இழையணி

154 views
Skip to first unread message

வேந்தன் அரசு

unread,
May 10, 2015, 11:34:47 AM5/10/15
to vallamai, தமிழாயம், தமிழ் மன்றம், மின்தமிழ்

”ஈகை அரிய இழையணி மகளிர்” என்ற அடியில் வரும் 
“இழையணி”  என சங்க இலக்கியத்தில் பயிலும் சொற்களின் தொகுப்பு கிட்டுமா!!

இழையணி என்றால் தாலி என்கிற போக்கில் வாதம் போகுது.

இழையணி என்றால் நகை.
தாலியை நகை என்று எப்படி கருதப்போனது-- 

வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

N. Ganesan

unread,
May 11, 2015, 11:02:08 AM5/11/15
to மின்தமிழ், Santhavasantham, vallamai, housto...@googlegroups.com
இழை என்று பார்வதியை சிவபிரானின் வரலாற்றில் ஒரு முக்கியமான
நிகழ்ச்சியில் பலமுறை தேவார முதலிகள் பயன்படுத்துகின்றனர்.
ஈகை அரிய இழை அணி என்பது எது? - என நச்சினார்க்கினியர் சொல்லியுள்ளார்.
தமிழர்களின் தாலி வரலாறு ஆராய வெறும் “இழையணி” என சங்க இலக்கியத்தில்
பார்த்தால் போறாது. அது யானை பிணிக்கும் கயிற்றுக்கும் கூட வரும்.
“ஈகை அரிய இழையணி” என்று தேடவேண்டும் என நினைக்கிறேன்.
அழகாக விளக்கியவர் நச்சினார்க்கினியர் தான். அவருக்கு முன்பு
-இழை என்று சிவன் - பார்வதி வரலாற்றில் அம்பிகையின் பெயராக
இழை என்ற சொற்களை தேவாரம் அழகாகக் கையாள்வது அவள் தன்
“ஈகை அரிய இழை”க்கு பங்கம் நேருமோ என அவள் அஞ்சுவதைக்
குறிப்பால் உணர்த்தத்தான் எனலாம். 

இழை - கயிறு, நூல், சரடு என்று பொருள் இழை அணிதல் என்று பல இடங்களில்
வருகிறது. ஆனால், “ஈகை அரிய இழை அணி” என்பது தாலியை என்கிறார்
நச்சினார்க்கினியர். ஈகை அரிய இழை அணி வேறெங்காவது இருக்கா? -
என்று பார்த்தால் எங்கும் காணோம்.

சைவ ஆகமங்களில் தாலி பற்றிய குறிப்பைத் தருகிறேன்.

நா. கணேசன்

(புலவர் இராமமூர்த்தி (திருச்சி), இலந்தையார், கவிஞர் சவகர்லால் மறுமொழிகளைப்
பார்க்கலாம்)

கயிலைமலை அலைப்பும், -இழை என அப்பாடல்களில் உமைநங்கை அழைப்பும்

நெடுநல் வாடையில் (136-7) அரசனைப் பிரிந்த அரசியின் நிலையை வர்ணிக்கின்ற பொழுது ’ஆரந்தாங்கிய அலர்முலை ஆகத்துப் பின்னும் நெடுவீழ்தாழத் துணைதுறந்து’ என்று குறிப்பிடப்படுகிறது. இதற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் ’முன்பு முத்தாற்செய்த கச்சு சுமந்த பருத்த முலையினையுடைய மார்பிடத்தே இப்பொழுது குத்துதலமைந்த நெடிய தாலி நாணொன்றுமே தூங்க’ என்று கூறுகிறார். நெடுநல்வாடையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பேராசிரியர் ஜே.வி. செல்லையா ‘The Marriage Tie’ (தாலி) என்றே மொழி பெயர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையே சிலம்பிலும் காண்கிறோம்:
அஞ்செஞ் சீறடி அணிசிலம்பு ஒழிய
மென்துகில் அல்குல் மேகலை நீங்கக்
கொங்கை முன்றில் குங்குமம் எழுதாள்
மங்கல அணியில் பிறிதணி மகிழாள்

புறநானூற்றில் (127) ஈகையரிய இழையணி மகளிரோடு என்று குறிப்பிடப்படுவதற்கு எழுதப்பட்டுள்ள பழைய உரையில் கொடுத்தற்கரிய மாங்கல்ய சூத்திரத்தை யணிந்த மகளிருடனே என்று ஈகையரிய இழையணி என்பது தாலி என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது.

தாலி (< தாழை ‘palm tree') மிகப் பழமையானது. 10-ஆம் நூற்றாண்டு என்பதெல்லாம் சான்றுகளோடு ஒத்துப்போவதில்லை.  யாழ என்ற சங்ககால முன்னிலை மருவி அசைச்சொல் எலெ, எல்லே (ஆண்டாள்), ம்தருவியாலெ/போடுவியாலெ (நெல்லை)  என்பவற்றில்  உள்ளதுபோல தெரிகிறது. அதுபோல், தாலி < தாழையில் உள்ள ழ > ல. பழம் > பலம்-னு சொல்வதுபோல்.

தேவாரத்தில் மங்கல இழை (தாலி)

உன்னிஇரு போதுமடி பேணுமடி யார்தமிடர் ஒல்கஅருளித்
துன்னியொரு நால்வருடன் ஆல்நிழலி ருந்ததுணை வன்றனிடமாங்
கன்னியரொ டாடவர்கள் மாமணம் விரும்பியரு மங்கலம்மிக
மின்னியலும் நுண்ணிடைநன் மங்கையரி யற்றுபதி வேதிகுடியே. 3.78.7

மணவன் காண்! மலையாள் நெடு மங்கலக்
கணவன் காண்! கலை ஞானிகள் காதலெண்
குணவன் காண்! குரங்காடு துறைதனில்
அணவன் காண்! அன்பு செய்யு மடியர்க்கே. 5.63.4
(மங்கலம் என்ப மனைமாட்சி - குறள்)

இராவணன் கயிலைமலையை அசைக்கும்போது
பர்வதராஜகுமாரி கழுத்தில் மங்கல இழை நிற்குமோ?
- எனப் பயந்தாள். எனவே, இந்த நிகழ்ச்சியைப் பாடும்போதெல்லாம்
தேவாரம் பாடிய நாயன்மார்கள் உமையாளை -இழை
என்ற சொல்லால் குறிப்பிட்டார்கள். காட்டுகள் சில.

இராவணன் கயிலையை அலைக்கையில், இலங்கிழை என்று பார்வதியை
சொல்லும் தேவாரம் சில:

கறுத்தார், மணிகண்டம்; கால்விரல் ஊன்றி
இறுத்தார், இலங்கையர்கோன் முடிபத்தும்;
அறுத்தார், புலன்ஐந்தும்; ஆயிழை பாகம்
பொறுத்தார்---புகலூர்ப் புரிசடையாரே.

வஞ்ச(அ)ரக்கன் கரமும்---சிரத்தொடும்---
அஞ்சும்அஞ்சும்ஓர்ஆறும்நான்கும்(ம்) இற,
பஞ்சின் மெல்விரலால் அடர்த்து, ஆயிழை,
அஞ்சல்அஞ்சல்! என்றார்---அன்னியூரரே.

உளங்கையில், இருபதோடு ஒன்பதும் கொடு, ஆங்கு
அளந்து அரும் வரை எடுத்திடும் அரக்கனை,
தளர்ந்து உடல் நெரிதர, அடர்த்த தன்மையன்
விளங்கிழையொடும் புகும், விசயமங்கையே.

கைலாசத்தைப் பாடுகையில் இந்த நினைவில் அப்பர் 
ஒரே பதிகத்தில் பாடுகிறார்:

களித்தவன் கண் சிவந்து, கயிலை நல் மலையை ஓடி,
நெளித்து அவன் எடுத்திட(ல்)லும், நேரிழை அஞ்ச, நோக்கி,
வெளித்தவன் ஊன்றியிட்ட வெற்பினால் அலறி வீழ்ந்தான்;
மளித்து இறை ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே!

கருத்தனாய்க் கண் சிவந்து, கயிலை நல் மலையைக் கையால்
எருத்தனாய் எடுத்தஆறே, ஏந்திழை அஞ்ச, ஈசன்---
திருத்தனாய் நின்ற தேவன்---திருவிரல் ஊன்ற, வீழ்ந்தான்;
வருத்துவான் ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே!

கரியத் தான் கண் சிவந்து, கயிலை நல் மலையைப் பற்றி,
இரியத் தான் எடுத்திட(ல்)லும், ஏந்திழை அஞ்ச, ஈசன்
நெரியத் தான் ஊன்றாமுன்னம் நிற்கிலாது, அலறி வீழ்ந்தான்;
மறியத் தான் ஊன்றினானேல் மறித்தும் நோக்கும் இல்லை அன்றே!

கற்றனன், கயிலைதன்னைக் காண்டலும் அரக்கன் ஓடிக்
செற்றவன் எடுத்தஆறே, சேயிழை அஞ்ச, ஈசன்
உற்று இறை ஊன்றாமுன்னம் உணர்வு அழி வகையால், வீழ்ந்தான்;
மற்று இறை ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே!

----------------

தென்னவன் மலை எடுக்கச் சேயிழை நடுங்கக் கண்டு,
மன்னவன் விரலால் ஊன்ற, மணி முடி நெரிய, வாயால்
கன்னலின் கீதம் பாடக் கேட்டவர்; காஞ்சிதன்னுள்---
இன்னவற்கு அருளிச்செய்தார்---இலங்கு மேற்றளியனாரே.

இங்கே எல்லாம் மங்கல்ய தந்து ரக்‌ஷாபரணம் (அருணகிரிநாதர்)
தான் -இழை எனக் குறிக்கின்றனர் எனக் கருதலாம். புறநானூற்றில்
“ஈகை அரிய இழையணி” என்பது கொடுத்தற்கரிய மாங்கல்ய சூத்திரம்
என்பதுவும் காண்க. மங்கல அணியில் பிறிதணி மகிழாள் (சிலப்பதிகாரம்).

நா. கணேசன்


வேந்தன் அரசு

unread,
May 11, 2015, 8:25:47 PM5/11/15
to vallamai, மின்தமிழ், Santhavasantham, housto...@googlegroups.com
தேமொழிக்கும் பாண்டிய ராஜா அவர்களுக்கும் நன்றி

இழையணி என்றால் நகை என்றுதான் பொருளாகிறது. தாலி நகை ஆகுமா?

ஈகை அரிய இழையணி: 

இழையணிமகளிர் ஒரே சொல்லாக கொண்டால்
களிறுகளை எல்லாம் தானம் கொடுத்தாயிற்று. இனி இருப்பது மகளிர் மட்டுமே. அவர்களை கொடுக்க இயலாது.

N. Ganesan

unread,
May 11, 2015, 9:21:51 PM5/11/15
to mint...@googlegroups.com, santhav...@googlegroups.com, vall...@googlegroups.com, housto...@googlegroups.com


On Monday, May 11, 2015 at 5:25:49 PM UTC-7, Zஈனத் Xஏவியர் wrote:
தேமொழிக்கும் பாண்டிய ராஜா அவர்களுக்கும் நன்றி

இழையணி என்றால் நகை என்றுதான் பொருளாகிறது.

 
தாலி நகை ஆகுமா?

தாலி = amulet 
மகரவிடங்கரை தாலியாகக் கட்டியதால்தான் நமக்கு சிந்து சமவெளியின்
விடங்கர்-கொற்றவை ரிலிஜன் புரிகிறது. ஐம்படைத் தாலி (amulet) பெருமாளுக்காக.
மங்கலத் தாலி - சுமங்கலி அணிவது. அது ஈகை அரிய இழையணிகலம்.

தாலி = amulet 
Merriam-Webster dictionary:
amulet - a charm (as an ornament) often inscribed with a magic incantation or symbol to aid the wearer or protect against evil (as disease or witchcraft)

தாலி அணிகலம் எனப் பல உதாரணம் கொடுக்கவியலும். ஒன்று:
கொங்குவேளிர் செய்த பெருங்கதை:

நெற்சிறு தாலி நிரல்கிடந் திலங்கக்
    30    கடைந்துசெறித் தன்ன கழுத்துமுதற் கொளீஇ

 நெற்சிறுதாலி - சிறு நெற்றாலி என்க. இஃது ஒரு கழுத்தணிகலன். எனவே துறவோர் பள்ளியுள் நல்லோனாகிய ஒரு துறவி பொன்னால் இயற்றப்படும் சிறு நெற்றாலிபோல அரும்புகளாற் றொடுத்தமைத்து வழங்கிய அணிகலம் என்று கொள்க.  

வேந்தன் அரசு

unread,
May 11, 2015, 9:39:28 PM5/11/15
to vallamai, மின்தமிழ், சந்தவசந்தம், housto...@googlegroups.com


11 மே, 2015 ’அன்று’ 9:21 பிற்பகல் அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:



On Monday, May 11, 2015 at 5:25:49 PM UTC-7, Zஈனத் Xஏவியர் wrote:
தேமொழிக்கும் பாண்டிய ராஜா அவர்களுக்கும் நன்றி

இழையணி என்றால் நகை என்றுதான் பொருளாகிறது.

 
தாலி நகை ஆகுமா?

தாலி = amulet 
மகரவிடங்கரை தாலியாகக் கட்டியதால்தான் நமக்கு சிந்து சமவெளியின்
விடங்கர்-கொற்றவை ரிலிஜன் புரிகிறது. ஐம்படைத் தாலி (amulet) பெருமாளுக்காக.
மங்கலத் தாலி - சுமங்கலி அணிவது. அது ஈகை அரிய இழையணிகலம்.

தாலி = amulet 
Merriam-Webster dictionary:
amulet - a charm (as an ornament) often inscribed with a magic incantation or symbol to aid the wearer or protect against evil (as disease or witchcraft)

தாலி அணிகலம் எனப் பல உதாரணம் கொடுக்கவியலும். ஒன்று:
கொங்குவேளிர் செய்த பெருங்கதை:

நெற்சிறு தாலி நிரல்கிடந் திலங்கக்
    30    கடைந்துசெறித் தன்ன கழுத்துமுதற் கொளீஇ

 நெற்சிறுதாலி - சிறு நெற்றாலி என்க. இஃது ஒரு கழுத்தணிகலன். எனவே துறவோர் பள்ளியுள் நல்லோனாகிய ஒரு துறவி
 
பொன்னால் இயற்றப்படும் சிறு நெற்றாலிபோல அரும்புகளாற் றொடுத்தமைத்து வழங்கிய அணிகலம் என்று கொள்க.  

இது வேறு தாலி.

நான் சொல்லுவது மாங்கல்ய சூத்திரம் எனும் தாலி.
 ஆய்வேளின் வீட்டில் உள்ள எல்லா பெண்களும் மாங்கல்யம் அணீந்தவரா? மகள்களே இல்லையா?

N. Ganesan

unread,
May 11, 2015, 9:43:22 PM5/11/15
to மின்தமிழ், vallamai
2015-05-11 18:39 GMT-07:00 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:


11 மே, 2015 ’அன்று’ 9:21 பிற்பகல் அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:


On Monday, May 11, 2015 at 5:25:49 PM UTC-7, Zஈனத் Xஏவியர் wrote:
தேமொழிக்கும் பாண்டிய ராஜா அவர்களுக்கும் நன்றி

இழையணி என்றால் நகை என்றுதான் பொருளாகிறது.

 
தாலி நகை ஆகுமா?

தாலி = amulet 
மகரவிடங்கரை தாலியாகக் கட்டியதால்தான் நமக்கு சிந்து சமவெளியின்
விடங்கர்-கொற்றவை ரிலிஜன் புரிகிறது. ஐம்படைத் தாலி (amulet) பெருமாளுக்காக.
மங்கலத் தாலி - சுமங்கலி அணிவது. அது ஈகை அரிய இழையணிகலம்.

தாலி = amulet 
Merriam-Webster dictionary:
amulet - a charm (as an ornament) often inscribed with a magic incantation or symbol to aid the wearer or protect against evil (as disease or witchcraft)

தாலி அணிகலம் எனப் பல உதாரணம் கொடுக்கவியலும். ஒன்று:
கொங்குவேளிர் செய்த பெருங்கதை:

நெற்சிறு தாலி நிரல்கிடந் திலங்கக்
    30    கடைந்துசெறித் தன்ன கழுத்துமுதற் கொளீஇ

 நெற்சிறுதாலி - சிறு நெற்றாலி என்க. இஃது ஒரு கழுத்தணிகலன். எனவே துறவோர் பள்ளியுள் நல்லோனாகிய ஒரு துறவி
 
பொன்னால் இயற்றப்படும் சிறு நெற்றாலிபோல அரும்புகளாற் றொடுத்தமைத்து வழங்கிய அணிகலம் என்று கொள்க.  

இது வேறு தாலி.

ஆம். அதனால் தான்  Amulet பற்றி எழுதினேன்.

நான் சொல்லுவது மாங்கல்ய சூத்திரம் எனும் தாலி.
 ஆய்வேளின் வீட்டில் உள்ள எல்லா பெண்களும் மாங்கல்யம் அணீந்தவரா? மகள்களே இல்லையா?

Amulet அணிவர் மகன்கள், மகள்கள். இலக்கிய உதாரணம் பார்க்கலாம்.

நா. கணேசன்
 

வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
May 11, 2015, 9:55:52 PM5/11/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com


On Monday, May 11, 2015 at 5:25:49 PM UTC-7, Zஈனத் Xஏவியர் wrote:
தேமொழிக்கும் பாண்டிய ராஜா அவர்களுக்கும் நன்றி

இழையணி என்றால் நகை என்றுதான் பொருளாகிறது. தாலி நகை ஆகுமா?

தாலி நகை எனத் துழாவினால், மக்கள் அப்பொருளில் சொல்கிறார்களா என அறியலாம்.

N. Ganesan

unread,
May 11, 2015, 11:05:25 PM5/11/15
to mint...@googlegroups.com, vallamai


On Monday, May 11, 2015 at 7:22:07 PM UTC-7, தேமொழி wrote:

amulet = தாயத்து  

இதை நோன்புக்காக ... விரதம் இருப்பது போன்றவற்றிற்காக கட்டும்  இழையுடன் ஒப்பிட முடியுமா எனத் தெரியவில்லையே 

தாலி என்பது சங்க இலக்கியத்தில் குழந்தைகளுக்குக் காப்புக்காகக் கட்டப்படுவது. இங்கே, தாலி = amulet, an ornament.
கையிலும், பின்கையிலும், கழுத்திலும் இத் தாலிகள் அணிந்த பழைய சிலைகள் பல. உ-ம்: போதிசத்துவர் சிலைகள்
காந்தாரத்தில். மகர விடங்கரை amulets ஆக சிந்துவெளியில் அணிந்ததன் எச்சங்களே நமக்குக் கிடைத்துள்ளவை.

இந்த amulet தாலி அணிகலன் மங்கலக் குறியீடாக வதுவை அயர்ந்தபோதும் கருத்து வளர்ந்தது போலும்.
பார்க்க: திருமுருகு - இழையணி சிறப்பின் பழையோள் குழவி. சிவனுக்கும், பார்வதிக்கும் நடந்த கலியாணத்தின்
பயன் முருகன். மங்கலம் என்ப மனைமாட்சி, மற்றதன் நன்கலம் நன்மக்கட்பேறு. திருமுருகில் நன்கலம் கந்தன்
(ஸ உமா ஸ்கந்தன் = சோமாஸ்கந்தன்). ஐங்குறுநூற்றுப் பாடலிலும் இழையணி மங்கலவணி யாக தெரிகிறது.
பாருங்கள்.

 

ஏனென்றால் காப்புக்காக கட்டப்படுவது ஒரு பாதுகாப்பிற்கு ... இது நீங்கினால் உயிர் நீங்கும் என்ற நம்பிக்கை கூட இருக்கும் 

ஆம். மங்கல நாணும் ஒரு பாதுகாப்பிற்குக் கட்டப்படுவதே, உயிர் நீங்கினால் மங்கலவணி வாங்கப்படுகிறது. அதனைக்
கம்பன் சொல்லியுள்ளான். திருநாண் வாங்குதலை.

---------------

இன்னொரு கம்பன் பாடல்:
நிறை நெடு மங்கல நாணோ!
நிறை  நெடுமங்கல   நாணோ-   நிறைவான   நெடிய
திருமாங்கலியக்   கயிறோ?



நோன்புக்காக என்பது ஒரு அடையாளம் ... இதற்காக ஒரு விழா எடுத்து கூட அதை நீக்கி வெற்றிகரமாக முடித்துக் கொண்டதை அறிவிப்பார்கள்.

இது போல கட்டப்பட்டதன் நோக்கம் என்ன என்ற கோணத்தில் ஆராயத் தேவை இருக்கிறது 




மருத்துவமனை அடையாள கைக்காப்பு, உடல் நோய் பற்றிய, ஒவ்வாமை பற்றிய தகவல், குழந்தைகள் கூட்டத்தில் காணாமல் போனால் என்ன செய்வது என்று பள்ளியில் கூட அடையாள காப்பு அணிவித்து அழைத்துச்  செல்வதுண்டு.

இதில் ராக்கி கட்டுவது போல அடையாளங்களும்,  எனது உடமை என்ற அடையாளங்களும் உண்டு.

ராக்கியின் பழந்தமிழ்ப் பெயர் காப்புநாண். 

ஒரு நகை என்பதற்கும் மேல் அந்த நகையை அணிவதற்கு  ஒரு காரணம் இருக்க வேண்டும். 

engagement ring, school ring, marriage ring போல ... மேலும் இழையணி என்பது இடுப்பில் அணிவது போன்ற நகை போலவும் தோற்றம் தருகிறது 

அரைநாண் - இடுப்பில் கட்டுவது. அதிலும் amulets (தாலிப் பொருள்கள்) இருக்கின்றன. இந்த amulets காப்புக்காகக் கட்டுவது.
அரையிலே, கையிலே, கழுத்திலே, .... இதன் நீட்சிதான் “ஈகை அரிய இழையணி”. அதாவது மங்கல அணி (சிலம்பு), 
நகை ‘ornament' தற்காலச்சொல். தாலி = amulet நேரான மொழிபெயர்ப்பு. Whether taali is for other occasions or during wedding,
protection is the key element.

நா. கணேசன் 


..... தேமொழி 



..... தேமொழி 

வேந்தன் அரசு

unread,
May 12, 2015, 6:07:43 AM5/12/15
to vallamai, மின்தமிழ்
தாலி அணியும் வழக்கம் இருக்கலாம்.இலாமலும் இருக்கலாம்.
 ஆனால் ஈகைஅரிய இழையணி அவ்வகை தாலி அல்ல.
வீட்டில் உள்ள எல்லா பெண்களும் ஆய்வேளின் தாலிகட்டியவர்கள் என்ற பொருள் பொருந்தாது.

முன்னுள்ள அடிகளில் களிறு போய் காட்டு மயில் குடி இருக்கு என்ற வரிகளோடு ஒப்பிட்டு பொருள் கொள்ளணும்.

11 மே, 2015 ’அன்று’ 11:05 பிற்பகல் அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
May 12, 2015, 9:21:04 AM5/12/15
to vallamai
2015-05-12 3:07 GMT-07:00 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
தாலி அணியும் வழக்கம் இருக்கலாம்.இலாமலும் இருக்கலாம்.
 ஆனால் ஈகைஅரிய இழையணி அவ்வகை தாலி அல்ல.
வீட்டில் உள்ள எல்லா பெண்களும் ஆய்வேளின் தாலிகட்டியவர்கள் என்ற பொருள் பொருந்தாது.

யாருமே இவ்விழையில் ஆய்வேளின் தாலிகட்டியவர்கள் என்று சொல்லவில்லை.

தாலி = amulet. பாதுகாப்பிற்கு அணியும் ஓர் அணிகலன். இடுப்பிலோ, கழுத்திலோ, கையிலோ
அணியும் நகை. நகைநட்டு என்பது தற்காலப் பெயர். பழைய பெயர் அணிகலன். ஈகை அரிய இழையணி என்கிறபோது சுமங்கலியர் அணியும் அணிகலனாம் தாலி என்கிறார் நச்சினார்க்கினியர்.

நா. கணேசன்
 
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages