பெண்ணை வெறும் கைப்பாவையாக வைத்திருந்த காலம்! (4)

188 views
Skip to first unread message

coral shree

unread,
May 11, 2012, 4:19:35 AM5/11/12
to மின்தமிழ், vall...@googlegroups.com, தமிழ் சிறகுகள், தமிழ் வாசல், தென்றல்


பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தம்தம் 
கருமமே கட்டளைக் கல். - திருக்குறள்

பெரும்பாலும் இதுதான் பெண்களின் நிலையாக இருக்கிறது என்பதையும் கண்கூடாகவே காண முடிகிறது. கைப்பாவையாக ஆட்டுவிக்கப்படுவதும், எளிதாக கைப்பாவையாக ஆகிவிடுவதன் காரணமும் வெகு எளிதாக உணர்ச்சிவயப்படக்கூடிய உளவியல் தன்மைகளே. இதனை நல்வழியில் செயல்படுத்தி சாதனைகள் பல புரிந்து பெண்குலத்திற்கே பெருமை சேர்த்த சுதந்திரப் போராட்டத்தில் அண்ணல் காந்தியடிகளுக்கு உறுதுணையாக தம் சேவைகளையும் ஈந்து, பெண் என்பவ்ள் சமுதாயத்தில் எத்துனை முக்கியமான அங்கம் என்பதையும் நிரூபித்தவர்கள் பலர்.

19ம் நூற்றாண்டின் இறுதியில் இந்தியாவின் பெண்கள் இயக்கம் பல பாகங்களிலும், பல வடிவங்களிலும் துளிர்விட ஆரம்பித்தது. ஒன்றிணையாமல் அங்குமிங்கும்  இயங்கிக் கொண்டிருந்தபடியால் அவைகள் உறுதிப்படவில்லை. பாலகங்காதர திலகர் போன்றவர்கள் உடன்கட்டை ஏறும் வழக்கத்திற்கு எதிராக நடத்திய போராட்டம், அவர்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது. வாழ்க்கையின் உன்னதம் புரிய ஆரம்பித்தது. தங்கள் வாழ்க்கைக்கும் அர்த்தங்கள் உண்டு என்ற விழிப்புணர்வு ஏற்பட்டது.

சுதந்திரப்போராட்டத்தின் போது உப்பு சத்தியாகிரகத்தில் பெண்கள் கலந்து கொள்ள போராடித்தான் உள்ளே நுழைய முடிந்தது. கவிக்குயில் சரோஜினி நாயுடு, முத்துலட்சுமி ரெட்டி, அன்னிபெசண்ட் அம்மையார், ருக்மணிதேவி, லட்சுமிபாய் போன்றோரின் பங்களிப்பு பெண்குலத்தின் பெருமைகளை காலங்காலமாக பறை சாற்றக்கூடியது..

கார்க்கி,மைத்ரேயி போன்ற பெண் தத்துவ ஞானிகளும், சங்க காலத்தில் ஔவை , காக்கைப்பாடினியார், அங்கவை, சங்கவை போன்ற பெண்பாற் புலவர்கள் மற்றும் விறலி, பாணினி போன்ற இசைக் கலைஞர்களும்  வாழ்ந்து சிரித்திரம் படைத்துள்ளார்கள். ஆய்வாளர்களின் கருத்துப்படி கி.பி 500 காலகட்டங்களில், எழுதப்பட்ட மனுநீதியில் குழந்தைப் பருவத்தில் தந்தைக்கும், மங்கைப் பருவத்தில் கணவனுக்கும், கணவன் இறந்த பிறகு மகனுக்கும் அடிமை என்பது சொல்லப்பட்டுள்ளது. உடன்கட்டை ஏறுதல், பால்ய விவாகம், போன்ற கொடுமைகளும் சமுதாயச் சட்டமாகவே இருந்த காலத்தில், பல படையெடுப்புகளைச் சந்தித்த நமது பாரத தேசம், பல நாகரீகங்களையும் சந்திக்க வேண்டிய காலகட்டமாகவும் இருந்தது.  அலெக்ஸாண்டர் படையெடுப்பால் கிரேக்க நாகரீகம் பரவியது. முகலாயர்கள் படையெடுப்பால் பாரசீக நாகரீகம் பரவியது. ஆங்கிலேயர்களால் ஆங்கில கலாச்சாரமும் பரவியது. இத்துனைக்குப் பிறகும், நமது பண்பாடும், கலாச்சாரமும், துளியும் பிறழாமல் பாதுகாக்கப்பட்டது நம் பாரதப் பெண்களின் பெருமையாகும்.

1774 - 1855 காலகட்டங்களில் நிறுவப்பட்ட பிரம்ம சமாஜம் மூலமாக வங்க நாட்டின் தங்கம் ராஜாராம் மோகன்ராய் அவர்கள் பெண்கள் சுதந்திரம், சம உரிமை, விதவை விவாகம் போன்ற சீர்திருத்தக் கொள்கைகளை முன்வைத்தார். இவருடைய பெண் கல்வித்திட்டத்தை முழுவதும் ஆதரிக்கும் முகமாக கேசவசந்திர சென் என்பவர் 1838 - 1884 களிலேயே விக்டோரியா பெண்கள் பள்ளியைத் துவங்கினார். இது மென்மேலும் பெருகி 40 பள்ளிகளாக வளர்ச்சியும் கண்டது. பலதார மணத்தை தண்டனைக்கு உரியதாக ஆக்கியவர் ஈஸ்வரசந்திர வித்யாசாகர் என்ற முற்போக்குச் சிந்தனையாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 1872களில் பெண்ணின் திருமண வயது 14 என்று நிர்ணயிக்கப்பட்டது. 

சுவாமி விவேகானந்தரின் பிரதம சீடரான சகோதரி நிவேதிதா, விவேகானந்தர் உதவியுடன் வங்காளத்தில் பெண்கள் பள்ளிகள் பலவற்றைத் தொடங்கியதுடன் அவர்களிடையே இந்துமத உணர்வோடு சமுதாய விழிப்புணர்வும் கல்வி பற்றிய விழிப்புணர்வும் ஏற்படச் செய்தார். சுவாமி தயானந்த சரசுவதி ஆர்ய சமாஜத்தை தோற்றுவித்ததன் மூலமாக ஆண்,பெண் இருவருக்கும் சமத்துவமும், சம வாய்ப்பும் ஏற்பட வழிவகுத்தார்.. அவ்வை இல்லம் என்ற பெண்களின் பயிற்சி மையம் 1930ல் சென்னை மயிலாப்பூரில் துவக்கப்பட்டது. அன்னி பெசண்ட் அம்மையாரின் தலைமையில் மிகச் சிறப்பாகச் செயல்பட்ட இம்மையம், அவருக்குப் பிறகு திருமதி முத்துலட்சுமி ரெட்டி அவர்களால் அருமையாக வழிநடத்தப்பட்டது. தேவதாசி முறையை எதிர்த்துப் போராட்டம் நடத்தி வெற்றி கண்டவரும் இவரே. சுபாஷ் சந்திர போஸின் தேசிய ராணுவப் படையில் பெண்கள் பிரிவில் கேப்டன் லட்சுமி படைத் தலைவராக இருந்ததும் நினைவுகூரத்தக்கது. 

பெண்கள் பர்தா போடும் முறையும் படையெடுத்து வந்த அந்நிய ஆடவரிடமிருந்து அவர்களைக் காக்கும் பொருட்டே ஏற்பட்டாலும், அது அவர்களுடைய சுத்ந்திரத்திற்கு முற்றிலும் தடையாகவே இருப்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். இடைக்கால இந்தியப் பெண்களுக்கு, குறிப்பாக இந்து மதம் சார்ந்த பெண்களுக்கு கல்வி கொடுக்கப்படவில்லை. அவர்களுக்கு வீட்டு வேலைகள் தொடர்பான கல்வி மட்டுமே வழங்கப்பட்டது. ஆனால் ஒரு பிரபலமான இந்திய தத்துவவாதி வாட்சாயனர், பெண்கள் ஆய கலைகள் அறுபத்தி நான்கிலும் தேர்ச்சி கொள்ளக் கூடியவர்கள், நூற்பு, சமையல், மருத்துவ அறிவு, பாராயணம் போன்ற பல கலைகளும் அதில் அடங்கும் என்று உறுதிபடக் கூறியுள்ளதும் கருத்தில் கொள்ள வேண்டியது.

இந்து மதம் சார்ந்த சமுதாயத்தை மற்ற சமயங்களுடன் ஒப்பிடும்போது, புத்தம், சமணம் மற்றும் கிறித்துவ, சமயம் சார்ந்த சமூகங்களில் சற்று அதிகப்படியான கனிவுடனான பார்வை இருந்தது. மற்ற சமூகங்களில் பெண்களின் வாழ்க்கைத்தரம் சற்று மகிழ்ச்சியளிக்கக்கூடியதாகவே இருந்தது எனலாம். எளிதாக கல்வி பெறும் நிலையும் இருந்தது. அசோகர் காலத்தில் பெண்கள் மதபோதகர் பணியிலும் பங்கெடுத்துக் கொண்டனர். . புகழ் பெற்ற பயணி யுவான் சுவாங்கின் கூற்றுப்படி, ஹர்ஷவர்த்தனனின் சகோதரி ராஜ்யஸ்ரீ , அவரது காலத்தில் ஒரு சிறந்த அறிஞராக இருந்தார் என்பதும் விளங்குகிறது.  மற்றொரு உதாரணம் மன்னர் அசோகரின் மகள். சங்கமித்திரை தன் சகோதரன் மகேந்திரனுடன் இலங்கைக்கு புத்தமத போதனைக்காகச் சென்றார் என்பதும் தெரிய வருகிறது. 

நாடு சுதந்திரம் பெற்ற பின்பும் பெண்கள் தங்கள் பிரச்சனைகளுக்காக போராட வேண்டிய நிலையில் இருந்ததும் தவிர்க்க முடியாததாக இருந்தது.
சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆந்திரப்பிரதேசத்தில் ரோசம்மா என்றொரு சாதாரண ஏழைப் பெண்ணைப்பற்றி நம் இந்தியா முழுவதும் பேசப்பட்டது நினைவிருக்கலாம். குடிகார கணவனுக்கு வாழ்க்கைப்பட்டு, அடியும் உதையும் பட்டு, உழைத்து ஓடாய்த் தேய்ந்து போன நிலையிலும் வயிற்றுக்கு சோறு இல்லாத நிலையில் வேதனையில் சுருண்டு, முடங்கிவிடவில்லை அப்பெண்.

பாதகஞ் செய்பவரைக் கண்டால் - நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா!
மோதி மிதித்துவிடு பாப்பா! - அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா!

என்று பாரதி பாடி வைத்ததை உணர்ந்திருந்தவள், வீட்டை விட்டு வெளியே வந்து மதுக்கடையை நடத்தக்ககூடாது என்று போராடினாள். இதைக்கண்ட பாதிக்கப்பட்ட மற்ற பெண்க்ளும் ஒன்றிணைய போராட்டம் வலுப்பெற்றது. இச்செய்தி காட்டுத்தீயாக நாடு முழுவதும் பரவ, எழுச்சி கொண்ட பெண்கள் உரக்க குரல் எழுப்ப, ஆட்சியாளரின் செவியில் சென்றடைந்த அந்த குரல்கள் வெற்றிகண்டன.ஆம், ஆந்திரபிரதேசத்தில் மது ஒழிப்பு போராட்டம் வெற்றி பெற்றது. ஏழை எளிய மக்களின் வாழ்க்கைத் தரம் உயர ஆரம்பித்தது. இன்று ஆயிரக்கணக்கான ரோசம்மாக்களையும், சரோஜினி நாயுடுக்களையும் நாடு கண்டுகொண்டுதான் உள்ளது. சுதந்திரப் போராட்டத்திற்குப் பிறகு பலவிதமான வாக்குறுதிகள் பெண்களின் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்பட்டது. பல கனவுகளை பெண்களுக்கு ஏற்படுத்தியது. ஆனாலும் அவைகள் அனைத்தும் நிறைவேற்றப்படவில்லை என்பதே நிதர்சனம். 1960 - 70களில் மீண்டும் பெண்ணிய இயக்கங்கள் போராட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மேதா பட்கர் போன்றோர் களமிறங்கி செயல்பட்டதோடு பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் வெற்றி கண்டனர். விலைவாசி ஏற்றம், நிலவுடமை உரிமை, , விவசாயிகள் இயக்கம், என்று அனைத்திலும், அரசியல் கட்சிகளுடனும், தனிப்பட்ட முறையிலும், பங்குபெற ஆரம்பித்தார்கள். வரதட்சணை கொடுமைகளை எதிர்த்துப் போராட்டமும் வலுப்பெற்றது. 1997ல் பாத்திமா பீவியால் முதல் குழு அமைக்கப்பட்டு பெண்களின் சுயசக்தி (Women’s Empowerment) பற்றிய விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது. இக்குழு வங்கிக்கடனுதவி மூலமாக பெண்கள் குழுக்களாக இணைந்து பொருளீட்டவும், தம் திறமைகளை வெளிக்கொணரவும் வழிவகுத்தது. பல குடிசைத் தொழில்களும் வளர்ச்சி கண்டது.

1960களில் காமராசர் மதிய உணவுத் திட்டமும், இலவசமாக பால் வழங்கும் திட்டமும் கொண்டுவந்ததன் மூலமாக கல்வியின் விழிப்புணர்வும் ஏற்பட்டது.
சாதிய உணர்வு தலையெடுத்தபோது, அதனைக் களைந்தெறிய பெண்கள் பொதுத் தளத்திற்கு வரவேண்டும் என்று குரல் எழுப்பியவர் டாக்டர் அம்பேத்கர். பெண்களின் பேறுகால விடுப்பிற்காகவும் அவர் போராடியதும் குறிப்பிடத்தக்கது.

பெணகளின் வாழ்வியலின் மறுமலர்ச்சிக்காகப் பாடுபட்டவரில்  குறிப்பிடத்தக்கவர் ஈ.வெ.ரா.பெரியார் அவர்கள். சொல்வீரராக மட்டுமல்லாமல், செயல் வீரராகவும் தம் குடும்பத்திலேயும், பெண்களுக்கான முற்போக்குச் சிந்தையை செயல்படுத்திக் காட்டியவர். இந்திய அளவில் ஆண், பெண் உறவில் சமத்துவம் ஏற்படும் வகையில் பெண்களின் போராட்டம் அவள்ளவு எளிதாக பயனளிக்கக் கூடியதாக இல்லை என்பதையும் மறுக்க இயலாது. முன்செல்ல எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் ஒரு பின்னடைவு காத்துக் கொண்டுதான் இருக்கிறது. அவைகளையும் மீறித்தான் பெண்கள் முன்னேறிக்  கொண்டிருக்கிறார்கள் என்றால் அது மிகையாகாது. பல்வேறு முரண்பாடுகளை, குடும்பத்திலும், பணியிடங்களிலும் தங்கள் வாழ்நாள் முழுவதும் சந்திக்கும் நிலையும் சில இடங்களில் இருக்கத்தான் செய்கிறது. 

நவீன இந்தியாவில் பெண்களின் நிலையில் பெரும் முரண்பாடுகள்தான் இருக்கிறது. ஒருபுறம் வெற்றியின் உச்சத்தை விரைவாக எட்டும் அவர்கள் மறுபுறம் தம் சொந்த குடும்ப உறுப்பினர்கள் மூலமாகக்கூட பலவிதமான முட்டுக்கட்டைகளையும், எதிர்ப்புகளையும் சமாளிக்க வேண்டியவர்களாகவே இருக்கின்றனர். பண்டைய கால பெண்களை ஒப்பு நோக்கும் போது இன்றைய நவீன யுகப் பெண்கல் பல சாதனைகள் புரிந்தவர்களாக இருப்பினும், இன்னும் இவர்கள் கடக்க வேண்டிய தொலைவு மிக அதிகம் உள்ளது. குடும்பம் என்ற பாதுகாப்பு வளையத்தைவிட்டு வெளியே வரும் பெண்கள், பல்வேறு திறமைகள் என்ற கவசங்களுடன் போர்முனைக்குச் செல்வது போன்றுதான் இருக்கிறது இன்றைய வாழ்க்கை நிலை. இந்தியாவில் இன்றளவும் அந்த பாரபட்சம் உள்ளதென்பதை ஆண், பெண் பாலின விகித கணக்கெடுப்பு நிரூபிக்கிறது. இந்த 2012 கணக்கெடுப்பின்படி, 1000 ஆண்களுக்கு 940 பெண்களே உள்ளனர் என்பதும் வருத்தத்திற்குரிய விசயம். 

இத்தகைய பெரும் போராட்டங்களுக்கிடையே மலர்ந்த பெண்களின் வாழ்வில் இன்றைய பிரச்சனைகளும், ஊடகங்கள், விளம்பரங்களால் போன்றவைகள் அவர்தம் வாழ்க்கை சீர் குலைவதும் நாம் கூர்ந்து நோக்கத்தக்கது.

மேலும் பேசுவோம்.
--

                                                               
                 

Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.

DEV RAJ

unread,
May 11, 2012, 5:17:59 AM5/11/12
to வல்லமை

மக்கள் முற்றிலும் மறந்துவிட்ட ரோசம்மாவைச் சொல்லியிருப்பது
பாராட்டுக்குரியது. கல்லூரி விரிவுரையாளரான விஜய பாரதியையும்
இவ்வரிசையில் சேர்க்கலாம். பளபளப்பான அரசியல் கட்சிகளால்
அரிய களப்பணிகள் மறைக்கப் படுகின்றன; சமூக ஆர்வலர்கள்கூட
இவர்களை முற்றிலும் மறந்துவிடும் நிலை.

'சேவைக்கொரு சகோதரி’ சுப்புலட்சுமியின் பொது வாழ்க்கை
தடைகள் நிரம்பியதாக இருந்தது. பெண் சாதனையாளர்கள்
பலர் இருப்பினும் கல்பனா சாவ்லா குறிப்பிடத்தக்கவர்.

>>> வங்க நாட்டின் தங்கம் ராஜாராம் மோகன்ராய் அவர்கள்

பெண்கள் சுதந்திரம், சம உரிமை.......<<<

’ராம்மோஹன்’ என்பதுதான் அவரது பெயர்; ராய் குடும்பப்
பெயர்; ‘ராஜா’ அவருக்குப் பின்னர் கிடைத்த பட்டம்.

ராஜா ராம்மோஹன் ராய் என எழுதுவது சிறப்பு


தேவ்

On May 11, 1:19 am, coral shree <cora...@gmail.com> wrote:
> *பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தம்தம் *
> *கருமமே கட்டளைக் கல். - திருக்குறள்*

> *பாதகஞ் செய்பவரைக் கண்டால் - நாம்*
> *பயங்கொள்ள லாகாது பாப்பா!*
> *மோதி மிதித்துவிடு பாப்பா! - அவர்*
> *முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா!*

coral shree

unread,
May 11, 2012, 5:55:19 AM5/11/12
to vall...@googlegroups.com
அன்பின் திரு தேவ் சார்,

மிக்க நன்றி. உண்மைதான், விஜய பாரதி போன்றவர்கள் பாராட்டிற்குரியவர்க்ள். சகோதரி சுப்புலட்சுமியும், கல்பனா சாவ்லாவும் பற்றி விரைவில் எழுத வேண்டும்..

அன்புடன்
பவளா

2012/5/11 DEV RAJ <rde...@gmail.com>
-- /\ சிந்தனை, செயல், முன்னேற்றம் /\

Kamala Devi

unread,
May 11, 2012, 6:56:39 AM5/11/12
to vall...@googlegroups.com
பவழம்
என்னை மிகவும் கவர்ந்த எழுத்து. அன்பு கூர்ந்து தொடருங்கள்.
என்னிடமும் ஞான் ஆய்வுசெய்த அரிய பெண்களின் தொகுப்பு உண்டு.
ஆனால் பவழம் தரும் செய்தி அருமை. பால கங்காதரின் போராட்டம் வரலாற்றில் பதியவேண்டிய செய்தி.
மனமுவந்த வாழ்த்துக்கள்
அன்பு சேச்சி


Date: Fri, 11 May 2012 13:49:35 +0530
Subject: [வல்லமை] பெண்ணை வெறும் கைப்பாவையாக வைத்திருந்த காலம்! (4)
From: cor...@gmail.com
To: mint...@googlegroups.com; vall...@googlegroups.com; tamizhs...@googlegroups.com; thamiz...@googlegroups.com; thamizh...@googlegroups.com

coral shree

unread,
May 11, 2012, 7:00:35 AM5/11/12
to vall...@googlegroups.com
அன்பின் சேச்சி,

வாங்கோ.. வாங்கோ. சேச்சி, நீங்களும் பகிர்ந்து கொள்ளலாமே.. உங்களுடைய சேவைகள் குறித்த செய்திகளையாவது.. 

2012/5/11 Kamala Devi <kamalade...@hotmail.com>

பவழம்
என்னை மிகவும் கவர்ந்த எழுத்து. அன்பு கூர்ந்து தொடருங்கள்.
என்னிடமும் ஞான் ஆய்வுசெய்த அரிய பெண்களின் தொகுப்பு உண்டு.

சேச்சி தயவுசெய்து சிலவற்றையாவது பகிர்ந்து கொள்ளுங்கள்..

அன்புடன்
பவளா. 

வேந்தன் அரசு

unread,
May 11, 2012, 7:46:12 AM5/11/12
to vall...@googlegroups.com
>பாலகங்காதர திலகர் போன்றவர்கள் உடன்கட்டை ஏறும் வழக்கத்திற்கு எதிராக நடத்திய போராட்டம்,

பல் சான்றீரே பல்சான்றீரே
எனும் சங்கப்பாடலில் மகளிர் எரிபுகும் வழக்கம் இருந்தது என்றும் ஆனால் சான்றோர்கள் அதை ஆதரிக்கவில்லை என்றும் அறியலாம்.


"பிள்ளை நல்லவன் ஆவது தீயவன் ஆவதும்
 அன்னை வளர்ப்பினிலே"

பெண்களே நல்ல ஆண் இனத்தை உலகுக்கு நல்குங்கள்.

( பல இஸ்லாமிய சமூகங்களில் பெண்களின் படிப்பு இன்மையால் அங்குள்ள் பிள்ளைகள் முல்லாக்களின் உளறலை கேட்டு தீவிர வாதிகள் ஆகிறார்கள்)

ஆனால்,
"நன்னடை நல்கல் வேந்தற்கு கடனே"

நம் நாட்டு ஊழல் அமைச்சர்கள்தான் சமூகத்தில் உள்ள ஊழலுக்கு காரணம்.

--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

coral shree

unread,
May 11, 2012, 7:57:59 AM5/11/12
to vall...@googlegroups.com
வேந்தன் சார்,

நீங்கள் சொல்வதிலும் பேருண்மை இருக்கிறது. அன்னை வளர்ப்பதில்தான் ஒரு குழந்தையின் எதிர்காலம் இருக்கிறது.. அதற்குத்தான் ஒரு பெண் நல்ல சூழலில் இருக்க வேண்டும் என்கிறோம்..அப்போதுதான் அந்த குடும்பம் மேன்மை பெற முடியும். அவளுக்குரிய அங்கீகாரம், நற்செயல்களுக்கான சுதந்திரம், உரிமை , கல்வி கற்பதற்கான தளம் இவையெல்லாம் அமையும் போதுதான் குடும்பம் மற்றும் சமுதாய வளர்ச்சிக்கான அவளுடைய பங்கும் சிறக்கும் என்பதும் தெளிவு... அதற்கான முயற்சிகளும் சிறக்கும்போது சமுதாயம் கட்டாயம் மேன்மையுறும்..

அன்புடன்
பவளா.

2012/5/11 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>

-- /\ சிந்தனை, செயல், முன்னேற்றம் /\

Tn Elango

unread,
May 11, 2012, 8:12:38 AM5/11/12
to vall...@googlegroups.com
பெண்ணின் சுயம் வளர, ஆணின் புரிதல் மிக அவசியம்.
 
குடும்பம், சமுதாயம் ஆரோக்கியமாக இருக்க பெண் சுயமாக சிந்தித்தல், குடும்பத்தை வழி நடத்துதல், முடிவுகளை எடுத்தல் அவசியம் என்று ஆணும் உணர வேண்டும்.
 
அது மட்டுமல்ல. இனியும் பெண்களை ஏமாற்றிப் பிழைக்க முடியாது என்ற உண்மையையும் ஆண் வர்க்கம் உணர வேண்டும்.
 
பெண் புத்தி பின் புத்தி என்று வசனம் பேசும் ஆண்கள் ஒரு
comedy piece ஆக பாவிக்கப் படும் நாட்கள் வெகு தொலைவிலில்லை.
2012/5/11 coral shree <cor...@gmail.com>



--

Follow my blogs on  http://tnelango.blogspot.com/


coral shree

unread,
May 11, 2012, 9:14:06 AM5/11/12
to சி. ஜெயபாரதன், thamiz...@googlegroups.com, மின்தமிழ், vall...@googlegroups.com, தமிழ் சிறகுகள், தென்றல்
அன்பின் திரு ஜெயபாரதன்,

தங்களுடைய வாழ்த்திற்கு நனிநன்றி. 

அன்புடன்
பவள சங்கரி.

2012/5/11 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE_%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D

மதிப்புக்குரிய பவள சங்கரி,

இந்தியப் பெண்டிர் திறமைகளைத் திரட்டி ஒருங்கே விளக்கும் நல்ல சேமிப்புக் கட்டுரை.  பாராட்டுகள்.

அன்புடன்,
சி. ஜெயபாரதன்

+++++++++++++++++

2012/5/11 coral shree <cor...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.

coral shree

unread,
May 11, 2012, 9:23:05 AM5/11/12
to vall...@googlegroups.com
சரிதான் திரு இளங்கோ..

2012/5/11 Tn Elango <tnel...@gmail.com>

பெண்ணின் சுயம் வளர, ஆணின் புரிதல் மிக அவசியம்.
 
குடும்பம், சமுதாயம் ஆரோக்கியமாக இருக்க பெண் சுயமாக சிந்தித்தல், குடும்பத்தை வழி நடத்துதல், முடிவுகளை எடுத்தல் அவசியம் என்று ஆணும் உணர வேண்டும்.
 
அது மட்டுமல்ல. இனியும் பெண்களை ஏமாற்றிப் பிழைக்க முடியாது என்ற உண்மையையும் ஆண் வர்க்கம் உணர வேண்டும்.
 
பெண் புத்தி பின் புத்தி என்று வசனம் பேசும் ஆண்கள் ஒரு
comedy piece ஆக பாவிக்கப் படும் நாட்கள் வெகு தொலைவிலில்லை.
 
பின் புத்தி இல்லை. pin புத்தி.. கூர்மையான புத்தி..

Kamala Devi

unread,
May 11, 2012, 9:28:33 AM5/11/12
to vall...@googlegroups.com
பவழம்
பால கங்காதர் , மேலக்கர விமலன் வர்மா, சோமுலு பையா, இவர்கள் மூவருமே பெண்களுக்காக அன்று போராடியவர்கள்.
மேலாக்கர வர்மா , ஸ்த்ரீகளுக்காக போராடியபோது, அப்படியானால் ஒரு கைம்பெண்ணுக்கு நீ வாழ்வு கொடேன் ,என்று திடுதண்டியாய்
 ஒரு நாயர் கேட்க, வர்மாவின் மனைவி தம்புராட்டி,தம்புரானின் கை பிடித்து அழைத்துப்போய் அந்த புலக்குடிப்பெண்ணை விவாஹிதயாக்கும்படி
 சபையில் வைத்து கோரினாராம். எத்தகு மாசற்ற பண்பு தபிராட்டியினது பாருங்கள்.ஆனால்,
புலக்குடிபெண் அழுது நடுங்கி, அங்கிருந்து ஓடிப்போய் மறுநாளே தன்னை அழித்துக்கொண்டாளாம்.
பவழம், பெண்கள் அன்று எப்படியெல்லாம் சாதனை செய்திருக்கிறார்கள், ராம வர்மா எந்த ஸ்த்ரீகளையும் தெய்வீகமாகவே பார்த்தவர்,
ஹ்ம்ம், நிறைய இருக்கிறது, தொடருங்கள், பவழம்

அன்பு சேச்சி
http://www.kamalagaanam.blogspot.com


Date: Fri, 11 May 2012 16:30:35 +0530
Subject: Re: [வல்லமை] பெண்ணை வெறும் கைப்பாவையாக வைத்திருந்த காலம்! (4)
From: cor...@gmail.com
To: vall...@googlegroups.com

coral shree

unread,
May 11, 2012, 9:45:28 AM5/11/12
to vall...@googlegroups.com
நல்லது சேச்சி. மேலக்கர விமலன் வர்மா.. இன்று ஒரு புதிய செய்தி அறிந்து கொண்டேன் . நல்ல பகிர்வு. நன்றி.

அன்புடன்
பவளா.

Kamala Devi

unread,
May 11, 2012, 9:55:39 AM5/11/12
to vall...@googlegroups.com
விமலன் வர்மா மட்டுமல்ல. சோமுலு  பைய்யா, குழந்தை மணத்தை எதிர்த்தவர் என்பதால் அவரது 7 வயதுப்பெண்குழந்தையை
சவமாக்கி வீட்டின் முன் எறிந்துபோயினராம் காட்டுமிராண்டி பாவிகள்,.சோமுலுவின் மனைவி மறுநாளே தன்னை தீக்கிரையாக்கி வாழ்வை முடித்துக்கொண்டார்.
சோமுலு எனும் அந்த மாமனிதர் அப்பொழுதும் தன் போராட்டத்தை நிறுத்தவில்லை. அவர்து 50வது வயதுக்குள் குழந்தைகளை கல்விக்கு அனுப்ப அனுமதி பெற்ரோரிடமே கிடைத்தது. காசியில் போய் மரித்தார் அந்த மஹான்.
கமலம்
http://www.kamalagaanam.blogspot.com


Date: Fri, 11 May 2012 19:15:28 +0530

coral shree

unread,
May 11, 2012, 10:15:19 AM5/11/12
to vall...@googlegroups.com
நல்ல பகிர்வு சேச்சி, நன்றி. 

அன்புடன்
பவளா

2012/5/11 Kamala Devi <kamalade...@hotmail.com>

Innamburan Innamburan

unread,
May 11, 2012, 10:22:07 AM5/11/12
to vall...@googlegroups.com
நல்ல காரியம் செய்தாய், பவளா! என்னுடைய  தேர்வு வீண் போகவில்லை. உப்பு சத்யாக்ரஹத்தில் பெண்களின் பங்கு பற்றி படமும் போட்டு, கருத்தும் கூறியிருந்தேன். கவனித்தாயோ?
'...அன்னை வளர்ப்பதில்தான் ஒரு குழந்தையின் எதிர்காலம் இருக்கிறது.
~ சந்தேஹமில்லாமல். 
அதற்குத்தான் ஒரு பெண் நல்ல சூழலில் இருக்க வேண்டும் என்கிறோம்..
~ அடித்துக் கேட்கவேண்டிய உரிமை.
அப்போதுதான் அந்த குடும்பம் மேன்மை பெற முடியும். அவளுக்குரிய அங்கீகாரம், நற்செயல்களுக்கான சுதந்திரம், உரிமை , கல்வி கற்பதற்கான தளம் இவையெல்லாம் அமையும் போதுதான் குடும்பம் மற்றும் சமுதாய வளர்ச்சிக்கான அவளுடைய பங்கும் சிறக்கும் என்பதும் தெளிவு... அதற்கான முயற்சிகளும் சிறக்கும்போது சமுதாயம் கட்டாயம் மேன்மையுறும்.
~~ சந்தேஹமில்லாமல். 
இன்னம்பூரான்
11 05 2012


2012/5/11 coral shree <cor...@gmail.com>

coral shree

unread,
May 11, 2012, 9:17:25 PM5/11/12
to vall...@googlegroups.com
மிக்க நன்றி ஐயா. வணக்கம்.

அன்புடன்
பவளா.

2012/5/11 Innamburan Innamburan <innam...@gmail.com>

coral shree

unread,
May 18, 2012, 3:18:10 AM5/18/12
to மின்தமிழ், vall...@googlegroups.com, தமிழ் சிறகுகள், தமிழ் வாசல், தென்றல்
பெண்ணை வெறும் கைப்பாவையாக வைத்திருந்த காலம்! (5)


20ம் நூற்றாண்டில் பெண்ணிய இயக்கங்கள் நாட்டின் பல பாகங்களிலும், உயர்வான நிலையில்,உறுதி வாய்ந்ததாகவும், அதிர்வலைகளை ஏற்படுத்தக்கூடிய வகையிலுமே பரவிக்கிடக்கிறது..

உலக அரங்கில் இந்திய பெண்களின் நிலையில் இரு முரண்பாடான கோணங்களிலான பார்வையே இருக்கிறது. அதாவது ஒரு கோணத்தில் இந்திய பெண்கள் சுதந்திரப் பறவைகளாகவும், மற்றொரு கோணத்தில் மிகவும் ஒடுக்கப்பட்ட நிலையில் இருப்பதாகவும் நோக்கம் கொண்டதாக இருப்பது கூர்ந்து நோக்கத்தக்கது. 18 ஆண்டுகள் ஒரு பெண் பிரதமர் பதவி வகித்த காலத்திலேயே அந்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நிறைய நடந்து கொண்டுதானிருந்தன. நூற்றுக்கணக்கான பெண்கள் மும்பை போன்ற பெரு நகரங்களில் மருத்துவர்கள், ஆசிரியர்கள், பொறியியல் வல்லுநர்கள், செவிலியர்கள் , விஞ்ஞானிகள் என்று பதவியேற்றிருந்தாலும், அந்நாளைய செய்தித்தாள்கள், பெண்களுக்கு எதிரான கற்பழிப்பு, பாலியல் துன்புறுத்தல், கொலை போன்ற பல குற்றங்களை வெளிச்சம் போட்டு காட்டிக்கொண்டுதான் இருந்தன.. மிக உயரிய பதவிகளில் அலங்கரிக்கும் வாய்ப்பு பெற்றாலும், இது போன்ற வன்முறைகளால் அலைக்கழிக்கப்படதும் மிக சிக்கலான இருமுனைப் போராட்டமாகவே இருந்தது.

அனகோல் (Anagol) என்ற ஆய்வாளரின் கருத்துப்படி, இந்திய மகளிரின் வரலாற்றுப்பணி மூன்று முக்கிய பிரிவுகளில் அடங்குவதாகக் குறிப்பிடுகிறார். அதாவது, காலனியச் சட்டங்களின் தாக்கமும் மற்றும் மகளிரின் வாழ்க்கையின் மீது அதிகாரம், ஆணாதிக்கத்தின் மறு கட்டமைப்பு மற்றும் அதிகாரவர்கத்திலிருந்து விடுபட்ட பெண்களின் வாழ்க்கை நிலைகள் என்பதாக. காலனிய சட்டங்களின் பாடமும், பெண்களை அடக்கி ஆண்ட ஆணாதிக்கமும் பெண்களின் சுயசிந்தையை ஒடுக்கக்கூடியதாகவே இருந்தது என்கிறார். மூன்றாவது பிரிவில் வரும் பெண்கள் தங்கள் பேச்சுகள, செயல்களையும் வெளிக்கொணரும் வாய்ப்பு பெற்றிருந்தாலும், அது சபையேற முடியாத நிலையே இருந்ததாகக் கூறுகிறார். அதாவ்து, சகமனிதர்களின் ஆதரவும் சரியாக கிடைக்காத நிலையே இருந்திருக்கிறது. மகளிரை மையமாக வைத்து, அதாவது அவர்கள் பேச்சு, எழுத்து, மற்றும் சமுதாயத்தில் அவர்களின் மேலாதிக்க சொற்பொழிவுகள் குறித்து பெரும் விவாதங்கள் எழுந்தது.

இந்திய மகளிரின் முக்கிய பிரச்சனைகள் என்று எடுத்துக் கொண்டால் :முதன் முதலில் வருவது சத்து குறைபாடு. பொதுவாகவே இந்தியாவில்,நடுத்தர மற்றும், கிராமப்புறங்களில் வசிக்கும் குடும்பப் பெண்கள், வீட்டில் உள்ள அனைவரும் உண்டு முடித்தபின் இறுதியாக எஞ்சியிருக்கும் மிச்சம், மீதியை உண்ணும் வழக்கமே கொண்டிருக்கிறார்கள்.. ஏழை குடும்பங்களாக இருந்தால் கேட்கவே வேண்டாம்.. தியாக தீபங்களாக ஒளிவீசுவது குடும்பத் தலைவிகளே. 1996இன் UNICEF அறிக்கையில், உலகின் வேறு எங்கும் இல்லாத அளவிற்கு தெற்கு ஆசிய நாடுகளில்தான் பெண்களின் நலனில் சரியான அக்கரை எடுத்துக் கொள்ளப்படுவதில்லை, அதன் காரணமாக பெண்கள் சத்துக் குறைபாடு அதிக அளவில் உள்ளவர்களாகக் காணப்படுகிறார்கள் என்றும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இந்த சத்து குறைபாடு, பெண்களுக்கு இரத்த சோகையையும் ஏற்படுத்துவதோடு முழுமையான வளர்ச்சியையும் அடைய முடியாமல், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தையும் பெரும்பாலும் ஆரோக்கியமற்ற குழந்தைகளாகவே இருப்பது வருத்தத்திற்குரியது.

பெண் குழந்தை பிறந்தவுடனேயே, அடுத்து ஆண்குழந்தை பிறக்க வேண்டும் அதைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் பிறந்த குழந்தையைக்கூட சரியாக கவனிக்க முயற்சி எடுப்பதில்லை சத்து குறைபாடு அங்கேயே ஆரம்பித்துவிடுகிறது. வளர, வளர ஆண் குழந்தைக்கு கிடைக்கும் எந்தவிதமான சலுகைகளும் பெண் குழந்தைக்கு கொடுக்கப்படுவதில்லை. அதுமட்டுமல்ல, தன்னிச்சையாக எந்த ஒரு சின்ன முடிவும் அவள் எடுக்க முடியாது. தான் தனியாக வெளியில் செல்லக்கூட அனுமதி அளிக்கப்படவில்லை. எங்கு சென்றாலும், ஆண் துணை இல்லாமல் தனியே செல்ல அனுமதி அளிக்கப்படவில்லை. இது போன்ற காரணங்களே பெண்கள் தங்கள் நலன் பற்றி சிறிதும் அக்கரை கொள்ளாமல் போனதற்கு காரணமானது. 

உலகிலேயே, இந்தியாவில் மட்டுமே பேறுகால இறப்பு அதிகமாக இருக்கிறது. காரணம் பெண்களுக்கு சரிவர கொடுக்கப்படாத கவனம் மட்டுமே. இளம் பருவத்திலேயே திருமணம் முடிப்பதனால் அப்பெண்ணின் உடல் நிலை ஒரு குழந்தையை சுமப்பதற்கு தயாராக ஆகாத நிலையில் இது போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. சில நேரங்களில் இது போன்ற பிரச்சனைகள் அந்த இளம் தாயின் இறப்பில் சென்றும் முடிவடைகிறது. 

இதே போன்று இந்திய பெண்களுக்கு கல்வியறிவு கொடுப்பதிலும் பாரபட்சம் காட்டப்பட்டது. இடைக்காலத்தில் இந்திய பெண்கள் கல்வி கற்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இக்காலங்களில், பெண்களுக்கு வீட்டு வேலைகள் பழகினால் போதும் என்ற மனநிலையே நிலவியது. இன்றும் கிராமங்களில் இது போன்ற நம்பிக்கைகள் இருந்துகொண்டுதான் இருக்கிறது. பெண்களுக்கு வீட்டு வேலைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த அளவிற்கு கல்வியறிவை மேம்படுத்திக்கொள்ள வாய்ப்பளிக்கப்படவில்லை. மாறாக ஆண் குழந்தைகளுக்கு கல்வி மிக அவசியம் என்றும் கருதப்பட்டது. ஆனால் இன்றைய காலகட்டங்களில் பெண்கள் உயர்கல்வி கற்கவும் முடிகிறது என்று மகிழ்ச்சியடைந்தாலும், பெரும்பாலான கிராமப்புறங்களில் இன்றும் இடைக்கால நிலையே நிலவி வருகிறது. கிராமப்புற மக்களால், பெண்களாய் பிறப்பதே பாவம், அவர்களுக்காக அனாவசியமாக செலவு செய்வதும் வீண் என்றுகூட கருதப்பட்டது,அக்கால்ங்களில். எவ்வளவு விரைவாக திருமணம் செய்து கொடுக்க முடியும் என்ற எண்னமே பிரதானமாக இருந்தது. 

மிக மோசமான பொருளாதார நிலையே இதற்கு முக்கிய காரணியாக இருக்கிறது. என்பதே உண்மை. அடுத்த காரணம் கல்விக்கூடங்கள் வெகு தொலைவில் இருப்பதால் பெண் தனியே போனால் ஒழுக்கம் பாதிக்கப்பட்டு, அதனால் திருமண வாழ்க்கையும் பாதிக்கப்ப்டும் என்ற அச்சமும் இருப்பது.ம்தான். அதுமட்டுமல்லாமல் ஆண் ஆசிரியர் மற்றும் இருபாலர் கல்வி முறையும் பிரச்சனையாக இருந்தது. 

இந்த கல்வியறிவு குறைபாடே பல பெரிய பிரச்சனைகளுக்கு மூல காரணமாக இருந்தது. கல்வியறிவில்லாத ஒரு தாய் தம் குழந்தையை நல்ல முறையில் வளர்ப்பதிலும் சிரமம் ஏற்பட்டது. காரணம் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய ஆபத்தான வியாதிகள் பற்றிய விழிப்புணர்வுகூட அவர்களுக்கு இருப்பதில்லை. இதனால் குழந்தைகளின் ஆரோக்கியமும் வெகுவாக பாதிக்கப்படுகிறது. சுகாதாரம் பற்றிய அறிவும் இருப்பதற்கான வாய்ப்பின்மையும் குடும்ப ஆரோக்கியத்தையே பாதிக்கச் செய்துவிடுகிறது.

இந்தியாவில் பெண்களுக்கெதிரான வன்முறைகள் அதிக அளவில் நடக்கின்றன. மனதளவிலும், உடலளவிலும் பலவிதமான பாதிப்புகளுக்கு பெண்கள் ஆளாக நேரிடுகிறது. சமுதாயத்தில் மிக அதிகமாக உழைக்கும் வர்கமாக இருந்தபோதிலும், ஒரு பாதுகாப்பான வாழ்க்கை அவர்களுக்கு அமையவில்லை என்பதே வேதனையான விசயம். மணிக்கு ஒரு பலாத்காரமும், 93 நிமிடங்களுக்கு ஒரு வரதட்சணை கொடுமை தீக்குளிப்பும் நடந்து கொண்டுதானிருக்கிறது. 1955இன் இந்து மத திருமணச்சட்டம், 1956இன் இந்து வாரிசு உரிமைச் சட்டம், 1856இன் இந்து விதவை மறுமணச் சட்டம், 1937இன், இந்துமதப் பெண்களின் சொத்துரிமைச் சட்டம், 1961இன் வரதட்சணை தடைச்சட்டம் போன்ற பல சட்டங்கள் பெண்களைக் காப்பதற்காக இயற்றப்பட்டு, தண்டனைகளும் கடுமையாக வழங்கப்படிருந்தாலும், பெண்களுக்கு எதிரான குற்றங்களின் தண்டனை விகிதம் இந்தியாவைப் பொறுத்த வரையில் மிகவும் குறைவாக இருக்கிறது.

இந்திய பெண்கள் ஆண்களைவிட மிக அதிகமாகவே உழைத்தாலும், அவர்களுடைய திறன் வெளிப்பாடு குறைவாக இருப்பதனால் அதற்குரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை. வீட்டில் செய்யும் வேலைகளோ, அல்லது கணவருடன் சேர்ந்து வயலில் செய்யும் வேலைகளோ கணக்கில் கொள்ளப்படுவதே இல்லை. 1986இல் ஆந்திர பிரதேசத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், விவசாய அறுவடை மற்றும் பயிரிடும் காலங்களில் ஒரு பெண் ஒரு நாளைக்கு 15 மணி நேரம் உழைப்பதாகவும், அதே காலங்களில் ஒரு ஆண் ஏழு முதல் எட்டு மணி நேரம் மட்டுமே உழைப்பதாகவும் கண்டறிந்துள்ளனர். 

இந்தியாவில் பெண்கள் தங்கள் சொந்த வாழ்க்கையின் முக்கிய முடிவுகளைக்கூட சுயமாக நின்று எடுக்க முடியாத நிலையிலேயே உள்ளனர். ஒவ்வொரு சிறிய விசயத்திற்கும் ஆண்களின் அனுமதி வேண்டி காத்து நிற்க வேண்டியவர்களாகவே இருக்கின்றனர். குடும்பத்தின் முக்கிய முடிவுகளில் அவர்கள் கலந்தாலோசிக்கப்படுவதில்லை. தங்கள் சொந்த திருமணத்தில்கூட முடிவெடுக்கும் உரிமை பெறுவதில்லை. கிராமங்களிலும், சிற்றூர்களிலும் இன்றும் பெரும்பாலான இடங்களில் இது போன்ற நிலைகள் நீடித்துக்கொண்டுதான்  உள்ளது. அதாவது, மணப்பெண்ணை கலந்தாலோசிக்காமல் கூட அவள் திருமணத்தை முடிவு செய்கிறார்கள். அவளுடைய எதிர்காலம் அவளுக்கு வாய்க்கும் கணவனின் கைகளில்தான். கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருசன் என்று இருக்க வேண்டும். மரியாதைக்குரியவராக ஒரு கணவன் நடந்துகொள்ளாவிட்டாலும், அவனுடைய கையே அக்குடும்பத்தில் ஓங்கி இருக்கும். அதற்கு அவனுக்கு வரதட்சணையும் கொடுத்து பெண்ணையும் கொடுக்க வேண்டும். இந்த பெண் ஏதாவது மாறாக நடந்தாலோ, எதிர்த்துப் பேசினாலோ அவள் பாவம் செய்தவளாக கருதப்படுகிறாள்.

வரதட்சணை பிரச்சனை என்பது பெருங்கொடுமையாக இன்றளவும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. இடைக்கால்ங்களில் இக்கொடுமையால் பல பெண்களின் வாழ்க்கை தீக்கிரையானதும் உண்மை. சீதனம் என்ற பெயரில் நிறைய சொத்து, பத்துகள் கொண்டுவந்த பெண்களுக்கு மட்டுமே குடும்பத்தில் மரியாதை கிடைக்கும், அல்லது கொடுமைதான் மிஞ்சும். 

பிற்காலத்தில் ஒரு குடும்பத்தின் ஆணிவேராக இருக்கும்ஒரு பெண்ணின் வாழ்க்கை அக்குழந்தை பிறந்தவுடனே அது வாழ வேண்டுமா அன்றி சாக வேண்டுமா என்று கூடி முடிவெடுத்து அதன்படி செயல்படுத்தப்படுகிறது. பெண்ணாய்ப் பிறப்பதே பாவம் என்ற உறுதியான மனோபாவம் கொண்டவர்களாகவே இன்றும் பல சமுதாய மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பிற்காலத்தில் பலவிதமான துன்பங்கள் அனுபவிக்க வேண்டிவரும் என்று தாங்களாகவே கற்பனை செய்துகொண்டு சிசுவாக இருக்கும் போதே கள்ளிப்பாலோ, அல்லது கழுத்தை நெறித்தோ கொன்று போட்டுப்போய் விடுகிறார்கள். ஆதிகாலங்களில் ராஜஸ்தானில், சில ராஜபுத்திர வம்சத்தினர், பெண்ணாய்ப் பிறந்த சிசுவை பால் நிறைந்த பெரிய பாத்திரத்தில் மூழ்கடித்து கொன்றுவிடுவார்களாம். ஆனால் தொழில்நுட்பமும் மக்களின் விஞ்ஞான அறிவும் வளர வளர தற்போது மிக எளிதாக கருவிலேயே பெண் குழந்தையை அழிக்கும் வல்லமையும் பெற்றவர்களாக இருக்கிறார்கள். பெற்ற தாய்க்கு அதைத்தடுக்கும் எந்த உரிமையும் வழங்கப்படுவதில்லை. 

திருமண முறிவு காரணமான விவாகரத்து என்பது மேலை நாடுகளைவிட நம் நாட்டில் மிகவும் குறைவு என்று பெருமைபட்டுக் கொள்ளும்படி இல்லை. காரணம் பல சமுதாயங்களில் தனக்குப் பிடிக்காத மனைவியை வெகு எளிதாக தள்ளி வைத்துவிட்டு மறுமணத்திற்கு தயாராகிவிடுகின்றனர்.  இஸ்லாமிய சமூகத்தில் ‘தலாக்’ என்று மூன்று முறை சொன்னால் போதும் அந்தப் பெண்ணின் வாழ்க்கை முடிந்துவிட்டது என்பதற்கு அடையாளமாக. ஆனால் ஆணிற்கு இதுபோன்று நிர்பந்தம் கிடையாது. சமீபத்தில் இஸ்லாமிய சட்டம் பெண்களுக்கும் விவாகரத்து உரிமை வழங்கியிருக்கிறது. விவாகரத்து பெற்ற பிறகு அவர்களுக்குக் கிடைக்கும் சொற்ப ஜீவனாம்சம் கொண்டு தம் குழந்தைகளை அவள் வளர்த்து கரைசேர்க்க வேண்டும். 

உலகளவில், பெண் சிசுக்கொலை, சத்து குறைபாடு, பெண் குழந்தைகளின் ஆரம்பக்கல்வியே மறுப்பு, குறைந்த எடையுள்ள குழந்தை பிறப்பு, அதனால் இறப்பு போன்றவைகள் மற்ற நாடுகளைவிட நம் நாட்டில்தான் மிக அதிகமாக உள்ளது. ஆனால் இத்தனையும் மீறி தங்களுடைய உரிமைகளுக்காகவும், சுயசிந்தனைகளுக்காகவும், தங்கள் தனித்திறமைகளை நிரூபிக்கும் பொருட்டும் போராட என்றுமே தயங்குவதில்லை பெண்குலம். ஃபீனிக்ஸ் பறவை போன்ற சாம்பலிலிருந்தும் உயிர்த்தெழும் அந்த மன உறுதி மட்டுமே பெண்களை இன்று சகல் துறைகளிலும் உயர்த்திக் கொண்டிருக்கிறது. உடை விசயங்களிலும் தங்களுக்கு வசதியாக இருக்கும் வகையில் ஆடை அணியும் பழக்கத்தையும் ஏற்படுத்திக் கொண்டார்கள். பொழுதுபோக்கு என்றால், தம் குழந்தைகளுக்காகவும், குடும்பத்திற்காகவும் நேரம் செலவிடுதலிலே பெரும்பாலும் கழிக்கப்படுகிறது.

பெரும்பாலும், உரிமையும், தலைமைப் பதவியும் எடுத்துக் கொள்ளத் தயங்கும் மனோநிலையிலேயே ஆரம்பம் முதல் வளர்க்கப்பட்டுவிடுகிறார்கள் நம் இந்தியப் பெண்கள். இயற்கையிலேயே போராடும் குணமும், குடுமபத்தையும் சமுதாயத்தையும் வழிநடத்தும் வல்லமை பெற்றவர்களாகவே இருந்தாலும், அடக்கி ஆளப்பட்டு வந்த காரணத்தினால் அவை வெளிப்படாமல் இருந்தது. 1857ஆம் ஆண்டில், பிரித்தானிய ஆட்சியில் கவர்னர் டல்ஹவுசிக்கு எதிராக போர்க்கொடி தூக்கி தம் வீரத்தினால் பிரித்தானிய அரசாங்கத்தையே தலைகுனியச் செய்த வீராங்கனை ராணி இலக்குமிபாய் பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது. 

இன்று நம் இந்தியாவில், பெண்களின் நிலை பல வகையிலும் உயர்ந்திருப்பதற்கு ஆதாரம், உலகிலேயே மிக அதிகமான, மருத்துவம், மற்றும் அறுவை சிகிச்சை வல்லுநர்கள், விஞ்ஞானிகள், பேராசிரியர்கள், எழுத்தாளர்கள், பொறியியலாளர்கள், அணு விஞ்ஞானிகள் என அனைத்துத் துறைகளிலும் மிகச் சிறந்து விளங்கிக் கொண்டிருப்பதே. பெண்களின் மீது திணிக்கப்பட்ட பலவிதமான சமுதாயக்கட்டுப்பாடு குறித்து, ராஜாராம் மோகன்ராய், ஈஸ்வர்சந்தர் வித்யாசாகர், மகாத்மா காந்தியடிகள், பாலகங்காதர திலகர், சுவாமி தயானந்த சரசுவதி, மகாத்மா ஜோதிராவ் கோவிந்தராவ் புலே, போன்றவர்கள் ஏற்படுத்திய விழிப்புணர்வால்  பெண்கள் மெல்ல மெல்ல தங்களுடைய திறன் மற்றும் தகுதி குறித்து உணர்ந்து, அதன் மூலம் இன்று சாதித்துக்காட்டிக் கொண்டும் இருக்கிறார்கள் என்றால் அது மிகையாகாது. 1980களில் பெண்கள், ஆசிரியர், செவிலியர் போன்ற பணிகளை பாதுகாபபானது என்ற எண்ணம் கொண்டு அதன் மூலம் வெளியே வர ஆரம்பித்தனர். 1990களில் பெருமளவில் மாற்றங்கள் வந்தன. இஸ்ரேல் நாட்டில் பெண்கள் இராணுவத்திலும் அனுமதிக்கப்பட்டனர்.

பெண்கள் இன்று நுழையாத துறையே இல்லை எனலாம். ஆண்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்று ஒதுக்கி வைத்திருக்கும் பல துறைகளிலும் இன்று பெண்களும் அவர்களைவிட ஒருபடி அதிகமாகவே முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். இயற்கையிலேயே ஆழந்த ஈடுபாட்டுணர்வும், உறுதியான எண்ணமும், கடுமையாக உழைக்கும் மனோபாவமும், கொண்டவர்கள் கல்வியிலும் சிறந்து இன்று அவர்கள் நுழையாத துறையே இல்லை என்று சொல்லும் அளவிற்கு சாதித்துக் கொண்டிருக்கிறார்கள். அரசியல், இலக்கியம், விளையாட்டு, தொழில்நுட்பம், பொழுதுபோக்கு என்று அனைத்துத் துறைகளிலும் தங்களுடைய திறமைகளை நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். 

அரசியல் துறையில் இன்று பெருமளவில் சாதித்துக் கொண்டிருக்கும் பெண்களுக்கு முன்னோடியாக இருந்தவர்கள், சரோஜினி நாயுடு, விஜயலட்சுமி பண்டிட், சுசேதா கிருபளானி போன்றவர்கள். திருமதி விஜய லட்சுமி பண்டிட், இந்திய மந்திரி சபையில் பதவியேற்ற முதல் பெண்மணி என்ற பேறு பெற்றவர். சோவியத் யூனியன், அமெரிக்கா, மற்றும் கிரேட் பிரிட்டனுக்கு தூதராக பணியாற்றியதால் இவருக்கு சர்வதேச அளவில் பாராட்டுதல்களும் கிடைத்தது..சரோஜினி நாயுடுவின் மகளான பத்மா நாயுடு மேற்கு வங்க மாநில கவர்னராக நியமிக்கப்பட்டார். ஹன்ஸா மேத்தா எம்.எஸ்.பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் என்ற முக்கியத்துவம் பெற்றார்.

அண்மைக் காலங்களில் தம் ஆட்சித் திறமையால் உல்கையே திரும்பிப் பார்க்கச் செய்த இரும்புப் பெண்மணி இந்திராகாந்தி. நம் சுதந்திர இந்தியாவின் முதல் பெண் பிரதமர். அதற்குப் பிறகு சோனியா காந்தி, ஷீலா தீக்‌ஷித், உமா பாரதி, ஜெயலலிதா, வசுந்தரா ராஜி, மம்தா பேனர்ஜி போன்ற பலரும் சாதித்துக் கொண்டு இருக்கிறார்கள். 

விளையாட்டுத்துறையில் ஹாக்கி, கிரிக்கெட், போன்ற எந்த துறையையும் விட்டுவைக்கவில்லை. 2004 மற்றும் 2005ஆம் ஆண்டுகளில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி ஆசிய கிண்ணத்தை வென்று வந்தது. பி.டி.உஷா, (அத்லெடிக்ஸ்), டயானா எடுல்ஜி (கிரிக்கெட்), சானியா மிர்ஸா (டென்னிஸ்), குஞ்சராணி தேவி (எடை தூக்கும் வல்லமை) கர்ணம் மல்லேசுவரி, போன்ற பலரும் பல்வேறு விளையாட்டுகளில் சாதித்துக் காட்டியுள்ளனர். 

கலை மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் என்று எடுத்துக் கொண்டால், இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி, கவிக்குயில் லதா மங்கேஷ்கர், ஆஷா பான்ஸ்லே, மது பாலா, மற்றும் ரேகா, ஐஷ்வர்யா ராய், போன்ற பலரையும் குறிப்பிடலாம். 

இலக்கியம் என்று எடுத்துக் கொண்டால் அருந்ததி ராய், அனிதா தேசாய், கிரண் தேசாய், ஷோபா டே, ஜம்ப்பா லாஹிரி போன்றவர்கள் உலகளவில் பிரபலமாகியுள்ளார்கள். 1997இல் "God of Small Things" என்ற தன்னுடைய படைப்பிற்கு புக்கர் பரிசை வென்றார், அருந்ததி ராய். கிரண் தேசாய் 2006ம் ஆண்டின் புக்கர் பரிசை வென்றார். ஜம்ப்பா லாஹிரி புலிட்சர் பரிசை வென்றுள்ளார். 

தொழில்துறையிலும் பல பெண் சாதனையாளர்களைக் காண முடிகிறது. கிரண் மஜும்தார் ஷா, பயோகான் இந்தியாவின் நிர்வாக இயக்குநர், இவர்தான் இந்தியாவின் மிகப்பணக்காரப் பெண்மணி. மிகச் சிறந்த தொழிலதிபர் என்று சாதனை படைத்திருப்பவர். மருத்துவம் பயில ஆசைப்பட்டு அதற்கு வாய்ப்பு கிடைக்காமல் மனம் தளராமல் தொழில்துறையில் நுழைந்து அங்கேயும் சாதிக்க முடியும் என்று நிரூபித்திருக்கிறார். இது போன்று, வித்யா மோகன் சப்பாரியா (ஜம்போ குரூப்ஸ்), நைனாலால் கித்வாய், சுல்லாஜியா ஃபிரோடியா மோத்வானி, மல்லிகா ஸ்ரீனிவாசன் என்று பலர் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள். அருணா ராய், மேதா பட்கர், நர்மதா பச்சாவ் அந்தோலன், போன்ற சமூக நலனில் அக்கரை கொண்டு தம் சுயநலமற்ற சேவைகளை, மக்களூக்காக அர்ப்பணிப்பவர்களும் இருக்கிறார்கள்.. 

முதல் இந்திய விண்வெளி வீராங்கனையான கல்பனா சாவ்லா, கொலம்பியா விண்கல மையத்தின் உறுப்பினராக பணியில் இருந்தவர், தம் உயிரைப் பணயம் வைத்து சாதித்துக்காட்டியவர். தம் பெயரை அகில உலகமே அறியும் வண்ணம் பொன்னேட்டில் பொறித்து வைத்துச் சென்றுள்ளார். அவரைத் தொடர்ந்து சுனிதா வில்லியம்ஸ் இரண்டாவது பெண்மணியாக சர்வதேச விண்வெளிக்குழுவில் இணைந்துள்ளார். அதற்குப் பிறகு பல பெண்கள் இன்று சாதனை புரிந்து கொண்டிருப்பதும் நாம் அறிந்ததே.

இந்தியப் பெண்கள் இப்படி அனைத்துத் துறைகளிலும் சாதித்துக் கொண்டிருந்தாலும் அவர்களுடைய கனவு முழுமையாக நிறைவேற இன்னும் கடக்க வேண்டிய தூரம் அதிகம்!

Dhivakar

unread,
May 18, 2012, 5:12:21 AM5/18/12
to vall...@googlegroups.com
அன்பின் பவளா,

சக்தி எழுதியது அல்லவா. ரொம்ப பவர்ஃபுல் கட்டுரைத் தொடர்.. இதைப் பற்றியெல்லாம் நான் எதுவும் பேசப்படாது! எதற்கும் என்னுடைய ஒரு கருத்தை கீழ்க்கண்ட லிங்கில் கொடுத்திருக்கிறேன். முடிந்தால் படிக்கவும்.(மனைவி அமைவதெல்லாம்..)


அன்புடன்
திவாகர்

2012/5/18 coral shree <cor...@gmail.com>
-- /\ சிந்தனை, செயல், முன்னேற்றம் /\

coral shree

unread,
May 18, 2012, 6:19:13 AM5/18/12
to vall...@googlegroups.com
அன்பின் திவாகர்ஜி,

வணக்கம். தாங்கள் பாசிட்டிவாக கொடுத்துள்ள கட்டுரை படிப்பதற்கு கண்ணதாசன் பாடலுடன் மிக இனிமையாக இருக்கிறது சார். ஆனால் தங்கள் மனசாட்சி சொல்லும் எத்தனை சதவிகிதம் குடும்பத்தில் இது போன்ற நிலைகள் இருக்கிறதென்று. மேட்டுக்குடி மக்களை விடுங்க சார். கிராமங்களிலும், அன்றாடங்காய்ச்சிகளையும் சொல்லுங்கள். அடுத்த குழந்தையை வளர்ப்பதும், வீட்டு வேலை பார்ப்பதும் ஒரு சிறுமியின் தலையாய கடமையாக நீங்கள் பார்த்ததில்லையா... நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.. வேலைக்குச் சென்று அலுத்துப்போய் வீடு திரும்பும் பெண் (படித்து கல்லூரி பேராசிரியையாக இருக்கும் பெண்) சற்று பணி நிமித்தம் கால தமதமானாலும் அரக்கப்பரக்க வந்து இரவு உணவு தயாரிக்க வேண்டும். அதற்குள் 1008 வசவுகள், நண்டு, சிண்டு முதற்கொண்டு கொடுப்பார்கள்.... இது போன்ற பலரை நான் சந்தித்து வேதனைப்பட்டிருக்கிறேன் சார்.. 

அன்புடன்
பவளா

2012/5/18 Dhivakar <venkdh...@gmail.com>



--

                                                               
                 

Take life as it comes.

Tn Elango

unread,
May 18, 2012, 6:45:47 AM5/18/12
to vall...@googlegroups.com

பெண்ணை இழிவுபடுத்துவதில் மேட்டுக்குடி, பள்ளக்குடி எல்லாமே ஒன்றுதான்.
இதில் என்ன கொடுமையென்றால், நாம் இழிவுபடுத்தப்படுகிறோம் என்ற உணர்வே தோன்றாத  நிலைக்கு அவர்களைத் தள்ளுவதுதான்.
முதலில், பெற்றோர், பின் சகோதரர்கள், பிறகு, கணவன், ஒரு கட்டத்தில் பிள்ளைகள் என்று முதலாளிகள் மாறுகிறார்கள். ஆனால் அடிமைகள் அப்படியே, அதே வேலையை தொடர்ந்து கொண்டு.. கொடுமை..
2012/5/18 coral shree <cor...@gmail.com>



--

coral shree

unread,
May 18, 2012, 6:50:28 AM5/18/12
to vall...@googlegroups.com
அன்பின் திரு இளங்கோ,

அத்தனையும் பொன் எழுத்துக்களில் பொறிக்கப்பட வேண்டிய வாசகங்கள்... நன்றி நண்பரே!

அன்புடன்
பவளா.

2012/5/18 Tn Elango <tnel...@gmail.com>

Innamburan Innamburan

unread,
May 18, 2012, 7:52:06 AM5/18/12
to vall...@googlegroups.com
இதுவல்லவோ அருமையான சிந்தனை தொடர். எனக்கு ஸுபாஷிணியுடன் மிகவும் உடன்பாடு. சற்றே விளக்கமாக எழுத வேண்டும். ஆனால், நானோ எக்கச்சக்கச்சிக்கலில் மாட்டிக்கொண்டு இருக்கிறேன். 'அன்றொரு நாள்' கூட நாளையொரு நாள்' ஆக! ஊர் சுற்றல் வேறே. நாளையிலிருந்து ஒரு வாரம் செல்வனை தாக்குப்பிடிக்கணும். பெண்களே! துணைக்கு வாருங்கள். பிறகு என் கருதுக்களஇ பதிவு செய்கிறேன்.
இன்னம்பூரான்
18 05 2012

Innamburan Innamburan

unread,
May 18, 2012, 7:53:27 AM5/18/12
to vall...@googlegroups.com, mintamil, thamizhvaasal, Innamburan Innamburan


2012/5/18 Innamburan Innamburan <innam...@gmail.com>

coral shree

unread,
May 18, 2012, 8:14:27 AM5/18/12
to vall...@googlegroups.com
அன்பின் ஐயா,

மிக்க நன்றி. செல்வனுக்கு எங்களுடைய அன்பான விசாரிப்பையும் சொல்லுங்கள். 

அன்புடன்
பவளா.

2012/5/18 Innamburan Innamburan <innam...@gmail.com>

Kamala Devi

unread,
May 18, 2012, 8:19:33 AM5/18/12
to vall...@googlegroups.com
பவழம்,
அரிய பல தகவல்கள், ஆனால் காலம் காலமாய் பெண்கள் அனுபவிக்கும் சுகமான [அப்படி அந்த பெண் தெய்வங்கள் எண்ணுகிறார்கள்]
ஹிம்சைகளை எழுதியுள்ளீர்கள்.நேரம் கிட்டுமாயின் காவேரி என்ற பெயரில் எழுதும் டாக்டர் லக்‌ஷ்மி கண்ணன், [டெல்லி] எழுதிய , அருமையான சிறுகதை,
இந்தியா கேட் “ படித்துப்பாருங்கள். படித்தபெண், அக்ரஹார வீட்டில் அம்மாமிமார்களுக்கும், தடித்தடியாய் வயலில் வேலை  செய்யும் ஆண்களுக்கும் ,குழந்தைகட்கும்
சுடுசாதம்,முதல்பால் டிகாஷன் எல்லாம் கொடுத்து, அவர்கள் குறட்டை விர்ரு உறங்கியபிறகு, மிச்சமிருந்த ரசவண்டலை வழித்துப்போட்டுசாப்பிடுவதைப்பார்த்து, குமட்டிக்கொண்டு வரும் கதைநாயகியின் அற்புதமான கதை. professional feminist என்று சொல்லிக் கொள்ளும் மிதவாதிகளுக்கு அல்ல.
கதை படிக்கும் ஒவ்வொரு பெண்ணும் அந்த பெண்களை நினைத்து சுடுமணல்புழுவாய் பரிதவிக்கும் கதை. எந்த மாநாட்டுக்கு சென்றாலும் காவேரியின் கதைகளை
அடையாளப்படுத்தாமலிருந்ததில்லை.
ஆழமான நிங்ஙளின்  கட்டுரைப்பணி தொடர்க.
அன்பு சேச்சிhttp:///www.kamalagaanam.blogspot.com


Date: Fri, 18 May 2012 12:48:10 +0530
Subject: [வல்லமை] Re: பெண்ணை வெறும் கைப்பாவையாக வைத்திருந்த காலம்! (4)

coral shree

unread,
May 18, 2012, 8:23:51 AM5/18/12
to vall...@googlegroups.com
நன்றி சேச்சி. டாக்டர் லட்சுமி கண்ணனின் சிறுகதை அவசியம் வாசிக்கிறேன். 

அன்புடன்
பவளா.

2012/5/18 Kamala Devi <kamalade...@hotmail.com>

Tn Elango

unread,
May 18, 2012, 8:30:16 AM5/18/12
to vall...@googlegroups.com

வலிக்கிறது சேச்சி..
 
" கதை படிக்கும் ஒவ்வொரு பெண்ணும் அந்த பெண்களை நினைத்து"
 
படிக்கும் ஆணுக்கு அதை உணர முடியாதா என்ன? 
 
" கதை படிக்கும் ஒவ்வொருவரும் அந்த பெண்களை நினைத்து"
என்று சொல்லுங்களேன்.

2012/5/18 coral shree <cor...@gmail.com>



--

Kamala Devi

unread,
May 18, 2012, 8:35:16 AM5/18/12
to vall...@googlegroups.com
மிகவும் மிகவும் பிடித்தது இந்த பதில். ஞான் ஏற்கனவே சென்சிடிவ்,
இவ்வளவு அருமையாக பெண்களைப்பற்றி, ஆண்கள் எழுதுவது மிகவும் நெகிழவைக்கிறது.
காவேரியின் எழுத்து உன்னதம், அம்பையைவிட பெண்கள சிந்தனையில் அருமையான பார்வை கொண்டவர்.
நிங்ஙளின் கருணையிலிருந்து நிங்ஙளின் பார்யையை காண ஆவல்
http://www.kamalagaanam.blogspot.com
சேச்சி



Date: Fri, 18 May 2012 18:00:16 +0530
Subject: Re: [வல்லமை] Re: பெண்ணை வெறும் கைப்பாவையாக வைத்திருந்த காலம்! (4)
From: tnel...@gmail.com
To: vall...@googlegroups.com

Innamburan Innamburan

unread,
May 18, 2012, 8:44:39 AM5/18/12
to vall...@googlegroups.com
எனக்கும் மிகவும் பிடித்தது. லக்ஷ்மி கண்ணன் சொன்னது எல்லாவற்றையும் பார்த்திருக்கிறேன். 
என் சுற்றத்தில் என் பெண்ணியத்தில் ஆண் எனப்படுபவர்களுக்கு, பயம், கமலா.
இன்னம்பூரான்

2012/5/18 Kamala Devi <kamalade...@hotmail.com>

Kamala Devi

unread,
May 18, 2012, 8:52:11 AM5/18/12
to vall...@googlegroups.com
அன்பின் இ சார்,
லக்‌ஷ்மி கண்ணனை டெல்லி செல்லும்போது சந்திக்கும் ஆவலை உத்வேகமாக ஆக்கிய அவரது எழுத்து
அனைவரும் படிக்கவேண்டிய சாசனம்.பெண்ணியம் பற்றி அலம்பல் எழுத்தில் குப்பையை வடிக்கும் பம்மாத்துகளிடையே
டாக்டர் லக்‌ஷ்மி கண்ணன் padikkaveendiyavar.
நிங்ஙளின் சுற்றம் பார்த்து தெரியவேண்டாம் நிங்ஙளை ஞான் அறிவேன்.அன்பான நிங்ஙளின் பரிவு நிங்ஙளின் சுற்றம்வாழ் பெண்களுக்கு
கவசமாக இருக்கட்டும்
அன்புகமலம்
http://www.kamalagaanam.blogspot.com


From: innam...@gmail.com
Date: Fri, 18 May 2012 07:44:39 -0500

Subject: Re: [வல்லமை] Re: பெண்ணை வெறும் கைப்பாவையாக வைத்திருந்த காலம்! (4)

sk natarajan

unread,
May 18, 2012, 9:32:38 PM5/18/12
to thamiz...@googlegroups.com, மின்தமிழ், vall...@googlegroups.com, தமிழ் சிறகுகள், தென்றல்
ஆழ்ந்த பார்வை
அக்கால  பெண்களின் நிலை , இக்கால பெண்களின் நிலை  - ஒப்பீடு அருமை
இதில் ஒரு சதவிகிதமாவது பெண்களின் நிலை தாழ பெண்களே காரணமாக இருந்துள்ளார்கள் என்பது பதிவு செய்யப் படவில்லை
அதே போல இன்று தேர்ச்சி சதவிகிதத்திலும்,மதிப்பெண் பெறுவதிலும் முதலிடத்தில் பெண்கள் உள்ளனர்
குடும்ப உறவினில் மாறுதல் ஏற்பட்டிருப்பதே இதற்கெல்லாம் காரணம்
நல்லதொரு பதிவினை பகிர்ந்தமைக்கு நன்றி 


என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ் சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்





2012/5/18 coral shree <cor...@gmail.com>

Innamburan Innamburan

unread,
May 18, 2012, 10:33:21 PM5/18/12
to vall...@googlegroups.com
திரு சா.கி.
இதில் ஒரு சதவிகிதமாவது பெண்களின் நிலை தாழ பெண்களே காரணமாக இருந்துள்ளார்கள் என்பது பதிவு செய்யப் படவில்லை  என்பது உங்கள் கருத்தை பதிவு செய்யுங்களேன்.
இன்னம்பூரான்

2012/5/18 sk natarajan <sknatar...@gmail.com>

Mohanarangan V Srirangam

unread,
May 18, 2012, 10:43:16 PM5/18/12
to vall...@googlegroups.com
ரோபோ ஒன்றைச் செய்துவிட்டுப் பிறகு செய்வதற்கு அந்த ரோபோ காரணம் தான் மட்டும் காரணம் அன்று என்று சொன்னால் எத்தனை பொருத்தமோ அத்தனை பொருத்தம்........ 

***



2012/5/19 Innamburan Innamburan <innam...@gmail.com>

coral shree

unread,
May 18, 2012, 11:05:56 PM5/18/12
to vall...@googlegroups.com
அன்பின் திரு சா.கி. ஐயா,

தங்களுடைய கருத்திற்கு நன்றி. பெண்களின் நிலைக்கு பெண்களே ஓரளவிற்கு காரணமாக இருப்பதை நாம் கோடு காட்டியிருந்தாலும், அடுத்த பகுதியில் பெண்களின் இன்றைய நிலையைப்பற்றியும் அதன் தாக்கங்கள் மற்றும் முதலிடத்தில் மாணவிகள் தேர்ச்சி பெறுவதும் அதில் வந்துவிடும் ..வணக்க்ம.

அன்புடன்
பவளா.

2012/5/19 sk natarajan <sknatar...@gmail.com>
-- /\ சிந்தனை, செயல், முன்னேற்றம் /\



--

                                                               
                 

Take life as it comes.

Geetha Sambasivam

unread,
May 18, 2012, 11:06:17 PM5/18/12
to vall...@googlegroups.com
தன்னைத் தான் உணராததே பெரும்பாலான பெண்களின் நிலைக்குக் காரணம்.

2012/5/19 Innamburan Innamburan <innam...@gmail.com>
திரு சா.கி.
இதில் ஒரு சதவிகிதமாவது பெண்களின் நிலை தாழ பெண்களே காரணமாக இருந்துள்ளார்கள் என்பது பதிவு செய்யப் படவில்லை  என்பது உங்கள் கருத்தை பதிவு செய்யுங்களேன்.
இன்னம்பூரான்



coral shree

unread,
May 18, 2012, 11:07:38 PM5/18/12
to vall...@googlegroups.com
பாயிண்ட் மேட் ரங்கன் ஜி...

அன்புடன்
பவளா

2012/5/19 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>



--

                                                               
                 

Take life as it comes.

coral shree

unread,
May 18, 2012, 11:09:51 PM5/18/12
to vall...@googlegroups.com
கீதாஜி.. சரியாக பிடித்துவிட்டீர்கள் ... இதைத்தானே சொல்லிக்கொண்டிருக்கிறேன் நானும்.....

2012/5/19 Geetha Sambasivam <geetha...@gmail.com>

Geetha Sambasivam

unread,
May 18, 2012, 11:22:13 PM5/18/12
to vall...@googlegroups.com
இதைத் தான் வெவ்வேறு கோணங்களில் பார்க்கவும் செய்கிறோம். முதலில் பெண்கள் பெண்களாகத் தங்களை உணர வேண்டும். சமூகத்துக்குப் பயப்படாமல் தங்களைப்போன்றவர்களாலே சமூகம் என்பதையும் உணர வேண்டும்.

2012/5/19 coral shree <cor...@gmail.com>
கீதாஜி.. சரியாக பிடித்துவிட்டீர்கள் ... இதைத்தானே சொல்லிக்கொண்டிருக்கிறேன் நானும்.....


Geetha Sambasivam

unread,
May 18, 2012, 11:22:31 PM5/18/12
to vall...@googlegroups.com
இன்னிக்கு ஒன்பது மணி நேர மின் தடை.  மிச்சம் மாலை!

2012/5/19 Geetha Sambasivam <geetha...@gmail.com>
360.gif

Mohanarangan V Srirangam

unread,
May 19, 2012, 6:06:48 AM5/19/12
to vall...@googlegroups.com
கோரலம்மா! இது என்னங்க புது டெக்னீக்கா கீது? 

இப்படிச் சொன்னாலும் அதற்கும் ஆமாம்ங்கிறீங்கோ! அதற்கு மறுப்பா எதுனாச்சும் சொன்னா அதுக்கும் ஆமாங்கிறீங்கோ ! இரண்டுதுக்கும் மறுப்பா இன்னொருத்தர் சொன்னா அதுக்கும் ஓகேங்கிறீங்கோ ! 

ஒண்ணுமே புரியல்லே உலகத்துலே :-))) 

***



2012/5/19 coral shree <cor...@gmail.com>

coral shree

unread,
May 19, 2012, 6:43:50 AM5/19/12
to vall...@googlegroups.com
அன்பின் ரங்கன் ஜி,

தெள்ளத்தெளிவாக எழுதப்பட்ட என் கட்டுரையில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கேட்கலாம் அல்லது தவறு இருந்தால் சுட்டிக்காட்டலாம்.. அதை விடுத்து சம்பந்தமில்லாமல் எதையாவது சொன்னால் அதற்கு என் பதில் ஓகேதான்.... தூங்குபவர்களை தட்டி எழுப்பலாம்... தூங்குவது போல் நடிப்பவர்களை ஒன்றும் செய்ய முடியாது... அவரவர்களாக புரிந்து கொண்டால்தான் உண்டு!

இப்ப நன்னா புரிஞ்சிருக்குமே....;-)))

Nagarajan Vadivel

unread,
May 19, 2012, 7:10:52 AM5/19/12
to vall...@googlegroups.com
ஒரு நாள் முல்லா தன் அறையில் அமர்ந்து வேலையில் ஆழ்ந்திருந்தார்.  அப்போது அடுத்தவீட்டில் பெருங்குரலெடுத்து வாக்கு வாதம்.  பாத்திரங்கள் தரையில் சிதறிப் பெரும் சப்தம்
மனைவியை என்ன நட்க்கிறது என்று கேட்டார்.  வழக்கமான கனவன் மனைவி சண்டைதான் வேறென்ன என்றார்
சிறிது நேரத்தில் ஆளரவம் கேட்டது
அடுத்தவிட்டுப்பெண் ஆவேசமாக முல்லா முன் வந்து நின்றாள்
முல்லா என் விட்டுக்காரன் என்ன செய்தான் என்று கேளுங்கள் பிறகு நான் என்ன செய்தேன் என்று கேளுங்கள் என்று சொல்லி முடித்தது முல்லாவிடன் நான் செய்தது சரிதானே என்று கேட்டார்
ஆம் சரிதான் என்று சொல்ல முழுத் திருப்தியுடன் புன்னகைத்துவிட்டு நன்று கூறி நகர்ந்தார்
சிறிது நேரம் கழித்து ரத்தக் காயத்துடன் வலி தாங்க முடியாமல் மெதுவாக நகர்ந்து வந்தார் பக்கத்து வீட்டுக்காரர்
அவர் மனைவி தான் ஒன்றுமே சொல்லாதபோது அடித்த அடியையும் கொடுத்த வசவுகளையும் பட்டியலிட்டு
இவ்வளவு தூரம் அமைதியாக  நான அவரை எதித்து ஒன்றுமே பேசாமல் அமைதியாக இருந்தேனே அது சரியா என்று கேட்டார்
முல்லா ஆம் மிகவும் சரி என்று கூறி முடிக்கவும் இப்பவும் முல்லா வீட்டுச் சமையலறையில் பெரும் சப்தம் பாத்திரங்கள் உருண்டபின் பத்திரகாளியாக முல்லா முன் வந்து நின்றார் முல்லாவின் மனைவி
இப்ப எனக்கு ஒரு விடை தெரிந்தாக வேண்டும் அந்தப்பெண் வந்து கேட்டதும் அவருக்கு ஆதரவாக ஆமாம் போட்டீர்கள்.  அவருக்கெதிராக அவர் கனவன் வந்து தன் கட்சியைச் சொன்தும் அவருக்கும் ஆமாம் சொல்லுகிறீர்களே நான் கேட்கிறேன் நீங்கள் இப்படிச் செய்வது சரியா என்று கேட்க
அதானே ஆமாம் ஆமாம் நீயும் சரிதான் என்றாராம்
இங்கே யாரு முல்லா யாரு முல்லா வேலை பாக்குறங்கன்னே தெரியலே
எல்லாருக்கும் சரி ஆமாம்னு சொன்னாத் தப்புங்களா?
அப்புடிச் சொல்றாங்களேன்னு டென்ஷன் ஆவது சரிங்களா?
இதெல்லாம் பொம்பளங்க சமாச்சாரம் போய் வாங்கீட்டுன வாங்கன்னா வாங்கீட்டு வர வேண்டியதுதானே என்ற அந்தக்கால இதயம் நல்லெண்ணெய் விளம்பரம் நினைவுக்கு வந்தது
ஹி ஹி நான் ஏற்கனவே வாங்கீட்டன்.  இப்ப உங்கள் முறை
நாகராசன்

2012/5/19 coral shree <cor...@gmail.com>

Mohanarangan V Srirangam

unread,
May 19, 2012, 8:37:39 AM5/19/12
to vall...@googlegroups.com
ஹி ஹி ஓகே ஓகே ;-)))

***


2012/5/19 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

Swathi Swamy

unread,
May 20, 2012, 10:12:43 AM5/20/12
to vall...@googlegroups.com
பல சமயம் நான் எழுதுவது ஏதோ ஒன்றாக இருக்க அதற்கு வேறோர் அர்த்தம் கொண்டு தலையைப் பிச்சுக்கிற மாதிரி சிலரிடமிருந்து  எதிர் கருத்து வரும் போது ரொம்பவும் அசதியாயிருக்கும் என்னடா இதுன்னு....எழுதியதற்கே பலனில்லாமல் போய்விட்ட மாதிரி வெறுமையான உணர்வு மனதில் பரவும்....

அப்பவெல்லாம  அவர்களுக்கு பதில் சொல்லாமல் ஒதுங்கிப் போய்விடுவேன்...

ஆனால் பவளா அக்காவோட டெக்னிக் சூப்பரா இருக்கும் போல இருக்கே....  எதிரணியை  குழப்பிவிட....  :):) தாங்க்ஸ் அக்கா!! :):)

அன்புடன்
சுவாதி

2012/5/19 coral shree <cor...@gmail.com>

Mohanarangan V Srirangam

unread,
May 20, 2012, 10:52:09 AM5/20/12
to vall...@googlegroups.com
எல்லாம் ஒண்ணு சேர்ந்துட்டாங்களே ! இப்பவே கன்ணைக் கட்டுதே....எப்படித்தான் மேட்ச் ஆறாங்களோ.....:-)))

***



2012/5/20 Swathi Swamy <mswat...@gmail.com>

Swathi Swamy

unread,
May 20, 2012, 10:58:22 AM5/20/12
to vall...@googlegroups.com
ஹை....அரங்கனார் ஐயாவுக்கு மீண்டும்  செலக்டிவ் அம்னீஷியா வரப் போகுதே...ஐய் ஜாலி...!!  :):)

2012/5/20 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>

Geetha Sambasivam

unread,
May 20, 2012, 11:12:07 AM5/20/12
to vall...@googlegroups.com
மேட்ச் ஆறாங்களோ.....:-)))//

மேட்ச் ஆறாங்களோ! இம்பொசிஷன் எழுதுங்க.

2012/5/20 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
எல்லாம் ஒண்ணு சேர்ந்துட்டாங்களே ! இப்பவே கன்ணைக் கட்டுதே....எப்படித்தான் மேட்ச் ஆறாங்களோ.....:-)))
333.gif

Nagarajan Vadivel

unread,
May 20, 2012, 11:17:10 AM5/20/12
to vall...@googlegroups.com
வீர அபிமன்யு வியூகத்தில மாட்டிக்கிட்டாரு
Inline image 1
சீக்கிரமா போட்டொவை மாத்தி வேற படம் போட்டுங்கங்க.  பாதுகாப்பா இருக்கும்
நாகராசன்

2012/5/20 Geetha Sambasivam <geetha...@gmail.com>
ban8.jpg
333.gif

coral shree

unread,
May 20, 2012, 12:42:30 PM5/20/12
to vall...@googlegroups.com
அன்பின் சுவாதி,

பாம்பின் கால் பாம்பறியுமோ..... அசத்திப்புட்டீங்களே... ஆகா..கிளம்பிட்டாய்ங்களே.....

அன்புடன்
பவளா..

2012/5/20 Swathi Swamy <mswat...@gmail.com>

coral shree

unread,
May 20, 2012, 12:43:41 PM5/20/12
to vall...@googlegroups.com
ரங்கன் ஜி.... ;-)))

2012/5/20 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
எல்லாம் ஒண்ணு சேர்ந்துட்டாங்களே ! இப்பவே கன்ணைக் கட்டுதே....எப்படித்தான் மேட்ச் ஆறாங்களோ.....:-)))

coral shree

unread,
May 20, 2012, 12:44:53 PM5/20/12
to vall...@googlegroups.com
கீதாஜி.....  கண்டுகொண்டேன்... கண்டுகொண்டேன்! 

2012/5/20 Geetha Sambasivam <geetha...@gmail.com>
333.gif
360.gif

coral shree

unread,
May 20, 2012, 12:46:14 PM5/20/12
to vall...@googlegroups.com
பேராசிரியர் ஐயா.. நீங்களுமா...?   நம்பமுடியவில்லை....இல்லை...ல்லை......லை..!

2012/5/20 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>
ban8.jpg
333.gif

Nagarajan Vadivel

unread,
May 20, 2012, 1:00:42 PM5/20/12
to vall...@googlegroups.com
//பேராசிரியர் ஐயா.. நீங்களுமா...?   நம்பமுடியவில்லை....இல்லை...ல்லை......லை..!//

நான் இந்த விளையாட்டில் இல்லவே இல்லை.....இல்லை...ல்லை......லை..!

எங்க வீட்டுக்கதை வேறே. கைப்பாவையெல்லாம் இல்லவே இல்லை
வளையம் இறுகுகிறது ஆனால் என்னை நோக்கியல்ல
நாகராசன்

2012/5/20 coral shree <cor...@gmail.com>
ban8.jpg
333.gif

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
May 20, 2012, 2:40:00 PM5/20/12
to vall...@googlegroups.com
பெண்ணைக் கைப்பாவையாகத்தான் வைத்திருக்கிறோம் என்று பதில் போட ஆசை. என் மனைவியிடம் இந்த பதில் போட அனுமதி கேட்டிருக்கிறேன். அவர் ஓகே சொன்னவுடன் உறுதியாக பெண்ணை நாம் அனைவரும் கைப்பாவையாகத்தான் வைத்திருக்கிறோம் என்று பதில் போட்டு விடுகிறேன். 

- இப்படிக்கு
கணவர்கள் சங்கம்
உலகமெங்கும் கிளை
பல்லாயிரம் ஆண்டு பழமையும் பெருமையும் வாய்ந்தது #அப்ரூவ்டு பை மனைவியர்கள் சங்கம்

யதார்த்தா கி.பென்னேஸ்வரன்

unread,
May 20, 2012, 2:47:19 PM5/20/12
to vall...@googlegroups.com
இங்கும் அப்படியே.  சங்கத்தில் சேர விண்ணப்பித்து இருக்கிறேன்.

பென்
--------------------------------------------------------------------------------------------------------------------
K.Penneswaran, Editor, VADAKKU VAASAL - Tamil Monthly Magazine,
5A/11032, Second Floor, Gali No.9, Sat Nagar, Karol Bagh, New Delhi-110 005
Phone: 9910031958    #  http://www.vadakkuvaasal.com
http://www.kpenneswaran.com




2012/5/21 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>

Swathi Swamy

unread,
May 20, 2012, 5:46:31 PM5/20/12
to vall...@googlegroups.com
விண்ணப்பிக்கிறதுக்கு பர்மிஷன் கேட்டீங்களா??  :):):)

2012/5/20 யதார்த்தா கி.பென்னேஸ்வரன் <penne...@gmail.com>

பிரியமுடன் பிரபு

unread,
May 20, 2012, 9:19:28 PM5/20/12
to vall...@googlegroups.com
:))

2012/5/21 Swathi Swamy <mswat...@gmail.com>



--
பிரியமுடன் பிரபு......
http://priyamudan-prabu.blogspot.com/
 
********************************** 
அன்பே கடவுள்
" கடவுள்- னா யாரு?" - " அன்பால் ஆள்பவன்"
"அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ..."

-பிரபு(ஆனந்த) சுவாமிகள்

**********************************

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
May 21, 2012, 12:25:49 AM5/21/12
to vall...@googlegroups.com
இதில் விண்ணப்பிக்க வேண்டிய அவசியமே இல்லை. இந்த பாரத தேசத்தில் பிறந்த யாவரும் இந்தியர் ஆவது போல  கல்யாணம் ஆன அனைவருமே ஆட்டோமேடிக்காக இந்த சங்கத்தில் இணைக்கப் படுகிறார்கள். 

Swathi Swamy

unread,
May 21, 2012, 12:32:42 AM5/21/12
to vall...@googlegroups.com
நீங்களா இப்படி ஏதாவது சொல்லிக்க வேண்டியது தான்..!  :):)

2012/5/21 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>
இதில் விண்ணப்பிக்க வேண்டிய அவசியமே இல்லை. இந்த பாரத தேசத்தில் பிறந்த யாவரும் இந்தியர் ஆவது போல  கல்யாணம் ஆன அனைவருமே ஆட்டோமேடிக்காக இந்த சங்கத்தில் இணைக்கப் படுகிறார்கள். 

Nagarajan Vadivel

unread,
May 21, 2012, 12:38:18 AM5/21/12
to vall...@googlegroups.com
இந்தியாவில் நிறைய சங்கள்கள் இந்தப் புலத்தில் அரும்பணியில் ஈடுபட்டுள்ளனர்
மேகாலயாவில் ஆண்கள் உரிமைக் கழகம் இயங்கிவருகிறது.  ஆனால் அந்த மாநிலத்தில் உள்ளவர்கள் மட்டுமே உறுப்பினராகத்தகுதி உள்ளவர்கள்
கேரளாவில் மனைவியிடம் அடிவாங்கி அவதிப்படுவோர்களுக்குச் சங்கம் இருக்கிறது
தமிழகத்தில் வரதட்சனை ஒழிப்புச் சட்டத்தால் காவல் பெண்மணிகள் கைக்குத்தலில் நொந்து நூலாகிப் போனவர்களுக்குச் சங்கம் இருக்கிறது
இன்னும் தேடினால் கிடைக்கும்
நாகராசன்

2012/5/21 Swathi Swamy <mswat...@gmail.com>

Swathi Swamy

unread,
May 21, 2012, 12:45:59 AM5/21/12
to vall...@googlegroups.com
முதல்ல இந்த சங்கங்களையெல்லாம் ஒழிக்கணும் ஷைலஜா!!



2012/5/21 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

Tn Elango

unread,
May 21, 2012, 12:51:12 AM5/21/12
to vall...@googlegroups.com
நகைச்சுவையாகப் பேசுவதால், அநியாயங்கள் இல்லையென்று ஆகி விடாது. அடிப்படையாக, பெண்ணை அடிமையாக நடத்தும் குணம் இன்னும் நிறையவே இருக்கிறது, நம் சமுதாயத்தில்.
 
உதாரணத்துக்கு சில கேள்விகள்.
 
1. எத்தனை கணவர்கள், மனைவி கடைசியாக உணவருந்தும்போது உடன் இருந்து company கொடுக்கிறார்கள்?( அந்த நேரம் தொல்லைக்காட்சி பார்க்காமல்), தேவைப் பட்டால், தவித்த வாய் தண்ணீருக்குக் கூட, சாப்பாட்டுக்கு இடையில், தானே எழுந்து செல்வதுதானே இன்னும் பெண்களின் நிலை.
 
2. மனைவிக்கு சமையலில் உதவி செய்வது அடிப்படைக் கடமையென்று எண்ணி உதவி செய்வோர் எத்துணை பேர்?
 
3. மனைவிக்கு உடல் நிலை சரியில்லை எனும் போது, விடுப்பு எடுத்து உடன் இருந்து கவனிப்போர் எத்துனை பேர்?
 
இன்னும் எவ்வளவோ சொல்லலாம். மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருப்பது எவ்வளவு உண்மையோ, அதே போல, இன்னும் அநியாயங்கள் நிகழ்ந்து கொண்டிருப்பதும் உண்மைதான்.
 

 
2012/5/21 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>



--

Follow my blogs on  http://tnelango.blogspot.com/


யதார்த்தா கி.பென்னேஸ்வரன்

unread,
May 21, 2012, 1:20:42 AM5/21/12
to vall...@googlegroups.com
இளங்கோ கேள்வியாகக் கேட்டதால் இந்த பதில்.

இதில் இருபுறமும் விதிவிலக்குகள் நிறைய உண்டு.  நான் பலமுறை சமைத்துப் போட்டு என் மனைவியைப் பழிவாங்கியது உண்டு.  இப்போது கூட பல வெள்ளிக்கிழமைகளில் அவளை டிவி பார்க்க உட்கார வைத்து விட்டு நான் சமைத்துப்போடுகிறேன்.

வழக்கமான சமையல் மட்டுமல்லாமல் பலகாரங்களும் செய்வேன்.  இப்போது என் பெண்கள் ஏதோ பயங்கரத்தைக் கண்டு ஓடுவது போல அலறுவதால் பலகாரங்கள் செய்வதை நிறுத்தியிருக்கிறேன்.  நான் செய்யும் சுண்டலும் மைசூர் போண்டாவும் அந்தக் காலத்தில் எங்கள் தண்ணி பார்ட்டிகளில் வெகு பிரசித்தம்.

நான் குடித்துக் கொண்டிருந்த காலங்களில் திருட்டுத்தனமாகக் குடிக்க வேண்டிய நிர்ப்பந்தம். அப்போது மனைவியை முன் அறையில் உட்கார வைத்து உள்ளே சமைத்துக் கொண்டே சரக்கடித்திருக்கிறேன்.  மதுவை விட்டொழித்த பிறகும் பல நாட்கள் அவளுக்கு சமைத்துப் போட்டிருக்கிறேன்.  பழிக்குப் பழி வேறு எப்படி வாங்குவது?   எங்கள் வீட்டில் வெளியில் சாப்பிடலாம் என்னும் அழைப்பு எப்போதும் என்னிடம்தான் வரும்.  அதே போல வருடத்தில் இருமுறைவாயாக குறைந்தது பதினைந்து நாட்களாகவது மனைவியும் நானும் வெளியில் தங்கி விட்டு வருவோம். இப்போ அநேகமாக ரிஷிகேஷ் ஆகிவிட்டது.  முன்பெல்லாம் வட இந்தியாவில் உள்ள அநேகமாக எல்லா மலை வவாசஸ்தலங்களுக்கும் சென்று வந்திருக்கிறோம்.

என் மனைவிக்கு இருமுறை ஆபரேஷன் ஆனதால், இரண்டாவது முறை ஆபரேஷன் ஆனபோது ஏறத்தாழ ஒரு வருடம் என் சமையல்தான் என் வீட்டில்.  பெரிய மகள்தான் பாவம் கஷ்டப்பட்டாள்.  சின்னவள் குழந்தை.  அதற்கு ஃபாரக்ஸ் மற்றும் தாய்ப்பால். அதனால் என் சமையலில் இருந்து அப்போது அது தப்பித்தது.

இப்போதும் மனைவிக்கு உடல்நலம் சரியில்லை என்றால் வடக்கு வாசல் அலுவலகம் பக்கம் திரும்பிக் கூடப் பார்ப்பது இல்லை.  என்னுடைய ஊழியர்கள் பட்டாசு கொளுத்தாத குறையாக முகங்களில் ஏக பரவசத்துடன் அலைந்து கொண்டிருப்பார்கள்.

நான் நாடகம், சினிமா மற்றும் நண்பர்களுடன் குடி என்று பல வருடங்களைத் தொலைத்திருக்கிறேன்.  அவற்றை அவசர அவசரமாக சரி செய்யும் முயற்சிகளை எடுத்துக் கொள்ள விழைகிறேன்.

பொதுமைப்படுத்துவது என்பது சற்று சரியில்லாத காரியமாகத் தான் தோன்றுகிறது.  எனக்குத் தெரிந்து என்னுடைய சில நண்பர்கள் மனைவியரால் சட்ட ரீதியாக மிகவும் துன்புறுத்தப்பட்டார்கள்.  ஒருவன் தற்கொலை அளவுக்குக் கூடப் போனான்.  இது போன்ற விஷயங்களை என்ன சொல்வது?

சங்கங்கள் எதுவும் செய்ய முடியாது என்றுதான் தோன்றுகிறது.  தனிமனிதர்களின் மனங்களில் பெண்ணடிமைக்கு எதிரான எண்ணங்களும் முனைப்புகளும் இருக்க வேண்டும்.

அன்புடன்

பென்னேஸ்வரன்
--------------------------------------------------------------------------------------------------------------------
K.Penneswaran, Editor, VADAKKU VAASAL - Tamil Monthly Magazine,
5A/11032, Second Floor, Gali No.9, Sat Nagar, Karol Bagh, New Delhi-110 005
Phone: 9910031958    #  http://www.vadakkuvaasal.com
http://www.kpenneswaran.com




2012/5/21 Tn Elango <tnel...@gmail.com>

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
May 21, 2012, 1:21:38 AM5/21/12
to vall...@googlegroups.com
/உதாரணத்துக்கு சில கேள்விகள்.
 
1. எத்தனை கணவர்கள், மனைவி கடைசியாக உணவருந்தும்போது உடன் இருந்து company கொடுக்கிறார்கள்?( அந்த நேரம் தொல்லைக்காட்சி பார்க்காமல்), தேவைப் பட்டால், தவித்த வாய் தண்ணீருக்குக் கூட, சாப்பாட்டுக்கு இடையில், தானே எழுந்து செல்வதுதானே இன்னும் பெண்களின் நிலை.
 
2. மனைவிக்கு சமையலில் உதவி செய்வது அடிப்படைக் கடமையென்று எண்ணி உதவி செய்வோர் எத்துணை பேர்?
 
3. மனைவிக்கு உடல் நிலை சரியில்லை எனும் போது, விடுப்பு எடுத்து உடன் இருந்து கவனிப்போர் எத்துனை பேர்?
 
இன்னும் எவ்வளவோ சொல்லலாம். மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருப்பது எவ்வளவு உண்மையோ, அதே போல, இன்னும் அநியாயங்கள் நிகழ்ந்து கொண்டிருப்பதும் உண்மைதான்.//

நிறைய நிறைய :)   ஆனால் இவை வெளித் தெரியாது.  காரணம் அப்படிச் செய்தால் புருஷனுக்கு இழுக்கென்று மனைவிகள் மறைப்பதும் காரணம். அது மட்டும் இல்லாமல், மகளைப் போல பார்த்துக் கொள்ளும் மாமியார்கள் பல  ஆயிரம் இருந்தாலும் "கொடுமைப் படுத்தும் சில " மாமியார்களை மட்டுமே சமூகமும், ஊடகமும் வெளிக்காட்டுவதைப் போல.  அல்லவை அரும்பாடு பட்டு வையத்தில் உருப்பெருக்கிக் காண்பிக்கப்படும். 

யதார்த்தா கி.பென்னேஸ்வரன்

unread,
May 21, 2012, 1:22:28 AM5/21/12
to vall...@googlegroups.com
பாருங்கள்.  நான் வளவளவென்று எழுதிய விஷயத்தை  இந்தப் பையன் எத்தனை சுருக்கமாக அழகாக எழுதியிருக்கிறார்.

அன்புடன்

பென்
--------------------------------------------------------------------------------------------------------------------
K.Penneswaran, Editor, VADAKKU VAASAL - Tamil Monthly Magazine,
5A/11032, Second Floor, Gali No.9, Sat Nagar, Karol Bagh, New Delhi-110 005
Phone: 9910031958    #  http://www.vadakkuvaasal.com
http://www.kpenneswaran.com




2012/5/21 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>
/உதாரணத்துக்கு சில கேள்விகள்.

-- /\ சிந்தனை, செயல், முன்னேற்றம் /\

Tthamizth Tthenee

unread,
May 21, 2012, 1:27:51 AM5/21/12
to vall...@googlegroups.com
கண்கூடாகப் பார்க்கும் நிகழ்ச்சிகள்  அதிர்வை ஏற்படுத்துகின்றன

 

ஒரு பெண்
 
அவள்   கணவனை  அடிக்கிறாள் ,அறைகிறாள்  என்று கேள்விப்பட்டு   கேள்விப்பட்டது மட்டுமில்லை  செய்தியை உறுதி செய்து கொண்டு   வருந்தினேன்
 
அந்தக் கணவனைப் பற்றியும் விசாரித்தேன்
 
பயந்தாங்கொள்ளி என்று ஒரு பட்டமே அளித்திருக்கின்றனர்
 
ஐய்யோ பாவம்
 
நல்ல பையன் அவன்  , எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாதவன்
தன்மானத்துக்கு பயந்து     வெளியில் சொல்லாமல் அடிமையாகி இருக்கிறான்.
 
யதேச்சையாக  நேரில்   கண்டவர்  சாட்சியத்துடன் சொல்கிறார்
 
 
 
 
 
அன்புடன்
தமிழ்த்தேனீ


2012/5/21 யதார்த்தா கி.பென்னேஸ்வரன் <penne...@gmail.com>

Tn Elango

unread,
May 21, 2012, 1:30:34 AM5/21/12
to vall...@googlegroups.com
விதிவிலக்குமில்லாத விதியுமில்லை.. என்பது போல, இவையெல்லாம் விதி விலக்குகள். நான் சொல்வது மோசமான விதிகளைப் பற்றி..

2012/5/21 Tthamizth Tthenee <rkc...@gmail.com>



--

Tthamizth Tthenee

unread,
May 21, 2012, 1:39:50 AM5/21/12
to vall...@googlegroups.com
பொதுவாகவே  பெண் கொடுமை பற்றி வெளியில் தெரியாத காலம் ஒன்று இருந்தது, நான் இல்லையென்று கூறவில்லை

 

ஆனால் தற்போதைய காலகட்டத்தில் பெண்கள் அளவுக்கு அதிகமாகவே விழிப்புணர்வு பெற்றிருக்கிறார்கள்.ஆண்கொடுமை அதிகமாக உள்ளது இந்தக் காலகட்டத்தில்
 
கணக்கெடுத்தால்    மனைவிக்கு பயந்த கணவர்கள்  தொகை அதிகமாக இருக்கும் என்பது என்  கணிப்பு.
 
நான் தைரியமாக எழுதுகிறேன். 
 
(பின் குறிப்பு)  இன்னமும்  மனைவிக்கு இதைப் படித்துக் காட்டவில்லை
 
அன்புடன்
தமிழ்த்தேனீ


2012/5/21 Tn Elango <tnel...@gmail.com>
360.gif

யதார்த்தா கி.பென்னேஸ்வரன்

unread,
May 21, 2012, 1:43:46 AM5/21/12
to vall...@googlegroups.com
இதுக்கு முந்தி ஒண்ணு எழுதியிருந்தீங்களே...

அதைப் படிச்சிக் காண்பிச்சிட்டீங்களா?


--------------------------------------------------------------------------------------------------------------------
K.Penneswaran, Editor, VADAKKU VAASAL - Tamil Monthly Magazine,
5A/11032, Second Floor, Gali No.9, Sat Nagar, Karol Bagh, New Delhi-110 005
Phone: 9910031958    #  http://www.vadakkuvaasal.com
http://www.kpenneswaran.com




2012/5/21 Tthamizth Tthenee <rkc...@gmail.com>
330.gif
360.gif

Tthamizth Tthenee

unread,
May 21, 2012, 1:51:56 AM5/21/12
to vall...@googlegroups.com
ஐயய்யோ  நான் எதுவுமே எழுதலே

 

பொய் சொல்றாங்க நம்பாதே
 
அன்புடன்
தமிழ்த்தேனீ


330.gif
360.gif

Geetha Sambasivam

unread,
May 21, 2012, 3:35:27 AM5/21/12
to vall...@googlegroups.com
1. எத்தனை கணவர்கள், மனைவி கடைசியாக உணவருந்தும்போது உடன் இருந்து company கொடுக்கிறார்கள்?( அந்த நேரம் தொல்லைக்காட்சி பார்க்காமல்), தேவைப் பட்டால், தவித்த வாய் தண்ணீருக்குக் கூட, சாப்பாட்டுக்கு இடையில், தானே எழுந்து செல்வதுதானே இன்னும் பெண்களின் நிலை.//

நாங்க சேர்ந்தே பல வருடங்களாகச் சாப்பிடுவோம்.  விருந்தினர் அதிகமாய் இருந்தால் தவிர. எனக்கும் சேர்த்து அவரே தட்டு அலம்பிப் போட்டுடுவார். எனக்கு  முடியலைனா சமைத்துக் கொண்டு தான் இருந்தார்.  இப்போத் தான் அவரால் சர்க்கரைப் பிரச்னை வந்ததில் இருந்து சமைக்க முடியலை. அப்போவும் சாதம் மட்டும் வைத்துவிட்டு, சாம்பார், ரசம், காய் தெரிந்தவர்கள் வீட்டில் சமைத்துத் தரச் சொல்லி வாங்கி வருவார். எத்தனையோ முறை நான் கணினியில் அமர்ந்து குழும மடல்கள் அல்லது வேறு வேலை செய்கையில் நான் கேட்கையில் தாகத்துக்குத் தண்ணீர் கொண்டு தருவார்.

2. மனைவிக்கு சமையலில் உதவி செய்வது அடிப்படைக் கடமையென்று எண்ணி உதவி செய்வோர் எத்துணை பேர்?//

அநேகமாய் தினம்.  இதை எங்கள் பையரும் அவர் மனைவிக்கு உதவுவதன் மூலம்  கடைப்பிடிக்கிறார்.
 
3. மனைவிக்கு உடல் நிலை சரியில்லை எனும் போது, விடுப்பு எடுத்து உடன் இருந்து கவனிப்போர் எத்துனை பேர்?//

ஆபீஸில் இருந்து அவசரமாக எத்தனையோ முறை அழைத்த உடனே வந்திருக்கார்.

அடிப்படையில் யாருக்கும் இஷ்டமில்லை என்றோ மனமில்லை என்றோ கூற முடியாது.  அணுகுமுறைகளில் மாறுபடலாம். இது பொதுவான கருத்தே. தனித்து யாரையும் கூறவில்லை. 
35B.gif

Tn Elango

unread,
May 21, 2012, 3:53:30 AM5/21/12
to vall...@googlegroups.com
அவர் அப்படி இருக்கப் போய்த்தானே, நீங்கள் இங்கே வந்து அளாவ முடிகிறது. அது மகிழ்ச்சியான நிகழ்வுதான்.
 
நான் சொல்வது போன்ற நிலை இன்னமும் பல இடங்களில் இருக்கிரது என்பதுதான் நான் வலியுறுத்த விரும்புவது.

2012/5/21 Geetha Sambasivam <geetha...@gmail.com>
35B.gif

யதார்த்தா கி.பென்னேஸ்வரன்

unread,
May 21, 2012, 3:54:42 AM5/21/12
to vall...@googlegroups.com
இந்த மனிதர் விடமாட்டார் போலிருக்கிறதே.

இன்று மாலை வீட்டுக்குப் போய் நாலு சாத்து சாத்தி விடுகிறேன். திருப்திதானே.


--------------------------------------------------------------------------------------------------------------------
K.Penneswaran, Editor, VADAKKU VAASAL - Tamil Monthly Magazine,
5A/11032, Second Floor, Gali No.9, Sat Nagar, Karol Bagh, New Delhi-110 005
Phone: 9910031958    #  http://www.vadakkuvaasal.com
http://www.kpenneswaran.com




2012/5/21 Tn Elango <tnel...@gmail.com>
35B.gif
330.gif

Tn Elango

unread,
May 21, 2012, 3:55:25 AM5/21/12
to vall...@googlegroups.com
##அநேகமாய் தினம்.  இதை எங்கள் பையரும் அவர் மனைவிக்கு உதவுவதன் மூலம்  கடைப்பிடிக்கிறார். ##
 
அசோகர் ஒங்க மகரா?  என்ற காதலிக்க நேரமில்லை டயலாக் நினைவுக்கு வருகிறது

2012/5/21 Tn Elango <tnel...@gmail.com>
35B.gif

Tn Elango

unread,
May 21, 2012, 3:55:48 AM5/21/12
to vall...@googlegroups.com
முடியுமா?

2012/5/21 யதார்த்தா கி.பென்னேஸ்வரன் <penne...@gmail.com>
இந்த மனிதர் விடமாட்டார் போலிருக்கிறதே.
35B.gif
330.gif

Geetha Sambasivam

unread,
May 21, 2012, 4:01:46 AM5/21/12
to vall...@googlegroups.com
முடியணும்!

2012/5/21 Tn Elango <tnel...@gmail.com>
முடியுமா?

2012/5/21 யதார்த்தா கி.பென்னேஸ்வரன் <penne...@gmail.com>
இந்த மனிதர் விடமாட்டார் போலிருக்கிறதே.


இன்று மாலை வீட்டுக்குப் போய் நாலு சாத்து சாத்தி விடுகிறேன். திருப்திதானே.


--------------------------------------------------------------------------------------------------------------------
K.Penneswaran, Editor, VADAKKU VAASAL - Tamil Monthly Magazine,
5A/11032, Second Floor, Gali No.9, Sat Nagar, Karol Bagh, New Delhi-110 005
Phone: 9910031958    #  http://www.vadakkuvaasal.com
http://www.kpenneswaran.com




330.gif
360.gif

Geetha Sambasivam

unread,
May 21, 2012, 4:03:44 AM5/21/12
to vall...@googlegroups.com
அவர் அப்படி இருக்கப் போய்த்தானே, நீங்கள் இங்கே வந்து அளாவ முடிகிறது. அது மகிழ்ச்சியான நிகழ்வுதான்.//

உண்மை.  மறுக்கவில்லை.  ஆனால் நானும் அது அதுக்குனு நேரம் குறிப்பிட்டு வைச்சிருக்கேன்.  அந்த நேரத்தில் மற்றவை நுழைய விடுவதில்லை கூடியவரையிலும். எப்போவானும் நம்மை மீறிப் போனால் மாற்றம் இருக்கும். மற்றபடி இப்போ உங்களோடு இங்கே பேசியதைக் கூடப் பகிர்ந்து கொள்வேன். அநேகமாய் இணைய நண்பர்கள், சிநேகிதிகள் அனைவரையும் என் மூலமாய் அவரும் அறிவார்.

2012/5/21 Tn Elango <tnel...@gmail.com>
அவர் அப்படி இருக்கப் போய்த்தானே, நீங்கள் இங்கே வந்து அளாவ முடிகிறது. அது மகிழ்ச்சியான நிகழ்வுதான்.
 
நான் சொல்வது போன்ற நிலை இன்னமும் பல இடங்களில் இருக்கிரது என்பதுதான் நான் வலியுறுத்த விரும்புவது.



360.gif

Geetha Sambasivam

unread,
May 21, 2012, 4:04:34 AM5/21/12
to vall...@googlegroups.com
ஹிஹி, அப்புறமா எங்க பையர், அம்மா என்ன மரியாதை இல்லாமல் பேசறாங்கனு நினைக்கக் கூடாது பாருங்க.  எல்லாம் ஒரு மரியாதை தான்!

2012/5/21 Tn Elango <tnel...@gmail.com>
##அநேகமாய் தினம்.  இதை எங்கள் பையரும் அவர் மனைவிக்கு உதவுவதன் மூலம்  கடைப்பிடிக்கிறார். ##
 
அசோகர் ஒங்க மகரா?  என்ற காதலிக்க நேரமில்லை டயலாக் நினைவுக்கு வருகிறது

360.gif

யதார்த்தா கி.பென்னேஸ்வரன்

unread,
May 21, 2012, 4:13:14 AM5/21/12
to vall...@googlegroups.com
முடியலைன்னாலும் நீங்க விடமாட்டீங்க போலிருக்கே சுவாமி.

ஒரு பக்கம் கீதாம்மா சொல்றாங்க அவங்க கணவரும் பையரும் சமைப்பாங்கன்னு.

நான் முன்னாடியே இருக்கிற விஷயத்தை சொல்லிட்டேன்.  அப்புறமும் விடமாடடேன்னு பிடிவாதம் பிடிக்கிறீங்கள்.  உங்க நோக்கம் தான் என்ன?

என்னைப் போன்ற அப்பாவிகள் அடி வாங்குவதா?

சீக்கிரம் முடிவுக்கு வாருங்கள்.  முடியலை.





35B.gif
330.gif

Tn Elango

unread,
May 21, 2012, 4:17:46 AM5/21/12
to vall...@googlegroups.com

அதாகப்பட்டது, இங்கே வரவா எல்லோரும் நல்லவா.  நல்லவாளா இருக்க்ப் போய்த் தான் இங்கே வரா. அவாளைப் பத்தி நான் எதுவும் சொல்லலை.
லோகத்திலே இப்படியெல்லாம் நடந்துண்டு இருக்கோல்லியோ.. அதப்பத்தி நேக்கு ஒரு வருத்தம் உண்டு. அத உங்களண்ட பகிர்ந்துண்டேன்.
அப்படி நடந்துக்கறவா (என் சொந்தக்காராளா இருந்தாலும்) யாரா இருந்தாலும் அது தப்புன்னு சொல்லி அப்பப்போ வாங்கிக் கட்டிக்கறது என் வழக்கம். புரியறதோல்லியோ..இங்கயும் அதான் போல..
ஜூட்
35B.gif
330.gif

Innamburan Innamburan

unread,
May 21, 2012, 7:21:30 AM5/21/12
to vall...@googlegroups.com
'பென்' என்னை 'பெண்' ணை பற்றி பேச ஒரு பெண் ஆணையிட்டுள்ளாள். டாக்டர் பார்க்க தாமதம் ஆனால், இங்கே 'the doctor is running late' என்பார்கள். நான் ரன்னிங்க் ரொம்ப லேட்! சீக்கிரம் வரேன்.
இன்னம்பூரான்

2012/5/21 Tn Elango <tnel...@gmail.com>

35B.gif
330.gif

Innamburan Innamburan

unread,
May 21, 2012, 7:23:50 AM5/21/12
to vall...@googlegroups.com
நான் உரையாற்றும் வேளை நெருங்கி விட்டது.
35B.gif
330.gif

S NEELAKANTAN

unread,
May 21, 2012, 7:50:44 AM5/21/12
to vall...@googlegroups.com
 நானும் நாக்பூரில் தனியாக இருந்த சமயத்தில் நன்றாக சமைக்க கற்றுக் கொண்டுவிட்டேன். அதனால்
எனக்கு கவலை இல்லை. மும்பை வந்ததற்கு பிற்பாடு சமையலில் மனைவிக்கு உதவுவோம் என்ற 
நல்ல எண்ணத்தில் அடுக்களையில் நுழைந்தால் சில சமயங்களில் அனுமதி கிடைக்கும் சில சமயங்களில்
அனுமதி கிடைக்காது. அதுவும் அவளை அப்படி பண்ணவேண்டும் இப்படி பண்ணவேண்டும் என்று அறிவுரை 
கூறினால் அவ்வளவு தான்.கோபம் வந்துவிடும் அவர்களுக்கு தன்னுடைய முக்கியத்துவம் போய்விடுமோ என்று 
அஞ்சுகிறார்கள். வாயை மூடிக்கொண்டு சமைத்ததை ஒன்றும் சொலாலாமல் சாப்பிடவேண்டும் என்று  எல்லா 
மனைவிகளும் எதிர்பார்ப்பதுண்டு. அமர்க்களம் அமர்க்களம் என்று சமையலை பற்றி சொன்னால் ஆகா வாயெல்லாம் 
பல்லு என்ன செய்வது நமக்கு வாய்க்கொழுப்பு அதிகம் ஏதாவது குற்றம் சொல்லியே கழித்துவிட்டேன்  நான் இதை
எழதுவது என்னுடைய மனைவிக்கு தெரியாது. அவள் இந்த குழுமத்தில் இல்லை. சில சமயங்களில் என்னுடைய
மெயிலை பார்ப்பதுண்டு. அப்பொழுது என்ன நடக்கிறது  என்பதை பற்றி அப்புறம் எழுதுகிறேன். 
 
நீலகண்டன் 

2012/5/21 Innamburan Innamburan <innam...@gmail.com>
35B.gif
330.gif

Innamburan Innamburan

unread,
May 21, 2012, 8:10:18 AM5/21/12
to vall...@googlegroups.com

தீன கருணாகரனே நடராஜா நீலகண்டனே

தீன கருணாகரனே நடராஜா நீலகண்டனே...

நின்னருள் புகழ்ந்து பணியும் என்னையும் இரங்கியருளும்...
மீனலோசனி மணாளா தாண்டவமாடும் சபாபதே...

பாதி மதிவேணியனே பரமேசா நீலகண்டனே

பாதி மதிவேணியனே பரமேசா நீலகண்டனே

தீன கருணாகரனே நடராஜா நீலகண்டனே...


எம்கேடீ பாடி..

யதார்த்தா கி.பென்னேஸ்வரன்

unread,
May 21, 2012, 10:53:54 AM5/21/12
to vall...@googlegroups.com
அந்த இளங்கோ அடங்கி விட்டாரா இல்லையா என்று யாராவது பார்த்துச் சொல்லுங்கள்.

 

பென்

--------------------------------------------------------------------------------------------------------------------
K.Penneswaran, Editor, VADAKKU VAASAL - Tamil Monthly Magazine,
5A/11032, Second Floor, Gali No.9, Sat Nagar, Karol Bagh, New Delhi-110 005
Phone: 9910031958    #  http://www.vadakkuvaasal.com
http://www.kpenneswaran.com




2012/5/21 Innamburan Innamburan <innam...@gmail.com>
-- /\ சிந்தனை, செயல், முன்னேற்றம் /\

Mohanarangan V Srirangam

unread,
May 21, 2012, 10:55:45 AM5/21/12
to vall...@googlegroups.com
இல்லை. இன்னும் வேப்பிலை அடிக்கலையாம்...சாமி நுனில மீதி இருக்கு.....:-)))

***


2012/5/21 யதார்த்தா கி.பென்னேஸ்வரன் <penne...@gmail.com>
அந்த இளங்கோ அடங்கி விட்டாரா இல்லையா என்று யாராவது பார்த்துச் சொல்லுங்கள்.

Geetha Sambasivam

unread,
May 21, 2012, 11:07:35 AM5/21/12
to vall...@googlegroups.com
அடங்கிட்டார்னு நினைக்கிறேன்.  மத்தியானத்துக்கு அப்புறம் ஆளே காணோமே!

2012/5/21 யதார்த்தா கி.பென்னேஸ்வரன் <penne...@gmail.com>
அந்த இளங்கோ அடங்கி விட்டாரா இல்லையா என்று யாராவது பார்த்துச் சொல்லுங்கள்.

 

பென்

--------------------------------------------------------------------------------------------------------------------
K.Penneswaran, Editor, VADAKKU VAASAL - Tamil Monthly Magazine,
5A/11032, Second Floor, Gali No.9, Sat Nagar, Karol Bagh, New Delhi-110 005
Phone: 9910031958    #  http://www.vadakkuvaasal.com
http://www.kpenneswaran.com



360.gif

Tn Elango

unread,
May 21, 2012, 11:19:11 AM5/21/12
to vall...@googlegroups.com
நாந்தான் சாயங்காலமே பதில் சொல்லி ஜூட் விட்டுட்டேன்ல. எதுக்கு செத்த பாம்ப அடிக்கறீங்க? விடுங்கப்பா வலிக்குது

அதாகப்பட்டது, இங்கே வரவா எல்லோரும் நல்லவா.  நல்லவாளா இருக்க்ப் போய்த் தான் இங்கே வரா. அவாளைப் பத்தி நான் எதுவும் சொல்லலை.
லோகத்திலே இப்படியெல்லாம் நடந்துண்டு இருக்கோல்லியோ.. அதப்பத்தி நேக்கு ஒரு வருத்தம் உண்டு. அத உங்களண்ட பகிர்ந்துண்டேன்.
அப்படி நடந்துக்கறவா (என் சொந்தக்காராளா இருந்தாலும்) யாரா இருந்தாலும் அது தப்புன்னு சொல்லி அப்பப்போ வாங்கிக் கட்டிக்கறது என் வழக்கம். புரியறதோல்லியோ..இங்கயும் அதான் போல..
ஜூட்


2012/5/21 Geetha Sambasivam <geetha...@gmail.com>
360.gif

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
May 21, 2012, 12:09:02 PM5/21/12
to vall...@googlegroups.com
பாம்பும் சாகப்பிடாது. அடிக்கவும் செய்யனும். அது எப்படி ?

யதார்த்தா கி.பென்னேஸ்வரன்

unread,
May 21, 2012, 12:15:47 PM5/21/12
to vall...@googlegroups.com
பாம்பும் சாகப்பிடாது. அடிக்கவும் செய்யனும். அது எப்படி ?


அதுதான் இங்கே மேட்டர்.  திரும்பவும் பிடித்துக் கொண்டு வாங்க அந்த இளங்கோவை.  ஜூட் விடறதாவது... வீட்டுலே கலகம் உட்க்கப் பார்க்குறாரு மனிதர்.


பென்



--------------------------------------------------------------------------------------------------------------------
K.Penneswaran, Editor, VADAKKU VAASAL - Tamil Monthly Magazine,
5A/11032, Second loor, Gali No.9, Sat Nagar, Karol Bagh, New Delhi-110 005
2012/5/21 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>
பாம்பும் சாகப்பிடாது. அடிக்கவும் செய்யனும். அது எப்படி ?



On Monday, May 21, 2012 8:49:11 PM UTC+5:30, tn elango"" wrote:
நாந்தான் சாயங்காலமே பதில் சொல்லி ஜூட் விட்டுட்டேன்ல. எதுக்கு செத்த பாம்ப அடிக்கறீங்க? விடுங்கப்பா வலிக்குது

-- /\ சிந்தனை, செயல், முன்னேற்றம் /\

330.gif

Mohanarangan V Srirangam

unread,
May 21, 2012, 12:17:59 PM5/21/12
to vall...@googlegroups.com
2012/5/21 யதார்த்தா கி.பென்னேஸ்வரன் <penne...@gmail.com>
பாம்பும் சாகப்பிடாது.

ச ச பென் சார் ஏதோ மனசுல வச்சுக்காம சொல்லிடுவாரு. அவரைப் போய் பாம்பு, அது இதுன்னு........சொல்றதை நான் வன்மையா கண்டிக்கறேன் :-)))
330.gif
Reply all
Reply to author
Forward
0 new messages