S. Blackburn's paper on Tiruvalluvar legends of 19th century

1,124 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Feb 18, 2013, 6:54:03 AM2/18/13
to வல்லமை
திரு. செல்வன் வள்ளுவர் சமணர் என்பதற்கான academic consensus
இல்லையென்று எழுதி ஸ்டூவர்ட் ப்லாக்பர்ன் கட்டுரை தலைப்பு
தந்தார். ஸ்டூவர்ட்டை பல்லாண்டுகள் அறிந்தவன் என்ற முறையில்
எனக்கு வியப்பாக இருந்தது. ஸ்டுவர்ட்டுக்கு பழந்தமிழ் இலக்கியத்தில்
தேர்ச்சி உண்டா? அக்காலச் சமயநிலை, இலக்கண இலக்கியங்களுக்கு
சமணர் சைவர் கொடை பற்றி அறிவாரா? எத்தனை ஆண்டு ஆய்ந்தார்
அவர்? என்ற வினாக்கள் மனதில் இழையோடின.

Title:Corruption and redemption: The legend of Valluvar and Tamil
literary
history. Source:Modern Asian Studies [0026-749X] Blackburn, Stuart yr:
2000
vol:34 iss:2 pg:449 -482

வள்ளுவர் சமணஞ் சார்ந்தவர் என்பது academic world-ல் பழைய முடிபு.
குமரிக் கண்டம் இல்லை என்பது போல. புதிய முடிபாகச் சொல்லணும்
என்றால், தமிழ் இலக்கணத்தை சில பத்தாண்டுகள் ஆராய்ந்தவர்கள்
கூறும் கூற்று பற்றிச் சொன்ன மடல். அகத்தியர் என்று யாரும் தமிழ்
இலக்கணம் செய்தாரில்லை. இடைக்காலத்தில் அகத்தியர் என்னும் விண்மீன்/
முனிவர்
தமிழ் இலக்கணம் படைத்தார் என்ற புராணக்கதை உருவாக்கினர்.
இது சமணர் கொடையை மறைக்க எழுந்த முயற்சி ஆகும் என்பதைக்
குறிப்பிட்டிருந்தேன்.

நாட்டார் கதைகளில் விருப்பமும், ஆய்வும் செய்து தமிழ் அச்சியல்
பற்றி நன்கு தெரிந்தவர் ஸ்டூவர்ட். தோல்பாவைக் கூத்து பார்த்து
எழுதியவர்.
19-ஆம் நூற்றாண்டு வள்ளுவர் ஜாதி கதைகள், மிஷனரிகள் வள்ளுவரை
எப்படி புரிந்துகொண்டனர், பயன்படுத்தினர் என்ற கட்டுரையை
‘நவீன ஆசியா ஆய்வுகள்’ (Modern Asian Studies) இதழில் எழுதினார்.
இது எப்படி மகாவித்துவான் மே. வீ. வேணுகோபாலப்பிள்ளையவர்கள்
போன்றோர் ஆய்வு முடிபுகளை மாற்றும் வல்லமை உடையது?

ஸ்டூவர்ட்டே எழுதியுள்ளார் - வள்ளுவர் சமயம் பற்றின
அக்கடமிக் கன்சென்ஸஸ் பற்றி:
“This secondary literature in Tamil and English is vast, but for the
present purposes it is sufficient to know that the Kural has a
decidedly this-wordly orientation, with as much to say about rain as
about religion; in fact, the book has very little to say about gods,
rituals or temples. Commentators from Ellis (Sethu Pillai 1955:11) to
Caldwell (1875:131) to Zvelebil (1975:157) have pointed out that the
epithets used for 'god' display a distinct Jaina influence, as indeed
does the entire work with its emphasis on asceticism in the world. On
the other hand, the candid sensuality of the last section of
'pleasure' (which nineteenth-century missionaries, like Drew and Pope,
publicly avowed was not proper to translate) shows other influences,
including the Sangam love poems.”

சமண முனிவர் திருத்தக்கதேவர், இளங்கோ அடிகள் போல வள்ளுவர் அகப்பாடல்கள்
பாடியுள்ளார். அதுவும், ஐந்திணைக்கும் (5 X 5) பாடியுள்ளார்.

19-ஆம் நூற்றாண்டில் வள்ளுவர் பற்றிய கதைகளை ஆராய்கிறேன்
என்று கட்டுரையைத் தொடங்குகிறார் ஸ்டூவர்ட்.
If we now recognize that literary history is more than a history of
literature, it is perhaps less widely accepted that the writing of
liter- ary history is an important subject for literary
historiography. Yet literary histories are a rich source for
understanding local concep- tions of both history and literature.'
More accessible than archae- ology, more tangible than ethnology,
literary histories are culturally constructed narratives in which the
past is reimagined in the light of contemporary concerns. Certainly in
nineteenth-century India, the focus of this essay, literary history
was seized upon as evidence to be advanced in the major debates of the
time; cultural identities, language ideologies, civilization
hierarchies and nationalism were all asserted and challenged through
literary histories in colonial India. Asserted and challenged by
Europeans, as well as Indians.

The study of the history of Indian literatures, however, is still
struggling to move beyond the descriptive and chronological, the
dating of texts and attributing of authorship, the tracing of influ-
ences and movements, the rise of bhakti, the rise of the novel and so
on. While these philological wheels slowly turn, recent histori-
*ography of the colonial period has turned its attention to texts of
the period, and thus opened up new lines of inquiry into nineteen-
century Indian literature. In this study of colonial culture, literat-
ure-in its old meaning of 'that which is written', including diaries,
political tracts, journalism and history-has been brought centre
stage, where a study of literary histories can now contribute to both
literary and historical scholarship.

மீண்டும் இக்கட்டுரையை வாசிக்க வாய்ப்பளித்த செல்வன் அவர்களுக்கு நன்றி.
இக் கட்டுரையால் வள்ளுவர் சமயம் சமணம் என்னும் அக்கடமிக் கன்சென்சஸ்
மாறவில்லை.

நா. கணேசன்

ஸ்ரீ ராமதாஸ் மகாலிங்கம்

unread,
Feb 18, 2013, 8:43:05 AM2/18/13
to vall...@googlegroups.com
2013/2/18 N. Ganesan <naa.g...@gmail.com>


மீண்டும் இக்கட்டுரையை வாசிக்க வாய்ப்பளித்த செல்வன் அவர்களுக்கு நன்றி.
இக் கட்டுரையால் வள்ளுவர் சமயம் சமணம் என்னும் அக்கடமிக் கன்சென்சஸ்
மாறவில்லை.


மறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்

எனும் குறளுக்கு கொடுக்கப்பட்டுள்ள காம்பரமைஸ் சாரி... கன்சென்சஸ் விளக்கம் என்ன?

--

ஆமாச்சு

Hari Krishnan

unread,
Feb 18, 2013, 9:04:59 AM2/18/13
to vallamai

2013/2/18 ஸ்ரீ ராமதாஸ் மகாலிங்கம் <ama...@amachu.net>

மறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்

எனும் குறளுக்கு கொடுக்கப்பட்டுள்ள காம்பரமைஸ் சாரி... கன்சென்சஸ் விளக்கம் என்ன?

மறப்பினும் ஓத்துக் கொளலாகும்

தற்காலப் பதிப்புகளில் தவறாக ஒத்துக் கொளலாகும் என்று அச்சிடுகிறார்கள்.  அது ஓத்துக்கொளலாகும்.  ஓதிக்கொள்ள முடியும் என்ற பொருள்.

ஆமாச்சுவுக்கான விளக்கம் இல்லை.  பொதுவில்--அது ஒரு தட்டுப் பிழையாகவும் இருக்கலாம்--இடம்பெறும் வடிவம் சரியாக இருக்கவேண்டும் என்ற அக்கறையால் சொல்லப்படுவது.  பொறுத்தருள்க.
--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

ஸ்ரீ ராமதாஸ் மகாலிங்கம்

unread,
Feb 18, 2013, 11:13:31 AM2/18/13
to vall...@googlegroups.com
2013/2/18 Hari Krishnan <hari.har...@gmail.com>



தற்காலப் பதிப்புகளில் தவறாக ஒத்துக் கொளலாகும் என்று அச்சிடுகிறார்கள்.  அது ஓத்துக்கொளலாகும்.  ஓதிக்கொள்ள முடியும் என்ற பொருள்.

ஆமாம். ஓத்துதான்.

செல்வன்

unread,
Feb 18, 2013, 2:54:05 PM2/18/13
to vall...@googlegroups.com

2013/2/18 N. Ganesan <naa.g...@gmail.com>

மீண்டும் இக்கட்டுரையை வாசிக்க வாய்ப்பளித்த செல்வன் அவர்களுக்கு நன்றி.
இக் கட்டுரையால் வள்ளுவர் சமயம் சமணம் என்னும் அக்கடமிக் கன்சென்சஸ்
மாறவில்லை.


நிஜமாவா?

பிளாக்பர்ன் கட்டுரை பக்கம் எண் 463

Some writers in the nineteenth-century chose to sidestep the ques- tion of Valluvar's birth altogether and declare, on the strength of the text's teachings, that he must have been a Jain.35

Footnote: Compare a similar tactic in south Indian Jain Ramayanas which sidestep con- troversy in the Rama story by making the god-hero a realized soul who did not, indeed could not, kill Ravana or Vali.


19ம் நூற்றாண்டில் சில ஆசிரியர்கள் வள்ளுவரின் பிறப்பை ஒதுக்கிவிட்டு அவர் சமணர் என கூறினார்கள். இது தென்னிந்திய ஜைன ராமாயணங்களில் ராமரின் தெய்வீகத்தை ஒதுக்கி அவரை தன்னை உணர்ந்த ஒரு ஆத்மாவாக, ராவணனை, வாலியை கொல்ல முடியாதவராக ஆக்கியதற்கு ஒத்தது.

அதாவது ராமர் ஜைனர் என சொல்லுவதுக்கு  ஒப்பானதுதான் வள்ளுவர் ஜைனர் என கூறும் உத்தியும் என்கிறார் பிளாக்பர்ன்.


But the mainstream colonial debate centred on four versions of Valluvar's birth: 1) that he was half-Brahmin (father) and half-Paraiyar (mother); 2) that he was neither Brahmin nor Paraiyar, but a royal official; 3) that he was a Paraiyar; and 4) that he was fully Brahmin.37

வள்ளுவர் குறித்த நான்குவிதமான விவாதங்கள் எழுந்தன 1)தந்தை பிராமனர், தாய் பறையர் 2) அரசு அதிகாரி 3) பறையர் மட்டும் 4) பிராமணர் மட்டும்


Page: 407

It is a minority opinion, but it has had its admirers, among them the respected scholar Ramachandra Dikshitar, who argued in 1936 that Valluvar was completely Brahmins."'

வள்ளுவர் பிராமணர் எனும் கருத்து சிறுபான்மை கருத்து. ஆனால் அதற்கும் மதிப்புகுரிய அறிஞர்களிடம் செல்வாக்கு இருந்தது. உதாரணம் ராமச்சந்திர தீக்ஷிதர்


Page: 464 and 465

A robust rebuttal is found in the first history of Tamil literat- ure, published in 1904 by the ardent Dravidianist Purnalingam Pillai.

For Pillai, then, Valluvar was a Hindu, not a Jain. Pillai's rationalism and his critique of Brahminical dominance meant he would not accept a Brahmin birth for this famous Tamil poet, but neither was he able to accept that Valluvar was a Paraiyar.


திராவிட இயக்க அறிஞரான புராணலிங்கம் பிள்ளை வள்ளுவர் பிராமணர் அல்ல, தலித்தும் அல்ல, சமணரும் அல்ல, ஜாதி இந்து (BC/OBC/Fc) என்றார்.


ஆக பிளாக்பர்னின் கட்டுரை

வள்ளுவர் பிராமனர் எனும் சிறுபான்மை கருத்துக்கு மதிப்புகுரிய அறிஞர்களிடம் செல்வாக்கு இருந்தது என்கிறது

வள்ளுவர் தலித் அல்லாத இந்து எனும் கருத்தும் அறிஞர்களிடம் உள்ளது (உதா:[பூர்ணலிங்கம் பிள்ளை) என்கிறது

வள்ளுவர் ஜைனர் என கூறும் முயற்சி ராமர் ஜைனர் என கூறுவதற்கு ஒப்பான உத்தி என்கிறது. பிளாக்பர்ன் tactic எனும் சொல்லை பயன்படுத்துகிறார்




Commentators from Ellis (Sethu Pillai 1955:11) to
Caldwell (1875:131) to Zvelebil (1975:157) have pointed out that the
epithets used for 'god' display a distinct Jaina influence, as indeed
does the entire work with its emphasis on asceticism in the world.

ஆக வள்ளுவரின் பிறப்பு,. மதம் குறித்து இத்தனை வேறுபட்ட கருத்து வேறுபாடுகள் அறிஞர்களிடம் இருப்பதாக பிளாக்பர்ன் பதிவு செய்துள்ளார். ஆனால் கணேசர் இதில் கன்சென்சை கன்டுபிடிக்கிறார். கருத்து வேறுபாடுகள் இருப்பதை பதிவு செய்யும் கட்டுரை எப்படி கன்சென்சஸ் இருப்பதாக கூறும்?

--
செல்வன்
www.holyox.blogspot.com

பொறந்த ஊருக்கு புகழை தேடு
வளர்ந்து நாட்டுக்கு பெருமை சேரு
நாலு பேருக்கு நன்மை செய்தால்
கொண்டாடுவார் பண்பாடுவார்



செல்வன்

unread,
Feb 18, 2013, 3:49:49 PM2/18/13
to vall...@googlegroups.com
எட்வர்ட் ராபின்சன் எழுதிய எனும் "Tamil Wisdom: Traditions Concerning Hindu Sages and Selections from Their Writing" நூலில் வள்ளூவரை இந்து புலவர்கள் வரிசையில் வைக்கிறார். வள்ளுவரை தலித் இந்துவாக இதில் ராபின்சன் முன் நிறுத்துகிறார். அதில் எந்த சந்தேகமும் இல்லை என்கிறார். வள்ளுவர் சிவனின் அவதாரமாக கருதபட்டவர் என்கிறார்


Inline image 1
robinson pg 14.jpg

செல்வன்

unread,
Feb 18, 2013, 3:56:47 PM2/18/13
to vall...@googlegroups.com



David Lamond, (2008) "New Age Management Philosophy from Ancient Indian Wisdom", Journal of Management History, Vol. 14 Iss: 2, pp.194 - 196

பேராசிரியர் டேவிட் லெமாண்ட் "வள்ளுவர் இந்து என்பது பொதுநம்பிக்கை. ஆனால் சமணர்கள் அவர் சமணர் என வாதாடுகிறார்கள்" என்கிறார்

Thiruvalluvar is generally considered a Hindu but the Jains say that considering his teaching, he cannot be but a Jain. Buddhists believe he must be a Buddhist, while the Christians consider him to be a Christian, given the similarity of his teachings to the Bible

செல்வன்

unread,
Feb 18, 2013, 4:48:54 PM2/18/13
to vall...@googlegroups.com
2013/2/18 ஸ்ரீ ராமதாஸ் மகாலிங்கம் <ama...@amachu.net>
மறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான்

பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்

எனும் குறளுக்கு கொடுக்கப்பட்டுள்ள காம்பரமைஸ் சாரி... கன்சென்சஸ் விளக்கம் என்ன?

மணக்குடவர் உரையில் இவ்வாறு பொருள் கூறப்பட்டு உள்ளது.

"....பிராமணன் வேதத்தினை ஓதி மறந்தானாயினும் பின்னும் ஓதிக் கொள்ளலாம்: ஒழுக்கங் குறையுமாயின் குலங்கெடும்.

இஃது ஒழுக்கம் கல்வியிலும் வலிதானவாறு கூறிற்று...."

தேமொழி

unread,
Feb 18, 2013, 5:05:52 PM2/18/13
to vall...@googlegroups.com

வள்ளுவரின் அப்பாவும் அம்மாவும் வேறு வேறு குலத்தைச்  சார்ந்தவர்களாக இருந்ததாகச் சொல்லப் படுவது போல வேறு வேறு மதத்தையும் சார்ந்திருந்தவர்களாக இருந்திருக்க வாய்ப்புள்ளது.  யாரோ ஒருவர் இந்து யாரோ ஒருவர் சமணம். 

இருவரது தாக்கமும், கோட்பாடுகளும், பின்னணிகளும் வள்ளுவருக்கு மதங்களைப் பற்றிய ஒரு பொதுக்  கண்ணோட்டத்தையும் காட்டியிருக்கலாம்.  அதனால் அவர் தன்னையும் எந்த மதத்தையும் சார்ந்தவராக கருதாமல் போக வாய்ப்பிருந்திருக்கலாம்.

அதனால் அவர்  கடவுள்களைக் குறிக்காமல் மதங்கள் காட்டும் நல்வழிகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டு பொதுமறையாகக்  குறளைப் படைத்திருக்கலாம்.  அதற்கு காரணம் அவரது வாழ்க்கைப் பின்புலத்தின் தாக்கமாக இருக்கலாம். 

அதற்காகவே எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் மெய்ப்பொருளைக்  காண்க என சொல்லிச் சென்றிருக்கலாம்.  திருக்குறள் காட்டும் மெய்ப்பொருள் நன்னெறி.  அவர் யாராக இருந்தாலும் நாம் தெரிந்து கொள்வதால் என்ன நன்மை என்று புரியவில்லை. விரும்பியிருந்தால் அவரே குறிப்பிட்டிருக்க மாட்டாரா?

ஏன் இரு மதங்களின் தாக்கமும்  அவரிடம் இருந்தது எனக் கொள்ளக் கூடாது.  வாசுகியும் புத்த மதத்தை சார்ந்தவராக இருந்திருந்தால் அவரும் வள்ளுவரின்  சிந்தனையில் பல மாற்றங்களை ஏற்படுதிருக்கக் கூடும். 

.....தேமொழி 

செல்வன்

unread,
Feb 18, 2013, 5:11:13 PM2/18/13
to vall...@googlegroups.com

2013/2/18 தேமொழி <them...@yahoo.com>

ஏன் இரு மதங்களின் தாக்கமும்  அவரிடம் இருந்தது எனக் கொள்ளக் கூடாது.  வாசுகியும் புத்த மதத்தை சார்ந்தவராக இருந்திருந்தால் அவரும் வள்ளுவரின்  சிந்தனையில் பல மாற்றங்களை ஏற்படுதிருக்கக் கூடும். 


எனக்கு தெரிந்து இப்படி மற்ற மதங்களின் சிந்தனைகளை உள்வாங்கி, மற்ற மதங்களின் கோட்பாடுகளிலும் உண்மை இருக்கலாம் என நம்பும் மதம் ஒன்றே ஒன்றுதான். "எல்லா ஆறுகளும் கடலையே சேர்கின்றன எல்லா அறிதல்களும் பிரம்மத்தை சேர்கின்றன" என அம்மதத்தின் புனிதநூல் உரைக்கிறது.வள்ளுவர் கட்டாயம் அந்த மதத்தை சேர்ந்தவராக தான் இருப்பார் என நான் நம்புகிறேன்

தேமொழி

unread,
Feb 18, 2013, 6:01:17 PM2/18/13
to vall...@googlegroups.com

எனக்கு தெரிந்து இப்படி மற்ற மதங்களின் சிந்தனைகளை உள்வாங்கி, மற்ற மதங்களின் கோட்பாடுகளிலும் உண்மை இருக்கலாம் என நம்பும் மதம் ஒன்றே ஒன்றுதான். "எல்லா ஆறுகளும் கடலையே சேர்கின்றன எல்லா அறிதல்களும் பிரம்மத்தை சேர்கின்றன" என அம்மதத்தின் புனிதநூல் உரைக்கிறது.வள்ளுவர் கட்டாயம் அந்த மதத்தை சேர்ந்தவராக தான் இருப்பார் என நான் நம்புகிறேன்

--
செல்வன்



அவரே எந்த மதத்தையும்  சேர்ந்தவராக இருக்க விரும்பாமல், அதைக் குறிப்பிடாமல் சென்ற பொழுது அவரை ஏதாவது ஒரு மத அடையாளம் கொண்டிருந்தராக நாம் காட்ட நினைப்பது சரியல்லவே. இது அவரைக் கட்டாயப் படுத்துவது போல இருக்கிறது.

பேசாமல் அவர் சொன்னதையெல்லாம் ஒரு மதத்தை தோற்றுவித்தவர் சொன்னக் கருத்துக்களாக  ஏன் எடுத்துக்  கொள்ளக் கூடாது? (இப்பொழுது மட்டும் அவர் தன்னை அப்படிக் குறிப்பிட்டுச்  சொல்லவில்லை என்று சொல்லக் கூடாது, ஆமாம் சொல்லிட்டேன், அவர் சொல்லாவிட்டால் என்ன  நாம் சொல்வோம் சரியா?)

அவர் தோற்றுவித்த மதம் வள்ளுவம், இந்துவான புத்தர் தோற்றுவித்தது புத்தமதம், யூதரான கிறிஸ்து தோற்றுவித்தது கிறிஸ்துவ மதம்...தோற்றுவித்தவர்கள் யாரும்  மதத்தை தோற்றுவித்ததாகச் சொல்லிச் சென்றதில்லை அல்லவா?  அதனால் வள்ளுவரின் அறிவுரையை பின்பற்றுபவர்கள் யாவரும் வள்ளுவம் என் சமயம் என்று சொல்லிகொள்ளலாமே.  (வேந்தே...என்ன ஒரு முன்னோக்குப் பார்வை உள்ளவர் இவர்)

..... தேமொழி 

Nagarajan Vadivel

unread,
Feb 18, 2013, 8:56:03 PM2/18/13
to vallamai
This is the current status of Thiruvalluvar

http://www.statemaster.com/encyclopedia/Tiruvalluvar

Thiruvalluvar (Tamil: திருவள்ளுவர்) is a celebrated Tamil poet who wrote the Thirukkural, a well known ethical work in Tamil literature. He is claimed by both Hindus and Jains as their own.[1] Nevertheless, some consider him as a Jain showing internal texual evidence from Thirukural.[2]

The statue of Tiruvalluar at Kanyakumari

While some scholars place Thiruvalluvar's period, based on the text of Thirukural anywhere from the second century BC to the eighth century AD. [3] However, a comparison of the Thirukkural with other writings of the sangam period indicates that Thiruvalluvar might have lived about 30 BCE.


There are little or no clues available to trace Thiruvalluvar's background. However, on the basis of a legend, Thiruvalluvar was a textile weaver by the name Valluvan, and his wife's name was Vasuki. The name Valluvan might have been a common name representing his caste/occupation rather than his proper name. Even today, the people who earn a living by textile weaving trace their ancestry to the caste of Thiruvalluvar. However, the question of whether the author of Thirukkural (Valluvan) is named after his community or vice versa remains unanswered.


The name Thiruvalluvar (ThiruValluvar) consists of Thiru (a respectful title in Tamil) and Valluvar (a polite name for Valluvan, according to Tamil tradition).


There are a few legends abound about the birthplace of Thiruvalluvar. According to one he was born and lived in Mylapore, an ancient part of present day Chennai city and travelled to Madurai to submit his work, Thirukural for the approval of the Pandian king and his college of poets.[4] Another legend associates him to Madurai, the ancient capital of the Pandya rulers who vigorously promoted Tamil literature. Madurai might have been his place of birth because it was under Pandia rulers that many Tamil poets flourished and one of them being Thiruvalluvar. There are, also, traditional stories citing the Tamil Sangam of Madurai (the assembly/conference of eminent scholars and researchers conducted on a regular basis) as the authority through which Thirukkural was introduced to the world. There are also recent claim by Kanyakumari Historical and Cultural Research Centre (KHCRC) that Valluvar was a king who ruled Valluvanadu in the hilly tracts of Kanyakumari district of Tamil Nadu. [5]


Both Thiruvalluvar's faith and identity are disputed. His disputed identity includes as a low-caste Hindu, Jain, Buddhist, crypto-Christian, high-caste Hindu, Brahmin and half-Brahmin. [6] In any case, Tamils consider Tiruvalluvar to be a pragmatist and thought provoker and his work is often referred to as poyyamozhi பொய்யா மொழி (words of wisdom).


Nagarajan


2013/2/19 தேமொழி <them...@yahoo.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 

செல்வன்

unread,
Feb 18, 2013, 10:47:16 PM2/18/13
to vall...@googlegroups.com
2013/2/18 தேமொழி <them...@yahoo.com>
அவரே எந்த மதத்தையும்  சேர்ந்தவராக இருக்க விரும்பாமல், அதைக் குறிப்பிடாமல் சென்ற பொழுது அவரை ஏதாவது ஒரு மத அடையாளம் கொண்டிருந்தராக நாம் காட்ட நினைப்பது சரியல்லவே. இது அவரைக் கட்டாயப் படுத்துவது போல இருக்கிறது.


அவர் மத அடையாளத்தை குறிக்க விரும்பவில்லை, எந்த மதத்தையும் சேர விரும்பவில்லை என நமக்கு எப்படி தெரியும்?

தேமொழி

unread,
Feb 18, 2013, 11:21:13 PM2/18/13
to vall...@googlegroups.com

On Monday, February 18, 2013 7:47:16 PM UTC-8, செல்வன் கோவை wrote:

2013/2/18 தேமொழி <them...@yahoo.com>
அவரே எந்த மதத்தையும்  சேர்ந்தவராக இருக்க விரும்பாமல், அதைக் குறிப்பிடாமல் சென்ற பொழுது அவரை ஏதாவது ஒரு மத அடையாளம் கொண்டிருந்தராக நாம் காட்ட நினைப்பது சரியல்லவே. இது அவரைக் கட்டாயப் படுத்துவது போல இருக்கிறது.


அவர் மத அடையாளத்தை குறிக்க விரும்பவில்லை, எந்த மதத்தையும் சேர விரும்பவில்லை என நமக்கு எப்படி தெரியும்?

--
செல்வன்
 

விரும்பியிருந்தால் அவர் கடவுள் வாழ்த்துப்  பாடலில் தெளிவாகச்  சொல்லியிருந்திருப்பார்.  அங்கேதான் தான் சார்ந்திருந்த மதத்தைக் காட்ட அவருக்கு சரியான வாய்ப்பு. அதைத் தவிர்த்து விட்டிருக்கிறார்.  ஏன் செய்தார்? தனது பேரைக்  கூடச்  சொல்லவில்லை. அதனால் கண்டுபிடித்து விடுவார்கள் என நினைத்திருப்பாரோ  என்னவோ.

ஆதிபகவன், பொறி வாயில் ஐந்து அவித்தான் என்பது போல யாரும் எப்படி வேண்டுமானாலும் தங்கள் தங்கள் கடவுள் என்று சண்டை போட்டுக்கொள்ளும் படி மேம்போக்காக விட்டிருக்க  மாட்டார். அருகன், சிவன்(/திருமால்/முருகன்/ மேலும் பலர்)  இவர்களில் யார் என்று தெளிவாகச்  சொல்ல விரும்பவில்லை.  இறை நம்பிக்கை இருந்தால் வேண்டிக் கொள்ளுங்கள் என்கிறார். அவர் குறிப்பிடும் இறைவனின் குணத்தை வைத்து மதங்கள் இப்பொழுது உரிமை கொண்டாட அடித்துக் கொள்கின்றன. போதாக் குறைக்கு கருணாநிதியும் குறள் விளக்கம்  சொல்ல முற்பட்டு  நாத்திகர்களுக்கும் ஏற்றவாறு விளக்கம் சொல்ல முடிகிறது.

 

எவ்வளவு எச்சரிக்கையாக அவர் சொன்னதை மட்டும் மக்கள் கவனிக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறார். 

[இப்படி குழப்பத்தில் விட்டால்தான் அவர் சொன்ன குறளை  வரிக்கு வரி கூர்ந்து படிப்பார்கள் என்று திட்டம் போட்டாரோ, என்ன ஒரு புத்திசாலி அவர், அவருக்குத் தெரியாததா?]

 

சுருக்கமாக அவர் நினைத்திருந்தால் சொல்லி இருக்கலாம், ஆனால் அவர் தவிர்த்ததில் இருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியதுதான். அவர் திட்டமிட்டு பொதுப்படையாக எழுதியதை நாம் ஏன் புரிந்து கொள்ளக் கூடாது? அவர் நினைத்தபடி அனைத்து மதத்தினருக்கும் பிடித்ததினால்தானே இந்த உரிமைப் போராட்டம்.  அந்த அளவில் அது பொதுமறையாக வெற்றி பெற்றுவிட்டது.

 

..... தேமொழி

செல்வன்

unread,
Feb 19, 2013, 12:21:26 AM2/19/13
to vall...@googlegroups.com
2013/2/18 தேமொழி <them...@yahoo.com>
விரும்பியிருந்தால் அவர் கடவுள் வாழ்த்துப்  பாடலில் தெளிவாகச்  சொல்லியிருந்திருப்பார்.  அங்கேதான் தான் சார்ந்திருந்த மதத்தைக் காட்ட அவருக்கு சரியான வாய்ப்பு. அதைத் தவிர்த்து விட்டிருக்கிறார்.  ஏன் செய்தார்? தனது பேரைக்  கூடச்  சொல்லவில்லை. அதனால் கண்டுபிடித்து விடுவார்கள் என நினைத்திருப்பாரோ  என்னவோ. ஆதிபகவன், பொறி வாயில் ஐந்து அவித்தான் என்பது போல யாரும் எப்படி வேண்டுமானாலும் தங்கள் தங்கள் கடவுள் என்று சண்டை போட்டுக்கொள்ளும் படி மேம்போக்காக விட்டிருக்க  மாட்டார். அருகன், சிவன்(/திருமால்/முருகன்/ மேலும் பலர்)  இவர்களில் யார் என்று தெளிவாகச்  சொல்ல விரும்பவில்லை.  இறை நம்பிக்கை இருந்தால் வேண்டிக் கொள்ளுங்கள் என்கிறார்.


இறை நம்பிக்கை இருந்தால் வேண்டிகொள்ளுங்கள் என்கிறாரா? எந்த குறளில் அப்படி சொல்கிறார்?

நீங்க சொல்லும் லாஜிக்குக்கை நானும் ஒத்துகொள்கிறேன். ஆக குறளில் நீங்க சொல்லும் திருமால், இந்திரன், இலக்குமி எல்லாம் இல்லாமல் இருந்தால் வள்ளுவர் மதம் இல்லாதவர். அவர்கள் எல்லாம் குறளில் இருந்தால் வள்ளுவர் இந்து என முடிவு செய்துகொள்ளலாமா?

--
செல்வன்

Anna Kannan

unread,
Feb 19, 2013, 12:33:20 AM2/19/13
to vall...@googlegroups.com
வள்ளுவர் சமணர் என்ற பொதுக் கருத்து எட்டப்பட்டதாகக் கூறுவது, ஏற்கத்தக்கதில்லை. பல்வேறு மதத்தினரும் அவருக்கு உரிமை கோரியுள்ளனர். 

பல்கலைக்கழக ஆய்வு என்பதால், அதற்கு அதிகபட்ச மதிப்பு உண்டு என்பது, கல்வியியல் புலத்தில் மட்டுமே. மேலும் இந்தப் பல்கலைக்கழக ஆய்வுகளும் பிற நூல்கள், ஏடுகள், கல்வெட்டுகள், பட்டயங்கள், ஓலைச்சுவடிகள், வாய்மொழித் தரவுகள்... எனப் பலவற்றையும் ஆதாரமாகக் கொண்டே மேற்கொள்ளப்படுகின்றன. இவற்றுள் பலவும் பல்கலைக்கழகத்திற்கு வெளியில் உள்ள தரவுகள். மேலும் பல்கலைக்கழகத் தரவுகளும் கூட, வெளித் தரவுகளின் அடிப்படையிலேயே உருவாகின்றன. 

ஆய்வு எங்கே நிகழ்கிறது என்பதை விட, எந்த அணுகுமுறையில், எந்தக் கண்ணோட்டத்தில், என்னென்ன தரவுகளின் அடிப்படையில் நிகழ்கிறது என்பது முக்கியமானது. அந்த வகையில், பல்கலைக்கழகத்திற்கு வெளியில் இதழ்களிலோ, இணையத்திலோ எழுதும் கட்டுரைகளுக்கும் ஆய்வியல் கோணத்தில் முக்கியத்துவம் உண்டு. 

செல்வன்

unread,
Feb 19, 2013, 12:52:31 AM2/19/13
to vall...@googlegroups.com
2013/2/18 தேமொழி <them...@yahoo.com>
அவர் குறிப்பிடும் இறைவனின் குணத்தை வைத்து மதங்கள் இப்பொழுது உரிமை கொண்டாட அடித்துக் கொள்கின்றன. போதாக் குறைக்கு கருணாநிதியும் குறள் விளக்கம்  சொல்ல முற்பட்டு  நாத்திகர்களுக்கும் ஏற்றவாறு விளக்கம் சொல்ல முடிகிறது.



அடுத்து கம்பராமாயணத்துக்கு உரை எழுதி கம்பரும் நாத்திகர் என்பார்கள். சமணர்கள் ஏற்கனவே ஜைன ராமாயணம் எழுதி வைத்துள்ளார்கள். அடுத்து கம்பரும் மத சார்பு அற்றவர் என விட்டுகொடுத்து ராமன் எல்லா மதத்துக்கும் பொதுவானவர் என ஒத்துகொள்ள வேண்டுமா?

இந்த மாதிரி அப்பீஸ்மெண்ட் மதசார்பின்மையால் யாருக்கும் எந்த பலனும் கிடையாது. குறளை மேம்போகாக படித்தாலே வள்ளுவர் சமணர் இல்லை, இந்து என தெளிவாக தெரியும். தெளிவாக தெரியும் விஷயத்தை யாரை திருப்திபடுத்த இல்லை என சொல்லவேன்டும்? 
--
செல்வன்

தேமொழி

unread,
Feb 19, 2013, 1:40:04 AM2/19/13
to vall...@googlegroups.com

On Monday, February 18, 2013 9:52:31 PM UTC-8, செல்வன் கோவை wrote:

 
இந்த மாதிரி அப்பீஸ்மெண்ட் மதசார்பின்மையால் யாருக்கும் எந்த பலனும் கிடையாது. குறளை மேம்போகாக படித்தாலே வள்ளுவர் சமணர் இல்லை, இந்து என தெளிவாக தெரியும். தெளிவாக தெரியும் விஷயத்தை யாரை திருப்திபடுத்த இல்லை என சொல்லவேன்டும்? 
--
செல்வன்
 
 

அடுத்தவர் சொல்வதைப் பற்றி நாம் கவலைப் படத் தேவையில்லை, வள்ளுவர் ஏன் குறிப்பிடவில்லை அதுதான் முக்கியம் .  

 

குறள் ஏன்   பார்க்கும் பொழுது கண்ணாடி பார்ப்பவருக்கு அவர் உருவத்தைக் காட்டுவது போல அந்தந்த மதத்தினருக்கும் அவர்கள் படிக்கும் பொழுது அவர்கள் மதத்தின் சாரம் அதில் இருபதாகத் தோற்றம் கொடுத்து  உரிமை கொண்டாட வைக்கிறது.

 

அவ்வாறு இருந்தால் அனைத்து மதங்களும் குறிப்பது ஒன்றுதான் என்பதை அவர் உணர்ந்து எழுதினாரா? அல்லது அனைத்து மதத்தின் சாரமும் ஒன்றுதானா? அது ஏன் நாத்திகர்கள் என்று சொல்லப் படுபவர்களையும் ஈர்க்கிறது.  இதுதான் பெரிய வேடிக்கை.

 

வள்ளுவரே  தனது மதம் என்று எதையும் கருதி ஆணித்தரமாக  பெயர் சொல்லிக் குறிப்பிடவில்லை.  முதலில் அதற்கு என்ன காரணம்?

 பிறை சூடிய கடவுள், மழுவாயுதத்தைக் கொண்ட கடவுள் போன்ற இந்து மதக் கடவுள் குறிப்புகளைக்  காட்ட முடியுமா? எண்குணத்தோன் என்ற கடவுளின் பண்பிணை இந்து மதம் தவிர பிற மதத்தினரும் தங்களுடைய கடவுளின் பண்பு எனக் கருத வாய்ப் பில்லையா?

 

குறிப்பிட்டு சொல்லாததால் அவரது கொள்கை மதங்கள் பொது என்பதாக நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறோம்.

 

..... தேமொழி 

 

 

 

செல்வன்

unread,
Feb 19, 2013, 1:52:33 AM2/19/13
to vall...@googlegroups.com
2013/2/19 தேமொழி <them...@yahoo.com>
வள்ளுவரே  தனது மதம் என்று எதையும் கருதி ஆணித்தரமாக  பெயர் சொல்லிக் குறிப்பிடவில்லை.  முதலில் அதற்கு என்ன காரணம்?


அப்படி சொல்லும் வழக்கம் எங்கேயும் இல்லை. நான் ஒரு கிறிஸ்டியன் என ஏசு பைபிளில் எங்குமே சொல்லவில்லை. அதனால் அவர் மதசார்பு அற்றவர் என வைத்துகொள்ளலாமா?

பிறை சூடிய கடவுள், மழுவாயுதத்தைக் கொண்ட கடவுள் போன்ற இந்து மதக் கடவுள் குறிப்புகளைக்  காட்ட முடியுமா? 

காட்டினால் வள்ளுவர் இந்து என ஒத்துகொள்வீர்களா?

--
செல்வன்

N. Ganesan

unread,
Feb 19, 2013, 2:35:10 AM2/19/13
to வல்லமை

எல்லாம் ஆங்கில நூல்களைப் பார்த்து எழுதியது. இவர் தமிழ் அறியாதவர்.

N. Ganesan

unread,
Feb 19, 2013, 2:38:12 AM2/19/13
to வல்லமை

On Feb 18, 7:47 pm, செல்வன் <holy...@gmail.com> wrote:

> அவர் மத அடையாளத்தை குறிக்க விரும்பவில்லை, எந்த மதத்தையும் சேர விரும்பவில்லை
> என நமக்கு எப்படி தெரியும்?
>

இதற்குத் தான் பனுவலியல் (டெக்ஷுவல் ஸ்டடீஸ்) என்னும் துறை இருக்கிறது.
அவரது நூலை ஆராய்ந்து ச. வையாபுரிப்பிள்ளை, மு. ராகவையங்கார், மே.வீ.
வேணுகோபாலப்பிள்ளை,
க. சுவெலபில், ... எழுதியது என்ன என்று பார்த்தால் தமிழ்ச் சமணர்கள்
சொல்லும் கருத்தைப்
புரியமுடியும்.

நா. கணேசன்


N. Ganesan

unread,
Feb 19, 2013, 2:39:37 AM2/19/13
to வல்லமை

On Feb 18, 8:21 pm, தேமொழி <themo...@yahoo.com> wrote:

>
> விரும்பியிருந்தால் அவர் கடவுள் வாழ்த்துப்  பாடலில் தெளிவாகச்
> சொல்லியிருந்திருப்பார்.  அங்கேதான் தான் சார்ந்திருந்த மதத்தைக் காட்ட
> அவருக்கு சரியான வாய்ப்பு. அதைத் தவிர்த்து விட்டிருக்கிறார்.  ஏன்
> செய்தார்? தனது பேரைக்  கூடச்  சொல்லவில்லை. அதனால் கண்டுபிடித்து விடுவார்கள்
> என நினைத்திருப்பாரோ  என்னவோ.
>

Philology clearly shows KaDavuL vAzttu to be Jaina.

ஸ்ரீ ராமதாஸ் மகாலிங்கம்

unread,
Feb 19, 2013, 2:44:07 AM2/19/13
to vall...@googlegroups.com
2013/2/19 தேமொழி <them...@yahoo.com>
 

வள்ளுவரே  தனது மதம் என்று எதையும் கருதி ஆணித்தரமாக  பெயர் சொல்லிக் குறிப்பிடவில்லை.  முதலில் அதற்கு என்ன காரணம்?


திருக்குறள் என்ன வள்ளுவரின் சுயசரிதையா? காரணம் போதுமா?

--

ஆமாச்சு




N. Ganesan

unread,
Feb 19, 2013, 2:45:01 AM2/19/13
to வல்லமை

On Feb 18, 12:49 pm, செல்வன் <holy...@gmail.com> wrote:
> எட்வர்ட் ராபின்சன் எழுதிய எனும் "*Tamil Wisdom: Traditions Concerning Hindu
> Sages and Selections from Their Writing"* நூலில் வள்ளூவரை இந்து புலவர்கள்


> வரிசையில் வைக்கிறார். வள்ளுவரை தலித் இந்துவாக இதில் ராபின்சன் முன்
> நிறுத்துகிறார். அதில் எந்த சந்தேகமும் இல்லை என்கிறார். வள்ளுவர் சிவனின்
> அவதாரமாக கருதபட்டவர் என்கிறார்
>

1873-ல் இருந்த ஜாதிக் கதைகள்.

திருவள்ளுவர் என்ற சொல்லின் கல்வெட்டுச் சான்றுகளை அறியாதவர் ராபின்சன்
(19-ஆம் நூற்றாண்டு).
நவீன ஆய்வுமுறிகளுக்கு குறள் உட்படுவதன் முன்னம் எழுதிய குறிப்பு இது.

நா. கணேசன்


> [image: Inline image 1]
>
> --
> செல்வன்www.holyox.blogspot.com
>
> பொறந்த ஊருக்கு புகழை தேடு
> வளர்ந்து நாட்டுக்கு பெருமை சேரு
> நாலு பேருக்கு நன்மை செய்தால்
> கொண்டாடுவார் பண்பாடுவார்
>

>  robinson pg 14.jpg
> 146KViewDownload

ஸ்ரீ ராமதாஸ் மகாலிங்கம்

unread,
Feb 19, 2013, 2:48:11 AM2/19/13
to vall...@googlegroups.com
2013/2/19 தேமொழி <them...@yahoo.com>
அது ஏன் நாத்திகர்கள் என்று சொல்லப் படுபவர்களையும் ஈர்க்கிறது.  இதுதான் பெரிய வேடிக்கை.


ஈர்த்ததா? யாரெல்லாம் அந்த நாத்திகர்கள்? பட்டியலிடுங்கள்?

N. Ganesan

unread,
Feb 19, 2013, 2:48:37 AM2/19/13
to வல்லமை

On Feb 18, 8:21 pm, தேமொழி <themo...@yahoo.com> wrote:

> விரும்பியிருந்தால் அவர் கடவுள் வாழ்த்துப்  பாடலில் தெளிவாகச்
> சொல்லியிருந்திருப்பார்.

ஓர் உதாரணம்:

வள்ளுவர் வாழ்த்தும் அறவாழி அந்தணன்:
http://banukumar_r.blogspot.com/2008/02/blog-post_16.html

உங்கள் கருத்தறிய அவா.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Feb 19, 2013, 3:27:14 AM2/19/13
to வல்லமை
On Feb 18, 11:54 am, செல்வன் <holy...@gmail.com> wrote:
> 2013/2/18 N. Ganesan <naa.gane...@gmail.com>

>
> > மீண்டும் இக்கட்டுரையை வாசிக்க வாய்ப்பளித்த செல்வன் அவர்களுக்கு நன்றி.
> > இக் கட்டுரையால் வள்ளுவர் சமயம் சமணம் என்னும் அக்கடமிக் கன்சென்சஸ்
> > மாறவில்லை.
>
> நிஜமாவா?

ஆம் ஐயா.

>
> பிளாக்பர்ன் கட்டுரை பக்கம் எண் 463
>
> Some writers in the nineteenth-century chose to sidestep the ques- tion of
> Valluvar's birth altogether and declare, on the strength of the text's
> teachings, that he must have been a Jain.35
>
> Footnote: Compare a similar tactic in south Indian Jain Ramayanas which
> sidestep con- troversy in the Rama story by making the god-hero a realized
> soul who did not, indeed could not, kill Ravana or Vali.
>
> 19ம் நூற்றாண்டில் சில ஆசிரியர்கள் வள்ளுவரின் பிறப்பை ஒதுக்கிவிட்டு அவர்
> சமணர் என கூறினார்கள். இது தென்னிந்திய ஜைன ராமாயணங்களில் ராமரின் தெய்வீகத்தை
> ஒதுக்கி அவரை தன்னை உணர்ந்த ஒரு ஆத்மாவாக, ராவணனை, வாலியை கொல்ல முடியாதவராக
> ஆக்கியதற்கு ஒத்தது.
>
> அதாவது ராமர் ஜைனர் என சொல்லுவதுக்கு  ஒப்பானதுதான் வள்ளுவர் ஜைனர் என கூறும்
> உத்தியும் என்கிறார் பிளாக்பர்ன்.
>

இது என்ன கதையா இருக்கு. ராமாயண புராணக் கதைகளுக்கும்
19-ஆம் நூற்றாண்டு வள்ளுவர் ஜாதி புராணக் கதைகளை வைத்தா
தமிழறிஞர் (ஸ்டூவர்ட் அல்லர்) வல்ளுவர் சமணர் என முடிபு கண்டுள்ளர்கள்?

ஸ்டூவர்ட்டின் பழந்தமிழ் அறிவுக்கு தமிழில் புலமை சான்ற நீங்கள்
பார்த்திருப்பீர்கள். பட உரை என்று திருவள்ளுவமாலை உரையைச்
சொல்கிறார் ஸ்டூவர்ட். பட உரை என்றால் தமிழில் என்ன? நீங்கள்
படித்ததுண்டா? திருவள்ளுவமாலை 13-ஆம் நூற்றாண்டு நூல்,
அதன் பின்புலத்தையே ஸ்டூவர்ட் புரிந்ததாய் தெரியலை.

ஸ்டூவர்ட்டும் 19-ஆம் நூற்றாண்டு ஜாதி புராணங்களைத் தான்
ஆய்கிறேன் என்கிறார். எனவே அவரை விட்டுவிடலாம்.
அவருக்கு கல்வெட்டு, நிகண்டுகள், பழந்தமிழ், ... தெரியாது.

> திராவிட இயக்க அறிஞரான புராணலிங்கம் பிள்ளை வள்ளுவர் பிராமணர் அல்ல, தலித்தும்
> அல்ல, சமணரும் அல்ல, ஜாதி இந்து (BC/OBC/Fc) என்றார்.
>

நீங்கள் புதுப் புராணம் செய்கிறீர்கள். புராணலிங்கம் பிள்ளை என்று
ஒருவரும் இல்லை. தமிழறிஞர் முன்னீர்ப்பள்ளம் பூர்ணலிங்கம்பிள்ளையவர்கள்
நூல்கள் யாவும் படித்ததுண்டு. பேரன் அமெரிக்காவில்தான் இருக்கிறார்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Feb 19, 2013, 3:48:25 AM2/19/13
to வல்லமை

வள்ளுவர் ஆதி பகவன் என்று ஆதிநாதரை (தீர்த்தங்கரர்) வணங்கினார்.
ஆதிபகவன் என்ற சொல்லை இரண்டாகப் பிரித்து ஆதி பறையர் அம்மா,
பகவன் பிராமணர் அப்பா என்று மட்டமான கதைகள் மிகப்
பீற்காலத்தில் பிறந்துவிட்டன. இதை மிஷனரிகளும் வளர்த்தனர்.
சங்க காலத்தில் தமிழ்நாட்டு ஊர்களில் இரண்டு சேரிகள் இருந்திருக்கின்றன,
சேரிக்கொன்றாக, வள்ளுவர் பெற்றோர் என்று புரணம் கட்டிவிட்டது
கொடுமை.

திருவள்ளுவன் என்னும் சொல் ஸ்ரீவல்லபன் என்னும் சொல்லின் தமிழாக்கம்
என்று நிகண்டுகளும், கல்வெட்டுகளினாலும் அறிகிறோம்.

”One European described the hybridity of a Valluvan this way: 'even to
a practised eye is it difficult to spot the Paraiyar in him' (Lazarus
1908:22).” ஸ்டுவர்ட் ப்லாக்பர்ன், 2000.

Lazarus was correct, as Tamil inscriptional and NighaNTu evidences
testify.

நா. கணேசன்

ஸ்ரீ ராமதாஸ் மகாலிங்கம்

unread,
Feb 19, 2013, 7:06:13 AM2/19/13
to vall...@googlegroups.com
2013/2/19 N. Ganesan <naa.g...@gmail.com>


வள்ளுவர் ஆதி பகவன் என்று ஆதிநாதரை (தீர்த்தங்கரர்) வணங்கினார்.
ஆதிபகவன் என்ற சொல்லை இரண்டாகப் பிரித்து ஆதி பறையர் அம்மா,
பகவன் பிராமணர் அப்பா என்று மட்டமான கதைகள் மிகப்
பீற்காலத்தில் பிறந்துவிட்டன.


மறைமலையடிகள் அப்படிச் சொன்னார். கபிலரகவல் என்ற நூலைக் கூட மேற்கோள் காட்டியிருக்கிறார். இந்தக் கபிலர் வள்ளுவரோட தம்பியாம். :-)

மறைமலையடிகள் தான் வள்ளுவருக்கு பெர்த் சர்டிபிகேட்டும் கொடுத்து.

மற்றொரு வழக்கில் வைகாசி அனுஷம் வள்ளுசர் பிறந்த நாள்.  சமண வழக்குபடி வள்ளுவர் எப்போ பிறந்தார்?

--

ஆமாச்சு

ஸ்ரீ ராமதாஸ் மகாலிங்கம்

unread,
Feb 19, 2013, 7:15:31 AM2/19/13
to vall...@googlegroups.com
2013/2/19 N. Ganesan <naa.g...@gmail.com>


ஆதிபகவன் என்ற சொல்லை இரண்டாகப் பிரித்து ஆதி பறையர் அம்மா,
பகவன் பிராமணர் அப்பா என்று மட்டமான கதைகள் மிகப்
பீற்காலத்தில் பிறந்துவிட்டன.

அருந்தவமாமுனி யாம்பகவற்கு
(இருந்தவா றிணை முலைஏந்திழை மடவார்) கருவூர்ப்பெரும்பதிக் கட்பெரும்புலச்சி
ஆதிவயிற்றினில் அன்றவதரித்த
கான்முளையாகிய கபிலலும் யானே
100
என்னுடன் பிறந்தவர் எத்தினை பேரெனில்
ஆண்பான்மூவர் பெண்பான் நால்வர்
யாம்வளர்திறஞ் சிறிது இயம்புவல் கேண்மின்
ஊற்றுக்காடெனும் ஊர்தனில் தங்கியே
வண்ணாரகத்தில் உப்பை வளர்ந்தனள்
105
காவிரிப்பூம்பட்டினத்தில் கள்விலைஞர் சேரியில்
சான்றா ரகந்தனில் உறுவை வளர்ந்தனள்
நரப்புக் கருவியோர் நண்ணிடுஞ் சேரியில்
பாணரகத்தில் ஔவை வளர்ந்தனனள்
குறவர் கோமான் கோய்தினைப் புனஞ்சூழ்
110
வண்மலைச் சாரலில் வள்ளி வளர்ந்தனள்
தொண்டை மண்டலத்தில் வண்டமிழ் மயிலைப்
பறையரிடத்தில் வள்ளுவர்வளர்ந்தனர்
அரும்பார் சோலைச் சுரும்பார் வஞ்சி
115
அதிகமா னில்லிடை அதிகமான் வளர்ந்தனன்
பாரூர்நீர்நாட்டு ஆரூர்தன்னில்
அந்தணர்வளர்க்க யானும்வளர்ந்தேன்

http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0261.html

வேந்தன் அரசு

unread,
Feb 19, 2013, 8:01:30 AM2/19/13
to vall...@googlegroups.com
18 பிப்ரவரி, 2013 11:21 PM-ல், தேமொழி <them...@yahoo.com> எழுதியது:

>
> விரும்பியிருந்தால் அவர் கடவுள் வாழ்த்துப் பாடலில் தெளிவாகச்
> சொல்லியிருந்திருப்பார். அங்கேதான் தான் சார்ந்திருந்த மதத்தைக் காட்ட
> அவருக்கு சரியான வாய்ப்பு. அதைத் தவிர்த்து விட்டிருக்கிறார். ஏன் செய்தார்?
> தனது பேரைக் கூடச் சொல்லவில்லை. அதனால் கண்டுபிடித்து விடுவார்கள் என
> நினைத்திருப்பாரோ என்னவோ.
>

பாயிண்ட்

மற்ற கீழ்கணக்கு நூல்கள் கடவுளை தெளிவாக சொல்லி விட்டன. அதுவும்
இந்துமதம் சார்ந்தவர் என்றால் சொல்லாமல் விடுவாரா?

பொதுவாக நூல் மரபுகளில் கடவுள் வாழ்த்து இருக்கும். அதனால் ஐயனும்.

வேந்தன் அரசு

வேந்தன் அரசு

unread,
Feb 19, 2013, 8:03:43 AM2/19/13
to vall...@googlegroups.com


19 பிப்ரவரி, 2013 12:21 AM அன்று, செல்வன் <hol...@gmail.com> எழுதியது:


2013/2/18 தேமொழி <them...@yahoo.com>
விரும்பியிருந்தால் அவர் கடவுள் வாழ்த்துப்  பாடலில் தெளிவாகச்  சொல்லியிருந்திருப்பார்.  அங்கேதான் தான் சார்ந்திருந்த மதத்தைக் காட்ட அவருக்கு சரியான வாய்ப்பு. அதைத் தவிர்த்து விட்டிருக்கிறார்.  ஏன் செய்தார்? தனது பேரைக்  கூடச்  சொல்லவில்லை. அதனால் கண்டுபிடித்து விடுவார்கள் என நினைத்திருப்பாரோ  என்னவோ. ஆதிபகவன், பொறி வாயில் ஐந்து அவித்தான் என்பது போல யாரும் எப்படி வேண்டுமானாலும் தங்கள் தங்கள் கடவுள் என்று சண்டை போட்டுக்கொள்ளும் படி மேம்போக்காக விட்டிருக்க  மாட்டார். அருகன், சிவன்(/திருமால்/முருகன்/ மேலும் பலர்)  இவர்களில் யார் என்று தெளிவாகச்  சொல்ல விரும்பவில்லை.  இறை நம்பிக்கை இருந்தால் வேண்டிக் கொள்ளுங்கள் என்கிறார்.


இறை நம்பிக்கை இருந்தால் வேண்டிகொள்ளுங்கள் என்கிறாரா? எந்த குறளில் அப்படி சொல்கிறார்?

நீங்க சொல்லும் லாஜிக்குக்கை நானும் ஒத்துகொள்கிறேன். ஆக குறளில் நீங்க சொல்லும் திருமால், இந்திரன், இலக்குமி எல்லாம் இல்லாமல் இருந்தால் வள்ளுவர் மதம் இல்லாதவர். அவர்கள் எல்லாம் குறளில் இருந்தால் வள்ளுவர் இந்து என முடிவு செய்துகொள்ளலாமா?


மக்களுக்கு உதாரணம் சொல்லுறார். அவர் நாத்திகம் எதுவும் பேசலையே.
 
கடவுள் வாழ்த்தில் சொல்லாமல் பிற இடத்தில் சொல்லி என்ன பயன்?


--
வேந்தன் அரசு

DEV RAJ

unread,
Feb 19, 2013, 8:04:29 AM2/19/13
to vall...@googlegroups.com
On Tuesday, 19 February 2013 09:51:13 UTC+5:30, தேமொழி wrote:
>>> விரும்பியிருந்தால் அவர் கடவுள் வாழ்த்துப்  பாடலில் தெளிவாகச்  சொல்லியிருந்திருப்பார்.  அங்கேதான் தான் சார்ந்திருந்த
மதத்தைக் காட்ட அவருக்கு சரியான வாய்ப்பு. அதைத் தவிர்த்து விட்டிருக்கிறார்.  <<<



தேமொழி அவர்களே,

வள்ளுவத்துக்கு மதச்சார்பின்மை எனும் ஒளிவட்டத்தை
வழங்கியே ஆக வேண்டும் நோக்கமிருப்போர் தம்
வழியே பேசித் திருப்திப் பட்டுக்கொண்டிருப்பதில்
குறுக்கிடவில்லை.

ஆயினும் சில உண்மைகளைப் பகிர்ந்துகொள்வதில்
தவறில்லை என நினைக்கிறேன்.

வியாச சூத்திரங்களில் சூலம், வேல், சக்ராயுதம் போன்ற தனித்த அடையாளங்களைச்
சுட்டாமல் மறை சொல்லும் வழியில் பரம்பொருளின் தன்மைகளை மட்டும் விவரித்து
விளக்கும் முறை உள்ளது. ஒரே கருத்தை எதிர்மறையாகவும், உடன்பாடாகவும்
[அந்வய -வ்யதிரேக] சொல்லி நிறுவும்  வழக்கத்தையும் வடநூலார் மிகுதியாகக்
கையாண்டுள்ளனர். பிரம்ம சூத்திரத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பைப் பார்த்தால்
சொல்வது ஓரளவு புரியும். வள்ளுவத்தின் கடவுள் வாழ்த்துப் பகுதி அம்முறையில்
அமைந்துள்ளது.

வள்ளுவர் சங்கதச் சொற்கள் பலவற்றுக்கும்
இடமளித்துள்ளார்.

"சினமெனும் சேர்ந்தாரைக் கொல்லி இனமெனும்
 ஏமப் புணையைச் சுடும்”

[சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி - சினம் என்னும் நெருப்பு;
இனம் என்னும் ஏமப் புணையைச் சுடும் - தனக்கு இடமானவரையே
யன்றி அவர்க்கு இனமாகிய ஏமப்புணையையும் சுடும்.]

நெருப்புக்கு ‘சேர்ந்தாரைக் கொல்லி’ எனும் பயன்பாடு
ஆஶ்ரயாஶ: [ஆஶ்ரய + அஶ:] எனும் சங்கதப் பயன்பாட்டை
ஒட்டி அமைவதே -

AshrayAsha :
आश्रयाश
(H3) आश्रया* श [p= 158,2] [L=27671]     m. " consuming
everything with which it comes in contact " , fire Hit. Mn. &c


आश्रय
(H1) आश्रय [p= 158,2] [L=27641]     &c » आ- √श्रि.
[L=27647]     seat , resting-place R. Katha1s. Sus3r. &c
[L=27648]     dwelling , asylum , place of refuge , shelter R. S3is3. &c
[L=27649]     depending on , having recourse to


http://www.sanskrit-lexicon.uni-koeln.de/monier/
 

அறம், பொருள், இன்பம் - இம்மூன்றின் தொகுதியை த்ரிவர்கம்
எனும் பகுப்பாக அமைத்துப் பேசுவதைக் காம சாஸ்த்ரம்,
மஹாபாரதம், தர்ம சாஸ்த்ரம் போன்றவற்றில் காணலாம்.
வள்ளுவமும் அதையே பின்பற்றியுள்ளது என்பதை மனக்கரவின்றி
ஏற்பதால் குறை நேராது.


இக்காரணங்களை வைத்தே  வள்ளுவரை ஸ்ரீவல்லபர்
எனும் வடநாட்டவர் என்றும் ஒரு சிலர் ஊகித்துள்ளனர். ஆனால் அவர்
சங்கதப் புலமை பெற்ற ஒரு தமிழராகவே இருக்கவும் வாய்ப்புள்ளது.
வள்ளுவ நாடு, வள்ளுவ இனம் தமிழில் உள்ளவைதாம்.



தேவ்

தேமொழி

unread,
Feb 19, 2013, 6:53:02 PM2/19/13
to vall...@googlegroups.com
ஆதிபகவன் என்பவர் யார்?

தேமொழி

unread,
Feb 19, 2013, 7:05:32 PM2/19/13
to vall...@googlegroups.com


On Tuesday, February 19, 2013 3:53:02 PM UTC-8, தேமொழி wrote:
ஆதிபகவன் என்பவர் யார்?


ஆதிபகவன் என்பவர் யார்? << <<< என்ற இக்கேள்வியைப் பொருட்படுத்த வேண்டாம்...

ஆதிபகவன் அருகனைக் குறிக்கும், ஆதிபகவன் என்பவர் முதலாம் தீர்த்தங்கரராகிய அருகதேவர் என்பதைக் குறிக்கிறதே என்பதற்காக ஆரம்பித்த கேள்வி...
ஆனால் எனக்கு நேரம் கிடைத்து வருவதற்குள் இழையின் கருத்துக்கள் மேலும் விவாதிக்கப் பட்டுவிட்டது தெரிகிறது.

..... தேமொழி 
 

செல்வன்

unread,
Feb 19, 2013, 7:25:31 PM2/19/13
to vall...@googlegroups.com

2013/2/19 N. Ganesan <naa.g...@gmail.com>

எல்லாம் ஆங்கில நூல்களைப் பார்த்து எழுதியது. இவர் தமிழ் அறியாதவர்.


ஆனால் நீங்கள் கேட்கும் முனைவர், பேராசிரியர் என்ற இரு தகுதிகளையும் கொண்டவர்:-)

பிளாக்பர்ன் நிகண்டுகளை படிக்கவில்லை, லமாண்டுக்கு தமிழ் தெரியாது, எட்வர்ட் ராபின்சன் கல்வெட்டுக்களை படிக்கவில்லை,  பூர்ணலிங்கம் பிள்ளை பேரன் அமெரிக்காவில் இருக்கிறார் (!!?).

இப்படி எல்லாம் காரணம் சொல்லி மாற்றுகருத்து உள்ளவர்கள் கட்டுரைகளை தள்ளிகொண்டே போனால் அப்புறம் அகடமிக் கன்சன்சஸ் வராமல் எப்படி இருக்கும்?:-)). 

திருவள்ளுவர் சமணர் என சொல்லும் வெளிநாட்டு பேராசிரியர்கள் எல்லாரும் பழந்தமிழை கரைத்து குடித்து நிகன்டுகளை படித்து ஆராய்ந்து ஒரு செய்யுளின் எழுவாய், பெயரெச்சம், முதலிய இலக்கண விதிகள் அனைத்தையும் பிரித்து ஆராயும் திறமை கொன்டவர்களா? 

ஆக அகடமிக் கன்சன்சஸ் வந்தாச்சு, வெளிநாட்டு பேராசிரியர்கள் எழுதும் ஜர்னல்கள் எல்லாம் வள்ளுவர் சமணம் என தான் சொல்கின்றன என்கிற மாதிரி விவாதத்தை முடிக்காமல் குறளில் இன்னும் ஆய்வுகள் நடக்கவேண்டும் என கூறுவதுதான் தான் சரி:-)

--
செல்வன்
www.holyox.blogspot.com

பொறந்த ஊருக்கு புகழை தேடு
வளர்ந்து நாட்டுக்கு பெருமை சேரு
நாலு பேருக்கு நன்மை செய்தால்
கொண்டாடுவார் பண்பாடுவார்



DEV RAJ

unread,
Feb 19, 2013, 7:39:21 PM2/19/13
to vall...@googlegroups.com
On Wednesday, 20 February 2013 05:35:32 UTC+5:30, தேமொழி wrote:
>>> ஆதிபகவன் அருகனைக் குறிக்கும், ஆதிபகவன் என்பவர் முதலாம் தீர்த்தங்கரராகிய
அருகதேவர் என்பதைக் குறிக்கிறதே......<<<


ஆதிபகவன் - முதற்கடவுள்
இருபெயரொட்டுப் பண்புத்தொகை
ஆதாரம் : பரிமேலழகர் உரை

முக்தி பெற்ற ஜீவன் உலகத்தொடர்பை அடியோடு இழந்து விடுகிறது
என்பது சமண நெறி. தீர்த்தங்கரர் முக்தி பெற்றவர். உலகத் தொடர்பு
நீங்கியவருக்கு உலகுக்கு முதன்மை தாங்கும் தன்மை எவ்வாறு
பொருந்தும் ?



தேவ்

செல்வன்

unread,
Feb 19, 2013, 7:41:16 PM2/19/13
to vall...@googlegroups.com

2013/2/19 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>

மக்களுக்கு உதாரணம் சொல்லுறார். அவர் நாத்திகம் எதுவும் பேசலையே.
 
கடவுள் வாழ்த்தில் சொல்லாமல் பிற இடத்தில் சொல்லி என்ன பயன்?


இந்துக்களிடையே பலதெய்வ கோட்பாடு இருந்ததால் அவர் சிவன், விஷ்ணு பக்தர்கள் இருவரும் படிக்கவேண்டும் என்பதால் தான் கடவுள் வாழ்த்தில் பெயரை சொல்லவில்லை

குறள் நெடுக அவியுணவு உண்ணும் ஆன்றோர் என்கிறார், துறவிகளை போற்றுகிறார். இவருக்கா மதம் இல்லை? திருமால் உலகம் உயர்ந்தது என பெரியாரோ, கருணாநிதியோ சொல்வார்களா?

வேந்தன் அரசு

unread,
Feb 19, 2013, 8:03:14 PM2/19/13
to vall...@googlegroups.com


19 பிப்ரவரி, 2013 7:41 PM அன்று, செல்வன் <hol...@gmail.com> எழுதியது:


2013/2/19 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
மக்களுக்கு உதாரணம் சொல்லுறார். அவர் நாத்திகம் எதுவும் பேசலையே.
 
கடவுள் வாழ்த்தில் சொல்லாமல் பிற இடத்தில் சொல்லி என்ன பயன்?


இந்துக்களிடையே பலதெய்வ கோட்பாடு இருந்ததால் அவர் சிவன், விஷ்ணு பக்தர்கள் இருவரும் படிக்கவேண்டும் என்பதால் தான் கடவுள் வாழ்த்தில் பெயரை சொல்லவில்லை

வள்ளுவர் காலத்தில் சமய பொறை இருந்தது. அதனால் பேர் சொல்லுவதில் தப்பு இல்லை

கடவுள் வாழ்த்து பாடிய மற்றவர்கள் சொல்லி உள்ளார்கள்

நாலடியார்:

வான் இடு வில்லின் வரவு அறியா,வாய்மையால்,
கால் நிலம் தோயாக் கடவுளை,யாம் நிலம்
சென்னி உற வணங்கிச் சேர்தும்- 'எம்உள்ளத்து
முன்னியவை முடிக!' என்று. 
-- 

நான்மணிக்காடிகை

மதி மன்னும் மாயவன் வாள் முகம் ஒக்கும்;
கதிர் சேர்ந்த ஞாயிறு சக்கரம் ஒக்கும்;
முது நீர்ப் பழனத்துத் தாமரைத் தாளின்
எதிர் மலர் மற்று அவன் கண் ஒக்கும்; பூவைப்
புது மலர் ஒக்கும், நிறம்.


உரை
 
படியை மடியகத்து இட்டான்; அடியினான்
முக் கால் கடந்தான் முழு நிலம்; அக் காலத்து
ஆன் நிரை தாங்கிய, குன்று எடுத்தான்;-சோவின்
அருமை அழித்த மகன்.
 


கார் நாற்பது முதல் பாடல்

பொரு கடல் வண்ணன் புனை மார்பில் தார்போல்,
திருவில் விலங்கு ஊன்றி, தீம் பெயல் தாழ,
‘வருதும்’ என மொழிந்தார் வாரார்கொல், வானம்
கரு இருந்து ஆலிக்கும் போழ்து

இன்னா 40


முக் கட் பகவன் அடி தொழாதார்க்கு இன்னா;
பொற்பனை வெள்ளையை உள்ளாது ஒழுகு இன்னா;
சக்கரத்தானை மறப்பு இன்னா; ஆங்கு இன்னா,
சத்தியான் தாள் தொழாதார்க்கு.

இனியவை 40
கண் மூன்று உடையான் தாள் சேர்தல் கடிது இனிதே;
தொல் மாண் துழாய் மாலையானைத் தொழல் இனிதே;
முந்துறப் பேணி முகம் நான்கு உடையானைச்
சென்று அமர்ந்து ஏத்தல் இனிது.

ஐந்திணை எழுபது

எண்ணும் பொருள் இனிதே எல்லாம் முடித்து, எமக்கு
நண்ணும் கலை அனைத்தும் நல்குமால்-கண்ணுதலின்
முண்டத்தான், அண்டத்தான், மூலத்தான், ஆலம் சேர்
கண்டத்தான் ஈன்ற களிறு.


செல்வன்

unread,
Feb 19, 2013, 8:24:27 PM2/19/13
to vall...@googlegroups.com
2013/2/19 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
வள்ளுவர் காலத்தில் சமய பொறை இருந்தது. அதனால் பேர் சொல்லுவதில் தப்பு இல்லை

கடவுள் வாழ்த்து பாடிய மற்றவர்கள் சொல்லி உள்ளார்கள்


கம்பராமாயனத்தை சைவர்கள் ஏற்பது இல்லை. தேவாரத்தை வைணவர்கள் பாடுவது இல்லை.

வள்ளுவர் இருவருக்கும் பொதுவான நீதியை அளிக்க நினைத்து கடவுள் வாழ்த்தை சைவர், வைணவர் இருவருக்கும் பொதுவாக வைத்தார்

Nagarajan Vadivel

unread,
Feb 19, 2013, 8:35:52 PM2/19/13
to vallamai

தமிழர் சமூகவியல் வரலாற்றில் (அப்படி ஒன்று இருந்தால்) 7-ஆம் நூற்றாண்டு அளவில் இந்திய மறைவளங்கள் தமிழகத்திலிருந்து திரைடல் ஓடிய தமிழர்கள் சைவம் வைண்வம் என்று கீழ்த்திசை நாடுகளில் பரப்பியபோது திருக்குறளை ஒரு மறை வளமாக அல்லது நீதி நெறியாகவோ எடுத்துச் செல்லவில்லியே

திருக்குறள் இலக்கியமாகக் கருதப்பட்ட நிலையில் தமிழக மரபில் திருக்குறள் மறையாக நீதி நெறியாக சமயச் சார்புடன் வழக்கில் இருந்ததற்கு ஆவண் ஆதாரம் உண்ண்டா?

இந்தைக் கட்டுரையாளர் ஆய்வு நோக்கம் அதுவே என்றுரைத்தாலும் பிற்கால ஆவணங்களுடன் தன் கட்டுரையின் எல்லையைச் சுருக்கிக் கொண்டார் என்று தோன்றுகிறது

திருக்குறள் தொல்லியல் அடிப்படையில் கல்வெட்டு ஆதாரங்கள் என்ற ஆவணம் கிடைத்துள்ளதா?

நாகராசன்


2013/2/20 செல்வன் <hol...@gmail.com>
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 

N. Ganesan

unread,
Feb 19, 2013, 8:48:44 PM2/19/13
to வல்லமை

On Feb 19, 4:25 pm, செல்வன் <holy...@gmail.com> wrote:

> திருவள்ளுவர் சமணர் என சொல்லும் வெளிநாட்டு பேராசிரியர்கள் எல்லாரும்
> பழந்தமிழை கரைத்து குடித்து நிகன்டுகளை படித்து ஆராய்ந்து ஒரு செய்யுளின்
> எழுவாய், பெயரெச்சம், முதலிய இலக்கண விதிகள் அனைத்தையும் பிரித்து ஆராயும்
> திறமை கொன்டவர்களா?
>

ஆம்.

> ஆக அகடமிக் கன்சன்சஸ் வந்தாச்சு, வெளிநாட்டு பேராசிரியர்கள் எழுதும் ஜர்னல்கள்
> எல்லாம் வள்ளுவர் சமணம் என தான் சொல்கின்றன என்கிற மாதிரி விவாதத்தை
> முடிக்காமல் குறளில் இன்னும் ஆய்வுகள் நடக்கவேண்டும் என கூறுவதுதான் தான்
> சரி:-)
>

ஆய்வுகள் தொடரலாம். சூரியன் நடுவில் ஸோலார் சிஸ்டத்தில் உள்ளதா?
என்று இன்னும் புதிய முறைகளில் பார்த்துக்கொண்டுதான் உள்ளனர்.

N. Ganesan

unread,
Feb 19, 2013, 9:06:53 PM2/19/13
to வல்லமை
On Feb 19, 3:53 pm, தேமொழி <themo...@yahoo.com> wrote:
> ஆதிபகவன் என்பவர் யார்?

ஆதிபகவன் யார்?

- மே.வீ.வேணுகோபாலப் பிள்ளை.

(தமிழ் அன்றும் இன்றும் - என்ற நூலிலிருந்து எடுத்துத் தரப்படுகிறது)

ஒப்புயர்வற்ற அறநூலெனப்படும் திருக்குறளை இயற்றிய திருவள்ளுவரைப்பற்றிய
வரலாறும் செவி வழிச் செய்திகளிற் சிக்குண்டிருப்பதை நாம் காண்கிறோம்.

'அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு'

என்னும் முதற்குறளின் 'ஆதிபகவன்' என்னும் சொற்றொடரைக் கொண்டு கட்டப்பட்ட
கதை, நகைச்சுவைக்கு நல்லதோர் எடுத்துக் காட்டாகும். 'ஆதி' என்பது
இழிகுலப்
பெண்ணின் பெயரென்றும், 'பகவன்' என்பது அந்தணனைக் குறிக்கும் பெயரென்றும்,
'அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம்' ஆதலின் அவர்களையே தெய்வமாகக்
கொண்டு திருவள்ளுவர் இக்கடவுள் வாழ்த்தைக் கூறினார் என்றும்
புனைந்துரைக்கிறது
கதை. 'ஆதி பகவன்' என்பது ஆண்பாற் பெயரென்பதைத் திருவள்ளுவர் நன்கு
அறிவாரல்லரோ?

' உயர்திணை உம்மைத் தொகைபலர் ஈறே',

என்னும் இலக்கணம் அறியாதவரா திருவள்ளுவர்? தம் பெற்றோர் பெயரைக்
குறிப்பது
திருவள்ளுவர் கருத்தாயின், 'ஆதிபகவர்'என்றல்லவா குறள் செய்திருக்க
வேண்டும்?
'ஆதிபகவன்' என்பது பெற்றொரைச் சுட்டுவதாயின், வள்ளுவரின் பெற்றொரை உலகம்
எப்படித் தனக்கு முதலாகக் கொள்ள இயலும்? உலகத்திற்கு நூலளிக்க வந்த
வள்ளுவர்,
தம் தாய் தந்தையரையா முதற்கண் உலகத்திற்கு அறிமுகம் செய்வார்? அதன் மூலம்
தாம் இழிகுல மங்கைக்கு மைந்தர் எனக் கூறிக் கொள்ளவா முந்துவார்?
வள்ளுவரின்
தெள்ளறிவிற்குச் சிறிதும் பொருந்தாத இக்கருத்தை அவர் மீது சுமத்துவதைக்
காட்டிலும், அடர்ப்பழியொன்று இருக்க இயலுமா? இத்தனை இடர்பாடுகளும்,
'ஆதிபகவன்' என்னும் ஆதி தீர்த்தங்கராகிய சமணரைக் குறிப்பதை மறைக்க
வகுத்தவகையால் ஏற்பட்டனவே எனக் கூறலாம்.

--------------------------------------------------------------
--------------------------------------------------------------

செல்வன்

unread,
Feb 19, 2013, 9:40:22 PM2/19/13
to vall...@googlegroups.com

2013/2/19 N. Ganesan <naa.g...@gmail.com>
ஆம்.


:-)

ஆம் அல்லது இல்லை என நாம் நிர்ணயிக்க முடியாது. அதற்கு தான் ஜர்னல்களில் பியர் ரிவ்யூ பிராசஸ் உள்ளது. அதை தாண்டி வரும் கட்டுரைகள் எல்லாம் தரமானவை. பிளாக்பர்ன், லமாண்ட் கட்டுரைகளில் பிழை உள்ளது என நீங்கள் கருதினால் ஜர்னல்களுக்கு மறுப்பு அனுப்பலாம். பிரசுரிப்பார்கள். கட்டுரை ஆசிரியர்கள் கல்வி தகுதியை வலைபதிவுகளில் நாம் விவாதிப்பதில் பொருள் இல்லை


ஆய்வுகள் தொடரலாம். சூரியன் நடுவில் ஸோலார் சிஸ்டத்தில் உள்ளதா?
என்று இன்னும் புதிய முறைகளில் பார்த்துக்கொண்டுதான் உள்ளனர்.

திருக்குறளில் ஆய்வு செய்ய இனி எதுவும் இல்லை என நீங்கள் கருதுவது மகிழ்ச்சியை அளிக்கிறது.

--
செல்வன்
www.holyox.blogspot.com

பொறந்த ஊருக்கு புகழை தேடு
வளர்ந்து நாட்டுக்கு பெருமை சேரு
நாலு பேருக்கு நன்மை செய்தால்
கொண்டாடுவார் பண்பாடுவார்



வேந்தன் அரசு

unread,
Feb 19, 2013, 10:00:13 PM2/19/13
to vall...@googlegroups.com


19 பிப்ரவரி, 2013 8:24 PM அன்று, செல்வன் <hol...@gmail.com> எழுதியது:


2013/2/19 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>

வள்ளுவர் காலத்தில் சமய பொறை இருந்தது. அதனால் பேர் சொல்லுவதில் தப்பு இல்லை

கடவுள் வாழ்த்து பாடிய மற்றவர்கள் சொல்லி உள்ளார்கள்


கம்பராமாயனத்தை சைவர்கள் ஏற்பது இல்லை. தேவாரத்தை வைணவர்கள் பாடுவது இல்லை.

இது பிற்காலத்திய நிகழ்வு. 

வள்ளுவர் காலத்தில் சமய பொறை இருந்தது.  அதனால் பேர் சொல்லுவதில் தப்பு இல்லை. சொல்லாமைக்கு காரணம்தான் இந்த மடல் விசுபரூபம் எடுத்தது

--

செல்வன்

unread,
Feb 19, 2013, 10:16:35 PM2/19/13
to vall...@googlegroups.com
2013/2/19 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
இது பிற்காலத்திய நிகழ்வு. 

வள்ளுவர் காலத்தில் சமய பொறை இருந்தது.  அதனால் பேர் சொல்லுவதில் தப்பு இல்லை. சொல்லாமைக்கு காரணம்தான் இந்த மடல் விசுபரூபம் எடுத்தது



சமயபொறையுடன் இருந்தாலும் அடுத்தவர் கடவுளை வாழ்த்தி யாரும் பாடமாட்டார்கள்.

அமெரிக்காவில் சமைய பொறை இருப்பதால் அமெரிக்கர்கள் குரானையோ, கீதையையோ ஏற்றுகொள்வார்களா?

தேமொழி

unread,
Feb 19, 2013, 10:43:32 PM2/19/13
to vall...@googlegroups.com

///ஈர்த்ததா? யாரெல்லாம் அந்த நாத்திகர்கள்? பட்டியலிடுங்கள்?///

 

உங்களுக்கு அவரைத்  தெரியாது ....ஆனால் அவரை எனக்குத் தெரியும்.

அப்படி சொன்னது அனுபவத்தில், இது போன்ற சான்றுகள் விவாதத்தில் உதவாது. :D 

"மையில நனைச்சு பேபரில் அடிச்சா மறுத்துப் பேச ஆளில்ல" போன்ற சான்று வேண்டும்,  ஆனால் இது அனுபவத்தில் கண்டது.

..... தேமொழி   

Nagarajan Vadivel

unread,
Feb 19, 2013, 10:50:41 PM2/19/13
to vallamai

ஆய்வு அடிப்படையில் எழும் சில கேள்விகள்

வள்ளுவர் சமணத் துறவியா?

வள்ளுவர் இந்துமதம் சார்ந்த முனிவரா?

இன்று கருத்துருவின் வெளிப்பாடாகக் குமரியில் நிற்பவர் எந்த  சமயத்தின் அடிப்படையை வெளிப்படுத்துகிறார்

படைப்பை வைத்துப் படைப்பாளனின் காலம் தோற்றம் போன்றவற்றை நிறுவ முடியுமா?

உள்ளுறை ஆவண இலக்கிய ஆதாரங்களுக்கு வலுச் சேர்க்கும் தொல்லியல் மொழியிய ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுளதா?

திருக்குறள் வேத மறையின் வெளிப்பாடா அல்லது நீதிநெறிய வலியுறுத்தும் தொகுப்பா?

அவர்காலத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்வுக்கூறை வெளிக்காட்டும் காலக்கண்ணாடியா

அல்லது

வாழ்வியல் மாற்றத்தை வலியுறுத்திய தொகுப்பா

அது அக்கால மக்களால் பின்பற்றப்பட்ட அறநெறியா

நாகராசன்


2013/2/20 செல்வன் <hol...@gmail.com>

தேமொழி

unread,
Feb 19, 2013, 10:57:15 PM2/19/13
to vall...@googlegroups.com

அந்தணர் = அறவோர்

இங்கும் வள்ளுவர் ஆளைக் குறிப்பிட்டுக் கூறவில்லை அறவழி நடக்கும்  பண்புகளை உடையவர்களைத்தான் குறிப்பிடுகிறார்.

வைஷ்ணவ ஜெனதோ மேரே தேனே கஹியே ஜே பாடல்தான் நினைவிற்கு வருகிறது.

இறைவன் என்று சொல்லும் பொழுது கடவுள் என்றும் அரசன் என்றும் பொருள் இடத்திற்கு தக்கவாறு எடுத்துக் கொள்வது போல எடுத்துக் கொள்ள வேண்டும்.


..... தேமொழி 

தேமொழி

unread,
Feb 19, 2013, 11:31:00 PM2/19/13
to vall...@googlegroups.com

///குறள் நெடுக அவியுணவு உண்ணும் ஆன்றோர் என்கிறார், துறவிகளை போற்றுகிறார். இவருக்கா மதம் இல்லை?///

 

சமணரான   இளங்கோ ஒரு கடவுள் பாக்கி விடாமல் முருகன், திருமால், கொற்றவை, புத்த மதம், சமண மதம் எல்லோரையும் ஒரு காப்பியத்தில் வைத்து அவர்கள் வழியாக அந்தந்த  மதத்தையும் போற்றி மத சகிப்புத் தன்மை காட்டவில்லையா? 

அவர் குன்றக் குரவையில் முருகனையும், வேட்டுவ வரியில் கொற்றவையையும், ஆய்ச்சியர் குரவையில் திருமாலையும் பாடும் பொழித்து அந்தந்த மதத்தவரும் அந்தப் பாடல் வரிகளை சுட்டிக் காட்டி அவரை தனது மதத்தவர் என உரிமை கொண்ட்டாட முடியுமா?

இதே போன்றுதான் வள்ளுவரும் பல மதக் கருத்துக்களும் விளங்க குறள் சொன்னால் அவரை அந்தந்த மதத்தினர் இழுக்கக் கூடாது. 

துங்கக் கரிமுகத்து தூமணியே, மயிலேறும் வடிவேலனே, என்று குறிப்பிட்டு  சொல்லாதவரை..... பொதுவான பண்புகளைக் குறிக்கும் இறைவனுக்கு யாரும் உரிமை கொண்டாடி வள்ளுவரை மத சார்புள்ளவராக மாற்றக் கூடாது.

 

 
..... தேமொழி

தேமொழி

unread,
Feb 19, 2013, 11:37:26 PM2/19/13
to vall...@googlegroups.com
 
 
 

///திருமால் உலகம் உயர்ந்தது என பெரியாரோ, கருணாநிதியோ சொல்வார்களா?///

இது நகைச்சுவையா? புரியவில்லை.   கடவுள் இல்லை இல்லை இல்லவே இல்லை என்று சொன்ன பெரியாருக்குத் தலைஎழுத்தா இந்த ஆராய்ச்சியில் இறங்க .  உண்மையிலேயே கேள்வியின் நோக்கம் புரியவில்லை.

..... தேமொழி 


On Tuesday, February 19, 2013 4:41:16 PM UTC-8, செல்வன் கோவை wrote:

தேமொழி

unread,
Feb 19, 2013, 11:44:59 PM2/19/13
to vall...@googlegroups.com
///திருக்குறள் இலக்கியமாகக் கருதப்பட்ட நிலையில் தமிழக மரபில் திருக்குறள் மறையாக நீதி நெறியாக சமயச் சார்புடன் வழக்கில் இருந்ததற்கு ஆவண் ஆதாரம் உண்ண்டா?////
 
மிக நல்ல கேள்வி பேராசிரியரே  ...இந்த உண்மை தெரிஞ்சாகனும் :D 
 
 
..... தேமொழி 

தேமொழி

unread,
Feb 20, 2013, 12:02:12 AM2/20/13
to vall...@googlegroups.com
 
/// சமயபொறையுடன் இருந்தாலும் அடுத்தவர் கடவுளை வாழ்த்தி யாரும் பாடமாட்டார்கள்.///
 
 
 

முனைவர் சி.சேதுராமன் கட்டுரையைப் படியுங்கள் செல்வன். http://puthu.thinnai.com/?p=18599

தமிழர்களுக்கு சகிப்புத்தன்மை அதிகம், யாதும் ஊரே யாவரும் கேளிர். 

நீங்கள் நேற்று அடித்துச் சொன்னீர்கள் எல்லா மதத்தையும் சமமாகப் பார்பவர்கள் ஒரு குறிப்பிட்ட மதத்தினர் என்று.  அது மதத்தினர் அல்ல அது தமிழர் குணம்.  இப்பொழுது இந்த குணம் இல்லாமல் போயிருக்கலாம்.  வேந்தர் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருக்கிறார் அக்காலத்தில் பொறை இருந்தது என்று. 


..... தேமொழி 

தேமொழி

unread,
Feb 20, 2013, 12:06:12 AM2/20/13
to vall...@googlegroups.com
///நகைச்சுவைக்கு நல்லதோர் எடுத்துக் காட்டாகும்.///
 
 

ஒப்புக் கொள்கிறேன், நல்ல கற்பனை வளம்...

ஆதிமந்தி என்று இளவரசிக்கும் பெயர் இருந்தது.

ஏனோ அரசகுலம் என்று சொல்ல மனம் வரவில்லையே...


..... தேமொழி  

DEV RAJ

unread,
Feb 20, 2013, 12:31:52 AM2/20/13
to vall...@googlegroups.com
On Wednesday, 20 February 2013 06:33:14 UTC+5:30, வேந்தன் அரசு wrote:
>>> வள்ளுவர் காலத்தில் சமய பொறை இருந்தது. 
அதனால் பேர் சொல்லுவதில் தப்பு இல்லை  <<<


கம்பர் காலத்தில் சமயப்பொறை
நிலவியதா, இல்லையா ?
கம்ப ராமாயணம் பிற்காலத்திய நிகழ்வுதானே ?

உலகம் யாவையும் தாமுள வாக்கலும்
நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகிலா விளையாட்டுடையான் அவன்
தலைவன், அன்னவர்க்கே சரண் நாங்களே

கம்பர் ஏன் பெயர் சொல்லவில்லை ?
சுண்ணக் காளவாய்க்கு அஞ்சினாரா ?



தேவ்

தேமொழி

unread,
Feb 20, 2013, 12:33:41 AM2/20/13
to vall...@googlegroups.com

On Tuesday, February 19, 2013 5:04:29 AM UTC-8, DEV RAJ wrote:


தேமொழி அவர்களே,

வள்ளுவத்துக்கு மதச்சார்பின்மை எனும் ஒளிவட்டத்தை
வழங்கியே ஆக வேண்டும் நோக்கமிருப்போர் தம்
வழியே பேசித் திருப்திப் பட்டுக்கொண்டிருப்பதில்
குறுக்கிடவில்லை.

ஆயினும் சில உண்மைகளைப் பகிர்ந்துகொள்வதில்
தவறில்லை என நினைக்கிறேன்.
 
 

உங்கள் கருத்தையும் தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி ஐயா.

 

..... தேமொழி 

 

Dhivakar

unread,
Feb 20, 2013, 12:50:39 AM2/20/13
to vall...@googlegroups.com
அன்புள்ள தேவ!

நெஞ்சு நிறைகிறது. என்னடா இது..இணையத்தில் இந்த 551 பார் சோப் வருடத்துக்கு ஒருமுறை வந்து திருவள்ளுவர் சமணரா இல்லையா என்று கேட்டுவிட்டு கொஞ்சநாள் பொழுதைப் போக்கி விட்டு ஓடி விடுகிறதே என்று கவலைப் பட்டேன். இப்போதுதான் இந்த இழைகளைப் பார்த்ததும் நிம்மதி அடைந்தேன்.. வெவ்வேறு விதமாக வெவ்வேறு இழைகளில் திருவள்ளுவரையும் இளங்கோவையும் சமய அல்லது சமண வலையில் பிடித்து வைக்க வேண்டாமா?

வள்ளுவர் சமணர், இளங்கோ சமணர் என்று எத்தனை முறை இம்போசிஷன் எழுதவேண்டும் என்று யாரும் சொல்லவில்லையே ஏன்?

2013/2/20 DEV RAJ <rde...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 

செல்வன்

unread,
Feb 20, 2013, 1:13:23 AM2/20/13
to vall...@googlegroups.com

2013/2/19 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

ஆய்வு அடிப்படையில் எழும் சில கேள்விகள்

வள்ளுவர் சமணத் துறவியா?

வள்ளுவர் இந்துமதம் சார்ந்த முனிவரா?

இன்று கருத்துருவின் வெளிப்பாடாகக் குமரியில் நிற்பவர் எந்த  சமயத்தின் அடிப்படையை வெளிப்படுத்துகிறார்


வள்ளுவர் துறவி அல்ல. அவர் குடும்பஸ்தர். ஆனால் உலகுக்கு நீதி சொல்ல குறளை எழுதினார்.

செல்வன்

unread,
Feb 20, 2013, 1:15:42 AM2/20/13
to vall...@googlegroups.com
2013/2/19 தேமொழி <them...@yahoo.com>

அந்தணர் = அறவோர்

இங்கும் வள்ளுவர் ஆளைக் குறிப்பிட்டுக் கூறவில்லை அறவழி நடக்கும்  பண்புகளை உடையவர்களைத்தான் குறிப்பிடுகிறார்.


ஆமாம். பண்புகளை உடையவர்களை குறிப்பிடும் இடத்தில் அந்தணர் என்கிறார். ஜாதியை குறிப்பிடவேண்டிய இடத்தில் பார்ப்பான் என்கிறார்.பார்ப்பனரெல்லாம் அந்தணர் அல்ல. அந்தணர் எல்லாம் பார்ப்பனர் அல்ல

செல்வன்

unread,
Feb 20, 2013, 1:21:13 AM2/20/13
to vall...@googlegroups.com
2013/2/19 தேமொழி <them...@yahoo.com>
சமணரான   இளங்கோ ஒரு கடவுள் பாக்கி விடாமல் முருகன், திருமால், கொற்றவை, புத்த மதம், சமண மதம் எல்லோரையும் ஒரு காப்பியத்தில் வைத்து அவர்கள் வழியாக அந்தந்த  மதத்தையும் போற்றி மத சகிப்புத் தன்மை காட்டவில்லையா? அவர் குன்றக் குரவையில் முருகனையும், வேட்டுவ வரியில் கொற்றவையையும், ஆய்ச்சியர் குரவையில் திருமாலையும் பாடும் பொழித்து அந்தந்த மதத்தவரும் அந்தப் பாடல் வரிகளை சுட்டிக் காட்டி அவரை தனது மதத்தவர் என உரிமை கொண்ட்டாட முடியுமா?


அடுத்து கடல் படத்தில் சர்ச்சை காட்டியதற்கு மணிரத்தினம் கிறிஸ்துவரா என கேட்பீர்கள் போல:-)

சிலப்பதிகாரம் என்பது ஒரு கதை. அதில் ஆய்ச்சியரை பற்றி எழுதுகையில் அவர்கள் கண்ணனை வணங்குவது மாதிரி தான் எழுதமுடியும். வேட்டுவர்கள் கொற்றவையை வணங்குவது போல் தான் எழுதமுடியும். அதை ஜைனர், இந்து என யார் எழுதியிருந்தாலும் கதையை எழுதுகையில் கதைமாந்தரின் மதத்தை தான் கதையில் பிரதிபலிக்க முடியும். அவை ஆசிரியரின் மதத்தை பிரதிபலிப்ப்தாக கொள்வதில் பொருள் இல்லை.

ஆனால் நீதிநெறி கூறும் குறளில் இந்துமத குறிப்புகள் வருவது ஆசிரியரின் மதத்தை குறிப்பதாக தான் பொருள் கொள்ள முடியும். உதாரணம் "அவியுணவு உண்ணும் ஆன்றோர்" இது ஜைனத்துக்கு முரணானது.

செல்வன்

unread,
Feb 20, 2013, 1:22:42 AM2/20/13
to vall...@googlegroups.com
2013/2/19 தேமொழி <them...@yahoo.com>
துங்கக் கரிமுகத்து தூமணியே, மயிலேறும் வடிவேலனே, என்று குறிப்பிட்டு  சொல்லாதவரை..... பொதுவான பண்புகளைக் குறிக்கும் இறைவனுக்கு யாரும் உரிமை கொண்டாடி வள்ளுவரை மத சார்புள்ளவராக மாற்றக் கூடாது.


குறிப்பிட்டு சொல்லியிருந்தால் வள்ளுவர் இந்து என ஒத்துகொள்வீர்க்ளா என கேட்டு இன்னும் நீங்கள் பதில் சொல்லலை:-)

செல்வன்

unread,
Feb 20, 2013, 1:29:52 AM2/20/13
to vall...@googlegroups.com
2013/2/19 தேமொழி <them...@yahoo.com>

தமிழர்களுக்கு சகிப்புத்தன்மை அதிகம், யாதும் ஊரே யாவரும் கேளிர். 

நீங்கள் நேற்று அடித்துச் சொன்னீர்கள் எல்லா மதத்தையும் சமமாகப் பார்பவர்கள் ஒரு குறிப்பிட்ட மதத்தினர் என்று.  அது மதத்தினர் அல்ல அது தமிழர் குணம்.  இப்பொழுது இந்த குணம் இல்லாமல் போயிருக்கலாம்.  வேந்தர் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருக்கிறார் அக்காலத்தில் பொறை இருந்தது என்று. 



சகிப்புதன்மை வேறு, அடுத்தமத கடவுளை கும்பிடுவது வேறு. பின்னதை செய்யாததால் அவர் சகிப்புதன்மையற்றவர் என புரிந்துகொள்வது தவறு.

பராக் ஒபாமா இந்து கோயிலுக்கு வந்து அங்கபிரத்ட்சணம் செய்ய மாட்டார். அதனால் அவர் சகிப்புதன்மையற்றவர் என கூறமுடியுமா? அவர் மத நம்பிக்கை அதற்கு இடம் கொடுக்காது. ஆனால் இந்து மதத்தை அவர் தனிப்பட்ட முறையில் மதிப்பார். 

Anna Kannan

unread,
Feb 20, 2013, 1:31:50 AM2/20/13
to vall...@googlegroups.com

எந்தத் தெய்வப் பெயரையும் கூறாமல், இளங்கோவடிகள் சிலம்பின் மங்கல வாழ்த்துப் பாடலில் திங்கள் (நிலா), ஞாயிறு (சூரியன்), மாமழை, புகார் போற்றுதல் என்ற இயற்கை சார்ந்த போற்றுதலை முன்வைத்துப் புதுமை படைக்கிறார்.

    திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும் 
    ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் 
    மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் 
         - (சிலப்பதிகாரம் - புகார்க்காண்டம்)

http://www.tamilvu.org/courses/diploma/d041/d0412/html/d0412221.htm

DEV RAJ

unread,
Feb 20, 2013, 1:42:37 AM2/20/13
to vall...@googlegroups.com
On Wednesday, 20 February 2013 11:20:39 UTC+5:30, Dhivakar wrote:
>>> வெவ்வேறு விதமாக வெவ்வேறு இழைகளில் திருவள்ளுவரையும் இளங்கோவையும்
சமய அல்லது சமண வலையில் பிடித்து வைக்க வேண்டாமா? <<<


ஆம், ஐயா; கட்டாயமாக.
ஆனால் அதற்கு வள்ளுவம் இடமளிக்கவில்லை.

வள்ளுவம் சமண நூல் என்று கூறுவோர்க்கு
‘பனுவலியல் முனைவர்’ பட்டம் கிடைக்கும்.
மற்றவர் பெறும் பட்டம் வேறுவகையானது.

முனைவராக விழைவோர் உடனே பெயர்
கொடுக்கலாம்


தேவ்

ஸ்ரீ ராமதாஸ் மகாலிங்கம்

unread,
Feb 20, 2013, 3:20:07 AM2/20/13
to vall...@googlegroups.com
2013/2/20 Anna Kannan <annak...@gmail.com>

எந்தத் தெய்வப் பெயரையும் கூறாமல், இளங்கோவடிகள் சிலம்பின் மங்கல வாழ்த்துப் பாடலில் திங்கள் (நிலா), ஞாயிறு (சூரியன்), மாமழை, புகார் போற்றுதல் என்ற இயற்கை சார்ந்த போற்றுதலை முன்வைத்துப் புதுமை படைக்கிறார்.


மூணுமே தெய்வம் தான். அவிசொரிவதே அவர்களுக்குத் தான்.

--

ஆமாச்சு

N. Ganesan

unread,
Feb 20, 2013, 3:31:55 AM2/20/13
to வல்லமை

On Feb 19, 6:40 pm, செல்வன் <holy...@gmail.com> wrote:
> 2013/2/19 N. Ganesan <naa.gane...@gmail.com>


>
> > ஆம்.
>
> :-)
>
> ஆம் அல்லது இல்லை என நாம் நிர்ணயிக்க முடியாது. அதற்கு தான் ஜர்னல்களில் பியர்
> ரிவ்யூ பிராசஸ் உள்ளது. அதை தாண்டி வரும் கட்டுரைகள் எல்லாம் தரமானவை.
> பிளாக்பர்ன், லமாண்ட் கட்டுரைகளில் பிழை உள்ளது என நீங்கள் கருதினால்
> ஜர்னல்களுக்கு மறுப்பு அனுப்பலாம். பிரசுரிப்பார்கள். கட்டுரை ஆசிரியர்கள்
> கல்வி தகுதியை வலைபதிவுகளில் நாம் விவாதிப்பதில் பொருள் இல்லை
>

லமாண்ட் - தமிழ் ஆய்வுக்கு தொடர்பில்லாதவர்.

ப்லாக்பர்ன் - 19-ஆம் நூற்றாண்டு வள்ளுவர் ஜாதி பற்றி ஆராய்ந்தவர்,
நல்ல கட்டுரை. அவருக்குப் பழந்தமிழ் பரிச்சயம் இல்லை.

நா. கணேசன்

> ஆய்வுகள் தொடரலாம். சூரியன் நடுவில் ஸோலார் சிஸ்டத்தில் உள்ளதா?


> என்று இன்னும் புதிய முறைகளில் பார்த்துக்கொண்டுதான் உள்ளனர்.
>
> திருக்குறளில் ஆய்வு செய்ய இனி எதுவும் இல்லை என நீங்கள் கருதுவது மகிழ்ச்சியை
> அளிக்கிறது.
>

N. Ganesan

unread,
Feb 20, 2013, 3:32:54 AM2/20/13
to வல்லமை

On Feb 19, 10:13 pm, செல்வன் <holy...@gmail.com> wrote:
> 2013/2/19 Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>


>
> > ஆய்வு அடிப்படையில் எழும் சில கேள்விகள்
>
> > வள்ளுவர் சமணத் துறவியா?
>
> > வள்ளுவர் இந்துமதம் சார்ந்த முனிவரா?
>
> > இன்று கருத்துருவின் வெளிப்பாடாகக் குமரியில் நிற்பவர் எந்த  சமயத்தின்
> > அடிப்படையை வெளிப்படுத்துகிறார்
>
> வள்ளுவர் துறவி அல்ல. அவர் குடும்பஸ்தர். ஆனால் உலகுக்கு நீதி சொல்ல குறளை
> எழுதினார்.
>

அப்படித் தெரியவில்லை.

N. Ganesan

unread,
Feb 20, 2013, 3:34:29 AM2/20/13
to வல்லமை

On Feb 20, 12:20 am, ஸ்ரீ ராமதாஸ் மகாலிங்கம் <ama...@amachu.net>
wrote:
> 2013/2/20 Anna Kannan <annakan...@gmail.com>


>
> > எந்தத் தெய்வப் பெயரையும் கூறாமல், இளங்கோவடிகள் சிலம்பின் மங்கல வாழ்த்துப்
> > பாடலில் திங்கள் (நிலா), ஞாயிறு (சூரியன்), மாமழை, புகார் போற்றுதல் என்ற
> > இயற்கை சார்ந்த போற்றுதலை முன்வைத்துப் புதுமை படைக்கிறார்.
>
> மூணுமே தெய்வம் தான். அவிசொரிவதே அவர்களுக்குத் தான்.
>

”அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின்” - முக்கியமான குறள்.
அவி சொரிதல் பற்றிச் சொல்லும் இடங்களில் வள்ளுவர் தன் சமயம்
சமணம் என உறுதிப்படுத்துகிறார்.

நா. கணேசன்

> --
>
> ஆமாச்சு

N. Ganesan

unread,
Feb 20, 2013, 3:37:37 AM2/20/13
to வல்லமை
On Feb 19, 8:44 pm, தேமொழி <themo...@yahoo.com> wrote:
> ///திருக்குறள் இலக்கியமாகக் கருதப்பட்ட நிலையில் தமிழக மரபில் திருக்குறள்
> மறையாக நீதி நெறியாக சமயச் சார்புடன் வழக்கில் இருந்ததற்கு ஆவண் ஆதாரம்
> உண்ண்டா?////
>
> மிக நல்ல கேள்வி பேராசிரியரே  ...இந்த உண்மை தெரிஞ்சாகனும் :D
>
> ..... தேமொழி
>
>

தெரிஞ்சதுதான். சமணர்கள் குறளை “எம் ஓத்து” என்று பல நூற்றாண்டுகளாய்க்
கொண்டாடிவருகின்றனர். ஓத்து = மறை.

நா. கணேசன்

>
>
>
>
>


> On Tuesday, February 19, 2013 5:35:52 PM UTC-8, Nagarajan Vadivel wrote:
>
> > தமிழர் சமூகவியல் வரலாற்றில் (அப்படி ஒன்று இருந்தால்) 7-ஆம் நூற்றாண்டு
> > அளவில் இந்திய மறைவளங்கள் தமிழகத்திலிருந்து திரைடல் ஓடிய தமிழர்கள் சைவம்
> > வைண்வம் என்று கீழ்த்திசை நாடுகளில் பரப்பியபோது திருக்குறளை ஒரு மறை வளமாக
> > அல்லது நீதி நெறியாகவோ எடுத்துச் செல்லவில்லியே
>
> > திருக்குறள் இலக்கியமாகக் கருதப்பட்ட நிலையில் தமிழக மரபில் திருக்குறள்
> > மறையாக நீதி நெறியாக சமயச் சார்புடன் வழக்கில் இருந்ததற்கு ஆவண் ஆதாரம்
> > உண்ண்டா?
>
> > இந்தைக் கட்டுரையாளர் ஆய்வு நோக்கம் அதுவே என்றுரைத்தாலும் பிற்கால
> > ஆவணங்களுடன் தன் கட்டுரையின் எல்லையைச் சுருக்கிக் கொண்டார் என்று தோன்றுகிறது
>
> > திருக்குறள் தொல்லியல் அடிப்படையில் கல்வெட்டு ஆதாரங்கள் என்ற ஆவணம்
> > கிடைத்துள்ளதா?
>
> > நாகராசன்
>

> > 2013/2/20 செல்வன் <hol...@gmail.com <javascript:>>
>
> >> 2013/2/19 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com <javascript:>>


>
> >>> வள்ளுவர் காலத்தில் சமய பொறை இருந்தது. அதனால் பேர் சொல்லுவதில் தப்பு இல்லை
>
> >>> கடவுள் வாழ்த்து பாடிய மற்றவர்கள் சொல்லி உள்ளார்கள்
>
> >> கம்பராமாயனத்தை சைவர்கள் ஏற்பது இல்லை. தேவாரத்தை வைணவர்கள் பாடுவது இல்லை.
>
> >> வள்ளுவர் இருவருக்கும் பொதுவான நீதியை அளிக்க நினைத்து கடவுள் வாழ்த்தை
> >> சைவர், வைணவர் இருவருக்கும் பொதுவாக வைத்தார்
>
> >> --
> >> செல்வன்
> >>www.holyox.blogspot.com
>
> >> பொறந்த ஊருக்கு புகழை தேடு
> >> வளர்ந்து நாட்டுக்கு பெருமை சேரு
> >> நாலு பேருக்கு நன்மை செய்தால்
> >> கொண்டாடுவார் பண்பாடுவார்
>

> >>  --
> >> You received this message because you are subscribed to the Google Groups
> >> "வல்லமை" group.
> >> To unsubscribe from this group and stop receiving emails from it, send an

> >> email to vallamai+u...@googlegroups.com <javascript:>.
> >> For more options, visithttps://groups.google.com/groups/opt_out.

N. Ganesan

unread,
Feb 20, 2013, 3:39:15 AM2/20/13
to வல்லமை

On Feb 19, 8:37 pm, தேமொழி <themo...@yahoo.com> wrote:
> ///திருமால் உலகம் உயர்ந்தது என பெரியாரோ, கருணாநிதியோ சொல்வார்களா?///
>
> இது நகைச்சுவையா? புரியவில்லை.   கடவுள் இல்லை இல்லை இல்லவே இல்லை என்று சொன்ன
> பெரியாருக்குத் தலைஎழுத்தா இந்த ஆராய்ச்சியில் இறங்க .  உண்மையிலேயே
> கேள்வியின் நோக்கம் புரியவில்லை.
>
> ..... தேமொழி
>
>

தாமரைக் கண்ணோன் = இந்திரன்.

>
>
>
>
>
> On Tuesday, February 19, 2013 4:41:16 PM UTC-8, செல்வன் கோவை wrote:
>

> > 2013/2/19 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com <javascript:>>

DEV RAJ

unread,
Feb 20, 2013, 4:21:14 AM2/20/13
to vall...@googlegroups.com
On Wednesday, 20 February 2013 14:07:37 UTC+5:30, N. Ganesan wrote:
>>> சமணர்கள் குறளை “எம் ஓத்து” என்று பல நூற்றாண்டுகளாய்.......<<<

சமய திவாகரர் மட்டுமே அவ்வாறு கூறுவார்;
பிற சமண நூல்களின் வள்ளுவத்திற்கு என்ன இடம் ?


தேவ்

ஸ்ரீ ராமதாஸ் மகாலிங்கம்

unread,
Feb 20, 2013, 4:21:20 AM2/20/13
to vall...@googlegroups.com
2013/2/20 N. Ganesan <naa.g...@gmail.com>

”அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின்” - முக்கியமான குறள்.
அவி சொரிதல் பற்றிச் சொல்லும் இடங்களில் வள்ளுவர் தன் சமயம்
சமணம் என உறுதிப்படுத்துகிறார்.

doesn't it sound better than the best :-)

--

ஆமாச்சு

DEV RAJ

unread,
Feb 20, 2013, 4:33:08 AM2/20/13
to vall...@googlegroups.com
டாக்டர் கணேசர் சொல்வதுபோலவே தான் எல்லாரும்
பொருள்கொள்ள வேண்டும்; அதுதான் பனுவல் வாசிப்பு.
சமணம் காட்டும் அமரர்கள் ‘அவியுணவின் ஆன்றோர்’
அல்லர் என்பது அடுத்த முரண்.


”அவி சொரிதல் பற்றிச் சொல்லும் இடங்களில் வள்ளுவர் தன் சமயம்
சமணம் என உறுதிப்படுத்துகிறார்.” என்று யுனிவெர்ஸிடி லெவெல்ல
அடித்துப்பேசவும் தெரிந்திருக்க வேண்டும்


தேவ்

N. Ganesan

unread,
Feb 20, 2013, 4:56:50 AM2/20/13
to வல்லமை
திருவள்ளுவர் சமயம் யாது? - திரு. வி. க.
http://www.treasurehouseofagathiyar.net/37300/37332.htm

திருக்குறளாசிரியர் சமயம்
- தமிழ்ப் பண்டிதர். டீ.ஆர். ஸ்ரீநிவாச சாரியார்
http://banukumar_r.blogspot.com/2012/01/blog-post_14.html

நா. கணேசன்

N. Ganesan

unread,
Feb 20, 2013, 5:17:04 AM2/20/13
to வல்லமை

On Feb 19, 5:03 am, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
>
> மக்களுக்கு உதாரணம் சொல்லுறார். அவர் நாத்திகம் எதுவும் பேசலையே.
>

சமணத்தின் நாத்திகத்தை வள்ளுவர் குறள்களில் பேசியுள்ளார்.

> கடவுள் வாழ்த்தில் சொல்லாமல் பிற இடத்தில் சொல்லி என்ன பயன்?
>
>
>

> --

Hari Krishnan

unread,
Feb 20, 2013, 6:47:02 AM2/20/13
to vallamai

2013/2/20 N. Ganesan <naa.g...@gmail.com>

சமணத்தின் நாத்திகத்தை வள்ளுவர் குறள்களில் பேசியுள்ளார்.

எந்தக் குறளில்?


--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

DEV RAJ

unread,
Feb 20, 2013, 6:49:57 AM2/20/13
to vall...@googlegroups.com

Hari Krishnan

unread,
Feb 20, 2013, 6:50:28 AM2/20/13
to vallamai

2013/2/20 N. Ganesan <naa.g...@gmail.com>

தாமரைக் கண்ணோன் = இந்திரன்.

தாமரைக் கண்ணன் என்று இராமனைக் கம்பன் குறிக்கும் இடங்களைத் தொகுத்து வைத்திருக்கிறேன்.  எல்லாமும் அச்சுப் புத்தகத்தில் குறித்திருப்பதால், இன்றிரவு அல்லது நாளைக் காலைக்குள் இராமனை, பரதனை, கோசலை, சுமித்திரை கைகேயி மூவரை தாமரைக் கண்ணன், தாமரைச் செங்கணான், தாமரைக் கண்ணி என்றெல்லாம் குறித்திருப்பது இருக்கிறது.

இந்திரனை எந்த இடத்தில் தாமரைக் கண்ணன் என்று சொல்லியிருக்கிறது?  படித்தவராக இருந்தால் இந்தக் கேள்விக்குக் கட்டாயம் பதில் சொல்வார்கள்.

நேர்மைதான் இல்லை என்று நினைத்தேன்.

N. Ganesan

unread,
Feb 20, 2013, 7:15:35 AM2/20/13
to வல்லமை
சிந்து சமவெளி நாகரீகத்தில் குதிரை இருந்தது என்பதற்கு ஒப்பானது வள்ளுவர்
ஹிந்து என்பது.
இண்டெண்ட்டில் வள்ளுவர் ஹிந்து தியரி போல, சம்ஸ்கிருதம் - தமிழ் ஒரே
மொழிக் குடும்பம்
என்பது. இதை பிரியதர்சி போன்றவர்கள் மடல்களில் காணலாகும்.

தாமரைக்கண்ணானுலகு - இந்திரலோகம். இந்திரன் அகலிகை சாபக்கதையில்
வரும் “கண்” இது. குறிப்பைக்கொடுக்கிறார் வள்ளுவர்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Feb 20, 2013, 7:27:54 AM2/20/13
to வல்லமை
அகலிகை சாபத்தால் இந்திரன் ஆயிரம் “கண்களை” பெற்றான் என்பது
பிராகிருதத்தில் பரவலாக வழங்கிய கதை. கண்கள் = யோனிகள்.

திருவிளையாடற்புராணம்:
பல்லாயிரஞ் செந்தாமரை பரப்பிக்கொடு வரலால்
நல்லாயிரங் கண்ணானெழி னயக்குங்குளிர் நளினங்
கல்லாரமுங் கடிமுல்லையுங் கரும்புங்கொடு வரலால்
வில்லாயிரங் கொடுபோர்செயும் வேள்வீரனு மானும்.

வள்ளுவர் தாமரைக்கண்ணான் என்று இந்திரனை குறிக்கிறார் அல்லவா?
அத்துடன் கம்பன், திருவிளையாடற் புராணப் பாடல்களை
ஒப்பிட்டால் குறள் விளங்கிவிடும். சமணர் வள்ளுவர்
ஏன் இக்குறளில் பிராகிருதத்தில் பிரபலமான 1000 ”கண்கள்” (தாமரை)
என்பதும் அறியலாம்.

Hari Krishnan

unread,
Feb 20, 2013, 7:31:30 AM2/20/13
to vallamai

2013/2/20 N. Ganesan <naa.g...@gmail.com>

வள்ளுவர் தாமரைக்கண்ணான் என்று இந்திரனை குறிக்கிறார் அல்லவா?
அத்துடன் கம்பன், திருவிளையாடற் புராணப் பாடல்களை
ஒப்பிட்டால் குறள் விளங்கிவிடும்.

கம்பன், எந்த இடத்தில் இந்திரனைத் தாமரைக் கண்ணன் என்று குறிக்கிறான்?  இந்த நழுவற விளையாட்டெல்லாம் வேணாம்.  இருந்தா, இருக்கற எடத்த இல்லாட்டி பாடல சொல்லணும்.  சும்மா ஓட்டக் கூடாது.  

If you are not able to substantiate your own words, just remain silent.

வேந்தன் அரசு

unread,
Feb 20, 2013, 7:39:01 AM2/20/13
to vall...@googlegroups.com


19 பிப்ரவரி, 2013 10:16 PM அன்று, செல்வன் <hol...@gmail.com> எழுதியது:

2013/2/19 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
இது பிற்காலத்திய நிகழ்வு. 

வள்ளுவர் காலத்தில் சமய பொறை இருந்தது.  அதனால் பேர் சொல்லுவதில் தப்பு இல்லை. சொல்லாமைக்கு காரணம்தான் இந்த மடல் விசுபரூபம் எடுத்தது



சமயபொறையுடன் இருந்தாலும் அடுத்தவர் கடவுளை வாழ்த்தி யாரும் பாடமாட்டார்கள்.


அடுத்தவர் கடவுள் என  இந்து கடவுளரை சொல்லுறீகளோ?
 

Hari Krishnan

unread,
Feb 20, 2013, 7:39:13 AM2/20/13
to vallamai

2013/2/20 N. Ganesan <naa.g...@gmail.com>

அகலிகை சாபத்தால் இந்திரன் ஆயிரம் “கண்களை” பெற்றான் என்பது
பிராகிருதத்தில் பரவலாக வழங்கிய கதை. கண்கள் = யோனிகள்.

கண்கள்=யோனிகள் அப்படின்னா, திருவள்ளுவர் சொல்ற தாமரைக் கண்ணான் உலகு யோனிகளால் ஆனதா?

வேந்தன் அரசு

unread,
Feb 20, 2013, 7:43:11 AM2/20/13
to vall...@googlegroups.com


20 பிப்ரவரி, 2013 12:31 AM அன்று, DEV RAJ <rde...@gmail.com> எழுதியது:
On Wednesday, 20 February 2013 06:33:14 UTC+5:30, வேந்தன் அரசு wrote:
>>> வள்ளுவர் காலத்தில் சமய பொறை இருந்தது. 
அதனால் பேர் சொல்லுவதில் தப்பு இல்லை  <<<


கம்பர் காலத்தில் சமயப்பொறை
நிலவியதா, இல்லையா ?
கம்ப ராமாயணம் பிற்காலத்திய நிகழ்வுதானே ?

உலகம் யாவையும் தாமுள வாக்கலும்
நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகிலா விளையாட்டுடையான் அவன்
தலைவன், அன்னவர்க்கே சரண் நாங்களே

 

கம்பர் ஏன் பெயர் சொல்லவில்லை ?
சுண்ணக் காளவாய்க்கு அஞ்சினாரா ?

இல்லை இல்லவே இல்லை.
மன்னவுனும் நீயோ வளநாடும் உன்னதோ என பாடியவர் சுண்ணக்காளவாய்க்கு அஞ்சிடமாட்டார்.

ஆனால் அவரது பாட்டுடைத்தலைவனே இராமன். தனியாக ஏன் சொல்லணும்
அவர் காண்டத்துக்கு ஒரு வாழ்த்துபாடி இருப்பாரே. எதிலுமே பேரைச் சொல்லையா?
 
ஆம் எனின் ஆம் இல்லை எனில் இல்லை.
 நாத்திகரையும் ஏத்துக்கிட்டாரே அந்த  கொம்பன்.

வேந்தன் அரசு

unread,
Feb 20, 2013, 7:52:10 AM2/20/13
to vall...@googlegroups.com
20 பிப்ரவரி, 2013 6:50 AM-ல், Hari Krishnan
<hari.har...@gmail.com> எழுதியது:

> இந்திரனை எந்த இடத்தில் தாமரைக் கண்ணன் என்று சொல்லியிருக்கிறது? படித்தவராக
> இருந்தால் இந்தக் கேள்விக்குக் கட்டாயம் பதில் சொல்வார்கள்.
>
> நேர்மைதான் இல்லை என்று நினைத்தேன்.

கணேசர் தங்கமான மனிதர்.

N. Ganesan

unread,
Feb 20, 2013, 7:54:02 AM2/20/13
to வல்லமை
சிந்து சமவெளியில் குதிரை, தமிழ் - சம்ஸ்கிருதம் ஒரே மொழிக்குடும்பம்
என்று
இணைய வெளியில் சிலர் பரப்பி வருவது தாங்கள் அறிந்ததே. அதே போல்,
ஒன்று வள்ளுவர் ஹிந்து. முக்கியமான சான்று, தாமரைக்கண்ணான் உலகம் என்றால்
திருமால் லோகம்.
இது பிழைபட்ட உரையாகும். சமணக் குரவடிகளான வள்ளுவனின் உள்ளம்
உணராதார் இணையத்தில் எழுதுவது. சிரமண சமயங்களின் வரலாறும், தமிழை
இந்தியாவில் செம்மொழி ஆக்க அவர்களின் ஆதி கொடையும் அறிதல் தமிழர்களின்
கடமை.

குறிப்பால் அவி பற்றியும், பௌத்த எதிர்ப்பையும்,
தெளிவாகக், கொலைதண்டனை ஒழிப்பையும்,
வாழ்வில் அறிவியல் பார்வையின் தேவையையும்
தமிழ்மறை பாடி தமிழர்களுக்கும், ஏன் உலகுக்குமே அளித்த
பெருமை உடையவர் திருவள்ளுவர்.

வஜ்ரப் படை கொண்டவன் இந்திரன். அவன் உலகம் இந்திரலோகம் சுவர்க்கம்.
அது தேவை இல்லை என்று அறிவுறுத்துகிறார். வச்சிரம் லிங்கத்துக்கும்,
தாமரை யோனிக்கும் இந்தியாவில் குறியீடுகள். சிரமணர்கள் இந்தியாவுக்குக்
கொடுத்த கோட்பாடுகளில் முக்கியமானது. இந்தியக் கலைகள்
யாவிலும் காந்தாரம் தொடங்கி, பூஜா அறைகளில் உள்ள எந்திரத் தகடுகள்
வரை பார்க்கலாம். வஜ்ரபாணி இந்திரன் (சக்கன்) தழுவுவது பத்மபாணியை.
பத்மபாணி சீனாவில் பெண்ணாகவே பாவிக்கின்றனர்.
வஜ்ரப்படை கொண்ட இந்திரன் 1000 தாமரைக் கண்களை அடைகிறான்
என்பது சமணர்களின் பிராகிருத வழக்காறு. இதனைக் குறித்துச்
செல்கிறார் வள்ளுவனார்.

இந்திரன் பற்றி அறிய (ஏன் இந்திரலோகம் என்கிறார் சமணமுனிவர் வல்ளுவர்?)
http://www.sishri.org/indran.html

பிற பின்னர்!

நா. கணேசன்

Hari Krishnan

unread,
Feb 20, 2013, 7:57:40 AM2/20/13
to vallamai

2013/2/20 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>

ஆனால் அவரது பாட்டுடைத்தலைவனே இராமன். தனியாக ஏன் சொல்லணும்
அவர் காண்டத்துக்கு ஒரு வாழ்த்துபாடி இருப்பாரே. எதிலுமே பேரைச் சொல்லையா?
 
ஆம் எனின் ஆம் இல்லை எனில் இல்லை.
 நாத்திகரையும் ஏத்துக்கிட்டாரே அந்த  கொம்பன்.


எதுக்குப் பிரச்சினை?  அத்தனை கடவுள் வாழ்த்துப் பாடல்களையும் தந்துவிடுகிறேன்:

வான்நின்று இழிந்து, வரம்பு இகந்த மா பூதத்தின் வைப்பு எங்கும்,
ஊனும் உயிரும் உணர்வும்போல், உள்ளும் புறத்தும் உளன் என்ப-
கூனும் சிறிய கோத்தாயும் கொடுமை இழைப்ப, கோல் துறந்து,
கானும் கடலும் கடந்து, இமையோர் இடுக்கண் தீர்த்த கழல் வேந்தன்

அயோத்தியா காண்டம்--ராமனைக் கடவுளாக வாழ்த்துகிறது.

பேதியாது நிமிர் பேத உருவம் பிறழ்கிலா,
ஓதி ஓதி உணரும்தொறும் உணர்ச்சி உதவும்
வேதம், வேதியர், விரிஞ்சன், முதலோர் தெரிகிலா,
ஆதி தேவர்; அவர் எம் அறிவினுக்கு அறிவுஅரோ.  

ஆரணிய காண்டம் - எந்தக் கடவுளும் பெயரால் குறிக்கப்படவில்லை.

மூன்று உரு எனக் குணம் மும்மை ஆம் முதல்,
தோன்று உரு எவையும், அம் முதலைச் சொல்லுதற்கு
ஏன்று உரு அமைந்தவும், இடையில் நின்றவும்,
சான்று உரு உணர்வினுக்கு உணர்வும், ஆயினான்.

கிட்கிந்தா காண்டம் - எந்தக் கடவுளும் பெயரால் குறிக்கப்படவில்லை.

அலங்கலில் தோன்றும் பொய்ம்மை அரவு என,   பூதம் ஐந்தும்
விலங்கிய விகாரப் பாட்டின் வேறுபாடு உற்ற வீக்கம்,
கலங்குவது எவரைக் கண்டால்? அவர், என்பர் - 'கை வில் ஏந்தி,   
இலங்கையில் பொருதார் அன்றே, மறைகளுக்கு   இறுதி ஆவார்!'   

சுந்தர காண்டம் - ராமனை முழுமுதற் கடவுளாக வாழ்த்துகிறது

ஓன்றே என்னின் ஒன்றேயாம் பலவென் றுரைக்கின் பலேவேயாம்
அன்றே என்னின் அன்றேயாம் ஆமேஎன்னின் ஆமேயாம்
இன்றே என்னின் இன்றேயாம் உளதென் றுரைக்கின் உளதேயாம்
நன்றே நம்பி குடிவாழ்க்கை!  நமக்கிங் கென்னோ பிழைப்பம்மா!

யுத்த காண்டம் - எந்தக் கடவுளும் பெயரால் குறிக்கப்படவில்லை.

இப்ப இரண்டு காண்டங்களில் மட்டுமே ராமனைக் கடவுளாக வாழ்த்தியிருக்கிறான்.  மற்ற எல்லாவற்றிலும் ‘குறி குணம் ஏதும் இலதாய், அனைத்தாய்க் குலவிடும் தனிப் பரம்பொருளை‘த்தான் வாழ்த்தியிருக்கிறான்.  

கண்ணாமூச்சி ஆடக்கூடாது.  காட்டு வாத்த துரத்தக் கூடாது. :)

வேந்தன் அரசு

unread,
Feb 20, 2013, 7:57:47 AM2/20/13
to vall...@googlegroups.com
20 பிப்ரவரி, 2013 7:39 AM-ல், Hari Krishnan
<hari.har...@gmail.com> எழுதியது:
>
> 2013/2/20 N. Ganesan <naa.g...@gmail.com>
>
>> அகலிகை சாபத்தால் இந்திரன் ஆயிரம் “கண்களை” பெற்றான் என்பது
>> பிராகிருதத்தில் பரவலாக வழங்கிய கதை. கண்கள் = யோனிகள்.
>
>
> கண்கள்=யோனிகள் அப்படின்னா, திருவள்ளுவர் சொல்ற தாமரைக் கண்ணான் உலகு யோனிகளால்
> ஆனதா?

அப்படி சொன்னாலும் தப்பு இல்லை. யோனி இல்லாத உயிரினம் இல்லை. (உயிரும்
இல்லை எனலாம்)

Hari Krishnan

unread,
Feb 20, 2013, 7:59:04 AM2/20/13
to vallamai

2013/2/20 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>

அப்படி சொன்னாலும் தப்பு இல்லை. யோனி இல்லாத உயிரினம் இல்லை. (உயிரும்
இல்லை எனலாம்)

அந்தச் சொல்லுக்கே ‘வழி’ என்பதுதான் பொருள்.  

Hari Krishnan

unread,
Feb 20, 2013, 7:59:54 AM2/20/13
to vallamai

2013/2/20 Hari Krishnan <hari.har...@gmail.com>

2013/2/20 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
அப்படி சொன்னாலும் தப்பு இல்லை. யோனி இல்லாத உயிரினம் இல்லை. (உயிரும்
இல்லை எனலாம்)

அந்தச் சொல்லுக்கே ‘வழி’ என்பதுதான் பொருள்.  

ஆனா கணேசர் தெள்ளத் தெளிவா குறிப்பிட்ட ஒரே ஒரு யோனியை மட்டும்தான் குறிக்கிறார்.  

N. Ganesan

unread,
Feb 20, 2013, 8:02:51 AM2/20/13
to வல்லமை

On Feb 20, 4:57 am, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> 20 பிப்ரவரி, 2013 7:39 AM-ல், Hari Krishnan

> <hari.harikrish...@gmail.com> எழுதியது:
>
>
>
> > 2013/2/20 N. Ganesan <naa.gane...@gmail.com>


>
> >> அகலிகை சாபத்தால் இந்திரன் ஆயிரம் “கண்களை” பெற்றான் என்பது
> >> பிராகிருதத்தில் பரவலாக வழங்கிய கதை. கண்கள் = யோனிகள்.
>
> > கண்கள்=யோனிகள் அப்படின்னா, திருவள்ளுவர் சொல்ற தாமரைக் கண்ணான் உலகு யோனிகளால்
> > ஆனதா?
>
> அப்படி சொன்னாலும் தப்பு இல்லை. யோனி இல்லாத உயிரினம் இல்லை. (உயிரும்
> இல்லை எனலாம்)
>

ஆம் ஐயா.

நா. கணேசன்

> வேந்தன் அரசு

வேந்தன் அரசு

unread,
Feb 20, 2013, 8:04:12 AM2/20/13
to vall...@googlegroups.com
20 பிப்ரவரி, 2013 7:57 AM-ல், Hari Krishnan
<hari.har...@gmail.com> எழுதியது:

>
> இப்ப இரண்டு காண்டங்களில் மட்டுமே ராமனைக் கடவுளாக வாழ்த்தியிருக்கிறான். மற்ற
> எல்லாவற்றிலும் ‘குறி குணம் ஏதும் இலதாய், அனைத்தாய்க் குலவிடும் தனிப்
> பரம்பொருளை‘த்தான் வாழ்த்தியிருக்கிறான்.
>
> கண்ணாமூச்சி ஆடக்கூடாது. காட்டு வாத்த துரத்தக் கூடாது. :)

நன்றி ஹரி கி ஐயா

கம்பர் 5 இல் 2 ல் குறிப்பிட்டுள்ளார்.
ஆயின், வள்ளுவர் 10 ல் 1 கூட குறிப்பிடலைதானே. (இந்துகடவுளரின் பேரை)

Hari Krishnan

unread,
Feb 20, 2013, 8:08:56 AM2/20/13
to vallamai
2013/2/20 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
ஆயின், வள்ளுவர் 10 ல் 1 கூட குறிப்பிடலைதானே. (இந்துகடவுளரின் பேரை)

எந்தக் கடவுளரின் பெயரையும் வள்ளுவர் குறிப்பிடவில்லை.  இந்துக் கடவுளரின் பெயரை என்று தனியாகப் பிரிப்பது விஷமத்தனமானது.  அருகன் பெயரைக் குறித்துள்ளாரா?  புத்தர்? வர்த்தமானன்?

அடியளந்தான் என்று சொல்லியிருக்கிறாரே, மூவுலகும் ஈரடியால்...என்று சிலம்பு பாடுகிறதே... வர்த்தமான மகாவீரர் மூன்று உலகத்தையும் ஈரடியால் அளந்தாரா?

.  

N. Ganesan

unread,
Feb 20, 2013, 8:11:03 AM2/20/13
to வல்லமை

On Feb 20, 5:04 am, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> கம்பர் 5 இல் 2 ல் குறிப்பிட்டுள்ளார்.
> ஆயின், வள்ளுவர் 10 ல் 1 கூட குறிப்பிடலைதானே. (இந்துகடவுளரின் பேரை)
>

உலகை மூவடியால் அளப்பது சூரியன். அப்பொழுது விஞ்ஞானம் இப்போதைய அளவுக்கு
முன்னேறவில்லை.

நா. கணேசன்


வேந்தன் அரசு

unread,
Feb 20, 2013, 8:15:46 AM2/20/13
to vall...@googlegroups.com
20 பிப்ரவரி, 2013 7:59 AM-ல், Hari Krishnan
<hari.har...@gmail.com> எழுதியது:
>
> 2013/2/20 Hari Krishnan <hari.har...@gmail.com>
>>
>> 2013/2/20 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
>>>
>>> அப்படி சொன்னாலும் தப்பு இல்லை. யோனி இல்லாத உயிரினம் இல்லை. (உயிரும்
>>> இல்லை எனலாம்)
>>
>>
>> அந்தச் சொல்லுக்கே ‘வழி’ என்பதுதான் பொருள்.
>
>
> ஆனா கணேசர் தெள்ளத் தெளிவா குறிப்பிட்ட ஒரே ஒரு யோனியை மட்டும்தான்
> குறிக்கிறார்.

ஆயிரம் கண்கள் உடைய இந்திரன் என கொள்ளலாம். உலகை என்று அல்ல.
கண்களை ஒருமையில்தானே இலக்கியம் சொல்லுது.

தாமரை எனில் தாமரை இதழ்
அரவிந்தாய பத்ர நேத்ரம்

வேந்தன் அரசு

unread,
Feb 20, 2013, 8:15:52 AM2/20/13
to vall...@googlegroups.com
20 பிப்ரவரி, 2013 8:08 AM-ல், Hari Krishnan
<hari.har...@gmail.com> எழுதியது:
>
> 2013/2/20 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
>>
>> ஆயின், வள்ளுவர் 10 ல் 1 கூட குறிப்பிடலைதானே. (இந்துகடவுளரின் பேரை)
>
>
> எந்தக் கடவுளரின் பெயரையும் வள்ளுவர் குறிப்பிடவில்லை. இந்துக் கடவுளரின்
> பெயரை என்று தனியாகப் பிரிப்பது விஷமத்தனமானது. அருகன் பெயரைக்
> குறித்துள்ளாரா? புத்தர்? வர்த்தமானன்?

ஆம் ஐயா. அவர் இந்துவாக இருந்தால் இந்து கடவுளின் பேரை சொல்லி இருப்பாரே
என்றுதானே கமபனை இழுத்தோம். திருக்குறளின் சமகாலத்து நூலகள் பலவற்றிலும்
அப்படியே. ஆனால் உறுதியாக சமணம் எனும் நூல்களில் கடவுள் வாழ்த்து
பொதுமையாக இருக்கு. அல்லது இல்லவே இல்லை. ஐந்திணை ஐம்பது, நாலடியார்.

வள்ளுவம் இந்து மதம் சார்ந்தது அல்ல. ஆனால் எந்த மதம்? தெரியலே.

Hari Krishnan

unread,
Feb 20, 2013, 8:18:42 AM2/20/13
to vallamai

2013/2/20 N. Ganesan <naa.g...@gmail.com>

உலகை மூவடியால் அளப்பது சூரியன். அப்பொழுது விஞ்ஞானம் இப்போதைய அளவுக்கு
முன்னேறவில்லை.

தாமரைக் கண்ணான் இந்திரனாம்.  உலகை மூவடியால் அளப்பது சூரியனாம்.  சூரியன், ஒற்றைச் சக்கரம் கொண்ட தேரில் உலா வருவதாகத்தான் புராணங்கள் சொல்கின்றன.  சக்கரம் அடி எடுத்து வைக்குமா என்ன?

திருவள்ளுவரும் அதே விஞ்ஞான யுகத்தைச் சேர்ந்தவர்தானே?

அதுக்கு மேல, ஈரடியால் மூவுலகும்னு தெளிவா சொன்ன பிறகும், மூவடியால் உலகை அளப்பது சூரியன் அப்படின்னு இப்ப சுத்த ஆரம்பிச்சிட்டார்.  

டெலீரியம்!  டெலீரியம்!  ஒடம்ப கவனிச்சிக்கங்க கணேசன்.  அப்பறம் ஏரோப்ளேன் கம்பெனிக்கு கஷ்டமாயிடும்.

வேந்தன் அரசு

unread,
Feb 20, 2013, 8:19:02 AM2/20/13
to vall...@googlegroups.com
20 பிப்ரவரி, 2013 8:11 AM-ல், N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:
>
>
> On Feb 20, 5:04 am, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
>> கம்பர் 5 இல் 2 ல் குறிப்பிட்டுள்ளார்.
>> ஆயின், வள்ளுவர் 10 ல் 1 கூட குறிப்பிடலைதானே. (இந்துகடவுளரின் பேரை)
>>
>
> உலகை மூவடியால் அளப்பது சூரியன். அப்பொழுது விஞ்ஞானம் இப்போதைய அளவுக்கு
> முன்னேறவில்லை.


பொதுமக்களுக்க்காக எழுதியதை அவர்களின் பொது அறிவோடு பொருத்திதான் எழுதணும்
மூவடியால் அளந்தவன் திருமால். தமிழ்நாட்டில் யாரை கேட்டாலும் அதுதான் இறுப்பார்.
சூரியன் என்கிறது உங்களைத்தவிர யாருக்கு தெரியும்?

--

N. Ganesan

unread,
Feb 20, 2013, 8:21:45 AM2/20/13
to வல்லமை

On Feb 20, 5:19 am, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> 20 பிப்ரவரி, 2013 8:11 AM-ல், N. Ganesan <naa.gane...@gmail.com> எழுதியது:


>
>
>
> > On Feb 20, 5:04 am, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> >> கம்பர் 5 இல் 2 ல் குறிப்பிட்டுள்ளார்.
> >> ஆயின், வள்ளுவர் 10 ல் 1 கூட குறிப்பிடலைதானே. (இந்துகடவுளரின் பேரை)
>
> > உலகை மூவடியால் அளப்பது சூரியன். அப்பொழுது விஞ்ஞானம் இப்போதைய அளவுக்கு
> > முன்னேறவில்லை.
>
> பொதுமக்களுக்க்காக எழுதியதை அவர்களின் பொது அறிவோடு பொருத்திதான் எழுதணும்
> மூவடியால் அளந்தவன் திருமால். தமிழ்நாட்டில் யாரை கேட்டாலும் அதுதான் இறுப்பார்.
>  சூரியன்  என்கிறது உங்களைத்தவிர யாருக்கு தெரியும்?
>

சூரியனுக்கு ஒரு உருவகம் திரிவிக்கிரமன். solar deity.

N. Ganesan

unread,
Feb 20, 2013, 8:23:57 AM2/20/13
to வல்லமை

On Feb 20, 5:19 am, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> 20 பிப்ரவரி, 2013 8:11 AM-ல், N. Ganesan <naa.gane...@gmail.com> எழுதியது:


>
>
>
> > On Feb 20, 5:04 am, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> >> கம்பர் 5 இல் 2 ல் குறிப்பிட்டுள்ளார்.
> >> ஆயின், வள்ளுவர் 10 ல் 1 கூட குறிப்பிடலைதானே. (இந்துகடவுளரின் பேரை)
>
> > உலகை மூவடியால் அளப்பது சூரியன். அப்பொழுது விஞ்ஞானம் இப்போதைய அளவுக்கு
> > முன்னேறவில்லை.
>
> பொதுமக்களுக்க்காக எழுதியதை அவர்களின் பொது அறிவோடு பொருத்திதான் எழுதணும்
> மூவடியால் அளந்தவன் திருமால். தமிழ்நாட்டில் யாரை கேட்டாலும் அதுதான் இறுப்பார்.
>  சூரியன்  என்கிறது உங்களைத்தவிர யாருக்கு தெரியும்?
>

வள்ளுவருக்கு தெரியும். மக்களை சிந்திக்கச் சொல்லியிருக்கிறார். அவர்கள்
செய்யலைன்னா
அதற்கு அவரா பொறுப்பு?

It is loading more messages.
0 new messages