கருப்பு = கறுப்பு

1,096 views
Skip to first unread message

N D Logasundaram

unread,
Aug 3, 2016, 4:01:49 PM8/3/16
to mintamil, vallamai, தமிழ் மன்றம், thamizayam, podhuvan sengai, Vasudevan Letchumanan, ara...@gmail.com, Sivakumar M A
நூ த லோ சு 
மயிலை 
 3.8.16
8=10=18 எனும் எட்டுத்தொ கை பத்துப்பாட்டு  மற்றும் 18 கீழ்க்கணக்குஎனவரும் சங்கநூல்களில் 
வல்லின உகர 'றகரம்' வரும் கறுப்பு
எனும் சொல்லிற்கு 
இருபொருள்கள் காணப்படுகின்றன  


(1) கார் = கரிய நிறம் 

(2) சினம்   கோபம் கொள்ளும் மனநிலை 


சிறுதினை கொய்யக் கவ்வை கறுப்பக்                 /= நிறம்/ (கவ்வை-எள்ளின் இளங்காய் = நிகண்டு )
கருங்கால் வரகின் இருங்குரல் புலர 272                             மதுரைக் காஞ்சி 
                                                                                                   "கருங்கால் வரகின்" என்பதில் காரியநிறமும் 
வானமாமலை வாய்சூழ்பு கறுப்பக் கானங்  227                                                                              காணலாம் 
கல்லென் றிரட்டப் புள்ளின மொலிப்ப                   /= நிறம்/ குறிஞ்சிப்பாட்டு

தொன்றுகறுத் துறையுந் துப்புத்தர வந்த    347                    மதுரைக் காஞ்சி
அண்ணல் யானை அடுபோர் வேந்தர்                    /=சினம் / 

கறுவுகொள் நெஞ்சமொடு 
களம்வேட் டன்றேஒருமுகம் 100                           /=சினம் / 100 திருமுருகாற்றுப்படை

செம்மல் உள்ளம் துரத்தலின் கறுத்தோர்             /=சினம் /     அகநானுறு 81

உள் ஆங்கு உவத்தல் செல்லார் கறுத்தோர்         /=சினம் /     அகநானுறு 111

நம் உயர்வு உள்ளினர் காதலர்  கறுத்தோர்           /=சினம் /      அகநானுறு 187

அரும்பொருள் வேட்டம் எண்ணி கறுத்தோர்      /=சினம் /       அகநானுறு 389

அவல நெஞ்சமொடு செல்வல்: நிற் கறுத்தோர்  /=சினம் /    புறநானூறு 210

கீழும் மேலும் எஞ்சாமைப் பல காய்த்து
வாலிதின் விளைந்த புது வரகு அரியத்
தினை கொய்யக் கவ்வை கறுப்ப அவரைக்           /= நிறம்/ (கவ்வை-எள்ளின் இளங்காய்)
கொழுங்கொடி விளர்க் காய் கோட்பதம்ஆக                            புறநானூறு 220

கல் உறின், அவ்வடி கறுக்குந அல்லவோ            /= நிறம்/     கலித்தொகை13

கறுவுகொண்டுஅதன்முதல்குத்தியமதயானை /=சினம் /       கலித்தொகை 36

முரு(கு)உடன்று கறுத்த கலிஅழி மூதூர்            / = நிறம்/       பதிற்றுப்பத்து 26

கறுத்த தெவ்வர் கடிமுனை அலற                      /=சினம் /        பதிற்றுப்பத்து 39

ஆர்பதம் நல்கும் என்ப கறுத்தோர்
உறுமுரண் தாங்கிய தார்அரும் தகைப்பின் 10  /=சினம் /         பதிற்றுப்பத்து 66

காவல் எதிரார் கறுத்தோர் நாடுநின்                  /=சினம் /          பதிற்றுப்பத்து 72

மையறு சுடர்நுதல் விளங்கக் கறுத்தோர்         /=சினம் /         ஐங்குறுநூறு 474

கற்றாற்று வாரைக் கறுப்பித்துக் கல்லாதார்     /=சினம் /
சொற்றாற்றுக் கொண்டு சுனைத்தெழுதல் - எற்றெனின்
தானும் நடவான் 'முடவன் பிடிப்பூணி
யானையோ டாடல் உறவு'                                                        பழமொழி நானூறு 16

மெய்ம்மையே நின்று மிகநோக்கப் பட்டவர்
கைம்மேலே நின்று கறுப்பன செய்தொழுகிப்     /=சினம் /
பொய்ம்மேலே கொண்டவ் விறைவற்கொன் றார் 'குறைப்பர்
தம்மேலே வீழப் பனை                                                          பழமொழி நானூறு 280

கறுத்து இன்னா செய்தஅக் கண்ணும் மறுத்துஇன்னா
செய்யாமை மாசுஅற்றார் கோள்                            /=சினம் /  குறள் 312

கால்தூய்மை யில்லாக் கலிமாவும் காழ்கடிந்துறுத்து
மேல்தூய்மை யில்லாத வெங்களிறும் - சீறிக்
கறுவி வெகுண்டுரைப்பான் பள்ளிஇம் மூன்றும்
குறுகார் அறிவுடை யார்                                          /=சினம் /    திரிகடுகம் 46

ஒருத்தியான் ஒன்றல பல்பகை என்னை
விருத்தியாக் கொண்டன வேறாப் - பொருத்தில்
மடல்அன்றில் மாலை படுவசி ஆம்பல்
கடலன்றிக் காரூர் கறுத்து                                      /= நிறம்/    திணைமாலை 
                                                                                                      நூற்றைம்பது120
இயற்பகை வெல்குறுவான் ஏமாப்ப முன்னே
அயற்பகை தூண்டி விடுத்தோர் - நயத்தால்
கறுவழங்கிக் கைக்கெளிதாய்ச் செய்க அதுவே
'சிறுகுரங்கின் கையால் துழா'                                   /= ????/   பழமொழி400

கறுத்த பகைமுனையும் கள்ளாட்டுக் கண்ணும்/=சினம் /ஆசாரக்கோவை 55

ஆய்ந்தமைந்த கேள்வி அறிவுடையார் எஞ்ஞான்றும்
காய்ந்தமைந்த சொல்லார் கறுத்து                       /=சினம் /    நாலடியார் 62

பெறுவதொன் றின்றியும் பெற்றானே போலக்
கறுவுகொண் டேலாதார் மாட்டும் - கறுவினால்
கோத்தின்னா கூறி உரையாக்கால் பேதைக்கு
நாத்தின்னும் நல்ல சுனைத்து                            /=சினம் /    நாலடியார் 334



வெள்ளி விழுந்தொடி மென்கருப்பு உலக்கை  /= ????/ அகம் 286
என ஒரேஒரு இடம் தவிர 
கருப்பு எனும் சொல் வேறெங்கும் காணவில்லை 
இதனில் கருப்பின்னுக்கு  மென் எனும்  பண்பு முன்னொட்டு சேர்ந்துள்ளதால் சுவடி பாடமே  சரிதானா என பெரியதொரு  ஐயமும் எழுகின்றது  


அதான்று 

கரு எனும் உரி வரும் பற்பல இடங்களில் சினை எனும் பொருளில்
6 வரிகளில்  கருப்பை எனும் பொருளில்தான் காண்கின்றன 

ஆனால் 
கருப்பு வில்லி  என காமனைக் குறிக்கும் சொல் உள்ளது  
அதாவது கரும்பினை   வில்லாக ஏந்தியவன் எனும் பொருளில் 

கருப்பு எனும் சொல் நாம் இப்போது   கரும்பு எனும் பயிரினமாவதை வருவதை  ஆயிரம் ஆயிரம் எடுத்துக்காட்டுகாலால்  காட்டலாம் 

வெளுத்த நிறததில் கரும்பு வளர்ந்தாலும் பெரும்பாலும் கரிய நிறத்தில்தான் காணலாம் அல்லவா?
எனவே கரியநிறத்திக்கும் கரும்பிற்கும் தொடர்பு முற்றிலும் இருக்கின்றது 

தேவாரம் போன்ற 7-10 நூற்றாண்டு நூலகளில்
கண்டங்கறுத்தான் கறுப்புஅழ காய்உடையான் என 
சிவபெருமான் கழுத்து கறுத்தது ( கரிய நிறம் ) எ ன வல்லின உகரம் எறி ய றகத்தால் எழுதி உள்ளமைக் காணலாம் 
ஆ னால் திருமாலின் நிறம் கரி யது என வரும் போது  கரு என இடையின ரகரம் மட்டும்தான் காணலாம்  

கரிய நிற யானையைக்குறிக்க இடையின ரகர ம்தான் வரும் அல்லவா!!

எனவே கரிய நிறம் தனக்கு ரகரம் றகரம் என இரண்டும் போலியாவது நீண்டநாள்  பயன்பாடா கின்றது எனலாம் 










Hari Krishnan

unread,
Aug 3, 2016, 11:25:19 PM8/3/16
to vallamai, mintamil, தமிழ் மன்றம், podhuvan sengai, Vasudevan Letchumanan, ara...@gmail.com, Sivakumar M A

2016-08-04 1:31 GMT+05:30 N D Logasundaram <selvi...@gmail.com>:
ஆனால் 
கருப்பு வில்லி  என காமனைக் குறிக்கும் சொல் உள்ளது  
அதாவது கரும்பினை   வில்லாக ஏந்தியவன் எனும் பொருளில் 

இந்த இடத்தில் கரும்பின் வலித்தல் விகாரம் கருப்பு.  கருப்புச் சிலை மன்மதனுக்கு மட்டுமல்லாமல் உமையம்மையின் (லலிதை போன்ற) பல வடிவங்களுக்கும் உண்டு.

துணையுந் தொழுந்தெய் வமும்பெற் றதாயும் சுருதிகளின்

பணையுங் கொழுந்தும் பதிகொண்ட வேரும் பனிமலர்ப்பூங்

கணையுங் கருப்புச் சிலையுமென் பாசாங் குசமுங்கையி

லணையுந் திரிபுர சுந்தரி யாவ தறிந்தனமே

ஆத்தாளை, எங்கள் அபிராம வல்லியை, அண்டம் எல்லாம்

பூத்தாளை, மாதுளம் பூ நிறத்தாளை, புவி அடங்கக்

காத்தாளை, ஐங்கணைப் பாசங்குசமும் கருப்புவில்லும்

சேர்த்தாளை, முக்கண்ணியைத், தொழுவார்க்கு ஒரு தீங்கு இல்லையே

--அபிராமி அந்தாதி.

கறுப்பு kaṟuppu

, n. < கறு-. [M. kaṟuppu.] 1. Blackness, darkness; கருமை. (பிங்.) 2. Anger, displeasure; வெகுளி. (தொல். சொல். 372.) 3. Moral delinquency, blemish, fault; குற்றம். உள்ளக் கறுப்பினை யறுத்து (சிவதரு. சிவதரும. 25). 4. Spot, taint, pollution, moral defilement; கறை. 5. See கறுப்புப்புள்ளி. 6. Scar; தழும்பு. கைத் தலத்துணை கறுப்புற (உபதேசகா. சிவபுண்ய. 315). 7. (Astron.) Rāhu, the ascending node; இராகு. (சூடா.) 8. Minor evil spirits; பேய்பிசாசுகள். Loc. கறுப்பென்னிலோ போய்ப்பணிகுவார் (அறப். சத. 30). 9. Opium; அபின். Tinn. 10. Ambergris; மீனம்பர். (W.) 11. Ebony. See தும்பிலி. (M.M.)

http://dsalsrv02.uchicago.edu/cgi-bin/philologic/getobject.pl?c.2:1:6061.tamillex


கருப்பு karuppu

, n. < கரு-மை. [T. karuvu.] Famine, dearth, scarcity; பஞ்சம். மழையின்றிப் பசையில் கருப்புவர (சேதுபு. வேதாள. 20).

http://dsalsrv02.uchicago.edu/cgi-bin/philologic/getobject.pl?c.2:1:4312.tamillex

எனவே கறுப்பு/கருப்பு என்பது நீங்கள் சொல்வதைப் போலப் போலியாக இருக்கலாம்.

இருந்தாலும் கறுப்புப் பணம், கறுப்புச் சந்தை போன்ற இடங்களில் கருப்பு என்பது பயன்படுவதில்லை என்பதும் நோக்கத் தக்கது.
--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

Tthamizth Tthenee

unread,
Aug 3, 2016, 11:32:22 PM8/3/16
to vall...@googlegroups.com, mintamil, தமிழ் மன்றம், podhuvan sengai, Vasudevan Letchumanan, ara...@gmail.com, Sivakumar M A
நீல மேகம்  கருக்கும் போது   அல்லது கருக்கொள்ளும் போது கருப்பாகிறது

மேகம் கருக்குது  மழைவரப் பாக்குது

ஆக  நீலமும் கருப்புதான்

காத்து   கறுப்பு  

ஆவி  வலுக்கும் போது கறுப்பாகிறதா

அன்புடன்
தமிழ்த்தேனீ


அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது


http://thamizthenee.blogspot.com     http://www.peopleofindia.net     


9840686463   9840884852





--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Aug 5, 2016, 8:53:18 AM8/5/16
to மின்தமிழ், vall...@googlegroups.com


On Wednesday, August 3, 2016 at 8:25:22 PM UTC-7, Hari wrote:

2016-08-04 1:31 GMT+05:30 N D Logasundaram <selvi...@gmail.com>:
ஆனால் 
கருப்பு வில்லி  என காமனைக் குறிக்கும் சொல் உள்ளது  
அதாவது கரும்பினை   வில்லாக ஏந்தியவன் எனும் பொருளில் 

இந்த இடத்தில் கரும்பின் வலித்தல் விகாரம் கருப்பு.  கருப்புச் சிலை மன்மதனுக்கு மட்டுமல்லாமல் உமையம்மையின் (லலிதை போன்ற) பல வடிவங்களுக்கும் உண்டு.

சிலம்பு + அதிகாரம் = சிலப்பதிகாரம். 

மலையாளத்தில் கரும்பை கரிம்பு என்கிறார்கள். கரு/கரி நிறத்தில் பழைய கரும்பு இருந்ததால்.
தேவாரத்தில் ’கருநல் பரவை’ என்ற தொடர் உள்ளது. கருநல் = கன்னல் (கரும்பு) என பேரா. கா. ம. வேங்கடராமையா உரை எழுதியுள்ளார்கள்.
அருட்செல்வர் நா. ம. வெளியிட்ட தேவாரம் ... போன்ற அருள்மொழிகளின் திரட்டு நூலில் இதைக் காணலாம்.
பருநல்/பன்னல் = பருத்தி; கருநல்/கன்னல் = கரும்பு.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Aug 5, 2016, 8:12:41 PM8/5/16
to மின்தமிழ், vall...@googlegroups.com


On Friday, August 5, 2016 at 10:30:20 AM UTC-7, Jalasayanan wrote:

காரெனவும் கரியெனவும் கருமையெனவும் பயன் காணும் காலத்தில் கருப்பு எனப்படுவது நிறத்தை விடுத்து பஞ்சத்தை குறிக்கும் சொல்லாக கைகொளப்பட்டது மரபு


கார்காலம் - முல்லைத்திணைப் பாடல்கள். கார்த்திகை போன்ற சொற்களிலும் உண்டு. ’கர்ணனுக்குப் பின் கொடையுமில்லை, கார்த்திகைக்குப் பின் மழையுமில்லை’ (பழமொழி)
கார்காலம் = கரிய கொண்டல்கள் உள்ள காலம்.

கரி = அடுப்புக்கரி. கரிய யானைக்கும் கரி என்ற பெயர்.

கருமை = கரிது.
 

 

கருப்பு கறுப்பாகாது.  கருப்பு கருமையை குறிக்காது


கருப்பு கருமையைக் குறிக்காது எனச் சொல்லவியலாது.

நா. கணேசன்
 

 

286 அகநானூற்று பாடலில் வரும் கருப்பு உலக்கை என்பதை சிலப்பதிகார வாழ்த்துக் காதையில் தீங்கரும்பு நல்லுக்கையாக என்னும் பகுதியோடு ஒருங்கக்காண கரும்பை உலக்கையாக்கல் வளத்தை பாடும் மொழியென தேறி, கருப்புலக்கை என்பது கரும்புலக்கை என்றே பொருளாய் நிற்கும்.  ஆக கருப்பு என்பதை நிறத்தை குறிக்கும் மொழியாக சங்கத்தில் காணக்கிடக்காது



இருக்கலாம். பொதுவாக உலக்கை ஈட்டி போன்ற கருமரங்களால் செய்வது. எனவே, கருப்புலக்கை கரிய உலக்கையையும் குறிக்கலாம். காலப்போக்கில் கறுப்பு கருப்பு எனவும்
ஏடெழுதுவோரால் எழுதப்பட்டிருக்க முடியும்.
 

 

ஜலசயனன்

 

Reply all
Reply to author
Forward
0 new messages