திருவள்ளுவர் திருநாள்

51 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Jan 15, 2015, 7:43:20 AM1/15/15
to vall...@googlegroups.com, மின்தமிழ், Oru Arizonan

இன்று திருவள்ளுவர் திருநாள்! தமிழர்களுக்குப் புத்தாண்டு திருநாள்!
திரு. அரிசோனன் திருவள்ளுவர் சயினர் என்னும் பழைய மரபு
இருக்கிறதா? - என்று கேட்டிருந்தார்கள். 19-ஆம் நூற்றாண்டின்
கடைசியில் சமணர்கள் தங்கள் ஆலயங்களிலும், வீடுகளிலும்
வள்ளுவரை வணங்கும் வாழ்த்து வெண்பா அச்சானது. அதை பல
காலம் முன்பு இணையத்தில் கொடுத்தொருந்தேன். மீண்டும்
பாடி வள்ளுவரை வாழ்த்துவோம். கேரளோஆவில் மாவலி
தன் நாட்டைப் பார்க்க ஓணத்தன்று வருகிறான் என்னும் விழாக்கள் போல்,
வள்ளுவர் தன் திருநாளில் தமிழ்நாட்டுக்கு வருகிறார் என்று
கொண்டாடலாம்.

-------------

வள்ளுவர் குறளைச் சமணர்கள் தங்கள் மறையாகக்
காலமெல்லாம் கொண்டாடியுள்ளனர். சமணர்கள்
வழிபடும் திருவள்ளுவர் உருவம் பொற்காசாக
மதறாஸ் அரசாங்கம் 200 ஆண்டுகளுக்கு முன்னர்
வெளியிட்டுள்ளது. சமயதிவாகரமுனிவர் இந்தப்
பழைய சமணர்கள் வழிபடும் குறளைப் பற்றிச்
சொல்லியுள்ளார்கள்.

அதேபோல, சமணர்கள் திருக்குறளை வழிபடும்
பழைய வெண்பா ஒன்றுண்டு. அதனை அபிதான
சிந்தாமணியிலிருந்து (பக். 850) தருகிறேன்.
பாண்டித்துரைத்தேவர் ஆதரவுடன் தமிழ்ப் பேராசிரியர்
ஆ. சிங்காரவேலனார் தொகுத்த கலைக்களஞ்சியம்
தரும் வெண்பா. பானுகுமாரின் பதிவுகளில் இருக்கலாம்.

சைநர் வாழ்த்து:

”முப்பாலு முண்டோம் முலைப்பா லினிநுகரோ
மெப்பாலுக் கப்பாலு மாயினோ மெப்பொருளு
முள்ளபடி யுணர்ந்தோ மோதிக் குறைதீர்ந்தோம்
வள்ளுவனார் வைப்பெமக்கு வாய்த்து”

சமயதிவாகர முனிவர் “எம்மோத்து” என்று சைநர்கள்
கொண்டாடும் மரபுடன் சைநர்களின் இப் பழைய வாழ்த்தும்
(ஓதிக் குறை தீர்ந்தோம்) சேர்ந்தது.

நா. கணேசன்

On Thursday, January 8, 2015 at 9:31:53 AM UTC-8, ருத்ரா இ.பரமசிவன் wrote:
தை முதல் நாள் தமிழ்ப்புத்தாண்டு
களிப்புடன் நாமும் கொண்டாடுவோம்.
கிமு கிபி என்கிறது உலகம்.
திமு திபி என்கிறது தமிழ் உலகம்.
திருவள்ளுவருக்கு முன்னும் பின்னும்
கரைகள் தோன்ற தமிழ்
வரலாற்று ஆறு ஓடுவது அறிவோம்.
வள்ளுவ ஆண்டு கொள்ளுவோம் நாமே.
துள்ளுதலோடு கொண்டாடி மகிழ்வோம்
இனிக்கும் செந்தமிழ்ப் புத்தாண்டு!
நண்பர்கள் எல்லோருக்கும் சொல்கின்றேன்
நட்புடன்
அன்புடன்
பண்புடன்
மற்றும் 
உள்ளத்துடன் அதன்
வெள்ளத்துடன்
தமிழில் நிமிர்ந்த‌
தெம்புடனே 
சொல்லி சொல்லி மகிழ்கின்றேன்
இன் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள். 

அன்புடன் ருத்ரா



வல்லமையாளர் விருதுக்கு வாழ்த்துக்கள், திரு. ருத்ரா!

திருவள்ளுவர் ஆண்டு தொடக்கம் பொங்கல் நாளில் - ஒரு வரலாறு.

இதனைக் கலைஞர் மு. கருணாநிதி குறிப்பிட்டு டிவியில் பேசினார்.
முரசொலியில் கட்டுரை வரைந்தார்.

தமிழர்க்குப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
நா. கணேசன் 

N. Ganesan

unread,
Jan 15, 2015, 8:24:06 AM1/15/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, minT...@googlegroups.com, oruar...@gmail.com, Santhavasantham, housto...@googlegroups.com, tiruva...@googlegroups.com
Today is Pongal. For several decades now, this day is also celebrated as TiruvaLLuvar TirunaaL,
remembering the great Tamil poet. Like Kollam era for Malayalis, Tamils have started
a Tiruvalluvar era on their own, and this is followed by Tamil Nadu Govt. officially in
all their events, G.O's, calenders, etc.,

Tamil scholars, especially at Institutions of Research, and in Academic books and journals,
have explained why Tiruvalluvar was a Jaina author who wrote for the common man.

Let us remember Tiruvalluvar, and his Jaina religion today. Francis W. Ellis, father
of the theory of Dravidian language family, issued gold coins in honor of Tiruvalluvar
in Madras Mint. In these Madras Govt. coins, Valluvar is shown as a Jaina monk.
Iravatham Mahadevan published these important coins on Jaina's traditional
view of Valluvar as one of their own. Samaya Divakara Muni calls TirukkuRaL
as "em Ottu" (our Veda). The gold coins of Valluvar are stored in Indian Museum, Calcutta.

Here is a veNpA, sung in Jaina homes for generations, worshiping Tiruvalluvar.
A. Singaravelu Mudaliyar, with patronage from Pandithurai Thevar, Madurai,
published Abithaana ChinthaamaNi, the first encyclopedia of Tamil literature.
This Jainar Vaazhttu veNpaa is found in Abithana Cintamani.

சைநர் வாழ்த்து:

”முப்பாலு முண்டோம் முலைப்பா லினிநுகரோ
மெப்பாலுக் கப்பாலு மாயினோ மெப்பொருளு
முள்ளபடி யுணர்ந்தோ மோதிக் குறைதீர்ந்தோம்
வள்ளுவனார் வைப்பெமக்கு வாய்த்து”

சமயதிவாகர முனிவர் “எம்மோத்து” என்று சைநர்கள்
கொண்டாடும் மரபுடன் சைநர்களின் இப் பழைய வாழ்த்தும்
(ஓதிக் குறை தீர்ந்தோம்) சேர்ந்தது.

N. Ganesan

Reply all
Reply to author
Forward
0 new messages