முத்துவீரியம் பேசும் 8 வகை அளபெடைகள் :
1. இயற்கை அளபெடை - அழைத்தல், விலைகூறல், புலம்பல் - இவற்றுள் வருவது
2. செயற்கை அறபெடை - செய்யுளில் சீர் தளை கெட்ட விடத்துப் புலவன் கொள்வது.
3. இன்னிசை அளபெடை - ‘கெடுப்பதூஉம்’ எடுப்பதூஉம்’ (குறள் 15)
4. சொல்லிசை அளபெடை - தளைஇ (தளைந்து என்பது திரிந்து அளபெடுத்தது.)
5. நெடிலளபெடை - தனி நெட்டெழுத்து அளபெடுப்பது : ஆஅ
6. குறிலளபெடை - குற்றெழுத்து நெடிலாகி அளபெடுப்பது:
பழூஉப் பல்
7. ஒற்றளபெடை - கண்ண்
8. எழுத்துப்பேறு அளபெடை - உவாஅப் பதினான்கு.
- கோதை மோகன்
நன்று. முத்துவீரியத்தில் உள்ள செய்தி:
https://www.tamilvu.org/slet/l0100/l0100pd2.jsp?bookid=16&pno=450உயிரளபெடை அலகு பெறாமை
963. அளபெடை யாவியு மவற்றோ ரற்றே.
என்பது, உயிரளபெடையும் அலகு காரியம் பெறாவாம்.
(வ-று.)
‘‘பல்லுக்குத் தோற்ற பனிமுல்லை பைங்கிளிகள்
சொல்லுக்குத் தோற்றின்னந் தோற்றிலவால்-நெல்லுக்கு
நூறோஒநூ றென்பாள் நுடங்கிடைக்கும் மென்முலைக்கும்
மாறோமா லன்றளந்த மண்.’’
உயிரளபெடை. (2)
இதற்கு நல்ல காட்டு, யாப்பருங்கலக் காரிகையில் உள்ளது:
மாவும்புண் மோனை யியைபின் னகைவடி யேரெதுகைக்
கேவின் முரணு மிருள்பரந் தீண்டள
பாஅவளிய ஓவிலந் தாதி உலகுட னாமொக்கு மேயிரட்டை
பாவருஞ் செந்தொடை பூத்தவென் றாகும் பணிமொழியே. 18
பாஅவளிய - இது கூவிளங்காய் அலகுபெறும்.
நா. கணேசன்