சொந்த ஊரு கெத்து தான்

415 views
Skip to first unread message

kanmani tamil

unread,
Jan 25, 2025, 11:00:53 PMJan 25
to vallamai
வேற ஒன்னுமில்ல
 
*Padma Shri* Award to Hatsun 
R.G.Chandramogan Annachi.

Pride of Sivakasi/Thiruthangal
Sk

kanmani tamil

unread,
Jan 26, 2025, 1:34:48 PMJan 26
to vallamai
குடியரசு தின விழாவில் அளிக்கப்பட்டது.

kanmani tamil

unread,
Jan 27, 2025, 10:27:00 AMJan 27
to vallamai
பழைய நேர்காணல் ஒன்று-


சக 

N. Ganesan

unread,
Jan 27, 2025, 1:18:22 PMJan 27
to வல்லமை
வாழ்த்துகள்.

kanmani tamil

unread,
Mar 5, 2025, 10:13:40 PMMar 5
to vallamai
இது பிறந்த ஊர் பற்றிய அபிமானம் ; என் பள்ளித் தோழியின் தம்பி திரு.வேல்சாமி சங்கரலிங்கம் 



'விருதுநகர் டு சிலிக்கான் வேலி' - Zoom பொறியியல் தலைவர் வேல்சாமி சங்கரலிங்கம் சிறப்பு நேர்காணல்!


#InspiringJourney #educationmatters

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/vallamai/8a2ad7ef-b308-4730-9f6d-a11b5c80b332n%40googlegroups.com.

N. Ganesan

unread,
Mar 7, 2025, 6:12:30 AMMar 7
to வல்லமை
வேல்சாமியை அறிவேன். அவருக்கும் என்னைத் தெரியும். கிண்டி பொறியியல் கல்லூரி இருவரும்.

kanmani tamil

unread,
Mar 7, 2025, 11:45:21 PMMar 7
to vallamai

///காமராஜர் ஆட்சிக் காலத்து 
கிசு கிசு..!

அவரது ஆட்சியில் எழுந்த ஒரே கிசுகிசு, இதுவாகத்தான் இருக்கும். அதற்குக் காரணம், ஒரு தொழிற்சாலை தொடங்க காமராஜர் கொடுத்த திடீர் அனுமதி... 

திண்டுக்கல் நகரத்தை விட்டு வெகு தொலைவில், ஒரு தொழிற்சாலை துவங்க அனுமதி கேட்டிருந்தார்கள். அதை பரிசீலனையில்
வைத்திருந்தார்கள் அதிகாரிகள். இதை தெரிந்து கொண்ட காமராஜர், அவசரம் அவசரமாக அதிகாரிகளை அழைத்தார்.

'உடனடியாக அந்த திண்டுக்கல்காரர்களுக்கு தொழிற்சாலை தொடங்க அனுமதி கொடுங்கள்' என்று வாய்மொழி உத்தரவை பிறப்பித்து விட்டு, புறப்பட்டுப் போய் விட்டார். அதிகாரிகள் குழம்பிப் போனார்கள்.

'எதற்காக நமது முதலமைச்சர் அந்த திண்டுக்கல் தொழிற்சாலைக்கு இவ்வளவு தீவிரமாக ஆதரவு கொடுக்கிறார் ? ஒருவேளை அந்த தொழிற்சாலை நிர்வாகத்தினர் நமது முதலமைச்சருக்கு வேண்டியவர்களாக இருப்பார்களோ ?'

அதிகாரிகள் இப்படி கிசுகிசுப்பது, காமராஜர் காதுகளுக்குப் போய்ச் சேர்ந்து விட்டது. அதிகாரிகளை தன் அறைக்கு வரவழைத்தார்.
"என்ன உங்கள் சந்தேகம் ? கேளுங்கள்"..

அதிகாரிகள் அமைதியாக அமர்ந்திருந்தார்கள். காமராஜரே பேசினார். "அவசரம் அவசரமாக அந்த தொழிற்சாலைக்கு அனுமதி கொடுக்க சொன்னேனே...
அது ஏன் ? இதுதானே உங்கள் சந்தேகம் ?"

தொடர்ந்து காமராஜர் "திண்டுக்கல் நகரத்துக்கும், அந்த தொழிற்சாலை அமையப் போகும் இடத்துக்கும் இடையே எத்தனை கிராமங்கள் இருக்கின்றதென்று உங்களுக்கு தெரியுமா ?"

அதிகாரிகள் பதில் தெரியாமல் அமைதியாக அமர்ந்திருக்க,
காமராஜர் : "அறுபது கிராமங்கள்..
அந்த 60 கிராமங்களுக்கும் இன்னமும் மின்சார வசதி செய்து கொடுக்க நம்மால் முடியவில்லை. ஏனெனில் திண்டுக்கல் நகரத்துக்கும் அந்த கிராமங்களுக்கும் இடையே ஏராளமான மின் கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்களை அமைக்க வேண்டும். அதற்குத் தேவையான நிதி வசதி அரசிடம் இல்லை. எனவே அந்த புதிய தொழிற்சாலைக்கு அனுமதி கொடுக்க, ஒரு முக்கியமான நிபந்தனையை விதித்து இருக்கிறேன்."

அதிகாரிகள் காமராஜர் பேசுவதை உன்னிப்பாக கவனித்து கேட்டுக்கொண்டிருந்தார்கள். தான் போட்ட திட்டத்தை விரிவாக விளக்கினார் காமராஜர். புதிதாக தொடங்கவிருக்கும் தொழிற்சாலைக்கு தேவையான மின்சாரத்தை திண்டுக்கல்லில் இருந்து கொண்டு வர, அந்தத் தொழிற்சாலை நிர்வாகத்தினர், அவர்களது செலவிலேயே மின்கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்களை
அமைத்துக் கொள்ள வேண்டும். இந்த நிபந்தனைக்கு சம்மதித்தால்,
தொழிற்சாலை தொடங்க உடனடியாக அனுமதி கொடுக்கப்படும். தொழிற்சாலை நிர்வாகத்தினர் சம்மதித்தனர். உடனடியாக அத்தனை மின்கம்பங்களையும், டிரான்ஸ்பார்மர்களையும் அமைத்துக் கொடுத்து விட்டார்கள். இப்போது அந்த அறுபது கிராமங்களை ஒட்டியும் மின்கம்பங்கள்.

இதை அதிகாரிகளிடம் எடுத்துச் சொன்ன காமராஜர், "இனி நமது வேலை சுலபம். மின்சாரம் இல்லாமல் தவிக்கும் அந்த 60 கிராமங்களுக்கும், ஏற்கனவே அந்த தொழிற்சாலை நிர்வாகத்தால்  அமைக்கப்பட்ட டிரான்ஸ்பார்மர்கள் மூலமாக, மின்சாரத்தை எளிதாக நாம் விநியோகம் செய்து விடலாம். இதனால் அரசாங்கத்துக்கு ஏராளமான மின்கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கும் செலவு மிச்சமாகும்.
அதற்காகத்தான் உடனடியாக அந்தத் தொழிற்சாலைக்கு அனுமதி கொடுக்கச் சொன்னேன்.
புரியுதா ?"

ஆச்சரியத்துடன் அசந்து போய் அமர்ந்திருந்தார்கள் அதிகாரிகள்.
எவ்வளவு ஒரு சமூக அக்கறை ?
எப்பேர்ப்பட்ட கூர்மையான சிந்தனை !

அதற்கு முன்னும் சரி. அதற்குப் பின்னும் சரி.  அந்த அளவுக்கு ஆற்றல் உள்ள, அக்கறை உள்ள அரசியல் தலைவரை, எந்த அதிகாரியும் கண்டது இல்லை.

இப்படிப்பட்ட காமராஜரை பாராட்டாமல் இருக்க முடியுமா ? பக்கம் பக்கமாக பாராட்டி எழுதினார்கள் பத்திரிகையாளர்கள்...

அப்போதுதான் காமராஜரிடமிருந்து, பத்திரிகையாளர்களுக்கு ஒரு அவசர அழைப்பு வந்தது. என்னவோ ஏதோவென்று விரைந்து சென்று காமராஜரை சந்தித்தார்கள் பத்திரிகையாளர்கள்.

காமராஜர் "ஒரு முக்கியமான விஷயத்தை சொல்லத்தான் உங்களைக் கூப்பிட்டேன். உங்கள் பத்திரிகைகளில் அடிக்கடி என்னை பாராட்டி எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்.
இனிமேல் என்னை பாராட்டி எழுதாதீர்கள்."

இதைக்கேட்ட பத்திரிகையாளர்கள் ஒன்றும் புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள, தொடர்ந்து காமராஜர் சொன்னார்.

"நான் நேர்மையோடு இருப்பது பெரிய விஷயம் இல்லை. ஏனென்றால் எனக்கு மனைவியோ குழந்தைகளோ, குடும்பமோ இல்லை. ஆகவே எனக்கு தேவைகளும் எதுவும் இல்லை. ஆனால் இந்த கக்கனை பாருங்கள். அவருக்கு குடும்பம் இருக்கிறது. மனைவி, குழந்தைகள் இருக்கிறார்கள். அப்படியிருந்தும் அவர் நேர்மையோடு இருக்கிறாரே..! அதுதானே பெரிய விஷயம். அவரைத்தான் நாம் பாராட்ட வேண்டும். இனிமேல் என்னை பாராட்டி எழுதுவதைவிட கக்கனைப் பாராட்டி எழுதுங்கள்."

காமராஜரின் இந்த பக்குவமான பேச்சைக் கேட்ட பத்திரிகையாளர்கள் பரவசமாகிப் போனார்கள்.

ஆன்மீகத்தில் மட்டுமல்ல ; அரசியலிலும் அவ்வப்போது சில மகான்கள் அவதரிப்பது உண்டு. அப்படி ஒரு அவதாரம் எடுத்து நம்மிடையே வாழ்ந்தவர்தான் காமராஜர்.

காமராஜர்... ஒரு சரித்திரப் பொக்கிஷம். 🙏🙏 

பெருந்தலைவரை எவ்வளவு கேவலப்படுத்தி அரசியல் மேடையில் பேசினார்கள். எவ்வளவு அவமானப் படுத்தினார்கள். களங்கம் கற்பித்தார்கள். இந்த மக்களே அவரை தோற்கடித்தார்கள். அந்தப் பாவம் தான் சாராயக் கடைகளாக மாறிக் குடும்பங்களை அழித்துக் கொண்டிருக்கிறது///

தெரிவு: சக 

kanmani tamil

unread,
Apr 9, 2025, 12:53:48 AMApr 9
to vallamai
நான் பிறந்த ஊரில் பங்குனிப் பொங்கலும் பொருட்காட்சியும் பிரிக்க முடியாத இரட்டைப் பிறவிகள் போல...

இன்றும் அப்படித்தான்; ஆனாலும்...

தலைமுறை இடைவெளி என்பது அகில உலகிலும் நீக்கமற நிறைந்து இருக்கும் நடைமுறைச் சிக்கல் என்பது மறுக்கவொண்ணாதது அல்லவா!

///அன்றைய விருதுநகர் இந்து நாடார்கள் தேவஸ்தானம் மற்றும்க்ஷத்திரியா வித்யாசாலா மேனேஜ்மென்ட் நிர்வாகத்தினர்கள் பங்குனி பொங்கல் மண்டகப்படி நிகழ்ச்சிக்கும் பொருட்காட்சி நிகழ்ச்சி நிரல்களுக்கும் தமிழகத்திலேயே சிறந்த கலை விற்பனர்களை அழைத்துவந்து திருவிழாக்காலங்களில் இலவசமாகவும் குறைந்த கட்டணத்திலும் அதாவது 25 பைசா 50காசு டிக்கட்வழங்கி அவர்களின் கச்சேரியை கேட்க ஏற்பாடு செய்தனர். வேறு ஊர்களில் சிறப்புக்கட்டணம் வசூலித்து தனி சபாக்களில் நடைபெறும் நிகழ்ச்சிகள் விருதுநகரில் பொது இடங்களில் மண்டகப்படி அமைத்து அதில் இலவசமாக இசைப்பிரியர்கள் கேட்டு மகிழுமாறு திருவிழாக்கள் நடைபெற்றது. சமூகநோக்கு கல்வி வளர்ச்சிக்கான
சமுதாயத் திருவிழா- 

'சந்தைலாபம் பள்ளிக்கு; நட்டம் வந்தால் மகமைக்கு; நிகர லாபம் கே.வி.எஸ். பள்ளிகளுக்கே' 

இந்த விளம்பரம் ஏன் 
புரோக்கிராம் நோட்டிஸில் பிரசரிக்கப்படுவது வழக்கம். தற்சமயம் பிரசுரிப்பதில்லை???

விருதுநகரில் பொருட்காட்சியை
அறிமுகப்படுத்தியது பகளம் வகையறா ப.அ.ராமசந்திர நாடார்; பலசரக்கு மகமை தரப்பின் பொறுப்பில் ஆரம்பிக்கப்பட்டது. PTKT ராமசாமி நாடார் பொருட்காட்சி ஆரம்பிக்க முக்கிய காரணம். 
இதன் வளர்ச்சியில் பெரும் பங்கு பகளம் மற்றும் சிவராம் வகையாறக்களால் தான்.

விருதுநகர் பொருட்காட்சியைத் தொடரந்து சிவகாசி, சாத்தூர், அருப்புக்கோட்டை போன்ற நகர்களிலும் சமூக நோக்கு, கல்வி வளர்ச்சிக்கான
சமுதாயத் திருவிழாச் சந்தை தொடங்கப்பட்டன. 

பலசரக்கு கடை மகமையிலிருந்து ஆரம்பிக்கப்பட்டது.
லாபம் பள்ளிக்கு; நட்டம் வந்தால் மகமைக்கு... 

விருதுநகர் KVS நடுநிலைப் பள்ளி பொருட்காட்சியின் 
மு.அ.பழநிச்சாமி நாடார்
கலை அரங்கம் !  

முன்னொரு காலத்தில் விருதுநகர் மக்களை மகிழ்வித்த பொருட்காட்சிக் கலையரங்கம்... 

அன்றைய சினிமா நட்சத்திரங்கள் மேடையில் நடித்துத்தந்த நாடகங்கள்தான் எத்தனை?!?!?!
வேறு எங்குமில்லாத குறைந்த கட்டணம்; திறமையானவர்களின் கலைநிகழ்ச்சி; ஸ்டேஜின் அருகில் சென்று கலைஞர்களை காணும் வசதியாக ஒருவழிப்பாதை அமைத்துக் கூட்டம் கட்டுப் படுத்தப்பட்ட விதம்... மேலும் இந்த கலையரங்கில் ஸ்டேஜ் செய்த கலைஞர்கள் அனைவரும் புகழின் உச்சத்துக்குச் சென்ற ராசியான இடம். 

1946ல் கீற்றுக் கொட்டகை ஆகப் பிறந்து பின்னர்
தியாகராஜ பாகவதர் வந்த அன்று மழை... பாகவதரும் மக்களுடன் அமர்ந்து பேசிப் புகழ் பரவியது. 

1960 முதல் மு. அ. பழனிச்சாமி நாடார் கலை அரங்கம் எனப் பெயர் சூட்டப்பட்டு புது வடிவம் பெற்றது.

விருதுநகரில் கலை நிகழ்ச்சிகளுக்குத் தனிக்கட்டணம் இல்லாததால் உனது mass reach அதிகம்; என்று தமிழ்த்திரை உலகினர் கொண்டாடினர். 

1964 ல் விஸ்வநாதன் கச்சேரியில் மேடையில் மயில்வாகனனை ஏற்றி, இவரை உங்களுக்குத் தெரியுமா என்று கேட்க; எவருக்கும் தெரியவில்லை... மைக்ல் 'நேரம் சரியாக' என்று கூற ஆரம்பித்ததும்... மயில்வாகனன் அறிவிப்பாளராகத் தன் உன்னதக் குரலால் இன்ப அதிர்ச்சி தந்த அரங்கம்
      
பங்குனி & சித்திரை கோடையிலே M.K தியாகராஜ பாகவதர், K.B சுந்தராம்பாள், M.S.விஸ்வநாதன், K.Vமஹாதேவன், T.M.S, P.சுசிலா, ஜேசுதாஸ், S.P.B. போன்றோரின் இன்னிசை மழை...  
NSK, தங்கவேலு, கிரேசி மோகன் முதலானோரின் கிச்சு கிச்சு மழை...   
MGR ன் அட்வகேட் அமரன், இன்பக்கனவு நாடகங்களில் முதன் முறையாக அவரைக் கண்டு மக்கள் 'அங்கமா இல்லை தங்கமா' என்று திளைத்திட்ட ஆனந்த மழை... மேடையில் MGR குண்டுமணியை குண்டுக்கட்டாக தூக்கிச் சுழற்றியதில் எப்படிப்பட்ட ஆர்ப்பாட்ட மழை...  
1959 ல் உன் புதிய திறந்தவெளி அரங்கின் வடிவிற்கு அடிப்படைக் கல் நாட்டிய சிவாஜி கணேசன், தேன்கூடு நாடகத்தில் காட்டிய நேர்த்தியான நெஞ்சு வலியால் கலங்க வைத்த மழை... கட்டபொம்மனாக வீரவசன மழை ....
சிவாஜி கணேசன் நாடகம் போட்டு ஒரு லட்சம் நன்கொடை கொடுத்து கட்டிய கலை அரங்கம்... கல்வெட்டு உண்டு.
(முகம்மது பின்- நான் பார்த்து இருக்கிறேன்) துக்ளக் ஆக சோவின் பரபரப்பு மழை... 
ஹேமமாலினியின் பரதநாட்டியப் பூ மழை... 
(வெண்ணிற ஆடை நிர்மலாவின் நாட்டியம் நான் கண்டு ரசித்து இருக்கிறேன்.) 
R.S.மனோகர் சரித்திர நாடகங்களின் பிரம்மாண்டமான அரங்க அமைப்புகளை அம்மேடை அழகுற ஜொலிக்கச் செய்தது... மனோகர் நாடகங்கள், மாலிக்காபூர் (விஸ்வாமித்திரர், ஒட்டக்கூத்தர் நாடகங்கள்- நான் பார்த்தவை), காடகமுத்தரையன் பார்த்து மகிழ்ந்த ஞாபகம் வரும்.

ஒவ்வோர் ஆண்டும் இறுதி நாடகங்களாக லட்சுமிகாந்தன், ரத்தக்கண்ணீர் நாடகங்களை தன் இறுதி நாட்கள் வரை அதிரடியாக M.R.ராதா நடத்தியது... (அவர் சிறையில் இருந்து வெளிவந்த பிறகும் நடத்தினார்- நான் அப்போது தான் பார்த்தேன்). 
இப்படி எத்தனை, எத்தனை.... 
பின்னர் எம்.ஆர்.ராதா மகன் 
எம்.ஆர்.ஆர்.வாசு
எம்.ஆர்.ஆர்.ரவி காலத்தில் அதே நாடகங்கள்...
பல ஆண்டுகள் MSV யின் கச்சேரி... 
அதில் T.M.S. P.சுசிலா L.R.ஈஸ்வரி இன்னும் பலரின் குரல் சங்கமித்த மேடை...
இனிமையான நினைவுகள்...
பின்னர் இளையராஜா
கங்கை அஅமரன்
சங்கர் கணேக்ஷ்
இன்னிசைக் கச்சேரி...
எத்தனையோ புது மேடைப் பாடகர்களுக்கும், பாடகிகளுக்கும் வாய்ப்பளித்து அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திய பெருமை இந்த அரங்கத்துக்கு உண்டு.

ராணுவம் தவிர்த்துத் தனிப்பட்டோர் பைனாகுலர் எனும் தொலைநோக்கிகளைப் பயன்படுத்திய வரலாற்றில் விருதுநகரின் இந்தக் கலையரங்கத்திற்கு முக்கியப் பங்கு உண்டு,

சிறுவர்கள் உறவினர்களிடம் இருந்து இலவச பாஸ் பெறவும் பைனாகுலர் இரவல் பெறவும் என காலை முதல் வேலைகள் மாலைவரை களைகட்டியதற்கு காரணமே இந்தக் கலையரங்கம்தான்
💐
அரங்கத்துக்கு முன்னால் உள்ள பள்ளத்தில் நடந்து நடிகர்களை அருகில் பார்க்கும் அனுபவம் புதுமை. கலைஞர்களை அருகில் காண இதன் அருகே அமைக்கப்பட்ட பள்ளமான குறுகிய ஒரு வழிப் பாதையில் பாதம் படாதவர் எவரேனும் இருந்திருப்பார்களா?...  
ஊர்மக்கள் அனைவரும் ஒரு குடும்பம் போல ஏற்றத் தாழ்வின்றி அன்னியோன்யமாகத் தரையில் அமர்ந்து நிகழ்வுகளை ரசிக்க வைத்தது மிகப்பெரும் வெற்றி...  
வீட்டுக்கு ஒரு பிள்ளை bed sheet உடன் வந்து, தன் குடும்பத்தினருக்காக இடம் பிடித்துப் பொறுமை காட்டிக் காத்திருந்த குடும்பப் பாங்கு இந்த மேடை கற்றுத் தந்தது... 
காதும் காதும் வைத்த மாதிரியாக எவர் மனமும் புண்படாது decent ஆக மைதானத்தில் உன் முன்னிலையில் நடந்த பெண் பார்க்கும் படலங்கள் தானே விருதுநகரின் கல்யாண மாலை ஆகியது.... மனிதநேயத்துக்கும் உணர்வுக்கும் ஆதாரமாக இருந்த இடம்... பெண் வீட்டார் தனது மகளுக்குக் கல்யாணம் பண்ண முடிவு பண்ணினால் சேலை உடுத்தி அழைத்து வருவது நடைமுறை வழக்கம்... இன்று அந்தப் பெருமையெல்லாம் இழந்துவிட்டோம்

1951 ஆம் ஆண்டு ஈட்டிய லாபத்தினால் மதுரை சாலையில் உள்ள K.V.S. நிலத்துக்கு அருகாமையில் உள்ள நிலங்கள் சேர்த்து வாங்கப்பட்டு இன்றைய கட்டிடங்களும், விளையாட்டு மைதானங்களும், வியத்தகு ஸ்டேடியமும் நிறுவ உதவியது இதே மேடை தான். இப்படி சாதனைகள் பலப்பல... 

1988 இல் இருந்து 
மதுரை ரோடு மேல் நிலைப்பள்ளிக்கு மாற்றும் வரை பொருட்காட்சி அலுவலக 
அறை (நிர்வாகிகள் அறை) முன்பு ஒலிபெருக்கி மூலம் 
விளம்பரத்திற்கு இடையே பொருள்காட்சி நிகழ்ச்சி பற்றிய அறிவிப்பு செய்யும் பணி அனைவரையும் கவரும். 
விருதுநகரின் கலை உணர்விற்கு அரை நூற்றாண்டுக்கும் மேல் உயிர் ஊட்டியது... 2003 ஆம் ஆண்டு வரை தீவிரக் கலைப் பணி ஆற்றியது. 

கலைஅரங்கமாக, விருதுநகரின் 20ம் நூடு.ப் புவிசார் குறியீடு ... 
ஆம், விருதுநகரின் மற்றும் ஓர் பெருமை ....
பின்னர் மதுரை ரோடு பள்ளிக்கு மாறியது.
இப்போது பொருட்காட்சி பிரம்மாண்டமாயிருந்தாலும் அந்தக் காலப் பொருட்காட்சி ஒரு அற்புதம்தான்!///

அடைப்புக் குறிக்குள் என் நினைவுகள் 

தெரிவு: சக

Raju Rajendran

unread,
Apr 9, 2025, 6:05:07 AMApr 9
to vall...@googlegroups.com
<மகமையிலிருந்து> மகமை என்றால்?

புத., 9 ஏப்., 2025, 10:23 AM அன்று, kanmani tamil <kanmani...@gmail.com> எழுதியது:


--

Raju M. Rajendran

kanmani tamil

unread,
Apr 9, 2025, 11:16:55 AMApr 9
to vallamai
மகமை என்பது 'மகன்மை' என்பதன் மரூஉ எனக் கருதுகிறேன் ஐயா. 

குருதித் தொடர்பு இல்லாத பலர் சேர்ந்த ஒரு அமைப்பு.

அரிசிக்கடை மகமை எனின்...
அவர்களிடம் காணப்படும் ஒத்த தன்மை... எல்லோரும் அரிசி வியாபாரம் செய்பவராய் இருப்பர். அவர்தம் அமைப்பில் ஒவ்வொருவரும் எவ்வளவு பொருளைத் திருவிழா தொடர்பான செலவுக்கு நன்கொடையாகத் தர வேண்டும் எனத் தமக்குள் முடிவு செய்து பேதம் ஏதும் இன்றிக் கட்டுப்பட்டு அளித்து அத்தொகையைக் பொங்கல் கொண்டாடச் செலவு செய்வர்... மண்டகப்படி அமைப்பர்.

கொத்தமார் மகமை, 
பலசரக்குக் கடைக்காரர் மகமை, நவதானிய வர்த்தகர் மகமை... எனப் பல உள்ளன.

சக 



kanmani tamil

unread,
Apr 9, 2025, 2:27:18 PMApr 9
to vallamai
உதாரணத்திற்கு ஒன்று:
பருத்தி விதைக்கடை மகமை மண்டபம் 


இந்த மண்டபத்தின் அலங்காரச் செலவு, ஒலிஒளி அமைப்புச் செலவு இதர செலவுகள் அனைத்தும் மகமை உறுப்பினர்கள் தாம் தமக்குள் வசூலித்த பணத்தை வைத்துச் செய்வர். 

சக 

சக 

kanmani tamil

unread,
Apr 17, 2025, 2:04:34 PMApr 17
to vallamai
புவிசார் குறியீடுகள் பெற்ற தமிழகத்துப் பொருட்கள் பட்டியலில் எங்க ஊர் சம்பா வத்தல்...


சக 

Raju Rajendran

unread,
Apr 18, 2025, 11:37:04 PMApr 18
to vall...@googlegroups.com
வற்றல்-->வத்தல்?

வியா., 17 ஏப்., 2025, 11:34 PM அன்று, kanmani tamil <kanmani...@gmail.com> எழுதியது:


--

Raju M. Rajendran

kanmani tamil

unread,
Apr 19, 2025, 12:25:05 AMApr 19
to vallamai
ஆம் ஐயா; 
மிளகாய் வற்றல் = வறை மிளகாய்; 
வத்தல் என்பது எங்கள் வட்டாரப் பேச்சு வழக்கு 
சக 

kanmani tamil

unread,
Apr 20, 2025, 11:49:06 PMApr 20
to vallamai
விருதையைச் சுற்றியுள்ள தொல்லியல் எச்சங்கள்... தனியார் அடையாளம் கண்டு சொன்னவை. 

https://www.facebook.com/share/1F51BwmECS/

சக 

kanmani tamil

unread,
Apr 23, 2025, 1:09:36 AMApr 23
to vallamai
அதிகாரபூர்வமான அறிவிப்பு 


சக 

kanmani tamil

unread,
May 1, 2025, 12:34:09 AMMay 1
to vallamai
வல்லமை குழுமத்தார் அனைவருக்கும் உழைப்பாளர் தின வாழ்த்துகள்... 
வாழ்க! வளர்க!


சக 

kanmani tamil

unread,
May 4, 2025, 1:41:56 PMMay 4
to vallamai
ஆந்திர மாநிலத்தின் அன்றைய முதல்வர் NTRக்கும் எங்கள் விருதுநகர் மாவட்டத்தோடு ஒரு தொடர்பு உள்ளதாம். 

எங்கள் மாவட்டத்து (விருதுநகர்) ராஜபாளையம் பற்றிய பெருமைக்கு உரிய செய்திகள்:


கரிவலம் வந்த நல்லூர் > கரிவலம் 

இவ் ஊரில் பால்வண்ண நாதர் என்ற சுயம்புலிங்க சாமி எழுந்தருளி உள்ளார். அவருக்கு நெற்றியில் பொட்டு வைத்தது போல ஒரு கருவட்டம்... இயற்கையான விளைச்சல்... அம்சமாக இருக்கும். 

சக 

kanmani tamil

unread,
May 4, 2025, 11:10:11 PMMay 4
to vallamai
மதுரை சித்திரைத் திருவிழாவில் நீர் பீய்ச்சும் நேர்ச்சையைச் செய்து முடிக்கப் பயன்படும் தோப்பறை (தோல்பை உறை > தோப்பறை) எங்கள் மாவட்டத்துக் காரியாபட்டியில் மட்டும் தான் உற்பத்தி ஆகிறதாம்.

M.Com(CA) படித்து முடித்து இருந்தாலும் பாரம்பரியத்திற்குக் குறை ஏதும் நேர்ந்து விடாமல் பணி செய்யும் ஈடுபாடும் ஆன்மிகக் கடமை உணர்வும் போற்றத் தக்கன. 


சக 

kanmani tamil

unread,
May 6, 2025, 3:31:47 PMMay 6
to vallamai
விருதுநகர் மாவட்டத்தில் தொல்லியல் ஆர்வலர்கள் கண்ட பழங்காலக் கிணறு...

சக 

kanmani tamil

unread,
May 10, 2025, 2:00:49 AMMay 10
to vallamai
/// 1910லேயே
கல்விக்காகத் தன் உடல், பொருள், ஆவி ஈந்த எத்தனையோ கொடை வள்ளல்களில் ஒருவர் எங்கள் “விருதை பாரதி” 
திரு.திருவாலவாய நாடார் அவர்கள்.

 வீட்டிற்குள்ளே பெண்ணைப் பூட்டி வைத்த விந்தை மனிதர்கள் வாழ்ந்த காலம் அது. அடுப்பூதும் பெண்ணிற்கு கல்வி எதற்கு? என்று எகத்தாளம் பேசிய எத்தர்கள் நிரம்பிய காலம் அது. மாட்டுத் தொழுவத்திலும், காட்டு வேலையிலும் பெண்டிரின் பெருமைகளை சிறுமையாக்கிய கொடுங்காலமது.

மனிதருள் மாணிக்கமாம் திரு.திருவாலவாய நாடார் அவர்கள் “பெண்களே நாட்டின் கண்கள்” என்றுணர்ந்து, பெண்கள் கல்வி கற்றால் நாடே வளம் பெறும் என்பதை வலியுறுத்தி, வீடு வீடாகச் சென்று வாதிட்டபோது சாணி உருண்டையால் அடி வாங்க நேர்ந்தது. பெண்கள் படிக்க வேண்டும் என்ற வாசக அட்டையை தன் நெஞ்சிலும், முதுகிலும் தொங்க விட்டுக் கொண்டு வீதியில் நடந்து சென்றார். இதற்கு அவர் பெற்ற பரிசு, கேலியும் ஏளனமும்.

அன்னாரின் கடுமையான முயற்சிக்குப் பின் தன் மனைவி மங்கம்மாள் வாழ்ந்த இடத்திலேயே பள்ளியமைக்க விரும்பி, தன் வீட்டையே கொடுத்த கொடையாளர். மங்காவின் மச்சி வீடு என்ற பெயரே மருவி இப்பொழுது “மாங்கா மச்சி” என்று அழைக்கப்படுகிறது.

பாக்கு வியாபாரத்திலே கிடைத்த பங்கை, பள்ளிக் கட்டிட நிதிக்கு அளித்தார். பள்ளி கட்டிடப் பணிக்கு வீதியில் கிடக்கின்ற கல்லையும், மண்ணையும் தன் தோளில் சுமந்து பணி செய்தார். தன் முயற்சியின் வெற்றியினால் 1910ம் ஆண்டு பெண்களுக்கென தனிப் பள்ளிக்கூடம் அமைத்தார். 1மற்றும்2ம் வகுப்புகள் கொண்ட “இந்து நாடார் பெண் பாடசாலையை” ஆரம்பித்தார்.

அவ்வாறு ஆரம்பிக்கப்பட்டப் பள்ளி ஆல விருட்சமாய், என்றும் அழியாப் புகழ் பெற்று, நூறு ஆண்டுகளைக் கடந்து, விருதைப் பெண்களின் திறமையை உலகிற்குப் பறை சாற்றி வருகிறது .

 இணைப்பு கீழே



சக

kanmani tamil

unread,
May 13, 2025, 1:22:38 AMMay 13
to vallamai
விருதுவெட்டி > விருதுபட்டி > விருதுநகர் 

Martial arts... அதாவது தற்காப்புக் கலையில் முதன்மையாக விருது பெற்ற ஒருவரின் பெயரால் அமைந்த ஊர். காலப்போக்கில் பட்டி ஆகிப் பின்னர் நகர் ஆனது. 


சக 

kanmani tamil

unread,
May 18, 2025, 11:31:45 AMMay 18
to vallamai
விருதுநகர் மாவட்டத்தின் குறிப்பிடத் தக்க பெருமைகள் 


சக 

kanmani tamil

unread,
May 19, 2025, 9:26:15 AMMay 19
to vallamai
இது சொந்த ஊரின் சோகக் கதை: 


பட்டாசின் வரவாறு சுருக்கமாகச் சொல்லப்படுவது சிறப்பு. 

சக 

kanmani tamil

unread,
May 19, 2025, 1:53:18 PMMay 19
to vallamai
ஜவகர்லால் நேருவால் 'குட்டி ஜப்பான்' என்று புகழாரம் சூட்டப்பட்ட ஊர் எங்கள் ஊர். 


சக 

kanmani tamil

unread,
May 22, 2025, 6:54:53 AMMay 22
to vallamai
விருதுநகர் மாவட்டத்தில் அழிவின் விளிம்பில் இருந்து காப்பாற்றப் பட்ட மண்டபம்...

https://youtube.com/shorts/q01gkmW7hTE?si=_YUK8ifMEx4_qv64

ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து மம்சாபுரம் செல்லும் பாதையை ஒட்டித் திருமலை நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டதாகச் சொல்லப் படுகிறது. 

சக 

kanmani tamil

unread,
May 22, 2025, 10:04:41 AMMay 22
to vallamai
https://youtu.be/3y_EYs_s2S8?si=x2w1aFQLS_QkE7Il

பல்லவர் குடைவரைக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்தவை முற்காலப் பாண்டியர் குடைவரைகள். அவற்றில் ஒன்றாகக் கருதப்படுவது செவல்பட்டிக் குடைவரைக் கோயில். 

சக 

kanmani tamil

unread,
May 22, 2025, 11:42:46 PMMay 22
to vallamai
என்ன அழகான கற்பனை...

ஒவ்வொரு மனிதனுக்கும் பிறந்த மண்ணும் வாழ்ந்த மண்ணும் உயிரோடு கலந்து விடும் நெருக்கம் தான். 

இதில் highlight என்னவென்றால் gateway of Sivakasi திருத்தங்கலாம்!!! 

எங்கள் பொட்டல்காடு பார்க்க எவ்வளவு ரம்மியமாக இருக்கிறது! 😃

https://www.facebook.com/share/p/16h8ndaeK9/

சக 

kanmani tamil

unread,
May 25, 2025, 3:32:37 AMMay 25
to vallamai
விருதுநகர் மாவட்டத்து வெம்பக்கோட்டை அகழ்வாய்வில் கிடைத்த வியத்தகு பொருட்கள்...


அப்பகுதி மக்களை ஆப்கானிஸ்தான் பகுதியோடு தொடர்புடையதாகக் காட்டும் கார்னீலியன் மணிகள்...

கல்லால் ஆன புல்லாங்குழல் இதுவரை கேள்விப்படாதது!!!

தண்டட்டி (காதணி) தங்கத்தால் ஆனதும், தந்தத்தால் ஆனதும்... வேறு எந்த அகழ்வாய்வுத் தளத்திலாவது கிடைத்து உள்ளதா?!

வெவ்வேறு அளவிலான சுடுமண் பானைகள்... வளமான குயவர் குடியிருப்பை உணர்த்துகிறது. 

இப்பகுதியைத் தொட்டு ஓடிய ஆறு வைப்பாறு... இப்போது வறண்டு தான் கிடக்கிறது. காட்டாறு - மழை பெய்தால் நீரோடும். ஒரு அணையும் உண்டு. 

வரலாற்றுக்கு முற்பட்ட காலகட்டத்தில் வளம் நிறைந்த பகுதியாக இருந்து தமிழரின் தொன்மை நாகரிகத்தில் பங்கேற்கிறது. 

சக

kanmani tamil

unread,
May 27, 2025, 1:30:28 AMMay 27
to vallamai
விருதுநகர் மாவட்டத்து ராஜபாளையத்தில் இருக்கும் சஞ்சீவி மலை...

பொதுமக்கள் வழக்கம் போல் இராமாயணத்து அனுமன் தூக்கி வந்ததாகச் சொல்லப்படும் சஞ்சீவி மலையோடு தொடர்புறுத்தி; அனுமன் பறக்கும் போது கீழே விழுந்த துண்டு என்பர்.

அவ்வூரில் பிறந்து வளர்ந்த என் கணவருக்கோ சிறு வயதில் அன்றாடம் அலுக்காமல் ஏறித் தன் ஜோட்டுப் பாலகரோடு ஒளிந்து விளையாடியதும்; இறங்கும் போது மலை முழுவதும் காய்த்துக் கிடந்த சுண்டைக் காய்களைப் பறித்து வந்து அம்மாவை சமைக்கச் சொன்னதும் தான் நினைவிற்கு வரும். 

கல்லூரிப் பணியின் போது சக ஆசிரியரோடும் பின்னர் குடும்பத்தோடும் அடுத்து மாணவியரோடு ஒரு முறையும் என மூன்று முறை ஏறி இருந்தாலும்... பொழுது போக்க ஏறினேன் ஆதலால்; மலை உச்சியில் காட்டும் கோட்டுருவப் பெருமாளை நான் பார்க்கத் தவறி விட்டேன்.


இந்தக் காணொலி காட்டும் கோட்டுருவப் பெருமாள் பௌத்த சமயத் தடயம் என்பது என் கருத்து. இதே போன்ற கோட்டுருவச் சிற்ப வேலையை மும்பை எலிஃபென்டா குகையில் காணலாம் (கணபதி உருவம்). ஆண்டிற்கு ஒருமுறை திறக்கப்படும் அமர்நாத் குகையின் வாயிலின் மேற்புறத்திலும் காணலாம் (புத்தரின் உருவம்).

கற்காலத்து ஓவியங்கள் இக் குன்றில் இருப்பதை இப்போது தான் நானும் அறிகிறேன். 

கற்காலத்தில் இருந்து மனிதன் வாழ்ந்த இடம் என்பதும் ஒரு பெருமிதம் தானே. 

சக 

kanmani tamil

unread,
May 27, 2025, 8:44:42 AMMay 27
to vallamai
விருதுநகர் மாவட்டம் மீனாட்சிபுரம் குன்றில் இருக்கும் குகைகளும் ஓவியங்களும்...


புலனக் காணொலிகள் இத்தகைய தேடல்களை வெளி உலகிற்குக் கொண்டு வர மிகவும் துணை செய்கின்றன. 

சக 

kanmani tamil

unread,
May 28, 2025, 1:34:11 AMMay 28
to vallamai
விருதுநகர் மாவட்டத்து வத்றாப்- Watrap 
(< வத்திராயிருப்பு < வற்றாத இருப்பு) வட்டத்தில் இருக்கும் கான்சாபுரம் (<<< கான்சாகிப் புரம்) ஊருக்கு வெளியில் இருக்கும் மண்டபம்... நீர்வளத்தால் உருவான பெயர்... ஆறு இல்லை; பெரிய கண்மாய். 

https://youtu.be/8KJZOMWFuCw?si=E6s8ZDQghlxN6Iyq

கிட்டத்தட்ட அழிந்து விட்ட பெருமாள் கோயில் ஒன்றின் மண்டபம் மட்டும் இன்று எஞ்சி உள்ளது. உள்ளே பட்டைத் தூண்களும் பாண்டியர் சின்னம் ஆகிய மீனும் வைணவச் சின்னங்கள் ஆகிய சங்கு சக்கரமும் அக் கட்டுமானத்தைச் சார்ந்த கிணற்றினுள் சீவல்லபன் என்ற பாண்டியர் பெயரும் வரலாற்றுத் தடயங்களாக உள்ளன. 

ஊரின் பெயரில் இருக்கும் 'கான்சா -' எனும் பகுதி ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மதுரைக் கோட்டையைக் கைப்பற்றித் தனதாக்கிக் கொண்ட; திருநெல்வேலிச் சீமையில் பிறந்த மருதநாயகம் என்ற யூசுப்கானின் பெயரால் அமைந்த ஊர் என்பதைச் சொல்கிறது. 

சைவப்பிள்ளை குலத்தில் பிறந்த மருதநாயகம் பாலகனாக இருந்த போதே பெற்றோரை இழந்து விட... பரந்த மனம் கொண்ட இஸ்லாமியர் ஒருவரால் எடுத்து வளர்க்கப் பட்டாராம். அவர் இட்ட பெயர் தான் யூசுப்கான். 

வாலிபப் பருவத்தில் ஆங்கிலேயரின் படையில் சிப்பாயாகச் சேர்ந்தாராம். படிப்படியாக முன்னேறி ஒரு படைக்குழுவின் தலைமைப் பொறுப்பை ஏற்றுப் பின் ஒரு பிரெஞ்சுப் பெண்ணை மணந்து கொண்டாராம். ஆங்கிலேயருக்காக மதுரைக் கோட்டையை முற்றுகை இட்டுக் கைப்பற்றிய பிறகு; தன்னைத் தானே கோட்டைக்குப் பொறுப்பாக்கிக் கொண்டு ஆங்கிலேயர் படையெடுப்பைப் பலமுறை முறியடித்துத் தோற்று ஓட வைத்தவர் யூசுப்கான். அத்தோடு கோட்டையைப் பலமுறை செப்பனிட்டு நன்னிலையில் வைத்திருந்த அவரை ஒரு ஃப்ரெஞ்சு வேலைக்காரன் காட்டிக் கொடுத்த பிறகு தான் மதுரைக் கோட்டை ஆங்கிலேயர் வசமானதாம்.

Madurai Through the Ages என்ற; ம.கா.பல்கலையின் முன்னாள் வரலாற்றுத் துறைத் தலைவர் முனைவர் ராஜையனின் ஆய்வேட்டில் கிடைத்த செய்தி இது. 

கமலஹாசன் மருதநாயகம் என்ற பெயரில் ஒரு படம் எடுக்கத் தொடங்கி அது பாதியில் நின்று போனது இந்த வரலாறு தான்.

இக் கான்சாகிப் பெயரால் உருவான இவ்வூர் பண்டு பாண்டியரின் பேர் சொல்லும் பெருமாள் கோயிலோடு புகழ் மிகுந்த ஊராகத் திகழ்ந்தமை தெரிகிறது. 

சக 

kanmani tamil

unread,
May 29, 2025, 9:37:39 AMMay 29
to vallamai
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து மதுரை செல்லும் பாதையில் இடைப்படும் பிள்ளையார் நத்தம்...
சிதைந்த நிலையில் ஒரு சத்திரம்& அரண்மனை...
இரண்டையும் பிரித்துக் குறுக்கே செல்லும் பேருந்துத் தடம்...


ஆங்கிலேயர் ஆட்சியைத் தொடர்ந்து பாரதம் ஒரு நாடு ஆகி; மக்கள் தொகை பெருக்கத்தோடு (population explosion); அறிவியல் மேலோங்கித் தொடர் வண்டிகளும் பேருந்துகளும் மிகுதியாகி; அதற்கேற்ப மக்கள் போக்குவரத்தும் மிதமிஞ்சிப் போனதால் பல வரலாற்றுக் கட்டுமானங்களும் குளங்களும் துண்டாடப்பட்டு; பண்டைப் பாதைகளும் வழக்கு ஒழிந்தன. 
இந்த மண்டபமும் அதற்கு ஒரு சான்று. 

சக 

kanmani tamil

unread,
May 29, 2025, 1:53:24 PMMay 29
to vallamai
#சிவகாசி யை மிகப் பெரிய தொழில் நகரமாக மாற்றிய #சண்முகநாடார் வரலாறு

பத்தொன்பதாம் நூற்றாண்டுக்கு முன்பு சிவகாசி என்கிற நகரம் இன்றைக்கு இருப்பதில் ஆயிரத்தில் ஒரு மடங்கு கூட இல்லை. ஏறக்குறைய கிராமமாக இருந்த அந்த ஊரில் விவசாயம்தான் பிரதான தொழிலாக இருந்தது.

 கயிறு திரிப்பது, மண் பானை செய்வது, பால் மாடு வளர்ப்பது என சின்னச் சின்ன தொழில்களைச் செய்து பலரும் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தனர்.

இந்த நேரத்தில் சிவகாசியில் இரண்டு இளைஞர்கள் புதிய கோணத்தில் யோசிக்க ஆரம்பித்தார்கள்.

அவர்களில் ஒருவர் #அய்யநாடார். அவருக்கு அப்போது 17 வயது. இன்னொருவர், சண்முக நாடார். இவருக்கு அப்போது 19 வயது. அய்ய நாடாரின் தந்தையார் பழனியப்ப நாடாரும், சண்முக நாடாரின் தந்தையார் ஆறுமுக நாடாரும் உடன்பிறந்த சகோதரர்கள்.

இந்த இளைஞர்களின் உறவினர் ஒருவர், பத்திரிகையில் வந்த செய்திக் கட்டுரை ஒன்றை அவர்களிடம் காட்டினார். #தீப்பெட்டி தயாரிப்பது எப்படி என்பது பற்றியும், அதில் பயன்படுத்த ப்படும் தொழில்நுட்பம் பற்றியும், எதிர்காலத்தில் தீப்பெட்டியின் பயன்பாடு எப்படி இருக்கும் என்பது பற்றியும் விளக்கமாக அந்த கட்டுரையில் எடுத்துச் சொல்லப்பட்டிருந்தது.

கட்டுரையைத் தந்த உறவினர், ''நீங்கள் இருவரும் கொல்கத்தாவுக்குப் போய் தீப்பெட்டி தயாரிப்பைப் பற்றி கற்று வரலாமே!'' என்று யோசனை சொன்னார். அவரது யோசனையைக் கேட்டு, சகோதரர்கள் இருவரும் கொல்கத்தாவுக்குப் புறப்பட்டனர்.

இது நடந்தது 1922-ல். அப்போது ரயில் வசதி பெரிய அளவில் இல்லை. தவிர, அவர்களுக்கு கொல்கத்தா என்பது புதிய பிரதேசம். அங்கு அவர்களுக்குத் தெரிந்தவர்கள் யாருமில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, அவர்களுக்கு வங்காள மொழி தெரியாது. இப்படி பல பிரச்னைகள் இருந்தும் அவர்கள் தயங்கி நின்றுவிடவில்லை. சென்னை வழியாக கொல்கத்தாவுக்குப் போய், அங்கு பல மாதங்கள் தங்கி இருந்து, தீப்பெட்டி தயாரிப்பு பற்றிய அத்தனை தொழில்நுட்பங்களையும் தெரிந்துகொண்டனர்.

கிட்டத்தட்ட எட்டு மாதங்கள் கொல்கத்தாவில் இருந்து பல பயிற்சிகளைப் பெற்றவர்கள் 1923-ல் சிவகாசியில் தீப்பெட்டி தொழிற்சாலை ஆரம்பித்தனர். 

அப்போது சிவகாசியில் முழுக்க முழுக்க இயந்திரங்கள் மூலம் தீப்பெட்டி உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. ஆனால், சண்முக நாடார் இந்த முறையானது சிவகாசிக்கு சரிப்பட்டு வராது என்பதை ஆரம்பத்திலேயே புரிந்துகொண்டார். 

காரணம், சிவகாசியைச் சுற்றியுள்ள கிராமங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வேலை இல்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தனர். 

இவர்களுக்கு தீப்பெட்டித் தொழிற்சாலைகளில் வேலை தந்ததன் மூலம் உற்பத்திச் செலவும் குறைந்தது. மக்களுக்கு வேலை கிடைத்து, அவர்களின் பொருளாதாரமும் வாழ்க்கைத் தரமும் உயர்ந்தது.

இந்த தீப்பெட்டி நிறுவனம் நல்ல வளர்ச்சி காணவே, அடுத்து பட்டாசு தயாரிப்பதிலும் இறங்கினார்கள் அய்ய நாடார் - சண்முக நாடார் சகோதரர்கள்.

 அந்த பிஸினஸும் வெற்றி வாய்ப்பைத் தரவே, அந்த சமயத்தில் எதிர்பாராதவிதமாக சகோதரர்கள் தங்கள் பிஸினஸை தனித்தனியாகப் பிரித்துக்கொள்ள முடிவு செய்தார்கள்

 தீப்பெட்டி தயாரிப்பை சண்முக நாடாரும், #பட்டாசு தயாரிப்பை அய்ய நாடாரும் எடுத்துக்கொள்ள முடிவானது.

தனியாகப் பிரிந்த சண்முக நாடார் தனது நிறுவனத்திற்கு ஸ்ரீ #காளீஸ்வரி என்று பெயர் வைத்தார்.

 தீப்பெட்டிகளை செய்யும் தொழிலில் அவருக்கு இருந்த ஈடுபாடு அதிகரிக்கவே, அந்த பிஸினஸும் பல்கிப் பெருகியது.

 பிற்பாடு பட்டாசு தயாரிப்பிலும் இறங்கி பெரும் வெற்றி கண்டார். ஆரம்பத்தில் ஒன்றிரண்டு என தீப்பெட்டித் தொழிற்சாலைகளை ஆரம்பித்தவர், பிற்பாடு பல தொழிற்சாலைகளை ஆரம்பித்து, ஒரு கட்டத்தில் 41 தொழிற்சாலைகள் மிகப் பெரும் நிறுவனமாக மாறியது.

 இன்றைக்கு ஸ்ரீ காளீஸ்வரி ஃபயர் ஒர்க்ஸ் நிறுவனத்தில் 6,500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்க்கிறார்கள்.

பிஸினஸில் வெற்றிகண்ட சண்முக நாடார், அடுத்து சமூக வாழ்க்கையிலும் ஈடுபட ஆரம்பித்தார்.

 குறிப்பாக, அரசியலில் ஈடுபட ஆரம்பித்தார். 1952-55 வரை சிவகாசி முனிசிபாலிட்டியின் தலைவராக இருந்தார்.

 சிவகாசி நகரம் பொருளாதார தன்னிறைவை அடைவதற்கும் குடிதண்ணீர் தட்டுப்பாடு ஒழிவதற்கும் பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்தார்.

அரசியல் வாழ்க்கையைத் தொடர்ந்து கல்விச் சேவையிலும் ஈடுபட ஆரம்பித்தார் சண்முக நாடார்.

 காளீஸ்வரி கலைக் கல்லூரி இன்றும் சிவகாசியில் முக்கியமான கல்லூரியாக இருக்கிறது.

 1969-ல் சண்முக நாடார் இறந்து போனாலும் அவரது ஐந்து மகன்களும், ஒரு மகளும் அவர் ஆரம்பித்த நிறுவனத்தை பல்வேறு நிறுவனங்களாக உயர்த்தி வருகின்றனர்.

 பட்டாசு தயாரிப்பு, மெட்டல் பவுடர் தயாரிப்பு, போக்குவரத்து, அச்சுத் தொழில், ஹோட்டல், நிர்வாக கல்லூரி என பலவாறாக பல்கிப் பெருகி இருக்கிறது.

 சிவகாசியை மிகப் பெரிய தொழில் நகரமாக மாற்றிக்காட்டிய சண்முக நாடாரை தமிழகம் என்றும் மறக்காது!

வரலாறு படிப்போம்! வரலாறு படைப்போம்!!

உழைப்பு ஒன்றே மூலதனம்...
உழைப்பால் மட்டுமே உயர்ந்த சிம்மாசனம்... #நாடார்கள் #அண்ணாச்சி 💥🖤❤️💥


தெரிவு: சக 

kanmani tamil

unread,
May 30, 2025, 7:12:32 AMMay 30
to vallamai
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நரிப்பாறையில் குகைக்கோயில் 


சக 

kanmani tamil

unread,
May 30, 2025, 7:20:19 AMMay 30
to vallamai
விருதுநகர் மாவட்டத்தின் சிறப்பு என்னவெனில் மேற்கே கரைகட்டியது (border) போல மேற்குத் தொடர்ச்சி மலை அமைந்து இருப்பது தான். அதனால் மேற்குமலை அடிவாரத்தில் பல குகைக் கோயில்களும் குடைவரைகளும் காணப்படுகின்றன. அவை பல்லவர் காலத்திற்கு முந்தைய பாண்டியப் பேரரசின் சமணச் சின்னங்களாக இன்று வரை நிலைத்து உள்ளன. 

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒரு திருமலைநாயக்கர் கால அரண்மனை உள்ளது. 

மதுரை அரண்மனையில் இருப்பதைக் காட்டிலும் பருமன் குறைவான தூண்கள் எனினும் மேற்கூரையின் வேலைப்பாடும்; இன்றுவரை அழியாத மூலிகைகளில் இருந்து பெறப்பட்ட வண்ணங்களும் வியப்பைத் தருகின்றன. 


சக 

kanmani tamil

unread,
May 31, 2025, 3:13:00 AMMay 31
to vallamai
The forsaken parts of Trinelveli dist. and Madurai dist. together form virudhunagar dist. என்று ஒரு காலத்தில் அரசு அதிகாரிகள் சொல்லிச் சிரிப்பர். விருதுநகர் மாவட்ட அலுவலகம் கூட நீண்ட காலமாக... 1970கள் வரை மதுரையில் தான் இருந்தது. 

அந்த ஒதுக்கப்பட்ட பகுதிகளின் மேற்கு ஓரம் மேலைமலைத் தொடரைத் தொடுவதால் பச்சையும் தண்ணீரும் நிறைந்த ஊராட்சிகள் சில உள்ளன. அதில் குறிப்பிடத் தக்கது மம்சாபுரம். 


இன்னொரு சுவாரஸ்யம் என்னவென்றால் மம்சாபுரம் என்ற பெயரின் காரணம் மகம்மது கான்சாகிப் புரம் >>>
மம்சாபுரம் என்கின்றனர். 

சக 

kanmani tamil

unread,
May 31, 2025, 3:25:26 AMMay 31
to vallamai
வாழைக்குளம் என்ற ஒரு குளம் மட்டும் அன்று; பல குளங்கள் சூழ்ந்த ஊராக இன்றும் வேளாண்மை தழைத்து இருக்கும் மம்சாபுரம் 

https://youtu.be/VUwFK0Ikhzk?si=gAEkVlKFxNrRn8Go

அது மட்டும் இன்றித் தன் பழம் பெருமைக்கு உரிய சின்னங்களையும் இன்றும் உயிர்ப்புடன் வைத்து இருக்கிறது. 

சக 

kanmani tamil

unread,
Jun 1, 2025, 12:15:56 AMJun 1
to vallamai
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள கிணற்றில் காணப்படும் இரண்டு கல்வெட்டுகள்...


இதில் குறிப்பிடப்படும் கழுகுமலை இன்று தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்ததாகக் காணப்படும் குன்று ஆகும். அக்குன்றின் அடிவாரத்திலும் ஒரு குகைக்கோயில் உள்ளது. சமணர் வழிபட்டது தான். சமணர் பிணங்களைப் போட்டுக் கிரியைகளைச் செய்த குன்று... முற்காலப் பாண்டியர் காலத்தைச் சேர்ந்தது. குன்றின் மேல் தான் வெட்டுவான் கோயில். குன்றை மேலிருந்து கீழ்நோக்கிக் குடைந்து கட்டியது. வெட்டுவான் கோயிலை ஒட்டி இருப்பது கல்லுக்குழி... ஊரணி... கிரியைகள் செய்ய மக்கள் நீராடிய நீர்நிலை உள்ளது. வெட்டுவான் கோயிலுக்கு உள்ளே இறங்கிச் சுற்றிப் பார்த்து விட்டு வழுக்கியோ தடுக்கியோ விழுந்தால் கல்லுக்குழிக்குள் தான் விழ வேண்டும். 

இரண்டாவது கல்வெட்டு... ஒரு கிணறு வெட்டினாலும் கல்லில் பொறிக்கும் வழக்கம் 19ம் நூற்றாண்டிலும் நடைமுறையில் இருந்தமை தெரிகிறது. 

சக 

kanmani tamil

unread,
Jun 1, 2025, 8:15:58 AMJun 1
to vallamai
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இருந்து சங்கரன்கோயில் போகும் வழியில் இருப்பது சேத்தூர்.


முற்காலப் பாண்டியர் காலத்தைச் சேர்ந்த சமணர் குகை... சமண முனிவர் ஓவியம்... கோவணத்துடன்... பாண்டியரின் மீன் சின்னம்... இரு மீன்களுக்கு நடுவில் பூவேலைப்பாட்டுடன்...

ஆயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட வரலாற்றுச் சுவடுகள் இப்படி இன்னும் நிறைய...

சக 

kanmani tamil

unread,
Jun 2, 2025, 12:47:11 AMJun 2
to vallamai
விருதுநகர் மாவட்டத்துக் குன்னூர் வத்திராயிருப்புக்கு அருகில் இருக்கும் பெருமாள் கோயில் கருவறையில் 800ஆண்டுகட்கு முற்பட்ட கல்வெட்டு 


சக 

kanmani tamil

unread,
Jun 2, 2025, 7:37:56 AMJun 2
to vallamai
///The forsaken parts of Trinelveli dist. and Madurai dist. together form virudhunagar dist. என்று ஒரு காலத்தில் அரசு அதிகாரிகள் சொல்லிச் சிரிப்பர். விருதுநகர் மாவட்ட அலுவலகம் கூட நீண்ட காலமாக... 1970கள் வரை மதுரையில் தான் இருந்தது./// இரு நாட்களுக்கு முன் நான் எழுதியது...

ஒரு சிறு திருத்தம்:
The forsaken parts of Trinelveli dist. and Madurai dist. together form Ramnad dist. என்று ஒரு காலத்தில் அரசு அதிகாரிகள் சொல்லிச் சிரிப்பர். ராமநாதபுர மாவட்ட அலுவலகம் கூட நீண்ட காலமாக... 1970கள் வரை மதுரையில் தான் இருந்தது./// இரு நாட்களுக்கு முன் நான் எழுதியது...

அதன் பின்னர் ராமநாதபுர மாவட்டத்தில் இருந்து விருதுநகர் மாவட்டம் தனியாகப் பிரிந்தது. அந்த ஒதுக்கப்பட்ட பகுதிகளின் மேற்கு ஓரம் மேலைமலைத் தொடரைத் தொடுவதால் பச்சையும் தண்ணீரும் நிறைந்த ஊராட்சிகள் சில உள்ளன. 

பின்வரும் கொல்லங் கொண்டான் அரண்மனையும் ஜமீன் பற்றிய செய்தியும் இது வரை நான் கேள்விப்படாதது. புதிதாகத் தான் பார்க்கிறேன். 


அருமையான கலை அழகுடன் கூடிய கட்டுமானம். 

சக 

kanmani tamil

unread,
Jun 2, 2025, 2:49:14 PMJun 2
to vallamai
விருதுநகர் மாவட்டம் வெம்பக் கோட்டையில் இருந்து ஆலங்குளம் செல்லும் பாதையில் காலத்தால் முற்பட்டதாகக் காணப்படும் பெருமாள் கோயில்.


400ஆண்டுகட்கு முற்பட்டது என்று இப்புலனப் பதிவாளர் கூறுகிறார். கருவறையில் இருக்கும் நம்மாழ்வார் திருவுருவமும் ராமானுஜர் திருவுருவமும் 400ஆண்டுகள் முற்பட்டதாக இருக்கலாம். ஆனால் கருவறை வாயிலின் மேல் உள்ள கஜலட்சுமியின் திருவுருவம் இக் கோயிலின் ஆசீவகத் தடயத்தைக் காட்டுகிறது என்பது பிற ஆய்வாளர்கள் சொல்வதன் அடிப்படையில் நான் கருதுவது ஆகும். 
ஒரு ஆசீவகம் சார்ந்த வழிபடு தலம் காலப்போக்கில் பெருமாள் கோயிலாக மாற்றம் பெற்று உள்ளமை அதன் காலத்தைப் பல நூற்றாண்டுகட்கு முன்னர் கொண்டு செல்கிறது. 

சக 

kanmani tamil

unread,
Jun 3, 2025, 4:16:40 AMJun 3
to vallamai
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்து இருக்கும் மலை மேல் உள்ள செண்பகத் தோப்பு எனும் பகுதியில் இருக்கும் காட்டழகர் கோயில். பாண்டியனின் மீன் சின்னம் பொறிக்கப்பட்ட கோயில். 


எட்டு கி.மீ. பயணத்திற்குப் பின் சேரும் இவ்விடத்தில் பெயருக்கு ஏற்ற செண்பக மரங்கள் இருக்கின்றனவா என்றே தெரியவில்லை. யாருமே அது பற்றிப் பேசவில்லை. 

அழகருக்கு உரிய மலை என்றாலே அங்கு பெருகும் ஊற்றுநீர் நூபுரகங்கை என்று பெயர் பெறுவது குறிப்பிடத் தக்கது. 

யானை, கரடி, கழுதைப்புலி இருப்பதாகவும் பார்த்ததாகவும் பலரும் சொல்லக் கேள்வி... சாம்பல் நிற அணில்கள் இம் மலைப்பகுதியில் மட்டுமே காணப்படுகிறதாம் (ஒரு அணில் மட்டுமே ஒரு பூனை சைஸுக்கு பெரிதாக இருக்குமாம்.). 

நாற்பதாண்டுகளுக்கு முன் நண்பர்களோடு என் கணவர் போய் வந்த போது; நடந்து வந்த பாதையில் குறுக்கே பெரிய மலைப்பாம்பு எதையோ முழுங்கி விட்டு; நகர மாட்டாமல் கிடந்ததை நேரில் கண்டதாகக் கூறினார். அந்த அளவிற்கு பயத்தைக் கொடுக்கக் கூடிய பயணம் தான். மாலையில் திரும்பி வந்து கால்வலியால் சோர்ந்து போவோர் பலர். 

இக் கோயிலில் வழிபாடு ஒவ்வொரு சனி, ஞாயிறும் நிகழ்த்தப் படுவதாகச் சொல்கின்றனர். இங்கே சிவகாசியில் இருந்து வார இறுதியில் மக்கள் கிளம்பிச் செல்கின்றனர். 

கூட்டமாகச் சேர்ந்து தான் செல்வார்களே அன்றி யாரும் தனித்துச் செல்வது இல்லை. 

நான் பணி செய்த கல்லூரியில் இருந்து ஆசிரியர்களை (one day picnic) ஒருநாள் இன்பச் சுற்றுலாவிற்கு இங்கே அனுப்பி இருக்கிறேன். நான் சென்றதில்லை; இப்போது தெம்பும் இல்லை. 

சிலர் இங்கே மலை ஏறும் போது பாதையைத் தவற விட்டு அலைந்து திரிந்து ஓய்ந்து இறங்கிய சம்பவங்கள் பற்றியும் கேள்விப்பட்டு இருக்கிறேன்.

சக 

 

kanmani tamil

unread,
Jun 4, 2025, 12:21:51 AMJun 4
to vallamai
இதுவும் எனக்குப் புதுச் செய்தி தான்; இப்போது தான் கேள்விப்படுகிறேன். 18சித்தர்கள் ஒரே கருவறைக்குள்ளே... புதிதாகக் கட்டி இருக்கிறார்கள். 

https://youtube.com/shorts/hDDCeeeqL9c?si=wIo_I7RBGUYROS-g

கோபுரமாக அமைவது லிங்கம். சுற்றுச் சுவரில் 1008 லிங்க வடிவங்கள்... பிரம்மாண்டம் 

சக 

kanmani tamil

unread,
Jun 4, 2025, 2:38:53 AMJun 4
to vallamai
காட்டழகர் கோயிலின் உள்ளே...

https://youtu.be/YWNKgPxoZ0s?si=r4u9u90ugm_DAilO

கோயிலுக்கு வெளியே மலைமுகடின் தோற்றம் பள்ளிகொண்ட பெருமாள் போலக் காட்சி தரும் அற்புதம்.

திருப்பதியில் கூடப் பெருமாளின் முகம் போலவே ஒரு முகடு தோற்றம் அளிக்கும்.

சக 

kanmani tamil

unread,
Jun 4, 2025, 2:32:44 PMJun 4
to vallamai
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கல்விமடை...

பெயர் இதுவரை கேள்விப்படாதது ஆனால்; 'கல்வி' எனும் சொல் பண்டைத் தமிழ் இலக்கியத்தில் உள்ளது. 

திருவிளையாடல் புராணத்து தருமி பிறந்த ஊர் என்பது செவிவழிச் செய்தி. 

புலனப் பதிவாளர் 1500ஆண்டுகட்கு முற்பட்ட கோயில் என்று சொல்லும் ஆண்டுக் கணக்கை ஆய்வாளர் சோதித்துச் சொல்லட்டும். 

நின்றசீர் நெடுமாறன் முதல் பிற்காலப் பாண்டியர் வரை பலரும் திருப்பணி செய்தமைக்கு உரிய கல்வெட்டுகள் காணப்படுகின்றன. முறையான பதிவும் அறிக்கையும் தேவை 


ஆகாசலிங்கம் என்று அர்ச்சகர் கூறுவதன் பொருளை யாரேனும் விளக்கினால் நன்றாக இருக்கும். 

காலத்தால் முற்பட்ட கோயில் என்பது உறுதி. 

சக 

kanmani tamil

unread,
Jun 5, 2025, 5:34:08 AMJun 5
to vallamai
விருதுநகர் மாவட்டம் கான்சாபுரம் போகும் வழியில் ஊருக்கு வெளியே பாண்டியப் பேரரசர்களாலும் பின்னர் நாயக்கர்களாலும் திருப்பணி செய்யப்பட்ட பெருமாள் கோயிலும்; கிட்டத்தட்ட 8நூற்றாண்டுகளாக நீர் தரும் கிணறும்...

https://youtu.be/CAN4YTmFsrM?si=mFHpCfWi6lsIqbH4

சக 




kanmani tamil

unread,
Jun 5, 2025, 1:37:34 PMJun 5
to vallamai
விருதுநகர் மாவட்டம் 'மூவரை வென்றான்' கிராமத்து மலைக் கொழுந்தீஸ்வரர் கோயிலின் காராண்மைக் கல்வெட்டு...

ஊரின் பெயர் பற்றிய வழக்காறைப் பின்னர் அதற்குரிய இழையில் காண்போம்.  

https://youtube.com/shorts/qBhiC6JEzGg?si=IdwHoO0UHoDoVBMr


kanmani tamil

unread,
Jun 6, 2025, 2:44:58 PMJun 6
to vallamai
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டத்தில் கிடைத்து இருக்கும் குலசேகர பாண்டியனின் 11ம் ஆட்சி ஆண்டைச் சேர்ந்த உருளைக் கல்வெட்டு: 


எண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்டது

சக 

kanmani tamil

unread,
Jun 7, 2025, 6:34:50 AMJun 7
to vallamai
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு வட்டத்தில் உள்ள சுந்தரபாண்டியம் ஊரிலும் அதன் சுற்றுவட்டாரத்திலும் காணக்கூடிய வரலாற்றுத் தடயங்கள்

https://youtu.be/a3snMTulQs8?si=FQP6rezbfc8AYYWI

பாண்டியப் பேரரசுக் காலத்தில் சுந்தரபாண்டியன் பேரால் உருவான ஊரில் காணப்படும் இத் தடயங்கள் காலந்தோறும் இவ்வூர் அரசியல்,  சமூக முக்கியத்துவம் வாய்ந்ததாகத் திகழ்ந்ததை உறுதிப்படுத்துகின்றன. 

சக 

சக 

kanmani tamil

unread,
Jun 7, 2025, 2:15:23 PMJun 7
to vallamai
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள திருச்சுழியைச் சார்ந்த குன்றில் முற்காலப் பாண்டியர் நிர்மாணித்த குடைவரை...

சமணம் (ஜைனத்தையும் பௌத்தத்தையும் உள்ளடக்கிய)  போற்றிய குடைவரை. 

மலையைக் குடைந்து அம்மலையிலேயே செதுக்கிய சிவலிங்கம்...


மன்னன் சமணத்தில் இருந்து சைவனாக மதம் மாறிய போது சைவக் கோயில் ஆனது. 1200ஆண்டுகள் பழமை வாய்ந்தது 

சக

kanmani tamil

unread,
Jun 8, 2025, 3:59:35 AMJun 8
to vallamai
விருதுநகர் மாவட்டத்து மூவரை வென்றான் கிராமத்தின் அருகே உள்ள லிங்ககிரி 

https://youtube.com/shorts/P4tPAHxvyhU?si=mbaHLeXUGVxXW5st


சக

kanmani tamil

unread,
Jun 8, 2025, 11:09:38 AMJun 8
to vallamai
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்திற்கு அருகில் உள்ள மீனாட்சிபுரத்துப் பாறை 

https://youtube.com/shorts/vwHgQpuWLwk?si=mwJ_ycv5lSQf350Z

சக 

kanmani tamil

unread,
Jun 9, 2025, 5:08:36 AMJun 9
to vallamai
விருதுநகர் மாவட்டத்து நதிக்குடியில் முற்காலப் பாண்டியர் காலத்து (9ம் நூ-டு.) பாறைக் கல்வெட்டு. 


அவ்விடத்தில் ஒரு சிவன் கோயில் இருந்தது என்பதற்கு உரிய ஆதாரமாக இக் கல்வெட்டு அமைந்து உள்ளது. முனீஸ்வரர் என வழிபடப்படும் லிங்கம்... சுவாரஸ்யமான மாற்றம். 

சக 

kanmani tamil

unread,
Jun 10, 2025, 3:50:23 AMJun 10
to vallamai
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே படிக்காசு வைத்தான் பட்டியில் உள்ள தென்காசிப் பாண்டியர் காலச் சத்திரம். 

https://youtube.com/shorts/zc7hsSgWEy0?si=Pva0ctgAfIPfNnYt

இன்றும் நல்ல நிலையில் இருக்கும் இத்தகைய கல்கட்டிடங்களைப் புனரமைத்துப் பயன்படுத்தும் போக்கு தான் இவற்றைப் பாதுகாக்கும் வழியாக அமைதல் கூடும். 

வரலாற்று உணர்வும் ஆர்வமும் நம் அரசியல் ஆளுமைகளுக்கும் அதிகாரிகளுக்கும் மேலோங்கும் நாள் எந்நாளோ?!

சக

kanmani tamil

unread,
Jun 12, 2025, 2:51:37 PMJun 12
to vallamai
விருதுநகர் மாவட்டத்து ராஜபாளையம் நாய்கள் நாட்டு வகை நாய்களுள் முதலிடம் வகிப்பவை. ஆந்திராவில் இருந்து தெலுங்கர் ஆட்சியின் போது வந்து சேர்ந்த அவ் இனம் இன்று வரை ராஜபாளையத்தில் பெரிதும் வளர்க்கப்படுகின்றது .


அவற்றின் சிறப்புகள் மேலே உள்ள காணொளியில்...
சக 

kanmani tamil

unread,
Jun 12, 2025, 9:10:03 PMJun 12
to vallamai
எங்கள் ஊரில் வெட்ட வெளியில் இப்படி ஒரு வரலாற்று ஆவணம் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. 1905ஐச் சேர்ந்த கல்வெட்டு ...


திருத்தங்கல் ஊர் சங்க காலத்தில் இருந்து மக்கள் வாழும் ஊர். குன்றின் மேல் உள்ள கோயிலுக்குள் 27கல்வெட்டுகள் தொல்லியல் துறையினரால் படியெடுக்கப் பட்டுள்ளன. சைவம், வைணவம், சாக்தம், கௌமாரம் என நான்கு சமயத் தெய்வங்களையும் காணலாம். ஆழ்வார் பாடல் பெற்ற திருநின்றநாராயணப் பெருமாள் கோயில் 108திவ்ய தேசங்களில் ஒன்று. 

சக 



kanmani tamil

unread,
Jun 13, 2025, 3:13:05 AMJun 13
to vallamai
திருத்தங்கலில் ஒரு பெரிய குன்று (பெருமாள் கோயில், சிவன் கோயில், முருகன் கோயில்) உள்ளது. மக்கள் பெருவாரியாகச் சென்று வணங்குவது...

இன்னும் ஒரு சிறு குன்று  உள்ளது... ஆனால் வனதுர்க்கை அம்மன் கோயில் நான் சென்றதே இல்லை.
 

இந்தக் காணொலியைப் பார்த்த பிறகு தான் நானும் தெரிந்து கொண்டேன். விரைவில் நேரில் சென்று பார்க்க வேண்டும். 

சக 

kanmani tamil

unread,
Jun 13, 2025, 3:24:01 AMJun 13
to vallamai
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தின் பெரிய சாவடி;

ராஜுக்கள் சமூகத்தினரால் பராமரிக்கப்படும் அழகான மரவேலைப்பாடுகள் அமைந்த கட்டிடம்...

https://youtube.com/shorts/9BmUbSfbfEo?si=CPIDQMSD15tKsTnN

இந்த கம்பீரமான அழகு விருதுநகர் மாவட்டத்தின் கெத்து தான் 

சக 

kanmani tamil

unread,
Jun 13, 2025, 12:14:37 PMJun 13
to vallamai
புதிதாக நிர்மாணித்து இருக்கிறார்கள்... 
திருத்தங்கலில் இருந்து சிவகாசி நுழையும் சந்தியில் அமைக்கப் பட்டுள்ளது. 

https://www.facebook.com/share/19DZGQCDpA/

ஆனாலும் அவ்வப்போது நிகழும் கோர விபத்துகளால் பதைக்கும் மனதால் மகிழ்ச்சி அடைய முடியவில்லை. 

சக 

kanmani tamil

unread,
Jun 14, 2025, 10:59:35 AMJun 14
to vallamai
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோயில் கோபுரம்...

https://youtube.com/shorts/RSsb0C5mKPI?si=0CnGBqBDuX1Ie2hC

தனிப் பெருமை தான். 

சக 

kanmani tamil

unread,
Jun 15, 2025, 1:09:39 AMJun 15
to vallamai
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகில் உள்ள அருவிகள்:

ஐயனார் அருவி... ராஜபாளையத்தில் இருந்து பேருந்து வசதி ஏதும் கிடையாது. ஆட்டோவில் தான் அந்தக் காலம் நான் போனேன்..
இப்போதும் அப்படித்தான்.

https://youtube.com/shorts/gConXjVrde0?si=9CttStvxmFsJ-RoG

இந்த அருவிக்குப் போகும் வழியில் ஐயனார் கோவிலும் உள்ளது. இம் மலைப் பகுதியில் இருந்து கேரளத்திற்குச் செல்ல ஒரு கணவாய்ப் பாதை உள்ளது என்பர். அந்நியர் ஆட்சியில் ரயில் தடங்களும் பேருந்துத் தடங்களும் போடப்பட்டு மக்கள் நடந்து செல்லும் வழக்கம் கிட்டத்தட்ட முற்றிலும் ஒழிந்து விட்ட படியால்; பல கணவாய்கள்  தூர்ந்து விட்டன. இதுவும் தூர்ந்து விட்டது. 

இங்கிருக்கும் கணவாய் வழியாகச் சென்றால் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மிக எளிதில் சென்று விட முடியும் எனக் கேள்வி... ஆனால் கேரள அரசின் செக் போஸ்ட் அப்படிச் செல்ல அனுமதிப்பது கிடையாதாம். 

ராஜபாளையம் அருகே இருக்கும் இன்னொரு அருவி ராக்காச்சி அம்மன் அருவி 


இந்த அருவியைப் பற்றி இப்போது தான் நான் 
கேள்விப்படுகிறேன். இராக்காச்சி அம்மனுக்குக் கோயிலும் உள்ளதாம். 

சாஸ்தா கோயில் அருவி... 
இது தென்காசி மாவட்டத்திற்குள் அடங்குகிறது எனினும்; ராஜபாளையத்திற்கு அருகில் இருப்பதால் எல்லோரும் போய் வருவோம். அடர்ந்த காட்டிற்கு இடையில்...

மேற்குமலைத் தொடரின் அடிவாரம் சொர்க்கம் மாதிரி தான்.

சக 

kanmani tamil

unread,
Jun 15, 2025, 10:04:24 AMJun 15
to vallamai
விருதுநகர் மாவட்டம் சிவகாசியிலிருந்து விருதுநகர் செல்லும் பாதையில்...

https://youtu.be/qNOirlD-UwI?si=qsIOV7qMkkrZdSTG

காணொலியில் சொல்லப்படும் மத்தியசேனையின் பெயர் இருபது ஆண்டுகட்கு முன்பு வரை 'மத்திசேனி' (தெலுங்குப் பெயர் போல் ஒலிக்கிறது அல்லவா!). இந்தப் பெயருக்கு உரிய பொருள் தெரியவில்லை. மக்களுக்கு 'மத்திய சேனை' என்பது பொருள் உடைய சொல்லாக இருப்பதால் அப்படி மருவி விட்டது. நான் 45ஆண்டுக் காலமாக விருதை - சிவகாசி பயணிப்பவள் ஆதலால்; என்னால் உறுதியாகச் சொல்ல இயலும் (இது போல் பெயர் மாற்றம் பெற்ற இன்னொரு ஊர் இங்கு அருகில் உள்ளது - சுக்ரவார்பட்டி >> சுக்குவார்பட்டி)

காரிசேரி எங்கள் ஊருக்குப் பக்கத்து ஊர் தான். பெயர்க் காரணத்திற்கு உரிய விளக்கக் கல்வெட்டைக் கண்டு சொன்னமைக்கு நன்றிகள். 
அந்தப் பொட்டல் காட்டிற்குள் பொதிந்து கிடக்கும் இவ்வளவு செய்திகளை வெளிக் கொணரும் புலனப் பதிவாளருக்கு வாழ்த்துகள். 
இதில் அதிசயம் ஏதும் இல்லை ஏனெனில்; அருகில் இருக்கும் திருத்தங்கலுக்கு 2000ஆண்டுக் கால வரலாறு உள்ளது.

நான் என் வயோதிகம் குறித்தும் வண்டி ஓட்டத் தெரியாத இயலாமை குறித்தும் மிகவும் வருந்துகிறேன்.

சக 

kanmani tamil

unread,
Jun 15, 2025, 2:54:58 PMJun 15
to vallamai
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதியில் உள்ள மாவூத்து...


உதயகிரிநாதர் என்ற சிவன் கோயில் - போனதில்லை. போக வேண்டிய இடங்களுள் ஒன்று. பாண்டியர் கட்டியது. 

சக 

kanmani tamil

unread,
Jun 15, 2025, 11:52:02 PMJun 15
to vallamai
விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலில் இருந்து வடமலாபுரம் செல்லும் வழியில் இருப்பது முத்துலாபுரம். சிறு கிராமம் - எனது பணிக்காலத்தில் நாட்டுநலப் பணித்திட்ட (NSS) மாணவிகட்கு வருடாந்திர முகாம் நடத்த இந்த ஊரைத் தேர்ந்தெடுத்தது நினைவு இருக்கிறது. 


ஒரு கல் செக்கில் இடம்பெற்று உள்ள கல்வெட்டு இப்பகுதியை இருஞ்சோணாடு என அழைக்கிறது (சோழப் பேரரசுக்கு அடிமைப்பட்ட காலத்தைச் சேர்ந்த கல்வெட்டு ஆதல் கூடும்.). எப்படியும் 800ஆண்டுகட்குக் குறையாமல் முற்பட்டது ஆதல் வேண்டும். 
முத்துலாபுரம் ஊரின் பழம்பெயர் வீரபாண்டியபுரம் என்கிறது (இரண்டுமே புதுத் தகவல்கள்.).

வரலாறு குறித்த தேடலில் முனையும் போது தான் நம்மைச் சுற்றிலும் அருகில் இருக்கும் தடயங்கள் கூட வெளிப்படுகின்றன.

சக 

kanmani tamil

unread,
Jun 16, 2025, 3:40:44 AMJun 16
to vallamai
விருதுநகர் மாவட்டம் கூமாபட்டி ஊர் அருகே பிளவைக்கல் அணை


'பிளவைக்கல்' என்ற பெயர் அம்மலையில் இருக்கும் பிளவு / கணவாய் காரணமாக அமைந்த காரணப் பெயராகத் தோன்றுகிறது. 

அருகில் இருக்கும் ஊரின் பெயரால் 'கூமாபட்டிக் கணவாய்' என்ற பெயர் வழக்கு இன்றும் உள்ளது. 

தெலுங்கில் கணவாயை 'ரேவு' என்பர். தமிழ் மன்னர் ஆட்சி கவிழ்ந்து தெலுங்கர் ஆண்ட காலத்தில் கணவாய்களை ஒட்டிய ஊர்கள் ரேவு எனும் பின்னொட்டைப் பெற்று இன்றும் நிலைத்து இருப்பதை மேற்குமலை அடிவாரத்தில் காண இயல்கிறது. 

இக்கணவாயை ஒட்டிய அணை பிளவைக்கல் அணை எனப்படும். இந்த வெள்ளம் மழைக்காலத்தில் மட்டுமே இந்த வேகத்துடன் இருக்கும். இது தான் வைப்பாறாக விரிந்து வெம்பக்கோட்டை தாண்டி இருக்கன்குடியைத் தொட்டு ஓடுகிறது. வழியில் மத்திசேனியை அடுத்து இருக்கும் கன்னிசேரி ஆறும் இதனுடன் கலக்கிறது... காட்டாறுகள்...

சக 

kanmani tamil

unread,
Jun 16, 2025, 9:22:44 PMJun 16
to vallamai
"சதுரகிரி மலையோரம் சாஞ்சிருக்கும் திருகுகள்ளி
திருகுகள்ளிப் பூவெடுக்க திரிஞ்சனடி சிலகாலம்" சித்தர் பாடல். 
இந்தப் பாடல் சுட்டும் சதுரகிரி மலை விருதுநகர் மாவட்டத்தில் உள்ளது. 
சுயம்புலிங்கமாகக் காட்சி தரும் சுந்தரமகாலிங்க சுவாமி ஒரு கள்ளி மரத்தின் படிமம் ஆவார். 
இயற்கையாகவே அந்த லிங்கம் சாய்ந்த நிலையில் விளைந்து இருக்கிறது. அத்துடன் லிங்கத்தின் மேற்பரப்பில் காப்பு சார்த்தும் கைகளால் கல்லாகிப் போன முட்களை உணர முடியுமாம். 


கடினமான மலைப்பயணம்; மலை எங்கும் வில்வமரங்கள். 
கோயில் அருகே மக்கள் குளிப்பதற்கு ஒரு சுனையும் உள்ளது. 

சக 

kanmani tamil

unread,
Jun 17, 2025, 8:14:31 AMJun 17
to vallamai
விருதுநகர் மாவட்டம் மத்திசேனிக்கு அருகில் சோரம்பட்டி என்ற ஊரில் ஒரு நினைவுக்கல் முனியாண்டியாக வணங்கப் பெறுகிறது. 


சக 

kanmani tamil

unread,
Jun 17, 2025, 8:04:13 PMJun 17
to vallamai
விருதுநகர் மாவட்டத்தின் தனிப் பெருமை எனக் கருதப்படுவது ராஜபாளையம் சப்பட்டை மாம்பழம் 


ராஜபாளைத்தில் மட்டுமே கிடைக்கக் கூடிய வகை. 
பூர்வாசிரமத்தில் ஆந்திராவில் இருந்து ராஜூக்களால் கொண்டு வரப்பட்ட பங்கனபள்ளி என்ற வகை தான்... இங்குள்ள மண்வளம், நீர்வளம், பருவநிலைகளால் பங்கனபள்ளியைப் பின்னுக்குத் தள்ளி விட்டது என்றால் மிகை ஆகாது. 

நம் தமிழ் மக்கள் இட்ட காரணப் பெயர் 'சப்பட்டை'.

சக 

kanmani tamil

unread,
Jun 18, 2025, 9:46:30 PMJun 18
to vallamai
வழிபடப்படும் ஆட்டுரல்


வாசிக்க முடியாத பழைய கல்வெட்டு பொதுமக்கள் மனதில் ஒரு அற்புதமாகத் தோன்றுவது; அதை வழிபாட்டுப் பொருள் ஆக்கி உள்ளது. 

இருக்கட்டுமே! மனதிற்கு நிறைவும் நிம்மதியும் கிடைத்தால் போதும். 

சக 

kanmani tamil

unread,
Jun 20, 2025, 5:51:23 AMJun 20
to vallamai
இந்து முஸ்லிம் ஒற்றுமைக்குப் பெயர் பெற்ற அத்திகோயிலும் அருவியும்:

கான்சாபுரத்தைத் தாண்டி மலையடிவாரத்தில் இருக்கும் தனியார் குலதெய்வக் கோயிலில் ஐயனார் கம்பீரமாகக் குதிரை மேல் இருக்கிறார். பெரிய கருப்பும் சின்னக் கருப்பும் காவல் தெய்வங்களாக உள்ளனர். மழை பெய்தவுடன் ஆற்றில் நீர் பெருகி பிளவைக்கல் அணையைச் சேர்கிறது. 


கோயிலின் பெயர் அத்திமரத்தால் பெற்ற பெயரா அல்லது இந்தப் பகுதியில் யானைகள் மிகுதி என்பதால் பெற்ற பெயரா என்ற ஐயம் உள்ளது. 500ஆண்டுகள் பழமையான அத்தி மரமும் நிற்கிறது; யானைகள் உள்ளே நுழைவதைத் தடுக்க மின்வேலியும் உள்ளது. 

குலதெய்வக் கோயிலில் திருவிழா என்றவுடன் இஸ்லாமியர் அனைவரும் தேங்காய் உடைத்து வழிபடுகின்றனர் (கான்சாகிப் காலத்தில் மதம் மாறி இருக்க வேண்டும்). முஸ்லிம்களின் திருவிழாவை இந்துக்களும் தவிர்ப்பது இல்லையாம். 


மலைப்பாறைகளுக்கு இடையில் பெருகி வரும் நீர் விளையாட்டிற்கும் வேளாண்மைக்கும்...

சக 

kanmani tamil

unread,
Jun 21, 2025, 12:32:50 AMJun 21
to vallamai
விருதுநகர் மாவட்டம் வத்றாப் அருகே உள்ள அர்ச்சுனாபுரம்:

நாட்டார் வழக்காறுகளில் அண்ணன் தங்கை பாசத்திற்குப் பெரிதும் சான்று காட்டப்படும் நல்லதங்காள் பிறந்த ஊர்... உயிரை விட்டதும் இதே ஊரில் தான். 


இன்று வரை நின்று நிலவும் அற்புதம் கலந்த வரலாற்றுப் பின்புலம் உள்ள கதை.  

சக 

kanmani tamil

unread,
Jun 21, 2025, 6:56:39 AMJun 21
to vallamai
சாதனை படைத்த தமிழ்ப் பெண்!

எவரெஸ்ட், எல்புரூஸ், கிளிமாஞ்சாரோ உள்ளிட்ட மிக உயரமான சிகரங்களில் ஏறி சாதனை படைத்துள்ளார் தமிழ்நாட்டைச் சேர்ந்த... பெரிய... சும்மா... அசத்தல்...  முத்தமிழ்ச்செல்வி💐

2 பெண் குழந்தைகளுக்குத் தாயான இவர் தனது முதல் முயற்சியிலேயே எவரெஸ்டை அடைந்தவர் 

#MuthamilSelvi #follower

https://www.facebook.com/share/16dyo8bG1C/

இவர் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்ற தகவலும் சேர்ந்தே இப்பதிவில் உள்ளது. 


சக 

kanmani tamil

unread,
Jun 21, 2025, 2:38:53 PMJun 21
to vallamai
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ள திருவண்ணாமலையில் ஸ்ரீநிவாசப் பெருமாள் எழுந்தருளி உள்ளார். 

https://youtu.be/011tGChaXdY?si=t1iFhVWfEMoCDbZB

சிறிய குன்று தான்; குன்றின் மேல் இருந்து பார்த்தால் தெரியும் காட்சி அழகாக இருக்கும்.

சக 

kanmani tamil

unread,
Jun 22, 2025, 6:01:18 AMJun 22
to vallamai
/// இராஜபாளையம் தங்கப்பூ சடையாரம் என்பது திருமணத்தின் போது மணப்பெண்களுக்குச் சூட்டப்படும் ஒரு அலங்காரப் பொருள் ஆகும். இவை காலங்காலமாக விருதுநகர் மாவட்டம் இராசபாளையம் பகுதியில் கைவேலைப்பாடுகளுடன் தயார் செய்யப்படுகிறது. இந்த ராஜபாளையம் ஜடையாரங்கள் சிங்கப்பூர், லண்டன், அமெரிக்கா போன்ற வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ///

/// 1936 ஆம் ஆண்டில், திரு பிஏசி ராமசாமி ராஜா முதல் பருத்தி நூற்பு ஆலையை ராஜபாளையம் மில்ஸ் லிமிடெட் என்ற பெயரில் தொடங்கினார். பின்னர், பல ஜவுளி ஆலைகள் தொடங்கப்பட்டன. இன்று, ராஜபாளையம் ஜவுளித் தொழிலின் முக்கிய மையமாக உள்ளது, இது கட்டுகள், நெய்த துணி, நைட்வேர் மற்றும் பிற பொருட்களுக்கு பிரபலமானது. பக்கத்து நகரமான சத்திரப்பட்டி (விருதுநகர் மாவட்டம்.) அறுவைசிகிச்சை பருத்தி காஸ் தயாரிப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது.///

https://www.facebook.com/share/p/1AcFes4cvA/ ராஜபாளையம் ஊர் உருவாவதற்கும் பெயர் பெறுவதற்கும் முக்கிய காரணம்....
இங்கு 15 ஆம் நூற்றாண்டு மத்தியில் ஆந்திராவிலிருந்து தெலுங்கு பேசும் ராஜீக்கள் சமுதாயத்தினர் அதிக அளவு குடி பெயர்ந்தனர். அவர்களைக் குறித்தே இந்நகருக்கு ராஜீபாளையம் என பெயர் ஏற்பட்டது. பின்பு காலப்போக்கில் இராஜபாளையம் என பெயர் மாறியது. வரலாற்றில் பாளையம் என்ற தமிழ்ச்சொல் கோட்டைகள் இருக்கும் இடம் என்றும் பொருள்படும். பழைய பாளையம், புதுப்பாளையம் என இன்றும் வழக்கில் உள்ளன. விஜயநகர அரசர் புசாபதி சின்ன இராஜூவின் வழித்தோன்றல்களான இவர்கள் முதலில் கீழஇராஜகுலராமனில் தங்கியிருந்து பின்னர் இங்கு குடிபெயர்ந்தனர். மதுரை சொக்கநாத நாயக்கர் கீழ் தளபதிகளாக இங்கு வந்தனர். 16,17 ஆம் நூற்றாண்டில் மதுரை நாயக்க மன்னரிடம் இருந்து இந்த நிலப்பகுதியை வாங்கி இராஜபாளையம் என்ற நகரத்தை கட்டமைத்தனர். இராஜபாளையம் நகரம் முன்னர் திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
துவக்கத்தில் விவசாயமே வாழ்வாதாரமாக இருந்தது. 1900களில் வணிக முயற்சிகள் முன்னேறத் துவங்கின. அவர்களது முயற்சியாலும் கடின உழைப்பாலும் பருத்தி சார்ந்த பல தொழிற்சாலைகள் ஆரம்பிக்கப்பட்டன.
இராஜபாளையம் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு நகராட்சி ஆகும். இது விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பெரிய நகராட்சி. இது மதுரையின் தென்மேற்கே 85 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்த நகரம் நூற்பு மற்றும் நெசவுக்கான பல ஆலைகளுடன் பொருளாதார முதன்மை பெறும் தொழில்நகர் ஆகும். இந்த ஊர் மாம்பழத்திற்கும், ராஜபாளையம் நாய் இனத்திற்கும் பெயர் பெற்றது. 
இராஜபாளையம் வட்டம் (Rajapalaiyam Taluk), விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டத்தின் கீழ் 35 வருவாய் கிராமங்களும், 36 ஊராட்சி மன்றங்களைக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
1936 ஆம் ஆண்டில், திரு பிஏசி ராமசாமி ராஜா முதல் பருத்தி நூற்பு ஆலையை ராஜபாளையம் மில்ஸ் லிமிடெட் என்ற பெயரில் தொடங்கினார். பின்னர், பல ஜவுளி ஆலைகள் தொடங்கப்பட்டன. இன்று, ராஜபாளையம் ஜவுளித் தொழிலின் முக்கிய மையமாக உள்ளது, இது கட்டுகள், நெய்த துணி, நைட்வேர் மற்றும் பிற பொருட்களுக்கு பிரபலமானது. பக்கத்து நகரமான சத்திரப்பட்டி (விருதுநகர் மாவட்டம்.) அறுவைசிகிச்சை பருத்தி காஸ் தயாரிப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது.
இராஜபாளையம் நாய் இனம் விஜயநகரப் பேரரசின் வருகையின்போது ஆந்திர, கர்நாடகப் பகுதியில் இருந்து தமிழகம் வந்த பாளையக்காரர்கள் மூலமாக தமிழகம் வந்த நாயாகும். இது ஒரு பெரிய நாயாகும். இது வெள்ளை நிற உடலும், இளஞ்சிவப்பு மூக்கும், மடிந்த காதுகளும் கொண்டிருக்கும். வளர்ப்பு நாய் வகைகளில் இராசபாளையம் நாய் மிகவும் அறியப்பட்ட இந்திய நாட்டு நாய் இனமாகும். அங்கு இவ்வகை நாயினம் அழிந்துபோய் தமிழகத்தின் இராஜபாளையத்தில் மட்டும் எஞ்சியதால் இராஜபாளையம் நாய் என ஊர் பெயராலேயே அழைக்கப்பட்டது. இதை ஆங்கிலத்தில் பொலிகார் ஹவுண்ட் என்றும் அழைக்கப்படுகிறது.
இராஜபாளையம் தங்கப்பூ சடையாரம் என்பது திருமணத்தின் போது மணப்பெண்களுக்குச் சூட்டப்படும் ஒரு அலங்காரப் பொருள் ஆகும். இவை காலங்காலமாக விருதுநகர் மாவட்டம் இராசபாளையம் பகுதியில் கைவேலைப்பாடுகளுடன் தயார் செய்யப்படுகிறது. இந்த ராஜபாளையம் ஜடையாரங்கள் சிங்கப்பூர், லண்டன், அமெரிக்கா போன்ற வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

சக 

kanmani tamil

unread,
Jun 22, 2025, 10:46:55 PMJun 22
to vallamai
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகில் உள்ள ஈஞ்சார் கிராமத்தில் மூன்றாண்டுகளுக்கு முன்னர் சிதிலமடைந்து இருந்த சிவன்கோவிலைத் திருப்பணி செய்து இப்போது மீண்டும் வழிபாட்டிற்கு உரியதாகச் செய்த மக்களைப் பாராட்டுவோம். 

ஆனால் சில கல்வெட்டுக்கள் தம் முழுமையில் இருந்து பிரித்துத் துண்டு துண்டாக்கி ஆங்காங்கே வைக்கப்பட்டுக் கட்டப்பட்டு உள்ளமை தெரிகிறது; வருத்தத்திற்கு உரியது. 


கல்வெட்டாய்வாளர்களின் மூளைப்பசிக்கு நல்ல தீனியாக அமையும். 

இறைவன் அருள் புரிவாராக. 

சக 

kanmani tamil

unread,
Jun 25, 2025, 6:17:41 AMJun 25
to vallamai
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் காணக்கூடிய பழைய நினைவுக் கற்கள்:

https://youtube.com/shorts/fj08DsvZLpA?si=TIGQHSydlwQdmHOu

சக 

kanmani tamil

unread,
Jun 26, 2025, 2:35:37 PMJun 26
to vallamai
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த சிதிலமடைந்த அரண்மனை: ராணி மங்கம்மாள் வழிச்செலவின் போது தங்கிச் சென்ற மாளிகையாம்!


சிதைந்த கட்டிடத்தின் கல்லும் மண்ணும் பல அடி உயரத்திற்குக் குவிந்து இருக்க எஞ்சிய பகுதி எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழக்கூடிய நிலையில் உள்ளது. தூண்களின் அமைப்பு நாயக்கர் காலக் கட்டிடங்களை ஒத்துக் காணப்படுகின்றது. 

சக 

kanmani tamil

unread,
Jun 26, 2025, 11:13:29 PMJun 26
to vallamai
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தாலுகாவில் உள்ள கே.ஆலங்குளம் ஊரில் ஐயனார் கோவிலின் முன்னர் பாரம்பரியமாக வழிபாட்டிற்கென மழை வேண்டிச் செய்து வைக்கும் மண் குதிரைகள். 


ஒவ்வொரு குதிரைக்கும் ஒரு தகுதி... ராஜா குதிரை, ராணி குதிரை, மந்திரி குதிரை, ... 

பண்டைத் தமிழக அரசியலின் வாடை இன்னும் தமிழகத்தில் விட்டுப் போகவில்லை. 

சக 

kanmani tamil

unread,
Jun 27, 2025, 5:35:45 AMJun 27
to vallamai
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஊருக்குள் 1100ஆண்டுகட்கு முன்னர் பராங்குச பாண்டியன் வெட்டி இன்று வரை காணப்படும் பெரியகுளம் (தவிர்க்க இயலாது பல சாக்கடைகள் ஒன்று சேர்ந்து கலப்பதும் இயற்கை தான்...); அந்தக் குளத்தில் இருந்து 10ம் நூற்றாண்டு அளவில்  கட்டமைத்து வெளியாகும் ஏழுகண்மடை; அந்த ஊர் அப்போதே வில்லிபுத்தூர் எனப் பெயர் பெற்றமை அனைத்தையும் தாங்கிய கல்வெட்டு மடைவாயின் முன்னர் நின்று நிலைத்து இருக்கும் அருமையும் பெருமையும் கெத்து தான்!!!


தெரிவு: சக 

kanmani tamil

unread,
Jun 28, 2025, 8:30:16 AMJun 28
to vallamai
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டத்தைச் சேர்ந்த வடுகபட்டியில் உள்ள சிதைந்த மணிமண்டபம்: 

https://youtu.be/wEUHDsSRB7Q?si=QfiZAXrZI_Hk8XWV

புலனப் பதிவாளர் சொல்வது போல் இது கோட்டை அன்று; மண்டபம்... பேச்சுவழக்கில் நகராமண்டபம் என்றும் அழைக்கப் படுகிறது. கர்ணபரம்பரைச் செய்தியில் இத்தகு மண்டபங்களில் பாரிய அளவிலான 'நகரா' எனப்படும் (giant size) முரசு இருந்ததாகச் சொல்வர். மடவார் வளாகத்தில் உச்சிக் கால பூஜை முடிந்தவுடன் அடுத்தடுத்த மண்டபங்களில் நகரா (தோல்கருவி) அடிக்கப்பட்டு அந்த ஓசை மதுரையில் இருக்கும் திருமலை நாயக்கர் அரண்மனையை வந்து சேரும்; பின்னரே திருமலை நாயக்கர் உணவு உட்கொள்வார். 

இந்த ஊர் வடுகபட்டிக்கு 2005வாக்கில் தேர்தலின் போது presiding officer ஆகச் சென்ற நினைவு உள்ளது. அங்கே பணிக்கு வந்தோருள் நான் ஒருத்தி மட்டுமே தமிழ் பேசுபவளாக இருந்தேன். மிக மிக அந்நியமாக உணர்ந்தேன்; ஏனென்றால் எல்லோரும் தெலுங்கில் தான் பேசிக் கொண்டார்கள். ஒப்புக்காகக் கூட என்னிடம் தமிழ் பேச ஒரு உசுரும் இல்லை. 

பணி முடித்து; இரவு 11மணி அளவில் பெட்டியை ஒப்படைத்து விட்டு; என்னை அழைக்க வந்த மகனோடு ஊர் திரும்பிய போது தான் ஆயாசம் தீர்ந்தது. 

சக 

kanmani tamil

unread,
Jun 29, 2025, 12:03:16 AMJun 29
to vallamai
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலின் தேர் ஆடிப்பூரம் கொண்டாட்டத்தின் போது இழுக்கப்படும். அந்தத் தேரின் வரலாறு பற்றிப் பேசுவது இந்தக் காணொலி:


இந்தத் தேர்த் திருவிழாவுக்கு எங்கள் பகுதியில் இருக்கும் எல்லாக் கல்லூரிகளில் இருந்தும் பசங்க  (நாட்டுநலப் பணித்திட்டத்தின் கீழ் உள்ளோர்- volunteers) மட்டும் தொண்டூழியர்களாகச் செல்வது உண்டு. ஒவ்வொரு கல்லூரியில் இருந்தும் 100மாணவர்கள் பங்கேற்பர். எந்த ஜாதிப் பாகுபாடும் கிடையாது; இருக்காது. தேர் ஓடத் தொடங்கும் நிலையில் இருந்து அது மீண்டும் நிலைக்கு வந்து சேரும் வரை ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு கல்லூரி மாணவர் குழு பொறுப்பேற்றுத் தேரின் ஓட்டத்திற்குத் தேவையான உதவிகளை... கோயில் நிர்வாகத்தின் தேரோட்டக் குழுவினர் சொல்லும் பணிகளைச் செய்வர். என் மாணவர்களுக்கு உரிய பணி தேர் நிலைக்கு வரும் இறுதிக்கட்டப் பகுதியில் தான் ஒவ்வொரு ஆண்டும் ஒதுக்கப்படும் (கொஞ்சம் கடினமான பணிச் சூழல் தான் ஆனாலும் மாணவர் பொறுப்போடும் துடிப்போடும் செயல்படுவர்.). கல்லூரி நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் மாணவர்களுடன் இருப்பார். 

விழா தொடங்க ஒரு வாரம் இருக்கும் போது விருதுநகர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் அவரது அலுவலகத்தில் தேரோட்டம் வெற்றிகரமாக நடக்க அவரவர் பங்கு குறித்து ஒரு கூட்டம் நடத்திக் கலந்து ஆலோசிப்பர். கோயில் நிர்வாகம் சார்பாகவும் ஒருவர் வந்து பங்கேற்பார். மாவட்டக் காவலர் பிரதிநிதிகளும் பங்கேற்பர். 

மாவட்ட ஆட்சியர் அழைத்தால் அந்தக் கூட்டத்திற்கு நானே நேரடியாகத் தான் பங்கேற்பது வழக்கம். கல்லூரி நாட்டுநலப் பணித்திட்ட அலுவலர் நான் கல்லூரியில் இருந்து கிளம்பும் முன்னர் என்னிடம் ஒரு கோரிக்கை வைத்தார். 'அம்மா; நம் மாணவர்களுக்கு அவர்கள் பொறுப்பேற்கும் இடத்தை ஒட்டி ஒரு தனிப்பட்ட சிக்கல் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அவர்கள் திண்டாடுகிறார்கள்... ஏனென்றால் தேர் நிலைக்கு வந்தவுடன் கிட்டத்தட்ட ஒரு லட்சம் பக்தர்கள் தேரை நோக்கிச் சாமி கும்பிட வருவார்கள். காவலர்கள் ஒழுங்கு நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டு இருப்பர். நம் மாணவர்கள் 100பேர் மட்டும் கடமையை முடித்தவுடன் பக்தர்கள் வரும் திசைக்கு எதிர்த்திசையில் நடந்து வெளிவர வேண்டும்.  காவலர்களது பதட்டமான பார்வையில் நம் மாணவர்கள் தவறானவர்களாகத் தெரிய மிகுந்த வாய்ப்பு இருப்பதால் ஒவ்வொரு ஆண்டும் தேவை இல்லாத இன்னல்களுக்கு ஆளாகின்றனர். இதைத் தவிர்க்க ஏதாவது செய்ய வேண்டும்' என்றார். 'சரி; பார்க்கிறேன்' என்று சொல்லி விட்டுக் கிளம்பினேன். 

மாவட்ட ஆட்சியர்; கூட்டத்தில் பங்கேற்ற ஒவ்வொரு உறுப்பினரோடும் அவரவர் செய்ய வேண்டிய கடமையைச் சுருக்கமாகக் கூறினார்... கிட்டத்தட்ட முடிக்கும் நிலைக்கு வந்து விட்டார். இப்போது என் மாணவர்களுக்காக அவர் செய்ய வேண்டியது என்ன என்பதைக் கலந்து ஆலோசித்தே தீர வேண்டும். வேறு வழியின்றிக் கையை உயர்த்தி எழுந்து நின்று நிலைமையை எடுத்துச் சொன்னேன். 'மேடம்; எல்லோரும் தேரோட்டம் வெற்றிகரமாக நிறைவடைவது பற்றிப் பேசிக் கொண்டு இருக்கிறோம்; நீங்கள் உங்கள் மாணவர்களின் வசதி பற்றி இவ்வளவு வலியுறுத்துகிறீர்களே?!' என்றார். 'சார்; வேண்டுமானால் காவலர்களிடம் கேட்டுப் பாருங்கள். அவர்கள் அந்தக் கூட்டத்தை எப்படிச் சாமாளிக்கிறார்கள் என்று...' 

கலந்துரையாடலின் திசை கொஞ்சம் திரும்பியது... என் பக்கத்து நியாயம் வெளிப்பட்டது... 'உங்கள்  மாணவர்களைக் கல்லூரிச் சீருடை அணிந்து வரச் சொல்லுங்கள்' என்றார். 'எங்கள் கல்லூரி மாணவர்களுக்குச் சீருடை கிடையாது' என்றேன்... 

இறுதியில் ஒருவழியாக என் மாணவர்களுக்கு அடையாளத் தொப்பி வழங்கக் கோயில் நிர்வாகம் ஒத்துக் கொண்டது. காவலர்களும் தெரிந்து கொண்டனர்; புரிந்து கொண்டனர். 

இறைத் தொண்டும் நாட்டுநலப் பணியும் இரண்டறக் கலக்கும் ஊர்... எங்க ஊரு கெத்து தான்.

சக 

kanmani tamil

unread,
Jun 29, 2025, 8:49:54 AMJun 29
to vallamai
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டத்தில் உள்ள கண்மாய் சூரங்குடியில் உள்ள கல்மடம், கிணறு, பிள்ளையார் கோயில்,  மாடுச்சந்தைக்கு உரிய பழங்காலத் தடயங்கள்: 


ராணி மங்கம்மாள் காலத்தில் மக்கள் பயன்பாட்டிற்குக் கட்டிய போக்குவரத்திற்கு உரிய மண் சாலைகள் பல ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட கருங்கல் சாலைகளால் (metal roads) வழக்கொழிந்தன. 

கல்வெட்டில் சொல்லப்பட்ட 'குயவர் குலத்தைச் சேர்ந்த சன்னாசி செட்டி' என்ற தொடர் மேனிலையாக்கம் காரணமாக ஏற்பட்ட அடிப்படை மாற்றத்தைக் காட்டுகிறது.

புளியந்தோப்பு காணாமல் போனது பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்ட காலத்தின் கோலம். 

ஏழு பெண்கள் ஒற்றைக் கல்லில் காணப்படும் திருக்கோலம் சப்தகன்னியர் வழிபாட்டைத் தான் காட்டுவதாகக் கொள்ள வேண்டி உள்ளது; ஏனெனில் இதே போல் ஒற்றைக் கல்லில் செதுக்கப்பட்ட சப்தகன்னியரை வேறு சில கோயில்களில் காண முடிகிறது. 

பிள்ளையார் கோயில் வாசலில் உள்ள கஜலட்சுமி திருவுருவத்தை அடியொட்டி; அது காலத்தால் முற்பட்டது எனலாம். 

சக 


kanmani tamil

unread,
Jun 30, 2025, 2:11:17 AMJun 30
to vallamai
கண்மாய் சூரங்குடி ஊருக்கு வடமேற்கில் உள்ள வண்ணான் பாறையில் காணப்படும் கல்செக்கு... 300ஆண்டுக் காலப் பழமை வாய்ந்தது. 


தெரிவு: சக 

kanmani tamil

unread,
Jun 30, 2025, 7:08:33 AMJun 30
to vallamai
மேலே புலனப் பதிவாளர் 'கல்செக்கு' என்று சொல்வதைப் பண்டைத் தமிழ் இலக்கியம் நிலவுரல் என்று சுட்டுகிறது. 
"... விளவின் 
நீழல் முன்றில் நிலவுரல் பெய்து" (பெரும்பாணாற்றுப்படை 95-96) என வருவது காண்க.
எயிற்றியர் கரம்பை நிலத்தைத் தோண்டி வாரிக் கொண்டு வந்த புல்லரிசியை விளாமரத்தின் நிழல் பொருந்திய தம் குடிசையின் முற்றத்தில் நிலவுரலில் பெய்து தீட்டினர். 

சக 

kanmani tamil

unread,
Jul 3, 2025, 5:35:18 AMJul 3
to vallamai
சிவகாசிக்குக் கிழக்கே உள்ள சொக்கலிங்கபுரம் என்னும் கிராமத்தில் சுக்கான்கல் பாறையில் குடைந்த பாதாளக் கோயில்:


சக 

kanmani tamil

unread,
Jul 3, 2025, 3:01:17 PMJul 3
to vallamai
விருதுநகர் மாவட்டத்தில் சாபமிடும் தொடருடன் காணப்படும் கல்வெட்டு:

https://youtube.com/shorts/6Ht949hKJy8?si=xv35YVQ9KiGweGNc

பண்டைத் தமிழ்க் கல்வெட்டுகளில் செய்த தானத்திற்கு ஊறு விளைவிப்பவர்களைக் 'கங்கைக் கரையில் காராம் பசுவைக் கொன்ற பாவம் சேர்வதாக' எனச் சபிப்பதை நூற்றுக்கணக்காகக் காண முடியும். 

இன்று நேற்றல்ல; ஆயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட கல்வெட்டுகளில் கூட இத்தொடரைக் காணலாம். 

சக 

kanmani tamil

unread,
Jul 5, 2025, 1:30:59 AMJul 5
to vallamai
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டத்தில் பல ஆண்டுகளாகப் பூட்டிக் கிடந்த சிவன் கோயில்:

https://youtu.be/ReHCxOyJdlU?si=16Ft1MRtvocTmqTS

பூட்டிக் கிடந்தமை அவ்விடத்துச் சமூகச் சிக்கலைக் கோடி காட்டுகிறது. 

கோல்வார்பட்டி என்ற பெயர் அது தெலுங்கர் வாழ்ந்த ஊர் எனக் காட்டுகிறது. '-வார்பட்டி' எனும் பின்னொட்டோடு கூடிய ஊர்கள் இதற்கான ஆதாரங்கள் ஆகின்றன (சுக்ரவார்பட்டி, சிலுக்குவார்பட்டி).

கோயிலின் மேற்கூரையில் இருக்கும் மீன் புடைப்புச் சிற்பம் இது பாண்டியரால் கட்டப் பட்டதெனக் காட்டுகிறது (எந்தக் காலத்துப் பாண்டியர் என்பதை வல்லுநர்கள் தாம் முடிவு செய்ய இயலும்.). 

கலங்காத கண்டமநாயக்கர் எனும் சிலை உருவம் நாயக்கர் ஆட்சிக் காலத்தில் அவர்கள் செய்த திருப்பணிக்குச் சான்றாகிறது. 
கட்டபொம்மனும் ஊமைத்துரையும் வழிபட்ட தலம் என்பது கர்ணபரம்பரைச் செய்தி ஆகும். 

படியெடுக்கப்படாத கல்வெட்டுகள் பல வரலாற்று உண்மைகளை உணர்த்தக் கூடும். 

நந்தியின் நோக்குக் கோணமும் மீனாட்சி அம்மையின் கையில் தாமரையும் தனிச் சிறப்புகளே. 

சக 

kanmani tamil

unread,
Jul 8, 2025, 4:02:44 AMJul 8
to vallamai
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம் பாட்டக்குளம் கண்மாய்க் கரையில் தெய்வமாக வழிபடப் படும் துலாக்கல்:


துலாக்கற்கள் கிணறுகளில் இருந்து நீர் இறைக்கப் பயன்பட்டவை. அவற்றை நிறுவியவர் பெயர் அதில் பொறிக்கப்பட; காலப்போக்கில் அவ் எழுத்தை வாசிக்கத் தெரியாத மக்கள்; ஒரு தருமத்திற்குத் தெய்வத் தன்மை ஏற்றி வழிபடுகின்றனர். 

சக 

kanmani tamil

unread,
Jul 15, 2025, 6:08:06 AMJul 15
to vallamai
விருதுநகர் மாவட்டம் அயன்கொல்லங்கொண்டான் ஊரில் உள்ள சிற்பம்... 200ஆண்டுகட்கு முற்பட்டது. 


நடனக்கோலத்தில் காணப்படும் பெண்ணுடன் இருப்பது தனித்துவம் தான். 

சக 

kanmani tamil

unread,
Jul 16, 2025, 2:10:03 PMJul 16
to vallamai
விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் பெரிய கண்மாயில் சிதறிக் கிடக்கும் தொல்லியல் எச்சங்கள்: அலங்கார வேலைப்பாடுடன் காலத்தால் முற்பட்டுப் புதைந்து கிடக்கும் மடைத் தூண்கள்,  கண்மாய் நிறைந்து மறுகால் போகுமிடத்தில் கட்டப்பட்டுள்ள கல் சுவரில் காணப்படும் துண்டுக் கல்வெட்டுகள், பழைமை வாய்ந்த ஐயனார் சிற்பம் (ஒரே கல்லில் பூரணை, புஷ்கலையுடன்),  மடை காத்த வீரனின் நினைவுக் கல் முதலியன... 

https://youtu.be/qzI76mYjHOo?si=bncAttzGMJgWESj0

முடிகொண்ட சோழன் என்ற பெயர் சோழனைக் குறிப்பது தான் எனினும்; இப்பகுதியில் காணப்படும் கல்வெட்டுகளில் சோழனை வென்று அவனுக்கு அதே சோழ நாட்டைத் தானமாகத் தந்து அருளிய பெருமை மிக்க மாறவர்மன் சுந்தரபாண்டியனைப் போற்றுவதே முதன்மைச் செய்தியாக இடம் பெறும். 

திருந்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் கோயிலில் மாறவர்மன் சுந்தர பாண்டியன் காலத்துக் கல்வெட்டுகள் படியெடுக்கப் பட்டுள்ளன.

அக் கோயிலை ஆய்வுப் பொருளாகக் கொண்ட முனைவர் இரத்னமாலா அவர்களின் ஆய்வேடு அக்கோயிலில் காலந்தோறும் பல மாற்றங்கள் நிகழ்ந்ததைப் பதிவு செய்கிறது (இவ் ஆய்வேடு பதிப்பிக்கப் படவில்லை). 

இன்று பெருமாள், சிவன், முருகன் ஆகிய தெய்வங்கள் எழுந்தருளி இருக்கும் இக் குன்றுக் கோயிலில் உள்ள கட்டுமானங்கள் முறையே பௌத்தம், ஜைனம், ஆசீவகம் ஆகிய மூன்று பழஞ் சமயங்களும் வழிபாட்டில் இருந்த தடயங்களைத் தாங்கி உள்ளன (இது எனது கருத்து- கோயில் திருப்பணிகளின் பின்னர் கிட்டத்தட்ட அவை முழுவதுமாக மறையும் நிலையில் உள்ளன.). 

துண்டுக் கல்வெட்டில் காணப்படும் மங்கலம் என்ற பிரமதேயம் இன்றும் அதே பெயரால் (மங்கலம்=M) 
Mபுதுப்பட்டி எனச் செல்லமாகச் சுருக்கி அழைக்கப்படுகிறது. 

சக 

kanmani tamil

unread,
Jul 17, 2025, 10:31:06 AMJul 17
to vallamai
விருதுநகர் மாவட்டம் மம்சாபுரத்தை ஒட்டி உள்ள காட்டில் காணப்படும் மண்டபம் 


கேட்பாரற்றுக் கிடக்கும் நாயக்கர் காலத்துச் 
சிதிலமடைந்த மண்டபம்... 

சக 

kanmani tamil

unread,
Jul 20, 2025, 11:55:28 PMJul 20
to vallamai
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்த கொல்லங்கொண்டான் கண்மாயில் வீரபாண்டியன் முத்திரையுடன் கூடிய மடைத்தூண்...

https://youtu.be/G8s3a7iIYhk?si=jknrKTsOtuhrAOpC

சக 

kanmani tamil

unread,
Jul 27, 2025, 4:36:26 AMJul 27
to vallamai
விருதுநகர் மாவட்டம் ஜமீன் கொல்லங்கொண்டான் ஊரை அடுத்த மொட்டைமலையின் அடிவாரத்தில் காணப்படும் சிலை 


பதிவாளர் சொல்வது போல் இச்சிலை தென்காசிப் பாண்டியன் வீரபாண்டியனோ அவரின் அரசு அதிகாரி கருவூர்ப் பொன்பற்றி உடையாரோ ஆக இருக்க இயலாது. 
அந்த இடத்தில் கோயில் ஏதும் இருப்பதாகவும் காணப்படவில்லை. ஆட்சியாளர் திருப்பணி செய்து விட்டுத் தம்மைத் தாமே சிலையாக வடித்து நிற்க வைத்த காலம் விஜயநகரப் பேரரசுக் காலம் தானே...
சோழரோ பாண்டியரோ தமக்குச் சிலை வடித்துக் கொண்ட தகவல் இது வரை நான் கண்டதில்லை. 

ஆசனத்தில் அமர்ந்து இருக்கும் தோற்றம் தான் எனினும் அது புடைப்புச் சிற்பமாகத் தான் உள்ளது.
குன்றின் பெயரோ மொட்டை மலை...
அந்த உருவத்தின் தலையைப் பார்த்தால் ஏதோ சமணச் சிற்பமாக இருக்கலாமோ என எண்ணத் தோன்றுகிறது. 

சக 

kanmani tamil

unread,
Aug 3, 2025, 1:44:15 AMAug 3
to vallamai
விருதுநகர் மாவட்டத்து சுந்தரபாண்டியம் ஊரின் வயல்புறத்தில் பெண்ணாக வழிபடப்படும் ஆணின் நினைவுக்கல்...

https://youtube.com/shorts/nJSeWPXXHzg?si=YfcL2fp3VeLH4pBW

கல்லில் கொண்டை தெளிவாகத் தெரிவதால் பெண் என்று பொதுமக்கள் முடிவு செய்து விட்டனர். ஆனால் தேய்ந்து போன மீசையைப் பதிவாளர் அடையாளம் காட்டுகிறார்.

சக 

சக 

kanmani tamil

unread,
Aug 4, 2025, 5:51:55 AMAug 4
to vallamai
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டத்தில் பாட்டக்குளம் கண்மாய்க் கரை அருகே தெய்வமாக வழிபடப் படும் கிணற்றுத் துலாக்கல்:

https://www.facebook.com/share/r/174VjXnMhL/

காணொளியில் கிணறே காட்டப்படவில்லை. துலாக்கல்லை எடுத்து வந்து நட்டு வழிபடுகிறார்களோ?!

சக 

kanmani tamil

unread,
Aug 10, 2025, 3:10:49 AMAug 10
to vallamai
இந்தக் குப்பையைப் பார்த்துத் தலை குனிகிறேன்.

https://youtube.com/shorts/9l2vEqH4rIA?si=0IHuCQYCPBA6ivoy

ஒரு வரலாறு அதன் அருமை தெரியாத மக்களால் மாய்க்கப் படுகிறது. 

எப்பேர்ப்பட்ட குருதிப்பலி!!! 

சக 

kanmani tamil

unread,
Aug 22, 2025, 6:56:51 AM (14 days ago) Aug 22
to vallamai
விருதுநகர் மாவட்டத்துப் பெரிய கொல்லம்பட்டி கிராமத்தில் மடியில் குழந்தையோடு தீயில் இறங்கித் தன் கணவன் உடலோடு எரிந்த பெண்ணின் சதிக்கல்...

https://www.facebook.com/share/r/16mU2Tm3dV/

நினைத்துப் பார்த்தால்... நடுக்கமாகத் தான் இருக்கிறது. அன்றைய சமுதாயத்தின் கட்டுப்பாடு... நல்லவேளை! இப்போது மீண்டு விட்டோம். 

(முற்றும்)
Reply all
Reply to author
Forward
0 new messages