googlegroups.com, மின்தமிழ்

திருக்கோட்டியூர் என்று எங்கள் பழைய முகவை மாவட்டத்தில் ஒரு ஊர் உண்டு.  அதற்கும் இந்தச் சொல்லுக்கும் ஏதும் தொடர்பு உண்டா?


--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
--
Sent from Mobile

KKSR

unread,
Feb 23, 2018, 2:11:55 AM2/23/18
to vall...@googlegroups.com
இனிய காலை வணக்கம்!

தினம் ஒரு குறள்

நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம் 
மண்மாண் புனைபாவை யற்று.

கற்றலை அதன் எல்லைவரை சென்று, சிறப்பை உணர்ந்து, நிபுணத்துவம் பெறாதவரது தோற்ற வளமையானது, மண்ணால் தேர்ந்து செய்யப்பட்ட சித்திரப் பொம்மையை ஒத்ததாகும்.

இன்றைக்கு எவ்வளவோ அறிவியல் முன்னேற்றங்கள்; புதிய கண்டுபிடிப்புகள்; விண்ணையே பிளக்க நினைக்கும் ஒப்பற்ற ஆராய்ச்சிகள்; உலகப் பரப்பை ஒரு புள்ளியில் நிறுத்தும் வலிமை என மலைக்க வைக்கும் அறிவுத்திறனை

அன்றே தீர்மானித்த தீர்க்கதரிசிகள் நம்மவர்கள் என்றால் நம்புவதற்கு அலட்சியமாகத் தான் இருக்கிறது.  

என்ன பெரிதாகச் சொல்லி விட்டார்கள்? இன்னும் பழமை பேசிக் கொண்டு, பொழுதை வீணடிக்க என்ற எண்ணம் வரலாம்!  இப்படித்தான் இனிவரும் தலைமுறை இருக்கும் என்பதுதான் எம்போன்றோரின் அடிமனதில் வருடும் ஆழ்ந்த கவலை நண்பர்களே!!

இன்றைய முன்னேற்றம் எப்படி வந்தது? ஆராய்ச்சிக்குக் காரணமாக இருப்பது எது? மண்ணிலிருந்த மனிதனை விண்ணுக்குக் கொண்டு சேர்த்தது எது? உலகத்தையே ஒரு குடையின் கீழ்க்கொணர்ந்த ஒப்பற்ற வளர்ச்சி எதனால் சாத்தியமாயிற்று?

அனைத்துக் கேள்விகளுக்கும் அணுக்கமாக இருக்கும் குறள்தான், 

‘நுண்மாண் நுழைபுலம்’ 

இரண்டே வார்த்தைகளில் நான்கு சொற்களைக் கொண்டு,

இன்றைய வளர்ச்சிக்கு வித்திட்டது என்பதை நாம் உளமார உணர வேண்டும்!

மேற்கூறிய நான்கு சொற்களும் நான்கு வேதங்களுக்கு ஒப்பானது என்று சொல்வதில் பெருமை கொள்வோம்.

நுண் - மிகவும் சிறிய; அணுவினும் சிறிய, இன்னும் சொல்ல வேண்டுமானால், கருவியின் துணைகொண்டே காண இயலும் வகையான என்று பொருள்

மாண் - மாண்புடைய; சிறந்த; உயர்ந்த; மிக மதிப்பு வாய்ந்த எனப் பொருளை அடுக்கலாம்.

நுழை - உட்செலல்; புகுதல்; 

புலம் - புலமை; அறிவு; நிபுணத்துவம்

இப்படித்தான் கற்க வேண்டும் எனச்
சொன்னதோடு மட்டுமல்லாமல்,  இத்தகைய முறையில் கல்வியை அணுகாதார் அறிவு,

மண்ணால் செய்யப்பட்ட பொம்மைக்கு நிகரென்கிறார்.  ஆக, அங்கீகாரத்திற்காக மட்டும் படிக்கும் இன்றைய நிலையை மண்பொம்மைக்கு ஒப்பிட்ட ஞானத்தை விவரிக்க வார்த்தைகள் தமிழில் இல்லை.

☝️இதுதான் கல்வி என்று உலகத்தையே சுற்றி வாராமல் உட்கார்ந்த இடத்தில் சொன்னவர் நாம் போற்றும் வள்ளுவர் என்பது நம் குருதியில் கலந்து நம் அறிவை, பண்பை, தன்மையை, தகைவை, தமிழை உயர்த்த வேண்டாமா?  

உலகுக்குச் சொன்ன நாம் பிரிந்து, நலிந்து, நொந்து கிடக்க, 

மாற்றவர் உயர்ந்து நிற்கிறார்.  இது வேதனை தரும் நிலைதானே?  

கல்வியை, கற்கும் முறையை, கற்றலின் பண்பை, இன்றைய கல்விமுறை சொல்வதற்கு முன்னால் சொல்லிச் சென்ற 

வள்ளுவம் பயிலுங்கள்! வாழ்வே பயனுறும்!!

KKSR

unread,
Mar 10, 2018, 12:28:10 AM3/10/18
to vall...@googlegroups.com

கல்லாஒருவன் தகைமை பற்றியே இக்குறளில் வள்ளுவர் சொல்கிறார்!

கல்லா ஒருவன்தகைமை  பேச வாய்ப்பில்லாமல் போகும்.  அறியாமல் எப்படி பேசுவது? 




---------------------------------------------------------------------------------------------------
This email transmission is confidential and intended for the addressee only. It may contain privileged and confidential information. If you are not the person or organisation to whom it is addressed, you must not copy, distribute, or take any action in reliance upon it. If you have received this message in error, please notify the sender immediately.

KKSR

unread,
Mar 10, 2018, 12:28:42 AM3/10/18
to vall...@googlegroups.com

இனிய காலை வணக்கம்!

தினம் ஒரு குறள்

சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ 
நன்றின்பால் உய்ப்ப தறிவு.

எண்ணங்களை அதன் போக்கில் செல்ல விடாமல், நன்மை தீமை அறிந்து, தீயவைகளை விலக்கி, நன்மையை நாடிச் செலுத்துவதே அறிவு ஆகும்.

அதென்ன சென்ற இடம்?

போனா போன இடம்; வந்தா வந்த இடம் என்று மனம் போன போக்கில் போகாதே எனும் சொல்லாடல் வழக்கில் உண்டு.

இத்தகைய சொல்லாடல்கள் இலக்கியந் தொட்டு வந்தது என்பதற்கான ஆதாரமாக இருப்பது இன்றைய குறள்.

சென்ற இடத்தால் செல்லவிடா என்று சொல்கிறார்!

நம் எண்ணங்களானது ஓரிடத்தில் நில்லாது ஒன்றன்பின் அலையும் போக்கினை அறிந்து, அதன் நல்வினை; தீவினை அறிதல் வேண்டும். அதனைத் தான் ‘செல்லவிடா’ என்று கயிறு போடச் சொல்கிறார்.

தீது ஒரீஇ

எண்ணம் தோன்றும் இடத்தே; அதன் பயனாராய்ந்து; தீமையை உருவானதன் கண்ணே நிறுத்த வேண்டும். இது அவ்வளவு எளிதான காரியம் அல்ல; புலன் வழி செல்லும் பொருளை நில் என்று சொன்னால் ஆசை விடுமா? ஆசை எனும் இச்சைதானே இன்னலுக்குக் காரணமாக இருக்கிறது.

ஆகவே, தீதை எண்ணத்தின் கண்ணே விலக்க, முறையான பயிற்சியும், வலிமையும் வேண்டும். அதைத்தான் தீது ஒரீஇ என வலியுறுத்துகிறார்.

நன்றின் பால் உய்ப்பது அறிவு.

நல்லவை நாடி நிற்பது. நல்லவற்றை மென்மேலும் ஊக்குவிப்பது; நல்லவை பெருக்குவது அறிவாகும்.

படிப்பதில் காட்டும் ஆர்வம் பழக்கத்தில் வருவது என்பது எளிதல்ல! இருந்தாலும் முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்!!

நாளை மற்றொரு குறளில் சிந்திப்போம்!

- சுரேஜமீ 
10-3-2018


வேந்தன் அரசு

unread,
Mar 10, 2018, 12:43:32 PM3/10/18
to vallamai
நாளொருகுறள் திங்களொருகுறளாகிவிட்டதே ஐயா!

9 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 9:28 அன்று, KKSR <aur...@gmail.com> எழுதியது:

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

KKSR

unread,
Mar 11, 2018, 12:25:16 AM3/11/18
to vall...@googlegroups.com
மன்னிக்கவும்.

வரவேற்பு இல்லையே என எண்ணி இருந்தேன்;  இனி வரும் நிச்சயம்!

இருப்பது  ஒன்றே  எனினும்  நயப்போம் நாளும்!

நன்றி 

அன்புடன் 
சுரேஜமீ 




---------------------------------------------------------------------------------------------------
This email transmission is confidential and intended for the addressee only. It may contain privileged and confidential information. If you are not the person or organisation to whom it is addressed, you must not copy, distribute, or take any action in reliance upon it. If you have received this message in error, please notify the sender immediately.

KKSR

unread,
Mar 11, 2018, 12:26:10 AM3/11/18
to vall...@googlegroups.com
இனிய காலை வணக்கம்!

தினம் ஒரு குறள் 

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் 
மெய்ப்பொருள் காண்ப தறிவு.

எச்செய்தியாய் இருப்பினும், யார் கூறக் கேட்பினும், கூறப்பட்ட செய்தியின் மெய்த்தன்மையைத் தன்னாய்வு செய்து உணருவது அறிவு எனப்படும்.

மிக எளிமையான, அனைவருக்கும் மிகவும் பரிச்சயமான ஒரு குறள். என்ன சொல்கிறது பார்ப்போம்!

யார், யார் வாய்க் கேட்பினும்?

இவன் யார் எனக்கு அறிவுரை சொல்ல? இவன் ரொம்ப ஒழுங்கோ? சொல்றதுலாம் சரி; முதல்ல நீ சொன்னபடி நடக்கிறயா?

☝️இதுதான் நம் முன் இருக்கும் பிரச்சினை.  எவர் சொன்னால் என்ன? நாம் அதன்கண் உள்ள நல்லவற்றைப் பிரித்து உணரத் தெரிய வேண்டும்.  நெருப்பு உடனே பற்றிக்கொள்ளும் இயல்புடையது என்பதற்காக, நெருப்பு அபாயகரமானது எனும் மனப்போக்கு தவறானது.  அதே நெருப்புதான் உணவு சமைக்கவும் பயன்படுகிறது.  அதுபோல், தீயோர் சொல்லிலும் நயம் இருக்கும்.  அதை நாடுவது நல்லோர் இயல்பாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவே,

யார்யார் வாய்க் கேட்பினும் என்கிறார்.

மெய்ப்பொருள் காண்பது அறிவு.

மெய்ப்பொருள் என்பது உண்மை உணருவது; நல்லவை நாடுவது; நயம் பயப்பது; அஃதை ஆய்ந்து தெளிவதுதான் அறிவே அன்றி

சொன்னவரின் தகுதியை வினவுவது அறிவாகாது.

வேந்தன் அரசு

unread,
Mar 11, 2018, 11:33:15 AM3/11/18
to vallamai


10 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 9:25 அன்று, KKSR <aur...@gmail.com> எழுதியது:

இனிய காலை வணக்கம்!

தினம் ஒரு குறள் 

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் 
மெய்ப்பொருள் காண்ப தறிவு.

எச்செய்தியாய் இருப்பினும், யார் கூறக் கேட்பினும், கூறப்பட்ட செய்தியின் மெய்த்தன்மையைத் தன்னாய்வு செய்து உணருவது அறிவு எனப்படும்.

மிக எளிமையான, அனைவருக்கும் மிகவும் பரிச்சயமான ஒரு குறள். என்ன சொல்கிறது பார்ப்போம்!

யார், யார் வாய்க் கேட்பினும்?

இவன் யார் எனக்கு அறிவுரை சொல்ல? இவன் ரொம்ப ஒழுங்கோ? சொல்றதுலாம் சரி; முதல்ல நீ சொன்னபடி நடக்கிறயா?



வள்ளுவரே சொன்னாலும்.
 

வேந்தன் அரசு

unread,
Mar 11, 2018, 11:35:16 AM3/11/18
to vallamai


10 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 9:25 அன்று, KKSR <aur...@gmail.com> எழுதியது:

மன்னிக்கவும்.

வரவேற்பு இல்லையே என எண்ணி இருந்தேன்;  இனி வரும் நிச்சயம்!

நீங்கள் இறைவனைப்பரவும்போது உச்சரிக்கும் மந்திரங்களை யாரும் கேட்கிறார்களா என கவலைப்படுவதுணடா!!

KKSR

unread,
Mar 12, 2018, 8:56:27 AM3/12/18
to vall...@googlegroups.com
இனிய காலை வணக்கம்!

தினம் ஒரு குறள் 

எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய் 
நுண்பொருள் காண்ப தறிவு.

தம் சிந்தையில் தோன்றும் சீரிய கருத்துகளை இலகுவாக அடுத்தவர் எளிதில் புரியும்படி கூறுவதும், பிறர் கூறும் கருத்துகளில் உள்ள நுட்பமான பொருளை அறிந்து கொள்வதும் அறிவு ஆகும்.

வேந்தன் அரசு

unread,
Mar 12, 2018, 12:26:18 PM3/12/18
to vallamai
வணக்கம் இனிய காலை!

12 மார்ச், 2018 ’அன்று’ முற்பகல் 5:56 அன்று, KKSR <aur...@gmail.com> எழுதியது:
--
Sent from Mobile

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

KKSR

unread,
Mar 13, 2018, 12:06:16 AM3/13/18
to vall...@googlegroups.com
இனிய காலை வணக்கம்!

தினம் ஒரு குறள்

உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும் 
கூம்பலும் இல்ல தறிவு.

இயற்கைக்கு ஒத்தவாறு இயைந்து வாழ்தலும், விருப்பு, வெறுப்பு நீக்கிச் சம நிலையில் இருத்தலும் அறிவு ஆகும்.

வேந்தன் அரசு

unread,
Mar 13, 2018, 1:08:46 AM3/13/18
to vallamai
தொட்பமா? ஒட்பமா?

12 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 9:06 அன்று, KKSR <aur...@gmail.com> எழுதியது:
--
Sent from Mobile

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

KKSR

unread,
Mar 13, 2018, 1:31:51 AM3/13/18
to vall...@googlegroups.com
ஓட்பம் - அறிவு என்ற பொருளில் உரையாசிரியர்கள் பயன்படுத்தி இருந்தாலும் விவாதிக்க வேண்டிய வார்த்தை.
 

நுட்பம் - நுண்ணிய தகவல் 
ஒட்பம் - ?

விவாதிப்போம் 




---------------------------------------------------------------------------------------------------
This email transmission is confidential and intended for the addressee only. It may contain privileged and confidential information. If you are not the person or organisation to whom it is addressed, you must not copy, distribute, or take any action in reliance upon it. If you have received this message in error, please notify the sender immediately.

KKSR

unread,
Mar 13, 2018, 10:43:49 PM3/13/18
to vall...@googlegroups.com

இனிய காலை வணக்கம்!


தினம் ஒரு குறள்


எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு 

அவ்வ துறைவ தறிவு.


உலகம் எதில் நிலைகொள்கிறதோ, உலகத்தைத் தழுவித் தானும் அதில் நிலைகொள்வதே அறிவுடைமை ஆகும்.



எவ்வது உறைவது உலகம்?


உறைவது - வாழ்வது; வசிப்பது; நிலைப்பது; தனதாக்குவது; இருப்பது; தங்குவது; எனப் பல பொருள் கூறலாம்.


ஆக, உலகம் எதைத் தனதாக்குகிறதோ, எதில் தன்னை நிலை நிறுத்துகிறதோ, எது யாவருக்கும் நலம் பயக்கிறதோ, அஃதே சரியெனப்படுவது உலகம்.


அது சரி! அதென்னங்க உலகம்? உலகம் எப்படி நிலைகொள்ளும்? தனதாக்கும்? சரின்னு சொல்லும்?


இப்போ, ஊரே கொண்டாடுகிறது அப்படின்னு சொல்றோம்!  


ஊரா கொண்டாடுது?  ஊர் உள்ள மக்கள் தானே?  இதனை இடவாகு பெயர் என்று சொல்வார்கள். அதாவது, இடத்தை வைத்துப் பொருள் விளங்கிக் கொள்வது!


எதை உலகளாவிய சமூகம், அறிவுடைச் சமூகம்; ஆன்றோர் சமூகம்; சகமனிதன் நலன் விரும்பும் சமூகம்,


சரியானது, பயனானது, நலனானது, சிறப்பானது, இயல்பானது என ஆய்ந்து அதன் வழி செல்ல எத்தனிக்கிறதோ, அதைத்தான், உலகம் உறைவது என்று வள்ளவப் பெருந்தகை உணர்த்துகிறார்.


ஈரடி எழுசீர் இயம்பும் திருக்குறள்

வேரடி உலகில் உயிர்க்கு!        - சுரேஜமீ 


☝️இதுதான் வள்ளுவத்தின் சிறப்பு!  


முக்காலத்தை அறிந்தவன் இறைவன் என்றால் முக்காலத்திற்கும் முத்தாக வாழ்வியலைச் சொல்வது; மனிதம் போற்றுவது; உலக உயிர்களின் அடி நாதமாக, வேராக இருப்பது வள்ளுவம் என்பதே தமிழர்கள் பெருமை கொள்ள வேண்டிய செய்தி.


அவ்வது உறைவது அறிவு!


ஆக, ஆன்றோர் வழியில், சான்றோர் வழியில், 


சாதாரண மக்கள் செல்வதே அறிவுடைமை ஆகும்.  


இதுதான் உலகத்தோடு ஒட்ட ஒழுகல் என்று பிறிதொரு குறளில் வள்ளுவர் அறிவுறுத்தினார்.


இப்ப சொல்லுங்க, நல்லவங்க பக்கம் நாம இருக்கிறது தானே சரி?


அது தாங்க வள்ளுவம்!


நாளை மற்றொரு குறளில் சிந்திப்போம்!!


- சுரேஜமீ 

--
Sent from Mobile

வேந்தன் அரசு

unread,
Mar 14, 2018, 5:24:46 PM3/14/18
to vallamai
<
உலகம் எதில் நிலைகொள்கிறதோ, உலகத்தைத் தழுவித் தானும் அதில் நிலைகொள்வதே அறிவுடைமை ஆகும்>

உலகம் இரண்டுவகையாகப்பிரிந்தால்?

13 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 7:43 அன்று, KKSR <aur...@gmail.com> எழுதியது:
--
Sent from Mobile

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

KKSR

unread,
Mar 14, 2018, 11:29:23 PM3/14/18
to vall...@googlegroups.com

இனிய காலை வணக்கம்


தினம் ஒரு குறள் 


அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார் 

அஃதறி கல்லா தவர்.


அறிவுடையவர்கள் ஒரு செயலின் நன்மை தீமை அறிந்து செயல்படும் ஆற்றல் உடையவர்கள்அத்தகைய பண்பு இல்லாதவர்கள் அறிவு இலார் ஆவர்.

KKSR

unread,
Mar 15, 2018, 12:53:53 AM3/15/18
to vall...@googlegroups.com
புரிவதில் தெளிவதே அறிவுடையார் இயல்பு.


---------------------------------------------------------------------------------------------------
This email transmission is confidential and intended for the addressee only. It may contain privileged and confidential information. If you are not the person or organisation to whom it is addressed, you must not copy, distribute, or take any action in reliance upon it. If you have received this message in error, please notify the sender immediately.

KKSR

unread,
Mar 15, 2018, 12:54:48 AM3/15/18
to vall...@googlegroups.com
​*பிரிவதில்* என்று வாசிக்கவும்.  பிழைக்கு மன்னிக்கவும்.​


---------------------------------------------------------------------------------------------------
This email transmission is confidential and intended for the addressee only. It may contain privileged and confidential information. If you are not the person or organisation to whom it is addressed, you must not copy, distribute, or take any action in reliance upon it. If you have received this message in error, please notify the sender immediately.

வேந்தன் அரசு

unread,
Mar 15, 2018, 6:49:31 PM3/15/18
to vallamai
ஏர்செல் அனந்தகிருசுணன்.

14 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 8:28 அன்று, KKSR <aur...@gmail.com> எழுதியது:
--
Sent from Mobile

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

KKSR

unread,
Mar 16, 2018, 12:49:17 AM3/16/18
to vall...@googlegroups.com

இனிய காலை வணக்கம்!


தினம் ஒரு குறள் 


அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது 

அஞ்சல் அறிவார் தொழில்.


அஞ்ச வேண்டிய பாதகமான செயல்களுக்கு அஞ்சுவது அறிவுடைமை ஆகும்.  அத்தகைய செயல்களுக்கு அஞ்சாமல் இருப்பது அறியாமை.


- சுரேஜமீ 

--
Sent from Mobile

வேந்தன் அரசு

unread,
Mar 16, 2018, 1:45:35 PM3/16/18
to vallamai
பாதகச்செயல்களா? நான் பேய் பிசாசுகள்'நு நினைச்சேன்.

15 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 9:49 அன்று, KKSR <aur...@gmail.com> எழுதியது:
--
Sent from Mobile

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

KKSR

unread,
Mar 16, 2018, 11:45:19 PM3/16/18
to vall...@googlegroups.com

இனிய காலை வணக்கம்!


எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை 

அதிர வருவதோர் நோய்.


வாழ்வியலுக்கு ஒவ்வாது வருகிறது என அறிந்து, அதனின்று தன்னைக் காக்கும் ஆற்றல் பெற்ற அறிவுடையார்க்கு,  திடீர் அச்சத்தை ஏற்படுத்தும் வலி ஏதுமில்லை.  


- சுரேஜமீ 

--
Sent from Mobile

KKSR

unread,
Mar 18, 2018, 12:18:06 AM3/18/18
to vall...@googlegroups.com
இனிய காலை வணக்கம்!

தினம் ஒரு குறள்

அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார் 
என்னுடைய ரேனும் இலர்.

அறிவின் பின்னால் அனைத்தும் வரும் என்பதற்கேற்ப அறிவுடையார், அனைத்தும் உடையார் ஆவர்.  அறிவு இல்லாதோர் ஏனைய செல்வம் இருந்தும், அதன் பயன் துய்க்கும் அறிவில்லாததால், ஒன்றும் இல்லாதவர் எனப் படுகிறார்.

அறிவுடைமை அதிகாரம் முற்றும்.

KKSR

unread,
Mar 20, 2018, 12:18:51 AM3/20/18
to vall...@googlegroups.com
தினம் ஒரு குறள்

இனிய காலை வணக்கம்!

இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா 
உவகையும் ஏதம் இறைக்கு.

இருந்தும் இல்லையென மறுக்கும் குணமும், மேன்மைகள் நீங்கிய மானமும், மனம் போன போக்கில் கொள்ளும் மகிழ்ச்சியும், நாடாளும் மன்னனுக்கு நல்லதல்ல.
Reply all
Reply to author
Forward
0 new messages