தமிழ் வல்லுநர் இளம்பூரணர், பரிமேலழகர் உரைகளுக்கு வலிந்து பொருள் கொள்வதுடன்; தம் கருத்தைத் திருவள்ளுவரிடம் ஏற்றுகின்றனர்.
செய்யுள் பயிற்சி நாப்பழக்கத்தால் தான் நம்பிக்கை ஏற்படுத்தும். ‘நேர்நிரை இணைந்த நிரையசை நடுவிலுள்ள காய்ச்சீருக்கு’ விளாங்காய்ச் சீர் என்று தனிப்பெயர் கொடுத்து வழங்குவது; நினைவிற் கொண்டு பயில மாணவர் பின்பற்றும் நடைமுறையே. அதை நூலில் சொல்லித்; தவிர்ப்பது சரி என்ற கருத்தை நிலைநாட்டுவது; தமிழ்ச்செய்யுள் வாசிப்புப்பயிற்சி போதாததால் ஏற்பட்ட நம்பிக்கைக் குறைவைக் காட்டுகிறது.
மக்கள் முயற்சிச்சுருக்கம் காரணமாகவும், சோம்பேறித்தனம் காரணமாகவும் தத்தம் பேச்சுமொழியில் பல மாற்றங்களைத் தம்மை அறியாமலேயே ஏற்படுத்தி விடுகின்றனர் என்ற; உலக முழுமைக்கும் பொதுவான மொழியியல் கொள்கை; செய்யுள் வாசிப்பிற்கும் ஏற்றதே. பெருந்தமிழ் ரசிகர்களும் இதற்கு விதிவிலக்கல்லர்.
செப்பலோசை பல நுட்பமான நெளிவு சுளிவுகளை உள்ளடக்கியது. வெண்பாவில் பிள்ளையுடன் தாய் பேசும் செப்பலோசை கொஞ்சும்; ஆசிரியரின் செப்பலோசை அறிவுறுத்தும்; பாட்டிகதையின் செப்பலோசை நீளும்; பக்தனின் செப்பலோசை உருகும்; இப்படி இன்னும் பல. இதனால் தொல்காப்பியரும், அமிதசாகரரும் சொல்லாத கருத்தை விதியாகத் திணிப்பது தேவையற்றது.
பாவலர் மா.வரதராசனும், ‘வல்லமை’ மின்னிதழ் நிறுவனர் திரு.அண்ணாகண்ணனும் இப்புதுக்கருத்து தேவையற்றது என்கின்றனர்.
சக
பிறதுறைசார் தமிழரின் மொழிப்பற்றும், மரபுக்கவிதை ஈடுபாடும், படைப்பாக்கமும் மிகுந்த மகிழ்ச்சியையும், மனநிறைவையும் தருகின்றது.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUfwZc6svxJwe%3DY2A_j52uCFMhCuYAxW4CugkVtJ9Goy7A%40mail.gmail.com.
தமிழ் வல்லுநர் இளம்பூரணர், பரிமேலழகர் உரைகளுக்கு வலிந்து பொருள் கொள்வதுடன்; தம் கருத்தைத் திருவள்ளுவரிடம் ஏற்றுகின்றனர்.
செய்யுள் பயிற்சி நாப்பழக்கத்தால் தான் நம்பிக்கை ஏற்படுத்தும். ‘நேர்நிரை இணைந்த நிரையசை நடுவிலுள்ள காய்ச்சீருக்கு’ விளாங்காய்ச் சீர் என்று தனிப்பெயர் கொடுத்து வழங்குவது; நினைவிற் கொண்டு பயில மாணவர் பின்பற்றும் நடைமுறையே. அதை நூலில் சொல்லித்; தவிர்ப்பது சரி என்ற கருத்தை நிலைநாட்டுவது; தமிழ்ச்செய்யுள் வாசிப்புப்பயிற்சி போதாததால் ஏற்பட்ட நம்பிக்கைக் குறைவைக் காட்டுகிறது.
மக்கள் முயற்சிச்சுருக்கம் காரணமாகவும், சோம்பேறித்தனம் காரணமாகவும் தத்தம் பேச்சுமொழியில் பல மாற்றங்களைத் தம்மை அறியாமலேயே ஏற்படுத்தி விடுகின்றனர் என்ற; உலக முழுமைக்கும் பொதுவான மொழியியல் கொள்கை; செய்யுள் வாசிப்பிற்கும் ஏற்றதே. பெருந்தமிழ் ரசிகர்களும் இதற்கு விதிவிலக்கல்லர்.
செப்பலோசை பல நுட்பமான நெளிவு சுளிவுகளை உள்ளடக்கியது. வெண்பாவில் பிள்ளையுடன் தாய் பேசும் செப்பலோசை கொஞ்சும்; ஆசிரியரின் செப்பலோசை அறிவுறுத்தும்; பாட்டிகதையின் செப்பலோசை நீளும்; பக்தனின் செப்பலோசை உருகும்; இப்படி இன்னும் பல. இதனால் தொல்காப்பியரும், அமிதசாகரரும் சொல்லாத கருத்தை விதியாகத் திணிப்பது தேவையற்றது.
பாவலர் மா.வரதராசனும், ‘வல்லமை’ மின்னிதழ் நிறுவனர் திரு.அண்ணாகண்ணனும் இப்புதுக்கருத்து தேவையற்றது என்கின்றனர்.
சக
பிறதுறைசார் தமிழரின் மொழிப்பற்றும், மரபுக்கவிதை ஈடுபாடும், படைப்பாக்கமும் மிகுந்த மகிழ்ச்சியையும், மனநிறைவையும் தருகின்றது.