பரிபூஜந பஞ்சாமிர்த வண்ணம் (1891)

43 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Nov 30, 2022, 12:22:41 PM11/30/22
to Santhavasantham

பரிபூஜந பஞ்சாமிர்த வண்ணம் (1891)
-----------------------------------------------------------------------

தமிழில் வண்ணப் பாடல்களைப் பெரிதும் பாடியவர் அருணகிரிநாதர். அதன் பின்னர் பலர் வண்ணப்பாடல்களை எழுதலாயினர். வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அப்பாவகைக்கு இலக்கணமாக, வண்ணத்தியல்பு பாடினார். சிரவையாதீனத்துப் பெரும்புலவர் ப. வெ. நாகராசன் உரையெழுதி வெளியிட்டார். தண்டபாணி சுவாமிகள், பாம்பன் சுவாமிகள் இருவரும் முருகனைப் பல்லாயிரம் பாடல்களால் 19-ம் நூற்றாண்டில் புகழ்ந்து பாடிய கவிஞர்கள்.

பஞ்சாமிர்த வண்ணம் (1891), பாம்பன் சுவாமிகள் பாடல்:
http://mscherweroyar.blogspot.com/2008/06/blog-post_1007.html
https://kaumaram.com/pamban/panchamirthavannam_u.html   (உரை)

பஞ்சாமிர்த வண்ணம் செவிகுளிரக் கேட்க:
https://youtu.be/07kBAboYZd4 மயிலை சற்குருநாத ஓதுவார்
https://youtu.be/JAzUttA-eQc டி. எல். மகராஜன் பாடுகிறார்
https://youtu.be/TX-KZHYayF0 திருப்பூர் சோதரிகள்

நான்மறைகள், திராவிட மொழிகள், ... ஆராய்வதில் மொழியியல் அறிஞர் கைக்கொள்ளும் முறை ஒன்று உண்டு. தொகைம மொழியியல் (Corpora Linguistics) என்னும் துறை. 17-ம் நூற்றாண்டில் தமிழில் துணைவினைகள் (Auxiliary Verbs) இயங்குதலைத் தமிழ் இலக்கணிகள் கண்டு எழுதலாயினர். 19-ம் நூற்றாண்டில் தமிழில் உள்ள எல்லா வெண்பாக்களையும் ஆராய்ந்து ஓசைபற்றி ஒரு நுட்பமான விதியை பாம்பன் சுவாமிகள் விளக்கினார். வெண்பா இயற்றுவோருக்குப் பயன்தர வல்லது. https://madhuramoli.com/விளாங்காய்ச்சீர்-விளங்/

நா. கணேசன்


N. Ganesan

unread,
Jul 31, 2023, 3:52:59 PM7/31/23
to Santhavasantham
<<<
தலைப்பு : சிற்றிதழ்கள்.!

 இடைமறியா வாழும் இதழ்
 (நேரிசை வெண்பா)*
சிற்றிதழ்கள் இன்று சிறப்பில்லை! காரணம்
வர்த்தக *ரீதியாக* வாழ்வதே - -- சற்று
படைப்பாளி நோக்கம் புரிந்து மதித்தால்
இடைமறியா வாழும் இதழ்.

- கலைமாமணி,  தமிழ்ச்செம்மல், அகவை முதிர்ந்தத் தமிழறிஞர் மு.பெ.இராமலிங்கம்

மருத பாவரங்கம்!
தலைப்பு : கண்ணதாசன் கவிதைகள்.

 போதையில் சொன்ன பொருள்
 (நேரிசை வெண்பா)
*கண்ணதாசன்* யாத்த கவிதைகள் யாவுமே
எண்ணங்கள் தோய்ந்த எழுத்துகள் - கண்ணனவன்
கீதையில் பாடிய கீர்த்தனையில் இல்லையிவன்
போதையில் சொன்ன பொருள்.!

- கலைமாமணி,  தமிழ்ச்செம்மல், அகவை முதிர்ந்த தமிழறிஞர் மு.பெ.இராமலிங்கம்
>>>

தமிழறிஞர் மு. பெ. இராமலிங்கம் ஐயா அவர்கட்கு,

வணக்கம். நலம் விழைகிறேன். உங்களுக்கு சரளமாக வெண்பா இயற்றுவது இயலுகிறது. வாழ்க.
ஒரு குறிப்பு வழங்க ஆவல்.

(1) சிற்றிதழ்கள் இன்று சிறப்பில்லை! காரணம்
வர்த்தக *ரீதியாய்*  வாழ்வதே

ரீதியாக >> ரீதியாய் என மாற்றினால் ஓசை சிறக்கும்.
இரண்டாம் வெண்பாவிலும், கண்ணதாசன் பெயரை வகையுளி ஆக்குவது நீண்ட மரபு.

பாம்பன் சாமிகள் தந்த வெண்பா விதப்புவிதி:
நான்மறைகள், திராவிட மொழிகள், ... ஆராய்வதில் மொழியியல் அறிஞர் கைக்கொள்ளும் முறை ஒன்று உண்டு. தொகைம மொழியியல் (Corpora Linguistics) என்னும் துறை. 17-ம் நூற்றாண்டில் தமிழில் துணைவினைகள் (Auxiliary Verbs) இயங்குதலைத் தமிழ் இலக்கணிகள் கண்டு எழுதலாயினர். 19-ம் நூற்றாண்டில் தமிழில் உள்ள எல்லா வெண்பாக்களையும் ஆராய்ந்து ஓசைபற்றி ஒரு நுட்பமான விதியை பாம்பன் சுவாமிகள் விளக்கினார். வெண்பா இயற்றுவோருக்குப் பயன்தர வல்லது. (1) https://madhuramoli.com/விளாங்காய்ச்சீர்-விளங்/


நான்மறைகள், திராவிட மொழிகள், ... ஆராய்வதில் மொழியியல் அறிஞர் கைக்கொள்ளும் முறை ஒன்று உண்டு. தொகைம மொழியியல் (Corpora Linguistics) என்னும் துறை. 17-ம் நூற்றாண்டில் தமிழில் துணைவினைகள் (Auxiliary Verbs) இயங்குதலைத் தமிழ் இலக்கணிகள் கண்டு எழுதலாயினர். 19-ம் நூற்றாண்டில் தமிழில் உள்ள எல்லா வெண்பாக்களையும் ஆராய்ந்து ஓசைபற்றி ஒரு நுட்பமான விதியை பாம்பன் சுவாமிகள் விளக்கினார். வெண்பா இயற்றுவோருக்குப் பயன்தர வல்லது.

(2) விளங்காயும் விளாங்காயும் - பேரா. இராம. சுப்பிரமணியன் (வெண்பா இயற்றும் மரபு)
http://nganesan.blogspot.com/2018/08/rama-subramaniyan-vilangaayum.html

(3) வெண்பாவில் விளாங்காய்ச் சீர் - புலவரேறு சீனிவாசன் அவர்களின் திருக்குறள் முன்னுரையிலிருந்து
https://nganesan.blogspot.com/2018/07/venpavil-vilaangaayc-ciir-vilakku.html

இம்மூன்று கட்டுரைகளையும் வாசிக்க வேண்டுகிறேன். பின்னர் உங்கள் கருத்தறிய ஆவல்.

நா. கணேசன்

kanmani tamil

unread,
Aug 1, 2023, 12:29:46 AM8/1/23
to vall...@googlegroups.com

தமிழ் வல்லுநர் இளம்பூரணர், பரிமேலழகர் உரைகளுக்கு வலிந்து பொருள் கொள்வதுடன்; தம் கருத்தைத் திருவள்ளுவரிடம் ஏற்றுகின்றனர்.   

செய்யுள் பயிற்சி நாப்பழக்கத்தால் தான் நம்பிக்கை ஏற்படுத்தும். ‘நேர்நிரை இணைந்த நிரையசை நடுவிலுள்ள காய்ச்சீருக்கு’ விளாங்காய்ச்  சீர் என்று தனிப்பெயர் கொடுத்து வழங்குவது; நினைவிற் கொண்டு பயில மாணவர் பின்பற்றும் நடைமுறையே. அதை நூலில் சொல்லித்; தவிர்ப்பது  சரி என்ற கருத்தை நிலைநாட்டுவது; தமிழ்ச்செய்யுள் வாசிப்புப்பயிற்சி  போதாததால் ஏற்பட்ட நம்பிக்கைக் குறைவைக்  காட்டுகிறது. 

மக்கள் முயற்சிச்சுருக்கம் காரணமாகவும், சோம்பேறித்தனம் காரணமாகவும் தத்தம் பேச்சுமொழியில் பல மாற்றங்களைத் தம்மை அறியாமலேயே ஏற்படுத்தி விடுகின்றனர் என்ற; உலக முழுமைக்கும் பொதுவான மொழியியல் கொள்கை; செய்யுள் வாசிப்பிற்கும் ஏற்றதே. பெருந்தமிழ் ரசிகர்களும் இதற்கு விதிவிலக்கல்லர்.

  செப்பலோசை பல நுட்பமான நெளிவு சுளிவுகளை உள்ளடக்கியது. வெண்பாவில் பிள்ளையுடன் தாய் பேசும் செப்பலோசை கொஞ்சும்;     ஆசிரியரின் செப்பலோசை அறிவுறுத்தும்; பாட்டிகதையின் செப்பலோசை  நீளும்; பக்தனின் செப்பலோசை உருகும்; இப்படி இன்னும் பல. இதனால் தொல்காப்பியரும், அமிதசாகரரும்  சொல்லாத கருத்தை விதியாகத் திணிப்பது தேவையற்றது.

பாவலர் மா.வரதராசனும், ‘வல்லமை’ மின்னிதழ் நிறுவனர் திரு.அண்ணாகண்ணனும் இப்புதுக்கருத்து தேவையற்றது என்கின்றனர்.

சக

 

பிறதுறைசார் தமிழரின் மொழிப்பற்றும், மரபுக்கவிதை ஈடுபாடும்,    படைப்பாக்கமும் மிகுந்த மகிழ்ச்சியையும், மனநிறைவையும் தருகின்றது.



--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUfwZc6svxJwe%3DY2A_j52uCFMhCuYAxW4CugkVtJ9Goy7A%40mail.gmail.com.

N. Ganesan

unread,
Aug 2, 2023, 5:50:08 AM8/2/23
to vall...@googlegroups.com
பாவலர் மா. வரதராஜன் போன்றோர் initial reaction இயல்புதான். அதை வைத்துக்கொண்டு, திருக்குறளில் இருக்கிறது, யாப்பருங்கலக்காரிகையில் இருக்கிறது என்பதெல்லாம் பிழையுடைய கருத்து. எனவே, பாவலர் மா. வரதராஜன், பாம்பன் சாமிகள் தந்த வெண்பா விதியை மறுதலித்து, அது தவறு எனக் காட்டிவிட்டார் என்பது, தமிழ் நூல்களை ஆய்ந்தால் ஏற்குமாறில்லை.~NG

On Mon, Jul 31, 2023 at 11:29 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:

தமிழ் வல்லுநர் இளம்பூரணர், பரிமேலழகர் உரைகளுக்கு வலிந்து பொருள் கொள்வதுடன்; தம் கருத்தைத் திருவள்ளுவரிடம் ஏற்றுகின்றனர்.   

செய்யுள் பயிற்சி நாப்பழக்கத்தால் தான் நம்பிக்கை ஏற்படுத்தும். ‘நேர்நிரை இணைந்த நிரையசை நடுவிலுள்ள காய்ச்சீருக்கு’ விளாங்காய்ச்  சீர் என்று தனிப்பெயர் கொடுத்து வழங்குவது; நினைவிற் கொண்டு பயில மாணவர் பின்பற்றும் நடைமுறையே. அதை நூலில் சொல்லித்; தவிர்ப்பது  சரி என்ற கருத்தை நிலைநாட்டுவது; தமிழ்ச்செய்யுள் வாசிப்புப்பயிற்சி  போதாததால் ஏற்பட்ட நம்பிக்கைக் குறைவைக்  காட்டுகிறது. 

மக்கள் முயற்சிச்சுருக்கம் காரணமாகவும், சோம்பேறித்தனம் காரணமாகவும் தத்தம் பேச்சுமொழியில் பல மாற்றங்களைத் தம்மை அறியாமலேயே ஏற்படுத்தி விடுகின்றனர் என்ற; உலக முழுமைக்கும் பொதுவான மொழியியல் கொள்கை; செய்யுள் வாசிப்பிற்கும் ஏற்றதே. பெருந்தமிழ் ரசிகர்களும் இதற்கு விதிவிலக்கல்லர்.

  செப்பலோசை பல நுட்பமான நெளிவு சுளிவுகளை உள்ளடக்கியது. வெண்பாவில் பிள்ளையுடன் தாய் பேசும் செப்பலோசை கொஞ்சும்;     ஆசிரியரின் செப்பலோசை அறிவுறுத்தும்; பாட்டிகதையின் செப்பலோசை  நீளும்; பக்தனின் செப்பலோசை உருகும்; இப்படி இன்னும் பல. இதனால் தொல்காப்பியரும், அமிதசாகரரும்  சொல்லாத கருத்தை விதியாகத் திணிப்பது தேவையற்றது.

பாவலர் மா.வரதராசனும், ‘வல்லமை’ மின்னிதழ் நிறுவனர் திரு.அண்ணாகண்ணனும் இப்புதுக்கருத்து தேவையற்றது என்கின்றனர்.

சக

 

பிறதுறைசார் தமிழரின் மொழிப்பற்றும், மரபுக்கவிதை ஈடுபாடும்,    படைப்பாக்கமும் மிகுந்த மகிழ்ச்சியையும், மனநிறைவையும் தருகின்றது.



Virus-free.www.avg.com
Reply all
Reply to author
Forward
0 new messages