டமால் டுமீல்! என் மேலும்....! சரி. விட்றுவோம். மலர்களுக்கிடையே
நாருக்கு என்ன வேலை!
--
--
ஒட்டுமொத்தாமான தமிழ் வளர்ச்சி தமிழ்ப் பற்று திராவிடக் கட்ட்சியினரும் சங்கத அறிஞர்களும் மட்டுமே உருவாக்கியது என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா
1930 ஆம் ஆண்டு தமிழ் வளர்ச்சியில் ஒரு திருப்புமுனையாய் அமைந்த காலகட்டம் <<<
இது எனக்கு நன்றாகப் புரிகின்றது. வேதனையாகவும் இருக்கின்றது,மேலு, ஞானத் தமிழ் ஆய்வும் வீழ்ந்து விட்டது, சோமசுந்தர நாயக்கர் போன்றும் மறைமலை அடிகள் போன்றும் திரு,வி.க போன்றும் இன்று யார் உண்டு? தமிழனாகய ஒருவன் புதியதாக ஓர் நல்ல ஆழமான மெய்யறிவுப் பனுவலை எழுதினால் அதனைப் படித்து கருத்து தெரிவிப்பார் யாரும் இல்லைகதை சொல்லும் கூட்டமாக தமிழினம் வீழ்ந்துவிட்டது.
ஸ்வராஜ்யக் கட்சி தியோசாபிகல் சொஸைட்டி அசல் திராவிட சங்கத்தை நிறுவித் தமிழ் வளர்த்த அயோத்தி தாச பண்டிதர் இரட்டை மலை சீனிவாசன் (ஒரு பைசாத் தமிழன்) ...
On Thursday, 25 July 2013 22:23:32 UTC-7, பூனைக் கவிராயர் wrote:
--
--
--
சமஸ்கிருதம் தேய்ந்து இந்தி ஆச்சு. காரணம் ஆயணும்.
உழுந்தை உரத்,
தொண்டைக்காயை டிண்டோராமிர்யலை மிர்ச்சிமகளிரை = மஹிளாகள்ள நாயகனை கள்நாய்க்இன்னும் எத்தனை சிதைந்தனவோ
சமஸ்கிரிதம் தேய்ந்து இ9ந்தி ஆகவில்லை.
வேறு எது தேய்ந்து?
சமஸ்கிரிதம் தேய்ந்து இ9ந்தி ஆகவில்லை.
தமிழும் தனித்தமிழும்! : ஜெயகாந்தன்
தேவ்காரு என் வாதத்துக்கு வலு சேர்க்கிறார்.
On Saturday, 3 August 2013 16:54:07 UTC-7, வேந்தன் அரசு wrote:தேவ்காரு என் வாதத்துக்கு வலு சேர்க்கிறார்.நன்றிOn Saturday, 3 August 2013 17:23:37 UTC-7, வேந்தன் அரசு wrote:
இவரால் இயலாது எனில் எவராலும் இயலாது?? <<<வண்டி சக்கரத்துக்கு அந்த காலத்தில் பூண் போட்டார்கள். டயரும் பூண் தான். அது தொளை ஆயிடுச்சு<<<<மிதிவண்டி,ஈர் உருளி, துவிசக்கர வண்டி, <<<<<வேந்தர் ஐயா ‘தேவ்காரு’ என அழகாக விளித்து ஜெ . கா அவர்களின்சொற்களுக்கு மாற்றாகத் தமிழ்ச்சொற்களையும் தருகிறார்.நல்லது.
ஐயங்கார் எனும் சொல்லாட்சியை கருதவும்.
On Sunday, 4 August 2013 03:43:26 UTC-7, வேந்தன் அரசு wrote:ஐயங்கார் எனும் சொல்லாட்சியை கருதவும்.அச்சொல்லாட்சியும் தனித்தமிழன்று.’ஐயகாரு’ என்பதன் திரிபு. வடுகர் ஆட்சிகாலத்தின் உருவாக்கம்.
ஒருபுறம் சங்கத நீக்கம் நடைபெற்றாலும்நிதர்சனம், அவதானிப்பு போன்ற புதிய பயன்பாடுகள்பரவலாக இருக்கத்தான் செய்கின்றன.
ஐயங்கார் ஐயகாரு ஆகலை என நிறுவனுமே?உரைகாரர் என காரர் சொல்லாட்சி ஏற்கனவே தமிழில் உண்டே
உரையைச் செய்தவர் உரைகாரர்; நெறியைக் காட்டுபவர் நெறிகாரர்; சமையலைச் செய்பவர் சமையல்காரர்.....2013/8/4 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
ஐயங்கார் ஐயகாரு ஆகலை என நிறுவனுமே?உரைகாரர் என காரர் சொல்லாட்சி ஏற்கனவே தமிழில் உண்டேஅப்படியானால், தேவ்காரு என்பது, தேவைச் செய்தவறான அவருடைய தந்தையைக் குறிக்குமோ? :)
ஐயங்கார் ஐயகாரு ஆகலை என நிறுவனுமே?உரைகாரர் என காரர் சொல்லாட்சி ஏற்கனவே தமிழில் உண்டே
கலப்பற்ற தூயமொழிகள் உலகில் எங்கே உள்ளன ?
கலப்பற்ற ‘தூயமொழி ‘ என்று பலர் பேசும் ஒரு வழக்கியல் மொழி, எங்காவது உலகில் தற்போது இருக்கிறதா என்னும் கேள்விக்குப் பதில் கிடைப்பது சிரமம்! வடதுருவத்துக்கு அருகில் எங்காவது நாகரீகக் காற்றுப் படாமல் வாழும் எஸ்கிமோ இனத்தவர், அல்லது நீலகிரி மலை உச்சியில் தனித்து வாழும் காட்டினத்தவர் பேசும் எழுத்தற்ற சில மொழிகள் கலப்பற்றுச் சுத்தமாக இருக்கலாம்! அவர்களில் பலரது மொழிகளுக்கு எழுத்துக்கள் கூட இல்லாமல் இருப்பதால், கலப்பதற்கு மூல வடிவங்களே இல்லாத அந்த வாய் மொழிகளைப் பற்றி இங்கே நான் குறிப்பிட வில்லை! எழுத்து வடிவங்கள் கொண்டு பல்லாண்டு காலம் பெரும்பான்மை இனத்தவர் பயன்படுத்தும், மொழிகளின் கலப்பற்ற தூய்மையைப் பற்றியே என் வினா எழுகிறது.
மனித இனங்கள் உலகெங்கும் தோன்றிய போதே அவற்றின் பேச்சு மொழிகளும் வளர்ச்சி யடைந்து, சிறுகச் சிறுக எழுத்து வடிவங்கள் பெற்றிருக்க வேண்டும். சமூகங்கள் நல்லாட்சி நிழலில் வளர்ந்து, நாகரீகம் அடைந்து, தொழில் வாணிபங்களால் செல்வம் பெருகிய பொற்காலத்தில், மொழிகள் ‘இலக்கணக் கட்டுப்பாடுகள்’ விதிக்கப்பட்டு இலக்கியங்களும், காவியங்களும் பிறந்திருக்க வேண்டும். தனித்தனி இனங்களின் இடப்பெயர்ச்சியாலும், அன்னிய இனத்தவர் படையெடுப்பாலும், வேறின மக்கள் கலந்து பிணைந்த போது, நாட்டு மொழிகளிலும் கலப்புச் சொற்கள் நாளடைவில் சேர்ந்தன! இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக வேதியர்கள் கையாண்ட சமஸ்கிருதத்தின் பிணைப்புத் தமிழ்மொழியில் சேர்ந்துள்ளதை நாம் ஏற்றுக் கொண்டு, அச்சொற்களையும் தமிழில் பயன்படுத்திக் கொள்வதுதான் அறிவுடமையாகும்.
கலப்பற்ற தனித்தமிழ் நடையில் இலக்கியச் சொற்போர் நடத்தலாம். இலக்கியப் பாக்கள், நூல்கள், காவியங்கள் படைக்கலாம். ஆனால் நாளுக்கு நாள் வேகமாய் முன்னேறிச் செல்லும் விஞ்ஞான முற்போக்கு அறிவுக் களஞ்சியங்களைத் தனித்தமிழில் ஆக்க முடியுமா என்பதில் ஐயப்பாடு உள்ளது! ஆங்கிலம் உள்பட ஐரோப்பிய மொழிகள் எல்லாம் புது விஞ்ஞானச் சொற்களை அப்படியே ஏற்றுக் கொண்டு, படைப்புகளைப் புத்தக வடிவில் ஆக்கிக் கொள்ளுகின்றன. ஆனால் தமிழ் உள்பட பாரத மொழிகள் பல, அவ்விதம் விஞ்ஞான வளர்ச்சிகளைப் பின்பற்றி, அவ்வப்போது நூல் வடிவில் எழுதிக் கொண்டு வருகின்றனவா என்பது தெரியவில்லை! அதே சமயம், விஞ்ஞானச் சொற்களை எல்லாம் தனித்தமிழில் வடித்து விடலாம் என்று கனவு காண்போர் கனவை நான் கலைக்க விரும்ப வில்லை!
ஆங்கிலம் விஞ்ஞான வளர்ச்சியைக் காட்டும் அகிலத்தின் பலகணி
ஏறக்குறைய 500 ஆண்டுகள் தமிழ்மொழி உள்பட எல்லா இந்திய மொழிகளும், ஆங்கிலம் போல் பூரண வளர்ச்சி யின்றி அடிமை மொழிகளாகப் புறக்கணிக்கப் பட்டுக் கீழ் நிலையில் கிடந்தன. 1947 இல் பாரதம் சுதந்திரம் அடைந்ததும், இந்திய மொழிகளும் விடுதலை பெற்றன. பாரதத்தின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு மொழிவாரியாக மாநிலங்களைப் பிரித்து, மாநில அரசுகள் அரசாளத் துவங்கிய பிறகுதான், பிராந்திய மொழிகளுக்கு நல்ல காலம் பிறந்தது. கண்ணொளி பெற்ற பாரத மொழிகள், ஆங்கிலத்தின் உதவியால் வளர்ச்சி யடைந்தன! ஆரம்பப் பள்ளி, உயர்நிலைப் பள்ளிகளில் சரித்திரம், பூகோளம், சமூகவியல், விஞ்ஞானம், கணக்கு ஆகிய போதிப்பு நூல்கள் முதன் முதல் பிராந்திய மொழிகளில் எழுதப்பட்டன. ஆங்கில நூல்கள் பாரத மொழிகளுக்கு வழிகாட்டியாய் பாதை காட்டின! அவற்றில் பல பிராந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டன! இந்திய மொழிகள் அனைத்திற்கும் விஞ்ஞான வளர்ச்சிகளைக் காட்டும் உலகப் பலகணியாய் விளங்குவது, ஐயமின்றி ஆங்கில மொழியே!
கல்லூரிப் போதனை நூல்கள் யாவும் ஆங்கிலத்திலே அமைந்து, தொடர்ந்து ஆங்கிலத்திலே பயிற்பிக்கப் பட்டன. விஞ்ஞானம், கணிதம், மருத்துவம், சட்டப் படிப்பு போன்றவற்றைத் தெளிவாகக் கற்றுக் கொள்ள ஆங்கில மொழிக்குள்ள தகுதிபோல் பிராந்திய மொழிகளுக்குத் திறமை வர குறைந்தது 50 முதல் 100 ஆண்டுகள் கூட ஆகலாம். ஆயினும் முழுக்க முழுக்க தமிழ் மொழியிலோ அல்லது மற்ற பிராந்திய மொழிகளிலோ கல்லூரியின் தரத்திற்குப் பட்டக் கல்வி புகட்ட முடியுமா என்பதில் ஐயப்பாடுள்ளது! தமிழ் மொழியிலும், மற்ற பிராந்திய மொழிகளிலும் பட்டப் படிப்புக்குத் தகுதியுள்ள நூல்கள், தற்போது அறிஞர்களால் எழுதப்படாமையே அதற்குக் காரணம் என்று உறுதியாகச் சொல்லலாம்!
பன்மொழிகள் கலந்த கூட்டு மொழியே தற்கால ஆங்கிலம்
ஆங்கில மொழி பல நூற்றாண்டுகளாக புதுச் சொற்களை ஏற்று மாறிக் கொண்டே வந்துள்ளது. அதில் கலந்துள்ள பிறமொழிச் சொற்கள் எண்ணற்றவை. ஆங்கிலம், பிரென்ச், ஸ்பானிஷ், ஜெர்மன், இத்தலி போன்ற ஐரோப்பிய மொழிகள் அனைத்திலும், சமஸ்கிருதம் போல் பூர்வீக மொழியான கிரேக்க, லத்தீன் மொழிச் சொற்கள் அநேகம் கலந்துள்ளன. இந்திய மொழிகளிலிருந்து குரு, யோகா, பறையா, நிர்வனா, கர்மா, மந்திரம், மாயா கட்டுமரான் [கட்டுமரம்], பண்டிட், பஜார், கர்ரி [Curry-Spice] போன்ற சொற்கள் இணைந்து, ஆங்கில அகராதியிலும் இடம் பெற்றுள்ளன! உலக நாடுகளில் பல இடங்களில் சைனாவின் கராத்தே பள்ளிகள் அமைக்கப் பட்டுள்ளது போல், யோகா பயிற்சிக் கூடங்கள் தோன்றி, மேலை நாட்டவருக்கு யோகாவைச் சொல்லிக் கொடுக்கின்றன! நமது நகரங்களில் ராக் சங்கீதம் இறக்குமதி ஆனதுபோல், யோகா பயிற்சி மேலை நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகி யுள்ளது!
இவற்றை இங்கே நான் குறிப்பிடுவதின் நோக்கம், வேதாந்தம் விஞ்ஞானம் இடப்பெயர்ச்சி யாவது போல், கலாச்சாரமும் நாகரீகமும் இடம் பெயர்கின்றன! அப்போது அந்நாட்டு மொழிகளிலும் அவை இடம்பெற்று புதுச் சொற்கள் கடன்வாங்கப் படுகின்றன! இருபதாம் நூற்றாண்டின் நடுவில் அணுயுகம், அண்டவெளி யுகம் உதயமாகி விஞ்ஞானம் விரைவாக முன்னேறிப் புதுச் சொற்கள் ஆங்கிலம் போன்ற ஐரோப்பிய மொழிகளில் நுழைந்த போது, தமிழ்மொழியில் சொற்கள் அப்படி எழுதபட்டுச் சேர்க்கப் படவில்லை! பாரதம் சுதந்திரம் அடைந்த பிறகு, தமிழக அரசாங்கத்தில் யாரும் விஞ்ஞான வளர்ச்சிக்கு முதன்மை இடம் அளிக்கவில்லை!
விஞ்ஞானப் படைப்புக் களஞ்சியத்தை நூலாக்கும் புதுத்தமிழ்
‘விஞ்ஞானப் புதுத்தமிழ் ‘ என்று நான் குறிப்பிடுவது, விரிந்து பெருகும் விஞ்ஞானப் புதுமைகளை, அவ்வப்போது எழுதும் ஆற்றலுள்ள கலப்புத்தமிழ்! அந்த கலப்புத்தமிழில் ஐயமின்றி கூடியவரைப் பெரும்பானமைத் தமிழ்ச் சொற்களே [60%-80%] கையாளப்பட வேண்டும். அடுத்து வேண்டிய விஞ்ஞானக் கலைச் சொற்களில் சிலவற்றை முடிந்தால் தமிழ்ப்படுத்தலாம்; அல்லது சமமான வடமொழிச் சொற்கள் இருந்தால் எடுத்தாளலாம்; அல்லது வடமொழியில் உண்டாக்க முயலலாம்; அல்லது ஆங்கிலச் சொற்களையோ, பிறமொழிச் சொற்களையோ அப்படியே பயன்படுத்திக் கொள்ளலாம். உதாரணமாக அணுவியல் துறைகளில் அணு, பரமாணு, அணுக்கரு போன்ற பண்டைச் சொற்களை Atom, Sub-atomic Particles, Nucleus ஆகிய ஆங்கிலச் சொற்களுக்குச் சமமாகப் பயன்படுத்தி வருகிறோம்.
கதிரியக்கம் [Radioactivity], தொடரியக்கம் [Chain Reaction], பூரணநிலை [Criticality], ஆறும் தொடரியக்கம் [Sub-critical Chain Reaction], மீறும் தொடரியக்கம் [Super-critical Chain Reaction], கதிர் ஏகமூலங்கள் [Radio-Isotopes], துகள் விரைவாக்கி யந்திரங்கள் [Particle Accelerators] போன்ற தமிழாக்கச் சொற்கள் போல், நாமே படைத்துக் கொள்ளலாம். கருத்துக்களைத் தமிழ்ப்படுத்த முடியாமல் போனால், ஆங்கிலச் சொற்களை அப்படியே தமிழில் எழுதிக் கொள்ளலாம். உதாரணமாக சில பரமாணுக்களின் பெயரைத் தமிழில் நியூட்ரான் [Neutron], புரோட்டான் [Proton], எலக்டிரான் [Electron], பாஸிடிரான் [Positron], நியூட்ரினோ [Neutrino] என்று எழுதலாம். டெலிவிஷன் காட்சிப் பெட்டியைத் தொலைக்காட்சி என்று பலர் குறிப்பிடுவதும் சரியே. Rocket என்பதை ராக்கெட் என்று எழுதினால் எல்லாருக்கும் புரிகிறது. எடுத்தாளும் சொற்கள் எளிதாகவும், புரியும் படியும், புரியா விட்டால் விளக்கக் கூடியதாகவும் எழுதப்பட வேண்டும்.
ஆங்கில எழுத்துக்களுக்குச் சமமான தமிழ் எழுத்துக்கள் இல்லை என்று வருந்த வேண்டிய தில்லை. உதாரணம்: (B, D, G) போன்றவை. டாக்டர் ஹோமி ஜெ. பாபா [Dr. Homi J. Bhabha] என்னும் பெயரைத் தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் எழுதிக் காட்டலாம். டாக்டர் ஷிவாகோ [Dr. Zhivago] என்று தமிழில் எழுதி ஆங்கிலத்தில் சமப் பெயரையும் அடைப்பில் குறிப்பிடலாம். அதுபோல் சில தமிழ் எழுத்துகளுக்குச் சமமான ஆங்கில எழுத்துக்களும் இல்லை! உதாரணம்: (ழகரம், ளகரம், றகரம், ணகரம், ஞகரம்). ‘தமிழ் ‘ என்பதை ஆங்கிலத்தில் Tamil, அல்லது Thamil என்றுதானே எழுத முடியும்! TamiZ என்று யார் குறிப்பிட்டு எழுதுகிறார் ? பார்க்கப் போனால் ஒவ்வொரு மொழியிலும் சில குறைகள் இருப்பதைத் தவிர்க்க முடியாது. அதற்காக விஞ்ஞானச் சொற்களைத் தமிழில் எழுதிக் காட்ட முடியாது என்று முயலாமல் இருப்பதும், தேவைப்படும் போது கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத்தாமல் ஒதுக்குவதும் மடமையோடு, விஞ்ஞானத் தமிழை வளர விடாமல் தடுக்கும் பிற்போக்குப் பண்பாகும்!
விஞ்ஞானப் புதுத்தமிழ் (கலப்புத்தமிழ்) = தமிழ்ச்சொற்கள் (80%-90%) +வடமொழிச் சொற்கள் அல்லது +ஆங்கிலச் சொற்கள் அல்லது +திசைச்சொற்கள் (10%-20%)
திசைச்சொற்கள் என்று இங்கு நான் குறிப்பிடுபவை: வடமொழி (சமஸ்கிருதம்), ஆங்கிலம் தவிர்த்த பிறமொழிச் சொற்கள் [தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, மராட்டி, வங்காளம், உருது, போர்ச்சிகீஸ் போன்றவை].
On Sunday, 4 August 2013 11:24:30 UTC-7, வேந்தன் அரசு wrote:ஐயங்கார் ஐயகாரு ஆகலை என நிறுவனுமே?உரைகாரர் என காரர் சொல்லாட்சி ஏற்கனவே தமிழில் உண்டேராஜுகாரு எலானோ நிர்வஹிஸ்துன்னாரு,இதி தப்பு.’காரு’ சாதிப்பெயருடனோ, தனிப்பெயருடனோமரியாதைக்காகச் சேர்த்துச் சொல்வது;வேந்தர் நன்கறிவார், ஆனால் சமாளிக்கிறார்.
--
கலப்பற்ற தனித்தமிழ் நடையில் இலக்கியச் சொற்போர் நடத்தலாம். இலக்கியப் பாக்கள், நூல்கள், காவியங்கள் படைக்கலாம்.
ஆனால் நாளுக்கு நாள் வேகமாய் முன்னேறிச் செல்லும் விஞ்ஞான முற்போக்கு அறிவுக் களஞ்சியங்களைத் தனித்தமிழில் ஆக்க முடியுமா என்பதில் ஐயப்பாடு உள்ளது! ஆங்கிலம் உள்பட ஐரோப்பிய மொழிகள் எல்லாம் புது விஞ்ஞானச் சொற்களை அப்படியே ஏற்றுக் கொண்டு, படைப்புகளைப் புத்தக வடிவில் ஆக்கிக் கொள்ளுகின்றன. ஆனால் தமிழ் உள்பட பாரத மொழிகள் பல, அவ்விதம் விஞ்ஞான வளர்ச்சிகளைப் பின்பற்றி, அவ்வப்போது நூல் வடிவில் எழுதிக் கொண்டு வருகின்றனவா என்பது தெரியவில்லை! அதே சமயம், விஞ்ஞானச் சொற்களை எல்லாம் தனித்தமிழில் வடித்து விடலாம் என்று கனவு காண்போர் கனவை நான் கலைக்க விரும்ப வில்லை!
ஏறக்குறைய 500 ஆண்டுகள் தமிழ்மொழி உள்பட எல்லா இந்திய மொழிகளும், ஆங்கிலம் போல் பூரண வளர்ச்சி யின்றி அடிமை மொழிகளாகப் புறக்கணிக்கப் பட்டுக் கீழ் நிலையில் கிடந்தன. 1947 இல் பாரதம் சுதந்திரம் அடைந்ததும், இந்திய மொழிகளும் விடுதலை பெற்றன. பாரதத்தின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு மொழிவாரியாக மாநிலங்களைப் பிரித்து, மாநில அரசுகள் அரசாளத் துவங்கிய பிறகுதான், பிராந்திய மொழிகளுக்கு நல்ல காலம் பிறந்தது. கண்ணொளி பெற்ற பாரத மொழிகள், ஆங்கிலத்தின் உதவியால் வளர்ச்சி யடைந்தன! ஆரம்பப் பள்ளி, உயர்நிலைப் பள்ளிகளில் சரித்திரம், பூகோளம், சமூகவியல், விஞ்ஞானம், கணக்கு ஆகிய போதிப்பு நூல்கள் முதன் முதல் பிராந்திய மொழிகளில் எழுதப்பட்டன. ஆங்கில நூல்கள் பாரத மொழிகளுக்கு வழிகாட்டியாய் பாதை காட்டின! அவற்றில் பல பிராந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டன! இந்திய மொழிகள் அனைத்திற்கும் விஞ்ஞான வளர்ச்சிகளைக் காட்டும் உலகப் பலகணியாய் விளங்குவது, ஐயமின்றி ஆங்கில மொழியே!
இவற்றை இங்கே நான் குறிப்பிடுவதின் நோக்கம், வேதாந்தம் விஞ்ஞானம் இடப்பெயர்ச்சி யாவது போல், கலாச்சாரமும் நாகரீகமும் இடம் பெயர்கின்றன! அப்போது அந்நாட்டு மொழிகளிலும் அவை இடம்பெற்று புதுச் சொற்கள் கடன்வாங்கப் படுகின்றன! இருபதாம் நூற்றாண்டின் நடுவில் அணுயுகம், அண்டவெளி யுகம் உதயமாகி விஞ்ஞானம் விரைவாக முன்னேறிப் புதுச் சொற்கள் ஆங்கிலம் போன்ற ஐரோப்பிய மொழிகளில் நுழைந்த போது, தமிழ்மொழியில் சொற்கள் அப்படி எழுதபட்டுச் சேர்க்கப் படவில்லை! பாரதம் சுதந்திரம் அடைந்த பிறகு, தமிழக அரசாங்கத்தில் யாரும் விஞ்ஞான வளர்ச்சிக்கு முதன்மை இடம் அளிக்கவில்லை!
‘விஞ்ஞானப் புதுத்தமிழ் ‘ என்று நான் குறிப்பிடுவது, விரிந்து பெருகும் விஞ்ஞானப் புதுமைகளை, அவ்வப்போது எழுதும் ஆற்றலுள்ள கலப்புத்தமிழ்! அந்த கலப்புத்தமிழில் ஐயமின்றி கூடியவரைப் பெரும்பானமைத் தமிழ்ச் சொற்களே [60%-80%] கையாளப்பட வேண்டும். அடுத்து வேண்டிய விஞ்ஞானக் கலைச் சொற்களில் சிலவற்றை முடிந்தால் தமிழ்ப்படுத்தலாம்; அல்லது சமமான வடமொழிச் சொற்கள் இருந்தால் எடுத்தாளலாம்; அல்லது வடமொழியில் உண்டாக்க முயலலாம்; அல்லது ஆங்கிலச் சொற்களையோ, பிறமொழிச் சொற்களையோ அப்படியே பயன்படுத்திக் கொள்ளலாம். உதாரணமாக அணுவியல் துறைகளில் அணு, பரமாணு, அணுக்கரு போன்ற பண்டைச் சொற்களை Atom, Sub-atomic Particles, Nucleus ஆகிய ஆங்கிலச் சொற்களுக்குச் சமமாகப் பயன்படுத்தி வருகிறோம்.
கதிரியக்கம் [Radioactivity], தொடரியக்கம் [Chain Reaction], பூரணநிலை [Criticality], ஆறும் தொடரியக்கம் [Sub-critical Chain Reaction], மீறும் தொடரியக்கம் [Super-critical Chain Reaction], கதிர் ஏகமூலங்கள் [Radio-Isotopes], துகள் விரைவாக்கி யந்திரங்கள் [Particle Accelerators] போன்ற தமிழாக்கச் சொற்கள் போல், நாமே படைத்துக் கொள்ளலாம். கருத்துக்களைத் தமிழ்ப்படுத்த முடியாமல் போனால், ஆங்கிலச் சொற்களை அப்படியே தமிழில் எழுதிக் கொள்ளலாம். உதாரணமாக சில பரமாணுக்களின் பெயரைத் தமிழில் நியூட்ரான் [Neutron], புரோட்டான் [Proton], எலக்டிரான் [Electron], பாஸிடிரான் [Positron], நியூட்ரினோ [Neutrino] என்று எழுதலாம். டெலிவிஷன் காட்சிப் பெட்டியைத் தொலைக்காட்சி என்று பலர் குறிப்பிடுவதும் சரியே. Rocket என்பதை ராக்கெட் என்று எழுதினால் எல்லாருக்கும் புரிகிறது. எடுத்தாளும் சொற்கள் எளிதாகவும், புரியும்படியும், புரியாவிட்டால் விளக்கக் கூடியதாகவும் எழுதப்பட வேண்டும்.
ஆங்கில எழுத்துக்களுக்குச் சமமான தமிழ் எழுத்துக்கள் இல்லை என்று வருந்த வேண்டிய தில்லை. உதாரணம்: (B, D, G) போன்றவை. டாக்டர் ஹோமி ஜெ. பாபா [Dr. Homi J. Bhabha] என்னும் பெயரைத் தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் எழுதிக் காட்டலாம். டாக்டர் ஷிவாகோ [Dr. Zhivago] என்று தமிழில் எழுதி ஆங்கிலத்தில் சமப் பெயரையும் அடைப்பில் குறிப்பிடலாம். அதுபோல் சில தமிழ் எழுத்துகளுக்குச் சமமான ஆங்கில எழுத்துக்களும் இல்லை! உதாரணம்: (ழகரம், ளகரம், றகரம், ணகரம், ஞகரம்). ‘தமிழ் ‘ என்பதை ஆங்கிலத்தில் Tamil, அல்லது Thamil என்றுதானே எழுத முடியும்! TamiZ என்று யார் குறிப்பிட்டு எழுதுகிறார் ?
தேவ்--
தமிழ்ப் பாத்திரத்தைத் தினம் கழுவிச் சுத்தம் செய்வதிலேயே, நமது தனித்தமிழ்ப் பண்டிதர் காலம் பூராவும் நழுவி விடுகிறது. அதில் என்ன நிரப்பப் படுகிறது என்பதுதான் என் கேள்வி.மேலும் படைத்தவை எல்லாம் சுத்தத் தமிழா, கலப்புத் தமிழா என்பதில் ஆய்வு செய்து தனித்தமிழர் முனைவர் பட்டம் வாங்குவார்.நமக்கு வேண்டியது நடைத்தமிழ் , நல்ல தமிழ். தனித்தமிழ் இல்லை.சைக்கிள் என்பதை வேந்தனார் இரு சக்கிர வண்டி என்று எப்போதாவது பயன்படுத்தி உள்ளாரா ?
ஜெயபாரதன் ஐயாவின் அறிவியல் கட்டுரைகளைத் தொடர்ந்து படிக்கிறேன். அவர் தமிழ் சொல்லாக்கங்கள் எனக்குப் புரிகிறது. அவரது முயற்சி பாராட்டப் பட வேண்டிய ஒன்று.

நம் மொழிப் பரிசோதனைகளுக்கும், அறிஞர் தரும் ஒப்புதலுக்கும்விஞ்ஞான வளர்ச்சி காத்திருக்குமா ? இது அடுத்த கேள்விதேவ்
எளிதில் ஒப்பிட தரவரிசைப் படுத்தியுள்ளேன்
தெலுகில் இருந்துதான் காரு தமிழுக்கு வந்தது. அதில் மறுப்பு இல்லை.ஆயின் தெலுகுக்கு தமிழில் இருந்து அவர்கள் என்பது மருவி இருக்கும். அல்லது காரர் மருவி இருக்கும்.பழம் தமிழில் ஆர் இறுதி உண்டு. நக்கீரனார், அவ்வையார்
ஆங்கிலம் என்பதை அடிப்படையாக எடுத்துக் கொள்ளுங்கள் ...அவர்கள் வைத்திருக்கும் ஏறத்தாழ 2250 போன்ற காணொளிகளுக்கு தன்னார்வத் தொண்டர்கள் பேச்சை வரிக்கு வரி தட்டச்சி தலைப்பு (caption) கொடுத்திருக்கிறார்கள். இது காது கேளாதவர்களுக்கு பயனளிக்க உதவும் முயற்சி. இதுவே நமக்கு அடிப்படை அளவு.
”மொழிபெயர்ப்பதில் செலுத்தும் கவனத்தை வல்லுனர்களை உருவாக்குவதில்செலுத்தவேண்டும்” எனும் இந்த அன்பரின் கருத்து ஆழ்ந்த சிந்தனைக்குரியதாகத்தோன்றுகிறதுதேவ்
இது போன்ற காணொளிகள் நம் நாட்டின் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மிகவும் உதவும்.ஆனால் நமக்கோ இதில் பங்கேற்க ஆர்வமில்லை.
எனக்கும் இதெல்லாம் செய்து என்ன பலன், இன்னும் சிறிது நாட்களில் பள்ளிகளிலே பயிற்றுவிக்கும் மொழியாக ஆங்கிலம் இருக்கப் போகிறது, தமிழில் மொழி பெயர்த்து என்ன ஆகப் போகிறது என்ற எண்ணமும் தோன்றிவிட்டது.
கார் கண்டுபிடிச்ச அன்றைக்கே தேர் என வச்சிருக்கலாம். சாமி ஊர்ந்தால் என்ன? ஆசாமி ஊர்ந்தால் என்ன??கருப்புதான் எனக்கு பிடிச்ச கேழ்.--வேந்தன் அரசுவள்ளுவம் என் சமயம்
எங்கள் பக்கங்களில் பெரியவர்கள் ‘காரடி’ என்று பேருந்து நிலையத்தைச் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
ஆங்கிலத்தை தமிழ்ப்படுத்துகிறேன் என்று நம் முன்னோர்கள் இப்படி செய்தனர்“புவி ஈர்ப்பு விசை” = ஆகர்ஷ்சண சக்திபயிற்சி = அப்பியாசம்நில நடுக்கோடு = பூமத்ய ரேகை
வியாகூலம் தமிழா? தெலுகா?
On Wednesday, 7 August 2013 03:42:45 UTC-7, வேந்தன் அரசு wrote:ஆங்கிலத்தை தமிழ்ப்படுத்துகிறேன் என்று நம் முன்னோர்கள் இப்படி செய்தனர்“புவி ஈர்ப்பு விசை” = ஆகர்ஷ்சண சக்திபயிற்சி = அப்பியாசம்நில நடுக்கோடு = பூமத்ய ரேகைகோவப்படாதீங்க ஐயா,அதை முதற்கட்ட முயற்சியாக
எடுத்துக்கோங்க.’புவி’கூடத் தமிழ் இல்லை.சங்க இலக்கியத்தில் இருந்தாசொல்லுங்க.
நில நடுக்கோடு = பூமத்ய ரேகை
புலம் பூமி புவி, பூழி எல்லாம் ஒரே போல இருக்கு
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
தமிழர்களுக்கு ஏனோ இன்றுவரை ஆங்கிலத் தளையிலிருந்து முற்றும் விடுபட முடியவில்லைஆங்கிலம் எவ்வாறு ஒரு மொழி இன்னொரு மொழிமீது ஆதிக்கம் செலுத்தி அந்த மொழியின் பயன்பாட்டை முற்றிலும் மாற்றி ஒரு ஆங்கில்த்தன்மையை வலிந்து ஏற்றுக்கொள்ளுமாறு செய்ததற்கு ஒரு எடுத்துக்காட்டுஆங்கிலத்தை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் ஆங்கில எதிர்ப்புடன் முனைந்து ஒரு மொழி உலக மொழியாக வளர்ந்ததென்றால் அது பிரெஞ்சு மொழிஅதனுடைய காலனி நாடுகளில் தாய்மொழியைப் புறம் தள்ளி பிரெஞ்சு மொழியைக் கற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயத்தை உருவாக்கவில்லைதனக்கென ஒரு வளர்ச்சித் திட்டத்தை உருவாக்கி அது உலக மொழியானதுக்கு அடிப்படை ஆங்கிலப் புறக்கனிப்பும் தன் மொழியை வளர்க்க வேண்டும் என்ற தாய்மொழிப் பற்றும்தான்
பேராசிரியர் இ.அண்ணாமலை
இதற்குத் தமிழ் தன் சொல்லில் காக்கும் தூய்மையை விட்டுக் கொடுக்கவேண்டும். தமிழ்ப் பண்டிதர் எழுதும் தமிழே நல்ல தமிழ், அறிவியலாளர்ஆங்கிலத்திலிருந்து சொற்களைப் பெற்று எழுதும் தமிழ் பாழும் தமிழ்என்னும் பாகுபாடு மறைய வேண்டும். இரண்டும் தமிழே
. லத்தீன்இடத்தை ஆங்கிலம் பிடித்த பிறகும் லத்தீன் சொற்களின் இடம்ஆங்கிலத்திலிருந்து போகவில்லை. ஆங்கிலத்தின் அறிவுவெற்றிக்கு இதுவும் ஒரு காரணம்.
>ஒன்றினவும் அல்ல. ஒப்பன மட்டுமே.
அப்படின்னா என்னங்க ஐயா?
400 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டா செகப்பிரியரின் மொழி யாருக்கு புரியும்?உயிருள்ள மொழி என்றால் அதன் தொன்மை இலக்கியங்கள் இன்றும் புரிந்து கொள்ளப்படவேண்டும்
உயிருள்ள மொழி என்றென்றும் உருமாறிக் கொண்டேதான் இருக்கும். உருமாற்றம் அடையும் வரையில்தான் உயிரிருக்கிறது என்று பொருள்.2013/8/8 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
400 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டா செகப்பிரியரின் மொழி யாருக்கு புரியும்?உயிருள்ள மொழி என்றால் அதன் தொன்மை இலக்கியங்கள் இன்றும் புரிந்து கொள்ளப்படவேண்டும்
வளர்ச்சிக்கும் வீக்கத்துக்கும் வேற்றுமை தெரிந்துகொண்டால் போதும். நூறு வருடங்களுக்கு முன்னால் எழுதிய பாரதியைப் புரிந்து கொள்ளவே எவ்வளவு சிரமமாக இருக்கிறது! பாஞ்சாலி சபத உரையில் எத்தனை எடுத்துக் காட்டுகள் அகப்படுகின்றன. :)
--
அன்புடன்,
ஹரிகி.நட்பும் சுற்றமும் நலமே என்பதைமட்டும் கேட்க வாணி அருள்கவே.God bless all of us. May we hear from everyone in our life that they are good and prosperous.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
காரன், காரர் - தமிழில் பிற்கால வழக்கு
தமிழில் இணைய நுட்பம் இலவசமாக [தமிழ் லினக்ஸ்] -
--
--
தமிழில் உரைநடை :உரைநடைக்குக் கருக்கட்டினவர்கள் நமது பண்டைஉரையாசிரியர்களே.
--
கல்வெட்டுகளில் செதுக்கியவர்களின் நடை உரை இல்லையா?
பொதுவாகச் சொன்னால் எல்லா கல்வெட்டுகளும் உரைநடைதானேமுற்பகுதியில் வருவது மெய்கீர்த்தி இது மட்டும் பாடல் வடிவில் இருக்கும்
ஆனால் பாடல்களான முழுநூலும் பொளிக்கப்பட்டு கண்டுள்ளதும் உண்டுஎடுத்துக்காட்டு திரிசிராப்பள்ளி அந்தாதி .கல்வெட்டுகளில் பாடலாக உள்ளவைகளை தனியாகவும் வெளியிட்டார்கள் (சீநிவேங்கசாமி)
கல்வெட்டு வழியாகவே அறிந்த புதிய தேவாரத்தலப் பதிகமும் உண்டுதிருவிடைவாய்
மன்னர்கள் தலைவர்கள் அளித்த கொடைகள் பாடலாகவே ஆவணப்படுதப்பட்டுள்ளதும் பலவுண்டு
தமிழில் பண்டு உரைநடை அதிகம் இல்லாமைக்கு காரணம் ஏடுகளில். இடமின்மை.
ஐயர் யாத்த கரணங்கள் உரைநடையில்தானே இருக்கணும்?