"மாதொருபாகன்-விமர்சனம்

255 views
Skip to first unread message

செல்வன்

unread,
Jan 24, 2015, 7:15:30 PM1/24/15
to mintamil, vallamai

மாதொரு பாவம்!(விமர்சனக் கட்டுரை)
--------------------------

நண்பர்களே!....

மாதொருபாகன் என்கிற நாவலைப் படித்தேன்!

அதுபற்றிய ஒரு சர்ச்சை கிளம்பாமல் இருந்திருந்தால் அதைப் படித்திருக்க வாய்ப்பு இல்லை!

இவ்வளவு பெரிய பிரச்சினையாக ஆன அதில் என்னதான் சொல்லப்பட்டிருக்கிறது என்று அறிய விரும்பிப் படித்துப் பார்த்தேன்.

ஒரு எழுத்தாளன் தான் படைக்கும் பாத்திரங்கள் ஏதாவது ஒன்றில் ஒளிந்திருப்பான்.

இதிலும் இந்த நாவலை எழுதிய எழுத்தாளர் பெருமாள்முருகன் இரண்டு பாத்திரங்களில் ஒளிந்திருக்கிறார்.

அதுதான் பொன்னா என்கிற கதாநாயகி மற்றும் பாவப்பட்ட பெண்களை வேட்டையாட நினைக்கும் ஒழுக்கங்கெட்ட ஜென்மங்கள்...

எப்போதும் ஒரு படைப்பாளி தான் படைத்த பாத்திரங்களில் ஒன்றில் மறைந்திருந்து தான் உலகுக்கு சொல்ல நினைப்பதைச் சொல்வார்!

அதுபோல இவரும் இந்தப் பொன்னாள் மூலமும் முகமறியாத பெண்களைத் தங்கள் இச்சைக்குப் பயன்படுத்திக்கொள்ளத் துடிக்கும் நடத்தை கெட்ட மனிதர்கள்மூலமும் தனது உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கிறார்!

அவர்களின் பாத்திரத்தை நியாயப்படுத்துவதில் இருந்து இதை நம்மால் உணர முடிகிறது!

ஒரு எழுத்தாளன் ஒரு பாத்திரத்தைச் சிறப்பிக்கிறான் என்றால் அதற்கான நியாயமான காரணங்கள் இருக்கவேண்டும்!

இந்த எழுத்தாளர் பொன்னாள் மற்றும் நடத்தை கெட்டவர்களை நியாயப் படுத்த என்ன காரணங்களை முன்வைக்கிறார்?

அவர்கள்மூலம் தான் வாழும் சமூகத்துக்கு என்ன சொல்ல நினைக்கிறார்?

பிள்ளைப்பேறு இல்லாத பெண்கள் தவறான நடத்தையைப் பின்பற்ற வேண்டும் என்கிறாரா?

அல்லது காலங்கடந்து பிள்ளைப்பேறு பெற்ற தாய்மார்கள் இப்படிப்பட்டவர்கள்தான் என்று அழுத்தம் திருத்தமாக மறைமுகமாக விளக்குகிறாரா?

அல்லது ஒவ்வொரு ஆண்மகனும் தனது பிள்ளைகளை உண்மையாகவே அப்படித்தானா என்று சந்தேகம்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறாரா?

அல்லது ஆண் பெண் உறவில் கட்டுப்பாடும் ஒழுக்கமும் தேவையற்றவை என்று சொலி அவற்றை ஒழித்துவிட்டு முறையற்ற உறவுகளை சமூக ஒழுக்கமாக மாற்ற விரும்புகிறாரா?

நாவல் என்று சொல்லிவிட்டு குறிப்பிட்ட ஊரின் பெயரையும் ஜாதியின் பெயரையும் மதப் பின்னணியையும் எதற்காகச் சொல்லவேண்டும்?

வரலாற்று ஆவணம் என்றால் அதைத் தகுந்த ஆதாரங்களுடன் ஆய்வுக் கட்டுரைகளாக வெளியிட்டிருக்கவேண்டும்!

கதை என்றால் கதையும் கதா பாத்திரங்களும் கதாசிரியரின் கருத்தோட்டங்களுமாக இருந்திருக்க வேண்டும்!

துவக்கத்தில் நல்லவளாகச் சித்தரிக்கப்பட்ட கதாநாயகி பொன்னா கடைசியில் கட்டிய கணவனை மற்றவர்களுடன் சேர்ந்து ஏமாற்றிவிட்டு மாற்றானுடன் கள்ள உறவு கொண்டவளாகக் கதையை முடிக்கிறார்!

பொன்னாளுடைய குழந்தையில்லாக் குறையைச் சொல்லும்போது இந்தச் சமூகத்தில் வாழும் ஒவ்வொருவரும் அவளின் குறையைச் சொல்லி அவமானப்படுத்துவதையே பிழைப்பாகக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார்!

அது அப்பட்டமான சமூக நிந்தனை!

அவ்வளவையும் சொல்லி அவளின் அல்லது அவளைப்போன்றவர்களின் கள்ள உறவை நியாயப் படுத்த நினைத்து அதற்குச் சாமிகளையும் துணைக்கு வைத்துக்கொண்ட அவர் கடைசியில் பொன்னா தவறு செய்ததை நினைத்துக் கணவன் காளி மகிழ்ச்சி அடைவதாகச் சொல்லாமல் ஏன் அவளைக் கண்டபடி திட்ட வைத்தார்?

ஆகக் கணவனையும் மீறிப் பிள்ளை இல்லாத பெண்கள் தவறு செய்தார்கள், செய்யலாம் என்றும் அது சாமிக்குச் சம்மதம் என்றும் சொல்கிறாரா?

ஒரு இடத்தில் விலைமாதுக்கள்கூட இன்று அனைத்துப் பெண்களுமே விலைமாது(தேவடியாள்)க்கள்தான் என்று சொல்வதாக நாவலில் இருக்கிறது.

ஆதாவது குழந்தைப் பாக்கியம் இல்லாத சமூகத்தால் அவமானத்துக்கு உள்ளாக்கப்படுகின்ற பாவப்பட்ட பெண்களின்மேல் அனுதாபம் காட்டப் போகிறேன் என்று புறப்பட்டு கடைசியில் அனைத்துப் பெண்களையும் தேவடியாள் என்று நிந்திக்கும் நிலைக்குப் போயிருக்கிறார்!

கண்ணியமான மனிதர் வாய்விட்டுச் சொல்ல அருவருக்கும் கொச்சையான ஆபாசமான வார்த்தைகளை எழுத்தில் கொண்டு வருவதை யதார்த்தமாக நினைத்தார் போலும்?

அப்படியானால் குடிகாரர்களின் பிரச்சினையை எழுதும்போது அவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் அனைத்தையும் அப்படியே எழுத்தில் கொண்டு வருவாரா?

தொண்டுப் பட்டி தொண்டுப்பட்டி என்று நூறுதடவை குடியானவனின் பட்டியைக் குறிப்பிடுகிறார்.

அப்படியொரு வார்த்தையைத் தவறான பொருளில்தான் முற்காலத்திலும் கேட்டிருக்க முடியும்.

தொண்டு என்கிற வார்த்தைக்கு ஒழுக்கங் கேட்டவள் என்ற ஒரு பொருளும் உண்டு.

இவர் பயன்படுத்திய வார்த்தை அதைத்தான் பொருள் படுத்துகிறது!

கடைசியாக ஒன்றைச் சொல்ல வேண்டும்!

அதாவது குழந்தையில்லாப் பிரச்சினை உலகம் முழுக்க இருக்கும்போது எதற்காகத் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு கோவில் திருவிழா நிகழ்வுடன் இணைத்து அந்த ஊரைப் பற்றிய தாழ்வான எண்ணம் உருவாக்க வேண்டும்?

இந்தப் புத்தகத்தில் சொல்லும்படியான ஒன்று அந்தக் காலத்தில் நடந்திருக்க வாய்ப்பு இருந்திருக்க முடியாது!

அப்படி இருந்திருந்தால் இவர் சொல்படி அங்கு வரும் பாவப்பட்ட பெண்கள் சிலராகவும் அவர்களின் குறையைத் தீர்க்கும் சாமிகளாக எண்ணற்றவர்களும் குவிந்திருக்கவேண்டும்.

காரணம் அந்தப் பெண்களின் எண்ணிக்கை வரம்புக்கு உட்பட்டது. ஆனால் அந்த ஒழுக்கங்கெட்ட ஆண்களின் எண்ணிக்கை வரம்புக்கு உட்பட்டது அல்ல!

அப்படிப்பட்ட நிலையில் இந்த நூலில் சொன்னபடி உண்மையாக நடந்திருந்தால் அது எப்பேர்ப்பட்ட வன்முறைகளுக்கும் கலகங்களுக்கெல்லாம் காரணமாக இருந்திருக்கும்!

அப்படிப்பட்ட வரலாறு அங்கு உள்ளதா?

கிராமிய விவசாயம் சார்ந்த வாழ்க்கையும் அதன் உட்கூறுகளும் ரசனையுடன் சொல்லப்பட்டிருகின்றன என்பதைத் தவிர இந்த நூலில் பாராட்டும்படியான முற்போக்கு அம்சங்கள் எதுவும் இல்லை!

எழுத்துச் சுதந்திரமும் கருத்துச் சுதந்திரமும் உயர்ந்தவை!
அதை இப்படிக் கீழ்த்தரமாகப் பயன்படுத்துவதால் எழுத்துக்கும் எழுத்தாளனுக்கும் இலக்கியத்துக்கும் சிறுமையே தவிரப் பெருமை இல்லை!....



--

Megala Ramamourty

unread,
Jan 24, 2015, 9:35:41 PM1/24/15
to மின்தமிழ், vallamai

சமீப காலத்தில் பெரும் பரபரப்பைத் தமிழகத்தில் ஏற்படுத்தியிருப்பவர் யார் என்று கேட்டால் அது எழுத்தாளர் ’பெருமாள்முருகன்’தான் என்று அதிகம் யோசிக்காமலேயே விடை சொல்லிவிடலாம். அந்த அளவிற்கு மக்களின் திடீர்க் கவன ஈர்ப்பையும் கூடவே பலத்த எதிர்ப்பையும் சம்பாதித்துத் தந்திருக்கின்றது சில ஆண்டுகளுக்கு முன்பு (2010ஆம் ஆண்டு) அவர் எழுதிய ’மாதொருபாகன்’ எனும் சமூக நாவல்; காலம் கடந்து அந்நாவல் இப்போது அவரை மிகுந்த சர்ச்சைக்கு உள்ளாக்கியிருக்கின்றது.


திருச்செங்கோட்டையும் அதை ஒட்டிய சிறிய கிராமங்களையும்  கதைக்களமாக்கிருக்கும் நாவலாசிரியர், திருச்செங்கோட்டில் (அன்று) ஆண்டுதோறும் நடைபெற்ற ஒரு திருவிழாக் குறித்துத் தன் நாவலில் விரிவாக விளக்கியிருக்கிறார். அதில் அவர் குறிப்பிட்டிருக்கும் நிகழ்வுகள் ’கடும் கண்டனத்துக்குரியவை; பெண்களை இழிவுபடுத்துபவை’ என்று கடுங்கோபத்துக்கும் சீற்றத்துக்கும் ஆளாகியிருக்கும் அவ்வூர் மக்கள் அவரை உலுக்கிய உலுக்கலில், ”பெருமாள்முருகன் எனும் எழுத்தாளர் இறந்துவிட்டார்; இனி அவர் ஏதும் எழுதமாட்டார்; இதுவரை எழுதியவற்றையும் திரும்பப் பெறுகின்றார்” என்று அவரே கைப்பட எழுதிக்கொடுத்துவிட்டு, தன் செயலுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பும் கேட்டுவிட்டு எழுத்துத்துறையைவிட்டே வெளியேறியிருக்கிறார்.

 

இப்போது, அவரை ஆதரித்தும் எதிர்த்தும் பல்வேறு ஊர்வலங்களும் கண்டனப் பொதுக்கூட்டங்களும் தமிழகத்தின் பல பகுதிகளிலும் தொடர்ந்து நடைபெற்றுவருவதைச் செய்தி ஊடகங்கள் ஊக்கத்துடன் தினமும் வெளியிட்டு வருவதைக் காண்கின்றோம்.


இத்தகைய பரபரப்புக்களால் (வாசகர்களாகிய) நமக்குக் கிட்டிய ஒரே லாபம் என்னவெனில்…அவருடைய ‘மாதொருபாகன்’ நாவலை முழுமையாகக் படிக்கக்கூடிய வாய்ப்பினைப் பெற்றதுதான்!. இந்நாவலை PDF கோப்பாக அனுப்பிப் படிக்க உதவிய திரு. ஸ்ரீநிவாசன் அவர்களுக்கு என் உளப்பூர்வமான நன்றி!


நாவலைப் படிக்கக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி 192 பக்கங்கள் கொண்ட இந்நாவலை இப்போதுதான் படித்துமுடித்தேன். படித்தவுடனேயே, ’மாதொருபாகன்’ என் அவதானிப்பில் எவ்வாறு காட்சியளிக்கின்றான் என்பதை நம் குழும நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளும் ஆவல் ஏற்பட்டது. அதனால் மாதொருபாகனை என் பார்வையில் முன்வைத்திருக்கின்றேன்.


இயல்பான கொங்கு நடையில் தடையற்ற ஓட்டத்துடன் எழுதப்பட்டிருக்கும் இந்நாவல், ஆசிரியர் திரு. பெருமாள்முருகன் தேர்ந்த எழுத்தாற்றலும், அழகாய்க் கதைசொல்லும் திறனும் வாய்க்கப்பெற்றவர் என்பதைத் தெளிவாய் நமக்குப் புலப்படுத்திவிடுகின்றது.

சற்றேறக்குறைய ஒரு நூற்றாண்டுக்கு முன்பு திருச்செங்கோட்டை ஒட்டிய கிராமப்புறங்களில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கையே இந்நாவலின் பேசுபொருள். அம்மக்களின் வாழ்க்கைமுறை, பொழுதுபோக்குகள், வட்டார வழக்கு, இயல்பாகப் புழங்கும் சொலவடைகள் முதலியவற்றை இந்நாவல் நமக்கு விரிவாய் அறியத் தருகின்றது. தோப்பு, துரவுகள், காடு, மேடுகள், ’வறடிகல்’ என்று அழைக்கப்படும் திருச்செங்கோட்டு மலையுச்சி ஆகியவற்றிலெல்லாம் கதாநாயகன் காளியும், அவன் நண்பனும் நாயகியின் அண்ணனுமான முத்துவும் செல்லும்போதெல்லாம் நாமும் கூடவே பயணிப்பது போன்ற ஓர் உணர்வை தன் மிகையற்ற இயல்பான வர்ணனைகளால் ஆசிரியர் ஏற்படுத்தியுள்ளார்!


திருச்செங்கோட்டைச் சுற்றியிருந்து அருள்பாலிக்கும் பல்வேறு தெய்வங்களை இந்நாவல் நமக்கு அறிமுகப்படுத்துகின்றது. குறிப்பாகத் திருச்செங்கோட்டுக்குப் பெருமை சேர்க்கும் மாதொருபாகன் (அர்த்தநாரீஸ்வரர்) கோயில், அச்செங்கோட்டு மலையருகில் இருக்கும் வனத்தில் ’கிடந்த திருக்கோலத்தில்’ அருள்பாலிக்கும் கானகப் பெண்தெய்வமான ‘பாவாத்தா’ ஆகியோரைக் குறிப்பிடலாம். அதிலும் ’பாவாத்தா’ எனும் பெயர்கொண்ட அச்சிறுதெய்வத்தின்(demi-goddess) அச்சம் தருகின்ற மீப்பெரு தோற்றமும், அத்தெய்வத்தை அப்பகுதி மக்களில் பலர் தங்கள் குலசாமியாகக் கும்பிட்டு நேர்த்திக்கடன்களைச் செய்துவரும் முறையினையும் நேர்த்தியாக விவரித்துள்ளார் ஆசிரியர்.


இப்படிப் படித்துமகிழ உகந்தவை பல நாவலில் இருந்தாலும் அதையும் தாண்டி வாசகர் மனத்தை உறுத்தும் குறைகளுக்கும் பஞ்சமில்லை. அவற்றை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.


திருமணமாகிச் சில ஆண்டுகள் கழிந்தும் மகப்பேறு வாய்க்கப்பெறாத காளி, பொன்னாள் எனும் இணையரின் கதைதான் இது என்பதை நாவலின் தொடக்கத்திலேயே புதிர்கள் ஏதுமின்றி நாம் அறிந்துகொண்டு விடுகின்றோம். அவர்களிருவரும் பிள்ளை இல்லாமையால் எவ்வகையிலெல்லாம் இச்சமுதாயத்தினரின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகின்றனர் என்பதை ஆசிரியர் உணர்வுபூர்வமாக விளக்க எடுத்துக்கொண்ட முயற்சியே இந்நாவலின் நீட்சியாய்த் தொடர்கிறது. ஆசிரியரின் இவ்வகை முயற்சி சரிதான் என்றாலும், யாரெல்லாம் அவர்களிருவரையும் அவமானப்படுத்துகிறார்கள் என்பதையும், அதனால் எப்படியெல்லாம் அவர்கள் மன உளைச்சலுக்கும், வேதனைக்கும் உள்ளாகின்றார்கள் என்பதையும் நாவல் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டே வருவது படிப்போர்க்கு ஒருவித சலிப்பைத் தருகின்றது.


மக்களின் இயல்பான உரைநடையைப் பதிவு செய்கிறேன் பேர்வழி என்று படிப்பதற்கே கூசுகின்ற பல சொலவடைகளையும் (அம்மக்கள் மொழியில் அதன் பெயர் சொலவாந்திரம்) உரையாடல்களையும் நாவலின் பல இடங்களில் ஆசிரியர் பயன்படுத்தியிருப்பது நாவலின் சுவையை வெகுவாய்க் குறைக்கிறது. அதிலும் பாலியல் சார்ந்த விஷயங்களை அம்மக்கள் பட்டவர்த்தனமாகவும், கொச்சையாகவும் பேசுவதையும், விமரிசிப்பதையும் சிறிதும் இரசிக்கவே முடியவில்லை.


பிள்ளையில்லாத் தம்பதியின் துயர வாழ்வைச் சித்தரிப்பதே நாவலின் மையக்கருத்தாக இருப்பினும் கதையை வேறு திசைகளில் சற்றும் பயணிக்கவிடாது ஒரே பாதையில் பயணிக்கவிட்டிருப்பது கதையின் விறுவிறுப்பைப் பெரிதும் மட்டுப்படுத்தி விடுகின்றது. ’நல்லுப்பையன் சித்தப்பா’ பாத்திரம் மட்டும் இல்லையென்றால் கதையில் இன்னும் வறட்சி தென்பட்டிருக்கும். ஆயினும், அவரின் பேச்சுக்களிலும் அளவுக்கு மீறிய ஆபாசம்!


கதாநாயகன் காளியும் அவன் தோழன் முத்துவும் எப்போதும் சாராயம், கள் என்று மாற்றி மாற்றிக் குடிப்பதும், விதவிதமாக மாமிசம் உண்பதுமே தங்கள் வாழ்வின் நோக்கம் என்பதுபோல் இருப்பது அன்றைய ஆடவரின் மீதிருக்கும் மரியாதையைப் பெரிதும் குறைப்பதோடு, ஒழுக்கக்கேடாய் வாழ்வதே சமுதாயத்தால் அங்கீகரிக்கப்பட்ட/பின்பற்றப்பட்ட அன்றைய ஆண்களின் இயல்போ என ஐயுற வைக்கிறது.


அடுத்து, திருச்செங்கோட்டு மக்கள் அனைவரையும் ஆவேசமாக்கிய நாவலின் முக்கியப் பகுதிக்கு வருகிறேன். நாவலின் மையப்புள்ளி இதுவே! இந்நிகழ்வை நோக்கியே கதை கவனமாக நகர்த்தப்பட்டிருக்கின்றது. அது என்ன?


திருச்செங்கோட்டு மாதொருபாகன் கோயிலில் ஒவ்வோராண்டும் 14 நாட்கள் தொடர்ச்சியாய் நடைபெறும் ’தேர்நோம்பி’ எனும் திருவிழாவே அது! அதில் அப்படியென்ன ஆட்சேபத்திற்குரிய விஷயம் நிகழ்கிறது என்று பார்த்தால்…விழாவின் 14-ஆம் நாளிரவில் திருச்செங்கோட்டுக்குத் திருவிழா பார்க்கவரும் ஆண்களும் பெண்களும் யார் வேண்டுமானாலும் யாருடன் வேண்டுமானாலும் (முறையற்ற) பாலுறவு கொள்ளலாம் என்பதாக நாவலில் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. அத்தோடு விடவில்லை  ஆசிரியர்…பிள்ளைப்பேறில்லாப் பெண்கள் பலர் அன்று இம்முறையைப் பின்பற்றி குழந்தை பெற்றிருக்கின்றார்கள்; அப்பிள்ளைகளை யாரும் தவறாகப் பார்க்கவில்லை; மாறாக அப்பிள்ளைகள் ‘சாமிப் பிள்ள’ என்ற அடைமொழியோடு அழைக்கப்பட்டிருக்கின்றனர் என்றும் குறிப்பிட்டிருக்கின்றார்.


இந்நாவலிலும் தன் கணவனால் பிள்ளைப்பேறு வாய்க்கப்பெறாத நாயகி ‘பொன்னாளும்’ கடைசியில் ‘வறடி (barren woman) என்று தான் அழைக்கப்படும் அவலத்தைத் துடைக்க வேறுவழியின்றி இதே வழியைப் பின்பற்ற விழைகின்றாள்; தன் மனைவியின்மீது அளவற்ற அன்பு கொண்டு ஈருடல் ஓருயிராக…அதாவது ‘மாதொருபாகனாக’ வாழ்ந்துவரும் நாயகன் காளிக்கு இது பெரும் அதிர்ச்சியைத் தருவதாய் நாவலை முடித்துள்ளார் ஆசிரியர்.


இங்கே நாம் ஒன்றை கவனிக்க வேண்டும். இத்தகைய சம்பவங்கள் நிகழ்காலத்தில் (திருச்செங்கோட்டில்) நடப்பவையாக ஆசிரியர் தன் நாவலில் பதிவுசெய்யவில்லை! குறைந்தபட்சம் 100 ஆண்டுகளைத் தாண்டியதாய் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நிகழ்ந்தவையாகவே இச்சம்பவங்கள் காட்டப்பட்டுள்ளன. எனவே அவை உண்மையா இல்லையா என்பதை அறிய முற்படாமல் உணர்ச்சிவசப்பட்டுப் போராட்டங்கள் நடத்துவது அறிவுடைமை ஆகாது. ’மெய்ப்பொருள் காண்பதே அறிவல்லவா?’


நன்கு படித்த பொறுப்புள்ள ஒரு பேராசிரியர், கொங்குச் சொற்களின் பேரகராதி, சிறுகதை, நாவல்கள் ஆகியவற்றின் வாயிலாய்ப் பரவலாக மக்களிடம் கவனம்பெற்ற ஒரு மனிதர், இவ்வளவு சென்சிடிவான ஒரு விஷயத்தைத் தன் நாவலின் மையப்புள்ளியாய், கிளைமாக்ஸாய் வைத்திருக்கிறார் என்றால் அது ஏதோ கற்பனையானது என்றோ, வேண்டுமென்றே தன் சொந்தஊர் மக்களை இழிவுபடுத்தவேண்டும் என்ற நோக்கத்தில் செய்த செயலென்றோ ஒரேயடியாய்ப் புறந்தள்ளிவிடவும் முடியவில்லை. இவற்றில் ஒருசிறிதேனும் உண்மையிருக்க வாய்ப்புண்டு என்பதை மறுப்பதற்கில்லை.


என்னவொன்று…எழுதுதற்கு ஆதாரங்களாக அவர் கைக்கொண்ட நூல்களையோ, தரவுகளையோ, பிற சான்றுகளையோ இந்த நாவலில் அவர் தந்திருக்கலாம்; அல்லது வேறுசில எழுத்தாளர்கள் சொல்வதுபோல் வெளிப்படையாக ஊர்ப் பெயரினையும் திருவிழாப் பெயரினையும் நாவலில் குறிப்பிட்டிருப்பதைத் தவிர்த்திருக்கலாம். இரண்டையுமே செய்யத்தவறியிருக்கிறார்.


மொத்தத்தில், இந்த நாவலை இன்னும் செம்மையாகவும் சிறப்பாகவும் நாகரிகச் சொல்லாடல்களோடும், முக்கியச் சம்பவங்களைத் தகுந்த ஆதாரங்களோடும் ஆசிரியர் கொடுத்திருந்தால் இந்நாவல் சிறப்பாகவும், தரமாகவும் இருந்திருக்கும். அதைச் செய்யத் தவறியது பெருங்குறையே!

 

இனி, ’மாதொருபாகன்’ குறித்துப் பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் ஒரு நேர்காணலில் தந்துள்ள பதிலை இங்கே பகிர்ந்துள்ளேன்.


''எழுத்தாளர் பெருமாள்முருகனின் 'மாதொருபாகன்நாவல், இந்து மதத்தையும் திருச்செங்கோடு என்கிற ஊரையும் இழிவுபடுத்துவதாக நடைபெற்ற போராட்டங்கள், புத்தக எரிப்பு... போன்றவற்றைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?''

''குடும்பம் என்ற அமைப்பு உருவாவதற்கு முன்பு, இங்கே கற்பு இல்லை. இன்னமும்கூடப் பல பழங்குடிச் சமூகங்களில் குடும்பத்துக்கு வெளியேயான பாலுறவும், திருமணத்துக்கு முன்பான பாலுறவும் சகஜம். ஏன்... சங்க காலத்திலேயே களவு முறை இருந்ததே. கற்பு... கற்பு என மீண்டும் மீண்டும் வலியுறுத்தப் பட்டதற்குக் காரணமே, களவு முறை அதிகமாக இருந்ததால்தானே?

எழுத்தாளர்களுக்கு முழுமையான சுதந்திரம் வேண்டும். அவர்கள் சிந்திப்பதைத் தடை செய்யக் கூடாது. ஒரு நாவலில் குறிப்பிடப்படும் பகுதிகளையும் கதையையும், அப்படியே எடுத்துக்கொள்ளக் கூடாது. ஒருவேளை ஒரு படைப்பு தங்களை இழிவுபடுத்துவதாகச் சிலர் நினைத்தால், அதற்கு எதிராகப் பேசலாம்; அந்தப் படைப்புக்கு எதிராக, இன்னொரு படைப்பை உருவாக்கலாம். ஒரு படைப்பை இன்னொரு படைப்பு மூலம்தான் எதிர்க்க முடியுமே தவிர, புத்தகங்களை எரிப்பதன் மூலம் அல்ல. இப்போது பெருமாள்முருகன் இனி வரும் பிரதிகளில் 'திருச்செங்கோடுஎனும் பெயரை எடுத்துவிடப் போவதாக அறிவித்துள்ளார். பொது அமைதி கருதி அவர் எடுத்திருக்கும் இந்த முடிவு வரவேற்கத்தக்கது. சில ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் மீண்டும் அதே படைப்பில் திருத்தங்களைச் செய்யலாம். எல்லாமே எழுத்தாளரின் படைப்புச் சுதந்திரத்துக்கு உட்பட்டவை. புத்தகங்களை எரித்துவிடலாம். ஆனால், உண்மையை எரிக்க முடியாது.''

தகவலுக்கு நன்றி: ஆனந்த விகடன்

 


அன்புடன்,
மேகலா

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

வேந்தன் அரசு

unread,
Jan 24, 2015, 11:45:53 PM1/24/15
to vallamai, மின்தமிழ்
போராட்டக்காரர்களுக்கு:

திருச்செங்கோட்டு கோவில் விழாவில் நடப்பதான நிகழ்ச்சியில் திருச்செங்கோட்டு மக்கள் மட்டும்தான் வருவார்கள் என்றோ, கவுண்டர் சாதி மட்டுமே வரும் என்றோ, கோவில் நிர்வாகமே  துணை நிற்கிரது என்றோ கதையில் இல்லை. கதையின் நாயகன், நாயகியருக்கு கூட பிள்ள இல்லாத பெண்டிர் பிள்ளைபெறும் வழி அது என் அறிந்திருக்கவும் இல்லை. விழாக்காலங்களில் சிலர் இசகு பிசாக இருப்பது உலக இயல்புதான். கூத்தாணடவர் திருவிழாவில் எய்ட்ஸ் நோய் பற்றிய விழிப்புணர்வு நடத்துவது ஏன்?  

நாயகியின் அம்மாவும் மாமியாரும்தான் இந்த விழா தருணத்தை பயன்படுத்தலாம் என பரிந்துரை செய்கிறார்கள்.

மேலோட்டமாக வாசித்து விட்டு ரகளை செய்கிறீர்கள்.

சுபாஷ்க்கு:

பொன்னா நடத்தை கெட்டவள் அல்ல. கெட்டும் போகலை. பிள்ளை வேண்டி அவள் பல முட்டாள்தனமான் சடங்குகள் செய்கிறாள்:

1. பாவாத்தா கோவிலில் கோழி அறுத்து பூசை செய்தாள்
2.  பூப்பின் மூன்றாள் நாள் கிழக்கு பார்த்தபடி நின்று வெற்று வயிற்றில் அரைத்துக்கொடுத்த பல்வேறு இலைதழைகளை குடித்தாள்
3. வறடிகல் எனும் இடுக்கண் மிக்க மலை இடுக்கில் உள்ள கல்லை ஒரு முறௌ சுற்றி வந்தாள். (அதற்கு மேல் காளி வேண்டாம் என 
4. பிள்ளைக்கறியாக சமைக்கப்பட்ட சீராளன் மீண்டு வருவும்போது, அவன் தலைக்கு சுற்றிய எலுமிச்சை பழத்தை மடியில் வாங்குகிறாள். .

கடைசிக்கட்டமாகவே சாமிக்குழந்தை பெற முடிவு செய்கிறாள். அதுவும் ஒரே ஒரு தடவை.

கண்ணகி சிலை தனக்கு தீங்குதரும் என அந்த சிலைகவிழ்த்துவிட்டு ஆட்சி செய்கிற அண்மைக்காலமே முட்டாள்தனமாக இருக்கும் போது ஸ்ரீவள்ளி திரைப்படம் வந்த காலத்து படிப்பற்ற பெண் செய்ததில் என்ன நடத்தை கெட்டுவிட்டது?

மேகலாவுக்கு:

கெட்டவார்த்தைகள் எனக்கும் நச்சவில்லை. ஆனால் என் தந்தையே சகஜாமக சில வார்தைகள் சொல்வதை கேட்டு அதிர்ந்திருக்கேன். கொங்குநாட்டில் கெட்ட வார்த்தைகள் அதிகம் இல்லை. ஆனால் ஒன்றிரண்டை சகஜமாக பயன்படுத்துவார்கள். முத்துவும் காளியும் இரவு சாராயம் அருந்தவில்லை என்றால் பொன்னாவுக்கு திருவிழா போக வாய்ப்பு இருக்காது என்பதால்  அந்த காட்சி தேவைதான். வேறு என்னகாரணம் சொல்லை காளியை கண்கட்ட இயலும்?

இந்த கதையை பற்றிய என் கருத்து:

பிள்ளைப்பேறு இன்மையை மையமாக கொண்டு அதனால் அந்தக்காலத்து ஆண்கள்/ பெண்கள் உற்ற இழிவை ஆழமாக சொல்லி இருக்கார்,

.1. இரண்டு ஆண்டுகள் பிள்ளை இல்லை என்று அறிந்ததும் காளி லாயக்கிலாத ஆள் என்று முடிவு கட்டி கொஞ்சம் முயறசி செய்து அழைத்தால் அவள் வந்து விடுவாள் என கருப்பண்ணன் உட்பட ஊரில் உள்ள சிலர் பொன்னாவுக்கு வலை விரித்தனர்
 
2. காளியின் அக்கா மகள் திரட்டிக்கு போன பொன்னா திரட்டி சுற்றும் போது மாமன் பெண்டாட்டி கையை பிடித்து இழுத்து பின்னால் விட்டாள்.. பிள்ளைபெறாதவள் சோறு சுற்றினால் பொண்ணுக்கு பிள்ளை இல்லாமல் போய்விடுமாம்.

3. பருத்திக்காட்டில் ஆடுமேயவிட்ட கிழவிகூட பிள்ளை இல்லாதவள் யாருக்கு சொத்து சேர்க்கப்போறா என கேட்பாள்.
4. ஒரு பிள்ளை அடிப்பட்டுவிட, இவளுக்கு பிள்ளைவளர்க்க தெரியலே என பிள்ளையின் தாய் ஏசியது.

இவற்றைப்போல் பல.

காளியும் பொன்னாவும், சொந்தத்தில் தத்து எடுப்பதன் நன்மை தீமைகளை விவிவாதிப்பார்கள். பிள்ளை இல்லாவிட்டால் என்ன நன்மை என்று சித்தப்பா அழகாக சொல்லுவார்.திருமணத்தின் தேவை/ தேவை  இன்மை கூட அலசப்படுகிறது.


இந்த காலத்தில் விந்துதானம் என்ற முறை புழகக்த்துக்கு வந்துள்ளபோது அக்காலத்தில் அது ஒரு முறை (உண்மையோ கற்பனையோ)

ஆனால் காளிக்கு எல்லா ஆண்களைப்போல தான் வறடன் என்ற இழிசொல்லுக்கு ஆளாகணும் என்று அச்சம் இருக்குமோ என்னவோ.அவனுக்கு இதில் உடன்பாடு இல்லாமல் போனது.

மொத்தத்தில் ஜெயகாந்தன் கதைகள் போல இருந்தது.

தொடக்கத்தில் போத்தல் என்றவர் கடைசியில் பாட்டில் என்கிற வழுவும் உண்டு

நூலில், நான் அறியாத பல கொங்கு சொற்கள் தொகுத்து மனனம் செய்யவேண்டும்

நச்சியது.  நெடுநாட்களுக்கு பின்னர் மீண்டும் தமிழ்நூல்கள் வாசிக்கணும் என ஆர்வம் வருது.
--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

செல்வன்

unread,
Jan 25, 2015, 2:09:16 AM1/25/15
to vallamai, மின்தமிழ்

2015-01-24 22:45 GMT-06:00 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
போராட்டக்காரர்களுக்கு:

திருச்செங்கோட்டு கோவில் விழாவில் நடப்பதான நிகழ்ச்சியில் திருச்செங்கோட்டு மக்கள் மட்டும்தான் வருவார்கள் என்றோ, கவுண்டர் சாதி மட்டுமே வரும் என்றோ, கோவில் நிர்வாகமே  துணை நிற்கிரது என்றோ கதையில் இல்லை. கதையின் நாயகன், நாயகியருக்கு கூட பிள்ள இல்லாத பெண்டிர் பிள்ளைபெறும் வழி அது என் அறிந்திருக்கவும் இல்லை. விழாக்காலங்களில் சிலர் இசகு பிசாக இருப்பது உலக இயல்புதான். கூத்தாணடவர் திருவிழாவில் எய்ட்ஸ் நோய் பற்றிய விழிப்புணர்வு நடத்துவது ஏன்?  

நாயகியின் அம்மாவும் மாமியாரும்தான் இந்த விழா தருணத்தை பயன்படுத்தலாம் என பரிந்துரை செய்கிறார்கள்.

மேலோட்டமாக வாசித்து விட்டு ரகளை செய்கிறீர்கள்.


முழுநூலும் படித்துவிட்டுத்தான் போராடினார்கள்.

"சிலர்" இசகு, பிசகாக இருப்பது மாதிரி எல்லாம் கதையில் இல்லை. "இன்னிக்கு எல்லா பெண்ணும் தே**** தான்" என்பது கதையில் பயன்பட்டுள்ள வார்த்தை

--

வேந்தன் அரசு

unread,
Jan 25, 2015, 6:57:37 AM1/25/15
to vallamai, மின்தமிழ்


25 ஜனவரி, 2015 ’அன்று’ 2:08 முற்பகல் அன்று, செல்வன் <hol...@gmail.com> எழுதியது:


2015-01-24 22:45 GMT-06:00 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
போராட்டக்காரர்களுக்கு:

திருச்செங்கோட்டு கோவில் விழாவில் நடப்பதான நிகழ்ச்சியில் திருச்செங்கோட்டு மக்கள் மட்டும்தான் வருவார்கள் என்றோ, கவுண்டர் சாதி மட்டுமே வரும் என்றோ, கோவில் நிர்வாகமே  துணை நிற்கிரது என்றோ கதையில் இல்லை. கதையின் நாயகன், நாயகியருக்கு கூட பிள்ள இல்லாத பெண்டிர் பிள்ளைபெறும் வழி அது என் அறிந்திருக்கவும் இல்லை. விழாக்காலங்களில் சிலர் இசகு பிசாக இருப்பது உலக இயல்புதான். கூத்தாணடவர் திருவிழாவில் எய்ட்ஸ் நோய் பற்றிய விழிப்புணர்வு நடத்துவது ஏன்?  

நாயகியின் அம்மாவும் மாமியாரும்தான் இந்த விழா தருணத்தை பயன்படுத்தலாம் என பரிந்துரை செய்கிறார்கள்.

மேலோட்டமாக வாசித்து விட்டு ரகளை செய்கிறீர்கள்.


முழுநூலும் படித்துவிட்டுத்தான் போராடினார்கள்.

மேலோட்டமாக என்றேனே 

"சிலர்" இசகு, பிசகாக இருப்பது மாதிரி எல்லாம் கதையில் இல்லை. "இன்னிக்கு எல்லா பெண்ணும் தே**** தான்" என்பது கதையில் பயன்பட்டுள்ள வார்த்தை

தேவடியாள்கள் அப்படித்தான் பேசுவார்கள்.,

பொன்னா அவளுடைய அப்பன் வண்டி ஓட்ட தேர் திருவிழாவுக்கு போகும் போது, இந்த ஒரு சாலையில் மட்டும் இத்தனை மக்கள் என்றால் உலகத்தில் எத்த்னை மக்கள் இருப்பார்கள் என்று வியப்பாள். அத்தனை பேருமா?திருவிழாவில் பல பதினாயிரம் மக்கள் கூடுவார்கள் எல்லாரும் தேவடியாள்தான் எனறு பொருள்தராது. 


கோவையில் ஆண்டுதோறும் பொருட்காட்சி நடக்கும். அங்கு வரும் பெண்களை இடிக்கவே சில இளைஞர்கள் அலைவார்கள். என் கண்முன்னால் ஒருவன் ஒருத்தியிடம் செருப்படி வாங்கினான். நானும் அப்போது இளைஞன்தான் , ஆனால் இடிக்க போகலை, பொருட்காட்சிக்கு வரவன் எல்லாம் பெண்களை  இடிக்க வருகிறான் என்றால் நானும் தான் என்றாகிவிடுமா?

விந்துதானம் செய்வது ஊர்பேர்மறைவாக இருக்கணும் என்பது இன்றைய நடைமுறையாக இருக்கு, இந்த கதையிலும் பொன்னாள் சிறுவயதில் ஈர்ப்புடைய ஒருவன் சாமியாக வந்தபோது அவனை புறந்தள்ளுவாள். அவளது சாமி மெய்யாலுமே அநாமதேயமான்வன்தான். எத்தனை நுணுக்கமக இதை சொல்லி இருக்கார் பொருமாள் முருகன்.

நாவலை ஒரு கவிதைபோல் வாசிக்கணும்

துரை.ந.உ

unread,
Jan 25, 2015, 7:03:24 AM1/25/15
to வல்லமை, மின்தமிழ்
2015-01-25 10:15 GMT+05:30 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
திருச்செங்கோட்டு கோவில் விழாவில் நடப்பதான நிகழ்ச்சியில் திருச்செங்கோட்டு மக்கள் மட்டும்தான் வருவார்கள் என்றோ, கவுண்டர் சாதி மட்டுமே வரும் என்றோ, கோவில் நிர்வாகமே  துணை நிற்கிரது என்றோ கதையில் இல்லை

​சூஊஊஊஊஊஊப்பர் வேந்தே .... என்ன ஒரு ஆழ்ந்த சிந்தனை !!!!!!!!!!!!!​
 




--
 -இனியொரு விதி செய்வோம்
                                        ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in/
காட்சி:மூன்றாம் உலகம்            :http://duraigif.blogspot.in/
படம் : அட........!                            :ttp://duraipics.blogspot.in/
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in/
ஹைக்கூ :வானம் வசப்படும்     :http://duraihaikoo.blogspot.in/
புகைப்படம் :எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.in/
                                                       :http://www.flickr.com/photos/duraian/

துரை.ந.உ

unread,
Jan 25, 2015, 7:05:18 AM1/25/15
to Groups, vallamai

2015-01-25 17:27 GMT+05:30 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
நாவலை ஒரு கவிதைபோல் வாசிக்கணும்

​அப்போ கவிதையை ???​

வேந்தன் அரசு

unread,
Jan 25, 2015, 7:10:35 AM1/25/15
to vallamai, Groups


25 ஜனவரி, 2015 ’அன்று’ 7:04 முற்பகல் அன்று, துரை.ந.உ <vce.pr...@gmail.com> எழுதியது:


2015-01-25 17:27 GMT+05:30 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
நாவலை ஒரு கவிதைபோல் வாசிக்கணும்

​அப்போ கவிதையை ???​

காதலியைப் போல்

Iyappan Krishnan

unread,
Jan 25, 2015, 11:05:21 AM1/25/15
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com
துரைஜி 


On Sunday, January 25, 2015 at 5:40:35 PM UTC+5:30, வேந்தன் அரசு wrote:


25 ஜனவரி, 2015 ’அன்று’ 7:04 முற்பகல் அன்று, துரை.ந.உ <vce.pr...@gmail.com> எழுதியது:

2015-01-25 17:27 GMT+05:30 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
நாவலை ஒரு கவிதைபோல் வாசிக்கணும்

​அப்போ கவிதையை ???​ 

காதலியைப் போல்


அப்போ காதலியை அப்படின்னு கேள்வி கேட்டீங்க அவ்ளோ தான். அண்ணிக்கு  தகவல் அனுப்பப் படும்

அன்பு “டன்”
ஐயப்பன்

N. Ganesan

unread,
Jan 25, 2015, 11:18:12 AM1/25/15
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com

”எந்த டாக்குமெண்டரி ஆதாரமும் இல்லை. கேள்விப்பட்டது தான்” என்கிறார் முற்போக்கு எழுத்தாளர் பெருமாள் முருகன்.

”Is there any documentary evidence to support the existence of consensual sex, written about in the book?

There is no historical evidence. Details about the custom were passed on orally. Writer Theodore Baskaran and Professor A.K. Perumal have also written about similar customs that prevailed in other parts of the State. For example, [there is] the Thuppatti festival in which men and women participate while covering their faces.”

N. Ganesan

unread,
Jan 25, 2015, 11:25:26 AM1/25/15
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com


On Saturday, January 24, 2015 at 6:35:41 PM UTC-8, Megala Ramamourty wrote:

மக்களின் இயல்பான உரைநடையைப் பதிவு செய்கிறேன் பேர்வழி என்று படிப்பதற்கே கூசுகின்ற பல சொலவடைகளையும் (அம்மக்கள் மொழியில் அதன் பெயர் சொலவாந்திரம்) உரையாடல்களையும் நாவலின் பல இடங்களில் ஆசிரியர் பயன்படுத்தியிருப்பது நாவலின் சுவையை வெகுவாய்க் குறைக்கிறது. அதிலும் பாலியல் சார்ந்த விஷயங்களை அம்மக்கள் பட்டவர்த்தனமாகவும், கொச்சையாகவும் பேசுவதையும், விமரிசிப்பதையும் சிறிதும் இரசிக்கவே முடியவில்லை.

தற்கால இலக்கியம், முற்போக்கு இலக்கியம் எங்கே போகும்? - என்று காட்டுகிறதா மாதொருபாகன் நாவல்.
 

அடுத்து, திருச்செங்கோட்டு மக்கள் அனைவரையும் ஆவேசமாக்கிய நாவலின் முக்கியப் பகுதிக்கு வருகிறேன். நாவலின் மையப்புள்ளி இதுவே! இந்நிகழ்வை நோக்கியே கதை கவனமாக நகர்த்தப்பட்டிருக்கின்றது. அது என்ன?


திருச்செங்கோட்டு மாதொருபாகன் கோயிலில் ஒவ்வோராண்டும் 14 நாட்கள் தொடர்ச்சியாய் நடைபெறும் ’தேர்நோம்பி’ எனும் திருவிழாவே அது! அதில் அப்படியென்ன ஆட்சேபத்திற்குரிய விஷயம் நிகழ்கிறது என்று பார்த்தால்…விழாவின் 14-ஆம் நாளிரவில் திருச்செங்கோட்டுக்குத் திருவிழா பார்க்கவரும் ஆண்களும் பெண்களும் யார் வேண்டுமானாலும் யாருடன் வேண்டுமானாலும் (முறையற்ற) பாலுறவு கொள்ளலாம் என்பதாக நாவலில் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. அத்தோடு விடவில்லை  ஆசிரியர்…பிள்ளைப்பேறில்லாப் பெண்கள் பலர் அன்று இம்முறையைப் பின்பற்றி குழந்தை பெற்றிருக்கின்றார்கள்; அப்பிள்ளைகளை யாரும் தவறாகப் பார்க்கவில்லை; மாறாக அப்பிள்ளைகள் ‘சாமிப் பிள்ள’ என்ற அடைமொழியோடு அழைக்கப்பட்டிருக்கின்றனர் என்றும் குறிப்பிட்டிருக்கின்றார்.


இந்நாவலிலும் தன் கணவனால் பிள்ளைப்பேறு வாய்க்கப்பெறாத நாயகி ‘பொன்னாளும்’ கடைசியில் ‘வறடி (barren woman) என்று தான் அழைக்கப்படும் அவலத்தைத் துடைக்க வேறுவழியின்றி இதே வழியைப் பின்பற்ற விழைகின்றாள்; தன் மனைவியின்மீது அளவற்ற அன்பு கொண்டு ஈருடல் ஓருயிராக…அதாவது ‘மாதொருபாகனாக’ வாழ்ந்துவரும் நாயகன் காளிக்கு இது பெரும் அதிர்ச்சியைத் தருவதாய் நாவலை முடித்துள்ளார் ஆசிரியர்.


இங்கே நாம் ஒன்றை கவனிக்க வேண்டும். இத்தகைய சம்பவங்கள் நிகழ்காலத்தில் (திருச்செங்கோட்டில்) நடப்பவையாக ஆசிரியர் தன் நாவலில் பதிவுசெய்யவில்லை! குறைந்தபட்சம் 100 ஆண்டுகளைத் தாண்டியதாய் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நிகழ்ந்தவையாகவே இச்சம்பவங்கள் காட்டப்பட்டுள்ளன. எனவே அவை உண்மையா இல்லையா என்பதை அறிய முற்படாமல் உணர்ச்சிவசப்பட்டுப் போராட்டங்கள் நடத்துவது அறிவுடைமை ஆகாது. ’மெய்ப்பொருள் காண்பதே அறிவல்லவா?’


நன்கு படித்த பொறுப்புள்ள ஒரு பேராசிரியர், கொங்குச் சொற்களின் பேரகராதி, சிறுகதை, நாவல்கள் ஆகியவற்றின் வாயிலாய்ப் பரவலாக மக்களிடம் கவனம்பெற்ற ஒரு மனிதர், இவ்வளவு சென்சிடிவான ஒரு விஷயத்தைத் தன் நாவலின் மையப்புள்ளியாய், கிளைமாக்ஸாய் வைத்திருக்கிறார் என்றால் அது ஏதோ கற்பனையானது என்றோ, வேண்டுமென்றே தன் சொந்தஊர் மக்களை இழிவுபடுத்தவேண்டும் என்ற நோக்கத்தில் செய்த செயலென்றோ ஒரேயடியாய்ப் புறந்தள்ளிவிடவும் முடியவில்லை. இவற்றில் ஒருசிறிதேனும் உண்மையிருக்க வாய்ப்புண்டு என்பதை மறுப்பதற்கில்லை.


என்னவொன்று…எழுதுதற்கு ஆதாரங்களாக அவர் கைக்கொண்ட நூல்களையோ, தரவுகளையோ, பிற சான்றுகளையோ இந்த நாவலில் அவர் தந்திருக்கலாம்; அல்லது வேறுசில எழுத்தாளர்கள் சொல்வதுபோல் வெளிப்படையாக ஊர்ப் பெயரினையும் திருவிழாப் பெயரினையும் நாவலில் குறிப்பிட்டிருப்பதைத் தவிர்த்திருக்கலாம். இரண்டையுமே செய்யத்தவறியிருக்கிறார்.


ஆம் என்று தான் தோன்றுகிறது. எந்த வரலாற்று ஆதாரமும் இல்லை என்று பெருமாள் முருகனே குறிப்பிட்டுள்ளார்.
ஒரு சாதியை மட்டும் சொல்வதாகவோ, ஏதோ ஊர் திருவிழா என்றோ படைத்திருக்கலாம்.

”எந்த டாக்குமெண்டரி ஆதாரமும் இல்லை. கேள்விப்பட்டது தான்” என்கிறார் முற்போக்கு எழுத்தாளர் பெருமாள் முருகன்.

”Is there any documentary evidence to support the existence of consensual sex, written about in the book?

There is no historical evidence. Details about the custom were passed on orally. Writer Theodore Baskaran and Professor A.K. Perumal have also written about similar customs that prevailed in other parts of the State. For example, [there is] the Thuppatti festival in which men and women participate while covering their faces.”

நா. கணேசன்

வேந்தன் அரசு

unread,
Jan 25, 2015, 2:01:07 PM1/25/15
to vallamai, மின்தமிழ்


25 ஜனவரி, 2015 ’அன்று’ 11:05 முற்பகல் அன்று, Iyappan Krishnan <jee...@gmail.com> எழுதியது:
காதலியை எப்படி வாசிப்பது? 

பல் அனைத்தும் இழந்த முதியவன் கமர்கட் சாப்பிடுவது போல்

செல்வன்

unread,
Jan 25, 2015, 11:31:48 PM1/25/15
to vallamai, மின்தமிழ்

2015-01-25 5:57 GMT-06:00 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
தேவடியாள்கள் அப்படித்தான் பேசுவார்கள்.,

பொன்னா அவளுடைய அப்பன் வண்டி ஓட்ட தேர் திருவிழாவுக்கு போகும் போது, இந்த ஒரு சாலையில் மட்டும் இத்தனை மக்கள் என்றால் உலகத்தில் எத்த்னை மக்கள் இருப்பார்கள் என்று வியப்பாள். அத்தனை பேருமா?திருவிழாவில் பல பதினாயிரம் மக்கள் கூடுவார்கள் எல்லாரும் தேவடியாள்தான் எனறு பொருள்தராது. 


தேவடியாளிடமே தேவடியாபட்டம் வாங்கின அவமானமே திருச்செங்கோட்டுபெண்களுக்கு இந்த நாவலால் கிடைத்துள்ளது.

நாம இங்கே என்ன பேசியும் பயன் கிடையாது. பாதிக்கபட்ட மக்களுக்கு தான் அவர்கள் வலி தெரியும்...அவர்களுக்கு பாதிப்பில்லை என்றால் அதை அவர்கள் தானே சொல்லவேண்டும்? நாம் எப்படி முடிவெடுக்கமுடியும்?

--

வேந்தன் அரசு

unread,
Jan 26, 2015, 8:40:56 AM1/26/15
to vallamai, மின்தமிழ்


25 ஜனவரி, 2015 ’அன்று’ 11:31 பிற்பகல் அன்று, செல்வன் <hol...@gmail.com> எழுதியது:


2015-01-25 5:57 GMT-06:00 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
தேவடியாள்கள் அப்படித்தான் பேசுவார்கள்.,

பொன்னா அவளுடைய அப்பன் வண்டி ஓட்ட தேர் திருவிழாவுக்கு போகும் போது, இந்த ஒரு சாலையில் மட்டும் இத்தனை மக்கள் என்றால் உலகத்தில் எத்த்னை மக்கள் இருப்பார்கள் என்று வியப்பாள். அத்தனை பேருமா?திருவிழாவில் பல பதினாயிரம் மக்கள் கூடுவார்கள் எல்லாரும் தேவடியாள்தான் எனறு பொருள்தராது. 


தேவடியாளிடமே தேவடியாபட்டம் வாங்கின அவமானமே திருச்செங்கோட்டுபெண்களுக்கு இந்த நாவலால் கிடைத்துள்ளது.

அந்த ஊரில் தேவடியாள்கள் இல்லமல் இருந்ததா? அது இழிவாக தோணலையா 

நாம இங்கே என்ன பேசியும் பயன் கிடையாது. பாதிக்கபட்ட மக்களுக்கு தான் அவர்கள் வலி தெரியும்...அவர்களுக்கு பாதிப்பில்லை என்றால் அதை அவர்கள் தானே சொல்லவேண்டும்? நாம் எப்படி முடிவெடுக்கமுடியும்?

ஆம். நாடெங்கும் உள்ள இளைஞர்கள் வண்டிகட்டிக்கொண்டு திருவிழாவுக்கு போக இருக்கிறார்கள்

முதலில் அங்கு கூடும் மக்கள் எல்லாரும் திருசெங்கோடுதான் என்று நிறுவுங்கள்


 
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

சொ. வினைதீர்த்தான்

unread,
Jan 30, 2015, 4:53:34 AM1/30/15
to vallamai, mintamil
மாதொருபாகன் நூல் குறித்து நான் காரைக்குடி த.மு.எ.ச கூட்டத்தில் 22.2.2015 அன்று உரையாற்றுகிறேன். நம் குழுமங்களில் நண்பர்கள் பகிர்ந்துகொண்டுள்ள கருத்துக்களையும் முகநூல் பதிவுகளையும் இணைத்து வாசகர்களின் உணர்களைத்தொகுத்துள்ளேன். அதனை அடிப்படையாகக்கொண்டு உரையை அமைத்துக்கொள்ளலாம் என உள்ளேன்.
நண்பர்களுக்கு நன்றி.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான். 

வேந்தன் அரசு

unread,
Jan 30, 2015, 7:09:43 AM1/30/15
to vallamai, mintamil
வாழ்த்துகள் ஐயா.
தமிழ் மக்களுக்கு பொறையுடைமை பெருக வழி செய்யுங்கள்

30 ஜனவரி, 2015 ’அன்று’ 4:53 முற்பகல் அன்று, சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com> எழுதியது:

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Shrinivasan T

unread,
Jan 30, 2015, 8:22:14 AM1/30/15
to mint...@googlegroups.com, vallamai
30 ஜனவரி, 2015 ’அன்று’ 3:23 பிற்பகல் அன்று, சொ. வினைதீர்த்தான்
<karu...@gmail.com> எழுதியது:
>
> மாதொருபாகன் நூல் குறித்து நான் காரைக்குடி த.மு.எ.ச கூட்டத்தில் 22.2.2015 அன்று உரையாற்றுகிறேன். நம் குழுமங்களில் நண்பர்கள் பகிர்ந்துகொண்டுள்ள கருத்துக்களையும் முகநூல் பதிவுகளையும் இணைத்து வாசகர்களின் உணர்களைத்தொகுத்துள்ளேன். அதனை அடிப்படையாகக்கொண்டு உரையை அமைத்துக்கொள்ளலாம் என உள்ளேன்.



பெருமாள் முருகன் – ஹிந்துத்துவர்களுக்கு சில கேள்விகள்

https://siliconshelf.wordpress.com/2015/01/28/பெருமாள்-முருகன்-ஹிந்து/

இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்




--
Regards,
T.Shrinivasan


My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com
Free E-Magazine on Free Open Source Software in Tamil : http://kaniyam.com

Get CollabNet Subversion Edge : http://www.collab.net/svnedge

PRASATH

unread,
Jan 30, 2015, 9:50:54 AM1/30/15
to vallamai

உங்க பீலிங்க்ஸை புரிஞ்சுகிட்டேன் அண்ணே...

வீட்டுக்கு வரும் போது அண்ணி கிட்ட நேர்லயே சொல்லிடறேன்...

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

சொ. வினைதீர்த்தான்

unread,
Jan 30, 2015, 10:09:34 AM1/30/15
to vallamai, mint...@googlegroups.com
மிக்க நன்றி திரு சீனிவாசன்; திரு வேந்தன் அரசு.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

2015-01-30 18:51 GMT+05:30 Shrinivasan T <tshrin...@gmail.com>:

செல்வன்

unread,
Jan 30, 2015, 11:26:55 AM1/30/15
to mintamil, vallamai
  1. வயது வந்த ஒரு பெண் (adult) – உடல் சுகத்துக்காகவோ, பிள்ளைப்பேறுக்கோ, எதற்காக வேண்டுமானாலும் இருக்கட்டும் – தான் விரும்புபவனோடு படுப்பது தவறா? அப்படிப் படுத்தால் அது அவள் குடும்பத்தை, ஜாதியை, ஊரைக் கேவலப்படுத்துகிறதா?
  2. கேவலப்படுத்தாது என்று நீங்கள் நினைத்தால் இந்த சர்ச்சைக்கு அர்த்தமே இல்லை. கேவலப்படுத்தும் என்றால் அடுத்த கேள்வி. அந்த adult ஆணாக இருந்தால் அது அவன் குடும்பத்தை, ஜாதியை, ஊரைக் கேவலப்படுத்தாதா?
இப்படி ஒரு கேள்வியை அந்த இணைப்பில் பார்த்தேன்

கல்யாணம் ஆகி குழந்தை இல்லாத பெண் குழந்தைக்கு இன்னொருவனுடன் உறவுகொள்கிறாள் என்றால் அவள் கணவன் ஆண்மையில்லாதவன், ஸ்பெர்ம் கவுண்ட் குறைவானவன் என எதை வேண்டுமானாலும் ஊரார் நினைக்கலாம். ஒரு ஒட்டுமொத்த ஊர்பெண்களே அப்படி செய்வதாக எழுதிவிட்டு அதில் ஒரு கேவலமும் கிடையாது என்பது ஒன்று முற்போக்காக இருக்கவேண்டும், அல்லது ஜோக் ஆக இருக்கவேண்டும். அல்லது இரண்டும் ஒன்றாக கூட இருக்கலாம்.

குழந்தை இல்லை என ஆண் இரண்டாவது திருமணம் செய்வதுக்கும் இதுவே பொருள்

ருத்ரா இ.பரமசிவன்

unread,
Jul 6, 2016, 7:03:09 PM7/6/16
to மின்தமிழ், minT...@googlegroups.com, vall...@googlegroups.com
அடி தடி களுக்கு நடைபெறும் கட்டப்பஞ்சாயத்துக்குள்சமுதாய தாக்கம் உள்ள ஒரு நாவலும் மாட்டிக்கொண்டது இலக்கிய ஆர்வலர்களுக்கு மிகவும் கொடுமை இழைக்கப்பட்டது போல் தான் இருந்தது.சாமிகள் செய்கையில் ஆசாமிகளின் அசிங்கமும் ஆபாசமுமே இருந்ததைத்தான் புராணங்கள் காட்டுகின்றன.ஆனால் "மாதொருபாகன்" அடக்குமுறையில் கிராம பிரபுத்துவ முறையே தன் சாதி சமயப் படைக்கலன்களை பயன்படுத்திக்கொண்டது.ஆட்சி எந்திரம் தான் ஏதோ ஒரு நடுநிலைமை வகிப்பது போல் காட்டிக்கொண்டது.
பதினாறு வயதினிலே படத்தில் கமல்ஹாசன் சொல்வாரே "டேய் ஒடக்காய உடுங்கடா.(ராமர்க்கு  மட்டுமில்லே) இனி அது ஒண்ணுக்கே அடிக்காதுடா" என்று கதறியதைப்போல‌  அப்படி தன் எழுத்துக்களையே "அன்னியப்படுத்திக்கொண்ட" ஒரு கொடுங்கோன்மை இலக்கியத்தின் மீது பாய்ந்த வரலாறு இப்போது நிகழ்ந்துள்ளது.  ஓட்டுவங்கிக்கு மட்டுமே தூண்டில் போடும் பெரும் கட்சிகள் இந்த வினோத சுரண்டல்வாத ஜனநாயக அமைப்புக்கு தான் கொடி பிடித்தன.இந்த பின்னணியில் இந்த தீர்ப்பு மானுடவாசம் கசியும் எழுத்துக்களுக்கு ஒரு சுவாசபூங்காற்று.

==============================================ருத்ரா

வேந்தன் அரசு

unread,
Jul 7, 2016, 9:53:11 AM7/7/16
to vallamai, மின்தமிழ்
>
பிள்ளைப்பேறு இல்லாத பெண்கள் தவறான நடத்தையைப் பின்பற்ற வேண்டும் என்கிறாரா?

விந்துதானம் பெறுகிறாள். அதுவும் ”அனானிமசாக”. .

6 ஜூலை, 2016 ’அன்று’ பிற்பகல் 7:03 அன்று, ருத்ரா இ.பரமசிவன் <ruthra...@gmail.com> எழுதியது:

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

ருத்ரா இ.பரமசிவன்

unread,
Jul 7, 2016, 11:12:23 AM7/7/16
to மின்தமிழ், minT...@googlegroups.com, vall...@googlegroups.com

அன்புள்ள திரு.செல்வன் அவர்களே

//திருச்செங்கோட்டை பெற்றி பேசுகையில் குந்தி தேவி, நியோகம்னு எங்க மக்கள் வாயில் நுழையாத பேரு, ஊரு, கலாசாரத்தையெல்லாம் சொல்லிகிடிட்டிருக்க கூடாது.//

இது வாயில் நுழைய (அல்லது மனத்தில் நுழைய)வில்லை என்றால்

//யுனைடட் கிங்க்டம் ஒரே நாடு. ஒரே மதம், ஒரே கலாசாரம் தான்

அயர்லாந்தின் செயிண்ட் பாட்ரிக்ஸ் தினத்தை ப்ரிட்டிஷ் பண்டிகைன்னா அவங்க ஒத்துக்குவாங்களா?//..

இதெல்லாம் உங்கள் நுண்மாண் நுழைபுலத்துள் எப்படி நுழைந்தது?மேலும் அதே மேலை நாட்டினர் (நாகரிகத்தின் உச்சிக்கு சொந்தக்காரர்கள்) வாழும் "கே கலாச்சாரம் பற்றி"யும் கேள்விப்பட்டிருப்பீர்களே! எதற்கெடுத்தாலும் நம் நாட்டு சுவ‌டிகளையெல்லாம் "மாக்ஸ்முல்லர்"பவனில் திருடிக்கொண்டு அவன்கள் ராக்கெட் விட்டான்கள் விமானம் விட்டான்கள் என்று பேசும் உங்கள்"புதிய பழமைவாதம்" நம் ஐயப்ப புராணத்தின் சாராம்சம் தான் அவர்களது "கே கலாச்சாரம்"என்று கூட பேசலாம்."சர்ரோகேட்டட் மதர்" முறை மட்டும் அல்ல‌ நம் ஓட்டுவங்கிகளின் இடையே உயிர்காக்க ரத்த வங்கி இருப்பது போல் நம் "வம்சாவழி தினவு"எனும் உளவியல் நோயை காக்க விந்து வங்கியும் வந்து விட்டது.அந்த விந்து வங்கி என்பதனுள் மில்லியன் கணக்கான "திருச்செங்கோட்டு" நுண்ணுயிரிகள் கிடக்கின்றனவே.இவை மனித பரிணாம வளர்ச்சியின் நீட்டிப்புகள்.
அதை தடுக்கும் கற்கால ஆவேசங்கள் நம் கண்ணோட்டத்திலிருந்து களையப்படவேண்டும்."அறிவும் உணர்வும் சரி விகிதத்தில் கலந்த‌"கண்ணோட்டம் எனும் கழிபெரும் காரிகையால் தான் உண்டு இவ்வுலகம்" என்பதும் நம் ஆன்றோர் வாக்கு அல்லவா?"கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை உண்மையான் உண்டிவ் வுலகு." என்ற குறள் "நம் மானுடமலர்ச்சி எனும் பரிணாமக்கொள்கையை பொருத்தமாக புகல்கிறது. மாதொருபாகன் அத்தகைய "மானுடவியற்கண்ணோட்டத்தால்" எழுதப்பட்டது.இதற்குள் ஒரு தேவா- அசுர யுத்த அரசியல் விளையாட்டு தேவையில்லை.

============================================ருத்ரா



























"கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை 
உண்மையான் உண்டிவ் வுலகு." என்ற குறள் "நம் மானுடமலர்ச்சி எனும் பரிணாமக்கொள்கையை பொருத்தமாக புகல்கிறது.மாதொருபாகன் அத்தகைய "மானுடவியற்கண்ணோட்டத்தால்" எழுதப்பட்டது.இதற்குள் ஒரு தேவா அசுர யுத்த அரசியல் விளையாட்டு தேவையில்லை.


On Saturday, January 24, 2015 at 4:15:33 PM UTC-8, செல்வன் wrote:

செல்வன்

unread,
Jul 7, 2016, 11:36:44 AM7/7/16
to vallamai

ருத்ரா ஐயா,

நம் நாட்டு ராக்கெட்டை மேக்ஸ்முல்லர் பவனில் திருடினார்கள் என்றெல்லாம் நான் எப்போதும் எழுதியதில்லை.

எனக்கு தெரிந்து, நான் படித்தவரை தமிழ் மரபிலும், இலக்கியத்திலும் மானமும், வீரமுமே தமிழ்மரபாக குறிப்பிடப்பட்டுள்ளது. பிள்ளை இல்லை எனில் திருவிழாவில் கண்டவனுடன் படுத்து பிள்ளை பெறும் கலாசாரம் இந்த மண்ணின் வழக்கம் இல்லை. இப்படிப்பட்ட கலாசாரத்தை வடமொழி நூல்களில் இருந்து தேடி எடுத்து அதை திருச்செங்கோட்டு கலாசாரம் என சொல்லி மகிழ்ந்து கொள்வது புத்தகம் விற்க உதவலாம், அல்லது முற்போக்கு வட்டங்களில் புகழ் பெற உதவலாம் அல்லது விருதுகள் கிடைக்க உதவலாமோ என்னவோ எனக்கு தெரியாது. ஆனால் இதுக்கு எல்லாம் திருச்செங்கோட்டு பெண்கள் தாந் பலியாடாகவேண்டுமா என்பது தான் எந் கேள்வி.

இந்த ஆபாச கலாசாரம் திருச்செங்கோட்டில் நிலவியதுக்கான ஆதாரத்தை முன்வைத்து விட்டு இம்மாதிரி கதைகளை எழுதினால் நன்று.

வேந்தன் அரசு

unread,
Jul 7, 2016, 1:56:30 PM7/7/16
to vallamai


7 ஜூலை, 2016 ’அன்று’ முற்பகல் 11:36 அன்று, செல்வன் <hol...@gmail.com> எழுதியது:

ருத்ரா ஐயா,

நம் நாட்டு ராக்கெட்டை மேக்ஸ்முல்லர் பவனில் திருடினார்கள் என்றெல்லாம் நான் எப்போதும் எழுதியதில்லை.

எனக்கு தெரிந்து, நான் படித்தவரை தமிழ் மரபிலும், இலக்கியத்திலும் மானமும், வீரமுமே தமிழ்மரபாக குறிப்பிடப்பட்டுள்ளது. பிள்ளை இல்லை எனில் திருவிழாவில் கண்டவனுடன் படுத்து பிள்ளை பெறும் கலாசாரம் இந்த மண்ணின் வழக்கம் இல்லை. இப்படிப்பட்ட கலாசாரத்தை வடமொழி நூல்களில் இருந்து தேடி எடுத்து அதை திருச்செங்கோட்டு கலாசாரம் என சொல்லி மகிழ்ந்து கொள்வது புத்தகம் விற்க உதவலாம், அல்லது முற்போக்கு வட்டங்களில் புகழ் பெற உதவலாம் அல்லது விருதுகள் கிடைக்க உதவலாமோ என்னவோ எனக்கு தெரியாது. ஆனால் இதுக்கு எல்லாம் திருச்செங்கோட்டு பெண்கள் தாந் பலியாடாகவேண்டுமா என்பது தான் எந் கேள்வி.


பலியாடு என ஏன் கருதுகிறீர்கள். பயனாளி என் கருதுங்கள்.
எங்க ஊரில் திருமணம் ஆகாமல் விந்த்தானம் பெற்று இரட்டைகுழந்தைகள் பெற்று செல்லமாக வளர்க்கிராள் ஒருத்தி. அதில் என்ன் பண்பாடு கெட்டுபோனது?
 

செல்வன்

unread,
Jul 7, 2016, 2:22:30 PM7/7/16
to vallamai

2016-07-07 12:56 GMT-05:00 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
பலியாடு என ஏன் கருதுகிறீர்கள். பயனாளி என் கருதுங்கள்.
எங்க ஊரில் திருமணம் ஆகாமல் விந்த்தானம் பெற்று இரட்டைகுழந்தைகள் பெற்று செல்லமாக வளர்க்கிராள் ஒருத்தி. அதில் என்ன் பண்பாடு கெட்டுபோனது?


உங்க ஊர் என்பது சின்சினாட்டியா?


--

Oru Arizonan

unread,
Jul 7, 2016, 9:59:45 PM7/7/16
to vallamai


2016-07-07 8:36 GMT-07:00 செல்வன் <hol...@gmail.com>:

//ருத்ரா ஐயா,

இந்த ஆபாச கலாசாரம் திருச்செங்கோட்டில் நிலவியதுக்கான ஆதாரத்தை முன்வைத்து விட்டு இம்மாதிரி கதைகளை எழுதினால் நன்று.//

 என் கருத்தும் அதுதான், செல்வரே!  "மாதொருபாகனை" எழுதியவர், ஆராய்ச்சிக்காகப் பணம்பெற்றுக்கொண்டு இப்புதினத்தை எழுதினாரென்று சிலமாதங்கள்முன்பு மின்தமிழிலில் படித்தேன்.  
எனவே,  ஆதாரம் இல்லாதவரை, மாதொருபாகனை எழுதியவர் ஆராய்ச்சிக்காக வாங்கிய அப்பணத்தைத் திருப்பிக்கொடுக்கவேண்டும்.  

இல்லாவிட்டால், ஒரு நிறுவனத்தை ஏமாற்றியவர் என்றுதானே நாம் கொள்ளவேண்டும்?

அப்படிப்பட்டவரை எப்படிப் புகழ்வது?
ஒரு அரிசோனன் 

Oru Arizonan

unread,
Jul 7, 2016, 10:02:10 PM7/7/16
to vallamai


2016-07-07 10:56 GMT-07:00 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
//எங்க ஊரில் திருமணம் ஆகாமல் விந்த்தானம் பெற்று இரட்டைகுழந்தைகள் பெற்று செல்லமாக வளர்க்கிராள் ஒருத்தி//

அது எந்த ஊர், எந்த நாடு, வேந்தரே?  

வேந்தன் அரசு

unread,
Jul 8, 2016, 12:19:21 AM7/8/16
to vallamai

7 ஜூலை, 2016 ’அன்று’ பிற்பகல் 10:02 அன்று, Oru Arizonan <oruar...@gmail.com> எழுதியது:



2016-07-07 10:56 GMT-07:00 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
//எங்க ஊரில் திருமணம் ஆகாமல் விந்த்தானம் பெற்று இரட்டைகுழந்தைகள் பெற்று செல்லமாக வளர்க்கிராள் ஒருத்தி//

அது எந்த ஊர், எந்த நாடு, வேந்தரே?  
ஒரு அரிசோனன் 

சின்சினாட்டிதான். அப்பா இந்தியர். தன்க்கு ஹிஸ்பானிக் மரபு விந்துதான் தேவை என்று கேட்டு பிள்ளைபெற்றுக்கொண்டார்.
அபார்ட்மெண்ட்கள் இரண்டை வாங்கி நிருவாகம் செய்கிறாள்.
 

N. Ganesan

unread,
Jul 8, 2016, 12:34:26 AM7/8/16
to வல்லமை, மின்தமிழ்
பெருமாள் முருகனே ‘தி ஹிண்டு’ பத்திரிகையில் இந்த பிரச்சினை உருவானபோது கொடுத்த பேட்டியில்
திருச்செங்கோட்டில் இம்மாதிரி நிகழ்ந்ததற்கான ஆதாரம் இல்லை என சொல்லியிருக்கிறார்.
அப் பேட்டியை மின்தமிழ் குழுவில் குறிப்பிட்டுள்ளேன். தேடினால் கிடைக்கும்.

கற்பனையை கற்பனையூர் ஒன்றாக ஒரு பெயர் கொடுத்து எழுதலாம் பெருமாள் முருகன் போன்றோர். திருச்செங்கோடு எனப் பெயர் கொடுத்ததால்
நாவலாக இருந்தாலும் அவ்வூர்க் காரர்கள் ஏற்கவில்லை என தெரிகிறது.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Jul 8, 2016, 12:51:10 AM7/8/16
to வல்லமை, minT...@googlegroups.com, மு இளங்கோவன்
ஜனவரி 25, 2015 அன்று மிந்தமிழ், வல்லமைக்கு அனுப்பிய மடல்:

”எந்த டாக்குமெண்டரி ஆதாரமும் இல்லை. கேள்விப்பட்டது தான்” என்கிறார் முற்போக்கு எழுத்தாளர் பெருமாள் முருகன்.

”Is there any documentary evidence to support the existence of consensual sex, written about in the book?

There is no historical evidence. Details about the custom were passed on orally. Writer Theodore Baskaran and Professor A.K. Perumal have also written about similar customs that prevailed in other parts of the State. For example, [there is] the Thuppatti festival in which men and women participate while covering their faces.”

--------------------------

பரம்பரையாக, என் முன்னோர்களுக்கு திருச்செங்கோடு கோயில். அறங்காவலர் குழுத் தலைவர்களாக பலர் இருந்துள்ளனர். உ-ம்: என் மைத்துனன் மனைவி
டி. எம். காளியண்ணன் அவர்களின் பேர்த்தி. டி. எம். காளியண்ணன் லயோலா கல்லூரியில் படித்தபோது நேரு விஜயம் செய்தார். லயோலா பிரின்சிபால்
நேருவிடம் அறிமுகம் செய்ய, திருச்செங்கோடு எம்பி ஆகு என்று சொல்லி, மந்திரி பதவி தந்தார். கண்ணகிவிழா பெரும்புலவர் வே. ரா. தெய்வசிகாமணிக்கவுண்டர்
அங்கே தமிழ் ஆசிரியராய் இருந்த காலத்தே தொடங்கியவர் டிஎம்கே அவர்கள். அவர் காலத்தில் தான் கார்கள் மலைமேல் செல்ல பாதையும். கீழேயிருந்து
மலைக்கு நீரேற்ற மோட்டார் வசதியும் ஏற்பட்டது.  

இவ்வாறு திருச்செங்கோட்டுக் கோயிலில் நடந்திருந்தால் யாராவது பதிவு செய்திருக்க மாட்டார்களா?

நா. கணேசன்

N. Ganesan

unread,
Jul 8, 2016, 12:53:13 AM7/8/16
to வல்லமை, minT...@googlegroups.com, muela...@gmail.com


On Thursday, July 7, 2016 at 9:51:10 PM UTC-7, N. Ganesan wrote:
ஜனவரி 25, 2015 அன்று மிந்தமிழ், வல்லமைக்கு அனுப்பிய மடல்:

”எந்த டாக்குமெண்டரி ஆதாரமும் இல்லை. கேள்விப்பட்டது தான்” என்கிறார் முற்போக்கு எழுத்தாளர் பெருமாள் முருகன்.

”Is there any documentary evidence to support the existence of consensual sex, written about in the book?

There is no historical evidence. Details about the custom were passed on orally. Writer Theodore Baskaran and Professor A.K. Perumal have also written about similar customs that prevailed in other parts of the State. For example, [there is] the Thuppatti festival in which men and women participate while covering their faces.”

--------------------------


எங்கள் கலியாணங்களில் திருச்செங்கோடு, பழனி, பேரூர் சிவாச்சாரிய குருக்கள் வந்து பிரசாதம் வழங்குவர். பட்டக்காரர்கள் மாப்பிள்ளை நெற்றியில் நீறிடுவது
முக்கிய சீர்களில் ஒன்று,

துரை.ந.உ

unread,
Jul 8, 2016, 1:47:04 AM7/8/16
to வல்லமை
​அதேதான் .. கதையை கதையாக எழுதினால் யார் வந்து கேக்கப் போறாங்க ... அத்ற்குள் ஒரு குறிப்பிட்ட இடத்தைக் குறிக்கும்போதுதானே சிக்கலே வருகிறது ....

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
 -இனியொரு விதி செய்வோம்
                                        ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in/
காட்சி:மூன்றாம் உலகம்            :http://duraigif.blogspot.in/
படம் : அட........!                            :ttp://duraipics.blogspot.in/
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in/
ஹைக்கூ :வானம் வசப்படும்     :http://duraihaikoo.blogspot.in/
புகைப்படம் :எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.in/
                                                       :http://www.flickr.com/photos/duraian/

துரை.ந.உ

unread,
Jul 8, 2016, 1:48:27 AM7/8/16
to வல்லமை
2016-07-07 23:26 GMT+05:30 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:


7 ஜூலை, 2016 ’அன்று’ முற்பகல் 11:36 அன்று, செல்வன் <hol...@gmail.com> எழுதியது:

ருத்ரா ஐயா,

நம் நாட்டு ராக்கெட்டை மேக்ஸ்முல்லர் பவனில் திருடினார்கள் என்றெல்லாம் நான் எப்போதும் எழுதியதில்லை.

எனக்கு தெரிந்து, நான் படித்தவரை தமிழ் மரபிலும், இலக்கியத்திலும் மானமும், வீரமுமே தமிழ்மரபாக குறிப்பிடப்பட்டுள்ளது. பிள்ளை இல்லை எனில் திருவிழாவில் கண்டவனுடன் படுத்து பிள்ளை பெறும் கலாசாரம் இந்த மண்ணின் வழக்கம் இல்லை. இப்படிப்பட்ட கலாசாரத்தை வடமொழி நூல்களில் இருந்து தேடி எடுத்து அதை திருச்செங்கோட்டு கலாசாரம் என சொல்லி மகிழ்ந்து கொள்வது புத்தகம் விற்க உதவலாம், அல்லது முற்போக்கு வட்டங்களில் புகழ் பெற உதவலாம் அல்லது விருதுகள் கிடைக்க உதவலாமோ என்னவோ எனக்கு தெரியாது. ஆனால் இதுக்கு எல்லாம் திருச்செங்கோட்டு பெண்கள் தாந் பலியாடாகவேண்டுமா என்பது தான் எந் கேள்வி.


பலியாடு என ஏன் கருதுகிறீர்கள். பயனாளி என் கருதுங்கள்.

​வேந்தே .. விளையாட்டாய் எழுதுவதாய் நினைத்து எழுதி இருக்கிறீர்கள் போலும் .... :((

 
எங்க ஊரில் திருமணம் ஆகாமல் விந்த்தானம் பெற்று இரட்டைகுழந்தைகள் பெற்று செல்லமாக வளர்க்கிராள் ஒருத்தி. அதில் என்ன் பண்பாடு கெட்டுபோனது?
 
--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

வேந்தன் அரசு

unread,
Jul 8, 2016, 9:30:21 AM7/8/16
to vallamai


8 ஜூலை, 2016 ’அன்று’ முற்பகல் 1:48 அன்று, துரை.ந.உ <vce.pr...@gmail.com> எழுதியது:



2016-07-07 23:26 GMT+05:30 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:


7 ஜூலை, 2016 ’அன்று’ முற்பகல் 11:36 அன்று, செல்வன் <hol...@gmail.com> எழுதியது:

ருத்ரா ஐயா,

நம் நாட்டு ராக்கெட்டை மேக்ஸ்முல்லர் பவனில் திருடினார்கள் என்றெல்லாம் நான் எப்போதும் எழுதியதில்லை.

எனக்கு தெரிந்து, நான் படித்தவரை தமிழ் மரபிலும், இலக்கியத்திலும் மானமும், வீரமுமே தமிழ்மரபாக குறிப்பிடப்பட்டுள்ளது. பிள்ளை இல்லை எனில் திருவிழாவில் கண்டவனுடன் படுத்து பிள்ளை பெறும் கலாசாரம் இந்த மண்ணின் வழக்கம் இல்லை. இப்படிப்பட்ட கலாசாரத்தை வடமொழி நூல்களில் இருந்து தேடி எடுத்து அதை திருச்செங்கோட்டு கலாசாரம் என சொல்லி மகிழ்ந்து கொள்வது புத்தகம் விற்க உதவலாம், அல்லது முற்போக்கு வட்டங்களில் புகழ் பெற உதவலாம் அல்லது விருதுகள் கிடைக்க உதவலாமோ என்னவோ எனக்கு தெரியாது. ஆனால் இதுக்கு எல்லாம் திருச்செங்கோட்டு பெண்கள் தாந் பலியாடாகவேண்டுமா என்பது தான் எந் கேள்வி.


பலியாடு என ஏன் கருதுகிறீர்கள். பயனாளி என் கருதுங்கள்.

​வேந்தே .. விளையாட்டாய் எழுதுவதாய் நினைத்து எழுதி இருக்கிறீர்கள் போலும் .... :((

 
எங்க ஊரில் திருமணம் ஆகாமல் விந்த்தானம் பெற்று இரட்டைகுழந்தைகள் பெற்று செல்லமாக வளர்க்கிராள் ஒருத்தி. அதில் என்ன் பண்பாடு கெட்டுபோனது?


மேற்கண்ட வரிகள் உண்மையானவை. மாதொருபாகம் ஏழைகளுக்கான முறை.  அதில்நாயகி தனக்கு முன்பின் அறியாத ஒருவனிடம்தான்  தானம் பெறுவாள்



 

ருத்ரா இ.பரமசிவன்

unread,
Jul 8, 2016, 2:30:30 PM7/8/16
to மின்தமிழ், minT...@googlegroups.com, vall...@googlegroups.com
திருமிகு.மலர்விழி மங்கை அவர்களே

உங்கள் கோபம்
ஒரு எரிமலை லாவா.
நீங்கள் கழுத்தில் அணிந்திருக்கும்
தாலியும்
அந்த லாவாவை உருக்கிச்செய்யப்பட்டிருப்பதே.
அது தான் உங்களை
இப்படி கொப்பளிக்க வைத்திருக்கிறது.
மாதொருபாகன் எனும் நாவல்
உண்மையில் அந்த தாலியை
சிவன் கழுத்து பாம்பாக்கி
சிவமயம் ஆக்குவதற்காக‌
அது எழுதப்பட‌வில்லை.
அதில்
ஆணவம் இல்லை.
ஆணவம் என்று சொல்வது போல்
ஏன் ஒரு "பெண்ணவம்" இருக்கக்கூடாது.
அது தான்
அந்த நாவலில் சீறியிருக்கிறது.
ஆணவத்தில் ஆணின் அடாவடித்தனமே இருக்கிறது.
அதை எதிர்த்த பெண்ணின்வீரமே இந்த‌
"பெண்ணவம்"
பெண் தான் கற்காலத்தின் ஆண்.
வேட்டையாடும் ஆண் கூட‌
அவள் நாய்க்குட்டி தான்.
இந்த தலைமைச் "சக்தி" தான்
இன்றும் "சாக்தம்"வரை 
தத்துவம் ஆகியிருக்கிறது.
அது வெறும் "வேப்பிலைக்காரியாக"
மழுங்கப்பட்டதில்
அரசியல் ஆதிக்கம்
மை நிரப்பிக்கொண்டு
புராணங்களை குவித்து வைத்துவிட்டது.
அந்த உள்ளீடற்ற பொய்மை வேதங்களை
தூக்கிப்பிடித்தது
ஷத்ரிய ஈட்டிகளும் வாட்களும்
இன்றைய துப்பாக்கி மற்றும் 
ஆட்சிமாய்மாலங்களும் தான்.
திருமணங்கள் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன"
ஆனால் அந்த சொர்க்கங்கள்
மன வக்கிரங்களின்
"நரகங்களில் தான் கட்டப்படுகின்றன."
"புத்" என்ற நரகத்திற்கு போகாமல் தடுக்க‌
ஒரு "புத்ரன்" வேண்டும் என்று தானே
இன்று ஆபாசமாக கருதப்படுபவை எல்லாம்
அன்று (மகாபாரதத்தில்) புனித தர்மமாக‌
காட்டப்படுகின்றன.
ஆணை கற்பனையான 
நரகத்துக்குப்போகாமல் தடுக்க‌
பெண் நிஜமான நரகத்துக்குள் தள்ளப்படுவதே
"மலடி"என்ற பழிச்சொல். 
"தாலி பெண்களுக்கு வேலி" என்று
பாட்டெல்லாம் உண்டு!
ஆனால் அது 
ஆணாதிக்க வக்கிரப்பார்வையின்
அடையாளமாக இன்று ஆகிப்போனது
ஒரு சமுதாய வக்கிரம்.
தாலியும் வேண்டாம் அறுக்கவும் வேண்டாம்
என்றே
உயிர்ப்பான மனிதநேய இலக்கியங்கள்
மல்லாடுகின்றன.
அநியாயமான சில மனு தர்மங்களை
பொறுக்கமுடியாத‌
"எழுத்துக்கள்" பொங்குவதைக் கண்டு
நீங்களும் வேறு விதமாக பொங்கியிருக்கிறீர்கள்
அவ்வளவு தான்.

======================================================











 

ருத்ரா இ.பரமசிவன்

unread,
Jul 8, 2016, 3:58:49 PM7/8/16
to மின்தமிழ், minT...@googlegroups.com, vall...@googlegroups.com

அன்புள்ள திருமிகு.மலர்மங்கை அவர்களே

உங்கள் பெயரை "மலர்விழிமங்கை" என தவறாக தட்டச்சு செய்துவிட்டமைக்கு மிகவும் வருந்துகிறேன்.பிழை பொறுக்கும்படி
கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன் ருத்ரா

ருத்ரா இ.பரமசிவன்

unread,
Jul 9, 2016, 12:06:24 AM7/9/16
to மின்தமிழ், minT...@googlegroups.com, vall...@googlegroups.com
"எங்களின் (பெண்களின்) தாலியையே ஏன் அறுக்கிறீர்கள்?"
====================================================


குமுறல் நிறைந்த அந்த‌ வரிகளிலும் 
எனக்கு
அந்த "மாங்கல்யம் தந்துநானே.."
நன்றாய் கேட்கிறது.
ஏன் அந்த "கயிற்றை" 
இருவருக்கும் கட்டவேண்டியது தானே?
ஆண் ஆடுகள் 
தறிகெட்டு ஓடாமல் இருப்பதற்கும் தானே
இந்த வேலி!
"அறுத்துகொண்டு ஓடி மேயும்
அந்த ஆணாதிக்கக்காரர்களின்
சூத்திரக்கயிற்றை அறுப்பது
என்ற ஆவேசமே மேற்கண்ட வரிகளில்
பூசியிருப்பதாக 
நான் உணர்கிறேன்.
"ஆண்மலடு" என்பது
அடையாளமே காட்டப்படாமல்
அவதாரங்களாக‌
அவர்கள் (கணவர்கள்)
வணங்கப்படவேண்டும்
என்ற சாஸ்திர சம்ப்ரதாயங்களை
பிணமூட்டைகளாக‌
இன்னும் எத்தனை நாள் சுமந்து செல்வது?
"உங்களில் குற்றமே செய்யாதவர்
எவரேனும் அந்த முதல் கல்லை
எறியட்டும்"
என்று அந்த விபச்சாரக்குற்றம்
சாட்டப்பட்ட பெண்ணுக்காக‌
அந்த தேவகுமாரன் கேட்டானே
அதுவே
ஆணாதிக்கத்தின் மீது எறியப்பட்ட‌
முதல் கல்.
கல் எறிய "பொங்கி நின்றவர்கள்"
அடங்கிப்போனார்கள்.
இந்து மதம் 
உண்மையில்
மனசாட்சிகளின் குகையே தான்.
மனசாட்சியை உரசி உரசிப் பார்த்து
கடவுளைத்தேடியவர்கள்
அங்கே அவரைக் காணாமல்
அந்த "வெறுமையை"
சூத்திரப்படுத்திய ஞானிகள் ஆனார்கள்.
ஆனால் அவர்களும்
நாத்திகர்களாய் கழுவேற்றப்பட்டனர்.
கடவுள் பயம் போய்விட்டால்
"அரசன்பயமும்" காணாமல் போய்விடுமே
என்று தான்
இந்த சாஸ்திர சம்ப்ரதாயங்கள்
மானுடசுவாசக்காற்றின் மீது
பாறாங்கல்லாய் அமுக்கம் கொடுத்தது.
ஜீவாத்மா மட்டும் அல்ல‌
பரமாத்மாவும் மூச்சு திணறவே
இந்த அடக்குமுறைகள்.
கொஞ்சமாவது ஒரு கீற்று வெளி
கிடைக்காதா என்று
"சிறுமை கண்டு பொங்குவாய்"
என்ற பாரதியின் வரிகளே
அந்த வரிகளில் எதிரொலிக்கின்றன!
பெண் எனும் மாயப்பிசாசு என்பவர்கள்
எழுப்பிய புழுதியில்
திசைகளை இழந்து மயங்கிவிட்டீர்கள்.
மலடு என்பது
பெண்களுக்கு பாவம் அவமானம்.
ஆனால்
ஆண்களுக்கு அது அவமானமாக‌
இருப்பதை
திசை திருப்பவே
பெண்களை "கொச்சைப்படுத்தியதாய்"
இந்த கூக்குரல்கள்.
இந்த புண்ணிய பூமியில்
ஆண்குழந்தைகளுக்கு மட்டுமே
"கோ மாதா"வின் பால்.
பெண் சிசு பிறந்தால்
கள்ளிப்பால் தான்.
எங்கோ நடக்குது என்று
நீங்கள் கண்களை மூடிக்கொண்டு
நவராத்ரி கொலு வையுங்கள்.
மகிஷாசுரன்களை 
மடியில் கட்டிக்கொண்டு
மத்தாப்பு கொளுத்துங்கள்.
ஆயிரம் பாரதிகள் பிறந்தாலும்
உங்களுக்கு தெரியப்போவதில்லை.
"மாதர் தம்மை இழிவு செய்யும்
மடமையைக்கொளுத்துவோம்"
என்று ஒலித்தாலும்
இவர்கள் வரிகளில் 
"இழிவு செய்யும் மடமையை"
என்ற வரிகள் மட்டும்
நிரந்த அச்சுப்பிழையாய்
காணாமல் போயிருக்கும்.
இருப்பினும்
திருமிகு.மலர்விழி மங்கை அவர்களே
உங்கள் மடல் கண்டு மட்டற்ற 
மகிழ்ச்சி..நன்றி

===============================================ருத்ரா

செல்வன்

unread,
Jul 9, 2016, 12:48:52 AM7/9/16
to mint...@googlegroups.com, vallamai

ஆபாசத்தை கலாசாரம் என சொன்னதந் விளைவை இணைப்பிலுள்ள படத்தில் காண்க.

இப்படிப்பட்ட தத்துபித்துகள் தான் நாட்டில் இப்ப மேதைகள், ஞானிகள்.

வெளங்கிடும் நாடு!

FB_IMG_1468039571353.jpg

துரை.ந.உ

unread,
Jul 9, 2016, 2:55:32 AM7/9/16
to வல்லமை, Groups
​அப்பா, கணவன் பெயரில் ஒரு ‘மாமா ‘ 
:(​
 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

துரை.ந.உ

unread,
Jul 9, 2016, 3:53:12 AM7/9/16
to வல்லமை
2016-07-08 19:00 GMT+05:30 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:

பலியாடு என ஏன் கருதுகிறீர்கள். பயனாளி என் கருதுங்கள்.

​வேந்தே .. விளையாட்டாய் எழுதுவதாய் நினைத்து எழுதி இருக்கிறீர்கள் போலும் .... :((

 
எங்க ஊரில் திருமணம் ஆகாமல் விந்த்தானம் பெற்று இரட்டைகுழந்தைகள் பெற்று செல்லமாக வளர்க்கிராள் ஒருத்தி. அதில் என்ன் பண்பாடு கெட்டுபோனது?

​ வேந்தே :(
மருத்துவமனையில் வாங்குவதும்  கரு உருவாவதும்,மருத்துவமாகவே கொள்ளப்படும்.. அதைகொண்டுபொய் எப்படி இங்கே கோர்க்கின்றீர்கள் என்பது எனக்கு விளங்கவே இல்லை ​
 


மேற்கண்ட வரிகள் உண்மையானவை. மாதொருபாகம் ஏழைகளுக்கான முறை.  அதில்நாயகி தனக்கு முன்பின் அறியாத ஒருவனிடம்தான்  தானம் பெறுவாள்

​இதைத் தானம் என்பதற்கு இவ்வளவு கொச்சையாய்ப் பொருள் கொள்ளவும் , ஏற்றுக் கொள்ளவும் பெரிய மனம் வேண்டும் ... எம்போன்றோர்க்கு இல்லை :( ​
 



 
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Jul 9, 2016, 10:53:16 AM7/9/16
to மின்தமிழ், vall...@googlegroups.com
பார்த்தேன்.  

தமிழர்களின் சங்க இலக்கியத்தில் வலியுறுத்தும் கற்பு, அதற்கான மங்கல இழை (தாலி) , ... இனி இல்லாமல் தமிழ்ப் பெண்கள் வாழ்வரோ?
பழைய சங்க இலக்கியங்களில் சமயம், சமூகம் பெண்-மன்னன்-தலித் என்ற முக்கோணப் புள்ளியால் இயங்கியதைப் பார்க்கிறோம்.
வட இந்தியாவின் சமயத்துக்கு மாறாக விளங்கிய சமய, சமூக வாழ்க்கை. அதனால் தான் கற்புக்கு காதா சப்தசதியில்
முக்கியத்துவம் இல்லை. ஆனால் சங்க இலக்கியத்திலே உண்டு. அணங்கு வழிபாட்டை தமிழ் அந்தணர்கள், அம்பணவர், அம்பட்டர், ... (= தலித் சாதியினர்)
கடைப்பிடித்ததும் பார்க்கிறோம். பக்தி காலத்தில் பெருங்கோயில் வழிபாடாக நம்மாழ்வார் போன்றோர் மடைமாற்றுகின்றனர்.
சங்க அந்தணர்களின் அணங்கு வழிபாட்டைக் கண்டிக்கும் நம்மாழ்வார் பதிகம் பற்றி பழைய மடல்களில் பார்க்கலாம்.
பெண்ணின் கற்புக் கோட்பாடு த்ராவிடர் கோட்பாடு. குரங்குகள் கூட சதி உடன்கட்டை ஏறி மாய்த்துக் கொள்வதை
சங்க இலக்கியம் காட்டுகிறது. தமிழ்ப் பண்பாட்டின் மிச்சங்கள் இந்தியாவ் எங்கும் இருக்கிறது. கற்புநெறி இருக்கும்
எனத் தான் நம்புகிறேன்.

Ancient Indian linguistic signs:
This interesting linking of PiLLaiyArsuzhi/letter-o shape to OM sound has some ancient precedents in India & Let us look at some linguistic signs (1) In Indus era seals, the fish sign, due to Dravidian homophones, is said to stand for "star/deity" by Indologists. (2) Recently, an Indus sign is identified as standing for sky-crocodile (Parpola's paper on IVC crocodile cult, 2011, Tokyo). It clearly shows the "high walk" of freshwater crocodiles (known as "muggers"), and the four legs of the mugger are explicit in the sign. Let me suggest the linguistic sound for this crocodile sign, it is mokaray (connected with mogara/mogra, makara/magar - modern Indic names for crocs) (Ref.[2]), I derive mokaray from mok- (DEDR 5127 + DEDR 4897) and aray (DEDR 228). (3) The widow dying by immolation when her husband dies is performed even by monkeys in Sangam Tamil. This custom is known as sati, and the memorial stones (called as "thii-p-paayntaaL kallu", "maa-sati-kal" are found in Tamil Nadu, Karnataka, ...) See the Rajasthan sati memorials. In all these sati stones, a palm of the lady's hand is depicted and this "kai" (hand) seems to do with "kaimmai" (widowhood), "kaimpeN" (widow). See the Sati memorial stone photio here. (4) In Indian languages, Time is "kaala", the same word in Dravidian means "leg" (eg., kaal in Tamil). In Indian epic literature, use of legs of the bull of Dharma for the symbolism of yugas & how many legs of Dharma were standing in each yuga are significant which shows the connection between Dravidian "kaal-" (leg) and "kaala" (time) concept. Even fractions (1/4 kaal -"one leg out of 4", 2/4 = 1/2 "arai 'cutting into half, also hip', or "irukaal" (2/4 literally, "2 legs out of 4" (of a cow), 3/4 mukkaal - "3 legs", are named in association with the 4 legs of a cow (Ref. [7]). Note that "kaala" (Time) in all Indian languages has a Dravdiian origin. In old Tamil, "kaal" is "to move, that moves" & so, kaal = leg, wind. kaalam (T=Time) also passes by and is never static and like, leg or wind (kaal), kaala (Time) is always in motion.

நா. கணேசன்

Iyappan Krishnan

unread,
Jul 9, 2016, 1:25:02 PM7/9/16
to vall...@googlegroups.com, மின்தமிழ்
ஆதரிப்போருக்கு சில  கேள்வி 

1 - நீங்கள், கதையில் இருக்கும் ஊரில், அதே தெருவில் அதுவும் வளர்ந்த  பெண் பிள்ளையுடன் வாழ்வதாக   இருந்திருந்தால்​  கதை படித்த பின்   உங்கள் மன நிலை என்னவாக இருக்கும்?

2 - நீங்கள் கதையில் சொல்லப்படும் ஊரில் அதே தெருவில், ஒரு வேளை வீட்டின் கதவு என் 15 என்று குறிப்பிட்டிருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள், அதே வீட்டில் வளர்ந்த பெண் பிள்ளைகளுடம் வாழ்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள், அப்போது உங்களின் மன நிலை என்னவாக இருக்கும். 

3 -  கதையில் சொல்லப்படும் அதே ஊர், அதே தெரு, அதே வீடு, பெண்ணின் பெயர் பொன்னாத்தா என்று வைத்துக்கொள்ளுங்கள், அதே பெயரில் உங்களின் மனைவியோ அல்லது வயது வந்த பெண்ணோ இருந்தால், கதையைப் படித்த பின் உங்களின் மன நிலை என்னவாக இருக்கும் ?

கொஞ்சம் நேர்மையுடன் யோசித்து பதில் சொல்ல வேண்டுகிறேன். 


அன்புடன்
ஐயப்பன்

வேந்தன் அரசு

unread,
Jul 9, 2016, 2:15:01 PM7/9/16
to vallamai


9 ஜூலை, 2016 ’அன்று’ முற்பகல் 3:52 அன்று, துரை.ந.உ <vce.pr...@gmail.com> எழுதியது:



2016-07-08 19:00 GMT+05:30 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:

பலியாடு என ஏன் கருதுகிறீர்கள். பயனாளி என் கருதுங்கள்.

​வேந்தே .. விளையாட்டாய் எழுதுவதாய் நினைத்து எழுதி இருக்கிறீர்கள் போலும் .... :((

 
எங்க ஊரில் திருமணம் ஆகாமல் விந்த்தானம் பெற்று இரட்டைகுழந்தைகள் பெற்று செல்லமாக வளர்க்கிராள் ஒருத்தி. அதில் என்ன் பண்பாடு கெட்டுபோனது?

​ வேந்தே :(
மருத்துவமனையில் வாங்குவதும்  கரு உருவாவதும்,மருத்துவமாகவே கொள்ளப்படும்.. அதைகொண்டுபொய் எப்படி இங்கே கோர்க்கின்றீர்கள் என்பது எனக்கு விளங்கவே இல்லை ​
 


மேற்கண்ட வரிகள் உண்மையானவை. மாதொருபாகம் ஏழைகளுக்கான முறை.  அதில்நாயகி தனக்கு முன்பின் அறியாத ஒருவனிடம்தான்  தானம் பெறுவாள்

​இதைத் தானம் என்பதற்கு இவ்வளவு கொச்சையாய்ப் பொருள் கொள்ளவும் , ஏற்றுக் கொள்ளவும் பெரிய மனம் வேண்டும் ... எம்போன்றோர்க்கு இல்லை :( ​
 


இருக்காது. 
நம் பிள்ளைகளுக்கு மறுபால்நண்பர்களையே நாம் அனுமதியோம்
தத்துப்பிள்ளை எடுத்து வளர்ப்பது
மனைவியின் பிள்ளையை வளர்ப்பது
கைம்பெண்கள், மணமுறிவு செய்த பெண்கள் இவர்களை மணப்பது
எல்லாமே நாம் அனுமதியோம்.
இன்னும் தன்கணவனின் விந்துவை கருவாக்கிக்கொள்ளத்தான் முன்னேற்றம் கண்டு இருக்கிறோம்.

வேந்தன் அரசு

unread,
Jul 9, 2016, 2:18:59 PM7/9/16
to vallamai, மின்தமிழ்


9 ஜூலை, 2016 ’அன்று’ பிற்பகல் 1:25 அன்று, Iyappan Krishnan <jee...@gmail.com> எழுதியது:
நம் நாட்டில் எல்லாரும் பத்தரைமாற்றுத்தங்கங்களோ.
பிறனில் விழையாமை என ஒரு அதிகாரம் எழுத காரணம் என்ன?
 
மாதவியின் அப்பன் யார் என வினவாமல் கோவலன் குடும்பம் நடத்தினானே. 



--

வேந்தன் அரசு

unread,
Jul 9, 2016, 2:20:43 PM7/9/16
to vallamai, மின்தமிழ்


9 ஜூலை, 2016 ’அன்று’ பிற்பகல் 2:18 அன்று, வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> எழுதியது:
ஓர்ந்து பார்த்தால் பரத்தையர் குலமே நம் மேட்டுக்குடிகளின் பிள்ளைகள்தாம்

Iyappan Krishnan

unread,
Jul 9, 2016, 3:25:13 PM7/9/16
to vall...@googlegroups.com, மின்தமிழ்
​வேந்தரே :)​

2016-07-09 23:50 GMT+05:30 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
ஓர்ந்து பார்த்தால் பரத்தையர் குலமே நம் மேட்டுக்குடிகளின் பிள்ளைகள்தாம்

நேரடி பதில் தர இயலவில்லை என்றால் பதில் சொல்ல விரும்பவில்லை என்று ஒதுங்கிக் கொள்ளலாம் :)

அன்புடன்
ஐயப்பன்​



Iyappan Krishnan

*>*<*
உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்.
நிலைபெறுத்தலும். நீக்கலும். நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார்-அவர்
தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே.

ருத்ரா இ.பரமசிவன்

unread,
Jul 9, 2016, 3:47:11 PM7/9/16
to மின்தமிழ், minT...@googlegroups.com, vall...@googlegroups.com
//கொஞ்சம் நேர்மையுடன் யோசித்து பதில் சொல்ல வேண்டுகிறேன்.// 


இதிஹாசங்கள்
வெறும் "மாஃபஸான்" கதைகள்
என்றால்
இங்கே மனசாட்சி நேர்மை பற்றியெல்லாம்
விவாதிக்க வேண்டியதில்லை.
ஆனால்
இன்று அவை சமுதாய வக்கிரங்களாக‌
மாறிப்போன நிலையிலும்
நம் அரசியல் சட்டங்களைக்கூட‌
தூர எறிந்துவிடும் அளவுக்கு வெறிபிடித்த‌
சாதி சமய வர்ணங்களை
தன் மீது பூசிக்கொண்டு
மனிதத்தின் மெல்லிய நியாயங்களை
கூழாக்கிக் கசக்கும்
சாஸ்திர சம்ப்ரதாயங்ளாக இருக்கும்போது
அவற்றை
அசைத்துப்பார்க்கும் எழுத்துக்களில்
இல்லாத நேர்மையா
உங்கள் கேள்வியில் இருக்கிறது?

ருத்ரா இ.பரமசிவன்

unread,
Jul 9, 2016, 9:13:35 PM7/9/16
to மின்தமிழ், minT...@googlegroups.com, vall...@googlegroups.com










அன்புள்ள திரு.செல்வன் அவர்களே

//அந்த கதையில உள்ள சொல்லாடலை தான் பயன்படுத்த முடியும்.//

ஆம் அந்த சொல்லாடலைப்பயன் படுத்தி ஆசிரியரை அவமானப்படுத்துவது 
மட்டுமே உங்கள் நோக்கம்.எந்த அசிங்கம் சமுதாய வக்கிரங்களால் ஏற்படுகிறது ..
அதுவும் புராணங்களால் சப்பைக்கட்டு செய்யப்படுகிறது என்று சொல்ல வருகிறாரோ அந்த‌
அசிங்கங்களைக்கொண்டே ஆசிரியர் இந்த சமுதாயத்தை அவமானப்படுத்துகிறார் 
என்று திசை திருப்புவதே உங்கள் தந்திரம்.
உங்கள் தந்திரத்தில் அந்த வக்கிரங்கள் மறைக்கப்பட்டு "ஏதோ ஒரு
புனிதம்" காப்பதாக கொடியேற்றிக்கொண்டு  முழக்கம் செய்கிறீர்கள்.
அதே "அவமானச்சொல்லாடலை"குழும உரையாடலில் உங்கள் இலக்கியம் ஆக்கிக்கொண்டு
 ஒரு மோசமான மறைமுகமான‌ தாக்கும் தொனியில் (ஆம்புஷ்டு ஆர் கேமௌஃப்லேஜ்டு)
தான் உரையாடலுக்கு வருபவர்களையும் நீங்கள் அணுகுகிறீர்கள்.

ஆசிரியர் அந்த சமுதாய வக்கிரங்களை வெளிப்படுத்தி எழுதி காட்டுவதன் மூலம் 
அந்த அநியாயங்களை தாக்குவதில் நியாய ஆவேசம் மட்டுமே இருக்கிறது.
உங்களிடம் அந்த வக்கிரங்களை எழுதிக்காட்டி அதற்கு பலியான பெண்ணியத்தையே
 அவமானப்படுத்தும் நோக்கம் மட்டுமே இருக்கிறது."அறிவு ஜீவிகளின்"
 பசுத்தோல் போர்த்த புலித்தனம் மட்டுமே உங்கள் விமரிசனத்தில் உள்ளது. 
இந்த போர்த்தல்களை வீசியெறிந்து விட்டு கதையின் உட்கருவை நோக்குங்கள்.
கதையின் நோக்கத்தை "கருச்சிதைவு"செய்வது உண்மையான விமரிசனம் ஆகாது.

=========================================ருத்ரா

ருத்ரா இ.பரமசிவன்

unread,
Jul 9, 2016, 10:07:49 PM7/9/16
to மின்தமிழ், minT...@googlegroups.com, vall...@googlegroups.com
//ஒட்டுமொத்த திருசெங்கோட்டு பெண்களும் கொதித்தெழுந்து போராடினார்கள்.//

அது பெண்ணியத்தின் போர்க்கொடி என்பதைவிட ஆணாதிக்க வர்க்கத்தின் 
உருட்டுக்கட்டைகள் உள்ளிருந்து கொண்டு நடத்தியது என்று சொல்வதே பொருந்தும்.
பெண்ணியம் இப்படியெல்லாம் கொதித்து எழுந்திருந்திருந்தால் மகாபாரதமும் இராமாயணமும்
திருத்தி எழுதப்பட்டு அவற்றின் முற்போக்கு "பதிப்புகள்" அல்லவா
நமக்கு இப்போது கிடைத்திருக்கும்.இன்று கௌரவக்கொலைக்காக‌
தீட்டப்படும் அரிவாள்களைப்போல அன்றும் ராஜதுவேஷ கடவுள்துவேஷ சிரச்சேதங்கள் 
மேலே தொங்கி கொண்டிருந்ததால் மானிட அநியாயங்களை எதிர்க்கும் பெண்ணியம் மட்டும் அல்ல‌
ஆணியமும் அடங்கிக்கிடந்திருக்கிறது.நமக்கு 21 ஆம் நூற்றாண்டு என்பதெல்லாம் வெறும் நம்பர் தான்.
பத்தாம் பன்னிரெண்டாம் நூற்றாண்டு படிக்கட்டுகளையே நாம் இன்னும் கடந்து கொண்டிருக்கிறோம்.
பரிணாமம் என்பது வால் மறைந்து கொம்பும் மறைந்து போவது மட்டும் அல்ல.மனம் சிந்தனை அறிவு இவையும்
காலஓட்டத்தோடு போட்டி போடவேண்டும்.இலக்கியங்கள் இவற்றின் பிரதி பலிப்புகள்.அவற்றோடு 
நாமும் பிரதிபலிக்கிறோம் என்று எண்ணினால் வெறும் சிந்தனைப்போராட்டமாகவே இது இருக்குமே அன்றி 
மக்களோடு மக்களை மோதவிடும் அநாகரிகங்களுக்கு அது இடம் தராது.

===========================================================ருத்ரா

Oru Arizonan

unread,
Jul 9, 2016, 11:26:20 PM7/9/16
to vallamai


2016-07-08 21:06 GMT-07:00 ருத்ரா இ.பரமசிவன் <ruthra...@gmail.com>:
//ஏன் அந்த "கயிற்றை" 
இருவருக்கும் கட்டவேண்டியது தானே?//
 
இருந்ததையா உருத்தினாரே, ஆண்களுக்கும் அக்கால்கட்டு;
அதுதான் வெள்ளிச் சித்தாக, வலையமாகக் காலில் இருந்ததையா!
அதைத்தான் பின்னர் பெண்கள் தங்கள் கால்களில் அணிந்தனரே!
கட்டு வேண்டுமய்யா மனத்தினிலே!  கட்டற்ற மனத்திற்கு
 \ஏதையா  உருத்தினாரே வேலி?

திரும்பத் திரும்ப சாடுகிறீரே ஒருவர் நம்பிக்கையே நீரும்தான் 
அவரவர் நம்பிக்கை அவருக்கு;  அதை மதிப்பவரே  மாந்தர்!
மதுரைமாநகர் மங்கையர்கரசி மலர்விழியும் மறுத்துப் 
பதிந்தபின்னும் எதிர்க்கவிதை  வைக்கத்தான் வேண்டுமா 
புரியவில்லை எனக்கே தான்!
பணிவன்புடன்,

Tthamizth Tthenee

unread,
Jul 9, 2016, 11:51:33 PM7/9/16
to vall...@googlegroups.com
​ 

அம்மா சொல்லித்தான் தெரியும் 

இவன் அப்பா வென்று  இவன் மாமனென்று  அம்மாவை  

நம்பலாம் அப்பாவை நம்பக் கூடாதா

அப்பாவும் சொல்கிறார்  தங்கள் 

மகனென்று ஆயினும் சந்தேகம்  

அலைக்கழிக்கிறது  

 

என்ன செய்வது ​எப்படித் தீர்ப்பது

என்றே தெரியாமல் தடுமாறும் 

மனது யாரைக் கேட்டால் 

உண்மை தெரியும் நவீன 

விஞ்ஞானத்தையா  

 

சாவிக் கொத்தை மாற்றிக் 

கொண்டு  தாரத்தையே  மாற்றிக்

கொள்ளும்  நாகரீக  மனிதர்களையா

நம்பத்தான்  வேண்டும் அம்மா  

அம்மாவாக இருந்தால் பொய் 

சொல்ல மாட்டாள்

 

பிறப்பின் ரகசியம் பெற்றவரின்றி

யாருக்குத் தெரியும் 

பிறந்த பின்னாலே  மறுபடி குடி 

புக நாமென்ன  கங்காருவா

 

நம்பிக்கைதானே  வாழ்க்கை  நாமும் 

நம்பித்தானே  வாழ்கிறோம்

விந்து தானம்  உரியவன் கொடுத்தால்

வீரிய  வம்சம்  வழித் தோன்றல்

வாரிசு   ஊரெல்லாம்கொடுத்தால்

அதென்ன உலைக்களமா  குப்பைத் 

தொட்டியா    

 

கற்பென்பது  உடலிலா மனதிலா 

எழுந்த கேள்விக்கும்

பதிலே இதுதான்     ஒரு முறை 

பூத்தால்  அது பூ

ஒருத்தனுக்கு  விரித்த  முந்தி

மற்றவர்க்கும் உரிமையென்றால் 

அதென்ன நீதி 

அதுக்கு ஒரு தனி சாதி 

 

 அடுத்தவன் மனைவியென்றால் 

அடுக்காமல் அடுக்கடுக்காய் 

அள்ளிவிடலாம் ஆயிரம் பொய்

அத்தனையும்  அவர்தமக்கே  

பூமராங் போலத் திரும்புமென்றால்

 அடக்கம் வரும்   நாவினுக்கே


அன்புடன்

தமிழ்த்தேனீ

 

 

 





அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது


http://thamizthenee.blogspot.com     http://www.peopleofindia.net     


9840686463   9840884852





--

துரை.ந.உ

unread,
Jul 9, 2016, 11:57:35 PM7/9/16
to வல்லமை
​வாழ்க வேந்தே 
அந்தத் தானமுறை உங்களுக்குப் பிடித்தது என்பதற்காக ...  நடைமுறையில் வந்துவிட்ட (நற்)பழக்க வழக்கங்களை இழுத்துவைத்து இப்படி சப்பைக்கட்டு கட்டுவீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை 

... அந்த தானம் , பங்களிப்பு ,பங்கேற்பு , கொடையாளி , பயனாளி சம்பந்தமாக நிறைய அனுபவச் செய்திகள் (இருந்தால்) கேட்டு அறிந்து கொள்ள ஆசைதான் ... .. ஆனாலும் இது தரம் சார்ந்த ஒன்றாக எனக்குப் படுவதால் ...இத்துடன் விலகிக் கொள்கிறேன் ...

வாழ்க தானம்  !!
எதையோ ‘
இவ்வளவு ​

 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

துரை.ந.உ

unread,
Jul 10, 2016, 1:39:56 AM7/10/16
to Groups, வல்லமை
வாழ்க ருத்ரா ஐயா ..

நேரடியாகச் சொல்லாமல் 
சொல்ல வரும் கருத்துக்களையும் 
இப்படி மடித்து எழுதுவதால் என்ன பயன் ??
கவிதையை விருபாதவர்கள் இதை ‘கவிதை’ என்று கடந்தேதான் போவார்கள் .. போகிறார்கள் ....

தாங்களின் சொல் அவையைச் சென்றடையவில்லையோ என்னும் எண்ணத்தில் - 

தவறென்றால் மன்னிக்கவும் 

2016-07-10 11:08 GMT+05:30 துரை.ந.உ <vce.pr...@gmail.com>:


2016-07-10 4:18 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
ஒரு   கதையில் மலடி என்றோ தேவ**  என்றோ சொல்லியிருந்தால் .....
அது கதையின் சூழ்நிலையை இயல்பாக விவரிக்க  எழுத்தாளர்  எழுதுவது.  

அது கதையில் ...  கதையின்  மாந்தர்கள் தங்களுக்குள்  உரையாடுவது. 
கதாப்பாத்திரங்களின் பண்பைச்  சித்தரிக்க எழுத்தாளர் எடுக்கும் முயற்சி.

கதை எழுதுவது வேறு...
குழுமத்தில் உரையாடுவது வேறு.

​!!!!!!!!!!​
 


இந்தத் தெளிவு...இந்த வேறுபாடு ....
குழுமத்தில் சிறிய வயது முதல் ....வயது முதிர்ந்தவர் வரை யாருக்கும் புரிவதில்லை என்பதை நான் நன்றாகவே  அறிவேன்....

​!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!​
 

ருத்ரா இ.பரமசிவன்

unread,
Jul 10, 2016, 3:11:55 AM7/10/16
to மின்தமிழ், minT...@googlegroups.com, vall...@googlegroups.com

சரி தான்.திரு.துரை ந.உ அவர்களே.

நான் கடைசியாக எழுதியது கட்டுரையின் மடிக்கப்பட்ட வரிகள் தான். கவிதை நடையில் அமைந்த கட்டுரை அது.எனது கணினி "நோட் பேடில்"அது ரயில் வண்டி தொடரைப்போல்நீள நீளமாக வந்ததைத்தான் அப்படி மடித்து தட்டச்சு செய்தேன்.எப்படியோ சொற்கள் என்பவை கட்டு தளை தொடை அல்லது பத்தி (கட்டுரைக்கு) என்றெல்லாம் பயணித்து சிந்தனை தளங்களை அடைய வேண்டும்.நவீனத்துவம் நீள நீளமாயும் அல்லது சுறுக் சுறுக்எ ன்றும் சொற்கட்டுகளை அமைக்கின்றன.
வெட்டி வெட்டி அடிக்கும் மின்னல்களைப் போல உணர்வுகள் எழுத்துக்குள் புகுந்து கொள்ளும்போது அப்படி மடக்கி மடக்கி வரும் வடிவங்களஅடைகின்றன.

ஒரு ஆலோசனையை  எடுத்துக்காட்டி உதவிய உங்களுக்கு மிக்க நன்றி.

அன்புடன் ருத்ரா

Iyappan Krishnan

unread,
Jul 10, 2016, 3:18:07 AM7/10/16
to vall...@googlegroups.com
​மணலைக் கொண்டு கயிறு திரிக்கும் வேலை இங்கு தேவை  இல்லை .. என் கேள்வி எளிமையான நேரடி கேள்வி. பதில் நேரடி பதிலாக இருத்தல் உத்தமம்.  கேள்வி 1 - பதில் இது.. கேள்வி ரெண்டு பதில் இது என்று எளிமையாக பதில் சொல்லவும்.  

​// 1 - நீங்கள், கதையில் இருக்கும் ஊரில், அதே தெருவில் அதுவும் வளர்ந்த  பெண் பிள்ளையுடன் வாழ்வதாக   இருந்திருந்தால்​  கதை படித்த பின்   உங்கள் மன நிலை என்னவாக இருக்கும்?

2 - நீங்கள் கதையில் சொல்லப்படும் ஊரில் அதே தெருவில், ஒரு வேளை வீட்டின் கதவு என் 15 என்று குறிப்பிட்டிருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள், அதே வீட்டில் வளர்ந்த பெண் பிள்ளைகளுடம் வாழ்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள், அப்போது உங்களின் மன நிலை என்னவாக இருக்கும். 

3 -  கதையில் சொல்லப்படும் அதே ஊர், அதே தெரு, அதே வீடு, பெண்ணின் பெயர் பொன்னாத்தா என்று வைத்துக்கொள்ளுங்கள், அதே பெயரில் உங்களின் மனைவியோ அல்லது வயது வந்த பெண்ணோ இருந்தால், கதையைப் படித்த பின் உங்களின் மன நிலை என்னவாக இருக்கும் ?

4 - கதையில் சொல்லப்படும் அதே ஊர், அதே தெரு அதே வீடு... பெண்ணின் பெயர் பொன்னாத்தா என்று வைத்துக்கொள்ளுங்கள்.  உங்களின் தாயாரின் பெயர் பொன்னாத்தாவாக இருந்தால், கதையைப் படித்த பின் உங்களின் மனநிலை என்னவாக இருக்கும் ?

கொஞ்சம் நேர்மையுடன் யோசித்து பதில் சொல்ல வேண்டுகிறேன். //


பதில் சொல்ல நேர்மை தேவை. கண்டிப்பாக அது அவசியம். 



2016-07-10 1:17 GMT+05:30 ருத்ரா இ.பரமசிவன் <ruthra...@gmail.com>:
இதிஹாசங்கள்
வெறும் "மாஃபஸான்" கதைகள்
என்றால்
இங்கே மனசாட்சி நேர்மை பற்றியெல்லாம்
விவாதிக்க வேண்டியதில்லை.



ருத்ரா இ.பரமசிவன்

unread,
Jul 10, 2016, 9:57:28 AM7/10/16
to மின்தமிழ், minT...@googlegroups.com, vall...@googlegroups.com


நம்பர் போட்டு ஒன்று இரண்டு மூன்று என்று போடுவது எல்லாம் இருக்கட்டும்.பாரத புத்திரர்களாகிய நம் மூல வர்ணத்தைக்கேட்டால்நம் புனித ஜனன ரிக்கார்டுகளான இதிஹாசங்கள் "ந‌தி மூலம் ரிஷி மூலம்" கேட்காதே என்று ஒரு கனத்த போர்வையை (ப்ளாங்கெட்) போட்டு மூடி விட்டதே.இதில் குந்தி என்ன? பாண்டு என்ன? திருதராஷ்டிரன் என்ன? இந்த உழக்குக்குள் கிழக்கு மேற்கு பார்ப்பது போல் உங்கள் வீடு என் வீடு என்று பட்டியல் போடுவதில் என்ன வந்துவிடப்போகிறது? "மாதொருபாகன்" அந்த ரிஷியையும் நதியையும்பற்றிய ஆணிவேர் நோக்கி ஊடுருவிச் சென்று இருக்கிறது. மூல வர்ணம்நாலு வர்ணமாகி மனிதவர்ணத்தின் ரத்தமே உறிஞ்சப்படும் இந்த அவலங்களுக்கு காரணமான அந்த ட்ராகுலாக்களை வேட்டையாடுவதே நம் "அறிவாயுதங்களின்" நோக்கம்.அந்த அடி நாதமே "மாதொருபாகன்"

==========================================ருத்ரா

துரை.ந.உ

unread,
Jul 10, 2016, 10:52:02 AM7/10/16
to Groups, வல்லமை
இது ஐஸ்க்ரீம் .. எல்லார்க்கும் தெரியும்தான் ... எல்லார்க்கும் பிடிக்கும் தான் ...
Inline image 1




இதை எப்படித் தயாரிக்குறாங்கன்னு தெரியுமான்னு ... ரெண்டு கைலயும் வச்சு நக்கிக் கொண்டே ஒரு கூட்டம் கீழுள்ளது போல விளக்கம் சொல்லித் திரியவும் செய்கிறது ஊருக்குள்ள... தன்னைத் தானே அசிங்கப் ப்டுத்துவது தெரியாமல் ..















..Inline image 2

இனி எவனாவது இதைச் சாப்பிடுவான் !!??? 

#சம்பந்தம் இல்லாமல் இப்படிப் படம் போட்டு  என்னத்தையோ பொலம்புனதுக்கு மன்னிக்கவும் 

#வெளங்கும்   

Iyappan Krishnan

unread,
Jul 10, 2016, 10:54:50 AM7/10/16
to vall...@googlegroups.com, மின்தமிழ்
​இது நேர்மையான பதில் இல்லையே? அந்த நிலையில் நம்மை வைத்துப் பார்க்கவே மனம் கூசுகிறதா ? இல்லை வலிக்கிறதா ?  நேரடியான் பதில் கேட்டா பல ஆயிரம் வருஷத்துக்கு முன்னாடி    ராமாயணம் மஹாபாரதம்னு ஏன் போறீங்க.   பல ஆயிரம் வருஷங்களுக்கு முன்னாடி ஆடையில்லாம அம்மணமா சுத்திட்டு விலங்கினைப் போல கண்டவங்களைப் புணர்ந்துட்டு இருந்த மனிதக் கூட்டம் தான் இப்போதிருக்கும் மனிதக் கூட்டமும் இல்லையா.. 

நேர்மையான.. நேரடியான பதில் ... முடிந்தால் சொல்லுங்கள். இல்லாட்டி மீண்டும் ராமாயாணம் மஹாபாரதம்னு ஆரம்பிச்சு எதாச்சும் கொஞ்சம் வார்த்தைகளைப் போட்டு விளையாடிட்டு இருங்க.

//​// 1 - நீங்கள், கதையில் இருக்கும் ஊரில், அதே தெருவில் அதுவும் வளர்ந்த  பெண் பிள்ளையுடன் வாழ்வதாக   இருந்திருந்தால்​  கதை படித்த பின்   உங்கள் மன நிலை என்னவாக இருக்கும்?

2 - நீங்கள் கதையில் சொல்லப்படும் ஊரில் அதே தெருவில், ஒரு வேளை வீட்டின் கதவு என் 15 என்று குறிப்பிட்டிருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள், அதே வீட்டில் வளர்ந்த பெண் பிள்ளைகளுடம் வாழ்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள், அப்போது உங்களின் மன நிலை என்னவாக இருக்கும். 

3 -  கதையில் சொல்லப்படும் அதே ஊர், அதே தெரு, அதே வீடு, பெண்ணின் பெயர் பொன்னாத்தா என்று வைத்துக்கொள்ளுங்கள், அதே பெயரில் உங்களின் மனைவியோ அல்லது வயது வந்த பெண்ணோ இருந்தால், கதையைப் படித்த பின் உங்களின் மன நிலை என்னவாக இருக்கும் ?

4 - கதையில் சொல்லப்படும் அதே ஊர், அதே தெரு அதே வீடு... பெண்ணின் பெயர் பொன்னாத்தா என்று வைத்துக்கொள்ளுங்கள்.  உங்களின் தாயாரின் பெயர் பொன்னாத்தாவாக இருந்தால், கதையைப் படித்த பின் உங்களின் மனநிலை என்னவாக இருக்கும் ?

5 - கதையில் சொல்லப்பட்டிருக்கும் அதே ஊர் உங்களின் ஊராகவும் , ஆதே தெரு, அதே வீடு, பெண்ணின் பெயர் பொன்னாத்தா என்று வைத்துக்கொள்ளுங்கள். உங்களின் தாயாரின் பெயரும் பொன்னாத்தாகவும் (அல்லது உங்களின் மனைவி பெயர் என்று கூட வைத்துக் கொள்ளலாம் ), கூடவே நீங்கள் நெடுநாள் கழித்து பிறந்தவராக இருக்கிறீர்கள் ( அல்லது உங்களுக்கு நெடுநாள் கழித்து பிள்ளை பிறந்தது ) என்று வைத்துக் கொள்ளுங்கள்..    படித்தப் பின் உங்களின் மன நிலை என்னவாக இருக்கும்.  
கொஞ்சம் நேர்மையுடன் யோசித்து பதில் சொல்ல வேண்டுகிறேன். //


பதில் சொல்ல நேர்மை தேவை. கண்டிப்பாக அது அவசியம். ////


​அன்புடன்


Iyappan Krishnan

*>*<*
உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்.
நிலைபெறுத்தலும். நீக்கலும். நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார்-அவர்
தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே.

ருத்ரா இ.பரமசிவன்

unread,
Jul 10, 2016, 10:55:25 AM7/10/16
to மின்தமிழ், minT...@googlegroups.com, vall...@googlegroups.com
திருச்செங்கோடு நம் "பாரதத்தில்" தானே இருக்கிறது!அது என்ன அப்படியே புரட்சியில் பொங்கி "பாரத" பூமியை விட்டு பிய்த்துப் பிடுங்கிக்கொண்டு தனியாக ஒரு தீவு ஆகி விட்டதா என்ன? அங்கும் சிவன் கோயில் உண்டு.காந்தாரி அம்மன் மற்றும் திரௌபதி அம்மன்கோவில் கூட இருக்கலாம் அதை ஒட்டிய சிற்றூர்களில்.மகாபாரதம் கூட ரிக்கார்டை வைத்துக்கொண்டு வியாஸர் எழுதவில்லை."சூதர்கள்" எனும் நாடோடி (மூலம் அற்ற)களின் வாய்ப்பாட்டுகளைக்கொண்டே எழுதியது ஆகும்.நாடோடிப்பாடல்கள் ஒன்றும் அரசாங்க கெஜட் இல்லை.அதையெல்லாம் வைத்து திச்செங்கோட்டுக்காரர்களின்மானம் மட்டும் போய்விட்டது என்று கூச்சல் கிளப்புதன் பொருள் என்ன? ஒரு இலக்கியப்படைப்பாளி தான் கேட்ட அறிந்த தகவலை வைத்து ஒரு நாவல் படைத்தால் அதை அரசாங்க கெஜட் போல் நினைத்துக்கொண்டு பாய்வதில் எந்த பொருளும்இல்லை. திருச்செங்கோட்டில் தான் அவர் அறிந்த அர்த்தநாரீஸ்வரர் கோவில் இருக்கிறது.அதை ஒட்டிய ஒரு கற்பனை அல்லது சிந்தனைப்புயல் தான் மாதொருபாகன்.இதையெல்லாம் கணக்கில் எடுக்காமல் "செர்வாண்டிஸ்" எழுதிய "டான்குயிக்சாட்டில்" அந்த "காற்றாலையை"(விண்ட் மில்) ஏதோ அசுரன் என நினைத்து அமர்க்களம் ஆக்கப்படுமே அது போல் உங்களுக்கு சௌகரியமான ஒரு அஞ்ஞானத்தை வைத்துக்கொன்டு இந்த ஜெனடிக் சம்பந்தமான விஞ்ஞான உட்கிடக்கை மீது உக்கிரம் காட்டுகிறீர்கள்.அதைத்தவிர இந்த சலசலப்பில் வேறு ஒன்றுமில்லை.

==============================================ருத்ரா

செல்வன்

unread,
Jul 10, 2016, 11:12:44 AM7/10/16
to mintamil, vallamai

2016-07-10 9:55 GMT-05:00 ருத்ரா இ.பரமசிவன் <ruthra...@gmail.com>:
திருச்செங்கோடு நம் "பாரதத்தில்" தானே இருக்கிறது!அது என்ன அப்படியே புரட்சியில்
 
பொங்கி "பாரத" பூமியை விட்டு பிய்த்துப் பிடுங்கிக்கொண்டு தனியாக ஒரு தீவு ஆகி விட்டதா என்ன?
 
அங்கும் சிவன் கோயில் உண்டு.காந்தாரி அம்மன் மற்றும் திரௌபதி அம்மன்கோவில் கூட இருக்கலாம்


அந்த ஊரில் திரவுபதி அம்மன் கோயில் இருப்பதால் அந்த ஊர் பெண்களை திருவிழாவில் கண்டவனுடன்
படுத்து குழந்தை பெறுகிறவர்கள் என எழுதுவது சரியாகிவிடுமா?


//.நாடோடிப்பாடல்கள் ஒன்றும் அரசாங்க கெஜட் இல்லை.அதையெல்லாம் வைத்து திச்செங்கோட்டுக்காரர்களின்மானம் மட்டும் போய்விட்டது என்று கூச்சல் கிளப்புதன் பொருள் என்ன? //

திருவிழாவில் கண்டவனுடன் படுத்து பிள்ளை பெறுவது கேவலம் இல்லையா?
அது மெச்சி மெடல் போடும் விசயமா?
ஒரு தெருமுழுக்க இருக்கும் பெண்களை "தேவ**" என எழுதினால் அந்த
தெருவில் இருக்கும் பெண்கள் கோபிக்காமல் மெரினா பீச்சில் சிலையா வைப்பார்கள்?


ஒரு இலக்கியப்படைப்பாளி தான் கேட்ட அறிந்த தகவலை வைத்து ஒரு நாவல் படைத்தால் அதை அரசாங்க கெஜட் போல் நினைத்துக்கொண்டு பாய்வதில் எந்த பொருளும்இல்லை. திருச்செங்கோட்டில் தான் அவர் அறிந்த அர்த்தநாரீஸ்வரர் கோவில் இருக்கிறது.அதை ஒட்டிய ஒரு கற்பனை அல்லது சிந்தனைப்புயல் தான் மாதொருபாகன்.


"இந்த தெருவில் இருக்கும் பெண்கள் எல்லாம் தேவ**" என கற்பனை செய்து எழுதுவது அசிங்கம் இல்லையா?

செய்யும் கற்பனையை இல்லாத தெருப்பெயரில் செய்தால் என்ன சிக்கல் வரபோகிறது?

பிறந்த ஊரை இப்படியுமா அவமானபடுத்துவது?


--

Iyappan Krishnan

unread,
Jul 10, 2016, 11:16:21 AM7/10/16
to mintamil, vall...@googlegroups.com
வணக்கம் செல்வன் ஜி

​எந்த ஒரு விஷயம்னாலும் ஊரான் வீட்டுல நடந்தா அது குறித்து அறம் பேச நமக்கு அவ்வளவு ஆர்வம் இருக்கும். நம்ம வீட்டில அப்படி ஒண்ணு நடக்குதுன்னு நினைச்சுப் பாக்கனும்னாலே ​ அந்த அறம்,  பாரதம், ராமாயணம் எல்லாம்  பழைய பானைச்சட்டிக்குள்ள  ஒளிஞ்சுக்கும். 

மேலும் இந்த முற்போக்கு பொங்கலாளிகளிடம் இருக்கிற மிகப்பெரிய பித்தலாட்டம் ஒண்ணு உண்டு.  ஐமீன் பொதுவா சொல்றேன் யாரையும் குறித்து இல்லை.  அதாவது தனக்குத் தேவைன்னா “ மஹாபாரதம் ராமாயணம்.. நடந்த கதை.. “  ராமன், சீதை பாஞ்சாலி எல்லாம் இருந்தவர்கள். அப்படியே பாஞ்சாலி  சீதை மீது  அப்படியே கருணையும் பாசமும் பொங்கிப் பொங்கி வழியும். வேண்டாம்னா...  அவை எல்லாம் கட்டுக்கதை..   பாம்பின் இரட்டை நாக்கு .. இவ்வகையானவர்களிடம் காணலாம். 

 உண்மையான நாத்திகனை  நம்பலாம்.  உண்மையான ஆத்திகனை நம்பலாம். அவர்களின் பேச்சில் அவர்கள் கொண்ட நம்பிக்கையின் மீதான பேச்சின் அறம் இருக்கும்.  


பாஞ்சாலியை நம்புகிறீர்கள் என்றால், அவள் பிறப்பு நெருப்பின் மூலம் என்பதையும் நம்புங்கள்.. சீதையை  நம்புகிறீர்கள் என்றால், சீதையின் பிறப்பு மண்ணின் மூலம் என்று நம்புங்கள்..  என்றால்... ஆஹா....   இரட்டை  நாக்கர்களின் பதில் தேவைக்கேற்ப மாறும்... ஐ மீன் அவர்களின் தேவைக்கேற்ப. 

வேந்தன் அரசு

unread,
Jul 10, 2016, 12:39:32 PM7/10/16
to vallamai


9 ஜூலை, 2016 ’அன்று’ பிற்பகல் 11:57 அன்று, துரை.ந.உ <vce.pr...@gmail.com> எழுதியது:



2016-07-09 23:44 GMT+05:30 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:


9 ஜூலை, 2016 ’அன்று’ முற்பகல் 3:52 அன்று, துரை.ந.உ <vce.pr...@gmail.com> எழுதியது:


2016-07-08 19:00 GMT+05:30 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:

பலியாடு என ஏன் கருதுகிறீர்கள். பயனாளி என் கருதுங்கள்.

​வேந்தே .. விளையாட்டாய் எழுதுவதாய் நினைத்து எழுதி இருக்கிறீர்கள் போலும் .... :((

 
எங்க ஊரில் திருமணம் ஆகாமல் விந்த்தானம் பெற்று இரட்டைகுழந்தைகள் பெற்று செல்லமாக வளர்க்கிராள் ஒருத்தி. அதில் என்ன் பண்பாடு கெட்டுபோனது?

​ வேந்தே :(
மருத்துவமனையில் வாங்குவதும்  கரு உருவாவதும்,மருத்துவமாகவே கொள்ளப்படும்.. அதைகொண்டுபொய் எப்படி இங்கே கோர்க்கின்றீர்கள் என்பது எனக்கு விளங்கவே இல்லை ​
 


மேற்கண்ட வரிகள் உண்மையானவை. மாதொருபாகம் ஏழைகளுக்கான முறை.  அதில்நாயகி தனக்கு முன்பின் அறியாத ஒருவனிடம்தான்  தானம் பெறுவாள்

​இதைத் தானம் என்பதற்கு இவ்வளவு கொச்சையாய்ப் பொருள் கொள்ளவும் , ஏற்றுக் கொள்ளவும் பெரிய மனம் வேண்டும் ... எம்போன்றோர்க்கு இல்லை :( ​
 


இருக்காது. 
நம் பிள்ளைகளுக்கு மறுபால்நண்பர்களையே நாம் அனுமதியோம்
தத்துப்பிள்ளை எடுத்து வளர்ப்பது
மனைவியின் பிள்ளையை வளர்ப்பது
கைம்பெண்கள், மணமுறிவு செய்த பெண்கள் இவர்களை மணப்பது
எல்லாமே நாம் அனுமதியோம்.
இன்னும் தன்கணவனின் விந்துவை கருவாக்கிக்கொள்ளத்தான் முன்னேற்றம் கண்டு இருக்கிறோம்.


​வாழ்க வேந்தே 
அந்தத் தானமுறை உங்களுக்குப் பிடித்தது என்பதற்காக ...  நடைமுறையில் வந்துவிட்ட (நற்)பழக்க வழக்கங்களை இழுத்துவைத்து இப்படி சப்பைக்கட்டு கட்டுவீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை 

... அந்த தானம் , பங்களிப்பு ,பங்கேற்பு , கொடையாளி , பயனாளி சம்பந்தமாக நிறைய அனுபவச் செய்திகள் (இருந்தால்) கேட்டு அறிந்து கொள்ள ஆசைதான் ... .. ஆனாலும் இது தரம் சார்ந்த ஒன்றாக எனக்குப் படுவதால் ...இத்துடன் விலகிக் கொள்கிறேன் ...


எமக்குஎம்
பெருந்தோள் கணவன் மாய்ந்தென அரும்புஅற
வள்இதழ் அவிழ்ந்த தாமரை
 நள்இரும் பொய்கையும் தீயும்ஓர் அற்றே!

-இப்படி இன்று யாரும் இல்லை என வருந்துவீரா??

வேந்தன் அரசு

unread,
Jul 10, 2016, 12:40:44 PM7/10/16
to vallamai


10 ஜூலை, 2016 ’அன்று’ முற்பகல் 3:18 அன்று, Iyappan Krishnan <jee...@gmail.com> எழுதியது:

​மணலைக் கொண்டு கயிறு திரிக்கும் வேலை இங்கு தேவை  இல்லை .. என் கேள்வி எளிமையான நேரடி கேள்வி. பதில் நேரடி பதிலாக இருத்தல் உத்தமம்.  கேள்வி 1 - பதில் இது.. கேள்வி ரெண்டு பதில் இது என்று எளிமையாக பதில் சொல்லவும்.  

​// 1 - நீங்கள், கதையில் இருக்கும் ஊரில், அதே தெருவில் அதுவும் வளர்ந்த  பெண் பிள்ளையுடன் வாழ்வதாக   இருந்திருந்தால்​  கதை படித்த பின்   உங்கள் மன நிலை என்னவாக இருக்கும்?

2 - நீங்கள் கதையில் சொல்லப்படும் ஊரில் அதே தெருவில், ஒரு வேளை வீட்டின் கதவு என் 15 என்று குறிப்பிட்டிருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள், அதே வீட்டில் வளர்ந்த பெண் பிள்ளைகளுடம் வாழ்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள், அப்போது உங்களின் மன நிலை என்னவாக இருக்கும். 

3 -  கதையில் சொல்லப்படும் அதே ஊர், அதே தெரு, அதே வீடு, பெண்ணின் பெயர் பொன்னாத்தா என்று வைத்துக்கொள்ளுங்கள், அதே பெயரில் உங்களின் மனைவியோ அல்லது வயது வந்த பெண்ணோ இருந்தால், கதையைப் படித்த பின் உங்களின் மன நிலை என்னவாக இருக்கும் ?

4 - கதையில் சொல்லப்படும் அதே ஊர், அதே தெரு அதே வீடு... பெண்ணின் பெயர் பொன்னாத்தா என்று வைத்துக்கொள்ளுங்கள்.  உங்களின் தாயாரின் பெயர் பொன்னாத்தாவாக இருந்தால், கதையைப் படித்த பின் உங்களின் மனநிலை என்னவாக இருக்கும் ?

கொஞ்சம் நேர்மையுடன் யோசித்து பதில் சொல்ல வேண்டுகிறேன். //


பதில் சொல்ல நேர்மை தேவை. கண்டிப்பாக அது அவசியம். 



மல்டிபிள் சாய்ஸ் போடுங்க. ஒன்றை தெரிவேன்

 

வேந்தன் அரசு

unread,
Jul 10, 2016, 12:44:58 PM7/10/16
to vallamai, mintamil


10 ஜூலை, 2016 ’அன்று’ முற்பகல் 11:12 அன்று, செல்வன் <hol...@gmail.com> எழுதியது:




செய்யும் கற்பனையை இல்லாத தெருப்பெயரில் செய்தால் என்ன சிக்கல் வரபோகிறது?

பிறந்த ஊரை இப்படியுமா அவமானபடுத்துவது?



தமிழ்நாட்டில் நடப்பதாக சொன்னால் தமிழர்கள் பொங்கமாட்டார்களா?
இந்தியாவில் நடப்பதாக்ச்சொன்னால் இந்தியர்கள் பொங்கமாட்டாரா?

“நீ சொல்லுவது என் உயிர்போனாலும் ஏற்கமாட்டேன்”
அதை நீ சொல்லும் உரிமையை என் உயிர்போனாலும் தடுக்கமாட்டேன்”

நீங்க சொன்னதுதானே

 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--

வேந்தன் அரசு

unread,
Jul 10, 2016, 12:48:10 PM7/10/16
to vallamai, mintamil


10 ஜூலை, 2016 ’அன்று’ முற்பகல் 11:16 அன்று, Iyappan Krishnan <jee...@gmail.com> எழுதியது:

வணக்கம் செல்வன் ஜி

​எந்த ஒரு விஷயம்னாலும் ஊரான் வீட்டுல நடந்தா அது குறித்து அறம் பேச நமக்கு அவ்வளவு ஆர்வம் இருக்கும். நம்ம வீட்டில அப்படி ஒண்ணு நடக்குதுன்னு நினைச்சுப் பாக்கனும்னாலே ​ அந்த அறம்,  பாரதம், ராமாயணம் எல்லாம்  பழைய பானைச்சட்டிக்குள்ள  ஒளிஞ்சுக்கும். 


மாதவி வீட்டில் ஆண்களே இல்லையா?
ஒவ்வொரு பரத்தை வீட்டிலும் ஆண்கள் உண்டு. அவர்களுக்கு மட்டும் கனிவு வந்தது எங்கனம்? 
நம்ம வீட்டுப்பெண் அபப்டிநடந்தால் கொன்றுவிடுவோமா?

துரை.ந.உ

unread,
Jul 10, 2016, 12:59:56 PM7/10/16
to வல்லமை
2016-07-10 22:09 GMT+05:30 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
... அந்த தானம் , பங்களிப்பு ,பங்கேற்பு , கொடையாளி , பயனாளி சம்பந்தமாக நிறைய அனுபவச் செய்திகள் (இருந்தால்) கேட்டு அறிந்து கொள்ள ஆசைதான் ... .. ஆனாலும் இது தரம் சார்ந்த ஒன்றாக எனக்குப் படுவதால் ...இத்துடன் விலகிக் கொள்கிறேன் ...


எமக்குஎம்
பெருந்தோள் கணவன் மாய்ந்தென அரும்புஅற
வள்இதழ் அவிழ்ந்த தாமரை
 நள்இரும் பொய்கையும் தீயும்ஓர் அற்றே!

-இப்படி இன்று யாரும் இல்லை என வருந்துவீரா??

​சமகால அவலத்தைச் சொல்லிப் புலம்பினால் , யுககாலத்தில் உள்ளதைச் சொல்லி தம் புலமையைக் காட்ட நினைக்குமிடத்தில் வருந்துவதற்கு ஏதுமுளவோ !?

ஐம் ஹாப்பி ...வெரி வெரி  ஹாப்பி ​
 
​!​

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Iyappan Krishnan

unread,
Jul 10, 2016, 1:06:36 PM7/10/16
to vall...@googlegroups.com
​உங்களுக்கான வார்த்தையை என் வாயில் இருந்து எப்படி எடுக்க முடியும். உங்களின் சிந்தனை, உங்கள் மூளையில் இருந்தே உதிக்க வேண்டும். உங்களின் பதில், தேர்வு உங்களின் சாய்ஸ்...  :)​

2016-07-10 22:10 GMT+05:30 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
மல்டிபிள் சாய்ஸ் போடுங்க. ஒன்றை தெரிவேன்



துரை.ந.உ

unread,
Jul 10, 2016, 1:10:38 PM7/10/16
to வல்லமை, mintamil
2016-07-10 22:14 GMT+05:30 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:


10 ஜூலை, 2016 ’அன்று’ முற்பகல் 11:12 அன்று, செல்வன் <hol...@gmail.com> எழுதியது:



செய்யும் கற்பனையை இல்லாத தெருப்பெயரில் செய்தால் என்ன சிக்கல் வரபோகிறது?

பிறந்த ஊரை இப்படியுமா அவமானபடுத்துவது?



முந்தும் ​பதிலுக்கு மன்னிக்க ​
 

தமிழ்நாட்டில் நடப்பதாக சொன்னால் தமிழர்கள் பொங்கமாட்டார்களா?
மானமுள்ளவன் விடமாட்டான் ... 
 
இந்தியாவில் நடப்பதாக்ச்சொன்னால் இந்தியர்கள் பொங்கமாட்டாரா?
மானமுள்ள
​ எவனும் ​
விடமாட்டான் 
​...

அமில்நாடு , கொந்தியான்னு சொல்லிட்டுப்போனால் எவன் கேக்கப்போறான்னேன் .... 
ரெண்டெழுத்து மாற்றிப் பேர் வச்சால் குடியா முழுகிப் போகும் !!

 

“நீ சொல்லுவது என் உயிர்போனாலும் ஏற்கமாட்டேன்”
அதை நீ சொல்லும் உரிமையை என் உயிர்போனாலும் தடுக்கமாட்டேன்”

நீங்க சொன்னதுதானே

 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--

Iyappan Krishnan

unread,
Jul 10, 2016, 1:13:21 PM7/10/16
to vall...@googlegroups.com
​பரத்தைகளாக விரும்பி மாறுகிறார்களா ? குடும்பத்தார் விருப்பத்துடன் ஈடுபடுத்துகிறார்களா என்ற பல கேள்விகளை நீங்கள் யோசிக்கலாம். அந்த சாய்ஸ் உங்களுடையது. ஆனால் நான் கேட்கும் கேள்விளுக்கு இது  பதில் இல்லை.   இதற்கு பதில் சொல்லவே அத்தனை தயக்கமும், அல்லது அப்படி யோசிக்கவே தயக்கம் ஏற்படுகிறது எனில், அந்த ஊர் மக்களின் கோவத்தில் நியாயம் இருக்கிறதில்லையா ? 

ஒரு பாதுகாப்பான உயரத்தில் அமர்ந்து கொண்டு நதியில் முதலைகள் என்ன பெரிய பிரச்சினையா என்று பேசுவது எளிது. ஆனால் நதியில் நீந்துபவனுக்கு அது பிரச்சினை.   ​

பசிக்கு சோறு இல்லை என்றால் பிரட் சாப்பிட வேண்டியது தானே என்பது போன்ற பதில்களைத் தவிர்த்து நேரடியான பதில்கள் நேர்மையாக  யோசிக்கலாம். 



2016-07-10 22:18 GMT+05:30 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
மாதவி வீட்டில் ஆண்களே இல்லையா?
ஒவ்வொரு பரத்தை வீட்டிலும் ஆண்கள் உண்டு. அவர்களுக்கு மட்டும் கனிவு வந்தது எங்கனம்? 
நம்ம வீட்டுப்பெண் அபப்டிநடந்தால் கொன்றுவிடுவோமா?



துரை.ந.உ

unread,
Jul 10, 2016, 1:18:37 PM7/10/16
to Groups, vallamai
2016-07-10 22:18 GMT+05:30 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
​அடக் கொடுமையே :((((((((
உண்மையிலேயே​ பொருள் புரிந்துதான் எழுதப் பட்டிருக்கிறதா இது !!!!!!!!!!!
 
--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

வேந்தன் அரசு

unread,
Jul 10, 2016, 2:13:16 PM7/10/16
to vallamai, Groups


10 ஜூலை, 2016 ’அன்று’ பிற்பகல் 1:18 அன்று, துரை.ந.உ <vce.pr...@gmail.com> எழுதியது:



2016-07-10 22:18 GMT+05:30 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:


10 ஜூலை, 2016 ’அன்று’ முற்பகல் 11:16 அன்று, Iyappan Krishnan <jee...@gmail.com> எழுதியது:
வணக்கம் செல்வன் ஜி

​எந்த ஒரு விஷயம்னாலும் ஊரான் வீட்டுல நடந்தா அது குறித்து அறம் பேச நமக்கு அவ்வளவு ஆர்வம் இருக்கும். நம்ம வீட்டில அப்படி ஒண்ணு நடக்குதுன்னு நினைச்சுப் பாக்கனும்னாலே ​ அந்த அறம்,  பாரதம், ராமாயணம் எல்லாம்  பழைய பானைச்சட்டிக்குள்ள  ஒளிஞ்சுக்கும். 


மாதவி வீட்டில் ஆண்களே இல்லையா?
ஒவ்வொரு பரத்தை வீட்டிலும் ஆண்கள் உண்டு. அவர்களுக்கு மட்டும் கனிவு வந்தது எங்கனம்? 
நம்ம வீட்டுப்பெண் அபப்டிநடந்தால் கொன்றுவிடுவோமா?

​அடக் கொடுமையே :((((((((
உண்மையிலேயே​ பொருள் புரிந்துதான் எழுதப் பட்டிருக்கிறதா இது !!!!!!!!!!!
 

சூழ்நிலை வரும்போது நாம் அடங்கித்தான் போகணும்.அல்லது விலகிப்போகணும்.

மாதொருபாகனில், மருமகளுக்கு இந்த தானமுறையை பரிந்துரைத்ததே மாமியார்தான். ஆனால் கணவன் ஏற்கவில்லை. கணவனுக்கு பிள்ளைகொடுக்கும் வல்லமை இல்லை என்ற குட்டுவெளிப்படும் என்பதே அவன் அச்சம்.
 
மாதுரிக்கு குந்தி சொல்லிக்கொடுத்த வித்தையும் அதுவே.

N. Ganesan

unread,
Jul 10, 2016, 5:52:33 PM7/10/16
to வல்லமை, mint...@googlegroups.com


On Sunday, July 10, 2016 at 11:13:16 AM UTC-7, வேந்தன் அரசு wrote:
மாதொருபாகனில், மருமகளுக்கு இந்த தானமுறையை பரிந்துரைத்ததே மாமியார்தான். ஆனால் கணவன் ஏற்கவில்லை. கணவனுக்கு பிள்ளைகொடுக்கும் வல்லமை இல்லை என்ற குட்டுவெளிப்படும் என்பதே அவன் அச்சம்.
 
மாதுரிக்கு குந்தி சொல்லிக்கொடுத்த வித்தையும் அதுவே.


மகாபாரதத்தில் படித்ததை லோக்கலைஸ் பண்ணியிருக்கார் பெருமாள்முருகன். Fictional work.  ஆனால், திருச்செங்கோடு தேர் திருவிழா என எழுதியதை
அவ்வூர் மக்கள் - ஆண்கள், பெண்கள் - விரும்பவில்லை என செய்திகள்.

ஹைகோர்ட் ஜட்ஜ்மென்ட் வந்தாச்சே. நிறைய இணையத்திலும், அச்சிலும் அவர் இயங்கவேண்டும்.
மக்கள் ஆர்வமுடன் வாசிப்பர்.

நா. கணேசன் 

Oru Arizonan

unread,
Jul 11, 2016, 1:18:15 AM7/11/16
to vallamai, mintamil
2016-07-10 22:18 GMT+05:30 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:

//மாதவி வீட்டில் ஆண்களே இல்லையா?
ஒவ்வொரு பரத்தை வீட்டிலும் ஆண்கள் உண்டு. அவர்களுக்கு மட்டும் கனிவு வந்தது எங்கனம்? 
நம்ம வீட்டுப்பெண் அபப்டிநடந்தால் கொன்றுவிடுவோமா?//

 //வள்ளுவம் என் சமயம்// என்று பெருமையுடன் அடிக்கையொப்பமிட்டு, வள்ளுவம் சொல்லுக்கெதிர்ச்சொல்லே //வேந்தன் அரசு// எழுதுவது எங்ஙனம்?   //வள்ளுவம் என் சமயம்//  என்பதை நீக்கிவிட்டுக்குக் கையொப்பமிட்டால் 
உயர்திரு  //வேந்தன் அரசு//  அவர்களின் கேள்வியைப்புரிந்துகொள்ளலாமோ???????????????!!!!!!!!!!!!!!

Oru Arizonan

unread,
Jul 11, 2016, 1:28:40 AM7/11/16
to vallamai, mintamil
mmmmmmmmmmmmm.....................

Let me make head and tail of this discussion based on scientific reasoning.

  • In physics, there is force called drag or friction force.
  • It will always oppose whatever we try to do.
  • If we pull up, it will push down.
  • If we push, it will resist our pulling.
  • Some are like frictional/drag force.
  • If we say we should honor women, they will say no and ask why?
  • If we say something is good for women, they will say, you are male chauvinist pig.
  • A wise person uses this frictional/drag force to his/her advantage.
  • For example, if we want to stop a moving vehicle, this frictional force helps
  • If we want to land a plane this drag force helps. 
  • if we say opposite of what we want to say, then these persons of frictional/drag force nature will say want we want them to say.
  • Let us use them wisely.
Disclaimer:  This is written only in pure humor. No malicious intention, however subtle, is  intended.
ஒரு அரிசோனன் 

Iyappan Krishnan

unread,
Jul 11, 2016, 4:43:53 AM7/11/16
to vall...@googlegroups.com, mintamil
;))))


On Monday 11 July 2016, Oru Arizonan <oruar...@gmail.com> wrote:
mmmmmmmmmmmmm.....................

Let me make head and tail of this 


--
IMG_0670.jpg

Innamburan S.Soundararajan

unread,
Jul 11, 2016, 6:21:08 AM7/11/16
to vall...@googlegroups.com, mintamil
ஐய்யயோ! புனையூர் நீலாங்கரை தாண்டி வருது. அங்கேயும் எல்லாம் நடக்குது. எங்கே தான் நடக்கலை.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

வேந்தன் அரசு

unread,
Jul 11, 2016, 7:38:07 AM7/11/16
to vallamai, mintamil


11 ஜூலை, 2016 ’அன்று’ முற்பகல் 1:18 அன்று, Oru Arizonan <oruar...@gmail.com> எழுதியது:
வள்ளுவர் விலைமகளை கடிந்து எழுதியுள்ளாரா?

Iyappan Krishnan

unread,
Jul 11, 2016, 11:04:48 AM7/11/16
to vall...@googlegroups.com, mintamil
​​ஆக, யாரும் தன்னை அந்தச் சூழலுக்குள் வைத்துப் பார்க்க விரும்பவில்லை.  ஆனால் அடுத்தவனுக்கு என்றால் ஜமுக்காளம், சொம்பு முதற்கொண்டு ஆலமரத்தடியில் உட்கார்ந்துக் கொள்கிறோம்... நாட்டாமைகளாக :))

தட் தக்காளி சட்னி vs ரத்தம்  கான்செப்ட்  தான் எப்போதும். 

ஜோக்ஸ் அபார்ட்...


அவ்ளோ தான்... இனி நான் கூட்டத்தில்  உக்கார்ந்து  பஞ்சாயத்தை வேடிக்கைப் பார்க்கிறேன். 

​அன்புடன்​

வேந்தன் அரசு

unread,
Jul 11, 2016, 12:54:59 PM7/11/16
to vallamai, mintamil


11 ஜூலை, 2016 ’அன்று’ முற்பகல் 11:04 அன்று, Iyappan Krishnan <jee...@gmail.com> எழுதியது:

​​ஆக, யாரும் தன்னை அந்தச் சூழலுக்குள் வைத்துப் பார்க்க விரும்பவில்லை.  ஆனால் அடுத்தவனுக்கு என்றால் ஜமுக்காளம், சொம்பு முதற்கொண்டு ஆலமரத்தடியில் உட்கார்ந்துக் கொள்கிறோம்... நாட்டாமைகளாக :))

தட் தக்காளி சட்னி vs ரத்தம்  கான்செப்ட்  தான் எப்போதும். 

ஜோக்ஸ் அபார்ட்...


அவ்ளோ தான்... இனி நான் கூட்டத்தில்  உக்கார்ந்து  பஞ்சாயத்தை வேடிக்கைப் பார்க்கிறேன். 


நீங்க அந்த சூழலில் இருந்தால் என்ன பண்னுவீங்கனு சொல்லிட்டு பின் கேளுங்க.


செல்வன்

unread,
Jul 11, 2016, 5:07:41 PM7/11/16
to vallamai, mintamil

2016-07-11 6:38 GMT-05:00 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
வள்ளுவர் விலைமகளை கடிந்து எழுதியுள்ளாரா?

வள்ளுவர் பரத்தை ஆவது அவரவர் தனிமனித சுதந்திரம், அப்படி ஒருவர் ஆனால் அவர் வீட்டு ஆண்கள் அதை வரவேற்று மாலைபோட்டு மரியாதை செய்யவேண்டும் என எழுதினாரா?


--

Iyappan Krishnan

unread,
Jul 11, 2016, 11:08:04 PM7/11/16
to vall...@googlegroups.com
வேந்தன் ஜி :)


////​// 1 - நீங்கள், கதையில் இருக்கும் ஊரில், அதே தெருவில் அதுவும் வளர்ந்த  பெண் பிள்ளையுடன் வாழ்வதாக   இருந்திருந்தால்​  கதை படித்த பின்   உங்கள் மன நிலை என்னவாக இருக்கும்? ///

மானத்துடன்.. ஊர் மக்களுடன் சேர்ந்து போராடி  இருப்பேன் என்பதாக இருக்கும்

2 - நீங்கள் கதையில் சொல்லப்படும் ஊரில் அதே தெருவில், ஒரு வேளை வீட்டின் கதவு என் 15 என்று குறிப்பிட்டிருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள், அதே வீட்டில் வளர்ந்த பெண் பிள்ளைகளுடம் வாழ்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள், அப்போது உங்களின் மன நிலை என்னவாக இருக்கும். 

மானத்துடன்..  ஊர் மக்களுடன் சேர்ந்து போராடி  இருப்பேன்.  கூடவே எழுத்தாளர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்திருப்பேன் என்பதாக இருக்கும். 

3 -  கதையில் சொல்லப்படும் அதே ஊர், அதே தெரு, அதே வீடு, பெண்ணின் பெயர் பொன்னாத்தா என்று வைத்துக்கொள்ளுங்கள், அதே பெயரில் உங்களின் மனைவியோ அல்லது வயது வந்த பெண்ணோ இருந்தால், கதையைப் படித்த பின் உங்களின் மன நிலை என்னவாக இருக்கும் ?

மானத்துடன்..  ஊர் மக்களுடன் சேர்ந்து போராடி  இருப்பேன்.  கூடவே எழுத்தாளர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்திருப்பேன் என்பதாக இருக்கும். 


4 - கதையில் சொல்லப்படும் அதே ஊர், அதே தெரு அதே வீடு... பெண்ணின் பெயர் பொன்னாத்தா என்று வைத்துக்கொள்ளுங்கள்.  உங்களின் தாயாரின் பெயர் பொன்னாத்தாவாக இருந்தால், கதையைப் படித்த பின் உங்களின் மனநிலை என்னவாக இருக்கும் ?

மானத்துடன்..  ஊர் மக்களுடன் சேர்ந்து போராடி  இருப்பேன்.  கூடவே எழுத்தாளர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்திருப்பேன் என்பதாக இருக்கும். 


5 - கதையில் சொல்லப்பட்டிருக்கும் அதே ஊர் உங்களின் ஊராகவும் , ஆதே தெரு, அதே வீடு, பெண்ணின் பெயர் பொன்னாத்தா என்று வைத்துக்கொள்ளுங்கள். உங்களின் தாயாரின் பெயரும் பொன்னாத்தாகவும் (அல்லது உங்களின் மனைவி பெயர் என்று கூட வைத்துக் கொள்ளலாம் ), கூடவே நீங்கள் நெடுநாள் கழித்து பிறந்தவராக இருக்கிறீர்கள் ( அல்லது உங்களுக்கு நெடுநாள் கழித்து பிள்ளை பிறந்தது ) என்று வைத்துக் கொள்ளுங்கள்..    படித்தப் பின் உங்களின் மன நிலை என்னவாக இருக்கும்.  
கொஞ்சம் நேர்மையுடன் யோசித்து பதில் சொல்ல வேண்டுகிறேன். ////

மானத்துடன்..  ஊர் மக்களுடன் சேர்ந்து போராடி  இருப்பேன்.  கூடவே எழுத்தாளர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்திருப்பேன் என்பதாக இருக்கும். 



மொத்தமாக - அந்த ஊர் மக்கள் என்ன செய்தார்களோ அதே தான்.  


தன் கற்பனையை எழுத  யாருக்கும் உரிமை உண்டு. ஆனால் அந்த கற்பனையை இன்னொருவர் தலையில் கொண்டு போய் வைப்பது ஏற்க முடியாத ஒன்று. 

சரி என் பதிலை நான் சொல்லிட்டேன்.. ....!!


2016-07-11 22:24 GMT+05:30 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
நீங்க அந்த சூழலில் இருந்தால் என்ன பண்னுவீங்கனு சொல்லிட்டு பின் கேளுங்க.



தேமொழி

unread,
Jul 12, 2016, 12:10:39 AM7/12/16
to வல்லமை
On Monday, July 11, 2016 at 9:54:59 AM UTC-7, வேந்தன் அரசு wrote:

நீங்க அந்த சூழலில் இருந்தால் என்ன பண்னுவீங்கனு சொல்லிட்டு பின் கேளுங்க.


நீங்க அந்தச் சூழலில் இருந்தால் என்ன பண்னுவீங்க  என்று கேட்டால் .... 
மூன்றாம் மனிதராக உங்களை உருவகப் படுத்தி  அல்ல.  

வேந்தரின் கோணம் மனித நேயக் கோணம்.

பாதிக்கப்பட்ட குடும்பமாக நினைத்து பதில் சொல்ல வேண்டும் 

நமது குடும்பத்தில்  குழந்தை பெற முடியாத நிலையில் வாழும் ஒரு  பெண், ஒரு சகோதரி, ஒரு மகள்.... இது போல ...
அப்பெண்ணின் இயலாமையையும் ஏக்கத்தையும்  பார்க்கச் சகிக்க முடியாத அன்புள்ளம் கொண்டவராக நம்மை நினைத்துக் கொள்ள வேண்டும். 

அந்தப் பெண் திடீரென இப்படி ஒரு முடிவெடுத்துவிட்டாள் , 
இப்பொழுது பாசத்திற்குரிய அந்தப் பெண்ணை எப்படி நடத்துவீர்கள்?


இதுபோன்ற கேள்வியில்தான்  அப்பா புஷ் ஷுடன் போட்டியிட்ட மைக்கேல் டுகாக்கிஸ் கலங்கிப் போய் கோட்டை விட்டார்.
(Bernard Shaw asks Michael Dukakis a provocative question in the second 1988 presidential debate: 
"If Kitty Dukakis were raped and murdered, would you favor an irrevocable death penalty for the killer?"  >>> https://youtu.be/DF9gSyku-fc)

ஏனென்றால் மூன்றாம் மனிதருக்கு அறிவுரை சொல்வது, அவர் எடுத்த முடிவை விமர்சிப்பது யாருக்குமே எளிது.   ஏனெனில் விமர்சனம் செய்பவருக்கு பாதிப்பு தெரியாது.  பாதிப்பு கிடையாது.

கருணைக் கொலை பாவம் என்பவர்கள் கூட... தனது பாசத்திற்குரியவர் உயிரைப் பற்றி முடிவெடுக்கும் நிலை வந்தால், அவர் துடிப்பதைப் பொறுக்காமல் மாறுபட்ட முடிவெடுக்கக் கூடும்.

தானாடாவிட்டாலும் சதை ஆடும் என்பதன் அடிப்படை இந்தக் கேள்வி.  

இடையிட்டதற்கு மன்னிக்கவும்.   மாறுபட்ட கோணத்தைக் காட்ட முயன்றேன் 

.... தேமொழி

துரை.ந.உ

unread,
Jul 12, 2016, 1:12:29 AM7/12/16
to வல்லமை
2016-07-12 9:40 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
On Monday, July 11, 2016 at 9:54:59 AM UTC-7, வேந்தன் அரசு wrote:

நீங்க அந்த சூழலில் இருந்தால் என்ன பண்னுவீங்கனு சொல்லிட்டு பின் கேளுங்க.


நீங்க அந்தச் சூழலில் இருந்தால் என்ன பண்னுவீங்க  என்று கேட்டால் .... 
மூன்றாம் மனிதராக உங்களை உருவகப் படுத்தி  அல்ல.  

வேந்தரின் கோணம் மனித நேயக் கோணம்.

​ஓ.எம்.ஜி !!!​
 

பாதிக்கப்பட்ட குடும்பமாக நினைத்து பதில் சொல்ல வேண்டும் 

ஓ.எம்.ஜி !!!​
 

​ம்ம்ம்ம் ...அப்புறம் !​
 

நமது குடும்பத்தில்  குழந்தை பெற முடியாத நிலையில் வாழும் ஒரு  பெண், ஒரு சகோதரி, ஒரு மகள்.... இது போல ...
அப்பெண்ணின் இயலாமையையும் ஏக்கத்தையும்  பார்க்கச் சகிக்க முடியாத அன்புள்ளம் கொண்டவராக நம்மை நினைத்துக் கொள்ள வேண்டும். 

ஓ.எம்.ஜி !!!​
 

​உ.பு.சி ....​
 

அந்தப் பெண் திடீரென இப்படி ஒரு முடிவெடுத்துவிட்டாள் , 
இப்பொழுது பாசத்திற்குரிய அந்தப் பெண்ணை எப்படி நடத்துவீர்கள்?

​என்ன எழவு கண்ணோட்டம் இது :(((( 

​ஏன் , வேறு வழியே இல்லையா இதுக்கு !... :(((​

கற்பனையே பண்ன முடியாத ஒன்றை ..எப்படி இப்படி எளிதாக எடுத்துக்கொள்ள முடிகிறதென்று தெரியவில்லை எனக்கு :((​
 



இதுபோன்ற கேள்வியில்தான்  அப்பா புஷ் ஷுடன் போட்டியிட்ட மைக்கேல் டுகாக்கிஸ் கலங்கிப் போய் கோட்டை விட்டார்.
(Bernard Shaw asks Michael Dukakis a provocative question in the second 1988 presidential debate: 
"If Kitty Dukakis were raped and murdered, would you favor an irrevocable death penalty for the killer?"  >>> https://youtu.be/DF9gSyku-fc)

ஏனென்றால் மூன்றாம் மனிதருக்கு அறிவுரை சொல்வது, அவர் எடுத்த முடிவை விமர்சிப்பது யாருக்குமே எளிது.   ஏனெனில் விமர்சனம் செய்பவருக்கு பாதிப்பு தெரியாது.  பாதிப்பு கிடையாது.

கருணைக் கொலை பாவம் என்பவர்கள் கூட... தனது பாசத்திற்குரியவர் உயிரைப் பற்றி முடிவெடுக்கும் நிலை வந்தால், அவர் துடிப்பதைப் பொறுக்காமல் மாறுபட்ட முடிவெடுக்கக் கூடும்.

​இது வேறு ....அது வேறு .... ( முக்கியமாக இடம் தான் தகறாறு)​
 

தானாடாவிட்டாலும் சதை ஆடும் என்பதன் அடிப்படை இந்தக் கேள்வி.  
​அதற்காக..........  !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!​
 

இடையிட்டதற்கு மன்னிக்கவும்.   மாறுபட்ட கோணத்தைக் காட்ட முயன்றேன் 

Inline image 1
 

.... தேமொழி


வேந்தன் அரசு

unread,
Jul 12, 2016, 9:33:31 PM7/12/16
to vallamai


11 ஜூலை, 2016 ’அன்று’ பிற்பகல் 5:07 அன்று, செல்வன் <hol...@gmail.com> எழுதியது:

2016-07-11 6:38 GMT-05:00 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
வள்ளுவர் விலைமகளை கடிந்து எழுதியுள்ளாரா?

வள்ளுவர் பரத்தை ஆவது அவரவர் தனிமனித சுதந்திரம், அப்படி ஒருவர் ஆனால் அவர் வீட்டு ஆண்கள் அதை வரவேற்று மாலைபோட்டு மரியாதை செய்யவேண்டும் என எழுதினாரா?


இல்லை.


வேந்தன் அரசு

unread,
Jul 12, 2016, 9:36:58 PM7/12/16
to vallamai


11 ஜூலை, 2016 ’அன்று’ பிற்பகல் 11:08 அன்று, Iyappan Krishnan <jee...@gmail.com> எழுதியது:

வேந்தன் ஜி :)


////​// 1 - நீங்கள், கதையில் இருக்கும் ஊரில், அதே தெருவில் அதுவும் வளர்ந்த  பெண் பிள்ளையுடன் வாழ்வதாக   இருந்திருந்தால்​  கதை படித்த பின்   உங்கள் மன நிலை என்னவாக இருக்கும்? ///

மானத்துடன்.. ஊர் மக்களுடன் சேர்ந்து போராடி  இருப்பேன் என்பதாக இருக்கும்

2 - நீங்கள் கதையில் சொல்லப்படும் ஊரில் அதே தெருவில், ஒரு வேளை வீட்டின் கதவு என் 15 என்று குறிப்பிட்டிருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள், அதே வீட்டில் வளர்ந்த பெண் பிள்ளைகளுடம் வாழ்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள், அப்போது உங்களின் மன நிலை என்னவாக இருக்கும். 

மானத்துடன்..  ஊர் மக்களுடன் சேர்ந்து போராடி  இருப்பேன்.  கூடவே எழுத்தாளர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்திருப்பேன் என்பதாக இருக்கும். 

3 -  கதையில் சொல்லப்படும் அதே ஊர், அதே தெரு, அதே வீடு, பெண்ணின் பெயர் பொன்னாத்தா என்று வைத்துக்கொள்ளுங்கள், அதே பெயரில் உங்களின் மனைவியோ அல்லது வயது வந்த பெண்ணோ இருந்தால், கதையைப் படித்த பின் உங்களின் மன நிலை என்னவாக இருக்கும் ?

மானத்துடன்..  ஊர் மக்களுடன் சேர்ந்து போராடி  இருப்பேன்.  கூடவே எழுத்தாளர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்திருப்பேன் என்பதாக இருக்கும். 


4 - கதையில் சொல்லப்படும் அதே ஊர், அதே தெரு அதே வீடு... பெண்ணின் பெயர் பொன்னாத்தா என்று வைத்துக்கொள்ளுங்கள்.  உங்களின் தாயாரின் பெயர் பொன்னாத்தாவாக இருந்தால், கதையைப் படித்த பின் உங்களின் மனநிலை என்னவாக இருக்கும் ?

மானத்துடன்..  ஊர் மக்களுடன் சேர்ந்து போராடி  இருப்பேன்.  கூடவே எழுத்தாளர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்திருப்பேன் என்பதாக இருக்கும். 


5 - கதையில் சொல்லப்பட்டிருக்கும் அதே ஊர் உங்களின் ஊராகவும் , ஆதே தெரு, அதே வீடு, பெண்ணின் பெயர் பொன்னாத்தா என்று வைத்துக்கொள்ளுங்கள். உங்களின் தாயாரின் பெயரும் பொன்னாத்தாகவும் (அல்லது உங்களின் மனைவி பெயர் என்று கூட வைத்துக் கொள்ளலாம் ), கூடவே நீங்கள் நெடுநாள் கழித்து பிறந்தவராக இருக்கிறீர்கள் ( அல்லது உங்களுக்கு நெடுநாள் கழித்து பிள்ளை பிறந்தது ) என்று வைத்துக் கொள்ளுங்கள்..    படித்தப் பின் உங்களின் மன நிலை என்னவாக இருக்கும்.  
கொஞ்சம் நேர்மையுடன் யோசித்து பதில் சொல்ல வேண்டுகிறேன். ////

மானத்துடன்..  ஊர் மக்களுடன் சேர்ந்து போராடி  இருப்பேன்.  கூடவே எழுத்தாளர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்திருப்பேன் என்பதாக இருக்கும். 



மொத்தமாக - அந்த ஊர் மக்கள் என்ன செய்தார்களோ அதே தான்.  


தன் கற்பனையை எழுத  யாருக்கும் உரிமை உண்டு. ஆனால் அந்த கற்பனையை இன்னொருவர் தலையில் கொண்டு போய் வைப்பது ஏற்க முடியாத ஒன்று. 

சரி என் பதிலை நான் சொல்லிட்டேன்.. ....!!


நான் கேட்டது இந்த சூழல் அல்ல.

அந்த பொன்னாள் உங்க மனைவியாக இருந்தாள் என்ன பண்ணி இருப்பீங்க?

வேந்தன் அரசு

unread,
Jul 12, 2016, 9:39:37 PM7/12/16
to vallamai


12 ஜூலை, 2016 ’அன்று’ முற்பகல் 12:10 அன்று, தேமொழி <jsthe...@gmail.com> எழுதியது:

On Monday, July 11, 2016 at 9:54:59 AM UTC-7, வேந்தன் அரசு wrote:

நீங்க அந்த சூழலில் இருந்தால் என்ன பண்னுவீங்கனு சொல்லிட்டு பின் கேளுங்க.


நீங்க அந்தச் சூழலில் இருந்தால் என்ன பண்னுவீங்க  என்று கேட்டால் .... 
மூன்றாம் மனிதராக உங்களை உருவகப் படுத்தி  அல்ல.  

வேந்தரின் கோணம் மனித நேயக் கோணம்.

பாதிக்கப்பட்ட குடும்பமாக நினைத்து பதில் சொல்ல வேண்டும் 

நமது குடும்பத்தில்  குழந்தை பெற முடியாத நிலையில் வாழும் ஒரு  பெண், ஒரு சகோதரி, ஒரு மகள்.... இது போல ...
அப்பெண்ணின் இயலாமையையும் ஏக்கத்தையும்  பார்க்கச் சகிக்க முடியாத அன்புள்ளம் கொண்டவராக நம்மை நினைத்துக் கொள்ள வேண்டும். 

அந்தப் பெண் திடீரென இப்படி ஒரு முடிவெடுத்துவிட்டாள் , 
இப்பொழுது பாசத்திற்குரிய அந்தப் பெண்ணை எப்படி நடத்துவீர்கள்?



தேமொழி,

எப்படி கண்டுபிடிச்சீங்க. நமது ஒரே அலைநீளம் 

இவர்கள் மாதொருபாகனை வாசித்தார்கள் என்ற ஐயம் வருது


Oru Arizonan

unread,
Jul 12, 2016, 10:10:29 PM7/12/16
to vallamai


2016-07-11 22:12 GMT-07:00 துரை.ந.உ <vce.pr...@gmail.com>:
//

Inline image 1//

 துரை  தம்பி, 
சிரித்துச் சிரித்து, வயிறு புண்ணாகிவிட்டது.  உடனே, வயிற்றுவலி மாத்திரைகளை மின்னஞ்சல்மூலம் அனுப்பிவையுங்கள்!
😁😀😂
அன்புடன்,
ஒரு அரிசோனன் 

Iyappan Krishnan

unread,
Jul 13, 2016, 12:30:49 AM7/13/16
to vall...@googlegroups.com
வேந்தரே :))))

அந்த இழித்தனத்தை  ஆதரிக்கும் நீங்கள் அ​ல்லவா அது குறித்து யோசிக்க வேண்டும் ?   கதை எழுதிய தெருவில், கதையில் இருக்கும் பெயருடன் வாழ்வது பற்றி கற்பனையாக யோசிக்கவே உங்களுக்கு எங்கெல்லாமோ  வலிக்கிறது இல்லையா?  :)) ஆனால் ஊருக்கெல்லாம்  உபதேசம் செய்ய  கிளம்பிவிடுகிறோம்.   கேள்விக்கு பதில் சொல்ல இயலாமல், கேவலப்பட்டவள் உன் மனைவியாக இருந்தால் என்ன செய்வீர்கள் என்று கேள்வி வேறு :)) நல்ல முற்போக்கு. 


என் மூன்று  அத்தைகள்,   முதலாமவர் நன்கு செட்டில் ஆகி  கொள்ளு பேரன்களுடன் விளையாடிக் கொண்டிருக்கிறார்.  அடுத்த இருவரின் வாழ்க்கையை அறிந்துக் கொள்ளுங்கள். இரண்டாமவர்  வயது 78 -80 ஆகப் போகிறது. கல்யாணம் ஆகி குழந்தை பெறாமல் இருந்தவர். இவரை ஒதுக்கி வேறொரு கல்யாணம் என்று போனதால், இப்படியான குடும்பத்தில் இனி வாழ மாட்டேன் என்று அப்போதே வெளியேறியவர் ( அவரின் 16 -18 வயதில்  இருக்கலாம்.   ).  வேறொரு கல்யாணம் பண்ணியவருக்கும்  பிள்ளை இல்லை என்பது வேறு விஷயம். 

அப்படி வந்தவர் தனக்குத் தேவையானதை உழைத்துப் பெற்றார். அதற்கு அவரின் அண்ணன்கள் .. அதாவது  என் அப்பா, பெரியப்பா சித்தப்பா என எல்லாரும் முழுமனதுடன் ஆதரித்தனர். யார்வீட்டிலும் தங்க மாட்டேன் என்றவருக்கு எல்லார் வீட்டுப் பங்கிலும் கொஞ்சம் கொஞ்சம் விட்டுக் கொடுத்து அவருக்கென்று தனிவீடு கொடுத்து வாழச் செய்தனர்.  வாழ்ந்து வருகிறார்.  

எல்லாவற்றிற்கும் மேலாக,  மூன்றாவது அத்தை, என் அக்காவிற்கு துணையாக வாழ்நாள் முழுதும் இருப்பேன் என்று திருமணம் வேண்டாம் என்று அவர் கூடவே துணையாக இருக்கிறார்.  தாத்தா உயிருடன் இருந்த போதும், அதன் பிறகும் இவர்களின்  செயலை எங்கள் குடும்பத்தினர்  ஒருவரும் விமர்சித்ததில்லை.  அவர்கள் முடிவுக்கு இன்று வரைக்கும் நாங்கள் ஆதரவுடன் இருக்கிறோம். இது தான் எங்கள் சமுதாயம். 

திருவிழாவுக்குச் சென்று யாரோ ஒருத்தனிடம்  உடலை விற்று குழந்தைப் பெற்ற பொன்னாத்தாக்கள் எங்கள் சமுதாயத்தில்  கிடையாது அப்படி ஒரு நிகழ்வு நடக்க வாய்ப்பில்லை. 

 அப்படியான நிகழ்வுகள் நடந்தன, அது உண்மை தான் என்று கூறுபவர்கள் தான் தன் மனைவி பொன்னாத்தாவாக இருந்தால் தங்களின் நிலை என்ன என்று யோசித்து பதில் சொல்ல வேண்டும் இல்லையா ?  வடிவேலு பாணியில் சொல்ல வேண்டும் என்றால் “ நடு ராத்திரில நான் எதுக்குங்க சுடுகாடு போகனும்? தாயத்து  நீங்க விக்கறீங்கங்கறதுக்காக அதைக் கட்டிக்கிட்டு  அதை டெஸ்ட் பண்ண வேண்டிய அவசியம் எனக்கு எதுக்கு ?  நீங்க தாயத்து கட்டிக்கிட்டுப் போயி டெஸ்ட் பண்ணி காட்டுங்க“


சரி இப்போது ஏற்கனவே கேட்ட கேள்விகளுடன் உங்களின் கேள்வியையும் உங்களுக்கே  கேட்டுக் கொண்டு பதில் சொல்லுங்கள்.   

அன்புடன்
ஐயப்பன்


2016-07-13 7:06 GMT+05:30 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:


நான் கேட்டது இந்த சூழல் அல்ல.

அந்த பொன்னாள் உங்க மனைவியாக இருந்தாள் என்ன பண்ணி இருப்பீங்க?



Oru Arizonan

unread,
Jul 13, 2016, 1:54:18 AM7/13/16
to vallamai


2016-07-12 21:30 GMT-07:00 Iyappan Krishnan <jee...@gmail.com>:
//சரி இப்போது ஏற்கனவே கேட்ட கேள்விகளுடன் உங்களின் கேள்வியையும் உங்களுக்கே  கேட்டுக் கொண்டு பதில் சொல்லுங்கள்.   

அன்புடன்
ஐயப்பன்//

சீவசித்தரே,

வேந்தருக்கு நான் ஒரு சவால் விட்டேன்.  விலைமாதுபற்றி அவர்கேட்ட  ஒரு இடக்கான கேள்விக்கு,  நான் வள்ளுவரின் வாயமொழியிலிருந்து சான்று கொடுத்தால், "வள்ளுவம் என் சமயம்" என்று அடிக்கையொப்பமிடுவதை விட்டுவிடத்தயாரா என்று --  இதுவரை பதிலில்லை. 
ஒரு அரிசோனன் 

வேந்தன் அரசு

unread,
Jul 13, 2016, 8:18:39 AM7/13/16
to vallamai


13 ஜூலை, 2016 ’அன்று’ முற்பகல் 12:30 அன்று, Iyappan Krishnan <jee...@gmail.com> எழுதியது:

வேந்தரே :))))

அந்த இழித்தனத்தை  ஆதரிக்கும் நீங்கள் அ​ல்லவா அது குறித்து யோசிக்க வேண்டும் ?   கதை எழுதிய தெருவில், கதையில் இருக்கும் பெயருடன் வாழ்வது பற்றி கற்பனையாக யோசிக்கவே உங்களுக்கு எங்கெல்லாமோ  வலிக்கிறது இல்லையா?  :)) ஆனால் ஊருக்கெல்லாம்  உபதேசம் செய்ய  கிளம்பிவிடுகிறோம்.   கேள்விக்கு பதில் சொல்ல இயலாமல், கேவலப்பட்டவள் உன் மனைவியாக இருந்தால் என்ன செய்வீர்கள் என்று கேள்வி வேறு :)) நல்ல முற்போக்கு. 


என் மூன்று  அத்தைகள்,   முதலாமவர் நன்கு செட்டில் ஆகி  கொள்ளு பேரன்களுடன் விளையாடிக் கொண்டிருக்கிறார்.  அடுத்த இருவரின் வாழ்க்கையை அறிந்துக் கொள்ளுங்கள். இரண்டாமவர்  வயது 78 -80 ஆகப் போகிறது. கல்யாணம் ஆகி குழந்தை பெறாமல் இருந்தவர். இவரை ஒதுக்கி வேறொரு கல்யாணம் என்று போனதால், இப்படியான குடும்பத்தில் இனி வாழ மாட்டேன் என்று அப்போதே வெளியேறியவர் ( அவரின் 16 -18 வயதில்  இருக்கலாம்.   ).  வேறொரு கல்யாணம் பண்ணியவருக்கும்  பிள்ளை இல்லை என்பது வேறு விஷயம். 



அப்படி வாங்க வழிக்கு. ஆண் இன்னொரு மணம் செய்யலாம். பெண் செய்யக்கூடாது?

 எங்களுக்கு பிள்ளையில்லா சூழ்நிலையில் தத்து எடுத்து இருப்போம். குறை என்மேல் இருந்தால் விந்துதானம் பெற்று இருப்போம். குழந்தைகள் எல்லாரும் குழந்தைகள்தான். பெற்ற பிள்ளையினும் வளர்த்தபிள்ளைமேல்  பாசம் அதிகம் இருக்கும்.. அதனால் மாதொருபாகம்போல் ஒரு நிலை வந்தால் என்ன செய்வேன் என எனக்கு தெரியாது. ஆனால் அந்தமுறை கேடானது என நினைக்கவில்லை. (அதனால் பிள்ளை பிறக்கும் வாய்ப்பு அதிகமா எனவும் நமக்கு தெரியாது)

அமெரிக்காவில் வாழும் சூழலில் தத்துஎடுத்து வளர்ப்பதைவிடவும் தாயகத்தில் ஒரு குழந்தைகள் விடுதிநடத்தினால் ஒரே செலவில் அதிக பிள்ளைகளை வளர்க்கலாம் என்ற கருத்தைக்கொண்டுள்ளேன்.

 அந்த கதை திருசெங்கோட்டுகோவில் விழாவில்ம்நடப்பதாகத்தான வருகிறது. ஆனால் பொன்னாள் கோவிலிக்கு போகும்போது  பலதிசைகளில் பல ஊருகளில் இருந்து மக்கள் சாரிசாரியாக வருவதைக்காண்பாள். அதனால் ஒரு குறிப்பீட்ட ஊர் மக்கள்தான் இந்த தானமுறையை கடைப்பிடித்தார்கள் என்று ஆசிரியர் காட்டவில்லை. அடுத்து இந்தமுறை பொன்னாவுக்கும் தெரிந்திருக்கவில்லை. அவரது மாமியார்தான் அவளுக்கு பரிந்துரைத்தார். இது மறைமுகமாகத்தான் நடந்து இருக்கு. பொன்னாவின் கணவன் இதுக்கு ஒத்துக்கலை. பொன்னாள் தன் பேச்சை கேட்கவில்லை என்று மனம் ஒடிந்து போனான். 

கதையை கதையாக எடுத்தக்கணும். ஜெயகாந்தனின் அக்கினிப்பிரவேசம்போல்.
.

வேந்தன் அரசு

unread,
Jul 13, 2016, 8:21:23 AM7/13/16
to vallamai


13 ஜூலை, 2016 ’அன்று’ முற்பகல் 1:54 அன்று, Oru Arizonan <oruar...@gmail.com> எழுதியது:




சீவசித்தரே,

வேந்தருக்கு நான் ஒரு சவால் விட்டேன்.  விலைமாதுபற்றி அவர்கேட்ட  ஒரு இடக்கான கேள்விக்கு,  நான் வள்ளுவரின் வாயமொழியிலிருந்து சான்று கொடுத்தால், "வள்ளுவம் என் சமயம்" என்று அடிக்கையொப்பமிடுவதை விட்டுவிடத்தயாரா என்று --  இதுவரை பதிலில்லை. 
ஒரு அரிசோனன் 

, விலைமகளை வள்ளுவர் கடிவதாக சுட்டினால் வள்ளுவம் என் சமயம் என ஒப்பம் இடுவதை விட்டுவிடுகிறேன், கொடுக்கவில்லை என்றால்?
--
வேந்தன் அரசு

Iyappan Krishnan

unread,
Jul 13, 2016, 8:39:14 AM7/13/16
to vall...@googlegroups.com
​வேந்தரே ?​

2016-07-13 17:48 GMT+05:30 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
அப்படி வாங்க வழிக்கு. ஆண் இன்னொரு மணம் செய்யலாம். பெண் செய்யக்கூடாது?

​எங்கே அப்படி சொல்லி இருக்கிறேன்? நான் சொல்லாத ஒன்றை சொல்லி உங்க வழிக்கு வரச் சொல்லுகிறீர்களே ?
 

 எங்களுக்கு பிள்ளையில்லா சூழ்நிலையில் தத்து எடுத்து இருப்போம். குறை என்மேல் இருந்தால் விந்துதானம் பெற்று இருப்போம்.

​மருத்துவமனையில் அவ்வாறு பெற்றவர்களை நானும் அறிவேன். கோவிலில் சென்று உடம்பு விற்பதும் இதுவும் ஒன்றா என்பதற்கான பதிலையும் உங்களிடமே விட்டுவிடுகிறேன்.​
 

​:)
 
குழந்தைகள் எல்லாரும் குழந்தைகள்தான். பெற்ற பிள்ளையினும் வளர்த்தபிள்ளைமேல்  பாசம் அதிகம் இருக்கும்.. அதனால் மாதொருபாகம்போல் ஒரு நிலை வந்தால் என்ன செய்வேன் என எனக்கு தெரியாது. ஆனால் அந்தமுறை கேடானது என நினைக்கவில்லை. (அதனால் பிள்ளை பிறக்கும் வாய்ப்பு அதிகமா எனவும் நமக்கு தெரியாது)

​:)​


 

அமெரிக்காவில் வாழும் சூழலில் தத்துஎடுத்து வளர்ப்பதைவிடவும் தாயகத்தில் ஒரு குழந்தைகள் விடுதிநடத்தினால் ஒரே செலவில் அதிக பிள்ளைகளை வளர்க்கலாம் என்ற கருத்தைக்கொண்டுள்ளேன்.


​மிக நன்று
 
 அந்த கதை திருசெங்கோட்டுகோவில் விழாவில்ம்நடப்பதாகத்தான வருகிறது. ஆனால் பொன்னாள் கோவிலிக்கு போகும்போது  பலதிசைகளில் பல ஊருகளில் இருந்து மக்கள் சாரிசாரியாக வருவதைக்காண்பாள். அதனால் ஒரு குறிப்பீட்ட ஊர் மக்கள்தான் இந்த தானமுறையை கடைப்பிடித்தார்கள் என்று ஆசிரியர் காட்டவில்லை. அடுத்து இந்தமுறை பொன்னாவுக்கும் தெரிந்திருக்கவில்லை. அவரது மாமியார்தான் அவளுக்கு பரிந்துரைத்தார். இது மறைமுகமாகத்தான் நடந்து இருக்கு. பொன்னாவின் கணவன் இதுக்கு ஒத்துக்கலை. பொன்னாள் தன் பேச்சை கேட்கவில்லை என்று மனம் ஒடிந்து போனான். 

கதையை கதையாக எடுத்தக்கணும். ஜெயகாந்தனின் அக்கினிப்பிரவேசம்போல்.
.

​இது கதையாக இருந்த பட்சத்தில் பிரச்சினை இல்லை.  கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஆராய்ச்சிக்காக பணம் பெற்று, அந்த ஆராய்ச்சியினால்  எழுதியதன் விளைவு. ​


வினவு பக்கத்தில் இருந்து :

//பெருமாள் முருகனும் கூட இந்த நாவலை எழுதுவதற்கும் ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்கும் ரத்தன் டாடா மற்றும் பல முதலாளிகளைப் புரவலராகக் கொண்ட கலைகளுக்கான இந்திய மையம் எனும் தொண்டு நிறுவனத்தின் உதவித் தொகையை பெற்றிருக்கிறார். முன்னுரையிலும் அதைக் குறிப்பிடுகிறார். //   

​//சுற்று வட்டார ஊர்களில் சாமிக்கு பிறந்த பிள்ளை, சாமிக் குழந்தை என்று புழங்கும் பெயர்களை ஏதோ சாமிக்கு நேர்ந்து பெற்ற குழந்தைகள் என்று கருதியதாகவும், பின்னரே இதற்கும் கோவில் திருவிழாவிற்கும் உள்ள தொடர்பை கண்டறிந்து அதன் பின்னே இந்த நாவலை அசை போட்டு எழுதியதாகவும் பெருமாள் முருகன் கூறியிருக்கிறார்//


ஆய்வு செய்த பின் எழுதினால் அதற்கு ஆதாரம் வேண்டாமா ? ஆய்வு என்று சொல்லிவிட்டு எழுதுவது வரலாறு என்று பதிவு ஆகாதா ? 

இப்படியான கேள்விகளுக்கு பதில் சொல்லுவதா வேண்டாமா என்பதை உங்களிடமே விட்டுவிடுகிறேன். 
​அன்புடன்​

Iyappan Krishnan

unread,
Jul 13, 2016, 9:15:55 AM7/13/16
to vall...@googlegroups.com

<< 

இதில்  முன்னுரையில், பெருமாள் முருகன் ஆய்வுக்கென பணம் பெற்றதையும், கள ஆய்வில் கிடைத்ததின் பேரில் இந்த கதை எழுதியதாகவும், சாமிப்பிள்ளை என்று பெயர் வைத்திருப்பவர்கள் இப்படி திருவிழா மூலம் பிறந்தவர் என்றும்​​ தான் ஆய்வின் மூலமாக அறிந்ததாகவும் சொல்லி இருக்கிறார் :)

நல்ல வேளை, இங்கே சாமிப்பிள்ளை என்ற பெயரில் இந்த புத்தகத்தை ஆதரிப்பவர்கள் யாரும் இல்லை. ஆதரிப்பவர்கள் பெயரும் சாமிப்பிள்ளை என்று இல்லை. 

Tthamizth Tthenee

unread,
Jul 13, 2016, 9:28:38 AM7/13/16
to vall...@googlegroups.com
ஒரு காலத்திலே   பிள்ளைகள் தக்காமல் போகும் குடும்பங்களில்   பிச்சை  என்று பெயரிடுவார்கள்  அதற்கு ஆண்டவா  நீ போட்ட பிச்சையாக​​ எங்களுக்கு  இந்தக் குழந்தையைத் தக்கவை  குழந்தைக்கு பிச்சை என்று பெயர் வைக்கிறோம்  என்று வேண்டிக் கொள்வார்கள்

(அல்லா பிச்சை)   இஸ்லாமிலும் இந்த  வழக்கம் இருக்கிறதா  என்று எனக்குத் தெரியாது  

ஆனால் நம்மில் உண்டு  ஆராய்ந்து பிச்சை என்று பெயருள்ளவர்கள் எல்லோரும்  பிச்சைக்காரர்கள்  ரென்று எழுதினாலும்  எழுதுவார்கள்

அன்புடன்
தமிழ்த்தேனீ

அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது


http://thamizthenee.blogspot.com     http://www.peopleofindia.net     


9840686463   9840884852





--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

Iyappan Krishnan

unread,
Jul 13, 2016, 9:31:06 AM7/13/16
to vall...@googlegroups.com
அவ்வளவு மரியாதையாக ​பிச்சைக்காரர்கள் என்று எழுத மாட்டார்கள்... :)​ கண்டிப்பாக!

2016-07-13 18:58 GMT+05:30 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:

ஆனால் நம்மில் உண்டு  ஆராய்ந்து பிச்சை என்று பெயருள்ளவர்கள் எல்லோரும்  பிச்சைக்காரர்கள்  ரென்று எழுதினாலும்  எழுதுவார்கள்



Nagarajan Vadivel

unread,
Jul 13, 2016, 12:38:26 PM7/13/16
to vallamai
​என்னுடைய காட்டுட்டுக் கருட்டுக்கள் கீழே
1. அச்சு ஊடகட்டில் ஒஎஉ படைப்பாளன் ஒரு ​புதினத்தைப் படைக்க முதலில் ஒரு கருத்தியல் தேவை.  இங்கே ஒரு காலத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவில் நடந்ததாகக் கருதப்படும் மூடப் பழக்கத்தைக் கதைக் கருவாகத் தேர்ந்தெடுத்துள்ளார்
2. நாட்டார் வாய்மொழி வரலாறு நளினமான சொல்லரங்காலங்கரல் இல்லாமல் வெள்ளந்தியான சில நேரம் விரசமான சொல்லாடல் நிறைந்ததாக இருக்கும்
3. அச்சு ஊடகம் என்பது ஒரு மனிதனை அவன் குழுவிலிருந்து தனிமைப் படுத்தி படைப்பாளன் பயன்படுத்தும் வார்த்தைகளைக் கொண்டு ஒரு கற்பனை உலகில் சஞ்சரிக்க வாய்ப்பளிக்கிறது
4. தன் கற்பனையில் உருவான கருத்தை உள்ளது உள்ளபடி படிப்பவர்கள் உணர்ந்து அந்த கதா பாத்திரங்களோடு ஒன்றி ஒரு அனுபவத்தை அடையச் செய்வதே படைப்பாளனின் நோக்கம்
5. புதினம் என்பது மனதில் நிலைத்து நிற்கும் தன்மை உடையதல்ல.  படித்து முடித்தவுடன் அது நினைவில் இருந்து அகன்றுவிடும் தம்னை உடையது
6. ஒரு பயனாளர் நூலைப் படிக்கும்போது படைப்பாளனின் கருத்துக்களை எதிர்மறையாகத் தெரிவிக்க அச்சு ஊடகத்தில் வழி இல்லை.  பிடிக்கவில்லை என்றால் படிக்கக் கூடாது
7. அச்சு ஊடகத்தில் எழுத்தாளன் ஒரு படைப்பாளன் என்ற தகுதியைப்பெற அவன் பல சோதனைகளைக் கடக்கவேண்டும்.  இணையம்போல் யார் வேண்டுமானாலும் எழுத்தாளனாக ஆகமுடியாது.  பதிப்பகம் அவர் தரம் மிக்க சிந்தனைகளைத் திறம்பட வெளிப்படுத்துபவரா என்று சோதித்தே அவருடைய படைப்பு பதிப்புக்கு ஏற்றுக்கொள்ளப்படும்
8. விமரிசனம் என்பது ஒரு படைப்பாளனைக் கண்மூடித்தனமாகத் தாக்க ஒரு வாய்ப்பு என்று கருதவியலாது.  படைப்பாளனின் கருத்தியல் எழுத்தாக்கம் தரவுகள் தகவல் தவறில்லாமல் தரத்துடன் பயன்படுத்தியது போன்ற கோணங்களில் எழுதப்படுவதாகும்
ரோமியோபதி டாக்டர் 

--

Oru Arizonan

unread,
Jul 13, 2016, 1:09:04 PM7/13/16
to vallamai, mintamil, pandiya raja
2016-07-13 5:21 GMT-07:00 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
13 ஜூலை, 2016 ’அன்று’ முற்பகல் 1:54 அன்று, Oru Arizonan <oruar...@gmail.com> எழுதியது:




//சீவசித்தரே,

வேந்தருக்கு நான் ஒரு சவால் விட்டேன்.  விலைமாதுபற்றி அவர்கேட்ட  ஒரு இடக்கான கேள்விக்கு,  நான் வள்ளுவரின் வாயமொழியிலிருந்து சான்று கொடுத்தால், "வள்ளுவம் என் சமயம்" என்று அடிக்கையொப்பமிடுவதை விட்டுவிடத்தயாரா என்று --  இதுவரை பதிலில்லை. 
ஒரு அரிசோனன் //

//, விலைமகளை வள்ளுவர் கடிவதாக சுட்டினால் வள்ளுவம் என் சமயம் என ஒப்பம் இடுவதை விட்டுவிடுகிறேன், கொடுக்கவில்லை என்றால்?
--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்//

கீழே காணலாம்:  முப்பாலின்[திருக்குறளின்] 92வது  அதிகாரம், "வரைவில் மகளிர்", குறள்கள் 3, 4, 10.  இவ்வதிகாரம் முழுக்கமுழுக்க விலைமகளிர் தொடர்பைக் கடிந்து எழுதப்பட்டதே. இதில் செந்நாப்போதார் விலைமகளிரையும், அவருடன் தொடர்புக்கொள்பவரையும் கடிந்துரைக்கிறார்.

பாண்டியராஜாவின் தமிழ்த் திருப்பணி.
பத்து உள்ளன. மூன்றை மட்டும் கொடுத்துள்ளேன்.

பொருள்பெண்டிர் பொய்மை முயக்கம் இருட்டு அறையில்
ஏதில் பிணம் தழீஇ அற்று
இரு மன பெண்டிரும் கள்ளும் கவறும்
திரு நீக்கப்பட்டார் தொடர்பு	

ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கு என்ப
மாய மகளிர் முயக்கு
 வள்ளுவர் பொருள் பெண்டிரை [விலைமகளிரை], "இருட்டறையில் இருக்கும் பிணம்""திருநீக்கப்பட்டார்", "பேய்" என்கிறார்.  இதைவிட கடுமையாக எப்படிக் கட்டியவேண்டும்  என்று எதிர்நோக்குகிறீர்கள்?  

ஒன்றல்ல, மூன்று சான்றுகள் கொடுத்துள்ளேன் -- வள்ளுவரின் வாயிலாக.

வள்ளுவத்தின் 92ம் அதிகாரமான "வரைவில் மகளிரை" மறந்துவிட்டீர்களா?  

இனி "வள்ளுவம் என் சமயம்" என்று அடிக்கையொப்பமிடுவதை விட்டுவிடுங்கள்.  இப்பதிவிற்கு தங்கள் வழக்கப்படி இடங்களான ஒற்றைச் சொற்றொடர் எழுதாமல் பதிலிருங்கள்.

நீங்கள் ஒரு வழுக்கும் விலாங்குமீனாகப் பதில் எழுதுவீர்கள் என்பதால், திருக்குறள்பயின்றோரும், சீவச்சித்தர்போன்றோரும் இக்குறள்களைப்பற்றிக்   கருத்துத் தெரிவிக்கட்டும் -- ஒரு அரிசோனன்  தன் நிலைப்பாட்டை[வள்ளுவர் விலைமகளிரைக் கடிந்தாரா இல்லையா என்று] நிலைநாட்டினானா என்று.
ஒரு அரிசோனன் 
பி.கு.:  தனிப்பட்டமுறையில் தாங்கள்  ஒரு தங்கமான மனிதர் என்று பலர்வாயிலாகக் கேள்விப்பட்டுள்ளேன். இது கருத்துவேறுபாட்டுக்காக நான் செய்யும் பதிவேயன்றி, தங்கள்பால் இழுக்காறு கற்பிக்கும் நோக்கமல்ல என்பதை  அறிந்துகொள்வீராக.

செல்வன்

unread,
Jul 13, 2016, 2:02:40 PM7/13/16
to vallamai, mintamil

2016-07-13 12:09 GMT-05:00 Oru Arizonan <oruar...@gmail.com>:
பி.கு.:  தனிப்பட்டமுறையில் தாங்கள்  ஒரு தங்கமான மனிதர் என்று பலர்வாயிலாகக் கேள்விப்பட்டுள்ளேன். இது கருத்துவேறுபாட்டுக்காக நான் செய்யும் பதிவேயன்றி, தங்கள்பால் இழுக்காறு கற்பிக்கும் நோக்கமல்ல என்பதை  அறிந்துகொள்வீராக.

வேந்தர் தெய்வம் போல

தெய்வம் பக்தரை அடிக்கடி சோதிக்கும். நல்லதும் செய்யும். கோபம் வந்தால் தெய்வத்தை திட்டி, பின் சமாதானமும் ஆகிடுவோம் அல்லவா?  ஆனால் கடைச்வரை நாத்திகன் ஆகமாட்டொம். அந்த பாலிசிதான் வேந்தரிடமும் செல்லுபடி ஆகும் :-)

--

Oru Arizonan

unread,
Jul 13, 2016, 2:30:50 PM7/13/16
to mintamil, vallamai
2016-07-13 11:02 GMT-07:00 செல்வன் <hol...@gmail.com>:
//வேந்தர் தெய்வம் போல

தெய்வம் பக்தரை அடிக்கடி சோதிக்கும். நல்லதும் செய்யும். கோபம் வந்தால் தெய்வத்தை திட்டி, பின் சமாதானமும் ஆகிடுவோம் அல்லவா?  ஆனால் கடைச்வரை நாத்திகன் ஆகமாட்டொம். அந்த பாலிசிதான் வேந்தரிடமும் செல்லுபடி ஆகும் :-)//

தெய்வமேயானாலும், "முக்கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே!" என்ற நக்கீரன்பிறந்த பாண்டிநாட்டைச் சேர்ந்தவர் யாம்! 

வேந்தரிடமிருந்து நழுவலில்லாத, இடக்கரில்லாத பதிலை எதிர்நோக்குகிறோம்!

2016-07-13 11:28 GMT-07:00 Oru Arizonan <oruar...@gmail.com>:


2016-07-13 11:02 GMT-07:00 செல்வன் <hol...@gmail.com>:
//வேந்தர் தெய்வம் போல

தெய்வம் பக்தரை அடிக்கடி சோதிக்கும். நல்லதும் செய்யும். கோபம் வந்தால் தெய்வத்தை திட்டி, பின் சமாதானமும் ஆகிடுவோம் அல்லவா?  ஆனால் கடைச்வரை நாத்திகன் ஆகமாட்டொம். அந்த பாலிசிதான் வேந்தரிடமும் செல்லுபடி ஆகும் :-)//

தெய்வமேயானாலும், "முக்கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே!" என்ற நக்கீரன்பிறந்த பாண்டிநாட்டைச் சேர்ந்தவர் யாம்! 

வேந்தரிடமிருந்து நழுவலில்லாத, இடக்கரில்லாத பதிலை எதிர்நோக்குகிறோம்!
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 




--
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

It is loading more messages.
0 new messages