ஆற்றில் பழங்கால நாணயம் தேடும் விவசாயத் தொழிலாளர்கள்

123 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Jun 26, 2014, 9:05:35 AM6/26/14
to mint...@googlegroups.com, vallamai

ஆற்றில் பழங்கால நாணயம் தேடும் விவசாயத் தொழிலாளர்கள்- நாணயம் சேகரிப்போர், ஆராய்ச்சி மாணவர்களின் ‘பொக்கிஷங்கள்’


ஸ்ரீரங்கம் காவிரி, கொள்ளிடம் ஆற்றுப்படுகையில் மணலில் புதைந் துள்ள பழங்கால நாணயங்களை தேடும் பணியில், தஞ்சாவூர் மாவட்டம் திட்டை அருகேயுள்ள மெலட்டூரைச் சேர்ந்த கிராமத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

விவசாயத் தொழிலாளர்களான இவர்கள் குறுவை சாகுபடி முடிந்து விட்டதால், அறுவடைக்கு இடைப்பட்ட நாட்களில் பிழைப்புக்காக ஆற்று மணலில் புதைந்துள்ள நாணயங்கள், தங்கம், வெள்ளிப் பொருட்களைச் சேகரித்து, விற்று வாழ்க்கையை ஓட்டி வருகின்றனர். ஆண்டுதோறும் ஆற்று மணலை அரித்துப் பொருட்களை எடுக்கும் இவர்களை, நாணயம் சேகரித்து விற்பவர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் தேடிவருகின்றனர். 5 குடும்பங்களைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் காலை முதல் மாலை வரை சலியாது ஆற்றில் மணலை கைகளால் சலித்துப் பார்த்தவண்ணம் உள்ளனர்.

இங்கு கிடைக்கும் பழங்கால நாணயங்கள் மற்றும் அதன் மதிப்பு குறித்து இவர்களுக்கு ஏதும் தெரிவதில்லை. நாணயத்தை வாங்க வருவோரிடம் ரூ.30 முதல் ரூ.100 வரை விற்று விடுகின்றனர். நாணயங்களைத் தேடும்போது குன்றிமணி தங்கம் ஏதாவது கிடைத்தால் இவர்கள் அடையும் ஆனந்தத்துக்கு அளவே இல்லை.

விவசாய வேலையில்லாததால்..

பொறுமையாக மணலைக் கிளறிக் கொண்டிருந்த ராஜேந்திரனிடம் பேசியபோது அவர் கூறியது:

பழைய காசு பத்தின விவர மெல்லாம் எங்களுக்குத் தெரியாது. அன்றாடம் வயிற்றுப் பிழைப்புக்கு வருமானம் வந்தால் சரி. விவசாய வேலை இல்லாதபோதுதான் இந்த நாடோடி பிழைப்பு. அறுவடைக்கு முன்னாடி ஊர் திரும்பிடுவோம். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை செப்புக் காசு, தங்கக் காசுகளை எல்லாம் எடைக்குதான் கொடுத்தோம். அதை அவர்கள் உருக்கி விடுவதாக சொல்வார்கள். தற்போது அப்படியில்லை. பழங்கால பொருட்கள் மற்றும் நாணயங்கள் சேகரிப்போர், மாணவர்கள் என பலர் எங்களைத் தேடி வந்து வாங்கிச் செல்கின்றனர். அதை அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று தெரியாது. எங்களுக்கு ஒரு நாள் பிழைப்பு அவ்வளவுதான் என்றார்.

பழங்கால நாணயம் கிடைப்பதில் வியப்பில்லை…

திருச்சிராப்பள்ளி நாணயவியல் கழகத்தின் நிறுவனர் ‘பழங்காசு’ சீனிவாசன் கூறுகையில், “சங்க காலத்தில் உறையூரைத் தலைநகரமாகக் கொண்டு சோழர்கள் ஆட்சிபுரிந்தனர். 14, 15-ம் நூற்றாண்டுகளில் நாயக்க மன்னர்கள் சிராப்பள்ளியை 2-வது தலைநகரமாக அறிவித்து ஆட்சி செய்துள்ளனர். தொடர்ந்து வந்த ஆற்காடு நவாப் ஆட்சிக் காலம் வரை ஸ்ரீரங்கம் காவிரி ஆற்றுப்படுகை (ராஜபாட்டை) அரச பெருவழியாக இருந்துள்ளதாக வரலாறு கூறுகிறது. இப்பகுதியில் பல நூற்றாண்டுகளாக வாணிபம் நடந்துள்ளது. மேலும் யாத்ரிகர்கள் வந்து செல்லும் பாதையாகவும் பயன்பட்டுள்ளது. மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் பல போர்களைச் சந்தித்த இப்பகுதி ஆற்றுப் படுகையில் பழங்கால நாணயங்கள் கிடைப்பதில் ஒன்றும் வியப்பில்லை.

இப்படி கிடைக்கும் பழங்கால நாணயம் ஒவ்வொன்றும் அரிய பொக்கிஷம். எனவே, மணலில் புதைந்து கிடக்கும் அவற்றை அரித்தெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளவர்களிடம் கிடைக்கும் நாணயங்கள் எடைக்கு போட்டு உருக்கும் நபர்கள் கையில் கிடைக்காமல் எங்களைப் போன்று நாணயம் சேகரிக்கும் ஆர்வலர்கள், ஆராய்ச்சியாளர்கள் கையில் கிடைக்குமாறு வழிசெய்ய வேண்டும். அதற்கான முயற்சியில் ஈடுபட உள்ளேன்” என்றார்.

இந்த விவசாயத் தொழிலாளர்கள், நாணய சேகரிப்பில் ஆர்வமுள்ளோர் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு கிடைத்த பொக்கிஷங்கள் என்றுதான் கூற வேண்டும்.

வேந்தன் அரசு

unread,
Jun 27, 2014, 7:27:18 AM6/27/14
to vallamai, மின்தமிழ்
நாணயமே பழங்கால பொருள் ஆச்சு.


26 ஜூன், 2014 9:05 முற்பகல் அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

தேமொழி

unread,
Jun 27, 2014, 8:05:22 PM6/27/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com
அதனாலென்ன காசுதான் எக்காலத்திலும் உள்ளதே.

..... தேமொழி

N. Ganesan

unread,
Jun 28, 2014, 8:58:24 AM6/28/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, thami...@googlegroups.com
நூதலோசு ஐயா அவர்களின் மடலில் இருந்து
இரண்டு கருத்துகளுக்கு என் மறுமொழி:

NDLS> வீரக்கல் கல்வெட்டுகளில் தொரு என்பதே வாசகம்
> கால்நடை தொகுதியைக் குறிக்கும் 

தொறு என்று வீரக்கல்களில் இருக்கிறது. ’தொறுப்பட்டார்’,
’தொறுமீட்டு மாண்டார்’ என்றெல்லாம் இருக்கும். 
தொழு என்ற சொல்லும் தொறு என்ற சொல்லும் பொருள் ஒன்றே.
தொழுவம் - தொறு. Taurus சொல்லுடன் தொடர்புபடுத்தி
மயிலை வேங்கடசாமி உலகத் தமிழ் மாநாட்டு மலரில் கட்டுரை
எழுதினார். வடக்கே தொழுநை என்னும் நதி யமுனையுடன் சேரும்.
அதை தோஹ்நா என்கின்றனர் என மு. ராகவையங்கார் எழுதியுள்ளார்.

NDLS> மேலும் காசு என்பது கஃசு  என்பதன் திரிபே

காய் என்னும் சொல் காசு என்றாகிறது. உ-ம்: காயா வர்ணன் என்பர் கண்ணபிரானை.
காயாம்பூ என்ற மக்கட்பெயரை காசாம்பூ என்கின்றனர். சங்கப்பாடல்களில்
வேப்பங் காய் போன்ற உருவமுடைய காசு பற்றிக் குறித்துள்ளனர்.
அதே போல, வெள்ளியால் ஆன globules நிறையக் கிடைக்கின்றன. போளுவாம்பட்டி
ஐ. ராமசாமி ஐயா பேரூர், மாதம்பட்டி ஆகிய ஊர்களில் கிடைத்த இத்தகைய
சங்ககாலக் காசுகளைக் காட்டினார். இந்தியன் எக்ஸ்பிரசில் கட்டுரை எழுதினார்.
காசு என்ற சொல்லுடன் காய் (வேப்பங்காய்) தொடர்புக்கு மேலும் சில காட்டுகள்:
வட்டாடலில் எறியும் சூதுக் காய் dice "காசு” என்றே திவாகரம் குறித்துள்ளது.
நாண்வழிக் காசு போலவும் (இறை. 2, உரை, பக். 29) - நாரில் கோக்கப்படும் மணிகள்
காசு என்றலும், 

பட்டுடை சூழ்ந்த காசு (சீவக. 468) - மேகலைக்கு ஆகுபெயராக இருக்கிறது.

பல்லாங்குழி யாட்டத்திற் காய்கள் சேர்தற்குரிய நடுக்குழிகள் = காசு.

கால்பலம் என்ற பொருள் கொண்ட ககுசு/கஃசு காசு (< காய்) என்ற சொல்லில் தொடர்புடையது.
பால் பகுப்பது போல், கா(ய்) ககுசு:கஃசு.

நா. கணேசன்

On Saturday, June 28, 2014 2:24:55 AM UTC-7, selvi...@gmail.com wrote:
-வல்லமையில் தேமொழி 

அதனாலென்ன காசுதான் எக்காலத்திலும் உள்ளதே.

..... தேமொழி
----------------------------

On Friday, June 27, 2014 4:27:18 AM UTC-7, வேந்தன் அரசு wrote:
நாணயமே பழங்கால பொருள் ஆச்சு.
-----------------------------------------------
வேந்தன் அவர்கள் 
நாணயம்= குணம் என்பது இந்த கலி காலத்தில் (மிகக் கல ப்புள்ள 
சமூதாய காலநிலை ) யாரிடமும் காணாத பழங்கால செய லாகி விட்டது
எனும் பொருளில்  இரட்டுற மொழி ந்துளார் எனக்காண் கின்றேன் 

நிற்க 

அன்புள்ள தேமொழி அவர்களுக்கு,
                    காசு
என்பது இ க்காலத்திலும் எக்காலத்திலும் (ஓரிரு நூற்றா ண்டுகளாக)
 உள்ளதில்லையே எனவே அது ஒரு பழங்காலச் சொல் தானே 

1947 க்கு முன் கூட ரூபாய் அணா பைசா தம்பிடி எனத்தானனே  இருந்தது 

ஒரு ரூபாய் = 16 அணா = 64 பைசா = 192 தம்பிடி எனும் மாற்று வாய்பாடு அறிவீர்கள் 
அப்போது பைசா = 1/ 64 ரூபாய் ஆகும் 
சுதந்திரத்திற்குப் பிறகும்  பழைய பைசா இருந்தது 
பிறகு தசம முறையில் ரூபாய்  பைசா என மாற்றினார்கள் 
1956 ல்தசம முறை வந்து பை சா  = 1/100 ரூபாயாயிற்று 
வேறு ஒரு நாணய மதிப்பைக் காட்டுவதால் அதனை 
அப்போது  நயா பைசா = புதிய பைசா என அழைக்கவேண்டும்
என உத்தரவிட்டு அவ்வாறே அப்பெயரிட்டு வெளிவந்தது 

பல ஆண்டுகளுக்குப் பிறகு  அந்த நயா =புதிய எனும் முன்னொட்டு
தேவையில்லை எனும் நிலை வந்தவுடன் அதனை (கேவல=
தனி நிலை) பைசா  என மாற்றினார்கள் 
பழைய பைசாவும்  ( pice = காலணா) இந்த பைசாவும் வேறு வேறு தான் 

மேலும் 

பழம் திரைப்பட பாடல் ஒன்று =  செவியு ற்று ருக்கலாம் 
பணம் காசு சேர்க்கலாமடீ எனும் வரிகள் வருமே 
பெரிய மாற்று = பணம் = பணக்காரன் எனும் சொல் காட்டுவது காண்க 
அக்கா லத்தில்  பணம் என்பது ஓர் பெரிய மா ற்று 
காசு  சிறிய( மா ற்று) அளவினது 

இந்த காசு எனவழங்கிய சொல் 16 17 நூற்றாண்டுகளில் 
வாணிபத்தில் பயன்கொண்டிருந்ததால் ஐரோப்பி யர்கள்
இச் சொல்லை தங்கள் மொழியில் எழுதும்நிலை யில் எழுத 

 cash

என மாறியது 

மேலும் 
காசு என்பது கஃசு  என்பதன் திரிபே 

திருக்குறளில் உழவு அ திகாரத்தில் வரும் கஃ சு எனும் சொல்லிற்கு கால்பலம் எனும்
அவர்கள் காலத்து வழங்கு சொற்களிலிருந்து தவறான பொருளைக் (எடை) 
ஏறக்குறைய எல்லா உரையாசிரியர்கலும்  வைத்துச் சென்றுள்ளார்கள் எனக்
காண்கின்றோம்  அப்பொருள் ஏதும் பொருத்தமாகத் தெரியவில்லை எடை
 எப்படி உருவவழி எடுத்துக்காட்டு ஆகும் ?

தொடிப்புழுதி க ஃசா உழைக்கின் பிடித்தொரு வும்
வேண்டாது சாலப் படும் 
  
 தொடிப்புழுதி           =  மகளிர் தோளி ல் அணியப்படும் தொ டியின்
                                          அளவினதாக  திரண்டு கிடக்கும் மண் உருண்டைகள்  
கஃ சா உழைக்கின் =  அக்காலத்து வழங்கிய காசின் 
                                        (மிகச் சிறிய )அளவினதாக செய்து விட்டால் 

 பிடித்தொருவும்     =  கால்ந டைப்பண்ணை  களில் கிடைக்கும்
                                        எருவினில் கைப்பிடி அளவு கூட
வேண்டாது சாலப்படும்  =  தேவைபடாது  

வீரக்கல் கல்வெட்டுகளில் தொரு என்பதே வாசகம்
கால்நடை தொகுதியைக் குறிக்கும் 

அதான்று 

யாப்பருங்கல உரையில் 
 கஃ  சு எனும் சொல் ஒலிக்கும் போது  கைசு என இயல்பாகவே
வாயினில்  (மயங்கி)   வழங்கிவிடும் எனவே உள்ளது காணலா ம் 

 


N. Ganesan

unread,
Jun 28, 2014, 9:42:51 AM6/28/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, thami...@googlegroups.com
குறளில் இருப்பது ‘தொரு’ அன்று. ’பிடித்தெருவும்’
தொடிப் புழுதி கஃசா உணக்கின், பிடித்து எருவும் வேண்டாது சாலப் படும்
 
 தொடிப்புழுதி           =  மகளிர் தோளி ல் அணியப்படும் தொ டியின்
                                          அளவினதாக  திரண்டு கிடக்கும் மண் உருண்டைகள்  
கஃ சா உழைக்கின் =  அக்காலத்து வழங்கிய காசின் 
                                        (மிகச் சிறிய )அளவினதாக செய்து விட்டால் 

 பிடித்தொருவும்     =  கால்ந டைப்பண்ணை  களில் கிடைக்கும்
                                        எருவினில் கைப்பிடி அளவு கூட
வேண்டாது சாலப்படும்  =  தேவைபடாது  

வீரக்கல் கல்வெட்டுகளில் தொரு என்பதே வாசகம்
கால்நடை தொகுதியைக் குறிக்கும் 

தொறு என்பது கல்வெட்டு. குறளில் ’தொரு’ இல்லை. 
”தொடிப்புழுதி க ஃசா உழைக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும்”

நா. கணேசன் 

வேந்தன் அரசு

unread,
Jun 29, 2014, 7:21:06 AM6/29/14
to vallamai, மின்தமிழ், தமிழாயம்



28 ஜூன், 2014 8:58 முற்பகல் அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

On Friday, June 27, 2014 5:05:27 PM UTC-7, தேமொழி wrote:
அதனாலென்ன காசுதான் எக்காலத்திலும் உள்ளதே.

..... தேமொழி


On Friday, June 27, 2014 4:27:18 AM UTC-7, வேந்தன் அரசு wrote:
நாணயமே பழங்கால பொருள் ஆச்சு.



நூதலோசு ஐயா அவர்களின் மடலில் இருந்து
இரண்டு கருத்துகளுக்கு என் மறுமொழி:

NDLS> வீரக்கல் கல்வெட்டுகளில் தொரு என்பதே வாசகம்
> கால்நடை தொகுதியைக் குறிக்கும் 

தொறு என்று வீரக்கல்களில் இருக்கிறது. ’தொறுப்பட்டார்’,
’தொறுமீட்டு மாண்டார்’ என்றெல்லாம் இருக்கும். 
தொழு என்ற சொல்லும் தொறு என்ற சொல்லும் பொருள் ஒன்றே.
தொழுவம் - தொறு. Taurus சொல்லுடன் தொடர்புபடுத்தி
மயிலை வேங்கடசாமி உலகத் தமிழ் மாநாட்டு மலரில் கட்டுரை
எழுதினார். வடக்கே தொழுநை என்னும் நதி யமுனையுடன் சேரும்.
அதை தோஹ்நா என்கின்றனர் என மு. ராகவையங்கார் எழுதியுள்ளார்.

NDLS> மேலும் காசு என்பது கஃசு  என்பதன் திரிபே

காய் என்னும் சொல் காசு என்றாகிறது. உ-ம்: காயா வர்ணன் என்பர் கண்ணபிரானை.
காயாம்பூ என்ற மக்கட்பெயரை காசாம்பூ என்கின்றனர். சங்கப்பாடல்களில்
வேப்பங் காய் போன்ற உருவமுடைய காசு பற்றிக் குறித்துள்ளனர்.


அப்போ காயின் என்ற சொல்லை தமிழ்க்கிளவியாக பாவிக்கலாம். 

சொ. வினைதீர்த்தான்

unread,
Jun 29, 2014, 7:55:47 AM6/29/14
to vallamai, மின்தமிழ், தமிழாயம்
:)

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

N. Ganesan

unread,
Jun 29, 2014, 9:09:20 AM6/29/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, thami...@googlegroups.com


On Sunday, June 29, 2014 4:21:07 AM UTC-7, Zஈனத் Xஏவியர் wrote:

அப்போ காயின் என்ற சொல்லை தமிழ்க்கிளவியாக பாவிக்கலாம். 


இல்லை.

seshadri sridharan

unread,
Jun 29, 2014, 10:58:36 AM6/29/14
to vall...@googlegroups.com
2014-06-29 16:51 GMT+05:30 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:

NDLS> மேலும் காசு என்பது கஃசு  என்பதன் திரிபே

காய் என்னும் சொல் காசு என்றாகிறது. உ-ம்: காயா வர்ணன் என்பர் கண்ணபிரானை.
காயாம்பூ என்ற மக்கட்பெயரை காசாம்பூ என்கின்றனர். சங்கப்பாடல்களில்
வேப்பங் காய் போன்ற உருவமுடைய காசு பற்றிக் குறித்துள்ளனர்.


அப்போ காயின் என்ற சொல்லை தமிழ்க்கிளவியாக பாவிக்கலாம். வேந்தன் அரசு

காய்ச்சிக் கொட்டியதால் காய்ச்சு < காசு என்றானதாக பாவாணர் விளக்கம் கூறுகின்றார் 

சேசாத்திரி

N. Ganesan

unread,
Jun 29, 2014, 12:29:58 PM6/29/14
to mint...@googlegroups.com, ksuba...@gmail.com, vallamai, thami...@googlegroups.com


On Sunday, June 29, 2014 2:05:09 AM UTC-7, Suba.T. wrote:



2014-06-26 15:05 GMT+02:00 N. Ganesan <naa.g...@gmail.com>:

ஆற்றில் பழங்கால நாணயம் தேடும் விவசாயத் தொழிலாளர்கள்- நாணயம் சேகரிப்போர், ஆராய்ச்சி மாணவர்களின் ‘பொக்கிஷங்கள்’



​இது கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம். கிராம அதிகாரிகளும் மானில தொல்லியல் துறை அல்லது அருங்காட்சியகம்  இந்த ஏழை விவசாயிக​ளுக்கு சம்பளம் அளித்து இதனை முறைப்படுத்தப்பட்ட பகுதி நேர தொழிலாக்கி அவர்களிடமிருந்து பெறப்படும் நாணயங்களை அருங்காட்சியகங்களில் ஒப்படைக்கப்படும் வகை செய்ய வேண்டும். இதன் வழி முக்கிய வரலாற்றுச் சான்றுகள் தனி நபர் சேகரிப்பு என்ற வகையில் அடங்கிவிடாமல் அல்லது அயலகம் சென்று விடாமல் அல்லது உருக்கி அதன் உரு மாற்றிவிடாமல் இருக்க வகை செய்யும்.

சுபா


மணலில் காசு (< காய்) தேடுவோர் ஊக்குவிக்கப்பெறல் வேண்டும்.

 தமிழ் மற்றும் கணக்கு ஆசிரியர் (தெய்வத்திரு) போளுவாம்பட்டி ஐ. ராமசாமி ஐயா (கன்னடம் பேசும் ஒக்கிலியக் கவுண்டர் மரபு. ஜோஸ்யம் நன்கு அறிந்தவர்) குறுந்தொகைப் பாடல்களைப் பாடிக்காட்டி அதுபோல் வெள்ளியில் கிடைக்கும் பல சங்ககால நானயங்களைக் காட்டினார். சேலம் மாவட்ட என்சைக்ளோப்பிடியா ஆசிரியர் புஸ்நாகி ராஜண்ணன் (மதுரை மாவட்ட நூலகராய் இருந்தார். சேலம் குகை ஊர்), முனைவர் ர. பூங்குன்றன் (சிற்பி தோட்டத்தில் வயல் வரப்பில் நடக்கும்போது எடுத்த குட்டுவன் கோதை நாணயம் முதலில் படித்தவர்) அதேபோல காசுகளின் ஒளிப்படங்கள் அளித்தனர்.

உடலில் காய் போலக் காய்க்கும் மறு ‘காசு’ எனப்படுகிறது.
காசு இல்லாத கொற்றவன் ‘மறு இல்லாத கொற்றவன்’.

மாசறு பொன்னே வலம்புரி முத்தே
காசறு விரையே கரும்பே தேனே

சிலம்பில் “காசு அறு விரை = மறு காய்க்காத வித்து/விதை 'blemishless seed'
என்பது பொருள்.


வேப்பங்காய் போல இருக்கும் சங்க காலத்தின் முதல் கட்ட காசுகளின் சங்கப் பாடல்கள் பார்ப்போம். காய் என்னும் சொல் காசு என்றாதற்கு முதன்மைச் சான்றுகள் இச் சங்கப் பாடல்கள் தாம்.

குறுந்தொகை 67.   
உள்ளார் கொல்லோ தோழி கிள்ளை 
வளைவாய்க் கொண்ட வேப்ப வொண்பழம் 
புதுநா ணுழைப்பா னுதிமாண் வள்ளுகிர்ப் 
பொலங்கல வொருகா சேய்க்கும் 
நிலங்கரி கள்ளியங் காடிறந் தோரே. 


உவேசா குறுந்ததொகை முன்னுரையில் எழுதுகிறார்:
”அக்காலத்தில் ஏழை மக்கள் ஒரு பொருளுக்கு மற்றொரு பொருளை விலையாக ஈந்து பண்ட மாற்றை மேற்கொண்டனர். செல்வர்கள் பொற்காசுகளைப் பெட்டிகளில் சேமித்து வைத்தனர். அக் காசு வேப்பம் பழத்தைப் போல உருண்டை வடிவினதாக இருந்தது.”

”கிளியின் அலகுக்குக் கைவிரல் நகங்களும், வேப்பம் பழத்திற்கு உருண்டையான பொற்காசும் உவமைகள். காசைப் பற்றுதற்குரிய தகுதியுடையதைப் புலப்படுத்தி, 'நுதிமாண் வள்ளுகிர்' என்றாள். ஒருவகைப் பொற்காசு உருண்டை வடிவமாகவும் இருந்ததென்பது,
  
"காசி னன்ன போதீன் கொன்றை"  குறுந்தொகை 148:3
  
".... புன்கா லுகாஅய்க் 
   காசினை யன்ன நளிகனி"              (குறுந். 148:4, 274:1-2) 
  
"பொன்செய் காசி னெண்பழந் தாஅம்  
 குமிழ்"                                 (நற். 274:4-5) 

என்பவற்றாலும் அறியப்படும். பொன்னென்பது செய்யுளிற் பொல மென்றாயிற்று. பொலங்கலமென்றது இங்கே காசு மாலையை. ”

”பொன் என்பது தங்க நாணயமாகும். தாமரை மொட்டுப் போன்ற நாணயம் காசு என்று கூறப்பட்டது.” இதற்கான தமிழ்ப் பாடல் எது என்று தெரியுமா? அளித்தால், நன்றி. “காசி னன்ன போதீன் கொன்றை” கொன்றையின் மொக்குப்
போல இருக்கிறது காசு என்கிறார். 

“பொன்பெய் பேழை செல்வரேயுடைமையின் ‘செல்வர் பொன்பெய்பேழை’ என்றான். பொன் என்றது இங்கே பொற்காசுகளை. பொற்காசுகள்உருண்டை வடிவினவாக ஒரு காலத்தில் இருந்தன என்பது இந்நூல் 67-ஆம் செய்யுளால் உணரலாகும். கொன்றை மலரை அப்பொற் காசோடுஉவமித்தலை,
  
“காசி னன்ன போதீன் கொன்றை”         (குறுந். 148:3) 

என்ற அடியால் அறியலாம். குழிக்குப் பேழையும், கொன்றைக்குப் பொன்னும் உவமைகள். ” -உவேசா, குறுந்தொகை.

குயிற்கண் ணன்ன குரூஉக்காய் முற்றி
மணிக்கா சன்ன மானிற இருங்கனி - அகநானூறு 293
வேலமரத்துக் காய் கனியானால் மணிக் காசு போல இருக்கிறது.

It is clear that the source for English word, cash comes from the Tamil காசு which itself gets its name, from காய் due to its globular shape. The old kAsu (coins) in Early Sangam poems are compared to neem fruits, lotus buds and dark gemstones.

Dr. N. Ganesan
 

வேந்தன் அரசு

unread,
Jun 29, 2014, 3:57:14 PM6/29/14
to vallamai, மின்தமிழ், Subashini Tremmel, தமிழாயம்
பொலங்கல வொருகா சேய்க்கும் = பொலங்கல ஒரு காசு ஏய்க்கும் 

ஏய்ப்ப. அன்ன  என்பன போல எனும் பொருள் தரும் கணேசரு. காயில் இருந்து காசு பிறந்ததாக கொள்ளலாகாது.




29 ஜூன், 2014 12:29 பிற்பகல் அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:


N. Ganesan

unread,
Jun 29, 2014, 4:10:45 PM6/29/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, thami...@googlegroups.com


On Sunday, June 29, 2014 12:57:17 PM UTC-7, Zஈனத் Xஏவியர் wrote:
பொலங்கல வொருகா சேய்க்கும் = பொலங்கல ஒரு காசு ஏய்க்கும் 

ஏய்ப்ப. அன்ன  என்பன போல எனும் பொருள் தரும் கணேசரு. காயில் இருந்து காசு பிறந்ததாக கொள்ளலாகாது.



பொலங்கலம் = காசுமாலை. காய்கள் போன்ற காசுகள் தொங்கும் மாலை.
யகர சகரப் போலி காய்/காசு.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Jun 29, 2014, 4:38:41 PM6/29/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, thami...@googlegroups.com
காய்த்தலுக்கான வினைச்சொல் காயு(க) என்றே மலையாளத்தில், தெலுங்கில் இச் சொல் காசு என்றே வழங்குகிறது. ய/ச போலி. திராவிட வேர்ச்சொல் அகராதி 1459 பாருங்கள். அதனால்தான் சங்கப்புலவர்கள் காய் போன்ற காசு என்கின்றனர். காசு என்ற சொற்பிறப்பு காய் போன்ற வடிவில் இருப்பதால் உண்டான ஆகுபெயர். காய் என்னும் உவமையால் உருவாகும் காசு என்பது உவமையாகுபெயர்.

1459 Ta. kāy (-pp-, -tt-) to bear fruit; n. unripe fruit, unripe boil; kāyppu produce of a tree, crop of fruit or grain. Ma. kāyuka to be ripekāykka to bear fruit, ripen; kāypikka to bring to maturity; kāyunripe or ripening fruit, chiefly plantain; kāypu bearing fruit; kayakka to thrive, bring fruit. Ko. ka·y unripe fruit, coconut. To. ko·y- (ko·c-) to bear fruit; ko·y unripe fruit. Ka. kāy (kāyt-, kāt-) fruit to grow or develop; kāy, kāya, kāyi, kāyu fruit in a yet unripe, but pretty full-grown state, nut, pod. Koḍ. ka·y unripe fruit (guava, if unspecified), kidneys. Tu. kāyuni to get ripe; kāyi unripe fruit, coconut, seed; kāyelůstate of being green or unripe. Te. kācu to bear or produce (as fruit); be produced (as fruit), be fruitful; kāyu to bear fruitkāya a green unripe fruit, berry, pod, nut; kāpu bearing or producing fruit, fruit, crop.Kol. kay- (kayt-) (fruit) is produced; (Hislop) keik unripe fruit. Nk. kāyk (pl. kāykuḷ) fruit. Nk. (Ch.) kayek unripe. Ga. (P. S.2kekin (pl. kekil) fruit. Go. (Tr.) kaiā, (M.) kāyā id.; (Mu. Ma. etc.) kāyaunripe fruit, green fruit; (A. G. S.) kaya id. (Voc. 641); (L.) kayār raw, unripe (Voc. 521). Kui kāu (pl. kānga) fruit, berry, kernel, seed. Kuwi (F.) kaiya fruit; (Su.) kāya unripe fruit); (Isr.) kāya testicle.Kur. xańjnā to bear fruit, be produced (after the manner of a fruit), come forth; xańjkā, xańjpā fruit, effect, result; xēnā unripe, raw, half-cooked, unboiled (of water), green, verdant, wet. Malt. qanje to bear fruit; qanjpe fruit; qéne raw, green, unripe. / Cf. Turner, CDIAL, no. 2613, *kacca- raw, unripe. DED(S, N) 1220.


 

நா. கணேசன்

வேந்தன் அரசு

unread,
Jun 29, 2014, 6:27:18 PM6/29/14
to தமிழாயம், மின்தமிழ், vallamai



29 ஜூன், 2014 4:10 பிற்பகல் அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:
வேப்பம் பழம் மஞ்சளாக பொன்னால் ஆன துண்டங்கள் போல இருக்கும்.

நீங்க காய்களை காசு என்கிறீர்கள். 
 

--

N. Ganesan

unread,
Jun 29, 2014, 8:02:44 PM6/29/14
to mint...@googlegroups.com, thami...@googlegroups.com, vall...@googlegroups.com

 தெங்கம்பழத்தை தேங்காய் என்கிறோமே. மாம்பழத்தை மாங்காய் (Mango) என்றே ஆங்கிலத்தில் பெயர் அமைந்திருக்கிறது.

---------

இப்போதைய காசுகள் போல தட்டையான வட்டங்களாகக் பழங்காசுகள் இல்லை. வேப்பங்காய், தாமரை மொட்டு, கொன்றை மொக்குள் போல இருப்பதால் பெயர்பெற்றன. அப்போதைய காசுகள் கருப்பாக இருக்கும் - வெள்ளி கருப்பதால் - அதானால் தான் அகநானூற்றுப் பாடல் காட்டினேன். வேலக்காயின் கனி என்கின்றனர். இருங்கனி - கருத்த கனி. இருள், இரும்பு போல இருங்கனி. காய் என்பதன் உவமையாகு பெயர் காசு. காயு- என தெலுங்கு, கன்னடத்தில் காய்த்தல் இருக்கிறது. வெள்ளி, பித்தளை காசுகளை விளக்கினால் வெளிச்சமாகும்.

காசு வண்ணவாகுபெயர் அன்று. வடிவ (காய்) ஆகுபெயர் காசு. சங்க கால முதற் காசுகளின் வடிவம், வேப்பங்காய்/கனி:
http://productjunkiesrehab.files.wordpress.com/2010/10/neem-fruit.jpg


காய்த்தலுக்கான வினைச்சொல் காயு(க) என்றே மலையாளத்தில், தெலுங்கில் இச் சொல் காசு என்றே வழங்குகிறது. ய/ச போலி. திராவிட வேர்ச்சொல் அகராதி 1459 பாருங்கள். அதனால்தான் சங்கப்புலவர்கள் காய் போன்ற காசு என்கின்றனர். காசு என்ற சொற்பிறப்பு காய் போன்ற வடிவில் இருப்பதால் உண்டான ஆகுபெயர். காய் என்னும் உவமையால் உருவாகும் காசு என்பது உவமையாகுபெயர்.

1459 Ta. kāy (-pp-, -tt-) to bear fruit; n. unripe fruit, unripe boil; kāyppu produce of a tree, crop of fruit or grain. Ma. kāyuka to be ripekāykka to bear fruit, ripen; kāypikka to bring to maturity; kāyunripe or ripening fruit, chiefly plantain; kāypu bearing fruit; kayakka to thrive, bring fruit. Ko. ka·y unripe fruit, coconut. To. ko·y- (ko·c-) to bear fruit; ko·y unripe fruit. Ka. kāy (kāyt-, kāt-) fruit to grow or develop; kāy, kāya, kāyi, kāyu fruit in a yet unripe, but pretty full-grown state, nut, pod. Koḍ. ka·y unripe fruit (guava, if unspecified), kidneys. Tu. kāyuni to get ripe; kāyi unripe fruit, coconut, seed; kāyelůstate of being green or unripe. Te. kācu to bear or produce (as fruit); be produced (as fruit), be fruitful; kāyu to bear fruitkāya a green unripe fruit, berry, pod, nut; kāpu bearing or producing fruit, fruit, crop.Kol. kay- (kayt-) (fruit) is produced; (Hislop) keik unripe fruit. Nk. kāyk (pl. kāykuḷ) fruit. Nk. (Ch.) kayek unripe. Ga. (P. S.2kekin (pl. kekil) fruit. Go. (Tr.) kaiā, (M.) kāyā id.; (Mu. Ma. etc.) kāyaunripe fruit, green fruit; (A. G. S.) kaya id. (Voc. 641); (L.) kayār raw, unripe (Voc. 521). Kui kāu (pl. kānga) fruit, berry, kernel, seed. Kuwi (F.) kaiya fruit; (Su.) kāya unripe fruit); (Isr.) kāya testicle.Kur. xańjnā to bear fruit, be produced (after the manner of a fruit), come forth; xańjkā, xańjpā fruit, effect, result; xēnā unripe, raw, half-cooked, unboiled (of water), green, verdant, wet. Malt. qanje to bear fruit; qanjpe fruit; qéne raw, green, unripe. / Cf. Turner, CDIAL, no. 2613, *kacca- raw, unripe. DED(S, N) 1220.

நா. கணேசன்
 
--

வேந்தன் அரசு

unread,
Jun 29, 2014, 10:04:13 PM6/29/14
to vallamai, மின்தமிழ், தமிழாயம்



29 ஜூன், 2014 8:02 பிற்பகல் அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:



On Sunday, June 29, 2014 3:27:21 PM UTC-7, Zஈனத் Xஏவியர் wrote:



29 ஜூன், 2014 4:10 பிற்பகல் அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:



On Sunday, June 29, 2014 12:57:17 PM UTC-7, Zஈனத் Xஏவியர் wrote:
பொலங்கல வொருகா சேய்க்கும் = பொலங்கல ஒரு காசு ஏய்க்கும் 

ஏய்ப்ப. அன்ன  என்பன போல எனும் பொருள் தரும் கணேசரு. காயில் இருந்து காசு பிறந்ததாக கொள்ளலாகாது.



பொலங்கலம் = காசுமாலை. காய்கள் போன்ற காசுகள் தொங்கும் மாலை.
யகர சகரப் போலி காய்/காசு.

வேப்பம் பழம் மஞ்சளாக பொன்னால் ஆன துண்டங்கள் போல இருக்கும்.
நீங்க காய்களை காசு என்கிறீர்கள். 
 

 தெங்கம்பழத்தை தேங்காய் என்கிறோமே. மாம்பழத்தை மாங்காய் (Mango) என்றே ஆங்கிலத்தில் பெயர் அமைந்திருக்கிறது.

---



இங்கு கொன்றை என்பதுமலர் அல்லவா?

மலர் என்ற சொல்லில் இருந்துதான் காசு பிறந்திருக்கும் 

N. Ganesan

unread,
Jun 29, 2014, 10:09:13 PM6/29/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, thami...@googlegroups.com

மலர் என்ற சொல் எப்படி காசு ஆகும்?
 

N. Ganesan

unread,
Jun 30, 2014, 12:41:21 AM6/30/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, thami...@googlegroups.com


On Sunday, June 29, 2014 7:04:14 PM UTC-7, Zஈனத் Xஏவியர் wrote:

இங்கு கொன்றை என்பதுமலர் அல்லவா?

மலர் என்ற சொல்லில் இருந்துதான் காசு பிறந்திருக்கும் 


கொன்றையின் மொக்குப் போன்றது காசு என்று வர்ணிக்கின்றனர் சங்கப் புலவோர்.
மலரில் இருந்து காசு பிறக்காது. காயு-/காசு- இரண்டுமே கன்னடம், துளு, தெலுங்கு,
தமிழ், மலையாளம் எல்லா மொழிகளிலும் இருக்கின்றன (DEDR 1459).

வேப்பங்காய், வேப்பங்கனி போன்றது பண்டைச் சங்ககால முதற் காசுகள்.





 










வேப்பங் காய் மேலே. இதனுடன் கொன்றையின் மொக்கு
ஒப்பிடுக.


[Golden Shower Tree; Cassia fistula]

”This popular tree, native to Southeast Asia and not to be confused with the tree that produces a kind of cinnamon called "cassia", is seen blooming profusely all over Southern California in early Summer. It is the national tree and flower of Thailand and state flower of Kerala in India. The tree produces hard bean pods over a foot long and up to an inch across. The beans are said to be toxic, but unfortunately, they do not seem to be toxic to squirrels.

This is a highly medicinal tree, with all parts used throughout South and Southeast Asia and beyond. Culinary usage seems confined mostly to Thailand where both leaves and flower buds are used in curries and the like. They are both available lightly pickled in jars here in Los Angeles, but of course fresh leaves are available all over town, and fresh buds in the Summer.”

”In the photo to the left are cassia bud clusters that had been packed in a light brine. These were from Thailand, but purchased from an Indian market in Los Angeles. The largest were 3/8 inch diameter. They had a subtle flavor with a touch of bitterness.”

 - buds of Konrai flower are pickled in lite brine (salt water). Compare the shape of the Cassia (கொன்றை) to those of neem fruits (வேம்பின் காய்). They are in the shape of ancient & first coins of Sangm age, That is why kAsu is a shape "aakupeyar". ~ N. Ganesan


நா. கணேசன்

unread,
Jun 30, 2014, 9:42:25 AM6/30/14
to thami...@googlegroups.com, mint...@googlegroups.com, vall...@googlegroups.com


On Sunday, June 29, 2014 9:41:21 PM UTC-7, நா. கணேசன் wrote:


On Sunday, June 29, 2014 7:04:14 PM UTC-7, Zஈனத் Xஏவியர் wrote:

இங்கு கொன்றை என்பதுமலர் அல்லவா?


ஆம். Indian laburnum, சரக்கொன்றை, தாவரவியற் பெயர்
Cassia fistula. கேரளாவின் மாநில மலர்
[கொன்றை சிவனுக்கானது; தமிழ்நாட்டின் மாநில மலர் காந்தள் தமிழ்க்கடவுள்
முருகனது.] இதற்கு ஒரு பெயர் ஆர். பூக்கள் கொன்னை மரமெங்கும் ஆர்தலால்.

 வீரனை, விடம் உண்டனை, விண்ணவர்
 தீரனை, திரு அண்ணாமலையனை,
 ஊரனை, உணரார் புரம்மூன்று எய்த
 ஆரனை, அடியேன் மறந்து உய்வனோ - தேவாரம்

திரிபுர அசுரர்களை எரித்து கபால மாலை சூடியாடும் ஆரன் காபாலியின் வீரப்பிரதாபம் விளக்கும் பாடல்.  திரிபுர தகனம் நிகழ்ந்த இடம் திருவதிகை வீரட்டானம். ஆர் என்பது சரக்கொன்றை மரம். இது திரிபுராதிகளை விஜயம்கொண்ட அதிகை வீரட்டானத் தலவிருக்ஷம். எனவே சிவபிரானுக்கு மிக விருப்பான கொன்றை  மலர்சூடி என்பதை ஆரன் என்றார் எனவும் கொள்ளலாம் என உரை கூறியுள்ளனர் முன்னோர். இப்பதிகம் முழுதும் சிவபிரானின் பண்புகளாக, விருப்புகளாக பலமுறை பல நூல்களிலும், திருமுறைகளிலும், வடமொழி ஆகமங்களிலும் கூறப்பட்டதை தொகுத்துச் சொல்லப்பட்டுள்ளது. சிவபிரானின் கொன்றை பொன்சொரிதல்:

முட்டை வடிவில் உள்ள சங்ககால முதற்காசுகளுக்கு ஏன்
வேப்பங்கனியும், கொன்றை மொக்குளும் உவமை ஆக்குகின்றனர்
இயற்கையோடு இயைந்த வாழ்வு வாழ்ந்த சங்கப் புலவர்கள்
என்று பார்க்க கொன்றை மலர்தலுக்கு முன்னே மொட்டு வடிவத்தை
வேப்பங்காயுடன் ஒப்பிடுக. காயு > காசு (இரண்டும் த்ராவிட மொழிகளில்
உண்டு, DEDR 1459).

கொன்றை மொக்கு:

நா. கணேசன்

N. Ganesan

unread,
Jun 30, 2014, 10:35:32 AM6/30/14
to vall...@googlegroups.com, மின்தமிழ்


On Sunday, June 29, 2014 7:58:36 AM UTC-7, seshadri sridharan wrote:

NG> காய் என்னும் சொல் காசு என்றாகிறது. உ-ம்: காயா வர்ணன் என்பர் கண்ணபிரானை.
காயாம்பூ என்ற மக்கட்பெயரை காசாம்பூ என்கின்றனர். சங்கப்பாடல்களில்
வேப்பங் காய் போன்ற உருவமுடைய காசு பற்றிக் குறித்துள்ளனர்.

 
காய்ச்சிக் கொட்டியதால் காய்ச்சு < காசு என்றானதாக பாவாணர் விளக்கம் கூறுகின்றார் 

சேசாத்திரி

 இச் செய்தி எந்த நூலில் பாவாணர் சொல்கிறார்? இணையப் பல்கலை தளத்தில்
பாவாணர் நூல்கள் எல்லாமும் கிடைக்கின்றன. ஆனால் ”காய்ச்சிக் கொட்டியதால் காசு” காணோமே.
வேனிற் பருவத்தே வேப்ப மரம் காய்களைக் காய்ச்சுக் கொட்டும் (தரையில்).

காய - காச பாவாணர் விளக்கத்தால் ஆகாயம்/ஆகாசம் என்ற பெயர்க் காரணம் தெரிகிறது. (காயா - காசா பூப்பெயர்)
"விண்ணென வரூஉங் காயப் பெயர்" (தொல். எழுத்து. 305). ஆகாயத்தில் இருக்கும் ஆ என்னும் முன்னொட்டுக்கு
பொருளேயில்லை என்கிறார் பாவாணர். இந்திய பிரதமர் மோதி பெயரால் (மோது/மொத்து என்னும்
வினைச்சொல் செக்கார்களின் ஒரு பெயர் மோதி என்று தருகிறது.) மோதகம் அரிசிமாவை
வெல்லம் போன்றவையுடன் கையால் ஒரு பிடிபிடித்துச் செய்வது. அதனுடன் முன்னொட்டாக
பொருளில்லாத ஆ முன்னொட்டை சேர்த்தால் ஆமோதகம் ஆகிறது. இனிப்பு/இனிமை என்ற இரண்டாம்
பொருளை வடமொழியில் பெறுகிறது. காயா/காசா வண்ணத்தில் உள்ள விண்ணைக்
காயம் (ஆகாயம்) என்பதும், மோதகம் ஆமோதகம் ஆதலும் ஒப்பிடலாம்.

நா. கணேசன்

சொ. வினைதீர்த்தான்

unread,
Jun 30, 2014, 12:22:18 PM6/30/14
to vallamai, மின்தமிழ்
2014-06-30 20:05 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:

வினைச்சொல் செக்கார்களின் ஒரு பெயர் மோதி என்று தருகிறது.) மோதகம் அரிசிமாவை
வெல்லம் போன்றவையுடன் கையால் ஒரு பிடிபிடித்துச் செய்வது. அதனுடன் முன்னொட்டாக
பொருளில்லாத ஆ முன்னொட்டை சேர்த்தால் ஆமோதகம் ஆகிறது. இனிப்பு/இனிமை என்ற இரண்டாம்
பொருளை வடமொழியில் பெறுகிறது. காயா/காசா வண்ணத்தில் உள்ள விண்ணைக்
காயம் (ஆகாயம்) என்பதும், மோதகம் ஆமோதகம் ஆதலும் ஒப்பிடலாம்.

நண்பர் திரு கணேசன், வணக்கம். பெண்ணாடம் அம்பாள் பெயர் அழகியகாதலி அம்பாள். அப்பெயரை இன்று ஆமோதானாம்பாள் என்று வடமொழியில் அழைக்கிறார்கள். அர்ச்சனை அப்பெயரிலேயே செய்கிறார்கள். ஆமோதனாம்பாள் வடமொழிச் சொல்லின் பொருளும் அது அழகியகாதலி என்ற பெயருடன் பொருந்துகிறதா என்று அறியவும் ஆவல்.
நன்றி
சொ.வினைதீர்த்தான். 
Reply all
Reply to author
Forward
0 new messages