எண்கண் என்பது ஒருபுராணக்கதையில் கண் பற்றி வருவதால் இருக்கிறது. ஆனால், எண்கண்ணில் உள்ள -கண் = இடம் என்ற பொருள்தான்.எண்கண்ணின் பழைய பெயரை ஆராய்ந்தால் விளங்கும்.
தகவல்கள்:ஊர்:வேளாங்கண்ணி
இறைவன்:வெள்ளியங்கிரிநாதர்,ராஜதகிரீசுவரர்
இறைவி:வேல்நெடுங்கண்ணி
http://www.naavaapalanigotrust.com/index.php/kovils/tn-kovil-list/1869-velankannisivan
சோழர் கலைப்படிமங்கள் உன்னத நிலையை அடையக் காரணமானவள்
செம்பியன்மாதேவி. அவள் பேராலேயே வேளாங்கண்ணி அருகே ஊர் இருப்பதுங் காண்க.
சோழமாதேவி ஆகிய இவ்வன்னையால் வேளாங்கண்ணி நடராஜர், மாகேசுவரி வடிக்கப்பட்டுள்ளனர் எனலாம்.
On Sunday, 30 October 2016 01:48:10 UTC+5:30, N. Ganesan wrote:எண்கண் என்பது ஒருபுராணக்கதையில் கண் பற்றி வருவதால் இருக்கிறது. ஆனால், எண்கண்ணில் உள்ள -கண் = இடம் என்ற பொருள்தான்.எண்கண்ணின் பழைய பெயரை ஆராய்ந்தால் விளங்கும்.> இடம் எனும் பொருள் இல்லை; சங்கதப் பெயர் ‘அஷ்டநேத்ரபுரி’, என்கண் கொண்ட நான்முகனின் பெயர்.‘திருவிண்சாருடையார்’ சுவாமி பெயர்; கல்வெட்டுத் தெரிவிக்கும் பெயர். பொருள் தெரியவில்லை.அருணகிரிநாதர் காலத்துக்குப்பின் முருகன் தலமாகப் பிரசித்தி பெற்றிருக்கலாம்> தேவ்வேளாங்கண்ணி பகுதியில் (10 - 15 மைல் சுற்றளவில்) புதையுண்ட பல விக்கிரகங்கள் ஆண்டுதோறும் தோண்டி எடுக்கப்படுகின்றன.அவை புதையுண்ட காலம் போர்ச்சுகீசியர் தம் கதைகளைக் கொண்டுவரும் காலத்திற்கு சில நூற்றாண்டுகள் முற்பட்டது.வேளாங்கண்ணி என்னும் ஊர்ப் பெயர் வெள்ளிமலையப்பர் - வேல்நெடுங்கண்ணி என்று ஸ்வாமி-அம்பாள் பெயர்களாகப்பண்டைச் சைவர்களால் அளிக்கப்பெறக் காரணம் ஆயிற்று என்பதும் பார்த்தோம்.
On Sunday, 30 October 2016 20:26:09 UTC+5:30, N. Ganesan wrote:வேளனை வேண்டல் (புலவர் செங்கை பொதுவன்)அன்பு மலர வேண்டும் – அதற்குஅடியேன் உதவ வேண்டும்இன்பம் பொங்க வேண்டும் – வேளாஎளியேன் உதவ வேண்டும் 1’வேள்’ என்பதன் ஸம்போதநமாக ‘வேளா’ எனும் விளியைவள்ளலாரோ, அருணகிரியாரோ பயன்கொண்டதாகத் தெரியவில்லை.வேலன் - வேலா எனும் விளிவேற்றுமையாகும்.வேள் - வேளே என்பதுதான் விளி.மால் - ‘மாலே’ என விளி, ‘மாலே, மணிவண்ணா !’‘மாலா’ எனும் விளி கிடையாது.
தேன், பால், மான் போன்ற பெயர்ச்சொற்களின் விளி வேற்றுமை யாது ?கந்தகோட் டத்துள்வளர் தலம்ஓங்கு கந்தவேளே !- இராமலிங்க அடிகளார்சேயே வேளே பூவே கோவே தேவே தேவப்பெருமாளே !அரக்கர்தலைக்குலை கொத்திய வேளே !குலிச பார்த்திப னுலகு காத்தருள் கோவே தேவே வேளே வானோர் பெருமாளே !கழை செய் தோள் குற மயிலை வேட்டு உயர் களவினால்புணர் கந்தவேளே !சோதிமுரு காநித் தாபழய ஞானச்சோணகிரி வீதிக் கந்தவேளே !அழகான மேனி தங்கிய வேளே நமோநம !வீர கண்டைகொள் தாளா நமோநம !- அருண்கிரிநாதர்’அழகான மேனி தங்கிய வேளா நமோநம’என அவர் பாடவில்லை.தாளை உடையவன் ‘தாளன்’ , அதனால் ‘தாளா’ எனும் விளி.வேலை உடையவன் ‘வேலன்’, அதனால் ‘வேலா’ஆளை உடையவன் ஆளன்‘வேளாளர்’ ஆளன், ஆளர் / அன் , அர் விகுதி பெறும் சொற்கள்.அது சுருக்கம் பெற்று வேளான், வேளார் ஆகிறதுதேவ்
On Wednesday, 2 November 2016 20:11:24 UTC+5:30, N. Ganesan wrote:நல்ல விளக்கம். மால் மாலன் என்று ஆகும். அதன் விளி: மாலா (திருப்புகழ்).பாபநாசம் சிவன்: கண்ணனைப் பணி மனமே! https://www.youtube.com/watch?v=RB93iJYzdEg“மங்கள மூலனை கோகுல பாலனை மணமிகு துளசி மாலனை பாலனை”கேள், கேளிர் (பன்மை). கேள் - கேளன் எனவும் வரும். மாலனை “மாலா” எனஅருணகிரிநாதர் விளிப்பது போல, “கேளா” என்று கேளனைத் தேவாரம் விளிக்கிறதுஎனவும் உரைக்கலாகும்.
இவை சரியான காட்டுகள் ஆகா.’மணமிகு துளசி மாலனை ’வேலை உடையவன் வேலன் ஆவதுபோலமாலையை உடையவன் மாலன்;கேண்மையை உடையவன் கேளன்.
‘வேள்’ என்பதை வேட்கை , விருப்பம் எனப் பொருள்கொண்டால்தான்வேளன் என்பது பொருத்தமாகும் -விருப்பத்தை உடையவன் ‘வேளன்’அதையொட்டி ‘வேளா’ எனும் விளியும் உருப்பெறும்.வேள் - வேள்வி, வேட்டல், வேட்கை என்பனவற்றின் வேராகலாம்.சொல்லாராய்ச்சி சுகமாகத்தான் இருக்கிறது; விஷயத்துக்குள்வருவோம்.நீங்கள் தந்த மாஹேச்வரி, ஆடவல்லான் படங்கள்13ம் நூற்0 ஒட்டியதான காலகட்டம். பிற்காலச் சோழர் ஆட்சியின்இறுதிப் பகுதியில் அவை உருவாகியிருக்க வேண்டும். இல்லையெனில்சுந்தர பாண்டியன் சோழ அரசைக் கைப்பற்றியபின் உருவானவையாகஇருக்க வேண்டும். சுந்தர பாண்டியன் தில்லைக்கோயில்,திருவரங்கம் ஆலயம் இரண்டிற்கும் பொற்குவை தந்து திருப்பணிசெய்த பாண்டிய மன்னன்.இந்தக்கால கட்டத்தில் சோழவளநாட்டில் உருவான ஆலயங்கள் எவைஎன்பதைத் தகவல் களஞ்சியமான தாங்கள் தெரிவித்தால் நல்லது.தேவ்
மால் மாலவனை ‘ மாலான்’ எனச் சுட்டும்வழக்கம் இருப்பதாகத் தெரிகிறது.
வேள் வேளன் ஆகிறது என்கிறீர்.மால் ‘மாலன்’ஆகிறதா ? இலக்கியப் பரப்பில்இன்னும் ஆராய வேண்டும் -
ஆலாலத்தை அயின்ற நம்பனோ,மாலானோ, வனசத்தில் அண்ணலோ,பாலார் தந்தி படைத்த கள்வனோமேலார் இங்கு உனை விட்ட தன்மையார்- கந்தபுராணம்’மாலாரொடு மந்தரம் மாசுணமும்மேலாகிய தேவரும் வேண்டும்?' எனா,ஆலாலமும் ஆர் அமிழ்தும் அமைய...- கம்பராமாயணம்தேவ்
மால் மாலவனை ‘ மாலான்’ எனச் சுட்டும்
வழக்கம் இருப்பதாகத் தெரிகிறது.
வேள் வேளன் ஆகிறது என்கிறீர்.மால் ‘மாலன்’ஆகிறதா ? இலக்கியப் பரப்பில்இன்னும் ஆராய வேண்டும் -
ஆலாலத்தை அயின்ற நம்பனோ,மாலானோ, வனசத்தில் அண்ணலோ,பாலார் தந்தி படைத்த கள்வனோமேலார் இங்கு உனை விட்ட தன்மையார்- கந்தபுராணம்’மாலாரொடு மந்தரம் மாசுணமும்மேலாகிய தேவரும் வேண்டும்?' எனா,ஆலாலமும் ஆர் அமிழ்தும் அமைய...- கம்பராமாயணம்தேவ்
தேமொழி அவர்கள் தெரிவித்த கருத்து [மயிலையார் எழுதிய நூலின் அடிப்படையில்] :நாகைப்பட்டினத்துக்கு வடக்கே, ஒன்று அல்லது இரண்டு கல்தொலைவில், 'புது வெளிக் கோபுரம்' என்றும், 'சீனா கோயில்' என்றும், 'கறுப்புக் கோயில்' என்றும் பெயருள்ள ஒரு கோபுரம் இருந்ததென்றும், இக்கோபுரம் நாகைப்பட்டினத்துக்கு வருகிற கப்பல்களுக்கு ஒரு அடையாளமாகக் கடலில் தோன்றியதென்றும், இந்தக் கோபுரம் தாம் நேரில் 1846 -ஆம் ஆண்டில் கண்டதென்றும் சர். வால்டர் எலியட் (Sir Walter Elliot) என்பவர் எழுதியிருக்கின்றார். (படம் 1 காண்க).
படம் 1.
நாகைப்பட்டினத்தில் இருந்த பௌத்தக்கோயில் கோபுரம்.1846-இல் இந்த நிலையில் இருந்தது.
இந்தக் கோபுரம் இருந்த இடத்தில், ஏசுவின் சபைப் பாதிரிமார் இப்போது கட்டிடம் கட்டியிருக்கிறார்கள். 1867 -இல் இந்தக் கோபுரத்தை இடித்துவிட்டுக் கட்டிடம் கட்டிக்கொள்ள அரசாங்க உத்தரவுபெற்று இதை இடித்துப் போட்டார்கள்.
இவ்விடத்தில் இருந்த மிகப்பழைய இலுப்பை மரம் ஒன்றை ஏசுவின் சபைப் பாதிரிமார் 1856 -இல் வெட்டியபோது, அம்மரத்தின் அடியில் ஒளித்து வைக்கப்பட்டிருந்த ஐந்து சிறிய பௌத்த விக்கிரகங்களைக் கண்டெடுத்தனர். இவற்றில் நான்கு உலோகத்தினால் ஆனவை; ஒன்று பீங்கானால் செய்யப்பட்டது. இவற்றில் ஒன்று புத்தர் நின்று கொண்டு உபதேசம் செய்வதுபோல் அமைக்கப்பட்டது. கவர்னராயிருந்த நேப்பியர் பிரபு (Lord Napier) நாகைக்குச் சென்றபோது, பாதிரிமார் இதை அவருக்குக் கொடுத்தார்கள். ////
கிட்டத்தட்ட இதே போக்கில்தான் நானும் எழுதியுள்ளேன்.
மேற்கத்தியக் கிரித்தவர் சிவாலயத்தை இடித்தனர் என்று குற்றம் சாட்டவில்லை; ஐயப்பாட்டைத் தெரிவித்தேன். பழைய பவுத்த வழிபாட்டுத்தலத்தை இடித்தனர்; சிலைகள் மட்டும் கிடைத்துள்ளன. வேளாங்கண்ணியிலும் இதே விதமாகத்தான் வரலாறு அமைந்திருக்கக் கூடும்.
தேவ்
பார்வதிநன்றிதிரு தேவ் அவர்களேநான் இதை ஒரு சரித்திரப்புரிதலுக்காகவே படித்துள்ளேன். ஏன் ஹம்பி பயணத்தின் போது வாங்கியது
எதைப்பற்றி என்று குறிப்பாக எழுதினால், தேட வசதியாக இருக்கும்.
2016-11-09 7:10 GMT+08:00 Dev Raj <rde...@gmail.com>:On Tuesday, 8 November 2016 22:47:18 UTC+5:30, pramanathan42 wrote:I have that book . I can check .
மிக்க நன்றி, ஐயாதேவ்--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
பார்வதிநன்றிதிரு தேவ் அவர்களேநான் இதை ஒரு சரித்திரப்புரிதலுக்காகவே படித்துள்ளேன். ஏன் ஹம்பி பயணத்தின் போது வாங்கியது
எதைப்பற்றி என்று குறிப்பாக எழுதினால், தேட வசதியாக இருக்கும்.
கிருஷ்ணதேவராயர் தமிழ்நாட்டில் பிறந்தவர் (தேவிகாபுரம்). அவரது தந்தை துளுவர். தாய் தமிழச்சி. நடனமாது, தேவரடியாளாக இருந்தவர். அப்போதெல்லாம், கல்வி, பல கலைகளும் கற்பது பெண்களில் கணிகையர் மாத்திரமே.
கிருஷ்ணதேவராயர் தமிழ்நாட்டில் பிறந்தவர் (தேவிகாபுரம்). அவரது தந்தை துளுவர். தாய் தமிழச்சி. நடனமாது, தேவரடியாளாக இருந்தவர். அப்போதெல்லாம், கல்வி, பல கலைகளும் கற்பது பெண்களில் கணிகையர் மாத்திரமே.இது ஒரு பீலா. தமிழ்த் தாய்க்கு பிறந்த கிருஷ்ண தேவனுக்கு தமிழ் மட்டும் தெரியாது.
On Wednesday, 9 November 2016 16:08:19 UTC+5:30, N. Ganesan wrote:வேளாங்கண்ணி பெயர்விளக்கம் வேல்நெடுங்கண் என்பதல்ல என்பதும்,கோயில் இன்றும் இருப்பதும் விரிவாக எழுதியுள்ளேன்.
ஐயத்திற்கிடமில்லாத வகையில் ரஜதகிரீச்வரர் ஆலயத்தின் படத்தையும், அம்மையின் ’வேளாங்கண்ணி’ எனும் பெயரையும் ஏற்கெனவேபதிவிட்டுள்ளேன் -
நாகையில் வணிகம் செய்த போர்ச்சுக்கீசியர்கள் -
கடலில் பெரும் புயல் மழையில் சிக்கி,
கரை காணாது தவித்தபோது -
அவர்களுக்குக் காட்சி கொடுத்து
காப்பாற்றிக் கரை சேர்த்தவள் -
இவளைத்தான் மொழியும்
மொழியின் வளமையும் அறியாத மாற்றார்
வேளாங்கண்ணி என்றனர்.
இன்னும் பலர் வேளாங்கன்னி என கற்பிதம் செய்து கொண்டு
அதற்கொரு புனைவையும் கூறுகின்றனர்.
உலகின் எந்த ஒரு மூலையிலும் தாய்மை என்னும்
தனித்துவத்திற்கு மாற்றமே இல்லை.
உலகில் அற்புதங்கள் நிகழ்த்துதற்காக - தயாபரன்
மகவாகத் தோன்றுங்கால் அவனுக்கும்
ஒரு தாய் மடி தேவையாகின்றது.
அந்தவகையில் தாய்மை சிறப்பிக்கப்பட்ட நாள் இன்று.
எளியோர் ஏற்றம் பெற இவ்வுலகிற்கு வந்து
எளியோர்க்கும் எளியோனாக வாழ்ந்து காட்டிய
இயேசு கிறிஸ்து அவதரித்த நன்னாள்..
இறைமகனுக்குப் பல்லாண்டு!..
ஈன்றெடுத்த மாதரசி மரியாளுக்குப் பல்லாண்டு!..
தோள் கொடுத்துத் துணை நின்ற சூசையப்பனுக்கும் பல்லாண்டு!.
எந்த ரூபத்தில் எனைத் தியானித்தாலும் அந்த ரூபத்தில்
அவர்களுக்கு இன்னருள் பொழிவேன்!..
என்பது கீதாச்சாரியனின் வாக்கு.
யாதுமாகி நின்றாய் காளீ!..
என்கின்றார் மகாகவி பாரதியார்.
நீல நெய்தல்நில விம்மல ருஞ்சுனை நீடிய
சேலு மாலுங்கழ னிவ்வளம் மல்கிய சிக்கலுள்
வேலொண் கண்ணியி னாளையொர் பாகன்வெண் ணெய்ப்பிரான்
பாலவண் ணன்கழ லேத்தநம் பாவம் பறையுமே!..(2/8)
நீங்கள் சொன்ன வேளன்கண்ணி, வில்லேந்திய வேலன் படிமம் இரண்டும் சேர்ந்து சிந்தனை வேறுதிறக்கில் சென்றதுதேவ்