/// சங்ககாலம்:
1. அகஸ்தியர்
2. தொல்காப்பியர் (காப்பியக்குடி என்னும் கபிகோத்திரத்தார்)
3. ஜயன் ஆரிதனார் (ஹரித கோத்திரத்தார்)
4. கபிலர்
5. கள்ளில் ஆத்திரையனார் (ஆத்ரேய கோத்திரத்தார்)
6. கோதமனார்
7. பாலைக் கெளதமனார்
8. ஆமூர்க் கெளதமன் சாதேவனார் (கெளதம கோத்திரம்)
9. பிரமனார்
10. மதுரை இளங்கண்ணிக் கெளசிகனார் (கெளசிக கோத்திரம்)
11. மதுரைக் கெளணியன் பூதத்தனார் (கெளண்டின்ய கோத்திரம்)
12. மாமூலனார்
13. மதுரைக் கணக்காயனார்
14. நக்கீரனார்
15. மார்க்கண்டேயனார்
16. வான்மீகனார்
17. கடியலூர் உருத்திரங் கண்ணனார் (பட்டினப்பாலை)
18. வேம்பற்றூர்க் குமரனார்
19. தாமப் பல்கண்ணனார்
20. குமட்டுர்க் கண்ணனார்
இடைக்காலம்:
21. மாணிக்கவாசகர்
22. திருஞானசம்பந்தர்
23. சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள்
24. பெரியாழ்வார்
25. ஆண்டாள்
26.தொண்டரடிப்பொடியாழ்வார்
27. மதுரகவி
28. நச்சினார்க்கினியர் (பாரத்துவாசி)
29. பரிமேலழகர்
30. வில்லிபுத்தூரார்
31. அருணகிரிநாதர்
32. பிள்ளைப் பெருமாளையங்கார்
33. சிவாக்ரயோகி
34. காளமேகப் புலவர்
பிற்காலம்:
35. பெருமாளையர்
36. வீரை ஆசுகவி (செளந்தர்யலகரி மொழி பெயர்த்தவர்)
37. வேம்பற்றூரார் (பழைய திரவிளையாடலாசிரியர்)
38. நாராயண தீக்ஷிதர் (மகரநெடுங்குழைக்காதர் பாமாலை)
39. கோபாலகிருஷ்ண பாரதியார்
40. கனம் கிருஷ்ணையர்
41. அரியலூர்ச் சடகோப ஐயங்கார்
42. கஸ்தூரி ஐங்கார் (கார்குடி)
43. சண்பகமன்னார்
44. திருவேங்கட பாரதி (பாரதி தீபம் நி கண்டு)
45. வையை இராமசாமி சிவன் (பெரியபுராணக் கீர்த்தனைகள்)
46. மகாமகோபாத்தியாய டாக்டர் சாமிநாதையர்
47. சுப்ரமண்ய பாரதியார்
48. பரிதிமாற் கலைஞர் (வி.கோ.சூ)
49. சுப்பராமையர் (பதம்)
50. முத்துசாமி ஐயங்கார் (சந்திரா லோகம்)
51. ரா.ராகவையங்கார்
52. பகழிக் கூத்தார்
53. வென்றிமாலைக் கவிராயர்
54. வேம்பத்தூர் பிச்சுவையர்
55. கல்போது பிச்சுவையர்
56. நவநீதகிருஷ்ண பாரதியார்
57. அனந்தகிருஷ்ணஐயங்கார்
58. திரு, நாராயணசாமிஐயர்
59. மு.ராகவையங்கார்
60. திரு. நா.அப்பணையங்கார்
61. வசிஷ்டபாரதி (அந்தகர்)
62. கவிராஜ பண்டித கனகராஜையர்
63. பின்னத்தூர் அ.நாராயணசாமிஐயர்
64. ம.கோபலகிருஷ்ணையர்
65. இவை.அனந்தராமையர்
66. நா.சேதுராமையர் (குசேல வெண்பா)
67. கோவிந்தையர் (மாணிக்கவாசகர் வெண்பா)
68. வ.வே.சு.ஐயர்
69. கி.வா.ஜகந்நாதையர்
70. அ.ஸ்ரீநிவாசராகவன்
71. ஸ்வாமி சாதுராம்
72. திராவிடகவிமணி வே.முத்துசாமி ஐயர்.///
சங்க காலப் புலவோர் பற்றிய தொகுப்பு அரைகுறையாக உள்ளது என்பது என் கருத்து.
பரணர்- பதிற்றுப்பத்து ஐந்தாம் பத்தைப் பாடிய பரணர்க்கு வேந்தனாகிய சேரன் கடல் பிறக்கோட்டிய குட்டுவன் தன் மகன் குட்டுவன் சேரலைப் பரிசாக அளித்தான் என்பது பதிகச் செய்தி; பரணர் தன்னைக் காட்டிலும் மேம்பட்ட வருணத்தார்; அதாவது பார்ப்பார் என்பதால் தான் சேரன் அவ்வாறு செய்திருக்க வேண்டும் (பதிற்றுப்பத்து- ப.181). கபிலரையும் பரணரையும் ஒருங்கு சேர்த்துக் கபிலபரணர் என அழைப்பது வழக்கமாக இருந்ததும் எண்ணிப் பார்க்கத்தக்கது.
காப்பியாற்றுக் காப்பியனார் - வேந்தன் களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரலைப் பாடிய காப்பியாற்றுக் காப்பியனாரும் தன் பெயராலேயே பார்ப்பனர் என அறியப் படுகிறார். காப்பியக்குடி என்பது பார்ப்பனரது பழைய குடி வகை என அகராதி உரைக்கிறது (agaraathi.com -University of Madras Lexicon காப்பியக்குடி | அகராதி | Tamil Dictionary). காவிரிக் கரையில் இன்றும் கபிஸ்தலம் என்ற ஊர் ஒன்று உள்ளது. சீகாழிக்கு அருகே அக் குடியால் பெயர் பெற்ற ஊரும் (காப்பியக்குடி) உண்டு. சிலப்பதிகாரத்தில் பார்ப்பனி தேவந்தியை மணந்த பாசண்டச் சாத்தன் அக்குடியில் பிறந்து வளர்ந்தான் என்ற குறிப்பும் (சிலப். வரந்தரு காதை-அ.83); இருப்பதால் காப்பியாற்றுக் காப்பியனாரும் பார்ப்பனர் ஆகிறார்.
வடம வண்ணக்கன் பேரிசாத்தனார் - குதிரை மலையின் குறுநில மன்னன் பிட்டன் கொற்றனைப் பாடியவர் (புறம்.172); வடமா எனும் கோத்திரத்தைச் சேர்ந்த பார்ப்பனர் ஆவார்.
இரணிய முட்டத்துப் பெருங் குன்றூர்ப் பெருங் கௌசிகனார் - மலைபடுகடாஅம் பாடிய இவரின் பெயரில் இடம் பெறும் கௌசிகன் எனும் குடிப்பெயர் அவரைப் பார்ப்பனராகக் காட்டுகிறது.
மதுரை வேள்ஆசான் - வேள்வி நெறிமுறைகளைப் பயிற்றுவித்த / மேற்பார்த்த ஆசான் எனப் பொருள் வருகிறது. புறநானூற்றில் இவர் பாடிய பாடல் எண் 305.
மேலே சொல்லப்பட்டோர் தம் பெயராலும் கோத்திரத்தாலும் செயலாலும் பாடல் பெற்ற தன்மையாலும் பார்ப்பனராக அறியப் படுகின்றனர்.
பிற்காலப் பெரியோருடன்
எஸ்.கிருஷ்ணசாமி ஐயங்காரையும் சேர்த்துக் கொள்ளலாம்... சிறந்த ஆய்வாளர்.
சக