Re: எனைநலம் சேரும் இனி!

8 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Jul 4, 2024, 9:10:19 AM (2 days ago) Jul 4
to santhav...@googlegroups.com


On Thu, Jul 4, 2024 at 5:40 AM NATARAJAN RAMASESHAN <chrome...@gmail.com> wrote:

> இன்று, 04/07/2024, சென்னையிலுள்ள கந்த கோட்டம் சென்ற போது, எழுதிய நேரிசை வெண்பா:
>
>                    எனைநலம் சேரும் இனி!
>
> சிந்துமெழில் சென்னையில் சீர்கந்த கோட்டத்தின்
> அந்த முருகன் அவனருளால் - வந்த
> வினையும், வருகின்ற வெவ்வினையும் போகும்,
> எனைநலம் சேரும் இனி!
>                  
>        ்.                          -- தில்லைவேந்தன்.

சீர்க்கந்த - ஒற்று மிகும்.
பார்க்க: https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0010692_கொடுமணல்_இலக்கியங்கள்.pdf

பண்பான யோகன் பழனிமகா  ராசனருள்
நண்பான சீர்க்கந்த சாமி நராதிபன்மேல் (பக்கம் 20).

--------------------
புலவர் செ. இராசு ஏட்டில் இருந்து பதிப்பித்த இந்நூல் அரிய பிரபந்தங்கள் அடங்கியது. திருப்பூரின் பழைய பெயர் திருப்பையூர். இன்னும் பல ஆதாரங்கள் தேடிக்கண்ட புலவர் சுந்தர கணேசன் (தலைமை ஆசிரியர், திருப்பூர்) அவர்களுக்கு 2 ஆண்டு முன்னர் தந்தேன்.


நன்றி,
நா. கணேசன்

Reply all
Reply to author
Forward
0 new messages