காதல் இனிது!
காலங்கள் கடந்தபோதும்
கற்பகத்தருபோல காட்சிதருவது!
கவிதைக்குள் விதையாக
சொற்பொருள் பெருகிவருவது!
முதல்கவிதையின் மூலப்பொருளாவது!
எவனையும் கவிதை எழுதவைப்பது!
என்னையும் எழுத வைத்தது!
எத்தனை முறையெழுதி ஓய்ந்தபோதும்
இன்னமும் எழுதிடத் தோன்றுவது!
கற்பனை கைகுலுக்கி வருவது!
இயற்கையும் இடம்பெறும் இடமது!
புதுப்புனல் போலவே பொங்கிடும்
இதயங்களிரண்டின் சங்கமம்!
கரைபுரண்டோடிடும் உணர்வுகள்
விடைசொல்லவரும் உறவுகள்..
உனக்கென நான் எனும்..
எனக்கென நீ எனும்..
உரிமையைத் தருகிற சொந்தம்!
உயிரினில் கலந்தே கொஞ்சும்!
மனதினில் தோன்றிடும் மின்னல்
மறுபடிமறுபடி சுழன்றிடும்!
ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே
ஆண்டவன் வழங்கிடும் பந்தம்!
இதற்கென உள்ளதோர் மகிமை
இணையென எதுவுமே இல்லை..
கணக்கினில் கூடினால் இரண்டு..
காதலில் மட்டுமே ஒன்று!!
ஆதலால் காதல்செய்வீர் என்றே
மாகவி பாரதி பாடினான்!
அன்பினில் வாழ்ந்திடும் உன்னதம்
அகிலத்தில் தழைக்கட்டும் என்றே
இம்முறை “காதல் இனிது! என்பதே
தமிழ்த்தேரின் அடுத்தத் தலைப்பாய்..
உம்மிடம் உருவாகும் கவிதை..
எம்மிடம் சேரட்டும் இனிதே!!
அடுத்தத் தலைப்பு.. காதல் இனிது!

சி. ஜெயபாரதன், கனடா
அற்றைத் திங்கள்
அவ்வெண் ணிலவில்
முற்றுப் பெறா தே
எமக்குள் இருந்த
ஒற்றுமை வேர்களைப்
பற்றிக் கொண்டு
பழங்கதை பேசினோம் !
பாடினோம் ! ஆடினோம் !
படமெடுத்து நெஞ்சில் சூடினோம் !
விடியும் வரை
கனாக் கண்டோம் !
மண்ணில் கால் படாது,
விண்ணில்
சிப்பிக்குள் முத்துண் டா
நேற்று ம
++++++++++++
தேய்பிறைக் கோலம் !
சி. ஜெயபாரதன், கனடா
அற்றைத் திங்கள்
அவ்வெண் ணிலவில்
முற்றுப் பெறா தேன்கடலில்
முத்தெடுத்தோம் !
சுற்றி வந்தோம்
சொர்க்கப் படகில் !
வசந்த காலம் !
வளர்பிறைக் கோலம் !
கட்டினோம் நீள் பாலம்
கடல் அலை மீது !
எமக்குள் இருந்த
ஒற்றுமை வேர்களைப்
பற்றிக் கொண்டு
பழங்கதை பேசினோம் !
பாடினோம் ! ஆடினோம் !
படமெடுத்து நெஞ்சில் சூடினோம் !
விடியும் வரை
கனாக் கண்டோம் !
மண்ணில் கால் படாது,
விண்ணில் மிதந்தோம் !
தாகம் மிகுந்து
மோகத் தேன் குடித்தோம்!
சிப்பிக்குள் முத்துண் டானது !
ஒப்புடன்
விதியின் ஆணையில் முடியும்,
அதிசயத் திருமணம்!
தேனிலவில் குளித்து,
சொர்க்க புரிச் சிகரம் ஏறி
இறங்கும் போது தேனீ கொட்டி
தர்க்க புரியில்
தடம் வைத்தோம் !
முழு நிலவின் கருமை ஒளி
பழுதாக்கும்
கிழித்து எம் நெஞ்சை !
நேற்று மறைந்த
வேற்றுமை விழுதெல்லாம்
மூர்க்க மாய்த் தாக்கின
முறிந்தது பாலம் !
சேயி ழைக்குக் காயம் !
நாயக னுக்குப் பெருங் காயம் !
தேய்பிறை மாயம் !
இற்றைத் திங்கள்
இவ்வெண் ணிலவில்
முற்றுப் புள்ளி முளைக்கும் !
அத்த மிக்கும் வானில்
தொத்தி எழும்
கரு நிலவு !
++++++++++++
" இதுதான் காதல் "
பார்த்த பார்வை கண்ணுக்குள் பாயும்
படம் விரித்து-விரித்து நெஞ்சுக்குள் மோதும்
தேர்ந்த சிற்பியின் கைச்சிலையாய்த் தெரியும்
வேய்ந்த கூரையிலும் ஒளியாய்ப் பரவும்
மனதைப் பிசையும் மனனப் பாடம்
நீரில் தெரியும் நிலவாய் ஒளிரும்
நினைவால் நிறையும் நெஞ்சம் குளிரும்
மலராய் மலரும் மனதும் மகிழும்
அத்தனை அழகும் புறந்தள்ளி -அவளின்
மதிவதனம் விஸ்வ ரூபம் எடுக்கும்
பாலும் படுக்கையும் விஷமாய்த் தெரியும்
நூலிடையாள் அவள் நினைவே வளரும்
மனதைத் திறந்து உள்ளே சென்று
மறுபடியும் அவள் மலர் முகம்-தெரியும்
நிலைக் கண்ணாடியிலும் அவள்
பிம்பம் தோன்றும் இதுதான் காதலா ?
கடிமணம் கழ்ந்த பின் ஒரு கணப் பிரிவிலும்
மனம் கனமாய்க் கனக்கும் கனவிலும் நினைவிலும்
அவள் முகமே தெரியும் -கண்டதும் காதல் கொண்டது
மாறி பிரிவிலும் அவளின் நினைவே நிறையும் -
இதுதான் காதல் இதுதான் காதல்
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
Sent from Gmail Mobile
சி. ஜெயபாரதன், கனடா
உடலை மெழுகாக்கி உன்னை
ஓவியமாய் உருவாக்கிச்
சிற்பமாய்ச் செதுக்கி,
ஒப்பனை செய்து
உலகுக்குக் காட்டி,
விற்பனை செய்பவன்
கற்பனைக் கலைஞன் !
உள்ளத்தைப் படையெடுத்து,
வெள்ளைப் புறாவைத் தூதுவிட்டு,
இதயத் துணைக்கோளாய்
ஈர்ப்பில் சுற்றுபவன்
ஈசல் காதலன் !
உரிமைச் சிறையி லிட்டு,
உன்னை உயிருள்ள மட்டும் மறைத்து,
உள்ள மற்ற உடலாய்,
உடமைப் பண்டமாய்,
உரிமைப் பொருளாய்,
ஓடும் கைப் பம்பரமாய்,
பசும் பொன்னாய் நிறுப்பவன்
அசுரக் கணவன் !
காதலனுக்கு வேட்கை
உன் துடிப்பு !
கலைஞனுக்கு தேவை
உன் நடிப்பு !
கணவனுக்கு வேண்டும்
உன் முடிப்பு !
கலைஞன், காதலன், கணவன் என்ற
முப்பெரும் அவதாரம்
ஒப்புடன் நிற்குமா
ஓருடலில் ?
ஒருநாள் விருந்து நீ
ஓவியக் கலைத் தூரிகைக்கு !
சிலநாள் கனவு நீ
சிந்தை புகும் காதலனுக்கு !
பலநாள் அமுத சுரபி நீ
பசும்பொன் பெறும் பதிக்கு !
வீணையாய் உனை மீட்டுவோன்
கலைஞன் !
தேனிசை நாதமாய் மூழ்க்குவோன்,
கலைஞன் !
கலைமானாய் உனை மாற்றுவோன்,
கலைஞன் !
நடன மயிலாய், நாட்டியச் சுடராய்ப்
படமெடுத் துன்னை
மதுவாய்க் காட்டுவோன் கலைஞன் !
ஊதியம் தந்து
நாடக மாடும் கலைஞன்
வாடகை வர்த்தகன் !
கள்வெறிக் கவிதையில் புரட்டிக்
காவியக் கருவாக்கி
கனவிலே தேடி ஏங்குபவன்
உன்னாசைக் காதலன் !
பொன்னுடல் மீது
போக மது ஊற்றுவோன் !
வலையிட்டுத் தலையிட்டுப்
பூவாக்கி, தேனாக்கி
தேவ மாதாக்கித்
தினமும் பூசிப்பவன்
உன் காதலன் !
உள்ளத்தைக் கொள்ளை இட்டு
உடலை மென்று விட்டு
ஓடி மறைபவன்
உன்னிச்சைக் காதலன் !
உன் காதலன் ஒரு
கணவ னில்லை !
உன் கணவன் ஒரு
காதல னில்லை !
உன் காதலன் ஒரு
கலைஞ னில்லை !
உன் கலைஞன் ஒரு
கணவ னில்லை !
உன் கணவனும் ஒரு
கலைஞ னில்லை !
உன் கலைஞனும்
ஒரு காதல னில்லை !
காதலன் கணவ னானதும்
காதல் தேய்பிறை
ஆகுது !
கணவன் காதல னாகின்
காதல் மதிலைத்
தாண்டுது !
கலைஞன் கணவ னானதும்
கலைக்கண் பிறரை
நாடுது !
கணவன் கலைஞ னாகின்
கவர்ச்சி வேறிடம்
தேடுது !
கவர்ச்சிப் பெண்ணே ! உன்
காந்த உடல் கணவனுக்கு !
அலைமோதும் உள்ளம்
காதலனுக்கு !
ஆணிவே ரான ஆத்மா
கலைஞனுக்கு !
முப்பெரும் பொறிகளை இறைவன்
ஒருவனுக்கு அளித்திடான் !
மும்மூர்த்திகள்
வேண்டாமா உனக்கு ?
+++++++++++++++++++
காதலில் மட்டுமே ஒன்று!! //
பவழா ...கவிதை அழகு!
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
///அடுத்து நானும் இங்கே அதனை அளிக்கப்போகிறேன்!!///காக்கவைப்பது .....காதலுக்கு வேண்டுமானால் சுவை சேர்ப்பதாக இருக்கலாம் ...
கவிதையை வழங்குவதற்குமா ???>>>>:):) வந்தாச்சு:)
..... தேமொழி
காதல் இனிது
ஒரு கூறையின்கீழ் வாழும்போது தெரியும்
ஒத்துப் போகிறதா இல்லையா என்று
இணைய தளத்தில் யதேச்சையாய் சந்தித்து
தொடர் சந்திப்பாய் வழியும் போதும்
கடற்கரைப் படகின் மறைவில் மடியில் படுத்து
காதலைப் பகிர்ந்து கொள்ளும் போது
இருசக்கர விசையூர்தியில் ஒட்டிக்கொண்டு
ஊரெல்லாம் சுத்தும் போது
திரையரங்கின் இருட்டிலே படம்பார்த்து
நாயக நாகியாய் மாறும் போது
அடுக்கு மாடி உணவகத்தில் அறுசுவை உணவு
குளிர் சாதன அறையில் ஒரு நாள் பகர்தல்
உயிரே நீ தானென்றும் கடைசீவரை
உடன் வரும் துணை நீதானென்றும்
வாய்க்கு வாய் பொய்யாய் சத்தியங்கள்
பறிமாரிக் கொள்ளும்போது
அத்தனையும் என்னவென்று
ஒரு கூறையின் கீழ் இருந்து
நீ உண்மையான நீயாய்,
அவன் உண்மையான அவனாய்
நிதர்சனங்களை புரிந்து விட்டுக்
கொடுத்து வாழும் போதுதான்
ஒரு கூறையின் கீழிருந்து வாழும்போது
உண்மையான காதல்தானா என்று
அத்தனையும் புரியும். புரிந்தால் தெரியும்
காதல் இனிதென்று
அன்புடன்
தமிழ்த்தேனீ

-இனியொரு விதி செய்வோம்
துரை.ந.உ தீயில்லாமல் தாபம் ஏற்றும் ஜ்வாலை தனிமையடீ-நீதீண்டியணைத்தால் மட்டும் வாழ்வில் சேரும் இனிமையடீ!
.gif?part=0.1&view=1)
காதல் இனிது==========================================ருத்ரா
செம்பஞ்சு மேகங்களே.கடப்பாரை தூக்கி வருகிறார்கள்.உங்களை தூளாக்க.அன்பே சிவம் என்பதில்அன்புக்குள் நீங்கள்.பாவம்உடைவது எல்லாம்சிவமே சிவமே சிவம் தானே!

===========================================
வாராது நழுவுகிறாய்வசப்படுத்த நினக்கும்போதெல்லாம்
கையணைப்பில் அடங்க மறுக்கும்
காற்றாகக் கடக்கின்றாய்
.gif?part=0.1&view=1)
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
ஆடியிலே காற்றடிக்கும்
அம்மியையே பறக்க வைக்கும்
புரட்டாசியில் பொன்னுருகக் காய்ந்து
மண்ணுருகப் பெய்யும் என்றெல்லாம்
எதிர்பார்த்துப் பொய்த்த மழை
மானாடி மயிலாடி மற்றவைகள்
தானாடிக் காத்திருந்து காத்திருந்து
ஏமாற்றம் தந்த மழை
இயல்பான சுழற்சியினால்
இயற்கையின் எழுச்சியினால்
திரண்டெழுந்த கார்முகிலின்
கருணையினால் ஐப்பசியில் அடை
அடையாய் அடர்ந்து பெய்த மழை
காரணமாய் ஆதவனே நனைந்தான்
ஐப்பசியின் அடை மழையில்
ஆதவனே நனைந்தான்!
உதய சூரியனோ மறையும்
சூரியனோ உலகிலே உண்டோ?
ப்ரபஞ்சம் சுழலுவதால் தோன்றி
மறைவதுபோல் மாயம்
காட்டுகிறார் சூரியனும் சந்திரனும்!
ஆதவனே நீராடும் ஐப்பசியில்
மானிடரே நாமும்தான்
தீபாவளித் திருநாளில்
கங்கையின் புனித நீரால்
நீராடி மகிழ்ச்சியில் நனைவோமே!
நாருசிக்கும் பலகாரம்
அருந்தியே மகிழ்வோமே!
ஒரு வருடம் காய்ந்த சூரியன்
ஒரு நாளில் நனைந்தான்
சூழ்நிலையின் குளிராலே
நடுநடுங்கும் சூரியனும்
குளிர்காயத் தீபங்கள் ஏற்றியே
ஒளியும் ஒலியும் காண…
நம் நாட்டுப் பட்டாசும் மத்தாப்பூ
புஸ்வாணம் ஏற்றியே மகிழ்வோமே!
விண்முட்டும் ராக்கெட்டு இங்கிருந்தே
விட்டு அத்துணை கிரகங்களையும்
ஆராய்ந்தே அங்கிருக்கும் ரகசியங்கள்
அதிசயங்கள் இங்கிருந்தே அறிவோமே!
சூரியனே நனைந்தான் நாமும்
தான் நனைந்தோம் கூட உள்ள
மக்களும் நனைந்தாரே
அவருக்கும் குளிர்தானே
நாமெடுக்கும் ஆடைகள்
விதவிதமாய்ப் பலகாரம்
குளிர் நீக்கும் பட்டாசு
அத்தனையும் மொத்தமாய்
ஓரிடத்தில் குவித்து வைத்து
ஒன்றாக எரியவிட்டால்
உலகமே வெடிந்து போகும்
வாங்கி வந்த அத்தனையும்
பங்கு போட்டுப் பிரித்தெடுத்து
அவருக்கும் அளித்தால் மகிழ்வாரே
அவர் மகிழ்ந்து புன்னகைத்தால்
காதல் இனிது
ஒரு கூறையின் கீழிருந்து வாழும்போது
உண்மையான காதல்தானா என்று
அத்தனையும் புரியும். புரிந்தால் தெரியும்
காதல் இனிதென்று

காதல் இனிது
ஒரு கூரையின்கீழ் வாழும்போது தெரியும்
ஒத்துப் போகிறதா இல்லையா என்று
இணைய தளத்தில் யதேச்சையாய் சந்தித்து
தொடர் சந்திப்பாய் வழியும் போதும்
கடற்கரைப் படகின் மறைவில் மடியில் படுத்து
காதலைப் பகிர்ந்து கொள்ளும் போது
இருசக்கர விசையூர்தியில் ஒட்டிக்கொண்டு
ஊரெல்லாம் சுத்தும் போது
திரையரங்கின் இருட்டிலே படம்பார்த்து
நாயக நாகியாய் மாறும் போது
அடுக்கு மாடி உணவகத்தில் அறுசுவை உணவு
குளிர் சாதன அறையில் ஒரு நாள் பகர்தல்
உயிரே நீ தானென்றும் கடைசீவரை
உடன் வரும் துணை நீதானென்றும்
வாய்க்கு வாய் பொய்யாய் சத்தியங்கள்
பறிமாரிக் கொள்ளும்போது
அத்தனையும் என்னவென்று
ஒரு கூரையின்கீழ் இருந்து
நீ உண்மையான நீயாய்,
அவன் உண்மையான அவனாய்
நிதர்சனங்களை புரிந்து விட்டுக்
கொடுத்து வாழும் போதுதான்
ஒரு கூரையின்கீழ் வாழும்போது
உண்மையான காதல்தானா என்று
அத்தனையும் புரியும். புரிந்தால் தெரியும்
காதல் இனிதென்று
அன்புடன்
தமிழ்த்தேனீ
நான் அமைதி காக்கிறேன், காதல் செய்ய தெரியாது. நானொரு ரிஷ்யசிருங்கன்.இ

துரை உங்களிடம் இருந்து படம் பெறுவதற்காகவே, மூளையை கசக்கி காதலைப் பற்றி எனக்கு தெரிந்ததை வைத்து கவிதை (என்று) எழுதினேன்..எனக்கும் படம் போடுவீங்களா...ப்ளீஸ் ...ப்ளீஸ்....
காதலுக்கு ...ஜாதியில்லை மதமுமில்லைமொழியினமில்லை நிறபேதமுமில்லை
.gif?part=0.1&view=1)
காதல்...உணர்வுகளால் உறவை வளர்த்துஉயிர்களிடத்தில் அன்பை நிறைத்துகாலந்தோறும் தொடர்ந்திடும் காதல்இனிது ... இனிது...காதல் இனிதுஆதலினால் காதல் செய்வீர்....

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

இடக்கரடகல் என்றால் என்னனே தெரில்லயே!
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
காதல் இனிது!
காலங்கள் கடந்தபோதும்
கற்பகத்தருபோல காட்சிதருவது!
கவிதைக்குள் விதையாக
சொற்பொருள் பெருகிவருவது!
முதல்கவிதையின் மூலப்பொருளாவது!
எவனையும் கவிதை எழுதவைப்பது!
என்னையும் எழுத வைத்தது!
எத்தனை முறையெழுதி ஓய்ந்தபோதும்
இன்னமும் எழுதிடத் தோன்றுவது!
கற்பனை கைகுலுக்கி வருவது!
இயற்கையும் இடம்பெறும் இடமது!
புதுப்புனல் போலவே பொங்கிடும்
இதயங்களிரண்டின் சங்கமம்!
கரைபுரண்டோடிடும் உணர்வுகள்
விடைசொல்லவரும் உறவுகள்..
உனக்கென நான் எனும்..
எனக்கென நீ எனும்..
உரிமையைத் தருகிற சொந்தம்!
உயிரினில் கலந்தே கொஞ்சும்!
மனதினில் தோன்றிடும் மின்னல்
மறுபடிமறுபடி சுழன்றிடும்!
ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே
ஆண்டவன் வழங்கிடும் பந்தம்!
இதற்கென உள்ளதோர் மகிமை
இணையென எதுவுமே இல்லை..
கணக்கினில் கூடினால் இரண்டு..
காதலில் மட்டுமே ஒன்று!!
ஆதலால் காதல்செய்வீர் என்றே
மாகவி பாரதி பாடினான்!
அன்பினில் வாழ்ந்திடும் உன்னதம்
அகிலத்தில் தழைக்கட்டும் என்றே
இம்முறை “காதல் இனிது! என்பதே
தமிழ்த்தேரின் அடுத்தத் தலைப்பாய்..
உம்மிடம் உருவாகும் கவிதை..
எம்மிடம் சேரட்டும் இனிதே!!