தமிழ் எழுத்துக்களின் இடியாப்பச் சிக்கலும் கால்டுவெல் ஐயரின் கைங்கர்யமும்

85 views
Skip to first unread message

சவடால் வைத்தி

unread,
May 22, 2014, 1:09:10 PM5/22/14
to vall...@googlegroups.com, மின்தமிழ்
  1. தமிழ் எழுத்துக்கள் சமஸ்கிரிதத்திலிருந்து இரவலாகப் பெற்றது என்றும் தமிழ்மொழி வரிவடிவம் பெற உறுதுணையாக இருந்தவர்கள் வடபுலத்திலிதுந்து புலம் பெயர்ந்த வேதியர்கள் என்றும் கால்டுவெல் எழுதியது இன்றும் மறுதளிக்கப்படாமல் நின்று நிலவுகிறது
  2. டாக்டர் கால்டுவெல்லுடன் கருத்தொத்த புஃக்ளர் மற்றும் கிரியெர்சன் போன்ற மேலைநாஅட்டு அறிஞர்கள் தமிழ் வட்டெழுத்து வரிவடிவங்கள் அசோகரின் பிராமி எழுத்துக்களின் மறுபதிப்பு அல்லது தழுவல் என்ற கோட்பாட்டை போதுமான ஆதாரங்கள் இன்றி முன்மொழிந்தனர்
  3. திருவாளர் தாமஸ், டாக்டர்.ரைஸ் டேவிஸ் மற்றும் புரூனெல் ஆகியோர் தமிழ் வட்டெழுத்து தமிழர்களால் அவர்களின் சொந்த முயற்சியால் உருவாக்கப்பட்டு வளமை பெற்றது என்ற மாறுக் கோட்பாட்டை முன்வைத்தனர்
  4. சமஸ்கிரித  வயப்பட்ட திராவிட அறிஞர்கள் ஆதாரம் இல்லாத கால்டுவெல் கருத்தின்பக்கம் சாய்ந்து தமிழின் தோற்றத்துக்கும் கோட்பாட்டுக்கும் முரணாண ஒரு கருத்தை ஆதரித்து அதுவே உண்மை என்று நம்பச் செய்தனர்
  5. எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு என்று திருக்குறளும் எண்ணுன் எழுத்தும் கண்ணெனத் தகும் என்று அவ்வையாரும் குறிப்பிடுவதால் அறியப்படும் பொருள் தமிழ் எழுத்த்துக்கு இரண்டு வடிவம் என்பதாகும்.  ஒன்று கண்ணெழுத்து என்ற கண்ணால் காணும் வரிவடிவம் மற்றொன்று எண்ணத்தில் நிலவும் எண்ணெழுத்து என்பவையாகும்
  6. பதின்மூன்றாம் நூற்றாண்டு தொடங்கி பனந்தியாரின் இலக்கணம் முதல் பல இலக்கண நூல்கள் வெளியிட்டிருந்தும் தமிழ் எழுத்தின் வரலாற்றை இவ்வாசிரியர்கள் மூடி மறைத்துவிட்டார்கள் என்ற ஐயாப்பட்டு உள்ளது
  7. இன்று வழக்கில் உள்ள தமிழ் வரிவடிவம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த வரிவடிவத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டது.  பலமுறை மாற்றம்பெற்றே இன்றுள்ள நிலையை அடைந்துள்ளது என்று மொழியியலார் குறிப்பிடுகின்றனர்
  8. தமிழகத்தில் இரண்டுவிதமான வரிவடிவங்கள் வழக்கில் இருந்தன என்றும் ஒன்று தமிழர்களால் உருவாக்கப்பட்ட வட்டெழுத்து அல்லது சேர-பாண்டிய வரிவடிவம் என்றும் மற்றொன்று சங்கதவயப்பட்ட திராவிடர்கள் உருவாக்கிய கிரந்த-தமிழ் வரிவடிவம் என்று மொழியியலார் கூறும் வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன
  9. வட்டெழுத்தின் தோற்றம் மற்றும் கோட்பாடை அறிய ஏதுவாக இரண்டு கேள்விகள் கேட்கலாம்.  
  10. ஒன்று வட்டெழுத்து தமிழகத்தில் எப்போது அறிமுகமானது?. 
  11. இரண்டு வட்டெழுத்து வரிவடிவம் தமிழர்களால் குறிப்பகத் தமிழ் வணிகர்களால் நேரடியாக மத்திய கிழக்கில் செமெடிக் அல்லது சுமேரியாவில் இருந்து கணரப்பட்டதா அல்லது அசோகரின் பிராமி வரிவடிவத்திலிருந்து மாற்றம்பெற்றதா?
  12. கல்வெட்டாய்வாளர்கள் வட்டெழுத்து ஆவணங்கள் எட்டாம் நூற்றாண்டளவுக்கே காணக்கிடைப்பதன் அடிப்படையில் தொல்காபியர் காலம் கி.பி எட்டாம் நூற்றாண்டு என்று ஒரு சாராரும் (பானினிக்கு முற்பட்ட) ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் என்ற குறிப்பின் அடிப்படையில் தொல்காப்பியர் காலம் கி.றித்து பிறப்பதற்கு முற்பட்டது என்றும் கூறுவதால் வட்டெழுத்து வரிவடிவின் தோற்றம் கி.பி யா அல்லது கி.முவா என்ற இடியாப்பச் சிக்கல் தோன்றியுள்ளது
  13. மத்திய கிழக்கு அல்லது வடகிழக்கு ஆசியாவிலிருந்து சுமேரிய வரிவடிவத்தை முதலில் கொண்டுவந்தவர் யார்? தமிழ் வணிகர்களா? அசோகரா? என்ற கேள்வியும் எழுகிறது
  14. தொல்காப்பியம் என்ற இலக்கணம் வட்டெழுத்துக்கென்று உருவானது அதை கிரந்த தமிழ் வரிவடிவத்துக்குச் செயல்படுத்துவாது மாரியம்மாவுக்கு நாடிபார்த்து சொர்ணக்காஅவுக்குச் சூரணம் கொடுப்பதுபோல் வில்லஙக்மான வேலை அல்லவா என்று வரலாறுசார் மொழியியலார் அங்கலாயிக்கிறார்கள்
  15. இன்றைய வரிவடிவம் என்பது உண்மைத் தமிழ் அல்ல என்றும் அதன் தோற்றம் ம்ற்றும் கோட்பாடை சமஸ்கிரிதம் டு தமிழ் என்ற ஒற்றையறிப்பாதையைத் தவிர்த்து சுமேரிய வரிவடிவம் வட்டெழுத்து மற்றும் பிராமி வரிவடிவம் பாற்றித் தீவிர ஆய்வு செது முடிவெடுக்க வேண்டும் என்ற நிலையில் கல்டுவெல் ஐயர் தமிழ் வரிவடிவக் கோட்பாட்டின் சமஸ்கிதக் கோட்பாடை ஆதரித்து இன்றைய தமிழ்வரிவடிவ இடியாப்பச் சிக்கலுக்குக் காரணமாக இருந்துவிட்டாரே என்ற எண்ணம் தோன்றுவதைத் தவிர்க்க இயலவில்லை 

சவடால் வைத்தி

தென்காசி சுப்பிரமணியன்

unread,
May 22, 2014, 2:34:54 PM5/22/14
to vall...@googlegroups.com, மின்தமிழ்
//
  1. தமிழ் எழுத்துக்கள் சமஸ்கிரிதத்திலிருந்து இரவலாகப் பெற்றது என்றும் தமிழ்மொழி வரிவடிவம் பெற உறுதுணையாக இருந்தவர்கள் வடபுலத்திலிதுந்து புலம் பெயர்ந்த வேதியர்கள் என்றும் கால்டுவெல் எழுதியது இன்றும் மறுதளிக்கப்படாமல் நின்று நிலவுகிறது//

//வரிவடிவம்//

இதில் மொழியியலாளரோடு தொல்லியலாளர் சொல்வதுக்கு தான் வாய்சு அதிகம். அதன்படி இது எப்போதோ உடைக்கப்பட்ட வாதம்.

மேலும் நான் செய்திருக்கும் ஆய்வுப்படி உருகுணை என்னும் தெற்கிலங்கைப் பகுதியை ஆண்டவர்கள் கி.மு. நாலாம் நூற்ராண்டின் பாண்டியர்கள். இவர்களே அசோகனுக்கு இரு தலைமுறை முன்னர் தென்னீழத்தை ஆண்டவர்கள். இவர்களே தற்போது கிடைத்திருக்கும் பிராகிருத மொழிகளின் கல்வெட்டுகளில் மிகப் ப்ழமையான கல்வெட்டுகளைப் பொறித்துக் கொண்டனர். இதிலிருந்து தெரிவது என்ன என்றால் பிராகிருத கொழிகளில் பல கொடுந்தமிழாக இருக்கலாம்.

http://fromthenmaduraitotenkasi.blogspot.in/2013/12/blog-post.html

உருகுணைப் பாண்டியர்கள்

https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-frc3/q71/s720x720/1507664_570597623034603_60915550_n.jpg

மேலுள்ள படம் உருகுணைப்பாண்டியர்களின் அட்டவணையும் அவர்களுக்கு பின் சிங்களர்கள் எப்படி அதை கவர்ந்தனர் என்ற அட்டவணையும் உள்ளன.

http://fromthenmaduraitotenkasi.blogspot.in/2014/01/blog-post.html

மேலுள்ள இணைப்பு இலங்கையில் சமண எனப் பொறிப்புள்ள காசுகளைக் காட்டும் பதிவு. உருகுணைக் கல்வெட்டில் வரும் முதல் உருகுணை பாண்டியானான மஜ்ஜிமகாராசன் அசோகனுக்கு முந்தியவன் என்பதால் அவன் ஆதரித்த சங்கம் சமணருடையதே. அதாவது கி.மு. நாலாம் நூற்ராண்டின் பிற்பகுதியில் சமனம் ஈழத்துக்குச் சென்றுள்ளது. அதற்கு முன்பு தெற்கிலங்கை பாண்டியர்கள் ஐந்திணை சமயத்தை பின்பற்றி இருக்கலாம். நான் கல்வெட்டில் உள்ள வரலாற்றை மட்டுமே வெளிபடுத்தியிருக்கிறேன். சில பாதுகாப்புக் காரணங்களால் தற்போது இவர்களின் மூலம் பற்றி கூற முடியாது. அதன் சான்றுகளை ஆவனப்படுத்திவிட்டு கூறுவோம்.

இதன் மூலம் யாம் அறிவிப்பது என்ன எனில் சமச்கிருதம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் கல்வெட்டுகளில் ஏற்றப்பட்டது என அனைவரும் அறிவர். மேலுள்ள இணைப்புகள் அசோகன் பிராகிருதமொழிகளில் பிராமியை முதலில் பொறிக்கவில்லை எனக் காட்டுகிறது. ஆக சங்கத் தமிழ் தமிழியையும் பிராகிருதங்கள் பிராமிக்களையும் தாங்களாகவே உருவாக்கிக் கொண்டனர். பிபி. லால் போன்றவர்கள் பெருங்கற்கால பானையோட்டுக் குறிகளில் இருந்தே பிராமி வடிவங்கள் தோன்றியது என்கின்றனர். சிந்துவெளி-->கிராபிட்டி-->தமிழி/பிராமி இப்படி வளர்ந்த எழுத்துமுறை அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடியதே. இது இன்னும் சில ஆண்டுகளில் பரவலாக ஏற்றுக்கொள்ள வைக்கப்படும்.

K. Loganathan

unread,
May 22, 2014, 9:19:10 PM5/22/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, tolkaa...@egroups.com, meyk...@yahoogroups.com
பேராசிரியர் அவர்க்ச்ளே

 சுமேருத் தமிழ் அதன் வரிவடிவம் ஆகியவற்றை அகப்படுத்தியே தமிழின் வரிவடிவ எழுத்து ஆய்வு செல்ல வேண்டும் என்று தாங்கள் பரிந்துரைப்பது கண்டு மகிழ்ச்சி.

கீழே தங்கள் கருத்து"

/ 11. இரண்டு வட்டெழுத்து வரிவடிவம் தமிழர்களால் குறிப்பகத் தமிழ் வணிகர்களால் நேரடியாக மத்திய கிழக்கில் செமெடிக் அல்லது சுமேரியாவில் இருந்து கணரப்பட்டதா அல்லது அசோகரின் பிராமி வரிவடிவத்திலிருந்து மாற்றம்பெற்றதா?
//

சுமேருத் தமிழ் குமரி எனவும் பட்ட சுமேரியாவில்( பிறகு மெசொதோமிய ) வாழ்ந்து செழித்த போது, தமிழகம் இருந்ததாகவும் அங்கு தமிழர்கள் வாழ்ந்ததாகவும் தெரியவில்லை, அப்போது நிச்சயமாக அரப்பா நாகரிகம் இருந்தது, சுமேரியாவுடன் தொடர்பும் கொண்டிருந்தது.

சுமேரியா அழியவே (ச. கி.மு. 2000) அங்கு வாழ்ந்த தொல்தமிழர்கள் கடல் வழியாக தமிழக்ம் வர, சிலர் தரை வழியாக வடபுலம் சென்றுள்ளனர்,.

வடபுலம் சென்றவர்களே இடையே பாரசீகம் போன்ற நாடுகளில் தங்கி கலந்து மொழியும் இருக்குமொழியாக மாற வடபுலம் வந்திருக்க வேண்டும்

வடமொழி சுமேருத் தமிழின் திரிபு என்று காட்டியுள்ளேன்

கடல் வழியாக வந்த சுமேருத் தமிழர்களே தமிழகம் ஈழம் என்றெல்லாம் பரவி தஙகளது சங்கப் பண்பாட்டை வளர்த்டுள்ளனர்.

தமிழர்களுக்கு மத்திய கிழக்கோடு நெடுங்காலமாக தொடர்பு உண்டு.  ஆக ஆங்கு விளங்கிய ஆப்பு எழுத்து மற்றும் ஏனைய எழுத்துக்கள் தமிழக்ம் வந்திருக்க வாய்ப்புண்டு. 

பிராமி எழுத்துக்கள் இவ்வாறு தோன்றியும் இருக்கலாம்.

அது எவ்வாறு இருப்பினும் தமிழர்கள் மொழி பண்பாடு சமயம் கலை போன்ற எல்லா விசயங்களிலும் தனித் தனமை உடையவர்கள் என்பதொடு வடமொழியும் தொல்தமிழின் திரிபே வேதீயமும் சுமேருத் தமிழ் ஆகம பண்பாட்டில் கிளைத்தெழுந்த ஒன்றே என்றெல்லாம் எனது  ஆய்வுகளில் விளக்கியுள்ளேன்

சுமேருத் தமிழ் இலக்கியங்களை ஆராயாது தமிழரின் வேர்களை அறிய முடியாது.

அரிஞர்கள் இதனை கருத்தில் கொண்டு இத்தகைய ஆய்வுகளில் இறங்கவேண்டும் என்று யான் பல ஆண்டுகளாக்க் கூறி வருவதை இங்கு மீண்டும் கூற விரும்புகின்றேன்

உலகன்


--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

தென்காசி சுப்பிரமணியன்

unread,
May 22, 2014, 10:24:31 PM5/22/14
to vall...@googlegroups.com
தமிழகத்தில் புதிய கற்காலம்

தமிழகத்தில் இடைக்கற்காலம்

தெற்கிலிருந்து வடக்கு

லோகநாதன். தமிழகம் இடைக்கற்காலத்தை கி.மு. 10000 தொட்டு காணத்தொடங்கிவிட்டது. கி.மு. 4000 -3000 இடை-புதியக் கற்காலக் கலப்பு இருந்த காலத்திலேயே தமிழகம் நிரந்தர குடியிருப்புகளை காணத் தொடங்கிவிட்டது. இதில் எப்படி தமிழன் சுமேரியாவில் இருந்து வருவான்.

மேலும் பாவாணர் கூரிய மொழி அடர்த்தி, வல்லின மிகுதிகள் போன்றவை தெற்கிலிருந்து வடக்காகவே தமிழன் நகர்ந்ததைக் காட்டுகிறது. தொல்காப்பியம் எழுஹப்பட்டபோது முல்லையில் இருந்து மருதத்துக்கு மாறும் கட்டம் இறுதிப்பகுதியை நெருங்கிக் கொண்டிருந்தது. அதனால் தான் காப்பியம் முல்லைக் க்டவுள் மாயவனை முதலில் ஆரணங்கனாகக் காட்டுகிறது.

சுமேரிய-தமிழ் தொடர்புகள் சிந்துவெளி வரை தமிழர், தமிழர் தொடர்புடைக் குழுக்கள் இருந்த்தால் ஏற்பட்டிருக்கலாம்.

Natrajan Kalpattu Narasimhan

unread,
May 22, 2014, 10:38:20 PM5/22/14
to வல்லமை
இடியாப்பம் சிக்கலா இருந்தா என்ன சீரா இருந்தா என்ன?  இடியாப்பம் பிடிச்சிருக்கா?  சாப்பிட்டு மகிழுங்க.  காரம் புடிக்கும்னா மிளகாப் பொடி தூவி சாப்பிடுங்க.  இனிப்பு புடிக்கும்னா வெல்லப் பாகுலெ தேங்காத் துருவிப் போட்டு இடியாப்பத்தோட கலந்து சாப்பிடுங்க.சாப்பிடுங்க

வடெ எண்ணச் சொன்னா தொளெ எண்ணினானான்னு சொல்லுவாங்களே அது மாதிரி எதுக்குங்க வட்ட எளுத்தெ யாரு கொண்டாந்தாங்கங்குற ஆராய்ச்சி எல்லாம்?
--

இயற்கையின் எழில்-பறவைகள் பற்றிய வலைப் பக்கம் பார்த்திட இங்கே சொடுக்கவும்……. http://kalpattaarpakkangkal.blogspot.in/

நடராஜன் கல்பட்டு


எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி

வேறொன் றறியேன் பராபரமே


K. Loganathan

unread,
May 22, 2014, 11:26:51 PM5/22/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, tolkaa...@egroups.com, meyk...@yahoogroups.com
தென்காசி அவர்களே

 தங்கள் கேள்வி

//கி.மு. 4000 -3000 இடை-புதியக் கற்காலக் கலப்பு இருந்த காலத்திலேயே தமிழகம் நிரந்தர குடியிருப்புகளை காணத் தொடங்கிவிட்டது. இதில் எப்படி தமிழன் சுமேரியாவில் இருந்து வருவான்.//

இருக்க்லாம் மறுப்பதற்கில்லை,  ஏறகுறைய 80 ஆயிரம் ஆண்டுகட்கு முன்பே  கிழக்கு ஆப்பிரிகாவிலிருந்து மாந்தர்கள் தமிழகம் வந்துள்ளனர் பிறகு தென்கிழக்காசியா வழியாக ஆஸ்த்திரேலிய வரை பரவி உள்ளனர் என்றும் தெரிகின்றது.

ஆனால் இடைச் சங்க கடைச் சங்க நாகரிகம் கற்கால நாகரீகம் அல்ல. இலக்கியயச் சிறப்பும் பெருநகர் வாழ்வு  கடல்வழி தொலைதூர வாணிபம் போன்றவை நடந்த காலம்

சுமேரு காலம்  கி,மு. 6000- 2000 வரை. அங்குதான் மொழிக்கு வரிவடிவம் காணப்பட்டது என்பதொடு சங்கம் வைத்து மொழியும் வளர்க்கப்பட்டது. இதன் தொடர்ச்சியே தமிழகத்து இடைச் சங்க கடைச் சங்க இலக்கியங்கள்.

இது தொடர்பாக எனது ஆய்வுகள் உள்ள் வலைப்பக்கங்கள் கீழே:


மேலும்::


 வடமொழி தமிழின் திரிபு என்பதற்கு:


 அநேகமாக இவற்றை எல்லாம் படிப்பதற்கு நேரம் இல்லாது போகலாம். ஆனால் கட்டுரைகளின் தலைப்புக்களையாவது நோட்டமிட்டு சிலவறையாவது படியுஙகள். பிறகு பல கேள்விகளைக்  கேட்கலாம் விளக்கம் தர காத்திருக்கின்றேன்

உலகன்

Nagarajan Vadivel

unread,
May 22, 2014, 11:45:08 PM5/22/14
to vallamai
அன்புடை உலகன் ஐயா

இந்த இழையில் கேட்கப்படும் வினாக்கள் தமிழ் எழுத்தின் வரிவடிவம் பற்றிய வரலாறு தொடர்பானது.  வரிவடிவத்தின் தோற்ற்மும் வ்ரலாறும் பெரும்பாலும் கல்வெட்டின் ஆடிப்படையிலும் செப்பேடுகளின் வரிவடிவத்தின் அடிப்படையிலும் நிறுவப்படுவது.  தமிழகத்தில் கிடைத்த ஆயிரக்கணக்கான கல்வெட்டு ஆவணங்கள் கேட்பாரட்டு கர்நாடகத்தில் மீளா உறக்கத்தில்

கிடைத்த கல்வெட்டு ஆதாரங்களைக் கொண்டே தமிழ் பிராமி என்ற வரிவடிவான கிரந்தத் தமிழ் வரிவடிவங்களும் வட்டெழுத்தான சேர-பாண்டிய வரிவடிவங்களும் தீர்மானம் செய்யப்படும் நிலையில் 13-ஆம் நூற்றாண்ட்டுக்குபின் வெளிவந்த இலக்கண நூல்களின் அடிப்படையிலிம் 19-ஆம் நூற்றாண்டில் மேலைநாட்டினர் அச்சு ஊடகத்தில் மேற்கொண்ட எழுத்துச் சீர்மையௌம் அடிப்படையாகக் கொண்டு தமிழ் நெடுங்கணக்கு என்ற ஒன்றை உருவாக்குவது கேள்விக்குரிய செயலாகும்

தென்காசியார் கல்வெட்டாய்வாளர். அவர் முன் வைக்கும் கல்வெட்டு தொடர்பான கருத்துக்களை வரவேற்போம்

சவடால்

N. Ganesan

unread,
May 23, 2014, 12:01:54 AM5/23/14
to vall...@googlegroups.com
On Thursday, May 22, 2014 7:38:20 PM UTC-7, Natrajan Kalpattu Narasimhan wrote:
இடியாப்பம் சிக்கலா இருந்தா என்ன சீரா இருந்தா என்ன?  இடியாப்பம் பிடிச்சிருக்கா?  சாப்பிட்டு மகிழுங்க.  காரம் புடிக்கும்னா மிளகாப் பொடி தூவி சாப்பிடுங்க.  இனிப்பு புடிக்கும்னா வெல்லப் பாகுலெ தேங்காத் துருவிப் போட்டு இடியாப்பத்தோட கலந்து சாப்பிடுங்க.சாப்பிடுங்க

வடெ எண்ணச் சொன்னா தொளெ எண்ணினானான்னு சொல்லுவாங்களே அது மாதிரி எதுக்குங்க வட்ட எளுத்தெ யாரு கொண்டாந்தாங்கங்குற ஆராய்ச்சி எல்லாம்?

சவடால் ஐயா கருத்து:
 
"மத்திய கிழக்கு அல்லது வடகிழக்கு ஆசியாவிலிருந்து சுமேரிய வரிவடிவத்தை முதலில் கொண்டுவந்தவர் யார்? தமிழ் வணிகர்களா? அசோகரா? என்ற கேள்வியும் எழுகிறது"

சுமேரியா வரிவடிவம் தமிழ் வணிகர்கள் கொண்டுவந்தார்களா? எப்போது? - என்ற கேள்வியும் எழுகிறது.

> தொல்காப்பியம் என்ற இலக்கணம் வட்டெழுத்துக்கென்று உருவானது

தொல்காப்பியம் வட்டெழுத்த்க்காகவா? வட்டெழுத்து உருவானது எப்போது?
ஒரு குறிப்பு: தமிழ் பிராமி இருந்த பல நூற்றாண்டுகளில் எழுத்து எல்லாம் நேர்கோடுதான்.

தமிழ் எழுத்து வரலாற்றுக்கு கால்ட்வெல் என்ன செய்தார்?
எனக்குத் தெரிந்த ஆய்வர்கள்: ப்யூலர், பர்னல், கே.வி. சுப்பிரமணிய ஐயர், மயிலை சீனி. வெங்கடசாமி,
ஐராவதம், நாகசாமி, தினமலர் கிருஷ்ணமூர்த்தி, புலவர் இராசு, ... 

நா. கணேசன்
 

Nagarajan Vadivel

unread,
May 23, 2014, 12:13:11 AM5/23/14
to vallamai

2014-05-23 9:31 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
தமிழ் எழுத்து வரலாற்றுக்கு கால்ட்வெல் என்ன செய்தார்?

​தமிழ் வரிவடிவம் சமஸ்கிரிததுடன் தொடர்புடையது என்று எழுதினார் என்பது மட்டுமே அவர் செய்தது

சவடால்​

வேந்தன் அரசு

unread,
May 23, 2014, 2:54:22 AM5/23/14
to vallamai



22 மே, 2014 10:38 பிற்பகல் அன்று, Natrajan Kalpattu Narasimhan <knn...@gmail.com> எழுதியது:

இடியாப்பம் சிக்கலா இருந்தா என்ன சீரா இருந்தா என்ன?  இடியாப்பம் பிடிச்சிருக்கா?  சாப்பிட்டு மகிழுங்க.  காரம் புடிக்கும்னா மிளகாப் பொடி தூவி சாப்பிடுங்க.  இனிப்பு புடிக்கும்னா வெல்லப் பாகுலெ தேங்காத் துருவிப் போட்டு இடியாப்பத்தோட கலந்து சாப்பிடுங்க.சாப்பிடுங்க

வடெ எண்ணச் சொன்னா தொளெ எண்ணினானான்னு சொல்லுவாங்களே அது மாதிரி எதுக்குங்க வட்ட எளுத்தெ யாரு கொண்டாந்தாங்கங்குற ஆராய்ச்சி எல்லாம்?
 
”வக்கப்பிள்ளுழே நாயி படுத்துட்டு தாணும் சாப்பிடாது சாப்பிட்ற மாட்டெயும் சாப்பிவுடாது” அப்பிடிணு ஒறு பளமொளி நாபகம் வறுது



--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

N. Ganesan

unread,
May 23, 2014, 9:28:55 AM5/23/14
to vall...@googlegroups.com, vallamai
சரியாகத்தானே சொல்லியிருக்கிறார்? பிராமி எழுத்து தமிழில் பலகாலம் இருந்து பின்னர் வட்டெழுத்தாக மாறியது,
சோழர்கள் கிரந்த எழுத்தை தமிழ் எழுத்து ஆக்கினர்.

கால்ட்வெல் காட்டிய ஒரு கருத்து இன்றும் தமிழ் எழுத்து வளர்ச்சியில் முக்கியமானது. வடமொழியில்
ஏ, ஓ தான். எ, ஒ இல்லை. எனவே தான் தமிழ் எழுத்துக்களில் ஆரம்பத்தில் எ, ஒ இல்லை என்றார்.
அவர் பார்த்த கல்வெட்டுக்களில், சுவடிகளில் அவ்வாறே. கால்ட்வெல் தொல்காப்பியம் அச்சாகவில்லை.

முன்பு எ தான் இப்போதைய ஏ, ஒ தான் இப்போதைய ஓ. எ, ஒ மீது புள்ளி வைத்தால் உயிர், உயிர்மெய்களில்
குறில் ஆகும். (ஆனால் ஓலைகள் புள்ளி வைத்தால் சீக்கிரம் அழிபடும் என்பதால், தொல்காப்பியர் சொன்ன முறை
இல்லாது போயிற்று,) கிரந்த எழுத்து யூனிகோடில் எ, ஒ பழைய வடிவங்கள் பார்க்கலாம். தேவாரம், நாலாயிர பிரபந்தம்
எழுத கிரந்த எ, ஒ மீது புள்ளியிடலாம். மலையாள பிளாக்கில் கிரந்த எழுத்து ஃபாண்ட்டில். அப்போதுதான்
எ vs. ஏ, ஒ vs. ஓ வேறுபாடு காட்டமுடியும். வீரமாமுனிவர் செய்ததுபோல் நெடிலை குறிலாக்க இயலாது -
எனவே தொல்காப்பியர் விதியைப் பயன்படுத்தினால் (எ, ஒ மீது புள்ளி இட்டு உயிர், உயிர்மெய் குறில்கள்)
கால்ட்வெல் முதலில் குறிப்பிட்ட குறில், நெடில் வேறுபாடின்மையை நீக்கமுடியும். கிரந்த எழுத்து (சம்ஸ்கிருதம் எழுத):

மலையாளம், தேவாரம் எழுத குறில், நெடில் வேறுபாடு தேவை. இவை முன்பு இல்லை என்பதால், வடக்கே இருந்து
தமிழ் பெற்றது எழுத்து என்றார் கால்ட்வெல். அது சரியே. 

நா. கணேசன்
 

சவடால்​


On Thursday, May 22, 2014 7:38:20 PM UTC-7, Natrajan Kalpattu Narasimhan wrote:
இடியாப்பம் சிக்கலா இருந்தா என்ன சீரா இருந்தா என்ன?  இடியாப்பம் பிடிச்சிருக்கா?  சாப்பிட்டு மகிழுங்க.  காரம் புடிக்கும்னா மிளகாப் பொடி தூவி சாப்பிடுங்க.  இனிப்பு புடிக்கும்னா வெல்லப் பாகுலெ தேங்காத் துருவிப் போட்டு இடியாப்பத்தோட கலந்து சாப்பிடுங்க.சாப்பிடுங்க

வடெ எண்ணச் சொன்னா தொளெ எண்ணினானான்னு சொல்லுவாங்களே அது மாதிரி எதுக்குங்க வட்ட எளுத்தெ யாரு கொண்டாந்தாங்கங்குற ஆராய்ச்சி எல்லாம்?

சவடால் ஐயா கருத்து:
 
"மத்திய கிழக்கு அல்லது வடகிழக்கு ஆசியாவிலிருந்து சுமேரிய வரிவடிவத்தை முதலில் கொண்டுவந்தவர் யார்? தமிழ் வணிகர்களா? அசோகரா? என்ற கேள்வியும் எழுகிறது"

சுமேரியா வரிவடிவம் தமிழ் வணிகர்கள் கொண்டுவந்தார்களா? எப்போது? - என்ற கேள்வியும் எழுகிறது.

> தொல்காப்பியம் என்ற இலக்கணம் வட்டெழுத்துக்கென்று உருவானது

தொல்காப்பியம் வட்டெழுத்த்க்காகவா? வட்டெழுத்து உருவானது எப்போது?
ஒரு குறிப்பு: தமிழ் பிராமி இருந்த பல நூற்றாண்டுகளில் எழுத்து எல்லாம் நேர்கோடுதான்.

தமிழ் எழுத்து வரலாற்றுக்கு கால்ட்வெல் என்ன செய்தார்?

N. Ganesan

unread,
May 23, 2014, 11:56:56 AM5/23/14
to mint...@googlegroups.com, vallamai


On Friday, May 23, 2014 7:55:48 AM UTC-7, ஜில்ஜில் ரமாமணி wrote:

​வட்டெழுத்து அசோகரின் ​பிரமியில் இருந்து தோன்றியது என்ற தகவல் தரவுகளின் அடிப்படையில் தகவில என நிறுவப்பட்டு பல பத்தாண்டுகள் கடந்துவிட்டன


​சவடால்​


where did you get this idea?

Vattezhuththu is a direct descendant from Tamil Brahmi.

N. Ganesan

தென்காசி சுப்பிரமணியன்

unread,
May 23, 2014, 12:49:02 PM5/23/14
to vall...@googlegroups.com
//வட்டெழுத்து அசோகரின் ​பிரமியில் இருந்து தோன்றியது//

https://groups.google.com/forum/#!topic/vallamai/HzdMtjdCqa4அது என்னப்பா அசோகப் பிராமி?

அசோகனுக்கு இரண்டு நூற்றாண்டுகள் முன்னரே தோண்றிய பிராமி எப்படி அசோகனுடையதாகும்? கொஞ்சம் இந்த பதிவுக்கு யாராவது விடை சொல்லுங்க.

Nagarajan Vadivel

unread,
May 23, 2014, 12:53:07 PM5/23/14
to vallamai
அதுதான் முடிஞ்சுபோன கதை.  தரவுகள் இல்லாமல் சிந்தனைக் குதிரையைத் தட்டிவிட்டு பல விதிகளையும் நியதிகளையும் முன் வைக்க இயலும்.  ஆன்னல் அவை தரவுகள் வழியாகச் சொதித்தபின்னரே ஏற்றுக்கொள்ள முடியும்

தொல்காப்பிஅய்த்தைக் கொண்டு வரிவடிவ வளர்ச்சிப் படிநிலையை அறுதியிட முடியாது.  கால்டுவெல் ஐயர் தமிழுக்கு வரிவடிவம் வடபுலத்தில் இருந்து வந்தது என்று கூறினார்.  ஆனால் கிடைத்த தரவுகள் அது தகவில என்று நிறுவியது.

நீங்கள் புள்ளி என்று சொலவதும் கீழே கண்ட சூத்திரம் சொல்வதும் ஒன்றல்ல




இன்னும் நிறைய 

சவடால்



--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

தென்காசி சுப்பிரமணியன்

unread,
May 23, 2014, 3:10:18 PM5/23/14
to vall...@googlegroups.com

தொல்லியல் துறை மா. பவானி எழுதியவை.
வட்டெழுத்து
http://www.tamilvu.org/tdb/titles_cont/inscription/html/vatteluttu.htm 

Grantha

கிரந்தம் என்பது ஒரு வகை எழுத்து ஆகும். கிரந்தம் என்ற சொல் வடமொழியில் நூல் என்று பொருள்படும். எனவே, நூலை எழுதுவதற்கு அடிப்படையான எழுத்தையும் கிரந்தம் என்றே குறிப்படுகின்றனர். பொ.ஆ. 3ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு தமிழ் நாட்டில் தமிழில் பழமையான வடிவமான தமிழி எழுத்திலிருந்து வளர்ச்சி பெற்ற எழுத்துக்களான தமிழ் எழுத்தும் வட்டெழுத்தும் ஒரு சேர கல்வெட்டுக்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதே நேரத்தில் தமிழ் மொழியின் ஒலி அல்லாது வடமொழியின் ஒலிவரும் இடங்களிலும் வடமொழிச் சொல்லை எழுத நேர்கின்ற பொழுதும் கிரந்த எழுத்தைத் தமிழ் நாட்டில் பயன்படுத்தியிருக்கின்றனர். - Bhavani.

தென்காசி சுப்பிரமணியன்

unread,
May 23, 2014, 3:13:04 PM5/23/14
to vall...@googlegroups.com
I agree with bhavani's points. Even I got one of the great clue in this articles to claim Kalbhras Era is only from 450 -550 CE. Not from 250-550 CE.

N. Ganesan

unread,
May 23, 2014, 3:51:26 PM5/23/14
to vall...@googlegroups.com, mintamil


On Friday, May 23, 2014 9:53:07 AM UTC-7, சவடால் வைத்தி wrote:
அதுதான் முடிஞ்சுபோன கதை.  தரவுகள் இல்லாமல் சிந்தனைக் குதிரையைத் தட்டிவிட்டு பல விதிகளையும் நியதிகளையும் முன் வைக்க இயலும்.  ஆன்னல் அவை தரவுகள் வழியாகச் சொதித்தபின்னரே ஏற்றுக்கொள்ள முடியும்

தொல்காப்பிஅய்த்தைக் கொண்டு வரிவடிவ வளர்ச்சிப் படிநிலையை அறுதியிட முடியாது.  கால்டுவெல் ஐயர் தமிழுக்கு வரிவடிவம் வடபுலத்தில் இருந்து வந்தது என்று கூறினார்.  ஆனால் கிடைத்த தரவுகள் அது தகவில என்று நிறுவியது.

நீங்கள் புள்ளி என்று சொலவதும் கீழே கண்ட சூத்திரம் சொல்வதும் ஒன்றல்ல

ஆம் ஐயா. வட்டெழுத்து ப்ராமியில் இருந்தே உருவானது என்று தான் தரவுகள் கூறுகின்றன.

நா. கணேசன் 

Dhivakar

unread,
May 24, 2014, 1:27:43 AM5/24/14
to vallamai
 Kalbhras Era is only from 450 -550 CE. Not from 250-550 CE.

ஒப்புக்கொள்ளக்கூடியதே.
களப்பிரர் எப்போது வந்தனர் என்பதுதான் சரியான விதத்தில் கண்டுபிடிக்கவேண்டும். அவர்கள் அழிப்பில் கடுங்கோன் பாண்டியன் பிறகு சிம்மவிஷ்ணு (550-580/600, மகேந்திரவர்மனின் தந்தை) ஆகியோர் பங்கு கொண்டனர். 
களப்பிர அச்சுதன் பற்றிய பாடல் உள்ளது. மூவந்தரும் அடிபணிய அச்சுதகளப்பிரன் தில்லையில் இருந்ததற்கான பாடல்கள் பற்றிய குறிப்பு P T S (History of Tamils) புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். மொத்தம் மூன்று பாடல்கள். (பிறகு போடுகிறேன்). அதே சமயம் பி டி எஸ் அவர்களின் சங்க காலக் குறிப்பேடு நெருடுகிறது. 

தென்காசி சுப்பிரமணியன்

unread,
May 24, 2014, 4:20:48 AM5/24/14
to vall...@googlegroups.com
அந்த பாடல்கள் மூன்றல்ல. நான்கு. சேர சோழ பாண்டியர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாடலை பாடுவார்கல். ஆனால் பாண்டியன் மட்டும் தன்னை இந்திரனோடு ஒப்பிட்டுப் பாடுவான். அதனால் அச்சுதன் அவனுக்கு இன்னொரு தழையிட பாண்டியன் இரண்டாம் பாடல் பாடுவான். மொத்தம் 4.

K. Loganathan

unread,
May 25, 2014, 5:10:17 AM5/25/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, tolkaa...@egroups.com, meyk...@yahoogroups.com
அன்பர்களே

 பல ஆண்டுகட்கு முன் நான் சிறிது எழுத்து ஆராய்ச்சி செய்த பொழுது,  பாண்டியர்களின் வட்டெழுத்து அடிப்படையியிலேயே இந்தோநேசியாவின் காவி எழுத்துக்கள் உருவாகின என்று அறியவந்தேன் ஓர் கட்டுரையும் எழுதி அதனை தொலைத்துவிட்டேன்

ஆனால் தென்கிழக்காசிய எழுத்துக்கள் பல்லவர் கிரந்த வரிவடிலிருந்து தோன்றியதாக்வே பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன

கிழே ஓர் கட்டுரை

மூலம்:


Writing came to Insular Southeast Asia in the 8th century, brought by traders from the ancient Indian kingdom of Pallava. The Pallava script, a variant of the Grantha, was adopted by the local Javanese to write their language. While at first the script completely resembled Pallava, soon it evolved into a distinctive form called the Kawi script.

Geographically, Kawi was found primarily on Java, Bali, and southern Sumatra, but a few inscriptions have been found as far as the Philippines. This points to a more widespread use of this script in Southeast Asia, but most likely written or carved on perishable materials that have not survived to the modern day.

The Kawi script is a typical Brahmi-style syllabic alphabet where every letter represents a syllable rather than a simple sound. Three letters are used for the sounds /a/, /i/, and /u/, but only at the beginning of a word. The rest of the letters denote syllables, each with a starting consonant and the "inherent" vowel of /a/.

The following chart is the basic Kawi script.

In addition, there are a set of diacritical marks that are placed around letters to modify their phonetic value. Most of these marks are used to change the inherent vowel from /a/ to another vowel or dipthong. Two diacritical marks denote the endings /-ang/ and /-ah/. One mark actually removes the vowel completely, leaving only the consonant part of the letter.

Even though there is a mark to suppress the inherent vowel, consonant clusters are actually represented by placing two letters stacked on top of each other. The first consonant in the cluster would be the letter on the top but with its inherent vowel silenced, and the second consonant would be the letter on the bottom. For most part the regular letter forms are used on both the top and the bottom, but for the letters /ya/ and /ra/ special forms are used instead, as illustrated in the following example.

By the 13th century, the form of the Kawi script has evolved into its direct descendent, Javanese. In fact, Kawi is sometimes called Old Javanese. But in addition, the Kawi script likely gave rise to many later scripts of Indonesia, Malaysia, and Philipines such as RejangBuginese, Makasarese, TagalogMangyan, Batak, and many others. Hence the Kawi script can be considered the progenitor of writing in Insular Southeast Asia.



2014-05-25 16:13 GMT+08:00 seshadri sridharan <ssesh...@gmail.com>:
2014-05-22 22:39 GMT+05:30 சவடால் வைத்தி <radius.co...@gmail.com>
  1. பதின்மூன்றாம் நூற்றாண்டு தொடங்கி பனந்தியாரின் இலக்கணம் முதல் பல இலக்கண நூல்கள் வெளியிட்டிருந்தும் தமிழ் எழுத்தின் வரலாற்றை இவ்வாசிரியர்கள் மூடி மறைத்துவிட்டார்கள் என்ற ஐயாப்பட்டு உள்ளது
  2. இன்று வழக்கில் உள்ள தமிழ் வரிவடிவம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த வரிவடிவத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டது.  பலமுறை மாற்றம்பெற்றே இன்றுள்ள நிலையை அடைந்துள்ளது என்று மொழியியலார் குறிப்பிடுகின்றனர்
  3. தமிழகத்தில் இரண்டுவிதமான வரிவடிவங்கள் வழக்கில் இருந்தன என்றும் ஒன்று தமிழர்களால் உருவாக்கப்பட்ட வட்டெழுத்து அல்லது சேர-பாண்டிய வரிவடிவம் என்றும் மற்றொன்று சங்கதவயப்பட்ட திராவிடர்கள் உருவாக்கிய கிரந்த-தமிழ் வரிவடிவம் என்று மொழியியலார் கூறும் வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன
  4. வட்டெழுத்தின் தோற்றம் மற்றும் கோட்பாடை அறிய ஏதுவாக இரண்டு கேள்விகள் கேட்கலாம்.  
  5. ஒன்று வட்டெழுத்து தமிழகத்தில் எப்போது அறிமுகமானது?. 
  6. இரண்டு வட்டெழுத்து வரிவடிவம் தமிழர்களால் குறிப்பகத் தமிழ் வணிகர்களால் நேரடியாக மத்திய கிழக்கில் செமெடிக் அல்லது சுமேரியாவில் இருந்து கணரப்பட்டதா அல்லது அசோகரின் பிராமி வரிவடிவத்திலிருந்து மாற்றம்பெற்றதா?
  7. கல்வெட்டாய்வாளர்கள் வட்டெழுத்து ஆவணங்கள் எட்டாம் நூற்றாண்டளவுக்கே காணக்கிடைப்பதன் அடிப்படையில் தொல்காபியர் காலம் கி.பி எட்டாம் நூற்றாண்டு என்று ஒரு சாராரும் (பானினிக்கு முற்பட்ட) ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் என்ற குறிப்பின் அடிப்படையில் தொல்காப்பியர் காலம் கி.றித்து பிறப்பதற்கு முற்பட்டது என்றும் கூறுவதால் வட்டெழுத்து வரிவடிவின் தோற்றம் கி.பி யா அல்லது கி.முவா என்ற இடியாப்பச் சிக்கல் தோன்றியுள்ளது

கால்டுவெல் மற்றும் பிற அறிஞர்கள் தம் கருத்தை உரைத்த போது தமிழ்க் கல்வெட்டுகள் பற்றிய ஆய்வுகள் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை. 1940 களுக்கு பிறகுதான் அது பற்றிய தெளிவான கருத்து தோன்றியது. தமிழகத்தில் உள்ள தமிழ் பிராமி கல்வெட்டுகள் தமிழ் தான் என்று உறுதியாக தீர்மானபிறகு அதைக் கொண்டு சிறிது சிறிதாக வட்டெழுத்தைப் படித்தார்கள். அதற்கு காரணம் இடையிடையே பிராமி எழுத்தும் கலந்திருந்தது தான். வட்டெழுத்தை படிக்க ஈரெழுத்து கல்வெட்டு ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை. 

​மேலே உள்ள காசர்கோடு கல்வெட்டில் ம,ச, ர, ம ஆகிய 4 பிராமி எழுத்து தவிர மற்ற 10 எழுத்துகள்  தொடக்க கால வட்  எழுத்துகள். வட்டெழுத்தில் பட்டன் என்ற சொல்லில் ட்ட என்ற எழுத்துகளை நோக்கினால் பிராமியின் ட்ட எழுத்துகளே ஓலையில் நேர்பட எழுதினால் கிழிந்து விடும் என்பதற்காக கடிகார முள் திரிமுறையில் வலமிருந்து இடமாக சாய்த்து எழுதப்பட்டிருப்பது தெரியும். ன் எழுத்து அப்படியே சற்று நீட்டி வளைத்து எழுதப்பட்டிருப்பது தெரியும். இது வட்டெழுத்து பிராமியில் இருந்து தோன்றியது என்பதற்கு சான்று. இதன் தோற்ற காலம் 3 அல்லது 4 ஆம் நூற்றாண்டு இறுதி எனக் கொள்ளலாம்.

இந்த வட்டெழுத்தை தழுவியே 200 ஆண்டுகள் கழித்து கிரந்த எழுத்துகள் 6 ஆம் நூற்றாண்டில் பல்லவர்களால் சமற்கிருதம் எழுத கூடுதல் எழுத்துகளோடு பயனுக்குவந்தன.

வட்டெழுத்து நடுகல் கல்வெட்டுகள் 5ஆம் நூற்றாண்டு அளவிலேயே வந்து விட்டது. அதற்கும் மேலை ஆசியாவிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இன்றைய வரிவடிவம் 600 ஆண்டுகளாகத்தான் பயனில் உள்ளது எனக்கொள்ளலாம்.


சேசாத்திரி 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

தேமொழி

unread,
May 25, 2014, 1:44:07 PM5/25/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com

ஐ, ப, ய, ல எழுத்துக்களில் இக்காலதமிழ் வடிவம் தெரிகிறது எனக்கு ...



..... தேமொழி
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages