ஆளுமைகள்

153 views
Skip to first unread message

kanmani tamil

unread,
Jun 8, 2025, 2:19:26 AMJun 8
to vallamai
அருமைநாயகம் சட்டாம்பிள்ளை

/// ... பலருக்கும் இவரைத் தெரியாது....

சுய மரியாதைக்காக போராடிய அருமை நாயகம் சட்டாம்பிள்ளை (1823-1918),  நாசரேத்தை அடுத்த பிரகாசபுரம் மூக்குப்பேரி என்ற ஊரைச் சேர்ந்தவர்.

1642ஆம் ஆண்டில் கொற்கையை அடுத்த வெள்ளக்கோயில் என்ற ஊரில் குடிபடைகளுடன் பெரும் நிலக்கிழாராக வாழ்ந்து வந்தவர்கள். 

திருமலைநாயக்கரின் பிரதானி வடமலையப்ப பிள்ளையின் நடவடிக்கைகள் காரணமாகத் தமது நிலங்களைக் குடிகளுடன் சேர்த்துக் கொற்கைக் காணியாளரான நற்குடி வேளாளர்கள் வசம் விற்றுவிட்டுக் குடிபெயர்ந்து  ஓட்டப்பிடாரம் அருகிலுள்ள ராஜாவின் கோயில் என்ற ஊரில் குடியேறினர்.  19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் நாசரேத் நகரம் உருவாக்கப்பட்டபின்; அவ்வூரை ஒட்டி அமைந்துள்ள பிரகாசபுரம் மூக்குப்பேரியில் குடியேறினர்

 சாயர்புரத்திலிருந்த எஸ்.பி.ஜி. (Society for the Propagation of the Gospel)யைச் சேர்ந்த செமினரியில்  இறையியல் கற்று உபதேசியார் (Catechist) தேர்வில் முதலிடம் பெற்றவர். சம்ஸ்கிருதம், ஹீப்ரு, லத்தின், கிரேக்கம் ஆகிய மொழிகளும் கற்றுத் தேர்ந்தவர்.

1849ஆம் ஆண்டில்  அருமைநாயகம் நாடார் என்கிற சட்டாம்பிள்ளை சென்னைக்கு வந்திருந்தபோது கால்டுவெல்லின் - காலனி ஆதிக்கமும், கால்டுவெல் திருப்பணியும் என்ற நூலைப் படிக்க நேர்ந்ததால் மிகுந்த மனக் கொந்தளிப்பு அடைந்தார்.

 ஐரோப்பாவின்  வாழ்ந்த  கிறிஸ்தவ சமயத்தைச் சேர்ந்த மக்களிடையே இந்திய மக்கள் கொடிய காட்டுமிராண்டி நிலையில் வாழ்கிறார்கள் என்பது போன்ற மிகையான தோற்றத்தினை உருவாக்கும் நோக்கிலும், இத்தகைய காட்டுமிராண்டி மக்களிடையே கல்வியறிவையும் ஒழுக்கத்தையும் பரப்புகிற உன்னதமான தியாகம் செறிந்த பணியினைப் பாதிரிமார்களாகிய தாங்கள் மேற்கொண்டிருப்பது போன்ற ஒரு மாயையைத் தோற்றுவிக்கிற வகையிலும் எழுதிப் பணம் வசூலிக்க ஏதுவாகவே அவதூறு நிறைந்த இந்நூலினைக் கால்டுவெல் எழுதியுள்ளார் எனச் சட்டாம்பிள்ளை  உரிய ஆதாரத்துடன் பிரச்சாரம் செய்யத் தொடங்கினார்.

கால்டுவெல்லின் இந்நூலைத் தமிழாக்கம் செய்து அச்சிட்டு, ஆங்கிலம் அறியாத தமிழக நாடார்கள் மற்றும் பர்மா, சிலோன் நாடார் சமூகத்தவர் மத்தியிலும் பரப்பினார். கால்டுவெல் பரப்பும் அவதூறுகளுக்கு பதில் உரைக்க 40 புத்தகங்கள், சில கைப்பிரதிகளும் வெளியிட்டுள்ளார்.

மேலும் பிரிட்டன் பிரதம மந்திரி கிலாட் ஸ்டோனிடம் தங்கள் வருத்தத்தை தெரிவித்தனர். அவரோ  உள்ளூர் விடயங்களில் தன்னால் தலையிட இயலாது என்று கூறியதுடன் privy council ல் தங்கள் வேண்டுதலை தெரிவிக்க கூறினார்கள். 

1881ஆம் ஆண்டில் கால்டுவெல்லின் History of Tennevelli என்ற நூல் சென்னை அரசினர் அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டது. இந்நூலிலும் நாடார் குலத்தவர் பற்றிய அவருடைய கருத்து எந்த மாற்றமுமின்றிப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் எதிரொலியாகச் சான்றோர் சமூகத்தவர்கள் கால்டுவெல்லுக்குக் கொலை மிரட்டல்கள் விடுத்தனர். 

 அந்த ஆண்டிலேயே அவர் திருநெல்வெலிப் பகுதியில் நிம்மதியாக வாழ முடியாத நிலை தோன்றியதால் கோடைக்கானலில் குடியேற நேர்ந்தது. 1891ஆம் ஆண்டில் கோடைக்கானலிலேயே மரணமடைந்த பிறகுதான் அவரது உயிரற்ற உடல் இடையன்குடிக்குத் திரும்ப நேர்ந்தது

பெரும்பாலும் வங்காள மற்றும் மெட்ராஸ் பிரசிடென்சியை மையமாகக் கொண்டு மேற்கத்திய ஆதிக்கம் செலுத்தும் நிறுவனமயமாக்கப்பட்ட தேவாலயங்களுக்கு எதிராகப் போராடத் துணிந்தார்

ஒரு மதச்சார்பற்ற மற்றும் சுதந்திரமான இந்து -கிறிஸ்தவ தேவாலயத்தை நிறுவியவர். 

இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாற்றில் முதல் முறையாக மேற்கத்திய மிஷனரிகளின் ஆதிக்கத்தை நிராகரித்தவர்.

பதிவு பேராசிரியர்: J P Josephine Baba 

இந்த கால்டுவெல் எழுதியதை வைத்து தான் குறிப்பிட்ட சமுதாய மக்கள் மீது சில அரசியல் கட்சிகள் தொடர்ந்து இழிவான பரப்புரைகளை செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது!

https://www.facebook.com/share/19UgY6zVmu/

தெரிவு: சக

kanmani tamil

unread,
Jun 11, 2025, 12:44:10 AMJun 11
to vallamai
ஜெய்ஹிந்த் செண்பகராமன் பிள்ளை வரலாறு:


சக 

kanmani tamil

unread,
Jun 12, 2025, 12:30:04 AMJun 12
to vallamai
M.சின்னசாமி முதலியார்- பெங்களூருவில் அவரது பெயரால் வழங்கும் புகழ்பெற்ற கிரிக்கெட் மைதானம் தோன்றிச் சிறப்புறத் திகழும் வரலாறும் அவரது முனைப்பும் முயற்சியும்...!!!


சக 

Raju Rajendran

unread,
Jun 12, 2025, 9:22:27 AMJun 12
to vall...@googlegroups.com
சிறப்பு

ஞாயி., 8 ஜூன், 2025, 11:49 AM அன்று, kanmani tamil <kanmani...@gmail.com> எழுதியது:
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHctgVMuBwsfUvvBoPvXznFVTfvJFNJRAEr%3DYjtd6R6-czg%40mail.gmail.com.


--

Raju M. Rajendran

kanmani tamil

unread,
Jun 14, 2025, 12:25:12 AMJun 14
to vallamai
துர்காவதி தேவி- சுதந்திரப் போராட்ட வீராங்கனை- சுயநலம் மிகுந்த அரசியல் உலகிற்குள் சிக்காத பெண் சிங்கம் 


/// 19 டிசம்பர், 1928, நள் இரவு... லாகூர்... அந்த   பங்களாவின்   திட்டி வாசல்  போன்ற  ரகசிய கதவு  ,  சங்கேத மொழியில் தட்டப் படுகிறது...

 கதவை திறந்தது ஒரு அழகிய இளம் பெண், இடுப்பில்  குழந்தையுடன்... வந்த நால்வரை  பார்த்த உடன் அவர் முகம் மலர்கிறது.

 உள்ளே அமரச் செய்து உணவளிக்கிறர். வந்தவர்கள் எல்லோரும் இளைஞர்கள். HSRA  (ஹிந்துஸ்தான் ஸோஷியலிஸட் ரிப்பப்ளிக் அஸோசியேஷன்) என்ற தேச விடுதலை இயக்கத்தை சேர்ந்தவர்கள்.  அவர்கள் தாழ்ந்த குரலில்  பேசிக் கொள்ளுகிறார்கள,

என்ன பிரச்சினை? அவர்களை இன்றைய தேதியில் லாகூரில்  500 போலீசார் வலை வீசித் தேடிக்கொண்டு இருக்கிறார்கள்.

காரணம்? இரண்டு நாட்கள் முன் தான் இந்த நால்வரும்  லாகூரின்  டெபுட்டி  போலீஸ்  சூப்பிரன்டென்டன்ட்  John P Saunders மற்றும் ஒரு கான்ஸடேபிளை சுட்டுக் கொன்று விட்டுத் தப்பியவர்கள்.

 (அவர்கள் குறி வைத்தது என்னமோ பஞ்சாப்   சிங்கம்   லாலா லஜ்பத் ராய் அவர்களின் வீர மரணத்திற்குக்குக் காரணமான போலீஸ்  சூப்பிரன்டென்டன்ட் ஜேம்ஸ் A. ஸ்காட்டுக்கு... குறி தப்பியது... 'Mistaken identity')

நால்வருக்கும் லாகூர்  இப்போது   HOT POT... இங்கிருந்து  தப்பியே ஆக வேண்டும்... இருக்கும் ஒரே எஸ்கேப் ரூட் விடியற் காலை கிளம்பும் லாகூர் via லக்னோ / கான்பூர் டிரைன் தான்.

திட்டம் தயார்...  இளைஞர்களில்  ஒருவரான பகத் சிங் தன் தாடி மீசையை எடுத்து விட்டு  ஒரு பணக்கார  பிரபு  வேஷத்திலும் மற்றொரு வரான  ராஜ்குரு அவருடைய வேலைக்காரன் போலவும்... 

போலீசை ஏமாற்ற அவர்களால் மரியாதையாக  துர்கா Bhabhi என அழைக்கப்பட்ட இளம் பெண் (துர்காவதி தேவி) பகத் சிங்கின் மனைவி போல் கைக் குழந்தை சச்சின் வோரா  உடனும்... 

மற்ற இளைஞர் சந்திரசேகர ஆசாத்  தங்கள் சஹாவான சுக்தேவின்  தாய், மற்றும் தங்கையை காசிக்கு புனித யாத்திரை  அழைத்தப் போகும் சன்யாசி வேஷத்தில்...

 கான்பூருக்குப் போய்; அங்கிருந்து பகத்சிங் போலி தம்பதி குழுவினர் கல்கட்டாவிற்கு... ஆசாத் குழுவினர்  காசிக்கு  ரயில் மாறி  நழுவிவிட வேண்டும்

 இதற்குத் தேவையான மாறுவேட  உடைகள், போதுமான (5000 ரூபாய் ) , பணம், தேவையானால் பயன் படுத்த   துப்பாக்கிகள் (துர்கா Bhabhiக்கு ) எல்லாம் துர்கா Bhabhi  தயாராக வைத்திருந்தார்.

ஏன் கல்கட்டாவிற்கு? அங்குதான் துர்கா Bhabhiயின் 26 வயது கணவர் பகவதிசரண் ஓரா BA... செல்வந்தர்... HSRA இயக்கத்தின் முக்கிய ரகசிய நபர் இயக்கத்தின்  மீட்டிங்கில் கலந்து கொள்ளப் போய் இருக்கிறார்.

துர்கா Bhabhiயே  தன் கைப் பட தயாரித்துக் கொடுத்து அனுப்பியுள்ள ஒரு  வெடி குண்டுடன்... (அதில் அவர் ஒரு நிபுணர்) அடுத்த தாக்குதலுக்கு...

திட்டம் அச்சுப் பிசகாமல் நடந்தேறுகிறது. பறவைகள் லாகூரை  விட்டுச் சிட்டாகப்  பறந்து விடுகின்றன. (இது பற்றிய என் பதிவு ஒன்று உண்டு)... 

கல்கட்டாவில் மனைவியைச் சந்தித்த ஓரா அவருடைய தீரச் செயலைக் கேட்டு மகிழ்ந்து, எல்லோர் முன்பும் கை குலுக்கினாராம். இவர் முகம் சிவக்க...

சில நாட்கள் கழித்து ஒரு ஏழைப் பெண் வேஷத்தில்  அதே டிரைனில் குழந்தையுடன் இரண்டாம் பேர் அறியாமல் லாகூர் திரும்பி விடுகிறார் துர்கா Bhabhi.

வந்து வழக்கம் போல் அவர்கள் நடத்தும் ஹிமாலையன் ஸ்டோரஸ் என்ற கடையின் வியாபரத்தைக் கவனிக்கிறார்.

உண்மையில்... ஹிமாலையன் ஸ்டோரஸ் ஒரு திரை தான், அதன்  திரை மறைவில்  இயங்குவது ஒர் வெடிகுண்டுத் தொழிற்சாலை.  அதன் Chief Technician துர்கா Bhabhi தான்...

1929  டிசம்பரில்  வைசிராய் லார்ட் இர்வின் பிரயாணம் செய்த ரயிலின் அடியில், கணவர் ஓராவினால் வைக்கப்பட்டு வெடித்த குண்டு இவர் கையால் செய்யப்பட்டது தான்.

கல்கட்டாவில் இருந்து திரும்பி வருகிறார் ஓரா. பின்னாலேயே அந்தச் செய்திகளும் வருகின்றன... சுக் தேவ், ராஜ் குரு, பகத் சிங், அசெம்பிளி யில்  குண்டு வீசியது. (Smoke bomb) பின் அவர்கள் பிடிபட்டு  லாகூர்  சிறையில் அடைக்கப்பட்டு லாகூர் சதி வழக்கு என்ற பெயரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது முதலியன...

ஓரா தம்பதியினரும் HSRA இயக்கமும்  சிறைப்பட்ட  புரட்சியாளர்களை சிறை மீட்கச் சிறையை வெடிகுண்டு வைத்துத் தகர்க்கத் திட்டம் இடுகின்றனர், மாதிரி வெடி குண்டு ஒன்றை  துர்கா Bhabhi தயாரிக்கிறார் .

 ஆனால் என்ன துரதிஷ்ட்டம் ... மாதிரி  குண்டை  ரவி நதிக் கரையில் பரிசோதிக்க ஓரா  முயலும் போது அது எதிர்பாராமல் சீக்கிரமே வெடித்து ஓரா இறந்து விடுகிறார்... வயது 26 தான்.

துர்கா Bhabhi தன் 23ம் வயதிலேயே கைம்பெண்... மனம் உடைந்தாலும் அவர் தன்னம்பிக்கை, தேசபக்தியை இழக்கவில்லை.

அரசாங்கம் லாகூர் சதி வழக்கு குற்றவாளிகளுக்குத் தூக்கு தண்டனை விதிக்கிறது, குற்றவாளிகள்  24வயது கூட  நிரம்பாதததால் அவர்களின்  இளமை கருதி அதை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டும் எனச் சட்டவீதிப் போராட்டங்கள் வெடிக்கின்றன.

ஆனால் பஞ்சாப் கவர்னர்  லார்ட் ஹெய்லி தூக்கு தண்டனையை உறுதிசெய்ய கடும் முயற்ச்சி எடுக்கிறார். கூடக்குரல் கொடுப்பது யார்? அட! அது நம் M.K.காந்தீஜீ!! ஹரிஜனில்... அடக்கொடுமையே!!!

துர்கா Bhabhi தன் நகைகளை விற்று (4000 ரூபாய்) குற்றவாளிகளின்  தண்டனை குறைப்பதற்குச் சட்டப் போராட்டம்... பலன்  இல்லை.

 அவர்கள் மூவரும் 23rd மார்ச் 1931 அன்று சிறை வளாகத்தில் தூக்கில் இடப்படுகிறர்கள. 

கொதித்து எழுகிறார் துர்கா Bhabhi. பழிக்குப்பழி... பஞ்சாப் கவர்னர் பழி வாங்கப்பட வேண்டும்... அன்று  கவர்னர் மாளிகை அருகில் மறைந்திருந்து கவர்னர் வெளிவரும் போது துப்பாக்கியால் சுட (நான்கு ரவுண்டு) துரதிஷ்ட வசமாக; அந்த  நேரத்தில் குறுக்கே வந்த வேறு இரு பிரிட்டீஷ் அதிகாரிகள் கொல்லப்பட்டு கவர்னர் தப்பி விடுகிறார்.

துர்கா Bhabhi கைது  செய்யப்பட்டு; ஆயுள் தண்டனை வழங்கப்படுகிறது. ஆனல் பஞ்சாப் மக்களின் வீதி சர்தார் படேலின்  சட்டப்  போராட்டம், அவருடைய இளம் வயது... குழந்தை  என்ற காரணங்களினால், தண்டனை ஐந்தாண்டு காலமாகக் குறைக்கப்பட்டுப் பின் விடுதலை.

விடுதலை ஆன பிறகும் அவருடைய உதவி, பங்களிப்பு தீவிரவாத விடுதலை போராளிகளுக்குத் தொடர்கிறது.

குறிப்பாக, 1926இல் அவர்   HSRA போராளி தியாகி கத்தார் சிங் அவர்களின் நினைவுநாள் அனுசரிப்பில் அவர்  பெரும் கூட்டத்திற்க்கு. லாகூரில் தலைமை தாங்கியது...

மற்றொன்று 
போராளி ஜித்ரேந்ததிர நாத் தாஸ் சிறையில் 65  நாட்கள் உண்ணாவிரதம் இருந்து இறந்தபோது; அவருடைய இறுதி உர்வலத்திற்கு லாகூரில் இருந்து கல்கட்டா  வரை ரயிலிலும் நடந்தும்  தலைமை தாங்கியது... பின் தொடர்ந்த மக்கள் கூட்டம் 4 /5 மைல் நீளம் இருந்ததாம்.

 15ஆகஸட் 1947,  இந்தியாவிற்கு சுதந்திரம்...

ஏராளமானவர்கள் சுதந்திரப் போராட்ட தியாகிகள் என்று பட்டம், பதவி, பணம், செல்வாக்கு, நிலம் பெற்றனர்.

சரோஜனி நாயுடு, அருணா ஆசப் அலி, விஜயலட்சுமி பண்டிட், ருக்மணி லட்சுமிபதி போன்ற பெண்மணிகள்  உட்பட...

துர்கா Bhabhi போன இடம் தெரியவில்லை... அரசுக்கு எந்த துப்பும் இல்லை; அரசை எந்த விதத்திலும் அவர் நெருங்கவும்  இல்லை.

சில வருடங்கள் கழித்து அவர் கஸியாபாத்தில் இருப்பதாக கேள்விப்பட்டு; சர்தார் வல்லபாய் படேல் அவர்கள் அவரை சந்தித்து அரசு உதவி, பதவி  offer  பண்ணிய போது, மறுத்து விட்டாராம். நேரு மாமாவை  அவர் சந்திக்கக் கூட மறுப்பு... 

பிற்காலத்தில் ஒரு நேர்காணலில்  அவர் குறிப்பிட்டது....

"பாரதத்தின் சுதந்திரத்திற்காகத் தன் உடல், பொருள், ஆவி, இளமை,, எல்லாவற்றையும் மனப்பூர்வமாக என் கணவர் போல் தியாகம் செய்த நூற்றுக் கணக்கானவர்களை சந்தித்து உள்ளேன். அவர்கள் தியாகத்தின் முன் என்னுடையது கால் தூசி கூட இல்லை... அதைக் காட்டி எந்த சலுகையும் அடைய என் மனசாட்சி ஒப்பாது...

அந்த வீரர்கள் புகழ் பரப்புவது, நினைவை போற்றுவது  தான்  என் பணி" என்றார்.

தன் சொத்துக்களை  விற்று லக்னோவில் ஒரு பெண்கள்  பள்ளி ஆரம்பித்து; அதே பள்ளியில் ஒரு சதாரண ஆசிரியையாகவே இறுதி வரை பணி ஆற்றுகிறார். 

1907இல் கஸியாபாத்தில் ஒரு வசதியான  பிராமணக் குடும்பத்தில் பிறந்து; சிறு வயதில் பெற்றோரை இழந்து; சித்தியால் வளர்க்கப்பட்டு; படித்து; பகவதி சரண் வோரா என்ற படித்த பணக்கார பிராமண  இளைஞரை 13ம் வயதில் கைப்பிடித்து; அவருடைய சுதந்திரப்  போராட்ட காரியம் யாவிலும் கைகொடுத்து, 18ம் வயதில் ஒரு குழந்தைக்குத்  தாயாகி;  23ம் வயதில் கணவரை  இழந்து; துப்பாக்கி பிடித்து நாட்டு  விடுதலைக்காகப் போராடி; அப்பழுக்கற்ற  வீர தேசபக்தி/தியாக  வாழ்வு வாழ்ந்து; தன் 92ம் வயதில்  1999இல்  கஸியாபாத்தில் மறைந்தார். 

அவர் இறுதி விருப்பப்படி  அவர் மறைவிற்க்குப் பின்  அவர் நிறுவிய  அந்தப்  பள்ளிக்கு  அவர்  பெயரோ; அவரது கணவர் பெயரோ வைக்கப்பட வில்லை. அது வெறும் "பெண்கள் பள்ளி" என்றே அழைக்கப்பட்டது. 
 
அந்தப் பள்ளி இன்றும் உள்ளது.

இதுவல்லவோ வீர தியாக வாழ்வு!!!

வாழ்க அவர் புகழ்! வந்தே மாதரம்///

சக 

kanmani tamil

unread,
Jun 16, 2025, 2:40:55 PMJun 16
to vallamai
டைரக்டர் மணிரத்னம்  
'தங்கள் வாழ்க்கை வரலாறை படமாக எடுக்கிறோம்' என்று கூறிப் பல குறிப்புகளைப் பெற்று இயக்கிய  நாயகன் படத்திற்கு மூலமாக இருந்த வரதராஜ முதலியார் எனும் ஆளுமை.


/// மும்பை வரதராஜ முதலியார்...!!!

சுமார் 20 ஆண்டுகாலம் 20 லட்சம் தமிழர்களுக்கு மும்பை மாநகரின் முடிசூடா மன்னராக திகழ்ந்தவர் தமிழகத்தைச் சேர்ந்த வரதராஜ முதலியார்...

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு எளிய நெசவுக் குடும்பத்தில் பிறந்து; வறுமையின் காரணமாக தூத்துக்குடிக்குக் குடி பெயர்ந்து; அங்கு துறைமுகப் பகுதியில் வேலை செய்து கொண்டு; நட்பு வட்டத்தைப் பெருக்கிப்; பின்னாளில் மும்பை துறைமுகப் பகுதிக்குச் சென்று அங்கு ஒரு மிகப்பெரிய தொழில் சாம்ராஜ்யத்தை ஏற்படுத்தி;
மும்பை மாநகரில் கவுன்சிலர், மேயர், எம்.எல்.ஏ, எம்.பி. ஆகியோரை நிர்ணயிக்கும் சக்தியாக திகழ்ந்தவர் தான் வரதராஜ முதலியார்.

பாட்ஷா படத்தில் எப்படி ரஜினி கடத்தல் மன்னராக திகழ்ந்தாரோ அதேபோலவே இருந்தவர்.

வேஷ்டி கட்டிய மதராசி வாலாக்களுக்கு பக்கபலமாக நின்று பாதுகாத்தவர்..

தாராவி பகுதியில் தென் தமிழகத்தைச் சேர்ந்த பல குடும்பங்களை குடியமர்த்தி அவர்களுக்கு வேலை வாய்ப்புகளைக் கொடுத்து அவர்களின் வழிகாட்டியாகத் திகழ்ந்தவர்...

இவர் மீது வழக்குகள் இருந்தாலும் இவர் மூன்று விஷயங்களைக் கடைப்பிடித்த காரணத்தால் மும்பை போலீசார் இவர் மீது மிகுந்த மரியாதை வைத்து இருந்தனர்.

அந்த மூன்று விஷயங்கள் 

1. தேச விரோதச் செயல்களைச் ... செய்ய மாட்டார். அதாவது குண்டு வைப்பது போன்ற விஷயங்களுக்கு எதிரானவர்.

2. போதைப் பொருட்களைக் கடத்த மாட்டார். குறிப்பாக வெளிநாட்டு ஹெராயின் போன்ற வஸ்துகளை எக்காரணத்தைக் கொண்டும் கடத்த மாட்டார். 

3. பெண்களை யாராவது கடத்தி விட்டால் இவரிடம் சொன்னால் போதும் உடனடியாக பெண்ணை மீட்டுக் கொடுப்பார். 

மது மாது சூது மற்றும் தேச விரோத சக்திகளுக்கு எதிரானவர்.

தமிழர்களுக்காக மராட்டிய முரசு என்னும் பத்திரிகை நடத்தியவர். மும்பை பகுதியில் பள்ளிக் குழந்தைகளுக்காக தனது சொந்த நிலத்தில் பள்ளிக்கூடம் கட்டிக் கொடுத்தவர்.

தமிழ்நாட்டில் இருந்து பம்பாய்க்கு நிறைய ரயில்கள் கொண்டு வந்ததில் முக்கியப் பங்கு வகித்தவர்.

அரசு அலுவலகங்களைத் தனது அன்பின் கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர்.

ஒரே நேரத்தில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களுடனும் கலைஞர் கருணாநிதி அவர்களுடனும் நட்புடன் இருந்தவர்.

ஈழத் தமிழர்களுக்காக 
எம்.ஜி.ஆர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க நிறைய உதவிகளைச் செய்து கொடுத்தவர்.

ஈழத் தமிழர்களின் கொடுமைகளைப் போக்குவதற்காக; இந்திய அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக; ஆறு லட்சம் பேர்களைக் கொண்டு ஒரு பிரம்மாண்ட பேரணியை மும்பை மாநகரில் நடத்தி ஒட்டு மொத்த இந்தியாவில் பார்வையையும் தன் பக்கம் திருப்பியவர் வரதராஜ முதலியார்.

வரதா பாய் என்று மும்பை வாலாக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட வரதராஜ முதலியார் அவர்கள் எம்ஜிஆர் மரணித்த ஒரு வார காலத்தில் அதாவது 02.01.1988. அன்று சென்னையில் தனது மகள் இல்லத்தில் மாரடைப்பால் காலமானார்...

இன்றைக்கும் தாராவி பகுதிகளில் ஆயிரக்கணக்கான வீடுகளில் வரதராஜ முதலியார் திருவுருவப்படத்தின் வாயிலாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: கட்டுரை வரைவு
Thirunavukkarasu TR///

தெரிவு: சக

kanmani tamil

unread,
Jun 19, 2025, 6:08:13 PMJun 19
to vallamai
விருதை பாரதி: திருவாலவாய நாடார் 

/// 1910லேயே
கல்விக்காகத் தன் உடல், பொருள், ஆவி ஈந்த எத்தனையோ கொடை வள்ளல்களில் ஒருவர் எங்கள் “விருதை பாரதி” 
திரு.திருவாலவாய நாடார் அவர்கள்.

வீட்டிற்குள்ளே பெண்ணைப் பூட்டி வைத்த விந்தை மனிதர்கள் வாழ்ந்த காலம் அது. அடுப்பூதும் பெண்ணிற்கு கல்வி எதற்கு? என்று எகத்தாளம் பேசிய எத்தர்கள் நிரம்பிய காலம் அது. மாட்டுத் தொழுவத்திலும், காட்டு வேலையிலும் பெண்டிரின் பெருமைகளை சிறுமையாக்கிய கொடுங்காலமது.

மனிதருள் மாணிக்கமாம் திரு.திருவாலவாய நாடார் அவர்கள் “பெண்களே நாட்டின் கண்கள்” என்றுணர்ந்து, பெண்கள் கல்வி கற்றால் நாடே வளம் பெறும் என்பதை வலியுறுத்தி, வீடு வீடாகச் சென்று வாதிட்டபோது சாணி உருண்டையால் அடி வாங்க நேர்ந்தது. பெண்கள் படிக்க வேண்டும் என்ற வாசக அட்டையை தன் நெஞ்சிலும், முதுகிலும் தொங்க விட்டுக் கொண்டு வீதியில் நடந்து சென்றார். இதற்கு அவர் பெற்ற பரிசு, கேலியும் ஏளனமும்.

அன்னாரின் கடுமையான முயற்சிக்குப் பின் தன் மனைவி மங்கம்மாள் வாழ்ந்த இடத்திலேயே பள்ளியமைக்க விரும்பி, தன் வீட்டையே கொடுத்த கொடையாளர். மங்காவின் மச்சி வீடு என்ற பெயரே மருவி இப்பொழுது “மாங்கா மச்சி” என்று அழைக்கப்படுகிறது.

பாக்கு வியாபாரத்திலே கிடைத்த பங்கை, பள்ளிக் கட்டிட நிதிக்கு அளித்தார். பள்ளி கட்டிடப் பணிக்கு வீதியில் கிடக்கின்ற கல்லையும், மண்ணையும் தன் தோளில் சுமந்து பணி செய்தார். தன் முயற்சியின் வெற்றியினால் 1910ம் ஆண்டு பெண்களுக்கென தனிப் பள்ளிக்கூடம் அமைத்தார். 1மற்றும்2ம் வகுப்புகள் கொண்ட “இந்து நாடார் பெண் பாடசாலையை” ஆரம்பித்தார்.

அவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட பள்ளி ஆல விருட்சமாய், என்றும் அழியாப் புகழ் பெற்று, நூறு ஆண்டுகளைக் கடந்து, விருதைப் பெண்களின் திறமையை உலகிற்குப் பறை சாற்றி வருகிறது. ///

 இணைப்பு கீழே

பள்ளியில் எங்கள் தலைமை ஆசிரியை திருமதி ஜெயலட்சுமி எங்களிடம் சாதிக்கும் ஆர்வத்தைத் தூண்டவும்; எங்களுக்குத் திசை காட்டி வழிப்படுத்துவதற்கும்; இந்த வரலாறைப் பல முறை கூறி இருக்கிறார்.

சக 

சக்திவேலு கந்தசாமி

unread,
Jun 20, 2025, 5:38:51 AMJun 20
to vall...@googlegroups.com
நம்மிடையே வாழ்ந்த பல நல்லோர்களைப் பற்றி அறிந்து கொண்டோம்.  மிக்க நன்றி.

kanmani tamil

unread,
Jun 20, 2025, 6:59:51 AMJun 20
to vallamai

N. Ganesan

unread,
Jun 20, 2025, 11:17:42 AMJun 20
to வல்லமை
திருவாலவாயன் - அரிய தமிழ்ப்பெயர். அரிய கல்வித்தொண்டு ஆற்றிய வள்ளல் திருவாலவாயனார் என்பது அறிய மகிழ்ச்சி.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Jun 20, 2025, 11:28:42 AMJun 20
to vall...@googlegroups.com
திருவாலவாயன் - அரிய தமிழ்ப்பெயர். அரிய கல்வித்தொண்டு ஆற்றிய வள்ளல் திருவாலவாயனார் என்பது அறிய மகிழ்ச்சி.

கொங்குநாட்டிலே பிஸினஸ் சமூகம் என்ற பெயரை நாட்டப் பொன்னேர் பூட்டியவர் திரு. ப. நாச்சிமுத்துக்கவுண்டர்.
அவரது ஒரே மகன், அருட்செல்வர் நா. மகாலிங்கம். ஹிந்து சமயக் கோயில்கள், கல்விச்சாலைகள், ஞானதானமாக
அரிய நூல்களை அச்சிட்டு ஆயிரக்கணக்கில் இலவசமாய் வழங்குதல், உரைவேந்தர் ஔவையைக் கொண்டு
திருவருட்பா முழுதுக்குமுரை செய்வித்து, அச்சில் என்றும் இருக்கக் காப்புநிதி அண்ணாமலை பல்கலையில் நிறுவியவர்.
கவிஞர் கே சி எஸ் அருணாசலம், கம்யூனிஸ்ட், அவர் பாடல் தந்துள்ளேன். கேசி எஸ்ஸிடம் என்னை NM அறிமுகம் செய்தார்.

உலகமும், தொழிநுட்பும் விரைந்து மாறிவருகிறது. பாரதம் பொருளாதாரச் சந்தையில் முன்னேற, நன்கு கற்போரும்,
ஆய்வாளரும், அதற்குத் துணைசெயும் தொழிலதிபர்களும் தோன்றிக்கொண்டே இருக்கவேணும்.
நா. கணேசன்

kanmani tamil

unread,
Jun 20, 2025, 12:05:57 PMJun 20
to vallamai
🙏

சக 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

kanmani tamil

unread,
Jun 23, 2025, 6:51:58 AMJun 23
to vallamai
அன்றாட வாழ்வில் ஆங்காங்கு நாம் சந்திக்கக் கூடிய ஆளுமைகளில் ஒரு தந்தையும் இரு மகன்களும்... 


/// போன வருடம் தந்தையர் தினத்தில் எழுதியது...

இன்றைய சிறுவர்கள் நாளைய நிர்வாகிகள்...

வாண்டுகளுக்கு ஸ்கூல் டைரியில் மாணவர் விவரங்கள் கொடுத்து புகைப்படமும் ஒட்ட வேண்டும் என்று தேடினால் எல்லாம் பழைய புகைப்படங்கள்.

சமீபத்தில் எடுத்தது எதுவும் இல்லை என்பதால் புகைப்படம் எடுக்கக் காலையிலேயே கிளம்பினோம்.

ஏரியாவில் இருந்த ஒரு டிஜிட்டல் ஸ்டூடியோவிற்குள் நுழைந்தால், அங்கே ஒரு சிறுவன் தான் அமர்ந்திருந்தான். எப்படியும் ஒரு பதினைந்து வயதிற்கு மேல் இருக்காது.

"பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுக்கணும்..." என்றபடி உள்ளே நுழைய; "பாஸ்போர்ட் சைஸ் போட்டோவா... வாங்க..." என்று உள்ளே புகைப்படம் எடுக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றான்.

வாண்டுகள் குஷியாக உள்ளே ஓடிச்செல்ல, அம்மணி தயங்கியபடி நின்றார்.

"பெரியவங்க யாரும் இல்லையாப்பா??" என்று அவர் கேட்க,

"பதினஞ்சு வருசமா இந்த கடை இருக்குது'க்கா" என்றான்.

"உனக்கே பதினஞ்சு வயசு தான் இருக்கும்..." என்று அம்மணி புன்னக்கைக்க;

"இல்ல நான் கடைய தான் சொன்னேன்... நான் எடுப்பேன்..." என்று அந்த பையன் கேமராவை எடுக்க; அம்மணி முகத்தில் அத்தனை திருப்தி இல்லை.

வாண்டுகளுக்கு புகைப்படம் எடுத்துவிட்டு அப்படியே குடும்பமாகவும் எடுத்துக் கொள்ளலாம் என்று தான் கிளம்பினார். இப்போது இந்த சிறுவன் ஒழுங்காக எடுப்பானா என்றே அவருக்கு சந்தேகம்.

வாண்டு அந்த பையன் கையில் கேமராவை பார்த்ததும் வேகமாக சென்று இருக்கையில் அமர்ந்து விட்டான். புகைப்படம் ஒழுங்காக வருமா அல்லது நம்மை வைத்து இந்த பையன் ட்ரைனிங் எடுப்பானோ என்று என் மனதிற்குள்ளும் ஓட, வாண்டு சரியாக அமர்வதற்கு உதவி செய்தேன்.

அந்த பையன் ஒரு காலில் முழங்காலிட்டு கேமராவை தூக்கிப் பிடித்தபடி, தலையை எவ்வளவு சாய்க்க வேண்டும், எவ்வளவு நிமிர்ந்து அமர வேண்டுமென்று அழகாய் சொல்ல, வாண்டு சொன்னதுபோலெல்லாம் செய்து புன்னகைக்க; ஒரே கிளிக்... ஒரே போட்டோ... அழகாக எடுத்துவிட்டான்.

"ஓகேவா'ண்ணா?" என்று காண்பிக்க; எனக்கு திருப்தியாக இருந்தது. 

வாண்டுகளுக்கு வருடம் ஒரு முறை புகைப்படம் எடுப்பதால்; பல முறை ஸ்னாப் எடுத்து; எது நன்றாக உள்ளதோ அதைத் தேர்வு செய்வோம்.

ஆனால் இம்முறை வாண்டுகள் இரண்டும் சரியாக ஒத்துழைப்பு தர; இருவருக்குமே ஒரு ஒரு கிளிக் மட்டுமே அந்த சிறுவன் எடுத்தான். அதன் பின் எனக்கும் பாஸ்போர்ட் சைஸ் எடுக்கவேண்டியிருக்க, நானும் எடுத்துக்கொண்டேன்.

அந்த பையனின் திறமை, ஒழுங்கு, நேர்த்தி எல்லாம் பிடித்துப்போக, அம்மணி வேகமாய் வாண்டு இரண்டையும் நிற்க வைத்து ஒரு புகைப்படம் எடுக்கச் சொன்னார்.

"இல்லக்கா... எனக்கு full frame எடுக்கத் தெரியாது" என்றான்.

"சரி ஓகே" என்று புன்னகையோடு, "வைட் background வேணும்.." என்று சொல்ல, 

"வைட் தான்'க்கா வரும்.." என்று கணினியில் அமர்ந்து கேமராவிலிருந்து புகைப்படங்களை கணினிக்கு மாற்றினான்.

அதாவது இந்த மாதத்தில், இன்றைய தேதிக்கு ஒரு folder புதிதாய் உருவாக்கி, இந்த புகைப்படங்களை அங்கே மாற்றிவிட்டு; அதன் பின்னே எழுந்து எங்களுக்கு விலை சொன்னான். 

அதோடு ஒரு மணி நேரம் ஆகும் என்று சொல்ல, சரி திரும்ப வந்து வாங்கிக்கொள்கிறோம் என்று சாப்பிட சென்றுவிட்டோம்.

வேலையெல்லாம் முடித்துவிட்டு மறுபடியும் ஸ்டூடியோ சென்றால், அந்த பையன் இல்லை. அவனைவிட இன்னும் சின்ன பையன் ஒருவன் தான் வாசல் அருகே இருந்த கணினியில் அமர்ந்து ஏதோ பார்த்துக் கொண்டிருந்தான்.

"போட்டோ கொடுத்துட்டு போனோம்... ரெடியா?" என்று உள்ளே நுழைய,

"காலைல கொடுத்தீங்களா?" என்று உள்ளே சென்று பார்த்தவன்; அங்கிருந்தே குரல் கொடுத்தான்.

"ஒரு பைவ் மினிட்ஸ் உட்காருங்க... பிரிண்ட் போடுறேன்" என்று சொல்லிவிட்டு அங்கே பிரிண்டர் அருகே இருந்த கணினியில் அமர; எனக்குத் தூக்கி வாரிப் போட்டது.

"அடேய்... நீ ஒர்க் பண்ணப்போறியா??" என்று மனதிற்குள்ளேயே யோசித்தபடி அவனைப் பார்க்க, அவன் எதற்கும் அசராமல், கணினியில் தனது வேலையில் இறங்கிவிட்டான்.

அம்மணி உள்ளே சென்று அவன் என்ன செய்கிறான் என்று பார்க்க, அந்த பெரிய பையன் எந்த folder இல் வைத்திருக்கிறான் என்று சரியாக தேடிக் கண்டுபிடித்து வேலையை ஆரம்பித்து விட்டான்.

பிரிண்ட் வேலை மட்டும்போல என்று நாங்கள் நினைத்திருக்க, எங்கள் மூவரின் புகைப்படத்திற்கும் எடிட்டிங் இன்னும் செய்யவே இல்லை.

"என்னப்பா இன்னும் ரெடி பண்ணலையா?? இன்னொரு பெரிய பையன் இருந்தானே??" என்று அம்மணி விசாரிக்க,

"ஆமா... அவன் இன்னும் பண்ணல... இருங்க நான் ரெடி பண்றேன்.." என்று போட்டோஷாப்பில் வேலையை ஆரம்பிக்க, எனக்கு புருவங்கள் மேலேறியது.

"போட்டோஷாப்லாம் இந்த பொடியனுக்கு தெரியுமா..." என்றே எனக்கு ஆச்சர்யம். 

அந்த சிறுவனோ அமைதியாக எங்கள் ஒவ்வொருவர் புகைப்படமாக எடுத்து எடிட் செய்து, கலர் காண்ட்ராஸ்ட் எல்லாம் சரியாக்கி, "ஓகே'வா அங்கிள்..." என்று கேட்க எனக்கு புன்னகை மட்டுமே. 

"ஓகே" என்று சொல்ல அவன் அடுத்த வாண்டின் புகைப்படத்தை எடுத்து ஒர்க் பண்ண ஆரம்பித்துவிட்டான்.

"நீ என்ன படிக்குற?" என்று அம்மணி கேட்க 

"எயித் (எட்டாம் வகுப்பு) படிக்கிறேன் ஆண்ட்டி" என்று பதில் சொன்னாலும் பார்வை கவனம் எல்லாம் கணினியில் இருந்தது.

"அப்போ உன் அண்ணா?" என்று கேட்க; "அவன் டென்த் படிக்கிறான் ஆண்ட்டி..." என்று வேலையைத் தொடர்ந்தான்.

மூன்று புகைப்படங்களையும் ஒர்க் முடித்து, பழைய புகைப்படங்களை அங்கிருந்து தூக்கிவிட்டு அன்றைய நாளில் இந்த புகைப்படங்களை வைத்துவிட்டு பிரிண்ட் கொடுத்தான்.

"எனக்கு மெயில்'ல soft copy ஒன்னு அனுப்பிடுறியாப்பா?" என்று கேட்க; "ஓகே அங்கிள்..." என்றவன் அதே புகைப்படங்களைக் கணினியில் இருந்த shared network folder இல் போட்டுவிட்டு, எண்ட்ரன்ஸில் இருந்த கணினிக்குச் சென்று அங்கிருந்து புகைப்படங்களை எனக்கு அனுப்பிவிட்டவன்; பொறுமையாக பிரிண்ட் எடுத்த புகைப்படங்களைக் கத்தரிக்க எடுத்துச் செல்ல, "இன்னைக்கு உங்க அப்பா லீவா..." என்று சிரித்தபடி கேட்டார் அம்மணி.
"இல்லை... இன்னைக்கு அப்பா கொஞ்சம் லேட்டா வருவாங்க..." என்று சொன்னபடி அவன் கத்தரிக்க ஆரம்பிக்க; அவனது அப்பா வந்தார். அதாவது கடையின் உரிமையாளர் வந்தார். எங்களிடம் எதுவும் விசாரிக்காமல் அவனிடம் மட்டுமே பேசினார். இந்த பொடியனிடம் ஏதோ விசாரிக்க, பதில் சொன்னபடி புகைப்படத்தைக் கத்தரித்தான்.

"அவன் இப்போ தான் டியூஷன் போனான்" என்று சொன்னதை மட்டும் கவனித்தேன். ஏனென்றால் கவனம் புகைப்படம் ஒழுங்காக கத்தரிக்கப் படுகிறதா என்று அதில் தான் என் கவனம் இருந்தது.

அம்மணி அவனைப் பார்த்துக்கொண்டே 'உன் பேர் என்ன?' என்று விசாரித்தார். கிரிஷ் என்று சொல்ல, அவன் அண்ணன் பெயரையும் விசாரித்தார். ஜானேஷ் என்று சொன்னான். 

"குட் ஜாப்" என்று நாங்கள்... அதாவது வாடிக்கையாளர் பேசுவதை எல்லாம் தனியாக அவனே தான் கேட்டுக் கொண்டிருந்தான். அவனது தந்தை உள்ளே ஏதோ வேலையில் இருந்தார்.

'சின்ன பசங்க என்ன ஒழுங்கா எடுத்துறப் போறாங்க' என்று அசட்டை இல்லாமல், 'எப்படி தான் எடுக்குறாங்க பார்ப்போமே; அதிக பட்சம் ஒரு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ... ஒழுங்காக எடுக்கவில்லை என்றால் கடந்துவிடுவோம்' என்று முன்னேறிச் சென்ற ஒரு முடிவு ஒரு பிரம்மாண்டத்தை தான் எனக்குக் காட்சியளித்தது.

ஒரு போட்டோ எடுத்து; அதை பிரிண்ட் போட்டுக்கொடுத்தது பெரிய பிரம்மாண்டமா என்று கேட்டால் நிச்சயம் பிரம்மாண்டம் தான். ஏனென்றால் அந்த சிறுவர்கள் இருவரும் போட்டோ மட்டும் எடுக்கவில்லை. கிட்டத்தட்ட அந்தத் தொழிலையே தான் சிறப்பாகச் செய்தார்கள் என்று நான் சொல்வேன்.

'போட்டோ தான எடுக்கணும், வாங்க நான் எடுக்கிறேன்' என்ற தன்னம்பிக்கை.
'பதினஞ்சு வருசமா இந்தக் கடை இருக்குது' என்று சொல்லி வாடிக்கையாளரின் நம்பிக்கையைச் சம்பாரித்தல்.
'எனக்கு full frame எடுக்கத் தெரியாது' என்ற தெளிவு.
'gpay பண்ணிடுங்க' என்ற நேர்மை.
அதோடு கூட செய்த வேலையில் இருந்த நேர்த்தி, ஒழுக்கம் என்று பெரியவன் ஒருவாறு கவர்ந்தான்.

'அவன் எதுவும் செய்யலேயே..' என்று குற்றம் கண்டுபிடிக்காமல், சூழ்நிலையைக் கையில் எடுத்த சின்னவன்...
'ஒரு பைவ் மினிட்ஸ் இருங்க' என்று வாடிக்கையாளரின் பொறுமையை சோதிக்காமல் கையாளுதல்...
'இன்னைக்கு அப்பா கொஞ்சம் லேட்டா வருவாங்க' என்று தன் அப்பாவிற்கு ஓய்வு தேவை; அவர் எந்நேரமும் இருக்க முடியாது என்ற புரிதல்; அவனிடமும் இருந்த நேர்த்தி, கவனம் எல்லாம் இன்னும் கவர்ந்தது.

இவர்களுக்கு மேல், வேலையின் நடுவே உள்ளே வந்தாலும்; நான் தான் வந்துட்டேனே; நீ கிளம்பு என்று சிறியவனை விரட்டாமல், ஒதுங்கி நின்ற தந்தை என்று யோசிக்க நிறைய இருந்தது.

கிட்டத்தட்ட அந்த ஸ்டுடியோவில் அவர் இல்லாமலேயே இந்த சிறுவர்கள் இருவரும் சமாளிக்கும் அளவிற்கு பிள்ளைகள் இருவருக்கும் வேலையோடு கூட அதில் ஒழுக்கம், நேர்த்தி, நேர்மை எல்லாம் சேர்த்தே கற்றுக்கொடுத்திருக்கிறார்.

உலக தந்தையர் தினம் இன்று... தந்தையின் பொறுப்பு, இருப்பு, வளர்ப்பு என்பது ஒரு குடும்பத்தில் மிகமிக அவசியம் என்று உணர்ந்து, நம் தந்தையின் இருப்பை, அவரை கொண்டாடவே இந்த நாளை நாம் அனுசரிக்கிறோம்.

அப்படியான இந்த நாளில், இந்த தந்தையின் வளர்ப்பை எழுதி வைப்பது மனதில் ஆகப்பெரும் திருப்தியாக உள்ளது.

அதோடு இன்னொன்றையும் எனக்கு நானே மறுபடியும் சொல்லிக்கொண்டேன். எவரையும் சாதாரணமாக எடைபோடக்கூடாது என்பது நம் எல்லோருக்கும் தெரியும். அதோடு கூட இந்த விஷயம் எங்களுக்கு ப்ராஜெக்ட் மேனேஜ்மென்ட்டில் உண்டு - அதாவது வாய்ப்பு என்பதை கொடுக்காமல், நாமே ஒரு முடிவிற்கு வரக்கூடாது.

அந்த சிறுவர்கள் இருவருக்கும், 'சின்ன பையன் என்ன செய்வான்' என்று முடிவு செய்து வாய்ப்புக் கொடுக்காமல் போயிருந்தால், அவர்களது இந்த நிர்வாகத் திறமையை என்னால் பார்த்திருக்க முடியாது. கிட்டத்தட்ட ஸ்டியோவை அவர்கள் நடத்தினார்கள் என்றால் அது மிகையல்ல. அப்படி அவர்களை வழி நடத்தும் அந்த தந்தைக்கு வாழ்த்துக்கள். அவரது பெயர் ஜெய்க்குமார் என்று நினைக்கிறேன், ஸ்டியோவில் அந்த பெயரில் ஒரு gmail id பார்த்த ஞாபகம்.

இன்னும் மென்மேலும் இந்த சிறுவர்கள் வளரட்டும்.

இவண் 
கார்த்தி சௌந்தர் 

#karthisounder 
#FathersDay2025 
#FatherhoodJourney///

தெரிவு: சக

kanmani tamil

unread,
Jun 23, 2025, 2:31:43 PMJun 23
to vallamai
நடிகர் திலகத்தின் நடிப்பில் இடம்பெறும் பல்வேறு பரிமாணங்கள்; வேறுபட்ட சூழலுக்கும் பாத்திரத் தன்மைக்கும் ஏற்ப வெளிப்படும் உன்னதம்,  திறமை பற்றி வழக்கறிஞர் சுமதி ரசிக்கும்படிப் பேசுகிறார்... அருமை 


சக 

kanmani tamil

unread,
Jun 23, 2025, 10:35:08 PMJun 23
to vallamai
த.பி.சொக்கலால் ராம்சேட்:

/// நீதிபதியால் பீடிச்சக்கரவர்த்தி என்று அழைக்கப்பட்ட த.பி.சொக்கலால் ராம்சேட் அவர்கள் நினைவு நாளில் (22/06/2025) அவர்களுக்கு நினைவு அஞ்சலி...

குடிசைத் தொழிலை நேர்மையாகச் செய்த காரணத்தினால் குபேரனாக வாழ்ந்தார் த.பி.சொக்கலால் ராம்சேட் அவர்கள். நாடார்களுக்கு எப்பவுமே தொழில் போட்டியாக இருப்பது உடன் பிறந்தவர்கள் அல்லது உறவினர்கள் அல்லது தாம் பிறந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் இப்படித்தான் இருப்பதை நாம் பார்த்து வருகிறோம். இதே போல தான் அந்தக் காலத்திலும்... 

த.பி.சொக்கலால் ராம்சேட் அவருடைய முன்னேற்றத்தில் பொறாமை கொண்டவர்கள் அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் அவர் மீது ஒரு வழக்குத் தொடுத்தார்கள்.  என்ன வழக்கு என்றால்; த.பி.சொக்கலால் ராம்சேட் அவர்கள் தயாரிக்கும் பீடி மட்டுமே சிறந்தது என்பது போல அவருடைய விளம்பரங்கள் இருக்கிறது; இதனால் அவருடைய விளம்பரங்களைத் தடை செய்ய வேண்டும் என்று சொல்லி; சில நபர்கள் வழக்கு தொடுத்தார்கள். இவருடைய வழக்கு நடந்த காலம் ஆங்கிலேயர்கள் ஆட்சி காலம். அந்த ஆங்கிலேய நீதிபதிக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. வழக்கு நடந்து கொண்டிருக்கிறது; இறுதியாக நீதிபதி ஒரு முடிவெடுக்கின்றார்.  10கம்பெனிகளில் உள்ள பீடிகளை வாங்கி வரச் சொல்கிறார். ஒவ்வொரு கம்பெனியிலும் உள்ள பீடிகளில் ஒவ்வொன்றை எடுக்கிறார். அதில் உள்ள லேபிள்களைக் கிழிக்கின்றார்.  நீதிபதிக்கு மட்டும் எந்த பீடி எந்த கம்பெனியைச் சேர்ந்தது என்பதைத் தெரிந்து கொள்கிற அளவுக்கு அதில் ஒரு அடையாளத்தை வைத்துக் கொள்கிறார்.  த.பி.சொக்கலால் ராம்சேட் அவர்களைப் பார்த்து இந்தப் 
10பீடிகளில் உங்களுடைய கம்பெனி பீடி எது என்று உங்களால் அடையாளம் காட்ட முடியுமா? என்று கேட்க; 'சரி' என்று சொல்லுகின்றார்.  மேசையின் மீது பத்து பீடிகள் வைக்கப்படுகிறது. த.பி.சொக்கலால் ராம்சேட் ஒரு பீடியை எடுத்து 'இது தான் எங்களுடைய பீடி' என்று சொல்லுகிறார். நீதிபதி அதை வாங்கிப் பார்த்து சரி என்று ஒப்புக் கொள்கிறார். அந்த நீதிபதி தான் த.பி.சொக்கலால் ராம்சேட் அவர்களுக்கு 'பீடிச்  சக்கரவர்த்தி' என்று புகழ் சூட்டியவர்.///

https://www.facebook.com/share/1AkLUeJbrp/

தெரிவு: சக 

kanmani tamil

unread,
Jun 24, 2025, 6:12:28 AMJun 24
to vallamai
மாவீரர் மயிலப்பன் சேர்வை:

https://www.facebook.com/share/p/1CgCUkYWE2/

/// 1795 முதல் 1802 வரை ஏழு ஆண்டுகள் ஆங்கிலேயர்களின் ஆக்கிரமிப்பை எதிர்த்து பல இடங்களில் போரிட்டு வென்ற மாவீரர் தியாகி சித்திரங்குடி மயிலப்பன் சேர்வைகாரர் ஆவார்.

இவர் இராமநாதபுரத்தின் 
மன்னர் முத்து இராமலிங்க விஜய ரகுநாத சேதுபதியின் ஒரு படைப்பிரிவுக்குத் தலைவராக இருந்தவர்.

1799, ஏப்ரல் 24 ஆம் நாள்  முதுகுளத்தூரில் இருந்த ஆங்கிலேயரின் நிர்வாகத்தை (Court) தாக்கியது, அடுத்து அபிராமத்தில் உள்ள கைத்தறிக் கிட்டங்கியை தாக்கி; துணிகளைச் சூறையிட்டது, கமுதியில் உள்ள வெள்ளையர் மன்றத்தைத் (CLUB) தகர்த்து; பெரிய நெற்களஞ்சியங்களைக் கொள்ளையிட்டது போன்ற தாக்குதல்கள் அவரது தலைமையில் நடந்தன.

 தொடர்ந்து 42 நாட்கள் இத்தகைய போராட்டங்களால் முதுகளத்தூர், கமுதிச் சீமைகள் ஆங்கிலேய பிரிட்டிஷ் நிர்வாகத்திலிருந்து தனித்து சுதந்திரமாக நின்றன.

இப்போராட்டத்தில் தீவிர பங்கு கொண்ட மாவீரர்கள் சிங்கன் செட்டி, ஷேக் இப்ராகிம் சாகிபு போன்ற மயிலப்பன் சேர்வைகாரரின் தோழர்கள் கொல்லப்பட்டனர். அதற்கு காரணமாக ஆங்கிலப் படைகளை வழி நடத்தியவர்கள் கலெக்டர் லூஷிங்க்டன் மற்றும் கர்னல் மார்டின்ஸ் ஆவர்.

போராட்டத்தை அடக்கிய பிரிட்டிஷார் மயிலப்பன் சேர்வைகாரரைத் தவிர மற்றப் போராளிகளுக்குப் பொது மன்னிப்பு வழங்கினர். 

வேறு வழியின்றி சேர்வைகாரர் மாறுவேடத்தில் சோழ நாடு சென்றார். எட்டு மாதங்கள் கழித்து சேது நாட்டிற்குத் திரும்பினார். அதன் பின் சிவகங்கை சீமையின் மருதிருவரின் வேண்டுகோளின்படி மருதிருவர் அணியில் சேர்ந்து பாடுபட்டதுடன் பாஞ்சாலம் குறிச்சிப் பாளையக்காரர், காடல்குடி, நாகலாபுரம், குளத்தூர் ஆகிய பாளையக்காரர்களது ஆங்கிலேயர் எதிர்ப்பு போராட்டங்களுக்கு ஆதரவாக மயிலப்பன் சேர்வைகாரர் செயல்பட்டார்.

மயிலப்பன் சேர்வைகாரின் நடவடிக்கைகளையும், அவர் தமிழ்நாட்டின் வீரப்புதல்வர்கள் தியாகிகள் மருதிருவர் அணியில் தீவிரமாக ஈடுபட்டதையும் நன்கு அறிந்திருந்த கலெக்டர் லூஷிங்க்டன் என்பவன் சேர்வைகாரரை தம்மிடம் ஒப்படைக்கும்படி மருது சகோதரர்களுக்கு தாக்கீது அனுப்பினான். மாவீரர்கள் தேசபக்தர்கள் மருது பாண்டியர் கலெக்டரின் உத்தரவை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை.

ஆங்கில வியாபாரப் படைகளுக்கு எதிரான மருதிருவரின் இறுதிப் போராட்ட நாள் 1801அக்டோபர் 2. இதில் தோல்வியுற்றதன் காரணமாக 1801, அக்டோபர் 24 இல் திருப்புத்தூரில் மாவீர தியாகிகள் மருதிருவர் தூக்கிலிடப்பட்டனர்.

இம்முடிவிற்குப் பின்னர் மயிலப்பன் சேர்வைகாரர் தன்னந்தனியே முதுகளத்தூர், கமுதி பகுதிகளில் தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டார். பின்னர் வஞ்சக ஆங்கிலேயரின் வெகுமதிக்காக சொந்த நாட்டின் துரோகிகள் சிலரால் காட்டிக் கொடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். மூன்று மாத கால கடுமையான சிறை வாழ்க்கையில் சித்ரவதை செய்யப்பட்டு பின்னர் மயிலப்பன் சேர்வைகாரர் 1802, ஆகஸ்ட் 6 ஆம் நாளன்று அபிராமத்தில் வெள்ளையரின் கிழக்கிந்திய கம்பெனியாரால் தூக்கிலிப்பட்டார். 

வாழ்க மயிலப்பன் சேர்வைக்காரர் புகழ் 
வாழ்க பாரதம் 🇮🇳 🙏 

இராம ஸ்ரீநிவாஸன் 
#know_about_freedom_fighters #AmritMahotsav #JaiHind  #know_about_freedom_struggle #ஜெய்ஹிந்த் #வந்தேமாதரம் #AzadiKaAmrutMahotsav
 #MeriMaatiMeraDesh #VandeMataram ///

தெரிவு: சக 

kanmani tamil

unread,
Jun 25, 2025, 2:38:35 PMJun 25
to vallamai
டாக்டர் நடேசன் முதலியார்:

/// டாக்டர். நடேசன் முதலியார் அவர்களைப் பெருமைப் படுத்தும் விதமாக, அவரின் 150வது பிறந்த ஆண்டான 2024-25ல் அவருக்கு முழு உருவச் சிலை நிறுவி அவரது பங்களிப்பை தமிழ்நாட்டு மக்கள் உணரும்படி செய்தால் நன்றாக இருக்கும்...

இன்று நாம் அனுபவிக்கும் அரசியல் வளர்ச்சி, நீதிக்கட்சியின் நீட்சியே என்று அண்ணா கூறுவார்... 

1909ல் திரு. புருசோத்தமன் திரு. சீனிவாசன் ஆகிய இருவரால் ஆரம்பிக்கப்பட்டுக் கைவிடப்பட்ட பார்ப்பனரல்லாதார் இயக்கத்தை, 1912ல் தனது சமூக பொருளாதார பலத்தால் மீண்டும் கட்டமைத்து, விரிவுபடுத்தி பல திராவிட மாணவர்கள் படிக்கும் வசதியை ஏற்படுத்திக் கொடுத்தவர்.

வலதுசாரி சிந்தனையுடன் காங்கிரஸ் இயக்கத்தில் இருந்த திரு. தியாகராயர் செட்டியையும் (...), இடதுசாரி சிந்தனையுள்ள டாக்டர். மாதவன் நாயரையும் ஒருங்கிணைத்து தென்னிந்திய நல உரிமைச் சங்கம்- பிறகு நீதிக்கட்சி உருவாகக் காரணமாக இருந்தவர்.

இன்றைய இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் 69% இட உரிமை உருவாக, வகுப்புவாரி பிரதிநிதித்துவ கோரிக்கையை ஏற்படுத்தியவர்.

சமஸ்கிருதம் ஆங்கிலம் மட்டுமே இருந்த சென்னைப் பல்கலைக்கழகத்தில் (Madras University), தான் சிண்டிகேட் உறுப்பினராக இருந்த போது, தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்டு வந்தவர்.

பனகல் அரசர், பொப்பிலி அரசர் போன்ற நீதிக்கட்சித் தலைவர்களால் உதாசீனப்படுத்தப்பட்ட போதும், மீண்டும் நீதிக்கட்சியை வலுவடையச் செய்து, மீண்டும் ஆட்சியில் அமர்த்தியவர்.

நீதிக்கட்சியின் செயல்பாடுகளை மக்கள் உணராத வகையில், பார்ப்பனரல்லாத காங்கிரஸ் குழுவின் தலைவராக, காங்கிரஸால் உருவாக்கப்பட்டவர் தான் பெரியார் என்றும், பிறகு தனது செல்வாக்கைப் பயன்படுத்தி காங்கிரசுக்கு எதிராகக் களம் காண ஆரம்பித்தவராகத் தான் பெரியார் மாறியிருக்க வேண்டும் என்பதும்....
அந்தப் பெரியார் உருவாகக் காரணமாக இருந்தவரும், நீதிக்கட்சியின் நிறுவனர் டாக்டர் நடேசன் முதலியார். 

நீதிக்கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த திமுகவின் நிறுவனர் அண்ணாவின் அரசியல் நமக்கு கிடைத்ததும், நீதிக்கட்சி மூலமாகத்தான்.

பல தலைமுறையாக திராவிட இயக்க அரசியலை அனுபவிக்கும் வாய்ப்பு கிடைத்தது என்றால், அதற்கு அடித்தளமிட்டவர் டாக்டர் நடேசன் முதலியார் அவர்கள்.

இன்று பல திராவிட இளைஞர்கள் படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தியவர் மட்டுமல்லாது பொன்னேரி வட்டத்தில் (தாலுக்கா) தங்களுடைய நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை மக்களுக்கும், அரசுக்கும்...


தெரிவு: சக 

N. Ganesan

unread,
Jun 25, 2025, 9:38:57 PMJun 25
to vall...@googlegroups.com
எல்லாக் கக்ஷிகளுமே தமிழ் என்று கோஷமிடுகின்றன. ஆனால், தமிழின் நிலை சிறப்பாக இல்லை.
நடேசன் + முதலியார் நடேச முதலியார் என்றல்லவா வரவேணும்.

kanmani tamil

unread,
Jun 25, 2025, 10:38:26 PMJun 25
to vallamai
நான் பவணந்தியார் காலத் தமிழைப் பின்பற்றவில்லை. இருபத்தோராம் நாற்றாண்டுத் தமிழ் வலையுலகில் நிலவுவதற்கு ஏற்பப் பின்பற்றுகிறேன். 

'கட்சி' என்ற பொதுஜன வழக்கு உங்கள் போக்கில் 'கஷி' ஆவது போல...

சக 

kanmani tamil

unread,
Jun 25, 2025, 11:19:30 PMJun 25
to vallamai
நடேச முதலியார் என்று துழாவினால் கிடைக்கும் செய்தி அரசியல் மசாலாவில் போட்டுப் புரட்டி எடுத்ததாக உள்ளது. 

நடேசன் முதலியார் என்று துழாவினால் கொஞ்சம் பொதுவெளித் தொடர்புக்கு ஏற்ற மாதிரி கிடைக்கிறது. 

சக 

kanmani tamil

unread,
Jun 28, 2025, 12:13:51 AMJun 28
to vallamai
மபொசி எனத் தமிழக மக்களின் நன்மதிப்பைப் பெற்ற ம.பொ.சிவஞானம்:

/// சென்னையை மீட்டுத் தந்த சிலம்புச் செல்வர் ம.பொ.சி!

வீரபாண்டிய கட்டபொம்மனைப் பற்றியும், கப்பலோட்டிய தமிழனைப் பற்றியும் முதன்முதலில் வெளி உலகறிய வைத்தவர் ம.பொ.சிவஞானம் நினைவு தினசிறப்புப் பகிர்வு.

சென்னை, ஆயிரம் விளக்குப் பகுதியிலுள்ள சால்வன் குப்பம் என்ற பகுதியில், 1906 ம் ஆண்டு பிறந்தார் ம.பொ.சி. மிகவும் வறுமையான சூழலில் பிறந்ததால், 3 ம் வகுப்போடு பள்ளிப்படிப்பை நிறுத்திக் கொண்டு நெசவுத் தொழிலில் கூலியாளாக வேலை செய்தார். பின்னர் அச்சுக் கோர்க்கும் பணியில் நீண்ட வருடங்கள் பணிபுரிந்தார். மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம் என்பதே பின்னாளில் ம.பொ.சி. என்று ஆயிற்று.

1968 ம் ஆண்டு அதுவரை 'மெட்ராஸ் ஸ்டேட்' என அழைக்கப்பட்டு வந்த சென்னை மாகாணத்திற்கு, தமிழ்நாடு என அழகான பெயர் சூட்டப்பட்டது. இதற்கான தீர்மானம், அன்றைய சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட போது, முதல்வர் அண்ணாவால் பெரிதும் பாராட்டிப் பேசப்பட்டார் அந்தத் தலைவர்.

அதிகாரம் தந்த கவுரவத்தினால், சென்னை மாகாணத்தை 'தமிழ்நாடு' என பெயர் மாற்றும் பெருமையை அண்ணா அடைந்தாலும், அந்தப் பெயர் மாற்றத்திற்குப் பின்னணியாக ஒருவரின் கடந்த காலப் போராட்டங்கள் இருந்தன. அதுதான் அண்ணாவின் வானளாவிய பாராட்டுக்கு காரணம்.
அந்த பாராட்டுக்கும் பெருமைக்கும் உரிய அந்தத் தலைவர், ம.பொ.சி என்கிற மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம்.

'தலைநகர் சென்னை' என இன்று நாம் போற்றிக் கொண்டாடும் சென்னை, ஒருநாள் நம்மை விட்டுச் செல்லும் நிலை வந்த போது, பெரும் போராட்டங்களை நடத்தி, அதை நமக்கு மீட்டுக் கொடுத்த பெருந்தகை இவர் தான் என்பது இன்றைய தலைமுறையினர் அறியாத சேதி.

தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்!

வறுமையின் காரணமாக 3-ம் வகுப்பு வரைதான் படித்தார் ம.பொ.சி. 1927-ல் 'தமிழ்நாடு ' நாளிதழில் அச்சுக் கோப்பாளராக வேலைக்குச் சேர்ந்தார். அங்கே அவர் அறிய நேர்ந்த விடுதலைப் போராட்டம் பற்றிய செய்திகள் அவருக்குள் சுதந்திர வேள்வியை எழுப்பின. பலமுறை சிறை சென்றார். சிறையில் தமிழ் இலக்கியங்களைக் கற்று, தமிழ்ப் புலமையை மேம்படுத்திக் கொண்டார்.

சிலம்புச் செல்வர்

ம.பொ.சி, தான் எழுதிய 'கப்பலோட்டிய தமிழன்' என்னும் நூலைத் தன் நண்பர் அச்சகத்தில் எழுத்து எழுத்தாகக் கோர்த்து அச்சிட்டார். கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யும், வீரபாண்டிய கட்டபொம்மனும் ம.பொ.சி-யின் எழுத்து மூலமே தமிழ்ச் சமூகத்துக்கு அறிமுகம் ஆனார்கள். 1962-ல் ம.பொ.சி எழுதிய 'வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு' என்னும் நூலுக்குச் சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. இவருடைய 'விடுதலைப் போரில் தமிழகம்' என்னும் நூலே இந்திய விடுதலைப் போரில் தமிழர்கள் ஆற்றிய பங்கை எடுத்துரைத்த முதல் நூல்.

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யின் புகழ்பரப்பும் பணியைச் செய்தவர் ம.பொ.சி. அவரது வரலாற்றைப் பற்றி நுால் எழுதி, வ.உ.சி.யின் தியாகங்களை உலகறியச் செய்தவரும் அவர்தான் . ம.பொ.சி. எழுதிய 'கப்பலோட்டிய தமிழன்' என்னும் நூல், வ.உ.சி.யின் பெருமையை உலகிற்கு உணர்த்தியது. இந்த நூலைத் தழுவித் தான் 'கப்பலோட்டிய தமிழன்' என்னும் சிறந்த திரைப்படம் உருவானது.

சிலப்பதிகாரத்தை உலகறியச் செய்ய வேண்டும் என்கிற வேட்கையில் சிலப்பதிகார மாநாடுகள் நடத்தினார். சிலம்பின் மேல் இவர் கொண்டிருந்த காதலை அறிந்த ரா.பி.சேதுப்பிள்ளை, நாகர்கோவிலில் நடந்த எழுத்தாளர் மாநாட்டில் 'சிலம்புச் செல்வர்' என்னும் பட்டத்தை ம.பொ.சிக்கு வழங்கினார்.

தமிழரசுக் கழகம்

1946-ல் 'தமிழரசுக் கழகம்' என்ற இயக்கத்தை ம.பொ.சி. தொடங்கினார்.

சென்னை மாகாணத்தில் இருந்து ஆந்திராவைப் பிரித்து, தனி ஆந்திர மாநிலம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்தபோது, சென்னை நகரம் தங்களுக்கு வேண்டும் என்று ஆந்திர மக்கள் கோரினார்கள். 'மதராஸ் மனதே' என்று ஆந்திரர்கள் எழுப்பிய இந்தக் குரலுக்கு, 'தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்' என்று வீர முழக்கம் எழுப்பியவர் ம.பொ.சி. ஒரு கட்டத்தில் சென்னையை பொதுத் தலைநகரமாக ஆக்கலாம், அல்லது இரண்டாகப் பிரிக்கலாம் என்று கூட மத்திய அரசு நினைத்தது. சென்னை நகரின் மீது தமிழர்களுக்கு உள்ள உரிமையை வலியுறுத்தி, அன்றைய மத்திய உள்துறை அமைச்சர் லால்பகதூர் சாஸ்திரிக்குத் தந்திகள் அனுப்பும் இயக்கத்தை ம.பொ.சி. நடத்தினார். இதன் தாக்கத்தால் மத்திய அரசின் முடிவினை மறுபரிசீலனை செய்வதாகவும் சாஸ்திரி உறுதி கூறினார்.

ம.பொ.சி.யின் கடும் போராட்டத்தைத் தாங்க முடியாமல் அப்போது முதலமைச்சராக இருந்த ராஜாஜியே அவரைக் கைது பண்ண வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இறுதியாக ம.பொ.சி.யின் எண்ணம் போல் சென்னை தமிழ்நாட்டின் தலைநகரானது.

மாநகராட்சிக் கொடி

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் சென்னை மாநகராட்சியின் கொடி, 'கடல், கப்பல், மூன்று சிங்கங்கள், இரண்டு மீன்கள்' கொண்டதாக இருந்தது. நாடு சுதந்திரம் பெற்ற பின் மாநகராட்சியின் கொடிச் சின்னம் மாற்றப்பட வேண்டிய அவசியம் வந்தது. இதற்கான குழுவில் இருந்த ம.பொ.சி. தனது தமிழரசுக் கழகத்தின் கொடியில் இருந்த சேர, சோழ, பாண்டியரின் சின்னமான 'வில், புலி, மீன்' சின்னங்களை சென்னை மாநகராட்சிக் கொடியிலும் பொறிக்கப் பரிந்துரைத்தார். இன்றுவரை ம.பொ.சி. பரிந்துரைத்த கொடியே சென்னை மாநகராட்சியின் கொடியாகத் திகழ்கிறது.

ம.பொ.சி.யின் தீவிரமான திருத்தணி எல்லைப் போராட்டத்தின் விளைவாகத்தான், திருப்பதி போன்று திருத்தணியும் ஆந்திரர்களின் ஆளுமைக்குச் சென்றுவிடாமல் தமிழகத்தோடு இணைக்கப்பட்டது.

'தமிழ்நாடு' பெயர் மாற்றம்

சென்னை மாகாணத்துக்கு, 'தமிழ்நாடு' என்று பெயர் சூட்டப்பட வேண்டும் என்று முதல் குரல் எழுப்பியவர் ம.பொ.சியே. 29.11.1955-ல் தனது தமிழரசுக் கழகச் செயற் குழுக் கூட்டத்தில் முதன் முதலில் ம.பொ.சி. தான், “தமிழ் மக்கள் வாழும் பிரதேசத்தை மெட்ராஸ் ஸ்டேட் என்றழைக்கப்படுவதை எதிர்க்கிறோம். தமிழ்நாடு என்று பெயரிடப் பட வேண்டும்” என்று தீர்மானத்தை நிறை வேற்றினார்.

பொங்கல் திருநாளைத் தமிழினத்தின் தேசியத் திருநாளாகக் கொண்டாட முதன் முதலில் ஏற்பாடு செய்தவர் ம.பொ.சி. 1946-ம் ஆண்டு ஜனவரி 14-ல் சென்னை கோகலே மண்டபத்தில் முதல் தமிழர் திருநாள் கொண்டாடும் பழக்கத்தைத் தொடங்கி வைத்தவரும் இவரே.

1950 ல் சென்னை, ராயப்பேட்டை காங்கிரஸ் திடலில் முதன்முதலாக சிலப்பதிகார மாநாடு நடைபெற்றது. இதற்குப் பெரும் பங்காற்றியவர் ம.பொ.சி. ரா.பி.சேதுப்பிள்ளை, டாக்டர் மு.வரதராசனார், காமராஜர் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சார்ந்தவர்களையும் மாச்சர்யங்களின்றி அழைத்து விழாவை நடத்தினார். ம.பொ.சி. அனைத்துக்கட்சி பிரபலங்கள், தமிழ் அறிஞர்கள் கலந்துகொண்ட தமிழ் கலாச்சார விழாவாக அது நடந்தேறியது. தனது தமிழரசு கழகம் மூலம், சிலப்பதிகார விழாவைத் தொடர்ந்து நடத்தினார். ம.பொ.சியின் தமிழ்க்கொடையைப் பாராட்டி, பேராசிரியர் ரா.பி.சேதுப்பிள்ளை அவருக்கு 'சிலம்புச்செல்வர் என்னும் பட்டத்தை வழங்கினார். அவரது மறைவிற்குப் பிறகும் மகள் மாதவி அதைத் தொடர்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ம.பொ.சி 1967-71 காலகட்டத்தில் சட்டமன்ற மேலவைத் துணைத் தலைவராகப் பணியாற்றிய போது தான் சென்னை மாகாணம் தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம் பெற்றது. அது தொடர்பான தீர்மானம் சட்டமன்றத்தில் அண்ணா தலைமையில் நிறைவேற்றப்பட இருந்த சமயம், ஒரு சிக்கல் எழுந்தது. அதாவது வட இந்தியர்களுக்கு ழகர உச்சரிப்பு வராது என்பதால், தமிழ்நாடு என்பதை ஆங்கிலத்தில் tamilnad அதாவது 'டமில் நாட்' என உச்சரிப்புக்கு வசதியாக மாற்ற ராஜாஜி, திமுக அமைச்சரவைக்கு ஆலோசனை தந்தார்.

இதை ஏற்றுக் கொள்வதாக அண்ணா முடிவெடுத்தபோது ம.பொ.சி. அதை எதிர்த்தார். தமிழின் அழகிய ஓசையை மாற்ற எதிர்ப்புத் தெரிவித்தார். அதேபோல் நாடு என்பது nadu என்றே ஆங்கிலத்தில் இடம்பெறவேண்டும் என வாதிட்டார்.

காங்கிரஸ், திமுகவுக்கு அடுத்தபடியாக திரையுலகப் பிரமுகர்கள் பலர் ம.பொ.சி.யின் தமிழரசுக் கழகத்தில் உறுப்பினர்களாகவோ அல்லது ஆதரவாளர்களாகவோ இருந்தனர். பழம்பெரும் இயக்குநர் ஏ.பி.என், அவ்வை டி.கே. சண்முகம் பிரபல தயாரிப்பாளர் ஜி.உமாபதி... இன்னும்பலர்.

சட்டமன்ற மேலவை உறுப்பினராக 1952 முதல் 54 வரையிலும், சட்டமன்ற மேலவைத் தலைவராக 1972முதல் 1978வரையிலும் ம.பொ.சி. பணியாற்றினார். 1986நவம்பர் முதல் மூன்று ஆண்டு காலம் தமிழ் வளர்ச்சி உயர்நிலைக் குழுத் தலைவராகவும் பணியாற்றியவர்.

1966 இல் ம.பொ.சி.யின் ‘வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு' என்னும் நூலுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. 1972ஆம் ஆண்டு மத்திய அரசு அவரது பொதுத்தொண்டைப் பாராட்டி “பத்மஸ்ரீ” விருதினை வழங்கி கவுரவித்தது. இது தவிர சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்திடமிருந்து டாக்டர் பட்டம் பெற்றார்.

தமிழக சட்டமன்ற மேலவையில் பல்வேறு பொறுப்புகளை வகித்த சிலம்புச் செல்வர் ம.பொ.சி, 1978 முதல் மேலவை கலைக்கப்பட்ட 86 ஆம் ஆண்டுவரை அதன் தலைவராக இருந்தார். அவர் தலைவர் பொறுப்பு வகித்த காலத்தில் மேலவை சிறப்புப் பெற்று இயங்கியது.

தமிழ், தமிழர், தமிழகம் எனத் தன் இறுதி மூச்சுவரை தமிழ்த்தொண்டுபுரிந்த ம.பொ.சி 1995 ஆம் ஆண்டு அக்டோபர் 3 ம் தேதி உடல்நலம் குன்றி தனது 89ம் வயதில் காலமானார்.

இப்படி தமிழ்நாட்டின் வரலாற்றில் முத்திரை பதித்த ம.பொ.சி. தமிழக வரலாற்றுப் பக்கங்களில் அழிக்க முடியாத மாமனிதராக விளங்குகிறார்.

Malaichamy Chinna C///


மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறை ம.பொ.சி.யைச் சிறப்பு விருந்தினராக அழைத்து கௌரவித்த போது நான் முதுகலை பயிலும் மாணவி. ஃபாத்திமா கல்லூரியில் இருந்து தமிழ்த் துறையினர் அனைவரும் பங்கேற்றோம். அவரது உரை தனது போராட்டங்களுக்குப் பெரியாரிஸ்ட்கள் போடும் முட்டுக்கட்டை பற்றியதாக இருந்தது. ஆனால் மிக மிக நயத்தகு நாகரிகத்துடன் அமைந்து இருந்தது. 

என்றும் தமிழினத்தின் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய பெரிய மனிதர் ம.பொ.சி.

தெரிவு: சக 

N. Ganesan

unread,
Jun 29, 2025, 10:27:24 PMJun 29
to vall...@googlegroups.com
On Wed, Jun 25, 2025 at 9:38 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
நான் பவணந்தியார் காலத் தமிழைப் பின்பற்றவில்லை. இருபத்தோராம் நாற்றாண்டுத் தமிழ் வலையுலகில் நிலவுவதற்கு ஏற்பப் பின்பற்றுகிறேன். 

'கட்சி' என்ற பொதுஜன வழக்கு உங்கள் போக்கில் 'கஷி' ஆவது போல...

கஷி அன்று. கக்‌ஷி (= கக்ஷி) - இவ் வடசொல்லை அவ்வாறே பாரதியார், ஈவேரா எழுதினார்கள்.
நாட்டார் வழக்கில் கச்சி என்று சொல்வர். லக்ஷ்மி > லச்சுமி போல. கக்‌ஷி > கட்சி என எழுதப்படுகிறது.

நடேசன் முதலியார், ஆலவாயன் நாடார், அருணாசலன் ஐயர், ... என எழுதுவது தற்கால ஆங்கிலப்
பள்ளிகளின் தாக்கம். ஆங்கிலத்தில் பார்த்து, தமிழில் எழுதுகின்றனர்.

நா. கணேசன்

 

N. Ganesan

unread,
Jun 29, 2025, 10:30:53 PMJun 29
to vall...@googlegroups.com
கிண்டி பொறியியல் கல்லூரியில், தமிழ் மன்றத்துக்கு ம. பொ. சிவஞான கிராமணியாரை அழைத்து வந்து பேசச் செய்தேன். சிறந்த தமிழ்த் தேசியவாதி.

கவிஞர் சௌந்தரா கைலாசமும் பங்கேற்றார். மிகச் சிறந்த இலக்கியச் சொற்பொழிவுகள். 

நா. கணேசன்

kanmani tamil

unread,
Jun 30, 2025, 3:41:52 AMJun 30
to vallamai
/// நடேசன் முதலியார், ஆலவாயன் நாடார், அருணாசலன் ஐயர், ... என எழுதுவது தற்கால ஆங்கிலப்
பள்ளிகளின் தாக்கம்./// Dr.Ganesan wrote at 7.57am

அரசியல் சமூக மாற்றங்களால் ஏற்பட்டு இருக்கும் மாற்றம். இது காலந்தோறும் நிகழ்வது தானே; தவிர்க்க முடியாதது. எந்த மொழியும் இத்தகு மாற்றத்திற்கு விதிவிலக்கு இல்லை. 

சக 



kanmani tamil

unread,
Jul 1, 2025, 4:50:08 AMJul 1
to vallamai
திருநெல்வேலி மற்றும் மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரியில் இந்தி ஆசிரியராகப் பணியாற்றிய பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரையார்... 

/// ஜூன் 24, தமிழகத்தின் பிரபல மொழியியல் வல்லுநர்களில் ஒருவரான பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரை (Ka.Appadurai) பிறந்த தினம்.

குமரி மாவட்டத்தின் ஆரல்வாய்மொழி என்ற ஊரில் பிறந்தார் (1907). இவரது இயற்பெயர், நல்லசிவம். சொந்த ஊரில் ஆரம்பக்கல்வி கற்றார். திருவனந்தபுரம் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்திலும் திருவனந்தபுரம் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியத்திலும் முதுகலைப்பட்டம் பெற்றார்.

சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் எல்.டி. பட்டம் பெற்றார். தமிழ், மலையாளம், சமஸ்கிருதம், இந்தி, ஆங்கிலம் மொழிகளைத் திறம்படக் கற்றார். மேலும் ஆப்பிரிக்க மொழி உள்ளிட்ட 18 மொழிகளை அறிந்திருந்தார்.

திருநெல்வேலி மற்றும் மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரியில் இந்தி ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் காரைக்குடியை அடுத்த அமராவதிப் புதூர் குருகுலப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றினார். அப்போது அங்கு மாணவராக இருந்த கவிஞர் கண்ணதாசன் இவரிடம் கல்வி பயின்றார்.

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் சில காலம் ஆசிரியராகப் பணிபுரிந்தார். இலக்கியத்தில் ஆர்வம் கொண்டிருந்த இவர், திராவிடன், ஜஸ்டிஸ், இந்தியா, பாரததேவி, சினிமா உலகம், இலிபரேட்டர், விடுதலை, லோகோபகாரி, தாருல் இஸ்லாம், குமரன், தென்றல் உள்ளிட்ட பல இதழ்களில் எழுதி வந்தார்.

சிறுகதைகள், இலக்கியத் திறனாய்வு நூல்கள், மொழிபெயர்ப்பு நூல்கள், நாடகம், பொது அறிவு நூல், அகராதி, உரைநூல், குழந்தை இலக்கிய நூல் என பல்வேறு களங்களிலும் தனி முத்திரைப் பதித்தார். ‘இந்தியாவின் மொழிச்சிக்கல்’ என்ற நூலைப் படைத்தார். சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம் - தமிழ் அகராதித் தயாரிப்பில் 1959 முதல் 1965 வரை அதன் ஆசிரியராகச் செயல்பட்டார்.

தமிழ் இலக்கியம், தமிழக வரலாறு குறித்த ஆராய்ச்சிகளில் கண்டறிந்தவற்றை தமிழிலும் ஆங்கிலத்திலும் ஆராய்ச்சி நூல்களாக எழுதினார். இவற்றில் ‘குமரிக் கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு’ மற்றும் ‘தென்னாட்டுப் போர்க்களங்கள்’ ஆகிய நூல்கள் சிறந்த படைப்புகளாகப் போற்றப்பட்டன.

‘சரித்திரம் பேசுகிறது’, ‘சென்னை வரலாறு’, ‘கொங்குத் தமிழக வரலாறு’, ‘திராவிடப் பண்பு’, ‘திராவிட நாகரிகம்’ உள்ளிட்ட வரலாற்று நூல்கள், ‘கிருஷ்ண தேவராயர்’, ‘நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்’, ‘சங்க காலப் புலவர் வரலாறு’ உள்ளிட்ட வாழ்க்கை வரலாற்று நூல்களையும் படைத்தார்.

அலெக்சாண்டர், சந்திரகுப்தர், சாணக்கியர் உள்ளிட்ட மொழிபெயர்ப்பு நூல்கள், 6 தொகுதிகளாக வெளிவந்த திருக்குறள் மணி விளக்க உரை உள்ளிட்ட இவரது நூல்கள் குறிப்பிடத்தக்கவை. திருக்குறளுக்கு விரிவுரையும் விளக்க உரையும் பல ஆயிரம் பக்கங்களில் வழங்கியுள்ளார்.

‘உலக இலக்கியங்கள்’ என்ற தனது நூலில் பாரசீகம், உருது, பிரெஞ்சு, தெலுங்கு உள்ளிட்ட 10 மொழிகளின் இலக்கியங்களை ஆராய்ந்து பல அரிய செய்திகளை வழங்கியுள்ளார். உலகின் ஆதி மொழி தமிழ் என்றும், உலகின் முன்னோடி இனம் தமிழ் இனம் என்று அறிவியல்பூர்வமாக ஆராய்ந்து தனது கருத்தை வெளியிட்டார்.

அறிவுச் சுரங்கம், தென்மொழி தேர்ந்தவர், சிறந்த சிந்தனையாளர், சிறந்த சொற்பொழிவாளர், கனிந்து முதிர்ந்து பழுத்த பேரறிவாளர் என்றெல்லாம் போற்றப்பட்ட பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரை 1989-ம் ஆண்டு 82-வது வயதில் மறைந்தார்.///


தெரிவு: சக 

kanmani tamil

unread,
Jul 2, 2025, 6:09:28 AMJul 2
to vallamai
இன்று நம்மிடையே வாழ்ந்து கொண்டு இருக்கும் ஆளுமைகள்: டாக்டர் கோபி& டாக்டர் ஹேமப்ரியா கோபி

/// இந்தக் காலத்தில் 
இப்படியும் சில டாக்டர்கள் 
இருக்கத்தான் செய்கிறார்கள்.

டாக்டர் கோபி. அவரது மனைவி டாக்டர் ஹேமப்பிரியா. 
மதுரையில் மருத்துவமனை வைத்திருக்கிறார்கள்.

நம்பவே முடியாத ஒரு மாபெரும் மருத்துவ சேவையை இந்த டாக்டர் தம்பதிகள் இருவரும் இணைந்து செய்து வருகிறார்கள்.

இருதய அறுவை சிகிச்சை தேவைப்படும் ஏழைக் குழந்தைகள் எங்கிருந்தாலும் தேடிப் பிடித்து, 
முழுக்க முழுக்க இலவசமாகவே அவர்களுக்கு சிகிச்சை செய்து குணப்படுத்தி வருகிறார்களாம்.

"இவர்களுக்கு சொந்த ஊர் மதுரைதானா ?"

"டாக்டர் ஹேமப்பிரியாவுக்கு மதுரைதான். ஆனால் டாக்டர் கோபிக்கு சேலத்துக்குப் பக்கத்தில ஒரு சின்ன கிராமம்."

"இதற்குப் பின்னணியில் ஏதாவது ஒரு காரணம் இருக்க வேண்டுமே ! எதனால் ஆரம்பித்தார்கள் இப்படி ஒரு வித்தியாசமான சேவையை ?"

காரணம் இருக்கிறது.
சேலத்தில் ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த கோபி, குழந்தைகளுக்கான இருதய அறுவை சிகிச்சையில் சிறப்பு மருத்துவம் படித்தவர். 

கஷ்டப்பட்ட குடும்பம்தான்.
அரசாங்கம் கொடுத்த கல்வி உதவித் தொகையிலும், அப்பா வாங்கிக் கொடுத்த கடன் தொகையிலும்தான் டாக்டருக்கு படித்து முடித்திருக்கிறார் இந்த கோபி.

மருத்துவக்கல்லூரியில் 
படிக்கும்போதே உடன் படித்த மாணவி ஹேமப்பிரியாவோடு பழக்கமும் நெருக்கமும் ஏற்பட ...
கோபியின் இரக்ககுணம் ஹேமாவை ஈர்த்திருக்கிறது. இருவரையும் கல்யாணத்தில் இணைத்திருக்கிறது.

மருத்துவ படிப்பை முடித்த பின்...
சென்னை பெங்களூர் ஹைதராபாத் எல்லா இடங்களிலும் உள்ள தனியார் மருத்துவ மனைகளில் டாக்டராக பணிபுரிந்து கை நிறைய சம்பாதித்து வந்திருக்கிறார் டாக்டர் கோபி.

ஆனால் அவர் வாழ்க்கையில் எதிர்பாராத ஒரு திருப்பம் ஏற்பட்டது
சதீஷ்கர் மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணி புரியும்போதுதான்.

அங்கேதான் ஒரு ஆறு வயது சிறுமியை, தன் எதிர்காலத்தையே மாற்றி அமைக்கப் போகும் ஒரு குழந்தையைச் சந்தித்தார் டாக்டர் கோபி.

அந்தச் சிறுமியின் இதயத்தில் ஏதோ ஒரு இனம் தெரியாத கோளாறு. அது முற்றிய நிலையில் மூச்சுத் திணறி
அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்க...
அவசரம் அவசரமாக டாக்டர் கோபியிடம் அவளை அழைத்து வந்தார் அவளது அம்மா.

கோபி கேட்டார்: "எப்போதிலிருந்து அம்மா இந்தப் பிரச்சனை இருக்கிறது?"

அந்த அம்மா அழுதுகொண்டே,
"இவ பிறந்து ஆறு மாதத்திலேயே ஆஸ்பத்திரியில கண்டுபிடிச்சுட்டாங்க டாக்டர். அப்பவே ஆபரேஷன் பண்ணணும்னு சொன்னாங்க."

டாக்டர் கோபி கொஞ்சம் கோபத்துடன்தான் கேட்டார். "அப்புறம் ஏம்மா உடனடியா அறுவை சிகிச்சை பண்ணல ?"

அந்த அம்மாக்காரி கண்ணீர் வடித்தபடி பதில் சொன்னாள்: "ஆபரேஷன் பண்ண நிறைய செலவாகும்னு சொன்னாங்க. அந்த அளவிற்கு பணம் எங்ககிட்ட இல்லை டாக்டர்."

டாக்டர் கோபி எதுவும் பேசாமல் அந்த குழந்தையின் மருத்துவ ரிப்போர்ட்களை திரும்பத்திரும்ப பார்த்தார். அந்த அறிக்கைகளின்படி, நோய் கண்டு பிடிக்கப்பட்ட ஆறாவது மாதத்திலேயே, அவள் குழந்தையாக இருக்கும்போதே தாமதம் செய்யாமல் உடனடியாக அறுவை சிகிச்சை செய்திருந்தால் அவள் உயிரைக் காப்பாற்றி இருக்கலாம். 

ஆனால் இப்போது...
பிரச்சினை எல்லை மீறி எல்லாமே கை நழுவிப் போய் விட்ட இந்த நிலையில்...

எந்த ஒரு சிகிச்சையும் கை கொடுக்கப் போவது இல்லை. என்ன முயற்சி செய்தாலும் அந்தச் சிறுமியைக் காப்பாற்ற வழியேதும் இல்லை.

மனமுடைந்து போனார் டாக்டர் கோபி.

அன்றிரவு வெகுநேரம் தூங்காமல் விழித்திருந்தார்.

"என்னங்க ஆச்சு, ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க ?"என்று மனைவி கேட்க,
"ஒன்றுமில்லை ஹேமா.
எனக்கு ஒரு விஷயம் புரியவில்லை.
எந்தப் பாவமும் செய்யாத அந்த ஆறு வயது குழந்தை வெகுவிரைவில் 
நம் கண் முன்னாலேயே
இறந்து போகப் போகிறதே, இதற்கெல்லாம் யார் காரணம் அல்லது எது காரணம் ?"

கணவன் சொன்னதைக் கேட்ட அந்த நொடியே ஹேமாவின் தூக்கமும் தொலைந்து போனது.

அன்று இரவு முழுவதும் தூங்காமல் விடிய விடிய இது பற்றி நிறைய பேசினார்கள்.

உரிய காலத்தில் சிகிச்சை கொடுக்காததால் உயிரை இழக்கப் போகும் அந்த ஆறு வயது சிறுமி மட்டும் அல்ல. ஆண்டுதோறும் நம் நாட்டில் பல குழந்தைகள் இப்படித்தான் பரிதாபமாக உயிரை விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

சரியான நேரத்தில் இதயத்தில் ஏற்பட்டிருக்கும் கோளாறை கண்டுபிடிக்க முடியாதது ஒரு காரணம். அப்படியே கண்டு பிடித்தாலும் சிகிச்சை செய்ய தேவையான மருத்துவ வசதிகளும் பணவசதியும் இல்லாதது இன்னொரு முக்கியமான காரணம்.

இதன் காரணமாக ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான பச்சிளம் குழந்தைகளின் பரிதாப மரணம்.

'இதற்கெல்லாம் என்னதான் தீர்வு' என்று கேட்டார் ஹேமா.

கோபி அமைதியாகப் பதில் சொன்னார். "இதற்கான தீர்வுக்கு நாம்தான் முயற்சி எடுக்க வேண்டும்."

"என்ன சொல்கிறீர்கள் கோபி ?"

"ஆமாம் ஹேமா. நாம் தனி ஆளாக நின்று இந்த காரியத்தைச் சாதிக்க முடியாது. இதற்காக ஒரு ஃபவுண்டேஷன் உருவாக்க வேண்டும்."

"இந்த சதீஷ்கர் ஊரிலா ?"

"இல்லை. இது நமக்கு புது இடம். நமக்குத் தேவையான ஒத்துழைப்பு அவ்வளவு சீக்கிரத்தில் இங்கு கிடைத்து விடாது. இதை நமக்கு நன்கு தெரிந்த இடத்தில் ஆரம்பிப்பது தான் நல்லது."

இப்படித்தான் மதுரையில் உதயமானது லிட்டில் மொபெட் ஹார்ட் ஃபவுண்டேஷன்.
( little moppet heart foundation)

எதற்காக சென்னை போன்ற பெருநகரங்களை விட்டுவிட்டு 
மதுரையை தனது சேவைக்கான இடமாக டாக்டர் கோபி தேர்வு செய்தார்?

"அதற்குக் காரணம் இருக்கிறது
மதுரையை சுற்றி நிறைய சின்ன சின்ன கிராமங்கள் இருக்கின்றன.
இங்கே உள்ள மருத்துவமனைகளில் மருத்துவ வசதிகள் அவ்வளவு திருப்திகரமாக இல்லை.
இந்த கிராமத்து மக்களுக்கு சிகிச்சைக்கு செலவழிக்க போதுமான பணமும் கையில் இல்லை. 

இவை எல்லாவற்றிற்கும் மேலாக
குழந்தைப் பருவத்தில் எளிதாகக் கண்டுபிடித்து குணப்படுத்தக்கூடிய ஒரு நோயை, ஆரம்ப கட்டத்திலேயே எப்படிக் கண்டு பிடிப்பது, அதற்கு என்ன சிகிச்சை செய்வது என்ற அடிப்படை மருத்துவ அறிவு இங்கே கொஞ்சம் கூட இல்லை. அதனால்தான் சென்னையை விட்டு விட்டு மதுரையை நாங்கள் தேர்ந்தெடுத்தோம்."

ஆரம்பித்த வேகத்திலேயே அடுத்தடுத்து ஏராளமான இடங்களில் இலவச மருத்துவ முகாம்களை தொடர்ந்து நடத்தினார் டாக்டர் கோபி.

மதுரை, தேனி, திண்டுக்கல், தூத்துக்குடி, கோவில்பட்டி, திருநெல்வேலி, ராமநாதபுரம், பரமக்குடி போன்ற தென் மாவட்டங்களில் நடத்திய இந்த முகாம்களில், பிறவி இதயநோய் உள்ள ஏராளமான குழந்தைகளைக் கண்டறிந்திருக்கிறார்கள். 

மதுரையில் உள்ள தேவதாஸ் மருத்துவமனை, இந்த குழந்தைகளுக்கான அறுவை சிகிச்சை செய்ய அத்தனை ஏற்பாடுகளையும் செய்து கொடுக்க...

இதுவரை நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு உடனடியாக இதய அறுவை சிகிச்சைகள் செய்து அந்த பச்சிளம் குழந்தைகளின் உயிரை பத்திரமாக காப்பாற்றியிருக்கிறார்கள்.

அனைத்துமே இலவசமாக.

"எல்லாமே இலவசம் என்பது சரி. நீங்கள் உங்கள் குடும்பத்தை எப்படி நடத்துகிறீர்கள் டாக்டர் கோபி ?"

சிரித்தபடி இதற்கு பதில் சொல்கிறார் அவரது மனைவி ஹேமா.
"பண வசதியில்லாத பரிதாப நிலையிலுள்ள குழந்தைகளுக்கு மட்டும்தான் இங்கே நாங்கள் இலவசமாக சிகிச்சை செய்கிறோம். பணம் இருக்கிறவர்கள் வெளியே உள்ள ஹாஸ்பிடல்களில் இருந்து கூப்பிட்டால், என் கணவர் ஆபரேஷன் செய்து விட்டு அதற்குரிய ஃபீஸ் வாங்கி கொண்டு வருவார். 
நானும் என் பங்குக்கு வீட்லயே குழந்தைகளுக்கான பேபி ஃபுட் தயார் செய்து ஆன்லைனில் அதை விற்பனை செய்கிறேன்.
எங்களுக்கும் எங்கள் இரு குழந்தைகளுக்கும் இது தாராளமாகப் போதும்."

சில நொடிகளின் அமைதிக்குப் பிறகு ஹேமா தொடர்ந்து சொல்கிறார்:
"நாங்கள் இருவரும் வெளியிடங்களுக்குச் சென்று பிராக்டீஸ் செய்தால் கண்டிப்பாக இதைவிட பலமடங்கு பணத்தை சம்பாதிக்கலாம். ஆனால் இந்த ஏழைக் குழந்தைகளுக்கு நாங்கள் கொடுக்கும் இலவச சிகிச்சையினால், அந்தக் குழந்தைகளின் முகங்களிலும் அவர்கள் பெற்றோரின் முகங்களிலும் காணப்படும் திருப்தியையும் நிறைவையும் எத்தனை கோடிகள் கொடுத்தாலும் நாம் பார்க்க முடியாது."

டாக்டர் கோபி,
டாக்டர் ஹேமப்பிரியா,
இருவருக்கும் நமது 
நல் வாழ்த்துக்கள்..!

ஏராளமான இணைய தளங்களில் தேடி எடுத்த, டாக்டர் தம்பதியினரின் புகைப்படங்களையும், அவர்களிடம் சிகிச்சை பெற்று நலமுடன் வாழும் குழந்தைகளின் புகைப்படங்களையும் இங்கே பகிர்ந்திருக்கிறேன்.

ஆனால் இப்படி ஒரு 
தன்னலமற்ற சேவையை இந்த டாக்டர் தம்பதியினர் ஆரம்பிக்க மூல காரணமாக இருந்த அந்த ஆறு வயதுக் குழந்தை...

அவள் புகைப்படத்தை எங்கு தேடியும் அது கிடைக்கவில்லை.

சரி. அதனால் என்ன ? உங்களுக்குப் பிடித்த ஏதாவது ஒரு தேவதையின் படத்தை, அந்த குழந்தையின் படத்துக்கு பதிலாக நினைத்துக் கொள்ளுங்கள்.

அந்த தேவதை தான் இந்த டாக்டர் தம்பதிகளின் மனமாற்றத்திற்கும்
மருத்துவ சேவைக்கும் காரணம்.

எங்கிருந்தோ நம்மைப் பார்த்து புன்னகைக்கும் அந்த சின்னஞ்சிறு தேவதையை
இங்கிருந்தே நான் வணங்குகிறேன், 
வாழ்த்துகிறேன்..!

John Durai Asir Chelliah///

இது ஒரு வாட்ஸ்ஆப் பகிர்வு 

சக 

kanmani tamil

unread,
Jul 3, 2025, 1:54:19 AMJul 3
to vallamai
அதே முகநூல் பதிவு- படங்களுடன்...

https://www.facebook.com/share/195f5wS4kM/

சக 

kanmani tamil

unread,
Jul 5, 2025, 5:53:50 AMJul 5
to vallamai
இது இப்போது தான் வளர்ந்து வரும் ஆளுமை...

https://www.facebook.com/share/p/17wLGqPqxS/

/// ரஜினி கலையரசன்: யாருடைய ஆதரவும் இல்லை; ஆசிரியர்கள் தயவில் படித்தார். ஆசிரியர் ஆக வேண்டும் என்பது ஆசை; ஆனால் டாக்டராக்கி விட்டார்கள். இன்று மருத்துவமும் பார்த்தபடி படித்தபள்ளியில் மாணவர்களுக்கு வகுப்பும் எடுக்கிறார்!

பள்ளியில் படித்து முடித்து, டாக்டர் ஆன பிறகும் நன்றி மறக்காமல், தான் படித்த தொடக்கப்பள்ளிக்குச் சென்று மாணவர்களுக்குத் தமிழ் மற்றும் அறிவியல் பாடம் நடத்தி, நன்றிக் கடனை திருப்பிச் செலுத்திக் கொண்டிருக்கிறார் ரஜினி கலையரசன் என்ற மருத்துவர்!
கண்களைக் குளமாக்கும் மனதைச் சுடும் அவரது வாழ்க்கை.

"ஆறு வயதில் தந்தையையும், தாயையும் இழந்து, நடுத்தெருவுக்கு வந்து நின்றேன் எனக்கு உறவுகள் இருந்தனர்; ஆனால் அவர்கள் அதற்கு அனுமதிக்கவில்லை. ஆனால், இரவில் படுத்துறங்க மட்டும் சித்தப்பா முனியப்பா வீட்டுத் திண்ணையில் இடம் கிடைத்தது. அதுவும் பாட்டி லட்சுமியம்மாளின் தயவால். இந்த நிலைக்குக் காரணம், என் தந்தை லட்சுமணனும், தாய் ஜம்புவும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டது தான். அப்பா, அம்மாவின் காதல் திருமணத்தை, தாத்தா-பாட்டி மற்றும் சித்தப்பா உள்ளிட்ட உறவினர்கள் எவரும் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்களுக்குப் பிடிக்கவும் இல்லை. இதனால் எப்போதும் வீட்டில் சண்டை சச்சரவு தான்." 

"ஒரு கட்டத்தில் அப்பா லட்சுமணன் மர்மமாகவே இறந்து போனார். அப்பா இறந்தவுடன் அம்மா ஜம்புவை அடித்தே வீட்டைவிட்டு விரட்டி விட்டார்கள். ஆறு வயதான என்னை அப்படியே விட்டு விட்டுக் கிளம்பி எங்கோ போய் விட்டாள் அம்மா."

"அன்றுமுதல் எனக்கு உறவுகள் இருந்தும், ஒரு அநாதையாகத் தான் வளர்ந்தேன். சித்தப்பாவின் வீட்டில் தோட்ட வேலையும், மாட்டைப் பிடித்துக் கட்டுவதும், அவைகளுக்கு தீனி வைப்பதுமாக நாட்கள் கடந்தன. பிறகு மனமிரங்கி உத்தனப்பள்ளியில் இருக்கும் தொடக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் பாட்டி லட்சுமியம்மாள் சேர்த்து விட்டார்.

அப்போது முதல் எனக்கு வீட்டில் கிடைக்காத அன்பும், அரவணைப்பும் பள்ளியில் ஆசிரியர்களிடமிருந்து கிடைத்து வந்தது. அதற்காகவே நான் நாள் தவறாமல் பள்ளிக்குச் சென்று விடுவேன். என்னுடைய பல ஆசிரியர்களை இன்றுவரை அப்பா, அம்மா என்று தான் அழைக்கின்றேன்

அவர்களும் மறுக்காமல் 'வாடா செல்லம்' என்று தான் அழைக்கிறார்கள்."

"அதுதவிர, அப்போது எனக்குப் பள்ளியில் முக்கியமாக மதிய உணவு கிடைத்தது. ஆம்...சரியான உணவுகூட இல்லாமல் பள்ளிக்குச் செல்லும் வழியிலும், பள்ளியிலும் மயக்கம் போட்டு விழுந்த நாட்களும் பல உண்டு. அப்போதெல்லாம் ஆசிரியர்களுக்குத் தெரியாது, நான் எந்தச் சூழ்நிலையில் பள்ளிக்கு வருகின்றேன்

 என்று... காரணம், எனக்குள் ஆயிரம் துயர் கரை புரண்டு ஓடிக்கொண்டு இருந்தாலும் பள்ளியில் அனைவருடனும் அதைக் காட்டிக் கொள்ளாமல் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பேன். ஆனால் நாளடைவில் என்னுடைய மயக்கத்துக்கான காரணத்தைக் கண்டுபிடித்த ஆசிரியர்கள், என் பின்னணியை அறிந்து கொண்டனர்; அதன் பின் உதவத் தொடங்கினர்." 

"எனக்கு மட்டும் காலை 10 மணிக்கு சத்துணவு கூடத்தில் சாதம் வடித்ததும், சாதமும் வேகவைத்த பருப்பும் போட்டுத் தருவார்கள். இதுதான் எனது காலை உணவு. பிறகு மதிய உணவைப் பள்ளியிலேயே சாப்பிட்டு விடுவேன். அதையே இரவில் சாப்பிடவும் கொடுத்து அனுப்புவார்கள். அதை வீட்டுக்குக் கொண்டுபோய் இரவு சாப்பிட முடியாது. வீட்டில் உள்ளவர்கள் திட்டுவார்கள் என்று பள்ளி முடிந்து வீட்டுக்குச் செல்லும் வழியில் எங்காவது வைத்து சாப்பிட்ட பின்னரே வீட்டுக்குச் செல்வேன். இப்படியாக 5-ஆம் வகுப்பு வரை படித்து முடித்தேன்." 

"படிப்பின் மீது எனக்கு இருக்கும் ஆர்வத்தைக் கண்டு, ஆசிரியர்களே என்னை 6-ஆம் வகுப்பில் சேர்த்து விட்டனர். 8-ஆம் வகுப்பு முடித்தவுடன், மே மாத விடுமுறையில் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் சேர்ந்து, ஏரி சீரமைக்கும் வேலைக்குச் சென்றேன். அதில் கிடைத்த பணத்தைச் சேமித்து வைத்து 9-ஆம் வகுப்பில் சேர்ந்தேன். மீண்டும் சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் வேலைக்குச் சென்றேன். அப்போது, 'நீ படித்தது போதும்; தோட்டத்தில் வந்து வேலை பாரு' என்று சித்தப்பாவும், சித்தியும் தொந்தரவு தந்தார்கள். ஆனால் விடுமுறை எடுக்காமல் பள்ளிக்குச் செல்லவேண்டும் என்று தீர்மானித்து இருந்தேன் நான்.இதனால், என்னை வீட்டை விட்டு வெளியே துரத்தி விட்டார்கள். பாட்டி லட்சுமியம்மாளும் 'மகன் (சித்தப்பா) சொல்வதுதான் சரி' என்று என்னைக் கைவிட்டு விட்டார்."

"அப்போது, எனக்கு ஆதரவு கொடுத்தது என்னோடு படித்த சக மாணவி பிரேமா. நான் வாழ்நாள் முழுவதும் தோழி பிரேமாவுக்குக் கடமைப்பட்டுள்ளேன். ஆம். நான் 9 மற்றும் 10-ஆம் வகுப்புவரை படித்து முடிக்க, எனக்காக அவரது அப்பாவிடம் பேசி இரண்டு வருடம் அவரது வீட்டில் தங்கிப் படிக்க இடம் கொடுத்தார்."

"பத்தாம் வகுப்பில் 468 மதிப்பெண் எடுத்தேன். மீண்டும் ஆசிரியர்கள் உதவினார்கள். ஓசூரில் உள்ள விஜய் வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் பேசி இலவசமாக தங்கிப் படிக்க ஏற்பாடு செய்து கொடுத்தனர். பள்ளி நிர்வாகமும் என் சூழ்நிலையை உணர்ந்து கொண்டு இரண்டு வருடங்கள் இலவசமாக விடுதியில் தங்கிப் படிக்க உதவி செய்தது. முக்கியமாகப் பள்ளியின் முதல்வர் சம்பத்குமார் சாருக்கு நன்றி சொல்லவேண்டும்."

"தனியார் பள்ளி என்பதால் மாதந்தோறும் பள்ளியில் பெற்றோர் கூட்டம் நடக்கும். என் சார்பாக, என் பள்ளி ஆசிரியர்கள் பெற்றோர் கூட்டத்துக்கு மாதம் ஒரு ஆசிரியர் என முறை வைத்துக் கலந்துகொள்வார்கள். அது மட்டுமல்ல. அவர்கள் கடைக்குச் செல்லும்போது பேப்பர், பேனா, பென்சில் தீர்ந்து இருக்கும் என்று வாங்கி வந்தும் தருவார்கள். என்னுடைய ஆசிரியர்கள் அனைவரின் உதவியால் அவர்கள் எதிர்பார்த்தது போலவே ப்ளஸ்-டூ தேர்வில் 1,166 மதிப்பெண் எடுத்தேன். மெடிக்கல் கட்-ஆப் 198.25 எடுத்தேன். ஆனால், எனக்கோ பள்ளி ஆசிரியர் ஆக வேண்டும் என்பதுதான் விருப்பம். அப்போது தான் அன்பு காட்டும் ஆசிரியர்களுடனேயே இருக்க முடியும் என்று முடிவு செய்திருந்தேன்". 

"'மருத்துவம் வேண்டாம்' என்றும் 'முடியாது' என்றும் எவ்வளவோ போராடிப் பார்த்தேன்; ஆனால், என்னுடைய ஆசிரியர்கள் விடவில்லை. 'மருத்துவப் படிப்பு படித்தே ஆக வேண்டும்' என்று என்னை முதல்முறையாக அடிக்கவும் செய்தனர். அன்பின் மிகுதியால் அவர்களே விண்ணப்பம் வாங்கி வந்து என்னை மருத்துவப் படிப்பில் சேர்த்து விட்டனர். ஆனால் மருத்துவம் படிக்கவும்; கட்டணம் செலுத்தவும் வசதி இல்லை.

அப்போது நெல்லை கலெக்டராக இருந்த கருணாகரன் சார் உதவி செய்தார். கலெக்டர் கொடுத்த உதவித் தொகையை என்னுடைய பேராசிரியர் சுனிதா, எனக்குத் தேவையான போது கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுத்ததுடன், அவருடைய காசையும் சேர்த்து என்னை மருத்துவர் ஆக்குவதற்கு உதவி செய்தார்."

"2018-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு வெளியே வந்தேன். 'எங்கே போவது...?' என்று தெரியாமல் பிறந்த ஊரான கோவிந்தாபுரம் வந்தேன். ஆனால், சித்தப்பாவின் மகன்களோ, 'சொத்து, கித்துன்னு வந்தா ஒரே வெட்டு... உயிரோடு இருக்க மாட்டே' என்று மிரட்டி அனுப்பினார்கள். அதனால், நண்பர்கள் உதவியுடன் அலேசிபம் கிராமத்தில் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கினேன்." 

"நான் படித்த உத்தனப்பள்ளியில் சிவபிரகாஷ் என்ற பெயரில் கிளினிக் வைத்தேன். என்னைத் தேடி வரும் ஏழை மக்களுக்கு என்னால் எவ்வளவு முடியுமோ, அந்த அளவுக்குக் குறைவான கட்டணத்தில் இப்போது மருத்துவம் பார்த்து வருகிறேன். அதில் கிடைக்கும் வருமானத்தில் எனக்குத் தேவையான உடைகளை உள்ளூர் கடைகளில் வாங்கினேன். பிறகு சமைக்கத் தேவையான பாத்திரங்கள், துணிகளை வைக்கப் பீரோ, ஒரு ஆண்ட்ராய்டு செல்போன் போன்றவற்றை வாங்கியுள்ளேன்".

"மருத்துவத்தில் எம்.டி படிக்க வேண்டும் என்று ஆசை. அதற்காக, நுழைவுத் தேர்வு எழுத இரவு நேரத்தில் இப்போது படித்து வருகின்றேன். இந்தச் சமயத்தில்தான் கடந்த ஜூன் மாதம் பள்ளிக்கூடம் திறந்த உடன்; என்னுடைய ஆசிரியர் கனவை நிறைவேற்றிக் கொள்ள விரும்பினேன். நான் படித்த தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியரிடம் இது பற்றிப் பேசினேன். 5-ஆம் வகுப்பு மாணவர்களுக்குத் தமிழ் மற்றும் அறிவியல் பாடம் நடத்தச் சொல்ல, நடத்தி வருகின்றேன். மருத்துவத்தில் கிடைக்காத நிம்மதி ஆசிரியராக மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கும் போது எனக்குக் கிடைக்கிறது."

"இதற்காகத் தினமும் காலை 9 மணிக்கெல்லாம் பள்ளிக்குச் சென்று, மாணவர்களுக்குத் தமிழ் அல்லது அறிவியல் வகுப்புப் பாடம் நடத்தி முடித்துவிட்டு, பிறகு எனது கிளினிக் வந்து மருத்துவம் பார்க்கிறேன்" 

"தாய், தந்தை வைத்த பெயர் கலையரசன். பிறகு எனக்குப் பிடித்த நடிகரான ரஜினி பெயரை முன்னால் சேர்த்துக்கொண்டு ரஜினி கலையரசன் என்று ஆக்கிக்கொண்டேன். ஆனால் எனக்கு என்று முகவரி கிடையாது. நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் உதவியால் கல்லூரி விடுதி முகவரியை வைத்து, ஆதார் கார்டு பெற்றுள்ளேன். இனி தான் எனக்கான முகவரியை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏற்படுத்தி, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றை வாங்க வேண்டும். நான் படித்த மருத்துவப் படிப்பைப் பதிவுசெய்ய வேண்டும்" 

போராட்டமே வாழ்க்கையாய் வாழ்க்கையே போராட்டமாய் வாழும் ரஜினி கலையரசன் பேசப் பேச நமக்கு நம்பிக்கை வெளிச்சங்கள் தெரியத் துவங்கின. கூடவே கண்ணீரும்...

எப்போதும் முயற்சி வெற்றியைக் கொடுக்கும். 
பலரின் அன்பும் பாசமும் அவரை உன்னத நிலைக்குக் கொண்டு வந்துள்ளது.

வாழ்க வளர்க அவரின் தொண்டு///

தெரிவு: சக 

kanmani tamil

unread,
Jul 5, 2025, 3:19:41 PMJul 5
to vallamai
கோபாலபுரம் ஹீரோ… பேப்பர் தாத்தா: 

/// கோபாலபுரம் ஹீரோ… பேப்பர் தாத்தாவின் சுவாரஸ்ய கதை!

கோபாலபுரத்தைச் சேர்ந்த 94 வயது தாத்தா தினந்தோறும் சைக்கிளில் வீடு வீடாகச் சென்று பேப்பர் போடுவதையும்; பால் பாக்கெட்டுகள் போடுவதையும்; வழக்கமாக கொண்டுள்ளார். இந்த வயதில் நேரம் தவறாமல், ஒரு நாள் கூட ஓய்வு எடுக்காமல் அவர் செய்யும் பணி அந்தப் பகுதி மக்களை ஆச்சர்யமடைய வைத்துள்ளது. 

கோபாலபுரத்தில் வசிக்கும் மக்களால் பேப்பர் தாத்தா என்று அன்போடு அழைப்படுபவர் சண்முகசுந்தரம். ராயப்பேட்டையச் சேர்ந்தவர். தினந்தோறும் அதிகாலை 3.30 மணிக்கெல்லாம் எழுந்து விடுவார். முதலில் அந்தப் பகுதியில் ஒரு மொத்த விற்பனைக் கடையில் இருந்து 50 பால் பாக்கெட்டுகளை வாங்கிக்கொண்டு அதை வீடு வீடாகச் சென்று விநியோகித்து விடுவார்.

அடுத்தது மூச்சு விடுவதற்குக் கூட இடைவெளி கொடுக்காமல், உடனடியாக நியூஸ் பேப்பர்களை வாங்கித் தனது சைக்கிளின் முன் கூடையில் வைத்துக்கொண்டு ஒவ்வொரு வீடாகச் சென்று போட்டு விடுவார்.

பத்மாவதி சாலையில் தொடங்கி கோபாலபுரத்தில் உள்ள 8 தெருக்களில் சுமார் 60 வீடுகளில் செய்தித்தாள்களை விநியோகிக்கிறார். மழை, வெயில் என எது வந்தாலும் தவறாமல் இந்தப் பணியைச் செய்து விடுவார். பேப்பர் தாத்தா என்கிறார்கள் கோபாலபுரம் மக்கள்.

இந்த வழக்கத்தைக் கடந்த 25 ஆண்டுகளாகத் தனது வாழ்க்கையின் ஒரு பகுதியாகக் கொண்டுள்ளார் பேப்பர் தாத்தா.

கோபாலபுரத்தில் நீண்ட காலமாக வசிக்கும் மோகன் பேப்பர் தாத்தா குறித்துக் கூறுகையில், “அவர் எனக்கு ஒரு ஹீரோ மாதிரி... தினமும் அவரைப் பார்க்கும் போது எனக்கு ஒரு உத்வேகம் கிடைக்கும். அவர் சைக்கிளை ஓட்டி வருவதைப் பார்த்தால் எனது சோம்பேறித்தனமெல்லாம் காணாமல் போய்விடும்.

முன்னதாக அவர் வீடு வீடாகத் தண்ணீர் கேன்களைப் போடுவார். அதனால் பேப்பர் தாத்தா இந்தப் பகுதி மக்களுக்கு நன்கு பரிச்சயமானவர்” என்கிறார்.

பேப்பர் தாத்தா கூறுகையில், “நான் ஒருநாளும் இந்த வேலையைத் தவறியதில்லை. இந்தப் பகுதியில் செய்தித் தாள்களை விநியோகிப்பதால் தான் முன்னாள் முதல்வர் கலைஞர் உட்பட; குறிப்பிடத்தக்க முக்கிய நபர்களைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது” என்று தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறார்.

தினமும் பேப்பரைப் போட்டு விட்டு, அங்குள்ள திருமண மண்டபத்தைப் பார்த்துக் கொள்ளும் வேலைக்கும் செல்கிறார் பேப்பர் தாத்தா. அவருக்கு 10 பேரப் பிள்ளைகள் இருக்கிறார்கள். வேலைக்குப் போக வேண்டாம் என்று பேரப் பிள்ளைகள் வலியுறுத்தியும், பேப்பர் தாத்தா அதைக் கேட்பதில்லை.

கோவிட் சமயத்தில் செய்தித் தாள்கள் வாங்குவது குறைந்ததாகக் கூறும் பேப்பர் தாத்தா, “முன்னதாக 100 வீடுகளில் பேப்பர் வாங்கினார்கள். இப்போது 60 ஆகக் குறைந்துள்ளது. எனது பேரக் குழந்தைகள் என்னை வற்புறுத்திய போதும்; என்னால் ஓய்வெடுத்துக் கொண்டு வீட்டில் இருக்க முடியவில்லை. அவர்கள் எல்லாம் நன்கு படித்தவர்கள். எனக்குப் போதுமான ஓய்வு கிடைக்கவில்லை என்று கவலைப் படுகிறார்கள்.

ஆனால் எனது மகிழ்ச்சிக்கு ரகசியமே; நான் மக்களைச் சுற்றிச் சுற்றி வருவது தான். அதனால் நான் ஒருநாள் கூட வீட்டில் இருந்ததில்லை. என்னையும் எனது சைக்கிளையும் பிரிக்க முடியாது” என்று கூறுகிறார்.

94 வயதிலும் தனது மனைவியையும் பேப்பர் தாத்தா தான் பார்த்துக் கொள்கிறார். பல்வேறு வேலைகளைச் செய்து ஐந்து மகள்களையும் ஒரு மகனையும் படிக்க வைத்துள்ளார். செய்யும் தொழிலே தெய்வம் என்ற பழமொழிக்கு ஏற்ப வாழ்ந்து வருகிறார் பேப்பர் தாத்தா.

1930ல் பிறந்த இவர், ராயப்பேட்டை வெஸ்லி மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர் ஆவார். சமீபத்தில் அந்தப் பள்ளியால் பேப்பர் தாத்தா கவுரவிக்கப் பட்டுள்ளார்.

செய்தித்தாள்களை விநியோகிப்பது மட்டுமல்ல; கோபாலபுரம் மக்களின் மனதில் நம்பிக்கையையும் உத்வேகத்தையும் விதைத்திருக்கிறார் பேப்பர் தாத்தா. 

நன்றி: மின்னம்பலம்///

https://www.facebook.com/share/p/1C9QD5it7n/

தெரிவு: சக 

kanmani tamil

unread,
Jul 11, 2025, 12:16:40 AMJul 11
to vallamai
ரமாபாய் - ஒரு பெண் வீராங்கனை 

/// 1858 ஆம் ஆண்டு கர்நாடகாவில் ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்து,
பிராமணீயத்திற்கு எதிராகக் குரல் கொடுத்து, சூத்திரன் என்று சொல்லப்பட்ட ஓர் இளைஞனைக் கைப்பிடித்து, வடநாடு முழுவதும் சுற்றித் திரிந்து, பெண் கல்வி, பெண் விடுதலை எனத் தன் வாழ்நாளையே அர்ப்பணித்துக் கொண்டவர் ரமா பாய்.

20 ஆவது வயதில் தன் பெற்றோரையும், 25 ஆவது வயதில் தன் கணவரையும் இழந்த பின்னும், நெஞ்சில் துணிவை இழக்காமல், அதற்குப் பிறகு 40 ஆண்டுகள் தன் இலட்சியத்திற்காகப் போராடி மறைந்தவர் அவர்.

ரிப்பன் பிரபுவுக்கு முன்பே பெண் கல்வி குறித்து அவர் ஆற்றிய உரையால் ஈர்க்கப்பட்டு, இங்கிலாந்தும் அமெரிக்காவும் அவரை அரவணைத்தன. ஆனால் அவர் இந்தியாவில் கணவனை இழந்து வாழும் இளம் பெண்களுக்காக ஓர் இல்லம் நிறுவி, அவர்களுக்குக் கல்வி கொடுத்து, ஊக்கம் கொடுத்து, அவர்கள் சுயமரியாதையோடு வாழ வழி செய்தார். ஆனால் இவையெல்லாம் இந்து மதத்திற்கு எதிரானவை என்ற...

நன்றி : பேராசிரியர் சுபவீ///

அரசியல் தில்லாலங்கடி வேலைகளால் அவரது வேகமும் முனைப்பும் குறைந்த பாடில்லை. 


தெரிவு: சக 


kanmani tamil

unread,
Jul 11, 2025, 11:48:57 AMJul 11
to vallamai
குட்டியம்மாள் - 110வயது 
பழங்குடி மக்கள் இடையே தனித்து வாழும் ஆளுமை!!!

/// பொதிகை மலையில் வன விலங்குகள் இருக்கும் காட்டில் தனியாக வாழும் 110 வயது மூதாட்டி - காணி பழங்குடி மக்கள்…

நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் பொதிகை மலையின் உச்சியில் பூங்குளம் பகுதியில் தாமிரபரணி ஆறு உற்பத்தியாகிறது.
மலையில் பாய்ந்தோடும் நீரோடைகள் பாபநாசம் காரையாறு அணையை வந்தடைகின்றன.

காரையாறு அணை அருகில் அகஸ்தியர் காலனி, சின்ன மைலார், பெரிய மைலார், சேர்வலாறு, இஞ்சிக்குழி உள்ளிட்ட இடங்களில் காணி இனப் பழங்குடி மக்கள் வசித்து வருகின்றனர்.

காரையார் அணைக்கு மேலே சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் அடர்ந்த காட்டுக்குள் பொதிகை மலை உச்சியின் அடிப்பகுதியில் இஞ்சிக்குழி கிராமம் உள்ளது.

முன்பு இங்கு 40 குடும்பத்தினர் வசித்த நிலையில் தற்போது 3 குடும்பத்தினர் மட்டுமே வசிக்கின்றனர்.

அதில் குட்டியம்மாள் (வயது 110) என்ற மூதாட்டி மட்டும் தார்ப்பாயாலான வீட்டில் தனியாக வசிக்கிறார். மற்ற குடும்பத்தினர் வேலைக்காக காரையாறு அணை அடிவாரத்துக்கு சென்று விட்டு, அவ்வப்போது இஞ்சிக்குழி வருகின்றனர்.

அடர்ந்த வனப்பகுதியான இங்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் சாலை, தொலைத்தொடர்பு உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் கிடையாது.

இஞ்சிக்குழியில் அடர்ந்த காட்டில் தனியாக வசிக்கும் மூதாட்டி குட்டியம்மாளுக்கு கடந்த 2021-ம் ஆண்டு நெல்லை மாவட்ட கலெக்டர் முதியோர் உதவித்தொகை வழங்க உத்தரவிட்டார். மேலும் அவரது வீட்டுக்கு சோலார் மின்வசதி அமைத்து கொடுத்தார்.

காரையார் தபால் அலுவலகத்தில் இருந்து தபால் அலுவலர் மாதந்தோறும் இஞ்சிக்குழிக்கு நடந்து சென்று உதவித்தொகை வழங்கி வருகிறார்.

தற்போது குட்டியம்மாள் வயது முதிர்வு காரணமாக சரிவர நடக்க முடியாததால் எங்கும் செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கினார். மேலும் காரையாறில் உள்ள ரேஷன் கடைக்கும் சென்று உணவுப்பொருட்களை வாங்க முடியாத நிலை உள்ளது.

இதுகுறித்து மூதாட்டி குட்டியம்மாள் கூறுகையில், ''இஞ்சிக்குழியில் 40 குடும்பத்தினர் வசித்த நிலையில் தற்போது நான் மட்டுமே வசிக்கின்றேன். இங்கு எந்த வசதியும் இல்லாததால் பலரும் மலையடிவாரத்துக்கு சென்று விட்டனர். 2 குடும்பத்தினர் மட்டும் தங்களது குடியிருப்புகளுக்கு அவ்வப்போது வந்து செல்வார்கள்.

யானைகளின் பிளிறல் சத்தத்தைக் கேட்டுதான் காலையில் கண்விழிப்பேன். சிறுத்தை, கரடி போன்ற வனவிலங்குகள் இயல்பாக சுற்றித் திரியும்.

வனப்பகுதியில் கிடைக்கும் பழங்கள், கிழங்குகளை சாப்பிடுகிறேன். ரேஷன் பொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்தால் பயனுள்ளதாக இருக்கும்'' என்கிறார்.

இணைய பகிர்வு…


சக 

kanmani tamil

unread,
Jul 19, 2025, 2:27:39 PMJul 19
to vallamai
திருவாளர் கீழப்புலியூர் கருப்பையா: 

/// கருப்பையா: பெரம்பலூர் அருகே பொட்டல் காட்டை பறவைகள் வந்து செல்லும் நந்தவனமாக மாற்றிய தனி ஒருவன்

கட்டுரை தகவல்
எழுதியவர், மாயகிருஷ்ணன்.க
பிபிசி தமிழுக்காக...

தனி மரம் தோப்பாகாது, ஆனால் தனி மனிதனால் தோப்புகளை உருவாக்க முடியும் என்று நிரூபித்திருக்கிறார் 76 வயது கருப்பையா.

தன்னுடைய தொடர் உழைப்பால் பல்வகை பறவைகள் வந்து செல்லும் சரணாலயம் போன்ற சூழலை தன்னுடைய பெரம்பலூர் மாவட்டம் கீழப்புலியூர் கிராமத்தில் இவர் உருவாக்கியிருக்கிறார்.

சுட்டெரிக்கும் வெயிலுக்கு குளிர்ந்த போர்வை அளித்தது போன்ற உணர்வைத் தருகிறது கீழப்புலியூர் கிராமம்.

அங்கிருந்த ஒவ்வொரு மரத்திலும் பல உயிரிகள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. பறவைகள், விலங்குகள் மட்டுமல்லாது பல்வேறு வகை பூச்சி இனங்களும் உள்ளன. தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்த கருப்பையா நம்மைப் பார்த்தவுடன் சற்று இருங்கள்; வேலையை முடித்து விட்டு வருகிறேன் என்று கூறினார்.

கருப்பையா பணியினை முடித்துவிட்டு நம்மிடம் பேசத் தொடங்கினார்.

''நான் ஒரு சாதாரணமான மனிதன்; என்னால் ஆயிரம் பேருக்கு தினமும் சோறு போட முடியாது. ஆனால் என் வாழ்நாள் முடிவதற்குள் ஆயிரக்கணக்கில் மரக்கன்றுகளை நட்டு; அதை மரமாக்கிப் பறவைகள் வந்து தங்கும் வீடுகளாக அழகு பார்க்க முடியும். இந்த நம்பிக்கை 25 வயதில் ஏற்பட்டது. அக்கால அரசர்களான சேர, சோழ, பாண்டியர்கள் வழி நெடுகிலும் மரங்களை நட்டு அழகு பார்த்தார்கள். அவர்கள் குதிரைகளிலும் ரதங்களிலும் வரும்பொழுது மர நிழலில் தங்கி இளைப்பாறியே சென்றனர். மேலும் அவர்கள் இயற்கையோடு இணைந்தே வாழ்ந்து வந்தனர். ஆனால் காலமாற்றத்தில் இயற்கையை மனிதன் அபகரிக்க தொடங்கியதன் விளைவாக பல்வேறு இன்னல்களைத் தொடர்ந்து நாம் சந்தித்து வருகின்றோம்.

இந் நிலையிலிருந்து மாறி நாம் வாழும் இந்த பூமியை மாசற்ற பகுதியாக மாற்றி, வருங்காலத் தலைமுறைக்கு ஒப்படைக்க வேண்டும் என்பது எனது சிறிய லட்சியம். அதன் ஒரு பகுதியாக என்னால் இயன்றவரை பல்வகை மரங்களை- குறிப்பாக ஆலமரம், அரசமரம், அத்தி மரம் என்று பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் பலன் தரும் மரங்களை அதிகமாக நட்டுப் பாதுகாத்து வருகின்றேன். 25வயதில் தொடங்கிய இந்தப் பணி 76 வயதிலும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது'' என்று கூறினார்.

அன்று பொட்டல் காடு; இன்று பறவைகள் வந்து செல்லும் வனம்! வாலி கண்டபுரத்தில் இருந்து ஐந்து கிலோமீட்டரில் உள்ளது கீழப்புலியூர் பச்சையம்மன் கோவில். இதைச் சுற்றி 30 ஏக்கர் பரப்பளவு பொட்டல் காடாகப் பல ஆண்டுகளுக்கு முன்பு காணப்பட்டது. ஆனால் தற்பொழுது எங்கு பார்த்தாலும் மரங்கள் உயர்ந்து நிற்கின்றன. இந்த மரங்களை வைத்துப் பாதுகாத்து வளர்த்து மரமாக்கிய பெருமை கருப்பையாவைச் சாரும் என்கின்றனர் இந்த ஊர் மக்கள்.

ஆலமரம், அரசமரம், நாவல் மரம், வில்வமரம், பூவரசு புளியமரம் எனப் பல்வகை மரங்களை நட்டு; அதைப் பாதுகாத்து; தினமும் தண்ணீர் ஊற்றி வருவதே எனது முதல் பணி என்ற அளவில் இன்றளவிலும் தொடர்ந்து செய்து வருகின்றார்.

கோவில் பகுதி மட்டுமல்லாமல் ஊரின் ஏரிக்கரை பகுதி முழுவதும் இவர் நட்ட பல்வகை மரச் செடிகள், ஊர் மக்களை மட்டுமல்ல; கோவிலுக்கு வருபவர்களையும் ஆடு மாடு மேய்ப்பவர்களையும் நிழலும் பழமும் தந்து வரவேற்கிறது.

அக்காலத்தில் வாலிகண்டபுரத்தில் இருந்து கீழப்புலியூர் வரும்பொழுது அடர்ந்த வனக்காடுகளைக் கடந்து தான் வர வேண்டும் என்று எனது முன்னோர்கள் கூறியதைக் கேட்டு இருக்கின்றேன். இடைப்பட்ட காலத்தில் இப்பகுதியில் இருந்த மரங்கள் அழிக்கப்பட்டன. அந்த இடத்தில் மீண்டும் மரங்களை உருவாக்கும் முயற்சியின் முதல் படியாக ஆரம்பித்த இந்த இவரின் செயல் தற்பொழுது ஆயிரக்கணக்கான மரங்களை உருவாக்கியதோடு மட்டுமல்லாமல் ஊரையே பசுமையாக்கி உள்ளது.

பறவை ஆர்வலரும், ஆசிரியரருமான கலைச்செல்வன் பிபிசியிடம் பேசிய போது, ’’கீழப்புலியூரில் ஆல மரம், அத்தி, இலுப்பை, வன்னி, பூவரசு, வேம்பு என பல்வகை மரங்கள் காணப்படுகிறது. இதைக் காண்பதற்கு ரம்யமாக உள்ளது. ஏனென்றால் கால்நடைகள் மேய்ப்பவர்களுக்கு நிழல் மட்டும் தரவில்லை; இங்கு காணப்படும் மரங்களில் மிக அதிக அளவில் பறவைகள் வசிக்கின்றன. சில வந்து செல்கின்றன. கீச்சீட்டு...கத்தும் அந்த குரல்கள் கேட்பதற்கே இனிமையாக இருக்கின்றது. இப்பகுதி மரங்களில் காகம், மைனா, செம்மார்பு குக்குறுவான், மஞ்சள் நிறத்தில் காணப்படும் மாங்குயில், வால் காக்கை, கரிச்சான் குருவிகள், பனங்காடை, கீச்சான், வெண் மார்பு மீன் கொத்தி, புள்ளி ஆந்தை, வல்லூறு, மரங்கொத்தி எனப் பல்வகை பறவைகள் நிறைந்து காணப்படும் பகுதியாக இது உள்ளது. என்னைப் போன்ற பறவை ஆர்வலர்களுக்கு மட்டுமல்லாமல் மாணவ மாணவியர்கள் வந்து பார்த்து செல்லும் இடமாகவும் இது மாறி வருகிறது’’ என்றார்.

நாங்கள் விளையாட நிழல் இருக்காது. ஆனால் தற்பொழுது அப்படியல்ல; ஏறக்குறைய 300 முதல் 400 மரங்கள் வரை வளர்ந்து நிற்கின்றது. இதற்கு காரணம் எங்கள் ஊர் கருப்பையா தான். மிகச் சிறந்த மனிதரான இவர் எங்களைப் போன்ற இளைஞர்களுக்கு மிகச்சிறந்த வழிகாட்டியாகவும் இருக்கின்றார். இவர் மரங்கள் நட்டுப் பாதுகாப்பதை ஒரு காலத்தில் கேலி செய்த இளைஞர்களும் தற்போது ஆர்வமுடன் இணைந்து மரங்களை நடுவதற்கு உதவி செய்து வருகின்றார்கள். இவர் தனி மனிதர் தான்.

இவர் மனைவி இறந்து விட்டார். குழந்தைகளும் இல்லை என்ற போதிலும் இவர் இந்தப் பணியைச் செய்ய வேண்டிய அவசியம் இல்லை; ஆனாலும் மிகச்சிறந்த வனப்பகுதியை உருவாக்குவதே எனது பணி என்று எங்களிடம் கூறுவார்’’ என்கிறார் அருள்குமார்.

தொடர்ந்து பேசிய அருள் குமார், ‘’நமக்கு ஆறறிவு உள்ளது; நாம் எப்படியாவது பிழைத்துக் கொள்ளலாம். ஆனால் பறவைகள், விலங்குகள் அப்படியல்ல. அவைகளுக்கு யார் தினமும் உணவளிப்பது என்று சிந்திக்கும் வகையில் எங்களிடம் பேசுவார். அத்தோடு நில்லாது அவர் அந்தப் பணியைச் சிறப்பாகச் செய்தும் காட்டினார். எங்கள் ஊர் பகுதியில் 20 ஆண்டுகளுக்கு முன்பு நிலப்பகுதிக்கு சரியான விலை இல்லை; யாரும் விலைக்குக் கேட்க மாட்டார்கள். ஆனால் இப்பொழுது நிலைமை மாறிவிட்டது; போட்டி போட்டுக் கொண்டு நிலங்கள் வேண்டும் என்று கேட்கின்றார்கள். இதற்கு காரணம் எங்கள் ஊர் பகுதியில் மரங்கள் அதிகமாக உள்ளதால் மழை வளமும் பெருகி விவசாய நிலப்பரப்பும் கூடியதுதான்.’’ என்றார்.

இதை உறுதிப்படுத்தும் விதமாக பேசிய கீழப்புலியூர் கிராம நிர்வாக அலுவலர் தனிஷ்க் குமார், ‘’கீழப்புலியூர் கிராமம் பசுமை நிறைந்த கிராமம் என்பதில் மிகை இல்லை. இங்கு 1800 ஏக்கர் நிலப்பரப்பு விவசாய நிலப்பரப்பாகவே உள்ளது. மேலும் சுற்றியுள்ள பகுதிகளில் அதிகப்படியான மரங்கள் இருப்பதால் இங்கு இரண்டு போக விவசாயம் பெரும்பான்மையான நிலங்களில் நடைபெறுகிறது என்றார்.

நன்றி: பிபிசி தமிழ்
- பகிர்வு///


தெரிவு: சக 

சக்திவேலு கந்தசாமி

unread,
Jul 19, 2025, 5:39:29 PMJul 19
to vall...@googlegroups.com
பகிர்வுக்கு நன்றி.

kanmani tamil

unread,
Jul 19, 2025, 10:35:16 PMJul 19
to vallamai

kanmani tamil

unread,
Jul 31, 2025, 4:54:59 AMJul 31
to vallamai
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி:

... பெண்களின் தனி அடையாளம் அவர். இன்றும் அவரே தமிழகப் பெண்களுக்கு மாபெரும் உத்வேகமும் வழிகாட்டியுமானவர்.

முத்துலெட்சுமி பிராமணப் பிறப்பு... அக்காலத்திலே; அதாவது பெண்கள் பெரிதளவில் கல்வி பெறாத காலங்களிலே படிக்க விரும்பிப் போராடியவர். தனக்கேற்ற துணையாகத் தன்னைப் புரிந்து கொண்ட சுந்தர ரெட்டி என்பவரை மணந்து முத்துலெட்சுமி ரெட்டியானார்.

1900களில் பெண்களுக்கு கல்வி பிரதானமாக‌ இல்லை, அன்றைய காலகட்டத்தில் பள்ளி கல்லூரிகள் குறைவு. அதுவும் அக்காலத்தில் இன்றுள்ள வகை வகையான கல்விகள் என எதுவுமில்லை

எனினும் சட்டம், மருத்துவம், பொறியியல் என ஒரு சில துறைகள் வளர்ந்து கொண்டிருந்தன‌

அன்றைய மருத்துவக் கல்வி வித்தியாசமானது சம்ஸ்கிருதமும் லத்தீனும் படிக்க வேண்டும் இன்னும் என்னவெல்லாமோ உண்டு. சிரமப்பட்டுக் கற்கவேண்டி இருந்ததால் அக்காலப் பெண்களுக்கு அது சாத்தியமில்லை.

ஆனால் முத்துலெட்சுமி போராடினார்; தனியாகப் போராடினார்.  அவரின் உறுதியினைக் கண்ட புதுக்கோட்டை... மன்னரே அவர் படிக்க வழி செய்தார்.

ஆம், இந்து பெண்ணை படிக்க வைத்தவர் இந்து மன்னர்தான். அது அல்லாது அவள் படிக்க விரும்பியிருந்தால் மதமாற்றமே வழி. ஆனால் முத்துலட்சுமி அதைச் செய்யவில்லை. ஒரு இந்துவாகவே நின்றாள், கற்றாள், மருத்துவரானார்.

இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் முத்துலெட்சுமியே. தனி ஒருத்தியாக ஆண்களுக்கு நிகராக நின்று அவர் மருத்துவம் படித்ததெல்லாம் மன உறுதியின் உச்சம்.

மருத்துவர் ஆயிடினும் மணவாழ்வில் விருப்பமில்லை; ஒரு மெழுகின் வாழ்வு பலன் ஆயிரம் மெழுகினை ஏற்றிவைப்பதே என பெண்களுக்காகப் போராடினார்.

பாரீசில் நடந்த மாநாட்டில் உலகப் பெண்களின் அடிமை நிலையினை 1926ல் முழங்கிய முதல் பெண் அவரே; உலகப் பெண்களுக்கான உரிமைகளை அவர்தான் பேசினார்

1925 வாக்கில் வெள்ளை அரசுக்குட்பட்ட உள்ளாட்சி அமைப்பு சென்னை ராஜ்தானியின் தேர்தலில் சட்டமன்ற உறுப்பினருமானார்

சென்னைக் கோட்டையில் மக்கள் பிரதிநிதியாய் கால்வைத்த முதல் பெண் அவரே. அவரின் கல்வி அவரை அங்கு அமர்த்தியது

அப்பொழுது தான் திசைமாறித் திரிந்த தேவதாசி ஒழிப்புச் சட்டம் அவரால் கொண்டு வரப்பட்டது. பெண்களுக்குச் சொத்துரிமை வேண்டும் என்ற தீர்மானம் அவராலே கொண்டு வரப்பட்டது.

அவர்களின் முயற்சியில் தொடங்கியது தான் அடையாறு மருத்துவமனை. இன்று புற்றுநோய் சிகிச்சைக்குத் தனி அடையாளமாகத் திகழும் அந்த மருத்துவாலயம்

அனாதைப் பெண் குழந்தைகளை அரவணைக்கும் அவ்வையார் இல்லமும் அவர் ஏற்படுத்தியதே. 

ஒரு வகையில் சொன்னால் பாரதப் பெண்களின் வழிகாட்டி முத்துலட்சுமி. 

அந்த மருத்துவ மாமணிக்கு; தமிழகப் பெண்களின் விடுதலை முன்னோடிக்கு; என்றுமே தமிழக மகளிரின் தனிப்பெரும் அடையாளமாகத் திகழும் அந்தக் காரிகைக்கு இன்று நினைவுநாள்

காலமுள்ள காலம் அவரின் பெயரும் சாதனையும் இங்கு நிலைக்கும்

... பெண்ணுரிமை பேசும் முன்பே; பெண் உரிமையினைப் பெற்றுக் கொண்டவர் அவர்

யார் சொல்லியும் பெண் விடுதலை நடக்காது. பெண்களே தானாக விலங்கை உடைத்தால் தான் உண்டு எனக் கிளம்பித் தன்னை நிரூபித்த சமூகப் போராளி...

இன்னொரு வகையில் அந்த பெண்ணுக்குக் கல்வி கிடைக்க முழு பலமுமாய் நின்ற புதுக்கோட்டை மன்னரும் நினைவுக்கு வருவார்

இந்தியாவின் முதல் பெண்மருத்துவரைக் கொடுத்தது இந்து சமூகம். இந்தியாவிலே முதல் முறையாக பெண்களுக்குக் கல்வியும், சொத்துரிமையும் கொடுத்த இடம் தமிழகம் 

அனாதைப் பெண் குழந்தைகளை ஆதரிக்கும் அவ்வையார் மையங்களை திறந்தது தமிழக இந்து சமூகம். 

இப்படி இந்தியாவுக்கே பெண்விடுதலைக்கு வழிகாட்டிய தமிழச்சி முத்துலெட்சுமி ரெட்டி.

இந்நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துவது ஒவ்வொரு இந்தியரின்... குறிப்பாகத் தமழரின் கடமையுமாகும்

தமிழக மங்கையருக்குப் பெரும் நன்றிக்கடன் உண்டு

அவர் பாதை காட்டினார்; நீங்கள் நடக்கின்றீர்கள்; அவர் விளக்கேற்றினார்; நீங்கள் பார்க்கின்றீர்கள்.

அவர் கைகாட்டியாய் நின்றார்; நீவிர் சரியான பாதை கண்டீர்கள்.

அவர் அஸ்திவாரமாய் நின்றார்; நீவிர் கோபுரமாய் உயர்ந்தீர்கள்.

ஒவ்வொரு தமிழகப் பெண்ணின் நன்றிக்குரிய அந்த முத்துலெட்சுமி ரெட்டிக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்

அவ்வையார், வேலுநாச்சியார் போன்ற வீரத் தமிழச்சிகள் வரிசையில் வந்த அறிவுத் தமிழச்சி அவர். அடிமை விலங்கை உடைக்க வந்த போராளித் தமிழச்சி அவர்

அவர் ஏற்றி வைத்த தீபமே இப்பொழுது பிரகாசமாய் எரிகின்றது. 

ஆம்; கவனிக்க வேண்டிய விஷயம் இந்தியாவின் முதல் நவீன பெண் மருத்துவர் ஒரு இந்து பிராமணப் பெண், தடைகளிடையே போராடி முதல் பெண் மருத்துவராக வந்தவர்.

அவளும் பெரும் வசதியானவள் அல்ல; வறுமைதான்; அதனால் புதுக்கோட்டை மன்னரால் படிக்க வைக்கப் பட்டவர் அவர்.

ஆக... திராவிடக் கும்பலுக்கு முன்பே இங்கு பெண்கள் படிக்க கிளம்பியிருந்தார்கள் மிகப் பெரும் சாதனையெல்லாம் செய்தார்கள் என்பது தெரிகின்றது.

திராவிடம் பெண் விடுதலையினை கொடுத்தது என்பதெல்லாம்...  
தனியாகப் போராடி மருத்துவரான முத்துலட்சுமி ரெட்டியின் மாபெரும் சாதனை; அக் கோஷ்டியின் பிரச்சாரத்தை எக்காலமும் பொய் என நிரூபித்துக் கொண்டே இருக்கின்றது.

இங்கு பெண்களும் எல்லாத் துறையிலும் சாதிக்கலாம் என நிரூபித்தவள் ஒரு வறுமையான இந்து பிராமணப் பெண். பெண்களுக்கு இந்தியா முழுக்க பெரும் எடுத்துகாட்டாக இருந்தவள்...

https://www.facebook.com/share/p/1CKrkEEZ2k/

போற்றுவோம். 
சக 

kanmani tamil

unread,
Aug 12, 2025, 4:23:40 AMAug 12
to vallamai
இப்படியும் ஒரு ஆளுமை!!!
 
/// நேற்று ஒரு நிகழ்வு. காலை சுமார் 9.30 மணி.. தெரு ஓரமாக வாகனத்தை நிறுத்திவிட்டு, Stationary பொருட்கள் வாங்கிக் கொண்டு நடந்து வந்து கொண்டிருந்தேன். அப்போது ஒரு பெரியவரும் ரோடை Cross செய்து கொண்டிருந்தார். அவரை பார்த்திருக்கிறேன். தர்பூசணியை வண்டியில் வைத்து கூறுபோட்டு விற்பவர். சில சமயம் பலாப்பழமும். வண்டி அருகில் அவர் மனைவி அமர்ந்திருந்தார். மனைவிக்கும் தனக்கும் காலை டிபன் எதிரிலிருக்கும் சிறு ஹோட்டலில் வாங்கிக் கொண்டு வந்து கொண்டிருந்தார். அவர் நடுரோட்டில் வந்து கொண்டிருந்த போது, ஒரு ஸ்கூட்டர் வேகமாக வந்து அவரருகில் சடாரென்று பிரேக் போட்டு நின்றது.
ஸ்கூட்டரை ஓட்டிக் கொண்டு வந்தது இளம்பெண். கோபத்தோடு முகம் சிவக்க, அந்த பெரியவரை கடுமையான சொற்களால் திட்டிவிட்டு, வேகமாக சென்று விட்டார். என்ன தான் தவறு அந்தப் பெரியவர் மீது இருந்தாலும், அவ்வளவு மரியாதை குறைவாக அந்த பெண் திட்டி இருக்க வேண்டியதில்லை. ஸ்கூட்டர், அருகில் வந்து சட்டென்று நின்ற அதிர்ச்சியில், அவர் வாங்கி வந்த உணவுப் பொட்டலமும் கீழே விழுந்துவிட்டது. முகத்தில் வருத்தத்துடன், உணவு பொட்டலங்களை குனிந்து எடுத்துக் கொண்டு தன் கடையை நோக்கி சென்றார். இன்று அதே நேரத்தில், அங்கு எனக்கு இருக்கும் சூழ்நிலை. அவரிடம் பலாச்சுளைகளை வாங்கிக் கொண்டிருந்தேன். எனக்கு சுளைகளை கவரில் வைத்து கொடுக்கும் போது கூட, தெருவையே அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தார், யாரையோ எதிர்பார்த்துக் கொண்டு.
அதே பெண் தூரத்தில் ஸ்கூட்டரில் வருவதை பார்த்ததும், "ஒரு நிமிஷம் சார்" என்று என்னிடம் கூறிவிட்டு வந்து கொண்டிருந்த பெண்ணை நிறுத்தச் சொல்லி கையசைத்தார்.

அந்த இளம் பெண்ணும் முகத்தில் சற்று கலவரத்தோடு, நேற்று திட்டியதற்கு சண்டை போடப் போகிறாரே? என்று வண்டியை நிறுத்திவிட்டு, "என்ன?" என்று கோபமாக கேட்டாள். நான் கூட நேற்று நடந்ததற்கு ஒரு சத்தம் போடப் போகிறார் என்றுதான் நினைத்தேன்.
ஆனால் நடந்தது மனதை நெகிழ வைத்தது.

"தாயி, நேற்று போன அவசரத்தில் இதை தவற விட்டு விட்டு போய் விட்டாய்" என்று விலையுயர்ந்த செல்போனை தன் மடியில் இருந்து எடுத்துக் கொடுத்தார். அந்த இளம்பெண்ணுக்கு பேச்சே வரவில்லை. வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு "ஐயா இந்த போனை தொலைத்தில் இருந்து நிம்மதியே இல்லை. நான் பேங்கில் பணிபுரிபவள். முக்கியமான நெம்பர்ஸ் எல்லாம் இதில்தான் இருக்கிறது. மிக்க நன்றி" என்று கூறிவிட்டு கண் கலங்கினார். நேற்று அவ்வளவு அவமரியாதையாக பேசி இருக்க கூடாது. Work tension. என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் பேசிவிட்டேன்" என்று கைகூப்பினாள்".

"அட விடு தாயி. எல்லாருக்கும் கோபம் வர்றதுதான். இதை போய் பெரிசுபடுத்திக் கொண்டு. ஜாக்கிரதையாக போ தாயி" என்று அன்போடு அனுப்பி வைத்தார்.

"நேற்று அப்படி திட்டிய பெண்ணை, நாலு வார்த்தை கேட்டிருக்கலாமே" என்றேன்.

"சின்ன பொண்ணு சார்... இன்னும் கல்யாணம், காட்சி, குழந்தைன்னு ஆலவிருட்சமா வாழ வேண்டிய பொண்ணு சார். வயசாயி பக்குவம் வந்தா எல்லாம் சரியாயிடும். எனக்கு பேத்தி வயசு. என் பேத்தியா இருந்தா சண்டை போடுவேனா? நல்லா இருக்கட்டும் சார். நம்மை சுத்தி எல்லோரும் மனுஷங்கதான் சார். இருக்கிற வரைக்கும் அன்பா பாசமா இருந்துட்டு போவேமே." என்றார்.
என்னால் பேசவே முடியவில்லை. அசந்து விட்டேன்.

நம்மை சுற்றி எத்தனை நடமாடும் ஞானகுருக்கள்.....

இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்....///


தெரிவு: சக

kanmani tamil

unread,
Aug 13, 2025, 3:26:29 PMAug 13
to vallamai
விஞ்ஞானி டாக்டர் விக்ரம் சாராபாய்: 

/// இன்றைய இந்தியா விண்வெளியில் எவ்வளவோ சாதிக்கின்றது. வல்லரசு நாடுகளுக்கு இணையாக அதனால் வான்வெளியில் பாய முடிகின்றது. செயற்கைக் கோளை நிறுத்துதல், ஏவுகனை மூலம் அதைத் தகர்த்தல்,  கிரகம் விட்டு கிரகம் பாய்தல் என எந்த நாட்டுக்கும் இந்நாடு போட்டியாய் நிற்கின்றது.

இதற்கெல்லாம் அடித்தளமிட்டவன்... அந்த இயற்பியல் மனிதன்... அந்ந மாபெரும் விஞ்ஞானியின் பிறந்த நாள் இன்று...
டாக்டர் விக்ரம் சாராபாய், இந்திய அறிவியலின் தந்தை!!!

அகமதாபாத்தின் பிறப்பு ... அவர் குடும்பம் செல்வந்தமாயும் அதே நேரம் நாட்டுப்பற்று உள்ளதாகவும் திகழ்ந்தது. பல தலைவர்கள் அடிக்கடி வந்து சென்ற வீடு அது. 

அந்தப் பணக்காரக் குடும்பத்தில் பிறந்தார் விக்ரம். தன் ஆலைகளை நிர்வகிக்க லண்டன் சென்று படித்தும் வந்தார். ஆனால் மனம் அறிவியல் பால் திரும்பிற்று.

அந்நேரம் சர் சி.வி. ராமன் புகழ்பெற்ற விஞ்ஞானியாயிருந்தார் காஸ்மிக் கதிர்களை ஆய்வு செய்ய அவருடன் பணியாற்றினார். இமயமலை முதல் பல இடங்களில் ஆய்வுகளை அன்றே செய்தார்.

இயற்பியலுக்காக மறுபடியும் லண்டன் சென்று பட்டம் பெற்றார். மறுபடியும் அதே ஆய்வு... அகமதாபத்தில் அவரால் திறக்கபட்டது 'இயற்பியல் மையம்'.

அந்த மையம் பின்னர் சுதந்திரம் அடைந்தபின் காஷ்மீர், கொடைக்கானல், திருவனந்தபுரம் என பல இடங்களில் திறக்கபட்டது.

பின்னாளில் ராக்கெட் மையங்களாக மாறின... தும்பா முதலானவை அப்படித்தான்

முதலில் சாராபாய் தன் இயற்பியல் ஆய்வினை நூற்பாலை வகைக்கும் காஸ்மிக் கதி போன்ற வகைக்கும் இன்னும் சிலவற்றுக்கும் செய்து கொண்டிருந்தார். முதலில் வான்வெளி பக்கம் வரவில்லை.

விண்வெளிப் புரட்சி 1957களில் உலகில் தொடங்கிற்று. பல நாடுகள் விண்வெளி ஆய்வுக்குக் களமிறங்கின‌. 

இந்தியா விண்வெளி யுகத்துக்கு வந்தது. அமைதிப் புறாவான நேரு 1962 யுத்தத்துக்குப் பின்புதான் ராணுவம் பக்கம் திரும்பினார். அவருக்கு பின்பு இந்திரா யுகம் வந்தது.

இந்திரா விண்வெளித் திட்டங்களை முதலில் ஹோமி ஜஹாங்கீர் பாபா என்பவரிடம் ஒப்படைத்திருந்தார். பாபா அடிப்படையில் ஒரு அணுவிஞ்ஞானி.  ஆனால் ISRO என்ற அமைப்பின் தலைவராக அவர்தான் இருந்தார்.

பாபா திடீரென இறந்தார், அந்த மர்மம் இன்றுவரை தீரவில்லை. இந்தியாவின் அணுசக்தி தந்தையும் மிகப் பெரும் விஞ்ஞானியுமான அவரின் திடீர் இறப்பு அறிவியல் ரீதியாக பெரும் பின்னடைவு...

அந்த இடத்தை நிரப்ப பணிக்கப்பட்டார் சாராபாய். பாபாவின் இடத்தை மிக நுட்பமாக நிரப்பினார் அவர்.

ஆரியபட்டா எனும் இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் அவராலே வெற்றிகரமாக ஏவப்பட்டது. அந்நாளில் அது பெரும் சாதனை!

வெறும் சாமியார் தேசம், பாம்பாட்டி நாடு என கருதப்பட்ட தேசம் தன் செயற்கைக் கோளை அனுப்பிய பொழுது உலகம் திரும்பிப் பார்க்கத்தான் செய்தது

மாபெரும் அத்தியாயத்தை தொடக்கி வைத்தார் சாரபாய். நடக்கவே நடக்காது என்ற விஷயங்கள் அவராலே சாத்தியமாயின‌.

இவரின் சீட கோடிகள்தான் சதீஷ் தவானும், அப்துல் கலாமும்...

நல்ல விஞ்ஞானி அற்புதமான தேசபக்தியும் அறிவும் தரமும் நிறைந்த் விஞ்ஞானிகளை உருவாக்க முடியும் என்பதற்கு அவர் தான் எடுத்துக்காட்டு. 

இன்று அந்த மாமனிதனின் 103ம் பிறந்த நாள்

இந்தியாவில் ஏகப்பட்ட பல்கலைகழகமும் கல்வி நிலையங்களும் அவரால் உருவாயின. இந்திய மேலாண்மைக் கழகம் அவரால் உருவாக்கபட்டது. 

ஏகப்பட்ட கிராமங்களில் பெரும் கல்விப்புரட்சி அவரால் உருவானது.

அவர்வழி வந்த கலாமும் அவர்வழியிலே கல்வி போதித்தார். போதித்துக் கொண்டே இறந்தார்.

இந்தியாவினை அறிவியலில் உயரச் செய்து, அந்த தேசத்தை விண்வெளிக்கும் அழைத்துச் சென்ற அந்த மாமனிதனின் பிறந்தநாளில் தேசம் அவருக்கு ஒன்றுபட்ட மனதுடன் அஞ்சலி செலுத்துகின்றது. 

அம்மனிதன் தொடங்கிவைத்த யுகமே இன்று வான்வெளி முழுக்க இந்திய செயற்கைக் கோள்களும், ராணுவம் முழுக்க பலமான ஏவுகனைகளுமாய் நிற்கின்றது. 

சந்திராயனும் நிலாவினை நெருங்கிக் கொண்டிருக்கின்றது. சந்திரனின் ஒரு பகுதிக்கு ஏற்கனவே உலக நாடுகளால் விக்ரம் சாராபாயின் பெயர் சூட்டப்பட்டிருக்கின்றது.

விக்ரம் சாராபாய்க்கு அஞ்சலி செலுத்தியபடியே அடுத்த தலைமுறைக்கான வான்வெளி ஆய்வில் களமிறங்கி இருகின்றது இந்தியா.

சாராபாய், சதீஷ் தவான், கலாம் வரிசையில் பலர் வந்தார்கள் இன்னும் வருவார்கள் தேசம் அவர்களால் நலமும் வளமும் பெறும்.

இன்றைய மாணவர்களிடம் கொண்டு சேர்க்க வேணடிய பெரும் விஞ்ஞானி சாராபாய். இம்மாதிரி பெரும் விஞ்ஞானிகளும் தேசாபிமானிகளும் மாணவர்களுக்கு வழிகாட்டியாய் இருத்தல் வேண்டும். அவர்களை மாணவ சமூகம் படித்தல் வேண்டும்.

வெற்று அரசியல் கும்பலும், வெறுப்பு அரசியலும், சினிமாவும் இதர டிவி குப்பைகளும் மாணவ சமூகத்துக்கு ஒருநாளும் நல்ல விளைவுகளை கொடுக்காது, அதனால் தேசத்துக்கும் நல்ல முத்துக்கள் கிடைக்காது.

விக்ரம் சாரபாயின் பிறந்த நாளை ஒவ்வொரு பள்ளியும் கல்லூரியும் பல நாட்கள் கொண்டாடி; அப்பெருமகனை மாணவர் மனதில் பதியச் செய்தல் வேண்டும். 

ஆனால் மொத்த தமிழகத்தையும் தேடிப் பார்க்கின்றேன், அப்படி ஒரு மனிதன் இருந்தான் என்றோ அவன் பல கல்விப் புரட்சியினையும் விஞ்ஞான புரட்சியினையும் செய்தான் என்றோ யாருக்கும் நினைவில்லை.

மாநில கல்வி அமைச்சுக்கும் அப்படி ஒருவன் இருந்ததாகத் தெரியவில்லை...
அவர்கள் அப்படித்தான்...

கல்விக் கூடங்களும் பொறுப்பான ஆசிரியர்களும் அந்தப் பெருமகனை தேசப் பற்றோடு மாணவர்கள் மத்தியில் பதியச் செய்தலே அவருக்கான உண்மையான அஞ்சலி.

அதில் ஒரு மாணவனாவது கலாம் போல் வருவான், கோடி பேர் செய்ய வேண்டிய விஷயத்தை அவன் ஒருவன் செய்வான்

விக்ரம் சாராபாய் என்பது இந்தியாவினை விண்வெளிக்கு இழுத்துச் சென்ற சக்தியின் பெயர். அம்மானிதனின் ஆன்மா எக்காலமும் இத்தேசத்துடன் இருந்து வழிநடத்திக் கொண்டே இருக்கும்.

https://www.facebook.com/share/p/1BRyCrsDGe/


///இன்று ஆகஸ்ட் 12, "இந்திய விண்வெளி ஆய்வின் தந்தை" விக்ரம் சாராபாய் பிறந்த தினம்.

விக்ரம் சாராபாய் 1919, ஆகஸ்ட் 12 அன்று அகமதாபாத்தில் பிறந்தார். இவரது பெற்றோர் அம்பாலால் சாராபாய், சரளா தேவி. மிகப் பெரிய செல்வந்தர் குடும்பம் இவர்களுடையது. உயர் படிப்பை லண்டனில் முடித்தவர், பெங்களூரு இந்திய அறிவியல் கழகத்தில் சர் சி.வி. ராமனிடம் ஆராய்ச்சியாளராகச் சேர்ந்தார். காஸ்மிக் கதிர்களை ஆராய்வதற்காக நாடு முழுவதும் கண்காணிப்பு மையங்களை அமைத்தார். பெங்களூரு, புனே, இமயமலைப் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஆய்வு மையங்களில் தாமே உருவாக்கிய கருவிகளைப் பொருத்தினார்.

1957-ம் ஆண்டு சோவியத் யூனியன் ஸ்புட்னிக் 1 செயற்கைக்கோளை முதல் முறையாக பூமியின் சுற்றுப்பாதைக்கு அனுப்பியது. செயற்கைக்கோள்கள் மூலம் தகவல் தொடர்பு, வானிலை முன்னறிவிப்பு, இயற்கை வளங்களை ஆராய்வது போன்றவற்றில் மிகப் பெரிய சமூக, பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்பதை உணர்ந்தார். இவரது அகமதாபாத் இயற்பியல் ஆராய்ச்சி மையம் விண்வெளி அறிவியல், விண்வெளி தொழில்நுட்ப ஆராய்ச்சியில் முன்னோடியாகத் திகழ்ந்தது.

ராக்கெட் தொழில்நுட்பத்துக்கு விக்ரம் சாராபாய் தலைமை வகித்தார். இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் ஆரியபட்டா விண்ணில் செலுத்தப்படுவதற்கு முழுமையான காரணமாக இருந்தார்.

இந்தியாவின் செயற்கைக்கோள் தொலைக்காட்சி ஒளிபரப்பின் வளர்ச்சியில் முன்னோடியாக சாராபாய் இருந்தார். இதன் மூலம் 24 ஆயிரம் கிராமங்களில் 50 லட்சம் பேருக்குக் கல்வியை எடுத்துச் செல்ல உதவினார். இந்திய அணுக்கரு இயலின் தந்தை ஹோமி ஜஹாங்கிர் பாபா மறைந்த பிறகு, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (ISRO) தலைவராக இருந்து, அதை மேலும் விரிவுபடுத்தினார். அறிவியல் கல்வி குறித்து ஆழ்ந்த அக்கறை கொண்டிருந்தார். அதனால் நாடு முழுவதும் சமூக அறிவியல் மையங்களைத் தோற்றுவித்தார்.

இந்தியர்கள் உயர் கல்வி பெறுவதற்காக அகமதாபாத்தில் இந்திய மேலாண்மைக் கழகத்தை (IIM) உருவாக்கினார். கடினமான உழைப்பாளி. மிக உயரிய பதவிகளில் இருந்தாலும் எளிதில் அணுகக்கூடியவராக இருந்தார். எல்லோரையும் புன்னகையுடன் வரவேற்பார்.

1971-ம் ஆண்டு டிசம்பர் 30 அன்று தூக்கத்தில் உயிர் துறந்தார். 1974-ம் ஆண்டு சிட்னியில் உள்ள சர்வதேச வானியல் ஒன்றியம், சந்திரனில் உள்ள ஒரு பள்ளத்துக்கு விக்ரம் சாராபாயின் பெயரைச் சூட்டியது. 1966-ல் பத்மபூஷண் விருதும், 1972-ல் பத்ம விபூஷண் விருதும் அவரைச் சிறப்பித்தன.///

kanmani tamil

unread,
Aug 21, 2025, 1:37:13 AMAug 21
to vallamai
நடத்திரங்களின் விஞ்ஞானி சுப்பிரமணிய சந்திரசேகர்:

///அவர் கடந்த நூற்றாண்டின் மிகப் பெரும் வானியல் விஞ்ஞானி. அதுவும் தமிழ் வம்சாவளி... தமிழ் விஞ்ஞானி. நோபல் பரிசுபெற்ற பெரும் விஞ்ஞானி. ஆனால் அப்படி ஒரு விஞ்ஞானி இருந்தான் எனத் தமிழகத்தில் யாருக்கும் தெரியாது. 

அந்த விஞ்ஞானியின் பெயர் சுப்பிரமணிய சந்திரசேகர்

அவர் தமிழக பிராமண குடும்பத்து பிறப்பு.. 1910ம் ஆண்டு பிறந்தார். பிரபல அறிவியல் மேதை சர் சி.வி. ராமன் இவரின் சித்தப்பா. இவரின் குடும்பம் பிரிட்டிஷ் இந்தியாவின் லாகூரில் பணியாற்றியதால் அங்கு பிறந்தார் பின் இளம் வயதில் சென்னை திரும்பி சென்னை திருவல்லிக்கேணியில் தான் வளர்ந்தார்.

அவர் பட்டப்படிப்பு வரை சென்னையில் தான் படித்தார். சித்தப்பா சர் சி.வி.ராமன் நோபல் வாங்கும்பொழுது அவருக்கு வயது 18.

1920ல் ஆர்னோல்ட் சம்மர்ஃபெல்ட் எனும் விஞ்ஞானி சென்னை வந்தபொழுது அவரின் உரையால் கவரபட்டு இவரும் இயற்பியல் கட்டுரைகள் எழுத ஆரம்பித்தார். அது உலகளவில் கவனம் பெற; 1930ம் ஆண்டு லண்டன் கேம்பிரிட்ஜ் கழகம் இவரை உபகாரச் சம்பளத்துடன் சேர்த்துக் கொண்டது. 

சீனிவாச ராமானுஜம் போல அங்கு பிரகாசித்தார் சந்திரசேகரன். சீனிவாச ராமானுஜனுக்குப் பின் ராயல் சொசைட்டி அங்கீகாரம் பெற்ற இரண்டாம் தமிழர் அவர்தான். 

அவரின் ஆய்வு முடிவுகள் அவரை விஞ்ஞானி என ஒப்புகொள்ள வைத்தன. வானியல், நட்சத்திரங்களின் அமைப்பு, அவற்றின் உட்பொருள், அது எப்படி எரிகின்றது?, சக்தி என்ன? எனப் பெரும் ஆய்வுகளைச் செய்து நட்சத்திரங்களுக்கு இடையேயான தூரத்தை அளப்பது உள்ளிட்ட முடிவுகளைச் சொன்னார். 

முதன் முதலில் நட்சத்திரங்களின் எல்லை, தூரம் போன்றவற்றை வரையறுத்தவர் அவர்தான். இன்றுவரை அது Chandrasekhar Limit என்றே தான் அழைக்கபடுகின்றது.

நட்சத்திர எடை, நட்சத்திரங்களின் பருமன், அவை எப்படித் தோன்றி மறையும் என்பதையெல்லாம் தன் ஆய்வில் சொன்னார். 

உலகப் பெரும் போர்களால் தடைபட்ட அவரின் ஆய்வு 1950க்குப் பின் பெரும் வேகம் எடுத்தது. 1983ல் அவர் நோபல் பரிசும் பெற்றார்.

இதுவரை நோபல் பரிசு வாங்கிய இரு தமிழர்களில் அவரும் ஒருவர். சித்தப்பா சர் சி.வி.ராமனை போல் இவரும் வாங்கினார்.

தன் ஆய்வுகளைத் தன் அந்திமக் காலமான 1995 வரை செய்து கொண்டே இருந்தார். 1930களில் அவர் ஆய்வினைத் தொடங்கிய பொழுது இப்போதிருக்கும் செயற்கைக்கோள், செயற்கைக்கோள் டெலஸ்கோப் இன்னும் பல விஷயம் கிடையாது. ஆனால் இன்று அதன் மூலம் நிரூபிக்கபடும் முடிவுகள் சந்திரசேகரின் ஆய்வின் துல்லியத்தைச் சொல்கின்றன‌. 

இன்று வானியலின் நட்சத்திரம், சூப்பர் நோவா, கரும்புள்ளி, டார்க் எனர்ஜி என எவ்வளவோ விஷயங்கள் விவாதிக்கபடுகின்றன. அதையெல்லாம் தொடங்கி வைத்தவரும் அந்த ஆய்வுக்கு அடித்தளமிட்டவரும் ஒரு இந்திய தமிழர் என்பது எல்லோருக்கும் பெருமையான விஷயம். 

"நடத்திரங்களின் விஞ்ஞானி" "கடவுளின் விஞ்ஞானி" என்றெல்லாம் கொண்டாபடும் அளவு எவ்வளவோ வானியல் ரகசியங்களை அவர் திறந்து வைத்தார்.

அவர் காட்டிய அடித்தளத்தில் இன்று மாபெரும் வானியல் ஆய்வுகள் நடக்கின்றன. அந்த அளவு மிக மிகத் துல்லியமான ஆராய்ச்சி அவருடையது. 

வானலோகத்தை மானிடருக்குத் திறந்து வைத்தவர் என அவர் கொண்டாடபடுகின்றார். 

எப்படி சாதித்தார் சந்திரசேகரன்?

சர் சி.வி.ராமன் வானமும் கடலும் நீல நிறமாக இருப்பதன் ரகசியத்தை தன் ஆய்வு மூலம் சொன்னார். சூரியக் கதிரில் இருந்து வரும் 7 நிறங்கள் உண்டு என்றும் அதில் நீல நிறம் அதிக தூரம் சிதறடிக்கபடுவதையும் சொல்லி நிரூபித்து நோபல் வாங்கினார். 

இதனை அவர் இந்துக்களின் புராணச் செய்தியான சூரிய பகவான் 7 குதிரை பூட்டிய தேரில் வருவதையும்; ராமனும் கண்ணனும் நீலநிறம்; அன்னை தேவியும் நீலவேணி என சொல்லபட்டதில் இருந்து எடுத்துக் கொண்டார். 

இந்துமதம் அவருக்கு வழிகாட்டிற்று. புராணம் சொன்னதை அவர் விஞ்ஞான பூர்வமாக நிரூபித்தார்.

அப்படியே இந்துக்கள் வாழ்வாங்கு வாழ்ந்தவர்களை துருவன், அருந்ததி என பெயரிட்டுக் காட்டியதையும் இன்னும் பல வகையான நட்சத்திரங்கள் இந்திய வானவியலிலும் ஜோதிடத்திலும் இருப்பதையும் சிறுவயதில் இருந்தே கவனித்து வளர்ந்தவர் சந்திரசேகரன். 

இந்து ஜோதிட அறிவும் புராணங்களுமே அவருக்குள் விதையினை வளர்த்தன. அது கனவாக எழுந்தது

நட்சத்திரம் தோன்றும், நிலைக்கும், மறையும் என்பதை இந்துக்களின் புராணங்கள் சொல்லும். அதைத்தான் விஞ்ஞான ஆய்வாக செய்து நிருபித்து நோபல் பரிசும் பெற்றார் சந்திரசேகர்.

சூரியனுக்கும் பூமிக்கும் இடைபட்ட தூரம், சந்திரனுக்கும் பூமிக்கும் இடைபட்ட தூரம் என மிகத் துல்லியமாகக் கணித்து பாடலிலும் மந்திரங்களிலும் வைத்திருந்த இந்துமத அறிவியல் அவருக்குள் விருட்சமானது.

அந்த தூரத் தொடர்பு தான் நட்சத்திரங்களுக்கு இடையிலும் வரும் என்பதை துல்லியமாக அவரால் உணரமுடிந்தது

கருந்துளை என்பது இந்துமதத்தில் சொல்லபட்ட விஷயம் என்பதால் அவரால் எளிதில் அதனை கணிக்க முடிந்தது, கீதையின் 11ம் அத்தியாயமே அதுதான். 

உலகம் கோள வடிவ பிம்பத்தில் தோன்றியது. இங்கு எல்லாமே கோள் வடிவம் என்பதை ஹிரண்ய கர்பம் எனும் தங்கமுட்டையின் தத்துவத்தை சொல்லியது இந்துமதமே. இப்பொழுது விஞ்ஞானம் அதனை ஒப்புகொள்கின்றது.

இதுவரை தமிழர் பெற்ற இரு நோபல் பரிசுகளும் இந்து நம்பிக்கைகளை ஆதாரமாய்க் கொண்டவை என்பதுதான் கவனிக்க வேண்டிய விஷயம், அப்படிப்பட்ட தமிழகம் இது

இந்துமதம் என்பது வெறும் மூடநம்பிக்கை கொண்டதல்ல, அது கட்டுகதையுமல்ல‌

இந்துமதம் விஞ்ஞானத்தை முழுக்கப் புரிந்து அதனை அக்கால மக்களுக்காகப் பல லவுகீக விஷயங்களோடு கலந்து சொல்லி புரியவைக்க முயன்ற முழு ஞானமதம். 

அதன் தாத்பரியம் முழுக்க பிரபஞ்ச ரகசியமும் அதன் சூட்சுமமுமே...

அதனைப் புரிந்த ரிஷிகளும் ஞானிகளும் மக்களுக்கு புரியும்படி போதித்து சில வாழ்வியல் முறைகளைச் சொன்னார்கள் அதுதான் இந்துமதம் ஆயிற்று. 

அதனாலே எல்லா விஞ்ஞான முடிவும் இந்துமதத்திலே சங்கமமாகின்றன. இன்று விஞ்ஞானம் சொல்வதை எல்லாம் என்றோ சொன்னது இந்துமதம். 

இன்று ஐன்ஸ்டீன் முதல் டெஸ்லா, ராமன் என எல்லா விஞ்ஞானிகளும் சொன்னதைத் தான் இந்துமதமும் என்றோ சொன்னது. அதனை சந்திரசேகரன் ஆதாரத்தோடு நிருபித்தார்.

இன்று அந்த சுப்பிரமணிய சந்திரசேகருக்கு நினைவுநாள்

சென்னையில் பிறந்த அந்த வானியல் மேதைக்கு சென்னையில் அடையாளமோ சிலையோ சிறப்போ ஏதுமில்லை....

ஒருகாலம் வரும் அப்பொழுது உண்மையான இந்தியருக்கும், இந்நாட்டுக்கு பெருமை சேர்த்தவர்களுக்கும் அழியா அடையாளம் செய்யபடும்.

அன்று சுப்பிரமணிய சந்திரசேகருக்கு சென்னையில் பெரும் அடையாளம் நிறுவப்படும். அதுவரை அயல்நாட்டினர் மட்டும் அவர் பெருமை பேசட்டும்.

இப்படி சொந்த மண்ணில் அந்தப் பெரும் விஞ்ஞானி புறக்கணிக்கபடவும், மாகாணப் பாடத் திட்டத்தில் அவன் சாதனையும் கண்டுபிடிப்பும் இடம்பெறாமலே போகவும் காரணம் என்னவென்றால் விஷயம் எளிது.....

இங்கு அந்த சாதியில் இந்துவாய் பிறந்ததுதான் அவன் பெற்ற சாபம் என்றாலும் உலகளவில் சாதிக்க‌ அவன் பெற்ற வரமும் அதுதான். அது ஒன்றுதான்.///


தெரிவு: சக 

kanmani tamil

unread,
Aug 28, 2025, 11:48:45 PM (7 days ago) Aug 28
to vallamai
நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை:

///சுதந்திரப் போராட்ட வீரரும், தமிழ் அறிஞருமான நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை (V.Ramalingam Pillai) நினைவு தினம் இன்று.

நாமக்கல் அடுத்த மோகனூரில் (1888) பிறந்தார். தாய் கூறிய இதிகாச, புராணக் கதைகளைக் கேட்டு வளர்ந்தார். பொய் பேசக்கூடாது, நல்லவனாக விளங்க வேண்டும் என்ற தாயின் அறிவுரை அவர் மனதில் ஆழமாக பதிந்தது.

நாமக்கல்லில் தொடக்கக் கல்வி, கோவை மெட்ரிக் பள்ளியில் உயர்நிலைக் கல்வி, திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் பட்டப்படிப்பு பயின்றார். எழுதுவது, ஓவியம் வரைவதில் சிறந்து விளங்கினார். விடுதலைப் போராட்ட இயக்கத்தில் 1906இல் இணைந்தார்.

தலைமைக் காவலரான தந்தை வெங்கடராமன், இவரையும் காவல் துறையிலேயே சேர்த்துவிட பெருமுயற்சி எடுத்தார். இவருக்கு விருப்பம் இல்லாததால் வீட்டைவிட்டு வெளியேறினார். 15 நாட்கள் வெளியே சுற்றித் திரிந்து வீடு திரும்பினார்.

அவரை மேலும் வற்புறுத்தாமல் நாமக்கல் வட்டாட்சியர் அலுவலகத்தில் எழுத்தர் பணி வாங்கித் தந்தார் தந்தை. அதிலும் மனம் செல்லவில்லை. பணியை உதறினார். தந்தை முயற்சி எடுத்து, ஒரு பள்ளியில் ஆசிரியர் வேலை பெற்றுத் தந்தார். இவர் அடிக்கடி அரசியல் கூட்டங்களில் கலந்துகொண்டு பேசியதால், வேலையில் இருந்து நீக்கப்பட்டார்.

திலகர் போன்றவர்களின் தீவிரப்போக்கால் ஈர்க்கப்பட்டவர், முழு மூச்சாக அரசியலில் இறங்கினார். பின்னர் காந்தியின் அகிம்சை, அறவழிக் கொள்கைகளை ஏற்றுக்கொண்டார். அறப்போராட்டத்தால் மட்டுமே நாடு விடுதலை அடையும் என்ற முடிவுக்கு வந்தார். காங்கிரஸில் இணைந்தார்.

எளிய சொற்களால் கவிதை பாடி, தேசிய, காந்தியக் கொள்கைகளைப் பரப்பினார். தேசபக்திப் பாடல்கள் பாடியும், ஆவேச உரைகள் நிகழ்த்தியும் இளைஞர்கள் மனதில் எழுச்சியை ஏற்படுத்தினார். ஏராளமான கவிதைகள் எழுதிக் குவித்தார். ‘தேசியக் கவி’ என்று போற்றப்பட்டார்.

திருச்சி மாவட்ட காங்கிரஸ் செயலாளர், கரூர் வட்டார காங்கிரஸ் தலைவர், நாமக்கல் வட்டார காங்கிரஸ் தலைவர் ஆகிய பதவிகளை வகித்தார். 1932இல் உப்பு சத்தியாகிரகத்தில் கலந்துகொண்டு சிறை சென்றார். உப்பு சத்தியாகிரகத் தொண்டர்களின் வழிநடைப் பாடலுக்காக இவர் இயற்றித் தந்ததுதான் ‘கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது’ என்ற பாடல்.

 மலைக்கள்ளன், மரகதவல்லி, கற்பகவல்லி, காதல் திருமணம் உள்ளிட்ட பல நாவல்களை எழுதியுள்ளார். இவரது ‘மலைக்கள்ளன்’ நாவல், எம்ஜிஆர் நடிப்பில் திரைப்படமாக வந்தது. இசை நாவல், கட்டுரை, சுயசரிதம், புதினம், திறனாய்வு, நாடகம், கவிதைத் தொகுப்பு, சிறு காப்பியம், மொழிபெயர்ப்பு என இலக்கியத்தின் அனைத்துக் களங்களிலும் முத்திரை பதித்தவர். மொத்தம் 66 நூல்களை எழுதியுள்ளார்.

நாடு விடுதலை அடைந்த பிறகு தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞராக நியமிக்கப்பட்டார். பத்மபூஷண் விருது பெற்றார். சாகித்ய அகாடமியின் தமிழ்ப் பிரதிநிதியாக பொறுப்பு வகித்தார்.

தேசியக் கவிஞர், காந்தியக் கவிஞர், காங்கிரஸ் புலவர், அரசவைக் கவிஞர் என்றெல்லாம் போற்றப்பட்ட நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை 84ஆவது வயதில் (1972) காலமானார்.///


தெரிவு:சக



Reply all
Reply to author
Forward
0 new messages