"வல்லுவந்தன்னை உலகினுக்கே தந்துவான்புகழ் கொண்ட தமிழ்நாடு"என்று தமிழ்நாட்டுக்கே பெருமைசெர்த்தவர் திருவள்ளுவர். அவருடைய திருக்குறளைத்தான் எத்தனை உலகமொழிகளில் மொழிபெயர்த்திருக்கிறார்கள்! தமிழ்மறை என்று அவரின் திருக்குறள் போற்றப்படுகிறது.மேலும், முப்பாநூல், உத்தரவேதம், தெய்வநூல், பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, பொதுமறை என்று உயர்த்திப் பேசப்படுகிறது."அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகுத்திகுறுகத் தரித்த குறள்."என்று ஔவையும் திருவள்ளுவமாலையில் குறளின் பொருட்செறிவுக்குப் புகழாரம் சூட்டியிருக்கிறாள்.பொய்யாமொழிப்புலவர், செந்நாப்போதார், முதற்பாவலர், நான்முகனார், மாதானுபங்கி, பெருநாவலர், தேவர், நாயனார் என்று பலவிதமான பெயர்களால் திருவள்ளுவர் அழைக்கப்படுகிறார்.அப்படிப்பட்ட சிறந்த ஒரு மனிதரை.சைவர்கள், சமணர்கள், கிறித்தவர்கள், என் புத்தசமயத்தினரும் உரிமை கொண்டாடுவதிலிருந்தே அவரது மேன்மை உள்ளங்கை நெல்லிக்கனியாக விளங்காநிற்கிறது.இவ்வளவுதூரம் ஒவ்வொருவரும் உரிமை கொண்டாடியும், திருவள்ளுவரின் இயற்பெயர் என்று தெரியவில்லை. அவரது மனைவியின் பெயர் வாசுகி என்பதை அனைவரும் அறிவோம்.
அப்படியிருக்க அவரின்பெயர்மட்டும் ஏன் இன்றுவரை ஒரு புதிராகவே இருக்கிறது?எனவே, அவரது இயற்பெயர் எதுவாக இருக்கும் என்று யாருக்காவது கருத்து இருக்கிறதா?
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
//அவரின் துணைவியார் வாசுகி என்பது, பின்னாளில் கற்பிக்கப்பட்ட கதாப்பாத்திரம்!//
2015-10-04 22:57 GMT-07:00 Banukumar Rajendran <banuk...@gmail.com>://அவரின் துணைவியார் வாசுகி என்பது, பின்னாளில் கற்பிக்கப்பட்ட கதாப்பாத்திரம்!//இதற்குச் சான்று தருகிறீர்களா!
ஒரு அரிசோனன்
--
2015-10-06 12:11 GMT-07:00 Suba.T. <ksuba...@gmail.com>://வாசுகி என்பவர் வள்ளுவரின் துணைவியார் என்பது எந்த நூலில் முதலில் குறிப்பிடப்பட்டுள்ளது என அறிய எனக்கும் ஆவல்.சுபா////(அச்சான்றுக் குறைந்தபட்சம் குறளாசிரியர்க் காலத்தவையாகயிருக்க வேண்டும்!)இரா.பா//
- ஒரு அரிசோனன் பள்ளி இறுதி ஆண்டுவரைதான் தமிழ் கற்றவன்.
- அவன் சமணம் அறிந்தவனே, தமிழ் முனைவனோ, அறிஞனோ அல்லன்.
- இவ்விழையில் அவன் அறிய முயன்றது பொய்யாமொழிப் புலவரின் இயற்பெயர் என்ன என்பதே.
- இதுவரை ஒருவரும் அதைப்பற்றிக் கருத்துப் பதியவேயில்லை.
- வாசுகி அவரது மனைவி என்று குறித்தது அவன் பள்ளியில் பயிலும்போது, மதிப்பிற்குரிய தமிழ்ப்பேரறிஞர் தமிழண்ணல் இராம. பெரியகருப்பன் அவர்கள் கற்பித்ததே! மனைவியார் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும்போது, செந்நாப்போதாரின் இயற்பெயர் குறிப்பிடப்படவில்லையே என்று வியந்தேழுதியதேயன்றி வேறொன்றுமில்லை.
- அதைக் 'கற்பிதம்' என்கிறார் சமணப்பெரியவரான நண்பர் பானுகுமார். அதற்குச் சான்றும் கேட்கிறார்.
- இவர் தமிழண்ணல் அவர்கள் சொல்லையே 'கற்பிதம்' என்னும்போது, அவரைவிடச் சிறந்த தமிழறிஞரை நானறியேன் என்னும்போது, எங்கு தேடுவேன்?. அதையும் நண்பர் பானுகுமார் அவர்களே செய்யலாம். எனக்கு நேரமில்லை, விருப்பமும் இல்லை. அவர் பள்ளியில் பலவாண்டுகளுக்குமுன்னர் கற்பித்ததற்கு சான்று கேட்டாலும் என்னால் கொடுக்கவியலாது.
- அதையே தமிழ் முனைவரான மதிப்பிற்குரிய சுபா அவர்களும் வேறுவிதமாகக் கேட்கிறார்.
- நான் என்ன முனைவருக்கு முனைவரா, அல்லது தொல்பொருள் ஆராய்ச்சியாளனா?
- இல்லவே இல்லை.
- எனவே, உங்கள் இருவரின் கேள்விகளுக்கும் பதிலளிக்க என்னால் இயலாது. You both are barking up the wrong tree.
- அது இந்த இழையின் நோக்கமும் இல்லை.
- வள்ளுவரின் இயற்பெயர் என்ன?
- அறிந்த பெருமக்கள் சொல்லலாம். இன்னவாக இருக்கலாம் என்று விவாதிக்கலாம்.
- அறியவியலாத ஒன்று அது என்றால், அது ஏன் என்றும் வாதிடலாம்.
- அதுதான் இவ்விழையின் நோக்கம்.
- அவருக்கு மனைவி இல்லையென்றோ, அது கற்பிதம் என்றோ நிறுவவேண்டுமென்றால், அதற்குத் தனி இழை துவங்கலாமே!
- அறியாத ஒரு அரிசோனனிடம் சான்று கேட்பது, கற்றறிந்த பெரியோரை விட்டுவிட்டு, அறியாச் சிறுவனிடம் அறிவுரை கேட்பதைப் போன்றவோன்றேயாகும்!